-செண்பக ஜெகதீசன்
உறவுகள் சங்கிலிகள்,
உணர்ச்சிகள் வேதனைகள், 
உணர்ந்துவிட்டால் ஞானம்தான்…
திறவுகோல்-
அறிவு,
மாயை வெப்பத்தில்
ஆவியாகிவிடுகிறதே அறிவு…
அந்த வெப்பம்
தணுப்பாகிடத் தேவை ஒரு
கை-
நம்பிக்கை…
இருக்கட்டுமே அது
இறையாக…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…