-செண்பக ஜெகதீசன்
உறவுகள் சங்கிலிகள்,
உணர்ச்சிகள் வேதனைகள், 
உணர்ந்துவிட்டால் ஞானம்தான்…
திறவுகோல்-
அறிவு,
மாயை வெப்பத்தில்
ஆவியாகிவிடுகிறதே அறிவு…
அந்த வெப்பம்
தணுப்பாகிடத் தேவை ஒரு
கை-
நம்பிக்கை…
இருக்கட்டுமே அது
இறையாக…!

Leave a Reply