கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

“அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
காட்டிய கேசவ் கவி”….
“ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவர்க்கு,
நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,
மால்பிறப்பு பாகவத மாச்சு”….!