Skip to content

வல்லமை

    • Blog Page
    • Columns
    • Edit UPG Post
    • Home
    • LightBox
    • Login Required
    • Manage Subscriptions
    • Multiple Pages
    • My Gallery
    • Newsletter
    • Photo of the day
    • Pick Your Card
    • Post Image
    • SHORTCODES
    • Sample Page
    • Shop
    • Subscription Settings
    • Tabs and Toggles
    • Test
    • Test2
    • User’s Post Gallery
    • Video and Audio
    • oEmbed URL
    • text and lists
    • இந்த வார வல்லமையாளர்!
    • முகப்பு

Blog

  • சேக்கிழார் பா நயம் – 64 (தம் பெருமான்)

    சேக்கிழார் பா நயம் – 64 (தம் பெருமான்)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    திருவாரூர்த் திருக்கோயிலில் தம் திருப்பாத தரிசனம் தந்த  இறைவன் சுந்தரரிடம் அடியார்களின் சிறப்பை அறிவித்துப் பாடும் முறையையயும் அருளி முதல் அடியையும் எடுத்துக்  கூறியருளினார். சுந்தரர் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியார்கள் முன் சென்று ஒவ்வொருவரையும் வணங்கினார். பின்னர் அடியார்களின் சிறப்பை இறைவன் அருளிய  முறைப்படி  ‘’தில்லைவாழ்  அந்தணர்’’ முதலாக  ஓரடிக்கு  ஒருவராகத்  திருத் தொண்டர்களைப் போற்றி, வணங்கிப் பாடினார். தில்லை வாழ்  அந்தணர் இறைவனுக்குத் தொண்டராவதில் முதன்மை பெற்றவராவர். ஆகவே முதலில் “தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று  இறைவன் அருளிய திருவாக்கை  முதலடியாகக்  கொண்டு  பதினோர்  எண்சீர்த் திருவிருத்தங்கள் கொண்ட“ திருத்தொண்டத்தொகை” என்ற நூலை இயற்றினார். இந்நூலை முதனூலாகக் கொண்டு, திருத்தொண்டர் திருவந்தாதி என்ற வழிநூலைச் சார்ந்து நம் சேக்கிழார் சுவாமிகள் இந்தத் திருத்தொண்டர் புராணத்தை  இயற்றினார். திருஞான சம்பந்தரும் தில்லையில் சிவபெருமானை தரிசித்தபோது, தில்லைவாழ் அந்தணரை  முதலில் வைத்துக் “கற்றாங்கெரியோம்பி“ என்ற திருப்பதிகத்தைப்  பாடினார். இதனை,

    “ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால்
    வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே
    ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும்
    காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி” என்று இப்புராணம் பாடுகிறது.  திருஞான சம்பந்தரின் பதிகம்.

    “கற்றாங்கெரி  ஓம்பிக்  கலியை  வாராமே
    செற்றார்  வாழ்  தில்லை” என்று தொடங்குகிறது. இதனைச்  சேக்கிழார்.

    “தம்பெருமான்  கொடுத்தமொழி  முதலாகத்  தமிழ்மாலை
    செம்பொருளால்  திருத்தொண்டத்  தொகையான  திருப்பதிகம்
    உம்பர்பிரான்  தானருளும்  உணர்வுபெற  உலகேத்த
    எம்பெருமான்  வன்தொண்டர்  பாடியவர்  எதிர்பணிந்தார் “

    பொருள்: தமது இறைவன் எடுத்துக்கொடுத்த மொழிகளையே முதலாக வைத்துத் தொடங்கிய தமிழ்ப் பாமாலையாய்ச் செம்பொருள் கொண்டு திருத்தொண்டத் தொகையாகிய திருப்பதிகத்தை அந்த இறைவனே அருளும் உணர்வுபெறுதலால் உலகம் ஏத்துமாறு எமது தலைவராகிய வன்றொண்டர் பாடி முடித்து அத்திருக் கூட்டத்தின் முன்னர் வணங்கினார்.

    விளக்கம்: தம்மை ஆட்கொண்டு பணித்த இறைவன். முன்னர்த் திருக்கயிலையிலும், பின்னர்த் திருவெண்ணெய் நல்லூரிலிருந்து திருவாரூருள் புகுந்தவரையிலும் பணிகொண்டவர். என்பதைத்  தம்பெருமான் என்ற தொடர் விளக்குகிறது. இறைவன் எடுத்துக் கொடுத்த  திருவாக்கையே “மொழி “ என்ற சொல் புலப்படுத்துகிறது. பின்வரும் பதிகங்களுக்குக்  காரணமான கைம்முதலாக இந்த மொழியே விளங்கியது என்பதைக் “கொடுத்தமொழி முதலாக“ என்ற தொடர் விளக்குகிறது. ’’தமிழ் மாலை‘’ என்ற தொடர் தமிழ்ப் பாட்டுக்களால் ஆன  மாலை  யாகிய பதிகத்தைக் குறிக்கிறது. “செம்பொருள்” என்பது பதிகத்தின் பொருளைக் குறித்தது. செம்மை சிவத்தன்மையாகிய  முத்தியைக்  குறித்தது. இதனை,

    “பிறப்பென்னும்  பேதைமை நீங்கச்  சிறப்பென்னும்
    செம்பொருள்  காண்ப  தறிவு “ என்ற திருக்குறளால்   அறியலாம்.  மேலும் இப்புராணம்,

    “தீதுறு பிறவிப் பாசந் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு“  என்று பாடுகிறது.

    சைவசமய பரமாசாரிய மூர்த்திகளது தேவார திருவாசகங்களின்பயன் பிறவி நீங்கி வீடடைவதேயாம் என்பது ஆன்றோர் துணிபு. செம்பொருளால் என  இத்திருப் பதிகத்துக்குப் பொருள்கண்டார் ஆசிரியர். திருத்தொண்டர்களின் வரலாற்றையும், பண்புநலன்களையும் தொகுத்துக் கூறுவது திருத்தொண்டத்  தொகை.

    உம்பர் பிரான் – தேவவுலகிலே அரசு வீற்றிருந்தருளிய தியாயகேசர். அவர் அருளிச்செய்த உண்மையறிவினை உண்முகமாகப் பெற்றதனாலே அதனை உலகம் ஓதி உய்யும்பொருட்டுப் பாடி என்க. மொழிஎடுத்துக் கொடுத்தருளு முன்னரே பொருள்களை உண்ணின்று உணர்த்தினார். என்பது “மன்னுசீர் அடியார் தங்கள் வழித்தொண்டையுணர நல்கி“ என இப்புராணத்தில் கூறியதனாற் பெறலாம். எனவே திருத்தொண்டத் தொகைப்பொருள் யாவும் இறைவன் அருளிய பதிஞானத்தாற் பாடியதாலும், அவனே தந்த மொழிகொண்டு பாடியதாலும் அது முற்றும் தியாகே சருடைய வாக்கேயாய்ப் பதிவாக்காகியவேதமே என்பது துணியப்பெறுதலினாலே அதன் துணைகொண்டு பாடி என்பதைப் “பெறப்பாடி “ என்ற தொடர் விளக்கும். முன்னர்ச் சென்னியுற வணங்கிய வன்தொண்டர் இப்போது  தொண்டர்களை  வணங்கினார்  என்பதை,

    “உலகேத்த  எம்பெருமான்  வன்தொண்டர்  பாடியவர்  எதிர்பணிந்தார்” என்ற தொடர் விளக்குகிறது.  இனி முழுப்பாடலையும் பாடிப் பயில்வோம்,

    “தம்பெருமான்  கொடுத்தமொழி  முதலாகத்  தமிழ்மாலை
    செம்பொருளால்  திருத்தொண்டத்  தொகையான  திருப்பதிகம்
    உம்பர்பிரான்  தானருளும்  உணர்வுபெற  உலகேத்த
    எம்பெருமான்  வன்தொண்டர்  பாடியவர்  எதிர்பணிந்தார் “

    இதனால் திருத்தொண்டத்தொகையின் தோற்றமும் சிறப்பும் பொருளும் நமக்குப்  புலனாகும் வகையில் சேக்கிழாரின் பாடல் திறம் அமைந்துள்ளதை உணர்ந்து மகிழ்கிறோம்!

    Share
    January 22, 2020
  • சிகரம் சாய்ந்தது!

    சிகரம் சாய்ந்தது!

    முனைவர் ஔவை நடராசன்

    நான் சென்னைக்கு வந்த 1955ஆம் ஆண்டிலிருந்து எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமாகத் தெரிந்த கொள்கைக் கோமான் – நீதி வேந்தர் – பு.ரா.கோகுலகிருஷ்ணன் அவர்களின் மறைவைப் பழுத்த கனி உதிர்ந்தது போலத்தான் என்று எழுதிவிட முடியாது.
     
    பழுத்த அந்த மாமரம், ஆயிரம் கனிகளைத் தந்த பயன்மரமாகும். ஏ.எல்.முதலியார் குடும்பத்தை உலகம் காணாத இரட்டையர் குடும்பம் என்பார்கள் ஆனால் தமிழினத்தில் மூன்று கிளைகளாகப் பூத்துக் கனிந்த அறிவார்ந்த புகழ்ச் செல்வங்கள் என்ற பெருமை நீதி வேந்தர் குடும்பத்தைத்தான் சாரும்.
     
    பேரறிஞர் அண்ணாவின் மனங்கனிந்த மூவராக – மருத்துவ மேதை பாலகிருஷ்ணன், பொறியியல் திலகம் இராதாகிருஷ்ணன், நீதிச் சிகரம் கோகுலகிருஷ்ணன் ஒளிர்ந்தார்கள் .
     
    நாம் கண்ணாரக் காண வாய்த்த மூவேந்தர்கள் எனலாம். தமிழ்க்கடல் பள்ளியகரம் நீ.க. அவர்களின் மருகர் தான் டாக்டர் பாலகிருஷ்ணன். பள்ளியகரம் பிள்ளை அவர்கள், நீதியரசர் கோகுலகிருஷ்ணனைப் புகழ்ந்து பேசாத நாளில்லை. மூவரும் ஒரே இல்லத்தில் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையிலும் பிறகு அடையாற்று வளமனையிலும் வாழ்ந்த காலங்கள் நம் இமைகளை நனைக்கின்றன.
     
    அந்த வளமனைக்கு வராத தலைவர்கள் இல்லை. தந்தை பெரியார் முதல், தமிழ்ப்புலவர் அனைவரும் வந்து விருந்தருந்தியதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
     
    சௌந்தரம் அம்மையார் அவர்களின் வளர்ப்பு மகன் போல நான் இருந்த போது, நீதியரசர் என்னைத் தழுவி, “அம்மாவுக்குப் பிடித்த பிள்ளை” என்ற சொல்லை எந்த நாளும் காக்க வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.
     
    அம்மாவோ “மகனே!  இவர் என் தம்பி” என்று நீதியரசரைச் சுட்டிக் காட்டினார். நீதியரசர் இனமானம் காக்கும் நெடுந்தூணாக நின்று இலக்கியம், இசை, கலை, கல்வி, பண்பாடு ஆகிய பல்வேறு நிலைகளில் மாபெரும் பணிகளை வெற்றியோடு நிறைவேற்றினார்.
     
    இனிமையான குரலில் – கவினார்ந்த தமிழை – கடல்மடை திறந்தது போல் உரையாற்றுவார்.
     
    அவரால் தொடங்கப்பட்டதே “மணவழகர் மன்றம்.” ,அவர் வெகுண்டு எவரும் பார்த்ததில்லை. பரிவின் பிழம்பாக வாழ்ந்தார். அவர் விரல் பிடித்து என்னை மணவழகர் மன்றப் படியில் நடக்க வைத்தார். கல்லூரிப் படிப்பை நான் முடித்தபோதே “சென்னை பல்கலைக்கழகத்தில் உன்னைச் சேர்த்து விடுகிறேன் – உன் மாமனாரும் – வருங்கால மனைவியும் எனக்கு மிக வேண்டியவர்கள். நான் பிள்ளை வீட்டுக்காரனா – பெண் வீட்டுக்காரனா என்று தெரியவில்லை” என்று பேசியதை நினைத்தால் இன்றும் என் கண்கள் கலங்குகின்றன .
     
    நான் அப்போலோவில் இதய மருத்துவத்தில் இருந்த போது, தொலைபேசியில் என்னை வினவியதை மறப்பதில்லை. ஆண்டுதோறும் தமிழிசைச் சங்க விழாவில் நான் அவரைக் காண்பது வழக்கம்.
     
    மருத்துவர் இராம்குமார் இல்ல அழைப்பிதழ் என் எதிரில் இருக்கிறது. நீதியரசர் திருப்பெயரைக் கண்டு அவ்வளவு மகிழ்ந்தேன்.
     
    எப்படி ஆறுதல் கொள்வது!
     
    மூவர் வாழ்வும் முடிந்துவிட்டது.
    மூவேந்தரால் வளர்ந்தது தானே முத்தமிழ்!
    Share
    January 21, 2020
  • அணிநடை அன்னம்!

    அணிநடை அன்னம்!

    -மேகலா இராமமூர்த்தி

    பண்டைத் தமிழர்கள் நிலத்தையும் பொழுதையும் வாழ்வின் முதற்பொருளாய்க் கருதியவர்கள். மாவொடும் புள்ளொடும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தவர்கள். பூக்களையும் அவற்றைச் சுற்றிவந்த பல வண்ண ஈக்களையும் இரசித்தவர்கள். இயற்கையோடு பிணக்கமில்லா இணக்க வாழ்வு அவர்களுடையது. அந்த இன்ப வாழ்வின் பிரதிபலிப்பை அற்றைத் தமிழ்ப் புலவோரின் தீந்தமிழ்ப் பாடல்கள் தெற்றெனப் புலப்படுத்துவதே இதற்குத் தக்க சான்றாகும்.

    பறவைகள் குறித்த பழந்தமிழ்ப் பாடல்களை ஆராய்ந்தால், காக்கை, குருவி, குருகு, கூகை, மயில், குயில், அன்னம், அன்றில் எனத் தம் வண்ணத்தாலும் வனப்பாலும் எண்ணங் கவர்ந்த பல்வேறு பறவைகளைப் புலவர்கள் நுணுகி ஆராய்ந்து அவற்றின் இயல்புகளை மிகையின்றிப் பதிவு செய்திருக்கின்றார்கள். இப்பறவைகளில் அன்னம் குறித்து நம் புலவர்களின் எண்ணவோட்டம் என்ன என்று ஒருசிறிது ஆராய்வோம் ஈண்டு!

    நீர்நிலைகளில் வாழும் இயல்புடையது அன்னப்புள். வெள்ளை, கறுப்பு, சாம்பல், இவற்றின் கலவை ஆகிய நிறங்களில் அவை காட்சிதரும். வாத்தும் அன்னமும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த பறவைகளே. ஆம், அன்னம் என்பது பட்டைத்தலையுடைய பெரிய அளவிலான வாத்துதான் (Bar-headed goose). ஆனால் அன்னத்தின் நடையில் இருக்கும் நளினமும் கவர்ச்சியும் வாத்திடம் கிடையாது!

    இந்த ’நடை’ வேறுபாட்டைக் கவனித்த புலவர்கள் அன்னத்தின் அழகிய நடையைப் பெண்டிரின் நளின நடைக்கு உவமைக்கியிருக்கிறார்கள். அழகை எங்குக் கண்டாலும் எவற்றினிடத்துக் கண்டாலும் அதனைப் பெண்ணொடு பொருத்திப் பார்ப்பது என்பது ஆண்களின் உளவியலாகவே அன்றுதொட்டு இன்றுவரை தொடர்கின்றது. அதற்குப் புலவர்கள் மட்டும் விலக்காவரோ?

    புகழேந்திப் புலவர் இயற்றிய புகலரு சிறப்புடைய நளவெண்பாவில் ஒரு நயமான காட்சி…

    நிடத நாட்டரசனாகிய நளன் சோலையில் உலவிக்கொண்டிருக்கின்றான். அப்போது வெண்ணிற அன்னம் ஒன்று செந்நிறப் பாதங்களோடு ஆங்கே தோன்றிற்று. அதன் தோற்றப் பொலிவில் சிந்தை பறிகொடுத்த நளன் அதனைப் பிடித்துவருமாறு தன் சேடிப் பெண்களை ஏவ, மயிலொத்த சேடியர் ஒயிலாக ஓடிச்சென்று அவ் அன்னத்தைப் பிடித்துவந்து அரசன்முன் பணிவாக வைத்தனர்.

    பிடிபட்ட அன்னமோ அரசன் தன்னை என்ன செய்யப்போகிறானோ என்று அஞ்சி நடுங்கியது. நளன் அதனிடம், ”அஞ்சாதே மட அன்னமே! உன்னுடைய அணி நடையையும் வஞ்சிக்கொடி அனைய மங்கையரின் மணி நடையையும் ஒப்பிட்டுப் பார்த்து இவற்றில் சிறந்த நடை எது என்று தெளியும் பொருட்டே உன்னைப் பிடித்துவரச் சொன்னேன்; வேறொன்றுமில்லை” என்று உண்மைசாற்றி அதனைத் தேற்றுகின்றான்.

    அஞ்சல் மடஅனமே உன்றன் அணிநடையும்
    வஞ்சி அனையார் மணிநடையும் – விஞ்சியது
    காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
    மாணப் பிடித்ததார் மன்
    .  (நளவெண்பா – 34)

    அன்னத்தின் நடையைக் கண்ணகி நல்லாளின் கவின் நடைக்கு உவமைகாட்டுகின்றார் சிலம்பின் ஆசிரியர் இளங்கோவடிகள். அக்காட்சியைக் காண்போம்!

    புகாரிலிருந்து மதுரைக்குப் பொருள்தேடிப் பயணமான கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகள் எனும் சமணத்துறவியின் துணையோடு மதுரை மூதூரை அடைகின்றனர். அங்கே பூக்களையே ஆடையாய்ப் போர்த்துச் செல்லுகின்றாள் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி.
    அவ் அருங்காட்சியைக் கண்ட அன்னநடைப் பெண்ணாள் கண்ணகியும், ஐயனான கோவலனும், ”இது புனல் ஆறன்று; பூம்புனல் ஆறு” என்று அதனைத் தொழுதனர் என்கிறார் அடிகள்.

    புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
    அனநடை மாதரும் ஐயனுந் தொழுது…
    (சிலப் – மதுரைக்காண்டம்: 174-175)

    அழகிய அன்னப்புள்ளைத் தம் உள்ளத்தை உரைக்கும் காதல் தூதாக விடுத்த பாடல்கள் தமிழிலக்கியத்தில் பல உள. ’தூது’ என்பது ஒரு தனிச்சிற்றிலக்கிய வகையாக வளர்ச்சியடைந்தது பதினான்காம் நூற்றாண்டில்தான் எனினும், அதன் தொடக்கத்தைச் சங்க நூல்களிலேயே நாம் காணமுடிகின்றது.

    அன்னச்சேவலைத் தம் ஆருயிர்த் தோழனான சோழ மன்னனிடம் தூது விடுக்கும் பிசிராந்தையாரின் புறப்பாட்டு இது!

    அன்னச் சேவ லன்னச் சேவல்…
    ….குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
    வடமலைப் பெயர்குவை யாயி னிடையது
    சோழநன் னாட்டுப் படினே கோழி
    உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
    வாயில் விடாது கோயில் புக்கெம்
    பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
    ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின்
    இன்புறு பேடை அணியத்தன்
    நன்புறு நன்கல நல்குவ னினக்கே
     (புறம் – 67)

    ”அன்னத்தின் சேவலே! (ஆண் அன்னமே) நீ குமரித்துறையிலே அயிரை மீனை வயிறார உண்டுவிட்டு இமயத்தை நோக்கிப் பறக்கின்றனையா? அப்படியாயின், இவ்விரு பகுதிகட்கும் இடையிலுள்ள சோழநாட்டுக்குச் செல்வாயானால், ஆங்கே உறையூர் எனும் ஊர் உளது. நீ அங்குச் சென்றால் அங்குள்ள அரண்மனையின் உயர்ந்த மாடத்தில் தங்க வேண்டும்; ஆனால் அங்கு வாயிற் காவலர்கள் இருப்பர். எனவே அவர்களுக்கு உன் வரவை உணர்த்தாது நேரே அரண்மனைக்குள் செல்! அங்கே எம் மன்னனாகிய பெருங்கோக் கிள்ளி இருப்பான். அவன் காதில் விழுமாறு நான் பிசிராந்தையாரின் அடிக்கீழ் வாழ்பவன் என்று சொல்! அப்புறம் பார்! உன் மதிப்பு மிக்க பேடை பூணுதற்கு நல்ல அணிகலன்களையெல்லாம் அள்ளித் தருவான் அவன்!” என்று கோப்பெருஞ்சோழனுக்கும் தனக்கும் இருந்த நட்பின் பெட்பினை அன்னச்சேவலிடம் அன்பொடு கூறி அதனை அவன்பால் தூதுவிடுக்கிறார் ஆந்தையார்.

    அன்னப்பறவைகள் வானில் விரைந்து பறக்கும் தன்மையன. அதனால் வினைமுடித்துத் திரும்பும் தலைமகன் ஒருவன் தன் தேர்ப்பாகனிடம், ”பாக! வானில் பறந்துசெல்லும் அன்னப்பறவைகள்போல் குதிரைகளை விரைந்து செலுத்து! அழகிய மையுண்ட கண்களையும், செழித்த கூந்தலையும், சிறு நுதலையும் உடைய என் தலைவியை நான் இப்பொழுதே காணவேண்டும்!” என்று துரிதப்படுத்தும் அழகிய பாடல் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

    …வயங்குசிறை அன்னத்து நிரைபறை கடுப்ப
    நால்குடன் பூண்ட கானவில் புரவிக்
    கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராது
    இனமயில் அகவுங் கார்கொள் வியன்புனத்து
    நோன்சூட் டாழி ஈர்நிலம்துமிப்ப
    ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப்
    பொலிவன அமர்த்த உண்கண்
    ஒலிபல் கூந்தல் ஆய்சிறு நுதலே.
      (அகம் – 334 – மதுரைக் கூத்தனார் – பிற பாட பேதங்கள்: மதுரைக் கடாரத்தனார்; மதுரைக் கந்தரத்தனார் ; மதுரைக் கோடரத்தனார்.)

    நடையழகிற்கும், விரைந்து பறக்கும் திறனுக்கும் மட்டுமன்றி மென் தூவிகளாலும் (இறகுகள்) சிறப்புடையன அன்னங்கள். அம்மென் தூவிகளை அன்றைய தமிழர் தம் பஞ்சணைகட்குப் பயன்படுத்தியமையைச் சங்க நூல்கள் அறியத்தருகின்றன.

    நெடுநல்வாடையில் போர்மேற்சென்ற அரசனைப் பிரிந்து தனித்திருக்கும் கோப்பெருந்தேவியின் பாண்டில் எனும் வட்டக் கட்டிலின் அமைப்பையும் அழகையும் விவரிக்கவரும் நல்லிசைப் புலவர் நக்கீரனார்,

    ”துணையைப் புணர்ந்தபோது உதிர்ந்த அன்னங்களின் தூவியை இணைத்து உருவாக்கப்பட்ட பஞ்சணையை மேன்மையுண்டாக விரித்து, அதன்மேல் தலையணை சாயணை முதலிய அணைகளை இட்டுவைத்து, நன்கு கஞ்சியிட்டுக் கழுவப்பட்டு, மலரிதழ்களை அகத்தே வைத்து மணமேற்றப்பட்ட தூய மடி விரிக்கப்பட்ட படுக்கையைத் தாங்கிய கட்டில் அது” என்று அதன் சிறப்பை நம்கண்முன் நிறுத்துகின்ற காட்சி படித்தின்புறத்தக்கது.

    மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
    துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி
    இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
    காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
    தோடமை தூமடி விரித்த சேக்கை
    (நெடுநல்வாடை : 131-135)

    ”துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த
    இணையணை மேம்படத் திருந்து துயில்”
    என்று அன்னத்தூவியால் அமைந்த அணையை ஆசிரியர் இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் காட்டுகின்றார்.

    எத்துணை இரசனையோடு உலகியல் இன்பங்களைத்

    துய்த்திருக்கின்றான் அற்றைத் தமிழன் என்பதற்குச் சான்றுகள் இவை!

    அன்னத்தைப் பற்றிப் புலவர்கள் பதிவுசெய்திருக்கும் கருத்துக்கள் அனைத்துமே உண்மை என்று கொள்ளுதற்கில்லை. அவற்றில் உண்மையல்லாக் கற்பனைகளும் கலந்திருக்கவே செய்கின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் அன்னம் பாலையும் நீரையும் பிரித்துப் பாலை மட்டும் பருகும் எனும் கருத்து.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தநிலையில் வைத்துப் போற்றப்படும் நாலடியார், அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரித்துப் பாலை மட்டும் பருகும் தெளிந்த செயலைப்போல் நீங்களும் கற்கத் தக்கனவற்றைக் கற்றிடுங்கள்; அத்தகுதியற்றவற்றை விலக்கிடுங்கள் என்று அறிவுறுத்துகின்றது.

    கல்வி கரையில கற்பவர் நாள்சில
    மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
    ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து
    (நாலடியார் – 135)

    அன்னத்திற்கு இத்தகு பண்புண்டு என்பதைப் பறைசாற்ற இதுவரை அறிவியல் சான்றாதாரங்கள் ஏதும் கிட்டவில்லை. அல்லவற்றை நீக்கி நல்லவற்றைக் கைக்கொள்ளுதற்கு மனிதனுக்கு வழிகாட்டப் புராணங்கள் மேற்கொண்ட ’ஹம்ச க்ஷீர நியாயம்’ எனும் ஒரு கற்பனை முயற்சியே இஃது என்று கொள்வதில் பிழையில்லை.

    அன்னப்பறவை குறித்த மற்றோர் உண்மை, மேலைநாட்டு அன்னப்பறவையான சுவானும் (swan) நம் நாட்டு அன்னப்பறவையான பட்டைத்தலை வாத்தும் (Bar-headed goose) ஒன்றல்ல என்பதே. இவ்விரண்டையும் ஒன்றென எண்ணி நாம் மயங்குதற்கு, இரவிவர்மா போன்ற புகழ்வாய்ந்த இந்திய ஓவியர்களும் காரணம் எனலாம். தம்முடைய மேற்கத்தியத் தாக்கத்தால் மேல்நாட்டு சுவானை இந்திய அன்னம் என்று கருதுமாறு அவர் வரைந்ததன் விளைவு, இந்தியர் பலரும் நம் நாட்டு அன்னப்பறவை எது என்று கேட்டால் மேனாட்டு அன்னத்தைத்தான் அடையாளம் காட்டுகின்றார்கள் என்று கருத்துத் தெரிவிக்கின்றார் சூழலியல் ஆர்வலரும் எழுத்தாளருமான, திரு. சு. தியடோர் பாஸ்கரன்.

    இந்தியப் பறவைகள் குறித்த நம்முடைய புரிந்துகொள்ளும் அறிவை மேம்படுத்திக் கொள்ளுதலே இவைபோன்ற குழப்பங்களுக்கு விடைகொடுக்கும். அதற்கு நாம் செய்யவேண்டியது, கணினியோடு கழிக்கும் நேரத்தில் சிறிதைக் குறைத்துக் கானுயிர்களோடு களிக்கவும் நேரம் ஒதுக்குதலே ஆகும். இயற்கையோடு கை கோப்போம்! இன்பத்தை அள்ளிச் சேர்ப்போம்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/174630-11.html

    2. புறநானூறு –- ஔவை சு. துரைசாமிப் பிள்ளை உரை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 18

    3. அகநானூறு – நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு, ரா. வேங்கடாசலம் பிள்ளை உரை, வெளியீடு – பாகனேரி
    வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார்.

    4. புகழேந்திப் புலவரின் நளவெண்பா –  கழகப்புலவர், செல்லூர்க்கிழார்,
    திரு.செ.ரெ. இராமசாமிப்பிள்ளை அவர்கள் எழுதிய உரையுடன்.

     

     

     

    Share
    January 20, 2020
  • பிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது

    பிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    Image result for philippines volcano"

    Image result for philippines volcano"

    https://www.cnn.com/2020/01/12/asia/taal-volcano-eruption-philippines-trnd/index.html

    https://www.cnn.com/2020/01/12/asia/gallery/taal-volcano-eruption/index.html

    காலக் குயவன் ஆழியில் படைத்த
    ஞாலத்தின் நடுக் கருவில்
    அசுர வடிவில்
    அணுப்பிளவு உலை ஒன்று
    கணப்பளித்து வருகுது
    பில்லியன் ஆண்டுகளாய் !
    எருப் பொருளை இடையே
    பெருக்கும்
    வேகப் பெருக்கி அணு உலை !
    உட்கரு உள்ளே
    கட்டுப் பாடுடன் இயங்கியும்
    நிறுத்தம் அடைந்தும்
    விட்டு விட்டு வேலை செய்வது !
    வெளிக் கருவிலே
    கனல் குழம்பைச் சமைத்துக்
    கொதிக்க வைக்குது !
    குவல யத்தைக்
    குத்தூசி போல் குடைந்து
    பீறிடும் எரிமலைகள் !
    தாறு மாறாய் தடம் மாறி
    ஊர்ந்து தாளமிடும்
    தாரணியின் குடல் தட்டுகள் !
    அங்கிங் கெனாதபடி
    பொங்கிப் பீறிடும்
    பூதக் கனல் எரிமலைகள் !
    நர்த்தனம் புரியும் நில நடுக்கம் !
    அணு உலை வெப்ப மீறலைத்
    தணிப்பவை அவை !
    உட்கருவின்
    பூத அணு உலையே
    பூமியின்
    அச்சைச் சுழற்றி
    ஆட வைக்கும் மின்ஜனனி !

    ++++++++++

    புதிய உமர் கயாம்

    +++++++++++

    2020 புத்தாண்டின் பூதப்பெரும் பேரழுத்த மின்னல் எரிமலை

    கடந்த எரிமலை பீறிட்டு நாற்பத்தி மூன்று ஆண்டுகட்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் நாட்டுத் தீவுகளில் ஒன்றான லூசான் தீவில் 2020 ஜனவரி 12 ஆம் தேதி “தால் எரிமலை” [Taal Volcano] நீராவியோடு ஸல்ஃபர் ஆக்ஸைடு புகை முகிலை, 9 மைல் [14 கி.மீ.] உயரத்தில்  உமிழ்ந்து வெளியேற்றி 500,000 மக்களை வெறும் கையுடன் புலம்பெயர வைத்துள்ளது. லூசான் தீவு  தலைநகர் மணிலா விலிருந்து தெற்கே 40 மைல் தூரத்தில் உள்ளது.  எரிமலை பீறிடும்  அந்நிகழ்ச்சியைப் படமெடுத்த ஜப்பான் ஹிமாவரி- 8 துணைக்கோளை நாசா விண்வெளித் தேடல் பெருங்கூடம்  அறிவித்துள்ளது.  சுமித்சோனியன் பூகோள எரிமலைத் தோற்ற ஏற்பாடு    [Smithsonian Institution’s Global Volcanism Program] கூற்றுப்படி 1960 ஆண்டு முதல் 1977 வரை, அடுத்து 2006, 2008, 2010 & 2011 ஆண்டுகளில், தால் எரிமலை, நில நடுக்கமோடு மேளம் தட்டி வருகிறது.  அப்போது நீராவி வெப்ப நேர்வு மிகுந்து [Hypothermal Activity] பேரளவு கணப்பு திரவம், [எரிமலைக் குழம்பு]  பொங்கி வீழ்ந்து, புகைமுகில் சாம்பல் பல மைல் உயரத்துக்கு எழுகிறது.  எரிமலைக் குழம்பு துளையிட்டு வரும்போது, நீருடன் இணையும் சமயத்தில் திடீரென ஆவியாகி 8 மடங்கு பலத்த வலுவுடன் ஏறி அடிக்கிறது. இப்போது [2020 ஜனவரி 19] வரை 144 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  1572 ஆண்டு முதல் 1977 வரை 33 முறைகள் எரிமலை எழுந்து மக்களுக்கு இடர் விளைவித்துள்ளது.

     

    ++++++++++++

    எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor)

    Posted on November 28, 2017

     

    Image result for geo-reactor at centre of earth,s core

    “பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”

    “பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.”

    மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)

    “ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”

    பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)

    பூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை

    உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல! கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார். காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ‘டாம் சாக்கோ’ (Tom Chalko, inspired by Desmarquet’s Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth’s Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார். அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேல்தளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்களை உண்டாக்கியும் எரிமலைகளை எழுப்பியும் வருகிறது !

    பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜ்ஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது! துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்றமில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப்படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல ! இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக்கொண்டு சிதைவு அடையக் கூடாது !

    ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கெனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன! 2000 – 2003 ஆண்டுகளுக்கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித்துள்ளது! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது ! எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன ! அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது ! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா ? அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேல்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன !

    பூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன

    கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக்கொண்டே போகின்றன. 1973இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன ! நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ? அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை ! பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.

    பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது ! புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது ! அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம் !

    பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை

    ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி ! திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது. யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.

    உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.

    தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.

    யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.

    வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன. அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !

     

    விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை

    பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.

    அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலை  யங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கொண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும் ! இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை.

    பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் ! அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு ! உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது. செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது ! செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப் படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன !

    (தொடரும்)

    +++++++++++++++++

    படங்கள்: BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media

    தகவல்:

    1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]
    2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]
    3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]
    4. Encyclopedia Britannica 15 Edition [1978]
    5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]
    6. National Geographic Frontiers of Science [1982]
    7. The Vesuvius Volcano at the Bay of Naples.
    8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.
    9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands
    10. Inside the Volcano, National Geographic [November 2000].
    11 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402051&format=html(Italian Volcano))
    11 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402121&format=html(Hawaii Volcano)
    12. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].
    13. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].
    14. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].
    15. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]
    16. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.
    17. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].
    18. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]
    19. The Hawaii Center for Volcanology [HCV-1992]
    20. Icland Volcano’s Fountain of Fire (March 20, 2010)
    21 National Geographic News – Harmful Effcts of Volacanic Smoke By Brian Handwerk (April 16, 2010)
    22 BBC News Why Iceland Volcano Has Grounded UK Flights By : Victoria Gill (April 15, 2010)
    23 BBC News How Volcanoes Shaped History (April 15, 2010)
    24 BBC News Experts Update Ash Health Advice (April 16, 2010)
    26 BBC News Volcanic Ash Cloud (April 17, 2010)
    27 BBC News Ash Deepens Europe Travel Chaos (April 17, 2010)
    28 BBC News Ash Imperils Bone Morrow Patients (April 18, 2010)
    29 BBC News Half of European Flights to Fly (April 20, 2010)
    30 Scientific American – How Much Volcanic Ash is Too Much for a Jet Engine ? By John Matson (April 21, 2010)
    31 (a) Daily Galaxy -Are the Planets Volcanoes Being Triggered by Global Warming ? (April 16, 2010)
    31 (b) Scientific American -A Warming World Could Trigger Earthquakes, Landslides & Volcanoes By James Watson (April 21, 2010)
    32 NASA Report : What are (Volcanic) Aerosols ?
    33. Volcanoes & Climate Change ByJason Wolfe (September 5, 2000)
    34 18 Most Dangerous US Volcanoes Include Erupting Alaska Peak (Jan 20, 2006)
    35 NASA Report : Historic Volcanic Eruption Shrunk the Mighty Nile River (Nov 21, 2006)
    36 NuclearPlanet.com : Science About thre True Nature of Earth & Universe
    37 The Nuclear Heart of the Earth : The Science Behind “The Core” – An Interview with Marvin Herndon Ph.D. By : Wayne Smith (Mar 31, 2003)
    38 Encyclopedia.com : Radioactive Heat Production in the Earth By : David A. Rothery (1993)

    39.geo-reactor at centre of earth,s core  [January 2002]

    40. http://gulfnews.com/news/uae/general/earth-s-core-a-reactor-that-is-shutting-down-1.351697  [March 23, 2003]

    41 Can Climate Change Explode ? By : Ridhima (Jan 3, 2010)

    42. https://en.wikipedia.org/wiki/Natural_nuclear_fission_reactor  [Novenber 3, 2017]

    43. https://en.wikipedia.org/wiki/Inner_core [November 14, 2017]

    44.  https://en.wikipedia.org/wiki/Taal_Volcano

    45.  https://en.wikipedia.org/wiki/List_of_active_volcanoes_in_the_Philippines

    46. https://www.space.com/taal-volcano-eruption-philippines-9-mile-plume-video.html

    47.  https://www.bloomberg.com/news/articles/2020-01-19/philippines-keeps-guard-on-deadly-volcano-eruption-amid-quakes

    48. https://www.nbcnews.com/news/world/taal-volcano-simmers-philippine-officials-brace-long-crisis-n1118306

    49. https://www.livescience.com/taal-volcano-eruption-seen-from-space.html?

    50. https://www.cnn.com/2020/01/17/asia/taal-volcano-philippines-fatal-attraction-intl-hnk/index.html

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  [January 19, 2020 [R-2]

    SHARE THIS:

    Posted in சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பிரபஞ்சம், பேரிடர்கள், விஞ்ஞானம் | Leave a reply

     
     
     
     
     
    ReplyForward
     
     
     
     
     
     

     

     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    Image result for philippines volcano"

    Image result for philippines volcano"

    Image result for philippines volcano"

    https://www.cnn.com/2020/01/12/asia/taal-volcano-eruption-philippines-trnd/index.html

    https://www.cnn.com/2020/01/12/asia/gallery/taal-volcano-eruption/index.html

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

     

    காலக் குயவன் ஆழியில் படைத்த
    ஞாலத்தின் நடுக் கருவில்
    அசுர வடிவில்
    அணுப்பிளவு உலை ஒன்று
    கணப்பளித்து வருகுது
    பில்லியன் ஆண்டுகளாய் !
    எருப் பொருளை இடையே
    பெருக்கும்
    வேகப் பெருக்கி அணு உலை !
    உட்கரு உள்ளே
    கட்டுப் பாடுடன் இயங்கியும்
    நிறுத்தம் அடைந்தும்
    விட்டு விட்டு வேலை செய்வது !
    வெளிக் கருவிலே
    கனல் குழம்பைச் சமைத்துக்
    கொதிக்க வைக்குது !
    குவல யத்தைக்
    குத்தூசி போல் குடைந்து
    பீறிடும் எரிமலைகள் !
    தாறு மாறாய் தடம் மாறி
    ஊர்ந்து தாளமிடும்
    தாரணியின் குடல் தட்டுகள் !
    அங்கிங் கெனாதபடி
    பொங்கிப் பீறிடும்
    பூதக் கனல் எரிமலைகள் !
    நர்த்தனம் புரியும் நில நடுக்கம் !
    அணு உலை வெப்ப மீறலைத்
    தணிப்பவை அவை !
    உட்கருவின்
    பூத அணு உலையே
    பூமியின்
    அச்சைச் சுழற்றி
    ஆட வைக்கும் மின்ஜனனி !

    ++++++++++

    புதிய உமர் கயாம்

    +++++++++++

    2020 புத்தாண்டின் பூதப்பெரும் பேரழுத்த மின்னல் எரிமலை

    கடந்த எரிமலை பீறிட்டு நாற்பத்தி மூன்று ஆண்டுகட்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் நாட்டுத் தீவுகளில் ஒன்றான லூசான் தீவில் 2020 ஜனவரி 12 ஆம் தேதி “தால் எரிமலை” [Taal Volcano] நீராவியோடு ஸல்ஃபர் ஆக்ஸைடு புகை முகிலை, 9 மைல் [14 கி.மீ.] உயரத்தில்  உமிழ்ந்து வெளியேற்றி 500,000 மக்களை வெறும் கையுடன் புலம்பெயர வைத்துள்ளது. லூசான் தீவு  தலைநகர் மணிலா விலிருந்து தெற்கே 40 மைல் தாரத்தில் உள்ளது.  எரிமலை பீறும்  அந்நிகழ்ச்சியைப் படமெடுத்த ஜப்பான் ஹிமாவரி- 8 துணைக்கோளை நாசா விண்வெளித் தேடல் பெருங்கூடம்  அறிவித்துள்ளது.  சுமித்சோனியன் பூகோள எரிமலைத் தோற்ற ஏற்பாடு    [Smithsonian Institution’s Global Volcanism Program] கூற்றுப்படி 1960 ஆண்டு முதல் 1977 வரை, அடுத்து 2006, 2008, 2010 & 2011 ஆண்டுகளில், தால் எரிமலை, நில நடுக்கமோடு மேளம் தட்டி வருகிறது.  அப்போது நீராவி வெப்ப நேர்வு மிகுந்து [Hypothermal Activity] பேரளவு கணப்பு திரவம், [எரிமலைக் குழம்பு]  பொங்கி வீழ்ந்து, புகைமுகில் சாம்பல் பல மைல் உயரத்துக்கு எழுகிறது.  எரிமலைக் குழம்பு துளையிட்டு வரும்போது, நீருடன் இணையும் சமயத்தில் திடீரென ஆவியாகி 8 மடங்கு பலத்த வலுவுடன் ஏறி அடிக்கிறது. இப்போது [2020 ஜனவரி 19] வரை 144 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  1572 ஆண்டு முதல் 1977 வரை 33 முறைகள் எரிமலை எழுந்து மக்களுக்கு இடர் விளைவித்துள்ளது.

     

    ++++++++++++

    எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor)

    Posted on November 28, 2017

     

    Image result for geo-reactor at centre of earth,s core

     

    “பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”

    “பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.”

    மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)

    “ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”

    பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)

     

    பூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை

    உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல ! கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார். காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ‘டாம் சாக்கோ’ (Tom Chalko, inspired by Desmarquet’s Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth’s Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார். அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது !

    பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது ! துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவி லிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து ! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல ! இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது !

    ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன ! 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது ! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது ! எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன ! அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது ! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா ? அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன !

    பூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன

    கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன. 1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன ! நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ? அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை ! பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.

    பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது ! புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது ! அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம் !

    பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை

    ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி ! திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது. யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.

    உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.

    தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.

    யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.

    வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன. அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !

     

    விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை

    பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.

    அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலை  யங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கொண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும் ! இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை.

    பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் ! அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு ! உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது. செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது ! செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப் படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன !

    (தொடரும்)

    +++++++++++++++++

    படங்கள்: BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media

    தகவல்:

    1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]
    2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]
    3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]
    4. Encyclopedia Britannica 15 Edition [1978]
    5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]
    6. National Geographic Frontiers of Science [1982]
    7. The Vesuvius Volcano at the Bay of Naples.
    8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.
    9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands
    10. Inside the Volcano, National Geographic [November 2000].
    11 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402051&format=html(Italian Volcano))
    11 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402121&format=html(Hawaii Volcano)
    12. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].
    13. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].
    14. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].
    15. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]
    16. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.
    17. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].
    18. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]
    19. The Hawaii Center for Volcanology [HCV-1992]
    20. Icland Volcano’s Fountain of Fire (March 20, 2010)
    21 National Geographic News – Harmful Effcts of Volacanic Smoke By Brian Handwerk (April 16, 2010)
    22 BBC News Why Iceland Volcano Has Grounded UK Flights By : Victoria Gill (April 15, 2010)
    23 BBC News How Volcanoes Shaped History (April 15, 2010)
    24 BBC News Experts Update Ash Health Advice (April 16, 2010)
    26 BBC News Volcanic Ash Cloud (April 17, 2010)
    27 BBC News Ash Deepens Europe Travel Chaos (April 17, 2010)
    28 BBC News Ash Imperils Bone Morrow Patients (April 18, 2010)
    29 BBC News Half of European Flights to Fly (April 20, 2010)
    30 Scientific American – How Much Volcanic Ash is Too Much for a Jet Engine ? By John Matson (April 21, 2010)
    31 (a) Daily Galaxy -Are the Planets Volcanoes Being Triggered by Global Warming ? (April 16, 2010)
    31 (b) Scientific American -A Warming World Could Trigger Earthquakes, Landslides & Volcanoes By James Watson (April 21, 2010)
    32 NASA Report : What are (Volcanic) Aerosols ?
    33. Volcanoes & Climate Change ByJason Wolfe (September 5, 2000)
    34 18 Most Dangerous US Volcanoes Include Erupting Alaska Peak (Jan 20, 2006)
    35 NASA Report : Historic Volcanic Eruption Shrunk the Mighty Nile River (Nov 21, 2006)
    36 NuclearPlanet.com : Science About thre True Nature of Earth & Universe
    37 The Nuclear Heart of the Earth : The Science Behind “The Core” – An Interview with Marvin Herndon Ph.D. By : Wayne Smith (Mar 31, 2003)
    38 Encyclopedia.com : Radioactive Heat Production in the Earth By : David A. Rothery (1993)

    39.geo-reactor at centre of earth,s core  [January 2002]

    40. http://gulfnews.com/news/uae/general/earth-s-core-a-reactor-that-is-shutting-down-1.351697  [March 23, 2003]

    41 Can Climate Change Explode ? By : Ridhima (Jan 3, 2010)

    42. https://en.wikipedia.org/wiki/Natural_nuclear_fission_reactor  [Novenber 3, 2017]

    43. https://en.wikipedia.org/wiki/Inner_core [November 14, 2017]

    44.  https://en.wikipedia.org/wiki/Taal_Volcano

    45.  https://en.wikipedia.org/wiki/List_of_active_volcanoes_in_the_Philippines

    46. https://www.space.com/taal-volcano-eruption-philippines-9-mile-plume-video.html

    47.  https://www.bloomberg.com/news/articles/2020-01-19/philippines-keeps-guard-on-deadly-volcano-eruption-amid-quakes

    48. https://www.nbcnews.com/news/world/taal-volcano-simmers-philippine-officials-brace-long-crisis-n1118306

    49. https://www.livescience.com/taal-volcano-eruption-seen-from-space.html?

    50. https://www.cnn.com/2020/01/17/asia/taal-volcano-philippines-fatal-attraction-intl-hnk/index.html

     

    Share
    January 20, 2020
  • உதிர்ந்துவிட்ட விடிவெள்ளி

    உதிர்ந்துவிட்ட விடிவெள்ளி

    நாகேஸ்வரி அண்ணாமலை

    வளர்ந்துவரும் எல்லா நாடுகளையும்போல் இந்தியாவிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவளாகிய நான் தமிழ்நாட்டில் அம்மையார் காலத்தில் நடந்த ஊழல் பற்றியும் அவருடைய மறைவிற்குப் பிறகும் அது தொடர்வது பற்றியும் நன்றாகவே அறிந்திருக்கிறேன். ‘எப்போது தணியும் இந்த சுதந்திர தாகம்’? என்றார் பாரதி. சுதந்திரம் பெற்றுவிட்ட இந்தியாவில், ‘எப்போது மறையும் இந்த ஊழல்?’ என்று பல முறை நான் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் 1967 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதே இந்தப் புற்றுநோய் பரவ ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள். காங்கிரஸை அடுத்து ஆட்சிக்கு வந்து இன்றுவரை ஆட்சியில் அமர்ந்திருக்கும் திராவிடக் கட்சிகள் காலத்தில் அது புரையோடிப் போய் தமிழ்நாட்டையே அழித்துவிடும் அபாயம் இருப்பதாகத் தெரிகிறது.

    ‘எப்போது மறையும் இந்த ஊழல்’? என்ற என்னுடைய இந்தப் புலம்பலுக்கு ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டதுபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமலஹாஸன் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சியை ஆரம்பித்துத் தன் கட்சியின் கொள்கைகளையும் எடுத்துக் கூறினார். தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று நானும் மகிழ்ந்துபோய் வல்லமை என்னும் ஆன்லைன் பத்திரிக்கைக்கு ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதியை இங்கே கொடுக்கிறேன்.

    இப்போது அரசியலுக்குப் பல நடிகர்கள் வந்திருக்கின்றனர்.  இவர்களில் கமலஹாஸன் குறிப்பிடத் தகுந்தவராக விளங்குகிறார்.  இது நாள்வரை அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருந்தபோதிலும் இப்போதாவது வந்திருக்கிறாரே என்று சந்தோஷப்படலாம்.  ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன?’ என்று ரஜினியிடம் கேட்கப்பட்டபோது அவருக்குத் தலை சுற்றிவிட்டதாம். கட்சியின் கொள்கைகூட என்னவென்று இதுவரை சிந்திக்காதவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால்  அப்படி என்ன சாதித்துவிடப் போகிறார்?கமலஹாஸன் அப்படியில்லை.  நன்றாகச் சிந்தித்துத் தன் கட்சியின் கொள்கை என்ன என்று தயார் நிலையில் வந்திருக்கிறார்.

    இலவசங்களால்தான் தமிழ்நாடு இப்படிச் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்ந்து இலவசங்கள் கொடுப்பதைவிட பிறருக்கு இலவசங்கள் கொடுக்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்துவேன் என்கிறார்.  அவர் செய்யப் போகும் காரியங்களில் முதன்மையாகக் குறிப்பிட்டது மக்களுக்கு நல்ல கல்வி கொடுப்பது.  எல்லோரும் நல்ல கல்வி கற்று அறிவு தெளிந்தால் ஊழலிலே ஊறிப்போன அரசியல்வாதிகளை ‘தெய்வம்’ என்று யாரும் குறிப்பிட மாட்டார்கள்.  ஒரு சமூகம் ஜனநாயக சமூகமாக விளங்க வேண்டுமென்றால் முதலில் எல்லோருக்கும் ஜனநாயகத்தைப் பற்றிய கல்வியைப் புகட்டிய பிறகுதான், எல்லோரிடையேயும் சிந்திக்கும் திறனை வளர்த்த பிறகுதான் ஜனநாயகத்தைப் புகுத்த வேண்டும் என்கிறார் சிந்தனையாளர் சாக்ரடீஸ்.

    சாக்ரடீஸின் இந்த அறிவுரையைக் கமலஹாஸன் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதுபோல் தெரிகிறது.  தான் எல்லோருக்கும் தலைவன் என்பதைவிட எல்லோருக்கும் சேவை செய்யப் போகும்  ஊழியன் என்கிறார்.  மதுரையில் கட்சியைத் துவக்கிவைத்தபோது ஆர்.கே.நகர். தேர்தலை மனதில் கொண்டு மக்களைப் பார்த்து, ‘நீங்கள் உங்கள் வாக்கின் மதிப்புத் தெரியாமல் அதை விலைக்கு விற்றுவிட்டீர்கள். வாக்கு உங்களுடைய நலனைக் காக்கும் உங்களுடைய உரிமை.  அதை நீங்கள் விற்றால் ஜனநாயகம் குலைந்துவிடும்’ என்றார்.  என்னுடைய கட்சி உங்கள் வாக்குக்காக ஒரு பைசாவும் கொடுக்காது என்றார்.  இது ஜனநாயகக் கல்வியின் ஒரு பகுதி.

    தான் எந்த ‘இஸத்’தையும் பின்பற்றப் போவதில்லை என்றும் மக்களின் நலன்களே தன் குறிக்கோள் என்றும் கூறுகிறார்.  அதனால்தான் தன் கட்சிக்கு ‘மக்கள் நீதி மையம்’ என்று பெயர் கொடுத்திருக்கிறார். படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாலும் பல பட்டங்கள் பெற்றவர்களுக்கு நிகராக அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர்.போல் முதல் மந்திரியாகப் பதவியேற்றாலும் இரவில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லவில்லை.  (அவராலும் அப்படிச் செய்ய முடியவில்லை என்பது இன்னொரு விஷயம்.)  இனி மக்களுக்குச் சேவை செய்யும் நல்ல அரசியல்வாதியாக மட்டுமே இருப்பேன் என்கிறார்.  இவர் தலைமையில் தமிழ் மக்களின் நலன்கள் மத்திய அரசால் சூறையாடப்படாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

    இந்தியாவில் வடக்கில் ஒரு கெஜ்ரிவால் தோன்றியிருப்பதுபோல் தெற்கில் ஒரு கமலஹாஸன் தோன்றியிருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்வோம்.  தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்து இந்தியாவுக்கே ஒரு மாடலாகத் தமிழகம் விளங்கும் என்று நம்புவோம்.  தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று பெருமிதம் கொள்வோம்.

    இப்படியெல்லாம் என் போன்றோரிடம் நம்பிக்கையை வளர்த்த கமலஹாஸன் இப்போது ரஜனிகாந்திடம் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். நான் படித்த இந்தச் செய்தி என் கனவில் கண்ட செய்தியாக இருக்க வேண்டுமே என்று பல முறை வேண்டியிருக்கிறேன்.

    ஆனாலும் மறுபடி மறுபடி இந்தச் செய்தி கண்ணில் பட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மேலேயுள்ள என் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு விடிவெள்ளி என்று நான் நினைத்திருந்த கமலஹாஸன் ஏன் இப்போது ரஜனியை அரசியலுக்கு வர அழைக்கிறார்?  உலக வரலாறு பற்றியோ நாட்டு நடப்பு பற்றியோ எதுவும் தெரியாத ரஜனியை இவர் உதவிக்குக் கூப்பிடுவதன் நோக்கம் என்ன? ‘காவிப் பக்கம் போக மாட்டேன்’ என்று உறுதியாகக் கூறிக்கொண்டிருந்தவர் ‘காவி’த் தலைவர்கள் குறிவைத்திருக்கும் ரஜனியை உதவிக்கு அழைக்கிறாரே.  இது என்ன மர்மம்?  ‘ரஜனி அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?’ என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது ‘அவர் பாதை தனி. என் பாதை தனி’ என்று கூறியவர் இன்று அவரை உதவிக்கு அழைக்கிறாரே?

    சில மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டு அரசியல் பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ‘கமலஹாஸன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.  என் கேள்வியைக் கேட்டு அவர்கள் சிரித்துவிட்டு, ‘மக்கள் புரிந்துகொள்ளும் முறையில் அவர் பேசவில்லையே’ என்றார்கள்.  அதைக் கேட்டு மிகவும் மனம் நொந்து போனேன்.  ‘இவர்கள் ஏன் கமலஹாஸனுடைய நல்ல கொள்கைகளைப் புரிந்துகொள்ளவில்லை?’ என்று ஆயாசப்பட்டேன்.  கமலஹாஸனை நான் எடைபோட்டது தவறா என்று இப்போது நான் ஆயாசப்படுகிறேன்.  நான் நம்பியதுபோல் அவர் ஒரு விடிவெள்ளி இல்லையா? ரஜனியைத் தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கு அவர் அழைத்தது அறிந்து அவரைப் பற்றிய என் ஆர்வமெல்லாம் வடிந்துவிட்டது.  இது கனவாக இருக்கக் கூடாதா என்று வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

    Share
    January 20, 2020
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 102

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 102

    நாங்குநேரி வாசஸ்ரீ

    102. நாணுடைமை

    குறள் 1011

    கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
    நல்லவர் நாணுப் பிற

    வேண்டாத கெட்ட காரியத்த செய்யுதவன் வெக்கப்படுததுக்கும், அழகான பொம்பளப்பிள்ளைங்க வெக்கப்படுததுக்கும் வித்தியாசம் உண்டு.

