Tag: க.பாலசுப்பிரமணியன்

  • அனுமன் அறுபது – (ஒரு கவிதை மாலை)      

     

           க. பாலசுப்பிரமணியன்

    anumar

                               

     

    விநாயகர் காப்பு

     

    அரசின் ஆலின் வேம்பின் அடியமர்ந்தோய் !

    ஆனந்த மூர்த்தி ஐங்கரனே அருளாளா !

    அருந்தமிழ் அவ்வை போற்றிய புண்ணியனே !

    அனுமனைப் போற்றிட வந்தேன் அருள்வாயே

                                       முதல் பத்து                                   

     

    அதிசய உருவே ஆனந்த வடிவே !

    அஞ்சனை மகனே , ஆதவன் அருளே !

    அபயம் தேடி அடிகளைப் பணிந்தேன்

    அருள் தர வருவாய் அனுதினம் நீயே!

     

    அஞ்சா நெஞ்சனே, அறிவின் அமுதே !

    அன்பின் வடிவே, அமர வாழ்வே !

    அவயங்கள்   அடக்கிய , ஐம்பொறி  ஓடிக்கிய

    ஆனந்த வாழ்வின் அழியாச் சிற்பியே !

     

    காலைக் கதிரின் கருணை ஒளியே !

    கவலைகள் தீர்க்கும் கலியுக மருந்தே !

    கடமைகள் விளக்கிடும் கலங்கரை விளக்கே !

    கற்பனை தாண்டிய வினயத்தின் வடிவே !

     

    வானையும் அளந்த வாயுவின் மகனே

    வருவினை தீர்த்திடும் வானரத் தேவே !

    வழக்குகள் தீர்த்திடுவாய் வாதங்கள் நீக்கி

    வேண்டியே நின்றேன் வார்த்தைகள் இன்றி !

     

    நெஞ்சினில் என்றும் இராமனின் வடிவம்

    நினைவில் ஒன்றிய நிரந்தரத் தெய்வம்

    நாவினில் இராமன் நாளும் பொழுதும்!

    நானும் சொல்லிட அருள்வாய் என்றும் !

     

    கண்களில் அமைந்தது காகுத்தன் உருவே !

    கைகள் குவிந்தது கனிவுடன் முன்னே !

    கோசலைத் தலைவன் திருவடி போற்றி

    கருணையால் வென்றாய் காலங்கள் அனைத்தும் !

     

    கடலினைக் கடந்தாய் கணையாழி கொடுக்க

    காட்டினை அழித்தாய் கர்வத்தை ஒடுக்க

    கற்புடைத் தலைவி கண்ணீர் துடைத்த

    காவியத் தலைவா ! காலடி சரணம்!

     

    தோள்களில் நின்றது தோதுடன் கதையே

    வாலில் நின்றது வளராது நெருப்பே !

    சொல்லில் நின்றது சூதில்லாப் பணிவே

    சுமைகள் அறியா சுந்தர வடிவே !

     

    கண்களால் பார்த்தால் வானர வடிவம்

    கருத்தினில் வைத்தால் மாதவன் சின்னம்

    கலைகள் ஆயிரம் ஒன்றிய உருவம்

    கருணைக் கடலே ! காத்திட வருவாய் !

     

    தானடங்கித் தன்னருமை தெரியாமல் நின்றவனே

    தானறிந்து தன்னுருவை தரணியிலே வளர்த்தவனே

    தாபங்கள் அனைத்தையும் தானாக வென்றவனே

    தாள்பணிந்தேன் தெய்வமே, தோள் கொடுப்பாய் !

     

     

     

     

     

    Share
  • இறைவன் எங்கே?

    க. பாலசுப்பிரமணியன்

     

    மிட்டாசு நாட்டாமை தன்னாசை நிறைவேற்ற
    பட்டாசு வெடித்திங்கே பகவதியை அழைத்திட்டார் !
    எட்டாத சொர்க்கம் இறங்கித்தான் வந்திடுமோ ?
    எண்ணத்துள் இறையைக் காண் .

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் …. (23)

    க. பாலசுப்பிரமணியன்

    கேட்டது  எப்படி நினைவில் நிற்கும் ?
    education11-1-1

     “இப்போது தான் உனக்கு சொல்லிக் கொடுத்தேன். அதற்குள்ளே நீ மறந்துட்டியா ?” என்று மாணவனைக் கேட்காத ஆசிரியர் இருக்க முடியாது.  ஆசான் சொல்லியதை கவனமாகக் கேட்டாலும் ஏன் மனதில் நிற்பதில்லை? அது ஏன் காற்றோடு கலந்துவிடுகிறது? இந்தக்காதிலே வாங்கி அந்தக் காது வழியாக ஏன் சொற்கள் பறந்து செல்கின்றன?

    ஒருவர் பேசும்போது கவனமாகக் கேட்பதுபோல் நாம் பாவனை செய்தாலும் மனது முழுதாக அதில் ஈடுபாடு கொள்ளாதவரை அந்தச் சொற்களோ அதன் கருத்துகளோ மனதில் பதிவதில்லை. இதை “நிலையில்லாத நினைவு” (Volatile Memory ) என்று சொல்லுவார்கள். ஈடுபாடு, தேவை, பலன் ஆகியவை இல்லாதவரை இந்த நிலை இருக்க வாய்ப்பிருக்கின்றது. எப்போது சொல்லப்படுகின்ற சொற்களும் கருத்துகளும் ஆர்வத்தையோ, தேவையையோ அல்லது ஒரு உன்னதமான பலனையோ அளிக்கின்றதோ அப்போது இதே சொற்களும் கருத்துகளும் ஒரு “தற்காலிகமான நினைவாக ”  (Temporary Memory ) மாறுகின்றது. இதுவே உணர்வுப்பூர்வமாக அறியப்படும்பொழுது அல்லது செயல் மூலமாக அறியப்படும்பொழுதோ  நிரந்தர நினைவாக (permanent memory)  மாறுகின்றது.

    அறிதல், புரிதல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ள வல்லுனர்களின் கருத்தின்படி  – ஒரு கருத்தோ அல்லது பாடமோ திரும்பத்திரும்ப படிக்கும்பொழுதும்   (Repetition) , மேலும் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பயிற்சி செய்யும்பொழுதும் (Spaced Repetition) அது நிரந்தரமான நினைவாக மாற வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்னே பள்ளிகளில் ஆசிரியர்கள் கணக்கு வாய்ப்பாடுகளை மாணவர்களைக் கொண்டு தினசரி அனைவரும் சேர்ந்து கூட்டாக சொல்லும்படி ஆணையிடுவர். சில நாட்களில் அந்த வாய்ப்பாடுகள் மனதில் நிலைத்து நிரந்தர நினைவாக மாறிவிடும்,. அதேபோல் பாடல் பயிற்சிகளிலும் நாட்டியப் பயிற்சிகளிலும் ஈடுபடுபவர்கள் தினம் காலையிலோ அல்லது மாலையிலோ பயிற்சிகளை திரும்பத்திரும்ப செய்வார்கள். சில நாட்களில் அது நிரந்தர நினைவில் அமைந்து அந்தத் துறையில் வல்லமையை அளிக்கும். ஆகவே பள்ளிகளில் ஆசிரியர்களும் படிக்கும் நேரத்தில் மாணவர்களும் கற்றல் என்ற செயலில் ஈடுபடும்பொழுது ஒரு கருத்தை சில முறைகளாவது திரும்பிப் பார்த்தல் அவசியம். ஒரு முறை படித்ததும் அது நினைவில் வந்துவிடும் என்ற கருத்து பெரும்பாலும் தவறான பலன்களைத் தருகின்றது.

    பல நேரங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் தாங்கள் சொல்லிக்கொடுக்கும்பொழுது மாணவர்கள் கேள்விகள் கேட்கக்கூடாது என்றும், தங்கள் ஒரு முனை கற்பித்தலை (uni -directional approach) தடங்கல் செய்யலாகாது என்றும் கருதுகின்றனர். இது மிகத்தவறான எண்ணம். கருத்துகளை காதில் வாங்கியவுடன் அந்த ஒலியலைகள் மூளையின் நரம்புகளை பல விதங்களில் தாக்குகின்றன. அறிதல் என்ற இந்தச் செயலை அலசிப் பார்க்கின்ற மூளை கருத்தை நிலை நிறுத்தும் செயலில் எழும் சந்தேகங்களுக்கு விடை தேடுகின்றது. ஆகவே மாணவர்களிடமிருந்து வரும் கேள்விகளை  வெறும் விளையாட்டான செயலாகக் கருதாமல் உண்மையிலேயே அறிதல், புரிதலுக்கான அடிப்படையாகக் கருதி அதற்கான பதில்களை அளித்தால் கற்றல் சிறப்பாக அமையும். பல நேரங்களில் இந்த கருத்துப் பரிமாற்றங்கள் சிந்தனையைத் தூண்டவும் திறன்களை வளர்க்கவும் ஆராய்ச்சிகளை வளப்படுத்தவும் மாணவர்களின் வளர்ச்சிக்கான படிகளாகவும் அமையும்.

    (தொடரும்….)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 22

    க. பாலசுப்பிரமணியன்

    கேள்வியறிவு ஒரு சிறப்பான ஆற்றல்

    education11-1

    “வாத்தியார் சொன்னதை காதிலே வாங்கிண்டயா?” என்று தங்கள் குழந்தைகளிடம் கேட்காத பெற்றோர்களே கிடையாது எனச் சொல்லலாம். “கேட்டதையெல்லாம் இந்தக் காதிலே வாங்கி அந்தக் காது வழியா வெளியிலே விட்டுடாதே” என அறிவுறுத்தும் பெற்றோர்களும் அதிகம். கற்றல் என்ற ஆற்றலில் காதால் கேட்பது ஒரு முக்கியமான செயல்.

    இதன் சிறப்பை விளக்கிய வள்ளுவரோ

    “செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அது

    செல்வத்துள் எல்லாம் தலை “

    என அழகாக எடுத்துரைத்துள்ளார். கற்றலில் மொழித்திறன்களைப் பற்றிய ஆராய்ச்சியில் அதனை வலுப்படுத்த நன்கு வகையான முறைகளை வகுத்துள்ளனர்.

    1.கேட்பது (Listening)

    2.பேசுவது (Speaking)

    3. படிப்பது (Reading)

    4, எழுதுவது (writing)

    இதில் கேட்கும் திறனுக்கே முதலிடம். தாயின் கருவறையில் இருக்கும் பொழுதிலிருந்தே தாயின் இதயத்துடிப்பை கேட்டு  அறிந்து நினைவில் கொள்ளுவது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் முதல் படி.

    ஆகவே சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கேட்கும் திறனை வளர்த்தல் மிக அவசியம். கேட்கப்படும் ஒவ்வொரு சொல்லும்  ஒலியும் பொருளை அறிந்து கொள்ள உதவுவதாகவோ அல்லது ஒரு பொருளுக்கு விளக்கம் அளிப்பதாகவோ இருக்க சாத்தியமில்லை.

    ஆனால் கேட்கப்படும் விஷயத்தின் பொருளை அறிந்துகொள்ளவும் அதை உள்மனத்தில் நிலைப் படுத்திக் கொள்ளவும் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் திறனை இளம் வயதில் நாம் கற்றுக்கொள்ளவிட்டால் அதுவே ஒரு பழக்கமாகி நம்முடைய வளர்ச்சிக்கு ஒரு முட்டுக் கட்டையாக மாறிவிடும். எத்தனையோ முறை நாம் மற்றவர்களுடன் உறவாடும்போழுது “நான் சொல்லுவதை முழுதாகக் கேட்டுவிட்டு அப்புறம் நீங்கள் பேசலாமே ” என்று மற்றவர்கள் சொல்லக்  கேட்டிருக்கின்றோம். கேட்டல்  என்பது ஒரு உணர்வு சார்ந்த செயல். முழுமையாக கவனம் இல்லாமல் நாம் கேட்கும் பொழுது அது நேரத்தை வீணடிப்பது மட்டுமின்றி சொல்லுபவர்களின் மனத்தையும் புண்படுத்துவதாக அமைகின்றது.

    “சொல்லுங்க.. சொல்லுங்க.. கேட்டுக் கொண்டுதானிருக்கின்றேன் ” என்று ஒருவர் சொல்லும்பொழுது அவருடைய அலட்சியப் போக்கு வெளிப்படுகின்றது.

    ” நீங்க சொல்றதைச் சொல்லுங்க.. ” என்பதைக் கேட்கும் பொழுது மற்றவரின் வார்த்தைகளுக்கு மரியாதை இல்லாமை  வெளிப்படுகின்றது.

    ” நான் இப்ப என்ன சொன்னேன்?” என்று கேட்கின்ற ஆசிரியரைப் பார்த்து மிரண்டு திரு திருவென முழிக்கின்ற மாணவர்கள் பலருண்டு.!

    காதால் கேட்பது (hearing )  ஒரு இயற்கையான செயல். காதில் விழுகின்ற ஒலி வடிவங்களெல்லாம் முனைவுடனோ முயற்சியுடனோ கேட்பது ஆகாது. பல நேரங்களில் அது  ஒரு தற்செயலான தற்காலிகமான செயலாக இருக்கும். காதில் உள்வாங்கிக் கொள்ளுதல் (Listening ) கவனத்துடன் ஈர்ப்புடன் விருப்பத்துடனோ விருப்பமின்றியோ அறிந்து புரிந்து கொள்வதற்கு முனைப்படும் செயல். கற்றலுக்கும் வாழ்க்கைத் திறனின் வளத்திற்கும் இது ஒரு முக்கியமான நுழைவாயில். பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் ஈடுபாடுடன் கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ள வளப்படுத்திக்கொள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவி செய்தல் அவசியம்.

    ஈடுபாடோடு ஒருவர் கேட்கும் பொழுது சொல்லுபவரின் உணர்வுநிலைகளுக்கும் கேட்பவரின் உணர்வு நிலைகளுக்கும் ஒரு பாலம் அமைக்கப் படுகின்றது. உணர்வுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன பல நேரங்களில் சொல்லுபவரின் உணர்வு நிலைகளுக்கேற்ப கேட்பவர் கோபம், கருணை, விரக்தி, பயம் சிரிப்பு மற்றும் பல நுண்ணிய உணர்வுகளை அனுபவிக்கின்றார்.

    பேரறிஞர் ஜித்து கிருஷ்ணமூர்த்தி கூறுகின்றார். “ஒருவர் மற்றவர்கள் சொல்வதை முழுமையாகவும் கவனமாகவும் கேட்கும் பொழுது மற்றவைகள் வார்த்தைகளை மட்டுமின்றி சொல்கின்றவரின் உணர்வுகளையும் முழுமையாக உணர்ந்து ஏற்றுக்கொள்கிறார்.”

    கற்றலில் கேள்வி அறிவின் விழுக்காடு மிக அதிகமானது. படித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய நிகழ்வுகளை விட கேட்பதின் மூலமாக நாம் அறிந்துகொள்வது கருத்துக்களை வளப்படுத்துவதற்கும், சிந்தனையைத் தூண்டுவதற்கும் நல்ல உரமாக அமைகின்றது.

    ஒரு நல்ல அறிவாளி சொல்லுவதை நாம் கேட்பது ஒரு நூலகத்தில் உள்ள நூல்கள் அனைத்தையும்  படித்து முடித்ததற்கு நிகர்  என்று ஒரு  ஆங்கில எழுத்தாளர் சொன்னது நினைவுக்கு வருகின்றது.

    தொடருவோம்

    Share
  • கோலங்கள் ……

     

    க. பாலசுப்பிரமணியன்

     koolam

    எட்டுப் புள்ளி பத்துப் புள்ளி

    எட்டும் புள்ளி எட்டாப் புள்ளி

    எல்லாப் புள்ளியும் ஒன்றாய் சேர்த்து

    எளிதில் போட்ட கோலமடி !

     

    கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து

    ஊட்டிக் கொடுத்த கணிதப் பாடம்

    உருவகம் கொண்டு வீட்டுக் கணக்காய்

    வாசலில் வெளிச்சம் போட்டதடி !

     

    பொழுதினில்  காலையில் பூத்திடும் கோலத்தில்

    பூவும் கனியும் புதிதாய் பிறக்குதடி !

    பரிதியும் மதியும் பக்கத்தில் நின்றே

    பாவையின் விரல்களில் பாடங்கள் படிக்குதடி !

     

    மங்களம் கூட்டிடும் மனங்கள் சேர்ந்திட

    மாலைகள் மாற்றிடும் மணக்கோலமடி !

    ஓணத்தின் வண்ணத்தில் உலவிடும் ரங்கோலி

    உள்ளங்கள் கவர்ந்திடும் கலைகளின் முன்னோடி!

     

    அன்னை தந்தை அண்ணன் தம்பி

    உற்றார் உறவினர் மற்றோர் சூழ

    ஆடிடும்  விரல்களில் ஆனந்தம் படைக்கும்

    வீட்டுவாசலில் வளர்ந்திடும் கோலமடி !

     

    கோலங்கள் கண்டதும்  குளிர்ந்த மனத்துடன்

    வந்த விருந்தும் வாழ்த்திடத் துடிக்குமடி  !

    வானத்தைப் பார்த்து வியந்திடும் கோலத்தை

    மண்ணில் கண்டே விண்ணும் மயங்குமடி !

     

    Share
  • காலையைக் கொஞ்சம் கையில் பிடித்து…

    க.பாலசுப்பிரமணியன்

     

    வாளி நீரை வாசலில் தெளிச்சு

    வாசனை மண்ணை முகர்ந்த காலம்

    எங்கோ போச்சு !

    மாடிவீட்டில் முடங்கிப்போய்

    ஒண்டிக்குடித்தனம் உலகத்தில்

    வழி முறையாச்சு !

     

    கோலப்பொடியை காலையில் தின்ன

    கூடிய எரும்புக் கூட்டம்

    சுவற்றில் ஏறி சுண்ணாம்பு தின்பது

    வெளிப்படை ஆச்சு !

    கூவிய சேவல்  கூண்டில் நின்று

    உயிரியல் பூங்காவில்

    இன்னொறு உயிரினமாச்சு !

    “டிஜிட்டல்” வாழ்வில்

    கொக்கரக்கோ குரலும்

    “டீவீடீயில்” “டிவிடெண்ட்” தேடுது !

     

    கன்றும் மாடும் பாலினைக் கறக்க

    தெருவில் வழிந்த பாலோ

    தெரியாமல் போச்சு !

    உடலுக்கு உரமாய்

    “யூரியா” பாலும்

    உரையினில் உள்ளே வந்தாச்சு!

     

    வீட்டில் இடமின்றி வாத்தியம் எல்லாம்

    பரணில் ஏறிப்  பாடல்கள் பாட

    சுரங்கள் போச்சு !

    சூரிய ஒளியை சொடுக்கிப் பிடித்து

    சுண்ணாம்புச் சுவரில்

    சுடராய் வைத்தாச்சு !

    கரியை ஏந்திய காற்றை

    கதவுக்கு வெளியே

    காத்திட வைத்தாச்சு !

     

    மல்லிகை மணத்தை தலையில் ஏந்திய

    மங்கையர் காதலில் மயங்கிய உள்ளம்

    கனவுக் காதலில் கதைகள் சொல்லுது !

    மண்ணின் மைந்தா..

    மண்ணை மறந்தாய் ..

     

    மறந்து போன காலையைக் கொஞ்சம்

    கையில் பிடித்து கதவைத் தட்டு!

     

    Share
  • வீட்டுக்கு வந்த விருந்து

    க.பாலசுப்பிரமணியன்

     

    காட்டிலே இருக்க இடமின்றி

    வீட்டுக்கு வந்தது  விருந்து !

    கருநாகம்  கண்ணியமின்றி

    கொஞ்சம்  கதவினைத் தள்ளி !

     

    பதறின நெஞ்சங்கள் பயத்தில்

    அலறினர் வீட்டில் அபயம் தேடி !

    அமைதியாய் அமர்ந்தது விருந்து

    ஆடவர் பெண்டிர் நிலைகண்டு !

     

    கூடினர் தெருவில் மக்கள்

    குரல்கள் எழுந்தன

    கோஷங்கள் பிறந்தன

    கூடா மக்கள் கூடிய நேரம் !

     

    “ அடித்திடு கொன்றிடு

    அழிந்திட நாகம்”

    அடங்கா மனிதனின்

    குரலில் வேகம்…!!

    ” கூப்பிடு அரசை, இதுவோ நாடு?”

    குமுறியதோர் நெஞ்சம் !

     

    “கொதிக்கும் எண்ணையை

    கொட்டுங்கள் தலையில் “

    கூற்றுவன் மொழியில்

    குறைத்தார் ஒருவர் !

     

    ” குடும்பம் இதற்கு

    எங்கே இருக்கு?”

    முதியவர் வாக்கு

    உதிர்ந்தது  பயத்தில்.

     

    ” முடிந்து வையுங்கள்

    மூன்று ரூபாய் முருகனுக்கு “

    மூதாட்டி சொல்லில்

    முந்திய அனுபவம் !

     

    சோர்ந்த மனிதர்களின்

    சோகம் அறியா ..

    சுதந்திர நாகம்

    சுகமாய் சென்றது

    வேறிடம் தேடி…

     

    காட்டினை அழித்து

    வீட்டினைக் கட்டிய

    வீரர்கள் நடுவில்

    வாதங்கள் தவிர்த்து

    வாழ்க்கையைத் தொடர்ந்தது

    விரைவினில் நாகம்..

     

    “ பல்லில் விடமா

    உடலினில் விடமா

    உடனே சொல்லு ..”

    சொடுக்கினான் விடுகதை

    சோம்பேறி மனிதன்…

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 21

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றல் ஒரு உணர்வுப்பூர்வமான செயல்

    education11

    ஒரு சிறிய நகரத்தில் அரசாங்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு இடைக்காலத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. வகுப்பிலேயே மிகச் சிறப்பாகப் படிக்ககூடிய ஒரு மாணவன் அன்று நடந்த கணிதத் தேர்வில் ஒரே ஒரு வினாவைத் தவிர மற்ற அனைத்து  வினாக்களுக்கும் சிறப்பாக பதில் கொடுத்திருந்தான். விட்டுப்போன வினாவோ மிக எளிதான வினா. வகுப்பு ஆசிரியருக்கு மிக அதிசயமாக இருந்தது. அந்த வினாவிற்கும் அவன் பதில் எழுதியிருந்தால் அவனுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கிடைத்திருக்கும்.

    அந்த மாணவனை அழைத்து ஆசிரியர் அதற்கான காரணத்தை அறிய முற்பட்டார். அந்த மாணவனின்  பதில் கேட்டு அவர் ஆச்சரியத்தில் முழுகிவிட்டார். என்ன காரணம் தெரியுமா?

    “அய்யா, இந்த வினாவிற்கு பதிலளிக்க நான் அருகில் இருக்கும் பெரிய எண்ணிடமிருந்து கடன் வாங்க வேண்டும். அப்போது தான் சரியான விடை கிடைக்கும். ஆனால் என் தந்தையோ என்னிடம் எப்போதும் எங்கேயும்  யாரிடமும் கடன் வாங்கக் கூடாது . அது கெட்டப் பழக்கம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதனால் தான் நான் அந்த வினாவிற்கு பதில் அளிக்கவில்லை.”

    கற்றலில் ‘பொருளறிதல்’  (Meaning  Making ) ஒரு முக்கியமான நிலை. கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு வார்த்தையும் கருத்தும் எவ்வாறு எப்படிப்பட்ட பொருளை தெரிவிக்கின்றன என்பது பற்றிய ஆராய்ச்சி உலக அளவிலே   நடைபெற்று இருக்கிறது. சமுதாயப் பொருளாதார மற்றும் கலாச்சார சூழ்நிலைகள் ஒரு தனிப்பட்டவரின்  பொருளறியும் திறனையும் பொருளின் குணத்தையும்  பாதிக்கின்றன.

    உலகம் போற்றும் ஆங்கில இலக்கிய மேதை பெர்னார்ட் ஷா கூறுகின்றார் “வார்த்தைகள் வெறும் தபால் தலைகள்  போன்றவை. அவைகள் வார்த்தைகளை மட்டும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எடுத்துச்  செல்லும். கருத்துக்கள் அந்தக் கடிதத்தில் உள்ளே எழுதப்பட்டவை  போன்றன.”

    ஆகவே கற்றலில் வார்த்தைகளின் மேன்மை, சொல்லப்படும் விதம் மட்டுமின்றி அந்த வார்த்தைகள் ஒருவருடைய  எண்ணங்களின் சிந்தனைகளின் பேராண்மையின் மீது எந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்ளுதல் மிக  அவசியம்.

    ஒருமுறை ஒரு சிறிய கூட்டத்தில் இருந்த சிலரிடம் நான் சொல்லப்போகும் வார்த்தை உங்கள் மனதில் என்ன கருத்தை உருவாக்குகின்றது என்று வினவி “லட்டு ” என்ற வார்த்தையைச் சொன்னேன். ஒருவர் சிரித்துக்கொண்டே “திருப்பதி” என்றார். இன்னொருவர் “இனிப்பு” என்றார். மற்றவர் “விழாக்களில் பகிரப்படுவது ” என்றார் ஒரு  கணித ஆசிரியரோ ‘ஒரு வட்டவடிவமான இனிப்பு உருண்டை ” என்றார். பல பொருள்கள். கதைகளும் கருத்துக்களும் ஒவ்வொருவராலும் அவர்தம் உணர்வுகளுக்கேற்ப சூழ்நிலைகளுக்கேற்ப உள்வாங்கப்படுகின்றன. கற்றல் ஒரு உணர்வுப்பூர்வமான செயல் என அறிதல் புரிதலில் ஈடுபட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    முன்னாட்களில் பள்ளிகளில் நீதிக்கல்விக்கு (Moral Education) முக்கியத்துவம் இருந்தது. காலப்போக்கில் பல காரணங்களால் மாற்றப்பட்டு இன்று “வாழ்க்கைக் கல்வி ” என்ற தலைப்பின் கீழ் சீரமைக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு   வருகின்றது. கற்றலில் கருத்துகள் எந்த விதமான நீதிகளையோ வாழ்க்கைத் தத்துவங்களையோ வெளிப்படுத்துகின்றன. அவற்றால் மாணவர்களின் உணர்வுகளின், அறிதலின், நினைவுகளின்  மீது   தாக்கம் என்ன என்பதையோ அறிந்து செயல் படுதல் அவசியம்.

    இங்கு முன்னே சொல்லப்பட்ட நிகழ்வை ஆராயும்பொழுது ஒரு தந்தையின் நீதிபோதனை அவருடைய மகனின் மனதில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

    வார்த்தைகளால் ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவை உண்டாக்கக்கூடிய சக்தியை .உருவாக்க முடியும். ஆகவே கதைகள் மற்றும் புத்தகங்களில் பதிக்கப்படும் மற்றும் பாடத்திட்டத்தில் இடம்பெறும் பதிப்புகளை மிகவும் கவனத்துடன் அமைத்தல் ஒரு அரசாங்கத்தின், சமுதாயத்தின் மற்றும் கல்வியாளர்களின்  கடமை.

    தொடருவோம்

    Share
  •   கற்றல்  ஒரு ஆற்றல் -20

    க. பாலசுப்பிரமணியன்

    கதைகளின் புதிய பரிமாணங்கள்

    education11

    சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மேலாண்மை கழகத்தின் (Indian Institute  of Management)  முனைவர் ஒருவர் கொடுத்த தகவல் சிந்தனையைத்  தூண்டுவதாக இருந்தது.

    “எனது மாணவர்கள் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்கும் பொழுதில்  அவர்களை விக்ரமாதித்தன் கதைகளைப் படிக்கச் சொல்லுவேன். வேதாளம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முயலும் விக்ரமாதித்தன் நிலை என்ன ஆகின்றது, அவன் எப்படி கேள்விகளுக்கு பதில் காண விழைகிறான் என்று சிந்திக்கச் சொல்லுவேன்.”  என்றார். மேலும் “தொழில் பற்றிய நிகழ்வுகளை முறைப் படுத்தி அவைகளைக் கதைகளாகத் தானே ( Case Studies ​) சொல்லுகின்றோம். ஆகவே சிறு வயதிலிருந்தே கதைகளைக் கேட்பது மட்டுமின்றி, அவற்றின் உட்கருத்துக்களையும் நுட்பங்களையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.” என்றார். அவர் கருத்தின் உண்மையைக் கண்டு வியந்தேன் !

    இதிகாசம், புராணங்கள் மற்றும் சரித்திர  நிகழ்வுகளைச் சார்ந்த   பல விதமான கதைகள்  இருக்கின்றன. தற்காலத்தில் அத்தகைய கதைகளில் ஈடுபாடு   குறைந்து  உள்ளது. அதற்கு ஒரு முக்கிய காரணம் அவைகளைக் காலக் கட்டத்திற்க்கேற்றவாறு உயிரூட்டம் கொடுத்து சொல்லாமலிருப்பது தான்!  பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளுதல் அவசியம்.

    நம்மில் பல பேர்கள் சிறுவர்களாக இருந்த பொழுது  நமக்கு “முயலும் :ஆமையும் ” போட்டி போட்ட கதையை விளக்கிச்  சொல்லுவர்.  அதன் முடிவில் எவ்வாறு முயலின் அளவுக்கு மிஞ்சிய தன்னம்பிக்கையும் ஆணவமும் அதன் தோல்விக்குக் காரணமாக இருந்தன என்று விளக்கி ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை நம் முன் வைப்பர். அதே கதையை இந்தக் காலக்  கட்டத்தில் கூறும் பொழுது கதை அத்தோடு  நிற்பதில்லை.

    தன் தவறையும் முட்டாள்தனத்தையும் அறிந்து கொண்ட முயல், ஆமையை மீண்டும் போட்டிக்கு அழைக்கின்றது. வெற்றி மமதையில் ஆமையும் மீண்டும் வெற்றி என்ற எண்ணத்துடன் பங்கு கொள்ள,… விழித்துக்கொண்ட முயலோ ஆமையை  வென்று  விடுகின்றது. “தவறு  செய்தல் இயல்பு. ஆனால் தவறை திருத்திக் கொள்ளுதல் அவசியம்.” என்று ஒரு ஆழமான கருத்தை இந்த கட்டக் கதை விளக்குகின்றது.

    ஆனால் கதை இங்கேயே நிற்பதில்லை

    தன் திறனையும்,இயலாமையையும் அறிந்துகொண்ட ஆமை தன் அறிவினைத் தீட்டி மீண்டும் வெல்வதற்கான வழியைத் தேடுகின்றது.

    ““நாம் இவ்வாறு போட்டியிடுதல் இருவருக்கும் சம நிலையைத் தருவதாக  இல்லை.எனவே போட்டியிடும் தூரத்தில் பாதியை நிலத்திலும் இன்னொரு  பாதியை நீரிலும் வைத்துக் கொள்ளலாம்” என்ற கருத்தினைச் சொல்ல, வெற்றி மமதையில் நின்ற முயலோ, அறிந்து ஆராயாமல் தலியசைக்க.. மீண்டும்  போட்டி……. இப்போது நிலத்தினில் பாதி, நீரினில் பாதி …நிலத்தைக் கடந்த முயலோ நீரின் கரையினில் செய்வதறியாமல் நிற்க, மெதுவாக வந்த ஆமை நிலத்தைத்  தாண்டி  நீரினில் .செல்ல..

    “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்…”கருத்துக்குப் புதியதோர் விளக்கம் .. கதைகளின் நெளிவு சுழிவுகள் தான் .எத்தனை.!!

    கதை மீண்டும் தொடர்கின்றது !

    இப்போது தங்கள் திறன்களையும் குறைகளையும் சீர்தூக்கிப் பார்த்த முயலும் ஆமையும் சிந்தித்து, கைகோர்த்து இருவரும் வெற்றி பெறுவதற்கான வழிகளைத் தேடுகின்றன…

    முடிவில் நிலத்தில் செல்லும் பொழுது முயலின் மீது ஆமை அமர, நீரில் செல்லும் பொழுது ஆமையின் மீது முயலும் அமர,  இரண்டும் இணைந்தே வெற்றிப் பாதையை நோக்கிச் செல்ல,,, (Win- Win Situation) “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தத்துவத்தை (Team Spirit ) அழகாக இந்தக் கதையின் வளர்ச்சி நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

    இதைப் போன்றே நரியிடம் வடையைக் கொடுத்து ஏமாந்த காக்கை, நரி திராட்சைத் தோட்டத்தில் முயற்சியில் தோற்ற கதை,  சிங்கம்-எலி சேர்ந்த கதை, வேடுவன் புறாக்களுக்கு வலை விரித்த கதை ஆகிய அனைத்திலும் புதிய பரிமாணங்களைச் சேர்த்து நிகழ் காலக் கட்டங்களுக்குத தக்கவாறு எடுத்துச் சொல்ல வாய்ப்புகள்  உள்ளன..

    சிறிய வயதிலேயே வாழ்க்கைக்குத் தேவையான நல்கருத்துக்களையும், வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் சந்திக்க தைரியம் விவேகம் அறிவுகூர்மை ஆகிய பல நற்பண்புகளை வளர்ப்பதற்கும் கதைகள் கற்றலுக்கு நல்ல அமைப்புகளாக உள்ளன..

    “என் வாழ்க்கையே ஒரு கதை” என நம்மில் பலர் அலுத்துக் கொள்வதில்லையா? ..  இனி அலுக்க வேண்டாம், இந்தக் கதையின் உட் கருத்துக்களை நாம் அறிந்து கொள்ள .முயலுவோம். தினம் நாம் கதைகளுக்காக ஒரு பத்து நிமிடம் ஒதுக்கலாமே?

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் – 19

    க. பாலசுப்பிரமணியன்

     

    அந்த நாள் ஞாபகம் வந்ததே!

     education11

    தரையில் ஒரு  பாயை விரித்து  அதன் மேல் ஒரு போர்வையை விரித்து, ஒரு பழைய புடவையையும் விரித்து அந்த மெதுவான படுக்கையில் ஒரு சிறிய தலையணை வைத்து பாட்டி தன் படுக்கையை தயாரித்த உடன் ஓடிச்சென்று அதில் படுத்துக்கொண்டு “பாட்டி, எனக்கு ஒரு கதை சொல்லு”  என்ற இனிய காலம் … இன்றும் நினைவில் …..

    “ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம்  – என்று அவள் அந்தக் கதையை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கண்ணயர்ந்து,  மீண்டும் அடுத்த நாள் அதே நேரத்தில் “ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம் …” என்று அது தொடர்கதையாக மாற ……

    கதை சொல்லுதலும் கதை கேட்பதுவும் ஒரு இனிய  கலை

    இளம் சிறார்களுக்குக் கதைகள் சொல்லுவது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது அவர்களுடைய மன நலனை வளர்க்க, சிறப்பிக்க மற்றும் அதற்கு உயிரூட்டத் தேவையான நல்ல உரம்.

    கல்வி ஆராய்ச்சியாளர்கள் கற்றலில் கதைகளின் முக்கியத்துவத்தை மிகச் சிறப்பாகக் கூறியிருக்கின்றனர்.

    • கதைகள் குழந்தைகளின் ஆர்வத்தை வளர்ப்பதற்கு அடிகோலாக அமைகின்றது.
    • சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றன.
    • நன்னெறிகளை வளர்க்கவும் உறுதிப்படுத்தவும் உதவுகின்றன.
    • கற்பனை வளத்தை செழிப்பாக்குகின்றன.
    • இலக்கிய,சரித்திர நிகழ்வுகளுக்கும் கோட்பாடுகளுக்கும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
    • மனித உறவுகள் மற்றும் செயல்களையும் புரிந்து கொள்ளவும் ஆராய்ந்து பார்க்கவும் உதவுகின்றன.
    • இயற்கை வளம், விலங்குகள் பறவைகள் ஆகியவற்றின் வாழ்கைமுறைகளையும், முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள உதவுகின்றன

    சிறு குழந்தைகளுக்குக்  கதைகள்  சொல்லுவதே ஒரு நுணுக்கமான திறன் வாய்ந்த கலை. இதற்கு தனியான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

    சொல்லுபவருடைய சொல் வளம், குரல் வளம், உடல் மொழி, பாவனைகள், முகத் தோற்றங்கள் ஆகியவை கதைகளுக்கு வலுவையும் உணர்வுகளையும் கொடுக்கின்றன. அவை குழந்தைகளுடைய ஆர்வம், கற்பனை மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவைகளைத் தூண்டுகின்றன. பல நேரங்களில் கதைகளைக் கேட்கும் குழந்தைகளுடைய முக பாவங்களும் உடல் மொழியும் சொல்லுபவருடைய பாவனைகளையும் மற்றும் உடல்மொழியையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும்.

    சிந்தனைத் திறத்தை (Thinking Skills ) வளர்ப்பதற்கு கதைகள் மிகவும் துணையாக இருக்கின்றன. தெனாலி ராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள் , விக்ரமாதித்தன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதை ராமன் கதைகள்  என பலவிதமான கதைகள் Lateral Thinking , analytical thinking, critical thinking, Creative thinking என்று தற்காலத்தில் வகுத்துச் சொல்லப்படும் சிந்தனைத் திறன்களை வளப்படுத்த உதவுகின்றன.

    பல நேரங்களில் கதைகளைக் கேட்கும் குழந்தைகள் அந்தக் கதைகளின் கதாநாயகர்களாகவே மாறிவிடுகின்றனர். கதைகளைக் கேட்டபின் அந்த உணர்வுகள் அதிக நேரம் அவர்கள் மனதில் தங்கி இரவில் தூக்கத்திலும் அவர்களை பாதிப்பது மனநல நிபுணர்களால் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தூக்கத்தில் பேசுதல், பிதற்றுதல், பயப்படுதல், சிரித்தல், அலறுதல், சிறுநீர் கழித்தல் போன்ற பல நிகழ்வுகள் அன்று கேட்கப்பட்ட கதைகளின் பாதிப்பாக வெளிப்படுகின்றன. சில நேரங்களில் காடுகளின் நடுவில் தொலைந்துபோவது போன்ற உணர்வுகள், பேய் , பூதம் போன்ற ஒரு மாய மன உருவங்களைப் படைத்து பயப்படுதல் ஆகியவை மிகச் சாதரணமாக நடக்கக் கூடிய செயல்கள். ஆகவே குழந்தைகளுக்கு எந்த மாதிரியான கதைகள் சொல்லவேண்டும், எந்த நேரத்தில் சொல்ல வேண்டும், அவை என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனதில் கொள்ளுதல்  அவசியம்.

    தற்காலத்தில் அனேகக் கதைகள் சித்திர வடிவில் புத்தகங்களாக அமைக்கப்பட்டு குழந்தைகளுக்குக் கிடைக்கின்றன. பல நேரங்களில் அந்தப் புத்தகங்களில் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் உண்மைக்கு மாறுபட்டதாகவும் கேலிச்சித்திரங்களாகவும் அமைந்து தவறான கருத்துகளையும் உருவகங்களையும் உண்டாக்குவதற்கு வாய்ப்பை அளிக்கின்றன. ஆகவே குழந்தைகளுக்கு கதைப் புத்தகங்கள் வாங்கும் பொழுது பெற்றோர்கள் அவைகளின் தரத்தை ஆய்ந்து வாங்குதல் அவசியம்.

    கதைகள் கற்றலின் ஒரு முக்கியமான அங்கம்.  .. மேலும் இதைப் பற்றி அறிவோம்.

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (18)

    க. பாலசுப்பிரமணியன்

    மழலைப் பருவத்தில் பாடல்களின் நோக்கம்

    education11

    பெரும்பாலும் ஆரம்ப காலங்களில் குழந்தைகளுக்குப்  பாடல்கள் ஆடல்கள் மூலமாக கற்பிக்கப்படுகின்றது. ஆடல்களும் பாடல்களும் குழந்தைகளின் மன நிலைக்கு உகந்ததாகவும் அவர்கள் உள, உடல் வளர்ச்சிக்கு உரம் ஊட்டுவதாகவும் உள்ளதாக குழந்தை மன இயல் வல்லுனர்கள் கருதுகின்றனர். பொதுவாக, சொல்லிக் கொடுக்கும் பாடல்கள் அவர்களுக்கு நல்ல கருத்துகளை போதிப்பதாகவும் நல்வழிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும். அதன் மூலம், இயற்கை, வாழ்வியல், உறவுகளின் மேன்மை, ஆரோக்கியம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிதல்  முக்கிய நோக்கம். சமூகம், சமயப் பெரியோர்களின் வாழ்க்கை மற்றும் சரித்திரக் கருத்துகள் விளக்கப்படுகின்றன.

    ஆகவே பாடல்களைத் தேர்வு செய்யும் பொழுது கீழ்கண்ட கருத்துகளை முன்வைத்தல் மிக அவசியம்.

    1. பாடல்கள் குழந்தைகளின் வயதுக்கு உகந்ததாக இருக்கின்றதா?
    2. பாடலின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பில்லாத கருத்துகள் சொல்லப்படுகின்றதா?
    3. பாடலின் கருத்துகள் எந்த அளவில் அவர்களின் மன நிலையைப் பாதிக்கும் ?
    4. இந்தப் பாடலின் மூலம் குழந்தைகளிடம் பயம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, கோபம், வெறுப்பு, தவறான உணர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?
    5. குழந்தைகளின் தன்னம்பிக்கையையும்,  சார்புணர்வையும் எந்த அளவு பாதிக்கும்?

    இந்த கருத்துகள் பள்ளிக்கூடங்களில் மட்டுமின்றி வீட்டிலும் பெற்றோர்கள் மனதில் கொள்ளுதல் அவசியம்.

    சில நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவோ அல்லது தங்களின் மகிழ்ச்சிக்காகவோ சில திரைப்பட பாடல்களை சொல்லிக் கொடுக்கின்றனர். அது தவறு அல்ல. ஆனால் அவற்றில் உள்ள வார்த்தைகளும் கருத்துகளும் மேற்கண்ட வினாக்களுக்கு பதில் தரும் வகையிலும் குழந்தைகளின் மனநிலையை பாதிக்காத வகையிலும் இருத்தல் மிக அவசியம்.

    இளம்வயதில் பாடல்களால் என்ன விதமான நன்மைகள் குழந்தைகளுக்குக் கிடைக்கின்றன?

              1. அவர்கள் உள நலம் வலுப்படுகின்றது.

    1. அவர்கள் குரல் வளம் செழிக்கின்றது.
    2. இடது மற்றும் வலது மூளையின் செயல்கள் ஒருங்கிணைகின்றன.
    3. அறிதல், புரிதல் செயல்கள் இலகுவான முறையில் நடக்கின்றன.
    4. பாடப்படும் நேரத்தில் தன்னம்பிக்கை வலுப்படுகின்றது.
    5. மற்றவர்களோடு இணைந்து பாடும் பொழுது கூட்டு முயற்சியும் இணைந்து செயல்படும் திறனும் வலுக்கின்றன.

            7 .  மூளையுடன் உடல் பாகங்கள் இணைந்து செயல்படுகின்றன.

           8.  உடல் மொழியின் நோக்கங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.

          9. இடம், பொருள், நேரம் இவற்றின் உள்நோக்கங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது.

        10.தயக்கம் இன்றி கருத்துகள் வெளிப்படுத்தவும்,  பரிமாறிக் கொள்ளவும் முடிகின்றன.

    பாடல்களை வெறும் பொழுது போக்காகக் கருதாமல் அதன் மூலம் மொழி, அறிவியல், சமூகவியல், வாழ்வு நெறிமுறைகள், கணிதம் போன்ற பல கருத்துகளை எளிதாக சொல்லிக் கொடுக்க முடிகிறது. இப்படி மறைமுகமாகவோ அல்லது உணர்வுப்பூர்வமாகவோ கற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகள் குழந்தைகளின் நினைவில் ஆழமாகப் பதிந்து கொள்கின்றன.

    முன் காலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் வாய்ப்பாடுகளை நித்தம் பாடல் போலப் பாடி வந்தனர். ஆகவே அவை அவர்களின் நினைவில் மிக ஆழமாகப் பதிந்து எண்களின் பரிமாற்றம் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. .

    பல நேரங்களில் பெற்றோர்கள் இவையெல்லாம் குழந்தைகளுக்கு எதற்கு? கணினி மூலமாக அவர்கள் இவற்றை எளிதாக செயல்படுத்தி விடலாம் என்று கருதுகின்றனர். இது சற்று தவறான கருத்து. மேலை நாடுகளில் இந்தியர்களின் நினைவுகளின் வண்ணங்களையும் பரிமாணத்தையும் கண்டு வியக்கின்றனர். எந்த ஒரு செயலும் மூளையின் வளர்ச்சிக்கும் பேணுதலுக்கும் குந்தகமாக இருக்கும் பட்சத்தில் அவைகளின் உபயோகத்திற்கு வரைமுறை படைத்தல் மனித வளர்ச்சிக்கு மிக தேவையான ஒரு விசயம்.

    தொடருவோம்

    Share
  • சுமைதாங்கி

    க. பாலசுப்பிரமணியன்

     

    பூவுக்குள் வாசம் தேடிப் புவியெல்லாம் வளைத்தேன்

    புன்னகையின் பொருள் தேடி நாளெல்லாம் விழித்தேன்  !!

    பூங்காற்றில் புலன் தொலைத்துப் பொசுக்கிடும் உறவில் துடித்தேன்,

    பொல்லாத மனத்திற்குள் பொழுதெல்லாம் நடித்தேன்!!

     

    பொருள் நாடி, புகழ்  நாடி

    பூவையர்தம் உளம் நாடி,

    கானல் நீராய் எதையெதையோ நாடி

    கனவுக் கானகத்தில் காலத்தை தொலைத்தேன்!!

     

    தேடுதலும், நாடுதலும், வாழ்வின் வாடுதலோ?

    கூட்டுதலும் கழிப்பதுவும் பொய்மையைப் போற்றுதலோ?

    அன்பைப் பெருக்குதலும், பண்பை வகுப்பதுவும்

    வாழ்வில் மேன்மையை நாடுதலோ?

     

    இருப்பது இருப்பதாய் இருப்பதுவே

    அமைதிக்குச் சான்றிதழோ?

    இல்லாத இருப்பையே இமைகளுக்குள்

    சுமப்பதுவே சோகத்தின் முன்னுரையோ?

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்  (17)

    க. பாலசுப்பிரமணியன்

    விளையாட்டு முறையில் கல்வி

    education1

    விளையாட்டு முறையில் கல்வி கற்கும் பொழுது அது மனதிற்கு இனியதாகவும் ஏற்புடையதாகவும் மன அழுத்தங்களிலிருந்தும் வேறு எதிர்பார்ப்புகளிலிருந்தும் விடுபட்டதாகவும் அமைகின்றது .உலகில் உள்ள பல நாடுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இந்த உண்மையை உறுதி செய்கின்றன.

    ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை பின் பற்றிய பொழுது வீட்டில் உள்ள முதியவர்கள் – தாத்தா பாட்டி, அத்தை, மாமா போன்றவர்களும் தாய் தந்தையரும் குழந்தைகளுக்கு  விளையாட்டாக பல உண்மைகளை விளக்கி வந்தனர். சிறிய கதைகள் பாடல்கள் விடுகதைகள் மூலம் அன்பு, பண்பு, சகிப்புத்தன்மை, உறவு பேணுதல், நல்லொழுக்கம் மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்ட கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இவைகள் நித்தம் விளையாட்டான எளிதான முறையில் வந்ததால் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்க்கை கலைகளோடு இணைந்து நின்றன.

    தாய் உணவு ஊட்டும் குழந்தைக்கு ” நிலா, நிலா ஓடி வா ” என்ற பாடலை பாடிக் காட்டும் பொழுது அந்த நிலவைப் பார்க்கின்ற குழந்தைக்கு கவனம், வியப்பு, ஆர்வம் மற்றும் அன்றாட இயற்கையை புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது “Twinkle Twinkle Little Star ” என்று நட்சத்திரங்களை காட்டிப் பாடிய பொழுது நிலவுக்கும், நட்சத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மறைமுகமாக அறிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பாடலில் உள்ள “Wonder” என்ற வார்த்தை வியப்பை ஊக்குவிப்பதாக இருந்தது. “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,’ என்ற கவிஞரின் பாடல் மனிதனின் வியப்பின் உண்மையை விளக்குகிறது . பேரறிஞர் அரிஸ்டாடில் மனிதனின் வளர்ச்சிக்கும் அவனுடைய படைப்புத் திறனுக்கும் இந்த வியப்பை அடிப்படையாகக்  கருதுகின்றார். ( Sense of wonder of  wander ).

    “நட்சத்திரங்களைப்  பார்க்கின்ற குழந்தை அதனுடைய மின்னும் செயலைக் கண்ட பின்  இங்கே ஒன்று, அங்கே ஒன்று மற்றும் அங்கே ஒன்று என்று தொடர்ந்து கண்களை அலைய விட்டு தேடலில் ஈடுபடுகின்றது. மூளையின் வளர்ச்சிக்கு வியப்பும் தேடலும் மிகவும் ஊட்டத்தை அளிப்பதாகவும் வளர்ச்சிக்கு படிகளாகவும் அமைகின்றன.

    “தட்டு நிறைய லட்டு, லட்டு மொத்தம் எட்டு ” என்று ஆரம்பித்து பாடிய பொழுது எண்ணிக்கை, கணிதத்தின் அடிப்படை கருத்துக்கள், உறவு பாராட்டல், பகிர்ந்து கொள்ளும் உணர்வு ( caring and sharing ) போன்ற பல வித கருத்துகள் விளக்கப்பட்டு உணர்வுகளோடு ஒன்றி வளர்ந்தன. தற்போதைய நிலையில் இந்த பல அருமையான உணர்வு சார்ந்த கருத்துகள் குடும்பங்களிலிருந்து குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. மற்றும் தாய் மொழி அற்ற மற்ற மொழிகளில் கற்றுக்கொள்ளும் பொழுது அவைகள் அதிகமான அளவில் உணர்வுகளோடு ஒன்றுவதில்லை.

    கற்றல் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான செயல் அதற்கு மனம், மூளை மற்றும் உடல் அனைத்தும் சேர்ந்து ஈடுபடுதல் அவசியம்

    கற்கப்படும் கருத்துக்களோடு கற்பவர்களின் ஈடுபாடும் ஈர்ப்பும் ( Effective engagement  of the learner) கற்றலின் அளவையும் திறனையும் அதிகரிக்கின்றன.

    விடுகதைகள் சிந்தனையைத் தூண்டும் சிறு கேள்விகள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது மற்றுமின்றி அவர்களுக்கு வெவ்வேறு விதமான சிந்தனைத் திறன்களைத் தூண்டுகின்றன. பொதுவாக பெரியவர்கள் குழந்தைகளுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தையும் சில கேள்விகள் அவர்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்றும் கருதுகின்றனர். ஆனால் மூளை வளர்ச்சியை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்களோ மூளை எப்பொழுதும் புதிய சாதனைகளுக்காகவும் சந்தர்பங்களுக்காகவும் காத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

    ஒரு பள்ளியில் ஆரம்ப வகுப்பிற்குச் சென்ற ஒரு பேராசிரியர்  ஒரு மாணவனிடம் உனக்குத் தெரிந்த கதை ஒன்று சொல் என்று வினவ அந்தச் சிறுவன் ‘காக்கையின் தாகம் என்ற கதையைச் சொல்லி எவ்வாறு அந்தக் காகம் அருகிலிருந்த சிறிய கற்களை உபயோகித்து தண்ணீரை மேலே கொணர்ந்து தாகத்தை தணித்துக் கொண்டது என்று விளக்கினான். அந்தப் பேராசிரியரோ அந்த இடத்தில் கற்கள் இல்லாமலிருந்தால் அந்தக் காகம் என்ன செய்யும் என்று கேட்க ஒரு மாணவன் ” அந்தக் காகம் சற்றே பறந்து தன இறக்கைகளால் அந்தப் பானையைத் தள்ளிவிட்டு வழிந்து வரும் நீரைக் குடிக்கும் என பதில் சொன்னான். மற்றொருவனோ அந்தக் காக்கை தன அலகுகளால் அந்தப் பாண்டத்தை குத்தி ஓட்டை ஒன்றை உண்டாக்கி அதிலிருந்து வரும் நீரை குடிக்கும் என்று சொன்னான்  இன்னொரு மாணவனோ காகம் அருகிலிருந்த குப்பைத்தொட்டியிலிருந்து ஒரு குழலை (Straw)வைக் கொண்டுவந்து தண்ணீர் கடிக்கும் என்று சொன்னான். கேள்வி  ஒன்றுதான்……சிந்தனைகள் பலவிதம். விளையாட்டு முறையிலும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் பள்ளிகள் பாடங்களை நடத்தினால் கற்றல் தற்காலிக நினைவிலிருந்து நிரந்தர நினைவாக மாற வாய்ப்புண்டு

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (16)

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றல் வேறு ; கற்பித்தல் வேறு !

    education

     

    கற்பிக்கப் படுவதெல்லாம் முழுதாகவோ அல்லது சிறிதளவிலோ கற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.  கற்றல் ஒரு தனி மனிதனின் தேவைகள்,  சூழ்நிலைகள்  சமூகப்  பொருளாதார நிலைகள் மற்றும் இயற்கையின் தாக்கங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றது. எனவே எந்த இரண்டு மாணவர்களும் ஒரே மாதிரியாகக் கற்றுகொள்வர் என்று எதிர்பார்த்தல் தவறு. மூளை விஞ்ஞான வல்லுனர்களும் இதே கருத்தை ஏற்றுக்கொள்ளுகின்றனர். கற்றல் மூளையின் ஒரு தனிப்பட்ட பயணம். ஒரு முறை சர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார் “நான் கற்றுக்கொள்ளத் தயாராக  இருக்கின்றேன். ஆனால் கற்பிக்கப்படுவதை வெறுக்கின்றேன்.” ( I am willing to learn, but I refuse to be taught)

    இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணமே அரவிந்தர் கல்வியைப் பற்றி தன்னுடைய கருத்துக்களை கீழ்கண்ட மூன்று விதிகளாக விளக்கினார்.

    1. கற்பித்தலைப் பற்றிய முதல் விதி நம்மால் எதையும் கற்பிக்க முடியாது என்பது தான். (The first principle of teaching is nothing can be taught)
    2. மூளை தன் வளர்ச்சிக்குத் தன்னையே சார்ந்திருக்கின்றது. (The second principle of teaching is that mind has to be consultated for its own growth)
    3. கற்றல் எப்பொழுதுமே அருகிலிருந்து வெளிநோக்கிச் செல்கின்றது.( Learning always happens from near to far)

    கற்றல் மூளையின் ஒரு வினோதமான செயல்!

    அது நிகழ்வதற்கு ஆயிரக்கணக்கான உள்நிகழ்வுகளை மூளை நடத்துகின்றது. அது எவ்வாறு நடக்கின்றது என்று அறிந்தால் நாம் வியப்பில் ஆழ்வோம்.! ஆகவே கற்றலின் உள்நோக்கம் ஒரு குழந்தையின் தனித் தன்மையை அறிந்து பாதுகாத்து வளர்ப்பதுதான்!

    இந்தக் கருத்தை வலியுறத்தியே சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார் ” ஒரு தனி  மனிதனின் உள்ளுறையும் முழுமையை வெளிப்படுத்துவதுதான் கல்வியின் நோக்கம். ” ( Education is the manifestation of the perfection already in man)

    மாற்றாக, தற்காலத்தில் நாம் குழந்தைகளை உயர் கல்விகளுக்கான தயாரிப்பில் முதல் வகுப்பிலிருந்தே ஈடுபடுத்திவிடுகின்றோம் ! இதனால் குழந்தையின் கற்றலிலும் வளர்ச்சியிலும் தேவையல்லாத மாற்றங்களும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களும் குழந்தைகளை பாதிக்கின்றன. ளை ன வல்லுனர்கள் இளம் சிரார்களிடும் ஏற்படும் மன அழுத்தங்களுக்கான தாக்கங்களை  நான்கு வகையாகப் பிரித்துப் பார்கின்றனர்.

    புத்தகப் பைகளால் ஏற்படும் தாக்கம்

    1. கல்வித்திட்டத்தால் ஏற்படும் தாக்கம்
    2. பாடங்கள் சொல்லிக்கொடுக்கும் முறைகளால் ஏற்படும் தாக்கம்,
    3. மன உளைச்சல்களால் ஏற்படும் தாக்கம்.

    இந்த நான்கில் நான்காவது காரணத்தால் ஏற்படும் தாக்கம்,  மிக வலுவானதாகவும், வேதனைக்குரியதாகவும், வளர்ச்சியை பாதிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

    ஆகவே கல்வியை ஒரு விளையாட்டு முறையில் பயிலும் பொழுது அது  ஏற்புடையதாகவும் இனியதாகவும் நினைவில் நிற்ககக் கூடியதாகவும் அமைகின்றது.

    தொடருவோம்

    Share
  • காந்த அலைகள்

    க. பாலசுப்பிரமணியன்

     

    அணுவைத் துளைத்து ..

    அதன் கருவைக் கிழித்து ..

    அமைதியில் உறங்கும்… நான் !

    காலமும் ஞாலமும் உரசிடக் ..
    கதிராய்ப் பிறந்த கலைஞன் நான்!

    கண்ணின் ஒளிக்குள்..
    கைகளின் அசைவில் ..
    உடலிடும் கதிராய்..
    உயிரினுள் அன்பாய்,,..

    நடந்திடப் …பறந்திட..
    பாதைகள் வகுக்கும் பறவை .

    நானிலம் தேடிடும் ..
    நல்லவன்..வல்லவன்
    நான் காந்தன் !

    கால அளப்பில் ..
    சிறைப்படவில்லை!
    பிறப்பும் இறப்பும் ..
    என்னை வரிப்பதில்லை !

    கூட்டில் வாழும் உயிர்களுக்குள்
    கூடி வாழ்ந்தாலும் ..
    குறைகள் அறியா…
    கூத்தன் நான் !

    சக்தியும் சிவமும்
    ஆடிடும் சாஸ்வத நடனம் !
    அண்டங்கள் அனைத்தையும்
    அணைத்திடும் ஆற்றல் !

    புலனுக்குப் புரியா..
    புலவர்கள் அறியா
    கற்பனைச் சிகரம் ..
    கடவுள் தத்துவம்!

    Share