Author: வேதா இலங்காதிலகம்

  • மூன்றாம் பால்

    aaaa

    மூன்றாம் பால். – 1

    உடல் உணர்வுப் பின்னல்
    கடலான பாலின ஈர்ப்பு.
    அடலான( போர்) தனிப்பட்ட உரிமை.
    இடம் (விரிவு) கண்டது மேற்கில் (முன்பே)

    புதுமை வழியுடைய இளையோர்
    ‘பால் புதுமையினர் ‘ அறிவு விரிவற்றோர்
    பொதுமையான மனக்குளப்பத்தில் இன்று
    சதிராடிச் சமூகத்தைக் குளப்புகிறது.

    கல்வி, மருத்துவம், சட்டத்தில்
    நல்ல விழிப்புணர்வு தேவை
    திருநங்கைகள், திருநம்பிகள் மூன்றாவது
    ஒருமித்து இருபதுக்கும் மேலானவை (பாலினங்கள்)

    பெண் ஆணற்ற இடைநிலைப்
    பாலினத் தோற்றம் கொண்டோர்
    புராணத்தில் அலி, ஒம்போது
    அரவாணி, பொன்னைக்கா பெயராகும்.

    சுரபிகளின் தவறாய் தன்
    மரபிலே மாற்றமான பாலினம்.
    ‘ இப்படிக்கு ரோஸ் ‘ விழிப்புணர்வை
    அப்படி அள்ளிக் கொடுத்தது.
    __________

    மூன்றாம் பால். – 2

    வள்ளுவனின் மூன்றாம் பால்
    துள்ளும் உணாவுகளின் தொகுப்பால்
    கள்ளெனும் காமத்துப் பால்
    உள்ளுந் தோறும் இனித்தல்.

    தொடுதல், அணைத்தல், உராய்தல்,
    படுதல், அழுத்தலெனப் பல
    விடுதலையற்ற உடல் மொழி
    விடுதலை காம வேதனைக்கு.

    காமத் தீயிவ் உடலவதிகள்
    சாமகானம் பாடி இணைவில்
    சமாதானமாவது மூன்றாம் பால்.
    காதலின் சுடர் காமம்.

    காதலதிகாரம் காமப் பாலில்
    மோதலானது பதின்மத் தொடக்கத்தில்.
    மூன்றாம் பாலின் நிறைவு
    முழுதான வாழ்வு தரும்.

    அறவழியில் இல்லறம் சமை!
    ஆட்கொல்லி நோயை விலக்கு!
    ஆளுமைப் பரத்தமையை ஒதுக்கு
    அறவாழ்வுறுத்தலே வள்ளுவனின் மூன்றாம்பால்.
    _______________

    வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-5-2017

    Share
  • பாரியும் கபிலரும்

    வேதா இலங்காதிலகம்

     

     

    பறம்பு நாட்டரசன்  குறுநில மன்னன்

    பாரி  கடையெழு  வள்ளல்களில்  ஒருவன்.

    பற்றிக் கொள்ள முல்லைக்குத் தேரீந்தவன்.

    படைமடமற்றவன் கொடைமடம் உள்ளவன்.

     

    பறம்புமலை  முன்னூறு  கிராமங்களடங்கிய  செழிப்புலகம்.

    கலகலவெனச் சிரிப்பொலிக்கும் வெள்ளியருவி ஓசை

    கனி குலுங்கும் மரங்கள், ஓடைகள்

    மலர்ச்சோலைகள், தேன், இசைப் பறவைகளதிகம்.

     

    அள்ளிக்  கொடுக்க  அத்தனைகள் உண்டு

    பாரி கொடைமனமறிந்து கபிலர் பொருள்கொள்ள வந்தார்.

    புலமையினிணையற்ற திறமையறிந்து கபிலரிடம் நட்பானார்.

    பாரியை மட்டும் பாடும் நல்லிசைவாய்மொழிக் கவிஞரானார்.

     

    கொடை மனத்தான்,  நாட்டுவளமனைத்தும் பாரெங்குமேக

    மடைதிறந்த பாரிபுகழால் அழுக்காறடைந்தனர் அரசர்.

    மூவேந்தர் படையெடுத்து பறம்புமலையைச் சூழ்ந்தனர்.

    திறமையாம்  தற்காப்பு  முறையாற்போர் நீண்டது.

     

    போரால் பாரியை வெல்லல்லரிதென விழிபிதுங்கினர்

    படையடிவாரத்தில் விழுந்த கபிலர் கவியோலையால்

    பாரியைத் தந்திரத்தால் வெல்லப் பெண்கேட்டுத் தூதாகி

    முதுமை வேடத்தில் பாரியை யாழிசைத்துப் புகழ்ந்தனர்.

     

    பரிசாக அவனுயிரைக் கேட்கத் தன்னுயிரிழந்தான்.

    மக்களான அங்கவை  சங்கவை தனியானார்.

    துயரத்துடன் கபிலர் பெண்களையழைத்து  வேறிடமேகினார்.

    பார்ப்பனரிடத்தில் பெண்களையிணைத்துக் கபிலருயிர் நீத்தார்.

     

    மூவேந்தர்  வஞ்சத்திற்குப் பாரி பலியானார்.

    பறம்புமலை தனியானது. நட்பிலக்கணமாகினர்    பாரி – கபிலர்.

    கபிலர் தென்பெண்ணையாறருகில்  வடக்கிருந்துயிர் துறந்தார்.

    கபிலர் குன்றென அந்தவிடம் இன்றுமுள்ளது.

    Share
  • எழுத்து

    வேதா. இலங்காதிலகம்.

     

    எழுத்துக் கூட்டக் கருத்து எத்துணை இன்பம்.

    unnamed

    கழுத்துச் சாய்த்துத் தேடினால் கோடியருத்தம்.

    எழுத்து வரிசையில் சரித்திரம் கதைகளாய்

    இழுத்தும் கோர்க்கலாம் சந்தப் பாமாலை.

    ஒலியால் வல்லின, மெல்லின, இடையினமுண்டு.

    ஓரெழுத்துக்கும் அருத்தம் உண்டு – நீ

    சுகந்த எழுத்து பூ – பூரிப்பாய்.

    மகிழ்ந்து அழைக்கும் எழுத்து வா.

     

    நான்காயிரம்   ஆண்டினிறுதி  சுமேரியர்களிடையே உருவானது .

    பின்னாக எகிப்து, சிந்துப்பள்ளத்தாக்கிலும் தொடர்ந்தது.

    மின்னும் உயிரெழுத்துகள் பன்னிரண்டு வகை.

    உன்னும் மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகும்.

    பின்னும் உயிர்மெய் எழுத்துகள் இருநூற்றுப்பதினாறு.

    ஓன்றான ஆயுதவெழுத்துமாக இருநூற்று நாற்பத்தேழு.

    ஓன்றொன்றாய் சொற்கள் பிரித்து உண்மையறிதல்

    இன்னுமுதத் தொடர்பாடல் எழுத்தால் தானே.

     

    நாத (ஒலி) வரி வடிவம் எழுத்து.

    மேதகு மொழியை நிலைநிறுத்துவது எழுத்து.

    சாதனைக்குரிய எழுத்தின்றேல் மொழி ஏது!

    மாதவ எழுத்து தலைமுறைக்கும் காவுகிறது.

    ஆதனமாம் இலக்கணம் இலக்கியம் உருவானது.

    போதகம் (நல்லுரை) ஐந்தாயிரமாண்டுக்கு முன்னானதாம் சிந்துவெளியெழுத்துகள்.

    பேதமற பழந்தமிழெழுத்தும் அன்றே இருந்தது.

    ஆயினும் எழுத்துமுறையா குறியீடாவென்பது சந்தேகமே…

    Share
  • 2017………

    வேதா இலங்காதிலகம்

     

    வலிமையாய் விரியட்டும்

    மெலியார் வலியவராகட்டும்

    மெலிகோல் (கொடுங்கோல்) அழியட்டும்.

    பொலியட்டும் சிறப்புகள்

    பலிப்புகள் (வெற்றி) குவியட்டும்

    நலிவுகள் ஒழியட்டும்

     

    வலிவுடை சான்றிதழ்கள்

    பொலிவுடை தமிழ்

    மலிவற்ற உயர்ச்சியாய்

    சலிக்காது சேர்ந்தது.

    சிலிர்க்கும் நிறைவிது.

    சொலிக்கட்டும் புத்தாண்டிலும்.

     

    அலட்சியங்கள் தாண்டி

    அவமானங்கள் நீராக்கி

    தவமெனும் வாழ்வு

    அவமின்றிச் சித்திக்கட்டும்.

    புவனம் சிறக்க

    புத்தாண்டு மலரட்டும்.

    Share
  • பொலியட்டும் சிறப்புகள்!

    வேதா.இலங்காதிலகம்

    hap

    2017………

    வலிமையாய் விரியட்டும்
    மெலியார் வலியவராகட்டும்
    மெலிகோல் (கொடுங்கோல்) அழியட்டும்.
    பொலியட்டும் சிறப்புகள்
    பலிப்புகள் (வெற்றி) குவியட்டும்
    நலிவுகள் ஒழியட்டும்

    வலிவுடை சான்றிதழ்கள்
    பொலிவுடை தமிழ்
    மலிவற்ற உயர்ச்சியாய்
    சலிக்காது சேர்ந்தது.
    சிலிர்க்கும் நிறைவிது.
    சொலிக்கட்டும் புத்தாண்டிலும்.

    அலட்சியங்கள் தாண்டி
    அவமானங்கள் நீராக்கி
    தவமெனும் வாழ்வு
    அவமின்றிச் சித்திக்கட்டும்.
    புவனம் சிறக்க
    புத்தாண்டு மலரட்டும்.

    பா ஆக்கம் பா வானதி
    வேதா.இலங்காதிலகம்
    டென்மார்க் 31-12-2016

    Share
  • சூழ்ச்சி

    வேதா. இலங்காதிலகம்

     

    ( அந்தராயம் – தீமை, துன்பம், இடையூறு.

    நிந்திதம் – பரிகாசம், ஏளனம், தடை.

    நிந்தனை – இகழ்ச்சி.   சிலவங்கம் – மீன்முள்ளு.

    இலகம் – ஊமத்தை. )

     

    அந்தராயம் நிறை மனதின் கேடயம்

    தந்திரம், வஞ்சகம், சதியாம் இரண்டகம்.

    சுந்தரமல்ல மனிதநேயத்திற்கு ஒரு சுத்தியலாம்.

    நிந்திதம்  நிந்தனை தாழ்ச்சியே பலனாம்.

     

    உலக வட்டத்தின் சாப அத்தியாயம்

    கலகச் சரித்திரம் கருப்பாக்கும் சாயம்.

    இலகம் போன்ற வேண்டாத குணம்.

    சுலபமல்ல மோதும் சூழ்ச்சியின் வேகம்.

     

    சூழ்நிலைக் களத்தில் மீன் பிடிக்கும்

    கீழ் நிலைப் பாதகம் தலைகோதாது.

    ஆழ் கீறலால் மனம் அந்தரிக்கும்

    மூழ்கும் வேகம் இருண்ட காடாகும்.

     

    நிலவின் குளிரல்ல துரதிட்டம், வெப்பம்

    குலவும் நம்பிக்கைத் துரோக வலயம்

    சிலந்தி வலையே சூழ்ச்சி அத்தியாயம்.

    சிலவங்கமே சூழ்ச்சியாளர் உள்ளிருக்கும் ஊழ்வினையாவார்.

     

    தாழ்வுமனப்பான்மை, கவலையால் மீள்வு கொள்ள

    தாழ்ந்த மனதால் புன்னகை மறுத்து

    கீழிழுத்து அன்பு மொட்டுகளைக் கொய்து

    வாழ்வை ஒழிக்கும் பயங்கரம் சூழ்ச்சி.

     

    ஆழ்மனப் பயப் பேரலைகளின்  திமிறுதல்கள்

    கீழ் விழாதெழும் இரண மன

    கீழ் மக்களின் கூர் நக வேலைப்பாடுகள்

    வாழ்தலின் முயல்வுகள் இரண்டகமான சூழ்ச்சியாம்.

    Share
  • கேட்டாளே ஒரு கேள்வி!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம் 

    சும்மா இருப்பதல்ல ஓய்வுக் காலம்
    சுகமான கனவுகள் நிறைவேற்றும் காலம்
    சுதந்திர மனம், ஆரோக்கிய உடல்
    சுறுசுறுப்பு  அனுபவம் சுயமாய் இயங்குதல்.

    உடற் பயிற்சி, உகந்த வெளியுலா,                             woman
    உணர்வின் மனச்சுளுக்கு எடுக்கப் பல
    உற்சாகம் தரும் நூல்கள் வாசிப்பு
    உள்ளம் மகிழ உறவுகளின் கூட்டுறவு.

    அச்சச்சோ நேரம் போதவில்லையேயெனும்போது
    உச்சக் கேள்வியொன்று  பக்கம் விழுந்தது
    ”என்ன வீட்டிலிருந்து சமையல் செய்கிறீர்களா?என்ன உடல் பருத்து  விட்டதா?”

    விரியும் தமிழும் நானுமொரு பக்கம்
    தெரியாதா  என் தமிழ் பற்றி இவளுக்கு?!புரியாது சமைக்கப் பிறந்தவள் என்கிறாளே!சிரிப்புத்தான் வந்ததிவள் கேள்வியால் எனக்கு!

    ஓய்வூதியம் எடுத்த பின்னும் மனிதன்
    ஓய்வதில்லை; ஓடியாடிய உடல் ஓயாது
    ஓய்ந்திருத்தல் என்பதும் மனதுக்கும் இல்லை
    ஓடை போன்று ஓடுவதே வாழ்வு!

    பல வகையாக வாழும் விதம் உண்டு
    கலகலப்பான வாழ்க்கை விதம் ஒன்று
    நலமற்ற கறாரான வாழ்வு வேறு
    விலகுங்கள் என் வழி வேறு!

    (வேறு)

    குமையும் பெண் மனங்களே!
    அமைந்த வாழ்வை அற்புதமாக்குங்கள்!
    சமையலே வாழ்வு அல்ல!
    சமையல் சிறு பாகமே!

     

    Share
  • மறக்கவியலா இன்ப வெள்ளம்!

    -வேதா. இலங்காதிலகம்

    வெள்ளம் பலர் வாழ்வில் வேதனை
    உள்ளம் வெதும்பத் துன்பச் சாதனை
    வெள்ளம் கொள்ளும் பெரும் கள்ளம்
    பள்ளம் நோக்கித் தானே துள்ளும்.                      flood

    தள்ளும் ஊரையே அழித்து முழுகும்
    துள்ளும் குழந்தைகள் கப்பலிட மகிழும்
    வெள்ளம் என்றதும் எனக்கும் நினைவில்
    வள்ளத்தின் பயணம் வரும் நிறைவில்.

    அன்று இலங்கைத் தேயிலைத் தோட்டத்தின்
    நின்றாளும் அதிகாரியாக என் துணைவர்
    வென்றது வெள்ளம் காலு கங்கையால்
    தெருவினை மேவிப் பாய்ந்ததே கடல்.

    தேயிலைக் கொழுந்து மூட்டைகள் தொழிற்சாலைக்குத்
    தேவதூதர்களாய்  தோணிக்காரர்கள் உதவிக்கு, கொழுந்துக்
    கோணிகள் தோணியில்! நாமுமதில் பயணிகளாய்
    தோற்றம் காஷ்மீரப் படகுப் பயணமாய்!

     

     

    Share
  • உறவு

    -வேதா. இலங்காதிலகம்

    உறவு நடிப்பாகினால்
    உதறுதல் நன்றாகும்
    உடனிருப்பதில் அருத்தமென்ன!
    நெருங்காத மனங்களாலிதயம்
    வருந்த வேண்டாமே!

    துரோகத்தின் காலடிகள்
    துவம்சமாக்கும் பாதையை
    உறவின் அரும்பெருமைகளைப்
    பறக்க விடுதலால்
    இறக்கிறது உறவுன்னதம்!

    உறவு ஊனின்
    உள்ளுறையும் ஆணிவேராய்
    உணர்வெனும் பண்பிற்கு
    ஆதாரமாய் உள்ளது
    உடலையும் வாழவைக்கிறது!

     

    Share
  • தேடும் அன்பு! 

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    அடிமனதில் உள்ளூர ஊறும்
    அன்பூற்றில் ஆழ்ந்து நனையாமலும்
    அலுக்காது காயம் செய்தலாய்                            hearts-of-flame
    இல்லா நெருக்கமுடை உறவுகள்
    இருந்தென்ன? விலகியென்ன? சமனே!

    விருந்தெனும் ஆனந்தக் கீழ்வானமாகக்
    கரும்பெனும் ஆழ்மன அன்பை
    விருப்பித் தேடுதலாய் நிதமும்.

    திறந்து வெளியான அன்பைப்
    பறந்து மினுமினுக்கும் அன்பிறகைக்
    கறந்த பாலினிளம் சூட்டில்
    சிறந்து மகிழ்ந்தருந்தத் தேடுகிறோம்.

    புதிர்கள் வழியும் உறவுகளிடம்
    எதிர்ப்படுமா பொங்கிப் பிரவகிக்கும்
    கதிர்வீசும் உயிர்ப்புடை அன்பு
    உதிர்ந்துதான் போகிறது!

     

     

     

    Share
  • பச்சையின் முதுமை

     

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

     

    vetha

     

     

     

     

     

     

     

     

     

    பச்சை வண்ணம் கண்களிற்கு உச்சமாய் அகம் குளிர்வித்துப்
    பருவம் தந்த இலைகளிற்குப் பக்குவமான பங்கீடு முதுமை
    பருவத்தோடு அசைந்து ஆடிப்  புருவமாய் மலர் அருகிலது
    பருவ காலம் மாறிடக் கருகுதலான காம்பு கழன்றது. 

    நிழல் குடையான இலையென்று நிலப் பாவாடையான நிலையின்று
    சருகு சரசரக்கவில்லை பழுத்து  முருகு நிலம் போர்த்தியது
    ஆல் வேலிங்கு  இல்லை வீல் என்று அலறவில்லை
    கால்கள் புதையும் அளவு கீழ் விழுந்தது முடிவு. 

    இலையுதிர் காலம் விரித்தது  இறகு; நீளாது பனி
    இறகுகளை மூடிடும்;  எருவாகி  இசைவாகிப் பூமியோடு மண்ணாகும்
    நான்கு விதப் பருவங்களை  நாம் ரசித்து வாழ்கிறோம்
    நன்கொடையாம் இயற்கையின் அற்புத
    நயப்பாடான பரிசை அனுபவிப்போம்.

     

    Share
  • முத்து

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    உயர்முத்தின் தாய் முசெலினங்களில் முத்துச்சிப்பி.
    உயிர் சிப்பியுள் திண்மப்பொருள் (நுண்துகள்) நுழைவால்
    உறுத்தலடையும் சிப்பியில் எபிதீலியம் படிவம்
    உருவாகி நுண்துகளைச் சுற்றிப் பொதிகிறது.
    சிப்பியின் சுரப்பு நீர்ப் படிவம்                                            pearl
    சிப்பிக்குள் கசியும் கெட்டியான பசை
    சிப்பியின் பாதுகாப்புப் பசைநேக்கர் படையாக
    அப்புதலால் உருவாகிறது நவரத்தினத்திலொரு முத்து.

    விலங்கின வகையாம் முத்துச் சிப்பி.
    விலைமதிப்பு இல்லா விநோத சீவன்.
    அரிய வகைக் கடல் வாழுயிரினம்.
    விரிவாக நூற்றுக்குமதிகமான சிப்பி இனங்களுண்டு.
    பட்டை தீட்டத் தேவையற்றது முத்து.
    பட்டொளியாம் இயற்கைப் பொலிவுரு நேக்கரால்.
    முத்தின் மறுபெயர் நித்திலம் தூமணி.
    முத்துக்களில் சிறப்புடையது ஆணி முத்து.

    இயற்கை முத்து அவிகுலிடி என்ற
    இனமான சிப்பியிலும், யூனியனி என்ற
    மட்டிகளிலும் உருவாகிறதாம்.
    முத்துகள் நீலம் மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்புகளில் உண்டு.
    முத்துகளில் கறுப்பினம் அந்தமான் தீவிலுண்டாம்.
    முத்திற்குப் பிரபலமானது பாண்டிய நாடாம்.
    முத்துநகர் தூத்துக்குடியாம்.
    மூழ்கி முத்துச் சிப்பியெடுத்தல் ‘முத்துக்குளிப்பு’ என்பார்.

