Blog

  • (Peer Reviewed) A Critical Analysis of Story Telling – Khushwant Singh’s  Train to Pakistan

    (Peer Reviewed) A Critical Analysis of Story Telling – Khushwant Singh’s Train to Pakistan

    E. Rengadevi M.A., M.Phil., B.Ed.,
    Asst.Prof. of English
    P.G. & Research Dept of English
    Sanghamam College of Arts & Science
    Annamangalam 604 210
    Mel Malaiyanur T.k

    *****

    Abstract

                Indian English Literature originated as a necessary outcome of the introduction of English education in India under colonial rule. In recent years, it has attracted widespread interest, both India and abroad. It is now recognized that Indian English Literature is not only part of the Commonwealth Literature, but also occupies a great significance in World Literature. Today, a number of Indian writers, in English, have contributed substantially to modern English Literature. Fiction, being the most powerful form of Literary expression today. Indian English fiction occupies its proper place in the field of Literature. This article analyzes the storytelling of Khushwant Singh’s Train to Pakistan.’

    Khushwant Singh’s biggest attribute is that he speaks what he feels. He is honest to the extent that he offends even his friends and icons revered by people. He brought history to our doorsteps.

    Narrative Discourse

                “As an adjective, ‘narrative’ means ‘characterized by or relating to storytelling’. Thus, a narrative technique is the method of telling stories and narrative poetry is the class of poems (including ballads, epics, and verse romances) that tell stories, as distinct from dramatic and lyric poetry”. (Narrative: A Critical Linguistic Introduction, p.41)

    The narrative is a telling of some true or fictitious event or connected sequence of events, recounted by a narrator to narrate, although there may be more than one of each. A narrative will consist of a set of events (the story) recounted in a process of narration or discourse, in which the events are selected and arranged in particular order (the plot). The category of narratives includes both the shortest accounts of events and the longest historical or biographical works, diaries, travelogues, as well as novels, ballads, epics, short stories, and other fictional forms. Literally speaking, the narrative is a story and it can be conveyed through pictures, songs, poetry, speech, fiction, non–fiction as well. Narrative discourse is vastly an aesthetic enterprise. It is a binding vine of the narrative. A narrator detains the past, holds present and prepares the reader for the future. There has been much exaggeration in the narrative techniques since 1938 when Raja Rao’s ‘Kanthapura’ is published. It is perhaps the first most successful and influential novel by an Indian writer in English.

    Key Words: Mano Majra, Narrative, Punjab, Train to Pakistan.

    Train to Pakistan – Introduction

    Train to Pakistan has a fine blending of growth in space and movement in time. The novel grows out of a chronological sequence of time with a synthesis of reality and value. It expresses creatively as to how the movement of trains, which used to set a tone of the village, signaling time for action, rest and sleep, became a symbol of despair, darkness, and destruction. This technique of contrast is very suggestive. The novelist has recreated imaginatively the likes of Hukum Chand, the commissioner, reformist, Iqbal, criminals Juggat Singh and Malli gang, still visible in the Indian society. In moneylender Ram Lal’s murder case Jugga and Iqbal are put behind the bars, while the real culprit Malli is released after arrest. Is such a drama not enacted even today? Also, the lodging together of Jugga, the criminal, and Iqbal, the reformist, gives a peep into the police way of functioning then and even today.

    In his realistic depiction of the prevailing atmosphere of hatred and violence and distrust between the Hindus and the Muslims, Khushwant Singh narrative spares neither:

    “Mullahs roamed Punjab and the Frontier
    Province with boxes of human skulls said to be
    those of Muslims killed in Bihar”
    (Train to Pakistan, p.9)

    The Position of the Society

    The novelist has described three levels of Governmental strata. Commenting on this, V.A., Shahane in his book, Khushwant Singh, says:

    “Three levels of Governmental strata are depicted.
    Hukum Chand belongs to the upper level of the
    Punjab district administration; the sub-inspector of
    police comes from the middle level; constables
    belong to the lower level of this hierarchical,
    administrative structure. Hukum Chand is a type as
    well as an individual, a person as well as a
    bureaucrat, and, in various ways, an evolving
    character.”
    (Khushwant Singh, p.80)

    Khushwant Singh has beautifully portrayed the man’s multidimensional mind, especially in the case of Jugga, the criminal, in love with Nooran, the Muslim Mullah’s daughter. Jugga visits the Gurudwara and asks for the Guru’s blessings to prepare himself for the final sacrifice which he does make. This is also true in the case of Hukum Chand whose mind flies to Haseena, the dancing girl, heading for Pakistan with a hope that she would be safe. This ambivalence of mind has exquisitely been brought out by Singh in the novel. Shahane comments on the character of Juggat Singh and says:

    “One finds a “rare combination of the criminal and
    the lover, which is a baffling aspect of the realities
    and complexities of life. He embodies the
    ambivalence of moral values.”
    (Khushwant Singh, p.80)

    There were reports of Pakistani police helping and protecting Muslims who were attacking and killing Hindus. The atrocities inflicted on Hindus in Lahore have been described by the novelist through a police constable who reports:

    “…It was the Muslim police taking the side which made
    the difference in the riots. Hindu boys of Lahore
    would have given the Muslims a hell if it had not
    been for their police. They did a lot of ZULUM…
    their army is like that, too, Baluch soldiers have
    been shooting people whenever they were sure there
    was no chance of running into Sikh or Gurkha
    troops.”
    (Train to Pakistan, p.59)

    The novelist had maintained a balance in condemning atrocities on both sides. As a realist in his factual depiction of the violent scenes, he narrates the story of four Sikh Sardars on a killing spree in a jeep alongside the column of mile-long Muslim refugees on foot.

     “…without warning they opened fire with their sten guns, God alone knows how many they killed… .” (Train to Pakistan, p.61)

    Narrative Technique

    In a rare narrative technique, the novelist has depicted forces of division and unity, hate and love, anger and affection, revenge and sacrifice alternating in the novel. Shahane commenting on this aspect says:

    “Train to Pakistan presents rural Punjab with its
    religious and caste divisions, which result in
    alienation, alternating with forces of the union, which
    result in amity. Hate alternates with love; anger
    alternates with affection; the desire for revenge
    alternates with the impulse to sacrifice”
    (Khushwant Singh, p.78)

    Singh in this novel has also artistically explored the mind of the Sikh priest Meet Singh and the reformist Iqbal, who discuss the urgent need for stopping the communities on the Indian side from taking retaliatory actions by blowing the train heading for Pakistan with Muslim refugees from Mano Majra on the railway overbridge mid-river. Meet Singh is helpless and so is the reformist Iqbal as the voice of sanity had been stilled and drowned in the communal frenzy, provoked and ignited by arrival and disposal of trainloads of the slain bodies from across the borders. Both Meet Singh and Iqbal in the given situation find themselves incapable of any positive action and also find themselves out of place.

    Singh mixes Hindi words in his narration to reinforce the impact of his narrative. He has made typical usages bordering on bad English. Urdu-Hindi words such as Salaam, Kalyug, Kos, Nar Admi, Annas, Karmat etc. On the strength of the above, it may be said that in his narration of the story, Singh had followed humanistic and realistic tradition in the Indo-English Literature.

    Conclusion

    Khushwant Singh proves his own identity through his writings. He created most of the characters in his novel were real people when he met. His novels reveal about a lot of social problems during the partition of India-Pakistan. Singh emphasizes his narrative ability to the readers. The study of Singh’s novels has been a highly fascinated Endeavour resulted in making not a good man know really on endearing man to know. 

    Works Cited

    • Singh, Khushwant. Train to Pakistan, New Delhi: Orient Longman Pvt. Ltd., 2006, Print.
    • Shahane, V. A. Khushwant Singh, New Delhi: Twayne Publishers, 1972, Print.
    • Toolan, Michael J., Narrative: A Critical Linguistic Introduction, London: Rutledge, Second Edition, 1997, Print.

    ******************************************************************

    Peer Reviewer’s comments: 

    “Train to Pakistan” is the most well-known classic novel of the Indian author and journalist Khushwant Singh. This novel is a faithful record of how human disaster has taken place during the gruesome period of Indian partition in 1947.

    Khushwant Singh states, “I think it is a documentary novel of the partition, an extremely tragic event which hurt me very much. I had no animosity against either the Muslims or the Pakistanis, but I felt that I should do something to express that point of view.” (V. A. Shahane 352)

    As far as the author of this research article is concerned, she brought the main characters and important events of this novel into our attention lucidly. Some significant passages of the novel are highlighted in this article, which gives a realistic feeling of reading the original novel directly. These are appreciable aspects of this analysis.

    However, the narrative discourse and the narrative technique sections, keep repeating the same information over and over again which bring down the interest of reading this article. To improve this research article, unwanted repetitions should be avoided, grammar and typos should be checked as well.

    ******************************************************************

     

    Share
  • (Peer Reviewed) லீலாதிலகம் பாட்டிலக்கணமும் இராமசரிதம் பாட்டும்

    முனைவர் ச. காமராஜ்,
    முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகம்

    லீலாதிலகம் பாட்டிலக்கணமும் இராமசரிதம் பாட்டும்

    முன்னுரை:

    மலையாளக் கவிதையின் அடிவேர் குறித்துச் சிந்திக்கும் ஒருவருக்கு கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் இருபெரும் இலக்கிய வடிவங்கள் வழங்கி வந்தமையை லீலாதிலகம் குறிப்பிடுகிறது. அவை ஒன்று பாட்டு, மற்றொன்று மணிப்பிரவாளம் ஆகும். மணிப்பிரவாளத்தின் வடிவத்தை விரிவாக விளக்கி அதன் உள்ளடக்கத்தை உறுதி செய்வதே லீலாதிலகத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்து
    வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அதற்கிடையில் மணிப்பிரவாளத்திற்கும் முன்னர் வழங்கி வந்த பாட்டு வடிவம் குறித்து லீலாதிலக ஆசிரியர் குறிப்பிட்டு, அதன் உருவத்தையும் வரையறை செய்கிறார். இங்கு பாட்டு என்பது இன்று நாம் சாதாரணமாக வழங்கும் பொருளில் இல்லை, அன்று பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதும் கவனத்தில் கொள்வேண்டியுள்ளது. அது, மலையாளத்தின் முதல் இலக்கிய
    வகையாகும். மணிப்பிரவாளத்தை விடப் பழமையும் மிகுந்த இலக்கியச் செல்வாக்கும் கொண்டதாகப் பாட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆகவே மலையாளத்தின் தனித்தன்மை நிறைந்து நிற்பது பாட்டு வடிவத்திலும், இலக்கியத்திலுமே ஆகும்.

    பாட்டு விளக்கம்:

    செய்யுளியலில் இலக்கியத்தின் புற வடிவம் குறித்துப் பேசுகின்ற தொல்காப்பியம் யாப்பு என்னும் செய்யுள் உறுப்புகளைக் கூறுகையில் சில இலக்கிய வகைகளைத் தருகிறது. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் (தொ.செ.1336) என யாப்பின் கீழ் கூறப்பட்டுள்ள ஏழு வகைகளில் பாட்டு தவிர எஞ்சியவை அளவியல் பகுதிகளில் எடுத்துரைக்கப்படுகின்றன. தொல்காப்பியர் இலக்கிய வகையில் பாட்டையே முதன்மையாகச் சிறப்பித்துக் கூறுகிறார். செய்யுளியலில் பாட்டு குறித்த விளக்கங்களே பெரும்பான்மையாகவும், விளக்கமாகவும் இடம் பெற்றுள்ளது. பாட்டே இலக்கியத்தின் சாரமாக விளங்குகிறது.

    பாட்டில் தான் இலக்கியத்தின் முழுத்தன்மையும் அனுபவத்தை உணர்த்தும் ஆற்றலும் செறிவாக உள்ளன என்று ஆபர்கிரோம்பி, பாட்டின் ஆற்றல் மிக்க தன்மையை எடுத்துக் கூறுகிறார் (Abar Gromphy – Principles of Literary criticism). பாட்டின் ஒவ்வோர் அடியும் சிறப்பாக அமைய வேண்டும் என்பார் தொல்காப்பியர் ”அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” (தொ.செ.1292).

    பாட்டிற்குரிய அடிகளை அவர் ஐந்து வகைகளாகக் கூறுகிறார். அவை, குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி (தொ.செ.1293, 94, 95, 96, 97) போன்றவையாகும். நான்கிலிருந்து ஆறெழுத்துகளைக் கொண்டது குறளடி. ஏழிலிருந்து ஒன்பது எழுத்துகளைப் பெற்று வருவது சிந்தடியாகும். பத்திலிருந்து பதினான்கு எழுத்துகளைக் கொண்டது அளவடி. பதினைந்திலிருந்து பதினேழு எழுத்துகளைக் கொண்டது நெடிலடியாகும். பதினெட்டிலிருந்து இருபது எழுத்துகளை உடையது கழிநெடிலடியாகும். இவ்வரையறைக்குப் பொருந்திய அடிகளால் ஆனதே பாட்டு என்பதும் தொல்காப்பியரின் கருத்தாகும்.

    மேலும் தொல்காப்பியர் வெண்பாவின் வகைகளைக் கூறுமிடங்களில் அங்கதப் பாட்டு, இடைநிலைப் பாட்டு, நெடுவெண் பாட்டு, குறுவெண் பாட்டு என்றும் (தொ.செ.1375) உரை வகை பற்றிக் கூறுமிடத்தில், பாட்டிடை வைத்த குறிப்பினானும் எனவும் ( 1429), பண்ணத்தி பற்றிக் கூறும் போது, பாட்டிடைக் கலந்த பொருளவாகிப் பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே என்றும் (1436), வண்ணம் பற்றிப் பேசுமிடத்தில் அகப்பாட்டு, புறப்பாட்டு வண்ணம் எனவும் பயன்படுத்துகிறார்.

    இங்குப் பாட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தும் இடங்களில் ஏன் அனைத்து இடங்களிலும் பா என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது? பாட்டு, பா (ஆசிரியம், வெண்பா ஆகியவற்றைக் குறிக்க) என்ற இரு சொற்களை அவர் ஏன் பயன்படுத்த வேண்டும்? இந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது? இந்த இரண்டிற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா? என்ற பல்வேறு கேள்விகள் நம்முள் எழுகின்றன. எனவே பாட்டு என்பதற்கும், பா என்பதற்கும் வேறுபாடு இருப்பதாலேயே தொல்காப்பியர் இவ்விரு
    சொற்களையும் பயன்படுத்தியுள்ளார் எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. அவ்விரண்டிற்குமான வேறுபாடு தான் என்ன? எதுகை, மோனை முதலிய தொடை முதலானவையே அவ்வேறுபாட்டிற்கான காரணமாக அமைகின்றது.

    அகவல் என்பது ஆசிரியம்மே – இதில் வரும் அகவல் என்பது அகவன் மகள், அகவலன், வேலன் போன்றோருடன் தொடர்புடையது. இவர்களுடைய பாட்டில் எதுகைக்கு அவ்வளவு கட்டாயமில்லை. அது போகிற போக்கில் தானாக வந்தால் உண்டு. ஆனால் அதில் வரும் ஆசிரியம் என்பது புலவர் மரபோடு தொடர்புடையது. இங்குப் புலவர் மரபையும் கூறும் முதல் நூலாகத் தொல்காப்பியம் விளங்குகிறது. கூர்ந்து நோக்கினால் தொல்காப்பியச் சிந்தனைப் பள்ளி, தமிழ்ப் பாட்டைப் பாவாக மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பாட்டு என்பது தொல்காப்பியத்தில் பழங்காலச் சொல்லின் எச்சமாகவே பதிவாகியுள்ளது. அது பாட்டு, பாவாக மாறிக்கொண்டிருந்த காலக்கட்டம்.

    பாட்டு வரலாறு

    தமிழ்ப் பாட்டு வடிவங்களின் வரலாற்றை கூர்ந்து ஆராய வேண்டியுள்ளது. முதன் முதலில் அகவல் என்னும் பாவகையே தோன்றியுள்ளது (அகவல் என்பது ஆசிரியம்மே) அகவலுக்குப் பின்னர் தோற்றம் பெற்றது வெண்பாவாகும். இதனுடைய ஓசை என்பது செப்பலோசையாகும். இசையோடு பாடுவதற்குப் பெரிதும் உறுதுணையாக நிற்பது. வெண்பாவிற்குப் பின்னர் தோன்றியது கலிப்பாவின் ஒரு பகுதியான தாழிசை பாடுவதற்காகவே அமைந்ததாகும். தாழிசை என்னும் பெயரே இதனைச் சுட்டுகிறது.

    தேவாரம் முதலான திருப்பாட்டுகள் அனைத்தும் பண்களுக்கு எனப் பட்டவையே. பிற செய்யுள் வகைகளும் கூட இசையோடு இனிமையாகப் பாடுவதற்கு ஏற்றவையாக இருக்க வேண்டும் என்று அக்கால ஆசிரியர்கள் கொண்டார்கள்.

    இதனாலேயே ஆசிரிய விருத்தம் முதலிய செய்யுள் வகைகள் தமிழ்ப் பெரியோர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீவக சிந்தாமணி முதலிய காவியங்களின் விருத்தங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன.

    இசையின் இனிமைக்கும் செய்யுளின் இனிமைக்கும் பொருளின் இனிமைக்கும் பேரெல்லையாகக் கம்பராமாயணம் விளங்குகிறது. அதில் உள்ள விருத்தப்பாக்கள் செம்மையான நடையில் சென்று தமிழ் மக்களுடைய பேச்சில் இயற்கையாகவுள்ள ஒத்திசையோடு அமைந்திருக்கின்றன. அக்காலத்துப் பெரும்பான்மை மக்கள் வழங்கிய சொற்களை இவ்விருத்தங்களில் மிகுதியாகக் காணலாம் என்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் பாட்டும் இசையும், பக்.113-114) விளக்குவார்.

    எனவே இன்ன பாவினத்தைப் பாடுவதில் மிகவும் வல்லவர் என்று அவரை அந்தப் பாவுடன் இணைத்துப் பேசும் சிறப்பு காணப்படுகிறது.

    ”வெண்பாவில் புகழேந்தி பரணிக்கோர்
    சயங்கொண்டான் விருத்த மெனும்
    ஒண்பாவிற்கு உயர்கம்பன் கோவைஉலா
    அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்
    கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்
    வசைபாடக் காள மேகம்
    பண்பாகப் பகர்சந்தம் பாடிக்காசலால்
    ஒருவர் பகரொணாதே”

    இதனால் பா வகைகளைப் புனைவதில் வல்லவர் தம் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது.

    பாட்டிலக்கியம் – இலக்கண வரையறை :

    திராவிட மொழிகளுக்குரிய உடைமையே பாட்டு ஆகும். லீலாதிலகம் பாட்டின் இலக்கணத்தை ,

    ”த்ரமிட சம்காதாட்சர நிபந்தமெதுக மோன
    வ்ருத்த விசேச யுக்தம் பாட்டு” (லீ.தி. சிற்பம் ஒன்று. சூத்திரம்11)

    பாட்டு என்பது திராவிட எழுத்துகள் மட்டும் உடையதாய், எதுகை, மோனையுடன் விருத்தச் சிறப்பொடு பொருந்துமாறு அமைவது. அதாவது மணிப்பிரவாள விருத்தங்களிலிருந்து வேறுபட்டுத் திராவிட விருத்தங்களில் அமைவதே விருத்த விசேசம் ஆகும்.

    லீலாதிலகம் குறிப்பிடும் பாட்டு என்பது, சங்க இலக்கியப் பாட்டு மரபோடு அதிகம் பொருத்தப்படுவதில்லை. லீலாதிலகத்தின் பாட்டு என்பது, விருத்தம். இதில் எதுகை மோனை என்னும் இரு தொடைகள் மட்டுமே பெற்றுவரும். அதிலும் எதுகை என்பது, அடி எதுகை மட்டுமே வரும். நான்கு அடிகளிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ( பக்.41.பேரா.இளைய பெருமாள் மொழிபெயர்ப்பு) விருத்தம் அல்லது பாட்டின் இலக்கணத்தைத் தழுவி ஏ.ஆர்.இராஜராஜ வர்மா மலையாள விருத்த மஞ்சரியில்,

    ”பத்தியம் வார்க்குந்ந தோதல்லோ
    வ்ருத்த மென்னிக சொல்வது
    சந்தஸ்ஸென்னால் அட்சரங்ஙளில்
    எத்தர யெந்நுள்ள க்னுல்பத்தியம்”. (வி.ம.3)

    சொற்கோவையின் ஒருங்கிணைப்பை விருத்தமென்று சொல்கிறோம். ஒரு பாட்டில் ஓர் அடியில் எத்தனை எழுத்துகள் வரவேண்டுமென்ற விதி வரையறை உள்ளது. தொல்காப்பியருடைய அடியின் சிறப்பை ஏ.ஆர்.இராஜராஜ வர்மாவும் மேற்கொள்கிறார். ஆனால் இருபது எழுத்துகளுக்கும் மேலாக இருபத்தாறு வரையுள்ள எழுத்துகள் வரலாமென்பது அவர் கொள்கை. அதற்கும் மேலான எழுத்துகள் ஓர் அடியில் வருவது பாட்டல்ல என்பது அவரது கருத்தாகும்.

    தொல்காப்பியர் இருபது எழுத்துக்களுடய கழிநெடில் அடிகளுக்கு மேலாக வரலாகாது என்று குறிப்பிடுவது, செய்யுளுக்கு. எழுத்து எண்ணும் போது மெய்யெழுத்துகளும் என்ணப்படலாம். இது பொது விதியாகும். தொல்காப்பியம் பாட்டு என்று கூறியதைப் போன்று மலையாள யாப்பிலக்கண நூலான விருத்த மஞ்சரி, கிளிப்பாட்டு, துள்ளல் பாட்டு, வஞ்சிப் பாட்டு முதலான வகைகளைக் கூறுகின்றது.

    The word Pattu means only song. But here it is used to signify a school of poetry with certain definite rules. This is different from songs and folklore in M. which are also called pattu sometimes. Ex. Vattakan Pattukal, Krisna pattu etc. – K.M George. P.101.

    மலையாள மொழியில் பாட்டு வகைகள் குறித்து எஸ்.சுப்பிரமணியன் கூறுவது இங்கு நோக்கத்தக்கது. இராமகதப் பாட்டு, கிளிப் பாட்டு, துள்ளல் பாட்டு, வஞ்சிப் பாட்டு அல்லது தூணிப் பாட்டு, பாணப் பாட்டு, குறத்திப் பாட்டு, மாற்றான் பாட்டு, ஞானற்றுப் பாட்டு, வேடன் பாட்டு, தாராட்டுப் பாட்டு, குட்டிகளுடே பாட்டு, அய்யப்பன் பாட்டு, காணிப் பாட்டு, இடநாடன் பாட்டு, வடக்கன் பாட்டு, தெக்கன் பாட்டு, கிருஷிப் பாட்டு, படப் பாட்டு, ஓணப் பாட்டு, மாப்பிள்ளைப் பாட்டு, அடச்சுதுறப் பாட்டு…. (பக்.1977, The Commenness in the Metre of the Dravidian languages,D.L.A)

    திராவிட எழுத்துகள்: ( த்ரமிட சம்காதாட்சர நிபந்தம்)

    இது பாட்டின் மிகவும் முக்கியமான பகுதியாகும். பாட்டானது திராவிட எழுத்துகள் (உயிரெழுத்து பன்னிரண்டும் மெய்யெழுத்து பதினெட்டும்) கொண்டு மட்டும் எழுதப்பட வேண்டும்.

    திராவிட எழுத்துகளிலுள்ள எழுத்துகள் கலந்து வருகின்ற வடமொழிச் சொற்களைத் தற்சமமாக மட்டும் பயன்படுத்த வேண்டும். அல்லாதவற்றைத் தற்பவமாக்கிப் பயன்படுத்தலாம்.

    ’தரதலம் தானாளந்தா பிளந்தா பொன்னன்
    தனகசெந்தார் வருந்தாமல் வாணன் தன்னெ
    கரமரிந்தா பொருந்தானவன்மாருடெ
    கரளெரிந்தா புரானே முராரி கணா’ (இராம சரிதம்)

    இங்கு முராரி, கரம் முதலான வடமொழிச் சொற்கள் தற்சமங்களாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்குக் காரணம், இவை திராவிட எழுத்துகளால்
    அமைந்ததாலேயாகும். தரதலம்(dhara), தானவன்(danava) முதலான வடமொழிச் சொற்கள் திராவிட எழுத்துகளில் இல்லாததால் அவற்றை முறையே தரதலம், தானவன் எனத் தற்பவங்களாக மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் சொற்களைப் பெயர்த்துப் பாட்டில் பயன்படுத்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. (எ-கா) ஹ்ரண்யன் என்னும் சொல் பொன்னன் என்று பெயர்த்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

    எதுகை:

    த்வீதியாக்சரப் பிராசத்தினு இணையான ஒரு பிராசமே எதுகையாகும். மாத்திரைகளில் ஒலியமைப்பில் ஒரே போன்ற தன்மையை அதாவது எதுகை அதே போன்று கவனத்தில் கொள்கின்றது. அதாவது ஒரோ சொல்லிலும் இரண்டாவது எழுத்தும் அதுபோல முதல் எழுத்தின் ஒலியமைப்பும் ஒன்று போல வருவது எதுகையாகும். கொடுத்துள்ள எடுத்துக்காட்டில் ’தரதலந்தானளந்தா’என்று தொடங்கும் ஒன்றாவது வரியின் இரண்டாவது எழுத்தும் அடுத்த வரியின் ’ கரமிரிந்தா’ என்னும் சொல்லின் இரண்டாவது எழுத்தான ’ர’ மீண்டும் ஒன்று போல் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் முதல் எழுத்தானது மாத்திரையில் ஒன்று போல் வரவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    ”கரமரிந்தா பொருந்தானவன்மாருடெ
    கரளெரிந்தா புரானே முராரி கணா” (இராம சரிதம்)

    மோனை:

    மோனைக்கு பாதார்த்தாதிப் பிராசமென்று பெயர். ஒரு அடியின் முதல் சொல்லிலுள்ள முதல் எழுத்தும் இரண்டாவது அடியின் முதல் சொல்லிலுள்ள முதல்
    எழுத்தும் ஒன்று போல வருவது மோனை. எடுத்துக்காட்டாக, ’கரமரிந்தா’ என்னும்
    சொல்லின் முதல் எழுத்தாகிய ’க’வும், இரண்டாவது அடியில் ’கரளெரிந்தா’ என்னும்
    சொல்லின் முதல் எழுத்தாகிய ’க’வும் ஒன்று போல வருவது.

    ”கரமரிந்தா பொருந்தானவன்மாருடெ
    கரளெரிந்தா புரானே முராரி கணா” (இராம சரிதம்)

    அந்தாதி அமைப்பு:

    பாட்டானது, மோனை, எதுகை என்னும் இரண்டோடு நின்று விடாமல் அந்தாதிப் பிராசத்தையும் உள்ளடக்கியதாகத் திகழ்கின்றது. ஒரு பாட்டின் இறுதிச் சொல் கொண்டு அடுத்த பாட்டைத் தொடங்குகின்ற அந்தாதி முறை அச்சாக்கம் அவ்வளவாகப் பிரபலமில்லாத அக்காலத்தில் பாட்டை நினைவில் வைத்துக்கொள்வதற்கு அந்தாதி அமைப்பு முறையும் கையாளப்பட்டு வந்துள்ளது.

    1.நடந்திடமுறைந்த வனுணர்ந்தளவில் நாசம்
    துடங்கினது கடரிய தும்பமுள்ளிலேறி
    அடங்கியங்க சென்றரசனெத்தொழுதுசொல்லத்-
    துடங்கினன் விபீழண்ந்து துயரெல்லாம்.

