சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே!

இனிய வணக்கங்கள்!

அடுத்தொரு வாரம், அடுத்தொரு மடல், அடுத்தொரு அலசல்.

ஆங்கிலத்தில் அழகாக “Generation gap” என்பார்கள். ஆமாம், அதற்குச் சரியான தமிழாக்கம் தலைமுறைகளுக்கிடையான இடைவெளி ஆகும்.

ஆனால் அனைத்துக்குமே இதைக் காரணம் காட்டி தப்பிச் சென்று விடும் வழமைதான் அநேகமாக இயங்கி வருகிறது.

ஒரு தந்தை மகனுக்கோ அன்றி மகளுக்கோ ஏதாவது பழகும் முறையைப் பற்றியோ அன்றிக் கலாச்சார அவசியங்கள் பற்றியோ விளக்க்க்க்க்க முற்படும் போது இலகுவாக தந்தையிடம் இது உங்கள் காலத்திற்கு உகந்ததாக இருந்திருக்கலாம் ஆனால் இன்றைய எமது தலைமுறைக்கு ஒத்து வராது என்று கூறித் தம்மை விடுவித்துக் கொள்ளும் பல நிகழ்வுகளைக் காண்கிறோம்.

அன்றிலிருந்து இன்றுவரை அகிலம் ஒரே அகிலம் தான், ம்ஃஅனித்ஹ்ஹ்ஹ்ஹர்களும் உருவ உடலமைப்பும் ஒன்றேதான் பின் எங்கிருந்து இந்த தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளி உருவாகிறது,

அப்படி மனித வாழ்வில் மாறிக் கொண்டிருப்பதுதான் என்ன? எனது தந்தை தனது தந்தையை அப்பா என்றுதான் அழைத்தார் இன்று எனது மகனுக்கும் நான் அப்பாதான் ஆனால் அதைச் சிலவேளைகளில் அவர்கள் மாற்றி “டாடி” என்றழைக்கலாமே தவிர உறவுமுறை தந்தை மகன் தான்.

மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்னே இருந்த உறவுமுறை மாற்றம் காணாது அப்படியே தான் இருக்கிறது அப்படியாயின் எதுதான் மாற்றம் கண்டுள்ளது? இந்தத் “தலைமுறை இடைவெளி” என்பதுதான் என்ன?

ஓடிக்கொண்டிருக்கும் எமது வாழ்க்கையில் உறவு முறைகள் அப்படியே இருந்தாலும் எம்மைச்சுற்றிய சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கிறது.

அப்பா, டாடியாகவும் அம்மா, அமமொயாகவும் மாறும் ஒரு கலாச்சார மார்றம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

மேடான நிலத்தில் விழும் தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடுவது போல மேஏஏலைநாடுகளின் காலாச்சார மாற்றங்கள் கீழத்தேசங்களான எங்கள் பிபுல நாட்டு மக்களைக் கவர்ந்திழுப்பது தவிர்க்க முடியாததே!

பாள்ளத்தை நோக்கி ஓடும் நீர் அப்பள்:ளத்தை நிரப்பியது அங்கு தேங்கி விடுகிறது பின்னால் அந்தத் தேங்கிய நீர் விஷக்கிருமிகளின் உற்பத்திக்குத்தான் இதவுவுமே ஒழிய மனிதர் அருந்துவதற்கு அல்ல.

அதே போலத்தன்ன் இந்தக் கலாச்சாரக் கவர்ச்சியும் ஒரு சிலகாலத்தின் பின்னால் அதுவும் தேங்கி விடுகிறது.

அப்படியான ஒரு தேக்கத்தின் விளைவாகத்தான் இன்ன்ன்ன்றைய மேலைத்தேசங்களின் மக்களின் அடிப்படி வாழ்க்கைமுறைகளே மாறி வருகின்றன.

உதாரணமாக ஓரினத் திருமணங்கள் போன்ற சிலகாலத்திற்கு முன்னால் திரைமறைவில் நிகழ்ந்தவைகள் இன்று சமுதாய நிகழ்வுகளின் ஒரு அங்கமாக அம்க்கீகரிக்கப்பட்டு வருகிறது.

இதைப்பற்றிய முரணான கருத்துக்கள் கொண்ட அனுஒஅவ முதிர்ச்சியடைந்தவர்களை நோக்கி தமது அபிப்பிராயங்களை நியாயப் படுத்த முனையும் இளைய தலைமுறையினர் உபயோகிக்கும் பதமே “தலைமுறை இடைவெளி”.

காலத்தின் மார்றத்தை உள்வாங்கிக் கொண்டு நடைபோட வேண்டியதே மனிதனின் கடமையாகிறத்ஹ்ஹ்ஹு. க;ஆச்சார தர்மங்களின் அடிப்படையில் பகுத்தறிய முற்படுவோர் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் தமக்கு முரண்[அட்ட கருத்துக்களையே எதிர் நோக்க வேண்டியுள்ளது.

இதுவே யதார்த்த உண்மை.

ஒவ்வொரு தலைமுறையும் தமது அடுத்த தலைமுறையின் வாழ்க்கையை மேலும் வசதியாக்கவே பிரயத்தனப்படுகிறது.

ஆனால் பல சமய்ங்களில் நேர்மரையான வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகளின் பக்க விளைவுகளாக எதிர்மறையா நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதற்குத் துணையாக “தலைமுறை இடைவெளி” எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

என் இனிய அன்பு உள்ளங்களே! தலைமுறைகளுக்கிடையில் எத்தனை இடைவெளிகள் ஏற்பட்டாலும் அப்பா, அப்பாதான் அம்மா, அம்மாதான் இந்த உறவுமுறைகள் மாற முடியாது.

இதேபோன்ற சில அடிப்படையான ஆனால் மூட நம்பிக்கைகள் இல்லாத கலாச்சார அடிப்படைகள் எவர் எங்கு வாழ்ந்தாலும் மாற முடியாத்வை.

ஆனால் இவற்றின் மகத்துவத்தைப் பேணிக்காப்பது?,  சிந்திக்க வேண்டிய விடயம் இல்லையா?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.