     

    Share
  • நான்

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    நான் யாரெனும் தன்னறிவு நன்மை
    நான் முயல் நான் எறும்பு
    நான் திமிரற்றவள் மானம் உள்ளவள்
    நான் படித்தேன் யாழ் கோப்பாயில்
    நான் கட்டுரை கவிதைகள் எழுதுகிறேன்
    விண்மீன்களாய் என்னைச் சுற்றுது அவைகள்
    நான் உன் அன்பை நினைத்து
    என்னை மறக்கிறேன் இது காதல்!

    இயற்கை அழகில் தொலையும் நான்
    இசையும் கவியில் மயங்கும் நான்
    அசையும் மழலையில் உருகும் நான்
    அகவும் மயிலை ரசிக்கும் நான்
    நான் (தன்)முனைப்பு நீக்கும் நான்
    தன்னான்ம உணர்வு பெறுவது தெளிவு
    ’தான்’ என்ற கர்வ அழிவில்
    ’நான்’ என்பது இனிமை கீதமாகும்!

     

    Share
  • பிழைக்கும் கவித்துவம்…!

    -வேதா இலங்காதிலகம்

    நந்தவனப் பூ மெத்தையில் சிறு நதி ஓரத்தில்
    சொந்தம் யாருமின்றி இயற்கையை மிக விரும்பி ரசித்தல்

    வண்டுகள் ரீங்காரித்துப் பறக்க வண்ணத்துப் பூச்சிகளும் சிறகசைக்க,
    கண்டிட முடியாத் தென்றலை உணர்ந்து குளிர்மையை ரசிக்க  vetha

    எவரமைத்தார் இந்த நந்தவனத்தை?! அருகினில் ஒரு இதம்
    கவருகின்ற தென்னை மரச்சோலையும் பறவைகள் ஒலியும் பரவசம்!

    பொல்லாக் காற்று இல்லாததால் தென்றலும் மெல்லிசைக் கடை
    தொல்லையில்லா ரசனை! கவிதை பொங்கிட ஏது தடை?!

    தலையசைத்த மலர்கள் வாசனையை இதயத்துள் மெதுவாகத் தூவின
    தலை ஆட்டும் தென்னோலைகள் சில தேங்காய்கள் தந்தன

    தனிமை இல்லையே! எங்கோ போனது! வண்டுகள் ஓசையும்
    இனிமை சேர்க்கச் சோலைநிழல் காட்டியது கோலம்

    குழலோசை ஒன்று குயிலோசையாய்த் தவழ மயக்கம் வந்தது
    உழவுமழையாய் உள்ளத்தில் பொழிந்து அரங்கத்தில் அமருமுணர்வு கூட்டியது

    ஆகா! அற்புதம்! என்னே இயற்கை! எழுதலாம் எழுதலாம்
    சாகா வரிகள்! பிழைக்கும் கவிஞன் திறமை என்றும்!

     

    Share
  • அலத்தத் (சூரியகாந்தி) தமிழ்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    அலட்சியங்களால் அலவு கொண்டாலும்
    அலட்டிக் கொள்ளாது அம்பாக
    அலத்தமாகச் செந்தமிழ் தெம்பாக            vetha
    அலங்கார வரிகள் ஓயவில்லை!

    கவி, பா மழை
    புவியான மனம் நனைக்க
    அவிழ்வது அமைதி ஆனந்தம்
    குவிவது தமிழ் வாசம்!

    நினைத்ததை மேடையில் கூறல்
    நிகழ்ந்தது பதினொரு அகவையில்
    நின்மல எழுச்சியது பெரும்
    நிறைவுடை ஆக்கம் ஊக்கம்!

    கர்வம் சுயநலம் நிறையுலகில்
    சர்வசாதாரணச் சஞ்சாரம் கடிது
    வர்ணம் பூசி வகையாய்
    அர்ப்பணம் செய்யலாம் காலத்தை!

    (அலவு – மனத்தடுமாற்றம், வருத்தம்; அலத்தம் – சூரியகாந்தி)

     

    Share