Blog

  • வல்லமையின் மதிப்பாய்வு நெறிகள் (Peer Review Policy)

    முனைவர் அண்ணாகண்ணன்

    வல்லமைக்கு வரும் ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பாய்வு செய்திட, சில நடைமுறைகளை வகுத்துள்ளோம். இவை, மதிப்பாய்வு செய்யும் ஆய்வறிஞர்களுக்கு உரியவை என்றாலும், இவற்றைப் பொதுப் பார்வைக்கு வைக்கிறோம்.

    வல்லமையின் மதிப்பாய்வு நெறிமுறைகள்

    • ஆய்வு நெறிமுறைகளின்படி கட்டுரை முழுமையாக அமைந்துள்ளதா என மதிப்பிட்டு, சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.
    • ஆய்வாளரின் கல்வி, பணி, அனுபவம், வயது, விருதுகள் போன்றவற்றைக் கருதாமல், ஆய்வுக் கட்டுரையின் தரத்தை மட்டுமே நோக்குதல் வேண்டும்.
    • ஆய்வாளர் நம் நண்பர் அல்லது மாற்றுக் கருத்துக் கொண்டவர், இன்னார், இனியார் எனப் பாராது, ஆய்வின் தர மதிப்பீட்டை எந்தச் சாய்வுக்கும் இடமின்றி, நடுநிலையாக அளித்தல் வேண்டும்.
    • ஆய்வு குறித்த உங்கள் மதிப்பீட்டை ஆய்வாளர் மனம் கோணுவாரோ, வருந்துவாரோ என்று தயங்காமல், துணிவுடன் எடுத்து வைக்க வேண்டும்.
    • ஆய்வுக் கட்டுரையில் உள்ள பிழைகளைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்ட வேண்டும்.
    • நிறையப் பிழைகள் இருக்கும் பட்சத்தில், இன்னின்ன வகைப் பிழைகளைத் திருத்தி அனுப்பக் கோருமாறு ஆசிரியருக்கு எழுத வேண்டும்.
    • எந்தக் காரணம் கொண்டும் ஆய்வாளரை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டாம். இன்னாருடைய ஆய்வுக் கட்டுரை உங்கள் மதிப்பீட்டுக்கு வந்துள்ளது என்று யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது.
    • ஆய்வின் தலைப்புக்கும் கருப்பொருளுக்கும் கட்டுரைக்கும் உரிய தொடர்பு உள்ளதா எனக் கவனிக்க வேண்டும்.
    • ஆய்வு முடிவுகள் புதியனவாகவும் வலுவானதாகவும் இருக்கின்றனவா எனப் பார்த்தல் வேண்டும். கட்டுரையில் அவற்றுக்கு உரிய சான்றுகள் உள்ளனவா என்றும் சரிபார்க்க வேண்டும்.
    • வளவளவென்று நீர்த்துப் போன நடையில், போதிய சான்றுகள் இன்றி, கருத்துகளாக, தரவுகளாக உள்ள கட்டுரைகளைத் தயவு பாராமல் நிராகரியுங்கள்.
    • தரவுத் தொகுப்போ, தகவல் தொகுப்போ ஆய்வு ஆகாது. அந்தத் தகவல்களை ஆராய்ந்து, புதியன காணும் முனைப்பு, ஆய்வாளரிடம் இருத்தல் வேண்டும். இதற்கு மாறாக உள்ள கட்டுரைகளை ஏற்க வேண்டாம்.
    • ஆய்வுக் கட்டுரைகள், பிற ஆய்வுகளைத் தழுவியோ, அப்படியே படியெடுத்தோ, மொழிபெயர்த்தோ அமையாத வண்ணம், அந்த ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, கருப்பொருள், ஆசிரியர் பெயர் ஆகியவற்றை இணைத்தில் தேடிப் பாருங்கள். ஐயத்திற்கு இடமளிக்கும் கட்டுரைகளின் மீது பொறுமையாக முடிவு எடுங்கள். அவசரம் வேண்டாம்.
    • ஆய்வுக் கட்டுரையில் இதே போன்ற தலைப்பில் முன்னர் வெளியான கட்டுரைகளை வேறு யாரும் எழுதியுள்ளனரா, அவ்வாறு எழுதியிருந்தால், அவற்றைப் பற்றிய பின்விவரம், தொடர்ச்சி ஆகியன கட்டுரையில் சுட்டப்பெற்றுள்ளதா என்றும் பாருங்கள்.
    • ஆய்வுக் கட்டுரைகளைப் பரிசீலித்து, கீழ்க்கண்ட மூன்று முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஆசிரியருக்குத் தெரிவியுங்கள்.
    *வெளியீட்டுக்கு ஏற்புடையது,
    *கேள்விகளுக்குப் பதில் / சான்றுகள் / திருத்தங்கள் தேவை,
    *வெளியீட்டுக்குத் தகுதி பெறவில்லை
    image.png
    • இந்த மூன்று முடிவுகளில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதற்கு உங்கள் மதிப்பீட்டுக் குறிப்பினை ஓரிரு பத்திகளில் சுருக்கமாக எழுதுங்கள். தேர்வு பெற்ற கட்டுரை எனில், உங்கள் மதிப்பீட்டுக் குறிப்பு, ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review) என்ற தலைப்பில் (ஆய்வறிஞர் பெயர் இல்லாமல்), கட்டுரையுடன் இணைத்து வல்லமையில் வெளியாகும். இதற்கென உருவாக்கியுள்ள படிவத்தைப் பயன்படுத்துங்கள்.
    • குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரைக்குப் புறநிலை ஆய்வறிஞரின் கருத்தினைப் பெறலாம் என விரும்பினால், யாரை அணுகலாம் எனத் தொடர்பு விவரங்களை ஆசிரியருக்கு அனுப்புங்கள்.
    • உங்களுக்கு அனுப்பும் ஆய்வுக் கட்டுரை, உங்களுக்கு அதிகப் பரிச்சயம் இல்லாத துறையில் அமைந்திருந்தால், அதனை ஆசிரியருக்குத் தெரிவித்து, வேறு ஒருவருக்கு அனுப்புமாறு கூறலாம்.
    • பணி நெருக்கடி காரணமாகவோ, பயணங்களின் காரணமாகவோ உங்களால் ஏதேனும் சில தினங்கள் பங்காற்ற இயலாது எனில், அதனை ஆசிரியருக்குத் தெரிவியுங்கள்.
    • மதிப்பாய்வுக்கு வரும் கட்டுரைகளைப் பரிசீலித்து, மூன்று நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் முதல் கட்ட மதிப்பாய்வு முடிவினைத் தெரிவிக்க வேண்டுகிறோம். கட்டுரையைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், உங்கள் ஆய்வறிஞர் கருத்துரையை மேலும் ஏழு நாட்களுக்குள் அனுப்பலாம்.
    • குறிப்பிட்ட மதிப்பாய்வுகளுக்கு அப்பால், பொதுவாக ஆய்வுக் கட்டுரைகளின் உள்ளடக்கம், போக்கு, தரம் குறித்த உங்கள் கருத்துகளை அவ்வப்போது கட்டுரைகளாக எழுதலாம்.
    • மதிப்பீட்டாளர் தமது ஆய்வுக் கட்டுரையை வல்லமையில் வெளியிட விரும்பினால், அதனை ஆசிரியரின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். ஆசிரியர் தேவைப்பட்டால், வேறு மதிப்பீட்டாளருக்கோ, புறநிலை அறிஞருக்கோ அனுப்பிக் கருத்துக் கேட்டு முடிவினை அறிப்பார்.
    Share
  • வல்லமையின் ஆய்வு அறங்கள் (Ethics Policy)

    முனைவர் அண்ணாகண்ணன்

    வல்லமை பின்பற்றும் ஆய்வு அறங்களை இங்கு வகுத்தளித்துள்ளோம். ஆய்வாளர்கள் இவற்றை மனத்தில் இருத்தித் தம் கட்டுரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    சொந்த ஆக்கம்

    ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வாளர்களின் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும்.

    பிறருடைய கருத்தினைத் தன் கருத்தாக எடுத்தாளும் போக்கினை ஆய்வாளா்கள்
    முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிறருடைய கருத்துகளையும் ஆய்வு முடிவுகளையும்
    மேற்கோளாக எடுத்தாள மட்டுமே ஆய்வாளருக்கு உரிமை உண்டு.

    இதர தளங்களிலிருந்து, ஏடுகளிலிருந்து, நூல்களிலிருந்து முழுப் படைப்பையோ அல்லது ஒரு பகுதியையோ எடுத்துத் தம் கட்டுரையை உருவாக்குவது தவறு. ஒரே கட்டுரையிலிருந்து எடுக்காமல், பல்வேறு கட்டுரைகளிலிருந்து இங்கொன்று அங்கொன்றாக எடுத்துத் திரட்டிக் கட்டுரையாக்குவதும் கூடாது. ஆய்வுக் கட்டுரையும் அதில் இடம்பெறும் அனைத்து வளங்களும் ஆய்வாளரின் சொந்த ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.

    புதிய கட்டுரையா?

    வேறு எங்கும் பதிப்பிக்கப்படாத கட்டுரையாக இருத்தல் வேண்டும். வேறு தளங்களில், இதழ்களில், நூல்களில் வெளிவந்திருந்தாலோ, கருத்தரங்கு, மாநாடு, பயிலரங்கு போன்றவற்றில் படைக்கப்பட்டிருந்தாலோ அவசியம் குறிப்பிட வேண்டும். வல்லமைக்கு அனுப்பிய பிறகு வேறு இதழ்களுக்கு அனுப்பியிருந்தால், அதை உடனே வல்லமைக்குத் தெரிவிக்க வேண்டும்.

    மேற்கோள்கள்

    இதர கட்டுரைகளிலிருந்து மேற்கோள் காட்டுகையில், மேற்கோள் எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும். மேலும், அது தொடர்பான அடிக்குறிப்புகள், துணைநூல் பட்டியல் ஆகியவற்றை அவசியம் தர வேண்டும்.

    நம்பகத்தன்மை வாய்ந்த சான்றுகள்

    ஆய்வுக் கட்டுரையில் எடுத்துக் காட்டும் சான்றுகள், மிகுந்த நம்பகத்தன்மையுடன் இருத்தல் வேண்டும். அச்சில் வந்ததாலோ, இணையத்தில் இடம் பெற்றதாலோ மட்டுமே ஒரு தரவு, சான்று ஆகிவிடாது. அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அதன் பிறகே ஆய்வாளர் அதை ஒரு சான்றாக ஏற்கலாம். இவ்வாறு ஆராய வேண்டியது, ஆய்வாளரின் கடமையாகும்.

    அவசரம் கூடாது

    தலைப்பினைத் தேர்ந்தெடுப்பதிலோ, கட்டுரையை எழுதுவதிலோ, அல்லது ஆய்வு முடிவுகளை இறுதி செய்வதிலோ அவசரம் கூடாது.

    ஆய்வில் நடுநிலை பேணல்

    காய்தல், உவத்தல் இல்லாத நடுநிலையான ஆய்வே வரலாற்றில் நின்று நிலைக்கும்.
    மிகைப்படுத்துதல், தற்சார்புத்தன்மை, இட்டுக்கட்டி இழிவுகூறல் போன்ற பண்புகள்
    ஆய்வாளா்களுக்குச் சற்றும் பொருந்தாதவை. சாதி, இனம், மொழி, சமயம், தேசியம், சா்வதேசியம் ஆகிய எல்லைகளைக் கடந்த பரந்துபட்ட பார்வை ஆய்வாளருக்குத் தேவை. இவ்வாறான எல்லைகளுக்குள் அடைபட்டுக்கொண்டு ஆய்வு முடிவுகளைத் திரித்தும் வருவித்தும் நிறுவும் போக்கு சரியானதில்லை. எனவே, நடுநிலையைப் பேணுவது இன்றியமையாதது.

    Share
  • வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2019

    நிறுவனர் & முதன்மை ஆசிரியர்:

    முனைவர் அண்ணாகண்ணன்

    நிர்வாக ஆசிரியர்:

    பவளசங்கரி திருநாவுக்கரசு

    ஆசிரியர் குழு:

    மேகலா இராமமூர்த்தி, அமெரிக்கா

    அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்), மும்பை

    ராமலட்சுமி, பெங்களூரு

    துணை ஆசிரியர்கள்:

    முனைவர் சுரேஷ் ரங்கநாதன்

    முனைவர் சொ. அருணன்

    மதிப்பாய்வுக் குழு

    மேகலா இராமமூர்த்தி, அமெரிக்கா

    சி. ஜெயபாரதன், கனடா

    மலர் சபா, ரியாத், சவுதி அரேபியா

    ஹரிகிருஷ்ணன், பெங்களுரு

    வித்வான், முனைவர் ச.சுப்பிரமணியன்

    இரா.பானுகுமார்

    முனைவர் இரா.சீனிவாசன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை

    முனைவர் பா. ஜெய்கணேஷ், தமிழ்த் துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை

    முனைவர் ப.திருஞானசம்பந்தம், உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை-625004

    முனைவா் பு.பிரபுராம் முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

    முனைவர் ம.இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, ஸ்ரீ வித்யா மந்திர் கலை & அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி

    முனைவர் தி.அ. இரமேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை,  தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்

    முனைவர் தி.தெய்வசாந்தி, சர்வதேச ஆராய்ச்சி மையம், கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோயில்

    முனைவர் கல்பனா சேக்கிழார், உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை,  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்

    முனைவர் தீபா சரவணன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    ஆலோசகர் குழு:

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    விஜய திருவேங்கடம்

    விசாகப்பட்டினம் வெ. திவாகர்

    வழங்கி நிர்வாகி & தள மேலாளர்:

    கார்த்திக் இலட்சுமி நரசிம்மன் (எல்.கே.)

    தொழில்நுட்ப ஆலோசகர்கள்:

    காமேஷ்

    செல்வ முரளி

    ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ்

    சட்ட ஆலோசகர்

    வழக்கறிஞர் கார்த்திகேயன், சென்னை

    =========================

    இதழின் நோக்கமும் செல்நெறிகளும்

    உலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, ஒவ்வொருவர் ஆற்றலையும் பன்மடங்கு உயர்த்துவது, துடிப்புடன் செயலாற்றத் தூண்டுவது, கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றின் வழியே சமூக முன்னேற்றத்துக்கு வித்திடுவது, சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, இளைய சமுதாயத்தைப் பயிற்றுவித்து, வழிகாட்டி, தோழமையுடன் துணை நிற்பது ஆகியவை, வல்லமையின் முதன்மை நோக்கங்கள். நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, இயன்ற வரை கலப்பில்லாத் தமிழ், புதிய முயற்சிகளுக்கு ஊக்கம், பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதல், அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அக்கறை… உள்ளிட்டவை இவ்விதழின் செல்நெறிகள்.

    படைப்பாளர்கள் கவனத்திற்கு

    படைப்புகள், செய்திகள், கடிதங்கள், கேள்விகள், ஓவியங்கள், நிழற்படங்கள்…. உள்ளிட்ட அனைத்து வகைப் பங்களிப்புகளையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வேறு எங்கும் வெளிவராத, புதிய படைப்பாக இருத்தல் வேண்டும். ஒருங்குறியில் (யுனிகோடு) அமைந்திருத்தல் வேண்டும். காப்புரிமையை மீறாத வகையில், படைப்புக்கு ஏற்ற படங்களை இணைத்து அனுப்பலாம்.

    தொடர்பிற்கு

    முனைவர் அண்ணாகண்ணன்
    மனை எண் 5, மெடோ வில்லாஸ், ஹரிதா என்கிளேவ்,
    சி.டி.ஓ. காலனி, 3ஆவது தெரு,
    மேற்குத் தாம்பரம், சென்னை – 600045

    Share
  • சேக்கிழார் பா நயம் – 37

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
    ————————————————————-

    திருவதிகை வீரட்டானத்தில் முதிய அந்தணராக வந்த இறைவன் திருவடி சூட்டுவது போல் செய்த திருவிளையாடலால், சுந்தரருக்குத் தில்லைசென்று கூத்தனின் தூக்கிய திருவடியை வணங்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது அதனால் தில்லை நோக்கி சுந்தரர் விரைந்தார். தில்லையின் எல்லையிலே பத்துக் கல் தொலைவில் கடல் உள்ளது. கடல் கரைமீறிச் செல்ல முயல்வதால் அதன் அலைகள் கரையை மோதுகின்றன. விசேடத் திருநாள்களில் சிவபெருமான் கடற்கரைத் தீர்த்தம் நோக்கி எழுந்தருள்வார் ; அப்போதெல்லாம் அவரைச் சூழ்ந்து அடியார்கள் செல்வர். அக்கடல் அலைகள் இறைவன் திருவடியைத் தொட்டும் , அடியார்களின் திருமேனியைச் சூழ்ந்து வழிபடும். அவ்வப் போது, வழிபடும் பேறு மட்டும் போதாது எனப்பொங்கி எழும் அலைகள், மணலூடே சென்று தில்லைத் திருக்கோயிலைச் சூழ்ந்து அகழியாகி நாள்தோறும் எப்போதும் வணங்கும் ஆவலில் அலைமோதும்!

    தில்லையில் தூக்கிய பாதத்தில் அணிந்த சிலம்பு நடஞ்செய்தலால் ஓசை செய்யும்!. இவ்வோசையே சிருட்டித் தொடக்கம்! நாதத்தாற் சிருட்டி தொடங்குதலின் அது சிலம்பொலி எனப்பெறும், நாதத்துக்குக் காரணமாகிய சுத்தமாயை தனக்குத்தாரகமாகிய அத்தன் தாள்களாகிய ஞானக்கிரியா சத்திகளினடங்கிநின்று தன் காரியமாகிய நாதத்தைத் தோற்றுவிக்கும். ஆதலின் சுத்தமாயை சிலம்பும், நாதம் சிலம்பொலியுமாமென வழங்கப்பெறும். நல் வினையொலி என்பதும் அது. “திருச்சிலம்போசை யொலிவழியே சென்று, நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற“ (திருவுந்தியார்.)

    இவ்வாறு கடல்நீர் அகழியாகித் தில்லைக் கோயிலைச் சூழ்ந்து முழுவதும் தழுவி அணைக்கும் அழகைச் சேக்கிழார் கற்பனை செய்கிறார்.

    தில்லை மன்றுள் நடனமாடும் பிரானின் திருவடி மலர்கள், திருவருள் தேனைப் பிலிற்றுகின்றன! அகழியைச் சூழ்ந்து மலர்ந்த தாழம்பூக்களில் தேனுண்ட வண்டுகள் , திருவடி மலரின் தேனை உண்டு வாழ்க்கைப் பயனைத் துய்த்து மகிழ முயன்று எழுந்து பறக்கின்றன! அவை முரலும் ஓசை வேதங்களை இசைப்பது போல் உள்ளதாம்! இதனைச் சேக்கிழார்,

    ‘’ மன்றுளாடும் மதுவின் நசையாலே மறைச்சுரும்பறை புறத்தின் மருங்கே ‘’

    என்றுபாடுகின்றார்

    இறைவன் திருக்கோயில் மதில் குன்று போல உயர்ந்து விளங்குகின்றது. அதனைக் கைலை மலை என எண்ணிக் கடல்நீர் அகழியாகி அரவணைக் கின்றதாம்! சிவபிரானாகிய அருள்மணி, மதிலாகிய மலையுச்சியில் ஒளி வீசுகின்றதாம்! இதனைச் சேக்கிழார் , ‘’ குன்றுபோலும் மணி மாமதில் சூழும் குண்டகழி !’’ என்று குறிப்பிடுகிறார்.

    அந்த அகழியில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்களில் மொய்த்த வண்டுகள் , தேனின் வண்ணத்தில் இருந்தன! அவை, கரையில் வளர்ந்திருக்கும் தாழம் பூக்களில் புகுந்து திளைக்கின்றன! உடனே அவை முழுநீறு பூசிய கோலம் கொள்கின்றன! அவை அதனால் தில்லை நாதன் திருவடியை என்றும் எண்ணிச் செல்லும் சிவனடியார்களாக மாறி, மேனியில் திருநீறு சண்ணித்த வேடம் கொண்டு சென்று சென்று ஐந்தெழுத்தை ஒதுவதுபோல் முரல்கின்றன!

    “தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே
    நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும்
    அனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன்சொரியுங்
    குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ“

    என்று ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் உபதேசித்தருளிய சுரும்பரின் வழிவழி மரபில் வந்தவை இந்த வண்டுகள். ஆதலின் உள்ளே மன்றினில் நிறைந்த மதுவை அளவுபடாது உண்ணும் மறைச்சுரும்பர் எடுத்துப்பாட, அதுபோலவே புறத்தே உள்ள நாமும் செய்வோம் என்று கமலவண்டு அச்செயலுக்குத் தக்க வேடமாகிய நீறுபூண்டு அடியார் கோலத்துடன் சென்று சென்று முரல்கின்றன என்பது குறிப்பு.

    இதனை அங்கு வரும் சுந்தரர் காணுகின்றார்! அதனால் அவர் சிந்தை சிவபிரான் மேல் பேரன்பு கொண்டு பக்தியில் திளைக்கின்றது. அவ்வாறே அவர் தில்லை நோக்கிச் சென்றார்! இதனைச் சேக்கிழார்,

    ‘’கமல வண்டு, அலர் கைதைத்
    துன்று நீறுபுனை மேனிய வாகித்
    தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்
    சென்று சென்றுமுரல் கின்றனகண்டு
    சிந்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார்.’’

    என்று பாடுகின்றார். இனி முழுப்பாடலையும் பயில்வோம் ,

    “மன்றுளாடு மதுவின் நசையாலே
    மறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே
    குன்று போலுமணி மாமதில் சூழுங்
    குண்ட கழிக்கமல வண்டலர் கைதைத்
    துன்று நீறுபுனை மேனிய வாகித்
    தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்
    சென்று சென்று முரல்கின்றன கண்டு
    சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார்!”

    இப்பாடலில் ‘துன்றுநீறு’ என்பது வண்டுகள் பரபரப்புடன் தாழம்பூவில்புகுந்து முழுவதும் மூழ்கியதால் உண்டான வேடத்தைக் குறிக்கும். அடுத்து ‘தூய நீறு’ என்ற தொடர் சிவனடியார்கள் உளத்தூய்மையுடன் பக்தி மேலிட முறையாக அணிந்து கொண்ட திருநீற்றை உணர்த்தியது. இதனை மேலும்,

    ‘’கைதை துன்று நீறுபுனை மேனிய ஆகி தூய நீறுபுனை தொண்டர்கள் என்ன – வண்டுகள் தாழைப் பூவினுட் போந்து வெளிவரும்போது அதனுட் பொருந்திய மகரந்தம் தமது உடம்பிற் றோய்ந்து வரும். அப்போது காண்போர்க்கு முழுநீறு பூசிய அடியவர்களைப் போன்று தோன்றும்.

    கைதையில் துன்றுநீறு – உண்மையும் தூய்மையுமில்லாத மாயா காரியப் பொருள். ஆனால் உண்மையான தூய திருநீற்றின் தோற்றம்மட்டும் பொருந்தியது. ஆதலின் இதனைத் துன்று நீறு எனவும், அதனைத் தூய நீறு எனவும் கூறினார். பொருள்கள் காண்போரின் மனப்பான்மைக் கேற்றவாறு நினைவுண்டாக்குதல் இயல்பு.’’ என்று சி.கே.எஸ் அய்யா விளக்குவார்

    மதுவின் நசையாலே என்றதொடர் தரும் நயம்எண்ணிமகிழத்தக்கது. சிறுசிறு துளியாய்ப் பல பூக்களிற், போய் உண்டும் நிரம்பாது நாவிற்கு மட்டும் சிறிதுகாலம் இனிமை தருவதும், அதிக முண்டால் நோய் தருவதுமான, எளிய மலர்த்தேனைத் தேடி அலையாது, பொருந்திரளாக ஒரே இடத்தில் நுகரத்தக்கதாய் எல்லா இந்திரியங்களுக்கும் உயிருக்கும் எப்போதும் இனிமை தருவதாய் உள்ள பெருந்தேனை உண்ணுவோம் என்ற நசையைக் குறிக்கும். சமய ஈடுபாடும் , இலக்கியச்சுவையும் ஒருங்கே அமைந்த இப்பாடல் சேக்கிழாரின் புலமைக்குத் தக்க எடுத்துக் காட்டாகும் .

    Share
  • ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த நிறைவு

    ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த நிறைவு

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உரையாற்ற சிகாகோ பல்கலைக்கழகம் அடிக்கடி பல சிறப்பு விருந்தனர்களை வரவழைப்பதுண்டு. நேற்று (மே 10) தெற்காசியத் துறையின் சார்பில் நம் தேசத்தந்தை காந்திஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தியை வரவழைத்திருந்தார்கள். இவர் இல்லினாய் மாநிலத்தில் இருக்கும் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் 22 வருஷங்களாகப் பணியாற்றுகிறார். இவர் சிகாகோ பலகலைக்கழகத்திற்கு வருகிறார் என்ற செய்தி கிடைத்ததிலிருந்து எனக்குள் மகிழ்ச்சி பரவியது. காந்திஜி என்னுடைய முதல் ஹீரோ. இரண்டாவதாக போப் பிரான்சிஸ். இவர்கள் இருவரிடமும் நான் எந்தக் குறையும் காண்பதில்லை. யாரும் இவர்களைப் பற்றி என்ன குறைவாகச் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வதில்லை. காந்திஜியை நான் நேரில் பார்த்ததில்லை. மைசூரில் எங்கள் பக்கத்து வீட்டு எழுத்தாள நண்பர் ஒருவர் தான் பெங்களூரில் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தபோது மாணவர்கள் தேசத்திற்காக வசூலித்த பணத்தை அவர்களின் பிரதிநிதியாகக் காந்திஜியிடம் கொடுத்ததாகக் கூறுவார். அந்த மாதிரி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்காத குறையை இப்போது அவருடைய பேரன்களில் ஒருவரைப் பார்த்துத் தீர்த்துக்கொள்ளலாம் என்று ஒரு ஆசை. இரண்டாவதாக அந்த மகானின் வழியில் வந்தவர்கள் எப்படி அமெரிக்கா போன்ற நாட்டில் வசிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வம்.

    நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அவர் உரையாற்றப் போகும் துறை ஒரு மைலில் இருக்கிறது. என்னால் அவ்வளவு தூரம் சிரமமில்லாமல் நடக்க முடியாது. பேருந்து வசதியும் சரியாக இல்லை. வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணிவரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் எங்கும் காரை நிறுத்த முடியாது. காரில் போனால் காரை நிறுத்திவிட்டு அரை மைல் தூரமாவது நடக்க வேண்டும். இதற்கு முதலிலேயே வீட்டிலிருந்தே நடந்துபோய்விடலாம் என்று முடிவுசெய்தோம். ஆனால் வெளியில் சென்ற பிறகுதான் தெரிந்தது அதிகமான குளிரோடு பலத்த காற்றும் வீசுகிறதென்று. நான் எவ்வளவு தூரம் அவரைப் பார்க்கப் பிரியப்படுகிறேன் என்று அறிந்திருந்த என் கணவர் காரில் என்னை அந்தக் கட்டடத்தின் அருகில் இறக்கிவிட்டுவிட்டு வேறு எங்காவது, முடிந்தவரை பக்கத்தில், கிடைக்கும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு வருவதாகச் சொன்னார். அதைவிட வேறு வழி எதுவும் எனக்கும் தெரியவில்லையாதலால் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டேன்.

    ஹாலுக்குள் நுழைந்ததும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அவருடைய உரை மதியம் 2 மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. அவருடைய பேச்சில் எதையும் விட்டுவிடக் கூடாது என்று நான் விரும்பியதாலும்ஹால் முழுவதும் நிரம்பி வழியும் என்று நான் நினைத்ததாலும் இருபது நிமிடங்கள் முன்பாகவே அங்கு இருந்தேன். ‘இன்னும் நேரம் இருக்கிறது. அதனால் இன்னும் பலர் வரும் வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். நேரம் சென்றுகொண்டிருந்தது. இன்னும் சிலர்தான் வந்தார்கள், நான் நினைத்த மாதிரிப் பலர் வரவில்லை. காந்திஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தி அப்போதே அங்கிருந்தார்.

    இவர் காந்திஜிக்கு மட்டும் பேரன் இல்லை; தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்கும் பேரன். ராஜ்மோகனின் தந்தை தேவதாஸ் காந்திஜியின் நான்காவது மகன்; தாய் லட்சுமி ராஜாஜியின் மகள். தாத்தாக்கள் இருவரைப் போலவே இவரும் கூர்புத்தியையும் எளிமையையும் அணிகலன்களாகக் கொண்டிருக்கிறார். இவர் மனித உரிமைகள் பற்றிய பல அமைப்புகளோடு தொடர்பு கொண்டவர். ‘மாற்றத்திற்கான முதல் முயற்சி’(Initiatives of Change) என்னும் அமைப்போடு அரை நூற்றாண்டுகளாகத் தொடர்புகொண்டிருக்கிறார். இதன் அனைத்துலக அமைப்பின் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்குப் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு தாத்தாக்கள் பற்றியும் வல்லபாய் போட்டேல் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் சாதனைகள் பற்றியும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இன்னும் பல புத்தகங்களும் எழுதியிருக்கிறார். வாழ்க்கை முழுவதும் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் ஜாதிகளுக்கிடையே ஒற்றுமைக்காகவும் பாடுபட்டிருக்கிறார்.

    இவர் பற்றிய விபரம் இங்கே:

    https://www.law.duq.edu/sites/default/files/documents/DeansOffice/Rajmohan%20Gandhi%20-%20bio%20edited.pdf

    அவர் எழுதி 2018-ல் வெளியான Modern South India: A History from the 17th Century to our Times என்ற புத்தகத்தைப் பற்றித் தலைமை தாங்கிய பெண் கேள்விகள் கேட்க இவர் அதற்குப் பதில் அளித்தார். கடைசியாக ‘இப்போது இந்தியாவின் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். கொஞ்ச நேரம் குரல் எழும்பவில்லை; அவரால் பேச முடியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு,‘என்னைப் பொறுத்தவரை நான் இளமையாக இருந்தபோது இருந்த இந்தியாவில்தான் நான் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’ என்று முடித்தார்.

    அவரோடு நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலே குறிப்பிட்டிருக்கும் அவருடைய புத்தகத்தின் பிரதி ஒன்றை ஹாலிலேயெ வாங்கி அவரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டோம்.

    இந்த மகிழ்ச்சிகரமான சம்பவத்தில் ஒரேயொரு விஷயம்தான் மனதை நெருடிக்கொண்டிருந்தது. ராஜ்மோகன் காந்திக்கும் என்னுடைய நெருடலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கம்போல் எல்லாக் கூட்டங்களிலும்போல் நம் பருப்பு வடையான சிறு தீனியோடு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும் வந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பார்த்தாலே எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். இவை எல்லாம் புதைகுழிக்குள் போகப் போகின்றனவே என்று நினைத்து மனம் சஞ்சலப்படும். ராஜ்மோகன் காந்திக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் கொடுத்திருப்பார்கள் போலும். அது மேஜை மீது இருந்தது. அவர் அதிலிருந்து தண்ணீர் குடித்த மாதிரித் தெரியவில்லை. கூட்ட அமைப்பாளர்கள் அவருக்கு ஒரு தண்ணீர் பாட்டில் கொடுத்தபோது அதை மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அதை உபயோகிக்கவேயில்லை.

    ‘நுகர் கலாச்சாரம் அதிகமாக இருக்கும் அமெரிக்காவில் எப்படிக் காலம் தள்ளுகிறீர்கள்?’ என்று நான் கேட்ட கேள்விக்கு ‘எல்லா இடங்களிலும் சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவர முடியும்’ என்றார்.

    நம் நாட்டின் அரசியல்வாதிகளும் அவர்களுடைய வாரிசுகளும் அடிக்கும் கொள்ளைகளையும் கூத்துக்களையும் தினசரி பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு இவரைப் பார்த்ததும் அந்த நாளைய நினைவுகள் வராமல் இல்லை. தினமும் பொய்களாக உதிர்க்கும் ட்ரம்ப்பின் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு நேற்றைய பொழுது புத்துணர்ச்சி அளிப்பதாக அமைந்தது.

    Share
  • கல்வெட்டு குறிக்கும் ஆரியர் என்பவர் யார்?

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் மூன்றாம் இராசராச சோழன் 11 ஆம் ஆண்டு 11 வரிக் கல்வட்டு

    1. ஸ்வஸ்த்திசிரி [!] திருபுவனச் சக்கரவத்திகள் இராசராசதேவற்கு
    2. யாண்டு 11 வது வடகரை வன்நாட்டு வாலிகண்டபுரத்து உடையார்
    3. திருவாலீஸிரமுடைய நாயனார் திருக்கோயிலில் இடங்கை தொண்ணூற்றெட்டுக்
    4. கலனையும் நிறவறநிறைந்து குறவறக்கூடி கல்வெட்டியபடியாவது
    5. பலமண்டலங்களில் பிராமணரும் ஆரியரும் சித்திர மேழிப்
    6. பெரியநாடான யாதவர் குலத்தலைவரான நத்தமக்களும் சதிரமுடித் தலைவரான
    7. மலையமான்களும் காயங்குடி கண்ணுடை அந்தணரும் சம்புவர்குலபதிப்
    8. பன்னாட்டாரும் பதினென் விஷயத்து வாணிய நகரங்களும் பொற்கோயிற் கைக்கோளரும்
    9. யிடங்கை தொண்ணூற்றெட்டுக் கலனைகளுக்கும் ஒருவற்கு வன்த நன்மைத் தீமை
    10. அனைவற்கும் ஆவதாகவும் யிப்படி விலங்கிலோமாகில் மாறுடாதிக்குங்
    11. கீழ்சாதிக்குங் தாழ்வு செய்தோமாக இத்தனை யிப்படி ஒரு காலாலும் யிருகாலாலும் முக்காலாவதும்.[!]

    கலனை – ஒன்றற்கமைந்த பல வகை உறுப்புகள், parts, as of a whole; ஆரியர் –உயர்குடியர், aristocrat, noble; விலங்கிலோமாகில் – குறுக்காக இருந்தோமானால்; மாறுடாதி –

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 11 ஆம் ஆட்சி ஆண்டில் பொ.யு. 1227 இல் வடகரை வன்நாட்டில் அமைந்த வாலிகண்டபுரத்து வாலீசுரர் கோவிலில் இடங்கை தொண்ணூற்று எட்டு உட்பிரிவினரும் நிறைவுறநிறைந்து குறைவறக் கூடித் தாம் கொண்ட முடிவை கல்வெட்டாய் வெட்டுவித்த செய்தியாவது யாதெனில், “பல மண்டலங்களில் வாழுகின்ற பிராமணர் எனும் அந்தணர், ஆரியர் எனும் வேளாண்கள், சித்திரமேழிப் பெரியநாடான யாதவகுலத் தலைவரான நத்த மக்கள், சதிரமுடித் தலைவரான மலையமான்கள், காயங்குடி கண்ணுடைய பிராமணர், வன்னியரான சம்புவர்குலபதிப் பன்னாட்டார், பதினென் விஷயத்து வாணியர், பொற்கோவில் கைக்கோளர் ஆகியோருடன் இடங்கை தொண்ணூற்று எட்டு உட்பிரிவினரும் கூடி ஒருவர்க்கு வந்த நன்மை தீமையை நம்மில் அனைவர்க்கும் ஏற்பட்டதாகக் கருத வேண்டும் அந்த அளவிற்கு ஒன்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஒற்றுமைக்கு குறுக்காக இருந்தோமானால் கீழ்சாதி மக்களுக்கு தாழ்வு செய்தோம் என்று கருதக்கடவது”. இதனை ஒரு காலாலும், இருகாலாலும், முக்காலாவதாக என்று கல்வெட்டு முற்றுப்பெறாமல் விடுபட்டுள்ளது எனவே அதன் பொருள் விளங்கவில்லை.

    சமூகத்தில் ஏதோ ஒரு கேடு நிகழ்ந்ததால், குறிப்பாக அதிக மழை அல்லது வறட்சி இவற்றால் ஏதோ ஒரு வற்கடம் (பஞ்சம்) வந்த போது அனைவரும் ஒவ்வொருவரது இன்ப துன்பத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று வலங்கை இடங்கை கூட்டத்தைக் கூட்டி வற்புறுத்தப்படுகின்றது. இவ்வாறு நடந்துகொள்வதற்கு எதிராக இருப்பது உழைக்கும் மக்களை தாழ்வு செய்தது போன்றதாகும் என கல் வெட்டி உள்ளனர். இங்கே ஆரியர் என்ற சொல்லாட்சி வேளாண் என்ற அரசகுடிகளைக் குறிக்கின்றது. 9 ஆம் நூற்றாண்டில் சோழரது பேரரசு ஆட்சியில் அரச குடியினருக்கு என்று ஒரு சாதி அமைப்பு உருவாகியது. இதில் இணைந்து வேந்தர்கள், மன்னர்கள், அரையர்கள் குடும்பத்து உறுப்பினர்கள் தம்மை வேளாண் என்று அறிவித்துக் கொண்டனர். பின்னாளில் இந்த வேளாண் என்ற சாதி பெருவாரியாக வெள்ளாளரோடு கலந்து விட்ட பண்ணை சாதி ஆகும். இந்த வேளாண்கள் படையாச்சி, கொங்கு வேளாளார், துளுவ வேளாளர், கள்ளரிலும் கலந்துள்ளனர். இந்த வெள்ளாளார்தாம் இக் கல்வெட்டில் ஆரியர் எனப்படுகின்றனர். இங்கு ஆரியர் என்பது உயர்குடியோர் என்ற பொருளில் தான் குறிக்கப்படுகின்றது. விந்தை என்னவெனில் வரலாற்றில் உண்மையாகவே ஆரியர் என்று குறிக்கப்பட்ட இந்த சாதி மக்கள் தாம் பின்னாளில் பிராமணரைப் பார்த்து ஆரியர் என்று சொல்லி தூற்றி அவமானப் படுத்தி வெறுப்பை அவர்பால் சமூகத்தில் வளர்க்கின்றனர். இதற்கு மனோன்மணியம் சுந்தரனார், மறைமலை அடிகள் ஆகியோரைக் காட்டாலாம். தமிழகத்தை ஆண்ட பல்லவ, வாண, நுளம்ப வேளிர்கள் தமிழகத்தின் குமரிப் பகுதி வரை சென்று ஆண்டுள்ளனர். இவர்கள் உண்மையாகவே ஈரான் ஈராக்கு பகுதியில் இருந்து வந்த ஆரியர்கள் என்பதைப் பல ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனால் இவர்கள் தம் அயலகத் தாயகத்தை மறைத்து பிராமணர் தாம் ஆரியர் என்று கூறித் திரிகின்றனர். ஆனால் கல்வெட்டுகள் இவர்தம் பொய்களை தோலுரித்துக் காட்டுகின்றன. அடுத்து வரும் ஒரு கல்வெட்டு இதனை உறுதி செய்கின்றது.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 300, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம் 098867 69865 / 09632967153. ARIEp 1944, B. No: 276

    ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கர
    வத்திகள் மதுரையும் ஈழமும் க
    ருவூரும் பாண்டியன் முடித்தலை
    யும் கொண்டு வீரா அபிஷேகமு
    ம் விஜையா அபிஷேகமும் பண்
    ணியருளிய திரிபுவன வீரதே
    வற்கு யாண்டு 37 ஆவது
    வம்பணாரும் புண்டரிக மலர்
    மடந்தை பாலடி நாளுஞ்
    சம்பு மாமுனி மாபலி வந்தோ. . . . .
    சிகையில்லாச கங்கை நாதா
    ர(வி)ந்த மலற்க்குழற் கண்ணக் கவ. . . .
    மகள் கழல் தொழ ஆரியோர்,
    அந்தணர் தம் ஆகுதியில் அ
    றங்காவல் பெற்றுடை
    யோர் வஞ்சி, கூடலுரை, கா
    ஞ்சி, வளவர் கோமானருளினா
    லே தஞ்சையுள்ளுங் காப்ப
    தற்க்குச் சக்கர வாளம் பெற்று
    டையோர் நாயனார் திருச்
    சிற்றம்பலமுடையார் ஸ்ரீ
    பாதங்களை நோக்கி பன்
    னெடுங்காலம் பணி
    கொண்டு அருநவதிக்கு
    எழுபத்தொன்பது னாட்
    டுப் பன்னாட்டோம்

    விளக்கம்: தாமரை மலரில் உறையும் இலக்குமியின் திருவடிகளை நாளும் வணங்கும் சம்பு மாமுனிவரின் பெருவேள்வியில் இருந்து வந்தோர். தலைக் கொண்டையில் ஆகாய கங்கைதனைக் கொண்ட கையிலாச நாதன் சிவனின் தாமரைப் பாதத்தை, உமையின் பாதத்தை வணங்கும் ஆரியரான அரசகுடி வேளாண் மக்கள் அந்தணரைக் கொண்டு வளர்க்கும் வேள்வித் தீயைக் காத்து நிற்கும் காவல் உரிமை பெற்றவர்கள். வஞ்சி, கூடல் (கருவூர்), காஞ்சி ஆகிய தேசங்களைக் காப்பதுபோல சோழர் கோமான் கொடுத்த உரிமையால் தஞ்சையைக் காவல் காக்க சங்கரவாளப் படையைப் பெற்றவர்கள். தில்லை திருச்சிற்றம்பலமுடைய கூத்தனின் திருப்பாதங்களில் பன்னெடுங்காலம் பணிசெய்து வருபவர்கள். நவதிக்கு (ஒன்பது திசை) 79 நாடுகளிலும் வாழும் பன்னாட்டவர் (வன்னியர்கள்) என்று தம் இனத்து சிறப்பை மெய்க்கீர்த்தியாக கல்வெட்டி உள்ளனர்.

    மூன்றாம் 37 ஆம் ஆண்டு ஆட்சியில் பொயு.1215 இல் வெட்டிய கல்வெட்டு. வன்னியர்களை “சம்பு மாமுனிவன் வேள்வித்தீயில் தோன்றியவர்கள்” என்று சொல்கிறது. வேள்வித்தீயில் தோன்றியவர்கள் என்பவர்கள் “க்ஷத்ரிய மரபினர்கள்” என்பது தெளிவாகும்.

    மேலும் இக்கல்வெட்டு கையிலாசநாதரான சிவன் பார்வதியை வணங்கும் அரசகுடி ஆரியர் அந்தணரைக் கொண்டு வளர்க்கும் வேள்வித் தீயைக் காத்துநிற்கும் காவல் உரிமை பெற்றவர்கள் வன்னியர்கள். அந்தணர்கள் வளர்க்கும் வேள்விக்குண்டத்தை காவல் செய்யும் பணி என்பது க்ஷத்ரியர்களின் பணி என்பதாகும். எனவே, வன்னியர்கள் என்பவர்கள் “க்ஷத்ரிய மரபினர்” என்பது உறுதியாகிறது.

    பொதுயுகம் 5 ஆம் நூற்றாண்டில் இராசத்தான் அபு மலையில் மேற்குஆசியாவில் இருந்து வந்த பார்த்தியர், சகரர் உள்ளிட்ட அயல்நாட்டு ஆட்சியாளர்களுக்காக வேள்வி வளர்த்து இவர்களை இராசபுத்திரர் என்ற பட்டத்துடன் இவரது ஆளும் உரிமையை தக்கவைத்து வேள்வி சமயத்தின் புரவலர், காவலர் என்ற பொறுப்பையும் பிராமணர் இவர்குளுக்குத் தந்தனர். இந்த வேள்விச் சடங்கு ஏன் நிகழ்த்தப்பட்டது என்றால் குப்தர்கள் இந்த அயலக ஆட்சியாளர்களை வந்தேறிகள் என்று சொல்லி சொல்லித் தான் உள்நாட்டு மக்களிடம் இருந்து அயன்மைப்படுத்தி இவருடன் கடும்போர்ச் செய்து வெற்றி கொண்டு இவரையும் இவர் ஆட்சியையும் வடக்கே ஒழித்துக் கட்டினர். அந்த நேரத்தே இந்த கையறுநிலையில் இருந்து இவர்களை விடுவிக்க இவர்குளுக்கு உதவிக்கை நீட்டி ஒரு வேள்வியால் இவர்களை உள்நாட்டு மக்களாக, இராசபுத்திரராக அறிவித்து அரசியலில் இவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு தந்தனர் பிராமணர். அதன்பின்பு தான் சத்திரியரை விட பிரமணரே முன்நிலை என்ற வருணாசிரம நிலையை, ஸ்தானத்தை பிராமணர் இவர்களின் ஒப்புதலோடு பெற்றனர். இந்த இராசபுத்திரர் தாம் கொண்ட சூளுரைக்கு ஏற்ப வேள்வி சமயத்தையும், புராண சமயத்தையும் பேரளவில் உத்தாரம் (ஆதரவு) கொடுத்து தூக்கி நிறுத்தினர். தெற்கே பல்லவரும் சாளுக்கியரும் அத்தகு இராசபுத்திரர் ஆவர். அதனால் இவர்களால் சைவமும் வைணவமும் மதங்களாக வளர்ந்தன.

    மேற்கண்ட அரியலூர் மாவட்டக் கல்வெட்டைப் படியெடுத்து வெளியிட்டவர் முனைவர் இல. தியாகராஜன். இக்கல்வெட்டும் செய்தியும் James Robert சோழனார் முகநூல் பதிவில் உள்ளது.

    https://tamilnadu-favtourism.blogspot.com/2019/02/valeeswarar-temple-valikandapuram-perambalur.html

    வாலிகண்டபுரம் அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில், வரலாறு, சிறப்பு மற்றும் இப்பொழுதைய நிலை (1)

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் கோவில் சந்தன மண்டபம் தெற்கு சுவர் 24 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ[ ] கோயில் [பதிமு] பல
    2. கொத்திலும் செய்வதாக
    3. பெருமாள் சுந்தரபாண்டிய
    4. தேவர் ப்ரஸாதஞ் செ[ய்]தருளின
    5. திருமுகத்துக்கு கல்வெட்டு
    6. ஏ தன் விஸ்வமஹிபாலமணி கொ
    7. .. ர ..ண்ட்நம் [ ] ஸ்ரீமன் ஸூந்த்ரபாண்ட்யஸ்ய
    8. [ஸா]ஷநம் வைர . ஷநம் [ ] த்ரிபுவனசக்
    9. (க்)கரவ[ற்]த்தி கோனேரின்மை கொண்டா
    10. ன் அழகிய மணவாளப்பெருமாள்
    11. கோயில் ஸ்தாநபதிகளுக்கு இக்கோ
    12. யிலுக்கு முன்பு செய்துபோதும் [பதிமு]
    13. ஒரு கொத்தாகப் பெறாதுஎன்னூமித்தையிட்டு
    14. பலகொத்துமாக பத்தாவது ஆவணி மாத மு
    15. தல் [பதிமு] இட்டுக்கொள்வதாகவும் பொற்
    16. காவல் உள்ளவிடமெங்கும் ஆரியரும் உள்ளூராரும்
    17. ஒக்க காக்கவும் பண்ணுவதாக வாணாதராயற்குச்
    18. சொன்னோம். இப்படிக்கு இவ்வோலை பிடிபாடா
    19. க கொண்டு இப்படி செய்துபோதவும் ப
    20. ண்ணி இப்படி சந்த்ராதித்யவல் செய்வதாக கல்
    21. லிலும் செம்பிலும் வெட்டிகொள்க. இப்படி
    22. சொல்லுவதாக யா _ _ _ _ _ _ _ மாகக் காட்டச் சொ
    23. ன்னோம் இவைகச்சிநெல்மலி உடையா
    24. னெழுத்து யாண்டு 10 ள் 405

    திருமுகத்துகல்வெட்டு – அரசாணைக் கல்வெட்டு; ஸ்தானாதிபதி –தலைவர் chief; ஒக்க – இணைந்து

    விளக்கம்: பெருமாள் சுந்தர பாண்டியன் என்னும் சடவர்ம சுந்தரபாண்டியன் வாணாதராயருக்கு தனது10 ஆம் ஆண்டு ஆட்சியில் (1261 பொ.யு.) 45 ஆம் நாளில் இட்ட அரசாணையாவது, “கோனேரின்மை கொண்டான் அழகிய மணவாளப் பெருமாள் (திருவரங்கன்) கோயில் தலைவருக்கு! முன்பு செய்ததுபோல பதிமு ஒரு கொத்தால் செய்யப்பெறாது பலகொத்தாக சேர்ந்து ஆவணி 10 ம் நாள் பதிமு இட்டுக்கொள்ள பொற்காவல் (கருவூலம்) உள்ள இடமெங்கும் ஆரியரும் உள்ளூராரும் இணைந்து காத்தல் செய்ய வாணாதராயருக்குச் சொன்னோம். இதை இந்த ஓலையில் உள்ள வழிகாட்டுதல்படி சந்திராதித்தவர் வரை நடந்தேற கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க”.

    கருவூலத்தை காக்க ஆரியரும் உள்ளூராரும் என்ற சொற்றொடரில் பயிலும் ஆரியர் என்ற சொல் காவல் காக்க என்று வருவதால் பிராமணரைக் குறிக்கவில்லை வேளாண் அரசகுடியாரைக் குறிப்பதே என்பது தெளிவு. இதனால் 13 ஆம் நூற்றாண்டில் வேளாண் என்போர் ஆரியர் என்று அறியப்பட்டனர் என்றாகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 24, பக் 226, No 202 A.R. No 84 of 1938-39

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் கோவில் சந்திர புஷ்கரணிக்கு எதிரே உள்ள சுவரில் உள்ள 8 வரிக் கல்வெட்டு.

    1. கோனரயவம்மர் த்ரிபுவனச்சக்ரவத்திகள் ஸ்ரீ குலசேகரதேவர்க்கு யாண்டு 4 ஆவது ஆடி மாதம் 10 தியதி / நாள் கோயில் அகரம் இரவிவம்மச்சதுர்வேதிமங்கலத்து பட்டர்களுக்கு
    2. திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்களில் ஸ்ரீ வைகுந்ததாதரேன் பற்றுமுறி குடுத்த பரிசாவது [ ] இவ்வகர நத்தத்துக்கு வாஸ்து ஸேஷத்துக்கும் தவராசன் படுகைக்கும் விலையாக நிச்சயித்து திருக்கோட்டகாரத்தில்
    3. ஒடுக்குவதாந பணம் 2200. இப்பணம் இரண்டாயிரத்திரு நூற்றுக்கும் பற்றின திருப்பணிக்கு பிறித்த பணத்தில் பற்றின இரண்டாவது எதிராமாண்டு தை மாதம் 29 ம் தியதி திருப்பேரில் பிறி
    4. த்துத் தந்து பற்றின பணம் 200 ம் திருமுற்றுப்பற்று ஜகதேகவீர சதுர்வேதி மங்கலத்து பற்றின பணம் 829 ம் ஆகப் பணம் ஆயிரத்திருபத்தொன்பதும் ஆனி மாதம் இரண்டாந்தியதி ஆ
    5. ரியரைத் தெண்டம் நிச்சயித்த பணத்தில் பற்றின பணம் 1130. கைக்கோளர் பேரால் தெண்டம் நிச்சயித்த பணத்தில் குலசேகரதாதர் தந்து பற்றின பணம் 41 ம் ஆக பணம் 1171 ஆக பணம் 2200
    6. இப்பணம் இரண்டாயிரத்து இருநூறும் இப்படிகளால் பற்றிக் கொண்டு இரண்டாவதில் எதிராமாண்டு சித்திரை மாதம் ஏழாந்திய[தி] நாள் திருச்சிவிகைக்கும் திருவாசிகை[யு]ம் உள்ளிட்டனவயிற்றுக்கு நான்
    7. பொற்பண்டாரத்தில் ஒடுக்கின பொன்னிலே இவ்வாட்டை மார்கழி மாதம் 13 தியதி பிறித்து குடுத்து
    8. பற்றுமுறி குடுத்தேன் பட்டர்களுக்கு ஸ்ரீ வைகுன்ததாதரேன் [ ]. இப்பணம் பொற்பண்டாரத்திலே முதலிட்டு குடுத்தமைக்கு.

    கோயில் அகரம் – திருவரங்கம் அக்கிரகாரம்; பற்றுமுறி – ஒப்புகைச்சீட்டு, receipt, தண்டம் – fine; சிவிகை – சிறு பல்லக்கு; வாசிகை – ; திருக்கோட்டாகாரம் / பொற் பண்டாரம் – கருவூலம், முதலிட்டு – முன்பணம், advance

    விளக்கம்: குலசேகர பாண்டியனுக்கு 4 ஆம் ஆட்சிஆண்டில் (1317 சூலை7 ல்) ஆடி மாதம் 1 ம் நாள் கோயிலான திருவரங்கத்தின் அக்கிரகாரமான இரவிவர்மச் சதுர்வேதிமங்கலத்து பட்டர்களுக்கு திருப்பதி வைணவரான ஸ்ரீவைகுந்ததாசர் கொடுத்த பற்றுமுறி பரிசு யாதெனில் அந்த அக்கிரகாரத்து நத்தத்திற்கும் வாஸ்துசிறப்பிற்கும் வாங்கிக் கொடுத்த தவராசன் படுகை நிலத்திற்காக விலை தீர்மானித்து அவர் 2,200 பொன்னை திருக்கோட்டாகாரத்தில் செலுத்தினார். பின்பு இப்பணத்தை திருப்பணிக்காக பிரித்து வழங்குகிறார். இதாவது சிவிகை, வாசிகை உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும் இவர் கருவூலத்தில் செலுத்திய பொன்னில் அவ்வாண்டு மார்கழி மாதம் 13 ம் நாள் அப்பணத்தை பிரித்துக் கொடுத்ததற்கான, இதாவது பண்டாரத்திலே முன் பணத்தை கொடுத்ததற்கான பற்றுமுறியை பட்டர்களுக்கு ஸ்ரீ வைகுந்ததாசர் கொடுத்தார். அவருக்கு இந்த 2,200 பொன் எப்படி வந்ததென்றால் பணம் பெற்ற மூன்றாம் ஆண்டு தை மாதம் 29 ம் நாள் இறைவன் பேரில் பிரித்துத் தந்த பணம் 200 ம் ஜகதேகவீர சதுர்வேதி மங்கலத்தில் பெற்ற பணம் 829 ம் ஆக மொத்தம் 1029 பணம். ஆனி மாதம் இரண்டாம் நாள் ஆரியருக்கு தீர்மானித்த தண்டம் பணமாக பெற்றது 1,130. அதேபோல் கைக்கோளரிடம் தண்டமாக தீர்மானித்து குலசேகரதாசர் தந்து பெற்ற பணம் 41 என மொத்தம் 1171 பணம் ஆகும். 1029 + 1171= 2,200.

    குலசேகரதாசரும் வைகுந்த தாசரும் துறவிகள் போலத் தெரிகின்றது. போர்த் தொழில் செய்யும் வேளாண் ஆரியரும், கைக்கோளரும் தாம் போரிலோ அல்லது வேறு ஒரு காரணமாகவோ செய்த கொலை முதலான குற்றச் செயலுக்கு கழுவாயக செலுத்திய தண்டப் பணம் 1,171 என கருதலாம். ஏனெனில் பணம் எதற்காக தண்ப்பட்டதுஎன்ற செய்தி இல்லை.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 24, பக் 267, No 244 A.R. No 36 of 1936-37

    Share
  • இல்லறமே நல்லறம்

    -சியாமளா ராஜசேகர்

    இல்லறத்தை நல்லறமாய்ப் பேணி வாழ்ந்தால்
    ***இல்வாழ்வில் என்றென்றும் அமைதி தங்கும் !
    கல்லெறிந்தால் கலங்கிவிடும் குட்டை நீராய்க்
    ***கவலைகளை நினைத்திருந்தால் குழம்பும் நெஞ்சம் !
    பல்வேறு சங்கடங்கள் தொடர்ந்த போதும்
    ***பக்குவமாய்க் கலந்துபேசப் பறந்து போகும் !
    வெல்லுவழி புரிந்துகொள்ள மூத்தோர் கூற்றை
    ***விருப்போடு செவிகொடுத்துக் கேட்டல் நன்றே !!

    இருகைகள் தட்டினாற்தான் கேட்கும் சத்தம்
    ***இதையுணர்ந்து கொண்டாலே நீங்கும் பித்தம் !
    ஒருவருக்கொ ருவர்விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்
    ***ஒருபோதும் நிம்மதிக்கு மில்லை பஞ்சம் !
    செருக்கோடு தானென்று மார்தட் டாமல்
    ***சிறுபிணக்கை முளையினிலே கிள்ளல் வேண்டும் !
    வருந்துயரைத் துணிந்துயெதிர் நீச்சல் போட்டால்
    ***வாழ்க்கையெனும் படகுகரை யேறும் நன்றே !!

    பிறைநிலவை குறையென்று நீல வானம்
    ***பிரித்துவைத்தா தான்மகிழ்ச்சி இரவில் கொள்ளும் ?
    குறைகளையே எப்போதும் குத்திக் காட்ட
    ***குமைந்திருக்கும்‌ மென்மனமும் கனலைக் கக்கும் !
    நிறைகண்டால் பாராட்டும் உயர்ந்த வுள்ளம்
    ***நீடித்த மகிழ்விற்கு வித்தே யாகும் !
    உறவுகளை மதித்திருந்தால் மேன்மை பெற்றே
    ***உயர்ந்திடலாம் வாழ்வினிலே நாளும் நன்றே !!

    சியாமளா ராஜசேகர்
    இராயபுரம் , சென்னை – 600013
    அலைபேசி – 9840769555

    Share
  • தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++

    ++++++++++++++++++++++
    Reverse Osmosis Desalination Plant in Spain
    ++++++++++++++

    சூரிய வெப்ப சக்தி நிலையம்,
    சீரிய முறையில் 
    கடல்நீரைக் குடிநீராக்கும் !
    தமிழகக் கடற்கரை  
    குமரி முதல் சென்னை வரை 
    நானூர் மைல் நீண்டது !
    வானூர் திக்குப் பயன்பட்டது !
    பரிதி சக்தியால் பறக்கும் ஊர்தி !
    எரி வாயு இல்லாமல் பறக்கும் !
    பகலிலும் இரவிலும் பறக்கும் !
    பசுமைப் புரட்சியில் சிறக்கும் !
    பாதுகாப்பாய் இயங்குவது !
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் 
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி ஊட்டும்  !
    ஒற்றை விமானி ஓட்டுவார் !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்கள் தொடர்ந்து பறந்து
    உலகைச் சுற்றி  இறங்கியது !
    விலை மலியுது சூரிய சக்தி !
    நூறாண்டு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++++++++++

    Related image

    “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக் குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோ கித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

    “2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

    டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

    Schematic of a multistage flash desalinator

    A – steam in       B – seawater in       C – potable water out
    D – brine out (waste)       E – condensate out       F – heat exchange
    G – condensation collection (desalinated water)       H – brine heater
    The pressure vessel acts as a countercurrent heat exchanger. A vacuum pump lowers the pressure in the vessel to facilitate the evaporation of the heated sea water (brine) which enters the vessel from the right side (darker shades indicate lower temperature). The steam condensates on the pipes on top of the vessel in which the fresh sea water moves from the left to the right.

    ++++++++++++++++++++

    Related image

    Image result for solar thermal power plants pros and cons

    நீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்

    2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக்குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்கனலைப் பயன் படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக் கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”.

    +++++++++++++++++++++++++++

    DESALINATION PROCESSES BENEFITS
    MULTI-STAGE FLASH
    (MSF)
    – Used in many desalination plants, suitable for large-scale installations
    – Performance efficiency and output water quality is relatively unaffected by fluctuations in input seawater quality (such as salt concentration and turbidity)
    MULTIPLE EFFECT DISTILLATION
    (MED)
    – Good heat transfer efficiency; uses 40% less energy than reverse osmosis membrane method
    – Performance efficiency and output water quality is relatively unaffected by fluctuations in input seawater quality (such as salt concentration and turbidity)
    REVERSE OSMOSIS
    (RO)
    – The most energy-efficient process
    – Simple configuration can be installed relatively quickly

    Starting with the first desalination plant in 1971, Hitachi Zosen has installed 42 plants to date, mainly in Japan and the Middle East, with a combined output of 1.2 million cubic meters per day.

    +++++++++++++++++++++++++

    நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

    ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.

    கடல்நீரைப் புதுநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 16,000 இப்போது [2018] இயங்கி வருகின்றன!  பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது.  அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.

    +++++++++++++++++

    Latest technology: trials of solar heat power generation and desalination system

    A trial will be conducted of a new type of solar-powered desalination system that uses solar heat power generation technology. Solar-powered desalination uses sunlight as the heat source for distilling seawater.

    The trial is due to run from November 2012 to October 2013 in Saudi Arabia, with a view to commercialization of the system from FY 2014.

    +++++++++++++++

    இந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்பாடாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்பு நீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனியிழந்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப் படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன் படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.

    WATER DESALINATION


    METHODS
    +++++++++++++
    2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரி லிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப்படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெரு நிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.”
    ++++++++++++
    ++++++++++++++++++

    கல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளி வரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளள வாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day]! இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது.

    2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார்! இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்!

    +++++++++++++++++

     

    ++++++++++++

     சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.
    2013 -2014 ஆண்டுகட்கி இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி   [Solar Energy Industries Association ]  அறிவித்துள்ளது.  அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது.  மீள் பயன்பாடு கனல் எருவுக்கு மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும்  தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது.  இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.
     
    அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு  [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)]  தயாராகி வருகின்றன.  2010 ஆண்டிலிருந்து சூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது.  பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு   [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும்.  2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை.  அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters]
    விலைகளும்  சேர்க்கப் படவேண்டும்.
    உதாரணமாக 2013 ஆண்டில்  ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh  மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையகக்  [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார்.  அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது.  அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது.  அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது.  அதனால் 25 ஆண்டுகட்டு  சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.

     

    World’s Largest Lithium Ion Battery Banks

    By Tesla

    ++++++++++++++++++++

     

     

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார்.  அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    A close-up of Musk's face while giving a talk
    Elon Musk 
    Space X Falcon Heavy Rocket Pioneer
    BORN Elon Reeve Musk
    June 28, 1971 (age 46)
    PretoriaTransvaal (now Gauteng), South Africa
    RESIDENCE Bel AirLos AngelesCalifornia, U.S.[1][2]
    CITIZENSHIP
    • South Africa (1971–present)
    • Canada (1989–present)
    • United States (2002–present)
    ALMA MATER
    OCCUPATION Entrepreneurengineerinventor, and investor
    KNOWN FOR SpaceXPayPalTesla Inc.HyperloopSolarCityOpenAIThe Boring CompanyNeuralinkZip2
    NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6]
    TITLE
    SPOUSE(S)
    CHILDREN 6
    PARENT(S)
    RELATIVES
    SIGNATURE

    Image result for Lithium Ion Research

    Image result for Solar Power Fuel Cell

    இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும்.  அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது.  மீள்சுழற்சி  கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை.  2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.  நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும்.  மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

    Image result for Lithium Ion Technology

    Image result for Solar Power Fuel Cell

    மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது.  2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன.  அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது.  2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய்  ஏறிவிடும்  என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for Lithium Ion Technology

    Elon Musk’s Tesla Roadster
    Tesla Roadster in Falcon Heavy fairing.jpg

    The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation
    OPERATOR SpaceX
    MANUFACTURER Tesla
    INSTRUMENT TYPE Inert mass
    FUNCTION Dummy payload
    WEBSITE spacex.com
    PROPERTIES
    MASS Approximately 1,300 kg (2,900 lb)
    HOST SPACECRAFT
    LAUNCH DATE January 2018
    ROCKET Falcon Heavy
    LAUNCH SITE Kennedy LC-39A
    ORBIT Heliocentric

    Image result for Solar Power Fuel Cell

    மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும்.  எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது.  லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட  20% கனல்சக்தி  திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு.  நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும்.  2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார்.  2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for large size 100 mw battery

    Image result for Solar Power Fuel Cell

    மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன.  சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது.  மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.

    Image result for Solar Power Fuel Cell

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    ++++++++++++++++++

    Image result for Lithium Ion Research

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits : Swiss Solar Impulse Design & Other Web Sites

    1.  BBC News : Solar-powered Plane Lands Safely After 26 Hour Flight (July 8, 2010)

    2.  Swiss Solar Plane Makes History with Round-the-clock (Manned) Flight (July 8, 2010)

    3.  Aerospace – Solar Impulse Plane Packed with Technology (July 8, 2010)

    4.  BBC News – Science & Environment – Zephyr Solar Plane Set for Record Endurance Flight By: Jonathan Amos (July 14, 2010)

    5.  Wikipedia – Electric Aircraft – electric aircraft is an aircraft that runs on electric motors rather than internal combustion engines with electricity  coming from fuel cells, solar cells, ultracapacitors, power beaming and/or batteries.

    6. http://www.bbc.com/news/world-australia-40527784  [July 7, 2017]

    7. http://www.onenewspage.com/video/20170707/8359018/Tesla-to-Build-World-Biggest-Battery-in.htm

    8.  http://solarpv.tv/index.php/2016/08/10/solarstorage-in-india-seci-publishes-tender-for-100-mw-grid-connected-solar-pv-projects-along-with-large-scale-battery-energy-storage-system-at-kadapa-solar-park-andhra-pradesh/ [August 10, 2016]

    9.  http://www.cnbc.com/2017/07/07/tesla-largest-battery-system-in-the-world-elon-musk-says.html [July 7, 2017]

    1. https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power
    2. https://www.hgtv.com/remodel/mechanical-systems/exploring-solar-energy-options
    3. https://www.hgtv.com/remodel/mechanical-systems/before-going-solar
    4. https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-evolution-of-solar-power
    5. https://www.hgtv.com/remodel/mechanical-systems/solar-power-101
    6. https://www.hgtv.com/remodel/mechanical-systems/real-experiences-with-solar-power
    7. https://www.hgtv.com/remodel/mechanical-systems/getting-started-with-diy-solar-power
    8. http://homeguides.sfgate.com/positive-negative-effects-solar-energy-79619.html
    9. https://gcep.stanford.edu/pdfs/assessments/solar_assessment.pdf
    10. https://en.wikipedia.org/wiki/Solar_power [April 30, 2018]
    11. https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power [May 1, 2018]
    12. https://en.wikipedia.org/wiki/Solar_cell [May 4, 2018]
    13. 7. https://en.wikipedia.org/wiki/Desalination  [May 10, 2019]

      8. https://www.unenvironment.org/news-and-stories/story/towards-sustainable-desalination

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [May 11, 2019] [R-3]

     

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 10

    -மேகலா இராமமூர்த்தி

    இருபத்தோராம் நூற்றாண்டு இணையமற்று, கைப்பேசியற்று வாழ்வதே மாந்தகுலத்துக்கு சாத்தியமற்ற ஒன்று எனும்படியாகச் சமூக சூழலை மாற்றிவிட்டிருக்கின்றது. உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொழில்நுடங்கள் துணைநிற்கின்றன; காசிநகர்ப் பேசும் புலவருரையைக் காஞ்சியில் நேரடியாகவே கேட்பதற்கு விழியங்கள் நிகழ்படங்கள் வழிசெய்துவிட்டன.

    சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாணிகம் களைகட்டுகின்றது. முகநூல் நிறுவனர் திரு. மார்க் சக்கர்பர்க் (Mark E. Zuckerberg) முகநூல் விளம்பரங்கள் வாயிலாகவே கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றார். சாமானிய மக்களுங்கூடத் தங்கள் வாணிகத்தைப் பெருக்க புலனக் குழுமங்களைப் பயன்படுத்திவருகின்றனர்.

    இவ்வாறு வாணிகம், பொழுதுபோக்கு, கருத்துப் பரிமாற்றம், காட்சிப் பரிமாற்றம் என்று பல்வேறு வகைகளில் சமூக வலைத்தளங்கள் மக்களுக்குப் பயனளித்தாலும் இவற்றால் விளையும் ஆபத்துக்களும் நாளுக்குநாள் அதிகரித்தே வருவதைக் காண்கின்றோம். ஆம், தொழில்நுட்ப வசதிகளின் துணையோடு இன்றைய தேதியில் நாம் ஒரு தனிநபரையோ, அரசியல்கட்சித் தலைவரையோ மிக மோசமானவராகவும் சித்திரிக்க முடியும்; உலக உத்தமராகவும் உருமாற்றிக் காட்டவியலும். அரசியல் காழ்ப்பின் காரணமாகக் கட்சிகள் ஒன்றையொன்று இழித்தும் பழித்தும் வெளியிடும் உண்மைக்குப் புறம்பான மீம்களும் (memes), வக்கிரப் பதிவுகளும் தேர்தல் காலங்களில் உக்கிரமடைவதைக் காணமுடிகின்றது.

    தலைமைப் பதவிகளுக்குப் போட்டியிடும் அரசியலாளர்கள் சமூக வலைத்தளங்களைத் தம் அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அநாகரிகப் போக்கும் உலகளாவிய ஒன்றாகவே சமீப காலங்களில் மாறிவிட்டது.

    கேம்பிரிட்ஜ் அனலட்டிகா எனும் அரசியல் தரவுச் சேகரிப்பு நிறுவனம் (Cambridge Analytica, a political data firm) முகநூலோடு இணைந்து அமெரிக்க அதிபர் திரம்புக்கு (Donald J. Trump) ஆதரவாகச் செய்த சில திரிபு வேலைகள் அவரை அதிபர் நாற்காலியில் அமரவைக்கப் பேருதவி புரிந்திருக்கின்றன என்பதை அறிகின்றபோது, பொதுமக்களுக்கு நன்முறையில் பயன்படவேண்டிய, நேரிய தகவல்களைத் தரவேண்டிய சமூக வலைத்தளங்கள் எத்துணைத் தவறான வழிகாட்டுதல்களைப் பணத்துக்காகச் செய்கின்றன என்ற வருத்தமே மேலிடுகின்றது.

    முகநூலில் இளம்பெண்களைக் குறிவைத்து அவர்களிடம் நண்பர்களாகத் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்கின்ற காமுக இளைஞர் கூட்டம் அப்பெண்களைப் போலியான காதல் வலையில் வீழ்த்தி, அவர்களின் ஒழுக்கத்துக்குக் களங்கம் விளைவித்துக் காசு பார்த்துவருவதையும், அதற்கு உடன்பட மறுப்போரை எதுவும் செய்யத் துணிவதையும் சமீபத்தில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன. இவைபோதாவென்று மார்ஃபிங் (Morphing) முறையில் ஒரு பெண்ணின் உடலையும் மற்றொரு பெண்ணின் தலையையும் இணைத்துச் செய்யும் ஆபாச அக்கிரமங்களுக்கும் அளவேயில்லை. இதனால் எத்தனையோ இளம்பெண்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலைக்கு ஆளாகின்றார்கள். இவற்றையெல்லாம் நோக்குகையில், மனிதர்களின் நிம்மதிக்கும் நல்வாழ்வுக்கும் உலை வைக்கும் இந்தத் தொழில்நுட்பப் பயன்பாடுகள் தேவையா என்ற வெறுப்பும் ஏற்படவே செய்கின்றது.

    விவரமறியாப் பள்ளி, கல்லூரி மாணவிகள்தாம் இத்தொழில்நுட்பங்களின் பின்னணியில் ஒளிந்திருக்கும் விபரீதங்களை உணர்ந்துகொள்ளாமல் ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றார்கள் என்றால் திருமணமாகிக் குழந்தைபெற்ற பொறுப்புள்ள தாய்மார்களும்கூடத் தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் தம் அந்தரங்கங்களை முகமறியாத் தறுதலைகளிடம் பகிர்ந்துகொண்டு வம்பை விலைகொடுத்து வாங்குகின்றார்கள்.

    வேறு சில இல்லத்தரசிகளோ இல்லறக் கடமைகளை மறந்து, பிள்ளைகளைப் பேணும் பொறுப்பையும் துறந்து, சமூக வலைத்தளங்கள் (social media), புலனம் (WhatsApp), யூ ட்யூப் (You Tube) முதலியவற்றிலேயே மூழ்கிக் குடும்ப வாழ்வையே குட்டிச்சுவராக்கிக் கொள்கின்றனர்.

    தீபத்தை வைத்துத் திருக்குறளும் படிக்கலாம்; குடியிருப்பையும் எரிக்கலாம் என்பதுபோல் சமூக வலைத்தளங்களும் இருவிதமான வாய்ப்புக்களை மக்களுக்கு வழங்குகின்றன. அவ் வாய்ப்புக்களை நல்லவகையில் பயன்படுத்தி முன்னேறுவதும் தீயவகையில் பயன்படுத்திச் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் அவரவர் கைகளிலேயே உள்ளது.

    ”தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்…”
    என்பார் திருமூலர். ஆகையால் அவரவரும் தம்முடைய இயல்பையும், தமக்கு நன்மை பயப்பது எது, தீமை பயப்பது எது என்பதையும் தெளிவாக உணர்ந்து நன்றின்பால் தம் அறிவைச் செலுத்தினாலே எத்துணையோ ஆபத்துக்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளலாம்.

    இதுவரை இக்கட்டுரைத் தொடரில் பேசப்பட்டவற்றைத் தொகுத்துரைப்பதென்றால்…அறிவிலும் ஆற்றலிலும் ஆளுமையிலும் சிறந்து விளங்கிய பண்டைத்தமிழ்ப் பெண்கள் சிறிது சிறிதாகத் தம் சுதந்தரத்தையும் அதிகாரத்தையும் இழந்தனர். ஆடவர்க்கு அடிமைகளாய், அவர்தம் மோகம் தீர்க்கும் போகப்பொருளாய் மாற்றப்பட்ட அப்பெண்கள் கல்விக் கண்ணை இழந்து குருடராய்ப் பலகாலம் அறியாமை இருட்டில் தவித்திருந்தனர். இந்த அவலநிலை அகன்று அவர்கள் மீண்டும் கல்வி எனும் கண்ணொளி பெற்றது ஆங்கிலேயர் வருகைக்குப் பின்பே.

    இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் பன்முகத் திறனும் வெளிப்படுவதற்கு அச்சு ஊடகங்களும், வானொலி, தொலைக்காட்சி போன்ற சமூக ஊடகங்களும் வழிவகை செய்தன. அதன்வாயிலாய், கல்விகற்ற பெண்கள் பலர் கதை கட்டுரை கவிதை என்று பல்வேறு வடிவங்களில் தம் எண்ணங்களை எழுத்துக்களாக்கிக் கதாசிரியர்களாய், கவிதாயினிகளாய் முத்திரை பதிக்கத் தொடங்கினார்கள்.

    இணையம் வந்த பின்னரோ யாரும் எழுத்தாளராகலாம்; எவரும் கவிஞராகலாம் என்ற கட்டற்ற சுதந்தரம் கிட்டியுள்ளது. அம்மட்டோ? தேவையானதைப் படிக்கலாம்; காண விரும்புவதைக் காணலாம்; திறன்பேசிச் செயலிகளின் உதவியோடு உரையாற்றலாம்; ஆடலாம், பாடலாம், நடிக்கலாம் என்ற நிலை சாத்தியப்பட்டிருக்கின்றது. நாம் பேசுவதை அப்படியே எழுதிவிடும் மென்பொருள்களும் இப்போது பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இவ்வளவு வசதிகளும் நடைமுறைக்கு வந்துவிட்ட 21ஆம் நூற்றாண்டை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் பொற்காலம் என்று கூறினும் மிகையில்லை.

    ஆகவே, நம் மக்கள் குறிப்பாகப் பெண்கள் தம் பன்முக ஆற்றலையும் தொழில்நுட்ப அறிவையும் கவைக்குதவாத வெட்டி விவாதங்களிலும், தேவையற்ற பொழுதுபோக்குகளிலும், அரசியல்வாதிகளின் பொய்யுரைகளைக் கேட்பதிலும் வீணடிக்காது, அறிவார்ந்த வகைகளில் பயன்படுத்தத் தொடங்கினால் எவ்வளவோ சாதனைகளை நிகழ்த்தமுடியும்; உலகுக்கே உதாரண மங்கையராய்த் திகழமுடியும்!

    அத்தோடு, சமூகத்தில் நிகழ்கின்ற அவலங்களையும், பெண்களுக்கு எதிரான பாலியல், குடும்ப வன்முறைகளையும் கண்டிப்பதற்கும் களைவதற்கும் வலைத்தளங்கள், புலனக் குழுக்களைச் சமூக நலத்தில் நாட்டங்கொண்ட பெண்கள் பயன்படுத்தலாம். வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, அவர்களுக்குச் சட்டரீதியான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவது போன்றவற்றையும் செய்யலாம். இம்முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பொருட்செலவு ஏதுமில்லை; அருள்மனமும் சமூகப் பொறுப்புணர்ச்சியுமே தேவை!

    தாழ்வுற்றுத் தளைப்பட்டு கிடந்த நம் பெண்கள், பூட்டிய இருப்புக்கூட்டின் கதவுகளைத் திறந்துகொண்டு சிம்புள் பறவைகளாய்ச் சிறகுவிரித்துப் பறக்கத் தொடங்கிவிட்டனர். இனி ஆண்களுக்கு நிகராக… ஏன்… அவர்களையும் மிஞ்சும் வகையில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை நிகழ்த்த வேண்டும்; சரித்திரம் படைக்க வேண்டும்; வறியோரின் தரித்திரம் துடைக்க வேண்டும்!

    பெண்களே! உம் வளர்ச்சியைத் தடைசெய்யும் இடையூறுகள் அனைத்தையும் தன்னம்பிக்கை எனும் உளிகொண்டு தகர்த்தெறியுங்கள்! துணிச்சலெனும் கவசமணிந்து, அறிவின் துணையோடு வாழ்க்கைப் பாதையில் நடைபோடுங்கள்!

    வெற்றி நிச்சயம்!

    [முற்றும்]

     

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-41

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-41

    41. கல்லாமை

    குறள் 401:

    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல்

    நெறய புத்தியக் கொடுக்க நூல்களப் படிக்காதவன்  படிச்சவங்க சபையில பேசுதது கட்டம் வரையாம தாயக்கட்டம் ஆடுததுக்கு சமானம்.

    குறள் 402:

    கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
    இல்லாதாள் பெண்காமுற் றற்று

    படிக்காதவன் ஒண்ணச் சொல்ல விரும்புதது முலை ரெண்டும் இல்லாதவ பெண் தன்மய விரும்புதது கணக்கா ஆவும் .

    குறள் 403:

    கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
    சொல்லா திருக்கப் பெறின்

    படிச்சவங்க முன்ன ஒண்ணும் பேசாம அமைதியா இருந்தாம்னா  படிக்காதவங்களும் ரொம்ப நல்லவங்களாத்தான் நெனைக்கப்படுவாக.

    குறள் 404:

    கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
    கொள்ளார் அறிவுடை யார்

    படிக்காதவனுக்கு பொறப்பிலயே புத்தி இருந்தாலும் படிச்சவுக அவன ஒசந்தவன் னு  ஒப்புக்கிடமாட்டாங்க.

    குறள் 405:

    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும்

    படிக்காதவன் தன்னைய அறிவாளி னு காட்டிக்கிட படிச்சவங்க முன்ன நடிச்சாம்னா அவன் பேசும்போது அவனோட பொய்வேசம் கலஞ்சிபோயிரும்.

    குறள் 406:

    உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
    களரனையர் கல்லா தவர்

    படிக்காதவங்க உசிரோடஇருக்காங்க னு சொல்லிக்கிடலாம் அம்புட்டுதான். அவங்க வெளச்சலுக்கு ஒதவாத களர்நிலம் கணக்காதான்.

    குறள் 407:

    நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
    மண்மாண் புனைபாவை யற்று

    பாக்குததுக்கு அழகா மட்டுமே இருந்து படிச்சு தெளிவான புத்தியப்  பெறாதவங்க கண்ணக் கவருத மண் பொம்ம கணக்காதான் மதிக்கப்படுவாங்க.

    குறள் 408:

    நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
    கல்லார்கண் பட்ட திரு

    படிக்காத முட்டாள் கிட்ட இருக்க சொத்து நல்லவங்க கிட்ட இருக்க வறுமய விட கூடுதலா கொடும செய்யும்.

    குறள் 409:

    மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
    கற்றா ரனைத்திலர் பாடு

    படிக்காதவர் மேல் சாதில பொறந்திருந்தாலும் கீழ் சாதில பொறந்திருந்தாலும் படிச்சவர் அளவுக்கு பெரும இல்லாதவரு தான்.

    குறள் 410:

    விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
    கற்றாரோ டேனை யவர்

    மனுசங்களுக்கும் மிருகங்களுக்கும் என்ன வேத்துமையோ அதே தான் ஒசந்த நூல்கள படிச்சவங்களுக்கும் படிக்காதவங்களுக்கும் இருக்கு.

    (அடுத்தாப்லயும் வரும்…

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (294)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.

    தேர்தல் !

    ஜனநாயகக் கோட்பாடுகளின் அடித்தளம் தேர்தல் என்றால் அது மிகையில்லை. ஆனால் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பது அத்தேர்தலின் நடைமுறைப்படுத்தலே. நான் ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்த போது எனக்கு வயது 18 இன்றோ 62 எனும் முதுமையின் வாசலில் நுழைந்து விட்டேன். நான் ஈழத்தில் அன்று பார்த்த தேர்தல்களுக்கும், இன்று இங்கிலாந்திலே பார்க்கும் தேர்தல்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. அன்றைய எனக்கு தேர்தல் என்பது ஒரு திருவிழா போன்ற உணர்வையே அளித்தது. அத்தேர்தல்களினால் ஏற்படப்போகும் மாற்றங்கள் எவ்வாறு எம்முடைய அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகிறது என்பதன் அர்த்தத்தைச் சரியாக உள்வாங்கியிருக்கவில்லை. ஈழத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் தேர்தல் என்பது அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு ஊடகமாகவே கருதினார்கள். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முன்வைக்கும் தமிழ்க் கட்சிகள் தமிழர் பிரதேசங்களில் பெரும்பான்மை பலத்தை பெறுவது நடைமுறை வழக்கமாகவிருந்தது.

    தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுமையான அர்த்தத்தை உள்வாங்கும் அளவிற்கு பரந்த அளவிலான நோக்கத்தை அப்போது நான் கொண்டிருக்கவில்லை என்பதோடு அரசியல்வாதிகளின் பொதுவான கோஷம் தமிழர்களின் மறுக்கப்படும் உரிமைகளைப் பற்றியதாகவே இருந்தது என்பதுவே உண்மை. நான் புலம் பெயரும் போது வாக்களிக்கும் வயதினை அடையாததினால் ஈழத்தில் எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. தேர்தல்களின் உண்மையான தாக்கத்தைப் புரிந்து கொண்டது நான் புலம்பெயர்ந்து வாழ்ந்த இங்கிலாந்து தேசத்திலே தான். 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் நாள் நான் இங்கிலாந்தில் கால் பதித்தேன். அந்த ஆண்டே இங்கிலாந்தில் ஒரு தேர்தல் வந்தது. அத்தோடு ஒரு சர்வஜன வாக்கெடுப்பும் வந்தது. இங்கிலாந்தில் அப்போதுதான் புதிதாக வந்ததாலும், இங்கிலாந்தின் குளிர்காலச் சூழலுடன் சதிராடுவதோடு கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தியதாலும் அன்று அந்தத் தேர்தலிலும், சர்வஜன வாக்கெடுப்பிலும் நான் அதிக கவனம் செலுத்தவில்லை. என்னுடைய நாட்டுத் தேர்தலையும் இங்கிலாந்தின் தேர்தலையும் ஒப்பிடக்கூடிய மனநிலையையும், அரசியல் அறிவையும் பெற்றிருக்கவில்லை. அன்றைய சூழலில் மேற்படிப்பை முடித்துக் கொண்டு ஈழம் திரும்புவதே என் நோக்கமாக இருந்ததால் இங்கிலாந்தை இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? எனும் ஒரு மனப்பான்மை என்னை வியாபித்திருந்ததோ என்று இன்று என்னை எண்ணத் தூண்டுகிறது..

    இன்று இங்கிலாந்தில் 44 வருட வாழ்க்கையை முடித்து 45வது வருடத்தில் கால் பாதித்திருக்கும் எனக்கு எத்தனையோ தேர்தல்களை இங்கிலாந்தில் சந்தித்த அனுபவம் உண்டு. பல பிரதமர்களையும், பல கட்சிகள் அரசியல்பீடம் ஏறியதைப் பார்த்த அனுபவங்களும் உண்டு. பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியத்தை ஆண்ட தலைவர்களையும், ராஜ்ஜியத்திலிருந்து பூஜ்ஜியமான தலைவர்களையும் பார்த்த அனுபவம் உண்டு. இந்த நிலையிலே இங்கிலாந்தின் தேர்தலோடு எமது பின்புலங்களில் நடைபெறும் தேர்தலை குறிப்பாக இந்திய மண்ணில் தற்போது நிகழும் பொதுத்தேர்தலையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்கத் தலைப்படுகிறேன். எனது மனைவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் தமிழ் மீதும் அதன் தாயகமான தமிழகத்தின் மீதும் அன்பும், மதிப்பும் கொண்டுள்ளதாலும் இந்திய நாட்டிற்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்வதை வழமையாகக் கொண்டிருப்பதால் அங்கு அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் ஒரு மூன்றாவது கண்கொண்டு இதைப் பார்க்க விழைகிறேன்.

    இங்கிலாந்தினைப் பொறுத்தவரையில் தேர்தலில் பல வருடங்களாக இரண்டு கட்சிகளே முன்னனியில் இருக்கின்றன. கன்சர்வேடிவ் கட்சி எனும் வலதுசாரக் கொள்கை கொண்ட கட்சியும், லேபர் கட்சி என்று சொல்லப்படும் ஸோசலிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரக் கட்சியுமே அவையாகும். அதைத் தவிர இரண்டுக்கும் இடைப்பட்ட கொள்கையுடைய லிபரல் டெமகிரட்ஸ், தேசியவாதக் கொள்கை கொண்ட தீவிர வலதுசாரக் கட்சியான யூகிப், மற்றும் மிகவும் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரெக்ஸிட் எனும் கட்சி என்பனவும் சில உதிரிக் கட்சிகளும் இயங்குகின்றன. இங்கிலாந்து அரசின் ஆயுட்காலம் ஜந்து வருடங்களாகும். ஆனால் 2010ம் ஆண்டு வரையும் பெரும்பான்மையான சமயங்களில் அரசை நான்கரை ஆண்டுகளிலிருந்து ஜந்து ஆண்டுகளுக்குள் கலைப்பது வழமையாக இருந்தது. ஆனால் 2010ம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியின் பெரும்பான்மை மிகவும் குறைவாக இருந்தமையால் முதன்முறையாக லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்டார்கள். அக்கூட்டரசாங்கத்தில் இயற்றப்பட்ட முதல் சட்டங்களில் ஒன்றாக பாராளுமன்றம் பாராளுமன்ற அங்கத்தினர்களின் பெரும்பான்மை இல்லாமல் ஜந்து ஆண்டுகளுக்கு முன்பாக கலைக்கப்பட முடியாது எனும் சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

    இந்திய நாட்டை எடுத்துக் கொண்டால் அங்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் ஜந்து வருடங்களுக்கொருமுறையே நடைபெறுகிறது. இந்தியாவைப் பற்றிய உலகளாவிய கண்ணோட்டம் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியா என்பதுவே. ஆனால் இந்திய நாட்டில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம். முக்கியமான கட்சிகள் சிலவாகவே இருந்தாலும் இந்திய தேர்தல்களைப் பொறுத்தவரையில் அதிக அளவில் கூட்டரசாங்கம் அமைப்பதுவே இடம்பெறுகிறது. ஆச்சரியத்துக்கும், கேள்விக்குரியதுமான விடயம் என்னவெனில் கொள்கையளவில் முற்றுமுழுதாக வேறுபட்டிருக்கும் கட்சிகள் தேர்தல் சமயங்களில் கூட்டணி அமைத்துக் கொள்வதுதான். ஏறத்தாழ அடிப்படைக் கொள்கையில் ஒன்றுபட்ட கட்சிகள் இணைவது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே. ஆனால் ஒன்றுக்கொன்று முரணான கட்சிகள் இணைவதில் பல கேள்விகள் மனதில் எழுவது இயற்கையே !

    இங்கிலாந்து, இந்தியத் தேர்தல்களை சிறிது ஒப்பு நோக்குவோம். இரண்டு நாடுகளிலேயும் ஜனநாயக ஆட்சி எனும் பொறிமுறையே கையாளப்படுகிறது. தேர்தல்களில் யார் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் பொதுவாக “first past the post” என்பார்கள். பலநாடுகளில் விகிதாசார வாக்கெடுப்புத் தேர்தல்களே நடைபெறுக்கிறது ஒவ்வொரு கட்சியும் தமது கட்சிக்கான வேட்பாளர்களைத் தொகுதி வாரியாக அறிவித்தாலும் வாக்கு அந்நபர்களுக்கு அல்லாமல் கட்சிக்கே போடப்படுகிறது. அதன் பின்னால் ஒவ்வொரு கட்சிக்கும் விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையில் அக்கட்சிக்கு இத்தனை உறுப்பினர்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் எமது இருநாடுகளிலும் வாக்குகள் தேர்தலில் போட்டியிடும் கட்சியோடு போட்டியிடும் வேட்பாளர்களையும் கருத்திற்கொண்டு வாக்களிக்கப்படுகிறது.

    இங்கிலாந்தில் கட்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள் தேர்தலின் முன்னால் அக்கட்சிகளின் மாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அத்தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலும் அக்கட்சியின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையிலும் மக்கள் தாம் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்கிறார்கள். இங்கிலாந்தின் தேர்தல் முடிவுகளின் தீர்மானத்தில் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் முன்னிலை படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சாதாரண வாக்காளரும் மிகவும் உன்னிப்பாக அப்போது பதவியிலிருக்கும் அரசால் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி அதன் அடிப்படையில் தம் வாக்களிப்பைத் தீர்மானிக்கிறார்கள்.

    அதேநேரம் இந்தியத் தேர்தலும் பெயரளவில் ஜனநாயகக் கோட்பாடுகளில் நடைபெற்றாலும் அத்தேர்தல் சமயங்களில் நாம் கேள்வியுறும் செய்திகளின் அடிப்படியில் தேர்தல் முடிவுகளின் தீர்மானம் எந்தக் கட்சிக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறதோ அதன் வழி என்பது போலத் தோன்றுகிறது. தேர்தல் சமயங்களில் ஒவ்வொரு கட்சியினது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா இல்லையா எனும் கேள்வி வாக்களர்களிடையே அலசப்படுக்கிறதா என்பதும் குழப்பமாகவே இருக்கிறது..

    இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் தேர்தல் பிரசாரங்கள் ஓரளவு அரசியல் நாகரீகத்துடனேயே நடைபெறுகிறது. பெரும்பான்மையாக தனிமனித தாக்குதல்கள் தவிர்க்கப்படுகிறது. இரண்டு கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான விவாதம் நாகரீகமான முறையிலேயே பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது. ஆங்காங்கே சில சமயங்களில் விதிவிலக்குகள் இடம்பெறுவதுண்டு. ஆனால் அவை உடனடியாக பிரபல்யப்படுத்தப்பட்ட அதில் சம்பந்தப்பட்டவர்களின் மீதான விமர்சனம் சரியான முறையில் ஊடகங்களில் ஆராயப்படுகிறது. ஊடகங்களின் பொதுவான அடிப்படை ஆதரவு வெவ்வேறு கட்சிகளை நோக்கி இருந்தாலும் கூட அவைகளின் செய்திகள் நடுநிலைமை வாய்ந்ததாகவே இருக்கும். குறிப்பாக செய்திகள் வெளியிடப்படும் போது அது ஒருபக்கச் சார்பாக அமைவது குறைவு.

    இந்தியத் தேர்தல் பிரசாரங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த அரசியல் நாகரீகம் பேணப்படுவது அரிது. இது எமது கலாச்சாரத்தின் விளைவா? அன்றி அரசியல்வாதிகளின் உணர்வினைக் கட்டுப்படுத்தத் தவறும் இயல்பா? என்பது கேள்விக்குறியே! அத்தோடு ஊடகங்கள் அப்பட்டமாக ஒருபக்கச் சார்பாக செய்திகளை வெளியிடுவதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஊடகங்களில் நடுநிலைமை வகிப்பன மிகவும் சொற்பமாகத்தான் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தமக்குச் சார்பான ஊடகங்கள் மூலம் மக்கள் மீது திணிக்கும் பிரச்சாரச் செய்திகள் மக்களைத் திக்குமுக்காடச் செய்க்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. சில தொலைக்காட்சி விவாதங்களை கண்ணுற்ற வேளை அவ்வூடக நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் சரியான கொள்கைரீதியிலான கேள்விகளை முன்வைத்தாலும் அவற்றிற்கு பதிலளிக்கும் அரசியல்வாதிகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தம்மையறியாமலே சிலசமயங்களில் தனிமனித தாக்குதல்களில் இறங்கி விடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

    இங்கிலாந்து தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சியும் தமது தேர்தல் பிரசாரங்களுக்காக செலவளிக்கும் பணத்துக்கு இவ்வரம்பினை மீறும் கட்சிகளின் மீதும், அதனுடன் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. ஒரு வரம்பு நிர்ணயித்திருக்கிறது. இதன் உதாரணமாக கடந்த 2017 பொதுத்தேர்தலின் போது ஒரு தொகுதியில் இவ்வரம்பு மீறப்பட்டதாக குற்றம் சாட்டி அதற்கான வழக்குத் தொடரப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. அத்தோடு 2016ம் ஆண்டு நடைபெற்ற ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைபெறுவதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பில் வெளியேற வேண்டும் எனும் அணி தமது பிரசாரங்களுக்காக அனுமதிக்கப்பட தொகையை மீறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்து அதையோட்டி சர்ச்சைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

    நடந்து முடிந்த இந்திய பொதுத் தேர்தலின் போது பணம் சம்பந்தமான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. ஒரு சில தொகுதிகளில் தேர்தல் கூட இரத்துச் செய்யப்பட்டுள்ளதைக் கேள்வியுறுகிறோம். சரி இங்கிலாந்திலும் இப்படியான சம்பவம் நடந்துள்ளதாக மேலே குறிப்பிட்டுள்ளாயே என்ன வித்தியாசம் ? எனும் கேள்வி எழலாம். இங்கிலாந்தில் இத்தகைய சம்பவங்களின் செய்தி மக்களுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணுமளவுக்கு மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. ஆனால் இந்தியாவில்? கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஒரு ஜனநாயக ஆட்சியில் தேர்தலின் முக்கியத்துவம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே! மக்களின் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களுக்காக நாட்டினைச் சரியான பாதையில் செலுத்தும் முக்கிய நோக்கத்திற்காகவே இந்தத் தேர்தல். மக்களின் சேவகர்கள் என மக்களால் நியமிக்கப்பட்டவர்கள் சில சமயங்களில் அம்மக்களால் புரிந்து கொள்ள முடியாத சில விடயங்களில் அம்மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணான வகையில் நடந்து கொள்ளும் தேவையேற்படுக்கிறது. அதுகூட ஜனநாயகத்தின் ஒரு அங்கமே! அப்படி நடந்து கொள்ளும் போது அதற்கு சரியான விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டியது அவர்களது கடமை.

    கட்சித் தாவல் என்பது இரண்டு நாடுகளிலேயும் நிகழத்தான் செய்கிறதி. ஆனால் இங்கிலாந்தில் அதன் எண்ணிக்கை குறைவு. அப்படிக் கட்சி தாவும் போது அவர்கள் மக்கள் தம்மைத் தெரிவு செய்தது தமது மீதான மதிப்பினாலா? அல்லது தாம் அங்கம் வகித்த கட்சிக்காவா? என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம். என்னைப் பொறுத்தவரை அரசியல் தர்மம் என்பது அவர்கள் அப்பதவியை இராஜினாமாச் செய்து மீண்டும் தேர்தலில் நிற்பது என்பதே. அப்படி மீண்டும் தேர்தலில் நிற்கும் போது அவர்கள் தமது செய்கைக்கான விளக்கத்தை மக்களுக்கு கொடுக்கக்கூடிய சந்தர்ப்பத்தைப் பெறுகிறார்கள்.

    இம்மடலின் நோக்கம் இரண்டு நாடுகளைக் குறிப்பிட்டு ஒன்றினை விட மற்றொன்று குறைந்தது என்று சுட்டிக்காட்டுவதல்ல. ஈழத்திலிருந்து 45 வருடங்களுக்கு முன்னே புலம்பெயர்ந்த என் முன்னே விரிந்த அரசியல் உலகம் இங்கிலாந்திலேயே நிகழ்ந்தது. இங்கிலாந்தை அடுத்து நான் அதிகமாக பயணிப்பது இந்தியா அதுவும் குறிப்பாக தமிழகமே ! அதனால் இந்திய குறிப்பாக தமிழகத் தேர்தல்களை உன்னிப்பாகக் கவனிப்பது அதைப்பற்றிய செய்திகளை அறிந்து கொள்வது என்னுடைய ஆர்வம். அதன் அடிப்படையில் இரண்டு தேர்தல்களையும் சிறிது ஒப்பீடு செய்து பார்க்க எண்ணினேன். இது ஒரு ஆராய்ச்சியாளனின் கட்டுரையல்ல ஒரு சாமானிய புலம்பெயர் தமிழனின் பார்வையில் ஒரு கோணத்தில் எழுந்த கருத்துக்களே.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சீனா பேரார்வ முயற்சி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++
    1. http://news.mit.edu/2018/nas-report-right-path-fusion-energy-1221 [December 21, 2018]
    2.https://news.newenergytimes.net/2017/10/06/the-iter-power-amplification-myth/
    3.  http://www.nextbigfuture.com/2015/07/china-will-bigger-than-iter-test.html

    ++++++++++++++++++++++++

    சீனா கதிரியக்கம் இல்லாத அளவு மீறிய அணுப்பிணைவு மின்சக்தி ஆக்க முயற்சி

    2018 நவம்பரில் சீனா அன்ஹுயி [Anhui] மாநிலத்தில் தயாரித்த அணுப்பிணைவு EAST [Experimental Advanced Superconducting Tokamak] என்னும் சோதனைச் சாதனத்தில் சூரியனைப் போல் ஆறு மடங்கு உஷ்ணத்தை [100 மில்லியன் டிகிரி C (212 மில்லியன் டிகிரி F)] முதன்முதல் உண்டாக்கி, அணுசக்தித் துறையில் ஒருபெரும் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. அந்த வெற்றியை சீனா அறிவித்து, 2050 ஆண்டுக்குள் வாணிப முறையில் 1000 மெகா வாட் [Mwe] ஆற்றல் உள்ள ஒருபெரும் அணுப்பிணைவு அணுசக்தி நிலையத்தை கட்டி முடிக்கப் போவதாய் வெளியிட் டுள்ளது. அதற்கு முதற்படிச் சோதனை அணுப்பிணைவு மின்சக்தி நிலையத்தை 2020 ஆண்டுக்குள் கட்டி இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. பிரான்சில் தற்போது கட்டு மானம் ஆகும் 500 Mwe ITER அணுப்பிணைவு மின்சக்தி நிலையத்தை விட சீனாவின் வாணிப முற்போக்கு நிலையம் இருமடங்கு பெரியதாய் உருவாகப் போகிறது.

    Fusion Heat and Desalination Plants
    in Tamil Nadu, India

    ++++++++++++++++++++

    அணுப்பிணைவு வெப்பசக்தி நிலையத்தால் பேரளவு கடல் உப்புநீர் சுவை நீராக்கப்படுவது எளிது.

    2050 ஆம் ஆண்டில் சீனா நிறுவி இயக்கப் போகும் பூதப்பெரு 1000 MWe அணுப்பிணைவு மின்சக்தி நிலையத்துக்கு நிதி ஒதுக்கு 890 மில்லியன் டாலர் [2018 நாணய மதிப்பு]. தற்போது பிரான்சில் நிறுவக மாகும் ITER 500 Mwe அணுப்பிணைவு மின்சக்தி நிலையத் துக்கு நிதி ஒதுக்கிப் பங்கெடுக்கும் உலக நாடுகள் : ஈரோப்பியன் யூனியன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா. ITER அணுப்பிணைவு உலை அமைப்பு : டோகாமாக் [TOKAMAK] என்று அழைக்கப் படுகிறது. அதற்கு உலக நாடுகள் நிதி ஒதுக்கு : 20 பில்லியன் ஈரோ [ 22.5 பில்லியன் டாலர்]. சீனா போல் அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னேற்ற நாடுகளும் சோதனை அணுப்பிணைவு வெப்பசக்தி உண்டாக்கு வதிலும், சூரியனை விட பலமடங்கு டிகிரி உஷ்ண உருவாக்குவதிலும் வெற்றி அடைந்துள்ளன.

    பிண்டமும் சக்தியும் ஒன்றெனக்
    கண்டார் ஐன்ஸ்டைன்
    சமன்பாட்டு மூலம் !
    அணுப்பிளவு யுகம் மாறி
    அணுப்பிணைவு யுகம் உதயமாகும் !
    கதிரியக்க மின்றி
    மின்சார விளக்கேற்றும் !
    இயல்பாய்த்
    தேய்ந்து மெலியும் ரேடியம்
    ஈயமாய் மாறும் !
    யுரேனியம் சுயப் பிளவில்
    ஈராகப் பிரிந்து
    பிளவு சக்தி உண்டாகும் !
    பேரளவு உஷ்ணத்தில்
    சூரியனில் நேரும் பிணைவு போல்
    போரான் – நீரக வாயு
    எரிக்கரு அழுத்தப் பட்டு
    பேரளவு வெப்ப சக்தி
    புதியதாய் உண்டாக் கப்படும்.
    கதிரியக்க மின்றி
    மின்காந்த அரணுக்குள் !
    ++++++++++++++++

    சூட்டுப் பிணைப்பு மூலம் போரான் – நீரக வாயு அணுக்கருப் பிணைப்பு இயக்கத்தில் பேரளவு வெப்பசக்தி உற்பத்தி.

    2017 டிசம்பர் 28 ஆம் தேதி ஜெர்மன் நாட்டு மாக்ஸ் பிளாங்க் ஒளிப்பிழம்பு பௌதிக ஆய்வுக்கூடத்தின் [Max Planck Institute for Plasma Physics] ஆய்வுக்குழுவினர் முதன்முதலாய்ப் புதிய முறையில் அணுப்பிணைவு இயக்க மூலம் பேரளவு வெப்பசக்தி உண்டாக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 60 ஆண்டு களாய் இதுவரை அணுப் பிணைவு [Nuclear Fusion] இயக்கத்துக்கு ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலங்கள் [Isotopes] எனப்படும் டிரிடியம் & டியுட்டீரியம் [Tritium & Deuterium Isotopes] கதிரியக்க மூலகங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இப்போது ஜெர்மன் அணுக்கரு பௌதிக ஆராய்ச்சி யாளர் போரான் & நீரக வாயுவை [Boron & Hydrogen] எரிக்கருவாக எளிய ஓர் கோள வடிவுச் சாதனத்தில் பயன்படுத்தி வெப்பசக்தி உண்டாக்க முடியும் என்று அறிவித்துள்ளார்கள். இப்போது கூட்டு முயற்சியில் பிரான்சிலும், மற்ற உலக நாடுகள் தனியாகவும் செய்துவரும் சோதனைகள் வெற்றி அடையும் முன்பே, போரான் – நீரக வாயுப் பிணைப் பியக்கம் மின்சக்தி உற்பத்தி செய்யும் என்று உறுதி யாக நம்பப்படுகிறது.

    இந்தப் புதிய அணுப்பிணைவுத் திட்டத்தை 2017 டிசம்பர் 12 ஆம் தேதி ஹையன்ரிக் ஹோரா [Heinrich Hora] என்பவர் லேசர் & துகள் கற்றை வெளியீட்டில் [Journal of Laser & Particle Beams] அறிவித்துள்ளார்.


    ஹையன்ரிக் ஹோரா சொல்கிறார் : நீரக வாயு & போரான் -11 மூலகம் [Hydrogen -0] [One Proton and Boron -11 (Boron with 6 Neutrons)] இரண்டையும் திணிவு மிகுத்த நிலையில் [100,000 times More density than ITER Fuel], பேரளவு உஷ்ணமுடன் [5 பில்லியன் டிகிரி F (3 பில்லியன் டிகிரி C)], ஒரு கோள வடிவான அரணில் அழுத்திப் பிணைத்தால், மூன்று ஹீலியம் [Helium -4] உண்டாகும். அந்த இயக்கத்தில் எழும் ஒளிப்பிழம்பிலிருந்து [Plasma], நேராக மின்சாரம் தயாரிக்கலாம். தற்போது நடைபெறும் சோதனைச் சாதனங்கள் பெரிய துளைவடை வடிவு [Donut – Shaped Chambers] உடையவை. பெருத்த மின் காந்தச் சுவர்கள் சூழ்ந்து இருப்பவை. அந்த சாதனத்தில் டியுடீரியம் & டிரிடியம் ஏகமூலங்கள் [Deuterium & Tritium Isotopes] பேரளவு சூடாக்கப்பட்ட ஒளிப்பிழம்பால் [Superheated Plasma] அழுத்தப்பட்டு பிணைக்கப் படுகின்றன. இந்த விதமான அணுக்கருப் பிணைப்பு இயக்கத்தில் ஹீலியம் உண்டாகி வெப்பசக்தியும் கூடவே ஒரு நியூட்ரான் விளைகிறது. இந்த உயர் சக்தி நியூட்ரான் [High Energy] அருகில் உள்ள உலோகச் சாதனங்களில் பட்டு சிறிதளவு கதிரியக்கம் உண்டாகிறது.


    Hydrogen – Boron Hot Fusion Reactor

    போரான் – நீரக வாயு சூட்டுப் பிணைப்பு அணு உலை

    2017 டிசம்பர் 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய எரிக்கரு அணு உலை [Nuclear Fuel Reactor] பயன்படுத்தும் எரிக்கரு ஹைடிரஜன் -1 & போரான் -11 [Hydrogen -1 & Boron -11]. இந்த எரிக்கரு 1 பில்லியன் டிகிரி உஷ்ணத்தில், பேரளவு அழுத்தத்தில் பிணைப்பியக்கம் தூண்டப் படுகிறது. இந்த இயக்கத்தில் உண்டாகும் வெப்பசக்தி அனைத்தும் 3 ஹீலியம் -4 மூலகமாய் [ஆல்ஃபா கதிர்வீச்சாக] [Alpha Radiation] ஒவ்வொன்றும் 8 MeV அளவில் வெப்பசக்தியாய் வெளியாகிறது. ITER மாடல் அணு உலைபோல், H–B பிணைவு அணு உலையில், உயர் சக்தி நியூட்ரான்கள் [High Energy Neutron] வெளியேறா. இப்புதிய போரான் – ஹைடிரஜன் அணுப்பிணைவு அணு உலை முன்னோடி மாடல் இன்னும் உலகில் தயாரிக்கப் படவில்லை. ஆனால் புதிய போரான் – நீரக வாயு அணு உலைகள் விரைவில் கட்டப்படும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.


    நாங்கள் செய்யப் போவது இதுதான்: ஒரு கட்டுப்பாட்டு முறையில் எரிக்கரு வில்லைச் சிமிழின் [Deuterium – Tritium Pellet [D-T Pellet] Fuel Capsule] வெளிப்புற கவசத்தை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் உடைப்பதே எங்கள் முயற்சி. அப்படிச் செய்யும் போது எரிக்கரு வில்லை [D-T Pellet] அழுத்தம் அடைந்து, சரியான கட்டத்தில் அணுப் பிணைவு இயக்கம் தூண்டப்படும்.

    ஜான் எட்வேர்ட்ஸ் [Associate Director, NIF National Ignition Facility for Fusion Power]

    எக்ஸ்ரே கதிர்கள் தூண்டும் அணுப்பிணைவு முறையில் தீர்க்கப் பட வேண்டிய ஒரு பெரும் இடையூறு : எருக்கருச் சிமிழ் முதிரா நிலையில் முன்னதாய் முறிந்து போய் [Premature Breakdown] விடுவது. ஆற்றல் மிக்க எக்ஸ்ரே கதிர்களின் அடர்த்தி காலிச் சிமிழி குறியில் [Hohlraum –> Hollow Room] தேவையான அழுத்தம் உண்டாக்கி அணுப் பிணைவைத் தூண்டுகிறது.

    ஜான் எட்வேர்ட்ஸ் [Associate Director, NIF National Ignition Facility for Fusion Power]

    பிண்டம் ! சக்தி ! அணுப்பிணைவு சக்தி !

    இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் ! அதுபோல், அமைதிக் காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தியை உற்பத்தி செய்யப் போகிறார்கள்.

    கட்டுரை ஆசிரியர்

    “அணுசக்தி ஆற்றல் உற்பத்தியில் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறைப்பாடு சூழ்வெளிப் பசுமைப் பண்பாடு மின்சாரமாகக் கருதப்படுகிறது. அது அணுப்பிளவு (Nuclear Fission) முறைப்பாடை விட சூழ்வெளித் துர்மாசுக்கள் மிகவும் குறைவானது.”

    ஜாப் வாண்டர் லான் – நெதர்லாந்து எரிசக்தி ஆய்வு மையம். (June 28, 2005)

    அணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் செய்த ஒரு பெரும் சாதனை

    காலிஃபோர்னியாவின் வாரென்ஸ் லிவர்மோர் தேசீய சோதனைக் கூடத்தில் [Dept of Energy’s Lawrence Livermore National Lab] [National Ignition Facility- NIF] ஆராய்ச்சியாளர்கள் அணுபிணைவு சக்தி வெளியீட்டில் ஒரு நூதனச் சாதனையைச் சோதனையின் போது செய்து காட்டினர். தேசீய அணுப்பிணைவுத் தூண்டல் யந்திரத்தில் [National Ignition Facility – NIF] ஒருமித்த ஆற்றல் மிக்க 192 லேசர் ஒளிக்கதிர்களை உண்டாக்கி [1.8 மெகா ஜூல்ஸ் சக்தியில்] (megajoules of energy) முதன்முதல் 500 டெட்ரா வாட்ஸ் மின்சார ஆற்றலை [tetrawatts power – 10^12 watts] உருவாக்கினர். இந்த அசுர மின்னாற்றல் ஒரு கணத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் மொத்த மின்சார யூனிட்டுகளை விட 1000 மடங்கு ஆகும். அதாவது பூமியிலே ஒரு குட்டிச் சூரியனை முதன்முதல் உண்டாக்கி விட்டார்.

    சூரியன் போல் அணுப்பிணைவு நியதியில் பேரளவு வெப்ப சக்தி வெளியாக்கச் செய்யும் சோதனையில் முதன்முதல் சுயமாய்ப் அணுப்பிணைவுத் தொடரியக்கம் நீடிக்கச் செய்து பேரளவு மின்னாற்றலை உற்பத்தி செய்தனர். இவ்வரிய தகவல் செய்தி, பிளாஸ்மா ஒளிப் பிழம்பு பௌதிக இதழில் [Journal Physics of Plasmas] சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது. ஆயினும் அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்தி வாணிப நிலைக்கு வர, இன்னும் மூன்று முக்கிய இடையூறுகள் தீர்க்கப்பட வேண்டும்.


    சுய நீடிப்பு அணுப்பிணைவு இயக்க சக்திக்கு நேரும் மூன்று இடையூறுகள் :

    1. விசைகள் சமநிலைப்பாடு [Equilibrium of Forces] :

    பிளாஸ்மா ஒளிப் பிழம்பு மீது இயங்கும் உந்துவிசைகள் சமநிலைப் படவேண்டும். இல்லாவிட்டால் பிளாஸ்மா ஓரினத் தன்மையின்றி முறிந்து போகும். இந்த விசைச் சமன்பாடு இழப்பு முதல் இடையூறு. அதற்கு முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement] ஓர் விதிவிலக்கு. அதனில் பௌதிக இயக்கம் பிளாஸ்மா முறிவதற்குள் விரைவாக நிகழ வேண்டும்.

    2. பிளாஸ்மா நீடிப்பு [Plasma Stability] :

    பிளாஸ்மா ஒருமைப்பாடு சிறு ஏற்ற இறக்கம், குறைவு நிறைவு செய்யப் பட்டு முதல் வடிவத்துக்கு மீள வேண்டும். இல்லா விட்டால் பிளாஸ்மாவில் தவிர்க்க முடியாத பாதிப்புகள் நேரிடும். பிறகு அந்த தவறு செங்குத்தாக ஏறி பிளாஸ்மா முற்றிலும் அழிந்து போகும்.

    3. துகள்கள் போக்கு [Transport of Particles] :

    துகள்கள் இழப்பு பாதைகள் பூராவும் மிகவும் குறைய வேண்டும். அதைக் கசிய விடாமல் காப்பது முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement].

    அணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில் வாணிப நிலைக்கு விரைவில் வரலாம் அல்லது சற்று நீடிக்கலாம். எப்படியும் 2050 ஆண்டுக்குள் அணுப்பிணைவு மின்சக்தி வர்த்தக ரீதியில் மின் விளக்குகளை ஏற்றிவிடும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

    “சூழ்வெளிக் காலநிலை மாற்றாமல் பேரளவு மின்சக்தி ஆக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு முயற்சியில் அணுப்பிணைவுச் சக்தி விருத்தி அடையப் பிரான்சில் விரைவாகக் கட்டப் போகும் அகில நாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) ஒரு பெரும் வரலாற்று மைல் கல்லாகக் கருதப்படுகிறது.”

    பேராசிரியர் கிரிஸ் லிவெல்லின் ஸ்மித் (UK Atomic Energy Agency) (June 28, 2005)

    “அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமான வேலைகள் 2005 ஆண்டு இறுதியில் துவங்கும். திட்டத்தின் பொறித்துறை நுணுக்க விளக்கங்கள் யாவும் இப்போது முடிவாகி விட்டன. அகில நாடுகளின் முழுக் கூட்டுழைப்பில் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சீனா, ஜப்பான்) பூரணமாகி இத்திட்டம் முன்னடி வைப்பதில் நாங்கள் பூரிப்படைகிறோம்.”

    பையா ஆரன்கில்டே ஹான்ஸன் (European Commission) (June 28, 2005)

    “கடந்த 15 ஆண்டுகளாக அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைத் (ITER) திட்ட அமைப்பில் பங்களித்து அது நிறுவனமாகச் சிக்கலான உடன்பாடுகளில் உதவி செய்தது குறித்து, அணுசக்திப் பேரவை (IAEA) பெருமகிழ்ச்சி அடைகிறது. மேலும் பரிதியை இயக்கும் மூலச்சக்தியான அணுப்பிணைவுச் சக்தியை விஞ்ஞானப் பொறியியல் சாதனங்களால் பூமியில் உற்பத்தி செய்யக் கூடுமா என்று ஆராயும் அத்திட்டத்துக்கும் அணுசக்தி பேரவை தொடர்ந்து உதவி புரியும்.”

    வெர்னர் புர்கார்ட் (Deputy Director General & Haed IAEA Nuclear Science and Applications) (June 28, 2005)

    “அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) கூடிய விரைவில் இயங்க ஆரம்பித்து உலக மாந்தர் அனைவருக்கும் எதிர்காலத்தில் மின்சக்தி அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.”

    நரியாக்கி நகயாமா (ஜப்பான் விஞ்ஞான அமைச்சர்) (June 28, 2005)

    பிரான்சில் புது அணுப்பிணைவு மின்சக்திச் சோதனை நிலையம்

    முதல் அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமானத் திட்டத்தில் ஜப்பான் தேசம் கடுமையாகப் போட்டி யிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றது பிரான்ஸ். அகில நாட்டு விண்வெளி நிலையத் துக்கு (International Space Station) அடுத்தபடி வெப்ப அணுக்கருச் சோதனை நிலைய அமைப்பே நிதிச் செலவு மிக்க (12 பில்லியன் டாலர் திட்டம்) ஓர் திட்டமாகக் கருதப் படுகிறது ! வெப்ப அணுக்கருச் சக்தி எனப்படுவது பரிதி ஆக்கும் அணுப்பிணைவுச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இதுவரைச் சூழ்வெளியை மாசுபடுத்திய அணுப்பிளவு, நிலக்கரி போன்ற பூதள எருக்கள் (Fission & Fossil Fuels) போலின்றி ஒப்புநோக்கினால் பேரளவு தூயதானது அணுப்பிணைவுச் சக்தியே (Fusion Energy) !

    பதினெட்டு மாதங்கள் தர்க்கத்துக்கு உள்ளாகி முடிவாக ஜூன் 28 2005 ஆம் தேதி மாஸ்கோவில் ஆறு உறுப்பினர் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சீனா, ஜப்பான்) உடன்பட்டு அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலையைக் [International Thermonuclear Experimental Reactor (ITER)] கட்டுமிடம் பிரான்ஸாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ITER திட்டத்தின் முக்கிய பங்காளர்கள் ஈரோப்பியன் யூனியன் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, டென்மார்க், ஆஸ்டியா, நெதர்லாந்து, போலந்து, ஸ்வீடன். . . ), ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா). நிதிப் பங்களிப்பில் ஈரோப்பியன் யூனியன் 50% தொகை அளிப்பை மேற்கொண்டது. பிரான்ஸில் இடத்தேர்வு : மார்சேல்ஸ் நகருக்கு 60 கி.மீ. (37 மைல்) தூரத்தில் இருக்கும் “கடராச்சே அணுவியல் ஆராய்ச்சி மையம்” (Cadarache in France).

    அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையத்தின் விபரங்கள்

    வியன்னாவில் இருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவை தலைமை அகத்தில் நீண்ட காலக் குறிக்கோள் திட்டமான அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தின் முன்னடி வைப்பு 2005 ஜூன் 28 ஆம் தேதியில் ஒரு பெரும் விஞ்ஞானச் சாதனையாக வெற்றிவிழாக் கொண்டாடப் பட்டது ! அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது ! அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் ! பன்னாட்டுப் பொறித்துறை வல்லுநர்கள் ! இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் ! அதுபோல், அமைதி காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல்அணுப் பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறார்கள் !

    அணுப்பிணைவுச் சோதனை நிலையம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.

    — நிலைய மின்சார உற்பத்தி : 500 MW
    — நியூட்ரான் சக்தி : 14 MeV (Million Electron Volt).
    — காந்த மதில் ஆற்றல் தகுதி : 0.57 MW/Square meter
    — பிளாஸ்மா (கனல் பிழம்பு) பெரு ஆரம் : 6.2 மீடர்.
    — பிளாஸ்மா (கனல் பிழம்பு) குறு ஆரம் : 2.0 மீடர்
    — பிளாஸ்மா மின்னோட்டம் : 15 MA (Million Amps)
    — பிளாஸ்மா கொள்ளளவு : 837 கியூபிக் மீடர்.
    — வளையத்தின் காந்த தளம் 6.2 மீடரில் 5.3 T (Toroidal Field)
    — நிலைய யந்திரங்கள் இயக்கத் தேவை : 78 MW
    — நிலையத் திட்டச் செலவு : 12 பில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு)

    அணுப்பிணைவுச் சக்தி எப்படி உண்டாகிறது ?

    சூரியனிலும் சுயவொளி விண்மீன்களிலும் ஹைடிரஜன் வாயுவை மிகையான ஈர்ப்பு விசை அழுத்தத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பிளாஸ்மா நிலையில் (கனல் பிழம்பு) இணைத்து அணுப்பிணைவுத் தொடரியக்கத்தில் ஹீலிய வாயும் வெப்பச் சக்தியும் வெளியாகின்றன. அந்த வெப்ப மோதலின் விளைவில் உயர்சக்தி நியூட்ரான்களும் (High Energy Neutrons) எழுகின்றன ! ஹைடிரன் ஏகமூலங்களான (Isotopes of Hydrogen) டியூடிரியம் & டிரிடியம் (50% Deuterium & 50% Tritium) அணுப்பிணைவு எருக்களாகப் பயன்படுகின்றன. ஹைடிஜன், டியூடிரியம், டிரிடியம் மூன்று வாயுக்களின் அணுக்கருவிலும் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. ஆனால் டியூடிரியத்தில் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் உள்ளன. டிரிடியத்தில் ஒரு புரோட்டானும், இரண்டு நியூட்ரான்களும் இருக்கின்றன. அவை பேரளவு உஷ்ணத்தில் (100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) பிளாஸ்மாவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியமாகின்றன. அந்த உஷ்ணம் பரிதியின் உட்கரு உஷ்ணத்தை விட 10 மடங்கி மிகையானது !

    அணுப்பிணைவுக்கு அத்தகைய மிகையான உஷ்ணம் ஏன் தேவைப் படுகிறது ? பரிதியின் வாயுக் கோளத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணம் உண்டாவதற்கு அதன் அசுர ஈர்ப்புச் சக்தி அழுத்தம் கொடுக்கிறது. அந்த உஷ்ணத்தில் அணுக்கருக்கள் ஒன்றை ஒன்று இழுத்துச் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் மனிதர் உண்டாக்கும் அணுப்பிணைவு உலையில் அத்தகைய அழுத்தம் ஏற்படுத்த முடியாததால் அணுப்பிணைவை உண்டாக்கப் பத்து மடங்கு உஷ்ண நிலை தேவைப்படுகிறது. அந்த அழுத்தத்தை எப்படி உண்டாக்குவது ?

    1. வாகன எஞ்சின் போல் பிஸ்டன் மூலம் வாயுக்களில் அழுத்தம் உண்டாக்கி வாயுக்களில் உஷ்ணத்தை அதிகமாக்கலாம்.
    2. மின்சார ஓட்டத்தை ஏற்படுத்தி வாயுக்களில் உஷ்ணப் படுத்தலாம்.
    3. வாயுக்களை ஓர் அரணுக்குள் உயர்சக்தி நியூட்ரான்களால் தாக்கி உஷ்ணத்தை மிகையாக்கலாம்.
    4. நுண்ணலைகள் (Microwaves) மூலம் அல்லது லேஸர் கதிர்களால் (Laser Beams) வாயுக்களில் உஷ்ணத்தை மிகைப்படுத்தலாம்.
    மூன்று முறைகளில் பிளாஸ்மா கனல் பிழம்பை உண்டாக்கலாம்:
    1. பிளாஸ்மா அரண் (Plasma Confinement) (பரிதி, விண்மீன்களில் உள்ளதுபோல்)
    2. முடத்துவ முறை (Inertial Method).
    3. காந்தத் தளமுறை (Magnetic Method).

    சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!

    சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள் களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரிய வாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா ?


    1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது! ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான்! ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது!

    அணுப்பிணைவை ஆய்வுக் கூடத்தில் எவ்வாறு ஆக்குவது ?

    ஹைடிரஜன் வாயுவுக்கு இரண்டு ‘ஏகமூலங்கள்’ [Isotopes] உள்ளன. ஒன்று டியூட்டிரியம் [Deuterium], மற்றொன்று டிரிடியம் [Tritium]. ஏகமூலங்கள் என்பவை, ஒரே புரோட்டான் [Proton] எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான் [Neutrons] எண்ணிக்கை யுள்ள மூலகங்கள் [Elements]. ஏகமூலங்கள் ஒரே மின்னீர்ப்பு [Electric Charge] மேவி, வெவ்வேறு அணுப்பளுவைக் [Atomic Mass] கொண்டவை. மூலகங்களின் அணிப் பட்டியலில் [Periodic Tables of Elements], ஏகமூலங்கள் யாவும் ஒரே இல்லத்தில் இடம் பெறுபவை. டியூட்டிரியம் மூலஅணு [Molecule] நீரில் 7000 இல் ஒன்றாக இயற்கையில் இருப்பதை, ரசாயன முறையில் பிரித்து எடுக்க வேண்டும். டிரிடியம் கனநீர் யுரேனிய அணு உலைகள் [Heavy Water Uranium Reactors] இயங்கும் போது, கனநீரில் உண்டாகிறது. கனடாவில் இயங்கும் காண்டு [CANDU] அணு உலைகளில் நிறைய கனநீரும், டிரிடியமும் இருப்பதால், பிணைவுச் சக்தி ஆய்வுக்குத் தேவையான எளிய வாயு மூலகங்கள் [Light Elements] கனடாவில் எப்போதும் கிடைக்கின்றன. ஆராய்ச்சி முறையில் பயன் படுத்திய போது, எளிய மூலகங்களான ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் ஆகியவற்றில், [டியூட்டிரியம் + டிரிடியம்] வாயு இணைப்பே அதிக வெப்ப சக்தியை ஈன்றதால், உலகில் பல நாடுகள் அணுப் பிணைவு உலையில், அவ்விரண்டு வாயுக்களையே எரிப் பண்டங்களாய் உபயோகித்து வருகின்றன. இந்த இயக்கம் தூண்டுவதற்கு வேண்டிய உஷ்ணம், 80 மில்லியன் டிகிரி C.

    டியூட்டிரியம் +டிரிடியம் –> ஹீலியம் +நியூட்ரான் +17.6 MeV சக்தி Deuterium +Tritium –> Helium +Neutron +17.6 MeV Energy

    இருபதாம் நூற்றாண்டில் உருவான மிக மேம்பட்ட ஆய்வுப் பிணைவு உலை [Fusion Reactor] ‘டோகாமாக்’ [Tokamak] என்பது, காந்தக் கம்பிகள் சுற்றப் பட்டு டோனட் [Donut] வளையத்தில் அமைந்த ஒரு பிரம்மாண்ட மான மின்யந்திரம். ‘டோகாமாக் ‘ என்பது ரஷ்யச் சுருக்குப் பெயர். அதன் பொருள்: வளை காந்தக் கலம் [Toroidal Magnetic Chamber]. அதனுள்ளே பேரளவு காந்தத் தளத்தைக் கிளப்பி பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் மின்னியல் வாயுப் பிழம்பை [Plasma] உண்டாக்கி வளையச்சுவர் கடும் வெப்பத்தில் உருகிப் போகாமல் உள்ளடக்க வேண்டும்! இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை! பிண்டம் நான்கு வித வடிவுகள் [Four States of Matter] கொண்டது. திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas & Plasma]. வாயு அதிக உஷ்ணத்தில் நேர், எதிர் மின்னிகளாய்ப் [Positive, Negative Ions] பிரிந்து பிழம்பு வடிவாக மாறி மின்கடத்தி [Electrical Conductor] யாகிறது. பிணைவுச் சக்தியை மூலமாகக் கொண்டு இயங்கும் மின்சக்தி நிலையத்தில், ஹீலிய வாயு பிழம்பின் வெப்பப் போர்வையாகவும், கடத்தியாகவும் [Helium Blanket for Plasma & Heat Transport Medium] பயன் ஆகலாம். சூடேரிய ஹீலிய வாயு வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நீராவியை உண்டாக்கி டர்பைன் ஜனனியை [Turbine Generator] ஓட்டச் செய்யலாம். அமெரிக்காவின் மிகப் பெரும் ஆய்வு டோகாமாக், நியூ ஜெர்ஸி பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.

    மூன்று வித முறைகளில் அனல் பிழம்பை அரணிட்டு [Plasma Confinement] அணுப்பிணைவு இயக்கம் நிகழ்த்தலாம். முதலாவது முறை ‘ஈர்ப்பியல் அரண் பிணைப்பு ‘ [Gravitational Confinement Fusion]. இம்முறைக்கு சூரிய, சுடரொளி விண்மீன்களில் இயங்கும் பேரளவு உஷ்ணம், வாயுப் பேரழுத்தம் தேவைப் படுகிறது. மனிதனால் இவற்றைப் பூமியில் சாதிக்க முடியாது! அடுத்தது, ‘காந்தவியல் அரண் பிணைப்பு’ [Magnetic Confinement Fusion]. ஆய்வுக் கூடத்தில் இது சாத்திய மானது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி முறைக்கு உலகெங்கும் பயன் படுகிறது. இம்முறையில் உருவானதுதான் டோகாமாக் [Tokamak] யந்திரம். அனல் பிழம்பு நீடிக்க, மூன்று முக்கிய நிபந்தனைத் தொடர்புகள் பொருந்த வேண்டும்: உஷ்ணம், காலம், அடர்த்தி [Temperature, Time & Density]. 200 மில்லியன் டிகிரி உஷ்ணப் பிழம்பு சில வினாடிகள் நீடிக்க, வாயு அடர்த்தி ஓரளவு தேவை. இந்த உறவை ‘லாசன் நியதி ‘ [Lawson Criterion] என்று கூறுவர். மூன்றாவது முறை: ‘முடவியல் அரண் பிணைப்பு’ [Inertial Confinement Fusion]. இதில் லேசர் வீச்சுக் கதிர்களைப் [Laser Beams] பாய்ச்சி உள்வெடிப்பு [Implosion] நிகழ்த்தி அனல் பிழம்பு உண்டு பண்ணிப் பிணைப்பு சக்தி ஏற்படுத்துவது. இம்முறை பெரும்பாலும் அணு ஆயுதம் [Nuclear Weapons] தயார் செய்ய, யுத்த விஞ்ஞானிகளுக்குப் பயன் படுகிறது.


    அணுப்பிணைவுச் சக்தியின் நிறைபாடுகள்! குறைபாடுகள்!

    பிணைவுச் சக்தி பிளவுச் சக்தியை விட பல முறைகளில் மேன்மை யுற்றது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிர் இனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] அதிக அளவு இல்லை! பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே! அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல் கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது! பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை! அணுப் பிணைவு நிலையங்களி லிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங் களுக்குத் தீங்கு தருவன அல்ல! அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை! பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது! மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி வாயுக்கள் ஹைடிரஜன், டியூட்டிரியம் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கிறது. எதிர் காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வாயு எரி பொருளுக்குப் பஞ்சமே இருக்காது!

    ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன! கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப் பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது! அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது! அதன் விளைவு களையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும்! விசை மிக்க மின்காந்த அமுக்கமும், வேறு பாடு மிக்க கடும் உஷ்ண ஏற்ற இறக்கத்தால் நேரும் வெப்ப அழுத்தமும், அதி உக்கிர நியூட்டிரான் கணைத் தாக்குதலால் நிகழும் அடியும், தாங்கிக் கொண்டு நீண்ட காலம் உறுதியாக இயங்கும், நிலையச் சாதனங்களைக் கண்டு பிடிப்பது சிரமான முயற்சி.

    அணுப்பிணைவு சக்தி உற்பத்தியின் மேம்பாடுகள்!

    அணுப்பிணைவு உலைகளுக்கு வேண்டிய எரு உலக நீர்வளத்தில் எண்ணிக்கை யற்ற அளவு உள்ளது. பேரளவு ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு சக்தி நிலையங்களை அமைப்பது சாத்திய மாகும். மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்கும் தேவையானது சிறிதளவு எருதான்! உதாரணமாக 1000 MWe நிலையத் துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம்! பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம்! அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா! பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்று விடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை! பிணைவு அணு உலையில் எழும் நியூட்ரான்கள் விரைவில் தீவிரத்தை இழப்பதால் பாதகம் மிகக் குறைவு. உலையின் மற்ற பாகங்களை நியூட்ரான் தாக்குவதால் எழும் இரண்டாம் தர கதிர்வீச்சுகளைக் கவசங்களால் பாதுகாப்பது எளிது. கதிர்ப் பொழிவுகளால் சூழ்மண்டல நாசம், நுகரும் காற்றில் மாசுகள் விளைவு போன்றவை ஏற்படுவதில்லை!

    வெப்ப அணுக்கரு நிலையத்தை எதிர்த்து கிரீன்பீஸ் வாதிகள் கூக்குரல் !

    ஒரு கிலோ கிராம் அணுப்பிணைவு எருக்கள் (Fusion Fuel Deuterium +Tritium) 10,000 டன் நிலக்கரிக்குச் (Fossil Fuel) சமமான எரிசக்தி அளிக்கும் ! இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது ! அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா ! சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் ! அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செயல் முறைக்கு ஒவ்வாதது என்று தமது நம்பிக்கை இல்லாமையை அவர் தெரிவித்தார். “12 பில்லியன் டாலரில் 10,000 மெகாவாட் கடற்கரைக் காற்றாடிகள் மூலம் தயாரித்து 7.5 மில்லியன் ஐரோப்பிய மக்களுக்கு மின்சாரம் பரிமாறலாம்,” என்று அகில நாட்டு கிரீன்பீஸ் பேரவையைச் சேர்ந்த ஜான் வந்தே புட்டி (Jan Vande Putte) கூறினார். “உலக நாடுகளின் அரசுகள் பணத்தை வீணாக விஞ்ஞான விளையாட்டுச் சாதனங்களில் விரையமாக்கக் கூடாதென்றும், அவை ஒருபோதும் மின்சக்தி அனுப்பப் போவதில்லை என்றும், 2080 ஆம் ஆண்டில் குவிந்து கிடக்கும் “மீள் பிறப்பு எரிசக்தியைப்” (Renewable Energy) பயன்படுத்தாமல் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் பறைசாற்றினர்.

    ++++++++++++++++++++++++++++++
    தகவல்

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)
    20 IAEA Report – France to Host ITER International Nuclear Fusion Project (June 28, 2005)
    21 IAEA Report Focus on Fusion By : IAEA Staff
    22 IAEA Report – Fusion : Energy of the Future By : Ursula Schneider IAEA Physics Section
    World Atom Staff Report.
    23 BBC News : France Gets Nuclear Fusion (Experimental) Plant.
    24 World : France Chosen to Host Experimental Fusion Reactor Project By : Breffni O’Rourke(June 28, 2005).
    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203101&format=html(அணுப்பிணைவுச் சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி)
    26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303172&format=html(இருபது ஆண்டுகளில் அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி)
    27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40508052&format=html (21 ஆவது நூற்றாண்டின் அணுப்பிணைவுச் சக்தி ஆற்றலுக்கு லேஸர் கதிர்கள்)
    28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40709271&format=html(கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப்பிணைவு மின்சக்தி நிலையம்)
    29. http://www.popularmechanics.com/science/energy/next-generation/is-fusion-power-finally-for-real [June 21, 2011]
    30. http://world-nuclear.org/info/Current-and-Future-Generation/Nuclear-Fusion-Power/#.UkceJNNza9I [August, 2013]
    31. http://www.opli.net/opli_magazine/eo/2013/laser-fusion-experiment-yields-record-energy-at-llnl.aspx [August 26, 2013]
    32. http://en.wikipedia.org/wiki/National_Ignition_Facility [September 17, 2013]
    33. http://en.wikipedia.org/wiki/Fusion_power [September 27, 2013]
    34. http://www.cbc.ca/news/technology/nuclear-fusion-hits-energy-milestone-1.2534140 [February 12, 2014]
    35. http://www.world-nuclear-news.org/C-Progress-in-controlling-fusion-heat-bursts-18031501.html [March 18, 2015]
    36 https://www.forbes.com/sites/ethansiegel/2015/08/27/how-close-are-we-to-nuclear-fusion/#25a93ab916ec [August 27, 2015]
    36 (a). https://gizmodo.com/the-real-problem-with-fusion-energy-1777994830 [May 27, 2016]
    37. https://www.theguardian.com/environment/2016/dec/02/after-60-years-is-nuclear-fusion-finally-poised-to-deliver [December 2, 2016]
    38. https://www.livescience.com/61298-new-fusion-reactor-uses-boron-and-hydrogen.html [December 28, 2017]
    39. https://en.wikipedia.org/wiki/Fusion_power [January 10, 2018]
    40. https://www.iter.org/sci/beyonditer
    41 https://physics.stackexchange.com/questions/178671/hydrogen-boron-fusion
    42. http://world-nuclear.org/information-library/current-and-future-generation/nuclear-fusion-power.aspx [November, 2017]
    43.https://commons.wikimedia.org/wiki/File:EAST_Tokamak_vacuum_vessel_2015.jpg
    44. http://news.mit.edu/2018/nas-report-right-path-fusion-energy-1221 [December 21, 2018]
    45.https://en.wikipedia.org/wiki/Experimental_Advanced_Superconducting_Tokamak [April 14, 2019]
    46. https://en.wikipedia.org/wiki/Fusion_power [May 3, 2019]
    +++++++++++++++

    Share
  • படக்கவிதைப் போட்டி – 212

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    குருசன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.05.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 211-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கல்லில் துணியை அடித்துத் துவைக்கும் பாட்டாளியைப் படமெடுத்து வந்திருப்பவர் காயத்ரி அகல்யா. இதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 211க்கு வழங்கியிருப்பவர் சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

    இப்படத்தைப் பார்க்கையில்,

    துணிவெளுக்க மண்ணுண்டு,
    தோல்வெளுக்கச் சாம்பருண்டு
    மணிவெளுக்கச் சாணையுண்டு
    மனம்வெளுக்க வழியில்லையே
    ” என்று முத்துமாரியிடம் மாந்தர் நிலையை முறையிட்டு வருந்திய மகாகவியே என் நினைவுக்கு வருகிறார்.

    இப்படத்தைக் கண்ணுறும் நம் கவிஞர்களின் எண்ணத்தில் ஊறுவது என்ன என்று அறிந்துவருவோம் வாருங்கள்!

    *****

    ”தர்மகர்த்தா வீட்டுத் துணிகளைப் பொழுதோடு தோய்த்துக்கொடுக்கக் கருத்தாய் வேலைசெய்யும் சலவைத் தொழிலாளி இவர்!” என்கிறார் திருமிகு. காந்திமதி கண்ணன்.

    நாளைக்கு ஊர்க் கோயில் குடமுழுக்குன்னு
    தர்மகர்த்தா வீட்டுல எட்டுத் துணி குடுத்தாக…
    பொழுது சாயுறதுக்குள்ள
    கொண்டு சேக்கணும்..
    அவுக கொல்லப் பக்கம் கொஞ்சம் இருட்டாதான் இருக்கும்…!

    *****

    ”சூரியன் செய்த சலவையால் ஒளிர்ந்தது நீலவானம்! அதுபோல் சாதியென்றும் மதமென்றும் மாசுபடிந்து நேசம்வடிந்து நிற்கும் நம் மனத்தையும் சீர்திருத்தங்களால் சலவை செய்திட வேண்டும்” என்று நன்மொழி நவில்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    சலவை செய்திட வேண்டும் – மனதை
    இருள் வந்து சூழ்ந்திட
    சூரியன் நீ வந்து சலவை செய்திட
    நீல வானம் ஒளிர்ந்ததே
    எதைக் கொண்டு சலவை செய்தாயோ?
    நுரைகளாய் வெண்பஞ்சு மேகங்கள்!

    பனி வந்து படர்ந்திட
    பூமி உடுத்திய பச்சைவண்ணச் சேலை நனைந்ததே!
    சூரியன் நீ வந்து அடித்த வெயிலில் அது உலர்ந்ததே!
    சலவைக்குச் சிக்கனமாய் நீரை நீ பயன்படுத்தினாயோ?
    பெய்யும் மழைகளும் குறைந்து பூமி வறண்டு போனதே!

    உடுத்தும் உடைகளின் அழுக்கை அகற்றிட
    உழைக்கும் இவனுக்கு
    உடுத்திக்கொள்ள நல்ல உடைகள் இல்லை!
    செய்யும் தொழிலாலே பிரிக்கப்பட்டோம் அன்று!
    ஜாதிகள் இல்லையடி பாப்பா
    குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று
    குரல் கொடுத்த பாரதியை மறந்து விட்டோம்!
    இன்றோ ஜாதிகளாலும் கட்சிகளாலும்
    எண்ணற்ற பிளவுகளால்
    எண்ணிக்கையில் நிறைந்து நின்றோம்!

    மாசு படிந்த மனதினைச் சலவை செய்து
    நேசம் நிறைந்த நெஞ்சாய் மாற்றிட
    சீர்திருத்தம் செய்ய வேண்டும்!
    நம் சிந்தனையில்
    சிறிய திருத்தம் செய்யவேண்டும்!
    புதிய சிந்தனை உருவாகி
    வரும் சந்ததியினர்
    அதை வழிமொழிந்திட வேண்டும்
    இருள் சூழ்ந்த இதயம் அன்று தெளிவு பெரும்
    அதில் புதிய பாரதம் வந்து பிறந்திடும்!

    கற்பனையும் கருத்தும் செறிந்த கவிதைகளைத் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    படிப்பினை…

    அழுக்காய்த் துணியைக் கொடுத்தாலும்
    அடித்துத் துவைத்து வெளுத்திடுவார்,
    பழுதாய்ப் பணியதை யெண்ணவேண்டாம்
    படிப்பினை யதுவே தத்துவமாய்,
    அழுக்கு மனமது தூய்மைபெற
    அடிபல பெறுகிறோம் வாழ்வினிலே,
    எழுந்திடு இன்னலில் துவண்டிடாதே
    ஏற்றம் வாழ்வில் கண்டிடவே…!

    துணியில் படித்திருக்கும் அழுக்குகளைத் துவைத்து வெளுக்கும் சலவைத் தொழிலாளிபோல் நம் மனத்திலே நிறைந்திருக்கும் இழுக்குகளாம் அழுக்குகளை இன்னல்கள் எனும் அடியால் வெளுக்கின்றது வாழ்க்கை. எனவே வாழ்வில் நாம் படும் பாடுகளைப் பாடமெனக் கொளல் வேண்டும் என்று பொருளுரை பகரும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • (Peer reviewed) சிவானந்தப்பேறு காட்டும் சூனிய சம்பாடணை

    முனைவர் இரா. மதன்குமார்
    இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை
    கற்பகம் உயர்கல்வி கலைக் கழகம்,
    கோயம்புத்தூர் – 21.

    சிவானந்தப்பேறு காட்டும் சூனிய சம்பாடணை

     முன்னுரை

    திருமந்திரத்தின் எட்டாம் தந்திரத்தில் அமைந்த, ‘சூனிய சம்பாடணை’ என்னும் பாடல் தொகுதியானது, அறுபத்தேழு பாடல்களால் அமைந்தது. இத்தொகுப்பில், உள்ளுறை உவம உத்தியில் இறைவனுக்கும் உயிர்க்கும் அமைந்த பிரிவறியாத திருவருளுறவும் திருவருளுறவுக்குக் கருவியாகின்ற வகையில், இறைவனே ஞான குருவாக வந்தருளுதலும் ஞான குருவின் அறிவுறுத்தலால் உயிரானது யோகப் பேற்றுக்குத் தலைப்பட்டு, யோக சித்தியாகிய முடிவிலாத சிவானந்தப் பேறு பெறுவதுமாகிய அரும் பொருள்கள் பாடப்பட்டுள்ளன.

    திருவருளுறவில் இறையும் உயிரும்

    இறைவனைச் சார்ந்திருத்தலே, உயிர்க்கு உண்மைச் சார்பாகும். அவ்வண்ணம் நிகழாத வகையில், மூல மலமாகிய ஆணவம் உயிரறிவை மறைத்திருக்கும் வலிமை உடையது. அதை மெலிவிக்கவே, உயிர்க்குக் கன்மமும் மாயையும் கூட்டுவிக்கப்படுகின்றன. இதனால், உடம்பும் உலகியல் நுகர்ச்சியால் அமைகின்ற வாழ்க்கையும், அதன் வழியான வினையாக்கமும் உயிர்க்கு வாய்க்கின்றன. அதற்கேற்ப நல்வினை, தீவினைப் பயன்கள் விளைந்து, பிறவிச் சுழலும் உயிரைத் தொடர்கிறது. பல்பிறப்பிலும் உயிர் பிறந்திளைத்து, ‘திருவருளால், இனி பிறவாமையைப் பெற்றுய்ய வேண்டும்’ என்னும் மெய்யுணர்வுக்குத் தலைப்படுகிறது. திருவருளைக் கருவியாகக் கொண்டு, இத்தகைய மெய்யுணர்வு நிலை, உயிர்க்கு வாய்க்கும்படி இறைவன் அருள்விளையாடல் நிகழ்த்துகிறான். இதனைச் சிவஞான போதத்தின் இரண்டாம் சூத்திரம், ‘இருவினையின் போக்குவரவு புரிய ஆணையின் நீக்கமின்றி நிற்கும்’ எனக் குறித்தருள்கிறது.

    பிறவிக்கு மருந்தாகின்ற கனி

    வாய்த்த மனிதப் பிறப்பினைக் கருவியாகக் கொண்டு, ‘மலநீக்கம் பெற்று உய்ய வேண்டும்’ என்கின்ற மெய்யுணர்வானது உயிரிடத்தில் ஏற்படுவதைத் திருமூலர், வாழை மரத்தின் பூ, காய் மற்றும் கனி ஆகியவற்றைப் பயன்கொள்வோரின் செயலுக்கு ஒப்பாகப் பாடியுள்ளார்.

    ஒன்றையொன்று தொடர்ந்து ஓடுகின்ற மூன்று ஆறுகள் இருக்கின்றன. அவற்றின் நடுவிலமைந்த மூன்று வாழைகளும் முறையே, பூவையும் காயையும் கனியையும் தந்து, நோய் தீர்க்கின்ற பயன் கொண்டுள்ளன. அவற்றுள், கனியின் பெரும் பயனை உணர்ந்த ஒரு சிலரே அதை உண்டு பயனடைந்தனர்’ என்ற உள்ளுறைப் பொருளானது, மலவாதையில் கட்டுண்டு பிறவிச் சுழியில் தொடர்ந்து சிக்குண்டு துன்புறுகின்ற உயிரின் அறியாமையைச் சுட்டுவதாகும்.

              ‘முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்

               செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன

               பக்கனர் மிக்கார் படங்கினார் கன்னியர்

               நக்குமல ருண்டு நடுவுநின் றாரே’                        (சூனிய சம்பாடணை: 1)

    இப்பாடலில், ‘தொடர்ந்து ஓடுகின்ற மூன்று ஆறுகள் என்பவை, வினைவயத்தால் உயிரைத் தொடர்ந்துவரும் பிறவிச் சுழலைக் குறிக்கின்றன. பூவால் பெறப்படுகின்ற நோய்நீக்கம் என்பது, மாயையாகிய மலத்தின் வலிமை நீக்கம். காயினால் பெறப்படுகின்ற நோய்நீக்கம் என்பது, கன்ம மலத்தின் வலிமை நீக்கம். கனியினால் பெறப்படுகின்ற நோய்நீக்கம் என்பது, மூல மலமாகிய ஆணவ மலத்தின் வலிமை நீக்கம். ‘பிறந்த பிறப்பினால், பெரும் பயன் கொள்ளவேண்டும்’ என்கின்ற பக்குவமுடையவர்கள், மாயை மற்றும் கன்ம மல நீக்கத்தை மட்டுமே வேண்டாமல், ஆணவ மல நீக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு, மும்மல வாதைகளிலிருந்தும் முற்றிலுமாக நீங்கி உய்கின்றனர்’ என்று திருமூலர் இரங்கிக் கூறுகின்றார்.

    இறைவனின் மாயச் சூதாட்டம்

    இறைவன், உயிருடன் பிரிப்பறியாது நிற்கின்ற நிலை, ‘அத்வைதம்’ எனப்படும். உப்புநீரில், உப்பும் நீரும் பிரிப்பின்றி ஒன்றாக விளங்குதல் இதற்குக் காட்டாகும். அவ்வகையில், இறைவன் ஒன்றாதல்-வேறாதல்-உடனாதல் என்ற நிலைகளில் விளங்குகின்றான். இதனை அறியாத உயிரின் அறியாமையையும், இறைவனின் அளப்பருங் கருணைச் செயலையும் சூதாட்டத்துடன் ஒப்பிட்டு மறைபொருளாகத் திருமூலர் விளக்குகிறார்.

    உயிருக்கு இறைவன் கூட்டுவிக்கின்ற உடம்பே, சூதாடு பலகை. மெய், வாய், கண், மூக்கு, செவி முதலான ஐம்பொறிகளே, ‘பகடைக் காய்கள்’. சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி முதலான அவத்தைக்குரிய புருவநடு, கண்டம், இருதயம் ஆகியவையே இருந்தாடுகின்ற இடங்கள். இத்தகைய அமைப்புடன், இறைவன் உயிர்களுடன் சூதாடுகிறான். சூதாடுவோர், தனது எதிரிலிருந்து ஆடுபவரின் இயக்கத்தையும், அதற்குரிய தனது எதிர் இயக்கத்தையும் குறித்துத் தெளிவுற அறிகின்ற வாய்ப்புண்டு. அத்துடன், எதிராளி, தன்னிடமிருந்து கவர்கின்ற பொருளைக் குறித்தும் அறிகின்ற வாய்ப்புண்டு. ஆனால், அறியாமை மயக்கிற்கு ஆட்பட்ட உயிரோ, ‘தன் எதிரிலிருந்து ஆடுகின்ற இறைவன், பிறப்புக்கு வாயிலாகின்ற அறியாமை முழுவதையும் கவர்ந்துகொள்கின்ற பெருங்கருணையை உணர்வதில்லை’.

              ‘காயம் பலகை கவறைந்து கண்மூன்று

               ஆயம் பொருவதுஓர் ஐம்பத்தோ ரக்கரம்

               ஏய பெருமான் இருந்து பொருகின்ற

               மாயக் கவற்றின் மறைப்பறி யேனே’ (சூனிய சம்பாடணை: 1)     

    இருவினையொப்பின் வழியே இறைசார்பு

    பிறப்பிற்கு வாயிலாகின்ற உயிரின் வினைத்தொகுதியானது, சஞ்சிதம், பிராரத்தம் மற்றும் ஆகாமியம் ஆகிய மூவகைத் தொகுதிகளில் அமையும். சஞ்சிதம் என்பது, பழவினை. பழவினையே, நிகழ்பிறப்பைக் கூட்டுவிக்கிறது. ‘உழவர்களுக்கு, எதிர்வரவுள்ள விதைப்புக் காலத்துக்கு முன்பாகவே, அதற்கான விதை தயாராக இருப்பில் வைக்கப்படுவதைப் போல, உயிர்க்குப் பழவினையாகிய வித்திலிருந்து, அடுத்த பிறப்பு விளைகிறது’.

                         ‘விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து

                          விளைந்து கிடந்தது மேலைக்கு காதம்

                          விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு

                          விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே’                     (சூனிய சம்பாடணை: 14)

    உயிர், நிகழ்பிறப்பில் இன்ப, துன்பங்களை நுகர்கின்றபொழுது செய்கின்ற நல்வினைகளும் தீவினைகளும் புண்ணிய, பாவங்களாகி அதற்கேற்ப அடுத்தடுத்த பிறப்புகள் தோன்றக் காரணமாகின்றன. ‘நிகழ்பிறப்பில், இன்பத்தில் நாட்டமும், துன்பத்தில் வெறுப்பும் கொண்டு மேன்மேலும் புரிகின்ற புண்ணிய பாவங்கள், மேலும் பல துன்பப் பிறப்புகளில் தன்னை ஆழ்த்தித் துன்புறச் செய்யும்’ என்கின்ற மெய்யுணர்வு நிலை உயிர்க்கு வாய்க்கப்பட வேண்டும். தான், சிவப்பெரு நிறைவில் அடங்கியிருத்தலையும், தனது இயக்கமும் சிவனருளால் நிகழ்வதையும், இன்ப துன்ப நிலைகள் முந்தைய வினைப்பயனால் தனக்குக் கூட்டுவிக்கப்படுவதையும், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்னும் மெய்யுணர்வையும் உயிர் பெறவேண்டும்.

    ‘நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே’ (குழைத்த பத்து: 7)

    என்றவழி, இறைவனிடத்தில் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தலாகிய இருவினையொப்பு உயிர்க்கு வாய்க்கவேண்டும். இருவினையொப்பு நிலையே, திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதத்தை வாய்க்கச் செய்து, இறைவனையே ஞான குருவாகத் தந்தருளும்.

    ஞான குருவாக வந்தருளுதல்

    ஆன்மா, அறிவுப் பொருளாயினும், தானே எதையும் உணர்வதில்லை. இறைவன் அறிவிக்க அறிவதே அதன் இயல்பு. உயிருக்கு அருள வேண்டி, இறைவனே ஞான குருவாக எழுந்தருள்வான். சிவப்பிரகாசத்தில் அத்தகைய அருளுறு நிலையானது, ‘அதிஷ்டான பட்சம்’ என்றும், ‘சம்புபட்சம்’ என்றும், இரு நிலைகளில் சுட்டப் பெறுகிறது. அநந்தேஸ்வரர், ஸ்ரீகண்டருத்திரர் முதலானோர் ஞான குருவாக வந்தருளுவது, ‘அதிஷ்டான பட்சம்’ எனப்படும். திருஞானசம்பந்தர் முதலான சமயக் குரவரும், திருநந்திதேவர் முதலான சந்தானக் குரவரும் ஞான குருவாக வந்தருள்வது, ‘அணு பட்சம்’ எனப்படும்.

