விசாலம்

சூட்டும் டையும்மாக மிகவும் மிடுக்குடன் ஏரோப்பிளேனில் ஏறினார் கானடா நாட்டைச்சேர்ந்த பெரிய தொழிலதிபதி மிஸ்டர் பாட்டர்ஸன் .தன் தொழில் விஷயமாக இந்தியாவுக்கு பயணம் . இந்தியாவில் டாக்டர் பாலகிருஷ்ணாவை சந்தித்து அவர் அன்புடன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர் இல்லத்திற்கு வருகை தந்தார் .அவரை மிக அன்புடன் தனது வரவேற்பு அறைக்கு டாக்டர் பாலகிருஷ்ணா அழைத்துப் போக மிஸ்டர் பாட்டர்ஸன் பிரமித்தபடியே தன் புருவத்தை மேலே தூக்கியபடி தன்னை மறந்து நின்றார். அந்த அறை முழுவதும் ஒரு விதமான தெய்வீக மணம் வீச ஏதோ ஒரு கோயிலுக்கு நுழைந்த மாதிரியான உணர்வு . விடே கோயில் போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது உள்ளே ஒரு தனி அறையில் ஒரு அழகிய சிம்மாசனம் இருக்க அதன் மேல்சுவாமியின் அழகிய படம் வைக்கப்பட்டிருந்தது நான் சொல்லும் சுவாமி “பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபா” அவர்கள் தான் . அவர் தன் இரு கைகளைத் தூக்கியபடி ஆசிகள் வழங்கிக்கொண்டிருந்தார் சுருண்ட முடியுடன் “புஸு புஸு என்ற தலையையும் பார்த்து கானடா அதிபர் வியந்து “இவர் யாரப்பா? என் மனதை அப்படியே அவர் பக்கம் இழுக்கிறார். அந்தப்படத்தைப்பார்த்துக் கொண்டே இருக்கும்படி தோன்றுகிறதே”, இவர் தான் பாபா புட்டப்பர்த்தியில் இருந்து கொண்டு பல நற்காரியங்களைச் செய்து வருகிறார்,அசாத்யமான காரியம் கூட அவரிடம் வர சாத்தியமாகி விடும்.அன்பின் மறு உருவம், சத்ய, தர்ம சாந்தி, பிரேமை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர். பல கோடி மனிதர்களுக்கு வழிக்காட்டியாக இருந்து வருபவர். என்று ஆரம்பித்து அவரது பிறப்பு. அவரது தெய்வீக ஆற்றல். அவரது அன்பு என்று அவரைப்பற்றி மிக ஆர்வமாக கூறி முடித்தார். மிஸ்டர் பாட்டர்ஸன் தன்னை மறந்தார்.

டாக்டர் பாலகிருஷ்ணா தேங்க் யூ. இந்த மகானின் ஞாபகமாக எனக்கு ஏதாவது கொடுக்கமுடியுமா?” என்னிடம் தற்சமயம் சிறிய படம் ஒன்றுமில்லை. ஆனால் அவரது விபூதியைத் தருகிறேன் ”
வாட்? வாட் விபூட்டி? வாட் ஈஸ் தாட்? டாக்டரோ பாட்டர் சன்னுக்கு கொடுக்க தகுதியானது விபூதிதான் என்று நினைத்து விபூதி இருக்கும் சிறு பாக்கட்டை அவரிடம் அளித்தார் .அவரும் அதை மெள்ள திறந்து பார்த்தார்.
வாட் டாக்டர் .? இது என்ன ஆஷ் ? சாம்பலை ஏன் தருகிறாய்? இந்தப்படத்தில் இருப்பவர் பெரிய மகான் என்று சொல்லிவிட்டு சாம்பலை அவர் ஞாபகமாக தருகிறாயே!”
மை டியர் பிரண்ட்.இது வெறும் சாம்பல் இல்லை. விலை மதிக்க முடியாத தெய்வீக விபூதி .எந்த இடைஞ்சல் வந்தாலும் அதிலிருந்து காப்பாற்றிவிடும் .முழு நம்பிக்கையுடன் இதை வாயில் போட்டுக்கொண்டாலும் ,நெற்றியில் தரித்து பிரார்த்தனை செய்தாலும் அந்த இடைஞ்சல் மறைந்து விடும் “அப்படியா ? இது அத்தனை உசத்தியா ?’என்றபடி தன் கோட்டு பாக்கட்டில் அதை நுழைத்துக்கொண்டார் . இந்தியாவில் வேலை முடித்துக்கொண்டு திரும்பவும் லண்டன் வழியாக நியூயார்க் போக தயாரானார். ஏர்போர்ட்டுக்கு வந்து பிளேனிலும் அமர்ந்தாகிவிட்டது. அவருக்கு கிடைத்த இடமோ பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நடுவில் அமரும் நிலைமை .நிம்மதியாக சத்தமில்லாமல் சாய்ந்து படுக்கவும் முடியவில்லை.குழந்தைகள் போட்ட கும்மாளத்தில் அவருக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. பெண்களாலும் பல அசௌகரியங்கள் ஏற்பட்டது. “எப்படாப்பா நல்ல சீட்டில் அமருவோம்” என்று எண்ணும் போது டாக்டர் பாலகிருஷ்ணா கொடுத்த விபூதி பாக்கட் ஞாபகம் வந்தது.அதன் மகிமையைப் பரீட்சித்து பார்க்க நல்ல சமயம் என்று நினைத்து தன் பாக்கட்டிலிருந்து அந்த வீபூதியை எடுத்து ஒரு சிட்டிகை தன் வாயில் போட்டுக்கொண்டார். பின் பிரார்த்தனையும் செய்தார் . “ஓ பாபா நியூயார்க் பயணமாவது எனக்கு நன்றாக அமைய வேண்டும்.வசதியான ஸீட் கிடைக்க வேண்டும். “ஓ சத்ய சாயி பாபா ஹெல்ப் மீ” லண்டனில் பிளேன் வந்து இறங்கியது. அப்போது ஒலிபெருக்கியில் “மிஸ்டர் பாட்டர்ஸன் பிளீஸ் கம் டு த் ஆபீஸ் அண்ட் மீட் அஸ் இமீடியட்லி ” என்ற குரல் கேட்டு வியப்படைந்து அவசர அவசரமாக அங்கு சென்றார். ஒரு பெண்மணி அவரிடம் “இந்தாருங்கள் உங்களுக்கு முதல் வகுப்பில் நியூயார்க் பயணத்திற்கு ஒரு இருக்கை.” என்றபடி ஒரு டிக்கட்டை நீட்டினாள். “தாங்க் யூ “என்றபடி அதிகபடியான தொகையை அடைக்க சில டாலரை நீட்டினார். அதற்கு அங்குள்ள அதிகாரி “நோ நோ நோ” இதற்கு தேவையான அதிக கட்டணம் உங்கள் பெயரில் கட்டப்பட்டு விட்டது என்றார். மிஸ்டர் பாட்டர்ஸன் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். “பாபா விபூதிக்கு இத்தனை பவரா?பாபாவின் அன்புதான் என்ன! பாபாவின் கருணைதான் என்ன! பல மைல்களுக்கப்பால் இருந்தபடியே என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து என் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டார். கொஞ்சம் நம்பிக்கையுடன் வீபூதி வாயில் போட்டுக்கொண்ட பலன் இது, என்று நெஞ்சம் நெகிழ பலருக்கு இந்தச்சம்பவத்தை எடுத்துக்கூறினார்.

“பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
பரமார்த்த இஷ்டார்த்த மோட்ச பிரதாதம்
பாபா விபூதிம் இதம் ஆஸ்ரயாமி”

பாபா பஜன் முடிந்தவுடன் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பின் விபூதி பிரசாதம் வழங்கப்படும். இந்த விபூதி புனிதமானது.வியாதியைப் போக்க வல்லது. பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும். பக்தர்கள் அற்புதமான இதை தினமும் பயன்படுத்த வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.