-ரா. பார்த்தசாரதி

அன்புள்ள  கணவா! உன் நெஞ்சில் நான்  நிறைந்திருந்தாலும்,
என் பெண்ணுள்ளம் எதிரொலியாய்  இருந்தாலும்,
நான் என்றும் நீ என்றும் இருவராக இருந்தாலும்,
நான்  வேறு,  நீ வேறு யார் சொன்னாலும்,

உந்தன் மனதினிலே நான்  என்றும்  இருந்தாலும்,
சுகமும், துன்பமும் சரிபாதியாய்  இருந்தாலும்,
பூவாகி, காயாகி, கனியாய்  இருந்தாலும்,
நீயாகி, நானாகி, நாமாய் இருந்தாலும்,

சுகம் சுகம் அது துன்பமான இன்பமாய் இருந்தாலும்,
மனம், பேதை மனம் மாறாத சொந்தம் இருந்தாலும்,
இனமாகிய பெண் உனக்கே உரிமையாய் இருந்தாலும்,
அது பூப்போல மென்மையாய்ப் பூத்திருந்தாலும்,

உந்தன்  நிழலாக  நான் மாறும் நாள் வந்தாலும்,
தேன் உண்ணும் வண்டாய் நீ இருந்தாலும்,
தெம்மாங்கு பாட நீ நினைத்திருந்தாலும்,
தொலைவில் இருந்தும் என் நெஞ்சத்தில் மறைந்திருந்தாலும்,

கல்யாணம் முடிந்து காதல் மறைந்தாலும்,
பழமையான காதல் நினைவுகள் மறக்காமல் இருந்தாலும்,
நமது வாழ்க்கை எனும் ஓடம் ஓடிக்கொண்டிருந்தாலும்
பொங்கும் நமது உள்ளமே வாழ்வின் புது வெள்ளமே!

                                   

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *