இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (40)

சிட்டு

[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F/[/mixcloud]

hqdefault
அந்தச்
சிட்டுக்குருவி பட்டுச் சிறகைக் கொஞ்சம் விரித்தது – அதன்
செக்கச் சிவந்த சின்ன இதழின் சிமிழ் திறந்தது
எட்டுத் திக்கும் முத்தம் பட்டுத் தித்திப்பானது, என்
எழுத்தெல்லாம் அதில் விழுந்து தடம்புரண்டது!

உயிர்குடித்து உயிர்கொடுக்கும் கண்ணைச் சொல்வதா? என்
உள்ளமெங்கும் உலவுகின்ற பண்ணைச் சொல்வதா?
பயிர்வளர்த்துத் தலையைக்கோதும் தென்றலென்பதா? இது
பரிவெல்லாம் ஏங்குகின்ற மன்றமென்பதா?

நெஞ்சில் வந்த நிலவுநின்று நெகிழ்ந்துபோனது, அதன்
நீல ஒளியில் கோல வானம் மகிழ்ந்துபோனது
பஞ்சுமேகம் கையணைப்பில் பாவையானது! அதன்
பார்வையொன்றே என்னுயிரின் தேவையானது!

பஞ்சைமிஞ்சும் பாதமுனையில் பனியின் முத்தமா? என்னைப்
பார்க்கும் கண்கள் இமைக்கும்போது பதறும் சொர்க்கமா?
நெஞ்சை உனக்கு இழந்துவிட்டேன் நேரில் மொத்தமா! இனி
நினைவும் கனவும் சிட்டுக்குருவி பாடும் சத்தமா!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *