Tag: இசைக்கவி ரமணன்

  • பலவும் ஒன்றும் பராசக்தி

    இசைக்கவி ரமணன்

     

    (நவராத்திரி வரப் போகிறது. பராசக்தி முற்றத்தில், முத்தையாவின் முத்துக்களை வைத்துக்கொண்டு பல்லாங்குழி ஆடப் போகிறாள் அபிராமி. அதுவரை பொறுக்குமா இந்தப் பிள்ளை மனம்?!)

     

    an111111 (1)

     

    வெளியாய்ச் சும்மா கிடக்கின்றாள்3501189646_19543e015b

    வானாய் நீலம் சூடுகிறாள்

    ஒளியாய் இருளில் எழுகின்றாள்

    ஒவ்வொரு துளியாய் விழுகின்றாள்

    துளியெனும் ஒற்றை ஊசியினால்

    துயரக் கடலைக் கடைகின்றாள்

    அளித்தல் அன்றி வேறறியா

    அன்பே என்றன் பராசக்தி!

     

    அவளாய் இருப்பது அவளழகு

    அடயா ரறிவார் அவளியல்பு?

    ஆடும் கடலும் அவளேதான்

    Durga-J

    அசையா மலையும் அவளேதான்

    தவத்தின் முனைப்பும் அவளேதான்

    தவியாய்த் தவிப்பதும் அவளேதான்

    தருணத் திற்கோர் விதம்காட்டித்

    தான்மாறா தவளே பராசக்தி!

     

    வீசி அடிக்கும் சவுக்குமவள்

    விரியும் சின்ன மலருமவள்

    பேசி முடியாப் பெருமையவள்

    பிதற்றித் திரியும் பேதையவள்

    யோசிக் காத ஞானமவள்

    உயிர்நரம் பில்வரும் கானமவள்

    நேசிப்பா ரின் நேசத்தில்

    நிதம்வளர் பவளே பராசக்தி!

     

    காதல் அவளது கண்ணாடிimages (1)

    கவிதை அவளது முன்னோடி

    சாதல் வரைக்கும் முகம்காட்டா

    சாகசம் அதுதான் என்னேடி?

    வேதனை அவளது விந்தைமுகம்

    வேதம் அவளது மெய்ப்பாடு

    போதையின் மடுவில் மிகமெதுவாய்ப்

    புலரும் தெளிவே பராசக்தி!

     

    சொல்லில் படாமல் இருந்தபடிimages (2)

    சொல்லில் சுடரும் மகராணி

    சொட்டுச் சொட்டாய்த் துளித்துளியாய்

    உயிரைப் பருகும் ஒரு தேனீ

    புல்லின் மென்மையும் அவள்சக்தி

    புயலின் வலிமையும் அவள்சக்தி

    போதும் முடியா தெனும்போது

    பொருந்திச் சிரிப்பாள் பராசக்தி!

     

    07.09.2014 / ஞாயிறு / 06.20

    Share
  • கன்னத்தில் மின்னலொன்று

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (43)

     

    கன்னத்தில் மின்னலொன்று
    (பாடல்)

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B1/[/mixcloud]

    10599175_739284626129228_1932362888911507228_n

    கன்னத்தில் மின்னலொன்று
    கண்சிமிட்டித் தான்மயங்க
    கள்ளூறும் கண்ணிரண்டைக்
    கண்டுகண்கள் தாம்கிறங்க

    பொன்னூறும் பூவிதழில்
    வானமிழ்தம் தானிறங்க
    என்னசொல்லிப் பாடுவதோ
    என்னுயிரே தாலேலோ!

    பாறையினில் ஈரமென
    பாலையினில் சாரலென
    பந்துநிலவாய் நுழைந்தாய்
    நெஞ்சில் நின்று நீ நெகிழ்ந்தாய்

    சூறையினில் காவலென
    கூரையினில் சேவலென
    சொந்தபந்தமாக வந்த
    தோழமையே தாலேலோ!

    அன்றிலிருந் தின்றுவரை
    இன்பமிது போல இல்லை
    என்றுமிது நீள்கவென்றே
    என்றன்மனம் ஏங்கும் எல்லை

    குன்றில்வரும் வெண்ணிலவே!
    கொப்புக்குயில் பண்ணழகே!
    சிட்டுக் குருவிச் சிறகே!
    சித்திரமே தாலேலோ!
    பார்த்தவிழி பார்த்திருக்க
    பருகும்விழி பருகிநிற்க
    சேர்த்தகதை தீர்ந்ததம்மா
    ஜென்மம்கரை சேர்ந்ததம்மா

    ஆர்த்துவரும் பொன்னருவி
    அள்ளிவரும் சீதனமே
    அன்புமயமான அன்பே
    ஆனந்தமே தாலேலோ!

    படத்திற்கு நன்றி

     

    Share
  • மழைவந்தது போல்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (42)

     

    மழைவந்தது போல்

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2/[/mixcloud]

    10300956_511805985622125_9062938083888487518_n
    மழைவந்தது போல் நீ வந்தாயா?
    நீ வந்தது போல் மழை வந்ததா?

    இழை இழையாய் விழுந்துகொண்டிருக்கும் இந்த
    இன்ப விந்தையின்
    இடைவெளிகளில் ஏதோ ஒன்று
    கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது

    என்னால் அதைப்பிடிக்க முடியாது என்றாலும்
    நின்ற இடத்தில் புரிந்துவிட்டது இன்று

    என்றைக்கு வந்தாயோ அன்றிலிருந்து
    இன்றைக்கும்
    இன்றைக்குத்தான் நீ வந்ததுபோல்

    நான்
    பரவசமாகிறேன்…படபடக்கிறேன்..
    பதறுகிறேன்…நெகிழ்கிறேன்…
    பற்றமுடியாமல் உடைந்து அழுகிறேன்…
    பருக முடியாமல் நெஞ்செல்லாம்
    பாறையொன்று ஏறிக்கொண்டு அமர்ந்ததுபோல்
    பாரம் தாங்க முடியாமல் பரிதவிக்கிறேன்
    பாடலே உயிராக வரவேற்கிறேன்

    என்
    வரவேற்பின் நேர்மையை நீ மதித்தாலும்
    சங்கடப் படுகிறாய்..துணுக்குறுகிறாய்..
    சந்தேகத்தை, உன் நல்லெண்ணத்தால்
    தவிர்க்க முயல்கிறாய்

    இன்றுதான் உன் நியாயம் புரிந்தது
    இத்தனைநாள் உன்னை எப்படியெல்லாம்
    சங்கடப்படுத்திவிட்டேன்!
    தன்போக்கில் சென்றுகொண்டிருந்த தெய்வம்,
    என்னைத்தான் சந்திக்க வந்தது என்று
    பேதைமையால் நம்பிக்கொண்டு
    பாதையை மறித்துப் படுத்துக்கொண்டேனே!

    எனக்கு
    நீதான் உயிர்.
    வாழ்க்கை.
    எ..ல்..லா..ம்

    உனக்கு?
    நான்
    ஒ..ன்..று..மே இல்லையே!!

    அடடா! உன்னை
    எதிரே கண்ட பதற்றத்தில், என்
    ஏழ்மையை மறந்தே போய்விட்டேனே!!!

    சரி
    எனக்கும் உனக்கும் வேறு வழியில்லை
    எனவே என்னை மன்னித்துவிடு!!
    இதற்குப் பிறகு என்ன நடக்குமோ
    எனக்குத் தெரியாது
    கதையைச் சொல்லும் எழுத்துக்குக்
    கதையோ புரியாது………..

    Share
  • கூ சிக்கூ!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (41)

     

    கூ சிக்கூ!

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95/[/mixcloud]

    images (1)
    கூசிக்கூ கூசிக்கூ சிக்கு சிக்கூ! ஆஹா
    கூசிக்கூ கூசிக்கூ சிக்கு சிக்கூ!

    கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதும் கொஞ்சம் கட்டிக்கொள்ளுவதும் கூசிக்கூ
    கண்ணிமைக்கும் நேரத்தினில் சின்ன முத்தம் தருவது கூசிக்கூ
    கண்ணும் கண்ணும் உண்ணுவது கூசிக்கூ
    நெஞ்சை நெஞ்சம் கெஞ்சுவது கூசிக்கூ
    அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு அங்கே இங்கே கிள்ளிக்கொண்டு
    அப்பாவி போலமுகம் அழகு காட்டுவது (கூச்சிக்கூ!)

    இரவினில் நடந்தது பகலிலும் தொடர்வது கூசிக்கூ, ஆஹா
    விளிம்பினில் ததும்பி வழிந்திடும் மதுவே கூசிக்கூ
    வயதுகள் தொலைவது கூசிக்கூ
    காலம் இடம் மறப்பது கூசிக்கூ
    இந்தக்கணம் மிகநிஜம் இந்தசுகம் நிரந்தரம்
    என்றுவந்த சொந்தமொன்றில் சொர்க்கம் மயங்குவது (கூச்சிக்கூ!)

    நெஞ்சிலுள்ள நரம்புகள் அத்தனையும் யாரோ
    வீணை மீட்டுவது கூசிக்கூ
    கொஞ்சலென்னும் மொழியில் கோடிக்கோடிக் கவிதை
    கொட்டித் தீர்ப்பதே கூசிக்கூ
    சின்னச்சின்ன முத்தச்சத்தம் கூசிக்கூ
    முனகி மயங்குவது கூசிக்கூ
    உன்னையன்றி யாருமில்லை நம்மையன்றி ஏதுமில்லை
    என்றவொரு வாசகத்தைத் திக்கித்திக்கிப் பேசுவது கூசிக்கூ

    நீ
    சொல்லித் தந்த மந்திரம் கூசிக்கூ, நெஞ்சைக்
    கொஞ்சும் கண்ணின் தந்திரம் கூசிக்கூ
    காதலென்னும் போதையினில் காலமின்றி வாழுவதும்
    நட்டநடு அம்பலத்தில் ரகசியமானது கூசிக்கூ!

     

    படத்திற்கு நன்றி

     

    Share
  • விடைபெற்றான் வீட்டுமன்

    இசைக்கவி ரமணன்

     

    img311

    ஒன்பது துளைகள் வைத்தவன் வைத்தான்

    உயிர் ஒரு சிறிதும் கசியவில்லை

    உடல்விழும் தருணம் உயிர்பறந்தோட

    ஒருதுளை கூடத் தேவையில்லை!

     

    ஒருபெரும் வீரன் தைத்தான் தைத்தான்

    உயிர்பிரியாமல் தடுக்க

    உள்ளம் உயிருக்கு விடைதரும் வரையில்

    உடலைப் பூமியில் இருத்த!

     

    தொன்மைப் பாட்டன் துண்டுப் புண்ணியம்

    போலச் சரத்தில் கிடந்தான்

    தோள்வரைப் பெயரன் தொடுத்த அம்புகள்

    துளைக்கத் துளைக்க நெகிழ்ந்தான்

     

    தூரே எரிந்து தொலையும் கதிரினும்

    கொடுமை குருதிச் சிவப்பு

    துகில்விழும் நேரம் சும்மா இருந்த

    நாணம் அதைவிடச் சிவப்பு

     

    வீழ்வதும் வெல்வதும் வீரர்க் கியல்பு

    வெற்றியும் தோல்வியும் ஒன்றே

    வீழ்ந்த தெவர்க்கு? வெற்றி எதற்கெனும்

    விவேகம் ஒன்றே தீர்ப்பு

    பாழ்சப தத்தால் பாதகர் பக்கம்

    பாட்டன் பாவம் தவித்தான்

    பலவித மாயறம் பார்த்தவன் சபையினில்

    பாஞ்சா லியைக்கை விட்டான்

     

    சபதமும் தவறு சபையினில் அவளைக்

    கதற வைத்ததும் தவறு

    சண்டா ளரினைத் தண்டிக்காமல்

    ஏவல் செய்ததும் தவறு

    மிகவோர் உயரிய தளத்தி லிருந்து

    மேதினிக் கிறங்கி வந்தான்

    மீண்டும் எறிந்திட நின்ற கங்கையை

    மன்னவன் தடுக்க உயிர்த்தான்

     

    அங்கே பிசகிய விதிதான் இங்கே

    அம்புக ளாகத் தைக்கும்

    அறம் பிழைத்ததால் உடலில் உயிரை

    அணுவணு வாக வதைக்கும்

    பங்க மடைந்து பாவம் கழுவப்

    படுத்தான் அம்பில் பாட்டன்

    பரந்தாமனே பக்கத்திருந்து

    பரிவுடன் பார்க்கப் பார்த்தான்!

     

    இமையின் முடியே சரமாய்த் தைத்தும்

    இருவிழி திறந்தே இருந்தது

    இடைவெளி வழியே எதிரே சிரித்த

    இடையனைப் பார்த்துப் பனித்தது

    அமைந்த வானைப் பார்த்துத் தன் கதை

    அனைத்தும் ஒருமுறை படித்தது

    அங்கே கங்கைத் தாய்வருவாளா

    அகல முயன்று தவித்தது

     

    செய்த பிழைகளை எய்த அம்புகள்

    சிறிது சிறிதாய்க் கழுவ

    சிதையும் உடலின் சித்தத்தினிலே

    செப்பரு ஞானம் விரிய

    எய்தது தானே என்னும் தெளிவில்

    விதியும் கதியும் கலக்க

    எழுந்து விழுந்தவன் விழுந்து எழுந்தான்

    எஞ்சிய வர்கள் வியக்க!

     

    03.09.2014 / புதன் / 16.30

    Share
  • சிட்டு

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (40)

    சிட்டு

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F/[/mixcloud]

    hqdefault
    அந்தச்
    சிட்டுக்குருவி பட்டுச் சிறகைக் கொஞ்சம் விரித்தது – அதன்
    செக்கச் சிவந்த சின்ன இதழின் சிமிழ் திறந்தது
    எட்டுத் திக்கும் முத்தம் பட்டுத் தித்திப்பானது, என்
    எழுத்தெல்லாம் அதில் விழுந்து தடம்புரண்டது!

    உயிர்குடித்து உயிர்கொடுக்கும் கண்ணைச் சொல்வதா? என்
    உள்ளமெங்கும் உலவுகின்ற பண்ணைச் சொல்வதா?
    பயிர்வளர்த்துத் தலையைக்கோதும் தென்றலென்பதா? இது
    பரிவெல்லாம் ஏங்குகின்ற மன்றமென்பதா?

    நெஞ்சில் வந்த நிலவுநின்று நெகிழ்ந்துபோனது, அதன்
    நீல ஒளியில் கோல வானம் மகிழ்ந்துபோனது
    பஞ்சுமேகம் கையணைப்பில் பாவையானது! அதன்
    பார்வையொன்றே என்னுயிரின் தேவையானது!

    பஞ்சைமிஞ்சும் பாதமுனையில் பனியின் முத்தமா? என்னைப்
    பார்க்கும் கண்கள் இமைக்கும்போது பதறும் சொர்க்கமா?
    நெஞ்சை உனக்கு இழந்துவிட்டேன் நேரில் மொத்தமா! இனி
    நினைவும் கனவும் சிட்டுக்குருவி பாடும் சத்தமா!

     

     

    Share
  • நான் கொடுக்கவுமில்லை

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (39)

     

    நான் கொடுக்கவுமில்லை

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2/[/mixcloud]

    10420113_533031216798230_7817792460307062254_n

     

    நான் கொடுக்கவுமில்லை
    நீ எடுக்கவுமில்லை
    எந்தன் இதயத்தில்
    உந்தன் இடம்

    தானும் தானுமாய் இருந்தது
    நானும் நீயுமாய்ப் பிரிந்தது
    தேனும் பாலுமாய்க் கலந்தது
    வானும் வானுமாய் இணைந்ததோ?

    கிழக்கு ஜன்னல் வானமும்
    மேற்கு ஜன்னல் வானமும்
    மொட்டை மாடி வானத்தில்
    கைகுலுக்கி முத்தமிட்டுக்
    காணாமற்போய்த் தானானதோ?

    இல்லை. அப்படி இல்லை இன்னும்.

    இறுகத் தழுவிக்கொள்ளும் போதெல்லாம்
    இடம் மாறுகின்றன இதயங்கள்
    இதனால்தான்
    இழந்ததாகவும் நுழைந்ததாகவும் அடைந்ததாகவும்
    ஏதேதோ உணர்வுகளும் விழைவுகளும்
    எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன

    ஒன்று, தன்னை
    உணரத்தான்
    ஒன்றுபோல் இரண்டாய்
    இரண்டுபோல் ஒன்றாய்த்
    தானே மயங்கும் மாயத்தில்
    தயக்கமின்றித் தலைப்பட்டது

    சத்தியத்திற்குப் பாதைகள் கிடையாது, அந்த
    சந்நிதிக்குக் கதவுகள் கிடையாது, இது
    தத்துவமில்லை தரிசனம் என்பதைக்
    காதலைப்போல் வேறெதுவும் காட்டித் தராது

    என்னுயிரின் தேனூற்றே!
    எதிரே வா!
    இருமை இலாத அருமையை
    இருமையே உணர்த்தும் பெருமையை
    இவர்களுக்குக் காட்டுவோம் வா!
    இறுகத் தழுவியபடி
    இதழ்கள் அழுந்திப் பொருந்தியபடி
    இதயமொன்று இதயமொன்றில்
    இடைவிடாமல் தன்னைக் கரைத்தபடி……

    படத்திற்கு நன்றி

     

    Share
  • புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (38)

    புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF/[/mixcloud]

    10609465_789022631159760_8447361610157700547_n
    உன்முகம் பார்த்துப் பார்த்துத்தான்
    ஒவ்வொரு காலையும் புலர்கிறது! அதில்
    உதிக்கும் புன்னகை தயவில்தான்
    உயிரும் உயிராய் மலர்கிறது
    என்மனம் என்றே எதுவுமில்லை
    இதயம் மட்டும் துடிக்கிறது, நீ
    எதிரே இருந்தும் எங்கே என்று
    ஏனோ பாவம் தவிக்கிறது…

    இதயம் என்பது உள்ளே இல்லை
    இரண்டு விழிகளில் சிரிக்கிறது
    இம்மியும் எனக்குத் துன்பம் வந்தால்
    இருகரம் ஒன்றாய் அணைக்கிறது
    கதைகள் கனவுகள் கற்பனை எல்லாம்
    கண்முன் தினமும் நடக்கிறது
    காலம் எந்தன் தலையணை அருகே
    கவிதைத் தாளாய்க் கிடக்கிறது

    ஒவ்வொரு சமயம் இருக்கின்றாயா
    என்றொரு கேள்வி குடைகிறது
    ஒவ்வொரு நேரம் உன்னைத் தவிர
    ஒன்றும் இல்லை புரிகிறது
    கவ்விய தாயின் வாயில், குட்டிக்
    கன்றாய்க் கிடக்கின்றேனே! உன்
    காதல் என்னும் காவல் ஒளியில்
    கண்ணைத் திறக்கின்றேனே!

    இதயக் கதவைத் திறந்து திறந்து
    எத்தனை முறைநான் பார்த்தாலும், அதன்
    இருண்ட மூலையில் புன்னகை நினைப்பை
    விளக்காய் ஏற்றிப் பார்த்தாலும்
    பதிந்து பதிந்து பரந்து விரிந்து
    பலவித வண்ண வடிவாக, உன்
    பாதம்! சதங்கை கீதம்! இவையே
    பார்த்து நெகிழ்கிறேன் என் தேவி!

    என்னை முழுதும் இழந்தேனா? அதில்
    ஏழை மகிழ்ந்தேனா?
    உன்றன் நிழலை அடைந்தேனா? அதில்
    ஊமை பிழைத்தேனா?
    என்னை இழப்பது போலோர் இன்பம்
    எதிலும் இல்லையம்மா! உன்
    எதிரே நின்று நின்று கரைவதே
    எனக்கு முக்தியம்மா!

    எங்கும் இருந்தும் எனக்கே எனக்காய்
    எதிரே வந்தாயே!
    எல்லாம் ஆகியும் ஏழையை அணைத்து
    எல்லாம் தந்தாயே!
    பொங்கும் புனலாய்க் கண்ணில் இதயம்
    பொங்கிப் பொங்கிவர..
    புன்னகை ஒன்றின் பூரணமாய் நீ
    புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க…..

    படத்திற்கு நன்றி

    Share
  • ஒரு வசன நடை…

    இசைக்கவி ரமணன்

     

     

    நடையாய் நடக்கிறேன், எந்த

    நாட்டமுமே இல்லாமல்; நான்

    நடக்கத்தான் வேண்டும் என்பதாக, யாரோ

    நாட்டியிருக்கிறார்கள் ஒரு சாத்திரத்தை

    என்பது போல

    நடையாய் நடக்கிறேன், எந்த

    நாட்டமுமே இல்லாமல்

     

    எனக்கென்னவோ நடை என்பது….

     

    ஏழ்மையின் ஏற்றங்களில் ஒன்றாகவும்

     

    வறுமையின் வெற்றிச் சின்னமாகவும்

     

    எந்தக் கூட்டத்திலும் எதிலும் படாமல்

    தனித்திருக்கக் கற்றுத்தரும்

    ஏகாந்தமாகவும்

     

    அந்தக் கிளையில் இந்தக் கணத்தில்

    ஒரு

    பறவை வந்து அமரக்கூடும் என்பதுபோல்

    ஏதோ ஒரு பாட்டு எனக்கு நேர்ந்துவிடத் தோதான

    ஏற்பாடு போலவும்

     

    உடலை வசக்கவும், உணவுண்ணத் தகுதியை

    அடைவதற்கான அழகான ஏற்பாடாகவும்

     

    கடலாய்ப் பரந்த சமூகக் கோலங்களைக்

    கடுகாய் இருந்து கணக்கெடுக்கும் வசதியாகவும்

     

    இன்னும் பலப்பல அழகுகளாகவும்

    இருக்கிறதே எனக்கு! உங்களுக்கு?

     

    நேரே நடந்தும் வளைந்து நடந்தும்

    தூரே பார்வையைத் தொலைத்து நடந்தும்

    நம்மோடு நாமிருக்கும் நலம்தினமும் நல்குகின்ற

    நடையல்லால் வேறுதவம் நமக்குச் சாத்தியமா?

     

    நடந்துகொண்டே இருக்கின்றேன்; எதையோ

    கடந்துகொண்டே இருப்பது போலவும், எதுவுமே

    நடக்காமல் ஏதோ ஒற்றைத்

    தடத்திலேயே நின்றுகொண்டிருப்பதைப் போலவும்

    அடிக்கடி தோன்றுகிறது, பம்பர

    அசைவு மயக்கத்தில் அசையாத தோற்றம் போல

     

    எத்தனை தெருக்களை

    இத்தனை நடைநடந்து விழுங்கினாலும்

    களைத்த கால்களும்

    களைக்காத தெருக்களும்

    மிஞ்சத்தான் செய்கின்றன

     

    தெருக்களும் தங்கள் களைப்புகளைத்

    திருட்டுத் தனமாக மறைத்துக்கொள்வதைச்

    சருகுகள் எனக்குச் சொல்லியிருக்கின்றன

     

    நடை என்பது

    எனக்கு நான் அன்றாடம்

    செய்துகொள்ள வேண்டிய மரியாதை

     

    நடை என்பது

    உறவு பிரிவுகளுக்கு வாய்ப்பில்லாத

    ஆகாசம் போன்ற நேசம்

     

    அதெல்லாம் இருக்கட்டும்

    அத்தனை பேர் முன்னிலையிலும்

    ஆருக்கும் தெரியாமல், உன்னை

    முத்தமிட்டுக் கொண்டு

    முழுதாகக் காதலிக்கும்

    முறிவற்ற சுகத்தையும்

    என்னுள்ளே வைத்தபடி

    ஏதேதோ பேசிக்கொண்டு

    கற்பனை என்னும்

    கட்டற்ற நிஜத்தில் நான்

    உயிரைப் புதைத்தபடி, இந்த

    உடல் வளையவர

     

    இந்த

    நடையை விட்டால், வேறு

    நாதிதான் எமக்குண்டோ!!

     

    31.08.2014 / ஞாயிறு / 16.21

    Share
  • திண்ணையின் கோரிக்கை

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (37)

    திண்ணையின் கோரிக்கை

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%A3/[/mixcloud]

     

    ஓவியம் : மாருதி
    ஓவியம் : மாருதி

     

     

    இந்த மரத்தடியில்
    இந்தத் திண்ணையைப் போல்தான்
    இருந்து வந்திருக்கிறேன்
    இத்தனை நாளும்

    மழை…வெய்யில்…புழுதிக் காற்று..
    மத்தியான வெப்பங்கள்
    எப்போதேனும் சற்று
    யாரோ நிலவுக்கு இட்ட முத்தங்கள்
    கோணம் தவறி உதிர்ந்தது போலக்
    கொட்டிய பனித்துளிகள்

    பறவைகளின் எச்சம்
    பசுவின் சாணம்
    சின்னக் குழந்தையின்
    சிறுவாய் உதிர்த்த மிச்சம்
    சிரித்தபடிப் பறக்கும் காலத்தின்
    சிறகுகளால் பதறிச்
    சிந்திவிட்ட காதலர்களின் கண்ணீர்

    யாரோ வீச
    எந்தக் காற்றிலும்
    ஏனோ அசையாமல்
    வீழ்ந்து கிடக்கின்ற கந்தைத் துணி

    ஊத ஊதப் பெருகிக்கொண்டேயிருக்கும்
    தூசு

    ஒட்டாமல் உறவாடாமல்
    புரளக் காத்திருக்கும் சருகு
    இன்னும் எத்தனை எத்தனையோ!
    மல்லாந்த குடிகாரன் போலத்தான்
    தன்வயமின்றிக் கிடக்கிறேன்
    தலை கிறுக்காத தெளிவுடன்

    உட்கார்ந்து சென்றவர்கள்
    ஒருக்களித்துப் படுத்தவர்கள்
    ஒன்றுமில்லாமல் வந்து
    ஒரு கவிதை வாய்க்கப்பெற்று
    உயிர்சிலிர்க்கச் சென்றவர்கள்…

    வந்தவண்ணம் சென்றவண்ணம்
    மாறிக்கொண்டே இருக்கும் இவற்றில்
    எனக்கென்ன வாழ்க்கை?
    ஏது அடையாளம்?

    தாமரை இலையில், யாரோ
    தவறவிட்ட ஒரு வைரக்கல் போல
    ஒரு முறை
    ஒரே ஒரு முறை
    உட்காராமல் உட்கார்ந்தாய் நீ

    மரத்துப்போய்க் கிடந்த என்
    மார்பைப் பிளந்துகொண்டு
    இத்தனை காலம் நான்
    சகித்த
    சாட்சியாய்ப் பார்த்த
    ஊரின் உணர்ச்சிகள் அத்தனையும்
    இயற்கையின் மாற்றங்கள் எல்லாமும்
    விழித்துக்கொண்டு
    விஸ்வரூபம் எடுத்துவிட்டன

    ஏதோ அமைதியை,
    தேடாமல் இங்கு வந்த
    உன்னெதிரே

    அதுவரை
    அமைதிமயமாய் இருந்த திண்ணை
    ஆரவாரப் பேய்க்கூட்டமாயிற்றே!

    சந்நிதிக்கு வாய்த்த தெய்வம்
    திண்ணையில் நேரலாமா?

    உனக்கொன்றும் இல்லை
    என்
    உளமார்ந்த மண்டியிடுதலும்
    உனக்குச் சங்கடம்தான்
    குட்டக்கைப் பிச்சையின்
    கும்பிடு போலே…

    சடமாகக் கிடந்து,, ஒரு
    சவமாகும் தறுவாயில் இருந்து
    சகத்தின் உணர்ச்சிக் கலகங்கள் அனைத்தும்
    உள்ளே புகுந்து
    உயிராகிக் கூத்தடிக்கும் நான்
    என்ன ஆவேன்?
    எங்கே போவேன்?

    என்னைப் பொருட்படுத்தும் கட்டாயம்
    இல்லைதான் உனக்கு

    ஆயினும்
    என் கதையைக் கேட்டதனால்
    என் கதியைப் பார்த்ததனால்
    சின்னக் கணத்தில், என் காதலின்
    சிலிரிப்பை ஏற்றதனால்
    வீழ்ந்து கிடந்தபடியே
    விண்ணப்பித்துக் கொள்கிறேன்…

    இன்னும் ஒருமுறை
    ஒரே ஒரு முறை
    உட்கார்ந்து
    செல்ல முடியுமா?

    நான்
    சடமாகாமல்
    எனக்கு விடுதலை இல்லை

    நான்
    சவமாகாமல்
    உனக்கு விமோசனம் இல்லை

     

    ஓவியத்திற்கு நன்றி : மாருதி

    Share
  • ஒரு கேள்வி கேட்கும் கேள்வி

    இசைக்கவி ரமணன்

     

     10606109_333216606854072_7032261539889036622_n

    எங்கிருந்தேன் எனத் தெரியாமல்

    எங்கோ தானே நானிருந்தேன்?

    எதுவோவாகத் தானே இருந்தேன்?

    எந்தக் கவலையும் இன்றித்தானே கிடந்தேன்?

     

    எவனுக்கோ என்ன ஆனதோ

    ஏன்? எதற்கு? எப்படி? என்றான்

    எதிரில் வந்து நின்றுவிட்டேன்

    எவனோ அதற்கு விடைசொன்னான்

    இவன் அதை வாங்கிச் சென்றுவிட்டான்

     

    எவனுக்குள் நான் எழுந்தேனோ

    அவனுக்குள் நான் தீர்ந்துபோயிருக்கலாம்

    எழுந்த எனக்கு மரணமேது?

    எழுதலைத் தவிர வாழ்வுதான் ஏது?

    எனக்கிந்த உலகில் தீர்வுதான் ஏது?

    சிரஞ்சீவியைப் போலச் சித்திரவதை ஏது?

     

    வினாக்குறியோடுதான்

    விதையும் முளைக்கிறது

    வியந்து நின்றுதான்

    விழுகிறது மழைத்துளி

     

    ஆர்வத்திற்கும் ஆச்சரியங்களுக்கும் நடுவே

    அறிவானால் அல்லாட்டம்

    அன்பானால் பொன்னூஞ்சல்

     

    கிளியாய் விடையைத் தடவிக்கொண்டு

    களிப்புடன் செல்கின்றானே!

    கிளைக்கப் போகிறது இன்னொரு கேள்வி

    களைக்கப் போகிறது காளைத் தோள்

    விடைபெற்று ஒரு போதும்

    வினா தீர்ந்து போய்விடாது

     

    எனக்கு விடை கொடு! இல்லை

    என்னிடம் விடைபெற்றுக்கொள்!

     

    நீ என்னில் கரையாமல்

    நான் உன்னுள் ஒடுங்காமல்

    நீயோ நானோ

    நிம்மதியைக் காண முடியுமா என்ன?

    எப்படி?

    எதற்கு?.

     

    30.08.2014 / சனி / 14.04

     

     

     

     

     

    Share
  • உள்ளமெங்கும்…..

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (36)

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE/[/mixcloud]

     

    உள்ளமெங்கும் இங்குமங்கும்
    (பாடல்)

    Paintings of rural indian women - Oil painting (12)

    உள்ளமெங்கும் இங்குமங்கும் துள்ளும் மானே!
    பள்ளமெங்கும் வந்துபொங்கும் வெள்ளத் தேனே!

    உயிரில் இரவில் கண் சிமிட்டும் வானே
    உன்னிலே மின்னிமின்னிக் கரைந்தேனே
    உன் பந்துக்கன்ன வாசனை எனக்குத்தானே! (உள்ள)

    நெஞ்சில்
    தட்டுப்பட்ட காதலினைத் தொட்டுப்பார்த்தபோது ஒரு
    தோற்றம் எழுந்தது – எந்தக்
    கட்டுக்குள்ளும் சிக்கிடாத கடலொன்று கண்முன்பு
    விரிந்து வளர்ந்தது! நான்
    தொட்டெடுத்த ஒன்று, எந்தன் தோளைக்கொஞ்சும் போது, கரை
    தொட்டுக்கொள்ள உந்தன் தோளைப் பற்றிக்கொண்டு நின்றதென்ன தவறா? உன்
    பாதங்களைப் பற்றிக்கொண்டு பட்டுமுத்தம் இட்டுக்கொண்டு
    பாட்டுச் சொன்ன வேகமெந்தன் தவமா? (உள்ள)

    கையிரண்டில் அள்ளிக்கொள்ளக் கண்ணிரண்டும் பின்னிக்கொள்ளக்
    காலம் இருந்தது
    ஒன்றும் ஒன்றும் சேர்ந்தும் அது ஒன்று என்று நின்ற புதுக்
    கோலம் எழுந்தது! அடி
    என்ன இன்னும் சொல்ல? நீ இன்னும் நெஞ்சைக் கிள்ள, நான்
    முன்னும் பின்னும் இன்றியொரு புத்தம்புது விதையென
    மண்ணில் விழுந்தேன்! நீ
    முத்தமிடும் நேரத்தினில் சத்தமின்றிச் சோலையாக
    எழுவேன்!

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • சமரசம்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (35)

    சமரசம்

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/samarasam/[/mixcloud]

    10592800_716061665108146_5329376393953249671_n
    சமர்முடிந்து விட்டது
    சமரசம் செய்துகொண்டேன்
    சரணாகதி அடைந்துவிட்டேன்

    என்னுள் இருக்கும்
    உன்னிடம்

    பிரிவென்ற முள்ளிலே பட்டுத் திகைத்து
    நினைவென்னும் முகையைத் தொட்டு முகர்ந்து
    வடுவேதும் இல்லாமல் வளையவரும்
    வாசமிகு தென்றலைக் கண்டேன்

    நான்
    தேம்பி அழுததும்
    தெருவில் திசையின்றித் திகைத்து நின்றதும்
    தேய்ந்து மெலிந்ததெல்லாம், இப்படித்
    தென்றலாகத்தான்

    பாறைகள் கூறுபோட்டாலும்
    கோர முதலைகள் அசிங்கமாய்ப் புரண்டு குழப்பினாலும்
    ஈரமென்னும் இனியமொழி
    மாறாத நீராக

    கழுத்தைத் திருகினாலும்
    கானத்தின் ராகமல்லால், வேறுவிதமாய்க்
    கத்தத் தெரியாத வன்னப் பறவையாக

    ஆத்திரத்தில் அம்மா
    அடித்துப் போட்டாலும்
    அம்மாவைத் தவிர வேறு
    புகலிடம் இல்லாத சின்னக் குழந்தையாக

    சமரசம் செய்துகொண்டேன்
    சரணாகதி அடைந்துவிட்டேன்

    என்னுள் இருக்கும் உன்னிடம்
    எட்டி உதைத்தாலும்
    கட்டித் தழுவினாலும்
    பல்காட்டிப் பயன்படுத்திப்
    பாதையிலே எறிந்தாலும்

    உதறிவிட முடியாத நிழலாக
    ஒன்றும்செய்ய முடியாத சுவாசமாக
    சற்றும் விலகாமல்
    எதுவும் கோராமல்
    சாவகாசமாய் உன்னோடிருப்பேன்

    இனி நீ என்னை –
    எப்படி வேண்டுமானாலும் முயன்றுபார் –
    எதுவும் செய்ய முடியாது

    வெட்ட வெளியை வெட்டமுடியாது
    வீழ்ந்த சாம்பலை எரிக்க முடியாது
    சரணமடைந்தவனுக்கு
    மரணம் கிடையாது
    அவன்
    வாழ்வைக் கொடுத்துவிட்டுத்தான்
    வாசலில் நிற்கின்றான்
    வாஞ்சையோடு
    கொடுத்த நினைப்பு துளியும் இன்றி

    ஆம் நான்
    சமரசம் செய்துகொண்டேன்
    சரணாகதி அடைந்துவிட்டேன்

    என்னுள் இருக்கும்
    உன்னிடம்

    அதுசரி
    என்ன செய்யப் போகிறாய்
    உன்னுள் இருக்கும்
    என்னிடம்

    இருக்கிறேனா என்ன?!

    படத்திற்கு நன்றி

    Share
  • மன்னிப்பாயா?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (34)

    மன்னிப்பாயா?

    (கேட்டு மகிழ)

    10532382_660585207366288_3852778901113805194_n

    ஊட்டிவிட்ட கைகளை நான் கடித்துவிட்டேனா? என்
    உயிரே! உனைத்துன்புறுத்தி உயிர் வளர்த்தேனா!
    காட்டுத் தீயில் மானைப்போலக் கலங்குகின்றாயே! இந்தக்
    கரிமுகத்தைக் கண்டேனோ மயங்கி நின்றாயே!

    வீதியிலும் மறைவினிலும் சின்னப் பிள்ளைபோல், நாம்
    விதியைமீறி அச்சமின்றி விளையாடியதும்
    பாதியிலே சொர்க்கமெல்லாம் பறிகொடுத்ததாய், நித்தம்
    பரிதவித்துப் பரிதவித்துப் பாசம் வளர்த்ததும், உன்

    சோதிமுகம் கண்டுகண்டு சுமைகள் தீர்ந்ததும், நீ
    சொல்லிச் சொல்லி ஏழையென்றன் உயிர்வளர்ந்ததும்
    சோதனைபோல் மாறியதேன் சொக்கத் தங்கமே! இதைச்
    சொல்லியழ யாருமில்லை தின்னும் வெட்கமே…

    உயிரைக்கண்ட பரபரப்பில் உளறிவிட்டேனா? இந்த
    ஊமைக்குமொழி வந்தவுடன் ஊளையிட்டேனா?
    தயிர்க்குடத்தை மத்தெடுத்து உடைத்துவிட்டேனா? என்
    தாயே! உன்நெஞ்சைக் காலால் உதைத்துவிட்டேனா?

    ஒருமுறை ஒரேமுறை மன்னிப்பாயா? என்
    உயிரையுன்றன் காலில்வைக்க அனுமதிப்பாயா?
    மரணமொரு பொருட்டில்லை மையலின் மகளே! நீ
    மறுத்துவிட்டால் மரணமற்ற நரகே புகலே!

    உன்குழந்தை என்னை நீ உதைத்துவிடாதே! என்
    உள்ளில்வேறு யாருமில்லை மறந்துவிடாதே!
    நின்றுநின்று உன்முகத்தை ஏங்கிப் பார்க்கிறேன், உன்
    நெஞ்சில்நான் இல்லையென்றால் நீங்கப் பார்க்கிறேன்…..

    உன்னைவிட்டு எங்கு செல்ல? எங்கும் நீதானே! இந்த
    உலகைவிட்டு எங்கு செல்ல என் உலகம் நீதானே! என்
    கண்ணா! உன் காலில் எந்தன் முகம் புதைக்கிறேன், நீ
    கருணை காட்டினால் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கிறேன்….

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • சொல்லிச் செல்லேன்!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (33)

    சொல்லிச் செல்லேன்!

    {கேட்டு மகிழ}

     

    Paintings of rural indian women - Oil painting (14)
    கணந்தோறும் நினைத்துக்கொண்டு
    கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
    ரணமான நெஞ்சைக் கெஞ்சி
    ரகசியமாய்த் தேற்றிக் கொண்டு

    திசைதொலைந்த பறவை போலே
    தெருமுனையில் திகைத்து நின்று
    வசைமலிந்த ஜீவனாக
    வலியே என் உயிராக…

    கசையடியின் உச்சத்தில்
    கண்ணீரும் வறண்டேபோய்
    இசையாத சிரிப்பொன்று
    இதழோரம் அரும்புவதாய்

    ஊருக்கு நான்சிரிக்க
    உள்ளமெல்லாம் காடெரிய
    காரிருளே இடறுமிருள்!
    யாருக்கு இது புரியும்?

    காதலெனும் கொடுமையின்முன்
    கடுநரகும் நந்தவனம்
    வேதனையில் வெந்தமனம்
    வீழ்ந்துசாம்பலாயெழுந்து
    வேதனையில் வெந்துவீழும்
    விலாவலிக்க விதிசிரிக்கும்

    உன்னையே எண்ணியெண்ணி
    உடலுருகும் உயிர்கரையும்
    என்னையுன்னில் காணவேண்டி
    ஏங்கியேங்கி எட்டிப்பார்க்கும்

    எப்போது வந்திடுவாய்
    என்றெனக்கு உறுதியொன்றை
    இப்போது வந்துசொல்லேன்
    என்னுயிரைத் தந்துசெல்லேன்!

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

    Share