Author: editor5

  • படக்கவிதைப் போட்டி 237இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 237இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. லோகேஷ் எடுத்துள்ள இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 237க்கு அளித்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    மிதிவண்டிகள் அருகி மோட்டார் வாகனங்கள் பெருகிச் சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் இன்னமும் மிதிவண்டியை மதித்து மிதிப்பதற்கே இந்தப் பெரியவருக்கு நாம் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். எனினும் சட்டைகூட அணியாமல் வெயிலில் செல்லும் இவருடைய தளர்ந்த தோற்றம் நம் மகிழ்ச்சியை வற்றச்செய்துவிடுகின்றது.

    இப்படத்துக்குப் பொருத்தமான பாடலை படைத்துத் தரும்படி நம் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கின்றேன்.

    *****

    ’பெற்ற பிள்ளைகள் வெளிநாடேகிவிட, உற்ற துணையாயிருந்தவளோ விண்ணேகிவிட, துணையேதுமின்றித் தன் பிழைப்புக்காய் உழைக்கும் முதியவர் இவர்’ என்று இப்பெரியவரின் வருந்தத்தக்க வாழ்வைக் கவிதையாக்கியிருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உயிர்த் துணை…

    பெற்றெடுத்துப்
    பேணி வளர்த்துப்
    படிக்கவைத்த பிள்ளைகள்,
    போய்விட்டனர்
    வெளிநாட்டுக்கு-
    விமானம் ஏறி..

    உற்ற துணையாயிருந்த
    ஒருத்தியும்
    போய்ச் சேர்ந்துவிட்டாள்,
    ஒற்றை ஆளாய் இவரை
    விட்டுவிட்டு..

    மற்றவர்களும்
    மறந்துவிட்டனர்..

    உயிரே யற்ற
    ஒரே துணை,
    ஓட்டை மிதிவண்டியில்
    வற்றிய உடலுடன்
    வேலைக்குச் செல்கிறார்-
    வயிற்றுப் பிழைப்புக்காக…!

    *****

    ’மாசு இல்லா வான்வெளியும், தூசு இல்லாச் சாலையுமாகக் காட்சியளிக்கும் கிராமத்தில் இம்முதியவர் மேற்கொள்ளும் சுகமான மிதிவண்டிப் பயணம் வருங்காலத்தில் படத்தில் மட்டுமே சாத்தியமாகிடுமோ?’ என வருந்துகின்கிறார் திரு. கோ. சிவகுமார்.

    காட்சிப் பொருள்

    மாசு இல்லா வானவெளி!
    தூசு இல்லாச் சாலை வழி!
    ஓங்கி வளர்ந்து
    மொட்டையான
    ஒற்றைப் பனைமரம்!
    ஆங்காங்கே
    நிழல் மரங்கள்!
    தண்ணீர் வண்டிகளும்
    சரக்கு வண்டிகளும்
    தடயங்கள் பதிக்காத சாலை!
    அதில்
    சுகமான மிதிவண்டிப் பயணம்!
    இந்தக் கிராமத்தின்
    அடையாளங்களெல்லாம்
    இனி
    படத்தில் மட்டுமே
    பார்க்க முடியும்
    காட்சிப் பொருளாய்
    ஆகிடுமோ!

    *****

    ’ஓடி ஓடி உழைத்து நாடி தளர்ந்தபின்னும் உழைத்துச் சாப்பிட்டால்தான் சோறு உடம்பில் ஒட்டும் எனும் கொள்கையுடைய இம்முதியவரைச் சுமந்துசெல்லும் மிதிவண்டி முன்பு விமானமும் தூசுதான்!’ என்கிறார் திரு. ராவணா சுந்தர்.

    உள்ளம் – வயதறியாது

    பொட்டவெளிக்காட்டில்
    உச்சிவெயில் அடிக்கையில்
    நட்ட நடுச் சாலையில்
    பட்டமரமெல்லாம்
    மூலைக்கு ஒன்றாய்
    பேருக்கு நிற்கையில,
    பட்ட கடனெல்லாம்
    பலனற்றுப் போனாலும்,
    கருத்த மேனியில்
    விழுந்த தழும்புகள்
    பல கதைகள் கூறும்,
    மேலாடை விடுத்து
    உன் அங்கங்கள்
    வடித்த கண்ணீரில்
    கலந்த உதிரங்களை
    என்றும் உன் தோள்களுக்குத்
    துணையான துண்டின் வாசமறியும்,
    செருப்பாய் நீ
    சிற்றுண்டி வித்து
    உழைத்துச் சீராட்டிய உறவுகளெல்லாம்
    சீமையில் செழிப்புற,
    எலும்புகள் மேற்தோலில் எட்டிப்பார்த்தாலும்
    ஒட்டிய வயிற்றுக்கு
    உழைச்சாதான் சோறு
    உடம்பில் ஒட்டும்னு,
    உன்குருதி புடைக்க
    நீ ஓங்கி மிதிக்கிற
    மிதிவண்டியப் பார்க்கும்போது,
    தூரப் பறக்கும் விமானத்தையும்
    சற்று ஏளனமாப் பார்க்க வைக்கும்.

    *****

    உறவுக்கும் உணர்வுக்கும் சொந்த பந்தங்களுக்கும் அடிமையான வாழ்க்கை நிகழ்வுகளைச் சுழன்றுசெல்லும் மிதிவண்டிச் சக்கரங்களைப்போலச் சற்றே சுழற்றிப் பார்க்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    தொலை தூரத்து வெளிச்சம்

    மெல்ல மிதிக்க
    மிதிவண்டிச் சக்கரம்
    மெல்லச் சுழலுது முன்னே!
    நினைவுச் சக்கரமோ
    மெல்லச் சுழன்றது பின்னே!

    இனி ஒரு சுதந்திரம் வேண்டும்
    என்று அன்று குரல் கொடுத்த அண்ணல்
    சுதந்திரம் கிடைத்ததோ நாட்டுக்கு
    ஆண்டாண்டு காலமாய்
    அடிமைகளாய் வாழ்ந்ததால்
    இன்றும் இருக்கிறோம் அடிமைகளாய்!

    மிதிவண்டியில் சங்கிலியால் இணைந்து
    முன் சக்கரத்தோடு பயணம் செய்யும்
    பின் சக்கரமாய்த்
    தாலிச் சங்கிலியால் என்னோடு இணைந்து
    வாழ்க்கைப் பயணத்தை அவளோடு துவங்கிட
    உறவுக்கு அடிமையாய் ஆனேனே!

    உணர்வுக்கு அடிமையாகிட
    உயிர்களை அவள் சுமந்திட
    புதுச் சொந்தங்களுக்கு அடிமையாய் ஆனேனே!
    உறவுகளும் சொந்தங்களும்
    அன்பால் இணைந்திட
    பந்தங்களுக்கு அடிமை ஆனேனே!

    அத்தனையும் இழந்து
    தனிமரமாக நிற்கையில்
    அடிமைச் சங்கிலிகள் அறுந்து போய்
    தொடருது வாழ்க்கைப்பயணம்!
    வெளிச்சம் தரும் விடுதலை வேண்டி
    இறைவா உன் திருவடி தேடி
    இன்னும் ஒரு சுதந்திரம் வேண்டும்!

    *****

    செப்பமிட்ட பாதையில் மிதிவண்டியில் பயணிப்பதால் மட்டும் பண்படா வாழ்க்கையினைச் சரிப்படுத்திவிடமுடியாது எனும் வாழ்வியல் உண்மையை விளம்பியிருக்கின்றார் திருமிகு. சத்யா இரத்தினசாமி.

    வாழ்க்கை மிதித்து சலித்த தடங்களிலே…
    மிஞ்சியது மிதிவண்டிதான்…….. எனச் சலித்துக்கொண்டாலும்
    இயற்கைக்கு எதிராக எரிபொருள் வாகனங்கள் செய்யும் இம்சைக்கு
    இது போதுமென்று , நீவிர் தேற்றிக்கொள்வது தெரிகின்றது.
    பாதைகள் செப்பமிடப்பட்டாயிற்று ………..
    எனினும் இன்னும் பண்படாத வாழ்க்கையினை
    இரு சக்கர இடைவெளியில் மிதித்து மிதித்து மீள முடியாது..
    மீண்டும் இன்றும் புறப்பட்டு விட்டாய்………
    ஓய்வைத்தான் உள்ளம் வேண்டினாலும் உறங்கவிடாத் தேவைக்காக………

    *****

    சுழலும் மிதிவண்டிக்குப் போட்டியாகச் சீரிய கருத்துக்கள் பலவற்றைத் தம் கவிதைகளில் சிறப்பாகச் சுழலவிட்டிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள் உரியவை.

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பயணங்கள் முடிவதில்லை!

    ஆதாரம் தேடித் தேடி
    ஆண்டாண்டு அலையும் கொடிகள்!
    சேதாரம் கிட்டாமல்
    செழித்துக் காய்ந்த நிலங்கள்!
    நீராதாரம் பொய்த்துப் போய்
    காய்ந்த நிலமடந்தை!
    ஏர்முனை தேய்ந்து போய்
    மழுங்கிய மண்ணின் மைந்தர்!
    ஒட்டிய தேகம் பட்டினி வயிறு
    எலும்பு தெரியும் வெற்றுடம்பு
    கந்தல் நிறை வேட்டி – என
    உன்நிலை பார்த்தபின்பு
    நூற்றாண்டு பல கண்டாலும்
    காந்திக்கும் உடை மாறாது!

    கண்ணில் கனவுகள் வண்ணம் இழந்து போனாலும்
    கண்ணீர் வற்றிக் காய்ந்து போனாலும்
    சுழலும் சக்கரம் சுற்றுவது நிற்பதில்லை – இவர்
    வாழ்க்கைத் துயரங்கள் முடிவிற்கு வருவதில்லை!
    இங்குப் பொய்த்தது பருவம் மட்டுமல்ல
    பதவியிலிருப்போர் வாக்கும் தான்…!

    ”ஒட்டிய தேகமும், பட்டினி வயிறும், கட்டியிருக்கும் கந்தல் வேட்டியும் இப்பெரியவரின் இல்லாமைக்குக் கட்டியங்கூறி நிற்கின்றன. இந்த அவலநிலைக்கு இவர்மட்டுமா காரணம்? வாக்கு வாங்குவதற்காகச் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய அரசியலாளரும் அல்லவோ காரணம்!” என்று நாட்டின் எதார்த்த நிலையைப் பாட்டில் வெளிக்காட்டியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 222-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 222-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நித்தி ஆனந்த் எடுத்த இந்த வண்ணப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 222க்கு வழங்கியிருக்கின்றார் சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    மழலையரில்லா உலகம் மலர்களில்லா இயற்கைபோன்று எழில்குன்றித் தோன்றும். புவியை அழகாக்கும் இப்புத்தம் புதுமலர்களைப் பாட வல்லமைமிகு கவிகளை வாழ்த்தி வரவேற்கின்றேன்!

    *****

    வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளைகளின் விளையாட்டைத் தடுக்கவேண்டாம் என்று பெரியோருக்கு நல்லுரை நவில்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பிள்ளை விளையாட்டு…

    வெள்ளை உள்ளம் கொண்டதாலே
    வேறு பாடுகள் பார்ப்பதில்லை,
    பிள்ளை யாக இருக்கும்வரை
    பேதம் எதுவும் வருவதில்லை,
    கள்ளம் மனதில் இல்லாததால்
    கவலை வீணே கொள்வதில்லை,
    தள்ளி நிற்பீர் பெரியோரே
    தடுக்க வேண்டாம் விளையாட்டையே…!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    வருங்காலத் தூண்கள்!

    வீடு நிறைய இடம் இருந்தும்
    ஓடி ஆடி விளையாட மறந்த
    புதிய தலைமுறை!
    உலகை வெல்லும்
    அத்தனை திறமை இருந்தும்
    உள்ளங்கையில் ஒளிந்திருக்கும் கைப்பேசியின் கைதியாய் இவர்கள்!
    சற்றே இடைவெளி விட்டு
    அகலும் விழிகள் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அடிமை ஆகும்!
    நீண்ட நேரம் மின்சாரம் இன்றி
    செயல் இழந்த கைப்பேசி
    இவர்களை வீதிக்கு அழைத்து வந்ததோ விளையாட?
    செய்வது அறியா ஆழ்ந்த சிந்தனையில்
    அடுத்த உட்புற விளையாட்டைத்
    தேடும் புதிய தலைமுறை!
    இவர்கள் வருங்காலத் தூண்கள்!?

    அங்கையில் அடங்கும் கைப்பேசி விளையாட்டிலும், தொலைக்காட்சியிலும் தொலைந்துபோய்விட்ட  இன்றைய மழலையர், மின்சாரம் இல்லாவிட்டால் மட்டுமே தெருவில் இறங்கி விளையாடுகின்றார்கள் என்ற வருந்தத்தக்க உண்மையைப் பொருந்தவே பதிவு செய்திருக்கும் இக் கவிதையின் ஆசிரியர் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • தமிழ்க்காதல் கொண்ட மூதறிஞர்!

    தமிழ்க்காதல் கொண்ட மூதறிஞர்!

    -மேகலா இராமமூர்த்தி

    புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில்,  சுப்பிரமணியன் செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் மகனாக 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாளன்று பிறந்தவர் தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். அவருடைய பிள்ளைத் திருநாமம் அண்ணாமலை என்பதாகும். மாணிக்கம் என்றும் அவர் அழைக்கப்பட்டதால் அந்தப் பெயரே பிற்காலத்தில் அவருக்கு நிலைத்துவிட்டது.

    குழந்தைப் பருவத்திலேயே தாயையும் தந்தையையும் அடுத்தடுத்து இழந்த மாணிக்கத்தை அவருடைய தாய்வழிப் பாட்டனாரும் பாட்டியாரும் வளர்த்தனர். தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டையில் உள்ள பள்ளியொன்றில் பயின்ற அவர் தம் பதினோராம் வயதில் வட்டித் தொழில் பழகுவதற்காகப் பர்மாவுக்குச் சென்றார்.

    அங்கே இரங்கூன் நகரத்திலுள்ள கடையொன்றில் உதவிசெய்யும் சிறுவனாக வேலைக்குச் சேர்ந்தார். அவர் வேலைசெய்த வட்டிக்கடை முதலாளி ஒரு சமயம் அவரிடம் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அந்த நபர் கடைக்கு வந்து தன்னை எங்கே என்று கேட்டால், ”முதலாளி இல்லை” என்று சொல்லிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் பொய்சொல்வதை அவ் இளம் வயதிலேயே பெருங்குற்றமாகக் கருதிய சிறுவன் மாணிக்கம், ”முதலாளி நீங்கள் வெளியில் சென்றிருந்தால் இல்லை என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இங்கேயே இருக்கும்போது எவ்வாறு இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய்சொல்ல மாட்டேன்!” என்று பிடிவாதமாக மறுத்துக் கூறியதால் அந்த நாளிலேயே வட்டிக்கடை வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இதனாலேயே அவருக்குப் பொய்சொல்லா மாணிக்கம் என்று பெயர் வழங்கியதாகத் தெரியவருகின்றது.

    வட்டிக்கடையில் வேலை செய்ய முடியாத சூழலில் பர்மாவிலிருந்து நாடு திரும்பிய வ.சுப. மாணிக்கனாருக்குத் தமிழ் நூல்களை ஊன்றிக் கற்ற
    பண்டிதமணி கதிரேசஞ் செட்டியாருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் பயின்று, முதன்மையாகத் தேர்ச்சியுற்றார்.

    சில திங்கள் அப்பல்கலைக்கழகத்திலேயே ஆய்வு மாணாக்கராய் இருந்து பின் ஏழாண்டுகள் அங்கேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்போதே தனியாகப் படித்து பி.ஓ.எல், எம். ஏ பட்டமும், ’தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ பற்றி ஆய்ந்து முனைவர்ப் பட்டமும் பெற்றார். பின்னர் 1948 தொடங்கி இருபது ஆண்டுகள் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் பணிபுரிந்தார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்திய மொழிப்புல முதன்மையராகவும் தொண்டாற்றினார். பின் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியேற்று தமிழியல் வளர்ச்சிக்கும் பிற அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துத் துணைநின்றார். திருவனந்தபுரத்தின் மொழியியற்கழக ஆய்வு முதியராக வேலைபார்த்தபோது தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியத் தகைஞராகப் பணிசெய்ததன் பயனாகத் தொல்காப்பியத்துக்கு இவர்தம் புத்துரை விளக்கம் கிடைத்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொன்விழாவில் இவருக்கு டி.லிட். பட்டம் நல்கிச் சிறப்புச் செய்தது.

    குன்றக்குடி ஆதீனம் ’முதுபெரும் புலவர்’ எனும் சிறப்புப் பட்டத்தையும், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை ‘செம்மல்’ எனும் சிறப்புப் பட்டத்தையும் நல்கின. அரசு இவர் மறைவுக்குப்பின் ’திருவள்ளுவர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.

    தமிழ்ப்பல்கலைக்கழகத் தொடக்க நிலையில் செயன்முறைகளை வகுக்க அமைக்கப்பெற்ற வல்லுநர்குழுவின் தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்கு வழிவகுத்தார் மாணிக்கனார். தமிழகப் புலவர் குழுவிற்கும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கும், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக் குழுவுக்கும் தலைவராகத் திகழ்ந்து இவர் ஆற்றிய பணிகள் மிகப்பல. ’காரைக்குடி தமிழ்ச்சங்கம்’ நிறுவிச் சங்க இலக்கிய வகுப்பு நடத்தியும் இளஞ்சிறார்க்கு ‘அறநூல்கள் ஒப்புவித்தல் போட்டி’ வைத்துப் பரிசுகள் வழங்கியும் ஒல்லும் வாயெல்லாம் தமிழ்த்தொண்டு செய்தார். தில்லையில் அம்பலத்தின்கண் நின்று திருமுறைகள் ஓதி வழிபடப் பேராசிரியர் வெள்ளைவாரணனார் போன்றோரின் துணையோடு போராடி வாகை சூடினார்.

    வள்ளல் அழகப்பரின் கொடைவளம் ஏத்திக் ‘கொடை விளக்கு’ எனும் கவிதைநூல் படைத்தார். இவர்தம் தனிப்பாடல்களின் தொகுப்பு ‘மாமலர்கள்’ எனும் பெயரின் வெளிவந்துள்ளது. இவர்தம் படைப்புக்களுள் வள்ளுவமும், தமிழ்க்காதலும் இருகண்களெனப் போற்றத்தக்கவை. இவ்விரு நூல்களும் தமிழர் அனைவரும் படித்துப் பயன்கொள்ளவேண்டிய அற்புதமான ஆராய்ச்சி நூல்களாகும்.

    காதலரின் பாலுணர்ச்சிகளை, அவர்தம் உளவியலைக் காட்சிப்படுத்துவதில் புலவர்களின் மாட்சி எத்தகையது என்பதை நுட்பமாய் ஆராய்ந்திருக்கும் நூல் தமிழ்க்காதல்.

    அகப்பொருள் பேசும் எழுதிணைகளின் இயல்பைச் சுருங்கச்சொல்லி விளங்கவைக்க விரும்பிய மாணிக்கனார், கைக்கிளையை ’முதிராக் குறுங்கரு’ என்றும், பெருந்திணையை ’முற்றிவீழ் கரு’ என்றும் நடுவணதாய் அமைந்திருக்கும் அன்பின் ஐந்திணையே ’இயல்பான வளர்கரு’ என்றும் விளம்பியிருப்பது அவரின் நுண்மாண்நுழைபுலத்துக்குத் தக்க சான்றாகும்.

    அன்றைய பாடல்கள் குறித்து இன்றைய இளையோர் எழுப்பும் வினாக்கள் சிலவுண்டு. சங்கப்பாடல்கள் அடியெல்லை, கடுமையான இலக்கண வரம்புகள் முதலியவற்றை உள்ளடக்கியிருப்பது புலவரின் கற்பனைச் சிறகை ஒடிக்காதா? கவிதை ஆர்வத்தைச் சிதைக்காதா? என்பவை அவை.

    புலவர்கள் இந்த இலக்கண விதிகளையே பாடல் மரபெனக் கொண்டு அறிவறிந்து அடங்கிப் பாடல்படைத்த காரணத்தால்தான் ஞாலமதிப்பைப் பெற்று, அன்றைய புலவர்கள், இன்றளவும் புகழொளி வீசுகிறார்கள் என்று விடைபகரும் மாணிக்கனார்,

    புகழ்பெற்ற மேனாட்டுச் சிந்தனையாளரான Bertrand Russell தம்முடைய Marriage and morals’ எனும் நூலில் குறிப்பிட்டிருக்கும்,” Love poetry depends upon a certain delicate balance between convention and freedom, and is not likely to exist in its best form where this balance is upset in either direction.”

    காதற்பாட்டு, மரபுக்கும் உரிமைக்கும் இடையே மெல்லியதொரு சமநிலையை வேண்டிநிற்கும். அது சற்றே கோடினாலும் பாட்டு அதன் அழகுருவை இழந்துவிடும்” எனும் கருத்தைப் பொருத்தமாய் மேற்கோள் காட்டுவது அவரின் பரந்துபட்ட வாசிப்பையும் நமக்கு அறியத்தருகின்றது.

    திருக்குறளில் தோய்ந்து, வள்ளுவர் நெஞ்சை ஆய்ந்து, வள்ளுவம் எனும் ஆராய்ச்சி நூலை படைத்திருக்கும் மாணிக்கனார், அதில் தம் உளக் கருத்துக்களைப் பன்னிரண்டு கற்பனைச் சொற்பொழிவுகளாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

    ”தமிழர்களே! நாம் புகழ்சான்ற திருக்குறளைப் போற்றுகிறோம். பன்மாணும் பறைசாற்றுகிறோம். அவ்வளவோடு அமைதல் ஆகாது; ‘புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்’ (538) என்பது ஒரு தனி வள்ளுவம். ‘செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்’ என்பது குறள்காட்டும் அச்சமுடிபு. ஆதலின் யார்க்கும் செயல் வேண்டும் என்பதுதான் வள்ளுவர் நெஞ்சம். இச்செயல் நெஞ்சமே என் திருக்குறட் பொழிவுகளின் உயிர்நிலை. விளக்கமெல்லாம் இதன் சூழ்நிலை. ‘குறள் கற்பேன்; நிற்பேன்; நிற்கக் கற்பேன்; குறள்வாழ்வு வாழ்வேன்; வள்ளுவர் ஆணை’ என்று எண்ணுமின்!” என அந்நூலில் வள்ளுவர் நெஞ்சத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டிக் குறள் கற்கவும் அதன்வழி நிற்கவும் நம்மை வலியுறுத்துகின்றார்.

    இந்நூல்களேயன்றித் தொல்காப்பியக் கடல், திருக்குறட்சுடர், சங்கநெறி, காப்பியப் பார்வை, இலக்கியச் சாறு, தமிழ்க்கதிர், தலைவர்களுக்கு முதலியவை இவர்தம் பிற படைப்புக்கள். திருக்குறளை யாவரும் எளிதில் புரிந்துகொள்ள ’உரைநடையில் திருக்குறள்’ எனும் நூலை இயற்றியுள்ளார்.

    மணிவாசகர் நூலக வெளியீடான ‘கம்பர்’ என்னும் இவரது நூல் தமிழக அரசின் பரிசுபெற்றது. தமிழ் யாப்பு வரலாறு, தமிழில் வினைச்சொற்கள், தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் நூல்கள் இவரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்றவையாகும். மன்பதையின் முன்னேற்றங்கருதி இவர் படைத்த நாடகங்கள் மனைவின் உரிமை, உப்பங்கழி, ஒருநொடியில் என்பனவாகும்.

    இவற்றில் ’தலைவர்களுக்கு’ என்ற நூலை நாம் அரசியல் சார்ந்த நூலாகக் கருதலாம். 1965ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் இந்நூல் வெளிவந்ததாகத் தெரிகிறது. 1965, தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாகும். காரணம் அரசாங்கத்தின் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழகமே போர்க்கோலம் பூண்டிருந்த ஆண்டு அது. ஆதலால் அச்சமயத்தில் தாம் எழுதி வெளியிட்ட அந்நூலில் மொழிச்சிக்கல் குறித்தும் அதற்கு ஏழு விதமான தீர்வுகள் குறித்தும் தம் கோணத்தில் மாணிக்கனார் விரிவாகப் பேசியிருக்கின்றார்.

    இவ்வாறு தமிழிலும் ஆங்கிலத்திலும் பனுவல் பல படைத்த அம் மூதறிஞர், தமிழ்ச் சொல்லாக்கத்துறைக்கும் குறிப்பிடத்தக்க  பங்களிப்புச் செய்திருக்கின்றார்.

    “சொற்பொழிந்தேன், வானொலிக்கின்றேன், பழமொழிகின்றோம், அட்டவணைப்பர், நன்றியன், விருப்பன், ஈடுபாடன், இலக்கியர், இலக்கணர், தமிழ்வளர்ப்பிகள், இலக்கியப் படிப்பிகள், மாறுவேடி, நம்பிக்கைக் கேடி, தமிழ்மை, தமிழ் மன்னாயம், மக்கட் குழுவாயம், அணிய நாடுகள், சால்பியம், புரட்சியம், மக்களியம், ஒப்பியம், படைப்பியம்” என்பன அவற்றுள் சில.

    சிலப்பதிகாரம் எனும் காப்பியத்துக்கு அப்பெயர் சிலம்பு காரணமாக வந்தது என்பதை நாமறிவோம். எனினும் அச்சிலம்பு எது? யாருடையது? என்று கேட்டால் நம்மில் பெரும்பாலோர் கண்ணகியின் காற்சிலம்பே காப்பியத்தின் பெயருக்குக் காரணம் என்று கூறுவோம். ஆனால் வ.சுப. மாணிக்கனாரோ தம்முடைய ’காப்பியப் பார்வை’ எனும் நூலில் இடம்பெற்றுள்ள ‘எந்தச் சிலம்பு?’ எனும் ஆராய்ச்சிக்கட்டுரையில் கோப்பெருந்தேவியின் தொலைந்துபோன சிலம்பே சிலப்பதிகாரப் பெயருக்குக் காரணம் என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவியுள்ளார். சிலப்பதிகாரப் பெயர் பற்றிய என் ஆராய்ச்சி, முன்னையோர் ஒருமுகமாகக் கூறிவரும் கருத்துக்கு முற்றுமுரணாக இருந்தாலும், உண்மை காண முயலுதலும், கண்ட உண்மையை வலியுறுத்துதலும் தமிழ் மாணவரின் கடன் எனும் உணர்ச்சியின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிடுகின்றேன் எனக் கட்டுரையின் முடிவில் அவர் முத்தாய்ப்பாய்க் கூறியுள்ள கருத்து ஆய்வாளர் அனைவரும் மனங்கொளவேண்டிய ஒன்றாகும்.

    தமிழ்மொழிபால் தணியாக் காதல்கொண்ட அப்பெருமகனார், மழலையர் ஆங்கிலப்பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளிகளாக மாற்றவேண்டும்; தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிற்றுமொழி தமிழாதல் வேண்டும் எனும் கொள்கையினைப் பரப்பத் தமிழ்வழிக் கல்வி இயக்கங்கண்டு அதனைத் தமிழகம் எங்கணும் நடாத்திவந்தார். எழுத்துச் சீர்திருத்தம் எனும் பெயரில் எழுத்துமாற்றம் செய்து தமிழுக்கு ஊறுசெய்தலாகாது என்பதனைத் தம் கட்டுரைவழி அறிஞருலகுக்கு அறிவுறுத்தினார்.

    வ.சுப. மாணிக்கனாரின் குணநலன்களைச் சுருங்க உரைப்பதென்றால்…

    எளிய தோற்றமும், உயரிய நோக்கமுங்கொண்ட பழுத்த தமிழறிஞர் அவர்! சிறந்த சிந்தனையாளர்; தனித்தமிழ் இயக்கத்திற்குத் தாமே புதிய சொற்களைப் படைத்து எல்லாநிலைகளிலும் எங்கும் தமிழ்வளர ஓய்வென்பதறியாது உழைத்த உரஞ்சான்ற வித்தகர். அனைத்துக்கும் மேலாய்ப் பண்புவழி உலகினை நடத்தத் தம் மதிநுட்பத்தையும் நூற்புலமையையும் அசைவிலா ஊக்கத்தோடு பயன்படுத்திவந்த சான்றோர். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப்பணிக்காகவே வாழ்ந்து பண்பின் திருவுருவாகத் திகழ்ந்த மூதறிஞர்.

    தமிழ்ப்புலமையும், சான்றாண்மையும், சிறந்த பண்புநலன்களும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற அருந்தமிழறிஞரான வ.சுப.மாணிக்கனார், 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் இரவு மாரடைப்பால் புதுச்சேரியில் காலமானார்.

    அப் பேரறிஞரின் பொன்னுடல் இப்புவியைவிட்டு மறைந்தாலும், தன்னேரிலாத தமிழுக்கு அவராற்றியிருக்கின்ற அளப்பரிய பணிகளால் தமிழ்ச் சான்றோர் நெஞ்சில் என்றும் மாணிக்கமாய்ச் சுடர்விட்டு ஒளிர்வார்.

    கட்டுரைக்கு உதவியவை:

    1. https://ta.wikipedia.org/wiki /வ._சுப._மாணிக்கம்
    2. வள்ளுவம் – வ.சுப. மாணிக்கனார் – மணிவாசகர் பதிப்பகம்
    3. தமிழ்க்காதல் – வ.சுப. மாணிக்கனார் – மெய்யப்பன் பதிப்பகம்

    Share
  • பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

    பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

    முனைவர்  க. மங்கையர்க்கரசி
    உதவிப் பேராசிரியர்
    A M ஜெயின் கல்லூரி
    மீனம்பாக்கம்
    சென்னை – 600 114

    முன்னுரை

    நமது நாட்டில் பேச்சு வழக்கில் பல்வேறு பழமொழிகள் இடம்பெற்று வருகின்றன. சில பழமொழிகளை நேரம், இடம், சூழ்நிலை ஆகியவற்றிற்கேற்ப நாம் பேசி வருகின்றோம். சில பழமொழிகளுக்குரிய சரியான விளக்கங்களையே நாம் பேசுகின்றோமா எனில் இல்லை என்றே கூறலாம். சில பழமொழிகளின் உண்மையான விளக்கங்களை நாம் தெரிந்து பயன்படுத்துவோம்.

    1. சிவ பூஜையில் கரடி

    வீட்டிற்குள் தேவையற்ற நேரத்தில் ஒரு நபர் வந்து விட்டால் அவர்களை குறிக்கவே இந்தப் பழமொழி என்பது பொருள் அல்ல.

    “சிவபூஜையில் கரடிகை” என்பதே சரியானதாகும்.

    சிவபூஜையின் போது முக்கியமாக பயன்படுத்தப்பட்ட ஓர் இசைக் கருவிதான் கரடிகை. பழங்காலத்தில் தெய்வவழிபாட்டின் போது, பல்வேறு இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. அவற்றில் கரடிகை ஒன்று. கரடி கத்துவது போல ஓசை எழுப்பக்கூடிய கருவி என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. மிருதங்கத்தைப் போல மரம், தோலால் செய்யப்பட்ட கருவி இது. தாள இசைக் கருவியாகப் பயன்பட்டது. கம்பராமாயணத்தில் (8445) என்ற பாடலிலும் அருணகிரிநாதர் பிள்ளைத்தமிழிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சிவபூஜையில் கரடிகை என்பதே சரியான பொருளாகும்.

    1. விதையொன்று இட்டால் சுரையொன்றா முளைக்கும்

    ஒரு பயிரினுடைய விதையைப் போட்டால் வேறொரு பயிர் முளைக்காது. அதே பயிர்தான் முளைக்கும் என்பது ஏதோ ஒரு செடி வளர்க்கும் முறை பற்றியது என்பது பொருள் அல்ல.

    இது மனிதனின் விந்தணுக்களில் உள்ள கூறுபாடுகளைக் குறிக்கும். ஒருவன் உடலில் உள்ள ஜீன்களின் எண்ணிக்கை, குணாதிசயங்கள் ஏழு மூதாதையர்களின் அந்தந்தக் கூறுபாடுகளின் எண்ணிக்கைபடி அமைந்திருக்கும் என்பதே சரியான பொருளாகும்.

    1. குமரியை வெல்ல குமரியை உண்க

    ஒரு குமரியை வெல்ல வேண்டுமானாலும் அந்தக் குமரியை உண்ண வேண்டும் என்பது பொருள் அல்ல.

    இதில் இரண்டாவது வரும் குமரி என்பது சோற்றுக்கற்றாழை. உடலுக்கு இளமையும், வனப்பும், நிம்மதியான தூக்கத்தையும் கொடுக்க வல்லது ஆகும். இதைத் தினமும் உட்கொண்டால் குமரிப்பெண்களை வெல்லும் ஆற்றல் கிடைக்குமாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

    யானை உடல் வலிமை மிக்கது. அதற்கு ஒரு காலம் வந்தால், உடல் வலிமை குறைந்த பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பது பொருள் அல்ல.

    “ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்”

    ‘ஆ’ நெய் என்பது பசுவின் (ஆ – பசு) நெய், அதை இளமைக் காலங்களில் உண்டு வர உடலுக்கு நன்மை தரும். உடனடியாக உடலுக்கு அழகும், ஆரோக்கியமும் கிடைக்கும். ‘பூ’ நெய் என்றால் தேன் (பூவிலிருந்து கிடைப்பதால், அதை முதுமைக் காலங்களில் உட்கொண்டால் உடலுக்கு எந்தவிதத் தீங்குகளும் ஏற்படாமல் பாதுகாக்கும் என்பதே சரியான பொருளாகும்.

    1. பொன்னுக்கு வெள்ளி கால் மாத்து

    தங்கத்தின் மதிப்பிற்கு ஈடாக, இணையாக, வெள்ளியை அளிக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.

    தில்லை சிதம்பரத்திற்கு ‘பொன்னம்பலம்’ என்று பெயர். மதுரைக்கு ‘வெள்ளியம்பலம்’ என்று பெயர். பொன்னம்பலத்தில் தனது இடக்காலைத் தூக்கி ஆடுகின்ற சிவபெருமான், வெள்ளியம்பலத்தில் வலக்காலைத் தூக்கி ஆனந்த நடனம் ( காலைமாற்றி) ஆடுகின்றார் என்ற கருத்தைத் தெரிவிக்க எழுந்ததே என்பதே சரியான பொருளாகும்.

    1. பத்துக்கு மேல் பத்தினி இல்லை

    இரவு பத்து மணிக்கு மேல் யாரும் பத்தினி இல்லை என்பது பொருள் அல்ல. நமது புராணத்தில் சொல்லப்படுகின்ற அருந்ததி, அநசூயை, அகலிகை, சீதை, சாவித்திரி, சந்திரமதி, தமயந்தி, நளாயினி, கண்ணகி, மண்டோதரி போன்ற பத்துப் பேரைத் தவிரப் பத்தினித் தெய்வங்கள் வேறு இல்லை என்பதே பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்பதாகும். இதுவே சரியான பொருளாகும்.

    1. நொறுங்கல் தின்றால் நூறு வயசு

    நொறுங்கல் என்பது ஸ்நேக்ஸ் என்றோ, கண்டதை எல்லாம் தின்றால் நூறு வயது வரை வாழலாம் என்பதோ பொருள் அல்ல.

    நாம் சாப்பிடும் உணவை வாயில் போட்டவுடன் விழுங்கி விடாமல், நிதானமாகப் பற்களுக்கு இடையில் நன்குமென்று, அரைத்துக் கூழாக்கி மென்று தின்றால், நூறு வயது வரை நோயின்றி வாழலாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. சேலை கட்டிய மாதரை நம்பாதே

    சேலை கட்டிய பெண்ணை நம்பாதே; அப்படியானால் சுடிதார் மாட்டிய மாதரை நம்பு என்பது பொருள் அல்ல.

    ‘சேல்’ என்றால் ‘கண்’ தன் கணவனுடன் இருக்கும் போது, கண்களை அகட்டி, வேறு ஓர் ஆடவனைப் பார்க்கும் பெண்களை நம்பாதே, கண்களின் நோக்கம் (பார்வையில் தவறான எண்ணத்தில் ஆடவனை பார்க்கும் தவறான பெண்களை (விலைமாதரை) நம்பாதே. அவர்கள் பின்சென்றால் சொல்ல முடியாத துன்பமும், துயரமும், நோயும் வரும் என்பதே சரியான பொருளாகும்.

    1. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே

    மண்ணால் செய்யப்பட்ட குதிரை தண்ணீரில் கரைந்துவிடும். அதை நம்பிக் கரையைக் கடக்க இயலாது என்பது பொருள் அல்ல. ஏமாற்றம் அடையாதே என்பது அல்ல. நம்பக்கூடாததை நம்பி, நம்ப முடியாததை நம்பாதே என்பது பொருள் அல்ல.

    ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால் உள்ளே பதியும், நாம் கீழே விழுந்து விடவோ, உள்ளேயே புகுந்துவிடவோ ஏதுவாகும். எனவே இந்த மண் (குதிர் ஐ) குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

    நல்லது எதுவும் நடந்தாலும் அது பெண்ணால் தான் வரும் என்றும், அழிவு வந்தாலும் அது பெண்ணால் தான் வரும் என்பது பொருள் அல்ல.

    நல்லவை ஆவதும் பெண்ணாலே, தீயவை அனைத்தும் அழிவதும் பெண்ணாலே என்று பொருள்

    அரக்கர்கள் பெரும்பாலும் இறைவனை வேண்டி தவமிருந்து வரம் பல பெற்றபோது, தமக்கு இறப்பே வரக்கூடாது என்றும் இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்றும் வேண்டுவர். உதாரணமாகக் காஞ்சிபுர காமாட்சி அவதாரம்.

    1. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

    ஆடி மாதம் காற்று பலமாக வீசும். கடினமான பொருளான அம்மியும் பறந்து விடும் என்பது பொருள் அல்ல.

    சித்திரை மாதம், வைகாசி மாதம் வெயில் காலம். அக்னி நட்சத்திரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் பலருக்கும் அம்மை நோய் ஏற்படும். அது ஒரு நோய்த்தொற்று. எனவே வீட்டில் ஒருவருக்கு வந்தால் கூட, பலருக்கும் வரும் அபாயம் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் தட்பவெப்பநிலை மாறிவிடும். அம்மை நோயும் ஏற்படாது. தொற்றும் இருக்காது என்பதால் ஆடிக் காற்றில் அம்மையும் பறந்து போய்விடும். நோயின் தன்மையும் குறைந்து, இல்லாமல் போய்விடும் என்பதே சரியான பொருளாகும்.

    1. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து

    திருமணம் முதலிய சுபநிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே முதல் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால், அனைத்து உணவு வகைகளும் கிடைக்கும். தாமதமாகச் சென்றால், சில உணவு வகைகள் காலியாகிவிடும், எனவே பந்திக்கு முதலில் செல். படை, போர் என்று வந்தால் தாமதமாகச் செல் முதலில் போர் செய்து பலர் இறந்துவிடுவர். போரும் முடிவுக்கு வந்துவிடும். இறுதியில் சென்றால் உயிர்க்குப் பிரச்சனை ஏற்படாது என்பது பொருள் அல்ல.

    பந்திக்கு முந்து என்றால் நாம் சாப்பிடப்போகும் போது வலக்கை முன்னோக்கிச் செல்கிறது. முற்காலத்தில் போர் என்றால் வில்லே முதன்மையான போர்க்கருவியாகும். எவ்வளவு தூரம் வலக்கை வில்லின் நாணைப் பிடித்து பின்னால் இழுக்கிறதோ,அந்த அளவுக்கு அம்பு வேகமாகப் பாய்ந்து இலக்கைத் தீர்க்கும் என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆத்தில் போட்டாலும் அளந்து தான் போடணும்

    எந்தப் பொருளை ஆற்றில் கொண்டு போய் போட்டாலும் அளந்து பின்பே போடணும் என்பது பொருள் அல்ல.

    அகத்தில் அதாவது வயிற்றில் சாப்பிடும் சாப்பாட்டை நேரம், காலம், அளவு என்று அறிந்து தான் போட வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

    ஏதாவது ஒரு பிரச்சனைக் குறித்து மனத்தில் (அகத்தில் போட்டாலும், தேவையான சிந்தனையை மட்டுமே போட வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியம் பெறும் என்பதே சரியான பொருளாகும்.

    1. விருந்தும் மருந்தும் மூணு நாள்

    விருந்துக்கென ஒரு வீட்டிற்குச் சென்றாலும் 3 நாள் மட்டுமே. மருந்து சாப்பிட்டாலும் 3 நாள் மட்டுமே என்பது பொருள் அல்ல.

    ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உணவைக் குறைவாய் உட்கொண்டு மருந்துபோல் உண்ண வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

    1. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்டது போல

    நாடாளும் அரசனை நம்பி, தாலி கட்டிய புருசனைக் கைவிட்டது போல என்பது பொருள் அல்ல.

    அரசனை என்பது அரச மரத்தைக் குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தைச் சுற்றுவார்கள். கட்டிய கணவனைக் கவனிக்காமல், வெறும் அரச மரத்தைச் சுற்றுவது பயன் தராது என்பது சரியான பொருளாகும்.

    1. கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆகலாம்

    ஒருவன் கண்டதை எல்லாம் படித்தால், பண்டிதன் ஆகலாம் என்பது பொருள் அல்ல.

    எதை கற்க வேண்டும் என்று கண்டு, அதைக் தெளிவாகக் கற்றால் பண்டிதன் ஆகலாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. பெண் புத்தி பின் புத்தி

    பெண்ணின் புத்தி எதையும் யோசிக்காமல் செய்துவிட்டு, பின் அதைப் பற்றி யோசிக்கும் என்பது பொருள் அல்ல.

    பெண்ணின் புத்திசாலித்தனம், பின்னால் வருவனவற்றை முன் கூட்டியே அறிந்து, அதைச் சரிசெய்துவிடும் அளவிற்கு கூர்மையானது  (பின் – pin) போன்றது என்பது சரியான பொருளாகும்.

    1. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி

    ஒருவன் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால், அரசன் போல் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், ஆண்டியாகி வறுமைநிலையை அடைவான் என்பது பொருள் அல்ல.

    ஆடம்பரமாய் வாழும் தாய், பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன், ஒழுக்கம் தவறும் மனைவி, துரோகம் செய்யும் உடன்பிறப்பு, பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள் இந்த ஐந்தும் கொண்ட எந்தக்குடும்பமும் முன்னேறாது என்பது சரியான பொருளாகும்.

    1. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க

    பதினாறு குழந்தைகளைப் பெற்று பெரிய குடும்பமாக வாழ்க, என்பது பொருள் அல்ல.

    அபிராமிபட்டர், அபிராமி அந்தாதியில், ஒரு மனிதன் வாழ்வில் நிம்மதியாக, மகிழ்ச்சியுடன் வாழத் தேவையானது என்று, பதினாறு கிடைத்தற்கரிய பேறுகளைக் குறிப்பிட்டு இறைவனிடம் தர வேண்டும் என்று மன்றாடி வேண்டுவார். அவர் வேண்டிய பதினாறு வகையான பேறுகளாக உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம், ஒப்பற்ற அழகு, அழியாப்புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள், எடுத்த காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி) மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வாழ்வதே வாழ்வு என்கிறார். இதுவே சரியான பொருளாகும்.

    1. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

    சட்டியில் சாப்பாடு இருந்தால், அகப்பையில் வரும். என்பது பொருள் அல்ல.

    குழந்தை இல்லாத பெண்கள், கந்தசஷ்டி விழா ஆறு நாட்களும் விரதம் இருந்து, முருகனை வழிபட்டால், அவர்களுடைய அகப்பையாகிய கருப்பப்பையில் குழந்தைப்பேறு கிடைக்கும். என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

    ஒரு மருத்துவர் தன்னுடைய தொழிலில் ஆயிரம் பேரைக்கொன்றால் தான்/ அவர் அரை வைத்தியன் (பாதி) என்பது பொருள் அல்ல.

    நமது நாட்டில் சித்த வைத்தியமே ஒரு காலத்தில் சிறப்பாக இருந்து வந்துள்ளது. மருத்துவர்கள் பல்வேறு மூலிகைகளை, அதன் வேர்களைக் கொன்று, அதாவது அரைத்து அவற்றின் பயன்களை நன்கு தெரிந்து, மக்களின் நோய்களைக் குணப்படுத்தி வந்தனர். அப்படிக் குறைந்தது ஆயிரம் மூலிகைகளின் வேர்களை, அவற்றின் பயன்களைத் தெரிந்து, வைத்தியம் செய்பவரையே அரை வைத்தியர் என்று நம் முன்னோர் கூறினர் என்பதே சரியான பொருளாகும்.

    1. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை – வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

    வேலையே கிடைக்காதவனுக்கு போலீஸ் வேலை, வக்கற்றவன் வறுமை நிலையில் உள்ளவனுக்கு வாத்தியார் வேலை என்பது பொருள் அல்ல.

    போக்குக் கற்றவனுக்குப் போலீஸ் வேலை, வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை. போலீஸ் வேலையில் சேர்பவனுக்கு வலுவான உடலமைப்பு, மிடுக்கான நடை, அதாவது லெப்ட், ரைட் என்று காலைத் தூக்கி வைத்து, போவதும் வருவதும் ஆகிய நடைப்போக்கினைக் கற்றவன். திருடனை அவனுடைய போக்கிலேயே விட்டு, பின் தொடர்ந்து சென்று, மொத்தக் கூட்டத்தையே பிடிப்பது. ஆசிரியராக இருப்போர் தாம் கற்றுத் தேர்ந்து பேசுகின்ற வாக்குச் சாமர்த்தியத்தில், மாணவர்களை ஈர்க்கும் திறம் உடையவராய் இருத்தல் வேண்டும். இவைகளை உணர்ந்தே போக்கு கற்றவனுக்குப் போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பதே சரியான பொருளாகும்.

    1. களவும் கற்று மற

    திருட்டுத்தொழிலையும் கற்று மறந்து விடு என்பது பொருள் அல்ல.

    திருவள்ளுவர் தம் குறளில் இன்பத்துப்பாலை களவியல், கற்பியல் என்று இரண்டாகக் கூறி கற்பியல் மட்டுமே தெரிந்து வாழ்க்கை நடத்தினால் போதாது, களவியலையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்த வந்ததே இப்பழமொழி. இதுவே சரியான பொருளாகும்.

    1. கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

    நாயைக் கண்டால் கல்லைக் காணோம். தெருவில் கல் கிடக்கிறது. அதை எடுத்து நாயை அடிக்கலாம் என்று பார்த்தால், நாயைக் காணவில்லை. நாயைப் பார்க்கும் போது, அதை அடிக்க வேண்டும் என்று எண்ணினால் கல்லைக் காணவில்லை என்பது பொருள் அல்ல.

    கல்லில் செய்த ஒரு நாயின் உருவம் சிற்பக்கலை, கட்டடக்கலை நிபுணர்கள் காணும்போது /அந்த நாய் கருங்கல்லில் ஆனதா, பளிங்குக்கல்லா, சலவைக்கல்லா என்று அந்த எண்ணத்தில் காண்பர். அவர்கள் கண்களில் அந்த நாய் உருவம் தோன்றுவதில்லை. கல் சிற்பமாகவே தோன்றுகிறது. கல் என்று காணும் போது நாய் என்பது புலப்படவில்லை. அது சாதாரணக் கண்களால் பார்க்கும்போது நாய் என்று புலப்படுகிறது. (நாயின் வாலை நிமிர்த்தி நிற்கும் அதன் எடுப்பானத் தோற்றம்)

        கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்
    நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்

    ஒரு கல்லில் (சிற்பத்தில் அழகிய, எடுப்பான கம்பீரமான நாயகனைக் காணும் போது, அது எவ்வகையானக் கல் என்று தோன்றாது எவ்வகை கல் என்று காணும் போது, நாயகன் நம் கண்களுக்குப் புலப்படாது. இதுவே சரியான பொருளாகும்.

    1. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

    இவ்வுலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும். ஆறு வயதானால் என்ன, நூறு வயதானால் என்ன என்பது பொருள் அல்ல.

    மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி, பாண்டவர்களுடன் கர்ணனைச் சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்த்து ஆறாவதாக வந்தாலும், கௌரவர்களுடன்  சேர்த்து நூறாவதாக வந்தாலும், (துரியோதனனுக்கு உடன் பிறந்தோர்கள் 99 ஆண், 1 பெண் ) தனக்குச் சாவுதான் என்பதே சரியான பொருளாகும்.

    1. உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு

    குறைவாகச் சாப்பிட்டு, உடலை அழகாக, ஆரோக்கியமாக வைத்திருத்தல் பெண்டிற்கு அழகு என்பது பொருள் அல்ல.

    உண்டி என்பது சாப்பாடு. அதைச் செய்வதற்கான நேரம் அதிகமாகும் போது, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்ற விசயங்களில், பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலைக் குறுகிய நேரத்திற்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு என்பதே சரியான பொருளாகும்.

    1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்

    அடுத்த வீட்டுக்குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன்னுடைய பிள்ளை தானே வளரும் என்பது பொருள் அல்ல.

    ஒருவனுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும்போது (என்ன தான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னோருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாகக் கவனித்துக் கொண்டால், அவளுடைய வயிற்றில் வளரும் தன் பிள்ளை தானாகவே வளரும், என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்

    ஒரு திருமணம் நடக்க வேண்டுமென்றால், ஆயிரம் பொய்கூடச் சொல்லலாம் என்பது பொருள் அல்ல.

    ஆயிரம் பேருக்குப் போய்ச் சொல்லி (அழைப்பிதழ்) தந்து திருமணத்தை நடத்தலாம். மாப்பிள்ளை பெண் எப்படி என்ற விபரமும் தெரியவரும். ஆயிரம் பேரின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

    ஆயிரம் தடவை போய் சொல்லி (அந்த காலத்தில் தொலைத்தொடர்பு, வாகனங்கள் ஏதும் இல்லாத நிலையில்) ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உரிய நேரம் எது, என்பதை ஒவ்வொன்றாகப் போய்ச்சொல்லியே திருமணத்தை நடத்தலாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. சோழியன் குடுமி சும்மா ஆடுமா

    சோழியன் குடுமி சும்மா ஆடாது, காசு கொடுத்தால் தான் ஆடும் என்பது பொருள் அல்ல.

    தலையில் ஒரு பொருளை வைத்துத் தூக்கிச் செல்ல, துணியை வட்டமாகச் சுற்றி சும்மாடு செய்வர். அதன்மேல் பொருளை வைத்து, தலைச் சுமையாகச் சுமந்து செல்வர். ’சோழியன் தலையில் உள்ள வட்டமான குடுமி சும்மாடு ஆகுமா?’ ஆகாது என்பதே சரியான பொருளாகும்.

    1. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

    கழுதைக்கு முன்னால் கற்பூரத்தைக் காட்டினாலும் அதனுடைய நல்ல வாசனை கழுதைக்குத் தெரியாது என்பது பொருள் அல்ல.

    கழு என்பது ஒரு வகை புல், அதைப்பயன்படுத்தி, படுக்கும் பாய் செய்வர். அதிலிருந்து கற்பூர வாசனை தெரியும். ‘கழு’ என்ற புல்லைப் பறித்த போதும், பாயாகச் செய்து தைத்தபோதும், படுக்கும்போதும் அவர்களுக்கே தெரியுமாம். கற்பூர வாசனை என்பதே சரியான பொருளாகும்.

    1. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

    விவசாயம் செய்பவர்கள் அறுவடை முடிந்தபின் நல்ல நெல்லுடன் சாவி நெல்லும் கலந்திருக்கும். நல்ல நெல்லைப் பிரித்தெடுக்க, நெல்லை முறத்தில் இட்டு, காற்று அடிக்கும் திசையின் எதிர்த்திசையில் நின்று தூற்றுவர். அப்போது, நல்ல நெல் கீழே விழும்; சாவி நெல் காற்றில் பறந்து போகும். அப்படிச் செய்ய காற்று தேவைப்படும். எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது பொருள் அல்ல.

    நாம் உயிருடன் இருக்கும் (காற்றுடன்) இருக்கும் போதே நல்ல விசயங்களைச் செய்துகொள்ள வேண்டும். இனி ஒரு பிறவி வராத அளவுக்கு நல்லதையே செய்ய வேண்டும் என்பதே இதன் சரியான பொருளாகும்.

    1. ஐயம் இட்டார் கெட்டார்

    ஐயம் என்றால் பிச்சை. ஔவையாரும் ‘ஐயம் இட்டு உண்’ என்கிறார். தர்மம் செய்தால் கெட்டுப்போவான் என்பது பொருள் அல்ல.

    தர்மம் செய்தால் யாரும் கெட்டுவிடமாட்டார்கள். மாறாக புகழோடு நன்றாக வாழ்வார்கள் என்று வலியுறுத்தும் வகையில் ஐயம் இட்டு யார் கெட்டார்; கெடமாட்டார்கள் என்பதே சரியான பொருளாகும்.

    1. காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் காக்கா பிடி

    நாம் விரும்பிய காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் காக்கா பிடி என்பது பொருள் அல்ல.

    நாம் விரும்பிய காரியத்தைச் சாதிக்க வேண்டுமெனில் கால், கையைப் பிடித்தாவது கெஞ்சி வேண்டியபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

    1. தண்ணியைச் சாப்பிடு, சாப்பாட்டைக் குடி

    தண்ணீர் குடிப்பதைக் கூட சாப்பாட்டு அளவுக்கு சாப்பிடு, சாப்பாட்டை கூழ் பதத்தில் குடி என்பது பொருள் அல்ல.

    தண்ணீரைக் கடகடவென வேகமாகக் குடிக்காமல் (வேகமாகக் குடித்தால் சில நேரங்களில் புரை ஏறிவிடும்) திடப்பொருளைப் போல் மெதுவாக, மென்று விழுங்க வேண்டும் என்றும், திட உணவைப் பற்களிலேயே நன்றாக அரைத்துக் கூழாக்கிக் குடிக்க வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

    ஏனென்றால் உமிழ்நீரில் தான் உணவைச் சீரணமாக்கும் தன்மை உள்ளது. பாதி வேலை பற்களில் முடிந்து விடுவதால் இரைப்பைக்கு, குறைவான வேலையே கொடுக்கப்படுகிறது. இது நீடித்த உடல் இயக்கத்திற்கும், நீண்டநாள் வாழ்விற்கும் வழிசெய்கிறது.

    முடிவுரை

    பழமொழிகளின் சரியான விளக்கங்களைத் தெரிந்து, பொருத்தமான பழமொழிகளைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி வாழ்வில் மேன்மை அடைவோம்.

    *****

    துணைநூற் பட்டியல்

    1. சிவபாரதி, ஆன்றோர்கள் கண்ட அறிவியல், ப்ரீமியர் பதிப்பகம்
      தஞ்சாவூர்.
    2. மெய்யப்பன், தமிழ்ப் பழமொழிகளில் அறிவியல், வானதி         பதிப்பகம், சென்னை.

     

     

     

     

     

     

     

     

    Share
  • EFFECTIVE STUDY ON TRANSFORMATION OF MODERN LIFE  IN TO BLISSFUL LIFE THROUGH YOGA

    EFFECTIVE STUDY ON TRANSFORMATION OF MODERN LIFE IN TO BLISSFUL LIFE THROUGH YOGA

    -J.S.SUBHASHINI and Dr.V.RAMADAS

     Ph.D. Research Scholar, Associate Professor

    Department of Yoga for Human Excellence, WCSC- Vision SKY Research Center, Temple of Consciousness, Aliyar, Pollachi- 642101, Tamil Nadu

     (Email ID: subhajanani2011@gmail.com, rammarine@yahoo.in)

    *****

    ABSTRACT

    “Modern life is moving faster than the speed of thoughts, or thoughtfulness” – Rebecca Solnit

                The given maxim is absolutely right because we live in a super-fast, crowded and busy period. We have been performing multiple tasks throughout our whole day for earning more money. However, we overlook that worthy well-being is much more important for our healthy life as air and water for the physique. In earlier days, life was not so hectic. It was quite humble and free. Human beings are healthy as they had to accomplish all the daily routine activities on their own. But now, in this technological world survival has become easy and comfortable but frantic because of the competitions. Nowadays, life has become costly, hard and unhealthy as everything like air, water, environment, food, etc., has become contaminated, infected and polluted. We should never forget that our healthiness is the only prosperity of our life. It is essential to earn money for fulfilling some basic needs. But it is also required to live a healthy and peaceful life which needs good well-being. Good health needs proper rest with sleep, cleanliness, healthy environment, fresh air and water, individual hygiene and daily physical activities. Maintaining good health is for better than shunting between hospitals and home. In this modern life, retaining good health is a good custom that must be practiced from childhood. Yoga is the best lifestyle modification, which aims to attain the unity of mind, body, and spirit through asanas (exercise), pranayama (breathing), and meditation. The health of people is more important for the betterment of the future world. Hence this article deals with the transformation of one’s vague modern life into blissful life through yoga.

    Key Words: Challenges of Modern Life -Yoga Practice – Good Health-Transformation – Blissful life. 

    Introduction

    Yoga is much more than contorting a human body into different poses. It’s a technique of life. If our mind, body, and soul aren’t where we want to be, yoga can help us to improve flexibility. It lows our stress and increases our confidence, contributing to a healthier lifestyle. It is the practice that leads us to combat stress, improve physical fitness and help manage chronic disorders like pain, anxiety, and insomnia.

    Most of the people know that good health is only maintained by physical fitness, but they fail to comprehend that good mental health is also equally important. Health is not simply an absence of disease; it extends beyond the physiological aptness to psychological calmness, emotional constancy, and cheerful expressions. Moreover, body, mind, and spirit are like the steering engine and gear of the car. The malfunctioning of even one can create an imbalance in our life and lead to ill health. Yoga is the simple technique of generating coherence among these three components. Yoga is an old-style discipline with roots in the Vedic insight that eradicates filths from the levels of mind. One can get spiritual elevation through the continuous practice of yoga encompassing of meditation, pranayama, diet, and asana. It also leads an individual on the path of healthy living with greater consciousness.

    Modern Life

                Modern technology is machinery oriented. It creates life easier and saves time comparing to the old fashion way. We travel in more comfort with a number of welfares. It includes easing people’s lives, saving people from the fatal endemic diseases by the new era of medicine and vaccines. On the other hand, different modern lifestyle patterns have negative effects on health physically, psychologically, and socially. One of these modern ways of living in the high consumption of fast foods with lack of physical activity. Modern lifestyle increases the risk of obesity and leading to diabetes, heart diseases cancers and so on. Another fact is the pollution caused by machines and transport causing respiratory diseases. These are the sources for creating more stress and depression. Today our health condition, fitness, and ailments are seriously influenced by our modern lifestyle. This covers many aspects of human behaviors like patterns of eating, drinking alcohol, smoking, drug intake, human reproduction, sexual behaviours, etc. The public relationships and communications are hindered by modern lifestyle. Social isolation occurs due to spending long time on computer and internet. These conflicts should be removed from human life to lead a happy life.

    Health and Wellness

                The two concepts “Health” and “Wellness” paves more to lead a better lifestyle with good excellence. Optimum “Health” includes high level mental, social, emotional, spiritual, and physical fitness within limits of one’s heredity and individual disabilities. “Wellness” is the combination of all parts of health and fitness in the form of mental, emotional, spiritual and physical that magnifies one’s potential to live and to work successfully. This makes a significant contribution to society. Regular physical activity leads to a healthy lifestyle which can ensure an improved feeling of wellness. Only healthy people make a healthy society and country.

    Healing Through Yoga

                 Human beings are the creation with three major components, body, mind and soul. These three need health, knowledge and inner peace. Healthiness is essential for physical, knowledge for psychological needs and inner peace for spiritual need. When all the three are sufficient, there is harmony.  This harmony is reached only by Yoga. Yoga is the most ancient method of art. It is practiced for uniting of body, mind, and soul. Yoga stimulates one’s mind, emotion, soul, and body to feel happy and relaxed. It gives energy, strength and perfect health too. Regular practice of yoga with Pranayama is very much beneficial in achieving a healthy body and peace of mind. Self-realization is the greatest achievement of yoga. It is attained through meditation. An individual realizes about himself and his surroundings through systematic yoga practice. It helps in widening self-confidence, awareness, consciousness, peace of mind, better health and overall well-being. In a nutshell, yoga works on every individual life to achieve a better, healthier and perfect way of life. 

    “Yoga means union – the union of body with consciousness and consciousness with the soul.
    Yoga cultivates the ways of maintaining a balanced attitude
    in day-to-day life and endows skill in the performance of one’s actions.”
    -B.K.S. Iyengar

    Yoga is a light, which once lit, will never dim.
    The better your practice, the brighter the flame
    .
                                                                                                                -B.K.S. Iyengar

    Inhale and God approaches you.
    Hold the inhalation, and God remains with you.
    Exhale and you approach God.
    Hold the exhalation, and surrender to God.
                                                                              
    -Krishnamacharya

    The above quotes given by eminent yoga experts reveal the benefits of yoga and pranayama.

    Merits of Yoga for Blissful Life

    • Expands Flexibility
    • Builds muscle forte
    • Perfects our posture
    • Protects and strengthens our bristle
    • Enhances our bone health
    • Increases our blood flow
    • Regulates all the glands
    • Helps us to focus well
    • Lowers blood sugar and blood pressure
    • Maintains our nervous system properly
    • Releases tension in our limbs
    • Helps us to have a deep sleep
    • Boosts the human immune system functionality
    • Gives peace of mind and happiness
    • Increase your self-esteem
    • Helps us to serve others

    Conclusion

                  To sum up, modern lifestyle affects our health physically, psychologically, and socially. The essence of yoga is to make our life as efficient and enjoyable as possible in all aspects. It unlocks life’s wonder and unleashes hidden energies. The miracle transformation leads towards a blissful life if the day starts with yoga. Thus, spiritual development of an individual can be attained this Vedic practice “Yoga”.

    References

    1. K.S. Iyengar, Light on Yoga, George Allen, and Unwin, 1966
    2. Gary Kraftsow, Yoga for Transformation: Ancient Teachings and Practices for Healing the Body, Mind, and Heart, 2002
    1. https://www.yogajournal.com/meditation/make-meditation-way-of-life
    2. https://www.yogajournal.com/lifestyle/count-yoga-38-ways-yoga-keeps-fit

     

    Share
  • கவிஞர் விந்தனின் படைப்புலகம் – 3

    -முனைவர் நா.பிரபு

    வாழ்க்கை வரலாற்று நூல்கள்

    எழுத்தாளர் விந்தன் அவர்கள் திரையுலக மேதைகளான எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் எம்.ஆர். இராதா ஆகியோரின் கலைப்பயண வரலாறுகளை நூலாக்கியுள்ளார். பாகவதரின் மறைவுக்குப் பின்னர் அவரது வரலாறு குறித்த தேவையான தகவல்களின் அடிப்படையில் ‘எம்.கே.டி. பாகவதர் கதை’ என்னும் நூலும் எம்.ஆர்.இராதா வாழும்போதே அவரிடம் நிகழ்த்திய உரையாடலின் மூலமாக உருவாக்கிய ‘நடிகவேள் எம்.ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்’ என்னும் நூலும் என இரண்டு நூல்களை வெவ்வேறு அடிப்படைகளில் உருவாக்கியுள்ளார்.

    பாகவதர் செவ்வியல் இசைப்பாடகராக, நாடக நடிகராக திரைப்படக் கலைஞராகப் புகழின் உச்சிக்குச் சென்றவர். இவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்டது. இந்தச் சாதனை இதற்கு முன்பும் பின்பும் நடந்ததில்லை. நல்ல உடலழகும் குரல் வளமும் பெற்றிருந்ததன் காரணமாகத் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் இவர் புகழ் பரவியிருந்தது. மலையாள மொழியிலும் இவர் குறித்த நூல்கள் வெளிவந்துள்ளன.

    எம்.ஆர்.இராதா அவர்கள் நாடகக் கலைஞராக அறிமுகமாகி திரைத்துறையில் கலகக்காரராக வலம் வந்தவர். திராவிட இயக்க உருவாக்கத்தின் கலைப்பின்னணியாகச் செயல்பட்டவர். எம்.ஆர். இராதாவின் வாழ்க்கையை அவரது சொந்தக் குரலிலேயே பதிவுசெய்துள்ளார். அவர் குறித்த அறிமுகமே இப்படித்தான் தொடங்குகின்றது.

    சக பத்திரிக்கையாளர் ஒருவர், “உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன்” என்கிறார் வினயத்துடன்.

    “என் மனைவியை எதுக்கு கூப்பிடறது? நான் மட்டும் பார்க்கத்தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லை!” என்று இராதா ‘பட்’டென்று பதிலளிக்கிறார்.

    சிறைச்சாலை அனுபவங்கள் என்று இவரது நூலுக்குத் தலைப்பினை வைத்துள்ளார் விந்தன் என்ற போதிலும் சிறைச்சாலைக்கு வெளியில் நிகழ்ந்த அவரது கலையுலக வாழ்க்கை குறித்தே இந்நூலில் மிகுதியும் உரையாடப்பட்டுள்ளது.

    இவ்விருவரது வாழ்முறையும் கலைப்பயணமும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. பாகவதர் தன்வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை ஆழமான இறை நம்பிக்கையுடன் வாழ்ந்தவர். நடிப்பிலுங்கூட அதற்கு எதிராகச் செயல்பட மறுத்தவர். அன்று திராவிடக்கட்சியின் வளர்ச்சியில் தீவிரமாக இயங்கிய அண்ணாதுரை இவருக்காக நாடகம் எழுதி நடிக்கக் கேட்டபொழுதும் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்தவர். ஆனாலும் அனைத்து அரசியல் இயக்கத்தவர்களுடன் நட்புமுறையில் பழகியவர்.

    நாடக வரலாற்றையும் சினிமா வரலாற்றையும் மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை இவ்விரு நூல்களும் முன்வைக்கின்றன. தமிழ் நாடகத்தின் தந்தை என்று சங்கரதாஸ் சுவாமிகளையும், பம்பல் சம்பந்த முதலியாரையும் குறிப்பிடும் வழக்கம் நாடக வரலாறுகளில் தொடர்கிறது. அவர்களின் பங்களிப்பினை மறுக்க இயலாதென்றாலும், இத்தகைய வரலாற்று கட்டுமானங்கள் பிற கலைஞர்களை நிராகரிக்க அல்லது மறக்கச் செய்துவிடுகிறது. இதிலிருந்து கலைஞர்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. ஜகந்நாத அய்யரின் நாடகக் கம்பெனியில் இருந்த ராதாவின் அனுபவங்களைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கும் போது, சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி விந்தன் கேட்கிறார். அதற்கு,

    “சங்கரதாஸ் சுவாமிகள் வருவார்; இருப்பார். குடித்துவிட்டு ஆடினால் ‘இது நமக்குப் பிடிக்காது; நீ போய்விட்டு வா!’ என்று அய்யர் அவரை வெளியே அனுப்பிவிடுவார்.”

    “அவரை இன்று சிலர் நாடக உலகத் தந்தை என்று சொல்கிறார்களே?”

    அதை நான் ஒப்புக்கொள்ளமட்டேன். அவர் நல்ல நாடகாசிரியர்; பாடலாசிரியர். எழுத ஆரம்பித்தால் தங்குதடையில்லாமல் எழுதுவார்….. அதெல்லாம் சரி. ஆனா இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்ட புராண இதிகாச நாடகங்களுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர நாடக உலகத்துக்கு ஒரு நாளும் தந்தையாயிருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர் ஜகந்நாதய்யராகத்தான் இருக்க முடியும். ஏன்னா இன்னிக்கு இருக்கிற அத்தனை கலைஞர்களும் அவருடைய வழி வழியா வந்த கலைஞர்களே. இதை யாராலும் மறுக்க முடியாது” (நடிகவேள் எம்.ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், ப:22) என எம்.ஆர்.ராதா கூறியதாகப் பதிவுசெய்துள்ளார்.

