திருமால் திருப்புகழ் (122)
கிரேசி மோகன்

Keshav
கண்ணன் திருப்புகழ்….
——————————————-
”கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–
ராமன் வெண்பா
——————————-

அவனியைக் காக்க, அவதார மாக,
நவமியில் வந்தோய் நினக்கு, -உவமையாய்,
தந்தைதாய் போற்றியொரு, தாரத்துடன் வாழ,
சிந்தையை ராமா செலுத்து….(246)
தீதண்ட வந்தாலும், மோதுண்டு மாய்ந்திடும்,
ஸ்ரீமுண் டகத்தாய் சமேதனாய், -கோதண்ட,
ராமனையே எண்ணியி, ராப்பகல் வாழ்வோர்கள்,
காமனையே வெல்வார் களித்து….(247)….
———————————————————————————————————-
விடையேழ் அடக்க, வளைக்கரம் கொண்ட,
இடையா எனையடக்கு ஏறே, -தடையான,
பாழும் வினைகளும், பஞ்சப் புலன்களும்,
வீழ வகைசெய் விரைந்து….(248)
ஆயர்தம் சேயினை, ஆசையோ(டு) ஆய்ந்திட,
ஆயிரம் பேருண்டு ஆயினும், -மாயிருள்
சாயலான் கட்டுண்டு, சாதுவாய் நிற்பது
தாயுரை தாமோ தரன்….(249)
பேரா யிரமோதி, நாரா யணன்சீரை,
பாரா யணம்செய்வாய் பாழ்மனமே, -ஆரா,
அமுதனைப் பாடு, அனுதினம் நாடு,
குமுதமாய்ப் பூத்துக் குலுங்கு….(250)
சீரவன்காண், பாற்கடல் நீரவன்காண், பாரதப்,
போரவன்காண், பாண்டவர், நூறவன்காண், -பாரினைப்பூண்,
மாரவன்காண், உண்கின்ற, சோறவன்காண், உந்தியனல்,
ஜீரணம்காண், ஜீவனவன் ஜீன்(GENE)….(251)
——————————————————————————————————
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html