இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…97
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள். கடந்தவாரம் இங்கிலாந்திலிருந்து எனது மனவோட்டங்களை உங்களுடன் கடித மூலம் பகிர்ந்து கொண்டேன். சில சமயங்களில் எமக்கு உள்ளச் சலவை செய்ய வேண்டிய தேவையேற்படுகிறது.
அச்சலவையின் பின்னால் மீண்டும் புது உற்சாகத்துடன் உங்கள் முன்னே அடுத மடல் வரைகிறேன்.
இந்த வருட ஆரம்பமே இங்கிலாந்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார பின் தங்கிய நிலையிலிருந்து ஓரளவு மீட்சி பெற்று முன்னோக்கி நடைபோடுகிறோம் எனும் எண்ணம் ஏற்படும் போது முடியவில்லை உங்கள் அனர்த்தம் இதோ உங்களுக்கு மீண்டும் பாடம் கற்பிக்கிறேன் என்று இயற்கையன்னை வரிந்து கட்டிக் கொண்டு தொடுத்து விட்டாள் போர் எம்மீது.
ஓ ! நாம் தான் இயற்கையைச் சீரழித்தோம் எனும் ஆவேசம் பொங்கியதோ ? எமது இயற்கையன்னைக்கு !
ஆங்கிலத்தில் ” Polar Vortex “ என்றழைக்கப்படும் ஒரு விதமான இயற்கை மாற்றத்தின் போகோளத்தின் வடமுனையின் குளிர் வட அமெரிக்காவை அழுத்தி அவர்களைச் சமீப காலத்தில் கண்டிராத அளவு பனிமழையினுள் ஆழ்த்தி ஒரு சதிராட்டத்தையே நடத்தியிருந்தது.
இந்தக் காலமாற்றத்தின் எச்சங்கள் அத்திலாந்து சமுத்திரத்தைக் கடந்து நாம் வாழும் இங்கிலாந்து தேசத்தைப் பனிமழையல்லாமல் சூறாவள், அடைமழை எனும் வடிவெடுத்து சிக்கலுக்குள் உள்ளாக்கி வருகின்றது.
இதுவே கலநில அவதானிகள், விஞ்ஞானிகள் என்பவர்களினால் எமது இந்த விடாப்பிடியான ஈரப்பதனிலைக்கு விளக்கமாக அளித்துள்லார்கள்.
எது எப்படி இருப்பினும். இத்தகைதோர் வெள்ளத்துடன் கூடிய ஆண்டின் ஆரம்பத்தை இங்கிலாந்து கண்டிருப்பது ஏறத்தழ 250 வருடங்களின் பின்னால் என்னும் செய்தி எம்மையெல்லாம் வியப்பிலாழ்த்துகிறது.
நான் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து ஏறத்தாழ நாற்பது வருடங்களாகிறது. இந்த 40 வருட காலத்தில் இதுவே முதற்தடவையாக இத்தகையதோர் நீண்ட சூறாவளியுடன் கூடிய தொடர் மழையையும் அதனால் நிரம்பி வழியும் தேம்ஸ் நதியையும் அந்நதியையும் ,அ அதைப் போன்ற மற்றும் சிறிய நதிகளையும் அண்டிய பகுதிகளில் பாய்ந்தோடும் வெள்ளத்தையும் நான் பார்ப்பது இதுவே முதற் தடவையாகிறது.
காலமார்றம், காலநிலைச் சீர்கேடு இவையெல்லாம் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையைச் சீர்குலைக்கிறது.
இத்தகைய சீர்கேட்டை எதிர்நோக்கும் மக்களோ தம்மை வழிநடத்தும் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் தம்மிடம் வருடந்தோறும் வாக்குக் கேட்டு வரும் தமது நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் அரசியல்வாதிகளையும் திகைப்புடன் நோக்குகிறார்கள்.
இங்கிலாந்து அரசாங்கமும் பிரதமரும் அல்லல்படும் ஓர் சூழல் . ஏனென்று கேட்கிறீர்களா ?
நாட்டின் பொருளாதரத்தைச் சீராக்கும் நடவடிக்கைகளில் முக்கியமான செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாக காலநிலைச் சீர்கேட்டினால் ஏற்படும் அனர்த்தங்களைச் சந்திக்கும் பிரிவான சுற்றுப்புறச் சூழல் திணைகளத்திற்கான நிதியினைக் குறைத்திருந்தார் நிதியமைச்சர்.
அவருக்குத் தெரியுமா இயற்கையன்னையின் சீற்றத்திற்கு இங்கிலாந்து உள்ளாகப் போகிறது என்று ?
வந்ததே வினை ! இத்திணைக்களத்தின் நிதிப்பற்றாக்குறையினால் அவர்கள் தமது பணியாளர்களைக் குறத்தது மட்டுமில்லாமல் செய்யவேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளையும் முடக்கி விட்டார்கள்.
எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு வெறும் வாயில் அல்வா வைத்தது போல ஒரு ஆனந்தம். விடுவர்களா சும்மா?
ஆளும் கட்ச்சியையும் அதனுடைய கூட்டரசாங்கத் தோழமைக் கட்சியையும் உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள் பாவம் !
இச்சுற்றுப்புறச் சூழல் திணைக்கள அதிகாரிகள் வேறு அரசாங்கம் தமது நிதியினைக் குறைத்ததுவே தாம் தமது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையைத் தோற்றுவித்தது என்று சொல்லி விட்டார்களா ?
கேட்க வேண்டுமா பாரளுமன்றமே ஒரு அரசியல் உதபந்தாட்ட மைதானமாகி விட்டது பாவம் வெள்ளத்துள் தவிக்கும் மக்கள் தான் அவர்களின் உதைபந்து.
பிரதமர் என்ன லேசுப்பட்டவரா ? டேவிட் கமரானா? கொக்கா ? என்று வெகு விரைவாக அடுத்த வாரம் தான் பங்கு பற்றவிருந்த மத்தியகிழக்குகளுக்கான விஜயத்தை ரத்துச் செய்துவிட்டார்.
அது மட்டுமல்ல இவ்வெள்ளத்தினால் பாதிக்க[[அட்ட மக்களுக்கான நிவாரணவேலைகளைத் தானே ந்ர்ர்ரடியாகச் செயல்படுத்துவதாகக் கூறி இதற்கான பட்ஜெட் எவ்வளவு ஆனாலும் அதற்கு வரைமுறை கிடையாது என்று அறிவித்து விட்டார் போங்கள் . . . . .
சும்மா இருந்த அரசியல்வாதிகளும் விழித்துக் கொண்டார்கள் எமது மக்களே வாழ்வாதரத்திர்கு அவதியுறும் நிலையிலே வெளிநாடுகளுக்கு உதவுவதற்காக ஏன் 11 மில்லியன் பவுண்ட்ஸ் செலவு செய்ய வேண்டும்? அந்தப் பணத்தையும் எமது காலநிலச் சீரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காகப் பயன்படுத்துங்கள் எனும் கூக்குரல் மற்றொரு பக்கத்தில் .. . . . . .
சரி இவைகளுக்கு மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களின் சேதி என்ன ?
ஓ ! அவர்கள் தமது காற்சட்டைகளை உயர்த்திக்கொண்டு இன்னும் வெள்ளத்தின் நடுவே . . . . . . .
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan