சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

மற்றுமொரு வாரத்தில் மற்றுமொரு மடலுடன் மாற்றமில்லா மனதுடன் உங்களுடன் என் மனக்கருத்துக்களைப் பதிவு செய்யும் மற்றுமோர் இனிமையான தருணம்.

வித்தியாசமான மனிதர்கள் , வித்தியாசமான பார்வைகள், வித்தியாசமான கோணக்கள் இவைகளின் உறைவிடம் தான் இவ்வகிலம்.

என்றோ? யாருக்கோ? எப்போதோ? ஒவ்வாதவன் எனும் ஒரு மனிதன் தன் மறைவுக்குப் பின்னால் அவனைத் தூற்றியவர்களினாலேயே போற்றப்படும் நிகழ்வுகளைக் காண்கிறோம்.

இது இன்று நேற்றல்ல காலம் காலமாக இவ்வகிலத்தில் நடைபெற்றும் சாதாரண நிகழ்வுகளே !

உதாரணமாக எமது பார் புகழும் மகாகவி பாரதியாரையே எடுத்துக் கொள்ளுங்களேன். அன்று அவரது புரட்சிகரமான கருத்துக்களைப் பைத்தியக்காரத்தனம் என்று ஒதுக்கிய அதே சமூகம் இன்று பாரதியார் இல்லாத காலத்தில் அவருக்காக மணிமாளிகைகளைக் கட்டி வைத்துப் போற்றிப் புகழ்ந்திருக்கவில்லையா?

பாரதியாருடைய இறுதிச்சடங்கில் வந்திருந்த மக்களை விட அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை அதிகம் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஓரிடத்தில் கூறியதை நினைவு கூர்கிறேன்.

என்னடா இவனின் இந்த மடல் எம்மை எத்திசை நோக்கி இழுத்துச் செல்கிறது எனும் எண்ணம் அன்பு உள்ளங்களில் எழுவதில் வியப்பொன்றுமில்லை.

சில தினக்களுக்கு முன்னால் இங்கிலாந்தின் தொழிற்சங்ககங்களில் பலம் வாய்ந்ததும் , பெரியதுமான “ஆர்.எம்.டி(RMT)” எனும் தொழிற்சங்கத்தின் தலைவரான ” பொப் குறோ(Bob Crow)” என்பவர் மாரடைப்பினால் தனது 52வது வயதில் காலமானார்.

அது சரி அவரைப் பற்றிக் குரிப்பிடுமளவிர்கு அவரிடம் உள்ள சிறப்பம்சம் என்ன? எனும் கேள்வி எழுவது இயற்கை.

தனது திழிலாளர் யூனியம் அதாவது முக்கியமாக லண்டன் நிலக்கீழ் புகையிரதம் (Underground) சார்பான தொழிலாளர்களின் நலன்களை முன்வைத்துப் போராடியதில் இவர் தனித்துவம் பெற்றவர்.

இங்கிலாந்தின் லேபர் கட்சி அதாவது இங்குள்ள மிகப்பெரிய அரசியல் கட்ச்சிகளில் ஒன்றின் ஆரம்பம் தொழிலாளர் யூனியன்களின் பங்களிப்பினாலேயே ஏற்பட்டது.

அதனால் எப்போது லேபர் கட்ச்சி அரசமைத்தாலும் அவ்வர்சாங்கத்தில் தொழிலாளர் யூனியன்கள் பெரும் பங்கு வகிப்பதுண்டு.

ஆனால் டோனி பிளேயர் அவர்களின் லேபர் அரசாங்கம் இதனை மாற்றியமைத்தது. தொழிலாளர்களுடன் மட்டுமில்லாமல் பெரிய ஆலை முதலாளிகளுடனும் தமது உறவைப் பேணுவதே தற்ல அரசியலின் காலத்தின் தேவை என்பதை உணர்ந்து அவர்கள் பெரிய வியாபார முதலாளிகளிடன் நெருக்க,மானார்கள்.

அடிப்படையில் இடதுசார்பான சோசலிஸ்ட் கொள்கைகளைப் பின்பற்றிய லேபர் கட்ச்சி தமது டைத்தளத்திலிருந்து விலகி வலது சார்பாகிறார்கள் எனும் வாதத்தை முன் வைப்பதில் முன்னனி வகித்தவர் பொப் குறோ.

பாரம்பரியமாக கன்சர்வேடிவ் அரசாங்கத்தை எதிர்த்து வந்த தொழிலாளர் யூனியன்களில் பொப் குறோ மாரு பட்டார் அவர் டோனி பிளேயர் தலையிலான லேபர் கட்ச்சியுடனும் இருந்து கொள்கைரீதியில் பிளவு பட்டிருந்தார்.

தனது அங்கத்தினர்களின் கோரிக்கைகளை முவைத்து பல வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து தமது அங்கத்தினர்களின் நலன்களை தனது இறுதிக்காலம் வரை பாதுகாத்து வந்தார்.

எந்தவொரு அரசாங்கம் ஆகட்டும் பொப் குறோ அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார்.

தொழிலாளர் நலன்கள் மட்டுமின்றி நிலக்கீழ் சுரங்க ரயில்வே திணைகளம் ஆட்குறைப்புச் செய்வது பொதுமக்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை எதுவித தடங்களுமின்றி ஊடகங்கள் மத்தியில் முன்வைத்தார்.

அவருடைய கம்யூனிசம் மர்ரும் அதிதீவிர சோசலிஸ்ட் கொள்கைகள் அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லாது இருந்தாலும் தான் தெரிவு செய்யப்பட்டிருந்த தனது யூனியன் தலைவர் பதிவியின் பொறுப்பை தத்ரூபமாக உணர்ந்து அதைச் செயல்படுத்திய சொற்பமானவர்களில் இவரும் ஒருவர்.

இவர் உயிரோடிருக்கும் போது நாட்டு நலன்களின் முதலாவது எதிரி இவர் என்பது போல பேசிய பல முன்னனித் தலைவர்கள் இன்று அவர் மறைந்ததும். இவரைப் போல கொள்கையில் ஆத்மார்த்தமான் ஈடுபாடு கொண்டவர்கள் இல்லை என்பது போல பேசி வருவது எம்மைத் திகைக்க வைக்கிறது.

ஒ ! இதுதான் உலகமா ? இதுதான் நாட்டு நடப்போ ?

அடடா ! எனக்குத்தான் புரியவில்லை போலும். . . . .

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

அவருடைய நேர்காணலுக்கான காணொளி
http://www.youtube.com/watch?v=aiUVsky6Obg

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.