Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…99

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மற்றுமொரு வாரத்தில் மற்றுமொரு மடலுடன் மாற்றமில்லா மனதுடன் உங்களுடன் என் மனக்கருத்துக்களைப் பதிவு செய்யும் மற்றுமோர் இனிமையான தருணம்.

    வித்தியாசமான மனிதர்கள் , வித்தியாசமான பார்வைகள், வித்தியாசமான கோணக்கள் இவைகளின் உறைவிடம் தான் இவ்வகிலம்.

    என்றோ? யாருக்கோ? எப்போதோ? ஒவ்வாதவன் எனும் ஒரு மனிதன் தன் மறைவுக்குப் பின்னால் அவனைத் தூற்றியவர்களினாலேயே போற்றப்படும் நிகழ்வுகளைக் காண்கிறோம்.

    இது இன்று நேற்றல்ல காலம் காலமாக இவ்வகிலத்தில் நடைபெற்றும் சாதாரண நிகழ்வுகளே !

    உதாரணமாக எமது பார் புகழும் மகாகவி பாரதியாரையே எடுத்துக் கொள்ளுங்களேன். அன்று அவரது புரட்சிகரமான கருத்துக்களைப் பைத்தியக்காரத்தனம் என்று ஒதுக்கிய அதே சமூகம் இன்று பாரதியார் இல்லாத காலத்தில் அவருக்காக மணிமாளிகைகளைக் கட்டி வைத்துப் போற்றிப் புகழ்ந்திருக்கவில்லையா?

    பாரதியாருடைய இறுதிச்சடங்கில் வந்திருந்த மக்களை விட அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை அதிகம் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஓரிடத்தில் கூறியதை நினைவு கூர்கிறேன்.

    என்னடா இவனின் இந்த மடல் எம்மை எத்திசை நோக்கி இழுத்துச் செல்கிறது எனும் எண்ணம் அன்பு உள்ளங்களில் எழுவதில் வியப்பொன்றுமில்லை.

    சில தினக்களுக்கு முன்னால் இங்கிலாந்தின் தொழிற்சங்ககங்களில் பலம் வாய்ந்ததும் , பெரியதுமான “ஆர்.எம்.டி(RMT)” எனும் தொழிற்சங்கத்தின் தலைவரான ” பொப் குறோ(Bob Crow)” என்பவர் மாரடைப்பினால் தனது 52வது வயதில் காலமானார்.

    அது சரி அவரைப் பற்றிக் குரிப்பிடுமளவிர்கு அவரிடம் உள்ள சிறப்பம்சம் என்ன? எனும் கேள்வி எழுவது இயற்கை.

    தனது திழிலாளர் யூனியம் அதாவது முக்கியமாக லண்டன் நிலக்கீழ் புகையிரதம் (Underground) சார்பான தொழிலாளர்களின் நலன்களை முன்வைத்துப் போராடியதில் இவர் தனித்துவம் பெற்றவர்.

    இங்கிலாந்தின் லேபர் கட்சி அதாவது இங்குள்ள மிகப்பெரிய அரசியல் கட்ச்சிகளில் ஒன்றின் ஆரம்பம் தொழிலாளர் யூனியன்களின் பங்களிப்பினாலேயே ஏற்பட்டது.

    அதனால் எப்போது லேபர் கட்ச்சி அரசமைத்தாலும் அவ்வர்சாங்கத்தில் தொழிலாளர் யூனியன்கள் பெரும் பங்கு வகிப்பதுண்டு.

    ஆனால் டோனி பிளேயர் அவர்களின் லேபர் அரசாங்கம் இதனை மாற்றியமைத்தது. தொழிலாளர்களுடன் மட்டுமில்லாமல் பெரிய ஆலை முதலாளிகளுடனும் தமது உறவைப் பேணுவதே தற்ல அரசியலின் காலத்தின் தேவை என்பதை உணர்ந்து அவர்கள் பெரிய வியாபார முதலாளிகளிடன் நெருக்க,மானார்கள்.

    அடிப்படையில் இடதுசார்பான சோசலிஸ்ட் கொள்கைகளைப் பின்பற்றிய லேபர் கட்ச்சி தமது டைத்தளத்திலிருந்து விலகி வலது சார்பாகிறார்கள் எனும் வாதத்தை முன் வைப்பதில் முன்னனி வகித்தவர் பொப் குறோ.

    பாரம்பரியமாக கன்சர்வேடிவ் அரசாங்கத்தை எதிர்த்து வந்த தொழிலாளர் யூனியன்களில் பொப் குறோ மாரு பட்டார் அவர் டோனி பிளேயர் தலையிலான லேபர் கட்ச்சியுடனும் இருந்து கொள்கைரீதியில் பிளவு பட்டிருந்தார்.

    தனது அங்கத்தினர்களின் கோரிக்கைகளை முவைத்து பல வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து தமது அங்கத்தினர்களின் நலன்களை தனது இறுதிக்காலம் வரை பாதுகாத்து வந்தார்.

    எந்தவொரு அரசாங்கம் ஆகட்டும் பொப் குறோ அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார்.

    தொழிலாளர் நலன்கள் மட்டுமின்றி நிலக்கீழ் சுரங்க ரயில்வே திணைகளம் ஆட்குறைப்புச் செய்வது பொதுமக்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை எதுவித தடங்களுமின்றி ஊடகங்கள் மத்தியில் முன்வைத்தார்.

    அவருடைய கம்யூனிசம் மர்ரும் அதிதீவிர சோசலிஸ்ட் கொள்கைகள் அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லாது இருந்தாலும் தான் தெரிவு செய்யப்பட்டிருந்த தனது யூனியன் தலைவர் பதிவியின் பொறுப்பை தத்ரூபமாக உணர்ந்து அதைச் செயல்படுத்திய சொற்பமானவர்களில் இவரும் ஒருவர்.

    இவர் உயிரோடிருக்கும் போது நாட்டு நலன்களின் முதலாவது எதிரி இவர் என்பது போல பேசிய பல முன்னனித் தலைவர்கள் இன்று அவர் மறைந்ததும். இவரைப் போல கொள்கையில் ஆத்மார்த்தமான் ஈடுபாடு கொண்டவர்கள் இல்லை என்பது போல பேசி வருவது எம்மைத் திகைக்க வைக்கிறது.

    ஒ ! இதுதான் உலகமா ? இதுதான் நாட்டு நடப்போ ?

    அடடா ! எனக்குத்தான் புரியவில்லை போலும். . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    அவருடைய நேர்காணலுக்கான காணொளி
    http://www.youtube.com/watch?v=aiUVsky6Obg

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…98

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களுடன் மனதிலிருப்பவற்றில் உறுத்துவதை பகிர்ந்து கொள்ளும் வேளையிது.

    இந்தப் பிரபஞ்சம் எதற்காக எவரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றியும் அதன் கூர்ப்பானது இயற்கையினால் ஆனது இதற்கும் எவருக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்பது பலவகையிலான விவாதங்கள் இப்பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இருந்து நிகழ்ந்து கொண்டேயிருந்திருக்கின்றது.

    அதைப்பற்றிய அலசலுக்குரிய ஞானம் எனக்கில்லை அதைப்பற்ரி அலசுவது எனது நோக்கமுமல்ல .

    அப்புறம் எதற்கு இந்தப் பீடிகை எனும் உங்கள் கேள்வி என் காதுகளில் விழுகிறது

    எது எப்படியாக இருப்பினும் இன்று நாம் வாழும் காலகட்டத்திலே எமது வாழ்க்கைக்கும் இப்பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பிணைப்பு இருக்கத்தான் செய்கிறது.

    தனிமனிதனாக இயங்கத் தொடங்கிய மனிதன் குழுக்களாகி சமுதாயமாகி விட்ட பின்பு அப்படியான பல சமுதாயங்களை இணைத்து எழுந்த நாட்டின் நலன்களை அத்துணை சமுதாயங்களின் சார்பிலும் நிர்வகிக்க வேண்டிய தேவையின் நிமித்தமே ஒரு நாட்டின் அரசியல் சூழல் உருவாகியது.

    அவ்வரசியல் சூழலில் தாம் சார்ந்த சமூகத்தின் நலனை முன்னெடுப்பதற்காக அச்சமூகங்களின் பிரதிநிதிகளாக மிளிர்ந்தவர்கள் பலரின் கூட்டமைப்பே அரசாங்கம் என்று கோலோச்சுகிறது.

    அப்படிப்பட்ட சமூகங்களில் பல வித்தியாசமான கருத்துக்கள், வித்தியாசமான வடிவங்களில் வியாபித்திருப்பதனாலும், அச்சமூகங்களிடையே உள்ளவர்களிடையே அந்தஸ்து வித்தியாசங்கள் காணப்படுவதாலும் அவற்றினால் உருவாகும் வேறுபாடுகளிடையே காணப்படும் ஒருமித்த காரணிகளை வளர்த்து அச்சமூகங்களை ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்லுவதுமே இவ்வரசாங்கம் எனப்படும் அமைப்பின் தலையாய நோக்கமாக இருந்தது.

    அரசன் எனும் ஒரு தனிப்பட்ட தலைவன் தன்னிச்சையாக தனது விருப்பு,வெறுப்புகளை தனது கருத்துக்களை தனது குடிமக்கள் மீது திணிக்கும் முறையை மாற்றி மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லும் நாட்டின் தலைவர்களை உருவாக்குவதே அரசியலமைப்புகளின் முக்கிய செயற்பாடாக இருந்தது.
    ஒரு நாட்டில் உள்ள பல சமூகங்களில் வித்தியாசமான கருத்துக்களை கொண்டவர்கள் எதுவித அச்சமுமின்றி தமது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு (அது அடுத்தோருவரின் உரிமைக்குப் பங்கம் விளைவிக்காத வரையில்) வாழ்வதர்கு கொடுக்கப்பட்ட சுதந்திரமே அடிப்படை ஜனநாயகமாகிறது.

    ஆனால் இன்று 2014ம் ஆண்டு விஞ்ஞான வளர்ச்சியின் அது உச்ச காலத்தில், உலகமயமாக்கல் எனும் நிலைப்பாட்டின் அதியுயர் கட்டத்தில், நாடுகள் பொருளாதார சுபீட்சத்தின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் வேளையில்,

    இந்த ஜனநாயக அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?

    இக்கேள்விக்கு பதிலைத் தேடும் போது எமது மனம் சிறிது அச்சத்தினால் அதிருகிறது.

    வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி ஆடம்பரமான தேவைகளுக்காய் நேரமின்றி உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அன்று முக்கிய இடத்தை வகித்த சமுதாய, சமூக உணர்வுகள் எத்தகைய பங்கு வகிக்கின்றன எனும் கேள்விக்கு பதிலை என்னும் தேடிக் கொண்டே . . . . .

    உழைப்பு மனித வாழ்க்கையின் ஒரு உன்னதமான அங்கம். வாழ்க்கையில் தமது நிலையை உஅயர்த்திக் கொள்ள எண்ணி நீதியான, நியாயமான வகையில் உழைத்து முன்னேற எடுத்துக் கொள்ளும் லட்சியக் கனவு அத்தியாவசியமான ஒன்றே.

    மனிதனுடைய தேவைகளும் அத்தேவைகளுக்கான தேடல்களுல் இல்லாதிருந்திருந்தால் இன்றைய அகிலத்தில் விஞான வளர்ச்சி இத்தனை தூரம் முன்னேறியிருக்காது.

    ஆனால் இவற்றின் விலையாக மனிதாபிமானம் கொடுக்கப்படுமேயானால் அதன் விளைவு கவலைக்குரியதே !

    பக்தியின் பெயரால் எடுக்கப்பட்ட பல மூட நம்பிக்கைகளின் வழி ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி மனித மேம்பாட்டிற்கு வழிவகுத்த ஆன்மீக உணர்வுகளையே ஆட்டிப்பார்க்கும் வல்லமை கொண்டதாய் மாறியதே மிகவும் கவலைக்குரியதான ஒரு “முன்னேற்றமாகிறது” .

    இன்று பல சமயங்களில் நான் இறையுணர்வு கொண்டவன், ஆன்மீகத்தை மதிப்பவன் என்று சொல்லிவதையே பலர் தவிர்க்கும் ஒரு சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டு விட்டோம் என்பதே உண்மை.

    இத்தகையதோர் பின்னனியில் தான் இன்றைய மேற்குலகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுக்கும் இனத்துவேஷம் தமது நாட்டின் மீது தாம் கொண்ட மதிப்பு எனும் போர்வைக்குள் தம்மை மறைத்துக் கொண்டே எழுகிறதோ எனும் உணர்வு தலைதூக்காமலில்லை.

    இத்தகைய ஒரு உணர்வு அலையினால் உந்தப்பட்டு இன்றைய ஜனநாயக அரசியல்வாதிகள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள் பதவிகளைத் தம்மோடு தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வுணர்வு அலைகளில் தமது அரசியல் படகை ஓட்டுகின்றனரோ என்று எண்ணத் தோன்றுவதில் எவ்வித வியப்புமில்லை.

    இன்று பலநாடுகளில் பல்லின மக்கள் அந்நாட்டு குடிமக்களோடு தம்மை இணைத்துக் கொண்ட புலம்பெயர்ந்த அந்நாடுகளையே தமது நாடுகளாக எண்ணிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

    அதைத்தவிர அத்தகைய மக்களின் அடுத்த சந்ததியின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வேலைவாய்ப்பு அனைத்துமே அவர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளின் வசமே !

    இந்தச் சூழலில் இன்றைய ஜனநாயக அரசியல் . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…97

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள். கடந்தவாரம் இங்கிலாந்திலிருந்து எனது மனவோட்டங்களை உங்களுடன் கடித மூலம் பகிர்ந்து கொண்டேன். சில சமயங்களில் எமக்கு உள்ளச் சலவை செய்ய வேண்டிய தேவையேற்படுகிறது.

    அச்சலவையின் பின்னால் மீண்டும் புது உற்சாகத்துடன் உங்கள் முன்னே அடுத மடல் வரைகிறேன்.

    இந்த வருட ஆரம்பமே இங்கிலாந்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார பின் தங்கிய நிலையிலிருந்து ஓரளவு மீட்சி பெற்று முன்னோக்கி நடைபோடுகிறோம் எனும் எண்ணம் ஏற்படும் போது முடியவில்லை உங்கள் அனர்த்தம் இதோ உங்களுக்கு மீண்டும் பாடம் கற்பிக்கிறேன் என்று இயற்கையன்னை வரிந்து கட்டிக் கொண்டு தொடுத்து விட்டாள் போர் எம்மீது.

    ஓ ! நாம் தான் இயற்கையைச் சீரழித்தோம் எனும் ஆவேசம் பொங்கியதோ ? எமது இயற்கையன்னைக்கு !

    ஆங்கிலத்தில் ” Polar Vortex “ என்றழைக்கப்படும் ஒரு விதமான இயற்கை மாற்றத்தின் போகோளத்தின் வடமுனையின் குளிர் வட அமெரிக்காவை அழுத்தி அவர்களைச் சமீப காலத்தில் கண்டிராத அளவு பனிமழையினுள் ஆழ்த்தி ஒரு சதிராட்டத்தையே நடத்தியிருந்தது.

    இந்தக் காலமாற்றத்தின் எச்சங்கள் அத்திலாந்து சமுத்திரத்தைக் கடந்து நாம் வாழும் இங்கிலாந்து தேசத்தைப் பனிமழையல்லாமல் சூறாவள், அடைமழை எனும் வடிவெடுத்து சிக்கலுக்குள் உள்ளாக்கி வருகின்றது.

    இதுவே கலநில அவதானிகள், விஞ்ஞானிகள் என்பவர்களினால் எமது இந்த விடாப்பிடியான ஈரப்பதனிலைக்கு விளக்கமாக அளித்துள்லார்கள்.

    எது எப்படி இருப்பினும். இத்தகைதோர் வெள்ளத்துடன் கூடிய ஆண்டின் ஆரம்பத்தை இங்கிலாந்து கண்டிருப்பது ஏறத்தழ 250 வருடங்களின் பின்னால் என்னும் செய்தி எம்மையெல்லாம் வியப்பிலாழ்த்துகிறது.

    நான் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து ஏறத்தாழ நாற்பது வருடங்களாகிறது. இந்த 40 வருட காலத்தில் இதுவே முதற்தடவையாக இத்தகையதோர் நீண்ட சூறாவளியுடன் கூடிய தொடர் மழையையும் அதனால் நிரம்பி வழியும் தேம்ஸ் நதியையும் அந்நதியையும் ,அ அதைப் போன்ற மற்றும் சிறிய நதிகளையும் அண்டிய பகுதிகளில் பாய்ந்தோடும் வெள்ளத்தையும் நான் பார்ப்பது இதுவே முதற் தடவையாகிறது.

    காலமார்றம், காலநிலைச் சீர்கேடு இவையெல்லாம் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையைச் சீர்குலைக்கிறது.
    இத்தகைய சீர்கேட்டை எதிர்நோக்கும் மக்களோ தம்மை வழிநடத்தும் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் தம்மிடம் வருடந்தோறும் வாக்குக் கேட்டு வரும் தமது நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் அரசியல்வாதிகளையும் திகைப்புடன் நோக்குகிறார்கள்.

    இங்கிலாந்து அரசாங்கமும் பிரதமரும் அல்லல்படும் ஓர் சூழல் . ஏனென்று கேட்கிறீர்களா ?

    நாட்டின் பொருளாதரத்தைச் சீராக்கும் நடவடிக்கைகளில் முக்கியமான செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாக காலநிலைச் சீர்கேட்டினால் ஏற்படும் அனர்த்தங்களைச் சந்திக்கும் பிரிவான சுற்றுப்புறச் சூழல் திணைகளத்திற்கான நிதியினைக் குறைத்திருந்தார் நிதியமைச்சர்.

    அவருக்குத் தெரியுமா இயற்கையன்னையின் சீற்றத்திற்கு இங்கிலாந்து உள்ளாகப் போகிறது என்று ?

    வந்ததே வினை ! இத்திணைக்களத்தின் நிதிப்பற்றாக்குறையினால் அவர்கள் தமது பணியாளர்களைக் குறத்தது மட்டுமில்லாமல் செய்யவேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளையும் முடக்கி விட்டார்கள்.

    எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு வெறும் வாயில் அல்வா வைத்தது போல ஒரு ஆனந்தம். விடுவர்களா சும்மா?

    ஆளும் கட்ச்சியையும் அதனுடைய கூட்டரசாங்கத் தோழமைக் கட்சியையும் உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள் பாவம் !

    இச்சுற்றுப்புறச் சூழல் திணைக்கள அதிகாரிகள் வேறு அரசாங்கம் தமது நிதியினைக் குறைத்ததுவே தாம் தமது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையைத் தோற்றுவித்தது என்று சொல்லி விட்டார்களா ?

    கேட்க வேண்டுமா பாரளுமன்றமே ஒரு அரசியல் உதபந்தாட்ட மைதானமாகி விட்டது பாவம் வெள்ளத்துள் தவிக்கும் மக்கள் தான் அவர்களின் உதைபந்து.

    பிரதமர் என்ன லேசுப்பட்டவரா ? டேவிட் கமரானா? கொக்கா ? என்று வெகு விரைவாக அடுத்த வாரம் தான் பங்கு பற்றவிருந்த மத்தியகிழக்குகளுக்கான விஜயத்தை ரத்துச் செய்துவிட்டார்.

    அது மட்டுமல்ல இவ்வெள்ளத்தினால் பாதிக்க[[அட்ட மக்களுக்கான நிவாரணவேலைகளைத் தானே ந்ர்ர்ரடியாகச் செயல்படுத்துவதாகக் கூறி இதற்கான பட்ஜெட் எவ்வளவு ஆனாலும் அதற்கு வரைமுறை கிடையாது என்று அறிவித்து விட்டார் போங்கள் . . . . .

    சும்மா இருந்த அரசியல்வாதிகளும் விழித்துக் கொண்டார்கள் எமது மக்களே வாழ்வாதரத்திர்கு அவதியுறும் நிலையிலே வெளிநாடுகளுக்கு உதவுவதற்காக ஏன் 11 மில்லியன் பவுண்ட்ஸ் செலவு செய்ய வேண்டும்? அந்தப் பணத்தையும் எமது காலநிலச் சீரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காகப் பயன்படுத்துங்கள் எனும் கூக்குரல் மற்றொரு பக்கத்தில் .. . . . . .

    சரி இவைகளுக்கு மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களின் சேதி என்ன ?

    ஓ ! அவர்கள் தமது காற்சட்டைகளை உயர்த்திக்கொண்டு இன்னும் வெள்ளத்தின் நடுவே . . . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (96)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இதோ அடுத்த மடல் கொஞ்சம் வித்தியாசமாக என் மனவோட்டங்களை உங்களுடன் பதிவு செய்ய வேண்டும் எனும் ஆதங்கத்தில் உங்கள் முன்னே வந்து விழுகிறது.

    உள்ளத்தின் ஆழத்தில் உருண்டும் நினைவுகள் வெள்ளமாய் பள்ளம் பார்த்து வடிந்தோடிட, அதிலே தெள்ளத் தெளிவான சில சிந்தனை முத்துக்கள் மின்னியபடியே பளிச்சென்று வலம் வந்து கொண்டிருக்கும்.

    மனித மனங்களில் இவ்வெண்ண அலைகளின் ஓட்டம் இல்லலாவிடில் வாழ்க்கையே நின்று போய்விடும். கடிகாரத்தின் முள் நின்று விட்டால் எவ்வாறு அக்கடிகாரம் உபயோகமில்லாத ஜடப்பொருளாய் தூக்கிப் போடப்படுகிறதோ அதே போலத்தான் எண்ண ஓட்டமில்லாத மனித உள்ளமும் ஜீவனற்றுப் போய் விடுகிறது.

    இவ்வெண்ணங்கள் எமக்கு கொடுப்பவை எல்லாம் மனதுக்கு இதமான உணர்வுகள் தானா? எப்போதுமே எம் எண்ணங்கள் எமக்கு ஆனந்தம் அளிப்பவையாகத்தான் இருக்கின்றனவா?

    இல்லை அவ்வப்போது சிற்சில ஆனந்தக் கணங்களைத் தந்திடும் வல்லமை படைத்தவையாக இருப்பினும் வாழ்க்கையின் சுமைகளும் அச்சுமைகளின் அழுத்தம் உள்ளத்தில் ஏற்படுத்தும் வலிகளுமே அதிகமாக எமது எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கின்றன.

    எப்போதுமே எதிலுமே ஏதோ ஒரு அனர்த்தம் நிகழக் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போல எமது உள்ளமும் எத்தகைய ஒரு செயலைச் செய்யும் போதும் அதன் விளைவின் தாக்கங்கள் எதிர்மறையாகத்தான் இருக்கும் எனும் ஒரு அச்சத்தினல் தவித்துக் கொண்டுதானிருக்கிறது.

    எமக்கு நடக்கும் நன்மைகளையும், தீமைகளையும் நாமடையும் இன்பங்களையும் துன்பங்களையும் அது எமக்கு பிறரால் அல்லது இயற்கையால் அன்றி அனைவர்க்கும் பொதுவான இறை எனும் சக்தியால் ஏற்பசுத்தப்படுகின்றது என்று எண்ணிப்பார்க்கும் வரை அவைகளின் தாக்கமும் அவைகளை ஏற்படுத்தியவர்கள் என்பவர்கள் மீதான எமது காழ்ப்புணர்வும் அதிக அளவில் இருக்கத்தான் போகின்றன.

    ஆனால் நடந்தைவைகள், நடப்பவைகள் எவ்வகையான நிகழ்வுகள் ஆக இருந்தாலும் அதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருப்பினும் அது இயற்கையாக எமது வாழ்வில் நடந்தேறிய நிகழ்வுகள் எனும் பொதுப்படையான் நோக்கில் பார்க்கப் பழகிக் கொள்வோமாகில் அது நிச்சயமாக எமக்கு அமைதியான ஒரு மன ஓட்டத்தைக் கொடுக்கும் என்பதில் ஜயமில்லை.

    ஆனால் அப்படி ஒரு மனதை ஒரு சாதாரண மன உளைச்சல்களுக்கு உட்பட்ட இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒரு மனிதனால் அடைந்து விட முடியுமா?

    அது அவ்வளவு எளிதானதா ?

    இல்லை ஆனால் அத்தகைய ஒரு மனநிலையை அடையும் முயற்சியின் முதலாம் படியில் நிற்கிறோம் ஒரு எண்ணமே மனதில் அலையாடும் அல்லலான உணர்வுகளுக்கு ஒரு தெளிவான பாதையை வகுத்துக் கொடுக்கும் வல்லமை படைத்தது என்பதே உண்மையானது.

    இதுதான் பாதை இதுதான் பயணம் என்று ஈழத்தின் வடபுலத்தில் மத்தியதரக் குடும்பத்தின் கடைசிப் பிள்ளையெனும் மமதையில் உழன்று கொண்டிருந்த எனது பாதையை இத்தனை வளைவு சுளிவுகளுக்கு உள்ளாக்கி அனுபவப் பட்டறையில் அடிமேல் அடி கொடுத்து இன்று என் இனிய உறவுகளுடன் அவ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வழி வகுத்ததவர் அன்றி வழி வகுத்தது எது?

    காலமா? அன்றிக் அக்காலத்தின் மூலமாய் யாரின் கண்களுக்கும் தென்படாமல் இயற்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் சக்தியா ?

    இதோ வென்று விட்டேன் என்று நினைத்துக் கொண்டு ஒரு அடி எடுத்து வைத்தால் இரண்டு அடி பின்னே தள்ளி என்னைப் பார்த்துச் சிரிக்கிறான் அனைவருக்கும் மேலானவன்.

    சரி பின் வைத்த அடி இரண்டையும் முன் வைக்க தேவையான முயற்சிகளை எடுக்கும் போது தானகவே இரண்டு அடிகள் முன்னே கொண்டு போய் நிறுத்தி விட்டு இப்போ என்ன செய்வாய் ? என்பது போல ஒரு கேள்வி.

    இதைத்தான் கவியரசர் “நடக்கும் என்பார் நடக்காது , நடக்காது என்பார் நடந்து விடும் ” என்றாரோ ?

    எண்ணிய இடத்தில் தொடங்காது எண்ணாத இடத்தில் முடிந்து விடும் இவ்வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் ஓராயிரம்.

    சொந்தமென்று நம்பியவர்கள் தந்திரமாய் தப்பித்துக் கொண்டதும் எங்கிருந்தோ யாருமறியாத இடத்திலிருந்து சொந்தமாக என்னைக் கொண்டு அன்பு பொழியும் உள்ளங்கள் மறுபுறம் அப்பப்பா ! இந்த வாழ்க்கை ஒரு பகடையாட்டம் என்றால் இக்காய்களை நகர்த்துபவன் யாராலுமே புரிந்து கொள்ள முடியாத ஒரு அதி விற்பனன் என்பதுவே உண்மை.

    அடாது பெய்யும் மழையில் உருவாகும் வெள்ளத்தில் மிதக்கும் நீர்க்குமிழியைப் போன்ற எமது வாழ்க்கையில் எதுவுமே நான் கொண்டு வந்ததுமில்லை எதையுமே நான் உருவாக்கியதுமில்லை எதுவுமே என்னால் கொண்டு போகப்படப் போவதுமில்லை இதனுள்ளே இத்தனை போராட்டாமா? இதற்க இத்தனை திண்டாட்டமா?

    புரிந்து கொள்ள முடியா வினைகள் விளக்கமில்லா விடயங்கள் விளங்க முடியாச் சூழல்கள் இவரினால் பின்னப்பட்டுள்ள நாம் எண்ணங்களின் மையத்தை நோக்கி தெளிவான பார்வைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே என்னுடைய இந்த அலசல்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!..95

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள்!

    அடுத்தொரு வாரம், அடுத்தொரு மடல், அடுத்தொரு அலசல்.

    ஆங்கிலத்தில் அழகாக “Generation gap” என்பார்கள். ஆமாம், அதற்குச் சரியான தமிழாக்கம் தலைமுறைகளுக்கிடையான இடைவெளி ஆகும்.

    ஆனால் அனைத்துக்குமே இதைக் காரணம் காட்டி தப்பிச் சென்று விடும் வழமைதான் அநேகமாக இயங்கி வருகிறது.

    ஒரு தந்தை மகனுக்கோ அன்றி மகளுக்கோ ஏதாவது பழகும் முறையைப் பற்றியோ அன்றிக் கலாச்சார அவசியங்கள் பற்றியோ விளக்க்க்க்க்க முற்படும் போது இலகுவாக தந்தையிடம் இது உங்கள் காலத்திற்கு உகந்ததாக இருந்திருக்கலாம் ஆனால் இன்றைய எமது தலைமுறைக்கு ஒத்து வராது என்று கூறித் தம்மை விடுவித்துக் கொள்ளும் பல நிகழ்வுகளைக் காண்கிறோம்.

    அன்றிலிருந்து இன்றுவரை அகிலம் ஒரே அகிலம் தான், ம்ஃஅனித்ஹ்ஹ்ஹ்ஹர்களும் உருவ உடலமைப்பும் ஒன்றேதான் பின் எங்கிருந்து இந்த தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளி உருவாகிறது,

    அப்படி மனித வாழ்வில் மாறிக் கொண்டிருப்பதுதான் என்ன? எனது தந்தை தனது தந்தையை அப்பா என்றுதான் அழைத்தார் இன்று எனது மகனுக்கும் நான் அப்பாதான் ஆனால் அதைச் சிலவேளைகளில் அவர்கள் மாற்றி “டாடி” என்றழைக்கலாமே தவிர உறவுமுறை தந்தை மகன் தான்.

    மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்னே இருந்த உறவுமுறை மாற்றம் காணாது அப்படியே தான் இருக்கிறது அப்படியாயின் எதுதான் மாற்றம் கண்டுள்ளது? இந்தத் “தலைமுறை இடைவெளி” என்பதுதான் என்ன?

    ஓடிக்கொண்டிருக்கும் எமது வாழ்க்கையில் உறவு முறைகள் அப்படியே இருந்தாலும் எம்மைச்சுற்றிய சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கிறது.

    அப்பா, டாடியாகவும் அம்மா, அமமொயாகவும் மாறும் ஒரு கலாச்சார மார்றம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

    மேடான நிலத்தில் விழும் தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடுவது போல மேஏஏலைநாடுகளின் காலாச்சார மாற்றங்கள் கீழத்தேசங்களான எங்கள் பிபுல நாட்டு மக்களைக் கவர்ந்திழுப்பது தவிர்க்க முடியாததே!

    பாள்ளத்தை நோக்கி ஓடும் நீர் அப்பள்:ளத்தை நிரப்பியது அங்கு தேங்கி விடுகிறது பின்னால் அந்தத் தேங்கிய நீர் விஷக்கிருமிகளின் உற்பத்திக்குத்தான் இதவுவுமே ஒழிய மனிதர் அருந்துவதற்கு அல்ல.

    அதே போலத்தன்ன் இந்தக் கலாச்சாரக் கவர்ச்சியும் ஒரு சிலகாலத்தின் பின்னால் அதுவும் தேங்கி விடுகிறது.

    அப்படியான ஒரு தேக்கத்தின் விளைவாகத்தான் இன்ன்ன்ன்றைய மேலைத்தேசங்களின் மக்களின் அடிப்படி வாழ்க்கைமுறைகளே மாறி வருகின்றன.

    உதாரணமாக ஓரினத் திருமணங்கள் போன்ற சிலகாலத்திற்கு முன்னால் திரைமறைவில் நிகழ்ந்தவைகள் இன்று சமுதாய நிகழ்வுகளின் ஒரு அங்கமாக அம்க்கீகரிக்கப்பட்டு வருகிறது.

    இதைப்பற்றிய முரணான கருத்துக்கள் கொண்ட அனுஒஅவ முதிர்ச்சியடைந்தவர்களை நோக்கி தமது அபிப்பிராயங்களை நியாயப் படுத்த முனையும் இளைய தலைமுறையினர் உபயோகிக்கும் பதமே “தலைமுறை இடைவெளி”.

    காலத்தின் மார்றத்தை உள்வாங்கிக் கொண்டு நடைபோட வேண்டியதே மனிதனின் கடமையாகிறத்ஹ்ஹ்ஹு. க;ஆச்சார தர்மங்களின் அடிப்படையில் பகுத்தறிய முற்படுவோர் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் தமக்கு முரண்[அட்ட கருத்துக்களையே எதிர் நோக்க வேண்டியுள்ளது.

    இதுவே யதார்த்த உண்மை.

    ஒவ்வொரு தலைமுறையும் தமது அடுத்த தலைமுறையின் வாழ்க்கையை மேலும் வசதியாக்கவே பிரயத்தனப்படுகிறது.

    ஆனால் பல சமய்ங்களில் நேர்மரையான வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகளின் பக்க விளைவுகளாக எதிர்மறையா நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதற்குத் துணையாக “தலைமுறை இடைவெளி” எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

    என் இனிய அன்பு உள்ளங்களே! தலைமுறைகளுக்கிடையில் எத்தனை இடைவெளிகள் ஏற்பட்டாலும் அப்பா, அப்பாதான் அம்மா, அம்மாதான் இந்த உறவுமுறைகள் மாற முடியாது.

    இதேபோன்ற சில அடிப்படையான ஆனால் மூட நம்பிக்கைகள் இல்லாத கலாச்சார அடிப்படைகள் எவர் எங்கு வாழ்ந்தாலும் மாற முடியாத்வை.

    ஆனால் இவற்றின் மகத்துவத்தைப் பேணிக்காப்பது?,  சிந்திக்க வேண்டிய விடயம் இல்லையா?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!..94

    சக்தி சக்திதாசன்

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!..94

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    “மன்னிக்கத் தெரிந்த மனிதனின் மனது மாணிக்கக் கோவிலப்பா” எனும் வாசகம் எந்த அளவிற்கு யதார்த்தமானது?

    ஒருவர் எம்மைத் தாக்கி விட்டார் அன்றி தகாத வார்த்தைகளால் திட்டி விட்டார் இல்லை எமது மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

    இவைகளை நாம் மன்னிப்பது என்பதும், உம்மை உடலளவில் தாக்கி உள்லத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டவர்களை மன்னிப்பது என்பதற்கும் அபல வேறுபாடுகள் இருக்கின்றன.

    மனித மனதில் மன்னிப்புகளுக்கும் எல்லைகள் உண்டு என்பதே உண்மையான ஒரு கருத்தாகப் படுகின்றது.

    எதையும் எப்போதும் எப்படியும் மன்னித்து விடலாம் விட வேண்டும் என்பது பார்த்தையளவில் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கலாம் ஆனால் இது எத்தனை தூரம் நடைமுறையில் சாத்தியமாகும் எனும் கேள்வி எழாமல் இல்லை.

    நான் சமீபத்தில் இணையத்தளத்தில் படித்த ஒரு செய்தி என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இத்தகிய வினாக்களைத் தொடுக்க வைத்தது.

    அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலே இது.

    ஒரு மயிரை இழந்தாலும் உயிரை விட்டுவிடும் கவரிமான் என்பார்கள். அது போல பெண்களுக்கு மானம் என்பது அவர்களது உயிரைக் காக்கும் கவசம் போன்றது.

    மானத்தை ழப்பது என்பது பெண்களுக்கு உயிரை இழப்பதற்குச் சமானம். ஆனால் அம்மானம் பலாத்காரமாக அப்பெண்ணிடம் இருந்து பறிக்கப்படும் போது கூட அப்பெண் உயிரை விடுவது தான் ஒரே முடிவா?

    மூர்க்கத்தனம் கொண்ட ஆண் வர்க்கம் தமது மிலேச்சத்தனமான இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கு பெண்களைன் மீது பலாத்காரத்தைப் பிரயோப்பதனால் அப்பெண் ணின் மானம் பறி போவது உண்மைதான் அதற்காக அப்பெண் உயிரை விட்டு விடுவது ஏற்றுக்கொள்லப்பட்க் கூடியதொன்றா?

    மனதைப் பாதிப்புக்குள்ளாஅக்கும் மிகவும் காராசாரமான கேள்வி இதுவல்லவா?

    நான் இப்போ குறிப்பிடப் போகும் சம்பவம் மன்னிப்பு எனும் பதத்தின் அர்த்தத்தை அதன் எல்லைகளுக்கப்பால் கொண்டு சென்று நிறுத்துகிறது.

    அப்படி என்னதான் நடந்தது? நீட்டி முழக்காமல் விஷயத்தைச் சொல் என்கிறீர்களா? அவசரப் படாதீர்கள் இதோ,

    லண்டனை வதிப்பிடமாகக் கொண்டவர் 40 வயது நிரம்பிய செல்வி.காட்ஜா ரோசென்பேர்க்.

    கடந்த 2008ம் ஆண்டு இவர் 16 வயதே நிரம்பிய இளஞனினால் பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்டார்.

    இவரது கற்பழிப்பைத் தொடர்ந்து இதே இளஞன் மற்றொரு 51 வயதான் பெண்மணியையும் கற்பழித்துள்ளார்.

    இவ்விரு கற்பழிப்புக் குற்றங்களையும் ஒப்புக் கொண்ட இவ்விளைஞனுக்கு நீதிமன்றம் 14 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது

    இந்த காட்ஜா ரோசென்பேர்க் எனும் பெண் கடந்த வருடம் குர்றசெயல் மீள்பிரிவு அதிகாரிகளின் அனுசரணையுடன் தன்னைக் கற்பழித்த அந்த இளஞனை சிறையில் சென்று நேரடியாகச் சந்தித்து உள்ளார்.

    எதற்கு என்று கேட்கிறீர்களா?

    அவரைத் தான் மன்னித்து விட்டேன் என்ரு அவருக்கு தான் நேரடியாக தெரிவிப்பதற்காகவே.

    கற்பழிப்பு மற்றைய பெண்களுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியைத் த்னக்கு ஏனோ ஏற்படுத்தவில்லை என்கிரார் இவர். இத் தாக்குதல் தனது வாழ்வை மிகவும் அதிக அளவில் பாதித்திருந்தாலும் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தன்னைப் பாதிக்கவில்லை என்கிறார்.

    தான் வாழ்வில் இதனால் மிகவும் கவ்பலைக்குட்டபட்டதுவும், பல விடயங்கள் தன் வாழ்வில் பிழையாகிப் போனதுமே தனக்கு ஏற்பட்ட விளைவுகளே தவிர தான் தாக்கப்பட்டதாக உணரவில்லை என்கிறார்.

    தான் அவரிடம் நேரடியாகச் சென்ரு மன்னித்து விட்டதாக கூர எண்ணியதன் நோக்கம் அவருக்கு சிரையில் இருந்து வெளியே வந்ததும் வாழ்வதற்கு பிடிப்பு ஏற்படுத்தவே என்றும், இப்படியான செய்கையின் மூலம் அவரை வெட்கித் தலைகுனியச் செய்வதினால் அவர் இனிக் குற்றச் செயல்கள் செய்யாமல் தவிர்க்க உதவலாம் என்பதனாலுமே என்கிறார் இவர்.

    தன்மீது மூர்க்கத்தனமாக மற்றொருவரால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலைச் சமாளித்து அந்நிலைமையிலும் தனது வாழ்வைத் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த வரது துணிச்சலை பல முன்னனி மாதர் அமைப்புகள் பாராட்டியுள்ளன.

    ஆம் மனிப்பு என்பதன் அர்த்தத்தையே மார்றி அமைத்து விட்டார் இந்த வீராங்கனை.

    ஆனால் இத்தகிய செயலினால் இவரது உள்ள உறுதியும், மனிதாபிமானும் உயருகிறதே ஒழிய “கற்பழிப்பு: என்னும் படுபாதகச் செயல் எந்த விதத்திலும் அங்கீகாரம் பெறவில்லை.

    ஒர் பெண்ணின் மீது இத்தகிய தாக்குதலை மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான கொடூர மனம் கொண்டவர்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? எனு7ம் வாதமும் ஒருபுறத்தில் எழுவது நியாயமே!

    இருப்பினும் தன் மானத்தைப் பறித்த அக்கயவனின் உள்லத்தை மாற்ற மன்னிப்பு எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்த இவ்வீராங்கனையும் ஒரு விதத்தில் ஒரு கவரிமான் தான்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!..93

    சக்தி சக்திதாசன்

     

    Duggan1 Duggan2

     

    அன்பினியவர்களே!

    இனிய வண்க்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒரு நாடு சுபீட்சமானதாக, கட்டுக்கோப்புடன் மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுப்பதாக, சுதந்திரமான மனநிலை கொண்ட மக்கள் வாழும் ஒரு தேசமாகப் பரிணமிப்பதற்கு அந்நாட்டின் சட்ட திட்டங்கள் ஒழுங்காக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

    இச்சட்ட ஒழுங்கைச் சரியாக நிலைநாட்டுவதற்கு அந்நாட்டின் காவற்துறையின் பங்கு மிகவும் பிரதானமாகிறது.

    காவற்துறையின் செயற்பாடுகள் வெற்றிகரமான முறையில் நடைமுறைபடுத்த வேண்டுமாயின் அக்காவற்துறையின் மீது அந்நாட்டு மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருப்பதோடு அக்காவற்துறை ந்ந்ந்ந்ந்ந்நடுநிலை தவராது செயற்படுகிறது எனும் நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

    எப்போது இந்த நம்பிக்கை அற்றுப் போகிறதோ அப்போது அங்கு சட்டமும், ஒழுங்கும் சீர்குலைந்து போகக்கூடிய சூழல் உருவாகிறது.

    2011ம் ஆண்டு நடுப்பகுதியில் இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் ஏற்பட்ட கல்வரங்களைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

    இக்கலவரத்தின் பின்ன்ன்ன்ன்னனி பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்!

    மார்க் டூகன் என்பவர் இங்கிலாந்தில் வாழும் கறுப்பு இன மக்களில் ஒருவர். ஒருநாள் இவர் சென்ற வாகனத்தைப் பின் தொடர்ந்த போலிசார் அவ்வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்ய முற்பட்ட வேளையில் ஏற்பட்ட களாபரத்தில் மார்க் டூகன் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிர் நீத்தார்.

    நிராயுதபாணியான எமது உறவினரைச் சுட்டுக்கொலை செய்தார்கள் போலிசார். அவர் கறுப்பு இனைத்தைச் சேர்ந்த சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டிலும் இதற்கு வேறு காரணங்கள் ஏதுமில்லை என குற்றம் சாட்டினர் அவரது உறவினர்கள்.

    போலிசார் தரப்பில் மார்க் டூகன் கைகளில் துப்பாக்கி இருந்தது அதைக் கவிடும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் செவிமடுக்காத காரணத்தால் தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடே அவர்து மரணத்திற்குக் காரணம், என வாதிடப்பட்டது.

    அச்சமயம் அந்நிகழ்வை நடத்திய போலிசார் அங்கம் வகிக்கும் நகரின் போஓஒலிஸ் நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட கண்டனப் போராட்ட்ட்டம் அங்கு கலவ்ரமாக உருப்பெற்று அது நாடு முழுவதும் பரவியது.

    இதுவே அக்கலவரத்தின் பின்னனி.

    சரி அதை இப்போது இங்கு அலசுவதற்கு என்ன காரணம்?

    போலிசாரால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை நியாயபூர்வமானதா என்பதை விசாரிக்கும் மரண விசாரணை நடந்து முடிந்து அதற்கான தீர்ப்பு வழங்கப் பட்டது.

    இத்தீர்ப்பு ஊடகத்துறையில் ஏற்படுத்திய சர்ச்சையைப் பற்றிக் கொஞ்சம் விளக்கவே இம்முயற்சி.

    இந்நிகழ்வு நடந்த நேரத்தில் மார்க் டூகன் கைகளில் துப்பாக்கி இருக்கவில்லை, ஆனால் அவர் காரில் அமர்ந்திருக்கையில் அவரிடம் துப்பாக்கி இருந்தது. போலிசாரின் இத்துப்பாக்கிப் பிரயோகம் ஒரு நியாயமான தற்காப்பு நடவடிக்கையே மார்க் டூகனின் மரணம் நியாயபூர்வமானது

    இதுவே அவ்விசாரணைக் குழுவின் தீர்ப்பாக அமைந்தது.

    கைகளில் துப்பாக்கி இல்லையெனில் அத்துப்பாக்கி எங்கே?

    அது அவர் சுடப்பட்டு விழுந்த இடத்திற்கு அருகில் சற்றுத் தொலைவில் விழுந்து கிடந்தது.

    இதன் விளக்கம்?

    காரில் துப்பாக்கியுடன் இருந்த மார்க் டூகன் போலிசார் தனது வாகனத்தை சோதனையிடப் போவதை அறிந்ததும் விரைவாகத் தன் துப்பாக்கியை வெளியே வீசியெறிந்திருக்கிறார். அவரது இந்நடவடிக்கையைத் தம்மை நோக்கி அவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் போவதாகப் புரிந்து கொண்ட போலிசார் தற்காப்புக்காக துப்பாக்கியை உபயோகித்துள்ளார்கள்.

    இதுவே பொதுமக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 12 பேரைக் கொண்ட நடுவர் குழுவினருக்கு அளிக்கப்பட்ட சாட்ச்சியங்களில் இருந்து அறியப்பட்டது.

    ஆனால் மார்க் டூகன் அவர்களின் உறவினர்களும், ஆத்ரவாளர்களும் இது போலிசாரின் திட்டமிட்ட நடவடிக்கை. மார்க் டூகன் ஒரு கறுப்பர் எனும் காரணத்தினால் போலிசார் நிறவெறி காரணமாக அவ்ரைப் பழி வாங்கியுள்ளார்கள் என்ற வாதம் தலைதூக்குகிறது.

    இங்கிலாந்தின் காவற்துறை நிறவெறி தலைதூக்கி ஆடும் ஒரு அமைப்பாக இருக்கிறது. தமக்கு நீதி கிடைக்கவில்லை என்று இவர்கள் ஊடகங்களில் குற்ரம் சாட்டுகிறார்கள்.

    நீதி கிடைக்கும் வரை தாம் ஓயப் போவதில்லை என்கிறார்கள்.

    இங்கேதான் மிகப்பெரிய சிக்கல் எழுகிறது. பல சமூகங்கள் வாழும் ஒருநாட்டில் பெரும்பான்மையோரை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு காவற்துறை தமது கடமையைச் சரிவர செய்ய முடிகிறதா?

    அவர்கள் நியாயபூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகளூஊஊக்குக் கூட நிறவெறி சாயம் பூசப்படுகிறதா? இக்கேள்வி மிகவும் யதார்த்தமானதே!

    இங்கிலாந்து போன்றதொரு நாட்டில் பல சமூகங்கள், பல கலாச்சாரங்கள் இணைந்து வாழும் ஒரு நாட்டில் துரதிர்ஷ்டவசமாக கணிப்புகளின் படி குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் பெரும்பான்மையாக ஒரு சமூகத்தையோ அன்றி ஒரு நிறத்தையோ கொண்டவர்களாக இருந்தால் அவர்களை நோக்கிய போலிசாரின் நடவடிக்கைகளுக்கு நிறவெறி முத்திரை குத்தப்படுமாகில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு நிலைநாட்டப்படும்?

    இந்நிலையில் உள்ள காவற்துறையினரைப் பார்த்துப் பரிதாபப்படுவது ஒன்றே எமக்கு ஏற்படக்கூடிய உணர்வாகிறது.

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக மார்க் டூகன் எனப்வர் நிராயுதபாணியாக சுடப்பட்டார் என்று கூக்குரலிடும் அதே மக்கள் அவரை பற்றிய பின்னனியைப் பற்ரி குறிப்பிட மறந்து விட்டார்கள்

    அவர் பயங்கர குற்றச் செயல்கள் புரியும் குழுவில் அங்கம் வகிப்பவர், பல கொலைகள் கொள்ளைகளில் ஈடுபட்டவர்
    பல குர்றச் செயல்களுக்குப் பொறுப்பானவர், ஏற்கனவே துப்பாக்கி, கத்தி என்பவர்ரைக் கையாண்டவர்.

    இவைகளும் அவரைப் பற்றி இபோது பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள். இப்படியான பின்னனி கொண்ட ஒருவரைப் பின் தொடர்ந்து சோதனை செய்யும் போது அவர் துப்பாக்கி வைத்திருந்தால் அதற்கான நியாயமான நடவடிக்கை எதுவாக இருக்க முடியும்?

    மறுபக்கம் பார்த்தால் போலிசார் இதைவிட அவர் உயிருக்கு உத்த்ரவாதம் அளிக்க வேறு ஏதாவது நடவடிக்கைகள் எடுத்திருக்கலாமா?

    விவாதங்கள் பலமாகத் திடர்கின்றன. லண்டன் காவற்திரையின் பொறுப்பாளர், காவற்துறையினர் மக்களின் நன்மதிப்பை இழந்து விட்டது உண்மைதான் அதை மீட்பதற்கு ஏற்ற நடப்டிக்கைகள் நாம் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    அதனோடு அதன் ஒரு பாகமாக இனிமேல் போலிசார் இத்தகிய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தம்மீது ஒரு வீடியீ கமிராவை அணிந்து கொள்வதன் மூலம் அவர்களது நடவ்டிக்கை முழுவதும் பதிவு செய்யப்பட்டு அவர்களது நடவடிக்கையை மக்களுக்கு வெளிப்படையாக்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்று மட்டு எமக்குப் புரிய வேண்டும் போலிசார் இத்தகிய ஒரு ஆய்வுக்குட்படுத்தப்படுமளவிற்கு இங்கிலாந்து மக்களுக்கு ஜனநாயக் உரிமைகள் இருப்பது குறித்துப் பாராட்ட வேண்டும்.

    குற்றவாளியோ இல்லையோ ஒரு உயிர் பறிபோனதற்காகவும், அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்காகவும் பரிதாப்பட வேண்டியதும் மனிதாபிமானமே!

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…92

    சக்தி சக்திதாசன்

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…92

    அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள்.

    babyparent1 babyparent2

    குழந்தைகள் தெய்வமும் குணத்தால் ஒன்ரு என்பார்கள். கள்ங்கமற்ற வெள்ளை உள்ளத்திற்குச் சொந்தக்காரர்கள் குழந்தைகள்.

    ஒரு வெறும் காகிதத்தைக் கொடுத்து எம்மை எழுதச் சொன்னால் அதில் கிறுக்குவதற்கு மனம் வருமா?

    அது போலத்தான் கள்ளமற்ற குழந்தை மனதை சரியான முரையில் வளர்த்தெடுப்பது, அவர்களை இக்கால வாழ்க்கைமுறைக்கு ஏற்ற வகையில் வகுத்தெடுப்பது பெற்றோரின் முக்கிய கடமையாகிறது.

    கேட்பதை அப்படியே தமது உளத்தில் பதி செய்து கொள்வார்கள் குழந்தைகள். பார்க்கும் காட்ச்சிகளின் உள்ளார்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் அதை அப்படியே கண்ணுக்குப் புலப்பட்ட வகையில் அர்த்தம் பண்ணிக் கொள்ளும் சுபாபமுடையவர்கள் குழந்தைகள்.

    என்னடா இது? குழந்தைகளைப் பர்றி அளவு கணக்கில்லாமல் அளந்து கொண்டு போகிறானே என்று எண்ணுகிறீர்களா?

    பயப்படாதீர்கள். சமீபத்தில் நான் காதில் வாங்கிய ஒரு செய்தியை சுவாசிப்பதே இம்மடலின் நோக்கம்.

    இங்கிலாந்திலுள்ள ஒரு குழந்தைகளின் நலனைப் பாராமரிக்கும் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் கருத்து அண்மையில் ஊடகங்களின் முதற்பக்கச் செய்தியாக மிதந்தது.

    பல பெற்றோர்கள் குழந்தைகளை குழந்தைகளாஅக வளர விடாமல் அவர்களின் திறமையை வளர்ப்பதாக எண்ணி அவர்களது நேரம் முழுவதையும் பயன்படுத்துவதற்காக பள்லிப் படிப்புத் தவிர்ந்த வெளி பயிற்சிகளில் அளவுக்கதிமகா ஈடுபடுத்துகிறார்கள் என்பதுவே அவரது கருத்து.

    அதாவது “ஜயையோ கொஞ்ச நேரம் கூட உட்கார முடியாமல் பணிகளில் கிடந்து அழுந்துகிறோமே” என்று எண்ணும் பெர்டியவர்களைப் போல குழந்தைகளுக்கும் சர்ரு நேரம் கூட குழந்தைகளாஅக உட்கார்ந்து தமக்கேயுரிய குழந்தைச் சுட்டித்தனம் புரிவதர்கு தகுந்த அளிவில் நேரம் கொடுக்கப்படுவதில்லை என்கிறார் இவர்.

    இத்தகிய நடவடிக்கைகளினால் குழந்தைகள் இயற்கையாக வளர்ச்சியடையாமல் சிறுவயதிலிருந்தே மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் வகையில் வளர்த்தெடுக்கப்படுகிறார்கள் என்பதுவும் இவர் கருத்தாகிறது.

    மிகவும் சிக்கலான ஒரு விவாதம்.  இல்லையா?

    இப்பிரபஞ்சத்திலே எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாஅக குழந்தைகள் பிரப்பதும் அவர்களை ஆன்னை தந்தையர் பேணிப்பாதுகாத்து வருவதும் இயற்கை நிகழ்வுகளாக் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

    அப்படியிருக்கையில் இன்றைய காலகட்டத்தில் இது ஏன் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகிறது? மனதைத் துருவும் ஒரு கேள்வி.

    காலமற்றம். ஆம் அதுவே உடனடியாக எமக்குக் கிடைக்ககூடிய விடையாகிறது.

    காலத்தின் மார்ரம், விஞ்ஞான வளர்ச்சி அவ்வளர்ச்சியின் வழியாக வாழ்க்கை வசதிகளின் ஏற்றத் தாழ்வு இவையனைத்தும் இன்றைய குழந்தை வளர்ப்பிற்கும் அன்றைய குழந்தை வளர்ப்பிற்கும் உஇள்ல வேறுபாட்டின் காரணங்களில் சிலவாகின்றன.

    அன்று ஒரு குழந்தையின் கைகளி அநேகமான நேரம் இருந்தது தனது நேரத்தைப் போக்கடிக்க தனது விளையாட்டுப் பொருட்களைத் தானாக கற்பனை செய்து உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையிருந்தது.

    ஆனால் இன்றைய குழந்தைகளின் கைகளில் நவீன கண்ணை சம்மந்தப்பட்ட பொருட்கள் கிடைத்ததும் அவர்களது கற்பனாதிரனை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருப்பதில்லை.

    ஆனால் இது எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்துமா? இல்லை மத்துயதர, உயர்தர வாழ்க்கை வசதி கொண்ட குடும்பங்களின் குழந்தைகளினால் தான் இவற்றைப் பெற்றுக் கொள்ல முடியும்.

    அடிப்படை உணவு வசதிக்கே அல்லாடும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் எங்கே போவார்கள் இவ்வசதிகளைப் பெற?

    தமது குழந்தைகளை இந்நவீன உலகில் திரமை மிக்கவர்களாஅக ஆக்குவதற்கு விளையாட்டு, கல்வி, விஞ்ஞானம் எனும் அனைத்துத் துறைகளிலும் பள்லிகளில் கிடைக்கும் போதனைகளை விட அதிக போதனைகளைப் பெர்றுக் கொடுபதர்காக தனியாரிடம் செல்கிறார்கள் வசதி படைத்தவர்கள்.

    ஆனால் வசதியற்றவர்களின் நிலை?

    அரசாங்கம் பள்லிகளில் இத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் வறுமைக்கோட்டின் கீழுள்ள குழந்தைகள் என்றுமே பின் தங்கியவர்களாகவே இருக்கப் போகிறார்கள்.

    இந்நிலையில் எது சரி,  பிள்ளைகள் இயற்கையாக வளரட்டும் என்ரு அவர்களை அவர்கள் வழியில் விடுவதா? இல்லை எமது சக்திக்குட்பட்ட வகையில் அவர்களது ஓய்விநேரத்தில் பலவித பயிற்சிகளுக்கு உள்ளாக்குவதா?

    மிகவும் ஆழமான விவாதம் சிந்திப்போம் மீண்டும் அடுத்த மடலில் அன்புடன் சக்தி சக்திதாசன் http://www.thamilpoonga.com http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…91

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்

    அடுத்தொரு வாரம், அடுத்தொரு மடல். ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக புரட்டுவதை விட விரைவாக வாரங்கள் புரட்டப் படுகின்றனவோ எனும் வகையில் காலதேவன் தனது சக்கரங்களை விரைவாக உருட்டிக் கொண்டிருக்கிறான்.

    எந்த ஒரு வீடோ? அன்றி எந்த ஒரு நாடோ? என்றுமே பொருளார ரீதியாகவோ அன்றி வசதிகளின் தரத்திலே உயர்ந்து கொண்டே செல்வது என்பது நடைமுறையில் நடக்காத ஒன்று.

    அப்படி எதிர்பார்ப்பதுவும் யதார்த்தமாகாது.

    அதே சமயம் முன்னேற்றத்தை எதிர்பார்த்து அதற்காக உழைப்பதன் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பான அன்றாட நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டால் உத்வேகம் இருக்காது. முன்னேற்றத்திற்கான புதுவகையான கண்டு பிடிப்புகளுக்கான உந்துதல் இருக்காது.

    ஒரு நாட்டின் துருத வளர்ச்சிக்கும், இயற்கையான இயங்குதலுக்கும் அடிமட்டத் தொழிலாளியும் அவசியம் அதே போல அதியுயர் செல்வந்தனும் தேவை.

    என்ன எத்திசையை நோக்கிச் செல்கிறது இம்மடல் எனும் எண்ணம் எழுவது இயற்கை.

    ஓரிரு தினங்களுக்கு முன்னால் இங்கிலாந்துப் பிரதமர் திரு டேவிட் கமரன் அவர்கள் ஒரு தொலைக்காட்ச்சியில் பங்கு பற்றி தனட்ய்ஹு கருத்துக்கள் சிலவற்றை முன்வைத்தார்.

    அவற்றைச் செவிமடுத்துக் கொண்டிருக்கையில் அரசியல்வாதிகளிஅப் பற்றி எனது சிந்தனை படர ஆரம்பித்தது.

    அரசியல் எனும் அந்தக் குட்டைக்குள் குதிப்பவர்கள் அதைத் தமது தொழிலாகச் செய்கிறார்களா? இல்லை மக்களுக்கான சேவையாகச் செய்கிறார்களா? எனும் கேள்வி ஆழமாக என்னுள்ளத்தை ஊடுருவியது.

    மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் ஆனால் அம்மக்கள் சேவைக்கும் ஊதியம் கொடுத்தும் நிலைதானெர் உலகெங்கும் நடைமுறையில் இருக்கிறது.

    அது ஒரு தொழில் எனும் ரீதியில் பார்த்தால் கூட ஒரு மனிதனை அரசியலை நோக்கித் தள்ளிச் செல்வது என்ன ?

    மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் தூய்மையான எண்ணமா? அன்றி அப்பதவியால் அவர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களா ?

    மிகவும் சிக்கலான கேள்வி ? இல்லையா !

    மகாத்மா காந்தி எனும் அந்த மாமனிதர் ஈடுப்பட்ட ரசியல் நிலைக்கும், இன்றைய அரசியல்வாதிகள் ஈடுபடும் அரசியல் நிலைக்கும் பலவிதமான வேறுபாடுகள் உண்டு.

    தனது நாடு தன் மக்களாளாலேயே ஆளப்பட வேண்டும் எனும் நியாமான உரிமைக்குரலை முன்னெடுத்து காந்தி தனது அர்சியலை நடத்தினார் அது முற்றுமுழுதாக அமக்கள் சேவையையே மனதில் கொண்ட நிலைப்பாடகா இருந்தது.

    ஆனால் இன்ரைய நிலையிஅல் மக்கள் தம்மைத் தாமே அளும் நிலையில் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசியலில் ஈடிபடும் அரசியல்வாதிகளின் மனதில் மக்கள் சேவை எத்தகிய இடைத்தை வகிக்கிறது என்பது கேள்விக்குறியே.

    எமது பின்புல நாடுகளை விட்டு நாம் வாழும் புலம்பெயர் நாடுகளின் அரசியலைக் கண்ணோட்டம் விடும் போது அங்குகூட சந்தேகமே வலுப்பெறுகிறது.

    சில வருடங்களுக்கு முன்பாக இங்கிலாந்து அரசியல்வாதிகள் மத்தியில் அடித்த சூறாவளியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

    பாரளுமன்ற உறுப்பினராக அவர்களுக்கு கிடைக்கும் ஊதியத்திற்கு மேலாக அவர்களுக்கு அளிக்கப்படும் செலவீனச் சலூகைகளை பலர் தவராகப் பயன்படுத்து நியாயமற்ற வகையில் பணத்தைப் பெற்றிருப்பது தெரிய வந்ததும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்து மக்கள் மனதில் அரசியல்வாதிகளின் மீதிருந்த மதிப்பு கரைந்து போனதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

    சரி இவற்றிற்கும் பிரித்தானியப் பிரதமரின் தொலைக்காட்சிக் கருத்தாடலுக்கும் என்ன தொடர்பு? இதோ வருகிறேன். . . .

    இங்கிலாந்தி ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது,

    சமீபத்திய கருத்துக் கணிப்பின் படி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பவர்களது விகிதம் கூடிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

    இங்கேதான் பிரித்தானியப் பிரதமரின் பிரகடனம் மக்கள் நலனைச் சார்ந்ததா? இல்லை இன்னும் 15 மாதங்களில் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் தமது கட்ச்சி அரசைமைத்துக் கொள்வதற்குச் சாதகமாக இருக்கும் ஒரு பிரகடனமா ? எனும் சந்தேகம் உள்ளத்தை உலுப்புகிறது.

    சரி ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் முக்கிய கடமை தனது பதவியை அர்ர்ர்ரசில் தக்க வைத்துக் கொள்வதே இதிலென்ன இடக்கு எனும் எண்ணம் சிலரின் மனதிலே எழலாம்.

    ஆனால் இங்கிலாந்துப் பிரதமர் தனது கட்சி 2015 இல் பதவிக்கு வந்தால் தான் பிரதமராக வந்தால் ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமா என்பதற்காக நடத்துவேன் என்று உறுதியளித்துள்ளார்,

    ஜரோப்பிய ஒன்றியத்தினுள் அங்கம் வகிப்பதை பல முன்னனி தனியார் நிறுவனங்கள் வலியுறுத்தி வரும் வேளையில் இத்தகையதோர் அறிவித்தல் எந்த நோக்கத்தை முன்வைத்து செய்யப்பட்டிருக்கிறது ?

    மக்கள் சேவையா ?  மகேசன் சேவையா?  காலம் தான் விடையளிக்கும்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…90

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    ஆண்டொன்று ஓடி மறைந்தது புதிதாய் ஒரு வருடம் மெதுவாக உள்ளே புகுந்தது. யாரைப் பார்த்தாலும் ஓரே கேள்வி? எப்படி ஒரு வருடம் ஓடி மறைந்தது என்று ஒரு கேள்வி அனைத்து உதடுகளிலும் இருந்து அரும்புகிறது. விடை தெரிந்தால் பின் ஏன் இத்தனை வியப்பு?

    எத்தனையோ நிகழ்வுகள், எப்படி, எப்படியோ எத்தனையோ விதமாக நிகழ்ந்து முடிந்தன . சில மகிழ்வைத் தந்தன, சில சோகத்தைத் தந்தன, சில வியப்பைத் தந்தன, சில சந்தேகத்தைக் கிளப்பின ஆனால் அனைத்திலும் ஒரேயொரு ஒற்றுமை அவற்றின் நிகழ்வுகள் அனைத்தும் எமது கட்டுப்பாடுகளிலில்லை.

    பார்வையாளர்களாகவும், மெளனமான பங்காளிகளாகவும் அந்நிகழ்வினுள் நாம் உருட்டப்படுவது ஒன்றே யதார்த்தமாகிறது.

    காலம் எனும் பகடைக்காயை யாரோ உருட்டுகிறார்க:ள் காய்களாக நாம் நகர்த்தப்படுத்துகிறோம் அது ஒன்றுதான் நிஜமான நடைமுறையாகிறது.

    ஆனால் அகிலத்தில் அதிகாரத்திலிருப்போர் ஏதோ வழ்க்கை நிலையென நினைத்து மக்களின் வாழ்வோடு விளையாடுவது போன்ற நிகழ்வுகள் பல கண்ணுக்குப் புலப்படுகிறது.

    மொழி, இனம், நிறம், மதம் எனும் பலதரப்பட்ட பாகுபாடுகளுக்காக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் பல யுத்தங்கள் உரிமைப்போர் எனும் பெயரில் ஆங்காங்கே நிகழாமலில்லை.

    இவையெல்லாம் சரியோ அன்றிப் பிழையோ எனும் கேள்வியை விட இவற்றின் நிகழ்வுகள் தான் அகிலத்தின் அன்றாட வாழ்க்கையையும் அந்தந்த நாடுகளின் பொருளாதார ஸ்தரங்களையும் நிர்ணயிக்கின்றன என்பதுவே கசப்பான உண்மை.

    2008ம் ஆண்டு தொடங்கிய சர்வதேசப் பொருளாதாரச் சிக்கல் கொஞ்சம் கொஞ்சமாகக் அதிகரித்து 2010,11,12களில் மக்களின் அன்றாட வாழ்க்கையைக் குறிப்பாக இங்கிலாந்தில் படு மோசமாகத் தாக்கியிருந்தது.

    இப்பொருளாதாரச் சிக்கல்களினால் எடுக்கப்பட்ட கடுமையான நிதிக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் தாக்கம் 2013 வரை நீடித்து இன்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்த வண்ணம் இருக்கிறது.

    ஆனால் 2013ம் ஆண்டில் நாட்டின் பொருளாரச்சீர்கேடு கொஞ்சம் தேற்றமடைந்து முன்னேற்றப்பாதையில் அடிப்போடத் தொடங்கியுள்ளது எனச் சில பொருளாதார நிபுணர்களும் அரசாங்க அமைச்சர்களும் சத்தமாக குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

    இது எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பதைப் புலர்ந்திருக்கும் இந்த 2014ம் ஆண்டுதான் புரியவைக்கும் என்பதுவே உண்மை.

    ஆவ்கானிஸ்தான் போர் எனும் சகதிக்குள் காலை வைத்துச் சிக்குப்பட்டிருந்த இங்கிலாந்து இராணுவம் ஒருவாரு தமது காலை அச்சேற்றினுள் இருந்து வெளியெடுத்து திரும்ப்பிவது 2014 என்பது அவ்விராணுவ வீரர்கள் பலரது குடும்பத்திற்கு ஒரு நல் எதிர்[பார்ப்பாக இருப்பதுவும் குறிப்பிடக்கூடியதாக உள்ளது.

    ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் அவ்வருடம் ஒவ்வொருவரது மனதிலும் பலவிதமான எதிர்பார்புகளைத் தாங்கிக்கொண்டே பிறக்கிறது.ஆனால் இவ்வெதிர்பார்ப்புகளில் எத்தனை ஒரு நிஜமான நிகழ்வாகிறது என்பது கேள்விக்குறியே?

    லாட்டரிச் சீட்டில் லட்சரூபாய் விழ வேண்டும் என எதிர்பார்ப்போர் சிலர், மூன்றுவேளை உணவு வேண்டும் என எதிர்பார்ப்போர் சிலர் இப்படி எதிர்பார்ப்புகளின் விகிதாசாரம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது என்பதுவே உண்மை.

    ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் பலர் தமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பல புதிய தீர்மானங்களை எடுப்பது வழக்கம். இத்தீர்மானங்களை இறுதிவரை கடைப்பிடிப்போர் எண்ணிக்கை மிகக்குறைவானதுவே!

    இவ்வாழ்க்கை எத்தனை நிலையானது என்பது ஒருபுறமிருக்க அமைதியான வாழ்வை நோக்கி நடைபயில எத்தகைய தேவை மனிதர்களுக்குத் தேவை என்பது மிகவும் ஆழமன ஒரு கேள்வி.

    வருடம் முடியும் போது இத்தோடு இவ்வருடம் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து போய்விடும் என்பதுவும், இதோ புலர்ந்திருக்கும் இப்புதுவருடம் பல இன்பநிகழ்வுகளைத் தன்னுள் புதைத்து வைத்துள்ளது நம் வாழ்வும் மலர்ந்து விடும் என்பதுவும் பொதுவாக மனிதராகப் பிறந்தோரில் பெரும்பான்மையோர் மனங்களில் ஊஞ்சலாடும் உணர்வுகள்.

    ஆக மொத்தம் இந்த மடலில் இவன் சொல்ல வருவது என்ன? எனும் எண்ணம் உங்கள் உள்ளங்களில் பெரும் பங்கு வகிக்கிறது.

    எனது இனிய வாசக உள்ளங்களே! நாம் நாமாக, நாம் மனிதராக, மனிதாபிமானம் மிக்கவர்களாக வாழ்வது ஒன்றே எப்போதும், எவ்வருடத்திலும் நிலையான் தீர்மானமாக இருப்பதுவே அனைவருக்கும் பயன் தரக்கூடிய செய்கை.

    மலர்ந்து விட்ட இந்த 2014ம் ஆண்டு அனைவரது வாழ்வினிலும் மகிழ்வான மாற்றங்களைக் கொண்டு வர என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • புத்தாண்டு வாழ்த்துக்கள்

     

    2014 Tamil New Year Kavithai - 01 - QuotesAdda.com

    வருடமொன்று ஓடி மறைந்ததும்
    விரைவாய் ஒன்று வந்து புகுந்ததும்
    விளைவாய் வாழ்வின் வேகத்தை
    விந்தையாய் எமக்கு காட்டிடுதே !

    சிந்திய கண்ணீர்த் துளிகள் எல்லாம்
    முந்திய வினைகள் என்றிட்டே நாம்
    பிந்திய காலங்கள் தம்மையே வென்று
    படைத்திடுவோம் சரித்திரம் தனை

    அவசரம் அவசரமாய் ஓடிடும் இவ்
    அகவைகள் தம்மின் கோலங்க|ள்
    அகிலத்தில் இயற்கையின் நியதி
    அனைவர்க்கும் பொதுவான நீதி

    இல்லையென்றிருப்போர் காலத்தால்
    இருப்போர் என்றே ஆகிடும் கோலம்
    இருப்பதைப் பகிர்ந்திடும் எண்ணம்
    இல்லை என்றாகிடும் வேஷம்

    நினைத்ததை மறப்பவர் எத்தனையோ
    மறந்ததை நினைப்பவரும் அத்தனையே
    நினைப்பதும் மறப்பதும் நித்திய நிகழ்வு
    நிஜத்தினை மறைப்பது எத்தகை உணர்வு ?

    தந்தையை இழந்தேன் அன்னையை இழந்தேன்
    தரணியில் பெருந்தகை செல்வத்தை இழந்தேன்
    தவழ்ந்திடும் காலத்தின் திரைகள் வாழ்வில்
    தாமாக விழுந்திடும் வேளைகளோ ?

    காலத்தால் விளைந்திடும் நிகழ்வுகளை
    கவிதையாய் நானிங்கு கோர்த்தது
    ஞாலத்தில் என் அன்பு நெஞ்சங்கள்
    ஞாபகம் கொண்டிட வேண்டியதாலே

    மறைந்த ஆண்டோடு மறையட்டும்
    மனதில் வாழும் வேதனைகள் – தோழரே
    பிறக்கும் ஆண்டோடு பூக்கட்டும் புதிதாய்
    பொற்காலம் அனைவரின் வாழ்விலும்

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    இனிய என் சொந்தங்கள் அனைத்திற்கும்
    தமிழன்னை ஈந்திடுவாள் நல்வாழ்வை
    தவறாமல் பெற்றிடுக திருப்தியான வாழ்க்கை

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (89)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    கிறீஸ்துவ பெருநாளான நத்தார் தினம் கூடும் இவ்வாரத்திலே உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    அன்பு, காதல் என்பது ஒரு உள்ளத்தின் அதீத உணர்வென்பார்கள். காதல் என்பது இலக்கியத்தில் இனிதாக விளக்கப்பட்டிருக்கிறது. காதல் எனும் உணர்வு ஏதோ புதிய தலைமுறையில் கண்டு பிடிக்கப்பட்டதல்ல.

    தொல்காப்பியம் என எமது இலக்கியத்தின் ஆரம்ப ஆதாரங்களில் இருந்து இன்றுவரை இக்காதலின் வெவ்வேறு அங்கங்கள் வெவ்வேறு வடிவங்களில் அழகிய தமிழில் அர்த்தப்படுத்தப் பட்டிருக்கிறது.

    ஆனால் காதல் எனும் அன்பின் அதீத வெளிப்படுத்தலை கொச்சைப்படுத்தாதவர்களும் இல்லை . பலர் காதல் எனும் போர்வையில் பலரது வாழ்வினைச் சிதைத்த சம்பவங்களையும் நாம் அறியாமலில்லை.

    என்னடா இது ? சக்தி மிகவும் ஆடம்பரமாகக் காதலை வியாபிக்கிறானே இங்கே போகிறது இவன் மடல் எனும் கேள்வி உங்கள் உள்ளங்களில் நர்த்தனமாடுவதை நான் நன்கறிவேன்.

    கடந்தவாரம் லண்டனை நோக்கி ரயிலில் பயணம் செய்தபோது பத்திரிகையில் யதேச்சையாகப் பார்த்த ஒரு செய்தி எனது நெஞ்சைத் தொட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் அவாவே எனது இப்பதிவிற்குக் காரணம்.

    இலண்டனின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் “கென்ட்(Kent)” எனும் இடத்தில் வாழ்பவர் “ரயன் பீலிக்ஸ் கிலீனி(Ryan Felix Glenny)” அவருக்கு வயது 23. மேற்கத்திய நாடுகளில் இருக்கும் வழக்க்கம் போல் இவரும் 22வயதான “வெல்ஸ்(Wells)” எனும் நங்கையுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.

     felix1

    இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உண்டு. 2 வயதான மகனும், பத்து மாதங்கள் நிறைந்த பெண்குழந்தையும் உண்டு.

    தனது வயிற்றில் ஏற்பட்ட அஜீரணக் கோளாறுகளினால் அவதிக்குள்ளான இவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    பல பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட இவர் வயிற்றின் அடிப்பகுதியில் ஏற்படும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    அதற்குரிய பலவிதமான வைத்தியங்கள் சத்திரசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு வைத்தியம் என்பனவற்றிற்கு உள்ளானார்.

    இருப்பினும் இவரது புற்றுநோய் சிகிச்சைக்கப்பாற்பட்டு பரவி விட்டது என்றும் இவர் உயிரோடிருப்பது இன்னும் சில மாதங்களே எனும் கசப்பான செய்தி இவரது மகனின் பிறந்தநாள் பரிசாக இவர்களுக்குக் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து இவர்கள் எடுத்த முடிவே காதலின் அதியுச்சத்தைக் காட்டுகிறது.

     felix2

    ஆமாம் தனது வாழ்வின் இறுதி நிர்ணயிக்கப்பட்டதும் அவர்கள் தாமிருவரும் சட்டமூலம் தமது பந்தத்தை உறுதியாக்க முடிவெடுத்தார்கள்.

    அவர் படுத்த படுக்கையாகவிருக்கும் வைத்தியசாலைக் கட்டிலிலேயே தனது காதலியை, தனது குழந்தைகளின் தாயை சட்டமூலம் தனது மனைவியாக்கினார்.

    பாதிரியாரும், அவரது நெருங்கிய உறவினர்களும் அந்நிகழ்விற்கு சமூகமளித்திருந்தார்கள் .

    இவர்களுக்காக அவரது உற்ற நண்பர் ஒரு நிதிசேகரிப்பை ஆரம்பித்து இதுவரை சுமார் 26,000 ஸ்ரெலிங் பவுண்ஸ் அளவில் சேகரித்துள்ளார்.

    சிலமாதங்களே வாழப்போகும் தனது காதலனை தனது கணவனாக்க முடிவு செய்த அப்பெண்ணின் காதல் உணர்வு அதீதமானதே.

    தனது கணவனின் இறுதி கிறீஸ்துமஸ் நாளைத் தமது குழந்தைகளுடன் தனது கணவன் மகிழ்ச்சியாகக் களிக்க தான் அனைத்தையும் செய்யப் போவதாக அம்மங்கை தெரிவித்துள்ளார்.

    ஆமாம் காதல் அன்பின் உயர்ந்த ஒரு நிலையாக இருக்கிறது. அதன் மகத்துவத்தை அதன் பவித்திரத்தை இப்படியான ஒரு நிகழ்வு அதுவும் நாகரீகம் எனும் பெயரால் காம இச்சைகளுக்கு முதலிடம் அளிக்கும் மேற்கத்திய நாட்டில் நிகழ்ந்தது என்பது ஏனோ என்னிதயத்தைத் தொட்டது.

    மீண்டும் அடுத்த மடலில்

    Share
  • நத்தார் வாழ்த்துகள்

    சக்தி சக்திதாசன்

    christmas_wallpaper_14_1024x768

    அன்பினை அகரமாக்கி

    அருளினை அகலமாக்கி

    அகிலத்தின் அடிப்படை

    அமைதி என்றுரைத்தார்

     

    மானிடர் வாழ்வு தனில்

    மாண்பு மிகு பண்பு

    மாட்சிமை தனை நல்கும்

    மனமிகு அன்பு என்றார்

     

    ஏற்றம் காண வேண்டி

    மாற்றம் தனைத் தேடி

    சீற்றம் தனை அகற்ற

    தோற்றம் கொண்டவர் இயேசு

     

    நோக்கம் ஏதுமற்றோர் உலகில்

    தேக்கம் கொண்டு வாழ்வதை

    நீக்கம் செய்யவே பூமியில்

    தாக்கம் கொண்டவர் கர்த்தர்

     

    மண்ணில் நாம் இயற்றும் பாவங்களை

    விண்ணின் தலைவன் மைந்தன்

    தன்னில் ஏந்திக் கொண்டான்

    முன்னில் நிகழ்ந்த வேதங்கள்

     

    கள்ளில் போதையுற்று மயங்கும்

    சொல்லில் கயமையுற்ற மாந்தருக்காய்

    முள்ளில் கீரிடமணிந்து தேவமைந்தன்

    சிலுவையில் தனை மாய்த்தனன்

     

    மேரியின் அன்பு மைந்தன் தன்னின்

    மேண்மைமிகு பிறந்தநாளில்

    மேதினியில் மனிதராய் நாம் பிறந்து

    மேன்மைகள் என்ன செய்தோம் ?

     

    நத்தார் திருநாளில் தன்னில்

    நற்திரு வாழ்த்துக்களுடன்

    சிறியவன் இவனின் உள்ளம்

    சிந்துது பல்லாயிர வாழ்த்துக்கள்

     

    படத்திற்கு நன்றி: http://biblecliparts-jesuspictures.blogspot.com/2010/08/jesus-christ-wallpapers-and-christian.html

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…88

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் உங்கள் முன்னே அடுத்த மடலுடன் .

    “எதிர்பார்ப்புகள்” மிகவும் இலகுவான, சுலமாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு வார்த்தை. ஆனால் அதனுள் அடங்கி இருக்கும் அர்த்தங்களோ ஆயிரமாயிரம் !

    ஒரு வார்த்தையாக அதனுள் அடங்கி இருக்கும் அர்த்தங்களின் வாயிலாக அந்தச் சொல் காலத்துக்கு காலம் ஒரே தொனியில் அதை உச்சரிப்போரின் உதடுகளில் இருந்து ஒலித்தாலும் காலத்தின் மாற்றத்தின் வடுக்கள் அந்த வார்த்தையில் ஒட்டிக் கொள்ளாமல் இருந்து விடவில்லை.

    ஆமாம் காலத்தின் மாற்றத்தினோடு எதிர்பார்ப்புகளின் அர்த்தமும் அதன் ஆழமும் மாறிக்கொண்டேதான் போகின்றது.

    இந்த மாற்றம் எமது சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிகளை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லப் போகின்றதா? இல்லை கலாச்சார சீரழிவுக்குள் எம்மை இட்டுச் செல்லப் போகின்றதா? என்பது ஒரு கேள்விக்குறியே !

    இல்லை இதுவெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அத்தகைய காலத்தின் தேவைகளுக்கேற்ப அந்தந்த இளம் தலைமுறைகளினால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் இதை ஒரு பெரிய விடயமாகத் தூக்கிப் பிடிப்பதே தவறு எனும் வாதமும் ஓரங்களில் ஒலிக்கத்தான் செய்கிறது.

