கே. மோகன்தாஸ் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்து, படக்கவிதைப் போட்டி 214க்கு அளித்திருப்பவர் சாந்தி மாரியப்பன். புகைப்படக்கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!
பல்வண்ணங்களில் கண்கவர் வளையல்களும், இதழ்விரிந்த மலரும் நிறைந்த தாம்பாளத்தை இம் மங்கை ஏந்தியிருப்பது மங்கல வளையணி விழாவினை அணிசெய்வதற்கோ?
மங்கல நிகழ்வினைத் தன் கவிதையால் மெருகூட்ட வருகிறார் திரு. சுந்தர்!
வளையணிப் பெருவிழா!
அழகே, பிறைநிலவே, பைந்தமிழை கருவாக உருவாக்கிய செம்மொழியே…..! மழலைப் பருவத்தில் மதிலேறி, தாவணிப் பருவத்தில் தடம் பதித்து, சிறிய கனவுகளைச் சுமந்து உலா வந்த சிட்டுக்குருவியே….! உன்னைச் சிறைபிடிக்க மணக்கோலம் கொண்டு நானும் வந்ததன் பேராசை? என் வீட்டின் அரியணையில் மகாராணியாக உன்னை ஒருமனதாகப் பிரகடனம் செய்தோம். என் கனவுகளை உன் நினைவில் புகுத்தி நான் இளைப்பாற உன் மடி தந்தாய்! ஒருநாளும் ஓய்வின்றி உன் நிழலை அலையவிட்டாய்! நம் குலம் தழைக்க நீ சிந்திய வெட்கத்தால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கவைத்தாய், அள்ள அள்ளக் குறையாத மகிழ்ச்சியை அள்ளித் தரும் தங்கசுரபியைத் தாரமாக்கிய கைம்மாறு கனியும் நேரம் இதுதானோ? உன் ஆசைகளை அரங்கேற்றி, என் சேவையை உனதாக்கி, ஊர்கூடி உற்றார் உறவினர் உன்னை வாழ்த்தி அரிதாரம் பூசிய நிறைமாதக் கனியே, இத்தருணம் நான்இடும் சந்தனமும் உனக்கான சத்தியமே, உன் கைகளில் நான் சூடும் வளையணிபோல் மேன்மேலும் உன்னை மெருகேற்றிப் பாதுகாவலனாய் அனுதினமும் நான் சுமப்பேன்!
தன் வீட்டில் மகாராணியாய் அரியணை ஏறிய மனைவிக்கு நிகழும் வளையணி விழாவினைப் பூரிப்போடு கொண்டாடும் கணவனின் மனவுணர்வுகளைத் தன் கவிதையில் படம்பிடித்துக் காட்டியிருக்கும் திரு. சுந்தரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
மக்கள் தங்களை அழைப்பதற்கும் ஒருவரிடமிருந்து ஒருவரை வேறுபடுத்தி அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் பெயர்களை இடுவராயினர். இவ்வாறு தங்களை அழைக்கப்படுதலுக்கான சொல்லைப் பெயர் எனச் சுட்டினர். ஒருவரிடம் பெயர் கேட்டலையும் பெயர் கூறலையும்,
“தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர்
பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த கருமை” (புறம். 216:8-9)
என்னும் புறநானூற்று அடிகளின் வழியறியலாம்.
பெயர், பேர் என்னும் சொற்களில் எச்சொல் முதன்மையானது, மூலமானது என்னும் ஐயப்பாடுகளும் உண்டு. பெயர் எனும் சொல் பெயரியல், பெயர்ச் சொல் என்று தொல்காப்பியத்திலேயே வழங்குவதால் பெயர் என்பதுவே மூலச் சொல் என்றும் பேர் என்பது அதன் மரூஉ என்றும், சிலர் கருதுவர். பேர் எனும் சொல் மக்கள் வழக்கு. அச்சொல்லே பிறகு பெயர் எனச் செம்மை பெற்றது என்பதுவும் ஒரு கருத்து. பெயர், பேர் எனும் இரு சொற்களும் ஒரே பாடலில் பயின்றுள்ளமையைப் பின்வரும் புறப்பாடல் அடிகளால் அறியலாம்.
“எந்நாடோ வென நாடுஞ் சொல்லான்
யாரீ ரோவெனப் பேருஞ் சொல்லான்
பிறர்பிறர் கூற வாழிக்கேட் டிசினே
இரும்பு புனைந் தியற்றாப் பெருபெயர்த் தோட்டி” (புறம்.150:22-25)
பெயர், பேர் ஆகியவற்றின் மூலத்தினை ஆராயும் பொழுது தொல்காப்பிய விதிகளை ஒப்புநோக்க வேண்டியதாகின்றது.
“குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல”
(தொல். எழுத்து. மொழிமரபு – 50)
ஒரு சொல்லில் இரண்டு குறில்கள் இணைந்து வரும்போது ஒரு குறில் மறைந்து மொழிமுதற் குறில் நெடிலாக மாறும் எனும் மேற்கண்ட சூத்திர விதியினை ஒட்டி, ‘பெயர்’ எனும் சொல்லில் உள்ள யகரம் கெட்டு ‘பெ’கரம் ‘பே’கார மாயிற்று. இதற்குச் சான்றாகத் தொகுப்பு – தோப்பு எனவும், முகடு – மோடு எனவும் வழங்குதலைக் கொள்ளலாம். இதன்வழிப் பெயர் எனும் சொல், பேர் என அமைந்தமையை அறியலாம்.
இவ்விரு சொற்களும் பெயர் ஒப்புடனே பல்வேறு பொருள்களில் சங்க இலக்கியத்திலும் இக்கால வழக்கிலும் வழங்குதலினைக் காணலாம். பெயர்தல் என்பது ஓர் இடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு மாறுதலைக் குறிக்கும் பொருளில் வழங்குதலை
எனும் அகப்பாட்டு அடியால் அறியலாம். பேர் எனும் சொல் பேர் தருதல் என ஓர் இடத்தினை விட்டுப் பிறிதோர் இடத்திற்குச் செல்லுதலைச் சுட்டும்.
“கருங்கட் பன்றியின் நடுங்காது துறந்து
நாம அருந்துறைப் பேர்தந் தியாமத்
தீங்கும் வருபவோ ஒக்கல் வெற்பா” (அகம்.18:16-8)
பேர்தந்து எனும் சொல் பேர்ந்து (பெயர்ந்து) எனும் பொருளுடையது. பேர்ந்து – பேந்து என யாழ்ப்பாண வழக்கில் வடிவுற்று அடுத்து எனும் இடமாற்றப் பொருளில் வழங்குகின்றது.
ஒரு பெயர் என்பது அப்பெயரையுடைய மனிதனை மட்டும் சுட்டுவதன்று; அவனது புகழ், பண்பு, ஆளுமை, ஒழுக்கம், செயல், சிந்தனை, மரபு முதலான அவனைச் சார்ந்த அனைத்தினையும் சுட்டுவது. ‘வள்ளலார்’ ‘ஆறுமுக நாவலர்’ எனும் பெயர்களின்வழி இதனை நாம் உணரலாம். அவர்களது சிறப்பால் அவர்களது பெயர் நிலைபெற்ற புகழினை அடைந்ததனை அறிந்தே, பெயர் எனும் சொல் புகழ் எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. தம்முடைய புகழை நிறுவாதவர்கள் தம்மொடு தமது பெயரையும் மாய்த்துக்கொள்வார்கள் என்பதினை,
இன்றும் வழக்கில் ஒருவரை நோக்கி ‘உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கு நல்ல பேர் உள்ளது’ என்பதன்வழிப் பேர் என்னும் சொல் புகழ் எனும் பொருண்மையில் அமைவதனைக் காணலாம்.
மக்கள் மாத்திரமல்லாமல் நகரங்களும் தங்கள் சிறப்பால் பெரும்பெயர் பெற்றன.
“பொலம்பூண்கிள்ளி
பூவிரி நெருங்கழி நாப்பண் பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன” (அகம்.205:10-12)
பெயர் சூட்டுதலின் முதன்மையான பயன்பாடு, விளித்தல், அழைத்தல் பயனை நோக்கியதாகவே அமைகின்றது. பெயர்சொல்லி அழைத்தலினை ‘பெயருதல்’ எனும் சொல்லால் வழங்குதலினைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.
“கோவெனப் பெயரிய காலை யாங்கது
தன்பெய ராகலி னாணி மற்றியாம்” (புறம்.152:21-22)
தோட்டங்கள் சூழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்தைப் போலவே இன்றும் மாம்பழத்திற்குச் சேலமும், பலாப்பழத்திற்குப் பண்ருட்டியும் பெயர் பெற்றன போலும்.
பெயர் எனும் சொல், மாற்றம் எனும் பொருளில் சங்க இலக்கியத்தில் வழங்கியமையை,
மேற்கண்டவாறு பெயர், பேர் எனும் சொற்கள் பல்வேறு பொருள்களில் ஆளப்பட்டுள்ளமையைக் காணலாம்.
பெயர் அமையும் சூழல் வகைமை குறித்துத் தொல்காப்பியச் சொல்லதிகாரப் பெயரியல் சூத்திரம் அமைந்துள்ளது.
“நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே
பல்லோர் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியல் பெயரே
இன்றிவர் என்னும் எண்ணியல் பெயரொடு
அன்றி அனைத்தும் அவற்றியல் பினவே” (தொல்.சொல்.பெயரியல்.11)
உயர்திணைப் பெயர்கள் எவ்வகையில் அமைதல் வேண்டும் என்பது குறித்துத் தொல்காப்பியர் பல சூத்திரங்களில் கூறிப் போந்தார். சான்றாக உயர்திணைப் பெயர்ச்சொற்கள் பால்காட்ட வேண்டும் எனும் பின்வரும் விதியைக் கொள்ளலாம்.
தில்லை எனும் ஓர் இடப்பெயரை மக்களுக்குச் சூட்டும் போது தில்லை எனச் சூட்டாமல் தில்லையரசன், தில்லையரசி எனப் பால்காட்டும் வண்ணம் சூட்டுதல் மரபு. விகுதிகளின் வேறுபாட்டால் பெயர்கள் அடையும் மாறுபாடுகள் குறித்துக் கூறும் தொல்காப்பியர்
“ஆவோ வாகும் பெயருமா ருளவே
யாயிட னறிதல் செய்யு ளுள்ளே”
இதனை வில்லான், தொடியான் எனும் ஆகார விகுதிகள் ஓகாரமாய்த் திரிதலின்வழி அறியலாம்.
“வில்லோன் காலனகழலே தொடியோன்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்” (குறுந்-7)
இலக்கண யாப்பிற்குட்பட்டே பண்டைத் தமிழர்கள் பெயர்களைச் சூட்டினர் தங்களது குடிமரபிற்குரிய பெயர்களையே சூட்டிக் கொண்டனர். இதனைச் சங்க இலக்கியங்களெங்கும் காணலாம். இதனையே நிகண்டுகளும் வகைமை செய்யும். இம்மரபு தமிழ் ஒழிந்த ஏனைய இனத்தாரிடம் காணல் அரிது.
சோழர்க்கு உரிய பெயர்களாகப் பின்வருவனவற்றை நிகண்டுகள் சுட்டும்.
“நேரியன் சென்னி பொன்னித் துறைவனே நேரிவெற்பன்
ஆரின்மா லையனே கிள்ளி அபயனே கோழிவேந்தன்
சீரியவளவன் மிக்க செம்பியன் புலியு யர்த்தோன்
சூரியன் புனல்நா டன்கோச் சோழன்மால் என்றும் சொல்லும்”
பாண்டியர்களுக்குரிய பெயர்களாக,
“செழியனே கூடற்கோமான் தென்னவன் வேம்பின் தாரோன்
வழுதியே குமரிச் சேர்ப்பன் வைகையந் துறைவன் மாறன்
விழைவிறு பொதிய வெற்பன் மீனவன் கைத வன்சொற்
பழையபஞ் சவனே வெய்ய கௌரியன் பாண்டி யன்பேர்”
சோழர்களுக்குரிய ‘கிள்ளி’ எனும் பெயரைப் பாண்டிக்குடியினரோ பாண்டியருக் குரிய ‘செழியன்’ எனும் பெயரைச் சோழ, சேரக் குடியினரோ சூட்டிக்கொள்ள மாட்டார்கள். தங்களது குடிக்குரிய மரபுப் பெயர்களை உயர்வாகக் கருதிச் சூட்டுவர் பிற குடிகளின் பெயர்கள் தங்களது தலைமேல் சூட்டப்படுதலை முள் முடியாகக் கருதுவர். அதனையொப்பவே திணைசார்ந்த குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை எனும் நிலவியலையொட்டிய பெயர்களை அந்தந்தத் திணைக்குரிய குடிகள் சூட்டுவர். திணைமாறிய பெயர்களைச் சூட்டுவதில்லை.
தந்தையிடமிருந்து உரிமையும் தந்தையின் பெயரினைப் பெறும் சிறப்பும் முறையாக வந்த பிள்ளைகளையே சென்றடையும் தந்தையின் பெயர்ப் பெருமை முறையான பிள்ளைகளினைச் சென்றடையும் என்பதனைப் பின்வரும் பாடலடிகளால் அறியலாம்.
ஒருவர்க்குத் தமது உடலில் ஏற்படும் அடையாளங்களால் பெயர்கள் ஏற்படுவதுண்டு. ஒரு குருக்கள் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவரது முகத்தின் வலது பாகம் முழுவதும் மச்சம் இருக்கும். அதனையொட்டி அவரை அக்கால மாணவர்கள் அனைவரும் மச்சகுருக்கள் ஆசிரியர் என்றே அழைப்பர். அவரது இயற்பெயர் என்னதென்று ஒருவரும் அறிந்திலர். சங்க காலத்திலும் முகத்தில் ஏற்பட்ட கத்தரிக்காய் போன்ற தழும்பினால் பெரும்புகழ் உடைய ஒருவரின் இயற்பெயர் மறைந்து தழும்பன் என அழைக்கப்பட்டமையை,
ஒரு மனிதனின் செல்வாக்கு, ஆட்சிமை, திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களைப் பல பெயர்களால் பலர் புகழ்தலுண்டு. இதனையே பிற்காலத்தில் மன்னர்கள் வரும்போது கட்டியங் கூறுவோர் ஒரு கலையாகவே கையாண்டனர். இவ்வாறு பல பெயர்கள் வழங்கியதை,
“அகலிடங் குயின்ற பல்பெயர் மண்ணி” (அகம்.269:8)
எனும் அடிகளால் அறியலாம்.
குடிச்சிறப்பும் மரபுச் சிறப்பும் உடைய பெயர்களைத் தம் மக்களுக்குச் சூட்டும் நாளினைத் தமிழர்கள் விழாவாகக் கொண்டாடியதற்கான சான்றினை நாம் சிலப்பதிகாரத்தில் காணலாம். கோவலனுக்கும் மாதவிக்கும் பெண்மகவு பிறந்த வேளை அம்மகவிற்குப் பெயர் சூட்டுதற் பொருட்டு ஆயிரக்கணக்கான கணிகையர்கள் கோவலனை அழைத்து அம்மகவிற்குப் பெயர்சூட்ட வேண்டினர். கோவலன் தமது குடித்தெய்வமான மணிமேகலையின் பெயரினைச் சூட்டி, அக்குழந்தையை வாழ்த்திய கணிகையருக்குப் பொன்னைப் பரிசில்களாக வாரி இறைத்தமையைப் பின்வரும் சிலப்பதிகார அடிகளால் அறியலாம்.
பெயர்சூட்டுதலை ‘நாமநல்லுரை’ எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. ஆனால் பெருங்கதை ‘பெயர்நிலை பெறீஇய’ எனக் குறிப்பிடுகின்றது. ‘நாம’ எனும் வடசொல்லினைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. ஆனால் வடமொழித் தழுவல் எனக் குறிப்பிடப்படும் பெருங்கதை பெயர்சூட்டலைத் தமிழிலேயே குறிப்பிடுகின்றது. சிலம்பில் மேற்கண்ட அடிகள் மாடல மறையோன் எனும் வடபுலத்தான் கூற்றானபடியால் வடசொல்லான நாமம் பயன்படுத்தப்பட்டதோ! என எண்ணலாம். ஆனால், கொங்குவேளிர் தமிழிலேயே குறிப்பிட்டுள்ளமை சிறப்பு. மன்னர்கள் எவ்வாறு பிறந்தநாள் விழாவினைக் கொண்டாடினார்கள் என்பதைப் பெருங்கதையின் வழி அறியலாம். உதயணன் மனைவி வாசவதத்தைக்கு ஆண் மகவு பிறந்தவேளை அரண்மனைப் பெருங்கணியர்கள் சாதகப்பட்டியலைப் பார்த்துப் பெயர்சூட்டு விழாவிற்கான நாளைக் குறித்தனர். தமிழ் இலக்கியப் பரப்பில் சாதகப் பட்டியல் எனும் சொல் பெருங்கதையிலேயே முதலில் இடம் பெறுகின்றது.
“வழியோ ரறிய வழுவுத லின்றிச்
சாதகப் பட்டிகை சாலவை நாப்பண்
அரும்பொறி நெயிய னாற்ற வமைத்த
பெருங்கணிக் குழுவுக்குப் பெறுதற் கொத்த”
(பெருங்.5-6/81-84)
சாதகப் பட்டியலை நோக்கி, நன்னாள் கணித்துச் சுற்றத்தார்க்கும் நட்புசால் மன்னர்களுக்கும் ஓலை அனுப்பி அழைக்கப்பட்டு, பெயர்சூட்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. உதயணனின் மகனோடு அவனது தளபதியின் மகன்கள் மூவருக்கும் அவ்விழாவிலேயே பெயர் சூட்டப்பட்டது. இதனைப் பின்வரும் பெருங்கதையடிகளால் அறியலாம்.
உதயனன் – வாசவதத்தையின் மகனுக்கு நரவாண தத்தனென்று பெயர் சூட்டப்பட்டமையை,
“பெயர்நிலை பெறீஇய பெற்றிநாடி
உயர்நிலை யுலகி னுலோக பாலன்
நயமிகு சிறப்பொடு நகர்மிசைப் பொலிந்த
பலர்புகழ் செல்வன் றந்தன னாதலின்
உருவாண மாகிய வோங்கு புகழ்ச் செல்வன்
நரவாண தத்த னென்று பெயர் போக்கி” (பெருங்கதை.105-110)
சிலம்பில் மணிமேகலையின் பெயர்சூட்டுவிழா தமிழ் மரபுப்படி குல தெய்வத்தின் முழுமையான பெயரைச்சூட்டிக் கொடை வழங்களோடு நடைபெற்றது. மணிமேகலை தெய்வத்தால் தரப்பட்ட குழந்தை எனவோ மணிமேகலைத் தெய்வத்திற்கு உரிய குழந்தை என்பனவாகவோ பொருள்படும் பெயர்களைச் சூட்டாமல் அத்தெய்வத்தின் பெயரையே சூட்டியது தமிழ்மரபு.
உதயணன் கதையில் உதயணன் தன் மகனுக்குக் குபேரனால் தரப்பட்டவன் எனும் பொருள்படும் ‘நரவாண தத்தன்’ (நரவாணன் – குபேரன், தத்தன் – கொடுக்கப்பட்டவன்) எனும் பெயரைச் சூட்டினான். இது வடவர் வழமை. தமிழ்மக்கள் வழமையில் தந்தை தம் பிள்ளைகளுக்குப் பெயர்சூட்டல் பெருவழக்காக இல்லை. தாய்மாமன் மூலமே பெயர் சூட்டல் நிகழும் இன்றளவும் காதுகுத்தலும், பெயர்சூட்டலும் அம்மான் வழியதாகவே கொங்குநாட்டில் நிகழ்கின்றது. பொதுவாகவே பிள்ளைப்பேறு பெண்ணின் தாய் வீட்டிலேயே நிகழும். பிள்ளை பிறப்பின் பிறகு தாயும் சேயும் கணவன் இல்லம் செல்லக் கிட்டத்தட்ட ஓர் ஆண்டு வரைகூட ஆகலாம். அதுவரை பிள்ளைக்குப் பெயர் சூட்டாமலிருக்க இயலாது. ஆதலால் இந்நிகழ்வு பெண்ணின் தாய் வீட்டில் தாய்மாமனால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். கோவலன், மாதவியின் வீட்டிலேயே வாழ்ந்தான் மாதவிக்கும் உடன்பிறந்தோர் இருந்ததாக அறியவில்லை. ஆதலால் கோவலனையே மணிமேகலைக்குப் பெயர்சூட்ட அழைத்திருக்கலாம்.
துணைக்கண்டம் முழுவதும் காரணம் பற்றிய பெயர்களே பெரும்பாலும் சூட்டப்பட்டன. வெற்று ஒலிகளுக்காகப் பெயர் வைக்கும் மரபு இருந்ததாக அறிவதற்கில்லை. மன்னர்களைப்போல் செல்வமுடைய வாணிகக் குடியில் பிறந்தமையால் மாசாத்துவன் தன் மகனுக்குக் கோவலன் எனப் பெயரிட்டான் என்பர். கதிரவன் உதயமாகும் காலத்தில் பிறந்தமையால் பெருங்கதையின் தலைவன் உதயணன் எனப் பெயர்சூட்டப் பெற்றான். இதனை,
“புதையிரு ளகற்றும் பொங்கொளி மண்டிலம்
உதய மிவர்தர வுதித்தோன் மற்றிவன்
உதயண னாகெனப் பெயர்முதற் கொளீஇ” (பெருங்.2:81-83)
எனும் பாடலின் வழியாக அறியலாம்.
இலங்கையைப் பொறுத்தவரை, தமிழ் மன்னர்கள் பலரின் பெயர்கள் சிங்களப் பெயர்போல் மாற்றப்பட்டு வரலாற்றில் அவர்களைச் சிங்கள மன்னர்கள் ஆக்கிய போக்குகளும் உண்டு. சான்றாக, மூத்தசிவம், கயபாகு, விக்ரமசிங்கன் முதலியோரைக் குறிப்பிடலாம். சிங்கள மொழியில் மக்கட்பெயர்கள் பால் காட்டும் விகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை விளியேற்கும் அமைப்பிலேயே அவை இருக்கும். “சேகரன்’ என்பது தமிழ்மரபு சேகரா என விளி அமைவில் இருத்தல் சிங்கள மரபு. அதனைப் பின்பற்றி அவர்கள் தமிழ்ப் பெயர்களைச் சிங்கள அமைப்பில் மாற்றிக்கொள்வர். மூத்தசிவம் எனும் பெயர் முட்டசிவா என அமையும். இதற்கான இணைப்பெயர்களைச் சிங்களத்தில் காணல் அரிது. நல்லசிவம், பரமசிவம், மூத்தசிவம், இளையசிவம் முதலான இணைப் பெயர்களின் மரபை இன்னும் தமிழில் காணவியலும். கந்தசாமி என்ற இயற்பெயர் கொண்ட விக்ரமசிங்கன் மதுரை நாயக்க மரபைச் சேர்ந்தவன். இவனது மனைவி பெயர் வெங்கட்ரமா. இம்மன்னனின் பெயரை விக்ரமசிங்கா எனத் திருத்தம் செய்து கண்டி நாயக்க அரசமரபைச் சிங்கள அரச மரபாகப் புனைந்துகொண்டனர்.
கயம் எனும் சொல் ஆழமான குளத்தினைக் குறிக்கக்கூடியது. இதனை,
“கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்” (மதுரைக்.484)
“இனமீ னிருங்கழி யோத மல்கு தொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்” (குறுந்.9:5-6)
எனும் அடிகளால் அறியலாம்.
வளவன், பெருவளத்தான் என்பது போல ஈழத்தில் காடுகளை அழித்து பெருங்குளங்களை உருவாக்கிய மன்னன் கயவாகு என அழைக்கப்பட்டான். வாகு வலயம் என்பது கைகளில் அணியும் அணிகலன்களைக் குறிக்கக்கூடியது. இதனை,
“கைவளை யாழி தொய்யகம் புனைதுகில்
மேகலை காஞ்சி வாகு வலயம்” (பரிபாடல்.7:46-47)
பெருங்குளங்களை உண்டாக்கி நாட்டை வளப்படுத்திய ஈழ மன்னனைக் கயவாகு (குளம் வழங்கியவன்) என அழைத்தனர். பிற்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ஒரு பெயருக்குப் பல பொருள் கூறும் மரபால் கயவாகு எனும் பெயருக்கு வேறு பொருள்களையும் கூறுவராயினர். கயம், கயன் எனும் சொற்கள் யானையினையும் மீனினையும் குறிப்பதாகவும் அமையும். கயத்தில் உடையது கயன், கயம், கயத்தில் மலரும் பூக்கள் கயமலர் எனப்படும். கயமலர் நெய்தல் பூவுமாம். இதனை
எனும் அடிகளுக்கு அடியார்க்கு நல்லார் கூறும் உரையாலும் அறியலாம்.
நெய்தல் மலர் போன்ற கரிய நிறத்தையுடையதால் யானை கயமுனி என அழைக்கப்படும். இதனை
“பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்ப” (மலைபடு.107)
எனும் அடிகளால் அறியலாம்.
யானைப்படை உடையவன் எனக் கயவாகுவைக் குறிப்பிட்டுப் பிற்காலத்தில் பாலிமொழியில் மொழிமாற்றம் செய்யும்போது கஜபாகு என மாற்றிக் கொண்டனரெனலாம். உலகில் பழமையான தொல்குடிகள் மட்டுமே தங்களது பெயரோடு தங்களின் மொழியையும் இணைத்துக்கொள்ளும் மரபைக் கொண்டிருப்பர் அவ்வகையில் துணைக்கண்டத்தில் தமிழர்களும் நாகாப் பழங்குடிகளும் தங்களது பெயரோடு மொழியையும் இணைத்துக்கொள்ளும் மரபுடையவர். நாகலாந்தின் ‘கோம்’ மொழியையும் ‘மொய்த’ மொழியையும் பேசக்கூடிய பழங்குடிகள் ‘மேரிகோம்’, ‘இராஜேஷ்மொய்த’ என்பனவாக தங்கள் பெயரோடு மொழியையும் இணைத்து வழங்குவர். தமிழர்களும் தமிழ்ச் செல்வி, தமிழ்மாறன், தமிழரசு, தமிழ்த்தாமரை, தமிழரையன் என்பனவாக வழங்கும் மரபுடையோர் மூலமொழி மரபில்லாதோர் இவ்வாறு வழங்கார். கண்ணகி வழிபாட்டு மரபைக் கடைப்பிடித்த தமிழ்க் கயபாகுவை மெல்லச் சிங்கள வம்சாவளிக்குத் தள்ளிவிட்டனர். தங்களது வரலாற்றைக் காப்பதில் ஆர்வம் செலுத்தாத தமிழர்களும் இதற்கு உடன்பட்டனர்.
II
பெயர்கள் பல்வேறு வடிவங்களில் அமையும். இவை அம்மக்களின் எண்ணங்கள் மொழியமைவு விளித்தல் தன்மை போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாக விளங்கும்.
ஓரெழுத்துப் பெயர்கள் – கோ, பா; ஈரெழுத்துப் பெயர்கள் – ஓரி, பாரி, ஆய், பாவை; மூவெழுத்துப் பெயர்கள் – மிஞிலி, நங்கை, நம்பி, எழினி, அஞ்சி, ஆதன்; நான்கெழுத்துப் பெயர்கள் – சாத்தன், அமுதன், சேந்தன், திதியன், தித்தன், கொற்றவை, குந்தவை; ஐந்தெழுத்துப் பெயர்கள் – கரிகாலன், ஏறைக்கோன், கல்லாடன், பொய்கையார்; ஆறெழுத்துப் பெயர்கள் – முடிநாகனார், நெட்டிமையார், ஆதனுங்கன்; ஏழெழுத்துப் பெயர்கள் – இளவெயினியார், இடைக்காடனார்; எட்டெழுத்துப் பெயர்கள் – மாந்தரஞ்சேரல், கோக்கோதை மார்பன், இளஞ்சோட்சென்னி. ஒன்பதெழுத்துப் பெயர்கள் – கணைக்காலிரும்பொறை, பெருஞ்சித்திரனார்; பத்தெழுத்துப் பெயர்கள் – கள்ளில் ஆத்திரையன், வெண்ணிக்குயத்தியார்; பத்திற்கும் மேற்பட்ட எழுத்துகளை உடைய பெயர்கள் – பக்குடுக்கை நன்கணியார், வண்ணக்கண்ணுவன் அரையன் பாசுரன் அம்பலவன் எனபனவாக எழுத்துகளின் எண்ணிக்கையில் அமையும். அத்தோடு ஒருசொல் பெயர்கள் அதியன், திதியன் இருசொற்பெயர்கள் திதியன் ஆதன், நெடுமான் அஞ்சி என்பனவாகப் பலசொற் பெயர்கள் வரை நீளும்.
இக்காலம் வரை தமிழர்கள் வைக்கும் பெயர் முறைகளைப் பின்வருவனவாகப் பகுத்துக்கொள்ளலாம். இவற்றில் பல விடுபட்டிருக்கவும் கூடும்.
கூட்டப்பெயர்கள், குடிப்பெயர்கள், சாதிப்பெயர்கள், இனப்பெயர்கள், தேயப் பெயர்கள், இறைப்பெயர்கள், முன்னோர்ப்பெயர்கள், தலைவரின் பெயர்கள், இலக்கியப்பெயர்கள், வட ஓசைப்பெயர்கள் (ஷ, ஸ, ஜ, ஹ), செல்லப்பெயர்கள், புனைபெயர்கள், பட்டப்பெயர்கள், நிலப்பெயர்கள், தொழில் பெயர்கள், விளிப்பெயர்கள், குடும்பப்பெயர்கள், கொஞ்சுப்பெயர்கள், ஏசல் பெயர்கள், இயற்கையைப் பற்றிய பெயர்கள், நம்பிக்கைப் பெயர்கள், விருப்பப்பெயர்கள், வேறுபாட்டுப்பெயர்கள், நினைவுப்பெயர்கள், நடிகர்களின் பெயர்கள், நட்புப் பெயர்கள், அடையாளப்பெயர்கள், வரலாற்றுப்பெயர்கள், நயப்பெயர்கள், பொருள்விளங்காப் பிறமொழிப்பெயர்கள் என்பன போன்று அமையும். இவற்றை விரிப்பின் இக்கட்டுரை பெருகும். ஆதலால் வேறொரு பகுதியில் விரிப்பினன்.
பெயர்களுக்கு முன்பும் பின்பும் பட்டமும் அடையும் சேர்க்கப்படுவது பண்டைக்காலம் தொட்டே பெருவழக்காக இருந்து வருகின்றது. இக்காலத்திலும் அவ்வழமை தொடர்கின்றது. பட்டத்திற்கும் அடைக்கும் வேறுபாடுகள் உண்டு. எல்லாப் பட்டங்களும் அடைகளாகும்; ஆனால் அனைத்து அடைகளும் பட்டங்களாகா. பெயரிற்கு முன், பின் வழங்கும் அனைத்தும் அடைகளாகும். அதன்படி பட்டங்கள், அடைகளின் ஒரு பிரிவாகும். பெயரடை என்பது அனைத்து வகைச் சிறப்பு, தாழ்வுகளைப் பெயரினை அணையச் சூட்டிக்கொள்ளப்படுவது. ஆனால் பட்டம் என்பது ஏற்புடையோரால் ஒருவரைச் சிறப்பித்து வழங்கப்படுவது. ஒருவருக்குரிய அடைமொழிப்பெயர்களைப் மற்றொருவர் சூட்டிக்கொள்ளலாம். ஆனால் பட்டங்களை அப்படிச் சூட்டிக்கொள்ளவியலாது.
பல்வகைப்பட்ட அடைமொழிகளைத் தமிழர்கள் சூட்டிக்கொண்டார்கள். அவை மக்கட் பெயரடைகள் எனப்பட்டன. அடைமொழிகள் ஊர், பண்பு, கொடை, குடி, குலம், செல்வம், பணி, புலமை போன்ற பல்வேறு கூறுபாடுகளை வெளிப்படுத்துவதாக அமையும். அடைகள் ஒரே பெயர் கொண்ட இருவரைப் பிரித்து அறிதலுக்கும் பயன்படும்.
நெடுந்தேர்ச் செழியன், சேர்ப்பன், பொருநன், பெரும என்பனவான அடைகள் அகப்பாடல்களில் பயிலும். ஒருவரது இயற்பெயர் மறைந்து அடைகளே இயற்பெயர்போல் வழங்குதலும் உண்டு. இடைக்குன்றூர்க்கிழார், சேக்கிழார், ஐயூர்முடவனார் என்பன போல் அமையும். உடற்குறைகள் அடைகளாக வருதலும் உண்டு. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனவும், செய்தொழில் அடையாக வருதலுக்குக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் என்றும், ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியன், உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் முதலானவை கல்விப்புலமையால் கிடைத்த அடைமொழிகள்.
போர்வெற்றியால் கிடைத்த அடைகளும் உண்டு. செருப்பாழி எரிந்த இளஞ்சேட் சென்னி, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பனவாக அவை அமையும். பிற்காலச் சோழர்களும் இவ்வடை மரபை யொட்டியே கேரளாந்தகன், மதுராந்தகன், கங்கைகொண்டான், கடாரம் கொண்டான் போன்ற வெற்றியடைகளைத் தங்கள் பெயர்களோடு மெய்க்கீர்த்திகளில் இணைத்துக்கொண்டனர். மன்னர்கள் இறந்த இடத்தின் பெயர்களையும் அவர்களின் பெயர்களுக்கு அடைகளாக வழங்கினர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பதுவாக அமையும். வில்வலியாலும் வாள்வலியாலும் பெற்ற அடைகள் வல்வில்லோரி பாண்டியன் கருங்கையொள்வாட்பெரும்பெயர்வழுதி என்பனவாக அமையும். கொடையால் சிறப்புற்றோர் சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன், கடையேழு வள்ளல்கள் என்பனவாக அடைகளைப் பெற்றனர்.
பட்டங்கள் பல்லவர்களின் ஆட்சிக்காலத்திலும் பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்திலும் பெருகின. மன்னனாக முடிசூட்டப்படுபவர் தமது இயற் பெயரை விட்டுப் புதிய பட்டப்பெயரை ஏற்கும் மரபும் உருவானது. இதன்வழியே இயற்பெயரான அருண்மொழியைத் துறந்து இராசராச சோழன் எனும் பட்டப் பெயரை ஏற்க வேண்டியதாயிறு. இராசசேகரி, பரகேசரி, கோப்பரகேசரி முதலான பட்டங்களைச் சோழர்கள் சூடலாயினர் சடைய வர்மன், மாறவர்மன் முதலான பட்டங்களைப் பாண்டியர்களும் செகராச சேகரன், பரராசசேகரன் எனும் பட்டங்களை யாழ்ப்பாணராச்சிய மன்னர்களும் சூட்டிக்கொண்டனர். இதன்வழித் தமிழுக்கு அயல்பட்டு நின்றனர்.
வீரராசேந்திர சோழனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த சோழ சாளுக்கியத் திருமண உறவில் முதலாம் இராசேந்திர சோழன் மகள் அம்மங்காதேவிக்கும் சாளுக்கிய நரேந்திரனுக்கும் மகனான இரண்டாம் இராசேந்திரன் சோழ அரியணையைக் கைப்பற்றியவுடன் தன்னைச் சாளுக்கியக்குடிக்கும் சோழக்குடிக்கும் பொதுவானவன் எனக்காட்டி உபயகுலோத்துங்கன் (உபய-இரு, குலோத்துங்கன் – குடிகளைத் தாங்குபவன், இரு குடிகளையும் தாங்குபவன்) எனும் பட்டப்பெயரோடு ஆட்சிக்கு வந்தான். மன்னர்கள் மட்டுமல்லாது மக்களுக்கும் ஆட்சியாளர்களால் பட்டங்கள் வழங்கப்பட்டன.
மன்னர்களின் பெயராலும் பேரரசரின் பெயராலும் வழங்கப்படும் பட்டங்களே மிகவும் உயரிய பட்டங்களாகக் கருதப்பட்டன. இதனை
எனச் சிந்தாமணியில் காணலாம். பொறி எனும் சொல் பட்டம் எனப் பொருள்படும். இது அரசன் பெயரால் பெற்ற பட்டம் என நச்சினார்க்கினியர் கூறுவர்.
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ‘குஞ்சரமல்லப் பெருந்தச்சன்’ ‘இராசராச குஞ்சரமல்லப் பெருந்தச்சன்’ எனும் பட்டத்தை இராசராசசோழனிடம் பெற்றான். சேந்தன் பிள்ளை என்பவனது பணிக்காக ‘இராசராச பல்லவராயன்’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. சிவத்தொண்டு செய்த அடியார்க்கு ‘நக்கன்’ எனும் பட்டமும் ஆடல், பாடல் கலைகளில் சிறந்த தேவரடியாருக்குத் தலைக்கோலி பட்டங்களும் வழங்கப்பட்டன.
பெண்கள் தங்களது பெயரோடு ஊர்ப்பெயர்களைச் சேர்த்தலும் உண்டு. வெண்ணிக்குயத்தியார், மாறோகத்து நப்பசலையார் என்பனவாகவும், தந்தையின் பெயரைச் சேர்த்துப் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் என்பதாகவும் அமையும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியை முதன்முதலில் அறிமுகம் செய்யும் அடிகளார் அவளது தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு அவரின் மகள் கண்ணகி என்றே அறிமுகம் செய்கின்றார்.
சிலம்பின் வழக்குரை காதையில் பாண்டியனிடம் தன்னைக் குறித்துக் கூறும் கண்ணகி கோவலன் மனைவி கண்ணகி எனக் கனவனின் பெயரோடு தன்பெயரைக் கூறுதலை,
…….. ”நின்பாற்
கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரே ” (சிலம்பு.20:61-63)
கோப்பெருந்தேவி, கோப்பெரும்பெண்டு, செம்பியன் மாதேவி முதலாய பேரரசிரியரின் பெயர்கள் அவர்களின் இயற்பெயர்களாக இருக்க வய்ப்பில்லை. கோப்பெருந்தேவி, கோப்பெரும்பெண்டு என்பன பாண்டிய மன்னரின் பட்டத்தரசியரைக் குறிக்கும் சொற்களாகின்றன (கோ – மன்னன், பெரும் பெண்டு – மனைவி) செம்பியன் எனும் சொல் சோழர்களைக் குறிப்பது மழவரையர் மகளுக்கு இயற்பெயராக இப்பெயர் அமையாது. செம்பியன் மாதேவியார் எனும் பெயர், அவர் கண்டராதித்தச் சோழரை மணந்த ஞான்று வழங்கப்பட்ட பட்டப்பெயராகலாம். பேரரசியர்களின் இயற்பெயர்களைக் கூறி அழைத்தால் மதிப்புக் குறைவு எனக் கருதியோர் அவர்களின் பட்டப் பெயர்களாலேயே அழைத்திருப்பர். காலவோட்டத்தில் இயற்பெயர் மறைந்து பட்டப்பெயர்களே கல்வெட்டுகளிலும் ஏறி நிலைத்திருக்கின்றன. பொது மக்களிடமும் இவை போன்ற வழக்கங்கள் காணப்பட்டமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உண்டு. இராமனின் மனைவி ராமணி என்றே குறிப்பிடப்படு கின்றமையைக் காணலாம். தந்தையின் பெயரால் பெண்களைக் குறிப்பிடும் வழமையும் தமிழில் உண்டு என்பதற்குப் பாரிமகளிர் எனும் பெயரைக் குறிப்பிடலாம். வடபுல மரபில் தந்தையின் பெயரைப் பெண்கள் ஏற்றும் தத்தித மரபு உண்டு. தட்சன் மகள் தாட்சாயினி, சனகன் மகள் சானகி, திருபதன் மகள் திரௌபதி என்பனவாக அமையும்.
“நல்லிஊர் ஆபிடந்தை மகள் கீரன்கொற்றி” எனத் தந்தையின் பெயர் சூட்டிக் கூறப்பட்டமையைப் புகளூர்க் கல்வெட்டால் அறியலாம். குலப்பெயரோடு பெண்கள் சுட்டப்பட்டமையைச் “சொல் பாரூர் வேளிர் குலப்பெண்டு பூதி ஆதித்த பிடாரி” எனவும் வரும் கல்வெட்டுகளில் கணவர், தந்தை, மாமனார், மகன் தம்பி முதலானவர்களின் பெயர்கள் பெண்களின் பெயர்களுக்கு முன்னடையாக அமைந்துள்ளன. குந்தவையைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் ‘இராசராசசோழத் தேவர் திருத்தமக்கையார், வல்லவராயர் வந்தியத்தேவரின் திருத்தேவியார், ஸ்ரீஆழ்வார் பராந்தகன் குந்தவையார்’ எனக் கூறப்படுகின்றன. ‘பராந்தகன்’ என்பது அவரது தந்தையார் சுந்தர சோழனின் இயற்பெயராகும். செம்பியன் மாதேவியார் குறித்த உய்யக்கொண்டான் திருமலைக் கல்வெட்டு ‘பிராந்தகன் மாதேவடிகளார்’ எனக் குறிப்பிடுகின்றது. இதில் பராந்தகன் அவரது மாமனாரின் பெயராகும் மாதேவடிகள் அவரது இறைப்பணியால் கிடைத்த பெயராகும். மேலும் பல கல்வெட்டுகளில் பின்வருமாறு அவர் குறிப்பிடப்படுகின்றார்.
“மழவரையர் மகளார் ஸ்ரீகண்டராதித்த பெருமாள் தேவியார் செம்பியன்
மாதேவியார்
ஸ்ரீஉத்தம சோழதேவரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார்”
என்பனவாக அமையும். இவற்றில் தந்தை, கனவன், மகன், மாமனார் பெயர்கள் சூட்டப்படுதலினைக் காணலாம்.
மன்னர்களின் பெயர் பொறித்த மோதிரம் முதலான அணிகலன்களும் சங்க காலம் முதற்கொண்டே வழக்கத்தில் இருந்தன. இவை பல நேரங்களில் அரசின் முத்திரைகளாகப் பயன்படுத்தப்பட்டன. மன்னர்களின் கையெழுத்திட்ட அறிவிப்புகள் திருமுகம், ஸ்ரீமுகம் எனப் பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் வழங்கப்பட்டன. இவ்வோலைகளை எழுத்தோலை என இலக்கியங்கள் வழங்கின.
எனப் பெயர் எழுதப்பட்ட ஓலைகள் குறித்து மேற்கண்ட பெருங்கதை அடிகளால் அறியலாம்.
போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களின் கல்லறையின் மேலே அவனது பீடும் பெயரும் பொறித்தும் பீலிசூட்டியும் செங்காந்தள் மாலை சூட்டியும் வழிபடுதல் பண்டைத் தமிழர் மரபு. இதனை,
“பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொ
டணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்
தினிநட் டனரே கல்லுங்” (புறம்.264/1-4)
எனும் புறப்பாட்டு அடிகளின் வழியறியலாம். பல்வேறு வெற்றிகளைப் பெற்ற மாவீரனுக்குச் செய்யும் முழுமையான சிறப்பு அவனது பெயரையும் பெருமையையும் கல்லில் எழுதி அவனை இட்ட இடத்தில் அக்கல்லினை எழுப்பி அவனை வழிபடுதலேயாகும். அவனது மறைவிற்குப் பின்பும் அவனது பெருமையைத் தாங்கி நிற்பது அவனது பெயரே. துணைக்கண்டத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் மிகப் பழமையான கல்வெட்டு திண்டுக்கல் மாவட்டம் புலிமான்கோம்பை எனுமிடத்தில் கிடைத்த நடுகல் கல்வெட்டேயாகும். இக்கல்வெட்டில் ஆதன் எனும் வெட்சிப்போர் மறவனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டைக் கண்டுபிடிப்பதற்கு முன்புவரை க.கைலாசபதி போன்ற பேராசிரியர்கள் பெயர் பொறித்த நடுகல் நடும் வழக்கம் தமிழர்களிடம் இல்லையெனக் கூறிப்போந்தனர். அவர்களது கருத்துகள்தாம் இன்று பொய்த்துவிட்டன. இவ்வாறான பெயர் பொறித்த நடுகல் கல்வெட்டுகள் அகவிலக்கியங்களிலும் உண்டு. இதனை,
“நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல்” (அகம்.67:8-10)
எனும் அகநானூற்று அடிகளால் அறியலாம்.
இக்காலத்திலும் வீட்டிற்குத் தேவையான சமையல் கலன்களையும், ஏனங்களையும் வாங்கும் பெண்கள் அவற்றில் தங்களது பெயர்களையே வெட்டும் வழமை காணப்படுகின்றது. சங்க காலத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பானையோட்டுப் பொறிப்புகள் கிடைக்கின்றன ஆனால் அவற்றில் 80 விழுக்காட்டிற்கு மேல் ஆண்களின் பெயர்களே பொறிக்கப்பட்டுள்ளன. மிகச்சில ஓடுகளில் மட்டும் பெண்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணங்கள் விளங்கக்கூடவில்லை. ஒருவேளை இப்பானையோடுகள் கிடைக்கும் இடங்கள் வணிக மையங்களான படியால் அப்பானைகள் ஆண்கள் கள் விற்கும் பானைகளாக இருக்கலாம். அதனால் ஆண்கள் பெயரே பெரிதும் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அல்லது குடித் தொழிலாகப் பானை செய்யும் குயவர்களால் செய்யப்பட்ட மட்பாண்ட வகைகளை வண்டிகளில் ஏற்றிக் குடிகளின் வீடுகளுக்குச் சென்று வழங்கும் போது சிக்கல்கள் ஏதும் வராமல் இருத்தற்பொருட்டுக் குடும்பத் தலைவனின் பெயரையே பானைகள் செய்யும் போது கீறியிருக்கலாம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான மட்பாண்டங்களைச் சரியான முறையில் வழங்குதலுக்கு ஏற்புடையதாக இது அமைந்திருக்கலாம்.
ஐயை, அம்மாள், அம்மை, ஔவை, தாய், ஆயி, பாவை, நங்கை, மங்கை, பெண்டு, தேவி, நாச்சியார், ஆச்சி, பிள்ளை, பேச்சி என்பனவாகவும் அவற்றில் இகர அல்லது அள் இறுதி பெற்றும் பெண்களின் பெயர்கள் அமையும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பல பெயர்களும் உண்டு. அன்னி, மணி, செல்லமணி, செல்வமணி, அடிகள், என்பன ஆர் விகுதி இருபால் பெயர்களாக அமையும். ஆண்களின் பெயர்கள் ஐயன், அப்பன், அத்தன், அரையன், ஆசான், தேவன், உடையார், பிள்ளை என்பனவற்றோடு அன் விகுதி பெற்றும் குடி, சாதியப் பெயர்களோடும் அமையும். தொழில் முறையால் அழைக்கப்பட்ட பெயர்கள் பிற்காலத்தில் சாதியப்பெயராகி இருபாலரையும் அழைக்கப் பயன்படுவனவாயிற்று. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரே பெயரை வைத்து அழைக்கும் முறை பண்டைக்காலத்திலிருந்தே வழங்கியதெனலாம். கொல்லிமலையை ஆண்ட மாவீரனான வல்வில் ஓரியிடம் ஓரி என்ற பெயரில் திறன் வாய்ந்த ஒரு குதிரையும் இருந்ததன் வழி இதனை அறியலாம்.
முள்ளூரை ஆண்ட காரி மன்னனிடம் காரி எனும் பெயருடைய குதிரை இருந்ததாகவும் இருவரும் அவரவர் பெயர்கொண்ட குதிரைகளின் மீதமர்ந்து போர் செய்தனர் என்பதினை,
“காரிக்குதிரை காரியொடு மலைந்த
வேரிக் குதிரை யோரியு மெனவாங்” (சிறுபாணாற்றுப்படை.110-111)
எனும் பத்துப்பாட்டு அடிகளால் அறியலாம். அத்தோடு பறவையின் பெயர்கொண்ட நெற்பெயர்கள் இருந்தமையை,
“சுடர்க் கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்”
(பெரும்பாணாற்றுப்படை.105)
எனும் பத்துப்பாட்டு அடிகளால் அறியலாம். இவ்வடிகளுக்கு உரை கூறிய நச்சர் “இராசாண்ணமென்னும் பெயர் பெறுகின்ற நெல்லென்றவாறு” என்றும் “இனிமின்மினி நெல்லென்பாருமுளர்” என்றும் கூறுவர். இதன்வழி ஒரே பெயர் உயர்திணைப் பெயராகவும் அஃறிணைப் பெயராகவும் வழங்கியமையை அறியலாம்.
III
சங்ககால மன்னர்களின் பெயர்களும், மக்களின் பெயர்களும் தமிழாகவே அமைந்தன. வடபுலத்தோடும் வடமொழியோடும் தொடர்புடைய வைதீகர்களின் பெயர்கள், சமண, பௌத்தத் துறவிகள் முதலானோர்களின் பெயர்கள் தமிழகத்தில் குடிபோந்த வேற்றுப்புலத்தார் பெயர்கள் முதலானவைகளே வடமொழிப்பெயர்களாக இருந்தன. ஆனால் பல்லவர் காலத்தில் வாணிக மக்களின் சமண, பௌத்த சமய மேலாதிக்கம் ஆட்சியாளர்களைப் பற்றியவுடன் வடமொழிப் பெயர்களின் செல்வாக்கும் பெருகிற்று. சாளுக்கியர்களிடமிருந்து இவ்வடமொழிப் பெயர்மரபைப் பல்லவர்கள் கைக்கொண்டனரா? என ஆய வேண்டியுள்ளது. பல்லவர்களுக்குப் பின்வந்த சோழர்களும் பாண்டியர்களும் தங்களது தமிழ் இயற்பெயர்களைத் தவிர்த்து வடமொழிப் பட்டப்பெயர்களைச் சூட்டலாயினர். ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் பாடப்பட்ட திருத்தலங்களும் அத்தலத்தின் இறைவன், இறைவி பெயர்களும் தமிழிலேயே இருந்தன. பிற்காலச் சோழர், பாண்டியர் காலங்களிலும் இந்நிலையே நீடித்தது. அவர்கள் புதிதாகக் கட்டிய கோயில்களிலும் இறைவன், இறைவி பெயர்களைத் தமிழிலேயே வைத்தனர். இதற்குச் சான்றாகத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் குறிப்பிடலாம்.
ஆனால் விசயநகர நாயக்கர் காலங்களில் தலப்பெயர்களும், இறைவன், இறைவி பெயர்களும் முற்றிலும் வடமொழி வயப்படுத்தப்பட்டன. இதன் தொடக்கமாகப் பிற்காலச் சோழர்காலத்தில் சாளுக்கியச் சோழர் குடிக் கலப்பில் பிறந்து சோழ அரியணையைக் கைப்பற்றிய முதலாம் குலோத்துங்கன் காலத்தினையே குறிப்பிடலாம். அவன் காலத்தில் இறைவன், இறைவி பெயர்கள் வடமொழிக்கு மாறியமைக்குச் சான்றாக கோனேரிராசபுரத்து உமா மகேஸ்வரன் கோயிலினைக் குறிப்பிடலாம். இக்கோயில் திருநல்லம் மாதேவர் கோயில் என்றே முதலாம் குலோத்துங்கன் காலத்திற்கு முன்புவரை கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது அதன்பின் குலோத்துங்கன் காலம் முதல் உமாமகேஸ்வரர் கோயில் என்று வடமொழியில் குறிப்பிடப்படுவதாயிற்று. விசயநகர நாயக்கர் காலத்தில் தமிழ்ப்பெயர்கள் மாற்றப்பட்டு வடமொழிப்பெயர்கள் சூட்டப்பட்டன. தெலுங்கு மன்னர்கள் தமிழ்மொழியை அறிந்திலர். அவர்கள் கோயிலுக்கு வரும்வேளையில் தாயுமானவர் எனச் சொன்னால் அவர்களுக்கு விளங்காது; கோயிலுக்குக் கொடையும் வழங்கார். ஆதலால் தாயுமானவர் மாத்ரு பூதேஸ்வரரானார். நிலத்து அமரான் கைலாசநாதரானார், ஏழவார்குழலி சுகுந்தகுந்தலாம்பிகையானாள். அங்கோல் வளைமங்கை முழுமையாக மொழிமாற்ற முடியாமல் தேக சுந்தரியாக ஆக்கி, மங்களநாயகியாக்கினர். விசயநகர ஆட்சிக் காலத்தில் தெலுங்குப் பார்ப்பார்கள் தமிழகக் கோயில்களில் பூசனைக்கு இருத்தப்பட்டு, தமிழ்ப் பட்டர்களும் சிவாச்சாரியர்களும் கோயில் மடப்பள்ளிக்குக் கலைக்கப்பட்டனர். இதுவும் தமிழ்ப் பெயர்களை விருப்பப்படி மாற்றிக்கொள்ள வழியமைத்தது. இறைவன், இறைவியர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டிப் பழக்கப்பட்ட தமிழர்கள் அவ்வடமொழிப் பெயர்களையே சூட்டத்தொடங்கினர்.
தமிழ் நிலங்களான சோழநாடு, சேரநாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு, ஈழநாடு ஆகிய பகுதிகள் அனைத்திலும் வாழும் மக்களுக்குத் தனித்துவமான பெயர் அமைவுகள் உண்டு. அவை அச்சமூக நிலவியல் அமைவை ஒட்டியதாக அமைந்தவை எனலாம். தமிழகத்தில் செந்தில் எனும் பெயர் போல் ஈழத்திலும் செந்தூரன் எனும் பெயர் வழக்கு மிகுதி. தமிழகத்தில் கந்தசாமி ஈழத்தில் கந்தையா. யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் காலத்தில் வைதீகமயப்படுத்தப்பட்டபோது கண்ணகி கோயில்கள் இராசராசேஸ்வரி கோயில்களாகவும் மனோன்மணியம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டன. மக்களுடைய பெயர்களும் வைதீகமாக்கப்பட்டு வடமொழி வயமானது.
பண்டைய நாளிலே பிள்ளைப்பேறு அளவிற்கு அதிகமாக இருக்கும் சிலர் தமது எட்டாவது பிள்ளைக்கு ‘சம்பூரணம்’ எனவும் ‘போதும் பரிபூரணம்’ என்று இனிப் பிள்ளைகள் வேண்டாம் எனும் பொருளில் பெயர் வைப்பர். ஆனால் ஆண் பிள்ளைகளை வேண்டாம் எனப் பெயர் வைத்ததாக அறிய இயலவில்லை. மேலே குறிப்பிட்ட இருபெயர்களும் பெண்பிள்ளைகளுக்கே உரியவை என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டைக்குழந்தைகளோ, இரட்டை மாடுகளோ பிறந்து விட்டால் அவற்றுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இராமன், இலட்சுமணன், இராமாயி, இலட்சுமி என்பனவாகப் பெயர் சூட்டுவர். பெண்ணும் ஆணுமாகப் பிறந்தால் நீலாம்பாள், நீலகண்டன் என்பனவாகப் பெயர் சூட்டுவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ், சுரேஷ் என்பனவாகப் பெயர் சூட்டுவர். ராம், சாம் என்பனவாகவெல்லாம் வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதனைக் காணலாம். ஆனால் சீவக சிந்தாமணியில் ஒரு வண்டியினை இழுக்கும் கரிய, வெள்ளை நிறங்களையுடைய இணைக்காளைகளை காமனும் சாமனும் போல் எனத் திருத்தக்கதேவர் குறிப்பிடுவார். இதனை,
எனும் அடிகளால் அறியலாம். சங்க இலக்கியத்திலும் உடன்பிறந்தோருக்கு நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்றும் அங்கவை, சங்கவை என்றும் பெயர் சூட்டிய மரபு உண்டு.
தமிழ்க்காப்பியப் பெயர்கள் இசைநயத்திற்கு ஏற்றனவாயும் இயற்பெயராயும் அமைந்தவை. கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை என்பனவான பெயர்களால் இவற்றை அறியலாம். ஆனால் வடமொழிப் பெயர்கள் நயத்திலும், பொருளிலும் சற்றே குறைந்தவை எனலாம். திருதராட்டிரன், துச்சாதனன், காந்தாரி, சத்ருக்கனன் என்பனவாகக் கொள்ளலாம். திருதராட்டிரன் எனும் பெயரின் இசைநயச் சிறப்பை வில்லிபாரதத்தினைப் படிக்கும் போது படிப்பவர் வாயுணரும். கம்பருக்குச் சத்ருக்கனன் பெயரின் இசைநயம் தெரிந்ததனால் அப்பெயர் வழங்கவேண்டிய இடங்களில் எல்லாம் ‘தம்பி’, ‘இளவல்’ என்றே கூறிப்போந்தார்.
தமிழ்க்காப்பியப் பெண்களின் பெயர்கள் எல்லாம் இயல்பாக தங்களுக்கே உரிய பெயர்களாய் இருக்க வடமொழியில் இது வேறுபட்டே இருக்கும். பெரும்பாலான வடமொழிக் காப்பியப் பெண்களின் இயற்பெயர்கள் இன்னதென்றே இன்றளவும் அறியத்தகுந்ததாக இல்லை. சான்றாகக் குந்தி-குந்திராசனின் மகள், திரோபதி–திரோபதராசனின் மகள் என்றும் பாஞ்சாலநாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி எனவும் பெயர்பெற்றாள் இவளது இயற்பெயர் கிருஷ்ணா (கரிய நிறமுடையாள்) எனக் குறிப்பிடுவர். கோசலை – கோசல நாட்டு இளவரசி, கைகேயி–கேகயநாட்டு இளவரசி என்பனவாக அமையும் இவையாவும் இயற்பெயர்களல்ல. அவற்றைத் தத்திதப் பெயர்கள் என வடமொழி இலக்கணங்கள் கூறும். காப்பியங்களில் எதிர்மறைப் பெயர்களைக் கையாளும் மரபு தமிழில் மிகக்குறைவு. ஆனால் வடமொழியில் இம்மரபு மிகுதியுமுண்டு. துச்சாதனன் என்றால் கெட்ட செய்கையையுடையவன் என்று பொருள். பெற்றோர் யாரும் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கெட்டவன் எனப் பெயர் வைப்பரோ? எதிர்மறைப் பெயர்களும் வடமொழியில் மிகுதி. விமலன், அமலன், நிரோஷன் என்பன போன்றவையும் அதனுள் அடங்கும். தமிழ்ப்பெயர்கள் குறித்த இக்கட்டுரையில் வடமொழிப் பெயர்கள் குறித்துச் சுட்டுதல் யாதனில் தமிழர்கள் வடமொழிப் பெயர்பால் கவர்ச்சி கொண்டு சார்தல் பற்றியதாலேயாம்.
தமிழில் தமிழர்கள் பெயர்வைத்தலைத் தடுத்தற் பொருட்டுத் திட்டமிட்டவர்கள் கைக்கொண்ட வகைமையில் ஒன்றுதான் பஞ்சாங்க அடிப்படையில் பெயர் வைக்கும் முறையை உருவாக்கியதாகும். தமிழெழுத்துகள் அனைத்தும் மொழிக்கு முதலாக வரா எனும் இலக்கண விதியை நன்குணர்ந்த அயலர் பஞ்சாங்கத்தில் மொழிமுதலாகா எழுத்துகளையும் வடமொழிக் கிரந்த எழுத்துகளையும் மிகுதியாகச் சேர்த்துப் பன்னிரண்டு இராசிகளைச் சேர்ந்தவர்களும் இவ்வெழுத்துகளிலேயே பெயர்கள் தொடங்கும் வண்ணம் வைத்தல் வேண்டும். குறிப்பிட்ட இராசிக்குக் குறிப்பிட்ட எழுத்துகளில் தொடங்கும் பெயர்களைச் சூட்டினால்தான் சிறப்பு என வகுத்துவிட்டார்கள். மேஷம் முதலாக மீனம் ஈறாக உள்ள இராசிக்கூட்டத்தில் பிறந்தவர்கள் பெயர் சூட்டும் முதல் எழுத்துக்களாகத் தொண்ணூற்றாறு எழுத்துகளைக் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் முப்பத்தொன்பது எழுத்துகள் தமிழில் மொழி முதலாகா எழுத்துகளும், வடமொழிக் கிரந்த எழுத்துகளுமாகும். நாற்பத்து மூன்று தமிழ் எழுத்துகளே மொழி முதல் எழுத்துகளாகும். இவற்றிலும் மிகுதியான எழுத்துகள் அதிகப் பெயர்களைக் கொண்டிராதவை. பின்வரும் தமிழ் எழுத்துகளே பெயர் சூட்டலுக்குரியதாகப் பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. அ, இ, உ, எ, ஒ ஐந்து உயிர் எழுத்துகளும், க, கா, கி, கு, கூ, கே, கோ, ச, சி, சு, ந, த, தி, தீ, து, தே, தோ, ந, நி, நெ, நோ, ப, பா, பி, பு, பூ, பெ, போ, ம, மி, மெ, மோ, யா எனும் முப்பத்துநான்கு உயிர்மெய் எழுத்துகளிலேயே பெயர்கள் தொடங்கும் வண்ணம் அமைத்துள்ளனர். இந்தக் கணக்கின்படி பார்த்தால் உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துக்களில் பெயர் தொடங்கக் கூடாது. ஆதன், ஆய் அண்டிரன், ஔவையார் போன்ற பெயர்களெல்லாம் இவர்கள் கணக்குப்படி பிழையானவை. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் ‘ஜெ, ஷோ,ஷி,ஹி,ஹே, ஹோ,ஜ, ஜீ, ஜு, ஜோ, ஸி, ஸீ, ஸெ, ஸொ, ஸ்ரீ எனும் கிரந்த எழுத்துகளும் ட, டி, டோ, டு, டே, ல, லி, லு, லே, லோ, ர, ரீ, ரு, ரே, யீ, யு, யே, யோ, ன்’ எனும் எழுத்துகளிலேயே பெயர்கள் தொடங்க வேண்டுமென்றால் தமிழர்கள் தமிழ்ச்சொல்லில் பெயர்வைத்தலே அரிதாகிப் போகும். ‘ஸ்ரீ’ எனும் வடசொல்லை எங்கு வடமொழி எழுத்துப்பட்டியலில் சேர்த்தார்களோ அறியவில்லை. இதன்படி பார்த்தால் கற்கடக இராசியில் பிறந்த யாரும் தமிழ்ப்பெயர்களைச் சூட்டிக்கொள்ள இயலாது ஏனெனில் அவ்வகைப்பாட்டில் கடகத்திற் பிறந்தவரின் பெயர்ப்பட்டியலில் ஓர் எழுத்துக் கூட தமிழ் எழுத்தாக இல்லை. இந்த எழுத்துப் பட்டியலைப் பார்த்தால் இது அனைத்து இனத்தவருக்கானதாகவும் கொள்வதற்கில்லை. ஏனெனில் வடவெழுத்துகளில் உள்ள வருக்க எழுத்து முறையை இப்பட்டியலில் பின்பற்றவில்லை. ஆதலால் இவை தமிழரின் தலைமேல் திணித்தலுக்காகவே உருவாக்கப்பட்டது எனலாம். இப்பட்டியல் இலக்கணமென்றால் இதற்கான இலக்கியங்களாக லலிதாசகஸ்ரநாமம், விஷ்ணுசகஸ்ரநாமம் முதலான நூல்களையும் வைத்துக்கொண்டனர் இதில் மலைமகளின் தமிழ்ப்பெயர்களோ, மாலவனின் தமிழ்ப்பெயர்களோ இடம்பெறவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
பஞ்சாங்க உருவாக்கம் போன்ற பணிகளைத் தமிழ்க் கணியர்களிடமிருந்து சமணர்களே முதன்முதலாகத் தட்டிப் பறித்தனர். சங்க இலக்கியத்தில் வழங்கும் உலோச்சனார் முதலான பல வடசொற் பெயர்கள் சமணருடையவையே. பௌத்தமும் அதே பணியையே செய்தது. இதற்குச் சான்றாக மணிமேகலையில் வரும் மாந்தரின் பெயர்களைக் குறிப்பிடலாம். தமிழ்ப்பெயர்களை அழித்தலின் வழித் தமிழரின் பண்பாட்டின் மீதும் நாகரீகத்தின் மீதும் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கித் தமிழர்களின் ஒழுக்க நெறிகளின் மீது ஓர் இழிவான கருத்தை விதைத்து அவர்களைப் பிற சமயங்கள் உயர்வானது எனும் கருத்தோட்டத்திற்குக் கொண்டுவந்து தங்களது சமயப் பரவலாக்கத்தினை மேம்படச் செய்தலுக்குத் தமிழ்ப்பெயர் அழிப்பு முதன்மையான முறையாகக் கையளப்பட்டுள்ளது. சமணம், பௌத்தம், வைதீகம், இஸ்லாம், கிறித்துவம் முதலான அனைத்து மதங்களும் தமிழ்ப்பெயர் சூட்டலில் ஒரு நன்மையும் செய்ததாக அறியக் கூடவில்லை. ஆனால் அம்மதங்களின் தூய நூல்கள் யாவும் தமிழில் பெயர் வைக்கக்கூடாது என எங்கும் குறிப்பிடவில்லை. இது இவர்களாகவே வைதீகர்களைப் பார்த்து வைத்துக்கொண்ட சூடாகும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கத்தோலிக்கக் கிறித்துவத்தில் நல்ல தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டினர். பிறகு அவை வடமொழிப் பெயர்களாகவும் பாரசீகப் பெயர்களாகவும் மிகுந்து போயின.
