Tag: க.பாலசுப்பிரமணியன்

  • கற்றல்  ஒரு  ஆற்றல் -30

    க. பாலசுப்பிரமணியன்

    மூளையும் கற்றலும்

    education-

    ஒலி ஒளி வடிவங்களை வெளி உலகிலிருந்து பெரும் மூளை இவ்வளவு புத்திசாலித்தனமாக வேலை பார்ப்பதற்கு அதனுள் என்னதான் இருக்கிறது என்ற கேள்வி எழுகின்றது. மூளை அறிவியல் நிபுணர்களின் கணக்குப் படி மூளைக்குள் கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் ( Trillion) ( சுமார் நூறு பில்லியன்) நியூரான்கள் இருக்கின்றன. புரியும் படி சொல்லப்போனால் இந்த பூமியிலே இருக்கின்ற மனிதர்களின் எண்ணிக்கையைப் போல் கிட்டத்தட்ட 166 மடங்கு எண்ணிக்கையில் அவைகள் உள்ளன. ஒரு நொடிக்கு ஒரு நியூரான் என்று எண்ணத் தொடங்கினோமானால், எண்ணிமுடிக்க 3171 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டிருக்கின்றனர்.  என்னே இந்த மூளையின் சக்தி !

    ஒரு நாளைக்கு சுமார் ஐந்து  லட்சம் நியூரான்கள் அழிந்து கொண்டிருக்கையில் அதே அளவுக்கான நியூரான்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த நியூரான்கள் ஒன்றோடு ஒன்று இணைத்து ஒரு வலைத்தளத்தையே மூளைக்குள் உருவாக்குகின்றன. இந்த இணைப்புக்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டும், விலகிக்கொண்டும், மாறிக்கொண்டும் இருக்கின்றன. எரிக் காண்டல் என்ற ஒரு மூளை நரம்பியல்  நிபுணர் இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி கற்றலுக்கும் இந்த வலைத்தள இணைப்புகளுக்கும் இருக்கின்ற தொடர்பைப் பற்றி செய்த ஆராய்ச்சிக்கு  அவருக்கு 2000-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    அவர் தன் ஆராய்ச்சியின் மூலமாக எவ்வாறு மூலையிலுள்ள வலைத்தளங்கள் சிறிய செயல்களின் போதும் கற்றலின் போதும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை விளக்கினார். இந்த ஆராய்ச்சி கற்றலைப் பற்றிய பல  பரிமாணங்களை விளக்கவும் மாற்றி அமைக்கவும் உதவியது.

    இந்த நியூரான்களில் ஊக்குவிக்கும் நியூரான்கள் (Excitory neurons ) என்றும் நிறுத்துகின்ற (சமநிலைப்படுத்தும்) நியூரான்கள் (Inhibitory neurons) என்றும் இரண்டு வகை உண்டு. முதல் வகை சிந்தனைகளை ஊக்கிவிக்கவும், கற்றலை  மேம்படுத்தவும், கற்றலை உணர்வுகளுடன் ஒன்றுபடுத்தவும் செயல்படுகின்றன. இரண்டாவது வகை உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் அமைதியை காக்கவும் நிலைப்படுத்தவும் உதவுகின்றன. ஒரு  மனிதனின் மூளையில் இப்படிப்பட்ட நியூரான்கள் வளம், செயல்பாடுகள், வேகம் போன்ற பல நிகழ்வுகளால் கற்றல் என்ற செயல் பாதிக்கப்படுகின்றது. ஆகவே கற்றலைப் பொருத்தவரை எந்த இரண்டு மனிதர்களின் நிலையையோ அல்லது முறைகளையோ, கற்றலின் வழிகளையோ அல்லது கற்றல் வளத்தையோ ஒப்பிடுதல் அறிவுபூர்வமான செயல் அல்ல.

    கற்றலின் முறைகளிலும் வெளிப்பாடுகளிலும் தாக்கம் ஏற்படுத்தும் முக்கிய இரண்டு உள்ளீடுகளாக மரபணுக்களையும் (genes) மற்றும் சூழ்நிலைகளையும்(Environment) முன்னிலை வைக்கின்றனர். ஆனால் சூழ்நிலைகளால் மரபணுக்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை பெரிதளவும் மாற்றி அமைக்க முடியும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆகவே கற்றல் சிறப்பாக நடக்க நல்ல சூழ்நிலைகள் மிகவும் அவசியமானவை. அப்பொழுதான் மூளையில் கற்றலின் காரணமாக ஏற்படும் நியூட்ரான் வலைத்தளங்கள் மேன்மையாகவும் உறுதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

    பல்லாண்டுகளுக்கு முன்னாள் “இளமையில் கல்” என்ற முதுமொழிக்கேற்ப கற்றலின் திறன் வயதுடன் குறைகின்ற வாய்ப்பினை விளக்கியிருந்தனர்.

    தற்போதைய ஆராய்ச்சியில் மூளையின் தொடர் உருமாற்றங்கள் (Neural Plasticity) காரணமாக “வாழ்க்கை முழுதும் கற்றல்” (Life Long Learning) என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

    எவ்வளவுக்கெவ்வளவு மூளைக்கு நாம் வேலைகொடுக்கிறோமோ அந்த அளவுக்கு அதன் ஆற்றல் தொடர்ந்து இருப்பது மட்டுமின்றி வளர்ந்தும் வருகிறது. அதனால் தான் கவிஞரின் பாட்டு “கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு” என்ற பாடலின் கருத்தின் சிறப்பு தெரிய வருகின்றது.

    மருத்துவ வல்லுனர்கள் முதுமை அடைந்தவர்களிடமும் மூளைக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். விளையாட்டாக ஒரு மனநல மருத்துவர் கூறுகின்றார் “உங்களுக்கு எழுபது வயதாகிவிட்டதா? உங்களிடம் அதிக நேரம் உள்ளதா? வேறு ஏதாவது மொழி கற்றுக்கொள்ளுங்களேன். உங்களுக்கு தொண்ணுறு வயதாகி விட்டதா? கைகால்களை நன்றாக அசைக்க முடிகின்றதா? கொஞ்சம் வயலின் கற்றுக்கொள்ளுங்களேன்”

    மூளையை தொடர்ந்து நாம் உபயோகித்து வந்தால் மூளையைச் சார்ந்த பல வியாதிகளிலிருந்து நாம் தப்ப முடியும் என்று அறிவுறுத்துகின்றனர்.

    கற்றல் – பிறக்கும் பொழுதிலிருந்து கடைசி மூச்சு உள்ளவரை நடக்கும் ஒரு ஆக்கபூர்வமான  செயல்!!

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் – 29

    க. பாலசுப்பிரமணியன்

    படிக்கும் திறன் (Reading Skills )

    education-

    “புத்தகத்தை எடுத்துக் கொஞ்சம் படியேண்டா” என்று தன் மகனைப் பார்த்துச் சொல்லாத பெற்றோர்களே இருக்க முடியாது. “புத்தகம் என்னவோ அவன் கையிலேதான் இருக்கு, ஆனால் மனசு எங்கேயோ அலை பாயுது ” என்றும்  “புத்தகத்தை கையிலே வைத்துக்கொண்டு இருக்கிறான், கண் திறந்துதான் இருக்கு, ஆனால் தூங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் குழந்தைகளை பல விதங்களில் வர்ணிக்கின்ற பெற்றோர்களை நாம் பார்த்திருக்கின்றோம்.

    படிக்கும் பொழுது என்ன நடக்கின்றது? படிப்பது எல்லாம் நம் மனதில் படிகின்றதா? மூளை படிப்பது அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுகிறதா? படிப்பது அனைத்தையும் நாம் புரிந்து கொள்கின்றோமா? படிப்பதில் எவ்வளவு விழுக்காடு நம் நினைவில் நிற்கின்றது? அது எவ்வளவு காலம் மனதில் நிற்கின்றது? நாம் படிப்பதை  எல்லாம் மூளை எங்கே அடைத்து வைக்கின்றது?  எல்லாம் புரியாத புதிரா? மூளை நரம்பியல் வல்லுனர்களின் ஆராய்ச்சிகள் கற்றலைப் பற்றியும் நினைவைப் பற்றியும் என்ன சொல்லுகின்றன?

    சற்றே யோசித்துப் பாருங்கள்… தமிழிலும் சரி, மற்ற மொழிகளிலும் சரி ..தற்போதைய எழுத்து வடிவங்கள் எத்தனை நூற்றாண்டுகளாக  வழக்கத்தில் இருக்கின்றன ? இதற்கு முன்னால்  இருந்த எழுத்து வடிவங்கள் எப்படி இருந்தன? அவைகளை நாம் இப்போது பார்த்தால் நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமா? ஆனால், அந்தக் காலத்து மக்களுக்கு அந்த வடிவங்கள் எப்படி எளிதாகப் புரிந்தன? உலக மாற்றங்களை மூளை எவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளுகிறது?

    ஆராய்ச்சியாளர்களிடம் பேசினால் அவர்கள் சொல்லுவார்கள் “கண்கள் உங்கள் எழுத்துக்களை புரிந்துகொள்வதில்லை. அவைகளுக்கு எந்த எழுத்தும் எந்த மொழியைச் சார்ந்தது என்று தெரியாது. அவைகள் தாங்கள் பார்க்கும் ஒளி வடிவங்களை மட்டும் திரைகளில் பதிவு செய்து மூளைக்கு அனுப்புகின்றன.” ஆங்கில இலக்கிய மேதை திரு பெர்னார்ட் ஷா அவர்கள்  அழகாகச் சொன்னார் ” Words are only postage stamps delivering the object for you to unwrap.” வார்த்தைகள் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் தபால் தலைகளைப் போன்றவை”

    ஆராய்ச்சியாளர்களின் கருத்துப் படி “Words are nothing but art museums in our brain- in the form of straight lines, circles, and other art forms. There is no such thing for the eye called words!! ” வார்த்தைகள் மூலையில் ஒரு கலைக்கூடம் போன்றவை. – நேர்கோடுகள், வட்டங்கள் மற்றும் மாறுபட்ட கலை வடிவங்கள். கண்களைப் பொருத்தவரை அவைகளுக்கு வார்த்தைகள் என்றால் என்னவென்று தெரியாது”… விந்தையாக இல்லையா?

    வார்த்தைகளையும் அறியாமல் மொழிகளையும் அறியாமல் இந்தக் கண்கள் என்ன சாதனை படைகின்றன ! அப்படியானால் நமக்கு வார்த்தைகளும், மொழிகளும், அதன் பொருள்களும் எவ்வாறு புலப்படுகின்றது?

    இயற்கையின் அமைப்பில் இந்த மூளை ஒரு ஆயிரம் சூப்பர் கணினிகளின் வேலைகளைச் சேர்த்துச் செய்கின்றது. கண்களால் அனுப்பப்படும் ஒளி வடிவங்கள் மூளையின் பல பகுதிகளுக்கு அனுப்பபடுகின்றன. மூளையில் கற்றல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி இந்த வடிவங்களில் நேர்கோடுகள் ஓரிடத்திற்கும் வட்டங்கள் மற்றொரு இடத்திற்கும் அது போல் மற்ற வடிவங்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளிலும் பதிவாகின்றன. தன்னுடை முன் நினைவுகளோடு அவைகளை பரிசீலிக்கும் மூளை அவைகளை வார்த்தைகளாகவும் வடிவங்களாகவும் அமைக்கின்றது. இந்த செயல் நடப்பதற்கு மூளையின் பல்வேறு பாகங்கள் கைகோர்த்து ஒன்றாக வேலை செய்கின்றன.

    வடிவமைக்கப்பட்ட இந்த எழுத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும், வடிவங்களுக்கும் பொருள் கொடுப்பது (Meaning  Making) மூளையின் ஒரு அசாதரணமான வேலை. இது அற்புதச் செயல், ஆனால் ஒரு நொடியின் சில விழுக்காடுகளில் இந்தச் செயல் மிகச் சாதாரணமாக நடந்து விடுகின்றது.

    இதைப் பற்றிய மேலும் சில அறிய தகவல்களை நாம் மேற்கொண்டு பார்ப்போம். ஆனால், படித்தல் என்ற ஒரு செயலுக்குப் பின்னே நடக்கின்ற ஒரு பெரிய போராட்டத்தை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

    (தொடரும் )

    Share
  • நல்லதொரு குடும்பம்..

     

    ” வாசு,  சிவா… சீக்கிரம் வந்து சாப்பிட்டு போங்கடா.. அடுத்தவா சாப்பிட வேண்டாமா”  சமையல் அறையிலிருந்து குரல் கேட்க, இருவரும் சுவரில் மாட்டியிருந்த அலுமினிய தட்டுக்களை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல, அதே தட்டில் சாப்பிட அடுத்த இருவர் தயாராக இருக்க… ஒரு கூட்டுக் குடும்பத்தில் இது முதல் காட்சி.

    “எனக்கும் பசிக்கிறது… அவர்கள் சாப்பிடும் வரை நான் எதுக்கு காத்துக்கொண்டிருக்க வேண்டும் ” என்ற மணியின் துயர் கண்டு  “இதோ வந்துட்டேன் ” என்று அத்தை கல்சட்டியிலே தயிர் சாதத்தை பிசைந்து வந்து “இப்படி உட்காரு.. நான் கையிலே உருட்டி போடறேன்… சாப்பிடு ” என்று ஆறுதல் வார்த்தை கூற, அடுத்த   மூன்று பேர் தரையில்  உட்கார, அந்த சோற்று உருண்டைகளுக்கு நடுவே பழங்குழம்பை சுட வைத்து விட, சப்புக் கொட்டி சாப்பிடும் அந்த வீட்டு சிறுவர்களுக்கு சோற்றோடு  அன்பையும் கலந்து ஊட்டும் அந்த வயதான அத்தை… இது இரண்டாம் காட்சி..

    சிறிய ஹாலின் ஓரத்தில் அமர்ந்து வெற்றிலை பாக்கை ருசித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கும் அப்பா, சித்தப்பா, வெளி வராண்டாவில் ஒருபடி அரிசியை ஊறப்போட்டு இட்லிக்கு மாவை அறைத்துக்கொண்டிருக்கும் அம்மா, பழைய மர்பி ரேடியோவில் “காற்றினிலே வரும் கீதம்” பாட்டை ரசித்துகொண்டிருக்கும் சித்தி, இவர்களுக்கு நடுவே பள்ளி பரிட்சைக்காக படித்துகொண்டிருக்கும் ரவி, “கொஞ்சம் மெதுவா படிடா. நாங்களெல்லாம் பாட்டு கேட்டுகொண்டிருகிறோம் என்பது தெரியாம கத்தறே ” என்று முனகும் அக்கா,,,, இது குடும்பத்தின் மூன்றாவது காட்சி…

    ஒரு மண் பொந்துக்குள் முடங்கிக்கிடக்க உள்ளே செல்ல போட்டியிடும் முள்ளம்பன்றிகள்  ஒன்றையொன்று  தள்ளிக்கொண்டு உள்ளே  ஒதுங்க,அதன் கூர்மையான முற்கள் உரசி அடுத்ததின் உடலிலிருந்து ரத்தம் கசிவது போல்,  ஒரே ஹாலில் எல்லோரும் போர்வையில் படுத்துகொள்ள “நீ தள்ளிப் போடா .. ராத்திரி முழுதும் காலாலே  மிதித்துத் தள்ளுவே ” என்று அம்மா அண்ணனை விரட்ட.”நான் மொட்டை மாடியிலே படுத்துக்கப் போறேன் போ ” என்று அவன் கிளம்ப.. ” வேண்டாண்டா.. ராத்திரில காத்து கருப்பு அடிச்சுடும் ” என்று கவலையோடு அம்மா பதில் சொல்ல.. ..,,நான்காம் காட்சி.

    “என் செருப்பு அறுந்து போச்சே ” என்ற கவலையில் இருக்கும் சிவாவிடம் ” எனக்கு லீவ் தாண்டா.. என் செருப்பை போட்டிண்டு போ .. உன்னோட செருப்பை மதியம் தைத்து வைக்கிறேன் “என்று சொல்லும் மணியிடம் புன்சிரிப்புடன் “தேங்க்ஸ் .மணி.. அப்படியே உன்னோட புது சட்டையையும் கொடு ஒரு நாளைக்கு “என்று கேட்கும் மணி.. இவர்கள் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள் மற்றவர்களுடைய துன்பத்தை அறிந்துகொள்ளும் உறவுகளின் வழியில் ஒரு குடும்பம் … ஐந்தாம் காட்சி…

    வயதான காலத்தில் வாத நோயால் நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளே மெதுவாக நகர்ந்தே செல்லும் தாத்தாவை இன்று குளிப்பாட்ட முடியாமல் சுரத்தில் தவிக்கும் பாட்டிக்கு பதிலாக மெதுவான சூட்டில் அவர்மேல் நீரூற்றி தேய்த்து துடைத்து விட்ட பேரனைப் பார்த்து “நல்ல பிள்ளை.. ஆனால் பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சே ” என்று தாத்தா வருத்தப்பட … தாத்தாவுக்கு உதவிசெய்யப் போய் வகுப்பிற்கு தாமதமாக வந்து வகுப்பிற்கு வெளியே காவல் தெய்வமாக நிற்கும் அந்தப் பிள்ளை… ஆறாம் காட்சி..

    மலரும் நினைவுகள்…

    அன்பால் பிணைக்கப்பட்ட உறவுகள்.. ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொண்டு மகிழ்வில் திளைக்கின்ற ஒரு குடும்பம்… கற்பனையல்ல… இது நாம் பல்லாண்டுகளாய் வாழ்ந்து வந்த முறை..

    மாறுகின்ற காலத்தில்..

    உறவுகளை நொறுக்கி உயரங்களைத் தேடுகிறோம்..

    அன்புப் பாலங்களை உடைத்து அகலமான வீடுகளை கட்டிக்கொண்டிருக்கின்றோம்.

    வாரம் ஒரு முறை வீதி உலா சென்று சொந்தங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றோம் ..

    மனிதர்களை இழந்து பொருள்களை வீட்டில் அடைத்துகொண்டிருக்கின்றோம்

    சிந்திக்க ஒரு நொடி…

    “நல்லதொரு குடும்பம்.. பல்கலைக் கழகம்..” பாடிய பாவலனை நன்றியோடு நினைக்கவேண்டும்…

    மே 15….. உலக குடும்ப தினம்… !!

     

     

    Share
  • உலக செவிலியர் தினம் (மே 12)

    க. பாலசுப்பிரமணியன்

    nurse

    தாய்மையை  தத்தெடுத்த தனிக்குலமே,

    தூய்மையைத்  தோள்சுமக்கும் நற்குணமே !

    துயர்நீக்கப்  பறந்துவரும் புள்ளினமே

    துயில்காத்துக் கண்விழிக்கும் உறவினமே!

     

    கண்களிலே கொண்டதுவோ கருணைமொழி

    கைகளிலே சேவைசெய்யும் கடமைவழி

    கனிவுடை சொற்களெல்லாம் ஆற்றும்வலி

    கலங்குகின்ற மனம் காக்கும் தீபஒளி !

     

    கருவோடு பிறவாதாது உன் உறவன்றோ

    கண்ணுக்குத் தெரிந்த கருணை வடிவன்றோ

    மழலைக்கும் முதுமைக்கும் கண்மணியன்றோ

    மாண்புடைய சேவைக்கு நீ அணியன்றோ!

     

    கூகிள் படத்திற்கு நன்றி.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 27

     க. பாலசுப்பிரமணியன்

    மேடைப் பேச்சு – திறன்கள்

    education-1-1

    கிட்டத்தட்ட ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால்  நடந்த ஒரு நிகழ்ச்சி – மதுரையிலே சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலே எட்டாம் வகுப்பு படித்துக்  கொண்டிருந்தேன். அந்தப் பள்ளி ஆண்டு  விழாவின் போது என்னுடைய ஆசிரியர்  மேடையிலே ஒரு  உரை ஆற்றுமாறு பணித்தார். அதற்காக நல்ல முறையிலே உரையை எழுதி மனப்பாடம் செய்து பலமுறை பயிற்ச்சியும் செய்த பின்னர் மேடையில் ஏறி நின்றேன்.

    முன்னாலே அமர்ந்திருந்த சுமார் ஆயிரம் பேரையும் மேடை மேலிருந்து  பார்க்கையில் ஏதோ ஆயிரம் யானைகள் அணிவகுத்து நின்றதுபோல் காட்சி அளித்தது. தலை சுழன்றது. வார்த்தைகள் எழவில்லை! எப்படியோ ஆசிரியர் துணையுடன் ஒரு மாதிரியாக உரையை முடித்துவிட்டு கீழே இறங்கியதும் வாழ்க்கையில் இன்னொருமுறை மேடையில் ஏறக் கூடாது  என்ற சபதத்துடன் நின்றேன். ஆனால் அந்த அனுபவம் நல்ல ஒரு கற்றலைக் கொடுத்து என்னை ஒரு மேடை பேச்சாளனாக்கியது  .

    மேடைப் பேச்சு ஒரு வல்லமை  வளர்க்கும் கலை. எந்த மேடையிலே நாம் ஏறுகின்றோம் என்பது  பற்றிய அறிவு தேவை  இலக்கிய மேடை, அரசியல் மேடை, கருத்தரங்க மேடை, போன்ற ஒவ்வொரு மேடையிலும் பேசுவதற்கு வேறுபட்ட திறன் வேண்டும். மேலும் ஒரு மேடையிலே:

    1. எத்தனை மணித்துளிகள் நாம் பேசப் போகிறோம்
    2. அதற்குள் என்னென்ன கருத்துக்களைச் சொல்லவேண்டும்.
    3. அதை எப்படிச் சொல்லவேண்டும்.
    4. அரங்கத்தில் அமர்ந்திருப்போரின் அறிவுத்திறன் எப்படி;
    5. நாம் சொல்லுவது அவர்களுக்குப் போய்ச் சேருமா,
    1. நமது பேச்சில் எவ்வளவு கருத்தாழம் இருக்கவேண்டும்
    2. அவர்கள்ஆர்வத்தையும் கவனத்தையும் நம்மிடம் எப்படி ஈர்ப்பது
    3. நமது உரையில் சிரிப்பும் சிந்தனையும் எவ்வாறு கலந்திருக்க வேண்டும்.
    4. வேறுபட்ட அறிவும்கருத்தாழமும் கொண்ட அரங்கத்தில் அனைவரையும் கருத்துக்களுக்கு கைகோர்க்க வைப்பது எப்படி
    5. உரையின்போது உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி

    இது போன்ற பல கருத்துக்களை வளரும் பருவத்திலேயே மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் பிற்காலத்தில் அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்தத் தொழிலிலும் சிறப்பாக முன்னேறுவதற்கு உதவும். தற்காலத்திய தொழில் தளங்களில் மேடைப் பேச்சுத் திறன் (Public Speaking skills) மிக இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.  பல நேரங்களில் பெரிய தொழிலதிபர்கள் கூட மேடையில் ஏறியதும் தயக்கப்படுவதும், வியர்த்தோ அல்லது ஒரு  விதமான நடுக்கம் அல்லது பய உணர்ச்சியோடு நிற்பதையோ நாம் கண்கூடாகக்  காண்கிறோம். இந்த உணர்வுகளை சிறு வயதிலேயே பயிற்சி மூலம் நீக்கிவிடலாம்.

    பல அரங்கங்களில் ஒரு சிறந்த பேச்சாளர் பேசி முடிந்ததும் அங்கே அமர்ந்திருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விழுக்காடு மக்கள் அங்கிருந்து எழுந்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆகவே, சிறந்த பேச்சைக் கேட்பதற்காகவே பலர்  அரங்கங்களுக்கு வருவதை நாம் காணலாம்.

    எத்தனை சிறப்பாக நாம் பேசினாலும் அதைக் கேட்பவர்களின் ஆர்வமும் கவனமும் குறைந்துவிடுமுன் முடித்துக்கொள்ளுதல்  மிக்க அவசியம். விவேக சூடாமணி என்ற சம்ஸ்கிருத நூலிலே இவ்வாறு அழகாக சொல்லப்பட்டுள்ளது : “சொற்களின் வலையிலே ஒருவன் சிக்கிவிட்டால் ஒரு இருண்ட காட்டுக்குள்ளே சென்று தடுமாறுவதைப் போல; அது அறிவைத் தடுமாற வைத்துவிடும்”. பேசும் பொழுதில் முடிக்கத் தெரியாது தடுமாறுபவர்களின் நிலையும் இதுவே.

    தொடருவோம்

    அமெரிக்காவில் உள்ள ஒரு தலை சிறந்த மன இயல் வல்லுனரும் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான ஹோவர்ட் கார்ட்னெர் தான் வெளியிட்ட The Frames of Mind என்ற புத்தகத்தில் பலவிதமான புத்திகூர்மைகளை (Multiple Intelligence )பற்றி விவரிக்கும் நேரத்தில் மொழிசார்ந்த  புத்திகூர்மையை (Linguistic Intelligence ) சிறப்பாக விளக்குகின்றார். இந்தத் திறன் இருப்பவர்களை Word Smart என்று   கூறுவார். பலவித தொழில் மேன்மைக்கு இந்தத் திறன் அடிப்படியானது.

    மேடைப் பேச்சுக்கும் இந்தத் திறன் அவசியம். எந்த இடத்தில் எப்படிப் பட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தவேண்டும், அதன் விளைவுகள் என்ன, அதன் தாக்கங்கள் என்ன என்றெல்லாம் அறிந்து புரிந்து செயல் படுதல் அவசியம். இந்தத் திறனை முழுமையாக பயிற்ச்சிகள் மூலம் வளர்க்க முடியாவிட்டாலும் அதற்க்கான அடிப்படைத் திறன்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சொல்லிகொடுப்பது அவசியமாகத் தென்படுகின்றது.

    தொடரும்..

    Share
  • கீதாஞ்சலி கவிஞருக்கு ஒரு நினைவாஞ்சலி (7 மே 1861)

     

    க. பாலசுப்பிரமணியன்

    thahoor_2272119a

    வங்கத்தில் பிறந்த தங்கமொன்று
    சிங்கமென உருவெடுத்து வந்தது…
    அங்கமெல்லாம் இறையுணர்வை
    தங்கவைத்து இன்பம்கண்டது !

    இருளினிலும் ஒளியினிலும்
    இசையினிலும் அசைவினிலும்
    இமைகளின் நீர்கசிவினிலும்
    இறைவனின் நடைகண்டது !

    முத்துப் பனித்துளிகளிலும்
    முத்தான வியர்வைமழையினிலும்
    மூப்புடையோர் சிரிப்பினிலும்
    மூவுலகின் வளம்கண்டது!

    நாதங்களை காற்றில்நிறுத்தி
    நாசியிலே சுவாசித்தது;
    நாளங்களின் தாளங்களில்
    நானைக் கரைத்தது !

    விண்ணுலகின் விந்தைகளை
    மண்ணுலகின் கவலைகளை
    கண்ணுலகின் பார்வைகளில்
    சொல்லழகில் சமைத்தது !

    பேரழகு உள்ளிருந்தால்
    பெயரழகு நமக்கெதற்கு?
    பேரன்பில் தன்னைவைத்து
    பாரெல்லாம் அணைத்தது !

    வங்கம்பெற்ற தங்கமது
    பங்கமில்லா பாரதத்தை
    மங்கிவிடா சொற்களிலே
    மனங்களிலே வடித்தது!

    Share
  • பயாஸ்கோப்

    க. பாலசுப்பிரமணியன்

     

    பாரு.. பாரு… நல்லாப் பாரு ..

    பயாஸ்கோப்பில் படத்தைப் பாரு…

    பாம்பே ..டெல்லி.. கல்கத்தா ..

    பாபர்… அக்பர்…. சமாதி பாரு..

    உலகம் போற்றும் தாஜ் பாரு..

    காலம் மாறும் வேகம் பாரு,,

    பார்க்கும் படமும் மாறுது பாரு !

     

    கையைக் கிழித்து உள்ளே போகும்

    ஊசி பாரு.. நல்லாப் பாரு.. உள்ளே பாரு..

    ஓடும் குருதி வேகம் பாரு…

    ஓடி ஓய்ந்த இதயம் பாரு..

    கறைபடிந்த நாளம் பாரு..

    கசங்கிப் போன பூவைப் போல

    வாசம் இழந்த நெஞ்சம் பாரு..

     

    ஈயம் பூசும் தொழிலாளி

    இசைவாய் காற்றை அழுத்தித் தள்ள

    அசையும் உறையைப் போல

    அசைந்து ஆடும் இதயம் பாரு..

     

    கூடி நிற்கும் டாக்டர் பாரு ..

    குருதி தேடும் உடலைப் பாரு..

    வாழ விரும்பும் மனிதன் பாரு..

    வாழ்ந்து தீர்த்த நாளைப் பாரு…

     

    காதல் தோற்ற வலி கொஞ்சம்

    கருணை மறந்த வலி கொஞ்சம்

    கடமை தவறிய வலி கொஞ்சம்

    காலன் கையில் தவிக்கும் நெஞ்சம்…

     

    இயற்கை எடுத்த படத்தைப் பாரு..

    அதில் நடித்த ஹீரோ யாரு …..

    சாயம் நிறைந்த முகத்தைக் கழுவி

    கண்ணாடி முன்னால் முகத்தைப் பாரு..

     

    பாரு.. பாரு..நல்லாப்  பாரு

    பயாஸ்கோப்பில் படத்தைப் பாரு…

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 26

    க. பாலசுப்பிரமணியன்

    பேசும் திறன் – சில பார்வைகள்

    education-1

    பல நேரங்களில் நாம் மற்றவர்களுடன் தனியாகவோ அல்லது ஒரு அமைப்பாகவோ அல்லது கூட்டமாகவோ பேசிக்கொண்டிருக்கும் பொழுது  கீழ்கண்டவைகளை நாம் கவனித்திருக்கலாம்

           1.. ஒருவர் பேசும் பொழுது மற்றவர் குறுக்கிடுதல்

    1. ஒருவர் பேசுவதை உடன் மறுத்துப் பேசுதல்
    2. ஒருவர் பேசுவதை முழுதும் கேட்காமலேயே பேசத் துடித்தல்
    3. ஒருவரோடு பேசும்பொழுது தேவையில்லாமல் குரலை உயர்த்திப் பேசுதல்
    4. ஒருவரோடு பேசும்பொழுது கோபத்தோடு பதிலளித்தல்
    5. ஒருவர் பேசியதை நிதர்சனமாக தரம் குறைத்தல்
    6. ஒருவர் பேசியதையே மீண்டும் திருப்பிச் சொல்லுதல்
    7. மற்றவர்களைப் பேசவிடாமல் தானே பேசிக்கொண்டிருத்தல்
    8. மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுக்க மறுத்தல்
    9. தன் கருத்தை மற்றவர்கள் மீது திணித்தல்

    இது போன்ற குறுக்கீடுகள் பேசும் கலையின் தரத்தைக் குறைக்கின்றன. பல அரங்கங்களிலும், நிறுவனங்களிலும் சில நேரங்களில் கருத்துப் பரிமாற்றங்களுக்காக கூட்டங்கள் நடத்தும் பொழுது இந்த மாதிரியான செயல்களை ஒருவருடைய அறியாமையாகவோ அல்லது முதிர்ச்சியில்லாத நடத்தையாகவோக் கருதுகின்றனர்

    பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மொழிசார்ந்த கற்றல் நடக்கும் தருணங்களில் இந்தக் கருத்துக்களை வலியுறுத்தி எவ்வாறு பேசும் திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று விளக்குதல் மற்றும் அறிவுறுத்தல் அவசியம்..

