( எம். ஜெயராமசர்மா – மெல்பேண் )
காலத்தை வென்று நிற்கும்
கவி எலாம் தந்தவனே
ஞாலத்தை மகிழ்விக்க
நற் கருத்தைத் தந்தவனே
மூலைக்கு மூலை உந்தன்
முழுக்கவியும் ஒலிக்கிறது
பாவாடை போர்த்தி உனை
பாராட்டி மகிழ்கின்றேன்
பிறந்த நாள் உனக்கின்று
பெரியளவில் எடுக்கின்றார்
பெரி யவரும் சிறியவரும்
பெருமையுடன் நினைக்கின்றார்
பெருங் கவிதை தந்தவனே
பிறந்த நாள் சிறக்கட்டும்
உறங்கு கின்ற மனிதரெலாம்
உன்கவியால் விழிக்கட்டும்
வாழ்த்துகள் கூறுதற்கு
வரவில்லை தமிழெனக்கு
வாழநாம் வேண்டுதற்கு
வழிகள் பல சொன்னவனே
காலமுள்ள வரையினிலும்
கவியரசன் நீதானே
காதலால் வாழ்த்துகிறேன்
கவியரசே வாழ்த்துக்கள்

Leave a Reply