முத்து

-பா வானதி வேதா. இலங்காதிலகம்

உயர்முத்தின் தாய் முசெலினங்களில் முத்துச்சிப்பி.
உயிர் சிப்பியுள் திண்மப்பொருள் (நுண்துகள்) நுழைவால்
உறுத்தலடையும் சிப்பியில் எபிதீலியம் படிவம்
உருவாகி நுண்துகளைச் சுற்றிப் பொதிகிறது.
சிப்பியின் சுரப்பு நீர்ப் படிவம்                                            pearl
சிப்பிக்குள் கசியும் கெட்டியான பசை
சிப்பியின் பாதுகாப்புப் பசைநேக்கர் படையாக
அப்புதலால் உருவாகிறது நவரத்தினத்திலொரு முத்து.

விலங்கின வகையாம் முத்துச் சிப்பி.
விலைமதிப்பு இல்லா விநோத சீவன்.
அரிய வகைக் கடல் வாழுயிரினம்.
விரிவாக நூற்றுக்குமதிகமான சிப்பி இனங்களுண்டு.
பட்டை தீட்டத் தேவையற்றது முத்து.
பட்டொளியாம் இயற்கைப் பொலிவுரு நேக்கரால்.
முத்தின் மறுபெயர் நித்திலம் தூமணி.
முத்துக்களில் சிறப்புடையது ஆணி முத்து.

இயற்கை முத்து அவிகுலிடி என்ற
இனமான சிப்பியிலும், யூனியனி என்ற
மட்டிகளிலும் உருவாகிறதாம்.
முத்துகள் நீலம் மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்புகளில் உண்டு.
முத்துகளில் கறுப்பினம் அந்தமான் தீவிலுண்டாம்.
முத்திற்குப் பிரபலமானது பாண்டிய நாடாம்.
முத்துநகர் தூத்துக்குடியாம்.
மூழ்கி முத்துச் சிப்பியெடுத்தல் ‘முத்துக்குளிப்பு’ என்பார்.

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *