Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180806 DWA Antaryami -watercolour-charcoal -A4 100dpi lr

    உள்ளேயோ அந்தராத்மா உட்கார்ந்து கீதைகேள்
    புள்வா கனரோ புராணவிஷ்ணு, -வெள்ளேயோ
    அந்தராம் கோதெண்டம் கொண்டுள்ளார் கொல்நூறை
    பந்தர்வான் ஈசர்(அனுமார் ருத்ராம்சம்) பறப்பு….கிரேசி மோகன்….!

    அங்கிருஷ்டாப்யாம் அந்தரிதாயி’’…..!
    ————————————————————————————

    வீணாய் இலைகளும் வேர்களும் இல்லாது
    தானாய் முளைக்கும் மரமிவர் -நானார் ?
    உரலில் தலைவிட்டு ஓவென்(று) அழுதால்
    விரலளவு ஆகும் வியப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180805-Gajendra and grAh-watercolour- charcoal -strathmore 9×12 300dpi lr

    பாலுக்கும் காவலாய் பூனைக்கும் தோழனாய்அப்
    பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலர்
    கடிக்கும் கராமதன்(முதலை) காதில்பூ வைக்க
    துடிக்கும் துதிக்கை(கஜேந்திரர்) தொடுப்பு….!

    (அல்லது)

    பாலுக்கும் காவலாய் பூனைக்கும் தோழனாய்அப்
    பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலர்
    பழகிடப் பூனையே, பாய்ந்தால்(போருக்கு) புலியே
    அழகிய சிங்கா அருள்….கிரேசி மோகன்…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180804-Govinda pattabhishekam -watercolour- charcoal -graphite -strathmore 160gsm 9x12inch lr 100dpi

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,

      சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,

      வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,

      காட்டிய கேசவ் கவி”….

     

    “ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவர்க்கு,

     நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,

     பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,

     மால்பிறப்பு பாகவத மாச்சு”….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180803 -Krishna leela-watercolour, charcoal- A4 lr 100dpi

    நாமதேயம்(யாகாதிகளுக்குப் பெயரிடும் வேத வாக்கியவகை) பாற்கடல், நாரணர் காலடியில்,
    சாமதான தெண்ட சரண்புக -காமதேனு:
    கண்ணனாய் ராமாய் குவலயம் வந்தவிஷ்ணு
    அண்ண(ல்)அந்த அவளுக்(கு)(காமதேனு) அரண்(காப்பு)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180802 -Krishnapremi-watercolour- A4 300dpi lr
    (Gita 7:14 “Only those who surrender to me, can free themselves from my Maya, which is divine.”)

    எங்கிருந்தோ வந்தென்னை ஏக்கத்திற்க்(கு) உள்ளாக்கி
    அங்கிங் கெனாதே அலைக்கழித்து -தொங்கிடும்
    மந்தியே, நெஞ்சே, மனமே உனக்கேனோ
    புந்தியே(புத்தியே) இல்லாமல் போச்சு….கிரேசி மோகன்….!

    நெஞ்சறையில் ஐம்புலன்கள் நானகந்தை மீட்டான்ம
    அஞ்சறைப் பெட்டியில் இட்டிடு -வெஞ்சிறையில்
    போட்டாலும் வைகுண்டம் போனாலும் புத்திக்கு
    மாட்டாது மாயா மனம்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180801 -Vanvihari (on a yaLi) -watercolour -A4- lr 100dpi

    யாளிமேல் உட்கார்ந்து, காளியின் சோதரர்(சகோதரர்),
    காளிய நர்த்தனர் கட்டளை -போயொளி
    தூண்மறைவில் பிற்பாடு நான்வருவேன் சிங்கமாய்
    தான்மறைய பிராக்டீஸ்நெட்(NET-PRACTICE) தூண்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180731 -Dialogue with Arjuna-watercolour-lr- A4 100 dpi

    சந்தேகம் தீர்ந்ததா சவ்யஸாஸி ! கீதையால்
    உன்தேக வீரம்கொள்! உற்றார்கள் -மந்தமாய்
    ஆகார், அனவரதர், சாஸுவதர் மெய்போயின்
    சாகார் இவரென்றும் சார்”….கிரேசி மோகன்….!

    Share
  • கிரகணம்

    பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி சொன்னது….!
    ———————————————————————————
    சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு…..!
    —————————————————————————————–

    பந்தியில் ராகுவைப் பார்த்துவிட ஜாடையாய்
    சந்திர சூரியர்கள் சாமியை , -மந்தஹாஸ
    மூவா(மூப்பு இல்லா மால் -அபிராமி அந்தாதி பிரயோகம் -மோகினி அவதாரம்….!) முகுந்தரை, மூட்டிவிட, ஆப்பாப்பாய்(ஆப்பு -பறிமாறிய அகப்பை சுதர்ஸன சக்கிரமா மாறி ராகுவுக்கு ஆப்படித்து விட்டது)
    moveவாக ராகுகாலம் மூச்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180730 -Vanvihari-watercolour-charcoal
    -100dpi -A4 -lr

    குஞ்சுஅணில் காட்டியதாம் கண்ணனுக்கு, சேதுவில்
    அஞ்சுவிரல் அண்ணலின்(ஸ்ரீராமர்) ஆதுரத்தை -மஞ்சுவண்ணர்
    NOசொல்லா மால்மூன்றை(மூன்று கோடுகள்-மகாபலிக்கு மூன்று அடிகள்) நோக்க, அடிகாணா
    கோமாதா செய்தாள் கனைப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180729 -New Forever -A4-lr-watercolour -charcoal 100dpi

    ”விளம்பி வருடம் வழிபிறக்கும் பாராய்,
    அலம்பு மனதின் அழுக்கை -குளம்பதில்(கண்ணன் திருவடியில்)
    மேய்ந்தே வருடுடிடும் மாடாக பூமியில்
    ஆய்ந்தே கிடப்பாய்’நான் ஆர்’(யார்)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180728 – Putana Moksha- lr- 300dpi — “ when Putana was cremated, the perfume of Krishna’s grace wafted through the air…”
    The tail of the cow was rotated around Krishna to ward off evil eyes.

    பூதனை ஈமத்தீ பாலனருள் கொண்டெழ
    வேதனைக்கு கண்ணபிரான் வைகுண்டம் -மாதவள்
    நஞ்சுப்பால் தந்தும் நவனீதம் போலேற்று
    வஞ்சகிக்கும் மோட்ஷ விருந்து….!

    (அல்லது)
    நச்சுப்பால் தந்தும் நவனீதம் போலேற்று
    அச்சுதர் மோக்‌ஷம் அளிப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….!

     

    காப்பு
    ——–

    சைவதிற்(கு) ஆண்டாள், சிவனின் மனம்புரிந்த
    மொய்விரித்தக் கூந்தலால் மேனிமூடும் -தெய்வத்தாய்
    அக்கமகா தேவியே அம்மல்லி கார்ஜுனரை
    சொக்கவைத்தத் தோழி சரண்….(0)….23-9-2010
    ——————————————————————

    மனத்தலையைக் கொய்து மயானத்தில் நித்தம்
    தனித்தலையும் தேவாதி தேவன் -பனிதலையன்
    சென்னமல்லி கார்ஜுனன் சேவடி சேர்ப்பிக்க
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(1)….23-9-2010

    கோலுக்குக் குரங்காக நூலுக்கு பொம்மையாய்
    தோலுக்குள் ஆடுகிறான் தாண்டவம் -மேலுக்கு
    சென்னமல்லி கார்ஜுனன் சொன்னபடி ஆடினால்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(2)….23-9-2010

    கரங்களில் ஓடு கிராமத்தில் பிச்சை
    கிறங்கிட பாழடைந்த கோயில் -குரங்கென
    சென்னமல்லி கார்ஜுனனை சிக்கென்(று) அணைத்திட
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(3)….23-9-2010

    கணுவில் கசப்பாய் கரும்பில் இனிப்பாய்
    அணுவிற்குள் அண்டத்தை ஆளும் -குணவானாம்
    சென்னமல்லி கார்ஜுனனை என்னசொல்லிச் சேர்ந்தாலும்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(4)….23-9-2010

    மன்ணில் புதையலாய் மாங்கனியில் தீஞ்சுவையாய்
    உன்னில் உணர்வாய் ஒளிந்தமுக் -கண்ணனவன்
    சென்னமல்லி கார்ஜுனரின் சர்வ வியாபகமே
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(5)….23-9-2010

    புல்லினோடு பச்சையாய் பூவினோடு வாசமாய்
    கல்லினோடு கெட்டியாய்க் குந்தியவன் -‘எல்லிநோடு’
    சென்னமல்லி கார்ஜுனரை சிந்தை நினைந்திட
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(6)….23-9-2010

    மன்றாடி வாழ்வோர்க்கும், அன்றாடங் காய்ச்சிக்கும்
    தின்றாடி தீர்ந்தபின் துக்கம்தான் -மன்றாடி
    சென்னமல்லி கார்ஜுனராம் அன்னமள்ளி உண்டிட
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(7)….23-9-2010

    சாவில் பறிபோகும் சாசுவதம் எல்லாமே
    ஆவி பிரியும்முன் அக்கமகா -தேவியின்
    சென்னமல்லி கார்ஜுனரை சென்னியள்ளிச் சூடிட
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(8)….23-9-2010

    கூத்தாடும் வேளையில் கோவணம் போனது
    தோத்தாடும் நேரத்தில் தான்தெரியும் -மாத்தாடு
    சென்னமல்லி கார்ஜுனரின் கன்னலொலி நாமத்தை
    உன்னையள்ளுக் கொள்ளும் உவப்பு….(9)….23-9-2010

    திகம்பர ஆடை திருநீறு வாடை
    அகம்புறத்தில் நீராடும் மேடை -சுகம்பெறும்
    சென்னமல்லி கார்ஜுனரின் சாரணர்க்கு சேவகம்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(10)….23-9-2010

    சூரணம் ஆயிரம் சூழப் படுக்கையில்
    தேறணும் தேகமென்று தேம்பிடாது -நீறணி
    சென்னமல்லி கார்ஜுனனின் எண்ணிலாத பேர்சொல்ல
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(11)….24-9-2010

    உமிக்குநீர் ஊற்ற உயருமோ நெல்லாய்!
    குமித்த பழவினைகள் குன்றும் -நிமித்தமாய்
    சென்னமல்லி கார்ஜுனரின் எண்ணமல்லி வாசத்தால்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(12)….24-9-2010

    வாழை வனம்புகுந்து பாழும் வினைகளைந்து
    ஆழ வசனித்த அக்கம்மா -தோழனாம்
    சென்னமல்லி கார்ஜுனரை சிந்திக்க சித்திக்கும்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(13)….25-9-2010

    தேடிக் களைத்துள்ளம் வாடி வதங்கிட
    கோடிக்கை கொண்டாலும் காட்டிடுவான் -வேடிக்கை
    சென்னமல்லி கார்ஜுனரின் சேவடி ஜோடிதான்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(14)….25-9-2010

    நெய்தடவும் மீசையும் பொய்தடவும் பாஷையும்
    மைதடவும் மங்கையும், மூப்புற -கைவிடுமே!
    சென்னமல்லி கார்ஜுனரால் சின்னவய சாகிடுவாய்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(15)….26-9-2010

    உடம்பை வளர்த்து உயிரை தளர்த்த
    இடம்பிடிப்பாய் ஸ்ரீசைல ஈசன் -குடும்பத்தில்
    சென்னமல்லி கார்ஜுனம் சொன்னவண்ணம் ஊர்ஜிதிக்க
    உன்னயள்ளிக் கொள்ளும் உவப்பு….(16)….26-9-2010

    வெக்கமென்ன மானுடா அக்கமகா தேவியின்
    சக்களத்தி ஆகிநீ சண்டையிடு -அக்கணமே
    சென்னமல்லி கார்ஜுனம் என்னதிது என்றுவர
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(17)….26-9-2010

    காமனிடம் கால்பிடித்துக் கெஞ்சாதே, கையேந்தி
    சோமனிடம் பிச்சைக்குச் செல்லாதே -ஷேமமாய்
    சென்னமல்லி கார்ஜுனர்முக் கண்ணசையக் காதலாய்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(18)….27-9-2010

    பொய்யடைத்துப் பேசி பொருள்குவித்துப் போகுங்கால்
    கையெடுத்துப் போகுமோ கூன்முதுகா -உய்படுத்து
    சென்னமல்லி கார்ஜுனரின் சன்னிதியில் நிம்மதியாய்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(19)….27-9-2010

    ஆர்ப்பரித்து ஓடிவந்த ஆகாச கங்கையின்
    நீர்பரப்பை வார்சடையால் நேர்படுத்தி -பார்விடுத்த
    சென்னமல்லி கார்ஜுனரின் சீதளம் சீர்படுத்த
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(20)….27-9-2010

    திருநீறு மஞ்சள், திகம்பரம் ஆடை
    குருபாத தீர்த்தம் குளியல் -மறுநாளை
    சென்னமல்லி கார்ஜுனரின் சித்தமென்று சாய்ந்திருக்க
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(21)….28-9-2010

    சொப்பன வாழ்விது கொப்பள நேரம்தான்
    எப்போ(து) உடையுமென்(று) யாறிவார் -அற்புதம்
    சென்னமல்லி கார்ஜுனன் சுண்டு விரலசைய
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(22)….28-9-2010

    வசமான லிங்க எசமானன் மீது
    பசவண்ணன் சிஷ்யை புகன்ற -வசனத்தை
    சென்னமல்லி கார்ஜுனரின் சன்னிதியில் செப்பிட
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(23)….28-9-2010

    மாற்றான் வனச்சென்ன மல்லியே ஆனாலும்
    நோற்றாளக் கம்மா நமக்காக -போற்றுஅச்
    சென்னமல்லி கார்ஜுனரை சொன்ன வசனத்தால்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(24)….28-9-2010

    ஏகனை, தேவியுமை பாகனை, தேவாரப்
    பாகனை, அக்கம்மா ராகனை, -மோகனை
    எண்ணியிரு பத்தைந்து பண்ணிசைக்கச் சொன்னவனை
    சென்னமல்லி கார்ஜுனனைச் சூடு….(25)….29-9-2010
    —————————————————————————————

    Share
  • மீனாட்சி திருக்கல்யாணம்….!

     

    ஈசனார் மீனாள் இணைந்த திருமணத்தை
    பூசலா நாயனார் போலவே -யோசனையில்
    கண்டு களித்ததை கூறிடக் கற்பகத்தின்
    குண்டு குமாரனே(பிள்ளையார்) காப்பு….(1)….

    ———————————————————-
    கல்யாணக் கதை கதையாம் காரணமாம்
    —————————————————-

    சென்றமுறை பார்வதி சம்பு திருமணத்(து)
    அன்றமர்ந்தான் தெற்கில் அகத்தியன் -குன்றென
    மீண்டுமவன் காண மதுரையில் மீனாட்சி
    ஆண்டவன் கல்யாணம் ஆம்….(2)….

    பெண்வீட்டார் – பிள்ளை வீட்டார் அறிமுகம்
    ———————————————————–

    மண்சுமந்தோன் பிட்டுக்கு மாப்பிள்ளை, மைத்துனனோ
    மண்சுமந்த வாயன், மணமகளோ -மண்புகுந்த
    மேனாள் இமவான் மகளான மாதங்கி
    மீனாளாய் வந்த மலைப்பூ….(3)….

    நிச்சயதார்த்தம்
    ———————

    சித்திரைத் திங்களில் சித்திறை சொக்கனுக்கு
    இத்தரை வந்த, இமவானின் -புத்திரியை,
    தத்தாய் மலயத் துவசன் வளர்த்தவளை,
    முத்தண்ணா செய்தார் மணம்….(4)….

    கல்யாணப் பத்திரிகை
    ——————————–

    சித்திரைத் திங்கள் சனிக்கிழமை அன்றுபகல்
    இத்தரையில் மீன இலக்கினத்தில் -பத்தரைக்கு
    பின்னாலே மீனாளை அண்ணா மஹாவிஷ்ணு
    கன்னிகா தானம்சொக் கர்க்கு….(5)…

    கல்யாணச் சத்திரம்
    ————————-

    அத்தனைபேர் வந்ததால், ஆலவாயில் தங்கிட
    சத்திரம் இல்லாமல் சம்புமையாள் -கைத்தலம்
    பற்றுவதை மச்சான் பெருமாள் தமுக்கத்தின்
    வெற்றிடத்தில் வைத்தான்பார் விஷ்ணு….(6)….

    சீர் வரிசை
    ————–

    பிள்ளைக்கு சீராகப் பொன்னில் திருவோடும்
    வெள்ளி முலாமிட்ட வெண்ணீறும் -கொள்ளியிடும்
    குச்சிக்குப் பூணிட்டு காளைக்கு லாடமிட்டார்
    மச்சினர் மல்லாந்த மால்….(7)….

    வரதட்சிணை
    —————

    குவளைக்குள் பிச்சைக்கூழ் கொள்வோன் கறாராய்
    அவலுக்(கு) அளித்தேழை ஆன -குவளைக்கண்
    மாலோனை முன்ஜாமீன் மன்றாடி கேட்பதற்குள்
    பாலாழிக் கண்ணஅம் பேல்….(8)….

    ஜான்வாசம்
    ————–

    சித்திரை வீதியில் ஜான்வாசம், கொட்டாவி
    நித்திரை மைத்துனர் நீட்டிவிட -பித்தனமர்
    அக்காளை அஞ்சி அலங்காநல் லூர்சென்று
    உட்கார ஊர்வலத்திற்க்(கு) ஓய்வு….(9)….

    கண்ணூஞ்சல்
    —————–

    கண்ணூஞ்சல் ஆடினர் பெண்ணும்மாப் பிள்ளையும்
    விண்ணூறும் தேவர்கள் வீசிட -மண்ணூறும்
    மக்களண் ணாந்துமண மக்களைக் காட்டியிட்டார்
    கக்கமுறை சேய்களுக்குக் கூழ்….(10)….

    மாப்பிளைக் கண்ணுக்கு மையிடுதல்
    ———————————————-

    மாப்பிள்ளை கண்ணுக்கு மையிட்டோர் கைகளில்
    தீப்புண் தகிக்க தவித்தனர் -கூப்பிட்ட
    மைத்துனர் மாலன் மருத்துவனால் பச்சிலையை
    வைத்தணைத்தார் நெற்றிக்கண் வீச்சு….(11)….

    காசியாத்திரை-மாப்பிள்ளைத் தோழன்
    ———————————————-

    யாப்பில்லை என்றாலும் ஏழை தருமிக்கு
    மாப்பிள்ளைத் தோழன் மரியாதை -கூப்பிட்டு
    காசியாத்தி ரைக்கு குடைவிசிறி தந்தனன்
    ஈசன் விளையாடல் இது….(12)….

    சிவகாசி யாத்திரை செல்லல் தடுக்க
    விவகா ரமானமச்சான் விஷ்ணு -சிவகேசம்
    மேலமர்ந்த கங்கையை மொண்டு தரையிலிட
    ஆலவாய் காசிநகர் ஆச்சு….(13)….

