இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (36)

[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE/[/mixcloud]

 

உள்ளமெங்கும் இங்குமங்கும்
(பாடல்)

Paintings of rural indian women - Oil painting (12)

உள்ளமெங்கும் இங்குமங்கும் துள்ளும் மானே!
பள்ளமெங்கும் வந்துபொங்கும் வெள்ளத் தேனே!

உயிரில் இரவில் கண் சிமிட்டும் வானே
உன்னிலே மின்னிமின்னிக் கரைந்தேனே
உன் பந்துக்கன்ன வாசனை எனக்குத்தானே! (உள்ள)

நெஞ்சில்
தட்டுப்பட்ட காதலினைத் தொட்டுப்பார்த்தபோது ஒரு
தோற்றம் எழுந்தது – எந்தக்
கட்டுக்குள்ளும் சிக்கிடாத கடலொன்று கண்முன்பு
விரிந்து வளர்ந்தது! நான்
தொட்டெடுத்த ஒன்று, எந்தன் தோளைக்கொஞ்சும் போது, கரை
தொட்டுக்கொள்ள உந்தன் தோளைப் பற்றிக்கொண்டு நின்றதென்ன தவறா? உன்
பாதங்களைப் பற்றிக்கொண்டு பட்டுமுத்தம் இட்டுக்கொண்டு
பாட்டுச் சொன்ன வேகமெந்தன் தவமா? (உள்ள)

கையிரண்டில் அள்ளிக்கொள்ளக் கண்ணிரண்டும் பின்னிக்கொள்ளக்
காலம் இருந்தது
ஒன்றும் ஒன்றும் சேர்ந்தும் அது ஒன்று என்று நின்ற புதுக்
கோலம் எழுந்தது! அடி
என்ன இன்னும் சொல்ல? நீ இன்னும் நெஞ்சைக் கிள்ள, நான்
முன்னும் பின்னும் இன்றியொரு புத்தம்புது விதையென
மண்ணில் விழுந்தேன்! நீ
முத்தமிடும் நேரத்தினில் சத்தமின்றிச் சோலையாக
எழுவேன்!

 

படத்திற்கு நன்றி : இளையராஜா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.