இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..

0

கவிஞர் காவிரி மைந்தன்

தஞ்சை ராமையாதாஸ் – பாடல் 

 

கோபதாபங்களின் உணர்ச்சிக் குவியலாக மனித மனம்! அதுவும்கவிஞர்கள் உணர்வுகளின் சூறாவளியோடு தங்கள்வெளிப்பாடுகளை தருகின்றவர்களாக! வால்மீகிராமாயணத்தை வாசித்த கம்பன் – அதனைத் தமிழில்மொழிபெயர்க்கிறான் என்றால் அதுவும் 12000 செய்யுள்களாக..அவன் அந்தந்தப் பாத்திரங்களாய் மாறி அல்லவா சந்தக்கவிதைகளாக தந்த தமிழ் அமுதம் கம்பனின் உள்ளத்தைஉணரவைக்குதன்றோ?

பாட்டுக்கொரு புலவன் பாரதியார் – வெகுண்டெழுந்துவெஞ்சினம் கொண்டு அந்நியர் ஆட்சிக்கு எதிராக சுதந்திர கீதமுழக்கங்களைத் தந்தானே.. அதுவும் உணர்வுகளின்உச்சக்கட்டம்தானே!

 

பாவேந்தர் பாரதிதாசன் – தூங்கிக்கிடந்த தமிழினத்தைத்தட்டியெழுப்பி புரட்சிக் கருத்துக்களை உத்வேகத்துடன்ஊட்டிவளர்த்து மொழி, இன உணர்வுகளின் முன்னணித்தூதுவனாய் காட்சி தந்தானே – மறுப்பவர் உண்டோ?

 

மலைக்கள்ளன் திரைப்படத்திற்காக ஒரு பாடல் எழுதத்தொடங்கிய போது.. இசையமைப்பாளருக்கும்பாடலாசிரியருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் தஞ்சைராமையாதாஸ் இயற்றிய பல்லவி மட்டுமே நமக்குக் கிடைக்கப்பெற, வேற்று வழியின்றி அங்கிருந்த கோவை ஐயா முத்துஎன்னும் மற்றொரு கவிஞரைக் கொண்டு சரணங்கள்வரையப்பட்டதை என்ன சொல்வது? முன்னர் அமைந்த பல்லவிஇதோ..

தொடரும் சரணங்கள் பாணி தனி..

 

இரண்டையும் இணைத்து இசையமைக்கப்பட்ட பாடல்!

 

காலங்கள் மாறி வந்த போதும் இந்தப் பாடலில் உள்ளகருத்துக்கள் சோடை போகாமல்.. அதுவும் பல்லவி இந்தசமூகத்தின் புரையோடிக்கிடக்கும் அயோக்கியர்களின் மீதுசாட்டையடியாய் விழுகிறது!

 

அரசியல் செய்யும் கபளீகரங்களைப் பட்டவர்த்தனமாய் கேட்கும்கேள்வி.. காலங்களைத் தொடர்ந்து எதிரொலியாய் நம்காதுகளில் விழுகிறது!

 

அடுத்து எழுதிய ஐயா முத்து அவர்களின் வரிகள்ஆட்சியிலிருப்பவர் செய்ய வேண்டிய திட்டங்கள் எவை என்றுபட்டியலிட்டுக்காட்டுகிறது! தேர்தல் அறிக்கையைநினைவூட்டும் சரணங்கள்.. எம்.ஜி.ஆர் பானுமதி நடிப்பில்..கலைஞர் கருணாநிதி வசனத்தில் வெற்றிபெற்ற திரைப்படம் -மலைக்கள்ளன்!

 

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்……

படம : மலை கள்ளன்
இசை : SM. சுப்பையாஹ் நாய்டு
பாடல் : ராமையாஹ் தாஸ்
பாடியவர் : T.M.S.

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) –
கல்விதெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) –
குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
இன்னும்

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) –
அதில்ஆய கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்
இன்னும்

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

 
http://www.youtube.com/watch?v=FwxtJ4YJ1Ec
http://www.youtube.com/watch?v=FwxtJ4YJ1Ec

 
 
 
 
 
 
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.