    சம்பந்தி சண்டை
    ———————

    சொக்கன்கல் யாணத்தில் சம்மந்தி சண்டையிட
    விக்கினமாய் யாரும் வராததால் -சக்களத்தி
    கங்கை குதித்திறங்க செங்கண்மால் தம்பதிக்கு
    தன்கையில் ஏந்தித் தெளிப்பு….(14)….

    மாப்பிள்ளை-முறுக்கு
    ————————-

    குனித்த தலையாய், குதிகால் நடையாய்
    பனித்த விழியாய் பயந்து -தனித்திருந்து
    புக்ககக் கூடலில் பூனையாய் வால்சுருட்டி
    முக்கண்ணன் சொக்கன் முழிப்பு….(15)….

    மீனாளைப் பார்த்து மதுரை மயங்கியதில்
    மானாளை முற்றும் மறந்தது -தூணாளும்
    ஆய்ப்பிள்ளை மச்சான் அநுதா பமாயளிக்க
    மாப்பிள்ளை வாயில் முறுக்கு….(16)….

    கன்னிகாதானம்
    ——————-

    தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
    யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற
    பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
    சேக்கிழார் சாமி சபைக்கு….(17)….

    பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
    சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
    நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
    அள்ளிவந்தார் சேலை அலைந்து….(18)….

    கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
    மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
    மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
    முடிந்தான் அரன்முடிச்சு மூன்று….(19)….

    அம்மி மிதித்தேறி அருந்ததி பார்த்தல்
    ————————————————

    சொக்கனுடம் மீனாட்சி அக்கினியைச் சுற்றிவரல்
    வக்கணையாய்க் காண வசிட்டனுடன் -அக்கணம்
    அம்மிமிதித்(து) ஏறி அருந்ததி பார்த்தனள்
    விம்மிஆ னந்தநீர் விட்டு….(20)….

    கல்யாணத்திற்கு வந்த VIP பிள்ளைகள்
    ————————————————

    கல்யானைக்(கு) அன்றுயிர் கொள்ளவைத்த சொக்கனைக்
    கல்யாணம் கொள்கிறாள் கன்னிமீனாள் -தொல்யானைப்
    பிள்ளையும் வேலனும் பார்த்ததால் பெற்றோர்க்கு
    இல்லையொண் ணாத இனிப்பு….(21)….

    கல்யாணச் சாப்பாடு
    —————————-

    உண்ட பெருவிருந்தால் குண்டோ தரன்கொண்ட
    தொண்டை அடைத்திடும் தாகத்தைக் -கண்டசிவன்
    கைவை எனச்சொல்லக் கைமாற்றி வைத்தவன்முன்
    வைகை விரைந்தாள் வளைந்து….(22)….

    மொய் எழுதுதல்
    ——————–
    மாப்பிள்ளை சொக்கன் மணமகள் மீனாளைக்
    காப்பிட்டுக் கொள்கிறார் கல்யாணம் -சாப்பிட்டு
    மொய்யெழுது வோர்க்குமச்சான் மாலோலன் தாம்பூலப்
    பையேந்தி நிற்பார் பணிந்து….(23)….

    நலங்கு
    ———

    விடக்கண்டன் சொக்கன் விடாக்கண்டன் ஆகி
    விடமறுத்தான் தேங்காய் நலங்கில் -படபடத்த
    கெண்டை விழிமீனாள் கோபிக்க அஞ்சியரன்
    அண்டத்துக் கோளை அளிப்பு….(24)….

    மாலை வரவேற்பு
    ——————–

    மச்சினன் வேண்டியதால் மாலை வரவேற்பில்
    அச்சிவன் தாண்டவம் ஆடிட -உச்சத்தில்
    ஓடிவந்து மீனாள் ஒயிலாக சேர்ந்துகொள்ள
    கூடலுக்குக் கூடுதல் கூத்து….(25)….

    சாந்தி முகூர்த்தம்
    ———————–

    முதலிரவில் மீனாள் கதவடைத்துச் சொன்னாள்
    மதுரைவாழ் மக்களின் மாண்பு –
    பதவிசாய் நாகரீகப் பண்பு -பொதுவிடத்தில்
    மாட்டோடும் ஓட்டோடும் மானத்தை வாங்காதீர்
    வீட்டோட மாப்பிள்ளை வாள்….(26)….

    இச்சென்று முத்தமிட ஈசன் நெருங்கிட
    நச்சென்று நாகம் நெளிந்தது -அச்சச்சோ
    என்றலறி மீனாள் எகிறி குதித்தோட
    அன்றுசிவ ராத்திரி ஆச்சு….(27)….

    பாலிகை கரைப்பு
    ———————–

    மாளிகை மீனாள் மயானனை ஏற்றிட
    பாலிகையை பெண்கள் பகிஷ்கரிப்பு -நாலுகை
    மைத்துனன் வைகையில் மோகினியாய் தானியத்தைக்
    கைத்தலம் ஏந்திக் கரைப்பு….(28)….

    கட்டுச் சாதக் கூடை
    —————————

    கழுத்தரவம் தன்னை கடாசி எறிந்தான்
    அழுத்தியுமை யாளை அணைக்க -பழித்தனர்
    கட்டு விரியன்கள் கட்டிக் குலாவிடும்
    கட்டுச்சா தக்கூடை கண்டு….(29)….

    மலயத்துவசன் பிரிவோபசாரம்
    —————————————

    கலையத் துவங்கினர் கல்யாணம் கண்டோர்
    அலையில் படுத்தான் அரிமால் -மலயத்
    துவசன் வளர்ப்பை தழுவிப் பகர்ந்தான்
    கவசமே கூடலைக் கா….(30)….

    சிவசிவ என்று சிரத்தில் மலையத்
    துவசனார் குட்டித் தொழுது -அவசரமாய்
    கெஞ்சினார் ”நஞ்சுண்டா மிஞ்சினாலும் மீனாளை
    நெஞ்சில் அமிழ்தாய் நிறுத்து”….(31)….

    கோயிலுக்குல் புகுதல்
    —————————-

    சித்தரின் சன்னிதியில் சொக்கனும் மீனாளும்
    சுத்திவந்து தம்பதியாய் சேவித்து -தத்தம்
    கருவறைக்குள் செல்வதைக் கண்ட மதுரை
    அரஹர சம்போவென்(று) ஆர்ப்பு….(32)….

    பல ஸ்ருதி
    ————-

    மாதரசி மீனாள் மஹாதே வனைமணந்த
    போதரிசி வாழ்த்தைப் பொழிந்தோர்க்கும் -காதுருசி
    கொண்டதைக் கேட்டோர்க்கும் கேட்டதை சொன்னோர்க்கும்
    விண்டதெலாம் வாணியவள் வாக்கு….(33)….கிரேசி மோகன்….!

    Share
  • ’’கிரகணம்’’….!

     

     

    ”சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
    கவர்ந்திடு மோவாயால் கவ்வி!, -சிவந்ததுமூன்(BLOOD MOON)
    போக்கில் தடம்மாற, பூமி புகுந்ததால்
    காக்காஊஷ் ஆச்சு கலை(சந்திரன்)’’….!
    (அல்லது)
    ‘சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
    கவர்ந்திடு மோவாயால் கவ்வி!,-உவந்திடும்,
    அஞ்ஞானக் கேள்விக்(கு) அட!பதில் என்னவோ!,
    விஞ்ஞானம் விட்ட வழி’’….!

    ’’அகந்தை கிரகணம் ஆன்ம நிலவுள்
    புகுந்து பிடிக்கும் பளிச்சை, -உகந்துன்னுள்,
    நானார் விசாரிக்க நம்மைவிட்(டு) ஓடுமே:
    சோணா சலரமணன் சொல்’’….கிரேசி மோகன்….!

    Share