    ஞான குரு அருள்கின்ற வகை

    இறைவன், ஆணவ மல வாதை மட்டுமே உடைய விஞ்ஞானகலரின் அறிவுக்குள் அறிவாகி, ஞானப் பேரொளியாக விளங்கியருள்வான். ஆணவம் மற்றும் கன்ம மல வாதை உடைய பிரளயாகலருக்கு மானும் மளுவும், நான்கு தோளும், கறைமிடறும், முக்கண்ணும் விளங்குகின்ற திருமேனியுடன் எழுந்தருளுவான். மும்மல வாதையுடைய சகலர்களில், இருவினை ஒப்பினால் இறைச்சார்புக்கு ஆட்படுகின்ற பக்குவம் உடையவர்களுக்கு அருளவேண்டி, மானுடச் சட்டை தாங்கிய குருவாக எழுந்தருளுவான்; உடம்பின் நிலையாமையையும், தத்துவக் கூட்டங்களின் வழியே இயங்குகின்ற உடம்பினை உயிருக்குக் கூட்டுவித்த நிலையினையும், உடம்பின் வழியான அறிவு, இச்சை, செயல்கள் ஆகியவை, பதி புண்ணியங்களாக மேம்படுகின்ற வகையில், திருவருள் துணைநிற்கின்ற நிலையையும் உயிர்க்கு உணர்த்தியருள்வான்.

    குளத்தில் இரை தேடுகின்ற குருகினால், பாசிப் படலம் தனக்கான இரையை மறைத்திருப்பதை அறிய இயலாது. குளத்தின் வழியில் செல்கின்ற வீரன், நீர்வேட்கையைத் தவிர்த்துக் கொள்வதற்காக குளத்தின் பாசிப்படலத்தை அகற்றுகின்ற பொழுது, தனக்கான இரையைக் கண்டு அக்குருகு பயன்கொள்ளும். அதுபோல, சிற்றறிவால் இறைவனை உணர இயலாதவர்கள், இருவினைஒப்பின் வழியே ஞான குருவைப் பெற்று, உபதேசத்தின் வழியே, யோகப் பேற்றுக்குத் தலைப்பட்டு, ஐம்புல வாதை தவிர்த்து, சிவானுபவத்தில் நிலைப்பர்.

               ‘பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்

                கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும்

                தூசி மறவன் துணைவழி எய்திடப்

                பாசி கிடந்து பதைக்கின்ற வாறே’                           (சூனிய சம்பாடணை: 59)

    ஞான குருவால், உயிரறிவு விளக்கம் பெற்று, சிவானுபவப்பேற்றுக்குத் தலைப்படுகின்ற மெய்யுணர்வு நிலையினைத் திருமூலர்,

                       ‘வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

                         புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது

                         தொழுது கொண் டோடினார் தோட்டக்குடிகள்

                         முழுதும் பழுத்தது வாழைக் கனியே’                (சூனிய சம்பாடணை: 4)

    எனத் தன்னனுபவ நிலையாகக் குறித்தருளியுள்ளார். ’எனது உள்ளமாகிய தோட்டத்தை, ஐம்புலக் கள்வர்கள் தமதாக்கிக் கொண்டனர். ஆயினும், அவர்களுடன் இருந்த நான், ஆழக் குழி ஒன்று தோண்டி, அதில் கத்தரி விதையினை நட்டுவைத்தேன். கத்தரி விதையிலிருந்து, பாகற்கொடி முளைத்தது. அக்கொடியானது, வாழைக் கனியைத் தந்தது’ என்கின்றார்.

    இப்பாடலில் சுட்டப்படுகின்ற, ஆழக் குழி தோண்டிய முயற்சியானது, ஞான குருவுக்கு ஆட்பட்டதையும், கத்தரி விதைத்தது, குருவருளால் இறைவனைச் சார்ந்த மெய்ஞ்ஞான வேட்கையினையும் குறிக்கும். உலகியல் இன்பமாகிய நிலையில்லாத பயனையே எதிர்ப்பார்த்த நிலையில், அருளியலுக்கு ஆட்படுகின்ற வகையில், ஞான  குருவின் அருளுபதேசத்தால் உலகியலின்பால் வெறுப்பு ஏற்படும். அதுவே, கசப்புத் தன்மைகொண்ட பாகற்கொடி விளைந்தது’ என்பதன் உள்ளுறையாகும். விதைத்தது ஒன்றும், விளைந்தது ஒன்றுமாக இருக்கையில், அதிலிருந்து அற்புதமாகிய வாழைக் கனி விளைந்தது.

    இறைவன், உயிர்க்கு மெய்யறிவை வழங்கி, அறியாமையை ஓட்டுகின்ற போதிலும், மலவாசனையால் உலகியலையே உயர்வென்று கருதி, மீண்டும் மீண்டும் உலகியலையே நாடுகின்ற அவலம் விளையும். ஆயினும், உயிரின் பக்குவ நிலைக்கேற்ப உபதேசத்தால், மெய்யுணர்வில் நிலைக்கச் செய்து, உயிரைத் தனக்குரிய மீளாஅடிமையாக ஆட்கொள்வான். இப்பேரருளனுபவமே, ‘வாழைக்கனி வாய்த்தல்’ என்பதாகும்.

    உபதேசத்தின் வழியே சுத்தநிலை காட்டல்

    குருவருளால், மெய்யறிவுக்குத் தலைப்பட்டு, இறைவனுடன் ஒன்றியிருத்தலாகிய யோகத்தில் நிற்றலைத் திருமூலர், நிலத்தை உழுது பயன்கொள்வதாகிய உழவுத் தொழிலாக உருவகிக்கின்றார். ‘இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை ஆகிய மூன்று ஏர்களிலும், பிராணனைப் பிணைத்து உழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், சுழுமுனை நாடி வழியே உழுவதே உயர்ந்த பயன் தருவதாகும். முக்கோண வடிவிலான, மூலாதாரச் சக்கரத்தினை இடமாகக் கொண்டு இயங்குகின்ற மூச்சுக் காற்றை, சுழுமுனை நாடியின் வழியாக மேலேற்றுவதே யோகப் பயிற்சியாகும். அதனைக் குருமுகமாக உணர்ந்து உயர்ந்த பயன்கொள்ளாமல், பிராணனை வீணாக்குகின்றனர்’ என இடித்துரைக்கின்றார்.

                        ‘மூவணை ஏரும் உழுவது முக்காணி

                         தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும்

                         நாவணை கோலி நடுவிற் செறுஉழார்

                        காலணை கோலிக் களர்உழு வார்களே’                  (சூனிய சம்பாடணை: 7)

    என்றமைந்த பாடலில், ‘முக்காணி’ என்பது, முக்கோண வடிவிலான, மூலாதாரச் சக்கரத்தைக் குறிக்கும். நடுவில் உழுதல் என்பது, நடுநாடியாகிய சுழுமுனை நாடியில், பிராணனைச் செலுத்தி, ஆக்ஞையாகிய புருவநடுவை நோக்கிச் செலுத்துதலாகும்.

    யோகசித்தியாகிய திருவருள் அனுபவம்

    ஆறாதாரங்களிலும் நிற்கின்ற பிராணன், உச்சித்தானமாகிய சகஸ்ரஹார நிலையத்தை அடையுங்கால், அமுத தாரை பொழியும். யோக சித்தியாகிய திருவருளனுபவத்தினைத் திருமூலர், நயம்மிக்கதொரு விடுகதை வாயிலாக உணர்த்தியுள்ளார். ‘ஒருவன், தனது நண்பனாகிய தட்டானிடத்தில் மொட்டுஅளவு பொன்னைக் கொடுத்துக் காத்துவைத்திருக்கச் சொன்னான்; அவனும் அதனை வீட்டின் உயர்ந்த இடமாகிய மச்சின் மீது வைத்துக் காத்துவந்தான். மொட்டளவில் சிறிதாக இருந்த பொன்னும் செம்பளவில் பெருகியது. தட்டானாகிய நண்பன் அதைக்குறித்து, உரிமையுடையவனுக்கு அறிவிக்காமலேயே,  தனக்கு உரிமையுடையதாக ஆக்கிக்கொண்டான்’ எனக் குறித்தருளியுள்ளார்.

                     ‘தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்

                      மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது

                      வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத்

                      தட்டான் அதனைத் தகைந்து கொண் டானே’      (சூனிய சம்பாடணை: 11)

    ஒருவன்–பிரமன்; தட்டான்-உயிர்; மச்சுவீடு-உடம்பு. பிரமன், உயிருக்கு உடம்பினைக் கூட்டுவித்து, தனு, கரண, புவன, போகங்களை நுகர்வித்து மேலும் மேலும் அவை பிறப்பிறப்புகளில் பட்டுத் துன்புறுகின்ற விதியை எதிர்நோக்கியிருக்கின்றான். ஆனால், உயிரோ, பிரமனின் எதிர்பார்ப்புக்கு மாறாக, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொன்னை உச்சித் துவாரமாகிய சகஸ்ரஹார தளத்துக்கு உயர்த்தி, அமுததாரை பொழிகின்ற பெரும்பேறு கிடைக்கும்படியாக, பிராணனை உரிய வகையில் பயன்கொண்டது. உயிரானது, துன்பப் பிறப்பைக் கூட்டுவித்த பிரமனும் அறியாதவாறு, தனக்கமைந்த பிறப்பையே கருவியாகக் கொண்டு, யோகப் பேற்றின் வழியே, திருவருளில் அழுந்தி,  முடிவாக சிவத்துள் அழுந்துதலாகிய பேரின்ப அனுபவத்தைத் திருமூலர், ‘மேலைக் கடற்கரை வணிகம்’ என்று உருவகிக்கின்றார்.

    மேலாலவத்தை நிலை

    உயிரானது நிலைகொண்டுள்ள உடலில், விழிப்பு (சாக்கிரம்), சொப்பனம் (கனவு), உறக்கம் (சுழுத்தி), பேருறக்கம் (துரியம்), மற்றும் உயிர்ப்படங்கல் (துரியாதீதம்) ஆகிய நிலைகளை அடையும். இது, கீழாலவத்தை, மத்தியாலவத்தை மற்றும் மேலாலவத்தை எனப்படும். ‘கீழாலவத்தை’ என்பது, உயிர், அறியாமையில் அழுந்துவதாகும். அந்நிலைகள், கேவல சாக்கிரம், கேவல சொப்பனம், கேவல சுழுத்தி, கேவல துரியம் மற்றும் கேவல துரியாதீதம் எனப்படும்.

    உயிரானது, கேவல சாக்கிரத்தில், புருவநடுவில் நின்று தொழிற்பட, ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், புலனுணர்வுகள் ஐந்தும், கன்மேந்திரிய விடயங்கள் ஐந்தும், பிராணன் முதலிய பத்தும் ஆகிய கருவிகள் இயங்கும். புருவநடுவை விட்டு, கழுத்தை அடைகின்றபொழுதில், ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் ஒடுங்கி, ஏனைய இருபத்தைந்து கருவிகளும் தொழிற்பட்டு நிற்றல், கேவல சொப்பனமாகும். கழுத்திலிருந்து இறங்கி இதயத்தில், சித்தமும், பிராணனும் புருடனும் மட்டும் செயல்படுகின்ற உறக்கநிலை, கேவலசுழுத்தியாகும். உயிரானது, இதயத்திலிருந்து கீழிறங்கி, சித்தமும் ஒடுங்கி, பிராணனும், புருடனும் செயல்பட, உறக்கத்தில் அமைதல், கேவலதுரியமாகும்.

    மூலாதாரத்தை நோக்கிக் கீழிறங்கி வந்து, பிராணனும் ஒடுங்கி, புருடனுடன் நின்று முழுமையாக அறியாமையில் மூழ்கியிருத்தல், கேவலதுரியாதீதமாகும். மூலாதாரத்தில் ஒடுங்கிய உயிரானது, மீண்டும் மேலேறிச் சென்று, அந்தந்த இடங்களில், அவற்றுக்குரிய கருவிகளுடன் கூடி அறிவுபெறுதல்,  ‘மேலாலவத்தை’ எனப்படும். சகல நிலையில் வாழ்கின்ற பக்குவ உயிருக்கு, திருவருளுடன் ஒன்றுகின்ற சுத்தநிலை வாய்க்கும். அப்பொழுது, உயிர் அடைகின்ற சுத்தநிலையின் துரியம் என்பது, திருவருளில் அழுந்துதலும், துரியாதீதம் என்பது, யோகத்தின் முடிநிலைப்பயனாகிய சிவத்தில் அழுந்துதலுமாகும். திருவருளில் அழுந்துகின்ற உயிர், தன்னை உணர்கின்ற உணர்வைப்பெற்றுள்ள துரியத்தையும் கடந்து, துரியாதீதத்தை அடைகின்றபொழுதில், தன்னையும், தான் உணர்கின்ற அனுபவத்தையும் மறந்து, சிவமாகவே இருந்து உணர்தல், சகலத்தில் சுத்தநிலையாகும். உடலில், மேலாலவத்தையாகிய இவ்வருளனுபவம் நடைபெறுகின்ற இடத்தைத் திருமூலர், மேலைக் கடற்கரையைக் கொண்ட, கொங்கு நாடென்கின்றார். ‘சுத்த துரியாதீதநிலையில், உயிர் பெறுகின்ற பேரின்ப அனுபவத்தை, யவனருடனான வாணிபம் என்று குறித்தருள்கின்றார்.

                        ‘கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃது

                         அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை

                         திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்

                         தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே’                      (சூனிய சம்பாடணை: 62)

    மேலாலவத்தையால், சிவத்தில் அழுந்திப் பெற்ற அருள் அனுபவத்தை மணிவாசகரும்,

                         ‘வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும்

                         தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை

                         குரம்பை தோறும் நாயுட லகத்தே

                         குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய

                        அற்புத மான அமுத தாரைகள்

                         ஏற்புத் துளைதொறும் ஏற்றினன்’                   

                                                                                        (திருவண்டப்பகுதி: 170-175) 

    எனச் சுட்டியுள்ளார்.

    யோகப் பெருவாழ்வில் நிலைத்தல்

    பேரின்பப் பேற்றுக்குத் தலைப்படுகின்ற சீவன்முத்தர்களாயினும், முந்தைய வினைவசத்தால் ஐம்புல வாதைகள் அவர்களைத் தாக்கவருதல் இயல்பாகும். அவர்கள், திருவருள் துணையுடன் அவற்றை வென்று, சிவானுபவத்தில் நிலைக்கின்ற செயல்பாட்டினைத் திருமூலர், காட்டில் வாழ்ந்த ஒருவன், புலியை எதிர்த்து விரட்டிய வீரச்செயலாக உருவகித்துப் பாடியுள்ளார்.

                       ‘பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம்

                         ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ

                         அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப்

                         பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே’ (சூனிய சம்பாடணை: 46)

    காட்டில் வாழ்கின்ற ஒருவன், பன்னிரண்டு காத தூரம் பாய்கின்ற புலிக்கு அஞ்சினான். புலியின் தொடர்ந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சி, கடற்கரையை நாடினான். அங்கு அச்சம் நீங்கி, அலைகளின் குளிர்ச்சியை அனுபவித்து, அன்றாடம் அமுதத்தையும் பெற்று மகிழ்ந்தான்; ஐவர் அதற்குத் தடையாக வந்து, அவனைத் துன்புறுத்த முயன்றனர். ஆனால், அவன் அவர்களை விரட்டியடித்தான்.

    உடம்பே காடாகும். அதில் இயங்குகின்ற பிராணனே புலியாகும். அன்றாடம் அதற்கு அஞ்சி வாழ்கின்ற ஒருவனே, உயிராகும். ஆதாரமாகிய உடம்பில் அமைந்த உயிரானது, அங்கிருந்த புலியின் ஓயாத அச்சுறுத்தலுக்கு அஞ்சி வாழ வேண்டியிருந்தது.  அவன், குருவின் ஞானோபதேசத்தால் யோகத்தைச் சார்ந்தமை, கடற்கரையை நாடியமையாகும். அலைகளின் குளிர்ச்சியே திருவருள் அனுபவம். சஹஸ்ரஹார தளத்திலிருந்து பொலிகின்ற அமுதப்பேறே, கடல் அமுதம். சீவன்முத்தநிலையில், திருவருள் துணையுடன் ஐம்புலன்களைப் பசுகரணங்களாகவும் தனது சிந்தை, சொல், செயல் ஆகியவற்றைப் பதி புண்ணியமாகவும் மேம்படுத்திக் கொண்டமை, பகைவராக வந்த ஐவரையும் விரட்டியடித்த செயலுக்கு உருவகமாகும்.

    ‘ஐந்தெழுத்து’ என்னும் அருள்கருவி

    உடம்பில் நிகழ்கின்ற ஒவ்வொரு சுவாசத்தின்போதும், பன்னிரண்டு அங்குலக் காற்று வெளியாகி, எட்டங்குலக் காற்று உள்ளிழுக்கப்படுவது இயல்பாகும். யோகப்பயிற்சியால், அதிகளவு காற்று உள்ளிழுக்கப்பட்டு, நீண்டநேரம் உள்நிறுத்தப்பட்டு, குறைந்தளவே வெளியேற்றப்படுகின்ற பொழுது, ஆயுள் நீளும். திருவருளால், யோகப்பயிற்சியின் வழியே இந்நிலை கைவரப்பெறுவதற்கு ஐம்புலவாதை தடையாகும். அத்தகைய அவலத்தை நீக்கிக்கொள்வதற்கு, ஐந்தெழுத்தே கருவியாகும் எனத் திருமூலர் விளக்கியுள்ளார்.

    மணிவாசகர், சீவன்முத்தநிலை எய்தி, பேரமுதப் பெருங்கடலாகிய இறையின்பத்தில் திளைத்தவர். ஆயினும், மலவாசனையால் ஐம்புலன் வழிப்படுகின்ற அவலம் நேர்ந்த வேளைகளில், அதனை நீக்கிக்கொள்ள, திருவைந்தெழுத்தைக் கருவியாக்கிக் காத்தருள வேண்டும் என்ற மெய்யுணர்வில் நிலைத்திருந்தார் என்பதனை,

     ‘ஐந்தெழுத்தின் புனை பிடித்துக் கிடக்கின்றேனை’ (நீத்தல் விண்ணப்பம்: 12)

    என்ற அருளனுபவப் பெருவாக்கினால் உணரலாம்.

    ஐந்தெழுத்தை விதிப்படி ஓதினால், உயிருக்குப் பேரின்பப் பயன் விளையும். அந்தந்த உயிரின் பக்குவத்திற்கு ஏற்ப ஓதப்பெறுகின்ற திருவைந்தெழுத்தானது, தூலம்-நமசிவாய, சூக்குமம்-சிவாயநம, அதிசூக்குமம்-சிவயசிவ, காரணம்-சிவசிவ, மகாகாரணம்-சி என்றமைவதாகும்.  ‘பக்குவநிலைக்கேற்ப, ஞானாசிரியரின் உபதேசவழியில் முறைப்பட ஓதுதல், தோணி ஓடத் துணையாக அதன் அடித்தட்டினை முறையாக மிதித்து இயக்குகின்ற அறிவுடைய செயலாகும்’ என்பது, திருமூலரின் சூனிய சம்பாடணை விளங்குகின்ற நன்னெறியாகும்.

    முடிவுரை

    திருநாவுக்கரசர், ’பெரும்பொருள் கிளவியானை’ என இறைவனைப் போற்றியுள்ளார். அவ்வகையில், திருமூலரின் அருள்மொழிகள், பெருமானைக் காட்டியருள்கின்ற மறைபொருள் மந்திரங்களாகின்றன. அவற்றை நமது சிற்றறிவால் உணர்ந்து சொல்லுங்கால், உயர்வுறு மந்திரமாகப் பரிணமித்துப் பெரும்பயன் சேர்க்கவல்லன. அப்பேருண்மையின் வழியே, திருமந்திரத்தின்பால் சுவை கூட்டுகின்ற இலக்கிய நோக்கில், சூனிய சம்பாடணையாகிய பகுதி அமைந்துள்ளது.  விடுகதைப் புதிர்போல அமைந்துள்ள இதன் பாடல்கள், எளியவர்களுக்கும், இறைபொருளை உணர்த்த விழைந்த திருமூலரின் அருளுள்ளத்துக்குச் சான்றாகின்றன.

    துணைநூல்கள்:

    1. திருமூலர் அருளிய திருமந்திரம், (7,8,9-ஆம் தந்திரங்கள்): பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21, பதிப்பு ஆண்டு: அக்டோபர்- 2016.
    2. திருவாசகம் (மூலம்), சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை வெளியீடு, ஆண்டு: 1999.
    3. தேவாரத் திருப்பதிகங்கள்., ஞானசம்பந்தன்.அ.ச., கங்கை புத்தக நிலையம், சென்னை:17, ஐந்தாம் பதிப்பு: ஜனவரி 2005.
    4. சித்தாந்த அட்டகம், வைத்தியநாதன்.கு., (உரையாசிரியர்), திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சிமையம், திருவிடைமருதூர். (ப.ஆ.இ).

    ========================================================== 

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    கட்டுரையாளர், திருமந்திரத்தில் விளக்கப்பட்டுள்ள சைவ சித்தாந்தக் கூறுகளை எளிய நடையில் கற்போர் உய்த்துணருமாறு விளக்கியுள்ள செயல், பாராட்டிற்கு உரியது. உயிர் இறைவனை அடைதல் என்றால் என்ன?, மனிதராகப் பிறப்பெடுத்த உயிர்கள் புரியும் வினைகளின் அடிப்படையில் மட்டும்தான் மறுமைப் பலன்கள் விளைகின்றனவா?, மனிதரல்லாத உயிர்களுக்கு வினைச் செயல்பாடுகளும் வினைப் பலன்களும் உள்ளனவா? சைவ சித்தாந்திகள் பிறவிகளை எவ்வாறு வகைப்படுத்துகின்றனர்? வீடுபேறு என்றால் என்ன?  என்பது போன்ற கேள்விகளுக்கு ஆழ்ந்து விடை காண்பதற்கு எதிர்கால ஆய்வுகளில் அவர் முயலுதல் வேண்டும்.

     ========================================================== 

    Share