Author: ரா. பார்த்த சாரதி

  • உலக எழுத்தறிவு தினம்

    -ரா.பார்த்தசாரதி

    International-Literacy-Day1எண்ணும்  எழுத்தும்  கண்னெனத் தகும்
    எழுத்தறிவித்தவன்  இறைவன் ஆகும்
    கல்வி மூலமே தீர்ப்பது சிறந்த வழியாகும்
    கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்!

    மனிதனாய்ப்  பிறந்த யாவரும் எழுத்தறிவு பெற்றிட வேண்டும்
    நாட்டில்  எழுத்தறிவுபெற அரசாங்கமும் பொறுப்பு ஏற்கவேண்டும்
    பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும் கல்வியை மேம்படுத்த வேண்டும்
    இதனைக் கல்வி மூலமே நிலைபெறச் செய்ய வேண்டும்!

    பின்தங்கிய  இனத்தவரும், பாட்டாளிகளும்  எழுத்தறிவு பெறவேண்டும்
    நாட்டில் உள்ளோர் எழுத்தறிவு பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும்
    அதற்கான ஊடகங்களைக் கிராமங்கள்தோறும் ஏற்பட்டுத்த வேண்டும்
    தாய்மொழியில் பயின்று கையொப்பம் இட அறியவேண்டும்!

    எழுத்தறிவினைப் புகட்டி அறியாமை, மூட நம்பிக்கைகளை ஒழிப்போம்
    இரவு நேரப் பள்ளிகள் மூலம் முதியோர்க்கும் எழுத்தறிவிப்போம்
    எழுத்தறிவின்மையை  ஒழிக்க என்றும் நாம் பாடுபடுவோம் என
    நாட்டில் உள்ளோர் சபதம் எடுப்போம் உலக எழுத்தறிவு தினத்தில்!   

    (செப்டம்பர்  8-ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.)
     

     

    Share
  • ஆசிரியர் தினம்!

    -ரா.பார்த்தசாரதி

    teachers day

     

     

     

     

     

     

     

    மாதா, பிதா, குரு  
    மூவரும் கண்கண்ட தெய்வம்
    அன்பிற்கு அன்னை, அறிவுக்குத் தந்தை
    கல்விக்கு ஆசான் (குரு) என உலகம் அறிந்ததே!

    மனித வாழ்கையில் கல்விக்கே முதன்மை
    இதனை நமக்களித்த ஆசிரியர்களுக்கே பெருமை
    மனிதனின் உயர்வுக்கு அவர்கள் அமைத்த ஏணி
    ஏணியாய் இருந்தவர்களுக்கு என்றும் ஆசிரியர் எனும் பதவியே!

    ஆசிரியர் பணி மகத்தான பணியன்றோ!
    அவர்களை நினைவுகொள்வது நமது கடமையன்றோ!
    ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராய் இருந்தவரே!
    அவர்தம் பிறந்தநாளே ஆசிரியர் தினமாக அறிமுகமானதே!

    அறிவுத்திறன், கல்வித்திறன் இரண்டும் நாட்டிற்கு வளமை 
    அதிலும் தரமான கல்வியை அளிப்பதே நாட்டின் கடமை
    வாழ்க்கையில் கல்வி என்பது மனிதனின் இருகண்கள்
    கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை என்றும் மறவாதீர்கள்!   

    Share
  • சென்னையின் வயது 375!

    -ரா. பார்த்தசாரதி

    சென்னையின் வயது முன்னூற்று எழுபத்து ஐந்து ஆண்டுகள் !
    இங்கே நாம் காணும் பல  வளர்ச்சிகள், காணப்படும்  அதிசயங்கள், கெட்டும்  பட்டிணம்  சேர்  என்ற  பழமையான  பழமொழிகள் பலதரப்பட்ட  மக்கள் வளர்ச்சி அடைந்ததற்கு எடுத்துகாட்டுக்கள் !

    சென்னைக்குத் தனிமொழி,
    நடிகர் ரஜனிக்கும் தனிவழி!
    தேன் மதுரத் தமிழ் எல்லா மொழியிலும்  இருப்பதுண்டு ,
    வாஞ்சைகொஞ்சும்  நெல்லைத் தமிழ்,
    மரியாதை மிளிரும் கொங்குத் தமிழ்,
    நாஞ்சில் தமிழ், மதுரைத் தமிழ், கலப்பு மிகுந்த சென்னைத் தமிழ்!

    சென்னைத் தமிழ் சற்றே வித்தியாசமாய் இருந்தாலும்
    பலதரப்பட்ட மொழியினரும், சமயத்தவர்களும் இருந்தாலும்,
    வேற்றுமையில் ஒற்றுமை இன்றும் இங்கே பரவி இருக்கின்றதே!

    பன்மொழிச் சொற்கள் கலப்பு, பல்வேறு இனம்,
    பலவிதக் கலாசாரத் தொடர்பு, இவையே சென்னையின் அடையாளம்!
    திரைப்படம் வாயிலாகச் சென்னைத் தமிழ் பல பகுதிகளில் பரிச்சயம்!
    இதுவே சென்னைத் தமிழ் உலாவிவரும் அதிசயம் !

    புராதனக் கோவில்கள், கலங்கரை விளக்கங்கள் !
    பழமை மிகுந்த மாளிகைகள்,  துறைமுகங்கள் !
    கன்னித் தமிழ் மாறா நூலகங்கள், உருவச்சிலைகள் !
    பாலங்கள், சிறந்த கடற்கரைகளும் காணப்படுகின்றதே!

    பல பிரபலங்களைச் சென்னை தன்னகத்தே கொண்டதே !
    கனகசபைப் பிள்ளை, பிரகாசம் பந்துலு, முத்துஸ்வாமி தீட்சதர்,
    கணிதமேதை ராமனுஜம், பாலசரஸ்வதி, மற்றும்
    இந்தியாவில் முதல் மருத்துவப் பட்டம் பெற்ற முத்துலட்சுமி ரெட்டி ! 

    நிறை பற்றிப் பேசினாலும் குறையில்லா நகரம்இல்லை !
    குப்பைக் கிடங்காய்க் கூவம் ஆற்றைச் சுத்தபடுத்த முடியவில்லை!
    புராதனக் கட்டிடங்கள் பல பராமரிக்கப்படவில்லை!
    சாலைகளும், போக்குவரத்தும் முறைப்படுத்தவில்லை !

    பாலங்கள் அதிகமானாலும், ஆங்காங்கே பள்ளங்கள் அதிகம்!
    உயரிய கட்டிடங்கள் அதிகமானாலும் உண்மைத்தரம் இல்லை !
    தொழிற்சாலைகள் வளர்ந்தாலும், தொழிலாளர்களின் நலன் இல்லை !
    அரசிடமும், அரசியல்வாதிகளிடமும்,
    லஞ்சம் தலைதூக்காமல் இல்லை !

    சென்னையில் கேளிக்கைப் பூங்காக்களும், மலர்ப் பூங்காக்களும் உள்ளதே!
    என்றும் இதை அமைதிப்பூங்காவாக ஆக்குவது நமது கடமையே !
    சென்னைவாசிகள் மனம்வைத்தால் இவைகள் என்றும் சாத்தியமே !
    நற்செயலால் நமது நகரத்தைச் சொர்க்கமாக்கக் கை கொடுப்போமே !

    Share
  • கீதையின் நாயகனே!

    -ரா. பார்த்தசாரதி

    தீமை செய்த காளிங்கன்மேல் நடனம் புரிந்தாய்!    krishna_arjuna
    வெண்ணை திருடும் கள்வனாய்த் திரிந்தாய் !

    இந்திரனின் கர்வத்தை அடக்கி ஆயர்குலத்தினைக் காத்தாய் !
    அவர்களுக்காக மலையையே குடையாகப் பிடித்தாய் !

    கிருஷ்ண, பலராமனாக, அக்குரருடன் சென்று கம்சனை வதைத்தாய் !
    பெற்றவளையும், வளர்த்தவளையும்  வணங்கி நின்றாய்!

    பண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்திற்குத் தூதுவனாய்ச் சென்றாய் !
    துரியோதனனுக்கும் மற்றவர்களுக்கும் அறிவுரை கூறினாய் !

    போரே முடிவானதும் பாண்டவர்பக்கம் துணை இருந்தாய் !
    போரில் கீதை எனும் வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தாய் !

    தர்மத்தினால்  பாண்டவர்களைப் போரில் வெற்றிபெறச் செய்தாய் !
    அதர்மத்தை அழிக்கவே அவதாரம் எடுத்தாய் என்பதை நீயே அறிவாய்!

    ஆக்கலும், அழித்தலும் உன் அவதாரத்தினால் நடந்திடச் செய்தாய் !
    ஜடவரதன் அம்புபட்டு யாரும் அறியாமல் விண்ணுலகம் சென்றாய் !

    Share
  • எம்மொழியே செம்மொழி!

    -ரா. பார்த்தசாரதி

    இனிய  தமிழ் மொழியே நமக்கு அமுதம்!                   semmozhi tamil
    நமக்கு இன்பம் தந்ததாலே நல்லமுதம்!
    எங்கள்  தமிழ்மொழியே சிறந்த செம்மொழி!
    அருளாளர்களும், ஆழ்வார்களும் வளர்த்த மொழி!

    தமிழுக்கும் அமுதென்றுபேர் என்பார் பாரதிதாசன்!
    தமிழ்  எங்கள் அறிவுக்குத்  தேன் என்பார்
    தமிழ் எங்கள்  பிறவிக்குத்  தாய்  என்பார்
    தமிழையும் தாயையும் புகழாமல் இருப்பவருண்டோ தரணியிலே?

    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
    தேன்வந்து  பாயுது காதினிலே என்றார் பாரதியார்!
    செம்மொழி மாநாடு நடந்ததும் கோவையிலே,
    தமிழர்கள் கவிதை பாடியதும் தமிழ் ஆர்வத்தினாலே!

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்!
    தமிழ் படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை,
    தமிழ் உரையாடலே, நீதிமன்றச்  சபையினிலே,
    எம் தமிழ்மொழியும், பெருமையுறுமே பாரினிலே!

    தமிழ் பரவும் வகை செய்திடுவோமே!
    கணினி மென்பொருளால் உலகெங்கும் பரப்பிடுவோமே!
    அயல் நாட்டினரிடையே  எம்மொழி தொன்மையென எடுத்துரைப்போமே!
    எம்மொழியே ஏற்ற மொழி என நிலைநாட்டுவோமே!

    தமிழ் தமிழென முரசு கொட்டவேண்டாம்!
    ஆங்கிலத்தை என்றும் தமிழிலே கலக்கவேண்டாம்!
    தமிழிலும்  அறிவியல், உலகவியல்  உண்டு!
    பொருளை விளக்கவும் எம்மொழிகே தனித்திறமை உண்டு!

    எளிய நடையினில் எம்மொழியில் எழுதிடவே…
    இலக்கணங்கள் புதிதாய் நன்முறையில் தோன்றிடவே…
    வெளியுலகில் புதிய சிந்தனைகள் வருவதுண்டு!
    அச்சிந்தனையினை விளக்கவும் எம்மொழிக்குத் தனிச் சிறப்புண்டு!

    ஆங்கிலப் பெயர்ப் பலகையினைத் தமிழில் மாற்றுவதும் நல்லதன்றோ!
    அதுவே தமிழ்நாட்டின் தமிழ்க்கே ஒரு சிறப்பன்றோ!
    தனியார்ப்பள்ளிகளிலும் தமிழ்மொழிக் கல்வி புகுத்திடவேண்டுமே!
    அறிவியலிலும், உலகவியலிலும் தனித்தொரு திறனாய்வு செய்திடல்                                                                                                                                                     வேண்டுமே!

    எம்மொழி, செம்மொழி  எனச் சொன்னால் போதாது!
    ஏற்றமிகு மாற்றங்கள் செய்திடல் வேண்டும்!
    மாற்றங்கள் செய்யப் பள்ளியும், கல்லூரியும் ஒருமைப்படவேண்டுமே!
    பாமரனும் படித்து  உவகை  கொள்ள வேண்டுமே!

    இலவச நூலகங்கள்  எவ்விடத்திலும் நிறுவவேண்டும்!
    எம்மொழியே உயர்வென்று பறைசாற்றிட வேண்டும்!
    தலைமுறைகள் பல கழிந்தோம் குறைகளைய வேண்டும்!
    எம்மொழியே செம்மொழியென ஆதரிப்பீர்! வாரீர்!

    Share
  • Human Life

    -Raa. Parthasarathy

    Happiness and Sorrow as waves on the Sea                      yacht-in-rough-sea
    We all Sailing on the above,
    It is stumbling as Yacht on the Sea,
    Good and bad never we foresee.

    Time and Tide never wait and See,
    Ups and downs in our Life of Sea,
    In the World of Instability, we expect Stability,
    We sail on the boat of faith, with Reliability.

    Share
  • பெயரிடப்படாத ஆண், பெண் உறவு

    ரா. பார்த்தசாரதி

     
    தர்ம சிந்தனை, நல்லெண்ணம் கொண்டு உதவுபவன்
    செய்யும் உதவிக்கு எந்த கைம்மாறும் எதிர்பாரான்.

    வேலைக்காரியின், மகள் படிப்பிற்கு ஏன் உதவவேண்டும்?
    கார் டிரைவரின் தாயாரின் மருத்துவத்திற்கு ஏன் உதவவேண்டும் ?
    மாதம் ஒரு முறை அநாதை குழந்தைகளுக்கு ஏன் உதவவேண்டும் ?
    இவர்கள் எனது பெயரிடப்படாத உறவுகள் என சொல்லவேண்டும்

    உறவுகளின் பெயர் இருந்தும், உறவு மறந்துபோகும் !
    பெயரே இல்லாத ஆண், பெண் உறவுகள் வந்து போகும் !

    பாசமும், பந்தமும், கொண்ட உறவுகள் நிலைக்குமா?
    நாம் செய்யும் நல்லவைகள் என்றாவது பிரதிபலிக்குமா!

    ஒழுக்கம் மாறாத அன்பும், பழகும் விதமே உறவின் எல்லை !
    இதனை அறிந்த மனித இனத்திற்கு என்றும் கவலை இல்லை !

    நான் நோய்வாய்பட்டு இருந்தேன் சில நாட்கள் !
    என்னை காண வந்ததே அந்த பெயரிடப்படாத உறவுகள் !

     

     

    Share
  • உறவும், நட்பும்!

    -ரா. பார்த்தசாரதி 

    மனிதனே! உறவையும் நட்பையும் உதறிவிடாதே!
    பழகும் விதத்தில் பழகினால் பகையும்  நட்பாகும்!
    மண்எனப்  பிரித்தால் மனிதம் என்றும் சாகும்!
    இனம்எனப் பிரித்தால் இனிமை இல்லாமல் போகும்!

    சொந்தம் என வாழ்ந்தால் என்றும் சுகமாகும்!
    மனிதநேயத்துடன்  வாழ்ந்தால் என்றும் நலமாகும்!
    பாசத்தையும் நேசத்தையும் பாலமாக அமைத்திடு!
    சாதி மத பேதத்தை வேரோடு அழித்திடு!

    வயதிற்கும் படிப்பிற்கும் என்றும் மரியாதை கொடுத்திடு!
    நட்பும் உறவும் உன் உடன்பிறப்பு  என நினைத்திடு!
    மன்னிக்கத் தெரிந்த மனிதனை நல்லவன் எனக் கருதிடு!
    கோபத்தையும் ஆணவத்தையும் அடக்கி உறவினைக் காத்திடு!

    Share
  • அன்புள்ள கணவா!

    -ரா. பார்த்தசாரதி

    அன்புள்ள  கணவா! உன் நெஞ்சில் நான்  நிறைந்திருந்தாலும்,
    என் பெண்ணுள்ளம் எதிரொலியாய்  இருந்தாலும்,
    நான் என்றும் நீ என்றும் இருவராக இருந்தாலும்,
    நான்  வேறு,  நீ வேறு யார் சொன்னாலும்,

    உந்தன் மனதினிலே நான்  என்றும்  இருந்தாலும்,
    சுகமும், துன்பமும் சரிபாதியாய்  இருந்தாலும்,
    பூவாகி, காயாகி, கனியாய்  இருந்தாலும்,
    நீயாகி, நானாகி, நாமாய் இருந்தாலும்,

    சுகம் சுகம் அது துன்பமான இன்பமாய் இருந்தாலும்,
    மனம், பேதை மனம் மாறாத சொந்தம் இருந்தாலும்,
    இனமாகிய பெண் உனக்கே உரிமையாய் இருந்தாலும்,
    அது பூப்போல மென்மையாய்ப் பூத்திருந்தாலும்,

    உந்தன்  நிழலாக  நான் மாறும் நாள் வந்தாலும்,
    தேன் உண்ணும் வண்டாய் நீ இருந்தாலும்,
    தெம்மாங்கு பாட நீ நினைத்திருந்தாலும்,
    தொலைவில் இருந்தும் என் நெஞ்சத்தில் மறைந்திருந்தாலும்,

    கல்யாணம் முடிந்து காதல் மறைந்தாலும்,
    பழமையான காதல் நினைவுகள் மறக்காமல் இருந்தாலும்,
    நமது வாழ்க்கை எனும் ஓடம் ஓடிக்கொண்டிருந்தாலும்
    பொங்கும் நமது உள்ளமே வாழ்வின் புது வெள்ளமே!

                                       

    Share
  • சந்தோஷம் என்றும் நம் பக்கம்!

    -ரா. பார்த்தசாரதி 

    சந்தோஷம் என்றும் நம் பக்கம்! 
    சந்தோஷம் என்றாலே மனிதனுக்குப் பாதிபலம்!
    அது இல்லையெனில்  மனிதனுக்கு ஏது  பலம்?
    சந்தோஷம்  நாம்  வாழ்க்கையில் தேடுவது!
    எப்பவும்  எல்லோர்  நெஞ்சுக்குள் நினைப்பது!
    போதுமென்ற  மனம் இருந்தால் தானே வருவது!

    சூரியனைக்  கண்டால்  தாமரை
    சந்தோஷத்துடன்  மலர்ந்துதானே பழக்கம்?

    கார்முகில்கள்  திரண்டு  வந்து
    மழை தந்துதான்  பழக்கம்!

    மழையைக்  கண்டால்  மயிலுக்கு
    மகிழ்ச்சியுடன்  ஆடித்தான்  பழக்கம்!

    காட்டில் உள்ள  குயிலுக்கோ
    சந்தோஷத்துடன் கூவித்தான்  பழக்கம்!

    கிடைத்ததை  மனதிற்கொண்டு  நடப்பவை
    எல்லாம்  நன்மைக்கே  எனத் தெளிந்தால்
    வாழ்வில்  சந்தோஷம்  என்றும் நம் பக்கம்!

     

    Share
  • தந்தையர் தின விழா!

    -ரா.பார்த்தசாரதி

    Fathers-Day-Poster

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய  நாடு!
    அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்ற நாடு!
    தாயைவிடச் சிறந்த கோவில் இல்லை!
    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை!

    தாயிடம் அன்பும்,  தந்தையிடம் அறிவும்,
    அவர்களால் கல்விமானாய் உலகில் திகழவும்,
    பணம் ஒன்றினால் பாகுபடுத்தத் தெரிந்தவனாய்,
    ஏன் பாசத்தை மட்டும் காட்டத் தயங்குகின்றாய்!

    அன்று அவர்கள் கொடுத்த முகவரிதான்
    இன்று உன்னை அடையாளம் காட்டுகின்றதே!
    பழையதை மறந்து, புதியதில் என்றும் திளைக்காதே!
    வந்த வழியினையும், பாதையினையும் என்றும் மறக்காதே!

    தந்தையே  உன்  பிறப்பிற்குக் காரணம்
    தந்தையே உன் அறிவிற்கு ஆதாரம்!
    பணம் என்றும் எட்டிப் பார்க்கும்
    பாசம்  என்றும்  பக்கத்தில் நிற்கும்!

    வாழ்க்கை முழுதும் குடும்பத்தின்  தூணாய்,
    உன் ஆண்மைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாய்,
    உலாவி வரும்  தந்தையே   இடிதாங்கி!
    ஏன் எனில் நல்லது கெட்டதெல்லாம் அவர்மேலே!

    தந்தைக்கும் தாய்க்கும்  ஊன்றுகோலாய்  இருந்திடு!
    அவர்களே கண்கண்ட தெய்வமென  நினைத்திடு!
    தரணியில் என்றும் சிறந்து விளங்கிடு!
    எல்லோர்க்கும் நல்லவனாய்  என்றும் திகழ்ந்திடு!

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –ரா.பார்த்தசாரதி.

     

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasanகவியரசு கண்ணதாசன், 1974ஆம் ஆண்டு , பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ் பேரவைக்கு தலைமை தாங்க வந்தார். வந்தவர், சற்று நேரம் கழித்து வந்தமையால், எனக்கென்று ஓர் தனிமதம், அதுவே தாமதம்.என்று கூறி கவிதை பாங்குடன் கூறி, கைதட்டல் பெற்றதை நினைத்துப்பார்த்தேன்.

    அன்று, கண்ணதாசன், நா.பார்த்தசாரதி ( தீபம் இதழ் ) மற்றும் புரட்சி எழுத்தாளர் ஜெயகாந்தன் மூவரும் ஒரே மேடையில் பேசினார்கள். எண்ணிப் பாருங்கள் எப்படியிருக்கும் என்று ! அரங்கமே களை கட்டியது. இடை, இடையே, பரிசு அளிப்பு விழவும் நடந்தது. தேனிர் இடைவேளை வந்தது. இருபத்தொரு வயதுடைய ஒரு கல்லூரி மாணவன் அவரிடம் தேனீர் கொடுத்துவிட்டு , ஐயா, கவியரசு அவர்களே, நான் பொது அறிவிற்கான பரிசினைதான் தாங்களிடம் பெற்றேன், கவிதைக்கு அல்ல என்றேன். உடனே கவியரசு , மாணவனே, பொது அறிவும், சமுதாய நோக்கும், கற்பனை திறனும்
    இருந்தால்தான் என்னை போன்றவர்கள் கவிதை எழுத முடியும்.!

    ஐயா, ஒரு சந்தேகம் ! தாங்கள் அத்திக்காய் , ஆலங்காய் வெண்ணிலவே என்ற பாடலில் ( பலே பாண்டியா திரைபடத்தில் ) பல காய்களை கொண்டு காய்ப்பது ஏன் ? காதலின், காதலி இடையே காய் வருவதன் காரணம் என்ன?

    அதற்கு புன்சிரிப்புடன், காதலன் வெண்ணிலவைப் பார்த்து என்னை வேண்டுமானாலும் காய் , என் காதலையும், காதலியையும் காயாதே என சுருங்கச் சொல்லி தெளிவித்தார். என்னே அவரது கவி நயம்.

    அன்று அவர் திறன் கண்டு, மெய்மறந்து நின்று, பரிசு பெற்ற அக்கல்லூரி மாணவனுக்கு அன்று வயது இருபத்தொன்று. ஆம், அன்று பரிசுபெற்ற மாணவன்தான் இன்று அகவை அருபத்தொன்று அடைந்த ரா.பார்த்தசாரதி, வல்லமையின் வாசகன்.

    Share
  • கடல் அன்னை!

    -ரா.பார்த்தசாரதி 

    கடலும் சமுத்திரமும் ஒன்றே!
    உலகமும் கடலால் சூழ்ந்திருப்பதும் தெரிந்த ஒன்றே!              sea

    கடலில் என்றும் அலைகள் ஓய்வதில்லை!
    மனித வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் ஓய்வதில்லை!

    உலகிற்கே மழைதந்து தாகம் தீர்க்கிறோமே!
    உப்புத் தண்ணீரையும்  குடிநீராய் மாற்றுகிறோமே!

    என்றும் பல உயிர்கள் என்னுள் வாழ்கின்றதே!
    தேவையற்ற கழிவுகளைச் செலுத்தி உயிர்கள் இறக்கின்றதே!

    நதிகள் பிறந்தாலும் எங்களிடம்  சேருகின்றதே!
    நீ  இறந்தாலும் உன் சாம்பல் என்னுள் கரையுதே!

    நான் கோபம் அடைந்தால்  சுனாமியாய்ச் சீறுவேன்!
    கடலோர  மக்களையும்  பழி வாங்குவேன் !

    சாகத் துணிந்தவனுக்கு நான் முழங்கால்அளவு!
    என்னைப்  பற்றி உனக்கே  தெரியும் என்அளவு!

    மனிதனே!  என்னால் என்றும்  உலகிற்கு  நன்மையே!
    மனிதனே! உன்னால் என்றும்  எனக்குத் தீமையே!

    என் அழிவு  பிரளயத்தில்தான் முடியும்!
    உன் அழிவு  பொறாமை,பேராசையாலும் அமையும்!

    உப்பு நீரையும்  குடிநீராய் உனக்கு அளிக்கின்றேன்!
    காலம்  தவறாமல் மழை  பெய்விக்கின்றேன்!

    உன் வளர்ச்சிக்கும் வளமைக்கும் நான் உற்றதுணை!
    என்னிடம் கருணைகொண்டு  தாயென  அணை!

    Share
  • தாயும் சேயும்!

    -ரா. பார்த்தசாரதி

    தாயே விளைநிலமாம், தந்தையே வித்தாம்,
    குலம் தழைக்கவந்த ஓர் சொத்தாம்!                                               vallamai image1

    பெண் முழுமை அடைவதும் தாய்மையாலே!
    தாயாக மாறுவதும் அந்தத் தாய்மையாலே!

    கருவறையில் உன்னை வைத்துப் பாதுகாத்தேன்!
    எனக்கென்று உண்ணாது உனக்காக உண்டேன்! 

    பிறந்த மேனியுடன் வெளியுலகில் வந்தாய்!
    தாய் தந்தையர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்தாய்!

    உனக்காகக் கண்விழித்துத் தூக்கத்தினை மறந்தேன்!
    உனக்காகப் பாசத்தையே பாலாகப் பொழிந்தேன்!

    எனது அணைப்பே உனக்கு அடைக்கலம்!
    எனது மடியே உனக்குத் தொட்டில்!

    உன் பசி, தூக்கத்தை அழுகையால் வெளிப்படுத்துகிறாய்!
    உன் கள்ளமில்லாச் சிரிப்பால் கவலைகள் போக்குகின்றாய்!

    தோளையே தூளியாக்கி உன்னைச் சுமக்கின்றேன்
    உன்னை வயிற்றில் சுமந்ததைவிடப் பாரமா?

    அன்னைக்கு ஆயிரம் பிரச்சனை இருப்பு! 
    உன்னைக் கட்டியணைப்பதில்தான் ஆனந்தக் களிப்பு!

    எங்கள் இல்வாழ்க்கையே உன் படைப்பு!
    எங்கள் வாழ்கையில் நீ ஒரு துடுப்பு!

    உன் வளமே எங்கள் சிறப்பு!
    உன் நினைவே பாசத்தின் பிணைப்பு!

    குழந்தையின் வளர்ப்பு, தந்தையின் கடமையே!
    அன்னையின் வார்த்தைகள் அன்பின் இனிமையே!

    அன்னையைப் போல ஒரு தெய்வம் இல்லை!
    திசை நான்கும் அன்னையைப் போல் எவருமில்லை!          

    Share
  • உலகச் சுற்றுச்சூழல் தினம்!

    -ரா. பார்த்தசாரதி

    சுற்றங்கள் சூழ வாழும் மனிதனே!
    சற்றே சுற்றுப்புறச்  சூழலைக்  கவனிக்காமல்  இருப்பது  ஏன்?            world-envernment-day-003
    பிற நாட்டினை மேற்கோள் காட்டும் நீ
    ஏன் உனது  நாட்டிற்குச்  செய்ய கழிவிரக்கம் கொள்கிறாய்?

    மனிதனே!   உன் சுற்றுப்புறச்  சூழலைப் பார்!
    இதற்கெல்லாம்  நாமேதான்  காரணம்
    வீட்டின் சுத்தம் நோயின்  ஓட்டம்!
    நாட்டின்  சுத்தம் சுகாதாரத்தின்  ஏற்றம்!

    வீட்டிற்கு ஓர் மரம் தெருவிற்குப் பல மரம்!
    வீட்டினைச் சுத்தமாக்கு, நாட்டினைப் பசுமையுடன் வளமாக்கு!
    மனித வாழ்க்கையினைப் பொன்மயமாக்கு!
    நமது நாட்டினைப் பலவகையில் ஏற்றமுடையதாக்கு!

    நமக்கு நாமே  சூளுரை  எடுத்துக்கொள்வோமே!
    நமக்கு நாமே  தூய்மை எனும் விதையினை விதைத்துக்கொள்வோமே!
    நாட்டிலும்  பசுமைப் புரட்சி  ஓங்கப்   பாடுபடுவோமே!
    உலகச்  சுற்றுச்சூழல் தினத்தைப்  பயனுறச் செய்வோமே!

     

    Share