உலகச் சுற்றுச்சூழல் தினம்!
-ரா. பார்த்தசாரதி
சுற்றங்கள் சூழ வாழும் மனிதனே!
சற்றே சுற்றுப்புறச் சூழலைக் கவனிக்காமல் இருப்பது ஏன்? 
பிற நாட்டினை மேற்கோள் காட்டும் நீ
ஏன் உனது நாட்டிற்குச் செய்ய கழிவிரக்கம் கொள்கிறாய்?
மனிதனே! உன் சுற்றுப்புறச் சூழலைப் பார்!
இதற்கெல்லாம் நாமேதான் காரணம்
வீட்டின் சுத்தம் நோயின் ஓட்டம்!
நாட்டின் சுத்தம் சுகாதாரத்தின் ஏற்றம்!
வீட்டிற்கு ஓர் மரம் தெருவிற்குப் பல மரம்!
வீட்டினைச் சுத்தமாக்கு, நாட்டினைப் பசுமையுடன் வளமாக்கு!
மனித வாழ்க்கையினைப் பொன்மயமாக்கு!
நமது நாட்டினைப் பலவகையில் ஏற்றமுடையதாக்கு!
நமக்கு நாமே சூளுரை எடுத்துக்கொள்வோமே!
நமக்கு நாமே தூய்மை எனும் விதையினை விதைத்துக்கொள்வோமே!
நாட்டிலும் பசுமைப் புரட்சி ஓங்கப் பாடுபடுவோமே!
உலகச் சுற்றுச்சூழல் தினத்தைப் பயனுறச் செய்வோமே!