    மேலும் ஒருவரோடு உரையாடல் நடக்கும்பொழுதில் கீழ்கண்ட குறிப்புகளை மனதில் கொள்ளுதல் அவசியம்:

    1. மற்றவர்களோடு பேசும் பொழுது அவர்களுடைய கண்களை பார்த்துப் பேசுதல் வேண்டும்.
    2. தலை குனிந்தோ, வேறு இடங்களில் பார்வையை திருப்பியோ வைத்துக் கொண்டு பேசவோ அல்லது கேட்கவோ கூடாது.
    3. மற்றவர்கள் பேசும் பொழுதோ அல்லது நாம் உரையாடும் பொழுதோ நமது உடல் நிமிர்ந்தும் நேராகவும் இருத்தல் அவசியம்.
    1. தொட்டுப் பேசுதலை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பல நாடுகளில் அதை மரியாதைக் குறைவாகக் கருதுகின்றனர்.
    2. நாம் நிற்கும் தூரம், நம்முடைய குரலின் வளம் மீது கவனம் தேவை.
    3. குரலின் உயர்வு தாழ்வு மற்றும் நெகிழ்தல் ஆகியவை கேட்பவரின் ஆர்வத்தையும் கவனத்தையும் ஈர்க்க வாய்ப்புள்ளது.

    உரையாடலின் போது பேசுபவர்களுக்கிடையே  உடல்மொழி பரிமாற்றங்கள் நடக்கின்றன. இது பார்ப்பதற்கு ஒரு அறிய விருந்து. விளையாட்டாக இதை “உரையாடல் நடனம்” (conversational dance ) என்று சொல்லுவார்கள்.

    கற்றல் மேலும் சிறப்பாக அமைவதற்கு ஒரு தலை ராகமாக பாடங்களை நடத்தாமல், கருத்துப் பரிமாற்றங்களுக்கு கீழ்கண்ட முறைகளை பயன்படுத்தினால் அதிக பலன் அளிக்க வாய்ப்புள்ளது.

    1. குழு விவாதம் (Group Discussion)
    2. மூளை தாக்கங்கள் (Brain storming)
    3. நேரடியான விவாதங்கள் (Debate)
    4. மேடை விவாதங்கள் (Panel discussion)
    5. அறிக்கையிடல் (Reporting )
    6.  கதை வழங்கல் ( Narrative presentation )

    பல நேரங்களில் மாணவர்களும் இளைஞர்களும் அறிவுடையவர்களாக இருந்தாலும் திறன் உடையவர்களாக இருந்தாலும் பேச்சுத்திறன் இல்லாமையினாலோ அல்லது பேசும் கலையின் நுணுக்கங்களை அறியாததாலோ முழுத்தகுதி இல்லாதவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆகவே கற்றலில் பேசும் திறன்களை வளர்த்தலும் போற்றுதலும் இன்றியமையாததாகும்.

    சில நேரங்களில் சில மேடைப் பேச்சாளர்களை நாம் பேச்சுத்திறன் உடையவர்களாகக் கருதுகின்றோம். எவ்வாறு மேடைப்பேச்சுக்கு சில திறன்கள் தேவையோ அதே போல ஒவ்வொரு முறையான பேச்சுக் கலைக்கும் வேறுபாட்ட திறன்கள் தேவைப்படுகின்றன. ஆகவே பேசும் திறன்களின் எல்லாவிதமான நுணுக்கங்களையும் கற்றலும் அவைகளை தேவையான அளவில் உபயோகித்தாலும் தேவை.

    நல்ல பேச்சுத் திறனுக்கு கற்றல் மிகவும் அவசியம். நல்ல பல நூல்களையும்  சான்றோர்களின் கருத்துகளையும் மற்றும் நடைமுறையில் உள்ள அறிவுசால் நூல்களையும் நன்றாகப் படித்து அவைகளின் கருத்துக்களை உள்வாங்கி தகுந்த நேரத்தில் தகுந்த இடத்தில் தகுந்த முறையில் உபயோகித்தல் ஒரு சிறந்த பேச்சாளரின்  அறிகுறி. எந்த இடத்தில் ஒருவர் பேசினாலும் பொது அறிவு (common sense ) மிகவும் இன்றியமையாதது. நல்ல பல கருத்துகள்கூட நடைமுறை பொதுஅறிவு இல்லாதவரிடம் உயிரற்ற பொருளாகிவிடும். மற்றும் பேசும் கலைக்கு உயிர்நாடியாக இருப்பது ஒருவரின் நகைச்சுவை உணர்வு. இதைப் பற்றி மேலும் விவரமாகப் பார்ப்போம்.

    (தொடரும் )

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 25

    க.பாலசுப்பிரமணியன்

    பேசும் கலை – சில அடிப்படை திறன்கள்

    education

    எனது நண்பர் ஒருவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்போது நாம் அந்த இடத்தை விட்டுச் செல்வோம் என்ற எண்ணம் ஏற்பட்டு விடும்!

    அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில “நான் நெப்போலியனோடு பேசிக்கொண்டிருந்தபோது” என்று அவர் ஆரம்பிக்கும் பொழுது நமக்கு இந்த நெப்போலியன் யார்” என்ற வியப்பு ஏற்படும்.

    முன்னாள் பிரான்ஸ் நாட்டு மன்னரைப் பற்றி அவர் வர்ணனை செய்யும் பொழுது அவர் ஏதோ பக்கத்து வீட்டுக்காரர் என்ற எண்ணத்தை உருவாக்குவார். தம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் அனைவரும் வடிகட்டிய முட்டாள்கள் என்ற நினைப்போடு பேசுவார்.  ஒரு பரிதாபமான நபர்.!

    பேசும்பொழுது எதைப் பற்றிப் பேசுகிறோம், யாரைப் பற்றிப் பேசுகிறோம் எதற்காகப் பேசுகிறோம் – என்றெல்லாம் எண்ணிப் பேசுதல் அவசியம். பேசும் பொழுதில் கேட்பவரின் அறிவுத்திறனையோ, வாழ்க்கைத்தரத்தையோ, கல்வி அறிவையோ குறைத்தோ மட்டமாகவோ அல்லது இணையற்றதாகவோ மதிப்பீடு செய்யக்கூடாது. ஒருவரின் அறியாமையை கேலிக்கூத்தாகவோ அல்லது ஏழ்மையின் அறிகுறியாகவோ எண்ணுதல் மிகத் தவறு.

    பேசும்கலையின் அடிப்படையை அழகாக விளக்கிய ஆங்கிலக் கவிஞர் செகப்பிரியர் (Shakespeare)”Brevity is the soul of Wit”- சுருங்கச் சொல்லுதலே அறிவின் உயிர். என்று கூறியுள்ளார். “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஒரு அருமையான கலை.கற்றலில் பேசும் திறன்களைப் பற்றி அதிகமாகச் சொல்லிக் கொடுப்பதில்லை. இதன் முக்கியத்துவத்தை நாமும் நம் கல்வி வல்லுனர்களும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உதாரணமாக ஒருவரிடம் பேசும்பொழுது

    1. நாம் எந்த நிலையில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றோம்?
    2. எவ்வளவு தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றோம் ?
    3. நம்முடைய உடல்மொழி எவ்வாறு உள்ளது?
    4. நம்முடைய குரல் எவ்வாறு உள்ளது?
    5. நம்முடய குரல் கேட்பவர்கள் வரை முறையாகச் செல்கின்றதா?
    6. நாம் அதிவேகமாகப் பேசுகின்றோமா அல்லது மிக மெதுவாகப் பேசுகின்றோமா?
    7. நாம் பேசுகின்ற மொழியும் நடையும் மற்றவர்களுக்குப் புரிகின்றதா?
    8. நாம் ஈடுபாடோடு பேசுகின்றோமா அல்லது கவனச்சிதறல் உள்ளதா?

    இது போன்ற பல கேள்விகளுக்கு நமக்கு நாமே பதில் தேடிக் கொள்ளவேண்டும்.

    • பொதுவாக பேசும் பொது உணர்ச்சி வசப்படுதல்,
    • உணர்ச்சிகளை தரமின்றி வெளிப்படுத்துதல்,
    • கேவலமாகவோ புண்படுத்தும் வகையிலே பேசுவதையோ அவசியம் தவிர்க்க வேண்டும்.

    நம்முடைய உடல்மொழி மற்றும் முகபாவங்கள் நாம் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையை மட்டுமின்றி கேட்பவரின் உளநிலையையும் பாதிக்கும்.

    மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து

    நோக்கக் குழையும் விருந்து “ என்ற வள்ளுவர் வாக்கு இதற்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.

    “நம்முடைய சொற்கள் நமது தூதர்கள்” என்று சொல்லுவார்கள். நம்முடைய குணாதிசயங்கள், உள்நோக்கங்கள், பழக்க வழக்கங்கள், சமூக நோக்கங்கள் ஆகியவற்றை அவை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகின்றன..

    ஆகவே பேசுபவருடைய சொல்லாண்மை, சொல்லாட்சி, சொல்லாடல் ஆகியவை அந்தத் திறனை வளர்ப்பதற்கு அடிப்படைத் தேவைகள்.

    “கண்டேன் சீதையை ” என்று அனுமன் சொல்லுவதாக கம்பன் எழுதியது கவிஞனின் சொல்லாடலின் உச்சநிலையை உறுதியாக வெளிப்படுத்துகின்றது. நாமும் பேசும் முன்னே கொஞ்சம் யோசித்துப் பேசுவோமா?

    நம் குழந்தைகளுக்கும் பேசும் கலையின் அடிப்படைகளை முறையாக சொல்லிக் கொடுத்தாலென்ன?

    தொடருவோம்

    Share
  • அனுமன் அறுபது – (ஒரு கவிதை மாலை – 5)

    க.பாலசுப்பிரமணியன்

     

    ஐந்தாம் பத்து

    anjanayer

    கருணைக் கடலே ! கண்கள் போற்றி

    காக்கும் வலிமையே ! கரங்கள் போற்றி  !

    காற்றின் மைந்தா ! கால்கள் போற்றி !

    காத்திட வருவாய் ! கண்மணி போற்றி !

     

    வானர வடிவம், மானுட தேகம்

    வானவர் குலத்தின் வளர்பிறைத் தெய்வம்!

    வல்லவர் நல்லவர் தேடிடும் ஞானம்

    வடையையும் மாலையாய்  அணிந்த வினோதம் !

     

    குளிர்ந்த பார்வை கூப்பிடும் அருகில்

    குறைவில்லா அழகு கூடிய நிறத்தில்

    குழந்தையின் சிரிப்பாய் குவிந்த முகத்தில்

    குறைகள் மறையும் பார்த்த தருணத்தில்.!

     

    பணிவுக்குப் பாசுரம் நீ படைத்தாய் !

    பண்புக்கு இலக்கணம் நீ கொடுத்தாய் !

    பக்திக்கு ஆலயம் நீ அமைத்தாய் !

    பரமனின் உறவை நெஞ்சினில் வைத்தாய் !

     

    சீதையின் தலைவனைச் சிந்தையில் வைத்து

    சிந்தையில் என்றும் பக்தியை வைத்து

    பாதையில் என்றும் பண்பினை வைத்து

    சேவடி   தன்னில் சேவைகள் செய்தாய் !

     

    குறை தீர்க்க முன் நிற்கும் குணசீலா !

    நிறை நிலவாய் அருள்சுரக்கும் ஆனந்தா !

    மதி கொடுத்து விதிகடத்தும் வல்லோனே !

    கதி  கொடுத்து வினைதீர்ப்பாய் நல்லோனே !

     

    வானில் செல்கையில் வானுக்கு அழகு

    நீரினைத் தாண்டிட  நீருக்கு அழகு

    நிலத்தில் நின்றால் நீயே அழகு

    நித்தம் உந்தன் நினைவே அழகு !

     

    வாரணம் ஆயிரம் தோளுடை வலிமை

    பாரினில் நிகரில்லை பணிவின் மேன்மை

    நீருடை மேகமாய் நித்தமும் அருள்வாய்

    வாலுடை வேந்தே! வருவாய் விரைந்தே !

     

    அலையாத மனமும் அசையாத நினைவும்

    அன்பான உணர்வும்  அருளுடை நெஞ்சும்

    அழியாத செல்வமாய் , ஆரியன் நினைவும்

    அருளிட வேண்டினேன் அஞ்சனை மகனே !

     

    கண்களில் பக்தியும் கைகளில் சக்தியும்

    மனத்தில் வேகமும் மதியில் யூகமும்

    சொல்லில் பண்பும் சோர்விலா அன்பும்

    சேர்த்திட அருள்வாய் சீதையின் செல்வா !

     

    Share
  • அனுமன் அறுபது – (ஒரு கவிதை மாலை) (4)

    க.பாலசுப்பிரமணியன்

     

    நான்காம்  பத்து   

    DSC00240

    சாந்தமூர்த்தி உனக்குச் சாந்தினிலே காப்பிட்டால்

    சங்கடங்கள் நீக்கிடுவாய் சகலமும் தந்திடுவாய்

    காந்தமென இழுத்துக் கைபிடித்துக் காப்பவனே

    காலமெல்லாம் காத்திடுவாய் காகுத்தன் சோதரனே !

     

    மல்லோனின் மதம் அடக்கியது கால்வலிமை

    வில்லோனின் மனம் வென்றது அன்புடைமை

    வைதேகி துயர்நீக்க வளர்ந்தது தோள்வலிமை

    வணங்கி நின்றோரின் நலம்காக்கும் அருளு டமை !

     

    வால்வளர்ந்த நெருப்பை வள்ளலாய் தந்தவனே

    வான்வியந்த இலங்கையின் வாசத்தை அழித்தவனே

    வனம்காத்து வைதேகி நலம்காத்து வந்தவனே

    வரும்துயர் காத்து வினைதீர்க்கும் வல்லவனே !

     

    மங்கிடும் பார்வையும் மயங்கிடும் மதியும்

    மறைந்திடும் நினைவும் மருண்டிடும் உறவும்

    மடியினில் ஏந்தி மலரடி அடைந்தேன்

    மடிந்திடும் வரையில் மாருதி காப்பாய் !

     

    பிறவிப்  பெருங்கடல் கடந்திட எளிதில்

    பிறவாப் பெருமை பெற்றிட விரைவில்

    பூரண நிலவாய் ஒளிர்விடும் மாருதி

    பொழுதினில் வருவாய் போற்றினேன் திருவடி.!

     

    தாயினைத் தேடிடும் கன்றினைப் போல்

    சேயென வந்தேன் சந்நிதி முன்னே

    பேயென அலையும் மனதினைக் காத்து

    தாயெனத் தருவாய் அன்புடன் அருளை !

     

    பின்னோக்கி ஆர்ப்பரிக்கும் இளமையின் இழுப்பும்

    முன்னோக்கி மோப்பமிடும் மூப்பின் தவிப்பும்

    உள்நோக்கா உதிரிப்பூ வாழ்க்கை உருமாற

    உலகளந்த நாயகனே ! உள்ளிருந்து அருள்வாய்!

     

    கள்ளுண்ட வண்டாகக் களம்நாடும்   கள்ளமனம்

    காலத்தின் இரையாகி காமத்தின் கோலமிடும்.

    கள்ளமில்லா நெஞ்சுடையோய் ! கருணைக் கடலே !

    காகுத்தன் வழிகாண காமத்தை அழித்துவிடு!

     

    கருவோடு வந்தது எருவோடு போகுமென்றும்

    உருவான  வண்ணம் தெருவோடு செல்லுமென்றும்

    அறியாத மனத்தில் அடங்காத ஓலத்தின்

    தணியாத தாகத்தை தணித்திடு தந்திரா.!

     

    வந்தது அறியா வாழ்வென்று அறிந்தும்

    செல்வது அறிந்த உண்மையை மறந்தும்

    அறிந்தும் அறியா அரங்கமோ வாழ்க்கை ?

    அறிவின் சிகரமே ! அனுமனே வழிகாட்டு !

     

     

     

     

    Share
  • அனுமன் அறுபது – (ஒரு கவிதை மாலை) (3)

    க.பாலசுப்பிரமணியன்

     

    மூன்றாம் பத்து

    ANJU DARPANA ALNKM DPBLR B

    கண்ணிரண்டில் நீர்மல்கும் காகுத்தன் பெயர்கேட்டால்

    காதிரண்டும் சொல்கேட்ட இன்பத்தில் சுவைகூட்டும்

    கணநேரம் மனமெல்லாம் மெய்மறந்து மலர்தூவும்

    மாதவனின் மனம்கவர்ந்த மாருதியே ! மனமிரங்கு !

     

    பூப்போன்ற மனம் கொண்டவனே  புதியோனே !

    பூங்குன்றம் போதாது பொழுதும் போற்றிடவே !

    பூவுலகில் புதிராக இருக்கின்ற பூம்பொழிலே

    புதிதாக மொழியொன்று  இனியில்லை போற்றிடவே !

     

    பொல்லாத தீவினைகள் பொடியாக்கும் பார்வை

    பொருந்தாத நினைவுகளை பொசுக்கிவிடும் கூர்மை

    போர்முனையில் வாழ்வுக்குக் கவசம் உன்மேன்மை

    போதாதுபோதாது புகழாரம் உனக்கென்றும் பல்லாயிரம் !

     

    பணிவோடு நீயிருக்கும் பாவனை கண்டு

    பயம்கூட பயம்கொண்டு பாதைகள் மாற்றும்

    பலம்தந்து நலம்தந்து மனம்நின்ற மாருதியே

    பணிவோடு சரணடைந்தேன் பாதைகள் காத்திடுவாய் !

     

    மனத்துள்ளே நீயிருந்தால் மலமெல்லாம் நீங்கிவிடும்

    மங்காத ஒளியாக, மாருதியே, மனம் நிறையும்

    மடிந்திட்ட நம்பிக்கைகள் மறுபடியும் தலைதூக்கும்

    மனக்கோவில் படைத்திட்டேன் மறுக்காமல் வந்துவிடு.!

     

    மார்கழி மூலத்தில் மாதவத்தால் வந்தவனே

    மாதங்கள் பன்னிரண்டும் போற்றிடும் ஆதவனே

    மாறாத சிந்தையுடை மங்கள   மூர்த்தி

    மாநிலங்கள் போற்றிடுமுன் மங்காத கீர்த்தி  !

     

    போகின்ற இடமறியாத புள்ளாகப் பறந்தேன்

    போதனைகள் கேட்காமல் புல்லாக வளர்ந்தேன்

    போதுமென்ற மனமின்றி புவியெல்லாம் அளந்தேன்

    புகலிடமே உன்பாதமென புரிந்தபின்னே வந்தேன் !

     

    புலனெல்லாம் தந்தது புதுச்சுமைகள் பூபாரம்

    பொல்லாத உணர்வுகளின் போர்க்கள ஆரவாரம்

    புரியாத வாழ்விற்குப் போக்கிடம் வேறில்லை

    போற்றிடுவேன் காத்திடுவாய் புலன்வென்ற நாயகனே !

     

    ஸ்ரீராமன் போற்றுமிடம் செவிசாய்த்து நிற்பவனே

    சீதா மணாளன் தாள்போற்றித்  தவம் செய்பவனே

    சிறுதேனும் தவறின்றி ரகுகுலம் காத்தவனே

    சிரஞ்சீவி! உன்னருளைச் சிறுதேனும் தந்திடுவாய் !

     

    வெற்றிலை அணிந்தாலும் வெற்றியைத் தருபவனே

    வெற்றிடம் ஏதுமின்றி நினைவெல்லாம் நிறைந்தவனே !

    வேகத்தில் வினைமுடித்தும் விவேகத்தை அறிந்தவனே !

    வேதனைகள் நீக்கிடவே விரைவாக வந்திடுவாய் !

     

     

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்-   24

    க. பாலசுப்பிரமணியன்

    education

    பேசும் திறன் (Speaking Skills)

    கற்றலில் ஒரு முக்கிய அம்சம் – நமக்குத் தெரிந்ததை, மற்றவர்களுக்கு நாம் சொல்லவேண்டியவற்றை எவ்வாறு சொல்லவேண்டும்  என்பதே. பல நேரங்களில் நன்றாகப் படித்து பட்டம் வாங்கியவர்கள் கூட தங்களுக்குத் தெரிந்ததை வெளியே சரியாகச் சொல்ல முடியாமல் திணறுவதை நாம் பார்த்திருக்கின்றோம்.

    “என்னுடைய நாக்கு நுனியிலே இருக்கு சார். எப்படி சொல்லறதுன்னு தான் தெரியல்லே” என்று விழி பிதுங்கி பரிதாபமாக இருக்கக் கூடியவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். பேசும் திறன் ஒரு அற்புதமான கலை. சிறு வயதிலிருந்தே பேசும் கலையை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தல் மிக்க அவசியம். பல நாடுகளில் சிறுவர்களுக்கு மழலைப் பருவத்திலிருந்தே இந்தக் கலையின் நுணுக்கங்களை சொல்லித் தருகின்றனர்.

    “வார்த்தைகளை விட அது எவ்வாறு சொல்லப்படவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுதல் மிக அவசியமானது”. வார்த்தைகளில் பணிவு, நேர்மை,  தன்னம்பிக்கை,தெளிவு, உண்மை மற்றும் தேவை ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல் அவசியம்.

    உண்மையில் சொற்கள்  நுண்ணிய மின்னலைகள். அவைகள் கேட்பவருடைய மனநிலை மற்றும் உணர்வுகளை பாதிக்கின்றன. இதனால் தான் ” சொற்கள் ஒருவனை உருவாக்க முடியும் அல்லது அழிக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். வள்ளுவரோ இதன் சிறப்பை மிக அழகாக எடுத்துரைக்கின்றார்

    “தீயினால் சுட்ட புண்ணாறும் ஆறாதே

    நாவினால் சுட்ட வடு.”

    இந்த பேசும் கலையில் பலவித திறன்கள் இருக்கின்றன. இவை தேவைகளுக்கு ஏற்ப இடம், பொருள், நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும். ஆகவே குழந்தைகளுக்கு கல்வி நேரத்தில் இந்த பல நிகழ்வுகளுக்கான பேசும் திறன்களின் நுணுக்கங்களை விவரித்து  அவற்றை வளர்த்தல் மிக அவசியம்.

    Communication Skills என்று சொல்லப்படும் இந்தக் கலையில் பல பரிமாணங்கள் உள்ளன.

    1. சாதாரணமாக ஒருவருக்கு ஒரு கருத்தைத் தெரிவித்தல் (informing )
    2. ஒருவரோடு உரையாடுதல் (Conversing )
    3. ஒருவரோடு தர்க்கம் செய்தல் (arguing )
    4. ஒருவர்க்கு ஒரு பொருளை விளக்குதல் (Narrating)
    5. ஒருவரிடம்கருத்துக்கு ஒப்புதல் வாங்குதல் (advocacy)
    6. ஒருவரை சம்மதிக்க வைத்தல் (Convincing )
    7. ஒருவரிடம் எண்ணப் பரிமாற்றம் செய்தல் (negotiating)
    8. ஒரு கூட்டத்தில் கருத்து பரிமாறிக் கொள்ளுதல் (conferencing)
    9. ஒரு கருத்தை அல்லது பொருளை விற்றல் (Marketing)
    10. ஒரு மேடையில் பேசுதல் (Public Speaking )
    11. நேர் காணல் (Interviewing)
    12. மொழி பெயர்த்தல் (Translating )

    இத்தனை வகையான பேசும் திறன்களும் நம் அனைவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு அளவுக்குத் தேவைப்படுகின்றது.

    அது மட்டுமல்ல, வள்ளுவம் அழகாகச் சொல்வது போல

    “சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

    சொல்லிற் பயனிலாச் சொல்.”

    சொல்லுவதை பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே சொல்லவேண்டும். தற்காலத்தில் பல இடங்களில் இளைஞர்கள் மணிக்கணக்காக தங்கள் அலைபேசியில் உபயோகமற்ற பேச்சுக்களில் ஈடுபடும்போது எவ்வாறு அவர்கள் தங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

    பல நாடுகளில் இருவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில் அமர்ந்திருக்கும் மூன்றாமவருக்கு இவர்கள் பேசுவது காதில் விழ வாய்ப்பில்லை. ஆனால் பல நேரங்களில் பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் சில பேர் பேசும்பொழுது அது அந்த வண்டியில் பயணம் செய்யும் அனைவர்க்கும் கேட்க வாய்ப்புள்ளதாக அமைகின்றது. இது அவர்களைத் தூற்றுவதற்காகக் கூறப்படவில்லை. இளைய சமுதாயம் எவ்வாறு உலக அனுபவங்களிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசையினால்தான்.

    பேசும் திறனைப் பற்றி மேலும் அறிவோம்

    (தொடரும்)

    Share
  • அனுமன் அறுபது -(ஒரு கவிதை மாலை)

    க.பாலசுப்பிரமணியன்      

     

    இரண்டாம்  பத்து          

    12938256_10206189995525673_3878937499269568556_n            

    வெள்ளை யுள்ளம் கொண்டவனே வேதவித்தே

    பிள்ளை யெந்தன் அஞ்ஞானம் நீக்கிடுவாய்

    வெண்ணையுடை கொண்ட மெய்ஞான மாமேரு

    விரைந்திடுவாய் நகர்ந்திடவே வாழ்க்கைத் தேரே!

     

    அடியாருக்கு அடியவனாய்  ஆனவனே அமரா

    ஆனந்தநிலை தவறா அதிசயனே அனுமந்தா

    அறிவுக்குப் பொருளாய் விளங்கும் ஆஞ்சநேயா

    அன்பும் அருளும் அளிப்பாய் ஆகாயவீரா  !

     

    சமயத்தில் உதவிடும் சஞ்சீவி நீயே

    சரணம் அடைந்தோருக்கு சாரதி நீயே

    சாகாத வரம் கொண்ட சிரஞ்சீவி நீயே

    சரணம் தருவாய் சங்கடம் அகற்றி  !

     

    சொல்லாமல் புரிந்துகொள்ளும் சூட்சுமம் உனக்கு

    சொல்லியும் அறியாத பேதைமை எனக்கு

    செக்கிழுக்கும் மாடாய் சுழலும் வாழ்வை

    சீக்கிரம் மாற்றிவிடு ஸ்ரீராமன் காட்டிவிடு !

     

    இருப்பது எதுவும் போதாத மனமெனக்கு

    இருப்பதுவும் சென்றுவிடும் பயத்தில் தவிப்பு

    இருப்பது என்றும் இறைவன் வழித்துணையே

    இசைவாய் நீயிருக்கும் இறைவன் காலடியே !

     

    கொடியினிலே அமர்ந்தே குருசேத்திரம் கண்டவனே

    கோகுலனின் தேரமர்ந்து குலம்காக்க அருளியவனே

    கோடியுள்ளம் தேடிவரும் குறைசொல்ல நாடிவரும்

    கோமகனே!  குறையில்லா வானரனே ! வாழ்த்திடுவாய் !

     

    கணையாழி கொண்டுவந்து கவலைகள் தீர்த்தவனே

    கலையாத மனம்கொண்டு கடமைகள் செய்தவனே

    கடல்மீது கால்நடக்கப் பாலங்கள் படைத்தவனே

    காமத்தை வென்று நாமத்தில் நெகிழ்ந்தவனே !

     

    தூதனுக்கு இலக்கணம் இலங்கயில் படைத்தாய்

    தூற்றாமல் நல்லறிவைத் துணிந்தே சொன்னாய் !

    தூங்காத விழிகொண்டு துயர்தீர்க்கும் தூயவனே

    தூயமனத்திற்குத்  துணை நிற்கும் பேரொளியே !

     

    நீருண்ட மேகமென வானில் நீபறக்க

    நிழலுண்ட நீர்த்துளிகள் உன்னைத் துதிக்க

    வானின்ற வேதவரும் எழில்கண்டு வியக்க

    நானறிந்த ஐம்பொறியின் சாரதியே சரணம் !

     

    ஊழ்வினைகள் உனைநினைத்தால் ஓடி விடும்

    நிகழ்வினைகள் உன்னருளால் அமைதி பெரும்

    வருவினைகள் விதியறிந்து வளம் பெருக்கும்

    மூவுலகும் போற்றிவிடும்  மூப்பறியா மாமருந்தே !

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • துர்முகியே.. அருள்வாயே !

    க. பாலசுப்பிரமணியன்

    nhetynr copy

    நீரோடு நிலமும் வானும் நல்காற்றும்

    கதிரும் மதியும் காலத்தில் மழையும்

    கனியும் காயும் கண்நிறை பசுமையும்

    களிப்புடன் தருவாய் துர்முகியே !

     

    ஊர்கூடி ஒன்றாய் உலகினில் வாழ்ந்திட

    தேன்கூடாய் உழைப்பின் பலன் சேர்ந்திட

    நாகூடும் சொல்லென்றும் நலமாய் வந்திட

    நாளெல்லாம் அருள்வாய் துர்முகியே !

     

    தாயோடு சேயும் தந்தையும் உறவும்

    தரணி போற்றும் கூட்டுக் குடும்பம்

    ஊனோடு சதையும் உதிரம் போல்

    ஒன்றாக உறவாட அருள்வாயே !

     

    நான்முகனும் அறுமுகனும் களி முகத்தொடு

    ஆனைமுகன் அப்பனுடன்  அன்னை  சக்தியோடு

    வேறுமுகம் காட்டாது துர்முகியே ! நல்மனத்தோடு

    நேர்முகமாய் காத்திடவே அருள்வாயே !

     

     

     

    Share