தீபாவளி தோற்றம்….!
———————————————————-

ஏனத்தால் ஈன்ற பொழுதில் பெரிதுவந்த
மானத்தை வாங்கும் மகனபி -மானத்தால்
தந்தை மகாவிஷ்ணு தாள்தொட்டு பூதேவி
விந்தையாய் வேண்ட,வரம் விஷ்ணு….!

நாரண அம்பை நரகனுக்கு தந்தபின்
வேறென்ன வேண்டுமென்ற விஷ்ணுவிடம் -பூரணத்வம்
தாவென்ற பிள்ளைக்கு ’’தாயன்றி யாராலும்
சாவில்லை என்றார் சிரித்து’’….!

தீபாவளி EVE பாமா துணை
———————————————–
நமக்குள் இருக்கும் நரகா சுரனார்
இமைக்கும் பொழுதில் இறக்க -சமர்த்தன்
யதுகுலக் கண்ணன் இணைசகி பாமா(பூதேவி)
உதவிக்கு உண்டு உனக்கு….!

’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
நெம்பிய வராகரே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’…கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.