உறவும், நட்பும்!

-ரா. பார்த்தசாரதி 

மனிதனே! உறவையும் நட்பையும் உதறிவிடாதே!
பழகும் விதத்தில் பழகினால் பகையும்  நட்பாகும்!
மண்எனப்  பிரித்தால் மனிதம் என்றும் சாகும்!
இனம்எனப் பிரித்தால் இனிமை இல்லாமல் போகும்!

சொந்தம் என வாழ்ந்தால் என்றும் சுகமாகும்!
மனிதநேயத்துடன்  வாழ்ந்தால் என்றும் நலமாகும்!
பாசத்தையும் நேசத்தையும் பாலமாக அமைத்திடு!
சாதி மத பேதத்தை வேரோடு அழித்திடு!

வயதிற்கும் படிப்பிற்கும் என்றும் மரியாதை கொடுத்திடு!
நட்பும் உறவும் உன் உடன்பிறப்பு  என நினைத்திடு!
மன்னிக்கத் தெரிந்த மனிதனை நல்லவன் எனக் கருதிடு!
கோபத்தையும் ஆணவத்தையும் அடக்கி உறவினைக் காத்திடு!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *