Tag: விசாலம்

  • வேண்டாம் உன் நட்பு

    விசாலம்-drinkindex

    என் இனிய சிநேகிதியே ,
    நீயா ? எனக்கு  ..இப்படி?
    உன்னை மார்பில் அணைத்தேனே !
    இனிய சுகத்தைத் தந்தாயே ,
    உதடுடன் உன்னை இணைத்தேனே!
    இனிய ரசத்தைக் கொடுத்தாயே ,
    மாலையில் சந்தித்த நான்,
    திரும்பப் பார்க்கும்  எக்கம் ,
    அடுத்தடுத்து ஏற்பட
    காலையிலும்  இணைந்தேனே ,
    உன் நட்பு எனக்கு பெரிது ,
    உன்னை நான் விரும்ப ,
    என்னை நீ விடாமல் பிடிக்க
    சுவர்க்கத்தில்  மிதந்தேன் ,
    உன்னால் பல நட்பு போனது ,
    காலால் உதைப்பட்ட மனைவி
    கர்ப்பம்  கலைந்து நின்றாள் ,
    என்னை விட்டுப் போனாள்
    பின்னும் நீதான் எனக்கு
    என்றும் துணை நின்றாய்
    சோகமா நீ கைக் கொடுத்தாய் ,
    தனிமையா, ஓடி வந்தாய் ,
    கோபமா ?என் கூட நின்றாய் ,
    சிநேகிதியாக நடித்து
    ஏன் இன்று துரோகியானாய்! ,
    நிம்மதிக் கொடுப்பதுப் போல்
    என் நிம்மதியை    கெடுத்தாயே ,

    இன்று  ஆஸ்பத்திரியில் நான்
    இது நீ கொடுத்தப் பரிசு ,
    கல்லீரலில்  புற்று நோய்
    இதோ உன்னைத் தூக்கி எறிகின்றேன் ,
    வேண்டாம் உன் சகவாசம் ,
    நட்பாக நடித்து
    என் உயிருகே உலையா?
    ஏ மதுப்புட்டியே, விஸ்கியே
    ஒழிந்து போ !
    இன்னும்  சிறிது காலம் தான் வாழ்வு
    உன்னால் வந்தது இந்தத் தாழ்வு
    கண்கெட்டப்பின்  சூரிய நம்ஸ்காரம்
    இனி  உன் திக்கிற்கும் ஒரு நமஸ்காரம்

    பின் குறிப்பு   புற்றுநோயினால் உயிருக்கு மனறாடும் ஒருவரைப்பற்றி
    என் தோழி சொல்ல அதனால் எழுதப்பட்டது இந்தக்கவிதை என் இனிய சிநேகிதியே ,

     

    படத்துக்கு நன்றி
    Share
  • The light of Arunachala english poem

    விசாலம்annamaimages
    There the sun with valor and brightness,
    Experienced the death at the age of seventeen .
    Overcame the death and the victory was seen ,
    Researching what is “I”and asking “who am i”?
    got enlightened ascending very high ,
    Discarding the studies deeply gone into meditation ,,
    Thou were in the cave  for further realization ,
    Threw away all  had  only the cloth of loin .
    with only thought of athma and paramathma to join
    The bliss from Arunachala kept on blowing .
    “Atman reveals itself” the theme started flowing ‘
    The name Venkatraman became ” Maharishi  Ramana”
    Thou are the embodiment  of suguna ,
    The lord Arunachala’s call made the body fall ,
    On the auspicious Good friday it was the jyothi”s call,
    Arose the magnificent  light flashed and moved up
    Mingling with Arunachala towards the North up.
    Aham Bramhasmi  was shining up to the brim .
    In his teaching and principles  let us all swim .
    Asato ma satgamaya
    Tamaso ma jyothir gamaya
    Mrithyorma amritham gamaya ,
    OM SANTHI SHANTHI SHANTHI :
    Share
  • கோயில்கள்!…

    விசாலம்

    இந்தியா  முழுவதும்  நூற்றுக்கணக்கான கோயில்கள் பல வருடங்கள் முன்பாகவே கட்டப்பட்டு மிகவும்  புகழ் பெற்ற கோயில்களாக இன்றும்  திகழுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் மிகநுட்பமான கலை வேலைப்பாடுகள் சிறந்திருக்க, கோயிலுள்ளே நுழைந்தாலே ஆன்மீகச்சூழ்நிலையுடன் நற்றலைகள் உருவாவது நமக்குத் தெரிய  வருகிறது. சில கோயில்களில் அந்தக்கோயிலைப்பற்றி கல்வெட்டுகள் காணப்படுவதால் அந்தக்கோயிலைப்பற்றிய  பல விவரங்கள் தெரியவருகின்றன.

    கும்பகோணம் ராமஸ்வாமி கோயில்,  அழகர் கோயில்  இவைகளில் நான் நாயக்கர் காலத்து  சிற்பங்களைக் கண்டிருக்கிறேன்.

    குகைகளைக்குடைந்து  உள்ளே கருங்கல் பாறையில்  சித்திரங்களை வடித்தவர்கள் பல்லவர்கள் .   மஹாபலிபுரம் , சித்தண்ண வாசல், நாமக்கல்  ,திருப்பரங்குன்றம்  போன்ற இடங்களில் இதைப்போல் காணலாம்

    பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், பசுபதிநாத் போன்ற கோயில்களின் அமைப்பு கிட்டத்தட்ட  கேரள கோயில்களின் அமைப்பை ஒத்து இருக்கிறது .

    கர்நாடகத்தில்  ஹம்பி என்ற இடத்திற்குப்போனால் மிகச்சிறிய சிற்பங்களைக்காணலாம். வடநாட்டில்  புஷ்கர்,  ஓம்காரேஷ்வர் மந்திர்  கர்நாடகக்கோயிலை ஒத்து  இருக்கின்றன. கர்நாடகச்சிற்பிகள் அங்குப்போய்  இந்தக்கோயில்களை அமைக்கும் வாய்ப்பு பெற்றிருக்க  வேண்டும் .

    கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில்  டங்கணாசர்யன் என்ற சில்பி  ஆதிகேசவப்பெருமாள் கோயிலைக்கட்டினார் . பேளூர் என்ற இடத்தில் இந்தகோயில் இருக்கிறது .இதன் நுண்ணிய சிற்பங்களின் அழகை வர்ணிக்க முடியாது ,

    போஜ வம்சத்து மன்னர்கள்,   ஹோஸலே மன்னர்கள் என்றும்  அழைக்கப்பட்டு வந்தார்கள் இவர்கள் கர்நாடகத்தை ஆண்டுவந்தார்கள் மைசூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தார்கள்  ஆதிகேசபப்பெருமாள் கோயிலைக்கட்டியவர்,  இந்த ஆட்சியில் இருந்த சிற்பிதான்

    சென்னையில்  திருவல்லிக்கேணி ஶ்ரீபார்த்தசாரதி கோயிலைக்கட்டியவர் திரு தொண்டைமான் என்ற  மன்னன் திருவரங்கம் பெரிய கோயில் முதலில்  அகளங்க சோழனாலும்   பின்  ராஜமஹேந்த்ரசோழனாலும்  பின்  திருமங்கை மன்னனாலும் திருப்பணிகள்  செய்யப்பட்டு கோபுரம் மிக உயர்ந்து யாவரையும்  ஈர்த்தன .

     சுசீந்தரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ,திருப்புல்லாணி போன்ற  கோயில்கள்  நமக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்துகின்றன.   பாண்டிய மன்னர்கள் இவைகளைச் சிறந்த கலை நுணுக்கத்துடன்  கட்டியிருப்பது நமக்கு  மிகப்பெருமையளிக்கிறது.

    வடநாட்டில் மதுரா மிகச் சிறந்த புண்ணியஸ்தலமாகி கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது . ஶ்ரீவல்லபாசார்யா சம்பிரதாயத்து வைஷ்ணவர்கள் கட்டிய துவாரகாநாத் மந்திர் மிகவும்  பழமை வாய்ந்தது

    பல தடவைகள் முஸ்லீம்களால்   தகர்க்கப்பட்ட கோயில் சோம்நாத்மந்திர் ,ஔரங்கசீப்பினால் உடைக்கப்பட்ட  கண்ணன் பிறந்த ஊரிலிலுள்ள  ஆதிகேசவ மந்திர்  போன்றவைகள் அழிய இருந்தன. அந்த இடத்தில்  மசூதியும் கட்டப்பட்டது .

    ஆனாலும் பின்னால் பிர்லா என்ற செல்வந்தர் உதவியினாலும்  மதன் மோஹன் மாலவியாவின்  பிரேரணையினாலும்   அழகான கிருஷ்ணன் கோயிலை நாம் இன்று காணமுடிகிறது .

    ராஜஸ்தானில்  பிரதாப்சிம்ஹ ராணா கட்டிய  சாரதா தேவி மந்திர் பர்சானா என்ற இடத்தில்  மிகவும்  பெயர் பெற்றது

    வடநாட்டில் பல கோயில்கள் மஹாபாரதத்தைச்  சேர்ந்ததாகவும்  சில  ராமாயணத்தைச்சேர்ந்ததாகவும்   இருக்கின்றன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வோரு பெருமைப்பெற்று விளங்குகிறது இதையெல்லாம் பார்த்தால் நாம்   இந்தப்பாரதத்தில்  ஜன்மம் எடுக்க  எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும் இல்லையா?

    Share
  • 2014 வருக….

    விசாலம்    2new yearimages

    “யார் அஙகே?  நுழைகிறாய் ?
    யாருக்கும் அஞ்சாமல்   நுழைந்தும் விட்டாயா?
    பார்க்க அழகாகத்தான் இருப்பாய்.
    பார்க்க முடியவில்லையே உன்னை
    இனி .புரிந்து விட்டது எனக்கு
    இனிய புத்தாணடு நீதானோ ?
    ,நீதான்” இரண்டாயிரத்து பதினாலோ?”
    நீ வர என் வயது குறைகிறதே!

    “நான் தான்  காலதேவன்
    காலம் என் கையில் .
    ஒருவருக்கும் நிற்பதில்லை
    ஒருவர்  சொல்லையும் கேட்பதில்லை
    ஓயாமல் கடமையைச் செய்கிறேன்
    ஒடிக்கொண்டே இருக்கிறேன் ,
    எத்தனை விடிவுகள்
    எத்தனை வீழ்ச்சிகள்.
    எத்தனை மலர்ச்சி
    எத்தனை  இகழ்ச்சி ”

    ” இனிய வரவேற்பு , காலதேவா,
    இந்த  வருட கணிப்பு என்னவோ?
    என் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சி
    எத்தனை சாம்ராஜ்ய கனவுகள் !
    என் கனவுகள் நினைவாகுமா?
    என் உழைப்புக்கு பலன் கிட்டுமா?.
    மழைப்பொழிய காட்டு கருணை
    மாநிலங்களில் நிரப்பு மகிழ்ச்சி
    பசுமை விரிப்பில்  என் மகிழ்ச்சி
    பஞ்சம் நீக்கி வளமாக்கு நாட்டை.
    கொடுப்பாயா எங்கும் சுகம்
    கொட்டுவாயா எங்கும் இன்பம்  ?”

    “இன்பம் அளிக்கவே வந்துள்ளேன் .
    இதை  துன்பம் ஆக்குவது நீங்களே!
    எங்கும்  இயற்கையின் எதிர்ப்பு
    எங்கும் மரங்களின் ஒழிப்பு
    பல காடுகளின்  அழிவு
    பிராணவாயு முறிவு
    எங்கும் கான்கிரீட் கட்டடங்கள்.
    எட்டி ஆகாயம் வரை எழுப்ப
    அங்கே மாரி எப்படி பெய்யும் ?
    அங்கே  பசுமை எப்படி அமையும் ?”

    2014  காலதேவனே
    மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க
    மங்கலப்பொங்கலில்  அனைவரும் களிக்க
    பஞ்சபூதங்களுடன் கலந்த நீ
    பாரினில் முக்காலங்களில் தவழும் நீ
    எங்களைப் பூரிக்க வைப்பாயா?”
    எங்கள் உடல் நலம் காப்பயா?

    “சந்தோஷம் என்பது உங்கள் கையில்
    சற்றே  இன்று  சிந்தியுங்கள்
    இன்பம் துன்பம்  உங்கள் மனதில்
    இனி வேண்டாம் இந்த மதபேதம்
    பழிக்குப்பழி   அகலட்டும்
    பட்டென்று அகற்றுங்கள் சாதி வெறி
    அருமையான போதனைகள் கண்டு
    அன்பின் வழி நடப்பதுவே   முறை
    இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கைக் கரும்பு
    மனித நேயம் வளர ,மலரும் அங்கு  அரும்பு ”

    படத்துக்கு நன்றி

    http://www.hdwallpapersinn.com/happy-new-year-2014-cards.html

    Share
  • சக்தியை சேமிப்போம்!…

    விசாலம்

     

    டிசம்பர் 14 சக்தியைச் சேமிக்கும் நாள் energy conservation day.இந்த நாள் BEE என்ற {“Bereau of energy efficiency } என்ற அமைப்பு மக்களுக்கு விழிப்புணர்வைத் தர முழித்துக்கொள்கிறது. இந்த அமைப்பு 2001லிருந்து செயல்படுகிறது .பள்ளியில் இந்த நாள் வந்தால் ஆசிரியர்களுக்கு இரட்டிப்பு வேலை. மத்திய அரசின் வழியாக சில போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வைக்க வேண்டும் அதாவது எப்படி எனர்ஜியை மீத்து வருக்காலத்திற்கு சேமிக்க வேண்டும் என்ற கருத்தில் போட்டிகள் தொடங்கும். இதில் கட்டுரைப்போட்டியும் ,சித்திரப்போட்டியும் நிச்சியம் இருக்கும். இதில் ஜெயிப்பவர்களுக்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ரூ 33000 ஒதுக்கப்பட்டிருக்கும். பரிசுமுடிவுகள் வெளிவந்தவுடன் நேஷனல் எனர்ஜி கன்வெர்ஸேஷன் டே அன்று விழாப்போல் கொண்டாடுவார்கள்.விழாத்தலைவர் பரிசுகளை வழங்குவார்.

    இந்த நாளை நாம் மிக முக்கியமான நாளாகக்கொண்டு நம்மால் முடியும் வரை சக்தியைச் சேமிக்க வேண்டும் இந்த பூமியிலேயே நமக்குத் தேவையான சக்திகள் அனைத்தும் உள்ளன நீர்மின்சக்தி அணுமின்சக்தி என அனைத்தையும் உருவாக்கியது மனித ஆற்றல் என்ற சக்திதான், இதைச்சேமிக்க ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவரை முயல வேண்டும். இல்லத்தரசிகள் கேஸ் அடுப்பை தேவைக்கு அதிகமாக உபயோகிக்காமல் சேமிக்கலாம் சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு டிவி கீழ் அமர்ந்த விடுவார்கள் அது கொதித்து பாதி ஆனவுடன் பின் வந்து அணைப்பார்கள் சிலர் தோசை வார்க்கும் தவாவை பெரிய அளவில் வைத்து அதில் சிறிய தோசை வார்ப்பார்கள், சின்ன தவா வைத்தாலே தேவையான் சூடு பரவும் ,பெரிய குடும்பமானாலும் சிறிய குடும்பமானாலும் சாப்பாட்டிற்கு என்று ஒரு நேரம் ஒதுக்க ஒரே நேரத்தில் எல்லோருக்கும் சுடச்சுட பரிமாறமுடியும் அது இல்லாமல் நினைத்த நேரத்தில் தன் இஷ்டப்படி வந்து சாப்பிடும் பொருளை மறுபடியும் சுட வைக்க எனர்ஜி அங்கு வீணாகும். தவிர அதில் காய்களின் ஊட்டச்சக்தியும் குறையும்.

    இல்லறத் தலைவிகள் தன் காரியமே கண்ணாயினார் என்பதுக்கொப்ப வேலை செய்தால் எரி பொருள் வீணாவதைத் த்டுக்கலாம் அடுத்ததாக மொபைலில் பேசிக்கொண்டே இருக்க அடுப்பை அணைத்தோமா இல்லையா என்ற சந்தேகம் வந்து அங்கும் எரி பொருள் வீணாகும். பர்னரின் அளவு இருந்தால் நன்றாக இந்தச் சக்தியைச் சேமிக்கலாம்,இனி ஆண்கள் ராஜ்ஜியத்திற்கு வருவோம். சில ஆண்கள் ஷேவிங் செய்த்துக்கொள்ள குழாயைத் திறந்து விட்டபடி தங்கள் வேலையைத் தொடருவார்கள் ,அத்துடன் செல்லிலும் பேசுவார்கள். ஐயோ பரிதாபம் தண்ணீர் கீழே கொட்டியபடி இருக்கும் .இதே போல் பலதடவைகள் குழாய் திறந்து விட்டபடி வந்து செல்லில் பேச்சு தொடங்கி விடும் . பக்கெட் ரொம்பி வழிந்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று விழித்துக்கொள்வார்கள். “ஐயோ குழாயை மூடவேல்லையே .நல்ல வேளை இப்பவாவது ஞாபகம் வந்துதே .இல்லாவிட்டால் இந்த முசுடு வீட்டுக்காரன் என்னைப்பின்னி எடுத்துடுவான் “என்று தன் தவறை உணராமல் பேசுவதைக் கண்டிருக்கிறேன் சிலர் மேலே தண்ணீர் ஏற மோட்டார் போட்டு விட்டு பின் அந்த டேங்க் ரொம்பி வழிந்து கீழே கொட்ட பின் முழித்துக்கொள்வார்கள்.

    வீட்டுக்குழந்தைகளோ எல்லா அறையிலும் சுழலும் விசிறியைப் போட்டு விட்டு அதை அணைக்காமல் வெளியே சென்றுவிடுவார்கள் .ஒரு அறையை விட்டு வெளியே வரும்போது லைட் . ஏசி எல்லாம் அணைத்துவிட்டு வரும் வழக்கத்தை பெற்றோர்கள் தவறாமல் கற்றுக்கொடுக்க வேண்டும் .அதே போல் கணினியையும் அணைத்துவிட்டு வர பழக்கப்படுத்த வேண்டும் அரசை சார்ந்தவர்களும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை நான் கண்டிருக்கிறேன் .சில தெருல் பகலிலும் விளக்கு எரியும் ,,அதை அணைக்க மறந்து இருக்கலாம், இதே போல் ஆபீஸில் மனிதர்கள் இல்லாத அறையிலும் சுழல் காற்றாடி சுழன்றுக்கொண்டிருக்கும் ,கணினியோ கேட்கவே வேண்டாம் அதை சிலர் அணைப்பதே இல்லை. மைக்ரோஅவனில் தேவையான அளவுடன் கண்ணாடி பாத்திரம் வைக்க நிறைய சக்தி சேமிக்கலாம் , வீட்டு வாசலில் மரங்கள் இருந்தால் நல்ல காற்று வருவதால் மினசாரச் சக்தி சேமிக்கலாம்.

    தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் விதம் மிக வியப்பைத் தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும் மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம். உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி போட்டாற் போல் இருக்கிறது இது நல்ல வெயில் காலத்திலும் தான். எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி. இந்த வெளி சக்தியைச் சேமிக்கும் போது எனக்கொன்று தோன்றுகிறது .ஏன் நாம் நம்மிடம் இருக்கும் சக்தியையும் சேமிக்கக்கூடாது? படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை இழக்கிறோம் .அளவு கடந்த மோகத்திலும் அல்லது காமத்திலும் சக்தி விரயமாகிறது நம் உடலில் இருக்கும் சக்தியை விரயமாக்காமல் தக்க வைத்துக்கொள்ள அங்கு நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது, மௌனத்தில் தியானம் சீக்கரம் பலன் தருகிறது “.மௌனகுருவே நடராஜா நீலகண்டனே ” என்று அந்த ஞானகுரு தக்ஷிணாமூர்த்தியைத் தியானிப்போம்

    ஜே.வி செர்னே சொல்கிறார்

    ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற வார்த்தைகள்
    வாகனங்களாக உள்ளன . “செய்து முடிப்பேன்” என்ற வாகனத்தில்
    ஏறிக்கொண்டால் அடக்கமுடியாத ஆர்வத்துடன் கூர்ந்து செயல்
    வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம் வானத்தைத் தொட்டுவிடலாம்

    சக்தியைச்சேமிப்போம்!…

    Share
  • மல்லாரி!…

    விசாலம்

     

    கலி யுகத்தில் மிகவும் எளிதாக உள்ளொளியை அதாவது நமக்குள்ளே இருக்கும் கடவுளை உணர வைக்கும் சக்தி இசைக்கு இருக்கிறது. கோடிக்கோடியாக ஜபம் செய்யவேண்டியதில்லை. பல ஆயிரங்கள் சிலவு செய்து ஹோமம் வளர்த்து பூஜை செய்தால் எத்தனைப்பலன்கள் கிடைக்குமோ அவை நெஞ்சுருகி பாடி அந்த இறைவனுக்கே எல்லாம் சமர்ப்பித்தால் கிடைத்துவிடும் .தவிர இறைவனது தரிசனமும் கிடைத்து அவர் அருளுக்கும் பாத்திரமாகி விடுவீர்கள் இசையில் மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாகராஜர் . ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதர், ,திரு சியாமா சாஸ்திரி மூவருமே தங்கள் இசையினாலேயே தங்கள் இஷ்ட தெய்வங்களைத்தரிசித்தனர், இறைவனுக்கு அருளும் அறுபத்தினாலு உபசாரங்களில் இசையும் ஒன்று .இதனால் தான் இன்றும் கோயில் மண்டபங்களில் இசையும், நாட்டியமும் நடைப்பெறுகிறது.இறைவன்,இறைவிக்கென்று இது நடக்கும் போது டிக்கட் ஒன்றும் வைப்பதில்லை, எல்லோரும் போய் ஆனந்தம் பெறலாம் ஆகம சாஸ்திரத்தில் கோயிலில் இன்ன ராகம் இந்தந்த வேளையில் பாட வேண்டும் என்றும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது .கோயில் பிரகாரம் மிகப்பெரிதாக அமைந்துவிடுவதால் அங்கு வாய்ப்பாட்டைவிட நாதசுரம் தான் சோபிக்கும் .நாதசுரத்தின் ஒலி வெகு தூரம் போய் ரீங்காரம் செய்யும் தன்மை கொண்டிருப்பதால், கோயில்களில் நாதசுரத்தையே அதிகமாக நாம் பார்க்கிறோம் .அதற்கேத்தாற்போல் தவிலும் சத்தமும் அதற்கேத்த ஜோடிதான் கோயில்களில் காலை ஐந்திலிருந்து ஆறு வரை நாதசுரவித்துவான் பூபாள ராகம் .மலயமாருதம் அல்லது பௌளி ராகம் வாசிப்பார்கள்.

    இந்த ராகங்களில் சுத்த ரிஷபம், சுத்த தைவதம் இருப்பதால் மனதைக்கொள்ளைக்கொண்டுச்செல்லும் பாவம் இவைகளில் இருக்கும் .சுவாமி துயில் நீங்கி கண்விழிக்கும்போது “திருப்பள்ளி எழுச்சி” பாடும் வழக்கம் உண்டு .அவை அநேகமாக பூபாளத்தில் இருக்கும் காலை எட்டு மணியிலிருந்து ராகங்கள் தன்யாசி , சாவேரி .,அசாவேரி. வாசிக்கும் வழக்கம் இருக்கிறது .பத்து மணி சுமாருக்கு ராகங்கள் சுருட்டி. அல்லது மணிரங்கு ரொம்ப வியாபகமாக வெளிவரும். ஒவ்வொரு புகழப்பெற்ற ஸ்தலங்களிலும், கோயில்களிலும் நான் போகும் போது இவைகளை கவனிப்பேன் 12 மணிக்கு கோயில் மூடிவிடும். பின் மாலை ஐந்து மணிக்கு நாதசுர வித்துவான் காம்போஜியும். சங்கராபரணமும் பிச்சுதறுவார்கள். இரவு சயனாசனத்தின் போது ராகம் நிலாம்பரியோ அல்லது ஆனந்தபைரவியோ நம்மை மறக்கச்செய்யும் ,நம் முன்னோர்கள் காலையிலிருந்து இந்த ராகங்களைக்கேட்டு மணி சுமார் எவ்வளவு இருக்கும் என தீர்மானிப்பார்கள் என்று என் தந்தை என்னிடம் கூறியிருக்கிறார்.

    ஒவ்வொரு நாளும் ஒரு ராகம் கண்டிப்பாக மாறாமல் வந்து விடும். அதுதான் கம்பீர நாட்டை இந்த ராகத்தில் வாசிக்கும் தனிப்பட்ட நடை தான் “மல்லாரி ” மல்லாரி பலவிதமாக வரும் அவை தீர்த்தமல்லாரி, தளிகை மல்லாரி, கும்பமல்லாரி, புறப்பாடு மல்லாரி,தேர் மல்லாரி இவைகளின் பெயர்களிலிருந்தே இவைகள் எப்போது வாசிக்கபடும் என்று யோசிக்க முடிகிறது.

    இறைவன் அல்லது இறைவிக்கு அபிஷேகம் செய்ய குடத்துடன் ஒரு நதியோ அல்லது குளத்திற்கோ சென்று நீர் எடுத்து வருவார்கள் .அப்போது வாசிப்பது தீர்த்த மல்லாரி.

    சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் போது வாசிப்பது தளிகை மல்லாரி .சுவாமியை வரவேற்க பூர்ணகும்பத்துடன் வேதங்கள் ஓதி எதிர்க்கொண்டு அழைப்பார்கள் அந்த நேரம் வாசிப்பது கும்ப மல்லாரி. சுவாமி வீதி ஊர்வலம் வர கோயிலை விட்டுக்கிளம்புவார் அப்போது வாசிக்கும் மல்லாரி பறப்பாடு மல்லாரி.

    பிரம்மோத்ஸவ நாட்களில் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் விதவிதமான அலங்காரங்களுடன். விதவிதமான வாகனங்களில் வீதி வலம் வருவார் இறைவன் தேர் மிக பெரிதாக இருக்கும் ஆதலால் அது கோயில் வெளியிலே தான் நின்றுகொண்டிருக்கும், இறைவன், இறைவி தனக்கென்று அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்தபடி வெளிவந்து பின் அந்தத்தேரில் அமர்த்தப்படுவார்கள்.ஆஹா அப்போது கேட்கவேண்டுமே அந்த மல்லாரியை. முதல் காலத்தில் மெள்ள ஆரம்பித்து பின் மூன்று காலங்களிலும் ஜமாய்த்துவிடுவார்கள் நாதசுர வித்துவான்கள். மல்லாரி அதிகமாக துருவதாளம், திருபுடை தாளம் மட்யதாளமாக இருக்கும் .இதில் மூன்று காலங்கள் வாசித்து பின் திஸ்ர நடைக்கும் கொண்டுவருவார்கள்.ஆஹா அப்படியே குதிரை “டக் டக்கென்று ‘போவது போல் இருக்கும் .மல்லாரி எப்போதுமே வாத்தியங்களுக்குத்தான் எடுபடும் இந்த மல்லாரியில் பாட்டு அதிகமாக கிடையாது .ஒரே ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன், சரியாக ஞாபகமில்லை

    “ஆயாத்தி ராஜகோபாலா
    அகிலலோக பரிபாலா
    ராஜ ராஜாத்தி ராஜ வ்ரஜ ராஜ மது வ்ருஷ்ணி போஜ சூர குலராஜா
    ஸார ஸாயத விலோசனா பவபய நிரோத விலோசனா மந்த ஹாஸ {ஆயாதி}

    இது ஊத்துக்காடு இயற்றியது போல் தோன்றுகிறது.

    இந்த தேர் புறப்பாடும் மல்லாரி ராகமும் நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி அம்மன் கோயிலிலும், மன்னார்குடி ராஜகோபால சன்னதியிலும் நாதசுர சக்கரவர்த்தி திரு டி ஆர் ராஜரத்தினம் இரவு 11 வரை வாசித்ததை என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை என் காதிலிலேயே ஒலிக்கிறது

    Share
  • விபூதியின் மகிமை!…

    விசாலம்

    சூட்டும் டையும்மாக மிகவும் மிடுக்குடன் ஏரோப்பிளேனில் ஏறினார் கானடா நாட்டைச்சேர்ந்த பெரிய தொழிலதிபதி மிஸ்டர் பாட்டர்ஸன் .தன் தொழில் விஷயமாக இந்தியாவுக்கு பயணம் . இந்தியாவில் டாக்டர் பாலகிருஷ்ணாவை சந்தித்து அவர் அன்புடன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர் இல்லத்திற்கு வருகை தந்தார் .அவரை மிக அன்புடன் தனது வரவேற்பு அறைக்கு டாக்டர் பாலகிருஷ்ணா அழைத்துப் போக மிஸ்டர் பாட்டர்ஸன் பிரமித்தபடியே தன் புருவத்தை மேலே தூக்கியபடி தன்னை மறந்து நின்றார். அந்த அறை முழுவதும் ஒரு விதமான தெய்வீக மணம் வீச ஏதோ ஒரு கோயிலுக்கு நுழைந்த மாதிரியான உணர்வு . விடே கோயில் போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது உள்ளே ஒரு தனி அறையில் ஒரு அழகிய சிம்மாசனம் இருக்க அதன் மேல்சுவாமியின் அழகிய படம் வைக்கப்பட்டிருந்தது நான் சொல்லும் சுவாமி “பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபா” அவர்கள் தான் . அவர் தன் இரு கைகளைத் தூக்கியபடி ஆசிகள் வழங்கிக்கொண்டிருந்தார் சுருண்ட முடியுடன் “புஸு புஸு என்ற தலையையும் பார்த்து கானடா அதிபர் வியந்து “இவர் யாரப்பா? என் மனதை அப்படியே அவர் பக்கம் இழுக்கிறார். அந்தப்படத்தைப்பார்த்துக் கொண்டே இருக்கும்படி தோன்றுகிறதே”, இவர் தான் பாபா புட்டப்பர்த்தியில் இருந்து கொண்டு பல நற்காரியங்களைச் செய்து வருகிறார்,அசாத்யமான காரியம் கூட அவரிடம் வர சாத்தியமாகி விடும்.அன்பின் மறு உருவம், சத்ய, தர்ம சாந்தி, பிரேமை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர். பல கோடி மனிதர்களுக்கு வழிக்காட்டியாக இருந்து வருபவர். என்று ஆரம்பித்து அவரது பிறப்பு. அவரது தெய்வீக ஆற்றல். அவரது அன்பு என்று அவரைப்பற்றி மிக ஆர்வமாக கூறி முடித்தார். மிஸ்டர் பாட்டர்ஸன் தன்னை மறந்தார்.

    டாக்டர் பாலகிருஷ்ணா தேங்க் யூ. இந்த மகானின் ஞாபகமாக எனக்கு ஏதாவது கொடுக்கமுடியுமா?” என்னிடம் தற்சமயம் சிறிய படம் ஒன்றுமில்லை. ஆனால் அவரது விபூதியைத் தருகிறேன் ”
    வாட்? வாட் விபூட்டி? வாட் ஈஸ் தாட்? டாக்டரோ பாட்டர் சன்னுக்கு கொடுக்க தகுதியானது விபூதிதான் என்று நினைத்து விபூதி இருக்கும் சிறு பாக்கட்டை அவரிடம் அளித்தார் .அவரும் அதை மெள்ள திறந்து பார்த்தார்.
    வாட் டாக்டர் .? இது என்ன ஆஷ் ? சாம்பலை ஏன் தருகிறாய்? இந்தப்படத்தில் இருப்பவர் பெரிய மகான் என்று சொல்லிவிட்டு சாம்பலை அவர் ஞாபகமாக தருகிறாயே!”
    மை டியர் பிரண்ட்.இது வெறும் சாம்பல் இல்லை. விலை மதிக்க முடியாத தெய்வீக விபூதி .எந்த இடைஞ்சல் வந்தாலும் அதிலிருந்து காப்பாற்றிவிடும் .முழு நம்பிக்கையுடன் இதை வாயில் போட்டுக்கொண்டாலும் ,நெற்றியில் தரித்து பிரார்த்தனை செய்தாலும் அந்த இடைஞ்சல் மறைந்து விடும் “அப்படியா ? இது அத்தனை உசத்தியா ?’என்றபடி தன் கோட்டு பாக்கட்டில் அதை நுழைத்துக்கொண்டார் . இந்தியாவில் வேலை முடித்துக்கொண்டு திரும்பவும் லண்டன் வழியாக நியூயார்க் போக தயாரானார். ஏர்போர்ட்டுக்கு வந்து பிளேனிலும் அமர்ந்தாகிவிட்டது. அவருக்கு கிடைத்த இடமோ பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நடுவில் அமரும் நிலைமை .நிம்மதியாக சத்தமில்லாமல் சாய்ந்து படுக்கவும் முடியவில்லை.குழந்தைகள் போட்ட கும்மாளத்தில் அவருக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. பெண்களாலும் பல அசௌகரியங்கள் ஏற்பட்டது. “எப்படாப்பா நல்ல சீட்டில் அமருவோம்” என்று எண்ணும் போது டாக்டர் பாலகிருஷ்ணா கொடுத்த விபூதி பாக்கட் ஞாபகம் வந்தது.அதன் மகிமையைப் பரீட்சித்து பார்க்க நல்ல சமயம் என்று நினைத்து தன் பாக்கட்டிலிருந்து அந்த வீபூதியை எடுத்து ஒரு சிட்டிகை தன் வாயில் போட்டுக்கொண்டார். பின் பிரார்த்தனையும் செய்தார் . “ஓ பாபா நியூயார்க் பயணமாவது எனக்கு நன்றாக அமைய வேண்டும்.வசதியான ஸீட் கிடைக்க வேண்டும். “ஓ சத்ய சாயி பாபா ஹெல்ப் மீ” லண்டனில் பிளேன் வந்து இறங்கியது. அப்போது ஒலிபெருக்கியில் “மிஸ்டர் பாட்டர்ஸன் பிளீஸ் கம் டு த் ஆபீஸ் அண்ட் மீட் அஸ் இமீடியட்லி ” என்ற குரல் கேட்டு வியப்படைந்து அவசர அவசரமாக அங்கு சென்றார். ஒரு பெண்மணி அவரிடம் “இந்தாருங்கள் உங்களுக்கு முதல் வகுப்பில் நியூயார்க் பயணத்திற்கு ஒரு இருக்கை.” என்றபடி ஒரு டிக்கட்டை நீட்டினாள். “தாங்க் யூ “என்றபடி அதிகபடியான தொகையை அடைக்க சில டாலரை நீட்டினார். அதற்கு அங்குள்ள அதிகாரி “நோ நோ நோ” இதற்கு தேவையான அதிக கட்டணம் உங்கள் பெயரில் கட்டப்பட்டு விட்டது என்றார். மிஸ்டர் பாட்டர்ஸன் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். “பாபா விபூதிக்கு இத்தனை பவரா?பாபாவின் அன்புதான் என்ன! பாபாவின் கருணைதான் என்ன! பல மைல்களுக்கப்பால் இருந்தபடியே என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து என் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டார். கொஞ்சம் நம்பிக்கையுடன் வீபூதி வாயில் போட்டுக்கொண்ட பலன் இது, என்று நெஞ்சம் நெகிழ பலருக்கு இந்தச்சம்பவத்தை எடுத்துக்கூறினார்.

    “பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
    பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
    பரமார்த்த இஷ்டார்த்த மோட்ச பிரதாதம்
    பாபா விபூதிம் இதம் ஆஸ்ரயாமி”

    பாபா பஜன் முடிந்தவுடன் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பின் விபூதி பிரசாதம் வழங்கப்படும். இந்த விபூதி புனிதமானது.வியாதியைப் போக்க வல்லது. பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும். பக்தர்கள் அற்புதமான இதை தினமும் பயன்படுத்த வேண்டும்.

    Share
  • கொலு 2015

    விசாலம்

    அந்தக்கால கொலுவுக்கும் இந்தக்கால கொலுவுக்கும் நிறைய வித்தியாசங்களை நான் பார்க்கிறேன் அந்தக்காலத்தில் கொலு படிகள் மூளையை உபயோகித்து அமைக்கப்பட்டன. இந்தக்காலத்தில் கொலு வைக்க ரெடிமேடாக எல்லா அளவுகளிலும் படிகள் வாங்கமுடியும் .இதை கொலு ஆனப்பின் புத்தக அலமாரிப்போல் உபயோகித்தும் கொள்ளலாம் அந்தக்கால கொலுவில் அதிக சிரத்தை ,பக்தி இருந்தது.இந்தக்காலத்தில் பக்தியை விட புகழுக்கு ஆசை, தற்பெருமை போன்றவை முக்கியத்துவம் பெருகிறது இதற்கு விதிவிலக்கு இருக்கலாம் .அந்தக்காலத்தில் கல்லுரல் ,அம்மி குழவி தவிர பிரசாதம் செய்ய வேறு உதவியில்லை.இக்காலத்திலேயோ பலவிதமான் மிக்ஸி ,அல்லது ரெடிமேட் மாவு ,விற்கப்பட்டு வேலைபளுவை மிகவும் குறைக்கிறது, அந்தக்காலத்தில் கொலு மூலம் பல உறவினர்கள் கூடும் வாய்ப்பும் தினமும் மஞ்சள் குங்குமம் கொடுக்கும் பாக்கியமும் வீட்டுத்தலைவிக்கு கிடைத்தது.உறவினர்களின் இணைப்பால் குடும்பம் மேலும் வலிமை பெற்றது ,இதனால் வளரும் சிறுமிகளுக்கும் நம் கலாச்சாரம் தெரிய வந்து அதில் அவர்கள் ஈடுபட்டு கலாசாரமும் வளர்ந்தது. இப்போதோ பத்து நாட்களில் தமக்கு சௌகரியமான நாளை தேர்ந்தெடுத்து அன்று மட்டும் மஞ்சள் குங்குமம் கொடுக்க அநதப்பெண்மணியின் பங்கு முடிந்து விடுகிறது .இதனால் வருங்கால சந்ததிக்கு மாமா பெண் ,அத்தை பெண் குடும்பம் கூட தூரமாகி போய் விட்டது .அந்தக்காலத்தில் ஆபீஸ் போகும் பிரச்சனை மிகக்குறைவு .ஆனால் இந்தக்காலத்தில் ஒவ்வொரு நபரும் வெளியில் உத்தியோகம் பார்க்கின்றனர் .இதனால் இது போல் பத்து நாட்கள் பண்டிகை ஒரு பாரமாக அமைந்து ஏனோதானோவென்று அநத் திருநாள் முடிக்கப்படுகின்றது. உடலிலும் உள்ளத்திலும் ஒரு சலிப்பு தட்டுகிறது .தவிர அந்தக்காலத்தில் பணம் குறைவாக இருந்தாலும் மனநிறைவு அதிகமாக இருந்தது . இந்தக்காலத்தில் எத்தனை சம்பாதித்தாலும் போதவில்லை. ஏனென்றால் நிறைந்த மனம் இல்லாமல் பேராசை அதிக பங்கு வகிக்கிறது .இதனாலே பூக்காரி கூட இது போன்ற நாட்களில் மல்லிகை முழம் முப்பது ரூபாய் என்று விற்கின்றனர் அந்தக்காலத்தில் பண்டிகைகேற்ப உடையைக்காண ஒரு தெய்வீக உணர்வு ஏற்பட்டது .இந்தக்காலத்தில் சிலரைப்பார்க்க ஒரு பேஷன் பரேட் பார்க்கும் பிரமை ஏற்படுகிறது .சிலர் தன் தோற்றத்திற்கு பொருந்துகிறதா என்று கூட பார்க்காமல் தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள்.சரி இப்போது 2015ல் கொலுவைப்பற்றிய ஒரு கற்பனை

    காட்சி ஒன்று

    மூன்று தலைமுறை கொண்ட ஒரு குடும்பம்.பாட்டி ராஜம்மா ,மருமகள் ராஜி , பேத்தி லலிதா .கொலு சமீபிக்கும் நேரம் ,பாட்டிரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிறார். பின் தன் பேத்தியை அழைக்கிறார்.

    “ஏண்டி லல்லி கொலு வரதே. இந்த வருஷம் என்ன புதுசா வைக்கப்போறே? தலைவிரிக்கோலமாய் லல்லி வருகிறாள் ஒரு திராட்சைக்குலை காதில் தொங்கியபடி தோளை இடிக்கிறது .

    “பாட்டி நான் இந்தக்கொலுவுக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன் .கொலு கான்ட்ரேக்ட் பிசினஸ்.”
    “அதென்னடி கொலு கான்ட்ரேக்ட் ?’

    “அதுவா .வந்து ….அது சஸ்பென்ஸ் பாட்டி கொலுக்கு முதல் நாள் நான் உனக்கு சொல்றேன்.இப்ப வெளிலே எனக்கு நிறைய வேலை இருக்கு. பை பாட்டி, பை அம்மா “

    பாட்டி தன் மருமகளை அழைக்கிறார் . ” ஏண்டி ராஜி என்ன சும்மாவே இருக்கே ! இன்னும் பொம்மை எடுக்கலை .இன்னும் படி கட்டலை . இந்த வருஷம் என்ன பண்றதா உத்தேசம் .லல்லி என்னவோ பிசினஸ் ன்னு சொல்லிட்டு போறா. என்னமோம்மா.இந்தக்கால பொண்களை என்ன சொல்றது?’ “அம்மா நான் என்ன செய்யட்டும்? உங்க பேத்தி ஏதோ கொலு பிசினஸ் செய்யறாளாம் அதோட பேரு முத்தேவி என்டர்பிரைஸ். .என்னை கவலப்படாம இருக்க சொல்றா.”
    காட்சி இரண்டு .

    கொலுவுக்கு முதல் நாள்.வாசலில் பெல் அடிக்க .கதைவைத் திறந்தாள் பாட்டி . இரண்டு பேர்கள் டை கட்டியபடி ஜோராக நின்று வணக்கம் செலுத்தினர் “பெரியம்மா இதுதானே முப்பதாம் நம்பர் வீடு?”
    “ஆமாம் .நீங்கள்ளாம் யாரு ?”

    “நாங்க முத்தேவி கம்பெனிலேந்து வந்திருக்கோம்.’

    “அதுக்கு இங்க ஏன் வந்திருக்கேள்?

    “உங்க வீட்ல கொலு வைக்கணும் ஆர்டர் வந்திருக்கு . பெரியம்மா , எங்க கொலு வைக்கணும் ?எத்தனை படிகள் வைக்கணும்?

    பாட்டி வழக்கமாய் வைக்கும் இடத்தைக்காட்ட அவர்களும் அந்த இடத்தை மேற்பார்வையிட்டார்கள் “பெரியம்மா இந்த இடத்தில் ஐந்து படிகள் கட்டினால் கதவு திறக்க இடஞ்சலாக இருக்கும் . அந்தக்கார்னர்லேந்து வச்சாக்க இடமும் இருக்கும் .போக வர வழியும் இருக்கும்.ஒரு ஐந்து நிமிஷத்ல நாங்க வறோம் ” என்றபடி வெளியே சென்று பின் அழகான ஹின்டேலியம் படிகளுடன் வந்தனர் .மளமளவென்று படிகளைப் பொருத்தினர் .மேலே அழகான நம் கொடி போன்று மூன்று கலர் கொண்ட ஒரு துணியை விரித்தனர் . பின் பாட்டியைப்பார்த்தனர் . “பெரியம்மா ,கொலுவில் எந்த மாதிரி பொம்மை வேணும், சொல்லுங்க, சிவன் பார்வதியா. அனந்த சயனமா, தேச தலைவர்களா .,காந்தியா நேருவா……..அப்பறம் விவேகானந்தர் . ராகவேந்திரர் ன்னு நிறைய இருக்கு ” “எல்லாம் கலந்து இருக்கட்டும் .தம்பி “. “சரிங்க” . என்று சொன்னபடி அவர்கள் கொலு வைக்க ஆரம்பித்தார்கள்.அழகாக முதல் படியில் கலசம் பின் ஆண்,பெண் மரப்பாச்சிக்களுடன் ஆரம்பித்து கன கச்சிதமாக வைத்து முடித்தனர்..பின் அழகான ரங்கோலி போடப்பட்டது. அருகில் அண்ணா ஹஸாரே உண்ணா விரதம் இருப்பதும் .மியூசிக் அகாடமியில் பாட்டுக்கச்செரி சீனும் மிக அழகாக ஒரு கால் மணி நேரத்தில் செய்து முடித்துவிட்டனர் . “பெரியம்மா நாங்க கொலு வச்சுக்கொடுத்துட்டோம் தினமும் சுண்டல் ,வடை ,பாயசம் செஞ்சு கொடுக்கறோம்.பத்து நாளுக்கும் சேர்த்து சொன்னால் 20% தள்ளுபடி ” “அப்படியா ? சரி எத்தனை சார்ஜ் வாங்கறே?”

    “வெத்தலை .பாக்கு. மஞ்சள் குங்குமம் பையோட ரூ,10000.ஆனா இது உங்க வீட்டு சின்னம்மாவோட கம்பெனி .அதனாலே ரூபாயை அவ கிட்டே கொடுத்துடுங்கோ”

    “வேறு என்ன ஸ்பெஷல் செஞ்சு தரே?”

    “கொலுக்கு முதல் நாளிலிருந்து. கடைசி நாள் வரை புடவை .சட்டை மாட்சிங்காக எடுத்து பிரஸ் செய்து தறோம் .அதுக்கு தனியாக ரூபாய் வாங்கறோம் .ஒரு நாளைக்கு நூறு ரூபாய் .தவிர வாசல்ல மாக்கோலம் காவியுடன் போட்டுக்கொடுக்கறோம்.

    இந்த நேரத்தில் லல்லி நுழைகிறாள் . “என்ன பாட்டி .என்ன அம்மா கொலு வச்சாச்சா? ரொம்ப கவலைப்பட்டாயே பயந்தாயே! “நன்னா இருக்குடி இந்த பிசினஸ் ! எத்தன வீட்டை பிடிச்சிருக்கே?

    ” இது வரை 200 வீடுகளுக்கு ஆர்டர் கிடைத்திருக்கு .இதுக்குன்னு தனியா இரண்டு பேரை ரெக்ரூட்டும் செஞ்சிருக்கேன் அவாளுக்கு நல்ல ஸேலரியும் தரேன் . நமக்கும் நல்ல லாபம் கிடைக்கும் “

    “கிடைக்காம என்ன செய்யும் ? இந்தக்காலத்தில் உடம்பு நலுங்காம கொண்டாடத்தானே உங்கள மாதிரி பெண்ணுக்கு பிடிக்கிறது. சரி வேறு என்ன ஸ்பெஷல் வச்சிருக்கே? “அதுவா பாட்டி .இன்னும் நிறைய பிளான் இருக்கு. முகத்துக்கு ஏத்தாற்போல் தலைக்கொண்டை போட்டு விடுகிறோம் தினமும் செய்ய வேண்டிய சுண்டல் பற்றியும் விளக்குகிறோம்.ஆர்டர் கொடுத்தால் பிரசாதம் செய்தும் தருகிறோம் .என்ன அம்மா உனக்கு பிடிசிருக்கா எங்க பிசினஸ்? “லல்லி . நீ சொல்றதெல்லாம கேக்க நன்னாத்தான் இருக்கு.ஆனா சில மாடர்ன் பேமிலி ரொம்ப பெரிய ஹோதாவா கொலு வைப்பாளே,அவாளுக்கு எதாவது ஸ்பெஷல் உண்டா?” “ஒ உண்டே அவாளுக்கு பீஸா .பாஸ்தா ,நூடுல்ஸ்,சௌமீன், ஸ்பிரிங் ரோல் தவிர ஐஸ் க்ரீமும் கொண்டு தருகிறோம் .பிரண்டோட சேர்ந்து சாப்பிட அவாளுக்கு ரொம்ப பிடிக்கும் தவிர ஃப்யூசன் ம்யூசிக்கில் “லலிதா சஹஸ்ரநாமம் “சப்ளை செய்கிறோம் .கர்பா டேன்ஸ் இப்போ பேஷன் ஆயிடுத்து.அதுக்கு தகுந்த பாட்டும் சிடி ல கிடைக்கும் .”

    “ஆஹா கேக்கவே ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கே .ம்ம் அப்பறம்” …”

    “அப்பறம் நாங்க கொலு காம்படிஷனுக்கும் அப்பிளிகேஷன் பார்ம் தந்து அத பில் அப் செஞ்சு அனுப்பறோம் சரி இன்னும் நாலு வீடு முடிக்கணும் .போய்ட்டு வரோம் பெரியம்மா ” “ஏதாவது சாப்பிட்டு போங்கோ . ஏ ராஜி இவாளுக்கு காபியும் கொஞ்சம் பக்ஷணமும் கொண்டு கொடு ” இதோ வரேம்மா ” என்றபடி ராஜி வர “எள்ளுங்கறத்துக்குள் எண்ணெயா நிப்பா என் மாட்டுப்பெண் ” என்றாள் மாமியார் பெருமையுடன் ,

    Share
  • “மின்னி’ மீனாட்சி ஆனாள்!

    விசாலம்

     

    கொலுவே உன்னை வரவேற்கிறேன்.

    கொலுசு சத்தம் என் வீட்டில் கேட்க

    “மின்னி’ யாக இருந்த என்னவள் இன்று

    மீனாட்சியாக மாறியிருக்கிறாள்.

    தலைவிரிக்கோலம் மாறி இருக்க

    தலையில் பின்னலுடன் பூச்சூடியிருக்கிறாள்.

    கண்களை மறைக்கும் முடிகள் இன்று

    கறுப்பு கிளிப்பில் நுழைந்தன.

    வெறிச்சென்று இருக்கும் அவள் நெற்றி

    வெம்பிப் போகும் என் மனம்

    இன்று காண்கிறேன் மங்கல குங்குமம்

    இனிக்கும் மனத்துடன் நிறைவு பெறுகிறேன்.

    வந்தது ஜீன்ஸ், டீ ஷர்ட்டுக்கு  முடிவு .

    வருடத்தில் ஒரு முறை புடவை ஏறியது.

    மொட்டைக்கையும் வாச்சும் மறைய.

    மொழமொழ கையில் வளைகள் குலுங்கின

    பாத்ரூமில் மாட்டும் தாலி இன்று

    பார்யாள் கழுத்தில் பளபளத்தது.

    என் கனவுக்கன்னியை இன்று காண்கிறேன்

    என் கனவை நினைவாக்கிய கொலுவை வாழ்த்துகிறேன்.

    Share
  • குடகு நாட்டில் தசரா!…

    விசாலம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                முன்பு ஒரு தடவை எனக்கு குடகு நாட்டின் முக்கிய இடமான “மடிக்கேரி” யில் ஒரு மாதம் தங்க வாய்ப்பு கிடைத்தது நான் தங்கியிருந்த  இடத்தின் தலைவி எனக்கு நல்ல தோழியானாள். அவளது நாட்டு கலாச்சாரம் ,பண்டிகைகள் எல்லாவற்றையும் பற்றி நான் கேட்க என்னிடம் பகிர்ந்து கொண்டாள். அதில் தசராவும் ஒன்று. மைசூர் தசரா உலகப்புகழ் பெற்றது.அது நடக்கும் நேரம் காலையிலிருந்து தொடங்கி பிற்பகல் வரை நிகழும்.ஆனால் மடிக்கேரி தசரா இரவில் தான் ஆரம்பிக்கும் .இரவு முழுவதும் நடக்கும் பலர் காலையில் மைசூர் தசராவைக் கண்டுக்களித்து பின் இரவில் மடிக்கேரிக்கு வந்து விடுவார்கள்.அங்கு அம்மன் கோயில் பல உள்ளன.அதில் முக்கியமான சவுத்தி மாரியம்மன், கோட்டை மாரியம்மன்,காஞ்சி காமாட்சியம்மன் தட்சிணமாரியம்மன். காவிரியம்மன் போன்ற கோயில்களில் தசரா மிகவும் பிரமாதமாக கொண்டாடப்படுகிறது இத்தனை அம்மன் கோயில்களைப்பிரதிஷ்டை செய்த தினம் நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி. இவைகளைப்பிரதிஷ்டை செய்த காரணம் என்ன ?

    முன்பு குடகு நாட்டை சிக்கவீரராஜேந்திரா என்ற மன்னர் ஆண்டு வந்தார்.சில காலமாக அவர் முகத்தில் கவலை ரேகை அப்பிக்கொள்ள நிம்மதி இழந்து தவித்தார். காரணம் என்னவென்றால் மடிக்கேரி மக்களை கடும் வியாதி பீடித்து இதனால் பலர் மிகவும் கஷ்டப்பட்டனர். இதனால் வைத்தியச்சிலவு செய்து பணமும் குறைந்து போயிற்று. எல்லோர் வீட்டிலும் வறுமை தாண்டவமாடியது. மக்கள் நலனின் மிகவும் அக்கரை கொண்ட மன்னன் மிகவும் வருந்தினார். பின் பல தடவை யோசித்து ஒரு நல்ல ஜோசியரை வரவழைத்து  விவரங்களைச்சொல்லி இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்டார்.

    “மடிக்கேரி மக்களுக்கு மனதில் பயம் கவ்விக்கொண்டிருக்கிறது .அவர்களுக்கு மனதில் தைரியம் ஊட்ட இங்கு தேவியின் கோயில் இல்லை இதனால் சக்தி வாய்ந்த தெய்வங்களை இங்கு உடனே பிரதிஷ்டை செய்ய வேண்டும்” என்றார். மன்னரும் இதற்கு ஆக்ஞை பிறப்பித்தார் இதனால் கோட்டை மாரியம்மன் .காமாட்சியம்மன், என்று பல அம்மன்கள் வந்து அமர்ந்து அருளைப்பொழிந்தனர்.உடனடியாக நோய் அகன்றது. இதனால் வறுமையும் ஒழிந்தது இந்த நிகழ்வை மனதில் கொண்டு தசரா தினத்தை விழாவாக எடுத்து மிகசிற்ப்பாக நடத்துகின்றனர். மடிக்கேரியில் ஸ்ரீராம மந்திரா, கோட்டை மகாகணபதி, பேச்சுரு ராமசந்திரா சவுடேஸ்வரி .சரவாளே பகவதி, அனுமான் கோயில் போன்ற மேலும் சில கோயில்கள் இதனிடையே கட்டப்பட்டன.                                                                                                                                                                                                                                                                                                                                                                                   தசரா தினத்தன்று ஊர்வலம் சவுத்தி மாரியம்மன் கோயிலிருந்து புறப்படும்.நேராக கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வரும் .அங்கு அந்த அம்மனும் பவனி வர ரெடியாக அலங்கார பூஷிதையாக அமர்ந்திருப்பாள்.பின் காஞ்சி காமாட்சியம்மன்  அவர்களுடன் சேர்ந்து கொள்வாள்.  தண்டு மாரியம்மன்  இவர்கள்  வரவை ஆவலாகப் பார்த்தபடி  காத்திருக்க  அவளும் ஊர்வலத்தில் கலந்து கொள்வாள் இத்துடன் மேலும் ஆறு கோயில்களிலிருந்து தெய்வங்கள் அவர்களுடன் சேர்ந்துகொள்ள இரவு முழுதும் விடிய விடிய ஊர் முழுவதும் ஊர்வலம் வருகின்றன. சில இடங்களில் நடுநடுவே  ஊர்வலம் நிற்கும் .நிற்கும் அவ்விடத்தில் விதவிதமான   செயறகை மண்டபங்கள் கட்டப்பட்டு பலவித விளக்குகளால் சுவர்க்கபூமி போல் இருக்கும். மண்டபங்களில் எது சிறந்து அழகாக விளங்குகிறதோ அதற்கு பரிசும் உண்டு. வழி முழுவதும் பலவிதமான நடனங்கள். ஆட்டங்கள், தாரை,தம்பட்டையுடன் முழங்க பல தேவிகள் உர்வலம் வருகின்றனர்.ஒவ்வொரு மண்டபத்தின் முன்னும் ஊர்வலம் நின்று அங்கு ஆராதனை நடக்கிறது.ஒவ்வொரு அம்மனுக்கும் அலங்கரித்த தேர்  ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அதே போல்அதற்கென்று தயாரிக்கப்படும் மண் பொம்மையும் அழகான அம்மன் உரு பெற்று தகுந்த வாகனம் மேல் அமர்ந்து   பவனி வருகிறது .இதற்கென்றே பல வழிநடை கடைகள் புதிதாக அமைக்கப்பெற்று வியாபாரம் சக்கைப்போடு போடுகிறது. தவிர ராட்டினம் கண்காட்சிகள் .என பல கேளிக்கைகளும் உண்டு. மக்கள்  இதை மிகவும் ஆனந்தமாக  செய்வதால் மடிக்கேரி தசராவும்  மிக அமர்க்களமாக நடக்கிறது.

    Share
  • காந்தி ஜெயந்தி

    விசாலம்

     

    அக்டோபர் 2 காந்திஜியின் பிறந்தநாள் அத்துடன் காந்திவாதத்தைக் கடைப் பிடித்த  மறைந்த திரு கமராஜரின் நினைவு நாளும் வருகிறது  அவரை நினைவு கூறுவோம்
    காமராஜர்
    எளிமையை நாடினார்
    ஆடம்பரம் தவிர்த்தார் ,
    உழப்பை நாடினார்
    சோம்பலை நாடார் ,
    பிற நலம் நாடினார்
    தன்நலம்  நோக்கார்
     அன்பை நாடினார்
    வெறுப்பை தவிர்த்தார்
    தமிழ் நாட்டை நாடினார்
    தன் வீட்டை மறந்தார்
    ஏழ்மையை நேசித்தார்
    கருப்புப் பணத்தை நாடார்
     நாட்டின் நலத்தை நாடினார்
    முதல்வர் காமராஜ் நாடார்!..

     

    Share
  • திருவடி!…

    விசாலம்

    மகாவிஷ்ணு ஸ்ரீராமராகவும், ஸ்ரீகிருஷ்ணராகவும் அவதரித்தார் என்று தசாவதாரத்தில் காண்கின்றோம் .கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி அன்று வீட்டில் குட்டிப்பாதங்களை மாக்கோலமாகப்போட்டு சின்னக்குழந்தை குதித்துக்குதித்து உள்ளே வருவதைப்போல் ஒரு கற்பனையும் செய்கின்றோம்.பெருமாளை விட பெருமாளின் திருவடிக்கு அதிக சக்தி தான் .கீதையில் கண்ணன்”என் திருவடிகளைச்சரணடைந்தால் பாபம் எல்லாம் போக்கி மோட்சம் அடைய அருள் புரிவேன் என்கிறார். பாரதியாரோ “கண்ணன் திருவடி எண்ணுக மனமே, திண்ணம் அழியா வண்ணம் தருமே  என்றும் பின் “தீர்ப்பான் இருளை பேர்ப்பான் கலியை ஆர்ப்பாரமரர் பார்ப்பார் தவமே” என்று பாடி திருவடியின் சிறப்பைச்சொல்கிறார், வளளுவரோ  “பற்றுக பற்றற்றான்  பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு   என்று குறளில் சொல்கிறார். அதாவது ஆசாபாசம் மாயை போன்றவை விலகுவதற்கு பற்றேதும் இல்லாத இறைவனின் திருப்பாதங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் ஸ்ரீராமர் பாதம் விற்பார்கள். அதை பூஜை அறையில் வைத்து பூஜிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். திருப்பதி ஸ்ரீ வெங்கடாசல்பதியின் பாத தரிசனுமும் காலை வேளையில் கண்டு அருள் பெற க்யூ வரிசை நீண்டு இருக்கும். ராமாயணத்தில் ராமர் கானகம் வந்த போது வேடனான் குஹ்ன் ஸ்ரீராமனின் திருவடிகளை வணங்கி அந்தத்திருவடிகளுக்கு பூஜையும் செய்கிறான். அவரது சகோதரன் பரதனோ தன் தாய் தனக்கு என்று வாங்கிக்கொடுத்த நாட்டை ஏற்க மறுத்து ராமரைப்பார்த்து திரும்பி வருமாறு மன்றாடுகிறான், ஆனால் ராமர் அதற்கு இஷடப்படாததால் அவரது திருவடிகளில் ஏறிய பாதுகைகளையே பதினான்கு வருடம் பூஜிக்கிறான். சமீபத்தில் கிருஷணரைப்பற்றி  பிருந்தாவன கீதையில்  சில விஷயங்கள் படித்தேன். அதில் யமுனையும், காளிங்கனும் மகாவிஷ்ணுவின் திருவடிகள் தங்கள் மேல் பட வேண்டும் என்று மிகவும் விரும்பினார்கள்.காளிங்கன் முற்பிறவியில் ஒரு கந்தர்வனாக இருந்தான். ஒரு முனிவரின் சாபத்தினால் ஐந்துதலை நாகமாக் பிறவி எடுத்தான் எப்படியும் திருமாலின் திருவடி தன் தலையில் பட்டு தனக்கு சாபவிமோசனம் ஆகிவிடும் என்று நம்பியிருந்தான். இதே போல் யமனின் தங்கை. சூரியபுத்திரி விஷ்ணு பாதங்களைத் தொட வேண்டும் என்று ஆசைக்கொண்டாள். அது என்ன சுலபமாகக் கிடைக்கக்கூடிய ஒன்றா?. கடும் தவத்தை மேற்கொண்டாள். காத்து ரக்ஷிக்கும் தெய்வமான விஷ்ணு உடனே தோன்றி தான் கிருஷ்ணராக அவதாரம் எடுக்கும் நேரத்தில் அவள் விருப்பம் நிறைவேறும் என கூறி மறைந்தார் .யமுனையும் பொறுமையாகக்காத்திருந்தாள் ஆவணி மாதம் அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் பிறந்தார். அவரது கட்டளைப்படி வசுதேவர் அவரை ஒரு கூடையில் வைத்தபடி யமுனைக்கரைக்கு வந்தவுடனேயே யமுனை மிகவும் மகிழ்ச்சியுடன் எங்கே கண்ணனின் பாதங்கள் நம் மேல் படாதா என்று ஏங்க ஆரம்பித்துவிட்டாள். மழைக்கொட்டித்தீர்த்தது.யமுனையின் வெள்ளம் அதிகரித்து வசுதேவரின் இடுப்பு, பின் தோள், என்று நிரம்பி கழுத்துவரை வந்துவிட்டது. அப்படியும் வசுதேவர் நம்பிக்கையை இழக்காமல் மேலே நடந்தார்.   பின் இன்னும் மேலே ஏற கண்ணன் யமுனையைத் தொடும்படி தன் குஞ்சுக்கால்களை கூடைக்கு வெளியே போட்டார். அந்தக்கமல பாதங்களை யமுனைத்தொட்டுவிட்டாள். ஒரே மகிழ்ச்சி. தன் தவத்தின் பலனைக்கண்டுமகிழ்ந்தாள். நன்றியை தெரிவித்து கிருஷ்ணர் அக்கரைக்கு போக ஏதுவாக வசுதேவருக்கு இரு பக்கமும் தன் வேகத்தைக்குறைத்து நல்ல பாதையை வகுத்து தந்தாள்.

    காளிங்கன் தனக்கு கண்ணனது திருவடிகள் கிடைக்கவில்லையே என்று அந்தப்பொய்கையிலேயே வசிக்க ஆரம்பித்தான். விஷத்தைகக்க்கினான் இதனால் காளிந்தி பொய்கையில் நீர் கெட்டு ஊர் ஜனங்கள் அங்குப்போகாமல் ஒதுங்கினர். பலரும் காளிங்கனைப்பார்த்து நடுங்கினர் கிருஷ்ணர் மாடுமேய்க்கச்சென்று சமயம் பார்த்து பலர் தடுத்தும் காளிந்திப்பொய்கையில் குதித்தார். காளிங்கனுக்கு மகிழ்ச்சி. தன்னுடைய ஐந்துதலையை விரித்து கிருஷ்ணரைத் தாங்கிக்கொண்டான். கிருஷ்ணரின் திருவடிகள் அவனது ஐந்துத்தலைகள் மேலும் நடனமாடியது. மகிழ்ச்சியில் விஷம் கக்கினான் பின் அவன் சாபம் நீங்க பழையபடி கந்தர்வனாகிவிடுகிறான். திருவடிகளுக்கு இறைவனை விட அதிக சக்தி இருக்கிறது. குருவின் பாதங்களை அலம்புகிறோம் பாத பூஜை செய்கிறோம் “அவனருளால் அவன் தாள் வணங்கி’  என்று அவர் பாதங்களை நாமும் சரணடைவோம்.

    Share
  • ‘ஆசையே அலைப்போல’

    விசாலம்

     

    ‘ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன் மேல ஓடம் போல வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே’ ஆஹா என்ன அருமையான வரிகள் இது போல் வாழ ஆசைதான். ஆனால் இது சுலபமாகவா இருக்கிறது. சம்சார சாகரத்தில்  ஆசை என்ற அலைகள் அதன் மேல் வாழ்க்கை என்ற ஓடம் அதை நாம் ஓட்டவேண்டும். கடல் அலைகள் மெதுவாக மனதுக்கு இதமாகவா வருகின்றன! இல்லையே! அவை தன் இஷ்டப்படி வந்து  கரையில் வந்து மோதிவிட்டு செல்கின்றன அதில் வாழ்க்கை ஓடம் ஓட்டவேண்டுமென்றால்? நானும் பல ஆசைகளை மனதில் சுமந்தபடி என் வாழ்க்கை ஒடத்தை ஓட்டியபடி ஐம்பதாவது வருடத்தில் நுழைந்து விட்டேன் என்னையும்  பல ஆசை அலைகள் வந்து மோதின, சிறு வயதில் என் பெற்றோர்கள் அதை ஓட்ட பல ஆசைகள் எனக்கு நிறைவேறின. ஆனால் என் திருமணம் பின் என் பல ஆசைகளை எனக்கு தியாகம் செய்ய வேண்டி வந்தது.

    எனக்கு சிறு வயதிலிருந்தே மழை  பெய்யும் போது நனைய பிடிக்கும் வீட்டிலும் ஷவரில் தலையைக்காட்டி பூத்தூவல் போல் நீர் விழுவதை மிகவும் ரசிப்பேன்.என் வீட்டில் பெரியம்மா அத்தை போன்றவர்களின் ஷஷ்டியப்தபூர்த்தியின் போது  அவர்கள் தலையில் குடத்தில் பூஜை செய்த நீரை சல்லடையைப்பிடித்தபடி கணவர்மார்கள் விடுவார்கள். சில்லென்று அவர்கள் தலையில் அதுவிழ அவர்கள் உடலைச்சிலிர்த்துக்கொண்டு மிகப்பெருமையுடன், ஒரு புனித சடங்காக அதைப்பெற்றுக்கொள்வார்கள். எனக்கு அதைப்பார்க்க மிக ஆசை. அந்தக்காட்சியைப்பார்த்த பின்னர் எனக்கும் இது போல் என் கணவர் என் தலையில் தண்ணீர் விடும் நாளை நினைத்து மகிழ்வேன். இந்தச்சிறுவயது ஆசை என்னைத் தொடர்ந்தது. திருமணமும் நடந்தது. எனக்கு எல்லோருடைய பிறந்த நாட்கள். திருமண நாட்களைக்கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி ஏற்படும் என்னுடையதையும் சேர்த்துத்தான். என் சகோதர, சகோதரிகள் நெருங்கிய உறவினர்கள். பாசம் கொட்டும் நணபர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துகளைத்தெரிவிப்பதில் என் மனதுக்கு அப்படி ஒரு ஆனந்தம் ஏற்படும். ஆனால் என் கணவரோ அதற்கு நேர் எதிர்விரோதம். என்ன! பிறந்த நாள் வரும் போகும் இதை எதற்கு கொண்டாட வேண்டும்?  என்பார். திருமண நாளைக்கொண்டாட நினைத்தால், நான் தான் மாட்டிக்கொண்டுவிட்டேனே என்றும், அந்த பயங்கர நாளை ஞாபகப்படுத்தாதே என்றும் ஜோக் அடித்தபடி நகர்ந்துவிடுவார். என்ன இவர்! ஒரு பெண்ணின் உணர்ச்சிகளைப்புரிந்துக்கொள்ளாமால்,என்று நினைத்தபடி என் ஆசைகளுக்கு ஒரு கடிவாளம் போட்டுக்கொள்வேன். என் மேல் பாசம் அதிகம் இருந்தும் அவர் அதை ஒரு பொழுதும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார். கோபம் அடிக்கடி வந்து விடும் .ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும் என்பது போல்  பல நல்ல குணங்களும் இருக்கும். நான் என் பிறந்த நாளிலோ அல்லது திருமண நாளிலோ அவரிடமிருந்து அன்பான வாழ்த்துகளை எதிர்ப்பார்ப்பேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் .அதற்காக நானும் விடுவதில்லை. காலையில் ஒரு கோயிலுக்குச்சென்று ஈசனிடம் பிரார்த்தித்து ஈசனின் வாழ்த்துகளை வேண்டுவேன். இது வரை அவர் எனக்கு ஏதேனும் வகையில் என்னை வாழ்த்தி அவரது தரிசனம் தந்துவிடுவார். சில சமயம் அந்தச்சிலையிலிருந்து பூக்கள் விழும் .சில நேரம் பூஜை செய்யும் சாஸ்திரிகள் நான் கேட்காமலே மல்லிகைச்சரம் ஒன்றை அளிப்பார். சில நேரங்களில் பாண்டிச்சேரி அன்னையிடமிருந்து பிளெஸ்ஸிங் பேக்கட் வரும். எப்படியோ இதில்  என் மனம் நிறைந்து மகிழ்ச்சி அடையும்.

    முதன் முதலாக நான் தாய்மை அடைந்த போது எனக்கு மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது எதனால் என்று சொல்லட்டுமா?  ஆம் எனக்கும் சீமந்தம் வரும்.அந்த நிகழ்ச்சியில் என் கணவர்  என் தலையில் பூஜை செய்து வைத்திருக்கும் குடம்  நீரை என் தலையில்  விடும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமே என்றுதான். நீ சரியான குழந்தைதான்” என்று என் அம்மா சிரித்ததும் ஞாபகம் வருகிறது .என் கணவர் முதலில் மறுத்து விட்டார். பின்னர்  பிறக்கப்போகும் குழந்தையின் நலனைக்குறித்து பல பெரியவர்கள் எடுத்துரைக்க ஒப்புத்துக்கொண்டார்  அன்று நடந்த இந்த நிகழ்வு என் மனதில்  இன்றும் பசுமையாக இருக்கிறது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு இன்று வரை அது போல் வேறு ஒன்றும் நடக்கவில்லை பொறுமையாக சஷ்டியப்த பூர்த்திக்கு காத்திருந்தேன். அறுபது வயதில் சாந்தி செய்துக்கொள்ள வேண்டும் என்று பல உறவினர்கள் எடுத்துரைத்தும் மறுத்துவிட்டார். அந்த சான்ஸும் போச்சு. திருமணம் முன் பல நாடகங்களில் நடித்தும்  வயலின் .வாய்ப்பாட்டு என்றும் பல நிகழ்ச்சிகள் கொடுத்து வந்த நான் தில்லிக்கு புதுமணப்பெண்ணாக நுழைந்தேன். மிகவும் வித்தியாசமான வாழ்க்கை   என் கலைகளெல்லாம் மூட்டைக்கட்டி வைக்கும் நிலை.என் ஆசைகளுக்கும் ஒரு நங்கூரம். என்ன செய்வது வாழ்க்கை என்ற ஓடம் அமைதியாகப்போக வேண்டுமென்றால் புகுந்தவள் பல தியாகங்கள் செய்ய வேண்டும். 1950 வரை பிறந்தவர்கள் நிலை இப்படித்தான் அநேகமாக இருந்திருக்கும். கணவன் முன்னே செல்ல நாலடி பின்னே நடக்கும் மனைவி என்ற நிலை. இதற்கு ஓரிண்டு விதிவிலக்கு இருக்கலாம் .விட்டுக்கொடுக்கும் தன்மை. பொறுமை, மன்னிப்பு என்ற குணங்கள் இருந்தால் தான் கடைசிவரை  சம்சாரம் என்ற வண்டியை  ஓட்ட முடியும். நடுநடுவே வண்டிச்சக்கரம் மக்கர் செய்து ஓட மறுத்தாலும் அதை எப்படியாவது ரிப்பேர் செய்து வண்டியைத் தொடர்ந்து ஓட்ட வேண்டும் என்ற நிலை அந்தக்காலத்திலிருந்து என் ஜெனரேஷன் வரை தொடருகிறது    ஆனால் இப்போது இருக்கும்  சூழ்நிலையை [generationgap] பார்த்தால் மனதில் ஜீரணிக்கமுடியவில்லை.

    போன வருடம் என் ரேய்க்கி ஹீலிங்கில் ஒரு தம்பதி வந்தனர். அவர்கள் திருமணம்ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது ஆனால் இருவரும் பிரிய வேண்டும் என்ற எண்ணம் வலுத்து என்னிடம் வந்தனர். இதன் காரணத்தைத் தனித்தனியே நான் அவர்களைக்கேட்டேன். அவர்கள் சொன்ன  காரணத்தைக்கேட்டால் எல்லோருக்குமே சிரிப்புத்தான் வரும் . அவர்கள் காதலிக்கும் போது காதலன் முட்டை ஆம்லேட் தின்னமாட்டேன் என்று அவளிடம் சத்தியம் செய்தானாம். ஆனால் ஒரு ஆறுமாதம் கழித்து சத்தியத்தை மீறி வீட்டில் ஆம்லெட் செய்தானாம். இது தான் காரணம் இந்தச்சின்ன சண்டை வலுத்து டைவர்ஸ் வரை போய் நின்றது. இந்தக்கால நிலை இப்படி இருக்கிறது. இந்தச்சின்ன விஷயத்திற்கே பொய் சொன்ன கணவரை நான் எப்படி நம்புவது?” என்று வாதாடினாள் அந்தப்பெண் என் பாட்டி காலத்தில் தன் கணவன் எதிரே அமர்ந்து கூட பேசாமல் கணவரது பெயரைக்கூட சொல்லாமல்  கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை மனதிலே கொண்டு அவர் சேவைக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை நடத்தினர். அங்கு ஆண் பெண் உறவு மிகப்புனிதமாகக்கருதப்பட்டது.   அதற்கு அடுத்த கட்டத்தில் கணவரின் கருத்துக்களைகேட்டு நடுநடுவே தன் கருத்துக்களையும் சொல்லும் தைரியம் வந்திருந்தாலும் கடைசியில் கணவரின் கருத்தே செல்லுபடியானது. வீட்டுக்குத்தலைவர் ஆன அவரைக்கண்டு அவர் குழந்தைகளும் நடுங்கும் .மூன்றாவது கட்டத்தில் பெண்ணும் நன்கு படித்து ஆணுக்கு சமமாக வெளியில் வேலை செய்ய ஆரம்பித்தாலும், தன் கணவர் மீது மதிப்பும் ,மரியாதையும் கொண்டு வீட்டு வேலைக்கும் முதலிடம் கொடுத்து வந்தாலும் நடுநடுவே தனது கருத்துக்களைச்சொல்லி அவருக்கு புரிய வைத்து அவர் பெயரையும் தயக்கமில்லாமல் சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் வந்தது. நாலாவது கட்டத்தில் இருவரும் சரிக்க்கு சமம் என்று வீட்டு வேலைகளிலும் பங்கு  போட்டுக்கொண்டு செய்ய அங்கு  ஒரு விதமான தன்முனை பிரச்சனை தலைத்தூக்கி எடுத்தது  ஐந்தாவது கட்டம் தற்போது பார்க்கும் கட்டம் கணவர் கணவனாகி   பின் அவனது பெயர் வந்து “ஏண்டா லேட், எங்கேடா போயிருந்தே” என்று கேட்கும் அளவுக்கு முன்னேறிவிட்டது. இந்தக்கட்டத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை மிகக்குறைந்து ஈகோ அதிகமாகி இரண்டு வருடங்கள் ஆவதற்குள் டைவர்ஸில் வந்து முடிகிறது .இன்னும் சொல்லப்போனால்  திருமண பந்தமே இல்லாமல் ஒரு துணை தேவை என்ற நிலை வர தலைப்பட்டிருக்கிறது. இது போல் பல விளம்பரங்கள் பார்த்தேன்.

    சரி என் கதைக்கு வருகிறேன் .வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி என் ஐம்பதாவது வருட திருமண நாள் வருகிறது {golden jubiilee}. இதற்காவது என் கணவர் கொண்டாட ஒப்புத்துக்கொள்ள வேண்டுமே, செய்வாரா தெரியவில்லை ஆனால் குழுவில் இருக்கும் சகோதர சகோதரிகள். மகன், மகள்கள் எல்லோரும் என்னை வாழ்த்தி குஷிப்படுத்தி விடுவீர்கள் என்ற நம்பிக்கை. தேய்ப்பிறை சந்திரன், வளர்ப்பிறை சந்திரன் போல் உடல் நலமும்  ஒரு நிலையில் இல்லை. ஆகையால் நீங்கள் வாழ்த்தி அனுப்பும் நற்றலைகள் எனக்கு நல்ல பாசிடிவ் எனர்ஜியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    Share
  • ரக்ஷா பந்தன்

     

    விசாலம்

    எங்கு மேடைப் பேச்சு இருந்தாலும் .சிறு கூட்டமாக இருந்தாலும் “என் அன்பு சகோதர சகோதரிகளே” என்று அழைக்கிறோம். ” India is my country .we r all brothers and sisters “என்று பள்ளி அசெம்பிளியில் சத்தியப் பிரமாணம் எடுக்கிறோம். ஆக சகோதர அன்பு என்பது அளவெடுக்க முடியாத ஒன்று. அப்படிப்பட்ட அன்பை மேலும் வெளிப்படுத்தும் நாளாக வருகிறது, ராக்கி பண்டிகை. வட நாடு முழுவதும் கொண்டாடும் இந்தப் பண்டிகை மிகவும் அர்த்தம் உள்ள பண்டிகை..நான் பலவருடங்களாக அங்கேயே இருந்ததால் நானும் இதைக் கொண்டாடுகிறேன் என் பாசமுள்ள சகோதரர்கள் எல்லோருக்கும் மானசீகமாக ரக்ஷைக் கட்டுகிறேன்.

    இந்த ராக்கி என்றால் என்ன? புராணக் கதை என்ன? பார்க்கலாம்…

    இது ஒரு அன்பு பந்தம் ..சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டுப் போடும் ஒரு அன்பு பாலம். இந்தப் பண்டிகை சிராவண பூர்ணிமாவில் வருகிறது இதற்கு, வயதோ, ஜாதி பேதமோ கிடையாது சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய சுபீட்சத்திற்குப் பிரார்த்தனையும் செய்கிறாள் ,பதிலுக்கு அவளுக்கு நிறைய பரிசுகள் கிடைக்கின்றன முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக் போகும் முன் இரத்த திலகமிட்டு,கையில் ரக்ஷையும் கட்டி “வெற்றியுடன் திரும்பி வா”என்று வழி அனுப்பி வைப்பார்கள்.இவர்களில் சிலர் முஸ்லிம் பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு.மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் திருதராஷ்டிரருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை கட்டிக்க சொல்கிறார்

    பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர்.விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்காக்க சத்தியம் செய்து கொடுத்ததால் வைக்குண்டத்தை விட்டு மஹாபலியிடம் வருகிறார்.சில நாட்கள் பொறுத்துப்பார்த்த மஹாலட்சுமி அந்தபிரிவைத் தாங்கமுடியாமல் மஹாவிஷ்ணுவிடம் இருக்கப்பிரியப்பட்டு தான் ஒரு சாதாரண பெண்மணிப்போல் வேஷம் தரித்து பலியிடம் வந்தாள் . “மஹாராஜா என் கணவர் வரும் வரை நான் இங்கு தங்க அனுமதி வேண்டும் “என்று கூறியபடி அடைக்கலம் புகுந்தாள் நாட்கள் நகர்ந்தன.

    அன்று பௌர்ணமி தினம். அன்று மகாராஜாவிடம் சென்று அவரை சகோதரனாக பாவித்து ராக்கி கட்டி விட்டாள்.ராக்கி கட்டிவிட்டால் அந்தச்சகோதரர் ஏதாவது வெகுமதி தருவது வழக்கம். ” சகோதரி உனக்கு என்ன வேண்டும் சொல் தருகிறேன்” ” நான் என் கணவருடன் சேர்ந்து வாழவேண்டும்.அது உங்கள் கையில் தான் இருக்கிறது என் கணவர் இங்கு தான் இருக்கிறார்” ‘யார் அவர் ? சொல் சகோதரி நான் உனக்கு உதவுகிறேன்.” “அவர்தான் வைகுந்ததிலிருந்து இங்கு வந்திருக்கும் மகாவிஷ்ணு. அவரை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் நான் இங்கு ஒரு சாதாரண பெண்மணிப்போல் வேஷம் தரித்து இங்கு வந்தேன் .தயவு செய்து அவரை என்னுடன் அனுப்பி வைக்கவும் ” மகாபலியும் இதைக்கேட்டு பரவசமாகி லட்சுமியை விஷ்ணுவுடன் சேர்த்து திரும்பவும் வைகுந்தத்திற்கு அனுப்பி வைத்தார் .அவருக்கு உதவிய திருமாலுக்காக அவர் தனது ராஜ்யத்தையே தியாகம் செய்தார்.லட்சுமி மஞ்சள் கயிறை அவர் கையில் கட்டியதால் “மஞ்சள் ராக்கி” என்ற பெயருடன் இது கொண்டாடப்படுகிறது . இது வடக்கில் நம்பும் புராணக் கதை. ராக்கி இரண்டு ரூபாயிலிருந்து ஆரம்பித்து பல ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கமுடியும் சாதாரண வழவழப்பான நூலிலிருந்து ஆரம்பித்து நவரத்தினங்கள் பதித்த ராக்கி வரை விற்கப்படுகின்றன

    ஒரு சமயம் முகம்மதிய மன்னனுக்கு ராஜபுத் ராணி ராக்கி அனுப்பித்து வைத்தாள்..

    முகமதிய மன்னர் ஹுமாயூனுக்கும் சித்தூர் அரசியான ராணி கர்ணவதி ராக்கி அனுப்பித்து வைத்து அவரை சகோதரராக நினைப்பதாகவும் தனக்கு உதவும்படியும் கூறினாள்.அப்படி என்ன ஆபத்து அவளுக்கு வந்தது?குஜராத் சுல்தான் பஹதூர்ஷா சித்தூர் மேல் படையெடுத்தான்.ராணி விதவை என தெரிந்து அவளால் ஒன்றும் செய்யமுடியாது என்ற தைரியத்தில் போர் தொடுத்தான்.ராணி மனமுடைந்துப்போனதால் அந்தப்போரை எதிர்க்கொள்ளும் சக்தி இல்லாமல் போயிற்று .அதனால் தான் தில்லியில் ஆண்டு வந்த ஹூமாயூனுக்கு ராக்கி அனுப்பித்து தன்னையும் தன் ராஜ்யத்தையும் காக்கும்படி வேண்டிக்கொண்டாள்.சக்கர்வர்த்தி ஹுமாயூனும் ராக்கியைப்பார்த்து மனம் நெகிழ்ந்து அவளுக்கு உதவ சைன்யத்தை அனுப்பி வைத்தான்.அதற்குள் பஹதூர்ஷாவின் சேனை கோட்டைக்குள் நுழைந்து விட்டது.ராணி கர்ணவதி தனக்கும் மற்றும் பல பெண்மணிகளுக்கும் அவமானம் ஏற்படகூடாது என நினைத்து தீயை வளர்த்து அதில் குதித்துவிட்டனர் .இதற்குள் ஹுமாயூன் அனுப்பிய சேனை கோட்டைக்குள் நுழைந்து பஹதூர் ஷாவின் சேனையை முறியடித்து ஷா வின் மேல் பல பெண்மணிகளைக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்தனர் .பின் ஹுமாயூன் ராணி கர்ணவதியின் மகன் விக்ரமஜித் சிங்கிற்கு சித்தூர் ராஜ்ஜியத்தைக்கொடுத்து அவனை மன்னனாக்கி சகோதரி அனுப்பிய ராக்கிக்கு பரிசு கொடுத்துவிட்டார் .ராணி கர்ண்வதி சுவர்கத்திலிருந்து இதைப்பார்த்து மகிழ்ந்திருப்பாள் யமனின் தங்கை யமுனாவும் யமனுக்கு ராக்கி கட்டி விட்டாள் .யமனும் மன மகிழ்ந்து “யார் யார் சகோதரருக்கு ராக்கி கட்டி அவனது வாழ்க்கை வளத்திற்கு பிரார்த்திக்கிறாரோ அவர்களுக்கு நான் பாதுகாப்பு அளிப்பேன்” என்றானாம் இதுவும் வடக்கில் சொல்லும் கதை . மகாபாரதத்தில் ஒரு கதை . ஒரு தடவை கண்ணனின் கையில் அடிப்பட்டு இரத்தம் கசிந்தது .இதைப்பார்த்த பாஞ்சாலி ஓடி வந்து தன் தலைப்பைக்கிழித்து அடிப்பட்ட மணிக்கட்டில் கட்டிவிட்டாள்.கண்ணனும் மனம் நெகிழ்ந்து இன்று முதல் நீ என் தங்கையும் கூட .நான் எப்போதும் உன் பக்கம் இருப்பேன்.” என்றாராம். அதே போல் பாஞ்சலியும் கண்ணனையே முழுவதும் நம்பினாள்.ராக்கிக்கு அத்தனை சக்தி .அத்தனை நம்பிக்கை . எப்போதும் ராக்கி பண்டிகையும் .பூணல் போட்டுக்கொள்ளும் ஆவணியாவட்டமும் ஒன்றாக வரும் என் இனிய வாழ்த்துகள்.

    படத்துக்கு நன்றி: http://astrobix.com/festivals_of_india/raksha_bandhan/default.aspx

     

    Share
  • குடும்பத்தில் ‘சுதந்திர நாள்”

    விசாலம்

    “ஏண்டி ராஜி, கோபாலன் தில்லிலேந்து எப்ப வரான்”

    “அவனாம்மா ,அவன் புதங்கிழமை வராம்மா, வியாழக்கிழமை  இன்டிபெண்டன்ஸ்டே வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு எடுத்துண்டாக்க ஸன்டே வரை இருப்பான் என் அண்ணா”

    “அண்ணாவும் தங்கையும் என்ன புரோக்கிராம் போட்டிருக்கேள்?

    “தெரிலைம்மா நான் எங்கேயாவது மால் போய் எஞ்ஜாய் பண்ணிட்டு வருவேன் என் பிரண்ட்ஸ்க்கு போன் செய்யணும்”

    “ஏண்டி ராஜி இது எத்தனாவது வருஷ சுதந்திரம்”? “யார் கண்டா? மறந்து போச்சு. இரு, இரு, 1947ல்ல சுதந்திரம் வந்ததா? இப்ப 2013.  அப்படீன்னா 66 வருஷம் இல்லையா?’                                                                                                                                                                                                                                                                           “அடி சமத்து கணக்கு வந்துடுத்தே நல்ல வேளை கால்குலேடர் வச்சுக்கலை. யார் யார் இந்த போராட்டம் ஆரம்பிச்சா தெரிமா?”

    “காந்தி, நேரு அப்பறம் யார் யாரோ…..இந்த சோஷியல் சயின்ஸே போர். எப்படியோ நமக்கு ஒரு லீவு கிடைக்கறது. அதான் சுகம். ஆமாம் அன்னிக்கி நீ என்ன பண்ணுவே”

                                                                                                                                                                                                                                                 “நல்ல வேளை அன்னிக்கு மறு நாள் வரலட்சுமி நோம்பு முதன் நாளே பல காரியம் செஞ்சு வச்சுக்கணும் எல்லோருக்கும் லீவு இருக்கு அதனாலே நிதானமா சமையல் செய்யலாம் ஆனா என்ன அன்னிக்கு ஒரு சீரியல். சினிமான்னு ஒன்னும் பாக்கமுடியாது’”அம்மா திரும்ப திரும்ப  காந்தி. இந்தியனுட்டு ஒரே மாதிரி படம் காட்டுவா. புதுசா என்ன காட்டப்போறா. நான் புது ரிலீஸுக்கு போய்விடுவேன்’

    “அப்படி சொல்லாதேடி ராஜி,  அந்த மாதிரி படம் பாத்தாலாவது நாட்டுபற்று வருமோன்னு காட்டறா. நல்ல விஷயம் தானே”

    “எங்கம்மா நாட்டுபற்று இன்னிக்கு நாடு எந்த நிலமைல இருக்கு எல்லாரும் கோடி கோடியா பணம் பண்றதே தொழிலா வச்சிண்டிருக்கா,  பேப்பர்ல  பாரு, யார் ஒழுங்கா இருக்கா”, நீங்கள்லாம் தான் வருங்கால இளைஞர்கள் நீங்கதான் நாட்டை சரி பண்ணனும் நீங்களே

    நாட்டுபற்று இல்லாம சுதந்திர நாளிலேயும் சுத்தினா எப்படி ?’

    “அம்மா திங்க என்ன இருக்கு? பகோடா இருக்கா “

    “வாடப்பா கடைக்குட்டி .முரளி என் செல்லமே! லீவெல்லாம் கிரிக்கெட் தானா உன் கையும் மூஞ்சியும் பாரு ஒரே மண்ணு ….சரி நாளைக்கு என்ன புரோக்கிராம்?”

    “நாளைக்கு காலம்பற மேட்ச்சு ஜயிக்கறவா டிரீட் தருவா……. அப்பறம் ஈவினிங்கல  பட்டம்  விடப்போறாம் “

    “ஏண்டா முரளி எந்த வருஷம் நமக்கு சுதந்திரம் கிடைச்சுது தெரிமா உனக்கு, சொல்லு பாக்கலாம் “

    “தெரியுமே எனக்கு 1947. நேத்திக்குத்தான் எங்க டீச்சர் சொன்னா அதுக்குள்ள மறந்துவிடுவேனா  அக்கா” “சரி தமிழ் நாட்ல சுதந்திர போராட்டத்தல யார் யார் கலந்திண்டா  ஏதாவது ஒருத்தரை சொல்லு, ‘

    போ அக்கா’ இப்ப எனக்கு பசிக்கிறது  யார் யார் கலந்திண்டா உனக்கு என்ன இப்ப!  அப்பறம் சொல்றேன் அம்மா எங்கே பக்கோடா”

    குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா………….” அம்மா  உன் போன் குரல் கொடுக்கறது   எடு எடு  “

    “நீயே பாரேன்டி  நான் வேலையா இருக்கேன்னு தெரியுமோனோ”

    “அம்மா  அண்ணா தில்லிலேந்து பேசறான்…….அண்ணா எப்படி இருக்கே  என்ன ஏர்போர்ட்டுக்கு வந்துட்டயா  ஆ மஜாதான் நாளைக்கு   என்ன புரோக்கிராம்?

    “ராஜி ஹவ்வார் யூ ? டுமாரோ  ஐ வில் மீட் மை பிரண்டஸ் அண்ட் கோ டு மால் . அங்க வந்துட்டு பேசறேன் அப்பாட்ட போன் கொடு”

    “டாடி வெளில  போயிருக்கா . ஏதோ  சுதந்திர போராட்டத்ல கலந்த குடும்பத்த  பாக்க போயிருக்கா “

    “ஓகே மம்மீட்ட கொடு”, “மம்மீ நான் இன்னிக்கு வந்துடுவேன் நாளைக்கு உன்ன அழைச்சுண்டு விஜய் படத்துக்கு போறேன் சரியா “

    “நான் வரலை ரமேஷ்  வீட்ல வேலை சரியா இருக்கும் மறுநாளைக்கு பூஜை வேறு உனக்கு சாப்பிட என்ன வேணும்னு சொல்லு உனக்கு பிடிச்சதை செஞ்சு வைக்கறேன் அதுவே  எனக்கு ஆனந்தம்  சரி போனை வச்சுடறேன்.”

    “மம்மீ மம்மீ டாடி வந்தாச்சு    என்ன டாடி சுதந்திர போராட்ட பேமிலியை பாத்தேளா? எப்படி இருக்கா?

    “அதையேன் கேக்கறே ஒரு சந்துல வீடு சுவரலெல்லாம் உடைஞ்சிருக்கு. ஏதோ பென்சன்னு கொஞ்சம் பணம்தான் கிடைக்கறதாம் வீட்ல எல்லோருமே ஜெயிலுக்கு போய் அடி வாங்கி வந்தவர்கள் தானாம், அப்படி நாட்டுக்காக போராடியவர்களின் கதி இப்படியா?”

    பேசிண்டே டாடி ஏணி போட்டு எங்க மேலே ஏற்றேள்”,

    “அதுவா  உன் தாத்தாவும் பாட்டியும் சுதந்திர போராட்டத்தில் கலந்துண்டு கொடிப்பிடித்து வந்தேமாதரம்ன்னு கோஷம் இட்டவர்கள் உன் பாட்டி தன் நகைகள் எல்லாம் அதற்கென்று கொடுத்துவிட்டாள் அவர்கள் போட்டோவை எடுத்து தூசி தட்டி நாளைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்து  கொண்டாடப்போறேன். அதுதான் நாளைக்கு என் புரோக்கிராம் அவர்களுக்குப்பிறந்த நான் இது செய்யாமல் விடுவேனா?”?

    “மம்மி’  இங்க வாயேன்  ஒருத்தரும் சுதந்திர தினத்தைக்கொண்டாடவில்லை என்று மனசுல வருத்தப்பட்டயே இதோ அப்பா கொண்டாடப்போறார் “

    “அப்பாடி வீட்ல ஒருவருக்காவது இந்த உணர்வு இருக்கே. நாளைக்கு உங்க பாட்டிக்கு பிடிச்ச போளி செஞ்சுடறேன் “

    “வந்தே மாதரம்”  “ஜெய் ஹிந்த்”

    “முரளி நானும் சேர்ந்துக்கறேன். “வந்தே மாதரம்”,  “ஜெய்ஹிந்த்”. அம்மா அப்பா வாங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லலாம் “

    Share