Tag: நாகேஸ்வரி அண்ணாமலை

  • ஒரு மத நல்லிணக்கக் கூட்டத்தில்  .  .  .   .

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    சமீபத்தில் நான் எழுதிய போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம் என்ற புத்தக அறிமுகம் பற்றிய நிகழ்ச்சியை சென்னையிலும் மதுரையிலும் நடத்தினோம்.  போப்பின் செய்தியை எத்தனை  பேரிடம் கொண்டுசேர்க்க முடியுமோ அத்தனை பேரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை, குறிக்கோள்.  இதனால்தான் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தோம்.

    மதுரையில் புத்தக அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு பல மதத்தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார்.   போப் பிரான்சிஸின் உயர்ந்த குணங்களை எடுத்துச் சொல்லும் புத்தக அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு இம்மாதிரி ஒரு நிகழ்ச்சி நடப்பது சாலச் சிறந்தது என்று எனக்கும் தோன்றியதால் அந்த நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டேன்.  நெறியாளரையும் தலைமை வகித்தவரையும் விடுத்து என்னைச் சேர்த்து ஐந்து கருத்துரையாளர்கள் பங்குகொண்டோம்.  ஐந்து பேரில் ஒருவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர், சமூக செயற்பாட்டாளர்; இன்னொருவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்; இன்னொருவர் புத்த மத ஆய்வாள மாணவர், இந்து மதத்தைச் சேர்ந்தவர்; மற்ற இரண்டு பேரில்  நான் ஒருத்தி; இன்னொருவர் சுவாமி சதா சிவானந்தா, அமைப்பாளர், தமிழ்நாடு துறவியர் பேரவை.  நிகழ்ச்சியின் தலைப்பு ‘மதநல்லிணக்கம்: தடைகளும் விடைகளும்’.  ஒவ்வொருவரும் மத நல்லிணக்கத்திற்காக அவரவர் மத நோக்கிலிருந்து கருத்துக் கூற வேண்டும்.

    என் அருகில் உட்கார்ந்திருந்த சுவாமி சிவானந்தா நான் கையில் வைத்திருந்த போப் பிரான்சிஸ்  புத்தகத்தைப் பார்த்ததும் அவராக நான் கிறிஸ்தவள் என்று அனுமானித்துக்கொண்டார்.  ‘இங்கு இரண்டு கிறிஸ்தவர்கள் இருக்கிறீர்கள்’ என்று என்னிடம் கூறினார்.   நான் உடனே அவரிடம் ‘நான் போப்பைப் பற்றிப் புத்தகம் எழுதினாலும் நான் கிறிஸ்தவள் அல்ல’ என்றேன்.  அதை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை.  அந்தக் கருத்தரங்கில் கிறிஸ்தவ மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் இந்து மதத்திற்குத் தேவையான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் முனகிக்கொண்டிருந்தார்.  எல்லோருக்கும் பத்து நிமிடங்கள்தான் உரையாற்றுவதற்குக் கொடுக்கப்பட்டது.  தனக்கும் ஏன் பத்து நிமிடங்கள்தான் கொடுக்கப்பட்டன என்பதை அவர் புரிந்துகொள்ளவேயில்லை.  அவரைப் பொறுத்தவரை முக்கியமான மதமான இந்து மதத்திற்கு இன்னும் அதிக நேரம் கொடுத்திருக்க வேண்டும்.  விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது எந்த மதம் பெரிது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அல்ல, எப்படி மதங்களிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரலாம் என்பதே.

    எல்லாக் கருத்துரையாளர்களும் தங்கள் உரையை முடித்துக்கொண்ட பிறகு இடைவேளை விட்டார்கள்.  அதற்குப் பிறகு கேள்வி பதில் நேரம்.  யார் கேட்ட கேள்விகளுக்கும் அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை.  வந்திருந்த மாணவர்களில் சிலர் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள்.  ஒன்றுக்கும் அவர் நேரடியாகப் பதில் சொல்லவில்லை.  இந்தியச் சமூகம் மிகவும் சிறந்து விளங்கியதாகவும் அந்நியர்கள் வந்துதான் அதைச் சீர்குலைத்துவிட்டதாகவும் கூறினார்.  என்னால் அதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.  காலம் காலமாக நம் சமூகத்தில் இருக்கும் ஜாதியத்தைக் கொண்டுவந்தவர்கள் அவர்களா, உடன்கட்டை ஏறுவது போன்ற கொடிய செயல்கள் அவர்கள் வந்தபின்தான் ஏற்பட்டனவா போன்ற கேள்விகளை முன்வைத்தபோது அவர் நேரிடையாக எந்தவித பதிலும் சொல்லவில்லை.  சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொழிலைச் செய்துவந்தார்கள், அதனால் பிரிவுகளுக்கிடையே எந்தவிதச் சச்சரவும் இல்லாமல் இருந்தது என்றார்.  பிறர் கழிவுகளைச் சுத்தம் செய்வதைச் சிலர் மட்டும்தான் செய்துவந்தார்கள்; அதேபோல் பிறர் அழுக்குத் துணிகளைத் துவைப்பதை ஒரு பிரிவுதான் செய்ய வேண்டும் என்ற அமைப்பு இந்துச் சமூகத்தில்  எப்போது ஏற்பட்டது என்பதற்குச் சரியாக அவர் பதில் சொல்லவில்லை..

    நான் போப்பைப் பற்றிப் புத்தகம் எழுதியது அவர் ஒரு  கத்தோலிக்க மதத்தலைவர் என்பதற்காக அல்ல, அவர் ஒரு மனித நேயர் என்பதற்காகத்தான் என்பதை அவரால் புரிந்துகொள்ள வே முடியவில்லை.  என் உரையில் இந்து மதத்தில் உள்ள பிரிவுகளின் தலைவர்கள் போட்டுக்கொண்ட சண்டைகளால் இந்து மதத்தையே நான் வெறுக்க ஆரம்பித்தேன் என்றும் கோவிலுக்குப் போவதையே தவிர்த்துவிட்டேன் என்றும் கூறியிருந்தேன்.  அதனால் கடைசியில் சுவாமி உங்களுக்கு இந்து மதத்தின்மேல் இவ்வளவு கோபம் இருக்கிறதே என்றார்.  இந்து மதத்தை மட்டுமல்ல, எல்லா மதங்களையும் நான் வெறுக்கிறேன் என்று கூறினேன்.  அதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.  மேலும் போப் பிரான்சிஸைப் பற்றி நான் எழுதியது அவர் ஒருகிறிஸ்தவ மதத்தலைவர் என்பதற்காக அல்ல, மதத்திற்கு அப்பாலும் அவருடைய சிந்தனைகள் செல்கின்றன என்பதற்காகத்தான்; உலக அமைதி பற்றியும் சுற்றுப்புறச் சூழ்நிலை பாழ்பட்டுவருவதை எப்படித் தடுத்து நிறுத்தலாம் என்பது பற்றியும் உலகில் வறுமையையும் சமத்துவமின்மையையும் ஒழிப்பது பற்றியும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முதலைகளை எப்படி நெறிப்படுத்தலாம் என்பது பற்றியும் சதாசர்வ காலமும் சிந்தித்து வருகிறார்.  இவருடைய இந்த மனித நேய குணங்களால் கவரப்பட்டதால் மட்டுமே அவரைப் பற்றி எழுதினேன் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை, புரிந்துகொள்ள விரும்பவும் இல்லை.

    Share
  • போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம்- புத்தக அறிமுகம்

    அழைப்பு

    புத்தக அறிமுகம்

    போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம்

    (அடையாளம் வெளியீடு)

    ஆசிரியர்:
    நாகேஸ்வரி அண்ணாமலை

    நிகழ்ச்சித் தலைமை:
    சமஸ்
    துணை ஆசிரியர், த இந்து (தமிழ்)

    நாள்: ஜூலை 07 (சனிக்கிழமை)
    மாலை 6.00 மணி

    இடம்: பனுவல்
    112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை, 600041
    கைபேசி, வாட்ஸப் 9789009666

    பங்கு பெறுக

    (ஆசிரியரின் பிற நூல்கள்: அமெரிக்காவின் மறுபக்கம், அமெரிக்க அனுபவங்கள், பாலஸ்தீன-இஸ்ரேல்
    போர், ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை; ஃபேஸ்புக்: https://www.facebook.com/a.nageswari)

    Share
  • எங்கே இருக்கிறது ஜனநாயகம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது.  எல்லாக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன.  முதல் அமைச்சர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பவர் எடியூரப்பா.  இவர் ஊழலிலே திளைத்து ஊறிப்போனவர்; சிறைக்குச் சென்றவர்.  ஊழலற்ற இந்தியாவை உருவாக்கப் போகிறோம் என்று சொன்ன பா.ஜ.க.வின் வேட்பாளர். மோதி இவரை வெகுவாகப் புகழ்ந்து பேசி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் படம் தினசரிகளில் வெளியானது.   ஜி.எஸ்.டி.., பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு என்று பல திட்டங்களை அறிவித்து நாட்டில் கள்ளப் பணத்தை ஒழித்து, ஊழலே இல்லாத நாடாக ஆக்கப் போவதாக அறிவித்த மோதியின் கையாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் எடியூரப்பா.  இதை எப்படி ஜீரணித்துக்கொள்வது என்று தெரியவில்லை.  இவர் மட்டுமல்ல, கர்நாடகத்தில் பல வேட்பாளர்கள் இவரைப்போல் மெகா ஊழல் புரிந்தவர்கள்தான்.

     

    காஷ்மீரில் ஒரு எட்டு வயது முஸ்லீம் சிறுமிக்கு நடந்த கொடூரம் அமெரிக்காவரை வந்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் தலையங்கம் எழுதுபவர்களும் பத்தி எழுதுபவர்களும் இந்தியப் பிரதமர் அந்தச் சம்பவத்தைப் பற்றி  மௌனம் சாதித்ததைக் கண்டிக்கும் அளவுக்கு உலகத்தின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.  முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவள் என்பதாலேயே அந்தச் சிறுமி இத்தகையக் கொடூரத்திற்கு ஆளாகியிருக்கிறாள் என்பதை அறியும்போது காந்திஜியும் நேருவும் கட்டிக் காத்த சமயச் சார்பற்ற இந்தியா எங்கே என்று அலற வேண்டும்போல் இருக்கிறது.

     

    தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இன்னும் பெரிய சோகக் கதை.  அம்மையார் இறந்த பிறகு நிலைமை சீர்ப்படும் என்று எண்ணியிருந்த என் போன்றவர்களுக்கு பெரிய அடி, தாங்கிக்கொள்ள முடியாத அடி.  அம்மையார் இறந்த பிறகு அந்தக் கட்சிகுள்ளேயே பலத்த அடி, தடி நடக்கும், அதில் அந்தக் கட்சியே சிதறிப் போகும் என்று நினைத்தால், அம்மையார் இருந்தபோது இருந்த மாதிரியே மோதியின் ஆதரவில் காலம் தள்ளும் அதிமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை தொடருகிறது.  மோதியின் தயவால் அதிகமாகியிருக்கிறது என்றுகூடச் சொல்லலாம்.  எடப்பாடி அரசு எடுபிடி அரசாக மாறித் தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது என்றே சொல்லலாம்.  ஆங்கிலத்தில் ‘win win situation’ என்பார்கள்.  இரு தரப்பாருக்கும் வெற்றி என்று அர்த்தம்.  எதிலுமே ஒருவர் ஜெயித்தால் இன்னொருவர் தோற்றே ஆக வேண்டும்.  தமிழ்நாட்டில் இப்போது நிலவுகின்ற சூழ்நிலையில் மட்டும் மேற்கூறிய ஆங்கிலத் தொடரின்படி இரண்டு பேருக்கும் வெற்றி கிடைத்துக்கொண்டிருகிறது.  மத்திய அரசைப் பொறுத்தவரை பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்றவும் தன் கொள்கைகளைத் திணிக்கவும் ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது.  தமிழக அரசைப் பொறுத்தவரை அதிமுக தொடர்ந்து ஊழல் புரிய வாய்ப்புக் கிடைத்துக்கொண்டிருக்கிறது.  இது இருவருக்கும் வெற்றி என்பதைத்தானே குறிக்கிறது?

     

    இதற்கிடையில் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி கதை நெஞ்சைக் குதறி எடுப்பதுபோல் இருக்கிறது.  அந்த விசாரனை, இந்த விசாரணை என்று பேசுகிறார்களே தவிர உண்மை வெளிப்படுமா என்று தெரியவில்லை.  இதில் ஆளுநருக்கும் பங்கு இருப்பதாகக் கூறுகிறார்களே.  என்ன அவலம்!  நல்ல வேளை, கல்லூரிக்குப் போகும் வயதில் குடும்பத்தில் பெண் இல்லை என்று நினைத்து ஆறுதலடைவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

     

    உலகில் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் என்று கருதப்படுபவை இந்தியாவும் அமெரிக்காவும்.   இந்தியாவில்தான் இப்படி நடக்கிறது என்றால் அமெரிக்காவிலும் அரசியலில் ஊழல் தலையெடுப்பதாகத் தெரிகிறது.  ஊழல் புரிந்து சிறைக்குச் சென்ற எடியூரப்பா இந்தியப் பிரதமராலேயே பெருமையாக முதல் மந்திரி பதவிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார் என்றால் அமெரிக்காவில் 2018-இல் வரப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தன்னுடைய நிலக்கரிச் சுரங்கம் வெடித்து 29 பேர் பலியானதால் ஒரு வருடம் சிறைத் தண்டனை பெற்ற டான் பிளேக்கென்ஷிப் என்பவர் போட்டியிடப் போகிறார். வெற்றி வாய்ப்பு இருக்கிறது.  சட்டப்படி சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால்தான் விபத்து ஏற்பட்டது என்பதால் சிறைத் தண்டனை பெற்றார். இப்போது சட்டம் இயற்றும் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்தியாவில் சட்டத்தை மீறிய குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்குமா என்று தெரியவில்லை.  எல்லாவற்றையும் பணம் கொடுத்து ‘சரிக்கட்டிவிடுவார்கள்.  அமெரிக்காவில் அது நடக்காது என்றாலும் சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிடுவது அமெரிக்காவில் புதிது என்றே சொல்லலாம். கர்நாடகத்தில் சுரங்க கொள்ளையில் ஈடுபட்ட ரெட்டி சகோதரர்கள் பி.ஜே.பி. சார்பில் தேர்தலுக்கு நிற்கிறார்கள். ஜெயிக்கவும் செய்யலாம்

     

    அடிக்கடி என் கணவர் அமெரிக்க அரசியல்வாதிகளும் இந்திய அரசியல்வாதிகள் போல் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்பார்.  ‘தயவுசெய்து அமெரிக்காவை இந்தியாவோடு ஒப்பிடாதீர்கள்’ என்பேன் நான்.  இன்னும் அப்படித்தான் சொல்கிறேன். தினமும் பொய்களாகக் கூறிக்கொண்டிருக்கும் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தும் இந்தியா அளவுக்கு அமெரிக்கா தாழ்ந்து போகவில்லை என்றே சொல்வேன்.  சட்டங்களின் ஆட்சி என்பது இன்னும் உண்மை.. ஆனாலும் இந்த அமெரிக்காவிலும் இப்படி நடக்கிறதே என்றால் மனம் கலங்கத்தான் செய்கிறது.  ஜனநாயகத் தேர்தல் இப்படிப்பட்ட விளைவுகளைத் தடுக்க முடியவில்லையே என்பது வேதனையாக இருக்கிறது.  எத்தனை ‘இசங்களை’ மனிதன் உருவாக்கினாலும் மொத்தத்தில் பின்னோக்கித்தான் செல்கிறானா?  இதற்கு விடிவே இல்லையா? 

    Share
  • இப்படியும் ஒரு தாய்!

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    அமெரிக்காவில் நடந்த ஒரு சோகக் கதை.  தன்னால் எங்கும் இருக்க முடியாது என்பதால்தான் இறைவன் தாயைப் படைத்தார் என்று சொல்வார்கள்.  இது பல சமூகங்களில் வழங்கும் ஒரு பழமொழி என்று நினைக்கிறேன்.  அப்படிப்பட்ட ஒரு தாய்தான் தன் மகனையே நடக்க முடியாமல், பேச முடியாமல் மற்றப் பிள்ளைகளைப்போல் வளரவிடாமல் செய்திருக்கிறாள் என்று அறியும்போது நெஞ்சு கனக்கிறது. ஆனாலும் குற்றம் நடந்த இருபத்தியொரு வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குற்றத்திற்குத் தண்டனையும் கிடைத்திருக்கிறது என்று அறியும்போது மனம் கொஞ்சம் லேசாகிறது.

     

    இந்தச் சம்பவம் நடந்தது 1997-இல் வட கரோலினா மாநில பிரன்ஸ்விக் மாவட்டத்தில்.  குழந்தை பிறந்து ஒரு வருஷத்திற்குள் அவனுடைய தாயும் அவளோடு சேர்ந்து குடும்பம் நடத்தியவனும் (பார்ட்னர்; அமெரிக்காவில் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து குடும்பம் நடத்துபவர்களை இப்படித்தான் அழைக்கிறார்கள்). அந்தக் குழந்தையைப் பலவாறாகத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.  அவர்களின் துன்புறுத்தலுக்கு ஆளான அந்தப் பையனைப் பரிசோதித்த மருத்துவர்  அவனுக்குக் கபாலத்தில் எலும்பு முறிவு உட்படப் பல காயங்கள், கீழ் உதட்டில் பெரிய கீறல், கால்களில் எலும்பு முறிவுகள், கடும் சுடு தண்ணீரில் குழந்தையை முக்கி எடுத்ததால் ஏற்பட்ட தீக்காயங்கள், பலமாக அழுத்தப்பட்டதால் தலையில் ஏற்பட்ட ஊமைக்காயங்கள் ஆகியவை இருந்ததாகக் குறிப்பிட்டார்.  அந்த மருத்துவரின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

     

    இந்தக் கொடுமைகளைச் செய்த அவனுடைய தாயும் அவளுடைய பார்ட்னரும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை ஆனார்கள்.

     

    இப்படிக் கொடுமைக்கு ஆளான குழந்தை பெத் ஸ்மிட் என்னும் பெண்ணாலும் அப்போதைய அவருடைய பார்ட்னராலும் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டான். இவர்கள் தத்தெடுத்த பிறகு அந்தக் குழந்தையின் பெயர் டேவிட் என்று மாற்றப்பட்டது.  டேவிட்டுக்கு இந்தத் துன்புறுத்தலால் வாழ்க்கையே நின்றுவிட்டது.  அவனால் நடக்க முடியவில்லை; பேச முடியவில்லை.  குழந்தையைப் போன்றே தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்த டேவிட் ஒரு மாதத்திற்கு முன்பு தன்னுடைய இருபத்தியொன்றாவது வயதில் இறந்து போனான்.  அவன் இறந்ததற்குக் காரணம் அவனுடைய தாயும் அவளுடைய பார்ட்னரும் அவன் ஒரு வயதாக இருக்கும்போது அவனைத் துன்புறுத்தியதுதான் என்று குற்றம் சாட்டி அரசு வக்கீல் அவர்களை மறுபடி கைதுசெய்திருக்கிறார்.

     

    பெத் ஸ்மிட் கொடுத்த ஒரு பேட்டியில் டேவிட்டிற்கு உடைலில் பல குறைபாடுகள் இருந்தாலும் அவன் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.  இருபது வருஷங்கள் அவன் வளர்ந்து வந்ததை அவர் கவனித்துவந்தார்.  டேவிட்டிற்கு இசை மீது அலாதிப் பிரியமாம்; இசையைக் கேட்டால் புன்னகை பூப்பானாம்.  விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகத்தோடு கலந்துகொள்வானாம்.  ஒரு முறை உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான பேஸ்பால் விளையாட்டில் ல்பங்கெடுத்துக்கொண்டானாம்; அதில் இவனுடைய நண்பன் ஒருவன் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ஓடுவானாம்.

     

    துன்புறுத்தப்பட்டதால் பல உபாதைகளுக்கு உள்ளான டேவிட்டிற்கு. மூச்சுத் திணறல், நிமோனியா போன்ற உபாதைகள் அடிக்கடி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் அடிக்கடி ஏற்படுமாம்.  ஆனாலும் மருத்துவர்கள் அவன் ஆறு வயதிற்கு மேல் உயிர் பிழைத்து இருக்க மாட்டான் என்று கூறியிருந்தும் அதற்குமேல் அவன் வாழ்ந்ததால் அந்த வருஷங்கள் தனக்கு மிகவும் சிறப்பானவை என்கிறார் பெத் ஸ்மிட்.  தன்னுடைய முகபாவக்களாலும் கத்தல்களாலும் அவர்களோடு உரையாடுவானாம்.

     

    அரசு வழக்கறிஞர் இப்போது டேவிட் இறந்ததற்கு அவன் ஒரு வயதாக இருந்தபோது துன்புறுத்தப்பட்டதுதான் காரணம் என்று கூறி அவனுடைய தாயையும் அவளுடைய பார்ட்னரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.  இவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஜாமீன் இல்லாத வாழ்க்கை முழுவதும் சிறை என்ற தண்டனைகள் வழங்கப்படலாம்.  குற்றம் நடந்து இருபத்தியொரு வருடங்கள் ஆகிவிட்டிருந்தாலும் வட கரோலினா மாநிலத்தில் குற்றம் சுமத்துவதற்கு கால எல்லை எதுவும் இல்லை என்றும் தீங்கிழைக்கப்பட்டவர் இறந்துவிட்டால் தீங்கிழைத்தவர்கள் மீது பல வருஷங்களுக்குப் பிறகும் கொலைக் குற்றம் சுமத்தப்படலாம்  என்றும் அரசு தரப்பு வக்கீல் கூறியிருக்கிறார்.

     

    டேவிட் இல்லாத வாழ்க்கைக்குப் பழகிவரும், அவனை தத்தெடுத்து வளர்த்த பெத் ஸ்மிட், “டேவிட் வாழ்க்கை எவ்வளவு அபூர்வமானது, மதிப்பு மிக்கது என்று எங்கள் எல்லோருக்கும் உணர்த்தினான்.  அவனை வளர்ப்பதில் நிறைய பிரச்சினைகள் இருந்தன; நிறைய வேலை இருந்தது.  இருப்பினும் இன்னொரு முறை அதை மறுபடி நான் செய்வேன்” என்றார்.

     

    தன்னுடைய சொந்தக் குழந்தையையே துன்புறுத்தி ஊனமாக்கிய குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து அதில் இன்பம் காணும் ஒரு பெண்ணை அமெரிக்காவில்தான் பார்க்க முடியும்; குற்றம் நடந்து இருபத்தியொரு வருடங்களுக்குப் பிறகு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதும் அமெரிக்காவில்தான் நடக்கும்.

     

     

     

     

     

    Share
  • தமிழ்நாட்டு அரசியலில் ஒரு விடிவெள்ளி

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    இந்தியா சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அரசியலில் ஊழல் நுழைந்துவிட்டது என்று சொன்னால் அது பெரிய தவறான பிரகடனமாக இருக்க முடியாது.  தேசத் தந்தை காந்திஜியோடு சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களே ஊழல் புரிந்தார்கள் என்பது வேதனையன விஷயம்தான்.  புதிதாகச் சுதந்திரம் பெற்ற, வளர்ந்துவரும் ஜனநாயக நாடுகளில் இது தவிர்க்க முடியாதது என்று கூறுவோரும் உண்டு.  ஆனாலும் இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆகியும் ஊழல் ஒழியாதது மட்டுமல்ல, மிகவும் அதிகரித்திருக்கிறது என்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட.

     

    எல்லா மாநிலங்களிலும் ஊழல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அதைப் பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியாது.  ஆனாலும் தமிழ்நாட்டில் இருக்குமளவு வேறு எங்கும் இல்லை என்பது என்னுடைய கணிப்பு.  (வேண்டுமானால் பீகாரில் லாலு காலத்தில் தமிழ்நாட்டில் இருக்குமளவு இருந்தது என்று சொல்லலாமோ என்னவோ!)  நாங்கள் கடந்த நாற்பத்தைந்து வருடங்களாகக் கர்நாடகாவில் வாழ்ந்துவந்தாலும் கர்நாடக அரசியல் பற்றித் தெரிந்தது தமிழ்நாட்டின் அரசியலைப் பற்றித் தெரிந்ததைவிட குறைவுதான்.  ஒரு முறை கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது கர்நாடக அன்பர் ஒருவரிடம் ‘எடியூரப்பா பெரிய ஊழல் பேர்வழி இல்லை, அல்லவா?’ என்று கேட்டேன். உடனே அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.  பின் எடியூரப்பா பற்றி நிறையத் தெரிந்துகொண்டபோது அவர் எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்று தெரிந்துகொண்டேன்.  இருப்பினும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை யாராலும் மிஞ்ச முடியாது என்பதுதான் என்னுடைய இப்போதைய நிலைப்பாடு.

     

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் காலத்திலிருந்தே வேண்டியவர்களுக்குச் சலுகைகள் அளிப்பது என்பது இருந்துவந்திருக்கிறது.  தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின் கடைசிக் காலத்தில் ஊழல் தலையெடுக்கத் துவங்கிவிட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.  ஆனால் அது  ஆரம்பம்தான்.  ஊழலை உரம் போட்டு வளர்த்தது திராவிடக் கட்சிகள்தான்.  அண்ணாதுரை உயிரோடு இருந்து தமிழ்நாட்டு அரசியலை வழிநடத்தியிருந்தால் இந்த அளவு ஊழல் வளர்ந்திருக்காது என்பது என் ஊகம்.  அவருக்குப் பிறகு முதலமைச்சராகப் பதவியேற்ற கருணாநிதியின் காலத்தில் ஊழல் என்னும் செடி உரம் பெற்று செழிக்கத் தொடங்கியது.  பின் மரமாகி முழு வளர்ச்சி அடைந்தது பின்னால் வந்த ஆட்சிகளின்போதுதான்.  இப்போது இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு எதில் சிறந்து விளங்குகிறதோ இல்லையோ ஊழலில் கண்டிப்பாக முதல் இடம் வகிக்கிறது.  இந்தப் பெருமையை நமக்கு ஈட்டிக் கொடுத்தவர்கள் கடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டை ஆண்டுவந்தவர்கள்.   ஊழல் செய்த அரசியல்வாதிகளைத் ‘தெய்வமாக’ ஏற்றுக்கொண்டவர்கள் நம் தமிழ் மக்கள் மட்டும்தான்.  இதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது.  ஒரு சில அப்பாவி மக்களால் தெய்வமாக மதிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர் மறைந்ததும் தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் பிறந்தது என்று பலர் நினைக்கிறார்கள்.  ஊழல் செய்ய வெற்றிடமா என்று தெரியவில்லை!

     

    இப்போது அரசியலுக்கு நடிகர்கள் உட்படப் பலர் வந்திருக்கின்றனர்.  இவர்களில் கமலஹாஸன் குறிப்பிடத் தகுந்தவராக விளங்குகிறார்.  இது நாள்வரை அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருந்தபோதிலும் இப்போதாவது வந்திருக்கிறாரே என்று சந்தோஷப்படலாம்.  ‘உங்கள் கட்சியின் கொள்கை என்னவென்று?’ ரஜினியிடம் கேட்கப்பட்டபோது அவருக்குத் தலை சுற்றிவிட்டதாம்.  கட்சியின் கொள்கைகூட என்னவென்று இதுவரை சிந்திக்காதவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால்  அப்படி என்ன சாதித்துவிடப் போகிறார்?  கமலஹாஸன் அப்படியில்லை.  நன்றாகச் சிந்தித்துத் தன் கட்சியின் கொள்கை என்ன என்று தயார் நிலையில் வந்திருக்கிறார்.

     

    இலவசங்களால்தான் தமிழ்நாடு இப்படிச் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்ந்து இலவசங்கள் கொடுப்பதைவிட பிறருக்கு இலவசங்கள் கொடுக்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்துவேன் என்கிறார்.  அவர் செய்யப் போகும் காரியங்களில் முதன்மையாகக் குறிப்பிட்டது மக்களுக்கு நல்ல கல்வி கொடுப்பது.  எல்லோரும் நல்ல கல்வி கற்று அறிவு தெளிந்தால் ஊழலிலே ஊறிப்போன அரசியல்வாதிகளை ‘தெய்வம்’ என்று யாரும் குறிப்பிட மாட்டார்கள்.  ஒரு சமூகம் ஜனநாயக சமூகமாக விளங்க வேண்டுமென்றால் முதலில் எல்லோருக்கும் ஜனநாயகத்தைப் பற்றிய கல்வியைப் புகட்டிய பிறகுதான், எல்லோரிடையேயும் சிந்திக்கும் திறனை வளர்த்த பிறகுதான் ஜனநாயகத்தைப் புகுத்த வேண்டும் என்கிறார் சிந்தனையாளர் சாக்ரடீஸ்.  சாக்ரடீஸின் இந்த அறிவுரையைக் கமலஹாஸன் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதுபோல் தெரிகிறது.  தான் எல்லோருக்கும் தலைவன் என்பதைவிட எல்லோருக்கும் சேவை செய்யப் போகும்  ஊழியன் என்கிறார்.  மதுரையில் கட்சியைத் துவக்கிவைத்தபோது ஆர்.கே.நகர். தேர்தலை மனதில் கொண்டு மக்களைப் பார்த்து, ‘நீங்கள் உங்கள் வாக்கின் மதிப்புத் தெரியாமல் அதை விலைக்கு விற்றுவிட்டீர்கள்.  வாக்கு உங்களுடைய நலனைக் காக்கும் உங்களுடைய உரிமை.  அதை நீங்கள் விற்றால் ஜனநாயகம் குலைந்துவிடும்’ என்றார்.  என்னுடைய கட்சி உங்கள் வாக்குக்காக ஒரு பைசாவும் கொடுக்காது என்றார்.  இது ஜனநாயகக் கல்வியின் ஒரு பகுதி.

     

    தான் எந்த ‘இஸத்’தையும் பின்பற்றப் போவதில்லை என்றும் மக்களின் நலன்களே தன் குறிக்கோள் என்றும் கூறுகிறார்.  அதனால்தான் தன் கட்சிக்கு ‘மக்கள் நீதி மையம்’ என்று பெயர் கொடுத்திருக்கிறார்.  படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாலும் பல பட்டங்கள் பெற்றவர்களுக்கு நிகராக அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.  எம்.ஜி.ஆர்.போல் முதல் மந்திரியாகப் பதவியேற்றாலும் இரவில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லவில்லை.  (அவராலும் அப்படிச் செய்ய முடியவில்லை என்பது இன்னொரு விஷயம்.)  இனி மக்களுக்குச் சேவை செய்யும் நல்ல அரசியல்வாதியாக மட்டுமே இருப்பேன் என்கிறார்.  இவர் தலைமையில் தமிழ் மக்களின் நலன்கள் மத்திய அரசால் சூறையாடப்படாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

     

    இந்தியாவில் வடக்கில் ஒரு கெஜ்ரிவால் தோன்றியிருப்பதுபோல் தெற்கில் ஒரு கமலஹாஸன் தோன்றியிருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்வோம்.  தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்து இந்தியாவுக்கே ஒரு மாடலாகத் தமிழகம் விளங்கும் என்று நம்புவோம்.  தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று பெருமிதம் கொள்வோம்.

     

     

    Share
  • சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம்

    சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    உலகில் மிகவும் தாழ்ந்து போயிருந்த அமெரிக்காவின் படிமத்தை உயர்த்த வேண்டும் என்று விரும்பி அதையே தன் தேர்தல் வாக்குறுதியாக வைத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்த ஒபாமா தேர்தலில் ஜெயித்து ஜனாதிபதி ஆன பிறகு தன் விருப்பத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றார் என்று கூறலாம். சில நாடுகளுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தினார்; அமெரிக்கா பல காலமாக வன்மம் பாராட்டிவந்த கியூவுடனான உறவையும் சீர்படுத்த நிறைய முயற்சிகள் செய்தார். அமெரிக்கா ஈடுபட்டிருந்த போர்களில் ராணுவத்தின் அளவைக் குறைத்தார். மொத்தத்தில் அமெரிக்கா உலக நாடுகளின் போலீஸ்காரன் அல்ல என்று மற்ற நாடுகள் உணரும்படி செய்ய முயற்சிகள் பல செய்தார்.

    ஆனால் ஒபாமாவிற்குப் பின் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப் ஒபாமா உள்நாட்டிலும் அகில உலக அளவிலும் செய்த எல்லாச் சீர்திருத்தங்களையும் ஒவ்வொன்றாக ஒழித்து வருகிறார். அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத் தனத்தை திரும்பக் கொண்டுவர முயன்று வருகிறார். இவர் பதவியை விட்டு விலகும் முன் அமெரிக்காவின் படிமத்தை உலக நாடுகளிடையே வெகுவாகக் குறைத்துவிடுவார்போல் தெரிகிறது. அடாவடித்தனமாக இவர் காரியங்கள் செய்தாலும் இன்னும் இவருக்கென்று நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று அறியும்போது மிகவும் பயமாக இருக்கிறது.

    உலக அரங்கில் இப்போது நிறைய சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள்; அந்த எண்ணிக்கை இப்போது கூடிக்கொண்டு போவதுபோல் தெரிகிறது. ஏற்கனவே சர்வாதிகாரிகளாக இருந்த ரஷ்யாவின் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜான் அர்ன் ஆகியோரோடு துருக்கியின் எர்டோவன், எகிப்தின் ஸிஸி என்று இன்னும் பலர் உருவாகி வருகிறார்கள்.

    சீனா கம்யூனிஸ்ட் நாடு என்று தன்னைக் கூறிக்கொண்டாலும் அங்கும் ஒரு வகையான சர்வாதிகார ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை பத்து வருடங்களுக்கொரு முறையாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதுத் தலைவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இப்போது அந்த ஏற்பாட்டையும் தகர்த்தெறிவதுபோல் சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின் பிங், சீன ஜனாதிபதிகள் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்ற அரசியல் சட்டத்தை மாற்றப் போவதாகச் செய்தி வந்திருக்கிறது. அப்படியென்றால் அவர் ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக நீடிப்பார் என்பது உறுதியாகிறது. இது சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கலாம் என்று உலகத் தலைவர்கள் பலர் அஞ்சுகிறார்கள். சீன மக்கள் இப்போது அவர்களுக்குள்ள ஒரு சில மனித உரிமைகளையும் இழக்கலாம் என்ற அச்சமும் சீனாவிலும் சீனாவிற்கு வெளியிலும் பரவி வருகிறது.

    இப்படிப் பலர் அஞ்சினாலும் சீனாவுடனான வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்று அஞ்சிப் பல நாட்டுத் தலைவர்கள் அது பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை. சென்ற ஜனவரி மாதம் பிரான்ஸ் தலைவர் மேக்ரான் சீனாவுக்கு விஜயம் செய்தபோது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் தன் வர்த்தக உறவுகளை சீனா பலப்படுத்திக்கொள்வதின் அபாயத்தைப் பற்றி எச்சரித்தாலும் சீன அரசு தன் மக்களை நடத்தும் முறை பற்றிச் சாதுர்யமாக எதுவும் சொல்லவில்லை. ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இப்போதைக்கு உறவு அவ்வளவு சுமுகமாக இல்லையென்றாலும் ஜப்பான் கூட ஷி ஜின் பெங்கின் ஆட்சி அவருடைய ஆயுள் முழுவதும் இருக்கும் என்பது பற்றி எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. சீனா ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது பற்றி ஆஸ்திரேலியா குறை சொன்னபோது சீனா திருப்பிப் பதிலடி கொடுத்ததால் இப்போது சீனாவில் வரக்கூடிய அரசியல் மாற்றம் பற்றி எதுவும் கூற ஆஸ்திரேலியா தயாராக இல்லை. இதற்குக் காரணம் சீனாவுடனான வர்த்தக உறவுகள்தான். (இந்தியா எப்படி சீனாவின் சர்வதிகாரம் நோக்கி நகரும் இந்த மாற்றத்திற்கு எதிர்வினை ஆற்றியது என்று தெரியவில்லை. மோதியின் கருத்து என்னவென்று தெரியவில்லை.)

    மற்ற நாடுகள் இம்மாதிரி நடந்துகொள்ளும் வேளையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அது பற்றிக் கருத்துக் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. நண்பர்களுடன் தனிப்பட்ட சந்திப்பின்போது ட்ரம்ப், ‘ஷி கின் பிங் ஆயுளுக்கும் சீனாவின் ஜனாதிபதி ஆகலாம். கேட்கவே நன்றாக இருக்கிறது. ஒரு நாள் அமெரிக்காவும் இதை முயன்று பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார். தனிக் கூட்டத்தில் இப்படி ட்ரம்ப் கூறியிருந்தாலும் அது எப்படியோ வெளியே வந்துவிட்டது. அமெரிக்கா சுமார் முன்னூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்புதான் நாடாக உருவானது. அப்போது அவர்கள் எழுதிய அரசியல் சாசனத்தின்படி அமெரிக்காவில் ஒருபோதும் சர்வாதிகார ஆட்சி ஏற்படாது என்று உறுதிப்படுத்திக்கொண்டார்கள். மேலும் அமெரிக்கா உலகம் முழுவதிலும் ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு என்று பெயர் வாங்கியிருக்கிறது. இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் ட்ரம்பின் மனதில் இப்படி ஒரு ஆசை ஏற்பட்டிருக்கிறதே என்று நினைத்தால் எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனை உள்ள மனிதர் ட்ரம்ப் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. சென்ற நவம்பர் மாதம் சீனாவுக்குச் சென்றிருந்த ட்ரம்ப்பிற்கு வெகு விமரிசையாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதில் உச்சிகுளிர்ந்த ட்ரம்ப் ஷி ஜின் பிங்கை இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அவரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். மற்ற நாடுகள் வர்த்தக உறவுகளுக்காகச் சீனாவை எதிர்க்க முடியாமல் இருக்க, ட் ரம்ப்போ சீனாவின் ஷி ஜின் பிங்கை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களை என்னவென்று சொல்வது. இவரைப் போன்றவர்களிடமிருந்தும் மற்ற சர்வாதிகாரிகளிடமிருந்தும் இறைவன் உலகைக் காக்கட்டும்.

    நாகேஸ்வரி அண்ணாமலை

    https://www.facebook.com/a.nageswari

    https://twitter.com/a_nageswari

    Share
  • பாலஸ்தீனத்தில் மோதி எதைச் சாதிக்கப் போகிறார்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சென்ற மாதம் இஸ்ரேல் பிரதம மந்திரி இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது வழக்கத்திற்கு மாறாக இந்தியப் பிரதமர் விமானநிலையத்திற்கே சென்று நேதன்யாஹுவை வரவேற்றார்.  அதன் பிறகும் இந்தியாவின் பல இடங்களுக்கும் அவரைக் கூட்டிச் சென்று, அவர் இந்தியாவில் இருந்த அத்தனை நாட்களும் அவர் கூடவே இருந்து அவர் தன்னுடைய soul-mate என்று கூறாமல் கூறினார்.  இஸ்ரேலின் தொழிலதிபர்களிடமிருந்து பல முதலீடுகளைப் பெற்ற்றதாகப் பீற்றிக்கொண்டார்.  இஸ்ரேலிடமிருந்து பல தொழில் நுட்பங்களை இந்தியா பெற்றிருப்பதாகவும் கூறினார்.

    1948-இஸ்ரேல் உருவாக்கப்பட்டுப் பல வருடங்கள் ஆன பிறகும் இந்தியா இஸ்ரேலை ஆதரிக்கவில்லை; இஸ்ரேலோடு தூதரக உறவுகள்கூட வைத்துக்கொள்ளவில்லை.  இந்தியர்கள் இஸ்ரேலுக்குப் போவதற்கே தடை விதிக்கப்பட்டிருந்தது.  1992-இல்தான் இந்தியா இஸ்ரேலோடு தூதரகத் தொடர்புகளை ஆரம்பித்தது.  அதெல்லாம் பழங்கதையாகவே இருக்கட்டும்.  இப்போது இஸ்ரேலோடு உறவு வைத்துக்கொள்வதால் இந்தியாவிற்கு நன்மைகள் கிடைக்குமென்றால் அதைச் செய்வதில் தவறு ஏதுமில்லை.

    ஆனால் இப்போது மோதி பாலஸ்தீனத் தலைநகர் ராமல்லாவிற்குச் சென்று பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அப்பாஸையும் சந்தித்திருக்கிறார். அதற்கு மேல் சுதந்திர பாலஸ்தீனம் பிறக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறார்.  எந்த ஆதாரத்தில் இந்த நம்பிக்கையை பாலஸ்தீனர்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

    யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும், அதுவும் அந்த நாடு யூதர்களின் புண்ணிய பூமியான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்று ஹெர்ஸல் என்ற யூதரொருவர் அறைகூவியதின் விளைவக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே யூதர்கள் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்தனர்.  அங்கு வாழ்ந்துவந்த அரேபியர்களின் நிலங்களை அதிக விலைகொடுத்து வாங்கித் தங்கள் உடைமை ஆக்கிக்கொண்டனர்.  வெளியிலிருந்து தாங்கள் கொண்டுவந்த பணபலம், தொழில்நுட்பம் ஆகியவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொண்டனர்.  அப்பாவி அரேபியர்கள் விழித்துக்கொண்டு இதை நிறுத்துவதற்குள் யூதர்கள் பாலஸ்தீனத்தில் தங்கள் பலத்தைப் பெருக்கிக்கொண்டு தங்களை அங்கு நிலைநாட்டிக்கொண்டனர்.  தங்களது மண்ணில் யூதர்கள் பலம் பெறுவதை உணர்ந்த பாலஸ்தீனர்கள் யூதர்களோடு மோதத் தொடங்கினர்.

    முதல் உலக யுத்தம் முடிந்து ஆட்டோமான் பேரரசு தோல்வியடைந்ததால் அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.  ஆட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய பாலஸ்தீனம் போரில் வெற்றிபெற்ற நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் ஆளுகையின் கீழ் வந்தது.  அப்போதுதான் வெளியிலிருந்து வந்த யூதர்களுக்கும் (யூதர்கள் தங்கள் புண்ணிய பூமி என்று சொந்தம் கொண்டாடிய) பாலஸ்தீனத்திலேயே பதின்மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்துவந்த அரேபியர்களுக்கும் இடையே நடந்த மோதல்களால் பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே பிரிக்க பிரிட்டனின் முடிவுசெய்தது.  வெளியிலிருந்து வந்த யூதர்களுக்கு பிரிட்டனின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வது எளிதாக இருந்தது.  ஏனெனில் அவர்கள் கையில் இருந்த நிலமெல்லாம் அரேபியர்களிடமிருந்து வாங்கியது.  அரேபியர்களுக்கோ தங்கள் நிலங்களை பிரிட்டன் யூதர்களுக்குக் பங்கு போட்டுக் கொடுக்கிறதே என்று கோபம்.  அப்போதைக்கு பிரிட்டனின் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாவிட்டாலும் பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் திட்டத்தைப் பத்து வருடங்களுக்குப் பிறகு – பிரிட்டன் பாலஸ்தீனப் பொறுப்பை ஐ.நா.விடம் ஒப்படைக்க முடிவுசெய்ததும் – ஐ.நா. நிறைவேற்ற முடிவுசெய்தது.  பிரிட்டன் யூதர்களுக்குக் கொடுப்பதாக இருந்த நிலப்பகுதியைவிட ஐ.நா. அதிக இடப்பகுதியை யூதர்களுக்குக் கொடுக்க முடிவுசெய்தது.  இந்த முடிவை வெகுவாக ஆதரித்த யூதர்கள் தங்களுக்கு ஐ.நா. கொடுத்த இடங்களை இஸ்ரேல் என்று பிரகடனம் செய்துகொண்டு இஸ்ரெலை உருவாக்கியது.  ஐ.நா.வின் இந்த முடிவை ஏற்காத அரேபியர்கள் ஐ.நா.வால் பாலஸ்தீனத்தில் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட இடத்தில் தங்களுடைய நாட்டை உருவாக்கிக்கொள்ளாமல் ஐ.நா.வின் அந்த முடிவை எதிர்க்கத் திட்டமிட்டனர்.

    யூதர்கள் இஸ்ரேலை ஸ்தாபித்துக்கொண்டது மட்டுமன்றி ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களையும் இன்றுவரை தங்கள் பணபலத்தாலும் படைபலத்தாலும் கைப்பற்றி வருகின்றனர்.  அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளிக்கும் ராணுவ, பொருளாதார உதவிகளே இஸ்ரேல் இந்தக் காரியங்களைச் செய்வதற்கு உதவிபுரிகின்றன.  அதுமட்டுமின்றி இஸ்ரேல் பாலஸ்தீனர்களுடைய இடங்களில் வெளியிலிருந்து வரும் யூதர்களுக்குத் தங்குவதற்கு குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்கிறார்கள்.  பாலஸ்தீனர்களுக்காகக் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் இம்மாதிரி இடங்களை எடுத்துக்கொண்டே போவதால் பாலஸ்தீனர்களுக்கு இப்போது வெஸ்ட் பேங்கில் தொடர்ச்சியாக நிலங்கள் இல்லை.

    2015-இல் நடைபெற்ற இஸ்ரேல் தேர்தலில் போட்டியிட்ட நேதன்யாஹு தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு அவருக்கு வாக்காளர்களிடையே ஆதரவு குறைந்துவருவது தெரிந்தவுடன் தான் பிரதம மந்திரியாகத் தேர்தெடுக்கப்பட்டால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற ஒரு நாடு மட்டும்தான் இருக்கும் என்றும் பாலஸ்தீனத்தில் இரு நாடுகள் என்ற திட்டம் கைவிடப்பட்டது என்றும் கூற ஆரம்பித்தார்.  உடனே அவருக்கு ஆதரவு அதிகரித்து அவர் தேர்தலிலும் ஜெயித்து இஸ்ரேல் பிரதம மந்திரியானார்.  தேர்தல் முடிந்து சில மாதங்கள் ஆன பிறகு உலக நாடுகளின் நெருக்கடியால் மறுபடி பாலஸ்தீனத்தில் இரு நாடுகள் என்ற பேச்சை ஆரம்பித்திருக்கிறார்.  நேரத்திற்குத் தகுந்த மாதிரி பேசும் நேதன்யாஹுவை எப்படி நம்புவது?

    1995-இல் ஏற்பட்ட ஆஸ்லோ ஒப்பந்தப்படி கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனர்களின் தலைநகரமாகவும் வெஸ்ட் பேங்க், காஸா ஆகிய பகுதிகள் பலஸ்தீனத்தின் பகுதிகளாகவும் விளங்கும் என்றும் முடிவாகியது.  இப்போது ஆஸ்லோ ஒப்பந்தத்தை நிறைவேற்றும் எந்த சாத்தியக்கூறுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.  மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொண்டுவந்த அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப் திடீரென்று ஜெருசலேம் இஸ்ரேலுக்குச் சொந்தம் என்பதைக் குறிக்க அமெரிக்கத் தூதரகத்தை டெல்விவிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறார். அப்படியானால் பாலஸ்தீனர்களுக்குச் சேர வேண்டிய கிழக்கு ஜெருசலேம் என்னவாயிற்று?

    பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் யூதர்களுக்காகக் குடியிருப்புகள் அமைத்த பிறகு இங்கொன்றும் அங்கொன்றும்மாக நிலங்கள் இருக்கின்றன.  அவற்றையும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குக் கொடுப்பதாக இல்லை.  சொந்த இடங்களில் பாலஸ்தீன நாடு என்ற ஒன்று உருவானாலும் ராணுவம் இல்லாத நாடாக இருக்கும் என்று ஒரு முறை நேதன்யாஹு கூறினார்.  ராணுவம் இல்லாத, துண்டு துண்டாக இருக்கும் நிலங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்று உதட்டளவில் நேதன்யாஹு கூறிவருகிறார்.  இந்நிலையில் சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாகும் என்று எந்த அடிப்படையில் மோதி பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் முகம்மது அப்பாஸுக்கு

    உறுதி கூறிவிட்டு வந்திருக்கிறார்?

    பல அமெரிக்க ஜனாதிபதிகள், அரசியல் வல்லுநர்கள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்க – பாலஸ்தீனர்களின் நன்மையைக் கருதி இவர்கள் இந்த செயலில் ஈடுபடவில்லை;  சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் என்ற நப்பாசையில்தான் இவ்வாறு முயன்றார்கள் – முடியாமல் திணறிய இந்தப் பிரச்சினைக்கு மோதியால தீர்வு கண்டுபிடித்துவிட முடியுமா?  கண்டுபிடித்துவிடுவதாகக் கூறும் இவர் எப்படி அதைச் செய்யப் போகிறார் என்று கூறவில்லை.  மோதி செய்யும் மோடிமஸ்தான் வேலைகள் இந்தியாவில் வேண்டுமானால் எடுபடலாம்.  ஆனால் சர்வதேச அரங்கில் எடுபடாது.

    நாகேஸ்வரி அண்ணாமலை

      https://www.facebook.com/a.nageswari

      https://twitter.com/a_nageswari

    Share
  • கருணையும் சட்டமும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்க இல்லினாய் மாநில சிகாகோ நகரின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான எல்ஜினில் கருணை வடிவான க்ரெக் ஷில்லெர் என்பவர் சென்ற வாரம் கடுமையான குளிர் நிலவியபோது வீடற்ற ஏழைகளைத் தன் வீட்டின் அடிமட்டத் தளத்தில் (basement) தங்குவதற்கு அனுமதித்தார்.  சென்ற வாரமும் இப்போதும் நிலவிவரும் குளிர் சாதாரணமானதல்ல. பல வருடங்களின் ரிக்கார்டை மாற்றியிருக்கும் குளிர்.  உடம்பின் எலும்புகளைக்கூட துளைக்கும் குளிர்.  அமெரிக்காவில் வீடற்றவர்கள் இருக்கிறார்களா என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.  இந்தியாவில்போல் எப்போதுமே தெருவில் குடியிருப்பவர்கள் அமெரிக்காவில் குறைவு.  இப்படி வீடற்றவர்களில் பலர் நிரந்தரமாக வீதிகளில் குடியிருப்பவர்கள் இல்லை.  எல்ஜினில் வாழும் 1,10,000 பேரில் 100 பேர்தான் இப்படித் தற்காலிக வீடற்றவர்கள்.  இவர்களில் சிலர் சிறைக்குச் சென்றுவிட்டு விடுதலையாகித் திரும்பும்போது அவர்கள் தங்குவதற்கு உறவினர்கள் யாரும் இல்லாமல் இருக்கலாம்; அல்லது அவர்கள் போதைப் பொருள் உபயோகத்திற்கு அடிமையாகி அதனால் வேலையை இழந்து அதனால் வாழ்வாதாரத்தை இழந்து தற்காலிகமாக இரவு தங்குவதற்கு இடம் இல்லாமல் இருக்கலாம்; அல்லது அவர்கள் பார்க்கும் வேலையில் கிடைக்கும் பணத்தில் வீட்டு வாடகையும் கொடுத்து மற்றச் செலவுகளையும் சமாளிக்க முடியாமல் இருக்கலாம்.

    இவர்கள்தான் வீடற்றவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.  இப்படி இரவில் தங்க இடம் இல்லாதவர்களுக்குப் பெரிய நகரங்களும் சிறிய நகரங்களும் இரவில் தங்கத் தங்குமிடங்கள் (shelters)  கட்டிக் கொடுத்திருக்கின்றன.  ஆனால் வீடற்றவர்களில் சிலர் இங்கு தங்கப் பிரியப்படுவதில்லை.  அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.  இரவு பத்து மணிக்கு அந்த விடுதிகளின் கதவுகள் மூடப்பட்டுவிடும்.  அதன் பிறகு வருபவர்களுக்கு அவை திறக்கப்படுவதில்லை.  மேலும் அங்கு போதைப் பொருள்கள் சாப்பிடுவது, மதுபானங்கள் குடிப்பது ஆகியவை தடைசெய்யப்படுகிறது.  சிலர் அங்குள்ள நடைமுறை விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை விரும்புவதில்லை.

    இவர்களுக்கு இரவில் தங்க இடம் கொடுத்த ஷில்லரை எல்ஜின் ஊராட்சி கண்டித்திருக்கிறது; இந்தச் சேவையை நிறுத்தவும் ஆணை இட்டிருக்கிறது.  அவர் வீட்டின் அடிமட்டத் தளத்தில் தேவையான வெளிச்சம் இல்லையென்பதும் தீ விபத்து போன்ற சமயங்களில் (அமெரிக்காவில் வீடுகள் மரத்தால் கட்டப்பட்டவை; எளிதாகத் தீப்பற்றிக்கொள்ளும் தன்மை உடையவை) தப்புவதற்குத் தேவையான வாசல்கள் இல்லையென்பதும் ஊராட்சியின் கண்டனத்துக்குரிய காரணங்கள்.

    ‘ஷில்லருக்கு மிகவும் இளகிய மனம்.  அதை மறுப்பதற்கில்லை; அதை நாம் போற்ற வேண்டும்.  ஆனாலும் சில விதிகளை அவர் மீறியிருக்கிறார்.  அதனால் அவர் வீடற்றவர்களை இரவில் தன் வீட்டில் தங்கவைப்பதை நாம் தடுத்தே ஆக வேண்டும்.  மேலும் நகரில் மூன்று விடுதிகள் இருக்கின்றன.  அவை சட்டத்திற்குட்பட்டவை’ என்று ஊராட்சி அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.  அமெரிக்காவில் மனிதர்கள் தங்குவதற்குச் சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன.  பல அளவுகளிலான அப்பார்ட்மென்ட்களில் எத்தனை பேர் தங்கலாம் என்பதற்கு வரைமுறைகள் இருக்கின்றன.  அதேபோல் மேலே குறிப்பிட்ட வகையான விடுதிகள் எங்கு கட்டப்பட வேண்டும், எப்படிக் கட்டப்பட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கின்றன.  இந்த விதிகளைப் பின்பற்றாத வீடுகளில் மனிதர்களைத் தங்கவைப்பது சட்டத்திற்குப் புறம்பானதாகக் கருதப்படுகிறது.

    பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், தனிமனித சொத்துரிமைகள் ஆகியவற்றிற்காகப் போராடும் ஒரு வழக்கறிஞர் ஊராட்சி தன் வரம்பிற்கு மீறி ஷெல்லர் விஷயத்தில் தலையிட்டிருக்கிறது என்று நினைக்கிறார்.  ‘ஷில்லர் வீடற்றவர்களுக்கு உதவ விரும்புகிறார்.  வீடற்றவர்களுக்கு இரவில் தங்குவதற்கு இடம் தேவைப்படுகிறது.  இதில் தலையிட ஊராட்சிக்கு உரிமை இல்லை’ என்று வாதாடுகிறார்.  ‘உதவி தேவைப்படும் அவசர காலங்களில் மட்டும்தான் ஷில்லர் தன் வீட்டில் இவர்களுக்கு அடைக்கலம் தருகிறார்.  ஆண்டு முழுவதும் இதைச் செய்வதில்லை’ என்கிறார் அவர்.  உண்மை நிலையை உணராது விதிகளைத் திணிப்பது அவ்வளவு சரியல்ல என்பதும் இவரது அபிப்பிராயம்.

    ஷில்லர் ஏற்கனவே மற்றவர்களோடு சேர்ந்து ‘மேத்யூ 25:40’ என்ற அவசரகால விடுதி ஒன்றைத் திறந்திருக்கிறார்.  பைபிளின் புதிய ஏற்பாட்டின் மேத்யூ 25:40-இல் ‘என் சகோதர, சகோதரிகளுக்கு நீங்கள் செய்யும் எந்த உதவியும் எனக்குச் செய்ததற்குச் சமம்’ என்று யேசு கூறியிருப்பதன் அடிப்படையில் இந்த விடுதிக்கு மேத்யூ 25:40 என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் வெப்பநிலை பாரன்ஹீட் 15 டிகிரிக்குக் கீழ் சென்றால்தான் இந்த விடுதி திறக்கப்படும்.  ஷில்லர் வெப்பநிலை 15 டிகிரிக்குக் கீழே செல்லும்வரை தன் வீட்டில் இவர்களுக்கு இடம் கொடுக்கக் காத்திருப்பதில்லை.  15 டிகிரிக்கு மேலேயும் குளிரைத் தாங்க முடியாது என்பது இவருடைய வாதம்.  ‘என்னுடைய வாழ்வாதாரத்திற்கு நான் மெக்கானிக் வேலை பார்த்தாலும் என் உள்ளம் இந்த வீடற்றவர்களுக்கு உதவுவதைத்தான் விரும்புகிறது’ என்று ஒரு வானொலிப் பேட்டியில் கூறியிருக்கிறார் 53 வயதான ஷில்லர்.

    ‘நான் இரவில் தங்க இடம் கொடுத்து உதவுபவர்கள் எல்லாம் என் நண்பர்கள்.  இதை நான் ‘சினிமா இரவுகள்’ என்று அழைப்பேன்.  அப்போது அவர்களுக்கு நான் சூடான பானங்கள், தின்பண்டங்கள் வழங்குவேன்.  அதிக பட்சம் 15 பேர் தங்கியிருந்திருக்கிறார்கள்.  அவ்வப்போது அவர்களை நான் கவனித்துக்கொள்வேன்’ என்கிறார் ஷில்லர்.  (அமெரிக்காவில் நண்பர்கள் சேர்ந்து இரவில் சினிமா பார்ப்பது வழக்கம்.  இதை movie nights என்பார்கள்.)   தன் வீட்டில் வீடற்றவர்களைத் தங்கவைப்பதற்கு முன் தன்னுடைய கார் ஷெட்டில் இவர்களைத் தங்கவைத்திருக்கிறார்.  தேவையான ஹீட்டர் வசதிகள் எல்லாம் செய்துகொடுதிருக்கிறார்.  ஒரு முறை ஒருவருக்கு இருதய வலி ஏற்பட்டு அவசர மருத்துவ உதவியை நாட வேண்டியதாயிற்று.  அப்போது வீட்டுக்கு வந்த அந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்ததால் அப்போதைக்கு கார் ஷெட்டில் அவர்களுக்குத் தங்க இடம் கொடுப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று.  இப்போது இவர் வீட்டில் அவர்களைத் தங்கவைப்பதைப் பற்றியும் யாரோ புகார் கொடுத்திருக்கிறார்கள்.  அவர்கள் தன்னுடைய பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிறார் ஷில்லர்.  தனக்கு வேண்டாதவர்கள் செய்த வேலை இது என்கிறார்.

    மனிதனின் மனதில் ஊற்றெடுக்கும் இம்மாதிரியான இரக்க உணர்வுகளுக்கும் – இவை மனிதர்களால் வியந்து பாராட்டப்பட்டாலும் –  அரசு விதிக்கும் விதிகளுக்கும் – இவையும் மனிதர்களால் மதிக்கப்பட்டாலும் – இடையே மோதல் ஏற்படுவதுண்டு.  இம்மாதிரி சமயங்களில் சிலவற்றில் நீதிமன்றங்கள் தலையிட்டு இரண்டில் எது மனித நலத்திற்குச் சிறந்தது என்று தீர்மானிக்கும் உரிமையைப் பெறுகின்றன.

    ஷில்லர் தன் வீட்டின் அடிமட்டத் தளத்தில் வீடற்றவர்களைத் தங்கவைப்பது தடைசெய்யப்பட்ட பிறகு ஊராட்சி அதிகாரிகளும் ஷில்லரும் சந்தித்து வீடற்றவர்களுக்கு இரவில் மிகக்குளிர் காலத்தில் தங்க வசதிசெய்து கொடுப்பது பற்றி பல விவாதங்கள் நடத்தினர்.  காவல்நிலையங்களின் வராந்தாக்களில் அவர்களைத் தங்கவைப்பது பற்றியும் ஒரு யோசனை இருக்கிறது.  தன்னுடைய உரிமைகளில் தலையிடுவதாகக் குறைகூறி ஊராட்சியின் மீது வழக்குத் தொடுப்பதாக இருந்த ஷில்லர் இப்போதைக்கு அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டார்.  ‘ஊராட்சியின் விதிகளை நான் மதிக்கிறேன்.  ஆனால் சில நேரங்களில் சில விதிகளைக் கொஞ்சம் தளர்த்தலாம் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்’ என்கிறார் ஷில்லர்.

    இல்லினாய் மாநில எல்ஜின் நகரில் இப்படி நடந்துகொண்டிருக்க, நியூயார்க் நகரில் யாருக்கும் தெரியாமல் கேண்டிடோ அர்கேஞ்சல் என்பவர் ஒரு விடுதியை நடத்தி வருகிறார்.  ஷில்லர் வீட்டின் அடிமட்டத் தளத்தில் விடுதி இரவு பத்திலிருந்து காலை எட்டு மணிவரை திறந்திருக்கும் என்றால் இவருடைய கடையின் அடித்தளத்தில் 24 மணி நேரமும் வீடற்றவர்கள் தங்கலாம்.  ஒரே ஒரு கண்டிஷன்.  இரவு பத்து மனிக்குக் கடையை மூடிவிட்டால் அதன் பிறகு யாரும் உள்ளே வர முடியாது.  வேண்டுமானால் வெளியே போகலாம், ஆனால் மறு நாள் எட்டு மணிக்குக் கடை திறக்கும்வரை உள்ளே வர முடியாது.  (அமெரிக்காவில் பல கட்டடங்களில் கதவை சாவி இல்லாமல் உள்ளேயிருந்து திறக்கலாம்; ஆனால் வெளியேயிருந்து திறக்க முடியாது.) பக்கத்து பார்க்குகளில், தெருக்களில் தங்க இடம் இல்லாமல் இருந்தவர்களை இவர் தன் கடையின் அடிமட்டத் தளத்தில் தங்கவைத்திருக்கிறார்.  இதில் பல மன நோயாளிகளும் சிறை சென்று மீண்டவர்களும் உண்டு.  இவர் இப்படிச் செய்வதற்கு முக்கிய காரணம், அவர் சொல்வதுபோல், இவரிடம் வசதி இருக்கிறது, அவர்களிடம் இல்லை.

    டொமினிகன் ரிபப்ளிக் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் அர்கேஞ்சல்.  ஒரு கால்பந்து ஆட்ட வீரராக வேண்டுமென்று விரும்பி பல ஆட்டங்களில் கலந்துகொண்டார்.  ஆனால் ஒரு முறை தோள்பட்டையில் அடிபட்டு ஆட முடியாமல் போன பிறகு 1989-இல் அமெரிக்காவிற்கு வந்துவிட்டார்.  டீம்களில் பல தரப்பட்ட பையன்களோடு விளையாடியபோது ஒருவருக்கொருவர் உதவுவதன் அர்த்தத்தை நன்றாகப் புரிந்துகொண்டதாகக் கூறுகிறார்.  இது ஒவ்வொருவரும் சமூக நலனுக்காகச் செய்ய வேண்டிய காரியம் என்கிறார்.

    அமெரிக்காவிற்கு வந்த பிறகு நியுயார்க் நகரில் ஒரு சிறிய கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.  சாமான்களை ஷெல்புகளில் அடுக்குவது, காலை உண்விற்காக சாண்ட்விச் தயாரிப்பது என்று ஆரம்பித்து பதினான்கு வருடங்களில் அந்தக் கடையையே விலைக்கு வாங்கினார்.  கடையை வாங்கும் முன் இலவசம் கேட்டு வருபவர்களைக் கடையில் தங்கவைக்கலாமா என்று தன் முதலாளியிடம் கேட்டபோது, ‘எப்போதுமா, உனக்கு என்ன பைத்தியமா?’ என்று கேட்டாராம் இவருடைய முதலாளி.  கடையை வாங்கிய முதல் மாதத்திலேயே வீடற்ற ஏழை ஒருவரை தன் கடையில் தங்குமாறு இவர் அழைத்தாராம்.

    எப்போதும் பத்துப் பேராவது இவர் கடையின் அடிமட்டத் தளத்தில் தங்கி இருப்பார்களாம்.  அடிமட்டத் தளத்தின் தரை கரடு முரடாக இருப்பதால்  சாமான்கள் கட்டிவரும் அட்டைகளைப் படுக்கைகளாக உபயோகிக்கிறார்கள். ஒரு தெருவில் கிடந்த பெரிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று, தேவையென்றால் உணவைச் சூடுபடுத்திக்கொள்ள ஒரு சிறிய மின்சார அடுப்பு, விளக்குகள் இவைதான் அங்குள்ள சாதனங்கள்.  இதற்காகும் மின்சாரக் கட்டணமான 400 டாலரை அர்கேஞ்சல் செலுத்துகிறார்.   மூலையில் ஷவர் போன்ற ஒரு சாதனம்.  இந்த வசதிகளோடுதான் அங்கு தங்கியிருப்பவர்கள் நாட்களைக் கழிக்கிறார்கள்.  அங்கு வசிப்பவர்களிடம் அவர் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை.

    நிறைய வசதிகள் அற்ற இந்த இடத்தில் தங்குபவர்களுக்கு இதைத் தற்காலிக இடமாகத்தான் அர்கேஞ்சல் கருதுகிறார்.  தினமும் காலையில் கடை திறந்ததும் அங்கிருப்பவர்களை வெளியே போய் வேலை தேடும்படி ஊக்கப்படுத்துகிறார்.  ‘பறவைகள்போல் வெளியே பறந்து செல்லுங்கள்.  உங்கள் வாழ்க்கையை நீங்களே அமைத்துக்கொள்ளும் வழி புலப்படும்.  நான் இறந்த பிறகு எங்கு போவீர்கள்?’ என்கிறார் அவர்களிடம்.  சிலர் அவருடைய இந்த யோசனையைப் பின்பற்றாவிட்டாலும் சிலர் அதைப் பின்பற்றி வேலை தேடிக்கொண்டு இவரைத் தேடிவந்து தங்கள் புதிய வாழ்க்கையைப் பற்றி இவரிடம் கூறுகிறார்கள்.

    அர்கேஞ்சல் கடையில் தங்கியிருப்பவர்களுக்கு வெளியில் கிடைக்காத ஒன்று இங்கு நிறையக் கிடைக்கிறது: அது அன்பு கலந்த கருணை.  நியுயார்க் மாநகர ஊழியர்கள் இவரைக் கண்டுகொள்ளாதவரை இவர்களுக்கு இது கிடைத்துக்கொண்டே இருக்கும்.

    Share
  • ஜெருசலேம் யாருக்கு?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேல் நாட்டின் ஆளுகையின் கீழ் இருக்கும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து அந்த நகருக்கு அமெரிக்கத் தூதரகத்தை மாற்றப் போவதாக டிசம்பர் 6-ஆம் தேதி அறிவித்திருக்கிறார்.  இவர்தான் பல அமெரிக்க ஜனாதிபதிகள் வாக்களித்து ஆனால் நிறைவேற்றாமலே போன முடிவை நிறைவேற்றிவைக்கப் போகிறாராம்!   இதைப் பார்க்கும்போது ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டபின்  ‘சரித்திரம் பற்றி ஒன்றும் தெரியாத ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற சரித்திரம் படைத்தவர்’ என்று ஒருவர் சொன்ன வாசகம் நினைவுக்கு வருகிறது.  இப்படி ஒருதலைப் பட்சமாக முடிவெடுத்த பிறகு அமெரிக்கா பாலஸ்தீனப் பிரச்சினையில் மத்தியஸ்தராக இருக்கும் தகுதியை இழந்துவிட்டது.  பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினைக்கு முடிவான தீர்ப்பை (ultimate deal) எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

    யூதர்களின் முதலாவது, இரண்டாவது கோவில்கள் கட்டிய காலத்திற்குப் பிறகு ஜெருசலேம் எந்த நாட்டின் தலைநகராகவும் இருந்ததாகத் தெரியவில்லை. முதல் உலக யுத்தம் முடிந்த பிறகு, ஆட்டோமான் பேரரசு சிதைந்த பிறகு, அதன் ஒரு பகுதியான பாலஸ்தீனம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட லீக் ஆஃப் நேஷனால் பிரிட்டனின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது.  அப்போது பிரிட்டன் தனது வசதிக்காக ஜெருசலேமைப் பாலஸ்தீனத்தின் தலைநகர் ஆக்கியது.  யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்றும், அந்த நாடு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாங்கள் விட்டுச் சென்ற தங்கள் புண்ணிய பூமியான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய ஹெர்ஸல் என்ற ஐரோப்பிய யூதர்  அதற்குரிய செயல்களில் ஈடுபட்டார்.   பல யூதர்கள் பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கிக் குடியேற ஆரம்பித்தனர்.  அவருடைய மறைவிற்குப் பின்னும் நிறைய யூதர்கள் ரஷ்யாவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் பாலஸ்தீனத்தில் குடியேறினர்.  வசதி படைத்த இந்த யூதர்களால் அங்கு வாழ்ந்துவந்த அரேபியர்களின் நிலங்களை வாங்கிப் போட முடிந்தது.  தங்கள் நிலங்களை யூதர்களுக்கு விற்றுவிட்டு அதன் முழுத் தாக்கத்தையும் உணராமல் இருந்த அரேபியர்கள் பின்னால் தங்கள் நிலைமையை உணர்ந்து யூதர்களோடு மோதத் தொடங்கியபோது அதைக் கையாளுவதில் உள்ள சிரமத்தை எண்ணி பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற முடிவுசெய்தது.  இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா. பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பிரிப்பதென்று முடிவுசெய்தது.  தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியை பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறிய அன்றே இஸ்ரேல் என்ற நாடாக யூதர்கள் தாங்களாகவே பிரகடனம் செய்துகொண்டனர்.  தங்களுடைய நாட்டைப் பிரித்து அதில் ஒரு பகுதியை யூதர்களுக்கு  ஐ. நா. கொடுப்பதை எதிர்த்த பாலஸ்தீனர்கள் அந்த முடிவை ஏற்காமல் முழுப் பாலஸ்தீனத்தையும் பெறத் தொடர்ந்து போராட முடிவுசெய்தனர்.  அந்தப் போராட்டம் இன்றுவரை நீடிக்கிறது, பாலஸ்தீனர்கள் எவ்வளவோ விட்டுக்கொடுத்த பிறகும்.

    பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்தாலும் அதிலுள்ள ஜெருசலேம் நகரை அதன் முக்கியத்துவம் கருதி ஐ.நா. தன் மேற்பார்வையில் உலகப் பொது நகரமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது.  இஸ்ரேல் நாடு பிறந்த மறு நாளே அதை எதிர்த்து ஜோர்டான், எகிப்து, சிரியா ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன.  அந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றதுமல்லாமல் ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட இடங்களோடு இன்னும் சில இடங்களையும் பாலஸ்தீனத்தில் பிடித்துக்கொண்டது.  அதில் மேற்கு ஜெருசலேமும் ஒன்று.  இப்படியாக ஐ.நா.வின் கீழ் இருக்க வேண்டிய ஜெருசலேமின் ஒரு பகுதி இஸ்ரேலின் ஆதிக்கத்திற்கு வந்தது.  அப்போதுவரை ஜெருசலேமின் மேல் சிறப்பான அக்கறை எடுத்துக்கொள்ளாத யூதர்கள் – ஜெருசலேமில் மூன்று பெரிய மதங்களுக்கும் உரிய புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதால் அதை தங்கள் வசப்படுத்திக்கொண்டாலும் அதனால் சில கஷ்டங்கள் தங்களுக்கு வரலாம் என்பதால் – அதைக் கையகப்படுத்திக்கொள்வதில் அக்கறை காட்டவில்லை.  மேலும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் கட்டுப்பட்டு அப்படி நடந்துகொண்டது.  ஆனால் யுத்தத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தங்களுக்குக் கிடைத்த ஜெருசலேமை வேறு விதமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர் யூதர்கள்.  நாடு உருவான இரண்டு வருடங்களில் யூதர்கள்அதுவரை தலைநகராகச் செயல்பட்டுவந்த  டெல் அவிவிலிருந்து மாற்றி ஜெருசலேமை தங்கள் தலைநகராக்கிக்கொண்டனர்.  கொஞ்சம் கொஞ்சமாக அரசு அலுவலகங்களை ஜெருசலேமிற்கு மாற்றத் தொடங்கியது இஸ்ரேல் அரசு. ஜெருசலேம் பற்றிய ஐ.நா.வின் தீர்மானம் இன்னும் அமலில் இருந்ததால் மற்ற நாடுகள் தங்கள் தூதரகங்களை டெல் அவிவிலேயே வைத்துக்கொண்டன.

    1967-இல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த இன்னொரு போரில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு இஸ்ரேல் ஜெருசலேமைப் பயன்படுத்திக்கொண்ட விதத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டது.  இந்தப் போரில் ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் பிடித்துக்கொண்டது.  அங்கிருந்த பழைய நகர் (old city) இஸ்ரேலின் வசமாகிவிட  அதுவரை யூதர்கள் செல்ல முடியாத அவர்களின் இடிபட்ட கோயிலின் மேற்குச் சுவருக்குச் செல்லும் வாய்ப்பு யூதர்களுக்குக் கிடைத்தது.  அப்போதிலிருந்து ஜெருசலேம் அவர்களின் நகரம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றி எப்படியும் அதைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.  முதலில் ஐரோப்பாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்கள் மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக, யூத இனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.  பின்னால் வந்தவர்களோ மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இவர்களில் தலைவர் ஆனவர்கள் ஜெருசலேமின் முக்கியத்துவத்தை மக்களின் மனதில் வேரூன்ற வைத்தனர்.  ஜெருசலேம் தங்களுக்கே உரியது என்று யூதர்கள் எண்ண ஆரம்பித்தனர்.  1980-இல், போரில் பிடித்துக்கொண்ட ஜெருசலேம் தங்கள் தலைநகர் என்று சட்டமும் இயற்றிக்கொண்டது இஸ்ரேல் அரசு.  கிழக்கு ஜெருசலேமில் சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் யூதர்களுக்கு குடியிருப்புகளையும் கட்டத் தொடங்கியது.  போர் பற்றிய சர்வதேச விதிகளில் ஒன்று சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் வென்ற பகுதிகளை வெற்றிபெற்ற நாடு தன்னுடையது ஆக்கிக்கொள்ளக் கூடாது.

    பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் நடுநிலை வகித்து ஒரு தீர்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அமெரிக்கா முயன்று வந்தது.  அதனால் பல அமெரிக்க ஜனாதிபதிகள் தேர்தல் சமய வாக்குறுதிகளில் அமெரிக்காவில் உள்ள யூதர்களைத் திருப்திப்படுத்த ஜெருசலேமிற்கு அமெரிக்கத் தூதரகத்தை மாற்றிவிடுவதாக வாக்குக் கொடுத்தாலும் அதை இதுவரை நிறைவேற்றவில்லை.  ஆனால் இப்போது ட்ரம்ப் அதைச் செய்யப் போகிறார். அவரது தேர்தல் பிரச்சாரத்துக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுத்த யூதப் பணக்காரர்களைத் திருப்திப்படுத்த இப்படிச் செய்கிறார்.  இது ஜெருசலேம் எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமில்லை என்ற ஐ. நா. தீர்மானத்தைத் தன்னிச்சையாக மீறுவதாகும். இதனால் பாலஸ்தீனர்கள் மறுபடி வன்முறையில் ஈடுபடலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.  பாலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்ப்பைக் கண்டுபிடிப்பதாகச் சொல்லிவரும் அமெரிக்கா ஜெருசலேம் இஸ்ரேலைச் சேர்ந்தது என்று ஒருதலைப்பட்சமாகச் சொன்னால் பாலஸ்தீனர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? உலகில் நியாயம் இல்லையா?

    Share
  • தமிழுக்கு எது தேவை?

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    ‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ என்றார் பாரதி.  ‘தமிழுக்கு அமுதென்று பேர்;  அது எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாரதிதாசன்.  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தங்கள் தாய்மொழியை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.  தாய்மொழிக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.  இது எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய விஷயம்.  அதை எப்படிச் செயலில் காட்டுவது என்பதில்தான் எல்லோரிடையேயும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை.

    இப்போது அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு பத்து கோடி ரூபாய் – டாலரில் சொல்வதென்றால் 15 லட்சம் டாலர் – கொடுப்பதாக வாக்களித்திருக்கிறது.  இறந்த அம்மையார் கொடுப்பதாக வாக்களித்திருந்ததால் இப்போதுள்ள தமிழ்நாடு அரசு கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறதாம்.  இதற்கு மூல காரணமாக இருந்தவர்கள் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்காவில் வாழும் இரு மருத்துவர்கள்.  இவர்கள் இருவரும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர் (ஐந்து லட்சம்) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று நிறுவுவதற்கு கொடுத்தார்கள்.  ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு மில்லியன் போதாது என்று கூறி மொத்தம் எட்டு மில்லியன் (எண்பது லட்சம்) வேண்டும் என்று கேட்டது.  இதனால் அமெரிக்காவில் வாழும் அமெரிக்கத் தமிழர்கள் கொஞ்சம் பணம் திரட்டினார்கள்.  அப்படியும் ஹார்வர்ட் கேட்ட பணத்துக்கு நிறையத் துண்டு விழுகிறது.  அதை ஓரளவிற்கு நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு 15 லட்சம் டாலர் கொடுப்பதாக வாக்களித்திருக்கிறது.

    ஏழை நாடான இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகம் இத்தனை பணம் செலவழித்து அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் மூலம் தமிழை வளர்க்கத்தான் வேண்டுமா?  மேலும் அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் மற்ற தமிழ் அறிஞர்களும் விரும்பும் விதத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழை வளர்க்குமா?  சமீபத்தில் சென்னையில் ஒரு பேட்டியில் இஸ்ரேலைச் சேர்ந்த டேவிட் ஷுல்மன் தமிழில் சம்ஸ்கிருதத்தின் தாக்கம் இருப்பதாகச் சொன்னதற்கு அவரைத் தமிழ்நாட்டுத் தமிழறிஞர்களில் சிலர் வெகுவாக விமர்சித்தார்கள்.  உலகிலேயே தமிழ்தான் மூத்த மொழி, சிறந்த மொழி என்று சொன்னால்தான் இவர்களுடைய விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியும்.  ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உலகின் மூத்த மொழி தமிழ்தான் என்று சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்களா? ஷுல்மன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய நூலை வெளியிட்டது ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.

    ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழை எப்படி ஆராய்ச்சி செய்யும், எப்படி வளர்க்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  முதலில் தமிழைத் தமிழ்நாட்டில் வளர்ப்பது பற்றித் தமிழ் வல்லுநர்களும் அரசியல்வாதிகளும் ஆராயட்டும்; அதற்குரிய செயல்களில் இறங்கட்டும்.  ஆங்கிலக் கல்வி மோகம் அதிகமாகிவரும் இந்தச் சமயத்தில் தமிழைச் சிறப்பாகக் கற்பது பற்றி எத்தனை பெற்றோர்கள் சிந்திக்கிறார்கள்?  அவர்களையும் குறை சொல்வதற்கில்லை.  தங்கள் குழந்தைகளுக்கு எங்கு, எதில் வேலைவாய்ப்பு இருக்கிறதோ  அதைத்தானே படிக்கும்படி அவர்களும் வற்புறுத்துவார்கள்.  இந்தியாவில் இப்போது தொழிற்கல்வி பயிலக் கடும் போட்டி நிலவுகிறது.  அந்தப் படிப்பில் சேர வேண்டுமானால் அதற்குரிய பாடங்களில் நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டியிருக்கிறது.  இந்தப் போராட்டத்தில் மொழித் தேர்ச்சி பற்றி யாரும் கவலைப்படுவதில்லை  வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காகவாவது ஆங்கிலத்தில் பயிற்சி பெற விழைகிறார்கள்.  அதனால் தமிழைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.  தமிழில் தேர்ச்சி பெற்றால் எங்கு வேலை கிடைக்கும் என்பது பற்றித்தான் கவலைப்படுவார்கள்.

    இப்போது தமிழ்நாட்டில் கல்வித்தரம் மிகவும் தாழ்ந்துபோயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் இதே நிலைதானா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.  ஆசிரியத் தொழிலுக்குத் திறமையானவர்களை ஈர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போகிறது அரசு.  ஆனால் ஆசிரியர்களின் தரமோ அவர்களின் கற்றுத்தரும் திறமையோ கூடியிருப்பதாகத் தெரியவில்லை.  எங்கள் காலத்தில் நாங்கள் பள்ளியை விட்டு வெளிவரும்போது தமிழில் ஓரளவு நல்ல பயிற்சியும் கல்லூரியைவிட்டு வெளிவரும்போது ஆங்கிலத்தில் ஓரளவு பயிற்சியும் பெற்றிருந்தோம்.  இதற்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது அப்போதைய ஆசிரியர்களின் திறமை, ஆசிரியத் தொழில் மேல் அவர்களுக்கிருந்த பிடிப்பு ஆகியவை.  இப்போது அந்தக் குணங்களை ஆசிரியர்களிடம் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது.  அப்போதுள்ள சமூகத்திலும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கு மதிப்பு இருந்தாலும் ஆசிரியத் தொழிலுக்கு வந்தவர்களிடம் தரமும் திறமையும் இருந்தன.   நான் பள்ளியில் தமிழைப் பாட மொழியாகக் கொண்டுதான் கற்றேன்.  கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் ஆங்கிலம் பாட மொழி.  இப்போது எனக்கு இரண்டிலும் ஓரளவு தேர்ச்சி இருக்கிறது.

    இப்போது கல்லூரி முடித்து வரும் மாணவர்களிடம்கூட இரண்டிலும் தேர்ச்சியைப் பார்க்க முடியவில்லை.  ஆங்கிலத்தில் பள்ளியிலிருந்தே பாட மொழியாகக் கற்பதைப் பெருமையாக எண்ணி அதில் கற்கப் போய் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் தேர்ச்சி இல்லை இக்கால மாணவர்களுக்கு.  முதலில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்; அதற்கு ஆசிரியர்களின் தரத்தையும் அவர்களின் கற்பிக்கும் திறமையையும் உயர்த்த வேண்டும்.  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் எல்லோரும் தமிழில் நன்றாக படிக்க, எழுதப் பயிற்சி தர வேண்டும்; பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல தமிழில் –நல்ல தமிழ் என்றால் பண்டிதத் தமிழ் அல்ல- எழுதும் திறமை வேண்டும். தொலைக்காட்சியில் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரிய வேண்டும். நம் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழைச் சரியாகக் கற்றுக்கொடுக்காமல் ஹார்வேர்டில் தமிழ் கற்றுக்கொடுப்பதில் என்ன அர்த்தம் என்று புரியவில்லை.

    Share
  • பிளாஸ்டிக்கும் ரவாண்டாவும்!

    -நாகேஸ்வரி அண்ணாமலை 

    பிளாஸ்டிக்கின் தீமைகளைப் பற்றி அறியாதார் யாரும் இல்லை.  ஆனால் அதன் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதைப் பற்றித்தான் யாரும் எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.  அமெரிக்காவில் உள்ள பல பெருமைக்குரிய பல்கலைக்கழகங்களில் சிகாகோ பல்கலைக்கழகமும் ஒன்று.  இங்கு என்னென்னவோ ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதில் பூமி மாசுபடுவது பற்றிய் ஆராய்ச்சியும் அடங்கும்.  ஆனால் வளாகத்தில் பிளாஸ்டிக் உபயோகம் என்று வரும்போது பிளாஸ்டிக்கினால் வரும் தீமைகளைப் பற்றி யாரும் சிந்தித்துக்கூடப் பார்ப்பது இல்லை. பல பார்ட்டிகளில் விருந்திற்குப் பிறகு அத்தனை பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், கரண்டிகள், முள் கரண்டிகள் குப்பைத் தொட்டியை நிறைத்திருக்கும்.  இத்தனை பிளாஸ்டிக் சாமான்கள் குப்பைக்குப் போகின்றனவே, அவை எங்கு போய்ச் சேரும் என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.  அமெரிக்காவில் மனித உழைப்பிற்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும்.  அதனால் மறுபடியும் உபயோகிக்கக் கூடிய பீங்கான் போன்ற மூலப்பொருளில் செய்த தட்டுகள், கப்புகள் பற்றி யாரும் நினைப்பதில்லை. இவற்றைக் கழுவச் செலவாகும், பாத்திரம் கழுவும் இயந்திரம் இருந்தாலும்.  சிகாகோவில் பலசரக்குச் சாமான்கள், காய்கறிகள், பழங்கள் விற்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு நம் சொந்தத் துணிப்பைகளைக் கொண்டுசென்றால் ஏழு சென்ட் ஊக்கத் தொகையாகக் கொடுப்பார்கள்.  கடைப் பைகளிலேயே சாமான்களைப் பெற்றுக்கொண்டால் ஏழு சென்ட் நாம் அபராதமாகக் கொடுக்க வேண்டும்.  ஆனால் இப்படிப்பட்ட சிறு காரியங்களைத் தவிர அமெரிக்கா வேறு எதுவும் செய்வது மாதிரித் தெரியவில்லை.  இது பெருங்கடலில் ஒரு துளி தண்ணீரைச் சேர்த்தது மாதிரிதான்.  மறுசுழற்சி செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள் சிலர்.   மறுசுழற்சி செய்யும் முறையிலிருந்தும் நச்சுப் புகை வெளியேறிக் காற்றில் கலக்கிறது.  பிளாஸ்டிக்கையே உபயோகிக்காமல் இருப்பதுதான் மிகச் சிறந்த வழி.

    அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு சுற்றுச்சூழல் பற்றிக் கவலையேபடாமல்  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி ஒபாமா செய்திருந்த எல்லா கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வருகிறார்.  இவருடைய காலத்தில் இன்னும் சுற்றுச்சூழல் கெட்டு மக்களின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்படும்.  அதைப் பற்றியெல்லாம் ட்ரம்ப் கவலைப்படப் போவதில்லை.  ஒபாமா செய்த எல்லாவற்றையும் மாற்றுவதுதான் ட் ரம்ப்பின் ஒரே இலக்குபோல் தெரிகிறது.  இவர் எப்படி பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பது பற்றி யோசிக்கப் போகிறார்?

    இப்போது உலகில் பிளாஸ்டிக் சாமான்களின் உபயோகத்தைப் பெருமளவில் நிராகரித்திருக்கும் நாற்பது நாடுகளில்  சீனா, பிரான்சு, இத்தாலி ஆகிய பெரிய நாடுகளோடு ஆப்பிரிக்காவிலுள்ள சிறிய நாடான ரவாண்டாவும் இருக்கிறது.  பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா பிளாஸ்டிக் உபயோகத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றிக் கொஞ்சம்கூட சிந்திக்காமல் இருக்கும்போது  சிறிய நாடான ரவாண்டா பிளாஸ்டிக்கை முழுமையாக நிராகரித்திருப்பது சந்தோஷமான விஷயம். 

    ரவாண்டாவில் பிளாஸ்டிக்கை வெளியிலிருந்து இறக்குமதி செய்வதோ, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதோ, விற்பதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றம்.  அப்படிப்பட்ட குற்றம் புரிபவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?  சிறைவாசம், அபராதம் மற்றும் பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்.  பிளாஸ்டிக்கினால் செய்த பைகள் தண்ணீர்க் குழாய்களை அடைத்துக்கொள்வது, கடலில் சேர்க்கப்படுவதால் கடல் நீர் மாசுபட்டு அங்குள்ள ஜீவராசிகளுக்குத் தீங்கு விளைவிப்பது, ஆடு, மாடுகள் பிளாஸ்டிக் பைகளைத் தின்று ஆரோக்கியம் கெட்டு உயிரிழப்பது, பிளாஸ்டிக் சாமான்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்காமல் இருப்பது, பிளாஸ்டிக் பைகள் தெருவெல்லாம் சிதறுண்டு கிடந்து ஊரின் அழகையே கெடுப்பது ஆகிய பிளாஸ்டிக்கின் அபாயத்தை ரவாண்டா நன்றாக உணர்ந்திருக்கிறது.  அதனால் மருத்துவமனைகள், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஆகியவை தவிர மற்ற யாரும் பிளாஸ்டிக் சாமான்கள் உபயோகிப்பதை அனுமதிப்பதில்லை. 

    பக்கத்து நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக கடத்திக்கொண்டு ரவாண்டாவுக்கு வருபவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைவாசம் உண்டு.  பக்கத்து நாடுகளிலிருந்து பெண்கள் தங்கள் உள்ளாடைகளில், புஜங்களில் பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக மறைத்துக் கடத்திக்கொண்டு வருவார்களாம்.  (எத்தனை சட்டங்கள் இருந்தாலும் சட்டத்தை மீறுபவர்களும் எல்லாச் சமூகங்களிலும் இருப்பார்கள் போலும்.)  இவர்களைச் சோதனையிடுவது கொஞ்சம் கஷ்டம் என்கிறார் இரு நாடுகளுக்கிடையேயுள்ள எல்லைக்காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலர்.  குறிப்பாக ரவாண்டாவிற்குப் பக்கத்து நாடான காங்கோவிற்கும் ரவாண்டாவிற்கும் இடையில் எப்போதும் வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடந்துகொண்டேயிருக்கும்.  இரு பக்கத்திலுமிருந்தும் மனிதர்கள், கால்நடைகள், சாமான்கள் போய்க்கொண்டிருக்கும்.  இந்தக் களேபரங்களில் பெண்கள் எளிதாக பிளாஸ்டிக் பைகளைக் கடத்திக்கொண்டு வருவார்கள் போலும்.  மேலும் தலையில் கூடைகளில் காய்கறிகளைச் சுமந்துகொண்டு விற்பனை செய்வோர் அந்தக் காய்கறிகளுக்கு இடையில் பிளாஸ்டிக் பைகளை ஒழித்துவைத்துக்கொண்டு போவார்களாம்.  ஒரு முறை இப்படிச் சென்ற ஒரு பெண் பிடிபட்டு பொது இடத்தில் மன்னிப்பு கேட்க நேர்ந்தபோது போதை மருந்து கடத்தலில் பிடிபட்டவர்போல் முகத்தை மறைத்துவைத்துக்கொண்டாராம்.  சக்கர நாற்காலியில் வந்த ஒருவர் அதன் அடிப்பாகத்தில் நிறைய பிளாஸ்டிக் பைகளை அடுக்கிவைத்துக்கொண்டு வந்தாராம்.

    அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் பைகளை உற்பத்திசெய்யும் கம்பெனிகளின் நிர்வாகிகளுக்கு ஒரு வருடம் வரை ஜெயில் தண்டனை உண்டு.  பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக உபயோகிக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு கடைகளையும் ஒரு வருடத்திற்கு இழுத்து மூடும்படி அரசு அதிகாரிகள் கூறிவிடுவார்களாம்.  பொது இடத்தில் மன்னிப்பும் கேட்க வேண்டுமாம்.

    ஓட்டல்களில் ரொட்டி, உறைந்த மாமிசம், மீன் ஆகிய சாமான்களுக்கு மட்டும் செல்லபேன் (cellophane) என்னும் ஓரிரு ஆண்டுகளில் மக்கக்கூடிய பேப்பர்களை அவற்றைச் சுற்றுவதற்கு உபயோகிக்கலாமாம்.  அவையும் ஓட்டலை விட்டு வெளியே போகாமல் ஓட்டல் உரிமையாளர் பார்த்துக்கொள்ள வேண்டுமாம்.  உருளைக் கிழங்கு வறுவல் போன்ற சாமான்களைத் தயாரிப்பவர்கள் செல்லபேனை உபயோகித்தாலும் அவற்றை வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து அவற்றை அந்தக் கம்பெனிகள் எப்படித் திரும்ப வாங்கும், எப்படி மறுசுழற்சி செய்யும் என்று முதலிலேயே அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டுமாம். 

    சமீபத்தில் செல்லபேன் பேப்பரில் சுற்றி விற்கப்பட்ட ரொட்டியை விற்ற சூப்பர் மார்க்கெட்டுகளை (செல்லபேன் ஓட்டல்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது) திடீரென்று வந்து சோதனையிட்ட இன்ஸ்பெக்டர்கள் கடைகளை மூடியதோடு அபராதமும் விதித்தார்கள்.  பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ரொட்டிகள் விற்ற ஒரு கடையில் இருந்த அத்தனை ரொட்டிகளையும் எடுத்துக்கொண்டு போய் அனாதை ஆசிரமங்களுக்குக் கொடுத்தார்களாம்.  இதோடு அந்தக் கடை மூடப்பட்டதோடு அதன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.  ரொட்டி போன்ற சாமான்களை  உள்ளே இருப்பது தெரியாத பேப்பரில் சுற்றி விற்றால் ரொட்டியைக் கண்ணால் பார்த்து வாங்குபவர்கள் வாங்குவதில்லையாம்.  ஆதனால் விற்பனை குறைகிறதாம்.  மேலும் இவற்றை பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைக்காவிட்டால் வேகமாகக் கெடக் கூடியவை.  அதனால் ரொட்டி விற்கும் ஒரு வியாபாரி ‘எங்கள் விற்பனையைக் குறைக்காமல் இருப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தால் நலமாக இருக்குமே’ என்று புலம்புகிறார்.

    வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவரும் சாமான்கள் எல்லையில் உள்ள சுங்கச் சாவடியில் பிரிக்கப்பட்டு அவை உடையக் கூடியவை என்றால் மட்டுமே அப்படியே அவற்றைப் பெற்றுக்கொள்வோருக்கு அனுப்பப்படுமாம்.  இல்லையென்றால் அங்கேயே பார்சல் பிரிக்கப்பட்டு அதிலுள்ள பிளாஸ்டிக் பைகள் அனுப்பியவருக்கே திரும்ப அனுப்பப்படுமாம்.

    ரவாண்டாவின் பக்கத்து நாடான காங்கோவில் இந்தியாவில்போல் தெருக்களில் பிளாஸ்டிக் பைகள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் போலும்.  அங்கு தண்ணீர் குழாய்களை, சாக்கடைகளை அடைத்துக்கொண்டு விலங்கினங்களுக்குத் தீங்கிழைத்துக்கொண்டு சுகாதாரக்கேட்டை விளைவித்துக்கொண்டு பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றன.  ரவாண்டாவாசிகள் தங்கள் நாடு மிகவும் சுத்தமாக இருப்பதாகவும் காங்கோ மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும் பெருமையாகக் கூறிக்கொள்வார்களாம்.

    ரவாண்டாவில் வரைமுறை இல்லாத அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.  மாதம் ஒரு முறை எல்லோரும் தங்கள் தெருக்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர் கட்டளை இட்டிருப்பதோடு அவரும் சேர்ந்து சுத்தப்படுத்துவாராம்.  ரவாண்டா இப்படி மிகவும் சுத்தமாக இருப்பதற்கு இவரைப் போன்றவர்களின் ஆட்சியும் ஒரு காரணம் என்கிறார்கள்.  இது ஒரு எல்லை என்றால் அமெரிக்கா இன்னொரு எல்லை.  அங்கு பிளாஸ்டிக் உபயோகம்  பற்றி எந்தக் கட்டுப்பாடும் இதுவரை இல்லை.  குப்பைகளை உருவாக்குவதில் அமெரிக்கா உலகிலேயே முதலிடம் வகிக்கிறது.   இந்தக் குப்பையெல்லாம் கடலுக்கோ புதைகுழிகளுக்குள்ளோ போய்ச் சேருகிறது.  இப்போது உலகில் உள்ள கடல்களில் மீன்களின் எடையைவிட குப்பையின் எடை அதிகமாக இருக்கிறதாம்.  இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஐம்பது வருடங்களில் கடல் ஜீவராசிகள் எல்லாம் மாண்டுபோகும் அபாயம் இருப்பதாகக் கூறுகிறார்கள். 

    இந்தியாவின் பிரதமர் ‘தூய்மை இந்தியா’ என்ற ஒரு திட்டத்தைத் துவக்கினாரே.   அது என்ன செய்கிறது?  இந்தியாவில் ஒரு இடம்கூட பிளாஸ்டிக் பைகள் இல்லாமலோ அல்லது மற்றக் குப்பைகள் இல்லாமலோ இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தியாவிலேயே சுத்தமான நகரம் என்று பெயர் வாங்கியிருக்கும் எங்கள் ஊரான மைசூரில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள்.  நம் அரசியல்வாதிகளுக்குத் தங்கள் நலனைக் காத்துக்கொள்வதற்கே நேரம் போதவில்லை.  இதில் தூய்மை இந்தியாவைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கிறது?

    ஒரு சிறிய நாடான ரவாண்டா செய்திருக்கும் சாதனையை இந்தியா செய்யக் கூடாதா?  ஸ்மார்ட் நகரங்கள் கட்டுவதற்கு முன் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தலாமே.  அதுதான் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகச் சுற்றுச்சூழலுக்கு இந்தியா செய்யும் நன்மை.

    Share
  • அமெரிக்காவில் நீதித்துறையிலும் இனதுவேஷம்!

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கா என்ற நாடு உருவானதிலிருந்தே இனத்துவேஷம் அங்கு இருக்கிறது.  அமெரிக்கர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அவர்கள் விருப்பத்திற்கு மாறாகக் கொண்டுவந்த ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைத்திருந்தனர். பின்னால் உள்நாட்டுப் போருக்குப் பிறகு அவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டுக் குடிமையுரிமைகளும் பெற்றனர்.  ஆயினும் இன்றுவரை அமெரிக்காவில் கருப்பர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்போல்தான் நடத்தப்படுகின்றனர்.  கருப்பர்கள் பலர் காவல்துறை அதிகாரிகளால் எவ்வித முகாந்திரமும் இன்றிச் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள்.  ஒரு வெள்ளை இனப் பெண்மணியைக் காரில் சென்றுகொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரி ஒருவர் நிறுத்தியிருக்கிறார்.  அந்தப் பெண்மணி பயந்துகொண்டே காரிலிருந்து இறங்கியிருக்கிறார்.  அதைப் பார்த்து அந்த அதிகாரி, ‘நீ கருப்பினத்தைச் சேர்ந்தவள் இல்லையே.  பின் ஏன் இப்படிப் பயந்து நடுங்குகிறாய்?’ என்று கேட்டாராம்! கருப்பர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்கு இது ஒன்றே போதும்.

    நீதித்துறையும் கருப்பர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதற்கு இன்னொரு சோகக் கதை.  ஜான் தாம்ஸன் 1984இல் செய்யாத ஒரு கொலைக்குற்றத்திற்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பதினான்கு ஆண்டுகளைச் சிறையில் கழித்தார்.  அது மட்டுமல்ல, அந்தப் பதினான்கு ஆண்டுகளில் ஆறு முறை இவர் தூக்கிலிடப்படுவதற்காக நாள் குறிக்கப்பட்டது. ஏழாவது முறை நாள் குறிப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னால் இவருடைய வழக்கறிஞரால் நியமிக்கப்பட்ட ஒரு துப்பறியும் நிபுணர் அதுவரை அரசு வழக்கறிஞர்களால் மறைக்கப்பட்ட, புலனாய்வுக் கூடம் செய்த ஆய்வின் முடிவைக் கண்டுபிடித்தார். குற்றம் நடந்த இடத்தில் சிந்தியிருந்த ரத்தம் தாம்ஸனுடையது அல்ல என்பதே இந்த முடிவு.  இது அரசு வழக்கறிஞர்களுக்குத் தெரிந்திருந்தாலும் நீதிமன்றத்திற்குத் தெரியாமல் மறைத்துவிட்டார்கள்.  வழக்கில் ஒரு திருப்பத்தை இது ஏற்படுத்தி மறுவிசாரணையில் தாம்ஸன் விடுவிக்கப்பட்டார்.  இந்த முறை முப்பத்தைந்தே நிமிடங்களில் தாம்ஸன் குற்றமற்றவர் என்று ஜூரிகள் முடிவுசெய்தனர். 

    குற்றம் புரியாத தன்னை இத்தனை நாட்கள் சிறையில் வைத்திருந்ததால் மிகவும் கோபமுற்ற தாம்ஸன் லூஸியானா மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் மீது அந்த அலுவலகத்திற்குக் கீழ் இயங்கும்  அரசு வழக்கறிஞர்களுக்கு  அந்த அலுவலகம் சரியான பயிற்சி கொடுக்கவில்லை என்று வழக்குப் போட்டார்.  குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்குரிய சான்றுகளையும்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்னும் அரசியல் சாசனச் சட்டத்தின் பகுதியை அவர்களுக்குக் கற்பிக்கவில்லை என்றும் தன் வழக்கில் கூறியிருந்தார்.  இந்த வழக்கில் லூஸியானா மாநில உச்சநீதிமன்றம் தாம்ஸனுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து அவருக்கு ஒன்றரைக் கோடி டாலர் பணம் பெற்றுத் தந்தது.

    ஆனால் அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றம்வரை கொண்டுசென்றனர்.  அங்கு ஐந்து நீதிபதிகள் இந்த வழக்கில் தாம்ஸன் அரசு வழக்கறிஞர்களுக்குச் சரியான பயிற்சி கொடுக்கப்படவில்லை என்பதைச் சரியாக நிரூபிக்கவில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.  தாம்ஸனுக்கு நஷ்ட ஈடு கிடைக்காமலே போயிற்று.  இந்த வழக்கில் தாம்ஸனுடைய வாதத்தை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தவறாகத் தண்டிக்கப்பட்டு சிறையில் பதினான்கு வருடங்கள் இருந்ததற்காகவாவது நஷ்ட ஈடு வழங்கியிருக்கலாம்.  தாம்ஸனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய நான்கு நீதிபதிகளில் ஒருவர் (அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் இருக்கிறார்கள்) ‘இந்த வழக்கு நடைபெற்ற சமயம் இதில் பணிபுரிந்த ஐந்து அரசு வழக்கறிஞர்களும் நீதியை நிலைநாட்டத் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டுவிட்டார்கள்’ என்று  தன் தீர்ப்பில் கூறியிருந்தார்.

    லூஸியானா மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞருக்கு ஜனாதிபதி ட்ரம்ப் சென்ற மாதம் மத்திய நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி பதவி கொடுத்திருக்கிறார்.  இவர் அமெரிக்கப் பாராளுமன்ற செனட்டர்களால் அங்கீகரிக்கப்பட்டால்  (ஜனாதிபதியால் மத்திய முறையீடு நீதிமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகள் செனட்டர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்)  அந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டு நெஞ்சில் வேதனையைச் சுமக்க தாம்ஸன் இன்று உயிரோடு இல்லை.  2017 அக்டோபர் மாதம்  ஐந்தாம் தேதி அவர் தன்னுடைய 55வது வயதில் மாரடைப்பால் இறந்துபோனார்.         

    2011இல் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தாம்ஸன் எழுதிய கட்டுரையில் தனக்கு நஷ்ட ஈடு கிடைக்காதது பற்றித் தான் கவலைப்படவில்லை என்றும் தன்னையும் மற்றும் சிலரையும் தவறாகச் சிறைக்கு அனுப்பிவைத்த அரசு வழக்கறிஞரைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய எண்ணம் என்றும் எழுதியிருந்தார்.  சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தாம்ஸன் நீதித்துறையின் மீதிருந்த தன் கோபத்தையெல்லாம் இவரை மாதிரிப் பொய்யாகக்  குற்றம் சுமத்தப்பட்டுப் பின்னால் விடுவிக்கப்பட்டவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதன் மூலம் தீர்த்துக்கொண்டார்.  கொடையாகக் கிடைத்த கொஞ்சம் பணத்தைக்கொண்டு ஒரு எளிமையான வீட்டை வாங்கி வஞ்சிக்கப்பட்ட பலரை அதில் தங்கவைத்து அவர்களுக்கு நியாயம் கிடைக்கப் பாடுபட்டார். இதில் கொஞ்சம் அமைதி கிடைத்தது.

    இருப்பினும் பல முறை தூக்குமேடைக்குப் போக நேர்ந்த அனுபவத்தில் உடலும்  உள்ளமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே இறந்துபோனார்.

    Share
  • உரிமைகளைப் பயன்படுத்தாத மக்கள் பிரதிநிதிகள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்தியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ கட்சியைப் பற்றியோ கட்சித் தலைவரைப் பற்றியோ விமர்சிக்க எந்தவித சுதந்திரமும் இல்லை.  கட்சித் தலைவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதையே செயலிலும் காட்டவேண்டும்.  தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருந்தவரை அவரை எதிர்த்துப் பேசவோ முதுகை வளைத்து அல்லது அவர் காலில் விழுந்து வணங்காமல் இருக்கவோ யாருக்கும் தைரியம் இல்லை.  யாராவது அப்படி ஒரு குறிப்புக் காட்டினால்கூட அவர் பதவி பறிக்கப்படும்; மேலும் கட்சியை விட்டே விலக்கப்படுவார்.  அம்மாதான் அதிமுக, அதிமுக.தான் அம்மா என்று கட்சியை வழிநடத்திக்கொண்டு போனார் அவர்.

    மற்ற மாநிலங்களில் இவ்வளவு மோசம் இல்லையென்றாலும் அங்குள்ள மாநில அரசியல் கட்சிகளிலும் நிலைமை இதுதான்.  ஏன் நாட்டை ஆளும் பிஜேபி.யிலும் இதே நிலைமைதான்.  மோதியை எதிர்த்துப் பேச யாருக்குத் தைரியம் இருக்கிறது?  அவரைப் புகழ்வதற்கு வேண்டுமானால் எந்த வரையரையும் இல்லை.  வானளாவப் புகழ்பவர்களுக்குச் சலுகைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்.  ஊழலிலே ஊறிப்போன எடியூரப்பாவின் மீதுள்ள வழக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.  இதற்கெல்லாம் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஆனால் ஏதாவது சொல்ல முடியுமா?

    இதுவரை எனக்குத் தெரியாத இன்னொரு செய்தியை நேற்றுப் பத்திரிக்கையில் படித்தேன்.  மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இத்தகைய கட்சித் தலைவர்களின் இலக்கணத்திற்கு மாறுபட்டவர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  அவர் பற்றிய செய்தி ஒன்று என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியது.  அவர் நடந்து வரும்போது அவருடைய கட்சிக்காரர்கள் பலர் அவருடைய காலைத் தொட்டு  வணங்கினார்களாம்.  ஒருவர் மட்டும் இருக்கையை விட்டு எழுந்திக்கவில்லையாம்  அவருக்கு அதற்குக் கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.  வட இந்தியாவில் பெரியவர்களின் காலில் சிறியவர்கள் விழுந்து வணங்குவது அவர்களுடைய பழக்கம்.  ஆனால் கட்சித் தலைவரின் காலில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் விழுவது அந்தப் பழக்கங்களில் ஒன்றா என்று தெரியவில்லை.

    அமெரிக்காவில் முக்கியமான இரண்டு கட்சிகளிலுமே கட்சித் தலைவர் என்று ஒருவர் இருந்தாலும் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை.  சொல்லப் போனால் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே பல விஷயங்களில் பல கருத்துக்களை உடையவர்களாக இருப்பார்கள்.  ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள்.  சந்தர்ப்பம் வரும்போது தங்கள் கருத்துக்களைக் கூறுவதற்கோ அதற்கேற்ப நடந்துகொள்வதற்கோ தயங்க மாட்டார்கள். அதுதான் அமெரிக்க ஜனநாயகத்தின் மிகச் சிறந்த அம்சம்.

    இப்போது ட்ரம்ப்,  ஒபாமா கொண்டுவந்த மருத்துவ வசதி வழங்கும் திட்டத்தை எப்படியாவது தகர்த்துப் புதுச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று துடிக்கிறார்.  ஒபாமா அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்த நாளிலிருந்தே அதைக் குடியசுக் கட்சியினர் எதிர்த்து வந்தனர்.  2012-இல் ஒபாமாவோடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ராம்னி தான் ஜெயித்தால் பதவிக்கு வந்த முதல் நாளே அதைத் தகர்த்துவிடுவதாகச் சபதம் செய்தார்.  அவர் ஜெயிக்கவில்லையாதலால் அப்போதைக்கு அந்தக் கோஷம் நின்றுபோயிருந்தது.  இப்போது பதவிக்கு வந்திருக்கும் ட்ரம்ப்பிற்கு ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சட்டங்களையும் திட்டங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற தீராத வெறி.  அதனால் ஒபாமாவின் முக்கிய வெற்றிச் சின்னமான இந்த சட்டத்தையா விட்டுவைப்பார்?  ஒழித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்.

    ஆனால் அவர் நினைத்த மாதிரி குடியரசுக் கட்சிக்காரர்களே அதற்கு ஆதரவு அளிக்கவில்லை.  குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் 52 பேர் இருக்கிறார்கள்.  இதில் 50 பேர் ட்ரம்ப்பின் மசோதாவுக்கு ஓட்டுப் போட்டால்கூட துணை ஜனாதிபதியும் செனட் தலைவருமான பென்ஸ் தன் ஆதரவு ஓட்டைப் போட்டு அந்த எண்ணிக்கையை 51 ஆக்கிவிடலாம்.  அந்த மசோதா சட்டமாகிவிடும்.    இப்போது குடியரசுத் தலைவர்களில் மூன்று பேர் அதைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள்.  இன்னும் மூன்று பேர் அநேகமாக ஓட்டுப் போட மாட்டார்கள்.  ட்ரம்ப்பும் தன்னால் முடிந்த அளவு அவர்களை வேண்டிக்கொண்டார், பயமுறுத்தினார்.  ஆனால் தீவிரமாக எதிர்க்கும் மூன்று பேரும் அசைந்து கொடுக்கவில்லை.  இவர்கள் மூவரில் ஒருவர் புதுச் சட்டம் அமலுக்கு வந்தால் ஏழைகள், குழந்தைகள், முதியோர் ஆகியோர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி கிடைக்காது என்பதால் எதிர்ப்பதாகக் கூறுகிறார்.  இன்னொருவர் ஒபாமாவின் சட்டத்திலிருந்து இன்னும் சில அம்சங்களைக் களைய வேண்டும் என்கிறார்.  இன்னொருவர் அதிலுள்ள அதிகமாக இருக்கும் பிரீமியத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்.  இவர்கள் எல்லோரும் பல பக்கங்கள் கொண்ட ஒபாமா கொண்டுவந்த சட்டத்தை முழுவதுமாகப் படித்துத் தெரிந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.  எல்லா செனட்டர்களுமே இப்படித்தான்.  மக்கள் தங்களை எதற்காகத் தேர்ந்தெடுத்தார்களோ அந்தக் கடமையை நன்றாக நிறைவேற்றுகிறார்கள்.

    நம் எம்.எல்.ஏ.க்களுக்குப் புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டத்தைப் பற்றியோ திட்டங்களைப் பற்றியோ எவ்வளவு தெரியும் என்று தெரியவில்லை. கட்சித் தலைவர் சொன்ன இடத்தில் கையெழுத்தைப் போட்டுவிடுவார்கள்.  எம்.எல்.ஏ. பதவி கிடைத்துவிட்டதா, இனி பணம் பண்ணுவது எளிதான காரியம் என்று மட்டும்தான் நினைக்கிறார்கள்.

    அமெரிக்காவில் மாநிலங்களும் அப்படித்தான்.  மாநிலங்களுக்கென்று தனி உரிமைகள் உண்டு.  ஜனாதிபதி சொல்வதையெல்லாம் கேட்க வேண்டுமென்பதில்லை.  மேலே சொன்னதுபோல் ஒபாமா செய்த எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கும் ட்ரம்ப் சுற்றுச்சூழலைக் காப்பாற்றக் கம்பெனிகள் மீது ஒபாமா கொண்டுவந்த  எல்லாக் கட்டுப்பாடுகளையும் எடுத்துவிட்டார்.  ஆனால் கலிஃபோர்னியா மாநிலம் ஒபாமா கொண்டுவந்த எல்லாக் கட்டுப்பாடுகளையும் அப்படியே வைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளது.

    ‘நீட்’ தேர்வு வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்கிறதா?  உடனே தமிழகமும் அதை நிறைவேற்றும் என்று தமிழக அரசு முடிவுசெய்கிறது.  அதை எதிர்த்துப் போராடுபவர்களைக் கைதுசெய்யுங்கள் என்றால் மத்திய அரசோடு ஒத்துப்போக தமிழக அரசு தயாராக இருக்கிறது.

    இவைதான் இந்திய ஜனநாயகத்திற்கும் அமெரிக்க ஜனநாயகத்திற்கும் உள்ள  வித்தியாசம்.

    Share
  • வெட்கக்கேடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    wrapper_-_Pope_-_002-1

    கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸைப் பற்றி இரண்டு முறை வல்லமைக்கு 2013, 2014 ஆண்டுகளில் ‘இதுவல்லவோ ஒரு மதத்தலைவருக்கு அழகு’, ‘இவரல்லவோ ஒரு மதத்தலைவர்’ என்ற தலைப்புகளில் எழுதியிருக்கிறேன்.  இன்னும் சில தினங்களில் அவரைப் பற்றி நான் எழுதியிருக்கும் ‘போப் பிரான்சிஸ் – நம்பிக்கையின் புதிய பரிமாணம்’ என்னும் நூல் வெளிவரவிருக்கிறது.  (செப்டம்பரில் நடக்கும் மதுரை புத்தகக் கண்காட்சியில் இது கிடைக்கலாம்.)  அதில் பல மதத்தலைவர்கள், இந்து மதத்தலைவர்களும்,  என்னென்ன அட்டகாசங்கள் புரிந்திருக்கிறார்கள், புரிந்துவருகிறார்கள் என்று கோடிகாட்டியிருக்கிறேன்.  அவர்களோடு ஒப்பிடும்போது போப் பிரான்சிஸ் எப்படிப்பட்ட மதத்தலைவர், எவ்வாறு மதத்திற்கு அப்பால் நின்று உலகிற்கே வழிகாட்டுகிறார் என்றும் கூறியிருக்கிறேன்.  நான் இந்து மதம் உட்பட எந்த மதத்தையும்பின்  பின்பற்றுபவள் இல்லையென்றாலும் கத்தோலிக்க மதத்தலைவர் தன் சிறப்புகளால் எப்படி என்னைக் கவர்ந்தார் என்றும் எழுதியிருக்கிறேன்.

    சென்ற 25-ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்தீப் ராம் ரஹீம் சிங் என்ற மதகுரு மீது கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்த வழக்கில் (நம் நாட்டின் நீதித்துறையின் ஆமை வேகத்துக்கு ஒரு உதாரணம்) குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு 28-ஆம் தேதி இருபது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்.  இவன் மீது இன்னும் சில கொலை வழக்குகள் இருக்கின்றன.  அவற்றிற்கும் சேர்த்து இன்னும் எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கப் போகிறாரோ?  பெரிய பாரம்பரியம் மிக்க நாடு, பாரினில் சிறந்த நாடு என்று நாம் பீற்றிக்கொள்ளும் இந்தியாவில் இப்படி ஒரு மதகுரு நடந்திருக்கிறார். ஒரு நீதிமன்றத்தால் அவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் இந்தியா பற்றிக் கொஞ்சம் நம்பிக்கையை உண்டாக்குகிறது.

    இருந்தாலும் இந்த நம்பிக்கையை மீறி இந்த ஆன்மீக வேஷதாரிக்குப் பல லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியும் இவர் தண்டிக்கப்பட்டதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய அளவில் வன்முறை நடந்து, அதில் 38 பேர் இறந்தனர், இன்னும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தியும் மனதில் பெரிய வேதனையை ஏற்படுத்தின.  மதத்தலைவர்கள் செய்யும் வெட்கக்கேடான செயல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.  இருப்பினும் இந்த வழக்கு பற்றிய சில விபரங்கள் இந்தியா இவ்வளவு தூரம் தாழ்ந்துவிட்டதா, உலக அரங்கில் இந்தியாவின் படிமம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பன போன்ற கசப்பான சில உண்மைகளை நம் முன் வைக்கின்றன.

    ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு ஆதரவு தேவைப்படுகிறது, இம்மையிலும் மறுமையிலும் தன்னைப் பாதுகாக்க ஒரு சக்தி தேவைப்படுகிறது.  இது எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தும்.  அதனால்தான் மனிதன் மதங்களைப் படைத்திருக்கிறான்.  இறைவனின் செயல்களுக்குக் காரணம் புரியவில்லை என்றாலும் விடாது இறைப்பற்றுக் கொண்டிருக்கிறான்.  மிருகத்தைவிடக் கேவலமான ஒரு மதகுருவை இத்தனை ஜனங்கள் வழிபடுவதும் அவன்மீது இத்தனை குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்றதும் இத்தனை லட்சம் சிந்திக்கும் திறனற்றவர்கள் அதை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவதும் இந்தியாவில் மட்டுந்தானோ?  அதை நினைத்தால்தான் வேதனை இன்னும் அதிமாகிறது.

    இதைவிட இன்னொரு உண்மை இன்னும் அதிகமாகச் சுடுகிறது.  இந்த மதகுருவோடு பல அரசியல்வாதிகள் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.  அரியானா முதலமைச்சருக்கு இவரோடு நெருக்கம் உண்டு.  குர்மீத் சிங் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியதும் வன்முறைகள் வெடிக்கலாம் என்று எதிர்பார்த்து முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.  அரியானா மாநில அரசு குர்மீத் சிங்கின் ஆசிரமத்திற்கு நிறைய பணம் கொடுத்து உதவியிருக்கிறது.  இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு வன்முறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இவர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்பட்டபோது பார்த்துக்கொண்டிருந்த அம்மாநில முதல்வர் மோதி பதவி விலகினாரா என்ன?

    குர்மீத் சிங் மீது 2002-இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.  அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, அதாவது பன்னிரெண்டு ஆண்டுகள் ஆன பிறகு,  நம் பாரதப் பிரதமர் ‘தூய இந்தியாவை உருவாக்குவோம்’ என்னும் நிகழ்ச்சியில் குர்மீத் சிங்கோடு கலந்துகொண்டதுமல்லாமல் பெரிதாகப் புகழ்ந்து வேறு பேசியிருக்கிறார்.  குர்மீத் சிங் மீது வழக்கு நடக்கிறது என்பது இவருக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.  இப்போதும் ‘குர்மீத் சிங்கைத் தான் மதித்ததற்கு மாறாக இப்படி நடந்துகொண்டிருக்கிறானே’ என்று ஒரு வார்த்தை கூறவில்லை.  ‘என் மனது வேதனைப்படுகிறது’ என்றுமட்டும் சொல்லியிருக்கிறார்.  எதற்காக வேதனைப்படுகிறார்?  இப்படிப்பட்ட ஒரு மதகுரு இருக்கும் நாட்டின் தலைவராக இருப்பதாலா?  இந்த மதகுருவிற்கு மனதைப் பறிகொடுத்த இத்தனை பக்தர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வாலா?

    இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதிக்கு எத்தனையோ மிரட்டல்கள் வந்திருக்கும்; ஆசை காட்டப்பட்டிருக்கும். தமிழக முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அரசியல் அதிகாரத்திற்கு, பண ஆசைக்குப் பணியாத நீதிபதிகள் இன்னும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்ற உண்மைதான் ஒரேயொரு ஆறுதல்.

    Share
  • போப் பிரான்ஸிஸ் காட்டும் புதிய வழி

    நாகேஸ்வரி அண்ணாமலை

    எல்லா சமூகங்களிலும் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை ஒரு காலத்தில் மன்னிக்க முடியாத குற்றம் புரிபவர்கள் என்று ஒதுக்கிவைத்தார்கள், பழித்தார்கள், சில சமூகங்களில் மரணதண்டனையே கொடுத்தார்கள்.  இப்போது பல சமூகங்களில் அந்த நிலை மாறிவருகிறது.  இஸ்லாம் மதத்தில் இவர்கள் இன்னும் (இந்து மதத்தில் இவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.  இந்தியாவில் ஓரின ஈர்ப்பு உள்ளவர்கள் அதிகமில்லையே என்று அமெரிக்கர்களிடம் நான் கூறினால் அந்தச் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லையாதலால் நிறையப் பேர் தாங்கள் ஓரின ஈர்ப்பு உள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை என்று சொல்கிறார்கள்.  இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.). இவர்கள் கசை அடிக்கும் மரண தண்டனைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.  கிறிஸ்தவ மதத்திலும் இவர்கள் முழுவதுமாக அங்கீகரிக்கப்படவில்லை.  இவர்கள் தங்களைப் போன்றோரோடு திருமணம் செய்துகொள்வதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவே கருதப்படுகிறது.  ஏனெனில் அவர்களுடைய வேதபுத்தகமான பைபிளில் திருமணம் என்பது ஒரு பெண்ணிற்கும் ஒரு ஆணிற்கும் இடையேயான பந்தம் என்று கூறப்பட்டிருக்கிறதாம்.  அதே பைபிளில் யேசு எல்லோரையும் – ஓரின ஈர்ப்பு உள்ளவர்களையும் – தன்னுள் வரவேற்றார் என்றும்  கூறப்பட்டிருந்தாலும் அவர்கள் பாவம் செய்தவர்கள், அப்படிப் பாவம் செய்தவர்களையும் யேசு மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்ற பொருளில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் கூறிவந்தார்கள்.  பைபிள் எழுதப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது எத்தனை மடமை என்று இவர்கள் இன்னும் உணரவில்லை.

    கத்தோலிக்க மதகுருக்களுக்கெல்லாம் தலைவரான போப்பாக நான்கு ஆண்டுகளுக்கு முன் பதவியேற்ற பிரான்ஸிஸ் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களையும், அப்படி ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை மணந்துகொண்டவர்களையும் இரண்டு இனத்திலும் சேராதவர்களையும் (transgender) கத்தோலிக்க மதத்திற்குள் சேர்த்து அணைத்துக்கொள்ள வேண்டும் என்று வெகுவாக முயன்றுவருகிறார்.  இவர் முதலிலிருந்தே ஏழைகளின், வறியவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துபவராகவும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடுபவராகவும் இருந்து வருகிறார்.  கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் மதச்சார்பற்றவர்களையும் ஏன் கடவுளே இல்லை என்பவர்களையும் தான் அன்பு செலுத்தும் வட்டத்திற்குள் இவர் சேர்த்துக்கொள்கிறார்.  ஏனெனில் இவரைப் பொறுத்தவரை எல்லோரும் இறைவனின் குழந்தைகள், இறைவனின் அன்புக்கும் கருணைக்கும் பாத்திரமானவர்கள்.  ஓரின ஈர்ப்பு உள்ளவர்கள் கத்தோலிக்க மதத்தில் மதக் குருமார்களாக சேவை செய்யலாமா என்று ஒரு முறை இவரிடம் கேட்கப்பட்டபோது ‘அவர்கள் இறைவனுக்குத் தொண்டு செய்ய விரும்பினால் அதை ஏன் தடுக்க வேண்டும்?  அவர்களைப் பற்றி விமர்சிக்க நான் யார்?’ என்று கூறினார்.

    இவர் ஒரு வித்தியாசமான மதத்தலைவர்.  யாரும் செய்யத் துணியாத சில சீர்திருத்தங்களைக் கத்தோலிக்க மதத்தில் கொண்டுவர முயன்றுவருகிறார்.  மதத்தின் மூலம் அல்லாமல் சிவில் சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டவர்களுக்கு திருவிருந்து (communion) கொடுப்பது தவறு என்று இப்போதுவரை இப்படி விவாகரத்து செர்ய்துகொண்டவர்கள் மதத்தலைவர்களால் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள்.  இந்த வழக்கத்தை முதன் முறையாகத் தகர்த்து எறியப் பாடுபட்டு வருகிறார் போப் பிரான்ஸிஸ்.  இது கத்தோலிக்க மதக் கோட்பாடுகளில் முக்கியமான திருப்பம்.  ஓரின ஈர்ப்பு உள்ளவர்களையும் கத்தோலிக்க மதத்திற்குள் சேர்த்துக்கொள்ளவும் அவர்களுக்குத் திருவிருந்து கொடுக்கவும் இவர் பாடுபட்டு வருகிறார்.  இதுவரை இவர்களால் கத்தோலிக்க மதச்சடங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் திருவிருந்தில் கலந்துகொள்ள முடியாது.  இப்போது இவரால் கார்டினலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோசப் டோபின் அமெரிக்காவில் இந்த வழக்கத்தை மாற்றியிருக்கிறார்.

    ஜோசப் டோபின் அமெரிக்காவின் நியுஜெர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த நெவார்க் என்னும் ஊரின் ஆர்ச்டயோஸிஸைச் சேர்ந்தவர்.  இவர் சமீபத்தில் தன் கீழ் இயங்கிவரும் தேவாலயத்தின் கதவுகளை ஓரின ஈர்ப்பு உள்ளவர்களுக்காகத் திற்ந்துவிட்டிருக்கிறார்.  ஐந்து வருஷங்களுக்கு முன்னால் கூட இது நடக்கக் கூடிய விஷயமாகக் கருதப்படவில்லை.  இப்போது போப் பிரான்ஸிஸின் உந்துதலால் இங்கு இது நடந்திருக்கிறது.

    இதுவரை தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படாத நூறு ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை ஜோசப் டோபின் வரவேற்றிருக்கிறார்.  அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு யாத்திரை.  தேவாலயத்தின் மேடைக்கு எதிரே இரண்டு வரிசை பெஞ்சுகளுக்கு இடையே நாற்காலிகளில் இவர்கள் உட்காரவைக்கப்பட்டார்கள்.  நியுயார்க்கிலிருந்தும் அருகில்உள்ள ஐந்து மறைமாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த இந்த நூறு பேரையும் வரவேற்றுப் பேசிய டோபின், ‘இதுவரை நீங்கள் எங்கும் வரவேற்கப்படவில்லை.  உங்கள் சகோதரனாக நான் உங்களை வரவேற்கிறேன்’ என்றார்.  இவர்களுக்கு கத்தோலிக்க மதத்தைப் பொறுத்தவரை மற்றவர்களோடு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று பாடுபட்டுவரும் ஒரு இயக்கத்தின் தலைவர் ‘கத்தோலிக்க மதத்தில் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களுக்கான உரிய இடம் பற்றிச் சிந்திப்பதற்கு இது முதல் படி’ என்றார்.  2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஃப்ளோரிடா மாநிலத்தின் ஆர்லேண்டோ நகரில் உள்ள ஓரின ஈர்ப்பு உள்ளவர்களுக்கான கிளப்பில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது பல கத்தோலிக்க மதகுருமார்கள் அதை வெளிப்படையாகக் கண்டித்துப் பேசவில்லை.  1986-இல் போப்பாக இருந்த இரண்டாவது ஜான் பாலின் உதவியாளர் கார்டினல் ரேட்ஸிங்கர் (இவர்தான் இரண்டாவது ஜான் பாலிற்குப் பிறகு போப்பாக நியமிக்கப்பட்டு பதினாறாவது பெனெடிக்ட் ஆனார்) வாடிகனின் சார்பில் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை ஆதரிப்பதைக் கடுமையாக எச்சரித்து எல்லா மதகுருக்களுக்கும் கடிதம் அனுப்பினார்.  இப்போது போப் பிரான்ஸிஸ் பதவியேற்ற  பிறகு பலவித மாற்றங்கள் நடந்து வருகின்றன.

    டோபினால் வரவேற்கப்பட்ட ஓரின ஈர்ப்பு உள்ளவர்கள் இப்போது தங்கள் யாத்திரை முடிந்து தாயகம் திரும்பியிருப்ப்து போல் உணர்ந்ததாகக் கண்ணீர் சொரியக் கூறினர்.  மதத்தலைவர்கள் ‘நீங்கள் எல்லோரும் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுகிறீர்கள் என்று சொல்லி எங்களை வரவேற்றதை ஒரு பெரிய அதிசய நிகழ்ச்சியாகக் கருதுகிறோம்’ என்றனர்.  இந்தத் தேவாலயத்தில் 25 வருடங்களாக டீக்கனாக இருந்த ஒருவர், ‘இத்தனை ஆண்டுகளாக நான் இதற்காகக் காத்திருந்தேன்.  என் பெற்றோர்கள் தாங்கள் உயிரோடு இருக்கும்வரை என்னைப் போன்றோர் நரகத்திற்குத்தான் போவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்.  இப்போது ஓரின ஈர்ப்பு உள்ளவர்களுக்கு கத்தோலிக்க மதம் அளிக்கும் வரவேற்பு என்னுள் ஆழ்ந்த இன்பத்தை அளிக்கிறது’ என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

    மதம் மக்களுக்கு அளிக்க வேண்டியது இப்படிப்பட்ட இன்பம்தான்; தண்டனை அல்ல.

    பின் குறிப்பு

    நான் போப் பிரான்ஸிஸ் பற்றி எழுதியுள்ள நூல் விரைவில் அடையாளம் பதிப்பகத்தின் மூலம் வெளிவரவிருக்கிறது.

    Share