    இதே போன்று பாகவதர் வரலாற்றில் கதை-வசனம் எழுதுவதில் சிறந்து விளங்கிய இளங்கோவன் குறித்து எழுதும்போது,

    “இவர் உண்மையிலேயே அந்தத் துறைக்கு வேண்டிய தகுதியும் திறமையும் உடையவர். அத்துடன் இப்போது யாரோ வசனத்தில் ‘புரட்சி’ செய்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்களே, அந்தப் புரட்சியைக் கண்ணகி படத்தின் மூலம் எப்போதோ மெளனமாகச் செய்துவிட்டு, இன்றும் அதை வெளியே சொல்லாமல் மெளனமாக இருந்துகொண்டிருப்பவர். (எம்.கே.டி. பாகவதர் கதை, ப. 178) எனவும் எழுதியுள்ளார். இவ்விரு ஆளுமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளது உள்ளபடியேயும், எவருக்கும் அஞ்சாமலும் விந்தன் அவர்கள் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    குட்டிக் கதைகள்

    ‘விந்தன் குட்டிக் கதைகள்’ என்னும் தொகுப்பில் விந்தன் எழுதிய குட்டிக் கதைகள், மகிழம்பூ ஆகிய இரு நூல்கள் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ளன.

    பிற உயிரினங்களிலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டக்கூடியது ஆறாம் அறிவான பகுத்தறிவு என்று சொல்கிறோம். ஆனால் அந்தப் பகுத்தறிவால்தான் மனித சமூகத்தில் தன் தேவையை மீறிய ஆசை, அதன் காரணமாகப் பிறரை ஏய்த்துப் பிழைத்தல், சமூக ஏற்றத் தாழ்வுகள் முதலானவை உருவாயின. எனவேதான் சிங்கத்துக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடலில் மனிதனின் ஆறாவது அறிவான பகுத்தறிவு மனிதனுக்கு வழங்கப்பட்ட சாபம் என்று கடவுளை விந்தன் கூற வைக்கிறார்.

    ‘ஆறாவது’ என்னும் கதையில் சிங்கத்துக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடல் பின்வருமாறு தொடர்கிறது.

    “எங்களுக்கில்லாத பகுத்தறிவை நீங்கள் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத்தான் அவன் ‘ஆறாவது அறிவு’ என்கிறான்!” என்றது சிங்கம்.

    “நாசமாய்ப் போச்சு; அவனுக்கு நான் கொடுத்த சாபமல்லவா அது?”

    “சாபமா!”

    “சந்தேகமென்ன? எதையும் அறிய முயல்வதும், அறிந்தாலும் அதை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் நான் அவனுக்குக் கொடுத்த சாபம்தான்” என்றார் கடவுள் (விந்தன், ப. 13)

    விந்தன் கூறுவது எவ்வளவு உண்மை. இனிப்பு சாப்பிடுவது தனக்குக் கேடு விளைவிக்கும் என்பது ஒரு சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும்; குடிப்பது உடல் நலத்திற்குக் கேடானது என்று குடிகாரர்களுக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அறிந்ததை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் பகுத்தறிவுடைய மனிதனுக்கு நடக்கின்றதே!

    மாடுகளைச் சந்தையில் பிறருக்கு விற்பதும், அவ்வாறு விற்கப்பட்ட மாடுகள் பழைய உரிமையாளரின் வீடு தேடி வருவதும் இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வுதான். பணத்திற்காகப் பாசத்தை மறக்கும் மனித இனத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்ட ‘மாடும் மனிதனும்’ என்னும் கதையின் மூலமாக விந்தன் இந்நிகழ்வைப் பயன்படுத்துகிறார்.

    ‘ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகத் தன்னை விற்றவனைத் தேடிக்கொண்டு வந்தது மாடு. வாங்கினவனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை; “இனிமேல் இங்கு வருவாயா, இனிமேல் இங்கு வருவாயா, இனிமேல் இங்கு வருவாயா?” என்று அதை ‘வாங்கு வாங்கு’ என்று வாங்கிவிட்டான்.

    வீறிட்டலறிய மாட்டை நோக்கி அதனுடன் வசித்த ஆடு கேட்டது:

    “விற்றவன் உன்னை அன்றே மறந்துவிட்டது போல நீயும் அவனை மறந்துவிட்டிருந்தால் இந்தக் கதிக்கு ஆளாகி இருக்கமாட்டாயல்லவா?”

    கண்ணீரும் கம்பலையுமாக மாடு சொல்லிற்று:

    “அது எப்படி முடியும்? நான் மனிதனாகப் பிறக்காமல் மாடாக அல்லவா பிறந்துவிட்டேன்?”

    தன்னிடம் பாசமுடன் வளர்ந்த ஓர் உயிரை விட வெறும் காகிதமான பணம் மனிதனுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் மாட்டுக்கு எத்தனை அடி வாங்கினாலும் தன்னை வளர்த்தவர் மீதான பாசமே பெரிதெனக் காட்டுகிறார்.

    இரவில் வீட்டுக்குக் கடைசியாக வந்த வீட்டுக்காரர் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்கிறார். இதைப் பார்த்த ஜன்னல் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறது. ஏன் என்று கதவு கேட்க, மனிதனைக் காற்றில் வாழவைத்ததற்காக. இல்லையென்றால் உன்னைச் சாத்திவிட்டுச் சென்றதுபோல் என்னையும் சாத்திவிட்டுச் சென்றிருப்பார் அல்லவா? என்று ஜன்னல் சொன்னது.

    இதைக் கேட்டதும் “அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்?” என்ற அலுப்பும் சலிப்புமாக ஆரம்பித்த கதவு, திடீரென்று தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, “உன்னிடம் நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்றது ஜன்னலிடம்.

    “சொல்லு?” என்றது ஜன்னல்.

    “இப்போதெல்லாம் மனிதன் தன்னைப்போல் மனிதனை நம்புவதில்லை; என்னைப்போன்ற கதவைத் தான் நம்புகிறான்!” என்றது கதவு. இவ்வாறு மனிதச் சமூகம் தன் சக மனிதனை நம்பாமல் உயிரற்றப் பொருட்களான கதவு, ஜன்னல், பூட்டை நம்பும் நிலைக்கு வந்ததனை ‘கதவும் மனிதனும்’ என்னும் கதையில் விந்தன் ஏளனத்துடன் பதிவு செய்கிறார்.

    எளியவரிடம் மட்டுமே தம் வீரத்தைக் காட்டி, வலியவரிடம் வளைந்து குழையும் பெரும்பான்மையான மனிதர்களின் மனநிலையை விந்தன் அவர்கள் ‘வீரம்’ என்னும் கதையில் கட்டைவண்டி, மகிழ்வுந்து (கார்), ரயில் ஆகியவற்றைக் கொண்டு சித்தரிக்கிறார். மெதுவாக அசைந்து சென்றுகொண்டிருக்கிறது ஒரு மாட்டுவண்டி. அதன் பின்னால் வந்த மகிழ்வுந்து ஒன்று “ஏய், சனியனே! ஒதுங்கிப் போ! என்று மிரட்டி விரட்டிற்று.

    “மரியாதைக் குறைவாகப் பேசாதே! என்ன இருந்தாலும் உனக்கு நான் மூத்தவன் என்பதை மறந்து விடாதே!” என்றது மாட்டுவண்டி.

    “மூத்தவனாவது, கீத்தவனாவது! யாராயிருந்தாலும் என்னைக் கண்டதும் ஒதுங்கி வழி விட்டால்தான் ஆச்சு; இல்லாவிட்டால் அவர்களை நான் மோதி மிதித்து விடுவேனாக்கும்!” என்று கார் உறுமிற்று.

    “ஐயோ வேண்டாம் அப்பனே! இதோ நான் ஒதுங்கி விடுகிறேன்; நீ போ, கன ஜோராகப் போ!” என்று ஒதுங்கி வழி விட்டுவிட்டது மாட்டுவண்டி.

    அது சொன்னபடியே கன ஜோராகப் போன காரை “எங்கே, என்னை மோதி மிதித்து விடு பார்ப்போம்?” என்பதுபோல் ஒரு ரயில்வே கேட் தடுத்து நிறுத்தியது.

    வேறு வழியில்லாமல் நின்ற காரை நெருங்கி, “அந்த ரயில் மட்டும் உன்னைக் கண்டதும் ஏன் அப்பா ஒதுங்கி வழி விடவில்லை?” என்று மாட்டு வண்டி கேட்டது.

    கார் வாயைத் திறக்கவில்லை!’

    தமக்குக் கிடைக்கும் சில சலுகைகளுக்காக அடிமை வாழ்வில் சுகம் காண்பவர்களை எள்ளி நகையாடும் விதத்தில் ‘சுதந்திரம்’ என்னும் கதையை விந்தன் எழுதியுள்ளார். இக்கதையில் நாயொன்று கட்டப்பட்டிருக்கிறது. அதன் எதிரே கிளி ஒன்று கூண்டில் அடைபட்டிருக்கிறது. இரண்டுமே சுதந்திர வாழ்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. அப்பொழுது அவ்வழியாக வந்த குரங்கொன்று அவை இரண்டையும் விடுவிக்கின்றது. இரண்டுமே விடுதலை கிடைத்த மகிழ்ச்சியோடு வெளியேறுகின்றன.

    ‘சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தன்னால் விடுதலை செய்யப்பட்ட கிளியைச் சந்தித்த குரங்கு, “எப்படி இருக்கிறது, விடுதலை?” என்று கேட்டது.

    “ஆனந்தம், பரமானந்தம்!” என்றது கிளி, கன குஷியுடன்.

    ‘மகிழ்ச்சி!” என்ற குரங்கு அதனுடன் விடுதலை செய்யப்பட்ட நாயை நோக்கி, “எப்படி இருக்கிறது, சுதந்திரம்?” என்று கேட்டது.

    “சுத்த மோசம்! காலையில் பால், மத்தியானம் இறைச்சி, மாலையில் பிஸ்கெட், இரவு மறுபடியும் பால் – இதெல்லாம் இந்தச் சுதந்திர வாழ்வில் எங்கே கிடைக்கிறது? ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாலும் ஒரு கவளம் எச்சில் சோற்றுக்கு ஓராயிரம் நாய்களுடன் போட்டியல்லவா போட வேண்டியிருக்கிறது? என்றது நாய், வெறுப்புடன்.”

    அடிமை வாழ்வை நினைத்து ஏங்கும் நாயை நினைத்து “சுதந்திரத்தில் கூட எல்லோருக்கும் சுகம் கிட்டி விடாது போலும்?” என்று குரங்கு சொல்லிற்று என உலக நடப்பியலைப் பதிவு செய்கிறார்.

    நன்றி மறக்கும் தன்மைக்கு குளத்துப் பறவைகளைச் சான்றாகக் காட்டுவர். இதனை வேறொரு கோணத்தில் ‘ஆலமரம்’ என்னும் கதையில் விந்தன் பார்க்கிறார். ஆலமரம் துளிர்த்துப் பூத்துக் குலுங்கும் காலத்தில் பறவைகள் அங்கேயே தங்கி உண்டு மகிழ்ந்தன. மரம் வாடியதும் பறவைகள் இரை தேடி வேறிடத்துக்குப் பறந்தன. அப்போது அருகிலிருந்த அரசமரம் “என்ன நன்றி கெட்ட பறவைகள் அவைகள்! எல்லாம் இருக்கும் வரைதான் அவற்றின் உறவுபோலும்?” என்றது ஆலமரத்திடம். ஆலமரம் சிரித்துச் சொல்லிற்று: “உனக்கும் எனக்கும் உள்ள இடத்திலேயே உணவு கிடைப்பதுபோல் அவற்றுக்கும் கிடைத்தால், அவையும் நன்றியுள்ள ஜீவன்களாய்த்தான் இருக்கும்!”

    மனிதன் வாழும் சூழல், அவனது பொருளாதார நிலைமை, அவனுக்குக் கிடைக்கும் கல்வி போன்ற பல காரணங்கள் ஒரு மனிதனின் குணத்தை, நடத்தையை நிர்ணயிக்கிறது. மனித இனத்தில் சிலர் கொலைகாரர்களாய், போக்கிரிகளாய், விபசாரிகளாய் வாழ்வதற்கு அவர்களின் சூழலும் தேவையுமே காரணம். அவர்களின் பொருளாதாரத் தேவைகள் உயர் வகுப்பினர்போல் நிறைவடைந்தால் அவர்கள் இவ்வாறு இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை ‘ஆலமரம்’ என்னும் கதை உணர்த்துகிறது.

    ஒரு மனிதன் வாழ இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் தூக்கிட்டுக் கொள்கிறான். இதைப் பார்த்த பறவைக் குஞ்சு தனது தாயிடம், “அதெல்லாம் நமக்குக் கிடைக்கும்போது அவனுக்கு மட்டும் ஏன் அம்மா கிடைக்கவில்லை?”

    தாய்ப்பறவை சொல்லிற்று:

    “அவன் அடைந்த நாகரிகம் அப்படி! அவனும் நம்மைப் போல் இந்த உலகத்தில் எதற்கும் உரிமை கொண்டாடாமல் வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனுக்கும் நமக்குக் கிடைப்பதுபோல் எல்லாம் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. அவன் எப்போது இது உன்னுடையது, அது என்னுடையது என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தானோ, அப்போதே அவனுக்கு இங்கே எதுவுமே உரிமையில்லாமல் போய்விட்டது!”.

    மனிதச் சமுதாயம் தனது புராதனப் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பை மறந்து ‘நாகரிகம்’ பெற்ற தனியுடைமைச் சமுதாயமாக மாறியதுதான் சமூகம் அனுபவிக்கும் பெரும்பாலான இன்னல்களுக்குக் காரணம் என்பதை ‘நாகரிகம்’ என்னும் இக்கதையில் விந்தன் உணர்த்துகிறார். தனக்கென்று ஒரு காணி நிலம் இருந்தால் கஞ்சிக்கு ஏன் அலையப் போகிறேன் என்று பலர் பெருமூச்சு விடுவதைப் பார்த்த மண் தன்னையொத்த இயற்கைப் பொருட்களான நெருப்பு, காற்று, நீர், வான் ஆகியவற்றை நோக்கி,

    “நீ எல்லோருக்கும் சொந்தமாயிருக்கிறாயே, நான் ஏன் சிலருக்கு மட்டும் சொந்தமாயிருக்கிறேன்?” என்று கேட்டது.

    அதற்குப் “போடி பைத்தியமே! உன்னிடம் இருக்கும் பொன்னை நீ ஏன் மனிதனுக்குக் காட்டினாய்? அதனால் தான் எங்களைப்போல் உன்னால் எல்லோருக்கும் சொந்தமாயிருக்க முடியவில்லை!” என்றது வானம்.

    இக்கதையின் மூலம் மனித சமூகம் பொருளாசையால், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் மனிதத்தன்மை இழந்து நிற்பதை விந்தன் உணர்த்துகிறார்.

    விந்தன் கடவுள் நம்பிக்கை கொண்டவரா? கடவுள் நம்பிக்கை அற்றவரா? என்பதை ‘விந்தன் குட்டிக்கதைகள்’ என்னும் நூலின் அடிப்படையில் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ‘தன்னம்பிக்கை’ என்னும் கதையில் நாட்டுப் பசுவொன்று குளத்தங்கரையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த புலி நாக்கைச் சப்புக் கொட்டிற்று. இதைக் கண்ட பசு “ஏ! அறியாமை நிறைந்த புலியே! நீயும் நானும் ராம ராஜ்ஜியத்தில் எப்படி ஒற்றுமையாய் இருந்தோம் தெரியுமா?” என்று பல்வேறு சான்றுகள் மூலம் ஆராய்ச்சி பூர்வமாகப் வலியுறுத்திக் கூறியது. புலியோ அதன் கூற்றை எள்ளல் செய்து அதனைக் கொன்று தின்ன வருகிறது. இதனைக் கண்ட பசு, “அட ராமா, உன்னை நம்பிய எனக்கா இந்தக் கதி?” என்று புலம்பிற்று பசு.

    “உனக்கென்ன, தன்னை நம்பாத எவனுக்குமே இந்தக் கதைதான்! – நீ மட்டும் அவனை (ஆண்டவன்) நம்பாமல் உன்னையும் உன் கொம்புகளையும் நம்பியிருந்தால் இந்நேரம் என்னை விரட்டியிருக்கலாமே!” என்று அதன்மேல் பாய்ந்துவிட்டது புலி.

    இக்கதையின் அடிப்படையில் விந்தன் அவர்களைக் கடவுள் நம்பிக்கை அற்றவராக மதிப்பிடலாம். ஆனால் அவர் ‘புதிய புராணம்’ என்னும் கதையை நாராயணனுக்கும் நாரதருக்குமான உரையாடலாய் எழுதுகிறார். இக்கதையில் நாரதர் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காக நாராயணனிடம் செல்கிறார். நாரதர் ‘ஏழைகளுக்கு வீடு கட்டித் தருபவர்கள் பெயர் நிலைத்து நிற்குமா? அல்லது தங்களுக்கு கோவில் கட்டித் தருபவர்களின் பெயர் நிலைத்து நிற்குமா?’ என்று தன் சந்தேகத்தை நாராயணனிடம் முன்வைக்கிறார்.

    நாராயணன், ‘எவனொருவன் இயற்கையின் உபாதைகளுக்கு அடிக்கடி ஆளாகும் ஏழைகளின் குடிசைகளை அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக ஏற்றமிகு மாளிகைகளைக் கட்டித் தருகிறானோ, அவன் பூதவுடலை நீத்ததும் என்னை வந்து அடைந்துவிடுகிறான். எல்லாம் வல்ல எனக்காகக் கோயில் கட்டுபவன் எனை வந்து ஒரு நாளும் அடைவதில்லை; என்னுள் ஐக்கியமாவதும் இல்லை. இதனால் ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களைச் சிரிக்க வைப்பவனின் பெயர் மண்ணுலகில் மறைகிறது; விண்ணுலகில் நிலைக்கிறது. எனக்குக் கோயில் கட்டித் தருபவனின் பெயரோ மண்ணுலகில் நிலைக்கிறது; விண்ணுலகில் மறைகிறது. – இதுதான் உண்மை என்றார் நாராயணன். இவ்வாறு இருவேறு தளங்களில் விந்தன் பயணித்திருப்பினும் பெரும்பான்மை அவர் மனிதத்தையே முன்னெடுத்துள்ளார்.

    சாதிய முரண்பாடு, வர்க்க முரண்பாடு குறித்துத் தெளிவான சிந்தனையைக் கொண்டிருக்கும் ஆண் மனதும் கூட ஒடுக்கப்பட்ட பாலினமான பெண்கள் குறித்துத் தன் நனவிலி மனத்தில் கேலியையும் கிண்டலையும் புதைத்து வைத்துள்ளது. ‘மாட்டுத் தொழுவம்’ என்னும் தன் சிறுகதையில் பெண்ணினம் இந்தச் சமூகத்தில் மாட்டைவிடக் கேவலமாக நடத்தப்படுவதனை நேர்த்தியாகப் பதிவு செய்தவர் விந்தன். அவரே கூட தனது குட்டிக் கதைகளில் பெண்களை ஏளனத்துக்கு உள்ளாக்குகிறார். ‘பெண்ணின் பெருமை’ என்னும் கதையில் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையைக் கண்டு பூரிக்கிறாள் எஜமானி. அதற்கு விந்தன் ‘அடடா! என்ன சந்தோசம், என்ன சந்தோசம்! தன் சொந்த புத்திக்கு வேலை கொடுக்காதவர் யாராயிருந்தாலும் இந்தப் பெண்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது!’ என்று கூறுகிறார். ‘கடமை’ என்னும் கதையில் பரிசு கொடுத்தால்தான் பெண்கள் புன்னகை பூப்பர் என்று எள்ளல் செய்கிறார். ‘முடியவில்லை’ என்னும் கதையில் குடும்பத் தலைவர் ஒருவர் பொங்கலையொட்டி பழைய சாமான்களை எல்லாம் அகற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது வந்த அவரது நண்பர், “வேலை முடிந்துவிட்டது போலிருக்கிறது; வேண்டாத சாமான்களையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து விட்டீர்கள் போலிருக்கிறது!” என்று கூறிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார்.

    “ஆமா; இன்னும் ஒரே ஒரு சாமான்தான் பாக்கியிருக்கிறது. அதை எடுத்து வெளியே எறிய என்னால் முடியவில்லை!” என்றார் கிரகஸ்தர்.

    “அது என்ன அப்படிப்பட்ட சாமான்?” என்று நண்பர் நெருங்கி ஆவலுடன் கேட்டார். “வேறு என்னவாயிருக்க முடியும்? என் மனைவிதான்!’ என்றார் கிரகஸ்தர் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே.

    அவ்வளவுதான்; “எங்கே அப்பளக் குழவி?” என்று உள்ளே யாரோ உறுமும் சத்தம் கேட்டது. வந்தவர் எழுந்து பிடித்தார் ஓட்டம்!’ இக்கதை விந்தனுடைய எழுத்துகளைப் போல் அல்லாமல் வெகுசனப் பத்திரிக்கைகளில் வரும் நகைச்சுவைத் துணுக்கைப் போல இருக்கிறது. வெகுசனப் பத்திரிகையின் தேவைக்கு இம்மாதிரியான தீனியை விந்தன் போன்றவர்களும் போடவேண்டிய சூழல் நெருக்கடி நிலவியது போலும்.

    இந்த உலகத்தில் தன்னால் முடியாத காரியம் என்று எதுவுமில்லை என்று கர்வம் கொண்டிருக்கிறான் ஒரு விஞ்ஞானி. ஒரு முதியவர் அவனிடம் ரோஜா மொட்டு ஒன்றைக் கொடுத்து மலரவைக்கச் சொல்கிறார். அவனும் அன்று முழுவதும் தன் ஆய்வுக் கூடத்தில் இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். மறுநாள் காலை இயற்கையாக செடியிலிருந்த ரோஜா மொட்டுக்கள் தானாக மலர்ந்து மணம் வீசின. மணம் வந்த திசையை நோக்கித் திரும்பிய விஞ்ஞானி “இத்தனை மொட்டுக்களையும் இவ்வளவு அழகாக இவற்றுக்கு அருகில்கூட வராமல் மலர வைத்தது யார்?” என்றான் வியப்புடன். முதியவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். இப்படித்தான் மனிதர்கள் அறிவியலில் வளர்கிறேன், நாகரிகம் அடைகிறேன் என்று இறுதியில் இயற்கைக்கும் தனக்குமான சங்கிலியை அறுத்துவிடுகின்றனர். நிலநடுக்கத்தையும், ஆழிப்பேரலையையும் நாயாலும் யானையாலும் உணர முடிகிறது; மனிதனால் முடியவில்லை. இயற்கைக்கும் செயற்கைக்குமான போட்டியில் எவ்வளவு முயன்றாலும் மனிதனால் இயற்கையை வெற்றிக் கொள்ள முடிவதில்லை என்பதை இக்கதையில் உணர்த்துகிறார்.

