Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181105a Yashoda krishna – watercolour – A4 100dpi with Yashoda Sundaralingam (SriLanka) live demo. lr

    கட்டி அணைக்கின்றாள் .கண்ணிநுண் தாம்பாலே
    கட்டிய மாற்றாந்தாய் கண்ணனை: -ஒட்டி
    உறவாடும் கண்ணபிரான் ஓரிரவில் மஞ்ஞை(மயில்)
    இறகுடைய விஷ்ணு இவர்’’…..கிரேசி மோகன்….!

     

    என்னதவம் செய்தாய் யசோதையார் கண்ணனை
    வண்ணமுற கேசவ் வரைவதற்கு; -மன்னவனே
    கோவிலுக்கு லீவுவிட்டு கேசவ்இல்ல வாயிலின்
    காவலுக்கு கண்ணா கிளம்பு”….!

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    181110- when maya evaporates DWA -A4-Canson 200 wcol -72dpi lr

    கரதூ ஷணர்கள் பரலோகம் செல்ல
    நரவேஷம் இட்டாய்கண் ணர்க்குமுன் -வரவர்ஷம்(வர மழை)
    அண்டர்கோன்(இந்திரன்) கண்களாய், ஆவினம் காத்திட
    சுண்டுவிரல் கொண்டாய்கல்(கல் -கோவர்த்தன கிரி) கீ(KEY)….கிரேசி மோகன்….!

    KEY -SOLUTION….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181109 Vatsalya – Sepia ink -Canson 200 gsm A4 -72 dpi lr

    விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
    விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
    இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
    தனிமரத் தோப்பில் திளைப்பு….!

    இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
    குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
    பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
    சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்…

    சமர்த்தஅவ் ஆவினை சிந்தா சனத்தில்
    அமர்த்தி கிருஷ்ணனாய் ஆளு -நிமிர்த்த
    முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
    விடியாத நெஞ்சை விலக்கு….!

    பசு உவாச….!
    ==============
    எண்ணம் ஒடுங்கிட ஏகாந்தம் கூடிட
    கண்ணன் கருநீலக் காயாம்பூ -வண்ணன்
    நினைப்பும் நாலுகாலன் நானும் கலக்க,
    கனைப்பை மறந்தேனே காண்….!

    ”மாலோல பாகவதர், மாட்டின் முகம்வருடி
    தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -ஏலேலோ
    வாழ்க்கையில் சிக்கி வழிதவறும் எங்களை
    ஊழ்கையில் சிக்கா(து) உதவு”….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181107 – Adhara sudha -watercolour – A4 Canson 200gsm 100dpi lr

    சேதாரம் மேனிக்கே சாவில்லை ஆன்மனுக்கு
    ஆதாரம் விஷ்ணு அவதாரர், -ஸ்ரீதாரர் (ஸ்ரீதேவியைத் தரித்தவர்)
    வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
    சாகாத அவ்வுணர்வே சத்து….!

    சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
    அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
    மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
    உனையுண்ணத் தூக்கும் உறவு….!

    உறவும் பகையும் துறவும் தெளிவும்
    வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
    ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
    பெறுவீடு காணப் பயன்….!

    பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
    வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
    அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
    மரணத்தில் தானே முடிவு…!

    முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
    வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
    சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
    தர்கத்தைத் தாண்டல் தவம்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181014/15 Satyabhama -Parijatha and Narakasura vadam -wcol 14×20” Arches 300gsm -for Kalki Deepavali malar lr

    “உதிநுதல் சூடி, நதிகங்கை ஆடி(நீராடி)
    சதிபதியாய் ஷீரடி சாயி, -அதிபதி,
    பாபா வழிசென்று, பாமா உதவியில்
    தீபா வளிகாண் தினம்”….கிரேசி மோகன்….!

    மோதக மூக்கனவர், சாதக வாக்கனவர்
    தீதற போக்கிடும் தேஹனவர்-மாதவர்,
    பாபா வழிசெல்வாய், பாமா உதவியில்
    தீபா வளிகாண் தினம்”….!

    விண்டுரைக்க வொண்ணா விளையாட்டுப் பிள்ளையை
    பண்டரிக்குள் வாழும் பகவானாய் -கண்டறிந்து
    பாபா வழிசெல்வாய், பாமா உதவியில்
    தீபா வளிகாண் தினம்”….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181105 – Vayu Vahana -watercolour – A4 Canson 200gsm 100dpi lr

    கோபத்தில் ராமன் கணையெடுத்து கர்ஜிக்க
    ஆபத்(து) உணர்ந்த அலையரசன் – சாபத்துக்(கு)
    அஞ்சி சகியோடு அண்ணல் சரணாகதி:
    அஞ்சனைசேய் வாசிவேகன் அங்கு….!

     

    அண்ணல் அலையரசனை அடக்கும் சு.ரவி ரவிவர்மா ஓவியம் பார்த்து
    ————————————————————————————

    கோபத்தில் ராமன் கணையெடுத்து கர்ஜிக்க
    ஆபத்(து) உணர்ந்த அலையரசன் -சாபத்துக்(கு)
    அஞ்சி சகியோடு அண்ணல் சரணாகதி
    கெஞ்சிடும் கோலம் கவிதை….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    091201 New Forever -A4 icam lr

    ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
    நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
    திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
    கருத்தில் கலந்துவளைக் காப்பு….!

    ”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயதரம்,
    (எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
    உண்ணும் பசுசமேத, உத்தவர் தோழனை,
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….

    முரளி -வேணுகானம்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181103 Krishna philharmonic – indian ink – microtip- A4 100 dpi

    மாட்டுக்குக் கால்களைக் காட்டாது கண்ணன்தன்
    பாட்டுக்குத் தட்டல் தபேலாவை: -கோட்டுக்குள்
    போட்டதற்கு இந்தியன்இன்க் பூசிய கேசவ்கை
    போட்டிருக்கும் காப்பு பிரஷ்(BRUSH)’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    அவனால் அவனி, அவன்தான் புவனி
    அவனை அவனால் கவனி -அவனே
    வருவான் குருவாய் அறிவைத் தருவான்
    பெருவாய் பரம பதம்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181101 Kaliamardhana graphite 10×14″ Arches 300 gsm-icam lr

    முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
    கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
    அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
    நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….கிரேசி மோகன்….!

    Share
  • டாக்டர் ஸ்ரீதர்….!

    செல்லப் பிள்ளை ஸ்ரீதர்
    ——————————-

    மருந்துக்கு அடங்காதது மந்திரத்துக்கு அடங்கும் என்பார்கள்….டாக்டர்.ஸ்ரீதரிடம் ஆஸ்த்மா மருந்தும் இருக்கு, கற்பகாம்பாள் ஆலய மந்திரமும் இருக்கு….நோயாளியின் ஆஸ்த்மா சாந்தி அடையும் டாக்டர் ஸ்ரீதரால்….அதேசமயம் நோயாளியின் ஆத்மா சாந்தியடையாமல் காப்பாற்றுவாள் கற்பகாம்பாள் தனது செல்லப் பிள்ளை ஸ்ரீதருக்காக….செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்….ஸ்ரீதருக்கோ ” தெய்வம் தொழலே தொழில்”….” என்னால முடிஞ்சதை செஞ்சுட்டேன் ….இனி ஆண்டவன் விட்ட வழி ” என்பார்கள் மற்ற வைத்தியர்கள்….ஸ்ரீதருக்கோ ஈஸ்வரன் கபாலி கம்பவுண்டர்….ஈஸ்வரி கற்பகாம்பாள் நர்ஸ்….அப்புறம் என்ன சார்…. ஸ்ரீதரிடம் செல்பவர்களுக்கு நோயோடு பிறவிப் பிணியும் தீர்ந்து விடும்….BOUNCE ஆனாலும் பரவாயில்லை என்று செக்கில் கூட கற்பக-தாஸன் என்றுதான் கையெழுத்திடுவார்…. எங்கள் குழுவைச் சேர்ந்த நடிகைக்கு ”வீஸிங்” பிரச்சினை….ஸ்ரீதரிடம் போகச் சொன்னேன்….அவளுக்கு ”ஆஸ்த்மாவும்” போச்சு….ஆக்டிங்கும் இம்ப்ரூவ் ஆகிவிட்டது….என் குழுவில் சேர வருபவர்களுக்கு நான் இப்போதெல்லாம் சொல்வது ”எப்படியாவது ஆஸ்த்மாவை வரவழைத்துக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரிடம் செல்லுங்கள்….அவர் கொடுக்கும் மருந்தால் உங்கள் நடிப்பு மெருகேறும் ”….மற்ற டாக்டர்களுக்கு ”கைராசி” என்றால் ஸ்ரீதருக்கு கைகொடுப்பாள் கற்பகாம்பாள் ஆசி….

    ”எமக்குத் தொழில் எழுத்து” என்றார் மகாகவி பாரதியார்….ப்ரிஸ்க்ரிப்ஷனில் கவிதை எழுதும் ஸ்ரீதருக்கு வைத்தியம் தொண்டு….கவிதை தொழில்….”மருந்து சாப்பிடும் போது குரங்கை நெனைக்காதே” என்பார்கள்….வித்தியாசமான வைத்தியர் ஸ்ரீதரோ மருந்து தரும்போதே ”வானுயர அவன் வாழ்த்தும் வானர தெய்வமவன்” என்று இலக்குவணைக் காப்பாற்றிய அந்த சமய சஞ்சீவியை நினைப்பூட்டுவார்….வாசி வாசியென வாசிக்க வைக்கும் இந்த மயிலாப்பூர் வாசியின் கவிதைகள்….வாசி என்றால் மூச்சுக் காற்று என்ற ஒரு அர்த்தம் தமிழில் உண்டு….நமது மூச்சுக் காற்று தென்றலாய் வீச, இவர் மூச்சு விடாமல் வைத்தியம் பார்ப்பார்….

    SRIDHAR IS A BREATH-TAKING POET and BREATH-GIVING DOCTOR….

    நகமும் சதையும் என்பது பழைய பாணி….நாசியும் வாசியும் போல இவரும் இவரது துணைவியாரும் இணைந்திருக்கவும்….எல்லோருக்கும் நீண்ட ஆயுளைத் தரும் இவருக்கு நீண்ட ஆயுளை தரவும் இவர் வணங்கும் மயிலை மாதா கற்பகாம்பாளை, இந்த மணி விழா நன்நாளில் வேண்டுகிறேன்….

    அன்பன் க்ரேஸி மோகன்….

    ——————————————————————————————————————————————————————————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181031 Vishwaroopa -10×14″ icam (brushpen-microtip pen) Arches 300 gsm lr

    ’’பசுவரும் முன்னே, விஸுவரூபர் பின்னே,
    கொசுவாகக் காண்டீபர் கெஞ்ச ,-’’அசுவரதம்
    ஏறு முதலில், அருச்சுனாபின் கீதையின்
    சாறுண்டு கொல்நூறு பேரு’’…. கிரேசி மோகன்….!

    பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
    ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
    எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    தீபாவளி தோற்றம்….!
    ———————————————————-

    ஏனத்தால் ஈன்ற பொழுதில் பெரிதுவந்த
    மானத்தை வாங்கும் மகனபி -மானத்தால்
    தந்தை மகாவிஷ்ணு தாள்தொட்டு பூதேவி
    விந்தையாய் வேண்ட,வரம் விஷ்ணு….!

    நாரண அம்பை நரகனுக்கு தந்தபின்
    வேறென்ன வேண்டுமென்ற விஷ்ணுவிடம் -பூரணத்வம்
    தாவென்ற பிள்ளைக்கு ’’தாயன்றி யாராலும்
    சாவில்லை என்றார் சிரித்து’’….!

    தீபாவளி EVE பாமா துணை
    ———————————————–
    நமக்குள் இருக்கும் நரகா சுரனார்
    இமைக்கும் பொழுதில் இறக்க -சமர்த்தன்
    யதுகுலக் கண்ணன் இணைசகி பாமா(பூதேவி)
    உதவிக்கு உண்டு உனக்கு….!

    ’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
    நெம்பிய வராகரே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’…கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181029 Prahlada Narasimha -A4 -Brushpen- lr

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
    குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
    மெலிந்துகர் ஜிக்க மியாவ்….!

    ஏந்தி இலக்குமியை யோகநர சிம்மமாய்
    சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
    திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
    களைத்தல் கதையின் கருத்து….கிரேசி மோகன்….!

    Share