Blog

  • இந்தியா 2019 ஜூலை சந்திரயான் -2 இரண்டாம் நிலவுப் பயணத்தில் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் ஏவப் போகிறது.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    சந்திரயான் -2  விண்சிமிழ்
    ++++++++++++++++++++

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    சந்திரயான் -2  தளவுளவி,  தளவூர்தி

    ++++++++++++++++++++++++

    1. https://youtu.be/eRIOHJ9gJS0
    2. https://youtu.be/NJOWi4tEVy8
    3. https://youtu.be/kFVjb1RpPK0
    4. https://www.britannica.com/science/Apollo-space-program
    5. https://www.news18.com/news/tech/gearing-for-july-launch-chandrayaan-2-will-carry-nasa-payload-too-says-isro-2142881.html
    6. https://youtu.be/xMDdaNLc8DU
    7. https://youtu.be/xTki6w1Ohnw

    +++++++++++++++

    நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
    உளவிச் சென்று நாசா
    துணைக்கோளுடன் வடதுருவத்தில்
    ஒளிமறைவுக் குழியில்
    பனிப் படிவைக் கண்டது !
    நீரா அல்லது வாயுவா என்று
    பாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !
    சந்திரனில் சின்னத்தை வைத்தது
    இந்திய மூவர்ணக் கொடி !
    யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
    பந்தய மில்லை !
    விந்தை புரிந்தது இந்தியா !
    இரண்டாம் சந்திராயன்
    2019  ஜூலையில் சென்று இறக்கும்
    விண்ணுளவி , தளவுளவி ! தளவூர்தி
    பாரத விண்வெளித் தீரர் இயக்கும்
    சீரான விண்கப்பல் ஓர்நாள்
    தாரணி சுற்றி வரும் !
    செவ்வாய்க் கோள் செல்ல
    சந்திரனில் சாவடி அமைக்கும்
    திட்ட முள்ளது !
    அடுத்து இரண்டாம் சந்தரயான்
    நிலவைச் சுற்றி வந்து
    தளவுளவி நிலவில் அமர
    தளவூர்தி
    தவழ்ந்து சென்று தளம் ஆயும்
    திட்டமும் உள்ளது.

    +++++++++++

    இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்தின் பேரார்வத் திட்டம் : சந்திரயான் -2 நிலவுப் பயணம்.

    இஸ்ரோவின் [(ISRO)  INDIAN SPACE RESEARCH ORGANISATION] சிக்கனச் செலவு பேரார்வ நிலவுத் திட்டம் “சந்திரயான் -2”  வருகிற  ஜூலை மாதம்  9 – 16 தேதிகளுக்கு இடையே, 2019 ஆண்டில் விண்சிமிழ் ஏவப் போகிறது என்றும், செப்டம்பர் 6 இல் தளவுளவி நிலவில் இறங்கப் போகிறது என்றும் இஸ்ரோவின் தலைமை ஆளுநர் டாக்டர் கே. சிவன் மே மாதம் 20 ஆம் தேதியன்று அறிவித்தார்.  சிக்கலான சந்திரயான் -2  திட்ட நிகழ்வு பன்முறை தள்ளி வைக்கப் பட்டு தாமதமானது.  சந்திரயான் -1 நிலவுப் பயணத் திட்டம் 2009 இல் வெற்றிகரமாய் முடிந்து, விண்சிமிழ் பாரத தேசச் சின்னமோடு நிலவில் விழும்படிச் செய்யப்பட்டது.  அந்தப் பயணத்தில் சந்திராயன் -1 நிலவில் நீர் இருப்பதைக் கண்டு பிடித்தது.  இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சைனா ஆகிய மூன்று நாடுகள்தான் 239,000 மைல் [384,000 கி.மீ] தூர நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து,  தமது தளவுளவியை இறக்கி,  அதன் மூலம் தளவூர்தியைச் சுமந்து நகர்த்தி,  இயக்கி வந்துள்ளன.  சந்திரயான் -2  இல் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி [Orbiter, Lander & Rover] ஆகிய மூன்று விண்வெளிச் சாதனங்களைத் [Modules]  தூக்கிச் செல்லும்.  தளவுளவியும், தளவூர்தியும் ஒன்றாய்ச் சேர்க்கப் பட்டு, விண்சுற்றியுடன் விண்சிமிழைப் பூத ராக்கெட் GSLV MK III சுமந்து செல்லும்.

    இந்திய நிபுணரின் சிக்கலான, சவாலான இரண்டாம் நிலவுப் பயணம்

    1. இதுவரை நிலவில் எந்த உலக நாட்டுத் தளவுளவியும் இறங்காத தென் துருவப்  பகுதியில் சந்திரான் -2 தளவுளவி முதன்முதல் இறங்கப் போகிறது.
    2. விண்சுற்றி  நிலவைச் சுற்றத் துவங்கி,  60 மைல் [100 கி.மீ] உயரத்தை அடையும் போது, தளவுளவி நிலவில் மெதுவாய் இறங்கி, அதிலிருந்து நகரும் தளவூர்தி,  விண்சுற்றி நிலவைச் சுற்றி வருவது நீடிக்கும்.   தளவூர்தி பயணம் செய்து, மண் மாதிரிகளைச் சேர்க்கும்.   வாகனம் அவற்றை ஆய்வு செய்ய தளவுளவிக்குத்  தூக்கிச் செல்லும்.  மூன்றின் பளுவைச் சுமக்கும் விண்சிமிழின் நிறை 3 டன்.
    3. சந்திராயன் -2 நிலவுத் திட்டத்தின் விண்சிமிழ் சுமக்கும் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி ஆகிய மூன்றும் இஸ்ரோ தயாரித்தவை.  தளவூர்தி நிலவுத் தளத்தில் 14 நாட்கள் இயங்கி வரும்.

    Image result for Chandrayaan 2 Rover

    சிக்கனச் செலவில் இந்தியா செய்யும் இரண்டு சந்திரயான் & மங்கல்யான் திட்டங்கள்

    1.  செவ்வாய்க் கோளுக்கு  2013 இல் அனுப்பிய மங்கல்யான்  திட்டத்துக்கு 470 கோடி ரூபாய் செலவானது.  ஒப்பு நோக்க அமெரிக்கா ஹாலிவுட் தயாரித்த  ” கிராவிட்டி ” [Gravity]  திரைப் படத்துக்குச் செலவு : 644 கோடி ரூபாய். [100 மில்லியன் டாலர்]

    2.  சந்திரயான் -2 நிலவுப் பயண நிதி ஒதுக்கு : 800 கோடி ரூபாய்.  ஒப்பு நோக்க 2014 இல் ஹாலிவுட் தயாரித்த “இண்டர்ஸ்டெல்லர்”  [Intersteller]  திரைப்படம் தயாரிக்கச் செலவு 1062 கோடி ரூபாய் [165 மில்லியன் டாலர்]

    Image result for Chandrayaan 2 Rover

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    Image result for Chandrayaan 2 Rover

    இரண்டாம் நிலவுப் பயணத்துக்கு சந்திரயான் -2 விண்ணூர்தி தயாரிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  அப்பயணம்  2018 முதல் காலாண்த் திட்டமிடப் பட்டுள்ளது.  சந்திரனை நோக்கிப் போகும் சந்தரயான் -2 விண்ணூர்தி, [Mother Ship] கட்டுப்பாடுடன் மெதுவாய் நிலவில் தளவுளவியை இறக்க ஓர் எஞ்சின் இப்போது விருத்தியாகி வருகிறது. அதற்காகச் செயற்கை முறையில் நிலவுக்குழிகள் [Moon Craters] உள்ள சந்திரச் சூழ்வெளிப் போலி அமைப்பை விஞ்ஞானிகள்  ஏற்படுத்தி, அந்த அரங்கில் தளவுளவி இறக்கம், மீள் ஏற்றம் [Lander Descent & Ascent ] சோதிக்கப்படும். மேலும் தளவூர்தி [Rover] பிரிந்து நிலவில் இயங்குவதும் சோதிக்கப்படும்.

    கிரண் குமார் [இந்திய விண்வெளி ஆய்வு ஆணையக அதிபர்]

    Image result for Chandrayaan 2 Rover

    ரஷ்யாவின் கதிரியக்க ஏகமூலம் தயாரிக்கும் அணுவியல் கூடம் [JSC Isotope Sources] சந்திரயான் -2 விண்ணூர்தியில் இயங்கப் போகும், முக்கிய கியூரியம் -244 [Curium -244 (Cm-244)]  கதிர்வீச்சு உலோகத்தை அனுப்பியுள்ளது.  அது தளவூர்தி நிலவின் மண், பாறை ஆகியவற்றின் இரசாயனக் கலவைகளை அறிவிக்க உதவும் கருவிக்கு [Alpha Proton X-Ray Spectrometer] உடனிருக்கும்.

    ரோஸாட்டம் [ Rosatom State Atomic Energy Corporation]

    தளவுளவியில் உள்ள புதிய அமைப்புச் சோதிப்புகள் திட்டமிடப் பட்டன. தளவுளவி உணர்வுக் கருவிகள் இயக்கச் சோதனைகள் முடிந்தன. நிலவுத் தளப் போலிக்குழிகள் [Lunar Artificial Craters] கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் தயாரிக்கப் பட்டுப் பயிற்சிகள் முடிந்தன.

    Image result for Chandrayaan 2 Rover

    [Click to Enlarge]

    தளவுளவியை மெதுவாய் இறக்கப் பயிலும் நிலவுத் தளப்பரப்புச் சோதனைச் சாதனம் [Lunar Terrain Test Facility for Lander Drop] தயாராக உள்ளது. மற்றும் தளவூர்தி நகர்ச்சிச் சோதிப்புகளும் [Rover Mobility Tests] தயாராக உள்ளன.

    ஜித்தேந்திர சிங், விண்வெளி ஆய்வு உதவி மந்திரி

    சிக்கலான GSLV  இந்திய ராக்கெட் ஏவல்களில் வெற்றி எதிர்பார்ப்பு 50% மட்டுமே.   இந்தியா இந்த முற்போக்கு தொழில் நுணுக்கத்தை அறிந்து பளுவான விண்வெளிச் சாதனங்களைச் சுய முயற்சியில் சுமந்து செல்ல விரும்பியது.  அந்த முயற்சியில் தற்போதுதான் வெற்றி ஏற்பட்டுள்ளது.

    அஜய் லேலி (Space Expert, Institute of  Defense & Security Analysis, New Delhi)

    Image result for Chandrayaan 2 Rover

    [Click to Enlarge]

    2019 ஆண்டில் மீண்டும் நிலவை நோக்கிப் போகும் சந்திரயான் -2 விண்ணூர்தி

    2008 ஆம் ஆண்டு நவம்பர் 12 இல் சந்திரான் -1 விண்ணூர்தி நிலவை நெருங்கி வெற்றிகரமாகச் சுற்றி முதன்முதல் பனித்தள வடிவில் நீர் இருப்பதை எடுத்துக் காட்டியது.  அது செய்ய முடியாத பணிகளைச் செய்து முடிக்க இப்போது சந்திரயான் -2 தயாராகி வருகிறது.  சந்திரயான் -2 நிலவுத் தேடல் பயிற்சிகளில் தன்னுடன் நிலவில் மெதுவாய் இறங்கும் ஓர் தளவுளவியும் [Lunar Lander], அதிலிருந்து நிலவுத் தளப்பரப்பில் தவழ்ந்து சோதிக்கச் செல்லும் ஒரு தளவூர்தியும் [Lunar Rover] இணைக்கப் படும்.   ஆகவே சந்திரயான் -2 முதல் சந்திரயான் -1 விடப் பெரும் பளுவைத் தூக்கிச் செல்லும், பூத ராக்கெட் தயாரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் முதன்முதல் இந்திய விண்வெளி ஆய்வகம் நிலவில் மெதுவாய் இறங்கும் தளவுளவிப் பொறிநுணுக்கப் பயிற்சியில் வெற்றி பெற வேண்டும்.

    மேலும் இறங்கிய தளவூர்தியிலிருந்து, நகர்ந்து செல்லும் தளவுளவி சோதிக்கப்பட வேண்டும்.  மேலும் சிறப்பாக, தளவுளவி நிலவின் தளத்தை ஆழ்ந்து சோதிக்க மண் மாதிரிகள் அனுப்புவதை, சந்திரயான் -2 மீளூர்தி [Return Trip]  எடுத்துக் கொண்டு மீளவேண்டும். சவாலான இப்பணிகள் வெற்றி பெறப் பல்வேறு பயிற்சிகள் செய்து துணிவும், மன அழுத்தமும் வேண்டும்.  2013 ஆம் ஆண்டில் ஏவப்பட வேண்டிய சந்திரயான் -2, ஐந்து வருடங்கள் தாமதமாகி 2018 ஆண்டு துவக்க மாதங்களில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வகம் அறிவித்துள்ளது. சந்திரயான் -2 திட்டத்துக்குத் தேவைப்படும் கனப்பளு தூக்கும் ஏவுகணை தயாரிப்பில் தாமதமானது முதல் காரணம்.  அடுத்துச் செவ்வாய்க்கோள் சுற்றும் மங்கல்யான் திட்டம் முதன்மை இடம் பெற்றது இரண்டாம் காரணம்.

    Image result for Chandrayaan 2 Rover

    Image result for Chandrayaan 2 Rover

    2017 பிப்ரவரி 15 இல் கனப்பளு தூக்கும் ஒரே ஏவுகணையில் 104 துணைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி அனுபவம் பெற்றுள்ளது. சந்திரயான் -2 விண்வெளித் திட்டத்தில் நிலவுக்குச் செல்லும் ஒரு சுற்று விண்ணூர்தி, ஒரு தளவுளவி, ஒரு தளவூர்தி [One Orbiter, One Lander, One Rover]  ஆகிய மூன்று விண்வெளிச் சாதனங்கள் கொண்டிருக்கும். சந்திரயான் -2 விண்ணூர்தி நிலவுக்கு 60 மைல் [100 கி.மீ] உயரத்தில் பறக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்ணூர்தியிலிருந்து பிரித்து தளவுளவி மெதுவாய் இறக்கும் சிறிய எதிர்ப்பு ஏவுகணைகள் [Retro Rockets] நிலவுப் போலிக்குழிகள் [Lunar Craters] அமைக்கப்பட்டுச் சோதிக்கப் படுகின்றன.  தளவூர்தியைச் சுமந்து கொண்டு தளவுளவி மெதுவாய் இறங்கி நிலவின் தளத்தில் நிலையாக அமரும்.  பிறகு தளவூர்தி தானாகப் பிரிந்து தவழ்ந்து சென்று தளப்பரப்பு மண், பாறைகளைச் சோதிக்கும். இந்தியப் பெரும் சாதனையாகக் கருதப்படும் சந்திரயான் -2 நிலவுத் திட்டத்துக்கு ஆகப் போகும் நிதிச் செலவு : சுமார் 91 மில்லியன் அமெரிக்க டாலர் [450 கோடி ரூபாய்] 2017 நாணய மதிப்பு.  2018 இல் சந்திரனில் தவழ்ந்து செல்லும் இந்தியத் தளவுளவி உலக நாடுகளில் பெரும் பரபரப்பூட்டும் என்பதில் ஐயமில்லை..

    “முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லா மல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

    டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

    “நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”

    எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

    “சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

    மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (Chandrayaan Project Director) [நவம்பர் 13, 2008]

    Fig 1G Indian Rockets

    “இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1  & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது.  விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார்.  இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார்.  இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டு கிறது.  அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”

    ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.

    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு சந்திரனைச் சுற்று வீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

    எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

    சந்திரயான் -2  நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்

    தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது.   அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும்.    தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது.   அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும்.    அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும்.   பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய  அசுர சக்தி ஏவுகணைகள் சோதனை களில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே !    2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி  ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்).    அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கு !   அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின்  “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்”  (Russian Cryogenic Engine)  சேர்க்கப் பட்டிருந்தது.     பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும்.

    Image result for Chandrayaan 2 Rover

    Image result for Chandrayaan 2 Rover

    சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.    சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய  PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட் பயன் பட்டது.    இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது.   புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2  மிகக் கனமானது.  தாய்க்கப்பல் ஆணைச்சிமிழ்  தளவுளவி இறக்கியையும், தளவூர்தி வாகனத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இப்போது முழுமையாய்க் கிடைத்துள்ளது.  அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

    Image result for Chandrayaan 2 Rover

    பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்

    GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது.   புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் வீதியில்  (Geosynchronous Transfer Orbit)   10 டன் பளுவைச் சுமக்க வல்லது.   ராக்கெட் எடை : 629 டன்,  உயரம் :  51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன்.    அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும்.   இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது.    எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த  GSLV -III ராக்கெட்  மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும்.    2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.

    Image result for Chandrayaan 2 Rover

    Image result for Chandrayaan 2 Rover

    2010 டிசம்பரில்  ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது.    எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர்.   அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.  தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது.  ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது.   கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன.   அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும்    குறிப்பிடத் தக்கதாகும்.   இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன.   இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும்.  முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.  தாமதமாகும்.

    சந்திரனைச் சுற்றிவந்த முதல் இந்திய துணைக்கோள் 

    2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியநைச் சுற்றி வர நழுவிச் சென்றன.  இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக்கோள்களைப் “புவியிணைப்புச் சுற்று வீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

    இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்க நாசாவும் இணைந்து செய்த சோதனை

    2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன.  அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின !  முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது !   அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.

    Image result for Chandrayaan 2 Rover

    அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment).  நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பி யுள்ளன.  இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதி யாக உலகுக்கு அறிவிக்கப்படும் !  மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும்.  இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும்.  இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !


    ஒன்பது மாதங்களாய்ச் சந்திரயான்-1 நிறைவேற்றிய சாதனைகள்

    அக்டோபர் 28 2008 முதல் ஆகஸ்டு 2009 வரைச் சந்தரயான்-1 நிலவை 3000 மேற்பட்ட சுற்றுக்கள் சுற்றி விட்டது.  மேலும் சந்திரனுக்கு அருகே தணிவாக 60 மைல் (100 கி.மீ.) வட்ட வீதி உயரத்தில் பறந்து நிலவில் 70,000 படங்களை எடுத்து அனுப்பி யதுடன் நிலவின் குழிகளையும் மலைகளை யும் வியப்புறும் வண்ணம் படமெடுத்து விபரங்களைக் காட்டி யுள்ளது.  நிலவின் துருவப் பகுதிகளில் நிரந்தரமாய் மறைந்துள்ள குழிகளின் படங்களை எடுத்துள்ளது. அத்துடன் தளப் பரப்புகளை உளவி  இரசாயன மற்றும் தாதுக்கள் இருக்கும் தகவலைக் கொடுத்துள்ளது.  மே மாதம் 19, 2009 தேதிதான் சந்திரயான்-1 விண்கப்பலின் உயரம் 60 மைலிலிருந்து 120 மைல் வட்ட வீதிக்குத் (100 கி.மீ –> 200 கி.மீ) தள்ளப் பட்டது.  நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றி 2009 ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஏவப் பட்டது. ஏப்ரல் 26, 2009 இல் சந்திரயான்-1 விண்மீனை ஒப்புநோக்கித் தன் இருப்பிடத்தைக் காட்டும் “தாரகை நோக்கிக்” (Star Sensor) கருவிப் பழுதாகி இன்னல் விளைவித்தது.  இந்திய நிபுணர் துணைக் கோள் நேர்மைப்பாடுக் கருவியையும் ஏரியல் கம்பியையும் (Sensors of Gyroscopes & Antenna) பயன்படுத்திச் சந்திரயான் இருப்பிடத்தை அறிந்து கொண்டார்.  அந்த ஒரு பழுதைத் தவிர மற்ற கருவிகள் யாவும் இதுவரைச் செம்மையாக இயங்கி வந்துள்ளன.

    பனிப்படிவு இரட்டை நிலைநோக்குச் சோதனை (Bi-Static Experiment) புரிய இரண்டு விண்ணு ளவிகள் தேவைப்படும்.  இரண்டு விண்ணுளவிகளும் நெருங்கிப் பறந்து வட்ட வீதிகளில் நிலவைச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.  ஆகஸ்டு 20, 2009 ஆம் தேதி சந்திரயானும் நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றியும் (Lunar Reconnaissance Orbiter -LRO) 20 கிலோ மீடர் (12 மைல்) தூரத்தில் பறந்து செல்லக் கட்டுப்பாடு செய்யப்பட்டு நிலவின் துருவப் பகுதியில் எர்லாஞ்சர் குழியின் பனிப் படிவைக் கண்வைத்தன.  அவற்றின் இரு உளவுக் கருவிகளும் (Mini Radio Frequency Instrument -Mini-RF) பனிப்படிவு இருப்பைக் கண்டு தமது ரேடார்க் (Synthetic Aperture Radars -SAR) கதிர்க் கற்றைகளை அனுப்பி அவற்றின் எதிரொலிப்பை உறிஞ்சின.  தெறித்த சமிக்கைகளை உள்வாங்கிப் பூமியில் உள்ள கட்டுப்பாடு அரங்குகளுக்கு ஆராய விண்ணுளவிகள் அனுப்பி வைத்தன.  அந்த பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும் என்று அறியப்படுகின்றது.

    விண்ணுளவியின் முக்கிய குறிப்பணி வெண்ணிலவின் மேற்தளத்தை ஆராய்வது.  நிலவின் துருவப் பரப்பில் அடித்தள நீர்ப்பனி உள்ளதா என்று அறிவது.  பூமியில் அரிதாக இருக்கும் ஹீலியம்-3 ஏகமூல வாயு (Helium-3 -An Isotope of Helium-4 Gas) இருப்பைக் கண்டறிவது.  எதிர்கால அணுப்பிணைவுச் சக்தி உற்பத்திக்கு ஹீலியம்-3 வாயு எரிசக்தியாகப் பயன்படும் என்று நம்பப் படுகிறது.  இந்தப் பேரிச்சை விண்வெளித் திட்டத்துக்கு இந்தியா 78 மில்லியன் டாலர் (3800 மில்லியன் ரூபாய்) (2008 ஆகஸ்டு நாணய மதிப்பு) செலவு செய்கிறது !

    இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

    இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி 2011-2012 இல் ஏவிச் செல்ல அடுத்து தயாராகி வருகிறது.  அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது.  முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார்.  16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது !

    2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது.  அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்).  மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும்.  இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத் துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது.  விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும்.

    அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப் படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றி கரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 213-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நித்தி ஆனந்தின் புகைப்படக் கருவி பதிவுசெய்துவந்திருக்கும் படமிது. இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 213க்கு அளித்திருப்பவர் சாந்தி மாரியப்பன். நித்திக்கும் சாந்திக்கும் என் நன்றிகள்!

    சிந்தனையை முகத்தில் தேக்கி வாயிலையே ஆவலோடு நோக்கியிருக்கும் இந்த முதுமகளுக்குத் துணை, சுவரில் இணையாகக் காட்சியளிக்கும் கண்ணேறுபோக்கு விநாயகர்கள் தாமோ?

    இப்படத்துக்கேற்ற கவிதைகள் வரைய ஆவலோடு காத்திருக்கும் கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

    *****

    காதல் நாயகன் தன்னோடு வாசம் செய்யாது போனாலும் அவன் வரவை எதிர்நோக்கியே காத்திருக்கும் இந்தப் பெண்மணியின் நெஞ்சமெங்கும் அவன் நினைவுகளின் சுவாசம்தான் என்று நெகிழ்கின்றார் திரு. சுந்தர்.

    தன் எழிலை போற்றும்
    மாந்தர்தம் பரவிகிடக்கும்
    இப்பூவுலகில்
    உன் சிந்தையை விட்டு அகலாத
    காதல் நாயகனின்
    வரா வருகையை
    நித்தமும் எதிர்நோக்கி
    வீற்றிருக்கும் அன்னையே
    நீ பூண்ட இக்கோலம் ஊரறியும்
    உன் நினைவுகளின் ஏக்கங்களை
    முதற்கடவுள் அறியாத போதும்
    உன் வழிபாட்டில் சிறிதும்
    குறைவில்லை
    உன் நெற்றி இறக்கிய திலகம்
    பரிகார மோட்சமாக
    அறுகால்படியை அலங்கரிக்கின்றது.
    வறுமையின் வாசம் வீட்டை நிறைத்தாலும்
    அன்பானவனின் நினைவுகளைச் சுவாசித்து
    வாழும் தாயே நீ என்றுமே இல்லறத்தின்
     மகாலெட்சுமியே…….

    *****

    நேற்றைய சொல்வீச்சால் புண்பட்ட இந்த மனத்தின் எஞ்சிய நிம்மதியும் கண்பட்டுக் கழியாதிருக்கக் காவலிருக்கிறார் கண்திருஷ்டி கணபதி என்கிறார் திருமிகு. சக்திப்ரபா.

    நேற்று வீசிய ஏச்சாலே
    சொல்பட்டுச் சிதறிய மனம்
    புண்பட்டு இற்று விடுமென
    நூத்துப் போன சேலையுடன்
    வாசற்படியில் வாசமற்றுக்
    காத்துக் கிடக்கும் கணங்களில்
    எஞ்சிய கணநேர நிம்மதியும்
    கண்பட்டுக் கழியாதிருக்க
    அயராது காவலிருக்கும்
    கண்திருஷ்டி கண்பதி

    *****

    அறிவுக்கண் திறக்கக் கல்விகற்ற பிள்ளைகளால்தாம் இன்று முதியோர் இல்லங்கள் அதிகமாய்த் திறக்கின்றன; இந்நிலை என்று மாறும்? என்று வேதனையோடு  வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    குறையுமா…?

    பருந்தை எதிர்க்கப்
    பறந்து காக்கும் தாய்க்கோழிபோல்
    பிள்ளைகளைப்
    பாதுகாத்து ஆளாக்கிய தாய்,
    வருந்திக் காத்திருக்கிறாள்
    எமனின்
    வரவுக்காக..

    படித்த பிள்ளைகளைப் பெற்ற
    பல தாய்களின்
    நிலை இதுதான்..

    அறிவுக் கண்கள் திறக்க
    அவர்கள் கற்ற கல்வியால்
    இன்று அதிகமாய்த் திறக்கின்றன
    முதியோர் இல்லங்கள்..

    மாறுமா இந்த அவல நிலை,
    ஏங்கிக் காத்திருக்கும்
    இத்தகு அன்னையரின்
    எண்ணிக்கை குறையுமா-
    காத்திருப்போம்…!

    *****

    ”ஏக்கமதைச் சுமந்து ஏழ்மையைப் பூண்டு அமர்ந்திருக்கும் ஏந்திழை நீ!” என்று இந்த அம்மையை  வருத்தத்தோடு அடையாளப்படுத்துகின்றார் திருமிகு. சத்யா இரத்தினசாமி.

    ஏழ்மை

    ஏக்கமதைச் சுமந்த
    விழிகள் மட்டும்
    ஏழைக்கு மாறவில்லை
    இற்றை மட்டும் – என
    எடுத்துக்காட்டாய் வீற்றிருக்கும்
    ஏழ்மை அணி பூண்டமர்ந்த
    ஏந்திழை நீ…!

    *****

    நீண்ட வாழ்க்கையில் பயிற்றுவிக்கப்படும் வறுமையைப் படிமமாய்த் தம்  கவிதையில் வடித்துத் தந்திருக்கின்றார் முனைவர் ம. இராமச்சந்திரன்.

    நிறைவின் அறியாமொழிகள்

    வாழ்தலின் அர்த்தத்தில்
    உழைப்பின் அதிசுகத்தில்
    மனதின் அடியாழ விழைவின்
    இயற்கை நுகர்ந்து கலை தெளிந்து
    நீண்ட வாழ்க்கையில்
    பயிற்றுவிக்கப்படும் வறுமையும்
    வறுமையில் பணமும்!

    *****

    வாயிற்படியில் வீற்றிருக்கும் முதுமகளையும் அவள் முகத்திலே குடிகொண்டிருக்கும் வெறுமையையும் கண்ணுற்ற நம் கவிஞர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாய் மாறி  நம் உள்ளந்தொடும் கவிதைகளை அள்ளித் தந்திருக்கின்றார்கள்; அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது…

    சிறகு முளைத்து நகரம் பறந்த செல்லப்பறவைகள்
    இவ்வருடப் பண்டிகைக்கேனும்
    கூடு திரும்புமென்னும் நம்பிக்கையோடு
    குந்திக் கிடக்கிறது தாய்ப்பறவை!

    உள்ளும் புறமும் நடையாய் நடந்து
    நோகும் கால்கள் நீவி,
    வரவெதிர்பார்த்துப் பார்த்துப்
    புரையோடிய கண்கள் பூத்து,
    புன்னகை மறந்த உதட்டில் துடிக்கும்
    சிறுவிம்மல் மறைத்து
    பஞ்சப்பராரியெனக் காத்திருக்கும்
    நெஞ்சத்தின் தவிப்பு யாருக்குத் தெரியும்?
    உடையின் கிழிசல் பார்வைக்குத் தெரியும்
    இந்த உள்ளத்தின் கிழிசல் யாருக்குப் புரியும்?

    துணையிலா முதுமை துயரம்
    உறவிலாத் தனிமை பெருந்துயரம்
    அடக்கிவைக்கும் கேவல் வெடிக்குமுன்னே
    அன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ…?
    முடக்கிவைக்கும் ஆவி விடுபடுமுன்னே
    முன்னால் வந்து முகங்காட்டிப் போகுமோ…?

    ”துணையிலா முதுமை துயரம் நிறைந்தது. அதனினும் பெருந்துயரம் தருவது உறவிலாத் தனிமை. பிள்ளையின் வரவை எதிர்பார்த்து, விழிபூத்துக் காத்துக்கிடக்கும் இந்த முதியோளின் ஆவி விடுபடுமுன் அம்மா எனும் விளிப்பு இவள் காதில் விழுமோ?” என்ற கூரிய சொற்கள்மூலம் நம் விழிகளை ஈரமாக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. கீதமஞ்சரியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(257)

    -செண்பக ஜெகதீசன்

    எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
    னெண்ணுவ மென்ப திழுக்கு.

    -திருக்குறள் -467(தெரிந்து செயல்வகை)

    புதுக் கவிதையில்…

    செய்யத்தகுந்த செயல்களையும்
    செய்து முடிக்கும் வழிகளை
    ஆராய்ந்து அறிந்தபின்
    துணிந்து தொடங்கவும்..

    தொடங்கியபின்
    எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம்
    என்பது
    தவறாகிவிடும்…!

    குறும்பாவில்…

    செய்துமுடிக்கும் வழிகளை
    ஆராய்ந்தறிந்தபின் செயல்தொடங்கு,
    தொடங்கியபின் எண்ணுதல் தவறாகும்…!

    மரபுக் கவிதையில்…

    செயலைச் செய்யத் தொடங்குமுன்னே
    செயல்படும் வழிவகை தெரிந்தவைதான்
    பயன்படும் முறைகளை ஆய்ந்தறிந்தே
    புறப்படு செயலினைத் தொடங்கிடவே,
    செயல்படத் தொடங்கி நடக்கையிலே
    செயல்வகை எண்ணலாம் என்பதாலே
    பயனது யேதும் வருவதில்லை
    பழியாய்ச் சேரும் இழுக்கதுவே…!

    லிமரைக்கூ..

    செயல்படுமுன் ஆய்ந்தறிந்திடு வழியை,
    செயலதைத் தொடங்கியபின் எண்ணிக்கொள்ளலாமென்பது
    பயனிலாதுதரும் இழுக்காம் பழியை…!

    கிராமிய பாணியில்…

    எறங்கு எறங்கு செயலுல எறங்கு,
    எல்லாம் நல்லாத் தெரிஞ்சபின்னே
    எறங்கு எறங்கு செயலுல எறங்கு..

    வழிவகயெல்லாந் தெரிஞ்சபின்னே
    துணிச்சலா செயலுல எறங்கு,
    செயலச் செய்யத் தொடங்கிப்புட்டு
    அப்புறம் யோசிக்கலாமுண்ணு இருந்தா
    அதுவே பெரிய தப்பாப்போவும்..

    அதால
    எறங்கு எறங்கு செயலுல எறங்கு,
    எல்லாம் நல்லாத் தெரிஞ்சபின்னே
    எறங்கு எறங்கு செயலுல எறங்கு…!

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44

     

    குற்றங்கடிதல்

    குறள் 431:

    செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
    பெருக்கம் பெருமித நீர்த்து

    இறுமாப்பு , கோவம், காமம் இவையெல்லாம் இல்லாதவங்களோட செல்வாக்குதான் ஒசந்தது.

    குறள் 432:

    இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
    உவகையும் ஏதம் இறைக்கு

    தேவப்படுதவங்களுக்கு கொடுக்காம பேராச வைக்கிதது, தான் பெரிய ஆள் னு நெனைப்புல பெரியவங்களுக்கு மரியாத கொடுக்காம இருக்கது, கெட்ட செயல்ல மகிழ்ச்சியடையதது இதெல்லாம் தலைவனா இருக்கவனுக்கு குற்றங்களாவும்.

    குறள் 433:

    தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
    கொள்வர் பழிநாணு வார்

    பழி பாவத்துக்கு பயப்படுத பெரிய மனுசங்க தினையளவு குத்தத்தையும் பனையளவா நெனச்சு அத செய்யாம தங்கள காத்திக்கிடுவாங்க.  .

    குறள் 434:

    குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
    அற்றந் தரூஉம் பகை

    குற்றமே அழிவ உண்டாக்குத பகையாளி. அதனால அக்குற்றத்த செய்யாம இருக்குததயே நோக்கமா வச்சி வாழணும்.

    குறள் 435:

    வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்

    குற்றம் வருததுக்கு முன்னமே காத்துக்கிடாதவனோட வாழ்க்க நெருப்பு முன்ன இருக்க வைக்கப்போர் கணக்கா அழிஞ்சு போயிடும்.

    குறள் 436:

    தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
    என்குற்ற மாகும் இறைக்கு

    மொதல்ல தங்கிட்ட இருக்க கொறைய நீக்கிட்டு பொறவு அடுத்தவங்கொறைய சொல்லுத தலைவனுக்கு என்ன கொற வரப்போவுது?

    குறள் 437:

    செயற்பால செய்யா திவறியான் செல்வம்
    உயற்பால தன்றிக் கெடும்

    செய்ய வேண்டிய நல்ல காரியத்த செய்யாம சேமிச்சு வைக்குத கருமியோட சொத்து வீணா அழிஞ்சு போயிடும்.

    குறள் 438:

    பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
    எண்ணப் படுவதொன் றன்று

    மத்தவனுக்கு குடுக்காம சேத்து வைக்கித கஞ்சத்தனம் குற்றங்கள் எல்லாத்திலயும் கொடுங்குற்றம்.

    குறள் 439:

    வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை

    எந்தவொரு காலத்திலயும் தற்பெரும பேசி மார்தட்டிட்டு அலயுதது கூடாது. நல்லது தராத செயல செய்யவும் கூடாது.

    குறள் 440:

    காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
    ஏதில ஏதிலார் நூல்

    பொறத்தியாருக்குத் தெரியாம தன்னோட விருப்பத்த நிறைவேத்தத் தெரிஞ்சவனுக்கு பகையாளி செய்யுத சூழ்ச்சி பலிக்காம போவும்.

    (அடுத்தாப்லையும் வரும்….

    Share
  • நிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++++
    ++++++++++++++++++++

    மாறிடும் நிலவால் மாறிடும் பூமி.

    ஆறிப்போய்ச்

    சுருங்கிடும் நிலவு

    உட்கரு உஷ்ணம் குளிர்ந்து.

    நொறுங்கிடும் மேல் தளம்.

    குலுங்கிடும்

    நில நடுக்கம் நேர்ந்து.

    சுருங்கும் நிலவை ஈர்ப்பு விசை

    உருட்டி உண்டை யாக்கும்.

    ஒருதட்டு

    குதிரை ஏற மறு தட்டு

    தலை குனியும்

    தளப் பிறழ்ச்சியால் !..

    ஊர்ந்திடும் நிலவு

    பூமியையை விட்டு விலகிச் செல்லும்

    ஆமைபோல் !

    சேய் நிலவு தாய் பூமியை

    தாலாட்டும்

    ஓசை அலைகள்

    மூலமாய் !

    ++++++++++++++++++++

    நிலவின் தளம் நடுங்கும்  சுருங்கி வருகின்ற நிலவால் 

    நிலவின் உட்கரு உஷ்ணம் குளிர்ந்து பன்னூறு மில்லியன் ஆண்டுகளாக 150 அடிக்கும் மேலாக [50 மீடர்]  நமது நிலவு சுருங்கி வருகிறது.  தாறுமாறாக அடித்தட்டுகள், தளத் தட்டுகள் சில குதிரை ஏறும்.  சில அடி பணியும்.  திராட்சைப் பழங்கள் சுருங்கும் போது, பார்த்தால் மேல் தோல் மீது மடிப்புகள் [Wrinkles] உண்டாகும். அதுபோல் நிலவுத் தட்டுகள் மீதும்  மடிப்புகள் உண்டாகும்.  அவை உந்துப் பிழைகள் [Thrust Faults]  என்று குறிப்பிடப்படும்.  அப்பிழைகளால் நிலவில் நில நடுக்கம் ஏற்படலாம் என்று வானியல் நிபுணர் கருதுகிறார். 1969 முதல் 1972 வரை நிலவுக்குப் பயணம் செய்த அப்பொல்லோ அமெரிக்க விண்வெளி விமானிகள் அந்த உந்துப் பிழைகளை நிலவில் கண்டுள்ளார்.  அப்பொல்லோ -11, 12, 14, 15 & -16 பயணங்களில் நிலவின் தளங்களில் வைத்த நில நடுக்கக் கருவிகள் [Seismometer] இயங்கியுள்ளன.  அவை 28 சிறிய நடுக்கங்களைப் பதிவு செய்து வந்துள்ளன.  அவற்றின் ரிக்டர் அளவு : 2 முதல் 5.  நாசா நிலவுக்கு 2009 இல் ஏவியச் சுற்று விண்ணுளவி  [Lunar Reconnaissance Orbitor (LRO)] சுமார் 3500 நிலவு மடிப்புகளை பதிவு செய்துள்ளது.  சூரிய மண்டலத்தில் சுருங்கி வரும் வயதான நிலவைப் போல், புதன் கோளும் மிகப்பெரும் [600 மைல் (1000 கி.மீ.)] உந்துப் பிழை களைக் கொண்டுள்ளது என்று அறியப் படுகிறது.

     

    ++++++++++++++
    ++++++++++++++++
    நீர்க்கோளின் மகத்தான நிலவுக் காட்சி
    ++++++++++++++++++
    நிலவு பூமியை விட்டு அப்பால் நகரும்போது,  பனித்தள வழுக்கி காலணியில்  சுற்றும் மாது, மெதுவாகும் சமயம்  கைகளை நீட்டுவதுபோல், பூமியின் சுழற்சியும் தளர்ந்து குன்றுகிறது.
    எங்களது குறிக்கோளில் ஒன்று :  வானியல் காலநோக்கு  [Astro-Chronology] முறையில் பூர்வீக நிகழ்ச்சியின் தோற்ற காலத்தை அறிய முற்படுவது.  பில்லியன் ஆண்டுகட்கு முற்பட்ட  பாறை மாதிரிகளைத் துருவி உளவி, பூர்வீகப் புவித்தளவியல் காலப் பரிணாமத்தை கதிர் ஏகமூல நேர்ச்சி முறையில்  [Radioisotope Dating] அளப்பது.
    டாக்டர் ஸ்டீஃபன் மேயர்ஸ்  [பேராசிரியர் புவித்தளவியல் விஞ்ஞானம், விஸ்கான்சின் – மாடிஸன் பல்கலைக் கழகம்.]  துணை ஆசிரியர், அறிக்கைத் தாள் வெளியீடு, தேசீய விஞ்ஞானக் கழகம்]  [ஜூன் 4, 2018]   
    ++++++++++++++++
    பொங்கிவரும் பெருநிலவு
    இங்கில்லை என்றால்
    பரிதிக் கப்பால் வெகு தொலைவில்
    தங்கி விடும் பூமி !
    தட்ப, வெப்பம் மாறிவிடும் !
    உயிரின மெல்லாம்
    வெய்யிலில் எரிந்து  விடும் !
    நிலவில்லை யென்றால்
    கடல் வீக்கம் ஏது ?
    முடங்கிய
    கடல் வெள்ளத்தைக்
    கடைந்து கலக்க  அலை
    ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
    காற்றின் சிறகுகள்
    முறிந்து விடும் !
    கடல் நீர் சுற்றியக்கம்
    முடங்கும், தடைப்படும் !
    கடல் நீட்சியும் மீட்சியும்
    நடைபெறா !
    கடல் வெப்பம் சீர்ப்படாது
    முடங்கும் ஓரிடம் !
    காலநிலை மாறுபடும் !
    சூழ்வெளி வாயு வேறுபடும் !
    பயிரினம் பரிதவிக்கும் !
    உயிரினம் பாதிக்கப் படும் !
    பூமியின் சுயச்சுற்று தடைப்பட்டு
    நாள் மணிக் கணக்கு
    நீளமாகும் !
    கருநிலவு பூமியை விட்டு
    வருடந் தோறும்
    ஒன்றை அங்குல தூரம் 
    அப்பால் நகரும் !
    +++++++++++
    பூமியின் நாட்பொழுது நீட்சிக்கு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு 
    2018 ஜூன் 4 ஆம் தேதி நமது பூமிக்கும், நமது நிலவுக்கும் உள்ள உறவைப் புதிய கண்ணோட்டத்தில் மீளமைப்பு முறையில் ஆழ்ந்து வரலாற்றை விஞ்ஞானிகள் திருப்பி ஆராய்ந்த போது, 1.4  பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் டைனோசார்ஸ் வாழ்ந்த கடும் வெப்ப பூமியின் நாட்பொழுது 18 மணி நேரங்களே நீடித்தது !  அப்போது நமது நிலவு பூமியை மிகவும் நெருங்கி இருந்துள்ள தாகவும், அது பூமியின் சுய சுழற்சியைக் கட்டுப்படுத்தி மாற்றி வந்ததாகவும் விஞ்ஞானிகள் புதிய ஆய்வுகள் மூலம் கூறுகிறார்.
    இப்போதுள்ள நிலவின் நகர்ச்சிச் சுற்றில், பூமியின் சுழற்சி நாள் 24 மணி நேரமாக உள்ளது.  ஒரு பில்லியன் ஆண்டுக்குப் பிறகு, நிலவு நகரும் எதிர்காலச் சுற்றில், பூமியின் சுழற்சி நாட்பொழுது 30 மணி [?] நேரமாக மாறிவிடலாம் !
    நிலவு பூமிக்கு அப்பால் நகரும் போது, பூமியின் தன்னச்சு சுயச் சுழற்சி  தளர்ச்சி அடைந்து, மெதுவாகச் சுற்றுகிறது.  அப்போது நாட்பொழுது நீள்கிறது.  நிலவானது ஆண்டுக்கு 1.5 அங்குலம் [3.82 செ.மீ.] தூரம் புவிக்கு அப்பால் நகர்கிறது.  இந்த புதிய ஆய்வுக் கருத்து 2018 ஜூன் 4 ஆம் தேதி “தேசீய விஞ்ஞானக் கழக இதழில்  [National Academy of Sciences]  வெளியாகி உள்ளது.  வெளியிட்ட பூதளவியல் விஞ்ஞானி, விஸ்கான்சின் – மாடிஸன் பல்கழைக் கழகப் பேராசிரியர் ஸ்டீஃபன் மேயர்ஸ்.
    விண்வெளியில் பூமியின் சுயசுழற்சி, நிலவு போன்று பல்வேறு அண்டக் கோள்களால் பாதிக்கப் படுகிறது.  அதுபோல் பூமி சூரியனைச் சுற்றும் பாதையும் பல்வேறு கோள்களால் பாதிக்கப் படுகிறது.  இந்த மாறுதல்கள் யாவும் “மிலன்கோவிச் சுற்றுகள்” [Milankovitch Cycles] என்று அழைக்கப் படுகின்றன.
     

    “காலநிலை, காற்று, காரிகை, எதிர்பாரா செல்வீகம் (Fortune) – இவை யாவும் நிலவைப் போல் மாறிப் போய் விடுபவை !

    பிரெஞ்ச் பழமொழி.

    நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

    டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

    fig-1-relative-sizes-of-earth-moon

    பூகோளம் முதன்முதலில் தோன்றிய போது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போது பூர்வ பூமியானது எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வது கடினம் !  திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது !  கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும்  அறியமாட்டார் !  படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் ?  புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது !  சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது.  சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது !  ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்து பூமி குளிர்ந்து உருகிய தளத்துடன், ஆவி பறக்கும் சூழ்வெளியில் உருண்டு திரண்டு ஒரு கோளானது.  700 மில்லியன் ஆண்டுகள் கழிந்து அதாவது சுமார் 3.8 பில்லியன் வருடத்துக்கு முன்பு முதன்முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.

    fig-2-life-without-the-moon2

    4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய முதலே நீர்மயம் பூமியில் உண்டாகி விட்டது என்று ஒரு சில விஞ்ஞானிகள் கருதுகிறார்.  நிலவானது பூமியிலிருந்து சிதைக்கப்பட்டு அப்பால் தனியே சுற்ற ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட பெருங்குழியில் நீர் நிரம்பி கடல் உண்டாக ஏதுவானது.  ஆயினும் அப்போது பூமி வெட்ட வெளியாகத்தான் கிடந்தது.  நிலவு முதலில் 7300 மைல் தூரத்தில் சுற்ற ஆரம்பித்தது.  பிறகு நகர்ந்து இப்போதுள்ள தூரத்தில் பாதி அளவு (120,000 மைல்) தொலைவில் இருந்தது.  பூமியில் கடல் அலைகள் அதனால் பேரளவு உயரத்திலும், கொந்தளிப்பிலும் அடித்து வந்திருக்கின்றன.  கடல் நீட்சியால் (Tidal Bulge) பூமியின் “கோண முடுக்கம்” (Angular Momentum) தொடர்ந்து நிலவை ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலம் (3.8 செ.மீ) அப்பால் நகர்த்தி வருகிறது !  பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது !  தற்போதைய நிலவின் சராசரித் தூரம் பூமியிலிருந்து 235,000 மைல் (380,000 கி.மீ.).  பூமியின் வேகம் படிப்படியாகக் குறைந்து 6 மணி நாள் நீண்டு 24 மணி நாளாக மாறியது !

    fig-5-sea-tides-in-12-hours1

    பூமி இழக்கிறது ! நிலவு பெறுகிறது ! பூமி மெதுவாகிறது ! நிலவு விரைகிறது !

    பூமியின் ஈர்ப்பியல் வல்லமை நிலவின் ஈர்ப்பியல் வலுவை விட 3000 மடங்கு மிகையானது.  மேலும் பூமியின் திணிவு நிறை நிலவைப் போல் 80 மடங்கு பெரியது.  பூமி சக்தியை இழக்கிறது. நிலவு சக்தியைப் பெறுகிறது !  பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளைகுடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் .  எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் !  அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது.  அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது !  அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது !  அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது !  4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கி றார்கள் !  அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது !  இந்தக் குன்றிய தூரத்துக்கும் குறைவாக நிலவு பூமியை நெருங்கி இருக்க முடியாது.  அவ்விதம் தூரம் குன்றினால் பூமி நிலவைத் தன்வசம் இழுத்துத் தகர்த்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் !

    fig-1a-earth-tides

    படிப்படியாக பூமியின் ஈர்ப்புச் சக்தி குறைந்து தன்னச்சில் சுற்றும் அதன் வேகம் தணிகிறது.  பூமியின் ஆறு மணி நேர நாள் 4 பில்லியன் ஆண்டுகளில் நீண்டு இப்போது 24 மணி நேரமாக நீடித்துள்ளது !  இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் !  பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை !  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லிய மாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே !  2.5 பில்லியன் ஆண்டுகட்கும் 650 மில்லியன் ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின் நகர்ச்சி ஆண்டுக்கு அரை அங்குலம் (1.27 செ.மீ.) வீதம் இருந்ததாகக் கணிக்கிடப் படுகிறது.  அந்த யுகங்களில் பூமிக்கு மிக அருகில் இருந்த நிலவு படிப்படியாகத் தள்ளப்பட்டு இதுவரை 235,000 மைல் தூரத்தில் நகர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது.  1970 ஆண்டுகளில் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் நிலவிலே விட்டு வைத்த “மூன்று கோண மூலைக் கண்ணாடிகள்” மீது (Three-Cornered Mirrors Left on the Moon By the Apollo Astronauts) இப்போது லேஸர் ஒளிக்கதிரை அனுப்பித் துல்லியமாகச் சந்திரனின் நகர்ச்சியை [1.5 Inch per Year (3.8 cm per Year)] அளந்து வருகிறார் !

    fig-1b-tidal-movements-on-earth

    நிலவின் ஈர்ப்புக் கவர்ச்சி பூமியில் என்ன செய்கிறது ?

    நிலவால் கடலில் ஏற்படும் நீர் மட்ட உயர்ச்சி தாழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் அனுதினமும் இயற்கையாக நேரும் கடல் வெள்ளத்தின் நீட்சி மீட்சி இயக்கங்கள் ஆகும் !  கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை.  அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை.  சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும்.  ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது !  அவ்விதக் கடல் வெள்ள நீட்சி அடையும் போது ஒருவித “முறிப்பு நெம்புதலை” (Torque or Twisting Force) பூமி நிலவின் மீது உண்டாக்குகிறது !

    பரிதி, நிலவு, பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் உள்ள போது அவை நேர்முக நோக்கு ஈர்ப்பு விசையை மிகையாக்குகின்றன.  வசந்த காலத்தில் வரும் கடல் நீட்சி (Spring Tides) எல்லாப் பருவக் காலத்தையும் விட மிகையாக இருந்து வருகிறது !  நீள்வட்டத்தில் சுற்றும் நிலவு சிற்றாரத்தில் (Perigee) பூமிக்கு அருகில் உள்ள போது கடல் நீட்சி அதிகம்.  பிறகு பூமிக்கு அப்பால் நீளாரத்தில் (Apogee) நிலவு உள்ள போது கடல் நீட்சி குறைவு.

    fig-1c-spring-tides

    மேலும் சந்திரனின் ஈர்ப்பு விசை பூகோளத்தின் வாயுச் சூழ்வெளியைப் பாதிக்கிறது.  அது பூமியின் அடித்தட்டு நகற்சி (Plate Tectonics) இணைந்த மேற்தளக் கோளத்தையும் (Lithosphere – Topmost Layer of Earth along with the Crust) மாற்றுகிறது.  நமது பூகோளத்தின் அடித்தட்டு (crust) நிலவை நோக்கி அதன் ஈர்ப்பு விசையால் 12 அங்குலம் (30 செ.மீ) நீட்சி அடைகிறது

    துணைக்கோள் நிலவால் பூமிக்கு ஏற்படும் பலாபலன்கள்

    நிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும்.  அப்போது பேரளவு ஆக்ஸிஜன் வெளியாக்கும் ஆல்கே (Algae – Seaweeds) போன்ற கடற்களைகள் அழிந்து போகும்.  அதாவது சந்திரன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவுச்  சங்கிலி (Food Chain) பாதிக்கப்படும்.  நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்தற்கே.  அவற்றில் முக்கியமானவை :

    fig-1f-the-structure-of-earth

    1.  4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் அதிர்ஷ்ட வசமாக செவ்வாய்க் கோள் அளவில் பூமியைத் தாக்கிய ஓரண்டம் சிதைத்து 99% திணிவு மிக்க இயற்கையான உயிரினத் தடை உண்டாக்கும் சூழ்வெளியை (Natural Primordial Life-Prohibiting Dense Atmosphere) அகற்றியது !  அதன் பின்னர் மிக மெல்லிய தெளிவான உயிரின வளர்ச்சிச் சூழ்வெளி (Relatively Thin Translucent-Clear Life-Permitting Atmosphere) தோன்றியது.  அதே சமயத்தில்தான் முதன்முதல் சந்திரன் துணைக்கோளும் பூமிக்கு உண்டானதாகக் கருதப்படுகிறது !

    2.  அதே கொந்தளிப்புக் காலத்தில்தான் மிகையான மேற்பட்ட கதிர் வெப்பம் வீசும் யுரேனியம், தோரியம் மூலகங்கள் தோன்றி பூகோள உட்கரு செழிப்பாகத் துவங்கியது !  கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியக்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது !  அதாவது அடித்தட்டு நகர்ச்சியில் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கரி கலந்த பொருட்கள் (Subduction of Carbonacious Materials) வெளியாகிக் காலம் செல்லச் செல்ல “சுக்கிரன் விளைவு” மாதிரி (Venus Effect of Global Warming over Time) பூகோளச் சூடேற்றத்தைப் படிப்படியாகத் தவிர்ப்பது.

    fig-1e-earths-lithosphere1

    3.  கடல் நீர்மட்டம் ஏறி இறங்கி கடல் வெள்ளத்தின் சுற்றோட்டத்தை அனுதினமும் நிகழ்த்தி கடல்நீர் முடமாவதைத் தடுப்பது.  அதன் விளைவு : மேலான மனித உயிர் வளர்ச்சிக்குத் தடையானவற்றை நீக்குவது.

    4.  நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல் நீட்சி தடை செய்வதால் (Tidal Braking) பூமியின் சுயச் சுழற்சி வேகம் தணிகிறது !  அதனால் பூகோளத்தில் உயிரினம் செம்மையாக விருத்தியாகச் சூழ்வெளி மிதமாகிறது. பூமியின் சுழற்சி வேகம் மிகையானால் உயிரினம் பாதிக்கப்படும் பயங்கரச் சூழ்வெளி உருவாக வழி ஏற்படும்.

    5.  மேலும் பூமியின் சுற்றச்சு 23.4 டிகிரி பரிதிக்கு ஒப்பாகச் சரிந்திருக்க நிலவே நிலைப்பாடு செய்ய உதவுகிறது.  அதே சமயத்தில் யுரேனஸ் கோளின் அச்சு கட்டுப்பாடு இல்லாமல் சுற்றச்சு சுமார் 98 டிகிரி சாய்ந்து போய் உள்ளது.  அதாவது மிதமான பருவ நிலைக் காலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு மேலும் கீழும் சுற்றியக்கம் பெற உயிரினங்களுக்கு வசதி உண்டாக்குகிறது.

    fig-4-spring-tide-neap-tide

    6.  உலகம் முழுவதிலும் நிலவின் அமைப்பே கடல் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.  நிலவு இல்லாவிட்டால் அலை ஏற்ற இறக்கங்கள் பேரளவில் மெலிந்து போய்விடும் !  நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் !  அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் !  பூமியில் சுமுகமாக வசித்த மனித இனங்கள் வசதியற்ற தட்ப வெப்பச் சூழ்வெளியில் தவிக்க நேரிடும் !

    சூரிய மண்டலத்தில் நூதனப் படைப்புக் கோள் பூகோளம்

    பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது.  அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது !  அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது !  பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது !  ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது !  பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.

    first-man-on-the-our-moon1

    fig-6-solar-eclipse-on-the-moon

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 On the Moon By : Patrick Moore (January 2001)
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802271&format=html(நிலவு எப்படித் தோன்றியது ?)
    13 Wikipedia – Inner Structure of the Moon [January 31, 2008]
    14 Astronomical Society of the Pacific – Whait if the Moon Did not Exist ? By : Neil F. Comins, University of Maine (1996)
    15 AstronomyCafe.net What Would Have Happened if the Earth Did not Have the Moon ?
    16 Home Page. Natural World . Com – Formation of the Earth & The Moon, Tides & Gravity
    17 Earth-Moon Dynamics Page – Would We have Had Evolution Without the Moon ? By : Dan Green B.Sc. (Hons).
    18 Tides on Earth – The Recession of the Moon By : Tim Thompson (Matt Rosenberg http://geography.about.com/ )
    19 Scientific American – Without the Moon, Would There Be Life on Earth ? By : Bruce Dorminey (April 21, 2009)

    20. https://youtu.be/j91XTV_p9pc

    20 (a)  https://youtu.be/0tqgWuSIZUg

    21. https://newslikethis.com/2018/06/04/thank-moon-earth-s-lengthening-day [June 4, 2018]

    22.  https://news.wisc.edu/thank-the-moon-for-earths-lengthening-day/  [June 4, 2018]

    23.  https://phys.org/news/2018-06-moon-earth-lengthening-day.html  [June 4, 2018]

    24.  https://www.sciencedaily.com/releases/2018/06/180604151200.htm [June 4, 2018]

    25.  http://mentalfloss.com/article/546952/moon-making-days-earth-longer  [June 6, 2018]

    26. https://en.wikipedia.org/wiki/Milankovitch_cycles  [ June 8, 2018]

    27. https://www.independent.co.uk/life-style/gadgets-and-tech/news/moon-shrinking-nasa-moonquake-space-crust-lunar-surface-a8911881.html

    26. https://www.space.com/moonquakes-moon-is-shrinking-apollo-data.html

    29. https://www.nasa.gov/mission_pages/LRO/news/shrinking-moon.html

    30.  https://www.thehansindia.com/tech/shrinking-moon-may-be-generating-moonquakes-529274  [May 18, 2019]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] [May 18 , 2019] [R-2]

    Share
  • கொன்றுவிட்டால் சுவர்க்கம் கிடைக்குமா?

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    வெறி கொண்டு அலைகின்ற
    நெறி பிறழ்ந்த கூட்டமதால்
    கறை படியும் காரியங்கள்
    கண் முன்னே காண்கின்றோம்.
    பொறி புலன்கள் அவரிடத்து
    அழி என்றே சொல்லுவதால்
    குடி மக்கள் எந்நாளும்
    கதி கலங்கிப் போகின்றார்!

    மதம் என்னும் பெயராலே
    மதம் ஏற்றி நிற்கின்றார்
    சினம் என்னும் பேயதனை
    சிந்தை கொள வைக்கின்றார்
    இனம் என்னும் உணர்வுதனை
    இருப்பு கொள்ள வைக்குமவர்
    தினம் தீங்கு செய்வதிலே
    திருப்தி உற்றுத் திரிகின்றார்!

    மொழியுணர்வை மத உணர்வை
    இன உணர்வை அழிக்கின்றார்
    பழிதீர்க்கும் வெறி உணர்வை
    பாடம் எனப் புகட்டுகிறார்
    கொன்று விட்டால் சுவர்க்கமென
    கொள்கை தனைப் பரப்புமவர்
    கொன் றொழிக்கும் பாங்கினிலே
    கோர நடம் ஆடுகிறார்!

    வெறி கொண்டார் நெறிதிரும்ப
    வேண்டி நிற்போம் இறைவனிடம்
    நெறி பிறழ்ந்து போவாரை
    வழி மாற்ற முனைந்திடுவோம்
    வள்ளுவனார் ஆழ் கருத்தை
    உள்ளம் எல்லாம் பதித்திடுவோம்
    நல் இணக்கம் சமாதானம்
    நாட்டில் ஓங்கச் செய்திடுவோம் !

    Share
  • ஓர் சமயம்

    -பாஸ்கர் சேஷாத்ரி

    ஓர் சமயம் நெளிவது கண்டு
    பெண்ணொன்று உதிக்கும்
    மறு முறை நீளக் கூந்தல் பரப்பின் 
    கடலலை புரளும்
    அழுது புரளும் மழலையாய் சடக்கெனப் புரியும்
    மலை உச்சி பனிபொழிவு புகை போல பரவும்
    எரிமலை கருவெள்ளை படராக திரியும் .
    வாசம் வந்து தாங்கும் வரை
    ஊதுபத்தி மறக்கும்!
    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-43

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-43

    43. அறிவுடைமை

    குறள் 421:

    அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண்

    அறிவு நமக்கு அழிவு வராம காக்கும். அது மட்டுமல்லாம பகையாளியாலயும் அழிக்க முடியாத அரண் கணக்காவும் நிக்கும்.

    குறள் 422:

    சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பா லுய்ப்ப தறிவு

    மனச அது போக்குல விடாம கெட்டத வெலக்கி நல்ல வழில நம்மள நடத்துததே அறிவு.

    குறள் 423:

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    யார் என்ன சொன்னாலும் நம்பாம உண்ம எது னு கண்டுபிடிக்கது தான் அறிவு.

    குறள் 424:

    எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு

    பொறத்தியார் மனசுல பதியுதது கணக்கா எளிமையா பேசுததும்,  அவுக சொல்லுத விசயத்த கூறுபோட்டு பாத்து  எளிதா விளங்கிக்கிடுததும் தான் அறிவு.

    குறள் 425:

    உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
    கூம்பலு மில்ல தறிவு

    ஒலகத்து ஒசந்தவங்க கூட நட்பா இருக்கது சிறந்த அறிவு. நட்போட தொடக்கத்துல மகிழ்ச்சியாவும் பொறவு வருத்தப்படுததும் இல்லாம ஒண்ணுபோல சீரா இருக்கது அறிவு.

    குறள் 426:

    எவ்வ துறைவ துலக முலகத்தோ
    டவ்வ துறைவ தறிவு

    ஒலகத்து பெரிய மனுசங்க எப்டி வாழுதாங்களோ அவங்களோட சேந்து தானும் அப்படியே வாழுதது அறிவு.

    குறள் 427:

    அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்

    அறிவுள்ளவுக நாளமுன்னயும் நடக்கப் போகுதத முன்னமே அறிஞ்சு வச்சிருப்பாக. அறிவில்லாதவுகளால அது ஏலாது.

    குறள் 428:

    அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
    தஞ்சல் அறிவார் தொழில்

    பயப்பட வேண்டியதுக்கு பயப்படாம தெனாவட்டா இருக்கது முட்டாள்தனம். பயப்பட வேண்டியதுக்கு பயப்படுதவங்க புத்திசாலிங்க.

    குறள் 429:

    எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
    அதிர வருவதோர் நோய்

    அடுத்தாப்ல வரப்போகுதத முன்னமே உணந்து காத்துக்கிடுதவனக்கு நடுங்குத அளவுக்கு அதிர்ச்சியான துன்பம் னு ஒண்ணு வாராது.

    குறள் 430:

    அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனு மிலர்

    ஒண்ணும் இல்லையினாலும் அறிவுள்ளவங்க எல்லாத்தையும் உடையவுக.  வேற எத வச்சிருந்தாலும் அறிவில்லாதவுக ஒண்ணுமில்லாதவங்களுக்கு சமானம் தான்.

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • மகிழ்ச்சி என்பது மாயை இல்லை!

    மகிழ்ச்சி என்பது மாயை இல்லை!

    நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் (158)

    `நாம் அவரைப் போலவா? அவர் மிக்க திறமை வாய்ந்தவர்!’ என்று யாரையாவது பார்த்துப் பெருமூச்சு விடுகிறவர்கள் அநேகர்.

    திறமை ஓரளவுக்குதான் ஒருவரை உயர்த்தும். அந்நிலை குலையாமலிருக்க நற்பண்பு அவசியம்.

    கதை

    பதின்ம வயதில் கலைத் துறையில் தனக்கு அசாத்திய ஆர்வத்துடன், திறமையும் இருப்பதைப் புரிந்துகொண்டார் விவேகன். சில விருதுகளைப் பெற்றதும், கர்வம் தலைக்கேறியது. அவர் மிகச் சிறந்தவர் – அவரைப் பொறுத்தவரை. ஓயாது, அதே துறையிலிருந்த பிறரைப் பழித்தார் – அவர்கள் முன்னிலையிலேயே!

    பிறரது உணர்ச்சிகள் பொருட்டல்ல என்று நினைப்பதுபோல் நடப்பவர்களுக்கு அன்பை யாரிடமிருந்து பெறமுடியும்? அன்பு கிட்டாததால் மகிழ்ச்சியும் குன்றியது.

    மகிழ்ச்சி மாயை இல்லை. அதை வெளியில் எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை. நமக்குள்ளேயேதான் ஒளிந்துகொண்டிருக்கிறது.

    “பிறரைப் புரிந்துகொள்வது அறிவு என்றால், தன்னைத் தானே புரிந்துகொள்வது விவேகம்” (ஒரு தத்துவ ஞானி).

    ஏணிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கும்போதே, கீழே நோக்கி, `அடேயப்பா! எத்தனைப் படிகளைக் கடந்துவிட்டேன்!’ என்று பெருமிதம் கொண்டுவிட்டால், தலைசுற்றிப் போகாதா! எத்தனை வெற்றி பெற்றாலும், தன்னையே வியந்துகொள்வதும் அதுபோல்தான். வாழ்வில் சறுக்காமலிருக்க எளிமை அவசியம்.

    `அவ்வளவு பெரிய மனிதர் பொது இடத்தில் என்னை அப்படித் தூக்கியெறிந்து பேசியிருப்பாரா? எனக்கு அவ்வளவாக திறமை இல்லை!’ என்று நொந்துபோயினர் விவேகனது அகந்தைக்குப் பலியான சிலர்.

    பிறரிடம் என்ன குறை என்பதை ஆராய்ந்தபடியே இருப்பவரை எதற்குப் பொருட்படுத்த வேண்டும்? `அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று விட்டுத் தள்ள வேண்டியதுதான்.

    பிறர் என்ன நினைப்பார்களோ, எப்படியெல்லாம் நம்மிடம் குறை காண்பார்களோ என்று யோசித்தே ஒவ்வொரு வார்த்தையையும் பேசி, ஒவ்வொரு காரியத்தையும் செய்தால் நம்மை நாமே உணர முடியாது போய்விடும். மகிழ்ச்சி பறிபோய், மன உளைச்சல்தான் மிஞ்சும்.