    விந்தன் எழுதிய ‘செந்தமிழ் நாட்டிலே’ என்னும் கதை வாழும்போது எழுத்தாளனைக் கண்டுகொள்ளாத சமூகம் அவன் இறந்த பின்பு அவனையும் அவன் எழுத்துகளையும் கொண்டாடுவது குறித்த எள்ளலே. வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் கொள்கைக்காகத் தனது எழுத்துப் பணியைக் கடும் வறுமையிலும் தொடர்கிறார் எழுத்தாளர் சதானந்தம். அவரின் எழுத்தைத் கொண்டாடவோ அவருக்கு உதவி செய்யவோ யாருமில்லை. அவர் சூரிய கிரகணத்தன்று கடலில் மூழ்கி இறந்துவிட்டார் என்று தெரிந்தும் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்; ரசிகர்கள் உதவித்தொகைத் திரட்டி அவரது குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கின்றனர். பத்திரிகையாளர்கள் அவரது சந்ததியார்களைப் பற்றி எழுதிப் பணம் சேர்க்கின்றனர். ஆனால் பிறரை இறந்த பிறகும் வாழவைக்கும் சதானந்தமோ இறக்கவில்லை; அவர் தமிழ் நாட்டில் பிழைக்க முடியாமல் வட நாட்டுக்குச் சென்று இந்தியில் நாவல் எழுதுகிறார்; அது மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வருகிறது. இவ்வாறு ஒரு எழுத்தாளரின் வாழ்வையும் வலிகளையும் எள்ளலுடன் தம் கதையில் பதிவு செய்தவர் விந்தன். அதேபோல் மற்றொரு கதையான ‘சமதர்மம்’ என்னும் கதையில், கடைத்தெருவைக் கூட்டம் வந்து மொய்க்கும் நேரம். தன் கடையிலிருந்த பழங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து வைத்துக் கொண்டிருந்தான் கடைக்காரன்.

    புது மெருகு ஏற்றப்பட்ட ஆரஞ்சுப் பழம் ஆற்றாமையுடன் பொருமிற்று.

    “நம்மையெல்லாம் துடைத்து வைப்பதோடு சரி; அந்த ஆப்பிள் பழத்துக்கு மட்டும்…..”

    “என்னவாம்?” என்று இடைமறித்துக் கேட்டது திராட்சை.

    “வெள்ளைக்கலை உடுத்தி, வெள்ளைப் பணி பூண்டு, வெள்ளை அரியாசனத்தில் ஏற்றி……”

    ‘ஓ’ அதைச் சுற்றி வைத்திருக்கும் அந்த மெல்லிய வெள்ளைக் காகிதத்தைச் சொல்கிறாயா? ஆமாம்! ஆமாம்!, அதற்கு எப்போதுமே ஒரு தனி அலங்காரம்தான்! என்று அது சொன்னதைத் திராட்சை ஆமோதித்தது.

    “ஏன், இருக்கக் கூடாதா? அது உன்னைப்போல் கன்னங் கரேலென்றா இருக்கிறது? எப்போதுமே அது தன் அழகிலும் தனி, மதிப்பிலும் தனி! என்றது அன்னாசி. மாதுளை திரும்பி, “யாரது, பைன் ஆப்பிள் சாரா? யு ஆர் கரெக்ட்! முள்ளம்பன்றி போல் இருக்கும் உமக்குச் சாதாரண பன்றிபோல் இருக்கும் ஆப்பிள் தன் அழகிலும் தனியாய்த்தான் தெரியும்! மதிப்பிலும் தனியாய்த்தான் தெரியும்” என்றது எரிச்சலுடன்.

    அப்போது அழுகிப்போன ஆரஞ்சுப்பழம் ஒன்றோடு, கன்றிப்போன ஆப்பிள் பழம் ஒன்றையும் எடுத்துக் கடைக்காரன் குப்பைத் தொட்டியில் விட்டெறிய, “வாழ்க, சமதர்மம்!” என்றது வாழைப்பழம்.

    “ஸ்…. பேசாதே! மனிதர்களுக்குச் சமதர்மம் சுடுகாட்டில் கிட்டுவதுபோல், நமக்குக் குப்பைத் தொட்டியிலாவது கிட்டட்டும்!” என்று சொல்லி அதன் வாயை அடக்கிற்று திராட்சை” என்று இவ்வுலகின் சமதர்ம நிலையினை காட்டுகிறார்.

    ‘புகழரசி’ என்னும் குட்டிக் கதையிலும் எழுத்தாளரின் வாழ்வே மையம். காலதேவனுக்கும் புகழரசிக்கும் இடையிலான உரையாடலாக இக்கதையை விந்தன் அமைத்துள்ளார். இந்தத் தொகுப்பில் இருக்கக் கூடிய கதைகளிலே அதிகப் பக்கங்களைக் கொண்ட கதையும் இதுதான். எழுத்தாளர்கள் வாழும்போதே புகழ் அவர்களை ஏன் அடையவில்லை என்று காலதேவன் கேட்பதே இக்கதையின் மையம். இதற்குக் “கலைஞன் உயிரோடிருக்கும்போது அவனுடைய குற்றங்கள் பெரிதாகவும் கலைத்திறன் சிறிதாகவும் ஜனங்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே, என்னுடைய அருள் ஒரு கலைஞனுக்கு அவனுடைய ஜீவிய காலத்தில் நியாயமாகக் கிடைத்தாலும், ஏதோ காரியார்த்தமாக நாலுபேர் சேர்ந்துகொண்டு அவனைத் தூக்கி விடுவதாக ஜனங்கள் புறம் பேசுகிறார்கள். அசூயையும் பொறாமையும் சேர்ந்து அவர்களுடைய உள்ளத்தை அவ்வாறு மாசுபடுத்தி விடுகின்றன!” என்று புகழரசி பதில் கூறுகிறாள். விந்தனின் இவ்விரண்டு கதைகளும் அவர் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை போலவே உள்ளன; வாழும்போது பாட்டாளியாய் வாழ்ந்து பாட்டாளிகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவுமே வாழ்ந்தவர்; அவர் இறந்தபிறகு தன் எழுத்துகளால் பிறரை வாழவைக்கிறார். 

    துணைநின்ற நூல்கள்

    • அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
    • அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
    • பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
    • பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
    • பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
    • வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
    • விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
    • விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
    • ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030

    இதழ்கள்

    • குங்குமம், மார்ச்-1994
    • தினமணி, வெள்ளிமணி,10.1987
    • மனிதன்,08.1954

    ***** 

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
    சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
    திருவண்ணாமலை 606603
    கைப்பேசி: 9786863839
    மின்னஞ்சல்: drnprabu@gmail.com

     

    Share
  • கவிஞர் விந்தனின் படைப்புலகம் – 2

    -முனைவர் நா.பிரபு

    சிறுகதைகள்

    தமிழ் அறிவுச் சமூக மரபில்  விந்தன் எழுதத் தொடங்கிய காலம், படித்த மேல்தட்டு வர்க்கத்தினருக்கே எழுத்தும் இதழ்களும் சொந்தம் என்று எண்ணிய சூழல் நிலவிய காலமாகும். அத்தகைய சூழலில் எழுதிய விந்தனின் சிறுகதைகளைப் பற்றி “ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சிறிய கதைகளும் பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு சாதியரைப் பற்றியே வந்துகொண்டிருந்தன. எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தபடியால் அந்தச் சாதியினரைப் பற்றியே கதைகள் எழுதப்பட்டன. அந்தக் கதைகளில் கையாளப்பட்ட தமிழ்நடை, பிராமணக் குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது. பிராமண எழுத்தாளர் கஷ்டப்பட்டு வேறு சாதியினரைப் பற்றிக் கதை எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை, உடை, பாவனைகள் அவ்வளவு சரியாக இருப்பதில்லை. இந்தச் சமயத்தில் நவயுக புதுமலர்ச்சி எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ருஷ்யக் கதைகளையும் மற்ற மேனாட்டுக் கதைகளையும் படித்தார்கள். அந்தக் கதைகளைப் போல் இந்த நாட்டு ஏழை எளியவர்களையும் உழைப்பாளி மக்களையும் பற்றிய கதைகள் எழுதத் தொடங்கினார்கள். விந்தன், உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகளின் சுக துக்கங்களை இதயம் ஒன்றி அனுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர். அந்த உணர்ச்சிகளை இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் பலவற்றின் மூலம் அவர் திறம்பட எழுதியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணி தூக்கம் இல்லாமல் தவிக்க நேரும்” (முல்லைக் கொடியாள், முன்னுரை) என்று கல்கி அவர்கள் கூறுமளவிற்கு விந்தனின் சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தை உருக்குவன.

    மேலும், சமுதாய விரோதி என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள தேற்றுவார் யார்? என்னும் சிறுகதையைப்பற்றி கி.சந்திரசேகரன் அவர்கள் “முகத்தைச் சுளிக்காது எதிர் கொண்டழைக்கத் தகுந்தவைகளில் விந்தன் தரும் புத்தகம் சேர்க்கப்பட வேண்டியதே. ஆழ்ந்த மனச்சூழல்களில் நம்மைச் செருகும் தன்மை பெற்றவை. இங்குள்ள கதைகளில் சில ஒரு முறைக்கு இருமுறையாக அவற்றின் கருத்து நம்மை துழாவ வைப்பதற்குக் காரணம் அதுவே. அபிப்பிராயத்தின் தொனி விஷேசம் சில சமயம் நம் உள்ளங்களைத் தொட்டுவிடுகிறது. சில வேளைகளில் உலுக்கியும் விடுகிறது. இதற்குச் சான்று தேற்றுவார் யார்? என்ற சிறுகதை” (சமுதாய விரோதி, முன்னுரை) எனக் கூறுகிறார்.

    ஏழையின் குற்றம் என்னும் கதையில் வரும் செட்டியார், தன் வேலைக்காரனான சின்னசாமிக்கு தரும் இன்னல்களை விந்தன் இவ்வாறு பதிவு செய்கின்றார். “வழக்கம்போல் அன்று இரவு பத்து மணிக்குப் பிறகு நான் போயிட்டு வரேனுங்க! என்றான் சின்னசாமி.

    ”என்னடா இவ்வளவு சீக்கிரம்! என்று கேட்டார் செட்டியார்.

    இனிமேதான் என் கூலியை எடுத்துக்கிட்டுப் போய் ஏதாச்சும் வாங்கிக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கணும். அவ வேற காத்துக்கிட்டுக் கிடப்பா. குழந்தைகள் வேற அழுதுக்கிட்டு இருக்கும்.

    அதற்கு நீ வேலை பார்க்கக் கூடாது. வீட்டிலேயே அடைந்து கிடக்கணும்.

    கோவிச்சுக்காதீங்க சாமி இன்னும் ஏதாச்சும் வேலையிருந்தா சொல்லுங்க செஞ்சிட்டு போறேன்.

    சரிதான் இந்த அரிசி மூட்டையை எடுத்துக்கிட்டுப்போய் நம் வீட்டுலே போட்டுவிட்டுப் போடா! என்று சொல்லி அன்றைய கூலி ஆறணாவை எடுத்து அவனிடம் கொடுத்தார் செட்டியார்.

    இப்படிக் கூலி கொடுக்கும்போதெல்லாம் செட்டியார் தினசரி தம் வீட்டு வேலை ஏதாவது ஒன்றைச் சின்னசாமிக்கு இடுவது வழக்கம். இந்த வேலைக்குக் கூலி கிடையாது. கூலி கொடுக்கும் வேலைக்கு இவையெல்லாம் கொசுறு வேலைகள்.

    சின்னசாமிக்குச் செட்டியார் இப்படி எத்தனையோ கொடுமைகளை கொடுத்தபோதிலும் அவன் அவர்முன் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசியதில்லை” எனக் காட்டுகிறார். இந்நூலுக்கு மு.வ. அவர்கள் “விந்தன் எய்யும் சொல்லம்புகள் குறி தவறாமல் பாய்கின்றன. சமூகத்தை அவர் சிற்சில இடங்களில்தான் நேராகத் தாக்குகிறார். பல இடங்களில் அவர் அம்பு தொடுப்பதே இல்லை. இன்றிருக்கும் நிலைமையை எடுத்துக்காட்டி பேசாமல் கதை சொல்கிறார். அவர் படைக்கும் பாத்திரங்கள் பெரும்பாலும் அப்பாவிகளே. அவர்களுக்குச் சமூகத்தின்மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதேயில்லை. ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது; ஆத்திரம் பொங்குகிறது.

    விந்தன் நோக்கம் என்ன என்பதை அவருடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்திலிருந்தும் இலக்கிய நோக்கிலிருந்தும் நாம் கண்டுகொள்ள முடிகிறது. வாழ்வின் கசப்பான அனுபவங்களை முழுவதுமாகப் பெற்றவர் என்ற காரணத்தினால் அவர் வாழ்வு நோக்கு என்பது மிகத் தெளிவாக உருவாகியுள்ளது. அவர் சாதாரண மனிதனுக்காக இலக்கியம் படைக்கப் புகுந்தவர். அவர் அடிப்படையில் உலக இயக்கங்களை மிகப் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் காணும் மனப்போக்கு அவரிடம் உள்ளது. உழைப்பவனுக்கும் வீணில் உண்டு களித்திருப்பவனுக்குமான போராட்ட உலகைக் காண்கிறார் விந்தன்” (ஒரே உரிமை, முன்னுரை) எனத் தம் கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

    விந்தன் நடுத்தர வர்க்கத்தைப்பற்றியும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சீரழிவுகள், சிக்கல்கள் பற்றியும் விவரிக்கும் கதைகள் பல எழுதியுள்ளார். விந்தன் கதைகளைப் பற்றி கல்கி இதழின் முன்னாள் துணை ஆசிரியர் எஸ்.வேங்கட சுப்பிரமணியம் “விந்தன் கதைகள் மகாகவி தாகூர் கதைகள் மாதிரி இருக்கின்றன” (விந்தன், ப.43) எனக் கூறியுள்ளார். அத்தகைய நடுத்தர வர்க்கத்தைப் பற்றிய கதைகள் சில:

    “முதல்தேதி நடுத்தரவர்க்கத்தில் ஒரு நம்பிக்கையான சொல். ஒரு மாதம் முழுவதும் கடன் வாங்குபவன் கடன்காரனுக்குச் சொல்லும் ஒரே பதில் ‘முதல்தேதி தருகிறேன்’ என்பதுதான். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாக அமைவது முதல்தேதிதான்.

    பிரசவத்துக்கு வந்திருக்கும் தங்கையை ஊருக்கு அனுப்புவது முதல், பிள்ளைகள் கேட்கும் நாடகம், சினிமா முதற்கொண்டு அனைத்துக்கும் ஒரே பதில் முதல்தேதிதான்.

    சிக்கனமாக குடும்பம் நடத்த வேண்டும் என்பது மனைவியின் ஆசை.பார்க்கப்போனால் நம்மைக் காட்டிலும் வாழ்க்கையில் குறைந்த அளவு தேவையுடன் திருப்தியடைபவர்கள் வேறு யாருமே இருக்க மாட்டார்கள்.

    ஏன் இல்லை? எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முனியன், மூக்கன், தொப்பை, சப்பை என்று இல்லையா?

    அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? பிறர் வாழ்வதற்காக நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

    பிரெஞ்சு அறிஞன் ஒருவன் ஜனங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறான். மேல் வகுப்பு, கீழ் வகுப்பு, மத்திய வகுப்பு என்று அவன் பிரித்திருக்கிறான்.

    மேல் வகுப்பினர் சுதந்திரத்தை விலைக்கு வாங்குகிறார்கள். கீழ் வகுப்பினர் சுதந்திரத்தை விலைக்கு விற்கிறார்கள் என்று அவன் சொல்கிறான். இந்த இரு வகுப்பினர்களுக்கும் இடையில் இரண்டும் கெட்டானாக இருந்து கொண்டு அவதிப்படுபவர்கள்தான் நம்மைப் போன்றவர்கள். நம்முடைய சூழ்நிலை வேறு, அவர்களுடைய சூழ்நிலை வேறு. இவையனைத்தையும் கூட்டிக் குழப்பி ஒன்று சேர்க்க முயல்கிறார்கள் அரசியல்வாதிகள்” என்று தம் ஆழ்மனத்தின் எண்ணக் குமுறல்களை ‘முதல்தேதி’ என்னும் கதையின் வழி வெளிப்படுத்துகிறார்.

    மேலும் நடுத்தர வர்க்கத்தினர் முதல்தேதி ஒன்றை எதிர்பார்த்திருப்பினும் அத்தேதியில் அவர்களின் தேவைகள் நிறைவேறுகின்றதா என்பதையும் இவ்வாறு பதிவு செய்கிறார். “அவன் எதிர்பார்த்த முதல்தேதியும் வந்தது. வாங்கிய சம்பளத்தைக் கடன்காரர்களுக்குக் கொடுத்துவிட்டு மிச்சம் இருந்த ஒரு ரூபாயை முழுசாகக் கொடுத்தான் இந்த மாத குடும்ப செலவுக்கு என்று மனைவியிடம்.

    பின்னர் பிள்ளைகள் சர்க்கஸ், சாக்லெட், சைக்கிள் என்றார்கள். அனைவருக்கும் ஒரே பதில் முதல்தேதி, முதல்தேதி!

    இந்த முதல்தேதிக்கு முடிவே கிடையாதா? அவர்கள் வாழ்வு முடியும் வரையில் அதற்கு முடிவே கிடையாது” என்பதையும் பதிவு செய்துள்ளார். கீழ்த்தட்டு மக்களின் போராட்டங்களை அறிந்துள்ளமை போலவே நடுத்தரவர்கத்தினரின் வாழ்வியலையும் அறிந்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் திறம்பட வலியுறுத்துகிறார் விந்தன்.

    இசுலாமிய சமூகத்தினரைப் பற்றி அன்பும் அதிகாரமும், தங்க வளையல் ஆகிய கதைகளின் வழி பேசுகிறார். சரித்திர, புராணக் கதை மாந்தர்களைப் பற்றி கதைகள் எழுதாத விந்தன் சமகால மக்களின் வாழ்வியலையே எழுதியவர். ஆயினும் கற்பனையில் எழுதிய இசுலாமிய அரசரின் கதைதான் ‘அன்பும் அதிகாரமும்’ என்னும் சிறுகதை. அக்கதையில் வரும் அரசன் அன்பை அதிகாரத்தால் அடைய நினைக்கின்றான். அன்பை விலை பேசுகிறான். அதனை விற்பதற்கும் வாங்குவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை என அறிந்து ஆத்திரப்படுகிறான். அச்சமயத்தில் பாதுஷா முல்லாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசவைக் கூடுகிறது. அனைவரும் வருகின்றனர். அப்பொழுது ஒரு மான் குட்டியுடன் கவி இசா வருகின்றான்.

    அந்த மான் குட்டியின் மீது ஆசைப்படுகின்றாள் இராணி ஜிஜியா. தன் விருப்பத்தை அரசனிடம் சொல்ல, அரசன் இராணியின் விருப்பத்தை கவி இசாவிடம் தெரிவிக்கின்றான். இதனை விந்தன் இவ்வாறு பதிவு செய்கின்றார். “ராணி மான் குட்டியிடம் மனத்தைப் பறிகொடுத்தாள் சரி. மான் குட்டி ராணியிடம் மனத்தைப் பறி கொடுத்ததா? பின்னர், அன்புக்கும் அதிகாரத்துக்கும் விவாதம் நீடிக்கின்றது. கடைசியில் கவி சிறையிலும் மான் குட்டி அரசு உத்தியான வனத்திலும்.” எனக் காட்டியுள்ளார்.

    கவியைத் துறந்து உயிர் வாழ முடியாத மான் உணவை, உறக்கத்தை மறந்து ஒரு நாள் உயிரை விட்டது. அதை அறிந்த கவியும் தானும் பறந்து செல்வதாகக் கூறி பறந்து சென்றான். மான் இறந்து விட்டதை அறிந்த அரசன் அன்பின் மகிமையை வியந்து கவியிடம் மண்டியிட்டு மன்னிக்கும்படி வேண்டுகிறான். அல்லா உன்னை ஒரு நாளும் மன்னிக்கமாட்டார் என்கின்றான். மனம் நெகிழும்படியான இக்கதையை உணர்வுபூர்வமான உரையாடல்கள் மூலமும் இசுலாமிய சமுதாயத்தின் மொழியாலும் சிறப்பாகப் படைத்துள்ளார்.

    சிறுகதை, நாவல்களில் எள்ளல் தன்மையுடன் கருத்துக்களை கூறிச்செல்லும் விந்தன் முழுமையான நகைச்சுவைக் கதைகளையும் எழுதியுள்ளார். கவிதைத் துறையில் கவிதைகள் எழுதித் தம்மை கவிஞர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கு மாறாக, தாகூர் மாதிரி தாடி வளர்த்துக் கொள்வது, குர்தா அணிவது, இப்படி உடையால் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட கவிஞர் ஒன்பாற்சுவையாரை எவரும் கவிஞர் என்று அழைக்கவில்லை. அதுவே அவருக்கு கெளரவக் குறைவாகப்பட்டது.

    ‘நமக்குத் தொழில் கவிதை’ என்று அவரே முழுநேரக் கவிஞராக ஆகிவிட்டார். ஆனால் காசுதான் அவரை நெருங்கவில்லை. கவிஞருக்கு கவிதை பிறந்ததோ இல்லையோ கவிதாதேவி என்னும் பெண் குழந்தை பிறந்தது. வாழ்க்கைக்குக் காசு வேண்டும் என்ற எண்ணத்தில் கவிஞர் ஒன்பாற்சுவையாரின் இல்லத்தரசி இன்பவல்லி அம்மையார் இட்லி, வடை கடைகளை நடத்தினார். இட்லி கிடைத்துச் சட்னி கிடைக்காததால் ஆத்திரத்தில் கவிஞர் பாடினார்.

    வேதனை வேதனை வேதனை
    வேதனை போயின்
    சோதனை சோதனை சோதனை
    இட்லி இட்லி இட்லி
    இட்லிக்கு வேண்டும்
    சட்னி சட்னி சட்னி

    அச்சமயத்தில் வீட்டு வாசலில் மகிழுந்து ஒன்று நின்றது. அதிலிருந்து இறங்கியவர் ஐந்நூறு ரூபாய்க்குக் காசோலை எழுதி கவிஞர் ஒன்பாற்சுவையாரிடம் கொடுத்துவிட்டு நாளை அலுவலகத்திற்கு வரும்படி சொல்லிவிட்டுச் சென்றார். அவ்வளவுதான் ஒன்பாற்சுவையார் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.

    மறுநாள் அவரின் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே உம்மைப் பாட்டு எழுத அழைக்கவில்லை. பின்னணி பாடத்தான் அழைத்தோம் என்று சொன்னதைக் கேட்டவுடன் மீண்டும் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.
    “இத்தனைக்கும் நான் அப்படியொன்றும் கேட்டுவிடவில்லை.
    ஆனப்பட்ட கம்பனே தன்னைத்தானே ‘கவிஞன்’ என்று அழைத்துக்கொள்ளாதபோது நீங்கள் ஏன் உங்களை நீங்களே ‘கவிஞன்’ என்று அழைத்துக் கொள்கிறீர்கள்? என்றுதான் கேட்டேன் அவ்வளவுதான். பாலர் பாடம் படித்திருக்கிறீரா? இல்லை, நீர் பாலர் பாடமாவது படித்திருக்கிறீரா, என்று அவர் என்மேல் பாய ஆரம்பித்துவிட்டார். அதில் என்ன தெரிய வேண்டும் உங்களுக்கு? தெரியாவிட்டால் கேளுங்கள் சொல்கிறேன் என்றேன். அடக்க ஒடுக்கமாக, “நன்று, நவிலும். ‘அ’ என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?

    ‘அணில் படம் போட்டிருக்கிறது’

    ‘அதற்குக் கீழே’

    ‘அணில் என்று எழுத்தில் போட்டிருக்கிறது’

    ‘நன்று ‘ஆ’ என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?’

    ‘ஆட்டின் படம் போட்டிருக்கிறது’

    ‘அதற்குக் கீழே?’

    ‘ஆடு என்று எழுத்தில் போட்டிருக்கிறது’

    ‘அணிலையும் ஆட்டையும் அறியாதார் அவனியில் உண்டோ?’

    ‘இல்லை’

    ‘அங்ஙனம் இருந்தும் சித்திர விளக்கத்தோடு அதற்குரிய எழுத்து விளக்கமும் சேர்ந்து நிற்பது எதற்கு?

    எடுத்துக்காட்டும் பொருள் பள்ளிச் சிறுவர்கள் கண்ணில் பதிவதோடு எழுத்திலும் பதியவேண்டும் என்பதற்காக இருக்கணும் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது”

    “அம் முறையைத்தான் யாமும் கையாண்டு வருகிறோம். எனவே பிறவிக் கவிஞரே என்று முகம்  மலர அகம் குளிர எம்மை விளிப்பாரைக் கண்டிலோம், கண்டிலோம்” இவ்வாறு நகைச்சுவை ததும்ப நயமுடன் எழுதியுள்ளார் விந்தன்.

    கவிதைகள்

    1956இல் விந்தன் ‘பசி கோவிந்தம்’ என்ற சிறுநூல் எழுதினார். அந்த நூலைப் பற்றி டாக்டர் ஆ.ரா. வெங்கடாசலபதி அவர்கள், புலவர் த.கோவேந்தன் எழுதிய புதுநாநூறு  என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னோட்டத்தில் குறிப்பிடுகிறார்.

    “இராஜாஜியின் பஜகோவிந்தத்தை நையாண்டி செய்து விந்தன் ‘பசி கோவிந்தம்’ எழுதினார். இராஜாஜி அரசியல் தலைவராகவும் இந்தியாவின் நடுவண் ஆளுநராகவும் இருந்ததால் அவருக்கு இலக்கிய பீடத்தில் இடம் கிடைத்துவிட்டது. அவருடைய பஜகோவிந்தத்தை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார்.  இயல்பாகவே விந்தன் ஒரு சிறுகதையோ நாவலையோ எழுதும்போதுகூட ஆசிரியர் கூற்றாகப் பகுதிக்கு ஒரு வரியேனும் எழுதி சமூக இழிவுகளையும் ஒழுக்கங்களையும் நையாண்டி செய்யாமல் விந்தனுக்கு கதையை நடத்திச் செல்லத் தெரியாது. அப்படி இருக்கையில் நையாண்டி செய்வதற்காகவே எழுதப்பட்ட ‘பகடி’ நூலில் கேட்க வேண்டுமா? தன்னுடைய நூலைப் புடைநூல் என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார் ‘புடை புடை’ என்று புடைத்து விடுகிறார் விந்தன்.”

    “வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் பெருங்கடல் வாலிபம்; பசிமிக்க பாரதத்தில் வறுமைமிக்கோர் அதைக் கடப்பது கடினம்; ஆயினும் வயலில் சிறு வாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கையில் சிலர் வாலிபக் கடலைத் தாண்டி விடுகின்றனர். அதற்கேற்ற வசதியும் அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகிறது. சுவாதீனத்தால் சோம்பேறித்தனத்தையும் சுகானுபவத்தால் சொர்க்கலோக இச்சையையும் வளர்த்து வரும் அவர்களுடைய பரம்பரை சொத்துகளையும் பாராதீனப்படுத்து பசிக்குப் பலியாகும் கோடானுகோடி மக்களைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற நோக்கத்தால் எழுந்ததே இந்தப் பசிகோவிந்தம் பாட்டு!

    பாரதம் வாழி பாரதம் வாழி
    பசிகோவிந்தம் பாட பசிதந்த
    பாரதம் வாழி!”

    ‘தினமணிக் கதிர்’ ஏட்டில் மகாபாரதக் கதையை ‘பாட்டினில் பாரதம்’ என்ற பெயரில் காவியமாக எழுதினார். அதைப் படித்த சிலர் காவியம் எழுதும் அளவுக்கு விந்தனுக்கு தமிழில் புலமை உள்ளதா என்று வினாயெழுப்பினர். ஆனால், புலவர் த. கோவேந்தன் போன்றவர்கள், உரைநடையை எளிமையாக எழுதியது போலவே காவியத்தையும் எளிமையாக இலக்கணம் பிறழாமல் எழுதுகிறார் என்று பாராட்டினர்.

    ‘கதிர்’ ஏட்டில் ‘பாட்டினில் பாரதம்’ தொடர் வந்து கொண்டிருந்தபோது ஆசிரியர் ஏ.என். சிவராமன் விந்தனைப் பார்க்கும்பொழுதெல்லாம் தொடரைப் பாராட்டுவதோடு “தொடர்ந்து எழுதுங்கள்!” என்று உற்சாகமூட்டி பாராட்டுவாராம். பலரின் பாராட்டுக்குரிய ‘பாட்டினில் பாரதம்’ இன்னும் நூலாக வரவில்லை.

    பெரியார் அறிவுச்சுவடி என்னும் நூலில் எழுதியுள்ள பகுத்தறிவைத் தூண்டும் கவிதைகள் அவரின் கவிதைத் திறனுக்குச் சான்றாகும்.

    சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை
    தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே
    மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை
    ராவண காவியம் ரசித்துப் படி
    மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை
    “பீடை என்பது பிராமணியமே
    முக்தியால் வளர்வது மூடத்தனமே
    மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை 

    கட்டுரைகள்

    1947இல் தொழிலாளர் பிரச்சனையை முன் வைத்து ‘வேலை நிறுத்தம் ஏன்?’ என்னும் சிறு நூலை ஒரே இரவில் எழுதி வெளியிட்டார். அந்த நூல் இன்னும் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு ஏற்றதாகவும் போராடுவதற்குத் தூண்டுதலாகவும் இருப்பதால் அந்நூலை ஆசிரியரின் அனுமதியின்றியே அச்சிட்டுத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள் தொழிற்சங்கத் தலைவர்கள்.

    சென்னை மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றிய காலத்தில் சுதேசமித்திரன் ஏட்டில் ‘சேரிகள் நிறைந்த சென்னை மாநகரம்’ என்கிற தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதினார். அச்சமயத்தில் விந்தன் சேரியில் வாழும் ஏழை எளியவர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு பத்திரிகையில் எழுதினார். அதன் மூலமே சென்னையில் எத்தனை சேரிகள் உள்ளன என்பதனையும் அவர்களின் அவலநிலைமையும் அறிந்தார் விந்தன். (அந்தக் கட்டுரைகள் இன்னும் நூலாக வெளிவரவில்லை) விந்தன் அவ்வப்போது பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள், அவரின் நூலுக்கு எழுதிய முன்னுரைகள் அனைத்தையும் மு. பரமசிவம் அவர்கள் தொகுத்துத் தர “விந்தன் கட்டுரைகள்” என்ற தலைப்பில் 1998இல் கிறிஸ்துவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ளது.

    இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ள பத்தொன்பது கட்டுரைகள் பலதிறப்பட்டவை. பாரதி வாழ்ந்த பாண்டி, பாரதிதாசனின் குடும்ப விளக்கு, ஒப்பற்றகவி, கவிமணியும் காலனும், உலகத்துக்கு ஒருவர், புகையிலையும் புதுமைப்பித்தனும் ஆகிய கட்டுரைகள் இலக்கிய ஆளுமைகள் குறித்தவை.

    எனக்குப் பிடித்த புத்தகம் என்னும் கட்டுரை மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் குறித்த அறிமுகமாகும்.

    முடிவுரை, என்னுரை, வயிறும் வாழ்வும், வாழ்த்து, சுழலும் உலகிலே, சுயம்வரத்திற்கு முன்னால் கொஞ்சம் சுய விளம்பரம், முன்னுரை, சுடச்சுட குளு குளு ஆகியவை தன் நூல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளாகும். படித்தேன் – சொல்கிறேன் என்னும் கட்டுரை பிறரது நூலிற்கு வழங்கிய முன்னுரையாகும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கட்டுரையும் ‘இதோ! ஒரு சுயமரியாதைக்காரன்’ என்ற கட்டுரையும் சமூக விமர்சனங்களாக அமைந்தனவாகும்.

    பாரதி, பாரதிதாசன், கவிமணி, கல்கி, புதுமைப்பித்தன் ஆகிய ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும், பார்வையற்றவர், கால் இழந்தவர், கையிழந்தவர், கால்முடப்பட்டவர், ஒரு கை விளங்காதவர் என இவர்களை ஊதுபத்தி விற்பவராய், பத்திரிகை போடுபவராய், தோசைக்கடை வைத்திருப்பவராய், செருப்புத் தைப்பவராய் வாழ்க்கையுடன் போராடி, பிச்சையெடுக்காமல் தங்கள் சுயமரியாதையைக் காத்து கொள்பவர்களாய்த் திகழ்வோரை உணர்ச்சி பொங்கச் சித்தரித்துள்ளார். இத்தகையோரை அட்டைப் படத்திலும் வெளியிட்டுச் சமுதாயத்தின் மையத்திற்குக் கொணர்ந்து பெருமைப்படுத்தியுள்ளார்.

    [தொடரும்]

    *****

    துணைநின்ற நூல்கள்

    • அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
    • அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
    • பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
    • பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
    • பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
    • வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
    • விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
    • விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
    • ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030

    இதழ்கள்

    • குங்குமம், மார்ச்-1994
    • தினமணி, வெள்ளிமணி,10.1987
    • மனிதன்,08.1954

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
    சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
    திருவண்ணாமலை 606603
    கைப்பேசி: 9786863839
    மின்னஞ்சல்: drnprabu@gmail.com

     

     

    Share
  • முகிலை இராசபாண்டியனின் தேரி மணல் நாவலில் கடற்கரைப் புனைவு

    -த. ஆதித்தன்

    விலங்குகளோடு காடுகளில் வாழ்ந்த மனிதன் தனது நாகரிக வளர்ச்சியின் விளைவாகத் தனக்கென ஓர் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டான்.  அதுவே மக்கள் நிலம் சார்ந்து சேர்ந்து வாழ்வதற்கு முன்னோடி எனலாம்.

    மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவைப் பெருக்கிக் கொண்டதன் மூலம் பல முன்னேற்றங்களை அடைந்தான்.  நாகரிக வளர்ச்சியும் பெற்றான்.  அவன் நிலம் சார்ந்து அமைத்துக் கொண்ட வாழ்க்கை முறையும், வாழ்க்கை சூழலும் அன்று முதல் இன்று வரை இலக்கியங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

    மனிதன் நாகரிகம் அடைவதற்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே கூடிவாழும் இயல்புடையவனாய் இருந்துள்ளான்.  இக்கூடி வாழும் இயல்பினால் விளைந்த நன்மைகள் பல.  மக்களினம் பல கிளைகளாக வளர்ச்சி அடைவதற்கும் அது வழிவகுத்தது.  மனித இனம் பல்வேறு குழுக்களாகப் பிரிவதற்குப்  பேசும் மொழி, செய்யும் தொழில் போன்று  வாழும் இடமும் முக்கிய பங்காற்றுகிறது.  அதனை கருத்தில் கொண்டுதான் நம் முன்னோர் ஐவகை நிலப்பாகுப்பாட்டினை வகுத்துள்ளனர் போலும்.

    நிலப்பாகுபாடு:

    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலப்பாகுபாட்டினை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.  இவற்றில் பாலை என்பது குறிஞ்சியும், முல்லையும் முறைமையில் திரிந்ததே என்பதால் பாலைக்கென தனிநிலம் இல்லை எனலாம்.  இதனை,

    “முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
    நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (சிலப்பதிகாரம், காடுகாண் காதை, அடி:64-66)

    என்று சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கிறது.

    தொல்காப்பியம்,

    “மயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” (தொல், அகத்தினை இயல், நூற்பா:951) என்று இந்நிலப்பாகுபாடுகளைப் பற்றிக் கூறுகிறது.  இவற்றுள் ‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்னும் அடி நெய்தல் நிலத்திற்குரிய கடவுள் வருணன் என்பதையும், பெருமணல் மிகுந்த கடற்கரை நிலம் நெய்தல் என்பதையும் கூறுகிறது.

    இலக்கியங்கள் வாழ்க்கையோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையதாகும்.  கடலும் கடல் சார்ந்த நிலமாகிய நெய்தல் நிலத்திற்கு ஏற்ற நிகழ்வுகளும் அவ்வகையில் இலக்கியங்களுள் இடம்பெற்றுள்ளன.  இந்தநெய்தல் நிலம் தொடர்பான பல வர்ணனைகளைச் சங்க இலக்கியப் பாடல்களிலும் காண முடியும். உதாரணமாக,

    “பெருநீர் அழுவத்து எந்தை தந்த
    கொழுமீன் உணங்கற் படுபுள் ஒப்பி,
    எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ,
    செக்கர் ஞெண்டின் குண்டுஅளை கெண்டி,
    ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
    தாழை வீழகயிற்று ஊசல் தூங்கி,
    கொண்டல் இடுமணல் குரவை முனையின்
    வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி,
    மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப்
    பல் பூங்கானல் அல்கினம் வருதல்
    கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர்
    கொடிது அறிபெண்டிர் சொற்கொண்டு, அன்னை
    கடிகொண் டனளே தோழி பெருந்துறை
    எல்லையும் இரவும் என்னாது கல்லென
    வலவன் ஆய்ந்த வண்பரி
    நிலவுமணல் கொட்கும்ஓர் தேர்உண்டு எனவே” (அகநானூறு, பாடல்: 20)

    என்னும் அகநாநூற்றுப் பாடலைக் காணலாம்.

    தோழி தலைவியிடம் கூறும் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.  தலைவியோடு களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவன் ஒருநாள் பகலில் சிறைப்புறமாக வந்து நிற்கிறான்.  அதனைக் கண்ட தோழி அவன் வந்துள்ளதை அறியாததுபோல் காட்டிக் கொள்கிறாள்.  அலர் தூற்றும் ஊர் பெண்களின் சொல்லினைக் கேட்டுத் தாய் தலைவலியை வீட்டினுள் காவல்படுத்தியதைத் தலைவனுக்கு உணர்த்த விரும்புகிறாள்.  எனவே தலைவனுக்குக் கேட்கும் வகையில் தலைவியிடம் கூறுவது போல இப்பாடலின் செய்திளைத் தோழி கூறுகிறாள்.

    தந்தை கொண்டுவரும் கொழுப்பு நிறைந்த மீன்களை உலரவைத்து கருவாடாக்குவது உண்டு.  அவ்வாறு மாற்றுவதற்காக மீன்களை உலரவைத்துக் காயவைப்பர்.  அப்போது அதன்மீது வந்து விழுகின்ற பறவைகளை விரட்டுவதற்காகத் தோழியும் தலைவியும் கடற்கரை மணல் மேட்டில் உள்ள புன்னை மரங்களின் நிழல்களில் அமர்ந்திருப்பர்.  அதனைத் தலைவியிடம் நினைவு கூர்ந்த தோழி தொடர்ந்து அவளிடம் பின்வருமாறு கூறுகிறாள்.

    கடற்கரையில் சிவந்த நண்டின் ஆழமான வளைகளை அகழ்ந்து எடுத்தோம்.  உப்பங் கழிகளில் உள்ள தாழையின் விழுதுகளைக் கயிறாகப் பயன்படுத்தி ஞாழல் மரங்களின் உயர்ந்த கிளைகளில் ஊசல் ஆடினோம்.  காற்றுக் கொண்டு வந்து குவித்த மணலில் குரவைக் கூத்தாடினோம்.  இவையெல்லாம் வெறுப்பை உண்டாக்கினால் வெண்மையான மேற்பகுதியைக் கொண்ட அலைகள் வீசும் கடலில் தோழியருடன் விளையாடினோம்.  அழகிய மலர்களாலான பசிய தழையாடையை அழகுடன் உடுத்திக் கொண்டோம்.   பூக்கள் பல நிறைந்த கடற்கரைச் சோலையில் தலைவனைச் சந்தித்து வந்தோம்.

    இவ்வாறு தலைவனைச் சந்திப்பதைப் பற்றி, அவர் கூறுவதையும், பேய் பிடித்த பெண்கள் கூறுவனவற்றையும் நம்தாய் கேட்டு விட்டாள்.  அதனால் இரவு பகல் என்று இல்லாமல் குதிரைகள் பூட்டப்பட்ட கல் என்னும் ஓசையுடன் கடற்கரைக்கு வந்துச் செல்லும் தேரைப் பற்றி எண்ணியவளாய் நம்மை வீட்டு காவலில் வைத்துவிட்டாள்.   நாம் என்ன செய்ய முடியும் என்று தோழி கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.

    இப்பாடலில் கடற்கரைப் பற்றிய புனைவு மிக அழகுடன் அமைந்துள்ளது.  கடற்கரையில் மீன்களைக் கருவாடாக்குவதற்காகக்  காய வைப்பது, உப்பங்கழியும் அதன் அருகில் உள்ள தாழை, ஞாழல் மரம் போன்றவற்றைப் பற்றிய குறிப்பு போன்றவை மிக எதார்த்தமானவை ஆகும்.  கடற்கரையில் காணப்படும் மணல் மேட்டையும் இப்பாடலின் ஆசிரியர் உலோச்சனார் காட்சிப்படுத்த தவறவில்லை.

    “உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
    ஒழுகை உமணர் வருபதம் நோக்கி,
    கானல் இட்ட காவற் குப்பை,
    புலவுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி,
    மடநோக்கு ஆயமொடு உடன்உப்பு ஏறி,
    ‘எந்தை திமில் எண்ணும் தண்கடற் சேர்ப்ப!
    இனிதே தெய்யஎம் முனிபுஇல் நல்லூர்
    இனிவரின் தவறும் இல்லை எனையதூஉம்
    பிறர்பிறர் அறிதல் யாவது
    தமர்தமர் அறியாச் சேரியும் உடைத்தே”. (நற்றிணை, பாடல்:331)

    என்னும் நெய்தல் திணையில் அமைந்த நற்றிணைப் பாடலும் கடற்கரைப் பகுதி குறித்து எடுத்துரைக்கிறது.

    கடற்கரையில் உப்பளங்கள் காணப்படும்.  அதனை உழாது விளைவிக்கும் நெய்தல் நில மக்களால் உவர் நிலத்தில் விளைவிக்கும் உப்பு என்று கூறியுள்ளது அருமை.  அந்த உப்பை உப்பு வணிகர் வருகின்ற காலம் வரை கடற்கரையில் குவித்து வைத்திருப்பார்.

    அங்கு, புலால் மணம் பொருந்திய மீனை உப்பிட்டு கருவாடாக்குவதற்குக் காய வைத்திருப்பர்.  அவற்றைக் கொள்வதற்காக வந்துவிழும் பறவைகளை மடநோக்கு உடைய பெண்கள் தோழிகளோடு சேர்ந்து விரட்டுவர்.  அவர்கள் குவித்து வைத்துள்ள உப்புக் குவியல் மீதேறி எம் தந்தையின் படகு இது. உம் தந்தையின் படகு அது எனக் கடலுள் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் படகுகள் குறித்துக் கூறுவர் என்று கடற்கரை நிகழ்வுகளை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளது  இப்பாடல்.

    சங்க காலம்தொட்டு இன்று வரையிலும் இதேபோன்ற கடற்கரைப் புனைவுகள் பல இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.  ஆய்வுக்கு எடுத்துள்ள தேரிமணல் நாவலிலும் கடற்கரை சார்ந்த நிகழ்வுகள் காணப்படுகின்றன.  இந்நாவலின் ஆசிரியர் முகிலை இராசபாண்டியன் சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், திறனாய்வு, உரை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தடம் பதித்து வருபவர், அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள அவரின் தேரிமணல் என்னும் நாவலில் இடம் பெற்றுள்ள கடற்கரைப் புனைவுகளே இங்கு எடுத்தாளப்படுகிறது.

    தேரிமணல் நாவலின் தொடக்கமே கடலில் ஆறு கலக்கும் கழி முகப்பகுதிதான்.  ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது அதனைக் கடலுள் பாயவிடாவிட்டால் அது பக்கத்தில் உள்ள ஊர்ப் பகுதிக்குள் புகுந்துவிடும்.  ஆற்றுத் தண்ணீரைக் கடலுக்குள் வெட்டி விடுவதைப் பொழி வெட்டுவது என்று கூறுவர்.  அந்தப் பொழிவெட்டும் பிரச்சினையில் இருந்துதான் செம்மீன் நாவல் தொடங்குகிறது.  இது குறித்து,

    “பொழி முகத்துக்குப் போன சின்னத்துரையும் மற்றவர்களும் எந்த இடத்தில் மணலை வெட்டினால் கழி வெள்ளம் கடலுக்குள் போகும் என்று பார்த்தார்கள். நேரம் இன்னும் விடியாமல் இருட்டாகவே இருந்தது.  கன்னியாகுமரியில் இருக்கும் லைட்ஹவுசின் வெளிச்சத்தில் கடல் மணல் ஓரளவு தெரிந்தது. பொழி வெட்டுவதற்கான இடத்தைப் பார்த்த சின்னத்துரை, கடலை எட்டிப் பார்த்தார்.  கடல் அடி அதிகமாக இருந்தது.

    “ஏண்ணே…! நாம பொழியை வெட்டி விட்டாலும் கடல் அடிச்சி ஏத்திடும் போல இருக்கே…” என்றான் பண்டாரக்குட்டி. “ஆமாடே…அடிச்சி ஏத்தும் போலத்தான் இருக்கு, ஆனா, கழி தெவங்கி நிக்கிறதால இழுத்துக்கிட்டு ஓடிவிடும்…நீ வெட்ட ஆரம்பி…” என்றார் சின்னத்துரை.

    பண்டாரக் குட்டியும் மற்றவர்களும் மண்வெட்டியால் வெட்டத் தொடங்கினார்கள். மணக்குடி ஊரின் நடுவில் இருந்தது அந்தக் கழி. கழிக்குக் கிழக்கே இருப்பதைக் கீழ மணக்குடி என்றும் மேற்கே இருப்பதை மேல மணக்குடி என்றும் சொல்வார்கள். பழையாறு என்னும் ஆறு, கடலில் சேரும் இடம்தான் அந்தக் கழிமுகப் பகுதி. பொழி ஓடிவிட்டால் கீழ மணக்குடிக் காரர்கள் மேல மணக்குடிக்கு நடந்து போக முடியாது;  வள்ளத்தில்தான் போக முடியும்,”(பக்கம் எண்: 22-23 தேரிமணல்) என்று  ஆசிரியர் குறிப்பிட்டள்ளார்.  இது வர்ணனைகள் இல்லாத காட்சிப்படுத்துதலாகவே அமைந்துள்ளது. கடற்கரையில் உள்ள கழிமுகத்தை வாசகனுக்கு அறிமுகம் செய்யும் வகையில் மட்டுமே இப்பகுதியானது உள்ளது.

    சீறிவரும் அலைகளுக்கு மத்தியில் கடலில் குளிப்பது சுகமானது.  அவ்வாறு கடலில் குளிப்பதைக் கண்முன்னே கொண்டுவரும் வகையில் நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

    மண்டைக் காட்டுக் கோயில் திருவிழாவினை ஒட்டி விழாவிற்கு வரும் மக்கள் கடலில் குளிப்பது வழக்கம்.  அது தொடர்பான செய்திகளைக் குறிப்பிடும் போது மக்கள் கடலில் குளிப்பதுக் குறித்து,

    “ஒன்பது மணிக்கெல்லாம் கடலில் சிலர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.  சீறிவரும் அலையை எதிர்கொண்டு அவர்கள் நின்றார்கள்.  அலை அடிக்கும் நேரத்தில் அதன்மேல் தாவி அந்தப் பக்கம் விழுந்தார்கள், இப்படி ஒவ்வோர் அலையாக எதிர்கொண்டு தாவிக் குதித்ததால் கடலை ஜெயித்த பெருமிதம் அவர்களின் முகத்தில் தெரிந்தது. எதிர்த்துவரும் அலையில் கட்டுமரத்தைத் தள்ளிக் கொண்டு நின்றார்கள் சில மீனவர்கள்.  அலை அடி அதிகமாக இருந்ததால் அவர்கள் கட்டுமரத்தை முன்னே தள்ளிக்கொண்டு போகும் போதெல்லாம் அது திரும்பிக் கொண்டு நின்றது.

    பெரிய அலையின் வருகைக்காக அவர்கள் கொஞ்ச நேரம் பொறுமையாக நின்றார்கள்.  சின்னச் சின்ன அலைகள்தாம் தொடர்ந்து வந்தன.  அந்த அலைகளின் அடி வேகமாகத்தான் இருந்தது.  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அலைகள் அளவில் சிறியவையாய் இருந்தாலும் வேகத்தில் குறைவு இல்லை. சின்ன அலைகளில் தாவிக் குதித்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அதிகமாக இருந்தது.  திடீரென்று ஒரு பெரிய அளவில் அலை வந்தது.  அந்த அலையை எதிர்ப்பார்க்காததால் சின்ன அலையில் தாவியதைப் போலவே இந்த அலையிலும் தாவினார்கள்.

    கடல் அலையில், அதுவும் அரபிக்கடல் அலையில் குளிப்பதற்கு ஒரு லாவகம் வேண்டும்.  சின்ன அலை என்றால் மேலே தாவி அலையின் பின்பக்கம் பாயவேண்டும். மிகவும் சின்ன அலை என்றால் குதிக்க வேண்டும்.  பெரிய அலை என்றால் தரையோடு தரையாக மூச்சைப் பிடித்துக்கொண்டு படுத்துக் கொள்ளவேண்டும். மிகப் பெரிய அலை என்றால் குத்தவைத்திருப்பது போல் நன்றாக குனிந்து கொள்ளவேண்டும். பெரிய அலையின் போது குனிந்தாலும் படுத்தாலும் அலை நம்மைக் கடந்து போய் தரையில் அடிக்கும், பெரிய அலையின் மேல் தாவிக்குதித்தால் அது நம்மையும் சுருட்டிக் கொண்டு தரையில் அடிக்கும்.  சில சமயங்களில் சின்ன அலைகளின் மேல் தாவும்போது கூட, காலைப் பிடித்து இழுக்கும்.  வேகமாகப் பாய்ந்தால் தப்பிக் கொள்ளலாம் “(பக்கம் எண்.71-72, தேரிமணல்) என்கிறார்.

    இப்பகுதியைப் படிப்பவர்கள் கடலில் குளிப்பது எப்படி என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.  அந்த அளவிற்கு அனுபவித்து ரசனையோடு எழுதியுள்ளார் நாவலாசிரியர்.  இப்பகுதியில் கட்டுமரத்தைக்  கடற்கரையில் இருந்து கடலுள் இறக்குவதையும் காட்சிப்படுத்தியுள்ளார்.  இவை அனைத்தும் மிகவும் யதார்த்தமாக, நாம் நேரடியாக பார்ப்பது போன்று அமைந்துள்ளது.

    கடற்கரையில் சுழன்று அடிக்கும் காற்றால் மணல் சிறிய குன்றுபோல் உயர்ந்திருக்கும் அதனை மணல் தேரிகள் என்பர்.  அந்த மணல் தேரிகளை, “காற்றாடி மரங்கள் நிறைந்த அந்தப் பகுதியைத் தாண்டி விட்டால் மணல் தேரிகள், அந்த மணல் தேரிகளைக் கடந்து விட்டால் கடல்தான்.  மரங்களின் இடையே வந்த தங்கக்கண்ணை யாரும் பார்க்கவில்லை.  தேரிமணல் காட்டுக்கு வந்தாலும் யரும் பார்க்க முடியாது.  ஒரு பனை உயரத்திற்கு இருக்கும் அந்தத் தேரி மணலுக்கு இடையே நடந்து சென்றால் கூட யாருக்கும் தெரியாது.” (பக்கம் எண்: 35, தேரிமணல்) என்று நாவலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மணல் தேரிகளைக் குறிக்கும் தேரிமணல் என்னும் சொல்தான் நாவலின் பெயராகவும் அமைந்துள்ளது.

    இத்தகைய கடற்கரைப் புனைவுகளைக் கொண்ட படைப்புகளில் காணப்படுகின்ற நெய்தல் சார்ந்த செய்திகளைத் தொகுத்து ஆராயும்போது அந்நிலம் சார்ந்த பதிவுகளையும் பண்பாட்டு வழக்காறுகளையும் குறித்தான புரிதல் மேலோங்கும் எனலாம்.

    *****

    கட்டுரையாளர் – இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர் – 613 010.

     

     

     

    Share
  • நாட்டுப்புறப்பாடல்களில் தாலாட்டு

    சிந்து.மூ

     

    உதவிப்பேராசிரியர்

          தமிழ்த்துறை

        கற்பகம் பல்கலைக் கழகம்

           ஈச்சனாரி.

                மனித இனம் தோன்றியகாலம் முதலே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றியது எனலாம். மனிதனது உள்ளத்தில் தோன்றம் உணர்வுகளின் வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியமாகத் தோன்றுகிறது. வாய்மொழி இலக்கியமாக  விளங்குகின்ற  நாட்டுப்புறப் பாடல் ஏட்டிலக்கியமாக மாறியதில் முன்னோடியாக இருந்தது தாலாட்டுத்தான். தாலாட்டு மனித வாழ்வோடு தொடர்புடையது. மிகத் தொன்மையான தாலாட்டின் சிறப்பை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

    பெயர்க்காரணம்

              ‘தால்’ என்றால் நாக்கு. நாவினை ஆட்டிப் பாடுவதால் தால் + ஆட்டு தாலாட்டாயிற்று. குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்கும் தாய் அவ்வெலியை அடக்கத் தன் உதடுகளைக் குவித்து நாவினை ஆட்டிக் குரலையிடுவதே தாலாட்டாகும். தாலாட்டு நாட்டு வழக்கில் “ராராட்டு“ எனவும் வழங்கிவருகிறது. மேலும் தாலாட்டைத் தாராட்டு, தாலேலோ, ஓராட்டு, ரோரோட்டு, ராராட்டு, தொட்டில் பாட்டு, ஓலாட்டு, திருத்தாலாட்டு எனப் பல்வேறு பெயர்கள் இன்றைய உலக வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் வழங்கப்படுகிறது.1

                “தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு”2 என்பர் தமிழண்ணல். குழந்தைக்கு முதன்முதலில் புலனாகும் உணர்வுகளில் கூர்மையானது, குறிப்பானது செவியுணர்வே. தாயையும், பிறரையும் வேறுபடுத்தி உணர குழந்தைகளுக்கு  உதவுவது அவரவர் குரலே இக்கருத்தின் வழி, தாலாட்டுப் பாடலில் குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிணைப்பு தெளிவாக வெளிப்படுகிறது. பிறப்பின் போது பாடப்படும் தாலாட்டும், இறப்பின் போது பாடப்படும் ஒப்பாரியும் மனிதனுக்குக் கிடைத்தற்கரியதாய் உணரலாம்.

    தாலாட்டுப் பாடல்களின் தோற்றம்

                ‘தாலாட்டு’ என்ற சொல்லாட்சியை மையமாகாக் கொண்ட இடைக்கால இலக்கியங்கள் “தாராட்டு” என்றும், பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் “தாலேலோ” என்றும் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம்.

                தொல்காப்பியர்  “குழவி மருங்கினும் கிழவதாகும்”3 என்று தொல்காப்பியத்தில் குழந்தைக்குரிய பருவகளைச் சுட்டிக்காட்டுகிறார்.மேலும், சங்க இலக்கியத்தில் புறப்பாடலாக விளங்கும் பரிபாடலிலும் “வரையழி வாலருவி வாதாலாட்ட”4 என்ற பாடல்வரிகள் தாலாட்டினைப் பற்றிக் கூறுகிறது.

                தமிழ் மொழியில் முதன் முதலாகத் தாலாட்டுப் பாடல்களைப் பாடியவர் பெரியாழ்வார். குலசேகர ஆழ்வாரும், பிள்ளைத்தமிழ்ப் புலவர்களும் தாலாட்டினைத் தாய்ப்பருவம் என்று தனித்துறையாக வளர்த்தனர். ஞானசம்பந்தர் தாலாட்டு, நம்மாழ்வார் தாலாட்டு போன்ற தாலாட்டுச் சிற்றிலக்கியங்கள் அதன் வளர்ச்சியைக் காட்டுவன எனலாம். தற்காலத்தில் தாலாட்டுப் பாடல்கள் சூழ்நிலைகளால் உணர்ச்சி வசப்படும் பாடல்களல்ல, தாயின் ஓய்விலே குழந்தை தவிழும் போது பிறக்கின்ற பாடலாகும் என்பதை உணரமுடிகிறது.

    தாலாட்டிசைக்கும் காலம்

                குழந்தை அழும் போது அதன் அழுகையை  அடக்கித்துயிலச் செய்யத் தாய் தாலாட்டுப் பாடுகிறாள். குழந்தைப் பிறந்த ஓரிரு வாரங்களிலிருந்து மூன்று வயது வரை குழந்தை தூங்க இத்தாலாட்டுத் தேவைப்படுகிறது. எனவே, அக்காலமே தாலாட்டிற்குரிய காலாமாகும். 96 வகைத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் பிள்ளைத் தமிழ் இலக்கியமும் ஒன்றாகும். அது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். ஒவ்வொரு   பிள்ளைத் தமிழும் பத்துப் பருவங்களால் பாடப்பெறும். ஒவ்வொரு நிலையிலும் குழந்தையின் அழகினையும், சிறப்பினையும் உயர்வாகப் பாடப்படும்,

    தாலாட்டுப்பாடலின் அமைப்பு

                தாலாட்டுப் பாடல்கள் குறுகிய அளவு உடையன.ஆனால் பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களுக்கு அடிவரையரை இல்லை என்றே கூறலாம். குழந்தையின் உறக்க நிலைக்கேற்பவும், தாயின் மனநிலைக்கேற்பவும் தாலாட்டுப் பாடல்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ அமையப்பெறுகிறது.

    தாலாட்டு சமுதாயத்தில் பெறுமிடம்

                சமுதாயத்தில் பெண் தன் கருத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு இடம். தன் எண்ணத்தை வெளிப்படுத்த தாய்க்கு வேறு இடம் இல்லாததால்  தாலாட்டில் வெளியாகின்றது எனத் தாலாட்டுப் பிறக்கும் நிலையை விளக்கியுள்ளமை தாலாட்டின் பயன் நிலையைச் சுட்டுவதாய் உள்ளது.

                இருவர் கொள்ளும் காதலைவிட, உடன் பிறந்தவர் கொள்ளும் வாஞ்சையை விட, உலகளக்கும் அருளினையும் விட பிள்ளைப் பாசமே ஆழமானது. இத்தகைய ”தாயும், சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலை தான் தாலாட்டு”5 ஆகும்.

    தாலாட்டில் பாடுப்பொருளாக வருவன

    • பிள்ளைப்பேறு கிட்டியமைக்கு நன்றி கூறல்.
    • தெய்வம் தொடர்பான கதைகளைக் கூறல்.
    • குழந்தை இல்லாத போது தாய்பட்ட துன்பங்களைக் கூறல்.
    • குழந்தையின் அழுகைக்கானக் காரணங்களைக் கூறல்.
    • குழந்தைப் பேற்றை வேண்டி செய்த அறங்களைக் கூறல்.
    • குழந்தையை வர்ணித்துக் கூறல்.
    • குழந்தையின் எதிர்காலத்தை எண்ணி வர்ணித்தல்.

    தாலாட்டின் பிரிவுகள்      

    1.குழந்தை பற்றியன

                குழந்தையின் நிலையைப் பற்றித் தாலாட்டுப் பாடுதல் ஒரு வகையாகும்.

                             “என்

                        தேனே தினைமாவோ – என் சாமி

                        சிவந்தானோ மாங்கனியோ – என்

                        மாங்கனியே யாரடிச்சோரோ”

    என்ற பாடலில் குழந்தையின் நிலையிணை விளக்குகிறது.

    2.குழந்தைக்கு உரிமையானப் பொருட்களைப் பற்றியன

                குழந்தையின் சிலம்பு பற்றிக் கூறும் போது,

                             “என் போல் திருப்பங்கண்ணாய்

                        ஒருகால்  சிலம்பு அசைய – என்

                        மறுச்சு திருப்பங்கண்ணாய் – என்

                        வலதுகால் சிலம்பு அசைய”

    என்ற பாடல் சான்றாகும்.

    3.தாய்மாமன் சீர் வரிசை

              ‘தாயில்லாப் பெண்ணுக்குச் சீர் இல்லை என்பார்கள்’.அதுபோல தமையன் இல்லாப் பெண்ணக்குச் சீர் மட்டுமல்ல பலமும் குறைந்து விடுகின்றது.தாலாட்டுப் பாடல்களில் அதிகமாகச் சொல்லப்படும் உறவுநிலை தாய்மாமன் உறவுநிலையேயாகும்.

                பெண்கள் தன் உடன்பிறந்தோர் கொடுக்கின்ற சீதனங்களை அவ்வபொழுது ஞாபகப்படுத்திக் கொள்வதுண்டு. குழந்தைப் பிறந்தவுடன் தாய்மாமன், குழந்தையின் பாலுக்காகப் பசு மாடு வாங்கிக் கொடுத்தல் வழக்கம். இதனை ‘ஆச்சிமாடு கொடுத்தல்’ என்று அழைப்பர்.

                            “மழைக்கால் இருட்டுலே

                                  மாரளவு சன்னிலிலே

                                  குடப்பால் கொண்டுவரும்

                                  குணமுள்ளார் உன் மாமன்”

    என்ற வரிகள் மூலம், தாய்மாமன் குழந்தைக்கு எவ்வளவு இன்னல்களுக்கு இடையில் பால் கொண்டு வரும் நிலையினை உணர்த்துகிறது.

                தாலாட்டுப் பாடல்கள் தாயின் மனவோட்டத்தில் அமையப் பெற்று ,குழந்தையை தாயானவள் எல்லா நிலையிலும் வர்ணித்துப்பாடக்கூடிய நிலையைக் காணமுடிகிறது.

    முடிவுரை

    • நாட்டுப்புறப் பாடல்களுக்கு முன்னோடியாகத் திகழ்வது தாலாட்டாகும்.
    • தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு என்பது உணரமுடிகிறது.
    • இருவர் கொள்ளும் காதலை விட, உடன் பிறந்தோர் கொள்ளும் வாஞ்சையை விட, ஏன் உலகளக்கும் அருளினையும் விட, பிள்ளைப் பாசம் ஆழமானது என்பதை உணரமுடிகிறது.
    • தாயும் சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலைதான் தாலாட்டு என்பதை உணரமுடிகிறது.
    • தாலாட்டுப் பாடல்கள் இருக்கும் வரை தாய்மாமனின் பெருமைகள் இருக்கும்.
    • தாலாட்டு தாய்க்குரிய இலக்கியமாகையால் அதில் தாய்மாமனின் பெருமையும், செல்வச் செழிப்பும், சீர்வரிசையும் சிறப்பாகப் போற்றக் கூடிய நிலையைக் காணமுடிகிறது.

    அடிக்குறிப்பு

    1.டாக்டர் சு.சத்திவேல் , நாட்டுப்புற இயல் ஆய்வு.ப-43

    1. தமிழண்ணல்,காதல் வாழ்வு,ப-10

    3.வ.த.இராமசுப்பிரமணியம் (உரையாசியர்),தொல்காப்பியம் பொருளதிகாரம் நூ-82

    4.அறிஞர்.வ.வே.சுப்பிரமணியன் சங்க இலக்கியம் மூலமும் தெளிவுரையும்,பரிபாடல்

        பா-6,52வது வரி

    1. தமிழண்ணல்,தாலாட்டு ப-11

     

    Share
  • ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்…சில விளக்கங்கள்!

    அன்புள்ள வல்லமை வாசகர்களுக்கு,

    திங்கட் கிழமை (12/05/2014) அன்று வல்லமை இதழில் வெளியான ’ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்’ என்ற பகுதியின் இறுதிப் பத்தியில்  “எனவே, ஆத்திசூடி நூலின் கடவுள்வாழ்த்தில்  ’ஆத்திசூடி’யாகக் குறிப்பிடப்படுவர் சமண தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரே என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்தே அன்றி வல்லமை ஆசிரியர் குழுவின்  தீர்மானமன்று!

    நன்றி!

     

    Share
  • ஓர் விண்ணப்பம்

     ராதா விஸ்வநாதன் index

    பிரம்மனே..
    பருவத்தில்
    கொடுத்தாய் பல
    இராசாயன மாற்றங்கள்
    வாழ்த்துகிறோம் அதற்காக

    இன்று….
    மீண்டும்
    உனக்கு ஓர் விண்ணப்பம்

    தகாத முறையில்
    பெண்மை தாக்கப் பட்டால்
    பெண்மையைக் காக்க
    கொடுப்பாய் புதியதொரு
    இரசாயன மாற்றம்

    அக்கணத்திலே கொடியதொரு
    நாற்றத்துடன் உடல் விஷமாகிட
    அருள் வேண்டுகிறோம்
    கலியுக பாஞ்சாலிகள்

    அநுப்புனர்…….
    வி. நந்திதா

    படத்துக்கு நன்றி

    http://thestorybehindthefaces.com/tag/picasso/

    Share
  • இருபது தரும் மயக்கமும் விழிப்பும்

    ராதா விஸ்வநாதன்7-images
    ஆறு வழிச் சாலைகள்
    அதில் குழிகளுக்கோர் குறைவில்லை
    எதையோ எட்டிப் பிடிக்கும் வேகத்தில்
    நகரப் பேருந்து
    கூட்ட நெரிசல் தரும் குலுக்கல்கள்
    ஆஹா….
    அன்று தென்றலாய் தீண்ட
    இன்றோ
    நெருப்பாய் எரிகிறதே
    காரணம்
    அன்று கும்பலில்
    நான் நின்றேன் இருபது வயதில்
    இன்று கும்பலில்

    இருபது வயதில் என் மகள்…….

    படத்துக்கு நன்றி

    http://www.worldrenew.net/our-stories/team/mark-vanderwees/dark-world-human-trafficking

    Share
  • எத்தனை புண்ணியம் தெரியுமோ?

    தஞ்சை வி. கோபாலன்
    அலுவலகம் சென்றுவிட்டு தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் வீடு திரும்பும் ரமணன் அன்று ஆறு மணிக்கே உற்சாகமாக வீடு திரும்பினான். அவன் மனைவி ரமாவுக்கு ஆச்சரியம். இன்று சம்பள தேதிகூட இல்லையே, ஏன் இவர் இப்படி அரக்க பரக்க வந்திருக்கிறார் என்று அதிசயித்தாள்.

    அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தாள். வழக்கம் போல் உடைகளைக் களைந்து மாற்றுடை தரித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “ரமா, கொஞ்சம் காபி கிடைக்குமா?” என்று கேட்பவன் இன்று உற்சாகம் குறையாமலே சொன்னான், “ரமா! சீக்கிரம் புறப்படு. பஜனோத்சவம் போகணும்னு சொன்னியே, இரண்டு டிக்கெட் இலவசமா கிடைச்சுது, வா, போகலாம். எங்க மேனேஜருக்கு வந்தது, அவருக்கு வேற ஏதோ வேலை இருக்காம், நீதான் உன் மனைவியை கூட்டிண்டு போயிட்டு வாயேன் என்று கொடுத்தார், வா போகலாம். இப்போ புறப்பட்டா தான் சரியான நேரத்துக்குப் போய்ச்சேர முடியும்” என்றான்.

    கடந்த நான்கு நாட்களாக அருகில் இருந்த பெரிய சபா ஹாலில் பஜனோத்சவம் என்ற பெயரில் மிகவும் பிரபலமான பஜனை கோஷ்டிகள் வந்து பஜனை பாடிக் கொண்டிருந்தார்கள். ரமாவுக்கு அந்த நிகழ்ச்சிகளில் ஏதானும் ஒன்றுக்காவது போய் பஜனை கேட்டுவிட்டு வரவேண்டுமென்று ஆசை. அவள் குடியிருந்த ஒரு கூட்டுக் குடித்தன வீட்டில் பலரும் இந்த பஜனை நிகழ்ச்சிகளுக்குப் போக ஆர்வம் கொண்டிருந்தாலும், அவர்களது வசதி அதற்கு இடம் கொடுத்தபாடில்லை.

    ஆனால் பெரிய சபாவில் உறுப்பினராக ஆகி, மாதாமாதம் கணிசமான தொகையைக் கட்டணமாகச் செலுத்தி கச்சேரிகளுக்குச் செல்லும் வசதி அந்த தம்பதியருக்கு இல்லை. அரசாங்க அலுவலகம் ஒன்றில் கீழ்நிலை கிளார்க்காகப் பணியாற்றும் ரமணனுக்கு வருமானத்துக்கும் குடும்பச் செலவுக்குமே திணறலாக இருந்த நிலையில் சினிமா, கச்சேரி என்றெல்லாம் போக வாய்ப்பு ஏது?

    யார் செய்த புண்ணியமோ, அவர்களுக்கு இலவசமாக அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சிப் பெட்டியொன்று கிடைத்தது. ரமாவுக்குப் பகல் பொழுதில் அதில் வரும் மெகா சீரியல்களில் மனதைச் செலுத்தி, அந்த சீரியல் கதைகளோடு மானசீகமாக ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால், கச்சேரி, சினிமா போன்ற வெளியுலக பொழுது போக்குகளில் எல்லாம் அவளுக்கு ஆசை ஏற்படவில்லை. போதாக்குறைக்கு அவளது இரண்டு வயது பெண் குழந்தையோடு பொழுதும் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்தது.

    போன வாரம் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு செய்த அந்த பஜனோத்சவம் அவளுக்கு மனதில் ஒரு ஆவலைத் தூண்டிவிட்டது. பெரிய கோஷ்டிகளின் பஜனைகள், அதிலும் பாண்டுரங்க விட்டல பஜனை என்றால், அந்தப் பாடல்கள், அவற்றின் துரித கதி, தாளகதி இவைகளில் எல்லாம் அவளுக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. இன்றைய தேதியில் தமிழகத்தில் மிகப் பிரபலமான பஜனைப் பாடகர்கள் இந்த விழாவில் வந்து பாடுகிறார்கள். அவர்கள் எல்லாம் அவள் மனதில் நிழலாடினார்கள்.

    அவள் பிறந்த ஊருக்கு ஒரு முறை சென்றிருந்த நேரத்தில் அங்கு அருகில் கோவிந்தபுரத்தில் நடந்த ஒரு பஜனைக்குச் சென்றிருந்தாள். அடடா! அந்த பஜனையைக் கேட்ட பிறகு நீண்ட நாட்கள் அந்த பஜனைப் பாடல்களின் தாளமும், பாண்டுரங்கனை நினந்து பாடப்பட்ட அந்தப் பாடல்களில் தவழ்ந்த பக்தி உணர்வும் அவள் மனதை விட்டு அகலவேயில்லை. அப்படிப்பட்ட பஜனை கோஷ்டிகள் பஜனை அவள் வீட்டுக்கு மிக அருகில் இப்போது நடைபெற்றாலும் அங்கு போய்ப் பார்க்கவும், கேட்கவும் அனுமதிக் கட்டணம் உண்டு என்பதால் அவள் ஆசை அடங்கிப் போயிற்று.

    அந்த நிலையில்தான் தன் கணவன் இன்று பஜனோத்சவம் போகிறோம், நுழைவுச் சீட்டு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சியோடு கிளம்பத் தயாரானாள். அவர்களுடைய இரண்டு வயதுப் பெண் அமிர்தா அந்தக் கூட்டுக் குடியிருப்பின் வாயிலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவளை இழுத்துக் கொண்டு வந்து முகத்தைத் துடைத்து ஆடை அணிவித்து அலங்காரம் செய்து, தானும் தயாராகப் புறப்பட்டு நின்றாள்.

    ரமணன் ஆபீசிலிருந்து வந்த உடையைக் களைந்துவிட்டு பெரிய கரை போட்ட வேட்டியை அணிந்து கொண்டு முழுக்கைச் சட்டையும், நெற்றி நிறைய குழைத்துப் பூசிய திருநீறுமாகத் தயாராக இருந்தான். பஜனை கேட்பது என்றால் கச்சேரிக்குப் போவதைப் போல போகமுடியுமா; சற்று பக்தி பரவசமாக, அதற்கேற்ற உடையணிந்து கொண்டல்லவா போகவேண்டும்.

    இவர்கள் அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் போகிறவர்கள் என்றால் பழக்க தோஷத்தில் குழந்தைக்குப் பசித்தால் ஏதாவது ஆகாரம், குடிக்க குடிநீர் போன்றவற்றை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்துக் கொண்டு எடுத்துப் போவார்கள். என்றுமில்லாத வழக்கமாக இன்று திடீரென்று வந்து வா சபாவுக்குப் போகலாம், பஜனை கேட்கலாம் என்று சொன்னதும் அதுபோன்ற எந்த தயாரிப்பும் இல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கணவனுடன் வெறும் கையுடன் புறப்பட்டுவிட்டாள் ரமா.

    இவர்கள் சென்று சபாவுக்குள் நுழைந்து தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வரிசையில் குறிப்பிட்ட எண்கள் உள்ள ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். குழந்தையை ரமா மடியில் வைத்துக் கொண்டாள். இவர்கள் உட்கார்ந்த சில மணித்துளிகளில் பஜனை தொடங்கியது. மேடையில் ஏழெட்டு பேர் அமர்ந்து கொண்டிருந்தனர். ஒரு கோடியில் மிருதங்கம், மறு கோடியில் வயலின். மற்ற பலரும் பாடுபவர்கள். நடுநாயகமாக உட்கார்ந்திருந்தவர் பஞ்சகச்சம் அணிந்து இடையில் ஒரு வஸ்த்திரத்தை அணிந்துகொண்டு மேல்சட்டை அணியாமல் நெற்றியில் குழைத்துப் பூசிய திருநீறு, சந்தனம், குங்குமம் திகழ கண்களை மூடிக்கொண்டு சிறிது தியானம் செய்துவிட்டு மெல்ல பஜனையைத் துவக்க, மற்றவர்கள் உடன்பாட, எடுத்த எடுப்பிலேயே பஜனை களைகட்டத் தொடங்கிவிட்டது.

    பாட்டு ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மேடையில் இருந்த ஒவ்வொருவராகப் அடியெடுத்துக் கொடுக்க மற்றவர்கள் தொடர்ந்து பாட, பாடகர்கள் தங்கள் முழுத் திறமையையும் காட்டிப் பாடிக் கொண்டிருந்தனர். நேரம் ஓடினதே தெரியவில்லை.

    ரமா பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சாதாரண ஊர். அங்குள்ள பஜனை மடத்தில் அவ்வப்போது ஸ்ரீராமநவமி, ஸ்ரீஜெயந்தி போன்ற நாட்களில் பஜனைகள் நடக்கும். அங்கெல்லாம் இதுபோன்ற பெரிய கூட்டமோ, பாடுவதற்கு புகழ்பெற்ற பாகவதர்களோ வருவது கிடையாது. அவரவர்க்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். எந்த வரிசையில் எந்தெந்த சுவாமிகள் பெயரில் பாடவேண்டுமோ, பாடிவிட்டுக் கடைசியில் அனுமன் வணக்கத்தோடு பஜனை முடியும், பிரசாதங்கள் வழங்கப்படும்.

    இங்கு பாடும் பாகவதர்களோ புகழ்பெற்றவர்கள். ஒவ்வொருவரும் தத்தமது திறமை வெளிப்படும் வண்ணம் பாடிக் கொண்டிருந்தார்கள். அதிலும் ரமா கிராமத்தில் கேட்டபடி சாதாரண பஜனைப் பாட்டுக்கள் இல்லை. இங்கே புதிதாக பண்டரீபுரம் விட்டலனின் புகழ் போற்றும் அபங் எனும் தனிவகை வேகம் நிறைந்த பாடல்கள். அந்த பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி தாளமிட்டுத் தாங்களும் பின்பாட்டுப் பாடிக் கொண்டிருந் தார்கள். இந்த அற்புதமான சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத வகையில் ரமாவின் குழந்தை முனக ஆரம்பித்தது.

    “என்னம்மா வேணும்? ஏன் முனகறே?” என்று குழந்தையை வினவினாள் ரமா.

    குழந்தை பதில் சொல்லாமல், வலது கை விரல்களை மடக்கி, கட்டைவிரலை மட்டும் நீட்டி வாய்க்குக் கொண்டு போய் தனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று ஜாடை காட்டியது.

    ரமா தன் கணவனிடம் கேட்டாள், “குழந்தைக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமாம், பாருங்கோ, எங்கேயாவது இருக்கா என்று” என்றாள்.

    அவனுக்கோ பஜனை சுவாரசியம். “இப்போ தண்ணீருக்கு எங்கே போறது. வரும்போதே கையிலே கொஞ்சம் பாட்டிலில் பிடித்துக் கொண்டு வந்திருக்கணும்.” என்றான்.

    அப்போது தங்களுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அம்மாள் கையில்லாத ரவிக்கையும், கழுத்து நிறைய நகைகளுமாக அமர்ந்து பஜனைக்கு ஏற்ப தாளமிட்டுக் கொண்டிருந்தாள். அவள் மடியில் ஒரு பிளாஸ்டிக் கூடை. அதில் ஒரு எவர்சில்வர் டப்பா, அதனோடு ஒரு பாட்டிலில் குடிநீர். அந்த அம்மாளைக் கேட்டுக் கொஞ்சம் தண்ணீர் வாங்கி குழந்தைக்குக் கொடுக்கலாமே என்று எண்ணமிட்டு, அதை ரமணனிடம் சொன்னாள் ரமா.

    அவன் மெல்லா அந்த அம்மாளிடம், “மாமி! குழந்தை தாகம் என்று அழுகிறாள். உங்க பாட்டில் தண்ணீரைக் கொஞ்சம் கொடுங்களேன். துளி கொடுத்துட்டு தந்துடறேன்” என்றான்.

    அந்த அம்மாளுக்கு பஜனை கேட்பதை இடையூறு செய்த கோபமோ என்னவோ, சட்டென்று திரும்பி “அதெல்லாம் இல்லை. எனக்கு வேணுன்னு கொண்டு வந்திருக்கேன். வேணும்னா நீங்க கையிலே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே. வெளிலே டிரம்ல வச்சிருப்பான் போய் கொண்டு வந்து கொடுங்கோ” என்று பட்டென்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

    ரமணனுக்கு அதிர்ச்சி. குடிக்க அவசரத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூட மறுப்பா. கிராமங்களில் சொல்வார்கள். கஞ்சனைப் பற்றி சொல்ல, அவன் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரமாட்டான் என்று. அதனை இன்று நேரடியாகப் பார்க்கவும், கேட்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டதே.

    கூசிக் குறுகிப் போனான் ரமணன். இப்படியும் மனிதர்களா? இவர்கள் பஜனை கேட்டதாலோ, அல்லது தாளமிட்டுக் கொண்டு விட்டலனைப் பாடியதாலோ இவர்களுக்கு என்ன புண்ணியம் வந்துவிடப் போகிறது. சே! என்ன மனிதர்கள் என்று மனதில் குமுறினான்.

    தன் மனதில் ஏற்பட்ட அவமானத்தை, எரிச்சலை அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டாள் ரமா. பெண் ஜன்மம் இரக்கம் உள்ளது என்பார்களே. இந்த ‘ரவிக்’ அதெல்லாம் இல்லாத ஜென்மம் போலிருக்கிறது. தாகத்தில் தவிக்கும் ஒரு குழந்தைக்குத் தன்ணீர் தர மறுத்துவிட்டு எனக்கு வேணும் என்று சொல்லும் அவள் பெரிய இடத்துப் பெண் என்பது தோற்றதிலிருந்தே தெரிகிறதே. இவர்களுக்கு மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சக்திகூட இல்லாமல் போய்விட்டதே. இவர்களுக்கெல்லாம் பஜனை ஒரு கேடா என்று நினைத்தாள் ரமா.

    ஒரு வழியாக குழந்தையை சமாதானம் செய்யவும் பஜனை முடியவும் சரியாக இருந்தது. கூட்டம் எழுந்து அந்த மண்டபத்தைவிட்டு வெளியேறத் தொடங்கியது. வாயிற்படியைத் தாண்டி மண்டபத்தின் முகப்புக்கு வரும் போது அந்த ‘ரவிக்’ பெண்மணி யாரிடமோ பேசிக்கொண்டு போவது கேட்டது ரமாவுக்கு.

    அவள் சொல்கிறாள், “இந்த பஜனையைக் கேட்டது எத்தனை புண்ணியம் தெரியுமோ? என்ன புண்ணியம் பண்ணினோமோ, இன்னிக்கு இதுபோல ஒரு பஜனையைக் கேட்க முடிஞ்சுது. அடடா! என்ன பாட்டு! மனசை அப்பிடியே உருக்கிட்டா” என்று.

    ரமாவின் மனம் உரக்கக் கூவியது, இவர்களுக்குக் கிடைத்த புண்ணியம் இவர்களது எண்ணத்தாலா அல்லது செயலினாலா? என்று. “என்ன முணுமுணுக்கிறே?” என்றான் ரமணன். “ஒண்ணுமில்லே சீக்கிரமா வாங்கோ, வீட்டுக்குப் போய் குழந்தைக்குக் குடிக்க ஜலம் கொடுக்கணம்” என்று நடையைக் கட்டினாள் ரமா.

    Share
  • மறுஜென்மம்

    நீச்சல்காரன்

    எடை கனமானாலும், வலுயில்லாததாக, தன்னால் மரபணு மாற்றப்பட்ட  மரத்துக் கட்டையால் அடிவாங்கியதால், பலமான காயமின்றி எழுந்த ஹான்ஹி வினித்தைத் தேடத் தொடங்கினார். மூலிகையின் வாசனை வழியே பயணிக்கத தொடங்கினார். தனது மூன்று மாதத் திருவிளையாடலின் பயனாக அந்த அபூர்வ மூலிகை வேர்களைக் கையாடல் செய்துவிட்டு, தனது திட்டப்படி இரகசிய இடம் நோக்கி மலை முகடுகளில் பயணித்துக் கொண்டிருந்தான் வினித்.
    யாரிந்த வினித்? கரட்டூர் கானதன்யாசி என்ற ஜோசியரின் வாக்குப்படி பெரிய அரண்மனையில், தன் இனத்திற்கே தலைவனாக இருந்தவனின்  மறுஜென்மம் தான் வினித்தாம். இந்த ஜென்மத்திலேயே முன்ஜென்மம் எடுக்கப் போகிறானாம். ஆனால் இதை எல்லாமல் துளியும் நம்பாத வினித்,  இந்திய மக்கள் தொகைக்  கணக்கின் படி  ஒரு மனைவி, மூன்று மகன்கள், நான்கு சகோதரிகள், இரண்டு தம்பிகள் என்று பெரிய குடும்பத்தின் மூத்த மகன். ஏறக்குறைய அனைத்துத் தொழில்களையும் முயன்று தோற்று, கடன்பட்டு, கஷ்டப்பட்டு, அடிபட்டு, ஊரைவிட்டு ஓடிவந்தவன். ஹான்ஹி என்ற சீன மருத்துவருடன் முதுமலைக் காட்டில் இதுவரை வசித்து வந்தான். ஹான்ஹி ஒரு இயற்கை மரபியல் ஆய்வாளர், எளிய மொழியில் சித்தர் என்றே சொல்லிவிட்டுப் போகலாம். தாவரங்கள் அல்லது விலங்குகளின் மரபணுக்களைச் சீண்டி புதிய குணங்களைக் கண்டுபிடிப்பதில் வல்லவர். வேப்ப மரத்தில் மாஞ்சுவையுடன் வேப்பங்கனிகள் உருவாக்குவார்;  மாமரத்தில் வேப்பஞ்சுவையுடன் மாங்கனிகள் உருவாக்குவார்; எளிதில் உரிக்கக்கூடிய தேங்காய், காரமான பாவற்காய்  என எவ்வளவோ செய்வார். ஆக ஒரு உயிரின் குணத்தையோ உருவத்தையோ மாற்றும் கலையில் கைதேர்ந்தவர். ஆனால் வெளியாட்களுடன் அவ்வளவாக பழகாதவர். முன்பு ஒருமுறை கள்ளக் கடவுச்சீட்டு பெற்று தான் நாடு கடக்க உதவிய  ஒரே காரணத்திற்காக வினித்தைத் தன்னுடன் இருக்க அனுமதித்தார்.

    வேறு வழியற்ற வினித்தும், தனது ஊருக்கே தெரியாமல் இவருடன் காட்டில் வசித்து வந்தான். ஹான்ஹி உடன் இருந்தபோது ஏதேனும் சூரணம், லேகியம் போன்று கற்றுவிட ஆசைப்பட்டான். முடியவில்லை. மாந்திரம், மாந்திரீகம், வசியம் என்றும் ஏதும் அமையவில்லை. பப்பாளி மரத்தில் தக்காளி பறிப்பது, ஆலமரத்தில் நாவல் பழம் பறிப்பது, சர்க்கரைப் பாறையிலிருந்து சர்க்கரை சுரண்டுவது, பேசும் குரங்கிடம் அடிவாங்குவது என்றே காலம் நகர்ந்தது. அந்த ஜோசியர் சொன்னதும் அவ்வப்போது இவன் நினைவுகளில் வந்து சென்றது. இறுதியாக ஒரு நாள் ஒரு உண்மை தெரிந்தது, ஹான்ஹி என்பவர் போன ஜென்மத்தில் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு சித்தராம், ஒரு அரிய மூலிகையின் பயனாக பழைய ஞாபகங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அதே தமிழ்நாட்டிற்கே வந்தவராம். இதைச் சற்றும் எதிர்பாராத வினித் விண்ணைத் தாண்டுமளவிற்குத் துள்ளல் கொண்டான். ஒரு மாசி மாத மாலை நேரத்தில் மண்டையைத் தடவியவாறே மல்லாந்து ஹான்ஹி படுத்திருந்த வேளையிலே, கட்டையால் கபாலத்தில் அடித்து அந்த மூலிகையைக் கைப்பற்றினான் என்பதே வினித்தின் முன்கதை. ஹன்ஹி வினித்தை நோக்கியும், வினித் இரகசிய இடம் நோக்கியும் ஓடிக் கொண்டிருக்க வானம் இருள் வசமானது.

    அந்த மூலிகையைக் குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் பழைய ஜென்மத்து உருவம் கிடைக்குமாம் மீண்டும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் இந்த ஜென்ம உடலை மீண்டும் பெறலாமாம். இதை நினைத்துக்கொண்டே வரவேண்டிய இடத்தை அடைகிறான் வினித். இராமசாமி பண்ணையாருக்கு ரெண்டு லட்சம், கருப்பாயி பேரனுக்கு ஒண்ண்ரை லட்சம், மனைவிக்கு அஞ்சு பவுன், தங்கைகளுக்கு மூணு பவுன், மகனுக்கு சைக்கள், கடைசியாக ‘உன் இனத்திற்கே தலைவன் என்று சொன்ன’ ஜோசியக்காரனுக்கு ஒரு பட்டு வேஷ்டி சட்டை என்று விருப்பப் பட்டியலையும் தயாரித்து முடித்தான். கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு,  எடுக்கப் போகும் ஜென்மத்தில் இந்த ஜென்ம ஞாபகங்கள் மறக்கக் கூடும் என்று யூகித்து, வேண்டிய குறிப்புகளைத் தெளிவாக காகிதத்தில் எழுதிக் கொண்டான். மூலிகையைப் பக்குவப்படுத்த தொடங்குகிறான்.  காபி இராகத்தில் பாடல் பாடிக் கொண்டே காபியைக் குடித்துக் கொண்டிருந்த வேளையிலே ஒரு ஞான உதயம். முன் ஜென்மத்தில் ஹான்ஹியைப் போல வேறு நாட்டில் பிறந்துவிட்டால் என்றும் யூகித்து, பல மொழிகளில் தான் யார் தனது குடும்பம் எங்கே உள்ளது எப்படி இப்படியானேன் என எழுதி வைத்துக் கொண்டான். எல்லாம் தயார் நிலையில் இருந்தது, சூரிய உதயம் வானைப் பிளந்தது. ஹான்ஹி எப்படியும் நம்மைப் பின் தொடர்வார் என யோசித்து, அவர் கண்ணில் பட்டுவிடக்கூடாது, விரைவில் முன்ஜென்மம் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் சீக்கிரமாக மூலிகைகளை உண்ணத் தொடங்கினான். கையில் காகிதங்களுடன், கண்கள் உருட்டி மயங்கி விழுந்தான். உலகம் இருண்டது…

    *                                   *                         *                                        *
    ஹான்ஹி இறுதியாக மூலிகை வேர் இருக்கும் இடத்தை அடைந்து எஞ்சியிருந்த வேர்களை சேகரித்தார், அவரருகே வினித்தின் உடையை மாற்றியவாறு இருந்த ஒரு கழுதையைக் கண்டார். ஏதோ அரண்மனைக் கழுதை போல, கழுதை இனத்திற்கே உரிய கம்பீரத்துடன் இருந்த அக்கழுதை ஏதோ பல்வேறு மொழியில் எழுதப்பட்ட காகிதங்களை மென்று கொண்டிருந்தது.!

    Share
  • மூன்றெழுத்துக்களின் போர்

    க.பிரபு தமிழன்friendshipindex

    உரிமை
    நம்பிக்கை
    எதிர்பார்ப்பின்மை
    இன்ப துன்ப பகிர்வு
    தோளோடு தோள் ,,,,,, இவைகளனைத்தும்
    அக்கால நட்பின் அணிகலன்களாகும்
    அன்று மூவாயிரம் சொற்கோவைகள்
    கொண்டது நட்பெனும் மூன்றெழுத்துச் சொல்
    இன்றோ “பணம்” என்ற மூன்றெழுத்துச் சொல்லுக்கு
    அடிமையாயுள்ளதடா

    இன்பமோ துன்பமோ
    தோழமையின் பலமொன்றே அன்று
    இன்றோ இன்பத்தின் பலமே
    ஆதிக்கத்திலுள்ளது பணத்திற்காக

    அன்றோ அடேய்
    உன் வறுமையும் என் வறுமையே
    என்றான்
    இன்றோ,  தோழா வறுமையா உனக்கு
    நான் பின்வருகிறேன்………………..

    நட்பின் பொருளறியா மூடர்களே
    நட்புக்காக உயிர்துறந்தவரின்
    மரபில் வந்தவன் நான்
    உன்  பணத்திற்கு நான் அடிமையாக மாட்டேன்
    பணம் கொண்ட உயிருள்ள உன் நட்பைவிட
    பேசாத தனிமையின் நட்பே
    எனக்கு போதுமடா

    படத்திற்கு நன்றி

    http://www.tumblr.com/explore

    Share