    குறள் 1012

    ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
    நாணுடைமை மாந்தர் சிறப்பு

    சாப்பாடும், உடுப்பும் மத்ததும் எல்லா உசிருக்கும் பொதுவான தேவ. சிறப்பானது மத்தவங்க சொல்லுத பொல்லாப்புக்கு பயந்து கெட்ட காரியத்த செய்யாம வாழுத நாணுடைமைதான்.

    குறள் 1013

    ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
    நன்மை குறித்தது சால்பு

    எல்லா உசிரும் இருக்கதுக்கு எடமா ஒடம்ப வச்சிருக்குதுக. அது கணக்கா சான்றாண்மை நாணம் ங்குத நல்ல கொணத்த எடமா கொண்டிருக்குது.

    குறள் 1014

    அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
    பிணியன்றோ பீடு நடை

    நாணம் இருக்குதது படிச்ச பெருமக்களுக்கு நகநட்டுகணக்கா.  அதுமட்டும் இல்லையினா அவுக என்னதான் பெருமிதமா நடந்தாலும் பாக்கதுக்கு அது நோய் கணக்காதான் தெரியும்.

    குறள் 1015

    பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
    குறைபதி என்னும் உலகு

    தனக்கு வருத பொல்லாப்புக்காவ மட்டுமில்லாம பொறத்தியாரோட பொல்லாப்புக்காகவும் வெசனப்படுதவங்கிட்ட நாணம் ங்குத கொணம் வாழுததா ஒலகத்தவரு சொல்லுதாங்க.

    குறள் 1016

    நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
    பேணலர் மேலா யவர்

    பெரியமனுசங்க இந்த ஒலகத்துல தன் பாதுகாப்புக்காவ நாணத்த வேலி கணக்கா வச்சிக்கிட்டு வாழுவாகளே தவித்து மத்தத இல்ல.

    குறள் 1017

    நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்

    நாணம்ங்குத கொணத்த கொண்டவுக மானத்துக்காவ உசிர உடுவாகளே தவித்து  மானங்கெட்டு உசிரு வாழ மாட்டாக.

    குறள் 1018

    பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
    அறநாணத் தக்க துடைத்து

    வெக்கப்படுத அளவுக்கு பழிபாவத்துக்கு ஆளானவுக அதுக்காவ வெக்கப்படாம இருந்தாங்கன்னா அவுகள விட்டு அறம் வெக்கப்பட்டு வெலகி போயிடுச்சின்னு நெனச்சிக்கிடணும்.

    குறள் 1019

    குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
    நாணின்மை நின்றக் கடை

    கொள்கை தப்பி நடந்தாம்னா அவன் பொறந்த குடும்பத்துக்கு கேடு வரும். மானங்கெட்டு திரிஞ்சாம்னா அவனுக்கு வருத நல்லதெல்லாம் அழிஞ்சுபோவும்.

    குறள் 1020

    நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி அற்று

    மனசுல வெக்கங்கெட்டு திரியுதவுக நடமாட்டம் மரத்தால செஞ்சி கயறு கட்டி உசிரு இருக்கது போல ஆட்டங்காட்டுத பொம்மை கணக்காத்தான்,

    Share
    January 20, 2020
  • குறளின் கதிர்களாய்…(284)

    குறளின் கதிர்களாய்…(284)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(284)

    எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவும்
    நல்லா ளுடைய தரண்.
    – திருக்குறள் -746 (அரண்)

    புதுக் கவிதையில்…

     உள்ளிருக்கும் மக்கள்
    தேவைக்கு
    வேண்டிய பொருட்களெல்லாம்
    உள்ளே இருப்பதுவாய்,
    பகைவரால் அழிவு வருகையில்
    வராமல் அதைத் தடுக்கும்
    வல்லமைமிகு
    வீரரைக் கொண்டதுதான்
    வலிய அரண்…!

    குறும்பாவில்…

    தேவைக்குரிய பொருட்களெல்லாம்
    உள்ளிருப்பதுவாய், வருபகை தடுத்தழிக்கும்
    வீரரைக் கொண்டதுதான் அரண்…!

    மரபுக் கவிதையில்…

     உள்ளே யிருக்கும் மக்களவர்
    உடனடித் தேவைப் பொருளெல்லாம்
    உள்ளே கிடைக்கும் வகையதுவாய்,
    ஊறிக் கிடந்த பகைமீறி
    வெள்ள மெனவே படையுடனே
    வேற்று நாட்டார் தாக்கவந்தால்
    தள்ளித் தடுத்திடும் திறமைமிகு
    தளரா வீரரும் அரணாமே…!

    லிமரைக்கூ..

    பொருளொடு வீரருளதே கோட்டை,
    தேவைப்பொருளெலாம் கிடைத்திடும் உள்ளே
    தடுப்பர் வீரர் பகையாம் கேட்டை…!

    கிராமிய பாணியில்…

    கோட்டயிது கோட்ட,
    மக்களுக்குப்
    பாதுகாப்பான கோட்டயிது..

    குடிமக்களுக்குத்
    தேவயான பொருளெல்லாம்
    தேடி அலயாம
    உள்ளேயே கெடைக்கும்,
    அதோட
    பகயாளி படயெடுப்பப்
    பயப்படாமத் தடுக்கிற
    தெறமவுள்ள வீரருகளுந்தான்
    வலுவான கோட்ட..

    கோட்டயிது கோட்ட,
    மக்களுக்குப்
    பாதுகாப்பான கோட்டயிது..!

    Share
    January 20, 2020
  • 35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ்

    35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ்

    கலைமாமணி வீ.கே.டி. பாலன்

    எமது நிறுவனம் “மதுரா” 35ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது …❗

    ஒரு பரவசத்துடனும், சிறிது பெருமிதத்துடனும், நிறைய நன்றிக் கடனோடும் திரும்பிப் பார்க்கிறேன்.

    1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி திருச்செந்தூரை விட்டு without ticketஇல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியவன் நான்.

    வேலை கிடைக்காது 6, 7 மாதத்தில், ஒரு மனநோயாளியாக ஒட்டிய வயிறோடும் கிழிந்த ஆடையுடனும் எழும்பூர் ரயில்வே நிலைய பிளாட்பாரத்தில் வாழ்ந்து திரிந்தவன்.

    அமெரிக்க தூதராலய வாசலில் விசா பெற வாசலில் இடம் பிடித்துக் கொடுத்து ரூ. 2/= பெற்றுக்கொண்டதே எனது முதல் வருமானம்.

    அதிலிருந்து கிடைத்த வளர்ச்சியில் 1986 ஜனவரி 17இல் 58, மண்ணடி தெரு, சென்னையில் ரூ. 10, 000/= முன்பணத்தில் ரூ. 1, 000/= வாடகையில் மதுரா டிராவல்ஸ் சர்வீஸ் உதயமானது.

    ஆயிரம் ஆயிரம் அவமானங்கள், ஆயிரம் ஆயிரம் தோல்விகள் எங்குத் திரும்பினாலும் இதுவே எனது வாழ்க்கை. இதுவே எனது அனுபவம். அவமானமும் தோல்விகளும் சிலரை அடியோடு அழித்துவிடும். எனக்கோ அவையே உரமாக அமைந்தன.

    இன்று மதுரா டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட், தமிழகத்தின் முன்னணி நிறுவனம் என்பதனையும் தாண்டி, உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது.

    சுற்றுலாப் பயணத் துறையின் அத்தனை உயரிய அங்கீகாரங்கள் பெற்றிருந்தும், அவற்றையும் தாண்டி, தமிழக அரசின் “கலைமாமணி” விருதும் கிடைத்தது நான் பெற்ற பேறு.

    அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற 10ஆவது உலகத் தமிழாராச்சி மாநாடு உட்பட பல உலக மாநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயண முகவராகச் சிறப்பாக பணியாற்றியுள்ளோம்.

    25க்கும் மேற்பட்ட நாடுகளில் 1500க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு 250க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளையும் இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தியுள்ளோம் என்பதில் பேருவகை அடைகிறோம்.

    என்னை ‘உழைப்பால் உயர்ந்தவர்’ என்று பொதுவெளியில் பாராட்டும் போது கொஞ்சம் கூசித்தான் போகிறேன். என் மனசாட்சி “யார் உழைப்பால் நீ உயர்ந்தாய் ” என என்னைக் கேட்கிறது. திறந்த மனத்தோடு இப்போது பதில் சொல்கிறேன் “என் ஊழியர்களின் உழைப்பால்தான் நான் உயர்ந்திருக்கிறேன்”.

    சில நேரத்தில் ‘படிப்படியாக உயர்ந்தவர்” என்று கூட என்னைப் பாராட்டுவதுண்டு. அப்போதும் என் மனசாட்சி என்னை நோக்கிக் கேட்கும். “யார் படிகளாக இருந்தார்கள்?” என்று. இப்போது பதில் சொல்கிறேன். அமரர் திருமதி சந்திரா ராமகிருஷ்ணன், அமரர் முருகேசு அண்ணன், அமரர் அண்ணன் பாலகிருஷ்ணன், திரு. M. K. M.புஹாரி, இம்பீரியல் அமரர் மாப்பிள்ளை முதலாளி, அமரர் S சீர்காழி கோவிந்தராஜன் ஐயா, அமரர் TM.சௌந்தரராஜன் ஐயா, திருமதி. P. சுசீலா அம்மா, திரு. B. H. அப்துல் ஹமீது, திரு. அப்துல் ஜபார், திரு. ராமசாமி, திரு. கோவை நந்தன், ஸ்விஸ் மூர்த்தி, லண்டன் சிவா, அமரர் புஸ்பராஜா, திரு. S. செல்வநாயகம், திரு. K. செல்வராஜ், திரு. K V நாராயணன், திருமதி. கற்பகம் கணேசன், திரு. ராஜசேகரன், அமரர் விக்ரமன், அமரர் சேஷாத்ரி நாதன் (UBI) ,திரு. அழகுராஜன், திரு. S. அனந்த நாராயணன், திரு. S. குமார், திருமதி. ராதா, திருமதி. ஆரிபா, திருமதி. சியாமளா, திருமதி. பாண்டீஸ்வரி, திருமதி. தீபா மற்றும் என் வாழ்வின் அத்திவாரம் என் அன்பு மனைவி சுசீலா, மற்றும் என் உயிரினும் மேலான வாடிக்கையாளர்கள்.

    உங்கள் ஆசியோடும் அன்போடும் தொடர்கிறோம் எங்கள் பணியை. நன்றி. வணக்கம்.

    இவ்வண்ணம்,

    கலைமாமணி VKT பாலன், தலைவர், மதுரா டிராவல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்
    Mail id: balan@maduratravel.com
    Cell. No. +91 98410 78674
     
    மற்றும் ஶ்ரீஹரன் பாலன்
    Cell.No. +91 98410 78675
    Share
    January 18, 2020
  • பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு

    பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு

    -முனைவா் அரங்க. மணிமாறன்
    முதுகலைத் தமிழாசிரியா்

    அரசு மேனிலைப்பள்ளி-   பரமனந்தல்
    செங்கம் – 606710.
    பேசி 9943067963.

    *****

    தனிமனித உணா்வுகளைப் பாடுபொருளாகக் கொண்டு விளங்கியவை சங்கப்பாடல்கள். மனித மனங்களில் படிந்துகிடந்த தீயொழுக்க அழுக்குகளைப் போக்கி நல்லொழுக்கக் கருத்துகளை பொருண்மையாகக் கொண்டவை நீதிநூல்கள். ஒப்பற்ற தலைவனின் வீரதீரங்களை வெளிப்படுத்தியவை காப்பியங்கள். தொன்மக் கருத்துகளை புராண இதிகாசங்கள் வெளிப்படுத்தின. புலவா்களின் மதிநுட்பங்களைச் சிற்றிலக்கியங்கள் வெளிக்காட்டின. பாரதியார் போன்ற புலவா்கள் விடுதலை கீதங்களை இசைத்தனா். பிற்காலப் புலவர்களும் படைப்பாளிகளும் சமுதாயவியலுக்கு முக்கியத்துவம் அளித்தனா்.

    பேரறிஞர் அண்ணாதுரை:

    “எல்லாத்துறையும் அண்ணாத்துரையே” எனும்படி அரசியல், பொருளாதாரம், மேடைப்பேச்சு, இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் தமது ஆளுமையால் கோலோச்சியவா் பேரறிஞர் அண்ணா.

    “அண்ணாவின் கதைகளைக்கொண்டு அக்கால நாடக உலகம், மேடைப்பேச்சு விஷயங்கள், வணிகர்களின் நடைமுறைகள், தம் இறுதிநாளில் இருந்த ஜமீன் பரம்பரை நடவடிக்கைகள் செல்வந்தர்களின் வழக்கங்கள் உள்ளிட்டவற்றை அறியலாம்” 1 என்கிறார் பேரா. பெருமாள் முருகன்.

    தமது சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல்பாடுகள் அனைத்திலும் போலி மதவாத எதிர்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை விதைப்பு, சமுதாயத்திலும் அரசியலிலும் உள்ள சீர்கேடுகளை வெளிக்காட்டுதல், புராணப் புளுகுகளை தோலுரித்தல் ஆகியவற்றின் மூலம் மக்கள் அனைவரும் பேதங்களின்றி வாழ்ந்து அனைத்து உரிமைகளையும் பெற்று வாழவேண்டும் என்ற அவருடைய பொதுவுடைமைச் சிந்தனை வெளிப்படுத்துவதைப்பற்றி டாக்டா் மா. தியாகராஜன்,

    “இவரின் சிறுகதைகள் அரசியல், சமுதாயம், ஆணாதிக்கம், பெண்ணடிமை, சாதிக்கொடுமைகள், ஏழ்மையின் நிலை, அதைப் போக்குவது எங்ஙனம் என்ற தீர்வைக் கொண்டனவாகவே உள்ளன” 2 என்று தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

    அத்தகைய பொருண்மைகள், சமுதாய விழிப்புணர்வுக் கருத்துகளாக வெளிப்படுவதை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    பத்திரிகை தர்மம் வேண்டும்:

    இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக (FOURTH ESTATE) விளங்குவது இதழியல் துறையாகும். இதழியல் மக்களுக்கு அறிவிக்கிறது, பொது அறிவை ஊட்டுகிறது, வழிநடத்துகிறது. எனவே செய்திகளை வழங்கும்போது நடுநிலையோடும் உண்மையானதுமான செய்திகளை வெளியிடவேண்டும். தனிநபரின் வாழ்வுக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படாவண்ணம் செயல்பட வேண்டும்.

     “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்ததொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி”3  எனும் திருவள்ளுவரின் சான்றோர் இலக்கணம் இதழியல் துறைக்கும் பொருந்தும்.

    ஆனால் இன்றைய இதழியலாளா்கள் போட்டி நிறைந்த உலகியலில்  தங்கள் இதழ்களை மக்கள் அதிகம் படிக்கவேண்டும், விற்பனையாகவேண்டும் என்ற வியாபாரப் போட்டியினால் பயனற்ற – உண்மையற்ற – தனிநபரின் பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாத செய்திகளைக் கற்பனை, வருணனை கலந்து விற்பனை நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வெளியிடுகின்றனர். இதழ்களின் விற்பனையைக் கொண்டே அவற்றின் தரமும் வளர்ச்சியும் புகழும் அளவிடப்படுகிறது.

    தந்தை பெரியாரிடம் சென்று ஒருவா் தாம் பத்திரிகை ஒன்றைத் தொடங்கவிருப்பதாகக் கூறி வாழ்த்துப்பெற வந்தபோது “சோத்துக்கு என்ன செய்யப் போற?” எனக் கேட்டாராம். படிப்பதற்கு நையாண்டியாக இருந்தாலும் இதழியல் உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நன்கு அறிந்த பழுத்த அனுபவத்தின் வெளிப்பாடாக இக்கூற்று அமைவதை அறியலாம்.

    நல்ல நோக்கோடு செயல்படும் இதழ்கள் சில, கவர்ச்சிகர இதழ்களின் நடுவே காணாமல் போகின்றன. இவற்றை நன்கு அனுபவமாக உணா்ந்த அண்ணா தமது ’கொக்கரக்கோ’ சிறுகதையில் சுந்தரம் தன் நண்பரிடம் தான் ‘கொக்கரக்கோ’ என்ற பெயரில் இதழ் நடத்துவதாகவும் அதில் ’வீரா் வெல்லிங்டன்!’  ’மனிதனுக்கு ஒரு தலை போதுமா?’ ’ஹிட்லர் பட்லரானால்’ உள்ளிட்ட தலையங்கங்கள் எழுதி இதழை வளா்த்த கதைகளைக் கூறுகிறார்.

    “கேள் சங்கரா! சுற்றி வளைத்துப் பார்த்தேன் திடீரென்று ஒரு யுக்தி கிளம்பிற்று. எடுத்தேன் பேனாவை ஹிட்லர் பட்லரானால்? என்று கேள்வி ஒன்று கிளப்பினேன். விற்பனை பலத்தது. 32 பி.ஏ க்களை நிருபா்களாகவும் பார்சல் குமாஸ்தாக்களாகவும் வைத்துக்கொண்டேன்.” என்றும்

    “கருணைப்பிள்ளை நர்த்தனம்
    பரதநாட்டியம் ஒரு பழங்கலை”4
    என்றும் செய்தி வெளியிட்டதாகக் கூறுகிறார்.

    இதழ்நடத்தி நட்டமடைந்து புத்தி பேதலித்த சுந்தரம்வழி இதழியலின் நிலைகளை வெளிப்படுத்தியுள்ளார் அண்ணா.

    உழைப்பாளர் உயரவேண்டும்:

    ஊருக்குச் சோறுபோடும் விவசாயி பட்டினி கிடக்கிறான். துணிநெசவு செய்துதரும் நெசவாளி கந்தையை உடுத்துகிறான். அனைவருக்கும் வீடுகட்டித் தரும் தொழிலாளி கூரைவீட்டில் குடியிருக்கிறான். இத்தகு முரண்பாடுகளுக்குக் காரணமென்ன?

    ஒரு பொருளை உற்பத்தி செய்பவனுக்கும் நுகர்வோருக்குமிடையில் இருக்கும் இடைத்தரகர்கள் இதற்குக் காரணம். அவா்களின் சுயநலத்தினால் பொருட்களின் உற்பத்தி விலை பன்மடங்கு உயா்ந்துவிடுகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவையான பொருட்களுக்கும் ஏற்படும் இவ்விலையுயா்வு ஏழை நடுத்தர வா்க்கத்தினரைப் பாதிப்பதை தமது ’சரோஜா ஆறணா!’ சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ளார் அண்ணா.

    ’சரோஜா ஆறணா!’ என நடுத்தெருவில் ஒருவன் கூவிக்கூவி விற்றதும் நாயகனுக்கு கோபம் வந்து காலம் எவ்வளவு கெட்டுவிட்டது? பெண்ணை நடுத்தெருவில் விலைகூவி விற்பதா? எனச் சண்டைக்குச் செல்கிறான். கூவியவனுக்கும் இவனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நாயகனை அடித்துவிடுகிறான். நடுத்தெருவில் ஒரு பெண்ணை விலைகூறியதைத் தட்டிக்கேட்டதற்கு அடித்தீரே! எனக் கேட்டதற்கு, “இது நூல்மார்க்கெட் தம்பி! சரோஜா மில் நூல் விலை 44-6-0 என்பதையே தான் சரோஜா ஆறணா என்று விற்றதாகக் கூறுகிறான். அதனைத்தொடரும் உரையாடல்களில் உற்பத்தி விலைக்கும் நுகர்வோர் பெறுகின்ற விலைக்குமிடையேயான மலையளவு வேறுபாட்டையும் ஏழைகள் அவற்றை அதிக விலைகொடுத்து வாங்கித் துய்க்க வேண்டிய நிலையையும் விளக்கியுள்ளார்.

    “இன்றைக்கு இருக்கும் விலை நாளைக்குக் கிடையாது. மணிக்கு மணி தந்தி வருகிறது! இடையிலே இருந்து பலா் இலாபமடிக்கின்றனா். ஆா்டா் கொடுப்பவருக்கு நூல் பேல் தேவையில்லை. ஆனால் பணம் இருக்கிறது. வியாபார சூட்சுமம் இருக்கிறது. 200 பேல் வாங்குவார். ஒரு வாரத்திலே 40 என்று விலை ஏறிவிடும். அவா் இலாப சாட்டு ஏறும்”5 என்று வியாபார உலகின் நிலையை அண்ணா விளக்கியுள்ளார். இன்றைய சுயநல உலகில் பொருளாதாரப் பற்றாக்குறையால் பெற்ற பிள்ளையை விற்க வேண்டிய நிலையையும் இக்கதை விளக்குகிறது.

    மூடநம்பிக்கை ஒழிப்பு:

    போலி மதவாதிகளையும், பொய், புரட்டுகளைக் கூறி மக்களை ஏமாற்றி அதில்தன் வயிறு பிழைக்கும் வஞ்சகா் கூட்டத்தினரையும், திரைப்படத்துறையில் உள்ள சில சுயநலவாதிகளையும் ’பேய் ஓடிப் போச்சு’ சிறுகதையில் வெளிப்படுத்தயுள்ளார் அண்ணா.

    “பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் உள்ளிட்ட மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஏற்றத்தாழ்வு, சுரண்டலை அம்பலப்படுத்துவது ஆகியவையே அவரது கருத்துநிலைகள்”6 என்கிறார் பேரா. பெருமாள் முருகன்.

    செங்கோடனின் மகள் செல்லாயிக்குத் திருமணம் நிச்சயித்திருந்த வேளையில் பேய் பிடித்துவிடுகிறது. அதனால் செங்கோடன் வருந்துகிறான். வேலனின் அப்பா கோவிந்தன் குடிகாரனாக இருந்தாலும் வேலனின் நற்குணங்களை அறிந்து செங்கோடன் தன் பெண்ணைக்  கொடுக்க முன்வருகிறான். ஆனால் செல்லாயிக்குப் பேய் பிடித்து அதனால் தன் இயல்பு மாறிவிட்டதைக் கண்டு செல்லாயியைத் திருமணம் செய்துகொள்ள முடியாது எனத் திருமணத்தை நிறுத்திவிடுகிறான். இதனால் மிகுந்த வருத்தமடைந்த செங்கோடன் பூசாரி பொன்னனிடம் அழைத்துச் செல்கிறான் தன் மகளை. அவன் பல்வேறு சடங்குகளைச் செய்து பேயை விரட்டுவதாகக் கூறி அவனிடம் பணத்தைக் கறந்துவிடுகிறான். ஆனால் செங்கோடன் எதிர்பார்த்தது போலவே பேய் விலகிவிடுகிறது. செல்லாயி நலம் பெற்றுவிடுகிறாள்.

    “அண்ணே பூசாரி பொன்னனை நான் என்னமோன்னு எண்ணிக்கிட்டுக் கிடந்தேன். இப்பத் தெரியுது அவன் இலேசுபட்டவனில்லைங்கற விஷயம்.”7

    திரைப்பட இயக்குநர் சிங் கிராமத்துக் காதல் திரைப்படத்தை எடுக்க கிராமத்திற்கு வருகிறார். அதில் தெருக்கூத்தில் ஆா்வமிக்க வேலனையும் அவனைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட செல்லாயியையும் மடியில் படுக்கவைத்து ஆப்பிளைக் கடிக்க வைத்துப் படமாக்கி பின்பு அதைச் செல்லாயி திரைப்பட நாயகனுக்கு ஊட்டிவிடுவதாக மாற்றி எடிட்டிங் செய்து வெளியிடுகின்றார். இதனால் வேலனுக்கும் செல்லாயிக்கும் சண்டை ஏற்பட்டுத் திருமணம் தடைசெய்யப்படுகிறது. செல்லாயி பேய் பிடித்தவளாகிறாள். இறுதியில் உண்மைதெரிந்து வேலன் இயக்குநரை அடித்துவிடுகிறான். தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து விளக்கமளிக்கிறார் இயக்குநர். வேலனும் தன் தவறான புரிதலுக்கு வருந்துகிறான்.

    இயக்குநரின் சுயநலம் செல்லாயி மனத்தைப் பேதலிக்கச் செய்து திருமணத்தை நிறுத்திப் போலி பூசாரி பொன்னனின் வருமானத்திற்கு வழிகோலுவதை இச்சிறுகதை விளக்குகிறது.

    சமத்துவம் மலர வேண்டும்:

    மனிதா்களில் சிலா் சாதி மத பேதமற்ற சமத்துவவாதிகளைப் போல நடிக்கின்றனா். உண்மையில் அப்படி இல்லை. மாமன் மச்சான் உறவு கொண்டாடும் இருவேறு சாதியினா் தன் பெண்ணைத் தன் சாதிவிட்டு நட்புக்காக, உறவுக்காகத் திருமணம் செய்து கொடுப்பதில்லை. அங்கே தன்சாதி தலைதூக்கி நிற்கிறது. வேற்றுமையில் ஒற்றுமைகாணும் பாரததேசத்தில் ஒற்றுமை உண்மையாகவா உதட்டளவிலா என்ற கேள்விக்குறியை ’1938-1940 ஒரு வசீகர வரலாறு’ சிறுகதையில் எழுப்பியிருக்கிறார் அண்ணா.

    ”அண்ணாவின் கதைகளின் இன்னொரு தனித்தன்மை இக்கதைகளில் வரும் விதவை மறுமணம், பொருந்தா மணம், பாலியல் சுரண்டல் என இவா் கையாண்டுள்ளவை முக்கியமானவை”8 எனும் பேரா. பெருமாள் முருகன் கூற்றுப்படி இக்கதையில் விதவை மறுமணத்தை ஆதரித்து எழுதியுள்ளார் அண்ணா.

    சொக்கலிங்கம் செட்டியார் கடையில் நாயுடு வகுப்பைச் சேர்ந்த கண்ணுசாமி வேலை செய்கிறான். காலை கடையைத் திறந்ததிலிருந்து மாலை கடையை பூட்டிச் சாவியை ஒப்படைப்பது வரை அவனை நம்பி அனைத்தையும் ஒப்படைக்கிறார். அவனும் மிகுந்த நற்பண்பும் நம்பிக்கையும் உடையவனாக இருக்கிறான். செட்டியார் அவனை மெச்சித் தன் குடும்பத்தில் ஒருவனாகவே கருதுகிறார். செட்டியாரின் மகள் கலியாணி திருமணமான சில காலத்திலேயே கணவன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட அவள் விதவையாகிறாள். கண்ணுசாமி, செட்டியாரின் மனத்தை மட்டுமில்லாது கலியாணியின் மனத்தையும் கவா்கிறான்.

    விஷயமறிந்த செட்டியார் அவன் சம்பளத்தைக் குறைக்கிறார்; வசைபாடுகிறார். வேலையை விட்டே நிறுத்திவிடுகிறார். கலியாணியும் கண்ணுசாமியும் உடன்போக்குச்சென்று திருமணம் செய்துகொண்டு ஆண்மகவைப் பெற்றெடுக்கின்றனா்.

    சாதி ஒன்றையே பெரிதெனக் கொண்டு நோயாளிக்குத் திருமணம் செய்து வைக்கிறார் செட்டியார். விதவையான தன் மகளைக் கண்ணுசாமி காதலிக்கும்போது சாதியைக் காரணம் காட்டித் திருமணத்திற்கு மறுக்கிறார். 1938-இல் தங்கமானவன், சாது 1939-இல் அவனே தறுதலை போக்கிரி! இது செட்டியாரின் கணக்கு என்பதை, “அவா் கணக்குப்படி பார்த்தால் 1938-இல் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக இருந்த கண்ணுசாமி 39-இல் நயவஞ்சகனாகிவிட்டான்” 9 என்று சாதிவேறுபாட்டின் கொடுமையையும், “தாலி இழந்தவளுக்குக் கல்யாணமா என்று தாத்தா காலத்துக் கதை பேசாதே. தாலி! கட்டுவதற்கு ஆள் இருக்கும்வரை தாலியை இழப்பது என்ற பதத்திலே பொருள் ஏது?”10

    என்று விதவைகளின் துயரம், இளம் வயதில் வாழ்விழந்த இளம் விதவைகளுக்கு மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்ற மகாத்மா காந்தி, தந்தை பெரியார் போன்றோரின் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதாக இச்சிறுகதை அமைந்துள்ளது.

    “பெண்ணியச் சிந்தனைகள், அவர்களின் முன்னேற்றம் குறித்த கருத்துகள் அவரது சிறுகதைகளில் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிகிறது”11 என்ற டாக்டா் மா. தியாகராஜனின் கருத்து இங்குப் பொருத்தமாகிறது.

    உழுதபவனுக்கு நிலம் சொந்தம்:

    “அண்ணா தமிழ்ச்சிறுகதைகளை உன்னத நிலையில் வைக்க வேண்டும் என்பதற்காக எழுதியவா் அல்லா். அவருடைய நோக்கம் கருத்துப் பிரசாரம் என்பது தெளிவு”12 என்கிறார் பேரா. பெருமாள் முருகன்.

    நம்நாட்டில் உழைப்பவன் ஒருவன்; உழைப்பின் பலனைப் பெறுபவன் ஒருவன் என்ற வினோதமான நியாயம் நிலவுகிறது.

    “உழுதவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும்!” என்ற பொதுவுடைமைச் சித்தாந்தத்தை ’செவ்வாழை’ சிறுகதையில் அண்ணா படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

    பண்ணையாரிடம் வேலை செய்யும் செங்கோடன் தன் நிலத்தில் செவ்வாழைக்கன்றை நட்டு வளா்க்கிறான். வாழை வளரும் காய் காய்க்கும் பழமாகும் உண்டால் மிக இனிக்கும் எனக் கரியன் உள்ளிட்ட தன் பிள்ளைகளுக்குச் சொல்லிச் சொல்லி ஆசை வளா்க்கிறான். குழந்தைகளும் ஏக்கத்தோடு வாழை கனிகொடுக்கும் காலத்தை எதிர்நோக்கியிருக்கின்றனா்.

     “பாடுபட்டோம் பலனைப் பெறப் போகிறோம். இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே நூற்றுக்கு ஒரு பாகம் கூட இராது. ஆனால் உழைப்பு நம்முடையதாகவும் வயல் அவருடையதாகவும் இருந்ததால் பலனை அவா் அனுபவிக்கிறார்.” 13 என்ற எண்ணவோட்டம் அவன் மனதிலே ஓடுகிறது.

    காலத்தைப் போலவே செவ்வாழையும் கனிந்தது. அதைச் சுவைக்கக் காத்திருந்த வேளையில் பண்ணையாரின் மருமகள் பிறந்தநாள் விழா பூசைக்குச் செவ்வாழை தேவைப்படுகிறது.

    பண்ணையாரின் தேவைக்காக இத்தனை நாளாய் தன் சொத்து என வளா்த்த செவ்வாழைக் குலையைத் தன் பிள்ளைகளின் ஆசைகளைப் பாழாக்கிக் கனத்த மனத்துடன் செங்கோடன் வெட்டித் தருகிறான். பிள்ளைகள் ஏமாற்றமடைகின்றனா். பூசைக்குப் போக மீதமான பழங்கள் கடைத் தெருவில் விற்பனைக்கு வருகின்றன. கரியன் அதை வாங்கியாவது தின்ன ஆசைப்படுகிறான். அவன் கையில் இருப்பதோ காலணா ஆனால் பழத்தின் விலை ஓர் அணா. கையில் இருந்த காசுக்கு வறுத்த கடலையை வாங்கிக் கொறித்துக்கொண்டே செல்கிறான்.

    “உழைப்பவனுக்கே நிலம் சொந்தம். பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா?”14 என்று அவன் சிந்திக்கிறான். வாழைமரம் மட்டும் பார்வதிப் பாட்டியின் பாடையில் கட்டப்படுகிறது எனச் சாரமற்றுப் போன உழைப்பாளியின் வாழ்வை சித்திரிக்கிறார் அண்ணா.

    உழைப்பவன் ஒருவன் உழைப்பின் பலனைப் பெறுபவன் இன்னொருவன் என்ற இழிநிலை மாறவேண்டும். உழைப்பவனுக்கே உழைப்பின் பலனும் நிலமும் சொந்தமாகவேண்டும் என்ற பொதுவுடைமைக் கொள்கையை அண்ணா இக்கதையில் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

    பொதுவுடைமைச் சுதந்திரம் வேண்டும்:

    முதலாளித்துவ நாடுகளின் வியாபாரத் தந்திரங்கள் எவ்வாறு சாமானிய மனிதனைப் பாதிக்கின்றன என்பதைப் “பொங்கல் பரிசு” சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ள அண்ணா, உலக முதலாளியின் கையிலுள்ள நூலின் அசைவினால் அடிமை நாடுகள் ஆட்டம் காணுவதை இக்கதையில் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

    கதைநாயகன் தன் முதலாளிக்குப் பொங்கல் பரிசுவேண்டி எழுதும் நீண்ட கடிதம், அவன் கண்டனக் கடிதம் பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்படிச் செய்துவிடுகிறது. பன்னாட்டு முதலாளியின் நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்க வேண்டி ஒப்பந்தங்களும் திட்டங்களும் சலுகைகளும் அளிக்கின்றன.

    “ஒவ்வொரு துறையிலும் அமெரிக்கா நுழைந்து இலாப வேட்டை ஆடப் புதுப்புது (தொழில்) கம்பெனி நடத்துகிறது. அமெரிக்காவுக்கு இந்தியாவின் கலை – கலாசாரம் கல்வி குழந்தைகள் நிலைமை ஆகியவை பற்றிய அக்கறை துளியும் இல்லை. தங்கள் நாட்டுச் சரக்கை இந்தியாவில் விற்கும் நோக்கம்தான் அதிகமாகிவிட்டிருந்தது.”15 என்று தமது கதையில் எடுத்துக்காட்டுகிறார்.

    பன்னாட்டு நிறுவன அசைவுக்குக் கல்வி அமைச்சரும், கல்வி அதிகாரியும், பள்ளி நிர்வாகமும் சேர்ந்து சாதாரணத் தொழிலாளிக்கு கொடுக்கும் அழுத்தம் மேற்கூறிய நிலைமைக்கு ஆளாக்குகிறது என முதலாளித்துவ நாடுகளின் வியாபாரத் தந்திரங்களை இச்சிறுகதையில் விளக்கியுள்ளார் அண்ணா.

    ’காலிழந்தவன்’ சிறுகதையில் ஊனம் உடலில் இருந்தாலும் அது உள்ள உறுதியைக் குலைக்கவிடக்கூடாது. மனத்தின் உறுதியே மகத்தானது என்பதை அண்ணா உணர்த்துகிறார்.

    முடிபுகள்:

    1.தனது கதை விவரிப்புத் திறனால் சமுதாயத்திலுள்ள கவனிக்கப்படாத பொருண்மைகளையும் சிறக்கச் செய்துள்ளார் அண்ணா.

    2.அவா் பின்பற்றிய கொள்கைகளுக்குக் கதை வடிவம் கொடுத்துச் சிறக்கச் செய்துள்ளார்.

    3.சமுதாயம், அரசியல், இதழியல், எழுத்துத் துறைகளில் தான் பெற்ற அனுபவங்களை அவர் அழகாகக் கதையாக்கும் திறன் வியக்கத்தக்கதாக உள்ளது.

    4.ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் இதழ்கள் வியாபார நோக்கமின்றி உண்மையாகவும் நடுநிலையாகச் செய்திகளை வழங்கிச் சமுதாய வளா்ச்சிக்கு உதவ வேண்டும் என வலியுறுத்துகிறார்.

    5.உழைப்பாளியின் வியா்வைக்கு ஏற்ற ஊதியம் கிடைத்திட வேண்டும். உற்பத்தியாளனுக்கும் நுகா்வோருக்குமான இடைவெளி குறைந்து இடைத்தரகரின்றி உற்பத்தியாளனின் பொருள் நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைத்திட வேண்டும். உழைக்காமல் இடைத்தரகராய்க் கொழிக்கின்ற உன்மத்தம் நீங்க வேண்டும்.

    6.திரைத்துறையில் இருக்கின்ற சுயநலத்துக்காகப் பிறன்நலத்தைக் கெடுக்கின்ற நிலைமாறவேண்டும்.

    7.போலி மதவாதிகளின் சுயநலத்திற்காக அவா்களின் பொய் புரட்டுகளை நம்பி ஏமாறக்கூடாது. போலிச் சடங்குகள் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு மக்கள் பலியாகக் கூடாது. மதங்களின் பெயரால் நடக்கும் பொய் புரட்டுக்களைத் தெளிந்து விழிப்புணர்வு பெறவேண்டும்.விதவைகள் மறுமணம் செய்துகொண்டு வாழ வழிவகை செய்யப்பட வேண்டும்.

    8. உழைப்பவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும். உழைப்பாளியின் உழைப்பைச் சுரண்டும் தீயபோக்கு மாறி உழைப்பவனே உயர்ந்தவன் என்ற நிலை உருவாக வேண்டும்.

    9. உலக நாடுகளிடையே ஆண்டான் அடிமைப்போக்கும் பிற நாடுகளை ஆட்டுவிக்கும் போக்கும் நீங்கவேண்டும். உடற்குறை இருந்தாலும் உள்ளக்குறையின்றி தன்னம்பிக்கையோடு வாழ்ந்து சாதனைகள் புரிய வேண்டும் என்பன உள்ளிட்ட சிந்தனைகளைத் தமது சிறுகதைகளில் பேரறிஞர் அண்ணா வெளிப்படுத்தியுள்ளார் என்பது ஆய்ந்தறியப்பட்டது.

    முதன்மை ஆதாரம்:

    “அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்”
    பாரத் பதிப்பகம்
    மாங்காடு சென்னை- 122.
    முதற்பதிப்பு-2013.

    அடிக்குறிப்புகள்:

    1. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
    2. முனைவா் மா. தியாகராஜன்- பேரறிஞர் அண்ணா – சிறுகதைகளில் பெண்ணியம் – சிங்கப்பூர் – 558286 தமிழ்த்தோட்டம் இணையப் பக்கம். சனவரி TUESDAY 22,2013 10:41 am
    3. திருக்குறள் இல்லறவியல்(நடுவுநிலைமை) குறள் எண் 118 ப.25 – கழக வெளியீடு. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை 1-1959.
    4. சி.என் அண்ணாதுரை-”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்” கொக்கரக்கோ சிறுகதை ப.8 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
    5. மேற்குறித்த நூல் – சரோஜா ஆறணா சிறுகதை ப.16
    6. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
    7. சி.என். அண்ணாதுரை- ”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்” பேய் ஓடிப்போச்சு சிறுகதை ப.21 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
    8. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
    9. சி.என் அண்ணாதுரை – ”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்”- 1938-1940 ஒரு வசீகர வரலாறு சிறுகதை ப.46 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
    10. மேற்குறித்த நூல்- மேற்குறித்த சிறுகதை ப.52
    11. முனைவா் மா. தியாகராஜன்- பேரறிஞர் அண்ணா-சிறுகதைகளில் பெண்ணியம்-சிங்கப்பூர் – 558286 தமிழ்த்தோட்டம் இணையப் பக்கம். சனவரி TUESDAY 22,2013 10:41 am
    12. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
    13. சி.என் அண்ணாதுரை – ”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்”- செவ்வாழை சிறுகதை பக் 68-69 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
    14. மேற்குறித்த நூல்- மேற்குறித்த சிறுகதை ப.69.
    15. மேற்குறித்த நூல்- பொங்கல் பரிசு சிறுகதை ப.78.

    Share
    January 18, 2020
  • பிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு

    பிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு

    பிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு, 18.01.2020 அன்று சென்னையில் நடக்கிறது. அழைப்பிதழ் காண்க.

    Share
    January 18, 2020
  • ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது

    ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது

    அதிக மாடுகளை அலங்காநல்லூர் களத்தில் கடந்த ஆண்டு அடக்கிய வீரருக்கும், இவ்வாண்டு அடக்கும் வீரர் திலகத்திற்கும் ரூ. 4 லட்சம் பெறுமதியான கறவை மாடுகளை The Rise என்ற எழுமின் அமைப்பு வழங்கிச் சிறப்பிக்கிறது.

    The Rise என்ற எழுமின் அமைப்பு, உலகளாவிய தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்களை இணைத்து, சுமார் 30 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மதுரைக் கிளை, ஜல்லிக்கட்டு வீரர்கள் பலர், வாழ்வாதார வசதிகள் இன்றி வாடுவதை எழுமின் அமைப்பின் பொதுக் கவனத்திற்குக் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அனைத்துலக எழுமின் அமைப்பு, அத்தகைய வீரர்களுக்கு உதவ முடிவு செய்தது.

    முதற்கட்டமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கில், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அதிக மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 8 கறவை நாட்டு மாடுகளை அலங்காநல்லூர் அரங்கிலேயே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று மாலை வழங்குகிறது.

    எழுமின் அமைப்பின் உலகளாவிய தொழிலதிபர்கள் மலேசியா தான்சிறி டத்தோ பலன், கத்தார் பஸீத் அஹமது, சிங்கப்பூர் அஹமது புகாரி, மதுரை பெரிஸ் மகேந்திர வேல், கனடா ஸ்டன் முத்துலிங்கம், சென்னை சௌகியா குழுமத்தின் சிவகுமார், சென்னை சில்க்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் இந்தக் கறவை மாடுகளை நன்கொடையாகத் தந்துள்ளனர்.

    “வீரர்கள் வாழ்ந்தால்தான் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டும் வாழும்” என எழுமின் அமைப்பின் நிறுவனர் அருட்திரு. ம. ஜெகத் கஸ்பர் தெரிவித்தார். கறவை மாடுகள் வழங்கும் பணியினை எழுமின் மதுரைத் தலைவர்கள் பாலகுரு, ஜலீல், சரவணன், சுரேஷ் மனோகரன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து நல்லதொரு தொடக்கத்தைத் தந்துள்ளனர். ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்வாதாரத்திற்குக் கறவை மாடுகள் தந்து உதவ, உலகத் தமிழர்களை எழுமின் அமைப்பு அழைக்கிறது. முன்வருவோர் ஹேமாவதி அவர்களை +91 94443 35177 தொடர்பு கொள்ளலாம்.

    (பத்திரிகைச் செய்தி)

    Share
    January 17, 2020
  • An Oral Folk History of Kongu Natu: Dr.Brenda Beck

    An Oral Folk History of Kongu Natu: Dr.Brenda Beck

    About the talk
    The talk will discuss the oral Tamil folk epic known as the Annanmar Kathai and detail the extraordinary contribution this story makes to our understanding of Tamilnadu on many levels.  The speaker will interpret this rich and long legend as a broad metaphor couched in the format of one family’s life experiences over three generations, but which can also be understood as a tool helpful in telescoping about 500 years of local history. Dr. Beck’s own life-long immersion in Kongu natu culture will be woven into the story with photos of her first of many visits to the area in 1954. The themes discussed will include local myths, star lore, temple layouts and more. It will also suggest possible trade contact both with ancient Babylon and with the early Indus Valley civilization. This heavy illustrated presentation will conclude by linking all of the above to a discussion of the significance of the Patti Pongal in the Kongu area, to the Pleiades and to Siva’s great bull, Nandi.
     
    About the Speaker
    Brenda Beck is an Oxford-educated Social Anthropologist who has spent a lifetime studying South Asia and, in particular, the Kongu nadu area of Tamilnadu. She has published eight books, two of which are double-volume works, and she has contributed to and/or edited many more. She has also authored over sixty journal articles. Dr. Beck has a passion for South Asian mythology. She has written a number of articles related to divine figures including Indian goddesses and animal figures like the wild boar. She has also examined a number of human epic characters, detailing their stories and describing their related festivals. One unique folk epic, the Legend of Ponnivala Nadu, has held her interest for over fifty years. Brenda is an Adjunct (Full) Professor of Anthropology at The University of Toronto and President of The Sophia Hilton Foundation of Canada, a charitable foundation that promotes the use of storytelling in education at all levels. Her earliest ethnographic work, Peasant Society in Kongu has just been translated into Tamil by Adaiyaalam, a South Indian educational publishing house. In the past three years alone Brenda has received twelve awards from Tamil community groups based in the US, in Canada, in Tamilnadu, and also one in Malaysia for her work in helping to deepen a worldwide appreciation of Tamil folk literature, especially by those living in the Diaspora.
     
    About Prof. M. Anandakrishnan
    Prof. Anandakrishnan obtained Ph.D in Civil Engineering (1960) from the University of Minnesota, USA. He served as Professor of Civil Engineering at IIT, Kanpur between 1963 and 1974. He served the United Nations  in the UN Centre for S&T for Development(1978-1989); as the Vice-Chancellor of Anna University (1990-96); and as Vice-Chairman of the Tamil Nadu State Council for Higher Education from 1996-2002.  Currently he is the Chairman,  Board of Governors, Indian Institute of Technology  Kanpur and Rajasthan; President, Ranganathan Centre for Information Studies (RCIS), Chennai; President, Tamil Nadu Academy of Sciences,  Chennai; Member, Board of Management, NUEPA, Delhi; Member, High Power Committee on Renovation and Rejuvenation of Higher Education in India and Chairman, Executive Council, Science City, Chennai. He was Chairman, MIDS between 2003 and 2008. He has served as Chairman or Member of several high level committees of MHRD, UGC, AICTE and NAAC. His honours and awards include Padma Shri from the President of India (2002); the Order of Scientific Merit from the President of Brazil (1996); Distinguished Leadership Award of the University of Minnesota (2003); Honorary Fellow of the Indian Society for Technical Education (2005); UGC National Swami Pranavananda Saraswati Award in Education (2006); Fellow of the Institution of Engineers, India and Fellow of the National Academy of Sciences, India. 
    Share
    January 17, 2020
  • ஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’

    ஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’

    மக்கள் தொடர்பாளர் ஜான் 

     
     

    இயக்குநர் தரணி ராசேந்திரன்   இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஞானச் செருக்கு’.

    ஓவியர் வீர சந்தானம், வ.ஐ.ச. ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

    தரணி ராசேந்திரன் பூர்வீகம் திருவாரூர் என்றாலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர். பொறியியல் படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. இதோ அவரே இயக்குநரான அனுபவங்களையும், ஞானச்செருக்கு உருவான விதம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்..

    “பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது. அதன்பிறகு ஒளிப்பதிவு குறித்த டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன்.

    சினிமாவில் உதவி இயக்குநராக சேர்வதில் ஏற்படும் காலதாமதம் தேவையில்லை என நினைத்ததால், நானே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

    ஒரு கட்டத்தில் பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீர சந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார்.

     

    இந்தக் கதையை படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்றுகூடப் பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரம் படமாக எடுத்துப் பார்ப்போம் என்று நினைத்தேன். அதன்பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைக் கூறியபோது, அதை ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள் என்று கூறினார்.

    எல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்தப் படத்தைத் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்தப் படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்தச் சமயத்தில் விலகிவிட்டனர். அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் போட்டு இந்தப் படத்தை எடுத்து முடித்தோம். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் க்ரவ்டு பண்டிங் முறையில் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்குத் தெரியாது. ஆனால் படப்பிடிப்பு நடத்தத் தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்துத் திட்டினார். பின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம், எனது மாமாவின் பெர்சனல் லோன் ஆகியவற்றைக் கொண்டு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

    ஓவியர் வீரசந்தானம் கூட, தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்தப் படத்திற்கு பயன்படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார்.

    இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்தப் படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது பிளஸ் பாயிண்ட். இந்த படத்தின் டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானம் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது.

    அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்தப் படத்தின் வேலைகளை முடித்தேன். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு இந்தப் படத்தின் மதிப்பு பற்றி வெளியே தெரிய வேண்டும், அதன்பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

    நான் எடுத்துள்ளது கமர்சியல் படம்தான். ஆனாலும் இந்தப் படத்தைத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினேன். கிட்டத்தட்ட நாற்பது நாடுகள்  சிறந்த படமாக இதை அங்கீகரித்துள்ளன. இந்தப் படத்திற்கு இதுவரை 7 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து கைகொடுத்துப் பாராட்டினார். பாரதிராஜாவைப் பொறுத்தவரை இதுவரை பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜாவிடம் மட்டுமே கை கொடுத்து வாழ்த்தியுள்ளாராம்.

    அதன் பிறகு என்னிடம் கைகொடுத்து வாழ்த்தியுள்ளதாக மற்றவர்கள் சொன்னபோது எனக்கு இதுவே மிகப்பெரிய விருது பெற்றது போல இருந்தது. அவர் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டி உள்ளார்கள்.

    இது வெகுஜனப் படம்தான். இந்தப் படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன. 80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்தப் படம்.

    இந்தச்  சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படிப் பார்க்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மிகப்பொருத்தமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு  முழுக்க முழுக்க கமர்சியல் படம்தான் இது. குடித்துவிட்டு கூத்தடிப்பவர்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது. காரணம் நான் குப்பைப் படத்தை எடுக்கவில்லை. படம் பார்க்க வரும் ரசிகர்களை முட்டாளாக்கி அனுப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    நல்ல படத்தைத் திரையிடக்கூடாது என்று எந்த தியேட்டர்காரர்களும் நினைப்பதில்லை. நல்ல படம் என்பதை அவர்களிடம் நாம் தான் சரியாகக் கொண்டு செல்லவேண்டும். அவர்களுக்கும் வியாபாரம், குடும்பம் என்றெல்லாம் இருக்கிறது அல்லவா? அதனால் அவர்களை நாம் குறை சொல்ல வேண்டியதில்லை. இதற்கடுத்த எனது படங்கள் கமர்ஷியலாகவும், அதேசமயம் எனக்கான அடையாளமாகவும் இருக்கும் என்பதையும்  சொல்லிக்கொள்கிறேன். விரைவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று கூறினார் தரணி ராசேந்திரன்.

    ஃஃபார்ட்சூன் ஃப்ரேம்ஸ் சார்பில்  செல்வராம், வெங்கடேஷ் ஆகியோர், இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

    Share
    January 17, 2020
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 101

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 101

    நாங்குநேரி வாசஸ்ரீ

    101. நன்றியில் செல்வம்

    குறள் 1001

    வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
    செத்தான் செயக்கிடந்த தில்

    வேணுமட்டும் வீடுமுழுக்க செல்வத்தச் சேத்த பொறவு அத வச்சி சாப்புட்டு சந்தோசமா அனுவிக்காம ஒருத்தன் செத்தாம்னா சேத்த செல்வத்தால என்ன பிரயோசனம்?

    குறள் 1002

    பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
    மருளானாம் மாணாப் பிறப்பு

    யாருக்கும் என்னமும் கொடுக்காம தங்கிட்ட இருக்க பொருளால எல்லாம் ஆவும்னு நெனைச்சி அத விடாம புடிச்சிக்கிட்டு இருக்கவனுக்கு சிறப்பில்லாத தாழ்ச்சியான பொறப்பு உண்டாவும்.

    குறள் 1003

    ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
    தோற்றம் நிலக்குப் பொறை

    மத்தவனவிட அதிகமா சொத்து சேக்கணும்னு நெனச்சி அதையே குறியா வச்சி புகழ விரும்பாம இருக்கவனோட பொறப்பு இந்த பூமிக்கு பாரம்.

    குறள் 1004

    எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்

    மத்தவுகளுக்கு ஒதவி செய்யாத காரணத்தால யாருக்கும் பிடிக்காம இருக்கவன் செத்த பொறவு மிஞ்சி நிக்கப்போவுதுனு எத நெனைச்சிக்கிடுவானோ?

    குறள் 1005

    கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
    கோடியுண் டாயினும் இல்

    மத்தவுகளுக்கு கொடுத்து ஒதவி தானும் தேவப்படும்போது அனுவிச்சிக்கிட்டு இல்லாம இருக்கவன் கிட்ட கோடி கோடியா செல்வம் குவிஞ்சிச்சின்னாலும் பிரயோசனம் இல்ல.

    குறள் 1006

    ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
    றீத லியல்பிலா தான்

    தானும் அனுவிக்காம பொறத்தியாருக்கும் கொடுக்காம வாழுதவன் தான்கிட்ட இருக்க பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய் ஆவான்.

    குறள் 1007

    அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
    பெற்றாள் தமியள்மூத் தற்று

    ஏழபாழைக்கு கொடுத்து ஒதவாத செல்வம் அழகி ஒருத்தி கலியாணம் முடிக்காம தனிச்சு நின்னு கிழவி ஆயிட்டதுக்குச் சமானம்.

    குறள் 1008

    நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்
    நச்சு மரம்பழுத் தற்று

    எல்லாராலையும் வெறுக்கப்படுதவனுடைய சொத்து ஊருக்கு நடுவுல பழுத்துக் குலுங்குத வெசமரத்தோட பழத்துக்குச் சமானமாவும்.

    குறள் 1009

    அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
    ஒண்பொருள் கொள்வார் பிறர்

    அறவே நேசமில்லாம தன்னையும் வருத்திக்கிட்டு சத்தியத்துக்குப் பொறம்பா சேக்குத சொத்த கொள்ளயடிச்சு மத்தவுகதான் அனுபவிப்பாக.

    குறள் 1010

    சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
    வறங்கூர்ந் தனைய துடைத்து

    மத்தவுகளுக்கு கொடுத்து புகழோட இருக்க பணக்காரவுக கொஞ்ச காலம் வறுமைப்பட்டாகன்னா அது ஒலகத்தக் காக்குத மழையத் தருத மேகம் வறுமைப்பட்டதுக்கு சமானமாவும்.

    Share
    January 17, 2020
  • இதம், பதம், இயற்கை!

    இதம், பதம், இயற்கை!

    வேதா. இலங்காதிலகம்,
    டென்மார்க்

    தூர் வரை மனத்துள் புகுந்து
    வேர் ஊன்றிய அன்புத் தேன்
    தார் எனப் படியக் கருத்திட்டு
    நார் போன்று பிணைந்து மனமேந்துங்கள்
    சேர்ந்து நம்பிக்கையாய் நெருங்குங்கள்
    நீர்க் குமிழி உறவு தேவையற்றது

    பூவிதழின் மென்மையாய், கால்நனைய
    பூரித்துச் சிதறும் அலைக்குளிர்மையாய்
    பூமணல் மென்மையாய், தொலைதூரப்
    பூஞ்சிறகுக் குருவியின்  கீச்சு மொழியாய்ப்
    பூச்சிதறும் மனமிழையும் கணங்களினிமை
    பூட்டின்றிப் பூரணையாய் பூரித்தலினிமை

    மழைத்தூறல் சிறகடிக்க மனம்
    மகிழ்ந்து வனமேகிக் கிளைகள் தேடுதலில்
    நம்பகமின்றி மனம் மகிழலாம், இலை
    ஈரங்களின் இதமான சிலிர்ப்பில் , மூங்கிலிசையில்
    ஈரலிப்பற்ற மனிதத்திலும் இயற்கை சிறப்பு
    ஈசனுக்கு இணையானதன்றோ இயற்கை

    Share
    January 17, 2020
←Previous Page
1 … 263 264 265 266 267 … 1,141
Next Page→

வல்லமை

  • Blog
  • About
  • FAQs
  • Authors
  • Events
  • Shop
  • Patterns
  • Themes

Twenty Twenty-Five

Designed with WordPress