Tag: பாஸ்கர்

  • Lakshmi Paatti

    Lakshmi Paatti

    Baskar Seshadri

    She is Mrs Lakshmi but fondly called as Krithika mess Patti of Madippakkam. She is above seventy and has been running a mess in that belt for quite some time. Her husband was the pillar of strength for her endeavor and they both were running the mess and many people used to eat in that mess for the Patti and The food purely out of affection and respect for the age and Pricing.

    She lost her daughter sometime back and the couple was struggling to make out both ends meet during the covid times all these days. People who live in that area may know her for her smiling and courteous service.

    Unfortunately months back her husband too died and she is being now supported by a known person to run the mess with Patti Heading the cooking area.

    My Friend Rangabharati who shared this news with me told that he went there with his friend  Mr Sai Santhosh.

    I shared in turn this with my friend  Mr Muralidaran KN and he extended his help through his friend Mr Om Sai and had wired me a sum of Rs 5000/ which was given to her  through a local resident Mrs Nagarajan. And Nagarajan fondly called as Raja was my class mate in college days and i thank him for his help in hand delivering the same to Paatti .

    Thanks to Rangabharathi, Sai Santhosh, Om Sai and Murali for the timely action. Will share more on this based on the response from the friends along with the photos and donations if any.

    Share
  • காட் ப்ளஸ் யூ

    காட் ப்ளஸ் யூ

    பாஸ்கர்

    சார். மன்னிக்கணும் ஒரு முப்பது ரூபாய் கொடுக்க முடியுமா?

    யார் நீங்க, உங்களை எனக்குத் தெரியாதே?

    எனக்கும் உங்களைத் தெரியாது, நான் தாம்பரம் போகணும். எனக்கு ஒர்த்தர் மூவாயிரம் ருபாய் தரணும். பஸ்ல போகக் காசில்லை. இந்தப் பக்கம் நீங்க திரும்ப வரும்போது நான் பார்த்துக் கொடுத்துடறேன்.

    சார் உங்க வயசுக்கு நான் வச்சிண்டு இல்லன்னு சொல்றது தப்பு. இந்த அம்பது ரூபாயை வச்சுக்குங்க.

    எதுக்கு சார். நான் பாபா கோவில்ல சாப்டாச்சு. முப்பது போதும்.

    இல்லை சார். உங்களுக்குத் தர வேண்டியவர் இல்லேன்னா உங்களுக்கு பஸ்ல வர காசு. வேண்டாமா?

    ஏன் சார் இப்படி அபசகுனமாய்ச் சொல்றீங்க என் பணம். என் உழைப்பு .எனக்கு உங்க பணம் வேணாம்.

    அய்யா, நான் நல்ல எண்ணத்துல சொன்னதை நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டீங்க இந்தாங்க.

    கொஞ்சம் வேகமாக வாங்கிக்கொண்டு காட் ப்ளஸ் யு என்றார்.

    சிரித்தேன்.

    என்ன சார்.

    இல்லை சொல்லுங்க.

    உங்களை அந்த காட் ப்ளஸ் பண்ணலையே என்றேன்.

    கொஞ்சம் முறைத்துவிட்டு, என் பஸ் வருகிறது என்று புறப்பட்டார்.

    உள்ளே அமர்ந்து என்னைப் பார்த்து விட்டு அம்பது ரூபாய் நோட்டோடு கையாட்டினார்.

    நான் கை கூப்பினேன்.

    மாலை என் மகன் என்னிடம் வந்து, ஒரு குட் நியூஸ் என்றான்.

    என்ன எனக் கேட்டேன்.

    இல்லை. நீ எப்ப பார்த்தாலும் தானம் பண்ணு, தர்மம் பண்ணுன்னு சொல்வ இல்ல.

    ஆமாம். அதுக்கென்ன இப்ப?

    இல்லை. இன்னிக்கு ஒருத்தர் குளத்துக்கிட்ட என்கிட்டே பத்து ரூபாய் கேட்டார். பாவமா இருந்தது பா.

    என்ன சொன்ன.

    என்கிட்டே இருபது ரூபாய் இருந்தது .அப்பிடியே கொடுத்துட்டேன்.

    குட்.

    என்னப்பா என்னைப் பாராட்டுவேன்னு நினச்சேன்.

    அவர் உன்கிட்ட பணம் வாங்கிண்டு காட் ப்ளஸ் யூன்னு சொன்னாரா?

    காட். கரெக்ட். எப்படிப்பா உனக்குத் தெரியும்.

    கொஞ்சம் கெஸ் பண்ணேன்.

    அவருக்குத் தரக்கூடாதாபா?

    இல்லை. அடுத்த வாட்டி பார்த்தா, அவர் கேட்காவிட்டாலும் கொடு என்றேன்.

    Share
  • என் ஆசான்களுக்கு எனது நமஸ்காரங்கள்

    என் ஆசான்களுக்கு எனது நமஸ்காரங்கள்

    பாஸ்கர்

    எனது தொன்னைக் காது .அதைப் பிடித்துக் கிள்ளும் லாகவம், சிவமணி சாரை விட்டால் பள்ளியில் யாருக்கும் இல்லை. சைமன் சார் அடித்த பிரம்படி அதுவும் உள்ளங்கையில் இன்னும் வலிக்கிறது. முட்டி போடச் சொன்ன மாணிக்க ரத்னம் சார். பொய் சொல்லி விடுப்புக் கேட்டுப் போன போது படவா ராஸ்கல் எனச் சொன்ன ஏ வீ எஸ் சார், இன்னும் சைக்கிளில் வருவது போலத் தோன்றும் காட்சி கண்களில் இருக்கிறது.

    நூறு வயதைக் கடக்க இருந்த நிலையில் பார்த்த பீ எஸ் சார், கண்களின் நீர் இன்னும் நெஞ்சை வருடுகிறது. கண் பார்வை இழந்த சிவமணி ஆசிரியரைக் கோவிலில் பார்த்த நெகிழ்ச்சி மறையவில்லை. போய்ப் புளியோதரை பிடி எனச் சொன்ன வாத்தியை நெஞ்சம் இன்னும் மறக்கவில்லை. கல்லூரியில் அய்யங்கார் என அன்பாய்க் கூப்பிட்ட லூதர் சாரும், காப்பி அடித்த போது பிடித்து மன்னித்த பார்த்தசாரதி சாரும் நெஞ்சில் நிற்பவர்கள்.

    அந்தக் காலத்தில் மிரட்டு உடையில் இருந்த நடேசன் சார், மைதானத்தில் ஓட விட்ட மோகனகிருஷ்ணன் சார் எல்லோரும் இந்த வறண்ட குளத்தில் கல் எறிந்தவர்கள்தாம். மேலே குறிப்பட்ட பெரும்பாலோர் மறைந்துவிட்டனர். உடன் படித்த மாணவர்கள் எல்லோரும் அறுபது வயதைக் கடந்துவிட்டனர். ஆரம்பப் பள்ளியில் படித்த சரோஜாவும், பாச்சாவும் என்னை மறந்துபோய் இருக்கலாம். ஆஷாவும் அப்படித்தான். நான் கல்லூரிக் காலத்தில் துரத்திய பெண்கள் எல்லோரும் பாட்டியாகி இருக்கலாம்.

    என் நினைவுகள் இனிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் மண்டிக் கிடக்கும் பசுமை, என் கடைசி மூச்சு வரை இருக்கும். என்றாவது ஒரு நாள் இவர்களில் யாராவது ஒருவரைச் சந்திப்பேன் என நினைக்கிறேன். இப்பொழுதும் இந்தப் பள்ளிகளை, கல்லூரியைக் கடக்கும் போது கொஞ்சம் வயிறு பிசைகிறது. ஓர் அழுத்தம் பரவுகிறது. மறதி ஒரு வியாதி போல பசுமரத்து ஆணியாய்க் கிடக்கும் நினைவுகளும் ஒரு வியாதி தான். நினைவுகள் எனது வாழ்வை நடத்துகின்றன.

    என் ஆசான்கள் எல்லோருக்கும் எனது உள்ளார்ந்த வணக்கம். என்னை ஒரு சுமாரான மனிதனாக மாற்றியது இவர்கள்தாம். கெட்டு கீரை, விதையாகப் போயிருக்க வேண்டியவனைத் தடுத்து ஆட்கொண்டவர்கள் இவர்கள் அனைவருமே.

    இவர்கள் எல்லோருக்கும் எப்படி நான் நன்றியைச் சொல்வேன்? என் நெகிழ்ச்சிதான் எனக்குச் சமாதானம் சொல்லும். வேறு வழியில்லை. என்னை மன்னித்து விடுங்கள் சார், இனிமேல் நன்றாகப் படிக்கிறேன் எனச் சொல்ல முடியுமா? அல்லது படிக்கத்தான் முடியுமா?

    Share
  • திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா (டி.எஸ்.பாலையா)

    திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா (டி.எஸ்.பாலையா)

    பாஸ்கர்

    அவர் பெரிய உயரம் இல்லை. வசீகரமான முகம் இல்லை. ஆனாலும் அவரின் நடிப்பு, சரித்திரச் சிகரம். அவர் டி எஸ் பாலையா. அவர் மக்கள் திலகம் நடிகர் திலகத்திற்கு முன்னோடி.

    பாலையா என்றால் எல்லோரும் காதலிக்க நேரமில்லை, தில்லானாவைச் சொல்வார்கள். இந்த வண்ண சினிமாவிற்கு முன் அவரின் பாமா விஜயம் படத்தைப் பாருங்கள். அது போல ஒரு செறிந்த நடிகர் இந்தக் காலத்தில் தேடினால் கூட, கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை. இது அவர்களைக் கொடுத்த நடிப்புப் பள்ளியின் பலம்.

    அவர் குரல், செய்கை எல்லாம் நம் வீட்டு மனிதர்களைக் கண் முன் நிறுத்தும். அவரின் டைமிங் சென்ஸ், வசன உச்சரிப்பு, சட்டென மாற்றிக்கொள்ளும் முக பாவம், கணேசனே கொஞ்சம் பயப்படும் ராதா, ரங்காராவ் பட்டியலில் பாலையாவுக்கும் இடம் உண்டு. அவர் கடைசிக் காலத்தில் நடித்த எதிரொலி படத்தில் கூட அதைக் காணலாம்.

    இன்று இயல்பான நடிப்பு என்று கொண்டாடும் நடிகர்கள் பலர், அவரின் படங்களைப் பார்க்க வேண்டும். அவர் இயக்குரின் நடிகர் – பாத்திரத்தின் நடிகர். இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவர் எனப் பத்மினி பாடும்போது கணேசன் தொடையில் லேசாகத் தட்டி தனது ஆதங்கத்தைச் சொல்லும் போது அவர் முகத்தைக் கவனியுங்கள் பிரில்லியன்ட்.

    பாவ மன்னிப்பு படம் என நினைவு. வந்த நாள் முதல் பாடலில் சிறையிலிருந்து வரும் காட்சி. கொஞ்சம் தயங்கி நின்று தலையைச் சொரிந்துகொண்டு வெளியேறும் காட்சியை அவர் உருவாக்கத்தில் கொண்டு வந்ததை எந்தப் பூனே பிலிம் கல்லூரியும் சொல்லித் தர முடியாத ஒன்று.

    அவருக்கு 2021 ஆகஸ்டு 23 அன்று, நூற்று ஏழாவது பிறந்த நாள்.

    Share
  • Face is not the Index of the Mind

    Face is not the Index of the Mind

    Baskar Seshadri

    I used to see that lady very often in the Mada streets of Mylapore and she was around forty years old. She will speak to herself and wander here and there with a bag on her shoulders. Once when I offered some food months back she simply declined to accept and went about her work. She used to be very rough on everyone and try always to be agitated.

    She is very slightly imbalanced.

    One day when i was shopping in a pan shop she came straight and told me that she wanted to get a D T Next. (This English daily costs Rs Two) She took the paper and walked away.

    Just recently when I was there in the pan shop she started narrating that she was a close family member of A Thangavel Nadar and sons and she is in penury since she was denied the property by some family members. I don’t know how far it’s true.

    Then she spoke in a simple blemish-less English for about half a minute about her and moved on with a smile .I was wonder struck and the very opinion that all like her who are on Road are for alms . It’s not to be.

    I am working as to how I could help her with some assistance one of these days. She is our Fellow citizen and she deserves what all we deserve. The equality is the basis of life and we should nourish that. Since she is a middle aged woman I have avoided her photo. I am sure you may come across her one of these days in the vicinity of Mada streets.

    Share
  • கைக்கடிகாரம்

    கைக்கடிகாரம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    அந்தப் பள்ளி நாட்களில் எனக்குக் கைக்கடிகாரம் மீது ஒரு மோகம். அதனைக் கையில் கட்டிக்கொண்டு நடப்பது போல எப்போதும் ஓர் அதீதக் கற்பனை. கையில் அணிந்துகொண்டால் ஒருவர் ஒசத்தி என்ற எண்ணம், அப்போதே மனதில் இருந்து இருக்கிறது. அப்போது வெளிநாட்டுக் கைக்கடிகாரம் மிகப் பிரசத்தி. பேவர் லூபா என்று ஒரு வகை இதில் மிக உயர்வு எனச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். வட்ட வடிவில், சதுரத்தில் எனப் பல வகை.

    இது தாழ்வு மனப்பான்மையால் எழுந்த ஒரு வகையான எண்ணம். அலங்காரமான தோற்றம் தான் சமூகத்தில் மதிப்புக் கொடுக்கும் ஒரு உபகரணம் என்பது அப்போதைய கணிப்பு . இது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் குணம். பெருமை தேடும் புத்தி. அங்கீகாரம் தேடும் சிந்தனை என்ற விஷயம். என்னைப்  பார்த்து, தம்பி, மணி என்ன என ஒருவர் கேட்க வேண்டும் என்றும் அதற்கு நான்  அலட்டலாகப் பதில் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் தான் அப்போது  மேலோங்கி நின்றது.  அதுவும் கொஞ்ச நாள், அதற்கு பிரவுன் பட்டை, கொஞ்ச நாள் கருப்பு என நிறம் மாற்றி அணிய வேண்டும் என்று ஆசை வேறு.

    பறத்தல் மனசு. தரையில் தங்காது.  கைக்கடிகாரம் கட்டின நாள் முதல் விஷயம் இருக்கிறதோ  இல்லையா கையை உயர்த்தி மணி பார்ப்பது ஒரு சுகம். ஒரு புத்தகம் தராத புத்துணர்ச்சி. இது தேற்றிக்கொள்ளும் சிந்திப்பு  அது எப்படி ஊடுருவி இருக்கிறது என்பது இப்போது தான் புரிகிறது. வாழ்க்கை, அலட்டலில் இல்லை. அமைதியில் இருக்கிறது. அங்கீகாரத்தில் இல்லை. உள்ளத்தின் உள்ளே செல்வதில் என்பது தான் எவ்வளவு பெரிய உண்மை?

    உண்மைகள் புரிவது ஒரு பெரிய விஷயம் இல்லை. அது அந்தந்த நேரத்தில் புரிய வேண்டும். தாமதமாய்ப் புரிந்துகொள்வதும் புரிந்துகொள்ளாமால் இருப்பதும் ஒன்றே. எந்த இயல்புக்கு ஒட்டாத செய்கையும், நாள் தாங்காது . அவசரத்திற்கு மணி பார்க்க, பின்னர் சுவர்க் கடிகாரம் தான் சரி என்ற நிலைக்கு மனம் தள்ளப்பட்டது. பிறகு ஒரு கனமான கைக்கடிகாரம் மேல் ஆசை வந்தது. கொஞ்ச நாளில் அதுவும் விட்டுப் போய், அலங்காரமான பொருள் வந்தும் வாட்ச் மீது இருந்த ஆசை சுத்தமாக இன்று இல்லை. ஒரு பொருளை அடைந்து பின்னர் தெளிவு பெற்று, அதனை விட்டு அகல்வது என்பது ஒரு முதிர்ச்சி. அதன் பக்கம் போகாமலே அண்டாமலே நகர்வது இன்னொரு வகை. ஒவ்வொரு தெளிவுக்கும் ஓர் அனுபவம் வேண்டும் என நினைப்பதே பெரும் ஏமாற்று.

    வாழ்வை உப்புக் காகிதம் வைத்துத் தேய்ப்பது போல உரசி உரசிப் பார்த்தால் தேய்க்கப்பட்ட பொருளும் தேய்த்த காகிதமும் காணாமல் போய் நினைவு மட்டும் அசை போட்டுக்கொண்டு இருக்கிறது.

    Share
  • பெல்ஜியம்டா

    பெல்ஜியம்டா

    பாஸ்கர்

    அது ஒரு ஆறடி முகக் கண்ணாடி
    பெல்ஜியம்டா என்பார் தாத்தா சில சமயம்
    கப்பல்ல வந்ததுடா  என்பார் அப்பா

    நாராயணா என நின்றவாறு வீழ்ந்தார் தாத்தா ஓர் நாள்
    அப்பா நின்று அரைக்கால் சட்டையோடு தலை சீவுவார்
    கிருதாவை அளவு பார்த்து, தானே சிரித்துக்கொள்வார்
    கை நடுக்கத்திலும் கடைசி வரை அவரே சவரம் செய்தார்

    ரெமி பவுடரை வயிற்றில் கொட்டிக்கொள்வது வேடிக்கை
    நானும் கூட என் அழகை அவ்வப்போது  ரசிப்பேன்
    பாதரசம் போனதனால் பார்ப்போர் பொலிவிழந்தனர்
    கண்ணாடியில் கறைகள் பட்டு யாரும்  சீந்தவில்லை
    யுவதியைக் கூட ஒரு முறை அது அழகாகக் காட்டவில்லை

    ஓர் நாள் அதில் நான் டர்பன்  தாத்தா போல் தெரிந்தேன்
    மறுநாள் கண்ணாடியில் சட்டையில்லாத அப்பா வந்தார்
    பக்கத்து வீட்டுக் காயத்ரியும் அவ்வப்போது வருவாள்

    பழைய சாமான்காரன் இது போலக்  கிடைக்காதென்றான்
    நேற்று அதுவே நின்றாவாறே விழுந்து உடைந்தது
    இப்போது எல்லாத் துகள்களிலும் என் முகம் தெரிகிறது
    பெல்ஜியம்டா சீமா என்ற தாத்தாவின் குரல் கேட்கிறது.

    Share
  • Life is Crude

    Life is Crude

    Baskar​ ​Seshadri

    When I was motoring I could hear some devotional song from somewhere but there was no function or any event. Listening to the rendering  while driving  I found this couple standing in a corner of a road singing with the little musical instruments on South Mada street Mylapore. I could see the big face of a penury and grief stricken couple who happened to be differently- abled.

    Yes they can’t see and their vision was lost decades back and they manage their life by doing this singing wherever they go. I felt very heavy inside and it was almost an ache and I was unable to stand there further. I personally know the pain of what poor vision is and this sight was so deep in me and made me unmoved for a while.

    No answer can redress this couple and no money can ever satiate what they need. Don’t understand the crudeness of this imbalanced life. What’s the fun in posting a photo, poetry or sarcasm on a wall? I am sensible to understand in being absurd as someone remarked to me the other day. He was cultured enough to describe me gently. I don’t fit anywhere. I am a shapeless sapien. I should not compare, but a comforting mind of life hits me on my face.

    Share
  • Proud of Young Tejasvi

    Proud of Young Tejasvi

    Baskar Seshadri

    The Blue cross of India had kept the water bowls in many streets near Mandaveli. But that was in ceramic and it could not last long. They  get damaged very soon.

    Tejasvi is a young  energetic boy who used to play cricket in the street (angry Batsman) had noticed this and wanted to do something. He smartly approached a mason who was doing a housing project nearby  and asked him whether he could do a small bowl at some nominal cost and it did happen in just a day. Now it’s cured and ready to quench the birds, cattle and few dogs that roam over.

    I Never thought of this angle and I feel proud of Young Tejasvi for having stumbled upon this idea.

    Kudos Tejas. The Bowl he did is in Tirvengadam street.

    Friends can think on these lines in their respective streets.

    Share
  • விடிவெள்ளி

    விடிவெள்ளி

    பாஸ்கர்

    (நடிகர் திலகத்தின் நினைவு நாள் இன்று)

    சைக்கிள் ஓட்டுவதில் நண்பர் சிதம்பரம் கெட்டிக்காரன். பெரும் பொறுமை. எந்த இடர்ப்பாடும் இல்லாமல் ஓட்டும் அந்த லாகவம் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. எங்கள் இணைப்புப் பாலம், இரவுக் காட்சி. அது வெலிங்டனா, சித்ராவா என்று நினைவு இல்லை. கணேசனைப் பார்ப்பது எங்களுக்கு ஒரு பெரும் சந்தோஷம். இதில் மணியும் எங்கள் கட்சி.

    அவனுடன் நான் செல்வது தனிப் பந்தி. விடிவெள்ளியில் தோரணம் கட்டும் காட்சியில் அவர் காட்டும் அதிர்ச்சியோ, அல்லது பச்சை விளக்கில் அவர் திருக்குறள் சொல்லும் அழகோ, உயர்ந்த மனிதனில் அசோகனிடம் கைகளை மடக்கி அவன் நல்லா பைட் பண்றாண்டா எனச் சிவகுமாரைப் பார்த்துச் சொல்லும் பாங்கோ.. தெய்வ மகனில் தம்பியிடம் பணம் கொடு எனக் கண்களால் பேசுவதோ… எனக் கணேசனைச் சுமந்துகொண்டே போகலாம்.

    எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் நாடகத் திறமையைக் கொண்டு ஒரு பாத்திரத்தில் ஊறி, அதைச் செம்மையாகக் கொண்டு வருவதில் அவருக்கு நிகர் இல்லை.

    ஒரு படத்தில் அவர் பாட அமரும் முன் அந்தப் பெரிய சபையைப் பார்த்துப் பிரமித்து பயப்படும் நிலையை முகத்தில் காட்ட, சிரித்தவாறு வியர்வையைத் துடைத்துக்கொள்ளும் ஒரு பிரில்லியன்ட் பெர்போர்மேர் அவர்.

    பாசமலரில் அவர் ஜெமினியோடு பேசும்போது பென்சிலைச் சீவிக்கொண்டே முறைக்கும் முறைப்பு நினைவு உண்டா? எனக்கு விஸ்வநாதன் இடது என்றால், நடிகர் திலகம் வலது கண்.

    Share
  • Salutes Selvaraj

    Salutes Selvaraj

    Baskar Seshadri

    Selvaraj, a young driver, 30, was driving the bus with a good number of passengers towards Gopichettipalyam.

    Suddenly he developed chest pain and tried to manage and bear the pain. But since it developed very seriously and became unbearable he quickly decided to halt the vehicle somewhere in a corner of the road safely and collapsed on the seat then and there.

    All the passengers were saved and many were in tears to see a sincere man with his best emotional intelligence who had saved the passengers and had sacrificed his life too.

    Salutes Selvaraj Sir. This man is equivalent to a freedom fighter and a soldier and deserves a highest civilian Award and purse to his family.

    Share
  • அப்பா

    அப்பா

    பாஸ்கர்

    பள்ளி நாட்கள் எப்படிப்பட்டவர்க்கும் ஒரு இனிமையான விஷயம். படிப்பவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் , ஆளுமை எல்லாம் தாண்டி, பள்ளி நாட்கள் ஒரு கூட்டு வாழ்க்கை. அதுவும் இரண்டு மாத விடுமுறை முடிந்து அடுத்த வகுப்பில் எல்லோரும், புது இடத்தில கூடும்போது ஏற்படும் சந்தோஷம் எந்த சினிமாவும் பணமும் கொடுக்க முடியாதது.

    சின்ன சட்டை, அதில் பிய்ந்த பொத்தானைத் தைக்க வேண்டாம். அதனை அப்பாவோ அம்மாவோ உள்வழியாக பின்னை வைத்துக் குத்தி (தலையை குனியாதடா) ஊக்கு மாட்டி அனுப்பும் போதே தெரியும். ஒரு விளையாட்டில் அது படக்..

    இருந்தாலும் அவர்களின் அன்பு இன்றும் என் கண்ணில் நீர் வரவழைக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத செயல்.

    இங்கு மாதாவும் பிதாவுமே குருவும் தெய்வமும். அறுபதுகளில் மயிலாப்பூரில் அம்பிகா ஸ்டோர்ஸ் புத்தகக் கடை மிகப் பிரசித்தம். அங்கு லேபில் வாங்கி அதனைக் கட்டுக் கட்டாய் வைத்துக்கொண்டு வகுப்பில் பீத்திகொள்ள அவ்வளவு ஆசை. என் தந்தை புத்தகங்களுக்கு நேர்த்தியாய் அட்டைபோட்டு நாலு பக்கமும் அதனைச் சோற்றுப் பருக்கை வைத்து ஒட்டி, அதனை வெயிலில் காய வைத்து, அடுத்த நாள் அந்த அட்டையில் பெயரை, கூர்ப்பான பௌண்டைன் பேனாவால் எழுதி, துணிப்பையில் போட்டுக் கொடுப்பார். எனக்கு எந்தப் பக்கம் கிழிந்தாலும் கவலை இல்லை. அப்பா ஒட்டின லேபிளும் அவர் கையெழுத்தும் ஒன்றும் ஆக கூடாது.

    இன்று என் அலுவல் பணி சம்பந்தமாய் ஒரு புத்தகக் கடைக்குச் சென்ற போது அந்தக் கடை வாசம், என் நினைவுகளைப் பள்ளிக்கு அனுப்பியது. ஒரு புதுப் புத்தகம் எடுத்து, அதனை அழகாய் மடித்து, சீட்டுக்கட்டு போல, பக்கங்கள் புரட்டி, வாசக் காற்று முகர்ந்தேன். என் தந்தை வாசம் காற்றில் மலர்ந்தது.

    Share
  • போதி மரம்

    போதி மரம்

    பாஸ்கர்

    எழுபதுகளின் முடிவில் எம் ஜி ஆர் ஆட்சியில் மாணவர்களுக்குப் பதினைந்து ரூபாய் பஸ் பாஸ். இலவசமாக எங்கும் செல்லலாம். எங்களுக்குக் கொண்டாட்டம்-பிரயாணச் செலவு இல்லை. பசிக்குப் பொறை சிங்கள் டீ. எப்போதும் ஒரு நாயர் கடை எங்கேயும் உண்டு. படிப்பெல்லாம் பிடிப்பு இல்லை. வீட்டுக்காகக் கல்லூரிக்குச் சென்றோம். அரட்டை. சினிமா, பத்திரிகை சிவாஜி. இது தான் வாழ்க்கை. வாராவாரம் மாங்காடு, திருவேற்காடு. எங்கள் கும்பலின் அலட்டல் பேச்சு, பேருந்து முழுக்கக் கேட்கும். எல்லோர் பார்வையும் எங்கள் மீது. இதில் நடுவே ஆங்கில அலட்டல் வேறு.

    சிறு வயசு. என் பக்கத் துணை சந்திர மௌலி. சுருக்கமாய் மௌலி. காலை அஞ்சு மணிக்குக் கச்சேரி ஆரம்பம். இந்த பாசில் சுற்றாத ஊர் இல்லை. படிப்பறிவு குறைவாய் இருந்த எனக்குப் பள்ளியில் தர்ம பாஸ். கல்லூரியில் பஸ் பாஸ். எல்லாம் மடியில் விழுந்த ஆப்பிள். பல்லவனில் எல்லாத் திசையும் எங்களுக்கு அத்துபடி.. சில இருக்கைகளில் எங்கள் பெயரும் இருக்கும். எல்லாம் எங்கள் பால்பென் கைவண்ணம். வாழ்க்கை எல்லோரையும் ஈர்க்கவே என்று ஆணித்தரமாய் நம்பின காலம்.

    இந்த மயக்கம் அந்த வயதில் நிஜம். ஆனால் படிப்பு அதற்கு விலை என்பது எனக்குப் புரிய கொஞ்ச காலமானது. சேர்ந்து அரட்டை அடித்த கூட்டம் தனித்தனியாகப் படிக்கச் செல்ல நான் தனியானேன். மூணு வருஷம் காணாமல் போனது அன்று தான் தெரிந்தது. பெரிய வலி. நான் இன்னும் பட்டதாரி இல்லை எனப் புரிந்த பெரிய வலி. இனி காலை எழுந்து கல்லூரிக்கு வர வேண்டாம் என்பது சந்தோஷம் இல்லை. பெரிய துக்கம். புத்திசாலி இல்லையெனினும் என் காதல், அந்த கல்லூரி மேல் படர்ந்து இருந்தது.

    இந்த வலியில் இரண்டு மாதம் கழித்து பரீட்சை எழுதப் பேருந்தில் அமர்ந்தேன். டிக்கெட் டிக்கெட் என நடத்துர் என்னைக் கேட்க, வேதனையான தொண்டையில் ஜெயின் காலேஜ் ஒன்னு என்றேன். என் வலி அவருக்குத் தெரியாது. விவரம் தெரிந்து நான் வாங்கின முதல் டிக்கெட். என்னால் இருக்கையில் கர்வமாய் அமர முடியவில்லை. மூணு வருஷப் படிப்பைத் தாண்டி அந்த பஸ் பிரயாணம் எனக்கு ஒரு போதி மரம்.

    Share
  • Ethiraj Kalyana Mandapam – Ayurveda hospital for free COVID treatment

    Ethiraj Kalyana Mandapam – Ayurveda hospital for free COVID treatment

    Seshadri Baskar

    When Ethiraj Kalyana mandapam was converted as a covid hospital i thought it would be only an allopathy hospital. But it’s not to be and it’s now an Ayurveda hospital with fifty beds. People generally show interest to go for allopathy and in this medical Unit started almost a week back it had got filled with sixteen patients against the capacity of fifty bedded centre.

    People who test positive can directly show the Mobile message and Aadhar card Xerox copy to get admitted. The medication and all the food is totally free for the patients .The facility has got clean bathroom facility and other day to day needed amenities.

    They will provide all the assistance and in case of information and if anybody wish to get admitted (I wish not honestly) can contact Mr. Sivasankar over there at 9444358891. 

    Please refer this service to the needy and in case of assistance I can be reached at 98410 33888 so that I can guide and assist my bit.

    The venue is Ethiraj Kalyana Mandapam on TTK Road Opposite the Hindustan Petroleum Pump near Rajkamals Film office.

    Share
  • Let the Predation issue stop allover in schools

    Let the Predation issue stop allover in schools

    Seshadri Baskar

    When the said victims expressed that they could not travel during the lockdown on any grounds, they are still being compelled to come in person. Many old students told they are ready for a video conference but the management is adamant on the personal Visits. In such case of a meeting I would like these following to be followed.

    1 Two women police officers of high rank to be present

    2 The whole process has to be videographed and the digital document should be with police

    3 All the victims should be allowed to cover their faces and then be enquired

    4 A Lawyer especially a women lawyer has to be present during the investigation

    5 All expenses for the said complainant should be borne by the said school including the travel

    6 No information of the investigation be let out to press and it’s the onus of the Police and Legal Personalities

    7 Mother of the said student should be allowed to accompany especially sister if Possible else mother is the only choice.

    Besides when the complaints had already been sent to the concerned departments there is no point in making an enquiry in the school level without representation from the Government.

    This should be applicable to all schools which are connected with the Predation issue.

    Share