சக்தி சக்திதாசன்

mandela-cell-jpg_extra_big Nelson-Mandela-bw

 

 

 

 

 

 

 

 

 

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…87

 

அன்பினியர்களே !

இனிய வணக்கங்களுடன் உங்களின் முன்னே அடுத்த மடலில் சந்திப்பதில் மிக்க மகிழ்வுறுகிறேன்.

உலகளாவிய ஊடகங்கள் அனைதிலும் இவ்வாரம் ஊடுருவி நிற்கும் விடயம் மறைந்த தென்னாபிரிக்க அரசியல் தலைவர் திரு நெல்சன் மண்டலா அவர்களின் மறைவைப் பற்றியதே !

ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது அவன் வாழும் காலத்தில் அவனைப் பற்றி எழும் பேச்சுக்கள் அல்ல அவன் மறைந்த பின்னால் அவனைப் பற்றி மக்கள் மத்தியில் மிதக்கும் கருத்துக்களே என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு சமயம் கூறியிருந்தார்.

அரசியல் கைதியாகச் சிறையிலே 27 வருடங்கள் அடைப்பட்டுக் கிடந்த ஒரு மனிதன் சிறையிலிருந்து வெளியே வந்து இரண்டு வருடங்களில் அந்நாட்டின் ஜனாதிபதியாக அரசியல் கதிரையை அலங்கரித்த சரித்திரம் படைத்தவர் நெல்சன் மண்டலா.

சொந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வாக்குரிமை அற்று சிறுபான்மை இனத்தவரால் அரசியல் ரீதியாக சட்டம் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறு கொண்ட நிறவெறி அதிகார வர்க்கத்திற்கெதிராக போர்க்கொடி தூக்கிய ஒரு இளம் வீரரான நெல்சன் மண்டலா 27 வருடங்களின் பின்னால் அவரைப் பயங்கரவாதி என வருணித்த அரசியல் தலைவர்களாலேயே மாமனிதன் எனும் பெருமையோடு அரசியல் கோலோச்சும் வல்லமை கொண்ட ஒரு தலைவராக முடிந்தது என்பது ஒரு சாதாரண விடயமல்லவே !

அப்படி அவர் எதைத்தான் சாதித்து விட்டார் ? மர்ரைய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களிடத்தில் காணப்படாத உயரிய அம்சம் இவரிடம் அப்படி என்னதான் இருந்தது ?

கேள்விகள் எழத்தான் செய்யும் ?

அவர் சிறையில் வாழ்ந்த அந்த 27 வருடங்களில் தன்னை அடக்கி ஒடுக்கிய அதைகார வர்க்கத்தினர் பேசும் அவ்ரிக்கானா மொழியைப் படித்தார் என்பதே அவருடைய சிறப்பம்சத்தின் அடிப்படையாகும்.

அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டார். அந்தப்புரிதலின் அடிப்படையில் எப்படி தமது மக்களின் வாழ்விற்கு ஒரு விடியலைத் தேடிக் கொடுப்பது என்னும் வகையினை அறிந்து கொண்டார்.

உலகளாவியரீதியில் தமது விடுதலைக்கான குரல் ஒலித்துக் கொண்டிருந்தது என்பதனை அவர் ஒருபோதும் மறக்கவில்லை.

நெல்சன் மண்டலா தென்னாபிரிக்காவின் அரசியல் தலைவராக, நாட்டின் அதிபராக வருவதை விரும்பாத பல நாடுகளின் தலைவர்கள் அவர் பதவிக்கு வந்தால் தென்னாபிரிக்காவில் இரத்த ஆறு ஓடும். இனவெறிக் கலவரங்கள் தலைவிரித்தாடும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டியிருந்ததை தலைவர் மண்டலா உணர்ந்திருக்கத் தவறவில்லை.

அவரது அரசியல் தானும் தான் சார்ந்திருந்த இயக்கமும் எனும் குறுகிய கண்ணோட்டத்திற்கு அப்பால் தனது நாடு, தனது மக்கள் அவர்களின் நல்வாழ்விற்கான உலக அரசியல் என்பனவற்ற தகுந்த வகையில் உள்வாங்கியிருந்தது.

எதையும், ந்ப்படியும், எப்போதும் சாதிக்கலாம் எனும் மனநிலை கொண்டிராது இதை, இப்போது, இப்படித்தான் எனும் வகையில் அவரது கொள்கைகளை வகுத்துக் கொண்டார்.

அதற்கேற்ப சிறையிலிருந்து வெளிவந்த அவரது வாயிலிருந்து பழிவாங்கும் வகையிலான ஆத்திர உணர்வுகளோடு கலந்த பேச்சை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கிடைத்ததோ மாபெரும் ஏமாற்றம்.

அவரது பேச்சின் சாரமே “மறப்போம் மன்னிப்போம்” எனும் வகையில் அமைந்திருந்தது. மன்னிக்கத் தெரிந்த மனிதனின் மனது மாணிக்கக் கோவிலப்பா எனும் கவியரசரின் வரிகள் அவரது மாண்மைக்கு எடுத்துக்காட்டாகியது.

தன்னை அடக்கி ஒடுக்கிய சிறுபான்மை அதிகார வர்க்கத்தினருக்கும் தனது அர்சியல் கட்டமைப்பில் இடம் உண்டு என்பதைத் துல்லியமாக தமது நடைமுறையில் எடுத்துக்காட்டினார்.

இந்தியாவின் தந்தை மக்காத்மா காந்தியடிகள் ஆரம்பகால தென்னாபிரிக்க உரிமைக்குரலில் முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பதை மறைந்த தலைவர் நெல்சன் மண்டலா அவர்கள் எப்போதும் மறந்து விடவில்லை.

அரசியல் தர்மத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததினால் தான் மறைந்த இத்தலைவரின் நினைவுப் பெருநாளில் 90 நாடுகளிக்கும் மேலான தலைவர்கள் கலந்து சரித்திர வரலாற்றில் இந்நிகழ்வை இடம்பெற வைத்தார்கள்.

உலகநாடுகள் னைத்தும் வியந்து நோக்கிய ஒரு வித்தியாசமான நெல்சன் மண்டலாவைப் போன்ற தலைவர்கள் நூற்றுக்கணக்காக அனைத்து நாடுகளிலும் தோன்ற வேண்டும்.

அது ஒன்றே அமைதியான, சமாதானமான, சமத்துவமான அன்பின் அடிப்படையில் ஒரு அகிலத்தைச் சமைக்கும் வல்லமை படைத்தது

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *