கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’பசுவரும் முன்னே, விஸுவரூபர் பின்னே,
கொசுவாகக் காண்டீபர் கெஞ்ச ,-’’அசுவரதம்
ஏறு முதலில், அருச்சுனாபின் கீதையின்
சாறுண்டு கொல்நூறு பேரு’’…. கிரேசி மோகன்….!
பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
கண்ணனை நெஞ்சே கருது….!