    நம் நலனை நாடும் ஒருசிலர் பலர் முன்னிலையில் உரக்கப் புகழ்ந்து, குறைகளைத் தனிமையில், மெல்லக் கூறுவார்கள். புகழ்ச்சியினால் கர்வம் கொள்ளாது, அறிவுரையில் உபயோகமானதை மட்டும் ஆராய்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

    புதிதாக மணமாகி, கூட்டுக் குடும்பத்துடன் வாழ வந்தவள் கீதா. பலருடனும் ஒத்துப் போகத்தான் முடிவெடுத்து வந்தாள். ஆனால், மாமியாரும் நாத்தனார்களும் அவள் செய்த ஒவ்வொரு காரியத்திலும் குறை கண்டுபிடித்து, அதைப் பலரிடமும் கேலியாகக் கூறியதை அவளால் ஏற்க முடியவில்லை.

    அனுசரணையாக இருக்க முயன்ற கணவனும், `பெண்டாட்டிதாசன்’ என்று கேலிப் பொருளாக ஆனான். பிறரது அதிகாரமும், `தன்னை ஒரு பொருட்டாக எவரும் மதிக்கவில்லையே!’ என்ற அவமானமும் கீதாவின் உடல்நிலையைப் பாதித்தன.

    ஒரு குழந்தைக்குத் தாயான பின்னர், கீதாவின் நிலைமை மோசமாகியது. அவள் பெற்ற குழந்தையிடம் அவளுக்கு எந்த உரிமையும் இல்லாததுபோல், அவள் செய்வதில் எல்லாம் குற்றம் கண்டுபிடித்தார்கள்.

    அப்போது கீதா செய்திருக்க வேண்டியது என்ன?

    எந்தத் தவறும் தன்மீது இல்லை என்று தெளிந்து, தனியாகப் போயிருக்கலாம். அப்போது கிடைக்கும் சுதந்திரத்தால் நிம்மதியும் எழுந்திருக்கும். குழந்தையும் இரு மாறுபட்ட கட்சிகளால் ஆட்டுவிக்கப்படாது, தாயின் வார்த்தைக்கு மட்டும் கட்டுப்பட்டு வளரும்.

    `வயதானவர்களை விட்டு நாங்கள் தனிக்குடித்தனம் போனால், அவர்கள் பாவம், இல்லையா? பிறர் பழிப்பார்கள்!’ என்று அஞ்சிப் பொறுமை காக்கலாம். பொறுக்க முடியாவிட்டாலும், மாற்றத்திற்குப் பயந்து ஒரே நிலையில் இருப்பது பொறுமையா?

    அப்படி, எதையும் தாங்கிய மருமகள் கமலாட்சி என்னிடம் கூறியது: “என் கணவர், `I hate you, dee” (உன்னை வெறுக்கிறேன்டி) என்று சொல்லிவிட்டார்”. அதற்காகவே காத்திருந்ததுபோல் பெருமை தொனித்தது அவள் குரலில்.

    அக்குடும்பத்துக்கு மருமகளாக வந்திருந்த மற்ற இரு பெண்களும் தம் மகிழ்ச்சியைப் பிறருக்காக விட்டுக் கொடுக்க விரும்பாது தனியாகப் போய்விட்டிருந்தார்கள். தமக்கு விரும்பியதைச் செய்ய முடிந்தது. குழந்தைகளைத் தம் விருப்பப்படி பல உபயோகமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தினர். `இதெல்லாம் வீண் வேலை! பணம்தான் விரயமாகும்!’ என்று பழிக்க, யாரும் அருகில் இருக்கவில்லை.

    புக்ககத்தினர் கமலாட்சியின் நல்ல குணத்தைப் புரிந்து, அதிகக் குறுக்கீடு இல்லாமல் அவளுக்கு மரியாதை கொடுத்து நடத்தியிருந்தால் எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது.

    `தன் மகனைத் தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு போக வந்தவள்!’ என்று தாய்மார்கள் நினைத்து, மருமகளுடன் போட்டி போடும்போது எல்லாருடைய மகிழ்ச்சியும் பறிபோய்விடுகிறது.

    கதை

    அன்பான பெற்றோரை விட்டு வெகுதூரம் வந்திருந்த சுரேகா, அடிக்கடி நீண்ட கடிதம் எழுதினாள்.

    வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, ஓய்ந்த நேரத்தில் அவள் எழுதியதால், வேறு எப்படி குறை சொல்வது என்று மாமியாருக்குப் புரியவில்லை.

    “நீ இவ்வளவு நீண்ட கடிதம் எழுதித் தள்ளினால், அதை யாரும் படிக்கப் போவதில்லை!” என்றாள், கேலிச் சிரிப்புடன்.

    தான் என்ன செய்தாலும் மாமியார் ஏனோ அதில் குறை கண்டுபிடிக்கிறாள் என்று புரிந்தது, சுரேகாவிற்கு. அவள் அயரவில்லை. நிகழ்காலம் பொறுக்க முடியாது இருந்தபோது, கடந்த காலத்தில் பெற்றோரிடமிருந்து பெற்ற அன்பை எண்ணி ஆறுதல் பெறும் முயற்சியிலிருந்து மாறவில்லை.

    நமக்குப் பிடித்த ஆக்ககரமான செயல்களை முயன்று செய்கையிலேயே மகிழ்ச்சி கிட்டிவிடுகிறது. அடுத்தவருக்காக அதை விட்டுக் கொடுப்பானேன்!

    கூட்டுக் குடும்பத்தில், `உனக்குப் பிடித்ததைச் செய்!’ என்று, வயது வந்தவர்களுக்கு அனுமதி கொடுத்து, சற்றே விலகியிருந்தால், அவர்கள் ஏன் பிரிந்து போக நினைப்பார்கள்? பலருடன் இணைந்திருந்தால், பக்க பலமும் பாதுகாப்பும் இருக்கும். செலவும் கணிசமாகக் குறையுமே!

    `எல்லாரும் செய்கிறார்களே!’ என்று மந்தையாடுபோல் நடக்காது, தமக்கென ஒரு தனிப் பாதை வகுத்துக்கொள்ளும் துணிச்சல் வெகு சிலருக்கே இருக்கிறது.

    கதை (படித்தது)

    சீனாவில் ஒரு கோடீஸ்வரர் அண்மையில் இறந்தபோது, அவருடைய சொத்து பூராவும் அனாதரவான குழந்தைகளின் கல்விக்கும் இதர தர்ம ஸ்தாபனங்களுக்கும் வழங்கப்பட்டது. இத்தனைக்கும், அவருக்கு ஒரே மகன்!

    இருபது வருடங்களுக்கு முன்னரே, “நீ சுயமாக உழைத்துச் சம்பாதித்தால்தான் உனக்கு உண்மையான மகிழ்ச்சி கிட்டும். நான் சேர்த்த பணம் உனக்கு வேண்டாம்,” என்று தந்தை கூறியதை ஏற்றுக்கொண்டிருந்தார் மகன். இப்போது தனது நாற்பதாவது வயதில், தந்தையின் செயலால் சிறிதும் பாதிக்கப்படவில்லை.

    தம் செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, `அன்பு’ என்ற பெயரில் குழந்தைகளுக்காக வங்கியில் பணம் சேமிப்பவர்கள், தம் `தியாகம்’ குழந்தைகளுக்கு நிரந்தரமான மகிழ்ச்சி அளிக்குமா என்று யோசிக்கத் தவறிவிடுகிறார்கள்.

    கதை

    தந்தை விட்டுப் போன பெரும் சொத்தால், உத்தியோகத்திற்குப் போகும் எண்ணத்தைக் கைவிட்டவர் சிவகுரு.

    எளிதாகப் பணம் கிடைக்கும்போது அதன் அருமை புரியுமா? மனைவியுடன் உல்லாசப் பயணம், வெளியூர்களில் நடக்கும் இசைக் கச்சேரிகள் என்று பொழுதைப் போக்கியவருக்கு இருபது வருடங்களுக்குப் பின் அந்த வாழ்க்கை அலுத்துப் போயிற்று.

    மனம்போனபடி செலவிட்டு, எதிலும் மகிழ்ச்சி கிடைக்காது போக, பணமும் மிகக் குறைந்துவிட்ட நிலையில் வெறுமைதான் மிஞ்சியது.

    சிவகுருவோடு ஒப்பிட்டால், சீனாக்கார செல்வந்தர் அறிவாளி. மகன்மேல், அவனது நிரந்தரமான மகிழ்ச்சியில், அக்கறை கொண்டவர். முக்கியமாக, மகனும் தன்னைப்போல் சாமர்த்தியசாலிதான் என்ற நம்பிக்கையும், அலாதி துணிச்சலும் கொண்டவர்.

    இக்குணங்களால்தான் பெரும் பொருள் ஈட்ட முடிந்ததோ?

     

    Pic courtesy: http://getdrawings.com

    Share
  • கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?

    கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாக இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்கத் தூதர் டேவிட் ப்ரீட்மேன் கூறியிருக்கிறார். கடவுள் இஸ்ரேலின் பக்கம் இருப்பதாகச் சொல்வதற்குப் பதில் இப்படிச் சொல்கிறார் போலும். இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாகச் சொல்வதால் இஸ்ரேல் செய்வதெல்லாம் சரியென்று சொல்கிறாரா? இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமெரிக்கக் கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் இவர்.

    பைபிளை அப்படியே நம்பும் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் (Evangelical Christians) அமெரிக்கா தன்னுடைய தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றி ஒரு வருஷம் ஆனதைக் கொண்டாடும் ஒரு விழாவில் அவர் இப்படிப் பேசியிருக்கிறார். (யேசுவைக் கொன்றவர்கள் என்ற கோபம் யூதர்கள் மேல் இவர்களுக்கு சென்ற நூற்றாண்டுவரை இருந்தது. பல ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள் வாழ்ந்து வந்தபோது யேசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் அன்று கிறிஸ்தவர்கள் யூதர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்று யூதர்கள் வெளியில் வர மாட்டார்களாம். இப்போது யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பாலஸ்தீனத்தில் மோதல் ஏற்பட்ட பிறகு கிறிஸ்தவர்கள் யூதர்கள் பக்கம் சாய்ந்துவிட்டனர். உலகம் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது ஒரு காரணம். கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களை எதிர்க்க, வெறுக்க ஆரம்பித்தனர். இரண்டாவது, பெத்லஹேமில் பிறந்த இயேசு மாண்டது ஜெருசலேமில். ஜெருசலேம் இஸ்ரேலின் ஆதிக்கத்தில் இருந்தால்தான் தாங்கள் அங்கு இடையூறின்றிப் போய்வரலாம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இது தவறான நம்பிக்கை என்று நான் சொல்வேன்.) இப்போது அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவு வலுப்பட்டிருப்பதாலும் இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாலும் இஸ்ரேல் மிகவும் பலமுள்ளதாக ஆகிவருவதாக அவர் கூறியிருக்கிறார்.

    அமெரிக்காவும் இஸ்ரேலும் நெருங்கிய உறவு கொண்டிருப்பதாக அவர் கூறியதாலேயே அமெரிக்கா இஸ்ரேலுக்கு சாதகமாக ஒருதலைப் பட்சமாக நடந்து வருகிறது என்று சொல்லலாம். இதற்கு நிறைய உதாரணங்கள். அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றியிருப்பது; பாலஸ்தீன அகதிகளுக்கு ஐ.நா. அளித்து வரும் உதவியில் தன் பங்கைக் குறைத்திருப்பது; வெஸ்ட் பேங்கை இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று கூறுவதை நிறுத்திவிட்டது; வாஷிங்டனில் இருந்த பாலஸ்தீனத்தின் அமெரிக்க உறவு அலுவலகத்தை மூடிவிட்டது; ஜெருசலேமில் இருந்த பாலஸ்தீனர்களுக்கான துணைத் தூதரகத்தை இஸ்ரேலுக்கான தூதரகத்தோடு இணைத்துவிட்டது. இப்படிப் பல. ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஆன நாளிலிருந்தே பாலஸ்தீனர்களுக்கு இருந்த உரிமைகளைப் பறிப்பதும் இஸ்ரேலுக்கு புதிய சலுகைகள் வழங்குவதும் அமெரிக்காவின் வழக்கமாயிற்று.

    ப்ரீட்மேனின் இந்தக் கருத்தைப் பாலஸ்தீனர்கள் மட்டுமல்ல இஸ்ரேலில் ப்ரீட்மேனுக்கு முன்னால் அமெரிக்காவின் தூதராக இருந்த டேனியல் குர்ட்ஸெர்கூட வரவேற்கவில்லை. இவர் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் காலத்திலும் அமெரிக்காவின் இஸ்ரேல் தூதராக இருந்திருக்கிறார். ‘அமெரிக்க அரசுக்கும் அதன் மக்களுக்கும் தூதரான இவர் தன் பணிக்குப் பொருத்தமில்லாத விஷயங்களாகக் கூறிவருகிறார்’ என்றார். பாலஸ்தீனர்களுக்கு ப்ரீட்மேன் கூறியது மிகுந்த கோபத்தைக் கொடுத்தது. அமெரிக்கத் தூதரான இவர், அமெரிக்கர்களின் நலன்களைவிட இஸ்ரேலின் நலன்களில்தான் அதிக அக்கறை செலுத்துகிறார் என்று விமர்சித்துள்ளனர்.

    பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) அதிகாரிகளில் ஒருவர், ‘ப்ரீட்மேன் இப்படிக் கூறியிருப்பதால், ‘பாலஸ்தீனர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகக் கடவுள் செயல்படுகிறார் என்று சொல்லாமல் சொல்கிறார். ஒருபோதும் அமெரிக்கா அப்படி நினைத்ததில்லை’ என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

    இந்தப் பதவிக்கு ட்ரம்ப்பால் நியமிக்கப்படுவதற்கு முன் ப்ரீட்மேன், ட்ரம்ப்பின் திவால் வழக்கறிஞராக இருந்தார்; பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடமான வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் குடியிருப்புகளைக் கட்டியபோது அதை வெகுவாக ஆதரித்ததோடு நன்கொடைகளும் வழங்கியவர் இவர். இஸ்ரேல் இப்படிக் குடியிருப்புகளைக் கட்டியது, அகில உலக சட்டத்திற்குப் புறம்பானது என்று பல நாடுகள் கருத்துத் தெரிவித்தன. சட்டம் படித்த இவர், இதைக் கண்டுகொள்ளவே இல்லை.

    ஓராண்டுக்கு முன் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியபோது இருபது பேர்களைத் தவிர பாலஸ்தீனர்கள் வேறு யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அன்று ஜெருசலேம் ஓட்டல்களில் தாங்கள் சாப்பிட்ட உணவு அவ்வளவு நன்றாக இல்லை என்று பேசினார்களேயொழிய தூதரகத்தை மாற்றியது பற்றி யாரும் பேசவில்லை என்றும் வாய்கூசாமல் கூறுகிறார். அன்று இதை எதிர்த்து காஸாவில் கலவரம் நடந்து 60 பேர் கொல்லப்பட்டது உண்மை என்றாலும், நடந்த கலவரங்களுக்கும் தூதரகம் திறக்கப்பட்டதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்கிறார். எப்படிப் பொய் சொல்கிறார்! திறப்புவிழா நிகழ்ச்சிகளை இருட்டடிப்பதற்காகத்தான் காஸாவில் வன்முறை நிகழ்ந்தது என்பதே உண்மை.

    இப்படிப் பொய்களாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இவர் தன்னால் முடியுமென்றால் பாலஸ்தீனர்களை இன்னும் ஒடுக்குவாராம். இன்னொரு மனித இனத்திற்கு அநீதி இழைத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேலைப் பாராட்டிக்கொண்டிருக்கும் இவர் எப்படி இஸ்ரேல் கடவுள் பக்கம் இருக்கிறது என்று சொல்லலாம். கடவுள் என்று இவர் யாரைச் சொல்கிறார்? கடவுள் படைத்த மனித இனங்களில் ஒன்றைத் தீர்த்துக் கட்டுவதென்று முடிவு எடுத்திருக்கும் இவருக்குக் கடவுள் பெயரைச் சொல்லக்கூட அருகதை இல்லை.

    Share
  • (Peer Reviewed) Simplified Kundalini Yoga Practices for senior citizens

    (Peer Reviewed) Simplified Kundalini Yoga Practices for senior citizens

    Lalitha Ranganathan
    Research Scholar,
    World Community Service Centre, affiliated to Bharathiar University,
    Coimbatore, Tamil Nadu
    Email: lalithar6772@gmail.com

    Simplified Kundalini Yoga Practices for senior citizens

    Introduction

    “Matha, Pitha, Guru and Theivam” are holy words uttered by the intellectuals who realized the life and shown us a way to lead the life with joy and to attain the goal of fulfillment in life. Yoga has taken birth when the first man originated in the world was revealed as scriptures in the Sindhu civilization. The thoughts are recorded by them as Rig, Yajur, Sama and Atharvana Vadas.  After the formation of Vedas, Upanishads, Epics like Ramayana, Mahabharatha came to tell the facts that behind in human life how to face the challenges and to lead a successful life. Also, the Holy Bible, Quran, Granth Sahib, etc., given by the giants who realized the divinity.  But the human in the world today suffering a lot without the spiritual knowledge by reluctant to follow these holy books and suffers by their ignorance, carelessness, and emotions.   Maharishi Vedathri told that once the knowledge of science and spiritual equal in the state of mind among the human, the world will get peace.

    Spiritual knowledge shows a path to lead a life without hurting anyone.  Science must be used for advantages without any disadvantages may be realized by the individuals those having spiritual knowledge.  What is spiritual knowledge? The combination of Discipline, duty, and charity is spiritual knowledge.  Discipline is “Should not harm anyone either physically or mentally and help the needy as much as possible”.  Duty is “Do the service to society by physically as much as possible”.  Charity is “Help to others either physically or financially as much as possible”.

    In modern days, science attained a high place rather spiritual knowledge, if it balances in human life, then no sufferings, man is with full of happiness.

    SENIOR CITIZEN

    ‘National Policy on Older Persons’ was adopted by Government of India in January 1999.   This policy defines, “senior citizen or elderly as a person at the age of 60 years or above”.

    STATUS OF SENIOR CITIZEN

    Integrated care for older people reports by the World Health Organization states that the population of older people has increased substantially in most of the regions around the world.  It also states that increasing age brings risks of disease and dependency, the major burden of disability and death, age-related losses like moving, seeing, hearing, and conditions such as chronic respiratory disorder, diabetes, heart disease, dementia, stroke, musculoskeletal conditions such as osteoarthritis and back pain.  It further recommended community-level approaches in preventing physical and mental capacities and to deliver interventions in support of caregivers.

    Help Age India, 2018 report says that according to 2011 census 8% of the population was 60 years and above and it might be around 12.5% and 20%  by 2026  and  2050 respectively.   This increasing scenario alarms to take care of elders in health care, shelter, finance. Elders reported that due to the usage of phones/computers attention towards them by the adult children/grandchildren decreased.  Thus, this study concluded that attention should be paid against the problems faced by elders for income generation and sensitization programmes for adult children/grandchildren.  (Help Age India, 2018).

    The legislation is enacted by Ministry of Social Justice and Empowerment, Government of India in the year 2007 called “Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007”  for the welfare of parents as well as senior citizens.  This Act enables the senior citizens who are neglected by their children or heirs by providing maintenance allowance.  Some States in India implemented this Act and other States are taking steps to implement except Jammu and Kashmir.  Once upon a time, the joint family is a backbone of Indian society.  Withering of its culture, the elders are forced to face many problems including physical, financial, social and emotional.  This Act is a remedy to such an extent in relieving elderly problems.  This Act also emphasizes the obligation of children to take care of their parents/grandparents and also the relative of senior citizens to maintain such senior citizens. Also, this Act has provision for the setting of old age homes for needy senior citizens.  If any children/relative are not maintaining their parents/senior citizens, then the senior citizens approach the Tribunal constituted under this Act to enforce the maintenance for the senior citizen. (Wikipedia)

    The publication “Elderly in India” 2016 by Ministry of Statistics and Programme Implementation, Government of India delivered that according to population census 2011, the total elderly population in India is 104 million of which 53 million females and 51 million are males.  The growth rate of elder population has shot up to 36% from 25% between 2001 to 2011.  Population plays a vital role in the development of a country.  Also, development depends on workforce potential.  The transformation of social economic, political affects the human attitude.  The reasons behind our rapid industrialization, urbanization, and migration resulted in the nuclear family.  As a result, a part of the family, particularly, elder faces problems physically, mentally as well as financially.  Hence, a holistic approach is needed to frame programmes for welfare to deal with aging.

    SENIOR  CITIZEN AT OLD AGE HOME

    Generally, the reason behind the people who are residing at an old age home is because of their insecurity.  In India, a deliberate outline is prevailing that son only should take care of their old age parents.  Because of that reason, no one likes to spend their old age along with their daughters, even though they are willing to accompany and take care of them.  Also due to the migration of the younger generation for their employment abroad, their older parents remain lonely without security which leads them to dwell at old age home.  Another thing because of no support from relatives and society people like to live at an old age home.

    Affinity, tolerance, adjustment, and sacrifice were not taken into consideration in today’s modern life.  Many people like to lead their life mostly with privacy and in a short minded.  Technology has developed tremendously but spiritual life consisting of moral, duty and charity have not developed that much when comparing to scientific modern life.  Culture plays an important role in society’s development.  The government implemented many schemes for the welfare of old age people. It must also take appropriate steps by inculcating good moral and law of nature to the citizens then only old age people at home may be excused and live peacefully with their loved ones.

    In the above circumstances, yoga plays a predominant role in solving the old age problem both physically as well as mentally to some extent. Every one hearing the word yoga in the world today.  What is the meaning of yoga?  Doing exercises for the wellness of health is yoga.  No.  Yoga consists of physical exercises as well as meditation.  The origin of yoga takes place in India through the immense efforts of saints by researching on the divine force.  This study has taken into consideration of Simplified Kundalini Yoga framed by Vethathiri Maharishi.

    DEFINITION OF YOGA

    Improving the body to become healthy and the mind to be wealthy by regulating the activities accordingly clear in identifying our own mistakes and nullifying the same, eradicating the old imprints of mind, leading one’s own life happily and getting the ability to help others to lead their life happily is called yoga.                                              

                                                                                                               VETHATHIRI MAHARISHI

    SIMPLIFIED KUNDALINI YOGA

    Vethathiri Maharishi has designed Simplified Kundalini Yoga through years of research and meticulous practice in such a manner that they don’t take much strain to the body.  It has four processes on the whole.  They are Meditation, Introspection, Sublimation, and Perfection.  Also, it consists of Simplified Physical Exercises and Kaya Kalpa.

    SIMPLIFIED PHYSICAL EXERCISES

    There are many kinds of physical exercises in the world.  Vethathiri Maharishi has formulated simplified physical exercises after many years of research taking into consideration his medicinal experiences and their uses.  Maharishi designed these exercises in a simple manner that they don’t strain the physical body much.  There are two stages in the physical exercise.  One is posture and another is movement. There are nine types of physical exercises. By performing these exercises, all parts of our body from head to foot become healthy.  Blood circulation, heat circulation, and air circulation will be regulated.  All Endocrine glands will function well.  Simply, physical exercises bring physical as well as mental health.

    KAYA KALPA

    Kaya means physical body, kalpa means strength. Therefore kayakalpa means strengthening our body for a healthy and long life as the name defines.  Vethathiri Maharishi spent nearly forty years to formulate this practice for the welfare of humankind.  Through this exercise, the energy could be raised.  This is the feather in the crown of the system of Simplified Kundalini Yoga.  There are a lot of benefits.  The prominent one is it prevents the onset of diseases, retains youth, delays old and postpones death.

    Meditation

    Vethathiri Maharishi has through years of research and meticulous practice, being able to simplify the process of meditation and raising the Kundalini power, whereby it has become easy for everyone whether male or female, to practice.  He has devised a method by which the Kundalini power of an aspirant can be raised from its original location and moved to the Agna Chakra, with the help of a person adept in the practice of Kundalini Yoga. During meditation, sensory perceptions and the working of the mind are halted, as a result of which biomagnetism is conserved.

    Introspection

    Only when an individual examines himself and sincerely works to remove the impurities in his personality can he have good physical and mental health and lead a successful life. Such an examination is called ‘introspection’ or self-analysis.  Introspection consists of an analysis of thought, the moralization of desire, neutralization of anger, eradication of worries and realization of self.

    Benefits of Introspection

    One who introspects himself gets reformation in his character thereby possesses enlightenment ultimately results to lead life peacefully and happily.  By constant practice, dissipate the imprints of sins occur. As a result, the aim of mankind to attain perfection happens.

    SUBLIMATION AND PERFECTION

    With the realization of self, whoever practices introspection with full effort can be able to keep his body and mind well.  If we are physically well, our mind can automatically think about our mental health.  At the initial stage of meditation, we will be able to realize a bit of inner peace. By our continued effort to do meditation regularly gives inner peace for the whole of our life.  In that state of affairs, anyone can practice introspection following meditation with awareness and planned action could achieve the fruit of sublimation.  Perfection is the real consciousness and this transformation occurs in mankind ultimately at the end by one’s continuous efforts.

    OBJECTIVE OF THE STUDY

    Old age had never been a problem for a country like India where the culture respects elders whereas the disintegration of joint family and impact of economic change have brought peculiar problems which the old age people now face in our country.  In the above circumstances, a senior citizen at old age home, as well as senior citizens in general, suffers both physically and mentally.  Hence to find out a solution to the above problem arises as an essential need of the hour.  There are so many researches on Simplified Kundalini Yoga practices shows much improvement in physical as well as mental health.

    SIGNIFICANCE OF THE STUDY

    Nowadays people started to understand the importance of yoga in the day to day affairs of life slightly.  The significance of study based on the benefits of physiological and psychological variables, it is an immense tool to improve physical health and mental health.

    SIMPLIFIED  KUNDALINI YOGA PRACTICES FOR SENIOR CITIZENS

    Practices:

    • Prayer to Divine grace and Guru                                                                5 minutes
    • Neuromuscular breathing exercise and Relaxation exercises                 15 minutes
    • Agna meditation                                                                                           5 minutes
    • Thuriya meditation                                                                                     10 minutes

    Introspection                                                                                               10 minutes

    Total of                                                                                                         45 minutes

    Conclusion

    • Taking into consideration of the age factor and other conditions, Senior citizens with the knowledge and practice a part in SKY yoga as detailed above regularly, will get good physical and mental strength which in turn blossom good results to them as well as to the society at large.

    References:

    (1) Value Education for Health, Happiness and Harmony – Based on The Philosophy and Teachings of Shri Vethathiri Maharishi, Published by Vethathiri Publications, Erode, Tamil Nadu, India, Third Edition April 2015

    (2) Yoga for Modern Age by Vethathiri Maharishi Published by Vethathiri Publications, Erode, Tamil Nadu, India, ISBN: 978-93-85801-45-7   20th Edition, May 2017

    (3) Embrace introspection as a way to deepen your inner-peace and happiness by Sophia Ojha

    (4) Psychological change with introspection and meditation by themeditationblog.com

    (5) The Art of Introspection in a self-obsessed world by Jennie Lee

    (6) Integrated care for older people report by World Health Organisation

    (7) Help Age India, 2018 report

    (8) “Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007” enacted by Ministry of Social Justice and Empowerment, Government of India.

    (9) “Elderly in India” 2016 by Ministry of Statistics and Programme Implementation, Government of India

    (10) Rajkumar, G.R.Valliammal, “A Study on improving physiological and psychological personalities of the students by Vethathiri Maharishi’s nine-center meditation using electroencephalography” International Journal of Educational and Psychological Researches Vol.1/Issue 2/April-June 2015

    (11) Sudhanshu Kacker, Neha Saboo, Sonali Sharma, Mahima Sharma, Mohit Sharma, Jitender, “Effect of Meditation on Time and Frequency Domain Parameters of Heart Rate Variability” International Journal of Medical Research Professionals P.ISSN: 2454-6356; E-ISSN: 2454-6364 DOI: 10.21276/ijmrp

    (12) Chen YW, Wang HH, “The effectiveness of acupressure on relieving pain: a systematic review” – PubMed – NCBI, Epub 2013 Feb 15

    (13) Ravishankar Tejvani, Kashinath G. Metri, Jyotsna Agrawal, H.R.Nagendra “Effect of Yoga on anxiety, depression, and self-esteem in orphanage residents: A pilot study AYU: Vol.37; Issue I; January-March 2016

    (14) Derebai Gururaja, Kaori Harono, kenaga Toyotake, Haruo Kobayashi “Effect of yoga on mental health; Comparative study between young and senior subjects in Japan”, International Journal of Yoga 2011 Jan-Jun 4(1) 7-12

    (15) Frank Jakel and Cornell Schreiber “Introspection in Problem Solving” Journal of Problem Solving October 2013 DOI 10 7771/1932-6246 1131Dr.

    (16) R.Sharma, Ph.D., Principal, G.S.College of Yoga and Cultural Synthesis, Kaivalyadhama, Lonavla, India “Yoga for Health and Healing”

    ****************************************************************************************
    Peer Review:

    This article points out that our society gives a high place to science rather than spiritual knowledge. If both of them are well balanced in human life, then humankind will be happier and stress-free.

    The substantial increase in the population of senior citizens (age 60 and above) are mentioned here with proper statistical data. The author states that even though the life span of the elderly is increased, family support to them is very less due to the prevalence of the modern nuclear family system. Besides these people are suffering from various physical diseases and disorders too. To overcome these problems the author suggests that these people should get involved in Simplified Kundalini Yoga (SKY) designed and developed by Vethathiri Maharishi. The author’s suggestion is highly appreciable. But, Kundalini Yoga and other physical exercises associated with this yoga should be learned properly from a professional guru to avoid unwanted complications. If she has emphasized that aspect also it would be more meritorious.

    ******************************************************************************************

    Share
  • படக்கவிதைப் போட்டி – 213

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.05.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-42

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-42

    42. கேள்வி

    குறள் 411:

    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
    செல்வத்து ளெல்லாந் தலை

    காதால கேட்டுப்பெறுத நல்ல விசயங்களே சிறப்பான சொத்து. அது மத்த எல்லாச் சொத்தையும் விட ஒசந்தது.

    குறள் 412:

    செவிக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்

    காதுக்கு மகிழ்ச்சி தருத விசயங்கள் ங்குத உணவு கெடைக்காம போவுதப்போ தான் வயித்துக்கும் கொஞ்சூண்டு சாப்பாடு கொடுக்கப்படும்.

    குறள் 413:

    செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
    ஆன்றாரோ டொப்பர் நிலத்து

    கேள்வி ஞானம் ங்குத செவி உணவு கெடச்சவங்க பூமி ல வாழ்ந்தாலும் யாகத் தீ லேந்து பெறுத நெய்யயும் மத்ததயும் சாப்பிடுத தேவ மக்களுக்கு சமம் தான்.

    குறள் 414:

    கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
    கொற்கத்தின் ஊற்றாந் துணை

    நூல்களப் படிக்கலேன்னாலும் படிச்சவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கிடணும். அது நெருக்கடி வருதப்போ அவனுக்கு ஊணிக்கிட்டு நடக்க ஒதவுத கொம்பு கணக்கா தொணயா நிக்கும்.

    குறள் 415:

    இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
    ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

    வழுக்குத நெலத்துல நடக்க ஒதவுத ஊணிக்கம்பு கணக்கா ஒழுக்கம் ஒடையவுகளோட புத்திமதி சமயத்துல வாழ்க்கையில ஒதவும்.

    குறள் 416:

    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்

    நல்லத எந்த அளவு கேட்டுக்கிடுதோமோ அந்த அளவு அது பெருமயக் கொடுக்கும்

    குறள் 417:

    பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
    தீண்டிய கேள்வி யவர்

    எதையும் நுணுக்கமா சோதிச்சு அறிஞ்ச அறிவாளிங்க சிலதப் பத்தி தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டிருந்தாலும் அப்பமும் கூறுகெட்டவன் கணக்கா பேச மாட்டாக.

    குறள் 418:

    கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
    தோட்கப் படாத செவி

    கேக்குத தன்ம இருந்தாலும் நல்லவங்க பேச்ச கேக்காதவனோட காது செவிட்டுக் காது தான்.

    குறள் 419:

    நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
    வாயின ராத லரிது

    கேள்வி ஞானம் இல்லாதவுக அடக்க ஒடுக்கமா பேசுதவங்களா இருக்கது சிரமந்தான்.

    குறள் 420:

    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
    அவியினும் வாழினு மென்

    கேட்டுப் பெறுத சுவைய ஒணந்துக்கிடாம வாயால சாப்பிடுதப்போ கெடைக்க சுவைய மட்டும் ஒணருதவங்க இருந்தா என்ன. செத்தா என்ன.

    (அடுத்தாப்லயும் வரும்……

    Share
  • படக்கவிதைப் போட்டி 212-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வானில் அழகாய் அணிவகுத்துச் செல்லும் ஃபிளமிங்கோக்களை (Flamingos) அருமையாய்ப் படம்பிடித்து வந்திருக்கின்றார் குருசன். இதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 212க்கு அளித்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள்!

    சிறகு விரித்துப் பறக்கும் இந்த ஃபிளமிங்கோக்களின் கால்கள் செங்கால் நாரையின் கால்களை ஒத்திருக்கக் காண்கின்றேன். இக்காட்சி, செங்கால் நாரையின் கால்களைப் பிளந்த பனங்கிழங்குக்கு ஒப்பிட்ட சத்திமுத்தப் புலவரின் பாடலை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

    நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்…

    இனி, இப்படக்கவிதைப் போட்டியில் பங்குபெற வந்திருக்கும் ஒரே கவிஞரான திரு. ஆ. செந்தில் குமாரை, கவிதை படைக்கக் கனிவோடு அழைக்கின்றேன்.

    பிளமிங்கோ பறவைகள்…

    கால்கள் நீண்டிருக்கும்.. கனத்ததொரு அலகிருக்கும்.. எமக்கு
    நெடுந்தூரம் பறப்பதற்கு.. நெஞ்சுரமும் மிகுந்திருக்கும்..!!
    சிறகுகள் விரித்திடுவோம்.. சீராகப் பறந்திடுவோம்.. நாங்கள்
    சீரான தட்பவெப்பப் பகுதிக்கு விரைந்திடுவோம்..!!

    அணிவகுத்து ஆர்ப்பரித்து.. ஆயிரம் மைல் கடந்து.. நாங்கள்
    துணிவுடனே சென்றிடுவோம்.. தூரதேசம் அடைந்திடுவோம்..!!
    கடவுச் சீட்டின்றி.. இடப்பெயர்ச்சி செய்திடுவோம்.. நாங்கள்
    நுழைவாணை ஏதுமின்றி.. கடல் தாண்டிப் பறந்திடுவோம்..!!

    அழகாய்க் கூடமைத்து.. சிலகாலம் தங்கிடுவோம்.. உகந்த
    சூழல் வந்ததுமே.. சொந்த ஊர் திரும்பிடுவோம்..!!
    விடுமுறை எமக்கில்லை.. விருப்ப ஓய்வு ஏதுமில்லை.. நாங்கள்
    இருக்கின்ற காலம்வரை.. இரை தேடி அலைந்திடுவோம்..!!

    நீர்நிலைகள் நிலவளங்கள்.. நல்லபடி போற்றிடுவீர்.. நாங்கள்
    வலசை போவதற்கு.. வாழ்வாங்கு வாழ்வதற்கு..!!
    கடல்வளங்கள் காத்திடுவீர்.. புவிவெப்பம் குறைத்திடுவீர்.. எம்
    இனமும் தழைத்திடணும்.. பூமியெங்கும் நிலைத்திடணும்..!!

    விடுப்பின்றி விருப்போடு உழைத்து, நுழைவாணை ஏதுமின்றி விரிவானைக் கடக்கும் இந்த ஃபிளமிங்கோ பறவைகள், தாம் வலசை போவதற்கும், வாழ்வாங்கு வாழ்வதற்கும் வசதியாக நீர்நிலைகளை, நிலவளங்களைக் காத்திடுங்கள் என்று மாந்தர்க்குக் கூறும் பொருள்பொதிந்த அறிவுரையைக் கவிதையாக்கியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • பத்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    உங்கள் நல்லாதரவோடு வல்லமை மின்னிதழ், 2019 மே 16 அன்று பத்தாம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்த ஒன்பது ஆண்டுகளில் வல்லமை, 15,650 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,178 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1,400 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம். வல்லமையின் முதுகெலும்பாக நின்று துணை புரியும் ஆமாச்சு, ஸ்ரீநிவாசன் ஆகியோருக்கு நன்றிகள்.

    தமிழில் ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் முதல் இதழ் (First Peer Reviewed Research Journal in Tamil) என்ற பெருமையை வல்லமை பெற்றுள்ளது. ஆய்வறிஞர் கருத்துரையுடன் கூடிய முதல் ஆய்வுக் கட்டுரையை 2019 ஜனவரி 4ஆம் தேதி வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து இந்தப் பிரிவில் இது வரை 31 கட்டுரைகள் உள்பட, 254 ஆய்வுக் கட்டுரைகளைக் கடந்த ஓராண்டில் வல்லமை வெளியிட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேலான கட்டுரைகளிலிருந்து இவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

    ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள் (Guidelines), பின்பற்ற வேண்டிய ஆய்வு அறங்கள் (Ethics Policy), மதிப்பாய்வு நெறிகள் (Peer Review Policy), பதிப்பு நெறிகள் (Publication Policy) ஆகியவற்றை அமைத்துள்ளோம். இவை, ஆய்வாளர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டும்.

    வல்லமையின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளோம். தகுதியும் தரமும் வாய்ந்த மதிப்பாய்வுக் குழுவினை அமைத்துள்ளோம். ஆற்றல் வாய்ந்த இந்தப் பன்னாட்டுக் குழுவினர், தமிழ் ஆய்வின் மதிப்பினைப் பன்மடங்கு உயர்த்துவார்கள் என நம்புகிறோம்.

    இந்த ஆண்டில் வல்லமை மின்னிதழ், பல முறைகள் ஸ்பாம் தாக்குதலுக்கு உள்ளானது. ஓரிரு முறைகள் ஹேக் செய்யப்பட்டது. சில தினங்கள் இதனால் தளத்தை அணுக முடியாத நிலை ஏற்பட்டது. நம் தொழில்நுட்ப நண்பர்களின் உதவியைத் தளத்தை மீட்டெடுத்துள்ளோம். எனினும் வல்லமைக்கு வலுவான சர்வர், தொடர்ச்சியான கண்காணிப்பு, பராமரிப்பு தேவையாக உள்ளது. தமிழ், புத்தாக்கம், கல்வி, ஆராய்ச்சியை வளர்த்தெடுக்க, மேலும் பல திட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு உங்கள் நிதியாதரவை எதிர்நோக்கியுள்ளோம்.

    வல்லமை, இலவச மின்னிதழ். படிப்பதற்குக் கட்டணமில்லை. ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு, ஆய்வாளர்களிடமும் நாம் கட்டணம் பெறுவதில்லை. எனவே இதழைத் தொடர்ந்து நடத்திட, உங்கள் நன்கொடைகளை வரவேற்கிறோம்.

    வல்லமை குறித்த உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். வல்லமையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

    தகுதிக்கும் திறமைக்கும் மதிப்பு உண்டு என்பதை வல்லமை உறுதி செய்கிறது. பணம் கொடுத்துக் கட்டுரைகளை வெளியிடும் போக்கினை மாற்றும் வகையில், புதுப் பாதை அமைக்கிறது. இந்தப் பயணத்தில் நீங்களும் இணையுங்கள். புதியதோர் உலகம் செய்வோம்.

    Share