சக்தி சக்திதாசன்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…92

அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள்.

babyparent1 babyparent2

குழந்தைகள் தெய்வமும் குணத்தால் ஒன்ரு என்பார்கள். கள்ங்கமற்ற வெள்ளை உள்ளத்திற்குச் சொந்தக்காரர்கள் குழந்தைகள்.

ஒரு வெறும் காகிதத்தைக் கொடுத்து எம்மை எழுதச் சொன்னால் அதில் கிறுக்குவதற்கு மனம் வருமா?

அது போலத்தான் கள்ளமற்ற குழந்தை மனதை சரியான முரையில் வளர்த்தெடுப்பது, அவர்களை இக்கால வாழ்க்கைமுறைக்கு ஏற்ற வகையில் வகுத்தெடுப்பது பெற்றோரின் முக்கிய கடமையாகிறது.

கேட்பதை அப்படியே தமது உளத்தில் பதி செய்து கொள்வார்கள் குழந்தைகள். பார்க்கும் காட்ச்சிகளின் உள்ளார்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் அதை அப்படியே கண்ணுக்குப் புலப்பட்ட வகையில் அர்த்தம் பண்ணிக் கொள்ளும் சுபாபமுடையவர்கள் குழந்தைகள்.

என்னடா இது? குழந்தைகளைப் பர்றி அளவு கணக்கில்லாமல் அளந்து கொண்டு போகிறானே என்று எண்ணுகிறீர்களா?

பயப்படாதீர்கள். சமீபத்தில் நான் காதில் வாங்கிய ஒரு செய்தியை சுவாசிப்பதே இம்மடலின் நோக்கம்.

இங்கிலாந்திலுள்ள ஒரு குழந்தைகளின் நலனைப் பாராமரிக்கும் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் கருத்து அண்மையில் ஊடகங்களின் முதற்பக்கச் செய்தியாக மிதந்தது.

பல பெற்றோர்கள் குழந்தைகளை குழந்தைகளாஅக வளர விடாமல் அவர்களின் திறமையை வளர்ப்பதாக எண்ணி அவர்களது நேரம் முழுவதையும் பயன்படுத்துவதற்காக பள்லிப் படிப்புத் தவிர்ந்த வெளி பயிற்சிகளில் அளவுக்கதிமகா ஈடுபடுத்துகிறார்கள் என்பதுவே அவரது கருத்து.

அதாவது “ஜயையோ கொஞ்ச நேரம் கூட உட்கார முடியாமல் பணிகளில் கிடந்து அழுந்துகிறோமே” என்று எண்ணும் பெர்டியவர்களைப் போல குழந்தைகளுக்கும் சர்ரு நேரம் கூட குழந்தைகளாஅக உட்கார்ந்து தமக்கேயுரிய குழந்தைச் சுட்டித்தனம் புரிவதர்கு தகுந்த அளிவில் நேரம் கொடுக்கப்படுவதில்லை என்கிறார் இவர்.

இத்தகிய நடவடிக்கைகளினால் குழந்தைகள் இயற்கையாக வளர்ச்சியடையாமல் சிறுவயதிலிருந்தே மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் வகையில் வளர்த்தெடுக்கப்படுகிறார்கள் என்பதுவும் இவர் கருத்தாகிறது.

மிகவும் சிக்கலான ஒரு விவாதம்.  இல்லையா?

இப்பிரபஞ்சத்திலே எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாஅக குழந்தைகள் பிரப்பதும் அவர்களை ஆன்னை தந்தையர் பேணிப்பாதுகாத்து வருவதும் இயற்கை நிகழ்வுகளாக் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

அப்படியிருக்கையில் இன்றைய காலகட்டத்தில் இது ஏன் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகிறது? மனதைத் துருவும் ஒரு கேள்வி.

காலமற்றம். ஆம் அதுவே உடனடியாக எமக்குக் கிடைக்ககூடிய விடையாகிறது.

காலத்தின் மார்ரம், விஞ்ஞான வளர்ச்சி அவ்வளர்ச்சியின் வழியாக வாழ்க்கை வசதிகளின் ஏற்றத் தாழ்வு இவையனைத்தும் இன்றைய குழந்தை வளர்ப்பிற்கும் அன்றைய குழந்தை வளர்ப்பிற்கும் உஇள்ல வேறுபாட்டின் காரணங்களில் சிலவாகின்றன.

அன்று ஒரு குழந்தையின் கைகளி அநேகமான நேரம் இருந்தது தனது நேரத்தைப் போக்கடிக்க தனது விளையாட்டுப் பொருட்களைத் தானாக கற்பனை செய்து உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையிருந்தது.

ஆனால் இன்றைய குழந்தைகளின் கைகளில் நவீன கண்ணை சம்மந்தப்பட்ட பொருட்கள் கிடைத்ததும் அவர்களது கற்பனாதிரனை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருப்பதில்லை.

ஆனால் இது எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்துமா? இல்லை மத்துயதர, உயர்தர வாழ்க்கை வசதி கொண்ட குடும்பங்களின் குழந்தைகளினால் தான் இவற்றைப் பெற்றுக் கொள்ல முடியும்.

அடிப்படை உணவு வசதிக்கே அல்லாடும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் எங்கே போவார்கள் இவ்வசதிகளைப் பெற?

தமது குழந்தைகளை இந்நவீன உலகில் திரமை மிக்கவர்களாஅக ஆக்குவதற்கு விளையாட்டு, கல்வி, விஞ்ஞானம் எனும் அனைத்துத் துறைகளிலும் பள்லிகளில் கிடைக்கும் போதனைகளை விட அதிக போதனைகளைப் பெர்றுக் கொடுபதர்காக தனியாரிடம் செல்கிறார்கள் வசதி படைத்தவர்கள்.

ஆனால் வசதியற்றவர்களின் நிலை?

அரசாங்கம் பள்லிகளில் இத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் வறுமைக்கோட்டின் கீழுள்ள குழந்தைகள் என்றுமே பின் தங்கியவர்களாகவே இருக்கப் போகிறார்கள்.

இந்நிலையில் எது சரி,  பிள்ளைகள் இயற்கையாக வளரட்டும் என்ரு அவர்களை அவர்கள் வழியில் விடுவதா? இல்லை எமது சக்திக்குட்பட்ட வகையில் அவர்களது ஓய்விநேரத்தில் பலவித பயிற்சிகளுக்கு உள்ளாக்குவதா?

மிகவும் ஆழமான விவாதம் சிந்திப்போம் மீண்டும் அடுத்த மடலில் அன்புடன் சக்தி சக்திதாசன் http://www.thamilpoonga.com http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *