Tag: படக்கவிதைப் போட்டி

  • படக்கவிதைப் போட்டி 62-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. வெண்மணி சிந்துஜாவின் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

    working women

    நெஞ்சில் உரத்தோடும், நேர்மைத் திறத்தோடும் கரிப்புமணிகளான உப்பை உற்பத்திசெய்ய இந்தப் பெண்மணிகள் கொடும்வெயிலில், தம் கடும் உழைப்பையே மூலதனமாய் விதைக்கின்றனர். என்று மடியும் இவர்களின் மிடிமை? 

    இப்புகைப்படம் குறித்த நம் கவிஞர்களின் கருத்தாக்கங்களைக் கவனத்தோடு படித்துவருவோம்…வாருங்கள்!

    பகலவன் ஒளியில் தகதகவென மின்னும் உப்பளத்தில் வெயிலால் வெந்த உடலோடும் நொந்த மனத்தோடும் உழைத்துப் பிழைக்கும் இந்த அரிவையரின் துயர் தீர்வதெக்காலம்? எனும் தன் வேதனையைப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ஹிஷாலி.

    அலுப்பை போக்கும்
    அதிகாலை
    ஆண்டவன் அருளோடு 

    அவளின்  பயணம்…. 

    இறங்க மனமில்லை
    இறங்கியது கால்கள்
    சேலை வேட்டியானது
    செஞ்சிலுவை சட்டை போட்டு
    ஞ்சிக் கலையம் தன் கண்மறைக்க 

    கடகடவென்று
    கடல்நீரைத் தளங்களில் பாய்ச்சிக்
    கதிரவன் துணைகொண்டு
    மடமடவெனக்
    கோடுபோட்ட வரப்பில்
    மஞ்சள் வெயில் மணத்தோடு
    தகதகவென மின்னும் உப்பளத்தில் 

    தாகம் மறந்து
    தேகம் மெலிந்து
    சோகம் குவியும்
    சொப்பன வாழ்க்கையில் 

    உடலோடு உழற்றும்
    உப்புக் காற்றில்
    கருவாடெனக் காய்ந்து
    திருவோடு அறியாத
    பிள்ளைக்காக
    தினம் தினம் வெந்து தணியும்
    வேள்வியில் 

    உலகமே ருசித்திருக்க
    உள்ளம் உருகுதே எங்கள்
    உயிரும் கருகுதே 

    எள்ளும் தண்ணியும்
    இறைப்பதற்குள் 

    இறைவா
    எங்களை மீட்டெடுக்க வாராயோ
    இல்லை மாற்று வழி தாராயோ!

     *** 

    வருத்தும் வறுமையை விரட்ட, உருக்கும் கோடையில் ஓய்வின்றி உழைக்கும் இதுபோன்ற உயர்ந்த பெண்களாலன்றோ வானம் பொய்யாது பெய்கின்றது என நெஞ்சம் நெகிழ்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உருக்கும் கோடை வெயிலதிலே
    உப்பு சுமந்து பிழைக்கின்றாள்,
    வருத்தும் வறுமை போக்கிடவே
    வழிகள் தவறாய் எடுக்கவில்லை,
    தெருவில் தனியாய் இருந்தாலும்
    தீவிர உழைப்பு பிள்ளைக்கே,
    இருக்கும் இதுபோல் பெண்களால்தான்
    இன்னும் பெய்யுது மழையிங்கே…!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திக்கும் நேரமிது!

    அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
    அடிக்கு நெருஞ்சிப் பழம் என்று குறள் வடித்தார் வள்ளுவப் பேராசான். ஆனால் காலணியின்றித் தம் மெல்லடிகளில் கொப்புளங்கள் வருமளவிற்கு உப்பளங்களில் உழைக்கும் இப்பாவையரின் துயர்  நம் கண்களில் நீரை வடியவைக்கின்றது அல்லவா?

    நல்குரவென்னும் இடும்பையால் பல்வகைத் துன்பங்களையும் அயராது அனுபவிக்கும் இப்பெண்மணிகளின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும்; துன்பங்கள் அவர்தம் வாழ்வினின்றும் கடந்து போகவேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் கவிதையொன்று…

    ராமன் ஆண்டாலென்ன
    ராவணன் ஆண்டாலென்ன
    ராப்பகல் பாராமல் காலில்
    கொப்பளம் வந்தாலும் பொருட்படுத்தாது
    உப்பளத்திலிருந்து உப்பைச் சுமந்து சுமந்து
    சுமைதாங்கியாய்ப் போனாலும்
    அசரவில்லை என்றும் அதனால்
    உசரவும் இல்லை வாழ்க்கைமுறை
    இலவசமாய்க் கிடைக்கும் மிக்ஸியும்
    இலவசமாய்க் கிடைக்கும் செல்போனும்
    இன்னபிற சாமான்களும் வந்து
    என்ன உபயோகம்?
    அதை
    இயக்க காசு வேண்டாமா ?
    வயிற்றில் ஈரத்துணியை க்கட்டிக்கொண்டு
    ஓரமாய் அமர்ந்தால் பசி போகுமா?
    பெற்ற பிள்ளைகளுக்குச் சோறு போடுமா இலவசங்கள்?
    கற்ற (அரசியல்) வித்தை காட்டி
    உற்றவர்களும்உறவுகளும்
    உல்லாசத்தை அனுபவிக்க
    உழைப்பாளிகள் வெயிலோடும் மழையோடும்
    வறுமையோடும் என்று மாறுமோ இந்த நிலை என்று
    பொறுமை காக்கின்றனர் இதுவும் கடந்து போகுமென்று!

    அரசாங்கம் அளிக்கும் இலவசங்களான மிக்ஸியும், செல்போனும் ஏழைமக்களின் வயிற்றுப்பசிக்கு உணவாகா; உழைப்பு ஒன்றே அவர்களின் பசிப்பணி தீர்க்கும் அருமருந்து என்பதைத் தன் கவிதையில் இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (62)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13077391_1006164376104428_1216165247_n
    127289602@N03_rவெண்மணி சிந்துஜா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.05.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 61-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பிஞ்சுக் குழந்தையின் மெய்தீண்டலும், அதன் அமுதனைய சொற்கேட்டலும் அன்னைக்கு அளிக்கும் இன்பம் அளவற்றது.

    ”மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”
    என்ற பொய்யில் புலவரின் பொருளுரை இங்கு நம் நினைவுக்கு வருகின்றது.

    mom and baby

    திருமிகு. அனிதா சத்யத்தின் கைவண்ணத்தில் மிளிரும் இந்த வண்ணப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குப் பாங்காய்த் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் வல்லமையின் நன்றி!

    செங்கனி வாய்திறந்து இந்த மழலை உதிர்க்கும் சொல்முத்துக்கள், நம் கவிஞர்களிடம் பல கவிதை வித்துக்களை முளைவிடச் செய்திருக்கும். அவற்றை நாமும் இரசித்துவருவோம்!

    ”அப்பன் நம்மைக் காக்காவிட்டால் என்ன? அகிலம் பெரிது! வாழ நினைத்தால் வாழலாம்” எனத் தன் குழந்தைக்கு மனவுறுதியூட்டும் மறத்தாயைக் கவிதையில் வடித்துள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அப்பன் விட்டுச் சென்றாலும்
    அகிலம் பெரிது வாழ்ந்திடலாம்,
    தப்பென யாரையும் சொல்லவேண்டாம்
    தங்கமே உனைநான் வாழவைப்பேன்,
    எப்பவும் நல்வழி நடந்திடுவாய்
    ஏழைகள் நமைப்போல் பலருண்டு,
    குப்பையில் கிடைத்த வைரம்நீ
    கோபுரம் ஏற்றுவேன் தாய்நானே…!

    ***

    பொக்கைவாய்ச் சிரிப்பிலும், மழலைப் பேச்சிலும் மனம் மயக்கும் இந்தக் குழந்தையின் பலத்தால், குடிகாரப் புருஷனால் முழுகிய தன்குடி தலைநிமிர்ந்துவிடும் என்று நம்புகின்ற தாயைக் காண்கின்றோம் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையில்.

    குடிகாரப் புருஷனால்
    குடிமுழுகிபோனாலும்
    மடிநிறைய மலர்த்தோட்டமாய் நீ
    அடிவைத்ததும் துன்பங்களெல்லாம்
    ஓரடித் தூரத்தான்போயின
    உன் பொக்கை வாய் சிரிப்பிலும்
    உன் மழலைப் பேச்சிலும்
    என் கவலைகள்தூசாகிப் போயின
    மகனே உன் பலத்தால் உலகை ஆளும்
    மனத்திண்மைபெறுவேன்
    வெற்றிகள் பெற்று
    விரைந்து செயலாற்ற
    உற்றதுணை நீயே !
    பய பஞ்சம் பத்து நாளில் போகுமென்பார்
    நியதி நெறிகள் நிம்மதிப் பெய்தே
    உயர நம்மை உயர்த்திவிடும் கண்ணே
    அம்மா சொல்படி கேட்டுப் படித்து
    சும்மா சோம்பேறியாய் இல்லாமல் மற்றவர்
    மூக்கில் விரல் வைக்கப் படித்து
    முன்னுக்கு வா என் முத்தாரமே
    அச்சாரமாய்த் தருகிறேன் அன்பு முத்தம்

     ***

    இந்த வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெற்றிருப்பவரை அடுத்துச் சந்திப்போம்!

    இன்மையாலும் (வறுமை), கணவன் மற்றும் குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் இன்மையாலும், இப்புவியில் எத்தனையோ மங்கையர் உண்ண உணவின்றி, வாழ வழியின்றித் தம் வாழ்க்கையெனும் ஓடத்தை எதிர்நீச்சல் போட்டே செலுத்துகின்றனர். இதற்கிடையில், தம் குழந்தைகளைப் படிக்கவைத்து ஆளாக்க அவர்கள் படும்பாடோ வார்த்தைகளால் விவரிக்க இயலாத துயர காவியங்கள்!

    மிடிமை தன்னை அடிமைசெய்து வாட்டிவதைக்கின்ற போதினும், கோழையைப்போல் தன் மகளுக்குக் கள்ளிப்பால் ஊட்டாத ஏழைத்தாயை நம் கண்முன் நிறுத்தும் கவிதை நம்நெஞ்சைக் கனக்கச்செய்கிறது.

    வறுமை வாக்கரசி போட 
    சொந்த ஊரை விட்டு
    சொப்பனம் தேடி வந்தேன் 

    அப்பன் ஆத்தாளை மறந்து
    அடுக்குமாடி கட்டிடத்தில்
    அயராது உழைத்தேன் 

    இருக்க மனையில்லை
    இல்லறம் சுகமில்லை 

    பறக்கும் காகம் போல்
    கண்ட இடத்தில்
    உண்டு உறங்கி
    உயிர் வாழும் எனக்கு

    சிம்ம சொப்பனமாய்ச்
    சீமாட்டி நீ தரிக்க
    பெண்மையை உணர்ந்து 

    பேறுகாலம் பெற்றேன் 

    கள்ளி அறியாத்
    தாய்ப் பாலை
    சொல்லிச்  சொல்லி
    கொடுத்தேன் என்
    கட்டிச் செல்வமே 

    நான் கட்டையில்
    போகும் வரை 

    உன் கடன் தீராதடி
    முத்துச் செல்வமே
    முழுமதியே 

    இந்தச் சொத்தைத் தவிர
    வேறில்லையே
    இந்த உலகில்
    எழுந்து விளையாடு
    எதிர் நீச்சல் நீ போட…!

    பொன்னும் பொருளும் இல்லையென்று கலங்காது, பெற்ற குழந்தையையே பெறற்கரும் சொத்தாக நினைந்துபோற்றும் அன்னையின் உள்ளத்தைத் திறந்துகாட்டியிருக்கும் திருமிகு. ஹிஷாலியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (61)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13090003_1001997826521083_856943087_n

    126194543@N03_rஅனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 60-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கருவண்டு விழிகளோடும், களைசொட்டும் முகத்தோடும், விளக்கொளியில் கல்விகற்கும் கவின்மழலையே! இன்று நீ கற்கும் கல்வி நாளை உன்வாழ்வில் நிச்சயம் விளக்கேற்றி வைக்கும்! வெள்ளத்தால் போகாத, வெந்தணலால் வேகாத விழுச்செல்வமாம் கல்வி, இறுதிவரை உன்னைக் காக்கும்! உன் இடுக்கண் போக்கும்!

    child and a light

    திரு. வாசகன் பாலசூரியனின் கண்கவர் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளிஓவியருக்கும், தேர்வாளருக்கும் எம் நன்றிகள்!

    இனி, கவிதைகளில் நம் கவனத்தைச் செலுத்துவோம்!

    ***

    கடந்தகாலம் நோக்கிய சிந்தனைப் பயணத்தில் வானவில் தெரியவில்லை; வறுமைதான் தெரிந்தது இந்தக் குழந்தைக்கு. ”வறுமைகண்டு கலங்காதே கண்மணி! இளமையில் கல்! வளமையைக் காண்பாய்!” என்று மழலைக்கு நன்மொழி நவில்கின்றார் திருமிகு. ஹிஷாலி.

    கருப்பு வெள்ளை
    புத்தகத்தில்
    மெழுகுவர்த்தி வெளிச்சம்
    எண்ணம் மாறி
    வண்ணம் களையாத
    அதே நிறக் கண்கள் 

    மௌனங்கள் மட்டும்
    கடந்த காலத்தை நோக்கி
    பயணிக்கிறது 

    அங்கும்
    வானவில்லுக்கு பதிலாக
    வறுமைதான் தெரிந்தது 

    திரும்பி வந்தேன்
    திருப்பு முனையில் முடிந்தது
    இளமையில் கல் !

    ***

    ”குறைந்த தீபஒளியில் பாடம்பயிலும் குழந்தையின் எதிர்காலம், நிறைந்த அறிவொளியால் வளம்பெறட்டும்!” என வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இருட்டு வயலில்
    வெளிச்ச விதை விழுந்து
    முளைத்து
    வெளிவருகிறது ஒளியாக..

    அந்தக்
    குறைந்த வெளிச்சத்தில்
    குழந்தை படிக்கிறது,
    வறுமை இருளகல
    கல்வி ஒளிபெருக..
    ஒளி பெறட்டும்,
    வாழ்க்கை
    வளம் பெறட்டும்!

    *** 

    மழலையின் மலர்ச்சியான எதிர்காலத்திற்கு நல்வழியையும் நல்வாழ்த்துக்களையும் நல்கியிருக்கின்றார்கள் நம் கவிஞர் பெருமக்கள். 

    அடுத்து, இந்த வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துகொள்வோமா?

    ’கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வறுமைப்பிணிக்கு அருமருந்து கல்வியெனும் விழுப்பொருளே ஆகும். 

    ”ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து” எனத் தலைமுறைகள் தாண்டிநிற்கும் கல்வியின் தகைமையைப் போற்றுவார் வள்ளுவப் பெருந்தகை.

    தீச்சுடரை புறத்தேவைத்து, அறிவுக்கனலை அகத்துள்ளே மூட்டிக்கொண்டிருக்கும் இச்சிறுமியின் அடர்ந்த சிந்தனைகள் அங்கே படர்ந்திருக்கும் இரவைக் கலைக்கின்றன என்கின்றது ஒரு நயமான கவிதை…

    இயற்கையின்முன் 
    கைகட்ட வேண்டி இருந்தாலும்

    இருளை விசாரிக்கின்றன 
    ஒளியுமிழும் விழிகள்
    ஏற்றுக் கொண்ட சவாலுக்குச் 
    சாட்சியமான மெழுகுவர்த்திச் சுடரைச் 
    சற்றே 
    ஆவேசப்படுத்திக் காட்டுகிறது 
    மாற்றத்திற்குத் தயாராகும் 
    சிறுமியின் 
    வெப்பப் பெருமூச்சு
    இப்போது அடர்த்தியான 
    இரவைக் கலைக்கின்றன 
    அதனினும் அடர்த்தியான 
    அவளது சிந்தனைகள்

    ***

    சிறுமியின் சிந்தனைச்செறிவைச் சிறப்பாய்ச் சித்தரித்திருக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திரு. எஸ். வி. வேணுகோபாலனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***

    மின்சாரம் இல்லாவிட்டால் என்ன? கிடைத்திடும் சிறியஒளியில் தன் அறிவுச்சாரம் பெருக்கிடுவாள் இந்தத் திருநிறைசெல்வி என்கிறது மற்றொரு கவிதை…

    திருநிறைப்பாள் அறிவொளியால்….
    மின்சாரம் இல்லாவிடில் என்ன…?
    தன் சாரம் பெருக்குவாள்
    மின்னும் அறிவுச் சரமாவாள்..
    சின்ன ஒளியில் பெருநிலவாக.
    திருநீறு திருக்காப்பாக அறிவின்
    திருக்கண் விழ அவதானமாக
    திருட்டியம் பெருக்கும் செல்வி
    திரு நிறைப்பாள் அறிவொளியால்.

    (திருக்கண் – அறிவுப் பார்வை;  திருட்டியம் – ஞானம், அறிவு)

    திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள்!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி…(60)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    image

     

    திரு. வாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 59-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. சாமினி எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு வல்லமையின் நன்றி!

    a lady near the tides

     

    அலையெறியும் கடற்கரையோரம் நின்றிருக்கும் இந்த ஆரணங்கின் மனத்தில் பொங்கிவரும் எண்ண அலைகள் சுமந்துவருபவை துன்ப நினைவுகளா? இல்லை இன்பக் கனவுகளா?

    ஏந்திழையின் எண்ணங்களை எழுத்தில் படம்பிடிக்கும் வேலையை நம் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்! நமக்குத் தொழில் அவர்தம் கவிதைகளை இரசிப்பது மட்டுமே!

    ***

    வெளிநாட்டில் வேலைசெய்யும் கொழுநனின் நினைவோடு குலக்கொடியாள் தவித்திருக்க, அவள் தனிமைத்துயரை அவன் காதில்போடவே இந்த அலைகள் இவ்வாறு ஆர்ப்பரித்து ஓடுகின்றன என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நீலக் கடலின் அலையெல்லாம்
    நேரில் வந்து சேதிசொல்லும்,
    வேலை செய்யும் வெளிநாட்டில்
    விரும்பிச் சென்ற கணவன்நிலை,
    கோல மயிலிவள் தனிமைத்துயர்க்
    கண்ணீர் துடைக்க வந்ததுபோல்
    ஓல மிட்டே அழுதுமீண்டும்
    ஓடிச் செல்லும் அவனிடமே…!

    ***

    ”கைம்மாறு கருதாமல் கருங்கல்லைக் கட்டியணைக்கும் இந்தக் கடலலையானது நம்பிக்கை நீர்தெளிக்க, சுற்றத்தின் அருமையை முற்றாய் உணர்கின்றாள் இந்த மாது” என்று மொழிகின்றார் திருமிகு. ஹிஷாலி.

    விண்ணில் தெறிக்கும்
    சூரியன் வரவில்
    செலவானது எனது
    காலைக் கடன்
    கருணையுடன் முடித்து வைத்த
    உணவுத்துறை
    எழுச்சி முகமாய் தொடரும்
    கல்விப் பணி
    மாமியார் மருமகள்
    கூட்டு முயற்சி
    மாமனாரின் சமூகப் புரட்சி
    அலுவலகப் பட்டி மன்றம்
    ஆண் ஆதிக்கத்திலும் சிறு
    அகிம்சை அன்பு
    இதெல்லாம் முடித்தப் பின்
    ஈவு மீதிக்கு எடுத்துச்
    சென்றது
    மாலை நேர சுற்றுப் பயணம்
    மதிமயக்கும் மல்லிகை வாசம்
    சுட்டெரிக்கும் மணல் மேடு
    கைம்மாறு கருதாமல்
    கருங்கல்லைக் கட்டி அணைக்கும்
    கடல் அலை
    தும்பிக்கையாய் மாறி
    நம்பிக்கை நீர்தெளிக்க
    சுற்றத்தைவிட இன்பம்
    வேறில்லை என்று
    ஐயம் தெளிந்து
    புன்னகைத்தாள்!

    ***

    புத்திரனைப் பறிகொடுத்துச் சித்தம் குலைந்திட்ட சித்திரப்பாவையின் சோகத்தைத் தன் பாடலில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

    என் பாலனை ஈவிரக்கமின்றி
    ”””’
    விழுங்கிய கடலே
    என்னையும் விழுங்க மாட்டாயா
    ””””
    என்னையும் பயமுறுத்துகிறாயா
    எத்தியெறியும்அலையே அறிவாயா
    ””””
    புத்திரசோகம் எப்டியென்பதை
    சமீபத்தில் விவேக் அன்று
    ”””””
    சக்கரவர்த்தி தசரதன்!

    *** 

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டுவருவோம் இனி! 

    வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற வலிநிறைந்த பாடங்கள்தாம் எத்தனை எத்தனை! அதிலொன்று… காதலில் ஏற்படும் தோல்வி. காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுக்கக் காரிகையொருத்தி காலம் பார்த்திருக்க, அந்தக் காதலனோ அவளைக் கைகழுவிவிட்டுச் சென்றால் அவள் மனம் சிதறிப் போகாதோ?

    சேலையணிந்த சோலையாய்க் காட்சிதரும் பாவையின் காதல் கானல்நீராய்ப் போனதை, ஆசைகள் நீராசையாய் ஆனதைப் பேசும் கவிதை…

    அமுதென்று நினைத்து
    நஞ்சை அருந்தினேன்
    மலரென்று எண்ணி
    முட்களைச் சூடினேன்
    ஆசை அழைத்த வழி சென்றேன்
    நேசமுடன் பேசிய காதலன்
    பாதி வழியில் விட்டுப்போனான்
    பாழும் மனது குழம்பி, புலம்பிப்
    பல நேரங்களில் சஞ்சலித்தது
    என் காதல் ஜெயிக்காமல்
    போனதற்குக் காரணம் இறைவா நீ
    இதோஇந்த அலைகள் ஓடிவந்து
    பாறையில் மோதிச் சிதறியதுபோல்
    என் ஆசைகளும் சிதறிப்போயின…
    கடற்கரையில் ஆரம்பித்த காதல்
    கடற்கரையிலேயே கரைந்துபோனது
    ஆசையை மட்டும் நம்பிப்போனால் நிலைக்காது வாழ்க்கைப்படகு என்பது புரிந்தது
    நான் கவலை மறந்து சிரிக்கிறேன்
    கடற்கரையில் நின்று கவிதை பாடுகிறேன்இன்று!

    கடற்கரையில் நின்று சோககீதமிசைக்கும் சுந்தரியின் மனத்தைக் கவினுறக் காட்டியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.

     ***

    தரைமேல் பிறக்கவைத்த இறைவன் மீனவரைத் தண்ணீரில் பிழைக்க வைக்கின்றான். அவ்வாறு தண்ணீரில் பிழைக்கச்செல்லும் நம் இந்திய மீனவர், இலங்கைப் படையால் அடையும் கொடுமைகள் சொல்லி மாளா! சொல்லில் அடங்கா!

    மீன்பிடிக்கச் சென்ற தன் காதற்கணவன் உயிரோடு மீள்வானா? இல்லை இலங்கைப் படையால் மாள்வானா? எனப் பரிதவிக்கும் பாவையின் ஏக்கத்தைச் சுமந்துவரும் கவிதையொன்று நம் கவனம் கவர்கின்றது. 

    நீலக்கடல்தான்……எம்
    கண்ணீர்த் துளிகளை விழுங்கிய
    நீலக்கடல் தான்…..

    கரையோரம் தவிக்கவிட்டுக்
    கட்டுமரமேறி மீன்பிடிக்கச் சென்றவன்
    கரைக்கு மீண்டுவருவானோஇல்லை
    கட்டுமரமிழந்து கயவர் வலையறுககக்
    கைதாகிக் கண்ணீர்விட்டுக்கதறச்
    சிறைக்குள் அடைபட்டிருப்பானோ….

    சென்றவன் நடுக்கடலில்
    சிறீலங்காக் குண்டடிபட்டு
    செத்தவனாய் வருவானோ
    சிறுபேதை என்செய்வேன்

    வேதனைகள் தீர்க்கவும்
    விரைந்து தீர்வைச் சேர்க்கவும்
    யாரிங்கு வருவாரோ….
    ஆறுதல் தான் தருவாரோ…..

    கரைமேல் தவிக்கவும்
    கண்ணீரில் குளிக்கவும்
    நிலையாய் விதியெனவே
    நீலக்கடல் படைத்ததுவோ….

    கரையோரம் நிற்கும்
    கதியற்ற பெண்ணுக்கு
    கடல்தந்த பாடம் சீற்றந்தான்..
    கடலலையின் சீற்றமல்ல….
    கண்ணீர் அலைகளின் சீற்றந்தான்! 

    திரு. இளவல் ஹரிஹரனின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள்!      

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி … (59)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12965966_994374230616776_995946079_n

    112795645@N05_rசாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 58-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மனங்கவரும் இந்தப் பனங்காய் வண்டியை ஓட்டிச்செல்லும் சிறார்களைக் காண்கையில் நம் உள்ளமும் குழந்தையாய் மாறிக் குதூகலிக்கின்றது.

    nungu vandi

    காலச்சக்கரமும் இந்த வண்டிச்சக்கரங்களைப் போலவே சுழன்றுசெல்லும் இயல்புடையது என்பதை இத்தருணத்தில் நம் மனம் எண்ணிப்பார்க்கின்றது.

    நுங்குவண்டி கண்ட நம் கவிஞர்கள் மனத்தில் நுங்கும் நுரையுமாகக் கற்பனைவெள்ளம் கரைபுரண்டோடத் தொடங்கியிருக்கும். அந்தக் கவிவெள்ளத்தில் நாமும் நனைந்துவரலாம்!

    ***

    ’நொங்குவண்டி பூட்டிக்கிட்டுச் சந்துபொந்தெல்லாம் சுற்றிவரும் சிறுவர்களின் மகிழ்வைத் தன்கவிதையில் கவினுறப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ஹிஷாலி. 

    நொங்கு வண்டி பூட்டிக்கிட்டு
    சந்து பொந்து தாண்டி வந்தோம்
    பத்து மரக் காற்றிலும்
    பட்ட துன்பம் தான் மறந்தோம்
    எட்டு திசை போனபின்பும்
    விட்டு மனம் போகலையே
    ஒட்டு மொத்த சிறுவர்களுக்கும்
    உஷ்ணம் தனிக்கும் நொங்கு வண்டி 

    ***

    இற்றைய வாழ்வில், உடலுக்கும் உள்ளத்துக்கும் உறுதிபயக்கும் பழைய விளையாட்டுக்கள் எல்லாம் காணாமற்போய்க் கணினி விளையாட்டுக்களே கதியென்று சிறார்கள் மாறிவிட்டிருப்பது கண்கூடு. அதனை விளக்கும் கவிதை…

    வெப்பம் நிறைந்த கோடையிலே
    விளையா நுங்கு குடித்தபின்னே
    அப்பா லெறிந்த கூந்தலிலே
    அழகு வண்டி தனைச்செய்து
    கொப்பை ஒடித்தே ஓட்டியநாள்,
    கணினி உலகில் மெய்மறக்கும்
    இப்போ துள்ள பிள்ளைகட்கே
    இலாமல் போன பழங்கதையே…!

     *** 

    வெம்மை தணிக்கும் நுங்கையுண்டு அதிலே வண்டிசெய்து ஓட்டிமகிழும் பாக்கியத்தை இழந்துவிட்ட தலைமுறை இது!” என்று இன்றைய குழந்தைகளின் நிலைக்காக இரங்கியுரைக்கும் இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.

    ***

    இயற்கையை மறந்தோம்…கூடவே இயற்கையோடு நம்மை இணைத்துவைக்கும் விளையாட்டுக்களையும்! ”நுங்கே அறியாத் தலைமுறைக்கு நுங்குவண்டி குறித்துமட்டும் என்ன தெரிந்துவிடப்போகிறது? இயற்கையன்னையே என்செயப் போகிறாய் எம் இளைய தலைமுறையை?” எனச் சீற்றத்தோடு வினா எழுப்பும் கவிதை…

    வனங்கள் தொலைந்தது போல நம்
    வாழ்வின் வசந்தங்கள் தொலைந்தனவோ……
    மரங்கள் தொலைந்தது போல நம்
    மனம்லயிக்கும் விளையாட்டுகள் தொலைந்தனவோ…..
    கூடிவிளையாடும் கூத்துகள் தொலைந்து
    கணிணி விளையாட்டில் தனிமைப்பட்டனவோ…..
    காலக்கொடுமையால் இயற்கையைத் தொலைத்து
    மூச்சுத்திணறும் செயற்கையில் வாழ்கிறோம்.
    முன்னோர் காட்டிய பாதை தொலைந்து
    முட்டுச்சந்தில் முட்டிமோதி வாழ்கிறோம்.
    இளந்தலைமுறை மீதொரு இறுக்கத்தை
    எதற்குச் சுமத்துகின்றீர் கல்வியின் பெயரால்
    பள்ளிக்கூடங்கள் சிறைச்சாலைகளா
    மனனஞ்செய வைக்கும் தொழிற்சாலைகளா….
    நுங்கையே மறந்த சிறுவர்க்கு
    நுங்குமட்டை வண்டியோட்டத் தெரியுமா….
    சுற்ற மறந்த பம்பரங்களாய்
    துள்ள மறந்த கோலிக்குண்டுகளாய்….
    தாவ மறந்த கிட்டிப் புள்ளாய்….
    தாண்ட மறந்த குதிரைகளாய்
    பூப்பறிக்க வரமறந்த சிறுமிகளாய்…..
    பாண்டியாட மறந்த நொண்டிகளாய்…….
    சிறுமணல்வீடு கட்டமறந்த சிறுசுகளாய்
    காக்காக்கடி மறந்த வெள்ளந்திகளாய்….
    பல்லாங்குழி விழ மறந்த பட்டுகளாய்….
    தட்டாங்கல் மறந்த தளிர்களாய்……

    இயற்கையை மறந்து இயற்கையை இழந்து
    இயற்கையைத் தொலைத்து இயற்கையைக் கலைத்து
    எங்கெங்கோ திரிகின்றோம்
    இழந்தனவற்றை அறியாமலேயே….
    என்செயப்போகின்றாய் இயற்கையன்னையே….
    எம் இளந்தலைமுறையையே!

    பழைய விளையாட்டுக்கள் அனைத்தும் பொய்யாய்ப் பழங்கதையாய் வழக்கொழிந்துவரும் வேதனையை உணர்வுபூர்வமாய்த் தன் ஆக்கத்தில் சுட்டியிருக்கும் திரு. இளவல் ஹரிஹரனுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி _ (58)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12968737_990685257652340_1672247774_n

    95475568@N05_rவெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (57)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12900166_984511154936417_1924486583_n
    67945931@N04_rராஜ எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி … (56)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12884590_979195432134656_1686634621_n

    95494202@N04_lபுதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி … (55)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12825123_974125405974992_638137298_n

    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (54)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    10578393_970813379639528_1917690085_n
    67945931@N04_rராஜ எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி … (53)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    24859223112_cf7b061765_z

    பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (5.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share