கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

(Gita 7:14 “Only those who surrender to me, can free themselves from my Maya, which is divine.”)
எங்கிருந்தோ வந்தென்னை ஏக்கத்திற்க்(கு) உள்ளாக்கி
அங்கிங் கெனாதே அலைக்கழித்து -தொங்கிடும்
மந்தியே, நெஞ்சே, மனமே உனக்கேனோ
புந்தியே(புத்தியே) இல்லாமல் போச்சு….கிரேசி மோகன்….!
நெஞ்சறையில் ஐம்புலன்கள் நானகந்தை மீட்டான்ம
அஞ்சறைப் பெட்டியில் இட்டிடு -வெஞ்சிறையில்
போட்டாலும் வைகுண்டம் போனாலும் புத்திக்கு
மாட்டாது மாயா மனம்….!