    எது எப்படி இருப்பினும் வாழும் காலத்தில் எமது வாழ்க்கையில் மாற்றத்தை இவ்விளம் தலைமுறைகளின் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்துமாகின் அதனைப் பற்றிய ஒரு அலசல் தேவைப்படுவது யதார்த்தமே !

    அரசாங்களின் கடன்கள், அவ்வரசாங்கங்கள் தங்கள் நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல வடிவங்களில் முதன்நிலைப்படுத்தப்ப்பட்டு அந்நாட்டு நிதிநிலைமைகளை நிர்ணயிக்கின்றன.

    சிலநாட்களின் முன்னால் நான் எனது ஆபிஸிக்கு காலையில் சென்று கொண்டிருக்கும் போது அக்கார் வானொலியில் வந்த ஒரு விளம்பரத்தை செவிமடுக்கும் போது உள்ளத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளின் வழியாகவே இம்மடல் வந்து விழுகிறது.

    ஆமாம் மக்களின் தேவைக்காக உடனடியாக கடன் கொடுப்போம். அக்கடனைப் பெறுவது எவ்வளவு இலகுவானது என்பதைப் பற்றி அனைவரையும் கவரும் வண்ணம் அழகாக ஒரு விளம்பரம் அவ்வானொலியில் அந்நிறுவனத்தினால் நிகழ்த்தப்பட்டது.

    அப்போதுதான் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கையில் இது எத்த்ஹ்ஹ்ஹ்ஹ்ஹனை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பது புரிந்தது.

    வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் பெறுவதை ஓரளவு ஏற்றுக் கொள்கிறோம் என்றாலும் கூட அலங்காரமான் பொருட்களுக்காக நவீன வசதிகளுக்காக இன்றைய சந்தையில் இளம் தலைமுறையைக் கவரும் வகையில் காணப்படும் பொருட்களுக்காக இக் கடனைப் பெற்றுத் தம்மை மீளா வறுமையில் ஆழ்த்தும் பலரைப் பற்றிய செய்திகளை அன்றாடம் ஊடகங்களின் வாயிலாகக் கேள்வியுறுகிறோம்.

    தெருவிலே காணும் பல இளய தலைமுறையின் கைகளிலே கைக்கணணி, நவீன கைத்தொலைபேசி, நவீன ஒலிபரப்பு சாதனங்கள் என பலதரப்பட்ட சாதனக்களைக் கண்ணுறுகிறோம்.

    இவைகள் ஏதோ மிகவும் மலிவு விலையில் விற்கப்படுபவை அல்ல அதைக் கையாளும் இளைஞர்கள் அனைவரும் அதனை வாங்கக்கூடிய அளவிற்கு செல்வத்தில் திளைப்பவர்களும் இல்லை.

    பின் எவ்வாறு இவ்வளவு இலகுவாக இவை அவர்களின் கைகளை வந்தடைகின்றன. ஒன்று அவர்களது பெற்றோர் அவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமது தகுதிக்கு மீறிய வகையில் கடன்களைப் பெற்று அவர்களது ஆசைகளை நிறைவேற்றுகிறார்கள் அன்றி அவ்விளைஞர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் இப்பொருள்களை அடைந்து கொள்கிறார்கள்.

    அவர்களின் கைகளில் இத்தகைய நவீன பொருட்கள் தவழ் வேண்டும் என்பது அவர்களுடௌய வட்டத்தின் எதிர்பார்ப்பாக இன்றைய காலகட்டத்தில் இருப்பதே மிகவும் கவலைக்குரிய விடயமாகிறது.

    அது மட்டுமின்றி அதைப் பெற்றுக் கொடுப்பதற்கான வசதியற்றவர்களுக்கு அவர்களின் தகுதியைக் கூட ஆராயாமல் அளவிற்கு அதிகமான வட்டியுடன் கடன் கொடுப்பதற்கு அவ்வானொலி விளம்பரதாரர்களைப் போன்ற நிறுவனங்கள் தயாராக இருப்பது அதைவிடக் கொடுமையான செயல்.

    அன்றைய காலங்களிலும் மக்களிடம் எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன ஆனால் அவ்வெதிர்பார்ப்புகளை அடைவதற்கு அவர்கள் திட்டம் தீட்டி அதற்கான வசதியைப் பெற்றுக் கொள்வதற்காக நியாயமாக உழைத்தார்கள். அதனால் தமது எதிர்பார்ப்புகளை அடைந்ததும் அதற்கான உரிய மதிப்பை அளித்தார்கள்.

    ஆனால் இன்றைய நிலை . . . . .

    எதிர்பார்ப்பவைகளை எதுவித பிரயத்தனமும் இல்லாமல் நினைத்த மாத்திரத்தில் அடைந்து விட வேண்டுமென்னும் பேராசையால் உந்தப்பட்டு இருக்கும் ஒரு தலைமுறையாக காலத்தின் மாற்றம் இன்றைய இளம்தலைமுறையை உருவாக்கி விட்டதோ என்று அச்சப்பட வேண்டி உள்ளது.?

    தேவைகளின் வித்தியாசங்கள், புரியப்படாமலே ஒரு சந்ததி உருவாகிறதோ? எதற்கும் விதிவிலக்குகள் உண்டு அதேபோல தமது தேவைகளுக்காக நியாய எல்லைகளுக்குள் உழைக்கும் உத்தமான இளம் தலைமுறைகளும் உள்ளனர் எனபதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…87

    சக்தி சக்திதாசன்

    mandela-cell-jpg_extra_big Nelson-Mandela-bw

     

     

     

     

     

     

     

     

     

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…87

     

    அன்பினியர்களே !

    இனிய வணக்கங்களுடன் உங்களின் முன்னே அடுத்த மடலில் சந்திப்பதில் மிக்க மகிழ்வுறுகிறேன்.

    உலகளாவிய ஊடகங்கள் அனைதிலும் இவ்வாரம் ஊடுருவி நிற்கும் விடயம் மறைந்த தென்னாபிரிக்க அரசியல் தலைவர் திரு நெல்சன் மண்டலா அவர்களின் மறைவைப் பற்றியதே !

    ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது அவன் வாழும் காலத்தில் அவனைப் பற்றி எழும் பேச்சுக்கள் அல்ல அவன் மறைந்த பின்னால் அவனைப் பற்றி மக்கள் மத்தியில் மிதக்கும் கருத்துக்களே என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு சமயம் கூறியிருந்தார்.

    அரசியல் கைதியாகச் சிறையிலே 27 வருடங்கள் அடைப்பட்டுக் கிடந்த ஒரு மனிதன் சிறையிலிருந்து வெளியே வந்து இரண்டு வருடங்களில் அந்நாட்டின் ஜனாதிபதியாக அரசியல் கதிரையை அலங்கரித்த சரித்திரம் படைத்தவர் நெல்சன் மண்டலா.

    சொந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வாக்குரிமை அற்று சிறுபான்மை இனத்தவரால் அரசியல் ரீதியாக சட்டம் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறு கொண்ட நிறவெறி அதிகார வர்க்கத்திற்கெதிராக போர்க்கொடி தூக்கிய ஒரு இளம் வீரரான நெல்சன் மண்டலா 27 வருடங்களின் பின்னால் அவரைப் பயங்கரவாதி என வருணித்த அரசியல் தலைவர்களாலேயே மாமனிதன் எனும் பெருமையோடு அரசியல் கோலோச்சும் வல்லமை கொண்ட ஒரு தலைவராக முடிந்தது என்பது ஒரு சாதாரண விடயமல்லவே !

    அப்படி அவர் எதைத்தான் சாதித்து விட்டார் ? மர்ரைய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களிடத்தில் காணப்படாத உயரிய அம்சம் இவரிடம் அப்படி என்னதான் இருந்தது ?

    கேள்விகள் எழத்தான் செய்யும் ?

    அவர் சிறையில் வாழ்ந்த அந்த 27 வருடங்களில் தன்னை அடக்கி ஒடுக்கிய அதைகார வர்க்கத்தினர் பேசும் அவ்ரிக்கானா மொழியைப் படித்தார் என்பதே அவருடைய சிறப்பம்சத்தின் அடிப்படையாகும்.

    அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டார். அந்தப்புரிதலின் அடிப்படையில் எப்படி தமது மக்களின் வாழ்விற்கு ஒரு விடியலைத் தேடிக் கொடுப்பது என்னும் வகையினை அறிந்து கொண்டார்.

    உலகளாவியரீதியில் தமது விடுதலைக்கான குரல் ஒலித்துக் கொண்டிருந்தது என்பதனை அவர் ஒருபோதும் மறக்கவில்லை.

    நெல்சன் மண்டலா தென்னாபிரிக்காவின் அரசியல் தலைவராக, நாட்டின் அதிபராக வருவதை விரும்பாத பல நாடுகளின் தலைவர்கள் அவர் பதவிக்கு வந்தால் தென்னாபிரிக்காவில் இரத்த ஆறு ஓடும். இனவெறிக் கலவரங்கள் தலைவிரித்தாடும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டியிருந்ததை தலைவர் மண்டலா உணர்ந்திருக்கத் தவறவில்லை.

    அவரது அரசியல் தானும் தான் சார்ந்திருந்த இயக்கமும் எனும் குறுகிய கண்ணோட்டத்திற்கு அப்பால் தனது நாடு, தனது மக்கள் அவர்களின் நல்வாழ்விற்கான உலக அரசியல் என்பனவற்ற தகுந்த வகையில் உள்வாங்கியிருந்தது.

    எதையும், ந்ப்படியும், எப்போதும் சாதிக்கலாம் எனும் மனநிலை கொண்டிராது இதை, இப்போது, இப்படித்தான் எனும் வகையில் அவரது கொள்கைகளை வகுத்துக் கொண்டார்.

    அதற்கேற்ப சிறையிலிருந்து வெளிவந்த அவரது வாயிலிருந்து பழிவாங்கும் வகையிலான ஆத்திர உணர்வுகளோடு கலந்த பேச்சை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கிடைத்ததோ மாபெரும் ஏமாற்றம்.

    அவரது பேச்சின் சாரமே “மறப்போம் மன்னிப்போம்” எனும் வகையில் அமைந்திருந்தது. மன்னிக்கத் தெரிந்த மனிதனின் மனது மாணிக்கக் கோவிலப்பா எனும் கவியரசரின் வரிகள் அவரது மாண்மைக்கு எடுத்துக்காட்டாகியது.

    தன்னை அடக்கி ஒடுக்கிய சிறுபான்மை அதிகார வர்க்கத்தினருக்கும் தனது அர்சியல் கட்டமைப்பில் இடம் உண்டு என்பதைத் துல்லியமாக தமது நடைமுறையில் எடுத்துக்காட்டினார்.

    இந்தியாவின் தந்தை மக்காத்மா காந்தியடிகள் ஆரம்பகால தென்னாபிரிக்க உரிமைக்குரலில் முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பதை மறைந்த தலைவர் நெல்சன் மண்டலா அவர்கள் எப்போதும் மறந்து விடவில்லை.

    அரசியல் தர்மத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததினால் தான் மறைந்த இத்தலைவரின் நினைவுப் பெருநாளில் 90 நாடுகளிக்கும் மேலான தலைவர்கள் கலந்து சரித்திர வரலாற்றில் இந்நிகழ்வை இடம்பெற வைத்தார்கள்.

    உலகநாடுகள் னைத்தும் வியந்து நோக்கிய ஒரு வித்தியாசமான நெல்சன் மண்டலாவைப் போன்ற தலைவர்கள் நூற்றுக்கணக்காக அனைத்து நாடுகளிலும் தோன்ற வேண்டும்.

    அது ஒன்றே அமைதியான, சமாதானமான, சமத்துவமான அன்பின் அடிப்படையில் ஒரு அகிலத்தைச் சமைக்கும் வல்லமை படைத்தது

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share