இன்றைய சூழ்நிலையில் ஈழத்திலும் தமிழகத்திலும் வழங்கும் மக்கட் பெயர்களில் பல என்ன மொழிப் பெயர்கள் என்று அறியவியலாதவை. ஷ, ஷா, ஸி, ஸீ போன்ற ஓசைகளுக்கு முதன்மை கொடுப்பவை. பிற வடமொழிப் பெயர்களும் பாரசீகப் பெயர்களும் அரபிப் பெயர்களுமாகவே அமையும். தமிழ்மொழி தன்னுடைய மக்களுக்குப் பெயர்களை வழங்கும் தகுதியினை இழந்துவிட்டதா? என எண்ணத் தோன்றுமளவிற்குக் குப்பைப் பெயர்கள் மிகுந்துவிட்டன. இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து இன்றைய பெயர்களை ஆராய்வோர் தமிழ்நாட்டில் இக்காலக்கட்டத்தில் தமிழர்கள்தான் வாழ்ந்தனரா அல்லது வேறு ஏதோ கலப்பினத்தவர் வாழ்ந்தனரா? என்ற ஐயமே மேலோங்கும். ஈழத்தில் தமிழ்ப் பெயர்களை அழித்தமையில் மேற்கத்திய எண்ணியல் மூடநம்பிக்கைகளுக்குப் பேரிடமுண்டு. தமிழிலும் எண்ணியல் பெயர்கள் உண்டு. ஆனால் அவற்றை ஆய்ந்து பெயரிடுதலைத் தமிழர்கள் ஏனோ கைவிட்டுவிட்டனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கமும் தமிழ் அறிஞர்களும் தமிழில் பெயரிடுவதன் இன்றியமையாமை குறித்து மக்களிடம் பெரிதும் பரப்புரை செய்தனர். இதன் பயனாய்த் தமிழில் பெயரிடுதல் தொடர்பான விழிப்புணர்வு தமிழகத்தில் சற்றுத் தோன்றியது. ஈழத்தைப் பொறுத்தவரை கிழக்கில் மட்டக்களப்புப் பகுதியில் நாட்டார் வழிபாடுகளும் கண்ணகி வழிபாடும் அம்மண்ணின் அறிஞர் பெருமக்களின் தமிழ்ப்பற்றும் அம்மக்களின் பெயர்களைப் பெரும்பாலும் தமிழ்ப் பெயர்களாகவே தக்க வைத்திருக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆறுமுக நாவலரின் வைதீகக் கோட்பாடு இருந்த தமிழ்க் கண்ணகி கோயில்களை எல்லாம் இராஜராஜேஸ்வரி கோயில்களாக மாற்றியதோடு தமிழ்ப்பெயர் சூட்டலிலும் ஆர்வம் காட்டியதாக அறியவியலவில்லை. ஈழப் போராட்டக் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ்ப் பெயரிடுதலின் இன்றியமையாமையைத் தமிழர்களிடம் விளக்கியது. பல போரளிகள் தங்களது இயற்பெயர்களைத் தவிர்த்து நல்ல தமிழ்ப்பெயர்களை இயக்கப் பெயர்களாகச் சூட்டினர். இவ்வியக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களும் கரிகாலன் எனும் இயக்கப் பெயருடையோரேயாவார். பிற போராட்ட இயக்கங்களிலும் இந்நிகழ்வுகள் காணப்பட்டன. புலிகளின் இயக்கத்தின் நூல் வெளியீட்டுத் துறையினர் நாற்பத்தேழாயிரம் தமிழ்ப்பெயர்களைக் கொண்ட பெருநூல் ஒன்றினைப் பதிப்பித்து வெளியீடு செய்துள்ளனர். இப்பணி, போற்றுதலுக்கு உரியதாக அமைகின்றது. தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டித் தமிழ் நாகரிகத்தினைப் பேணுவார்களாக.
இக்கட்டுரையின் விரிவஞ்சிப் பல விடயங்கள் எழுதவியலாது போயிற்று. பெயர்கள் விளியேற்கும்போது அடையும் வேறுபாடுகள், பெயர்களின் விகுதியமைதி, தெய்வப்பெயர் வரலாற்று அமைவுகள், பட்டப்பெயர் அமைவுகள், இக்காலத்தில் தமிழ்நாடு எங்கும் பெயர்வழங்கு முறைகள் போன்ற பலவற்றையும் தனித்தனிக் கட்டுரைகளாகக் கட்டுதலின்வழி இதன் மேலாய்வாக அவற்றைத் தொடர்ந்து காணலாம்.
உசாத்துணை நூல்கள்
அருணாசல தேசிகர், சோ. குறுந்தொகை மூலம். 1 ஆம் பதி. சென்னை,
தமிழில் பெயர் என்னும் சொல்லின் உருவாக்கம், பெயர் என்னும் சொல் இலக்கிய, இலக்கண வழக்குகளில் இடம்பெற்றுள்ளமை, பெயர் என்னும் சொல் பல்வேறு பொருள்களில் கையாளப்பெற்றுள்ளமை ஆகியன குறித்துக் கட்டுரையின் முதற்பகுதி விரிவாக விளக்குகின்றது. கட்டுரையின் இடைப்பகுதி, பெயர்சூட்டுதல் குறித்த இலக்கியச் சான்றுகள், பெயர் சூட்டுதலுக்கு வழக்கப்பட்ட பொதுவான சொற்கள், மன்னர்கள் தங்களுடைய பட்டங்கள், குடிகள், முன்னோர் வழிப் பெயர்கள் எனப் பெயர் சூட்டிக்கொண்ட முறை ஆகியவற்றை விரிவாக விளக்குகின்றது. இறுதிப் பகுதி, தற்கால நடைமுறையில் சாதக கணிப்பின் அடிப்படையில் பெயர் சூட்டுதல் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கித் தனித்தமிழ் அடிப்படையில் அனைவரும் தமிழ் உணர்வோடு பெயர்களைச் சூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. பெயர் சூட்டல் குறித்த தமிழ்நாடு, யாழ்ப்பாணம் ஆகிய இரு நாட்டு மரபையும் இணைத்துக் கட்டுரையாளர் விளக்கியுள்ளமை பாராட்டத்தக்கது. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
நியாயமாவும், நாணயமாவும், மொற இல்லாத சந்தோசத்த தேடாதவனாவும், தன் உசிரக் கூட கொடுக்க பயந்துக் கிடாதவனாவும் ஒருத்தன் இருக்கானானு அறிஞ்ச பொறவு தான் அவன வேலைக்கு வைக்கணும்.
சூட்டு யுகம் புவியைத் தாக்கி வேட்டு வைக்கத் தாவுது ! நாட்டு நடப்பு, வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! சூறாவளிப் புயல் எழுப்ப மூளுது ! பேய் மழைக் கருமுகில் சூழுது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை விரைவில் சிதைக்கப் போகுது ! கடல் மட்டம், வெப்பம் ஏறி கரைப் பகுதிகள் மூழ்குது ! மெல்ல நோய்கள் பரவி, நம்மைக் விரைவில் கொல்லப் போகுது ! தொடரும் மூன்றாம் உலகப் போர் !
நாம் அனுதினம் இராப் பகலாய்ச் சுவாசித்து உயிர்வாழும் சூழ்வெளிக் காற்றில் நிலவும் பிராண வாயு சுமார் 20%. நமக்குத் தேவையான அந்தக் காற்றில் பேரளவு கரிவாயும் [கார்பன் டையாக்சைடு] நைட்டிரஸ் ஆக்சைடு, ஃசல்ஃபர் ஆக்சைடு போன்ற கிரீன்ஹவுஸ் வாயுக்கள் கலந்து அதை மாந்தர் சுவாசித்தால் முதலில் பாதிக்கப்படுபவை மூளை, கண்கள், சுவாச உறுப்புகள், கிட்னி போன்று முக்கிய உடற் பகுதிகள். அதனால் இருதய நோய்கள் [Cardiovascular Diseases], ஆஸ்த்மா, சுவாச நோய்கள், புற்றுநோய், மூளை முடக்கம் [Stroke] போன்று பலவிதமான உடல் நோய்கள் உண்டாகும்.
++++++++++++++++++
Categories of human health consequences of climate change due to Greenhouse Gases Accumulations.
1. Asthma, Respiratory Allergies, and Airway Diseases
2. Cancer 3. Cardiovascular Disease and Stroke 4. Foodborne Diseases and Nutrition 5. Heat-Related Morbidity and Mortality 6. Human Developmental Effects 7. Mental Health and Stress-Related Disorders 8. Neurological Diseases and Disorders 9. Vectorborne and Zoonotic Diseases 10. Waterborne Diseases 11. Weather-Related Morbidity and Mortality
In addition to the working group, many scientists and staff from the following agencies contributed to the development and review of this white paper. Staff of the u.S. Global Change research Program provided logistical and technical support, but did not conduct a formal review.
Centers for Disease Control and Prevention • National Center for Environmental Health
National Institutes of Health • National Institute of Environmental Health Sciences • Fogarty International Center • Trans-NIH Working Group on Climate Change and Health
National Oceanic and Atmospheric Administration Office of the Secretary, Department of Health and Human Services
U.S. Environmental Protection Agency
U.S. Department of Agriculture
U.S. Department of State
+++++++++++++++++++++++++++++++++++++
The Interagency Working Group on Climate Change and Health Effects
The Interagency Working Group on Climate Change and Health
Christopher J. Portier, PhD (COOrdINATING LEAd AuTHOr) National Institute of Environmental Health Sciences
Kimberly Thigpen Tart, JD (COOrdINATING EdITOr) National Institute of Environmental Health Sciences
Sarah R. Carter, PhD AAAS Fellow, U.S. Environmental Protection Agency
Caroline H. Dilworth, PhD National Institute of Environmental Health Sciences
Anne E. Grambsch U.S. Environmental Protection Agency
Julia Gohlke, PhD National Institute of Environmental Health Sciences
Jeremy Hess, MD, MPH (LEAd AuTHOr) Centers for Disease Control and Prevention
Sandra N. Howard Department of Health and Human Services
George Luber, PhD (LEAd AuTHOr) Centers for Disease Control and Prevention
Jeffrey T. Lutz, PhD National Oceanic and Atmospheric Administration
Tanya Maslak, MPH (LEAd AuTHOr) U.S. Global Change Research Program, University Corporation for Atmospheric Research
Natasha Prudent, MPH Centers for Disease Control and Prevention
தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
-திருக்குறள் -444(பெரியாரைத் துணைக்கோடல்)
புதுக் கவிதையில்…
அறிவு ஒழுக்கம்
ஆகியவற்றில்
தம்மைக்காட்டிலும் உயர்ந்த
பெரியோரை
உறவாக்கி ஒழுகுதல்,
மன்னர்தம்
வல்லமை அனைத்திலும்
உயர்ந்த
முதன்மையானதாகும்…!
குறும்பாவில்…
தம்மைவிட அறிவாற்றலுடைப் பெரியோரை
உறவாக்கி ஒழுகுதல், அரசர்தம்
ஆற்றல் அனைத்திலும் முதன்மையானதே…!
மரபுக் கவிதையில்…
அறிவு ஒழுக்கம் ஆற்றலென
அனைத்திலும் தமைவிட உயர்ந்திருக்கும்
நெறியது மிக்கப் பெரியோரை
நன்றாய்த் தெரிந்து தேர்ந்தெடுத்தே,
உறவெனப் பழகித் துணையாக்கிடும்
உயர்ந்த ஒழுக்கம், மன்னர்தம்
நிறைந்த ஆற்றல் அனைத்தினிலும்
நிலையில் முதன்மை பெற்றிடுமே…!
அன்பான வணக்கங்கள். நெடியதோர் இடைவேளை. சில காலம், சில வாரங்கள் மடலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மீண்டும் உங்களுடன் இணைகிறேன். காலம் என்பது ஒரு புத்தகம் போன்றது அது யாருக்காகவும் காத்திருப்பதில்லை. தன் வேகத்தில் தனது புத்தகப் பக்கங்களை மூடிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. மூடப்படும் அந்தப் பக்கங்களுக்குள் எமக்குத் தெரிந்த, தெரியாத பல நிகழ்வுகளும் புதைபட்டுப் போகின்றன. ஆனல் நிகழ்ந்து விட்ட நிகழ்வுகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் தொடரும் அதன் பக்கங்களில் எழுதப்படும் பல அத்தியாயங்களுக்கு அடிப்படையாக அமைந்து விடுகிறது.
கடந்து சென்ற இந்த சில வாரங்களுக்குள் இங்கிலாந்து அரசியல் புத்தகத்தில் பல புதிய அத்தியாயங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வின் அதிர்வுகள் இங்கிலாந்தின் இத்தனை கால அரசியல் அமைப்பையே மாற்றி அமைத்து விடுமோ எனும் அச்சத்துடன் கூடிய ஆதங்கம் எழுந்திருக்கிறது. இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் பெரும்பான்மையான காலங்களில் இரண்டு மிகப்பெரிய கட்சிகள் தான் கோலோச்சி வந்திருக்கின்றன. வலதுசாரக் கொள்கைகளைக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியும், இடது சார்புக் கொள்கைகளைக் கொண்ட லேபர் கட்சிகளுமே இவையாகும் . இவற்றின் நடுவே எழுந்தும் , தாழ்ந்தும் நடமாடிக் கொண்டிருந்தது லிபரல் கட்சி.
1981ம் ஆண்டு லேபர் கட்சியின் போக்கு அதிதீவிரமான இடதுசார்பை நோக்கிப் போகிறது எனும் குற்றச்சாட்டில் நாலு மிதவாத பராளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறினர். ரோய் ஜென்கின்ஸ், சேர்லி வில்லியம்ஸ், டேவிட் ஓவன், பில் ரொஜேர்ஸ் எனும் நால்வரே அவர்கள் ஆவார்கள். இவர்கள் சோஸல் டெமகிரட்ஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார்கள். இவர்கள் 1983, 1987 பொதுத்தேர்தல்களில் லிபரல் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டுச் செய்து போட்டியிட்டார்கள். பின்பு 1988ம் ஆண்டு இரு கட்சிகளும் இணைந்து சோஸல் அன்ட் லிபரல் டெமகிரட்ஸ் எனும் கட்சியைத் தோற்றுவித்தார்கள். பின்பு சிறிது காலத்தில் இக்கட்சி லிபரல் டெமகிரட்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்றது.
இங்கிலாந்து அரசியல் அரங்கில் பல காலமாக இம்மூன்று கட்சிகளே முன்னிலை வகித்து வந்தன. இவை தவிர பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வழமை இருந்தாலும் அவைகள் எதுவுமே அரசியல் அரங்கில் எந்தவிதமான மாற்றங்களையும் கொண்டுவரும் வல்லமை படைத்தவையாக இருக்கவில்லை.ஈதர கட்சிகளில் சில மிகத்தீவிரவாதமான வலதுசாரப் பிரச்சாரங்களை முன்வைப்பவைகளாக இருந்தன. வெளிநாட்டு மக்களின் குடியேற்றத்துக்கு எதிரான பிரச்சாரமே ஓரிரு கட்சிகளின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இந்நிலையில் தான் ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து வகிக்கும் உறுப்பினர் அங்கத்துவத்தின் எதிர்மறையான பாதிப்புகள் மிகைப்படுத்தப்பட்ட நிலையில் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷம் கன்சர்வேடிவ் கட்சிக்குள் மிகத்தீவிரமாக ஒலித்தது.
இக்கோஷத்துக்கு வலுசேர்க்கும் வகையில் தீவிர வலதுசார இனத்துவேஷம் கொண்ட கட்சிகளும் ஜரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் குதித்து இவ்வங்கத்துவமே இங்கிலாந்தில் வெளிநாட்டவர் சுலபமாக வந்து குடியேற உதவுகிறது எனும் வகையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்தமை இங்கிலாந்தின் வெள்ளை இனத்தவர்கள் அதுவும் குறிப்பாக மூத்தோர்கள் மத்தியில் இனத்துவேஷ உணர்வுகளையும், தேசியம் என்கிற உணர்வின் பெயரில் தன்னாட்டு ஆர்வத்தையும் முடுக்கி விடத் தொடங்கியது. இத்தகைய உணர்வுகளுக்குத் தூபமிடும் வகையில் வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்கள் தம்மை இங்கிலாந்து வெள்ளைச் சமூகத்திடம் இருந்து அந்நியப்படுத்தி ஒரு குழுநிலை மனப்பான்மையோடு வாழும்முறை கைகொடுத்தது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.
எமது வாழ்வினை மேற்கொள்வதற்கு இங்கிலாந்து நாட்டினை தேர்ந்தேடுத்துவிட்டு அங்கு எமது வாழ்க்கைமுறைகளைத் திணிக்கும் முயற்சியில் பல சமூகங்கள் ஈடுபட்டதும் வெள்லை இனத்தவர் மனங்களில் தமது கலாச்சாரம் பறிபோவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது என்பதும் உண்மையே. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது கலாச்சாரமுறையில் வாழ்வதற்கு இங்கிலாந்து நாட்டு அரசியல் சட்டம் இடமளித்து இருக்கிறது. இத்தகைய ஒரு சகிப்புத் தன்மையை அதன் எல்லைக்கு இட்டுச் செல்லும் வகையில் பல வெளிநாட்டுக் குடியேற்றவாசிகள் நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மையே. இந்தப் பின்னனியில் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அதாவது ஜக்கிய இராச்சியம் வெளியேற வேண்டும் எனும் கோஷத்துக்கு ஆத்ரவு பெருகிக் கொண்டு வந்தது. இந்த ஜரோப்பிய ஒன்றியப் பிரச்சனை தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் நாலு தலைவர்களைக் காவுகொண்டதுகீதனிடையே கன்சர்வேடிவ் கட்சியின் போக்கில் அதிருப்தி கொண்ட உறுப்பினரான ஒரு செல்வந்தரான நைஜல் வரா௺ஜ் என்பவர் யூனைட்டட் கிங்டொம் இன்டிப்பென்டன்ஸ் கட்சியத் தோற்றுவித்தார். இக்கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேர்தல்களில் கன்சர்வேடிவ் கட்சியின் வாக்குகளை அபகரிக்கத் தொடங்கியது. தமது கட்சிக்குள் இருக்கும் இம்முரண்பாட்டை தீர்க்கவில்லையானல் நைஜல் வராஜ் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட டேவிட் கமரன் உண்டு இல்லை என்று தீர்மானிப்பதற்காக அடுத்த பொதுத்தேர்தலில் டேவிட் கமரன் தாம் வெற்றி பெற்றால் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா, இல்லையா? எனும் தீர்வுக்கான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவோம் என்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய கொள்கையாக முன்மொழிந்து தேர்தலில் வெற்றியும் பெற்றார்
விளைவு!
2016ம் ஆண்டு நடைபெற்ற ப்றெக்ஸிட்டுக்கான பொதுஜன வாக்கெடுப்பு. சுமார் ஒரு மில்லியனுக்கு மேலான வாக்குகள் வித்தியாசத்தில் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களிக்கப்பட்டது. இதை நைஜல் வராஜ் அவர்கள் தனது வெற்றியாகவே கொண்டாடினார். அதைத் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரச்சாரத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட யூகிப் எனும் நைஜல் வராஜ் அவர்களின் கட்சி தனது செயல்பாட்டை முடக்கி செல்வாக்கிழந்தது. இவ்வெளியேற்றத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்த அப்போதைய பிரதமர் டேவிட் கமரன் இந்த வெளியேற்றத்தை முன்னெடுக்கும் தகுதியை இழந்து விட்டேன் என்று கூறி பிரதமர் பதவியிலிருந்து விலகிய டேவிட் கமரன் வர்கள் அரசியலிருந்தே முற்றாக ஒதுங்கி விட அவரது இடத்துக்கு அம்மையர் திரேசா மே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். நாட்டு மக்கள் தமக்கு இந்த ப்ரெக்ஸிட் வெளியேற்றத்துக்கான முழு ஆணையைத் தரவேண்டும் என எதிர்பார்த்து தமது கட்சி முன்னனி உறுப்பினர்களின் கருத்துக்கு முரணாக ஒரு பொதுத்தேர்தலை நடத்தி தமது கட்சிக்கு இருந்த பெரும்பான்மை பலத்தைக் குறைத்ததினால், ஜக்கிய இராச்சியத்தின் அங்கமான் வட அயர்லாந்தின் வலதுசார தீவிரவாதக் கட்சியான டெமக்ரட்டிக் யூனியன் கட்சியின் தயவுடன் அரசாங்கம் அமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதுவிதமான உடன்படிக்கையுமின்றி வெளியேற வேண்டும் என்பதுவே கன்சர்வேடிவ் கட்சிக்குள் இருந்த சிறுபான்மையான் தீவிரவாத பாராளுமன்ற உறுப்பினர்களின் வாதம். இதையே நைஜல் வராஜ் எனும் வணிகத்திலிருந்து அரசியலுக்குத் தாவிய நைஜல் வராஜ் அவர்களும் முன்மொழிந்தார். ஆனால் இங்கிலாந்தின் பல முன்னனித் தொழில் தலைவர்களும், பல நிதி நிறுவனங்களும் ஜரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்படிக்கை செய்து ஒழுங்கான வகையில் வெளியேறுவது ஒன்றே இங்கிலாந்தின் பொருளாதாரச் சீர்குலைவைத் தடுக்கும் என்று வலியுறுத்தினார்கள். இதையே பிரதமர் தெரேசா மேயும் அவரது மந்திரி சபையின் பெரும்பான்மை அமைச்சர்களும் நம்பினார்கள்.
விளைவாக எதுவித உடன்படிக்கையுமின்றி வெளியேறுவது எனும் கொ:ள்கையைக் கைவிட்டு தெரேசா மே அவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்துடன் மிக நீண்ட பேச்சுவார்த்தைகளின் வழி ஒரு உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டார்கள். இதுவே ஜக்கிய இராச்சியத்துக்கு தம்மால் அளிக்கக்கூடிய அதிகூடிய சலுகை என்பதில் ஜரோப்பிய ஒன்றியம் உருதியாக இருந்தது. இதற்கு மேல் எமக்குச் சாதகமாகப் எதையும் பெற முடியாது இது எமது அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி நகர்வதற்கு எமக்கு உகந்தது என்று பிரதமர் இவ்வுடன்படிக்கையை ஆதரித்து பாரளுமன்றத்தின் அனுமதிக்காகப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டு சரித்திரத்தில் இதுவரை காணாத வகையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இவ்வுடன்படிக்கையை எதிர்க்கட்சிகள் உட்பட பிரதமரின் கட்சியில் இருந்த தீவிரவாத ஜரோப்பிய ஒன்றியத்துக்கெதிரான உறுப்பினரகளோடு அரசாங்கத்தில் இணைந்திருந்த வட அயர்லாந்து பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தமையே இத்தோல்விக்குக் காரணம். அன்றிலிருந்து ஆரம்பித்தது பிரதமர் தனது பதவியை இராஜினாமச் செய்ய வேண்டும் எனும் கோஷம். ஆயினும் தனது கொள்கையில் உறுதியாக இருந்த பிரதமர் தனது செயற்பாட்டில் தீவிர நம்பிக்கை கொண்டு சிறு சிரு மாற்றங்களுடன் மூன்று முறை இவ்வுடன்படிக்கையை பாரளுமன்றத்தின் முன் வைத்து மூன்று முறையும் தோல்வியுற்றார்.
இங்கிலாந்துப் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோட்பாடுகளை அதன் எல்லைகள் வரை நகர்த்தி பரிசோதிக்க ஆரம்பித்தது. எதுவித உடன்படிக்கையுமின்றி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம் விலகுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனும் தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியடைந்தது. இது பிரதமரை மேலும் சிக்கலுக்குள் தள்ளியது. எவ்வகியிலாவது ஜரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கையின் வழிதான் விலகுவது எனும் முடிவுக்கு பிரதமரைத் தள்ளியது. அவரது கட்சிக்குள் இருந்த தீவிரவாத உறுப்பினர்கள் இதனால் கொதிப்படைந்தனர் ஏனெனில் ஜரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்பை அறவே துண்டிக்க வேண்டும் என்பதுவே அவர்களது கொள்கை. இவர்களோடு நைஜல் வராஜ் என்பவரும் சேர்ந்து பிரதமரின் செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார். ஜனநாயக மரபின்படி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என ஆணையிட்ட மக்களின் தீர்ப்பை ஏறக்குறைய மூன்று வருடங்களாகியும் நிறைவேற்றவில்லை எனும் வாதத்தை முன்வைத்து பிரதமருக்கு எதிரான ப்ரச்சாரத்தை முன்னெடுத்த நைஜல் வராஜ் போன்றவர்களின் வாதம் வலுப்பெற்றது. நைஜல் வராஜ் “பிரெக்ஸிட்” எனும் கட்சியை ஆரம்பித்தார்.
எதற்காக என்கிறீர்களா?
2016 சர்வஜன வாக்கெடுப்பின் பிரகாரம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது எனும் முடிவை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று கூறி ஜக்கிய இராச்சியம் தாம் 2019 மார்ச் மாதம் 29ம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகிறோம் என்று சட்டப்பிரகாரம் அறிவித்தது. அப்படி வெளியேறியிருந்தால் கடந்த மாதம் நடைபெற்ற ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தல்களில் ஜக்கிய இராச்சியம் பம்குபற்ற வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆனால் நீண்டு கொண்டிருக்கும் பிரச்சனையால் வெளியேற வேண்டிய காலக்கெடுவுக்கு அவகாசம் வேண்டி இத்திகதி 2019 அக்டோபர் மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நடந்து முடிந்த ஜரோப்பிய தேர்தலில் ஜக்கிய இராச்சியம் பங்கு பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமானது. மக்களின் எதிர்பார்ப்பு ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதுவித தொடர்புமில்லாமல் வெளியேறுவதே என்பதை தமக்கு அவர்கள் தரும் ஆதரவின் மூலம் நிரூபிக்கப் போவதாக நைஜல் வராஜ் கூறி அதற்காக இப்புதுக்கட்சியை ஆரம்பித்தார்.
இன்றைய இங்கிலாந்து அரசியல் அரங்கின் முன் முக்கியமாக தலைவிரித்தாடும் கேள்வி கரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதா? இல்லை தொடர்ந்து நிலைபெறுவதா? என்பதுவே. இதனை எந்தக் கட்சிக தெள்ளத்தெளிவாக வலியுறுத்துகின்றனவோ அக்கட்சியே மக்களின் ஆதர்வைப் பெறும் எனும் நம்பிக்கை நிலவியது. இங்கு நைஜல் வராஜ் அவர்கள் ஆரம்பித்த கட்சி அனுகூலமான் நிலையிலிருந்து. தெள்ளைத் தெளிவாக எதுவித உடன்படிக்கையுமில்லாமல் அக்டோபர் 31ம் திகதி வெளியேற வேண்டும் என்பது ஒன்றே அவர்களது கொள்கையாகவிருந்தது ஆனால் ஜரோப்பிய ஒன்ரியத்துடனான உறவு சுமுகமான் முறையில் நீடிக்க வேண்டும் எனும் கருத்தை தெளிவாக முன்வைத்த கட்சிகள் இரண்டு , மூன்றெனப் பிளவு பட்டிருந்தன. இதுவரை அரசியல் அரங்கின் முக்கிய கட்சிகளாக இருந்த கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது நிலைப்பாட்டில் தெளிவாக இல்லாததினால் கருத்துக் கணிப்புகளில் மிகவும் ஓரங் கட்டப்பட்டிருந்தார்கள்.
நடந்து முடிந்த ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதையே ஊர்ஜிதப்படுத்தின;. நைஜல் வராஜ் அவர்களின் பிரெக்ஸிட் கட்சி அதுகூடிய எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெர்ற கட்சியாக வலுப்பெற்றது இருப்பினும் ஜரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் எனும் கருத்தை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளைக் கூட்டினால் அதுவே அதிக வாக்குகளைக் கொண்டிருந்தது இருப்பினும் இவை பல கட்சிகளுக்கிடையே பிரிக்கப்பட்டதினால் அவர்களுக்கு கிடைத்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
இத்தேர்தல் முடிவு எமது பிர்தமர் தெரேசா மே அவர்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. அவரது கட்சியின் தலைமைத்துவத்தை நிர்ணயிக்கும் சபை அவர் எப்போது பதவி விலகுவார் என்று அறிவிக்கும்படி அவருக்கு நிர்ப்பந்தம் கொடுக்க ஆரம்பித்தது. இரும்பு மனுசியாக இருந்த பிரதமர் தளர ஆரம்பித்தார். தான் யூன் மாதம் 7ம் திகதி தனது கட்சியின் தலைமைபதவியிலிருந்து விலகுவதாகவும் அடுத்த தலைவரின் தெரிவு வரை பிரதமராக நீடிப்பதாகவும் கண்ணிருடன் அறிவித்தார். இதுவரை சுமார் 11 கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், சில அமைச்சர்கள் உட்பட தாம் தலைமப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். யார் புதிய பிரதமர் ஆவார்கள் என்பது யூலை மாத இறுதியில் நிர்ணயிக்கப்படும்.
இந்த மார்றங்கள் இன்றைய ஜக்கிய இராச்சியத்தின் அரசியல் நிலையை எந்தத் திசையை நோக்கி செலுத்துகிறது? இதுவரை மாறி, மாறி அரசமைத்து வந்த கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது செல்வாக்கினில் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றன. தேசியம், நாட்டுப்பற்று எனும் கோஷங்களை முன்வைத்து தலைதூக்கியிருக்கும் நஜல் வராஜ் அவர்க:ளுடைய பிரெக்சிட் எனும் கட்சி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. தாம் எதிர்பார்த்தவகையில் ஜக்கிய இராச்சியத்தின் ஜரோப்பிய உன்ரியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கை இடன்பெறவில்லையானல் தாம் இங்கிலாந்தின் பொது அரசியலில் ஒரு புது விசையாக இயங்கப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார். இவரது இந்த தேசியம், நாட்டுப்பற்று எனும் கோஷம் வெளிநாட்டவரின் குடியேற்றத்தைத் தடுப்பதை முக்கியமாக்க முடிவெடுக்குமானல் அதுவே இனத்துவேஷமாக மாறும் வாய்ப்புகள் பல உண்டு.
இந்தச் சூழலில் ஜக்கிய இராச்சியத்தில் புலம்பெயர் வாழ்க்கையை மேற்கொண்டுவரும் பல சமூகத்தினரின் பங்களிப்புகள் எவ்வகையில் இந்த ரசியலில் இருக்கப் போகிறது என்பதுவே முக்கியம். சமூகங்களுக்கிடையிலான பிரிவினைகளை முதன்மைப் படுத்தும் வகையில் கலாச்சாரப் பாதுகாப்பு எனும் நடவடிக்கையில் ஒதுச் சமுதாயத்திலிருந்து தம்மை அந்நியப்படுத்தும் வகியிலான குழுநிலை மனோபாவங்கள் தலைதூக்கப் போகின்றதா? என்பது முக்கியமான கேள்வியாகிறது. எமது அடையாளங்களைத் தொலைக்காமல் அதேசமயம் எமது நடவடிக்கைகள் சிரிதாக சுவாலை விட்டுக் கொண்டிருக்கும் இனத்துவேஷத்துக்கு எண்ணெய் வார்க்காத வகையில் இருக்குமாறு செய்வதற்கு ஒவ்வொரு சமூகத்திலும் அதன் காவலர்களாகத் தம்மை இனங்காட்டி நடந்து கொள்பவர்கள் எவ்வகையில் பங்க;இப்புச் செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
`மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு கணவன் செவிப்புலன் அற்றவராகவும், மனைவி பார்வையற்றவளாகவும் இருக்க வேண்டும்’. இது மனைவியுடன் ஒத்துப்போகத் தெரியாத ஒருவரின் கருத்தாக இருக்கவேண்டும். இந்த நிலை அவசியமென்றால், எவருமே முழுமையாக இருக்கமுடியாதே!
கதை
“`நான் முன்னுக்கு வந்திருப்பது நீங்கள் எனக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தால்தான்! என்று தினமும் ஒருமுறை என் கணவரிடம் கூறுவேன்,” என்று என்னிடம் தெரிவித்தாள் நான்ஸி கூ (Khoo). சமூக சேவகியான அவள் குடும்பத்தில் வன்முறையைப் பொறுத்துப்போகும் பல பெண்களைச் சந்தித்திருக்கிறாள்.
எத்தனை பெண்கள் இவளைப்போல் தம் கணவன்மார்களிடம் நன்றியுடன் கூற முடியும்!
நான்ஸி வாரத்தில் மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அதைத் தவிர, இசையில் தேர்ந்தவள். மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வாள். நிலையான உத்தியோகம் வேறு. இப்படியாக பலவற்றிற்கும் நேரத்தைச் செலவழித்தால், அவளுடைய இரண்டு குழந்தைகளுக்கும், கணவருக்கும் போதிய நேரத்தை ஒதுக்க இயலுமா?
சிரித்தபடி, அதையும் அவளே கூறினாள்: “உத்தியோகத்திற்காக 50%, பொதுநல சேவைக்கு 30%, வீட்டு வேலைக்கு 10%. குழந்தைகளுக்காகக் கொஞ்சம், மீதி 1% கணவருக்கு!”
தன் ஒவ்வொரு தேவையையும் குறிப்பாலேயே புரிந்துகொண்டு, மனைவி அவைகளை நிறைவேற்றவில்லையே என்று ஆத்திரப்படும் ரகமில்லை அவளது கணவர்.
மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருந்தால்தான் தானும் நிம்மதியாக இருக்கலாம் என்ற விவேகம் அவருக்கு இருந்தது. குழந்தைகளை வெளியில் அழைத்துப்போவது, பாடம் கற்பிப்பது எல்லாவற்றையும் விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ஒரு நல்ல கணவர் நல்ல மனைவியாகவும் இருப்பார்.
`ஆண்’ என்றால் முரட்டுத்தனமாக இருக்கவேண்டும் என்று அவர் எண்ணவில்லை. `நீ களைத்துப்போய் வந்திருக்கிறாயே! இன்று வெளியில் போய் சாப்பிடலாமா? இல்லாவிட்டால், நான் ஏதாவது செய்யட்டுமா?’ என்று கரிசனப்படுவார்.
அத்துடன், தான் ஒரு நாளில் செய்வது எல்லாவற்றையும் அன்றே நான்ஸிதான் அவருடன் பகிர்ந்துகொள்கிறாளே! அவள் கூறுவதையெல்லாம் உன்னிப்பாகக் கேட்டுவிட்டு, தகுந்த ஆலோசனையும், உதவியும் செய்யவும் அவர் தயங்கியதில்லை.
தீராத நோயால் அவதிப்பட்ட ஒரு மாதுவிற்கு மரணபயம், அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று நான்ஸி தன் குழப்பத்தை வெளியிட்டாள் ஒரு சமயம்.
`உனக்கே சாவு பயம்! இந்த லட்சணத்தில் நீ மற்றவர்களுக்கு அறிவுரை கூறப்போகிறாயா!’ என்ற ரீதியில் கேலி செய்தால், அடுத்த முறை நான்ஸி அவரிடம் எதுவும் சொல்வாளா?
அடுத்த நாளே, புத்தகசாலைக்குச் சென்று, அது சம்பந்தமான புத்தகங்கள் சிலவற்றை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார் கணவர்.
அவருக்கே அந்த விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், `நீ இப்படிச் செய்திருக்க வேண்டும்!’ என்பதுபோல் கூறினால், அது அவளைத் தாழ்த்துவதுபோல் ஆகிவிடும் என்று அவர் அறிந்திருந்தார். அதனால்தான் மறைமுகமான உதவி. நன்றியுடன் அதை ஏற்றவள், கணவருக்கும் மதிப்புக் கொடுத்து நடந்தாள்.
மனைவிக்கு இருப்பதுபோல் அவருக்கும் சிலவற்றில் தனிப்பட்ட ஆர்வம் இருக்காதா! மிஸ்டர் கூ நண்பர்களுடன் விளையாடிவிட்டு நேரங்கழித்து வீடு திரும்பினால், அவள் சந்தேகப்படாது, `இன்று எப்படி விளையாடினீர்கள்?’ என்று அக்கறையுடன் விசாரிப்பாள்.
இப்படி ஒற்றுமையாகச் செயல்படும் இன்னொரு தம்பதிகள் எனக்கு கோலாலம்பூரில் பழக்கம். அவர்கள் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மனைவி மரியாதான் எனக்குத் தோழி. அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது, கணவர் நெடுநாட்கள் பழகியதுபோல் முகமெல்லாம் சிரிப்பாக சில சிற்றுண்டி வகைகளைக் கொண்டுவைத்தார்.
மனைவி பிற பெண்களுடன் நெருக்கமாகப் பழகினால்கூட தனிமையாக உணர்ந்து, தம் ஆட்சேபத்தை எப்படி எப்படியோ தெரிவிக்கும் ஆண்களில் இவர் வித்தியாசமானவர்.
மரியா அப்படியொன்றும் – தமிழ் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளைப்போல் – நிறைய வளைவுகளுடன் இருக்கவில்லை. சோனியாக, பன்னிரண்டு வயதுப் பையன்போல் இருப்பாள். நான் அவர்கள் வீட்டுக்குப் போகும்போதெல்லாம், களிப்புடன் ஓடி வருவாள். பொதுவாகவே, மனிதர்கள் என்றால் அவளுக்கு உயிர். இது அவருக்குப் புரிந்தது. பெண்’ என்றால் அவளுடைய உருவம் மட்டுமில்லை என்பதை உணர்ந்தவர் அவர்.
ஸ்வீடன் நாட்டவர் எது நிலையானது, எது வாழ்க்கைக்கு முக்கியம் என்று உணர்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சிக்கும் குறைவில்லை.
இம்மாதிரியான புரிந்துணர்வு இருக்கும் குடும்பங்களில் மற்றவரை இழிவுபடுத்தாது, தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
`நீங்கள் என்னை மற்றவர் முன்னிலையில் திட்டினாலோ, பழித்தாலோ எனக்குப் பிடிக்கவில்லை,’ என்று திட்டவட்டமாகக் கூறினால், நிலைமை மாறக்கூடும். அடுத்த முறை, சற்று யோசிப்பார். இருவருக்குமே கருத்துச் சுதந்திரம் இருக்கும்.
சுதந்திரம் என்பது..
`சுதந்திரம்’ என்றால் மனம்போனபடி, சமூகம் ஏற்காததையெல்லாம் செய்வதில்லை. ஒருவரது திறமைக்கும் ஆர்வத்துக்கும் ஏற்றபடி நடந்துகொண்டு, பிறருக்குத் தொந்தரவோ, தீமையோ விளைவிக்காது இருத்தல் எனலாம்.
ஓர் இளம்பெண் கடற்கரைப் பகுதியில் இடுப்புக்குமேல் எதுவும் அணியாது நடந்துகொண்டிருந்தபோது, இங்கு காவல்துறையினரால் பிடிக்கப்பட்டாள். `ஆண்களும் இப்படித்தானே நடக்கிறார்கள்! நீங்கள் ஏன் அவர்களைப் பிடிப்பதில்லை?’ என்ற அவளுடைய வாக்குவாதம் செல்லவில்லை.
பெண்ணியம், தனி மனித சுதந்திரம் என்றெல்லாம் பேசலாம். ஆனால், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டாமா?
படிக்காத பெண்களும் படித்த பெண்களும்
பல ஆண்களுக்கு மனைவி கூறுவதைக் கேட்கவே அலுப்பு ஏற்படும். `அறிவார்த்தமாக இவள் என்ன சொல்லிவிடப்போகிறாள்!’ என்ற அலட்சியம்.
“நீ சும்மா இரு. நீ படிக்காத முட்டாள்!”
தாம் பெற்ற ஒரே மகளின் திருமண விஷயத்தில் மனைவியின் குறுக்கீட்டை விரும்பாத பொன்னையா அவள் எது சொன்னாலும் கேட்கத் தயாராக இல்லை.
`நான் படிக்காதவள்னு தெரிஞ்சுதானே கட்டிக்கிட்டீங்க?’ என்று அவளுக்குக் கேட்கத் தெரியவில்லை.
அவள் மனம் அவமானத்தாலும், தன் கையாலாகாத்தனத்தாலும் நொந்தது. அது திசை மாறியது. வேலைக்கு வந்த இடத்தில் அந்த ஆத்திரத்தைக் காட்டினாள்.
இவளைப் போன்றவர்களுக்கு வீட்டிலும் நிம்மதி கிடையாது; வெளியிலும் மகிழ்ச்சியைத் தாமே குலைத்துக்கொள்கிறார்கள்.
இளம் வயதில் திருமணமான பெண்ணுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியவே வாய்ப்பு இருந்திருக்காது. கணவனுக்குக் கீழ்ப்படிந்து, புக்ககத்தில் எல்லா இடர்களையும் பொறுத்துப்போவதுதான் நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்பதுபோல் நடப்பாள்.
பத்திரிகை ஒன்றில் ஒரு பெண்மணி எழுதியிருந்தாள், “நாங்கள் (எங்கள் காலத்தில்) கணவரிடம் அடிவாங்கினோம், மாமியாரின் ஏச்சுப்பேச்சுகளை சகித்துக்கொண்டோம். பின்பு, நாத்தனார், மைத்துனர் ஆகியோருக்குத் திருமணம் செய்துவைத்தோம். அதனால்தான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறோம்”.
கணவனிடம் அடிவாங்கியது, அதைப் பொறுமையாக ஏற்றது, இவற்றையெல்லாம் பெரிய சாதனைபோல் அவள் எழுதியிருந்தது எனக்கு எரிச்சலை ஊட்டியது.
“கணவர் அடிக்கும்போது உங்களுக்குச் சிறிதுகூட மனவருத்தம் ஏற்படவில்லையா?” என்று எழுதிக் கேட்டேன்.
அவளுக்கு என்மேல்தான் கோபம் வந்தது. வழக்கமாக அனுப்பும் வாழ்த்து அட்டைகள் நின்றுபோயின!
நன்கு படித்து, உத்தியோகத்திற்குப் போகும் பெண் திருமணம் செய்துகொண்டால் சுதந்தரத்தை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகிறாள். அப்படியே மணவாழ்வில் துணிந்து இறங்கினாலும், மனைவி தன்னை மிஞ்சிவிடுவாளோ என்ற தடுமாற்றம் ஆணுக்கு. அவள் மேலே போகப்போக, தானும் முயன்று, மேலே போக நேரிடுமே! அவள் மட்டும் முன்னேறிவிட்டால், நண்பர்கள் தன்னைக் கேலி செய்வார்களே என்ற பயம் வேறு.
`அவளைப் பார்! எப்படி பிறர் பாராட்டும்படி இருக்கிறாள்!’ என்று எவளையோ புகழ்ந்து, மனைவியை மறைமுகமாக மட்டும் தட்டுபவர் யோசிப்பதில்லை – தான் பக்கபலமோ, ஊக்கமோ அளிக்காமல் போனதுதான் மனைவி முன்னுக்கு வரத் தடையாக இருந்திருக்கிறது என்ற உண்மையை.
அகமொழிகளைத் தொடர்ந்து, என் யோசனைகள், தீர்வுகள், புத்தாக்கச் சிந்தனைகள் சிலவற்றை அகவழி என்ற பெயரில் எழுதி வந்தேன். இவற்றை முறையாகத் தொகுக்கவில்லை. எனினும் இப்படியான யோசனைகள் இதுவரை முப்பதாவது வந்திருக்கும் என்ற நிலையில் இனி எழுதும் யோசனைகளை அகவழி 31 என்ற எண்ணிலிருந்து தொடங்குகிறேன். நீங்கள் தீர்வு காண விரும்பும் சிக்கல்களை எனக்குத் தனி மடலாக (annakannan@gmail.com) அனுப்புங்கள். தனிப்பட்ட யோசனை தேவை எனில், பொதுவில் பகிர வேண்டாம் என்ற குறிப்புடன் உங்கள் சிக்கலை அனுப்புங்கள். அதைத் தீர்க்க, எனக்கு ஏதும் யோசனை தோன்றினால் சொல்வேன்.
========================
அகவழி 31
பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுடன் பேசி, சமரசம் கண்டு, எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி கூறியுள்ளார். இவர்களைச் சமாதானப்படுத்த, ஒரு யோசனை.
எடுக்கப்படும் நிலத்தின் சந்தை மதிப்புக்கு ஈடாகத் தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அங்குள்ள தென்னை, மாட்டுக் கொட்டகை உள்பட ஒவ்வொன்றும் மதிப்பினைக் கணக்கிட்டு இந்தத் தொகை கணக்கிடப்படும் என்றும் அறிவித்துள்ளது. தொகை வேண்டாம் என்பவர்களுக்கு, அவர்களின் நிலத்துக்கான சந்தை மதிப்புக்கு ஈடாக, வேறு இடத்தில் மாற்று இடம் வழங்கலாம். தமிழகம் முழுவதும் அரசு வசம் உள்ள நிலங்களை ஓர் இணையத்தளத்தில் பட்டியலிட்டு, இவற்றிலிருந்து தேர்ந்தெடுங்கள் என்று கூறலாம். விவசாயி தேர்ந்தெடுக்கும் நிலத்துக்கான பத்திரப் பதிவு இலவசம் என்று கூறலாம். அங்கே விவசாயம் செய்ய விரும்பினால், முதல் ஓராண்டுக்கு அதற்கான விதைகள், நாற்றுகள், மரக் கன்றுகள் இலவசம் என்று அறிவிக்கலாம். மேலும், விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து, சிறப்பு வசதிகளை ஏற்படுத்தலாம். இதன் மூலம், பாதிக்கப்படும் விவசாயிகள் உரிய மாற்று இடத்தைப் பெற்று, தம் தொழிலைத் தொடரலாம். மக்கள் நலத் திட்டங்களையும் தடையின்றி நிறைவேற்றலாம். (அகவழி 31)
தமிழ் மொழியின் சிறப்பைப் போற்றி வளர்த்த பெருமக்கள் பலருள், குறிப்பிடத்தக்கவர் தேவநேயப் பாவாணர் ஆவார். ஞானமுத்து – பரிபூரணம் அம்மையார் இணையரின் பத்தாவது மகனாக, 1902-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் கோமதிமுத்துபுரத்தில் பிறந்தார் பாவாணர். இவரின் தந்தையும் தாயும் அடுத்தடுத்து இறந்துபோகவே, யங் துரை என்ற பள்ளித் தாளாளரின் உதவியுடன் தொடக்கக் கல்வியைப் முடித்திருக்கின்றார். பிறகு, வட ஆர்க்காட்டில் உள்ள தம் சகோதரியின் வீட்டில் தங்கிப் படித்திருக்கின்றார். தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லட் (kellet) உயர்நிலைப் பள்ளி, சென்னை கிறித்தவப் பள்ளி உள்ளிட்டவற்றில் தம் படிப்பைத் தொடர்ந்தார் அவர்.
1921-ஆம் ஆண்டு ஆசிரியப் பணிக்குப் பாவாணர் செல்லவிரும்பியபோது, அவரது ஆசிரியரான, பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, “தேவநேசக் கவிவாணன்” என்று குறிப்பிட்டிருந்தார் அவ் ஆசிரியர். பின்னாளில் அப்பெயரையே தமிழ்ப்படுத்தி, ’தேவநேயப் பாவாணர்’ என்று வைத்துக்கொண்டார் பாவாணர் என்றறிகின்றோம்.
1926-ஆம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் கலந்துகொண்டார் பாவாணர். அத் தேர்வில் வெற்றிபெற்றவர் அவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்!
`தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ எனப் போற்றப்படும் மறைமலை அடிகளார் வழிநின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு ஆழ்வேராய் அடிமரமாய் இருந்து சிறப்பாக உழைத்தவர் பாவாணர். அவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கண்ட ’தமிழ்த் தேசியத்தின்’ தந்தை என்று அழைக்கப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார், ’மொழிஞாயிறு’ என்னும் அழியாப் பட்டத்தை வழங்கிப் பாவாணரைச் சிறப்பித்தார்.
இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று, சொல்லாராய்ச்சிகள் பல செய்தபின்னரே தமிழ்மொழி மிகவும் தொன்மையானது என்ற கருத்தை முன்வைத்தவர் பாவாணர். உலக மொழிகளில் மூத்ததும், மிகப்பழங்காலத்திலேயே செம்மையான வடிவம் பெற்றதும் தமிழாகும் என்றும், திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி தமிழ் எனவும் வாதிட்டவர் பாவாணர்.
அவர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள நூல்களில் சில:
1. ஒப்பியன் மொழிநூல் 2. தமிழ் இலக்கிய வரலாறு 3. தமிழ் வரலாறு 4. தமிழர் வரலாறு 5. தமிழர் திருமணம் 6. தமிழர் மதம் 7. திரவிடத்தாய் 8. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் 9. வடமொழி வரலாறு 10. வேர்ச்சொற் கட்டுரைகள் 11. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் 12. The primary classical language of the world.
தமிழ் இயல்பாய்த் தோன்றிய மொழியாதலானும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே திரிந்து செல்லுதலானும், மிகத் தொன்மை வாய்ந்தது ஆதலானும், அது தோன்றியது குமரிநாடே என்று துணியப்படும்.” எனத் ’திரவிடத்தாய்’ எனும் தம்முடைய நூலின் முன்னுரையிலேயே குமரிநாட்டுக் கொள்கையையும், ஞால முதன்மொழி தமிழே எனும் தம் கொள்கையையும் உறுதியாய்ப் பதிவுசெய்கிறார் பாவாணர். ’பவளம்’ என்பது ’ப்ரவளம்’ என்று வடமொழியில் திரிந்தது போலவே ’தமிழம்’ என்னுஞ் சொல் த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம் திராவிடம் என்றானது என விளக்குகின்றார்.
தம்முடைய தமிழர் மதம் என்ற நூலில் மாந்தன் நாகரிகமடைந்து அறிவுவளர்ந்து பண்பாடுற்ற பின்னர், மறுமையும் கடவுளுண்மையுங் கண்டு, பல்வேறு மதங்களையும் சமயங்களையும் வகுத்தது அறிவு வளர்ச்சியேயாகும். மக்கள் மனப்பாங்கும் அறிவுநிலையும் பல்வேறு வகைப்பட்டிருப்பதால், மத சமயங்களும் பல்வேறாயின. அறிவுவளர்ச்சி யென்னும் பெயருக்கு முரணாக, பல்வேறு மூடப்பழக்கங்களும் கொள்கைகளும் மதங்களிற் கலந்திருப்பதும் மறுக்கமுடியாத உண்மையே. அவை பெரும்பாலும் தன்னலக்காரர்களின் சூழ்ச்சியால் ஏற்பட்டவை. இக்கால அறிவு நிலைக்கேற்ப, அவற்றை இயன்றவரை நீக்கிக் கொளல் வேண்டும் என்று தெரிவிக்கும் பாவாணர், மக்களின் அறிவுநிலைக் கேற்ப, மதம், (1) சிறுதெய்வ வணக்கம் (2) பெருந்தேவ மதம், (3) கடவுள் சமயம் என மூவகைப்படும்.
சிறுதெய்வங்களுக்கு உணவு படைத்துக் காவு கொடுப்பது, சிறுதெய்வ வணக்கம்; சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் இறைவனை நாள்தோறும் வழிபட்டு, உயிர்க்கொலை நீக்கிக் காய்கனிமட்டும் படைத்து, அந்தந்த மத அடையாளந் தாங்கி, இருதிணை உயிர்க்கும் தீங்கு செய்யாது இயன்றவரை நன்மையே செய்து ஒழுகுவது பெருந்தேவ மதம்; எங்கும் நிறைந்திருக்கும் இறையை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படையலாயிட்டு, முக்கரணமுந் தூய்மையாகி, இல்லறத்திலோ துறவறத்திலோ நின்று, இயன்றவரை எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்து, வீடுபெற ஒழுகுவது, கடவுள் சமயமாகும். இம்மூவகை மதநிலையையும், கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்பே குமரிநாட்டுத் தமிழ்மக்கள் கொண்டிருந்தனர்.
ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்த காலம் தோரா. கி.மு. 1500. அவர்களுடைய மதம் கொலைவேள்வியை முதன்மையாய்க் கொண்ட சிறுதெய்வ வணக்கமே ஆகும். தமிழரொடு தொடர்புகொண்ட பின்னரே, சிவ மதத்தையும் திருமால் மதத்தையும் அவர்கள் தழுவினர். ஆதலால், அவர்களின் வேதாகம இதிகாச புராணக் கதைகளையும் புரட்டுகளையும் நம்பி, அவையே சிவநெறிக்கும் திருமால் நெறிக்கும் அவற்றின் சித்தாந்தங்களுக்கும் மூலமெனக் கூறுவது, சற்றும் பொருத்தமற்ற கருத்தாகும் என்கின்றார்.
தமிழர் திருமணம் எனும் தம்முடைய நூலில் பழந்தமிழர் மணம் குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கும் பாவணர், ஓர் ஆடவனும் பெண்ணும், கணவனும் மனைவியுமாக இல்லறம் நடாத்த இயைந்து ஒன்றுசேர்வதே மணமாகும். மணத்தல் என்றால் கலத்தல் அல்லது கூடுதல் என்று பொருள். மணவாழ்க்கைக்கென்றே இறைவன் மக்களை ஆணும் பெண்ணுமாய்ப் படைத்திருப்பதாலும், அதனிடத்து மிகுந்த அறப் பொறுப்புள்ளமையாலும், வாழ்க்கைத் துணைவர் இருவரும் தெய்வத்தின்முன் அல்லது தெய்வத்தின்பேரில் பலரறிய ஆணையிட்டுக் கூடுவதாலும், மணம் தெய்வத்தன்மை பெற்றுத் திருமணம் எனப்பெற்றது.
முற்காலத்தில், எல்லா ஆடவரும் பெண்டிரும், பருவம் வந்தபின் விலங்கும் பறவையும்போல மணச் சடங்குகளின்றியே கூடி வாழ்ந்து வந்தனர். அப்போது சில ஆடவர், தாம் சேர்ந்திருந்த மகளிரைக் கைவிட்டும், அவர் வாழ்வைக் கெடுத்தும் வந்ததினால், மக்கள்மீது அருள்கொண்ட தமிழ்ச் சான்றோர், கரணம் என்னும் திருமணச் சடங்கை ஏற்படுத்தினர். மணமகன், மணமகளைத் தன் நிலையான வாழ்க்கைத் துணையாகக் கொள்வதாக, பலரறியக் கடவுள் திருமுன் ஆணையிடுவதே கரணமாகும். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (கற்பியல், 4) என்று இதனைக் குறிப்பிடுகின்றது தொல்காப்பியம்.
எனவே, பண்டைத் தமிழ்மணம் என்பது தமிழ்க்குடியைச் சேர்ந்த பார்ப்பாராலும், குலத்தலைவராலும் தமிழில் நடத்தப்பெற்று வந்த மணங்களே ஆகும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிறார் பாவாணர்.
ஆனால், ”மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட” என்று சிலப்பதிகாரம் பிராமண அல்லது ஆரியப் பார்ப்பனப் புரோகிதத்தைக் குறித்திருப்பது பற்றி நமக்கு ஐயம் எழலாம் என்பதை உணர்ந்த பாவாணர், கடைச்சங்க காலத்தில் நகரங்களிலும் மாநகரங்களிலும் பெரும்பாலும் அரசரும் வணிகரும் மாமுது பார்ப்பான் வழிகாட்டலில் மணம் நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் பெரும்பாலான தமிழர் மணங்கள் தமிழ் மரபிலேயே – அஃதாவது ஆரியப் பார்ப்பார் இன்றியே அன்று நடந்துவந்தன என்று அழுத்தமாய்ப் பதிவுசெய்கின்றார் அவர்.
இந்நூலில் இறுதிப்பகுதியில் தமிழர் திருமணங்களில் நடைபெறவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் பேசுகின்றார். நாளும் கோளும் பார்க்கும் மூடநம்பிக்கையைத் தகர்த்து, பெண்வீட்டாரிடம் வரதட்சணை வாங்கும் அருவருப்பான செயலை விடுத்து, சாதி பார்க்கும் அகமணமுறையை ஒழித்து, வெவ்வேறினங்களைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் மணப்பது அறிவார்ந்த மக்கட்பேறு வாய்ப்பதற்கு வழிவகுக்கும் என்று பாவாணர் தெரிவித்திருப்பது அவருடைய முற்போக்குச் சிந்தனையைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது.
பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் பற்றிப் பேசவந்த பாவாணர், அன்றைய தமிழர்கள் வீடு கட்டும்போது, அயலாரும் ஆண்டியரும் படுத்துறங்கத் தெருத் திண்ணை அமைத்தனர். அயல்நாட்டாரும் வழிப்போக்கரும் தங்குவதற்கு ஊரார் ஊர்மடங்கள் கட்டி வைத்தனர். பெண்கள் தம் வீட்டு முற்றத்தில் கோலமிடுவதற்கு அரிசி மாவைப் பயன்படுத்தியதுகூட, எறும்பிற்கு உணவாதல் பொருட்டே. தமிழர் கடைப்பிடித்த தலையாய அறங்களுள் இரண்டு, வாய்மையும், நேர்மையுமாகும், அதனால்தான் “பொய் சொன்ன வாய்க்குப் புகா (போசனம்) கிடைக்காது” எனும் பழமொழி ஏற்பட்டது என இன்று நாம் மறந்துவிட்ட, நடைமுறையில் துறந்துவிட்ட அற்றைய பழக்கவழக்கங்கள் பலவற்றை மீண்டும் நமக்கு நினைவூட்டுகின்றார் அவர்.
கோயில் வழிபாடுகள் பற்றிக் குறிப்பிடுகின்ற தேவநேயர், கோயில்களில் தமிழ்வழிபாட்டு முறைதான் பின்பற்றப்படவேண்டும்; வழிபாடு மட்டுமன்றிப் பிறப்பு இறப்பு குறித்த சம்பிரதாய முறைகளும் தமிழ்மொழியில்தான் பின்பற்றப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஒரு பெருமையும் இல்லாத, காலத்தால் மிகவும் பிற்பட்ட புது மொழிகளையெல்லாம் அந்தந்த மொழிகளைப் பேசும் மக்கள், பலபடப் பாராட்டி வளர்த்து வருகையில், பல வகையில் தலைசிறந்த, தனிப்பெருந் தாய்மொழியாகிய தமிழை நம் தமிழர் போற்றாதும் புரக்காதும் விடுவதும், ஞாயிறு எங்கே உதித்தால் எமக்கென்ன என்றிருப்பதும், தமிழ்ப் பிறப்பிற்கு முற்றும் தகாத செயலாகும் என்று பாவாணர் கடிந்துரைத்திருப்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அத்தோடு தமிழைப் பின்னுக்குத் தள்ளித் தமிழர் பெருமையை இருட்டடிப்பு செய்யவிழையும் இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் பொருத்தமான அருங்கருத்தாகவும் இருப்பது கண்கூடு.
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் வியனுலகுக்கு உணர்த்துவதற்காகவே காலமெல்லாம் உழைத்த பாவாணருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்ன தெரியுமா?
செம்மொழியான நம் தமிழ்மொழிக்கு எத்தகு இடர்வரினும் அதனை அழியாது காப்பதும், தன்னேரிலாத அதன் தனிச்சிறப்பை அகிலமெங்கும் பரப்புவதுமே ஆகும்.
இரவில் கடைகளைத் திறந்து வைத்தால் என்ன என்று சில மாதங்களுக்கு முன்புகூட யோசித்திருக்கிறேன்.
இரவு சாப்பிடத் தாமதமாகி, சில நேரங்களில் 11, 12 மணிக்கு உணவகங்களைத் தேடிய அனுபவம், எனக்கு உண்டு. பலருக்கும் இருக்கலாம்.
இரவில் வெகு சில மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும். அவசரத்திற்கு ஒரு மருந்து தேவை எனக் கிளம்பி, எந்தக் கடை திறந்திருக்கிறது என்று வண்டி எடுத்துக்கொண்டு வீதி வீதியாகச் சுற்றியது உண்டு.
பின்னிரவுகளில் வண்டிச் சக்கரத்தில் பொத்தல் விழுந்துவிட்டால், பஞ்சர் ஒட்ட வழியின்றி, அங்கேயே வண்டியைப் போட்டுவிட்டு, பேருந்தில் வீடு திரும்பியது உண்டு.
பெட்ரோல் நிரப்பும் நிலையங்களை இரவு 11 மணிக்கு மூடிவிடுவதால், பலருக்கு இடர்ப்பாடுகள் உண்டு.
பேருந்து, ரெயில், ஆட்டோ, டாக்சி போன்றவை இரவில் சட்டென்று கிடைக்காது. கிடைத்தாலும் கட்டணம் அதிகம் கேட்பார்கள். தூக்கம், ஆளை அழுத்தும். அந்த நேரத்தில் நாம் சூழ்நிலைக் கைதியாய் இருப்போம். என்ன கேட்டாலும் கொடுத்தாக வேண்டிய நிலைமை.
இது போன்ற பல சிக்கல்களுக்கு இனி, தகுந்த தீர்வு கிடைக்கலாம். கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணிநேரமும் திறந்து வைக்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவு, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியது.
நாளங்காடி, அல்லங்காடி ஆகியவை, தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளவை. சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சியில் இவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நாளங்காடி என்பவை, பகல் நேரக் கடைகள். அல்லங்காடி, இரவு நேரக் கடைகள். அல் என்றால் இரவு. அல்லும் பகலும் என்ற இரட்டைச் சொற்களை நினைத்துப் பாருங்கள். எந்நேரமும் கடைகள் திறந்திருப்பதால், மக்கள் இயக்கம் தொடர்ந்து இருப்பதால், மதுரையைத் தூங்கா நகரம் என்றும் அழைப்பது உண்டு.
அடையா நெடுங்கதவம் எனச் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பு உண்டு. பரிசிலர் பரிசு பெறுவதற்கு எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அரண்மனை வாயில் கதவு மூடப்படாமல் எப்பொழுதும் திறந்தே இருப்பதை அடையா நெடுங்கதவம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதுபோல், கடைகளின் கதவுகளும் அடைபடாமல் இனித் திறந்தே இருக்கும்.
தமிழக அரசின் இந்த முடிவால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். விற்பனை அதிகரிக்கும். மக்களுக்குக் கூடுதல் சேவைகள் கிடைக்கும். நள்ளிரவிலும் பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். கடிதங்களும் பொதிகளும் கூட இப்படி வரலாம். நள்ளிரவிலும் வணிக அழைப்புகள் வரலாம்.
அதே நேரம், மின்சாரச் செலவு, மிகுதியாகும். பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த வேண்டியிருக்கும். கூடுதல் இடங்களில், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். ஊழியர்களுக்கு உரிய போக்குவரத்து, உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். இவற்றை முறையாகத் திட்டமிட்டுச் செய்தால், இரவிலும் சேவைகளை வழங்கலாம். இரவு என்பதால் மக்கள், வீட்டில் முடங்க வேண்டியதில்லை.
இந்த முடிவைக் கடைகள், வர்த்தக நிறுவனங்களுடன் நிறுத்தாமல், அஞ்சல் நிலையம், நூலகம், பூங்கா போன்றவற்றை எந்த நேரத்திலும் திறந்து வைக்கலாம். கடற்கரைக்கு எந்த நேரத்திலும் செல்ல, அனுமதிக்கலாம். திறந்த வாகனத்தில் இரவு நேரச் சுற்றுலாக்களை அமைத்து, ஊர் சுற்றலாம். ஆங்காங்கே கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கலாம்.
அரசு அலுவலகங்களையும் நீதிமன்றங்களையும் கூட, 24 மணி நேரமும் திறந்து வைத்து, தேங்கிக் கிடக்கும் பணிகளை முடுக்கி விடலாம். பணியாளர்களை 8 மணி நேரத்திற்கு ஒருவர் வீதம் சுழற்சி முறையில் பணியாற்ற வைக்கலாம். சில கடைகளையும் அலுவலகங்களையும் பகலில் ஒருவரும் இரவில் ஒருவரும் பயன்படுத்தலாம். தமிழகத்திற்கு இது புதிது என்பதால், முதலில் சிற்சில சங்கடங்கள் இருக்கலாம். ஆனால், தொலைநோக்குடன் செயல்பட்டால், இந்த முடிவினால் பயன்கள் மிகுதி. ஆக்கப்பூர்வமான இந்த முடிவிற்காகத் தமிழக அரசுக்குப் பாராட்டுகள்.
பழைய முறைப்படி, பகலில் மட்டும் திறந்திருக்கும் கடைகளை நாளங்காடி எனலாம். இரவில் மட்டும் திறந்திருக்கும் கடைகளை அல்லங்காடி எனலாம். 24 மணிநேரமும் திறந்திருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களை, எந்நேர அங்காடி அல்லது முழுநேர அங்காடி எனலாம்.
ஆனால், அண்மையில் ஒரு பலகையைப் பார்த்தேன். அதில் முழு நேரக் கிளை நூலகம் என இருந்தது. இங்கே இவர்கள் குறிப்பது, பகுதி நேரம் (4 மணி நேரம்) கிடையாது, முழு நேரம் (8 மணி நேரம் அல்லது 12 மணி நேரம்) என்பதே. ஊழியர்களுக்கு முழு நேரப் பணி என்றால், 8 மணி நேரப் பணி என்றே பொருள். எனவே முழு நேர அங்காடி என்றால், மக்களுக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க, முழுநாள் அங்காடி எனலாம்.
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பார்க்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை,சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (09.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்