    2.அணைந்துயரம் தன்னெயறிந்தசியிணைக்கீ
    ழிணங்கியறியிக்கு மடியனோடெளுதாயும்
    பிச்சங்கமதொல்லா பிழை முழுக்கிலும்;நறுந்தா-
    ரணிந்த குழலாளை யரசன்னு கொடு மன்னா,”

    3.மன்னவர் பிரானொடு வழக்கினு துனிந்தா-
    லென்ன கருமம் வருமதெ”ன்ற விடமெல்லாம்
    பின்னயமவன் துயர்ந்து பேசுமளவேவந்-
    துன்னதனி சாசரரொழ்க்கணம் நிறைந்தார்

    4.நிறைந்தளவில் நீலமிகிலெப்பழி செய்யும் மெய்-
    நிறம் கிளர்ந்த கும்ப கர்ணன் நிகில லோகம்
    நிறைந்து முழங்கின்ற மொழியால் த்தமயனுள்ளம்
    நிறந்து வருமாறு நிவிரத்தொழுதுரைத்தான்.

    5.உரைத்தருளொல்லா சபலனாயலகில்யானிந்-
    றொருத்தனுளனாகில் வந்துளைக்குமவர் தம்மெ
    கருத்தருமல்லே பெரியகாரியங்கள் தாமே
    வருத்துமவரென்றிக மந்திரிகள் வேறாய்
    (இராம சரிதம் விருத்தம்- 6)

    விருத்த விசேசம்:

    மணிப்பிரவாளத்தில் பிரபலமான வசந்த திலகம், மந்த்ராக்ராந்தா முதலான வடமொழி விருத்தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட திராவிட விருத்தங்களையே
    விருத்த விசேசம் என்று அழைக்கப்படுகிறது. மாத்திரைக்கு முக்கியத்துவம் கொடுத்த திராவிட விருத்தங்களையே பாட்டுக் கவிகள் தம் படைப்பிற்குப் பயன்படுத்தியுள்ளனர். இந்நூலின் ஆசிரியர் திராவிட விருத்தத்தையே தம் நூலில் கையாண்டுள்ளார்.

    இன்று பயன்பாட்டிலுள்ள பல்வேறு விருத்தங்களின் முந்தையே வடிவமே இராம சரிதத்தில் காணப்படுகின்றது. இவ்வாறாக விருத்த விசேசம் யுக்தம் என்னும் விதியும் இராம சரிதத்தில் பொருந்தி வருகின்றது. மலையாளத்தில் யாப்பின் உறுப்புகளான சீர், தளை போன்றவற்றிற்குக் கட்டுப்பாடு இல்லை. மாறாக நேர், நிரை, அசை போலக் கணங்களின் கோவை இடம் பெறுகின்றது. தொல்காப்பியம், விருத்த மஞ்சரி, மலையாள நெறிகளில் விருத்தம் எழுத்தெண்ணி அடிகள் அளவிடப்படுகின்றன.

    நாற்சீர் கலிவிருத்தம்:

    ஓர் அடியில் நான்கு சீர்கள் கொண்டு நான்கு அடிகளால் அமைவது. பதினான்கு எழுத்துகள் வரையிலான அளவடிகளால் அமைந்தவை. இராம சரிதத்தில் நாற்சீர் கலிவிருத்தமானது மூன்று, ஆறு, பதினொன்று, பதினைந்து, இருபத்தொன்று, இருபத்தெட்டு முதலான ஆறு படலங்களில் அமைந்துள்ளன.

    (எ-கா)
    இருந்த வண்ணமேயிருள் மறைந்திட துர-
    ப்பரந்தகுடையும் தழையும் வெண் சவரி மற்றும்
    கரைந்துமடவார் துதிசெய்யக்கனிவில் வந்தா-
    நிருண்டமுகில் போலெழுமிராவணனித்த்தான்
    (இராம சரிதம் விருத்தம்-3.1)

    ஐஞ்சீர் கலிவிருத்தம்:

    பதினேழு எழுத்துகள் வரையுள்ள நெடிலடி நான்கால் அமைவது. படலம் நூற்றியஞ்சில் கட்டளைக் கலித்துறையாகப் பதினொன்றாவது பாட்டு அமைந்துள்ளது.

    (எ-கா)
    மன்னவனே, மனம் மைதிலிதன்னி லலிந்தோ நீ
    யென்னொடு முன்னமியங்ஙுமதொன்னு மிளக்குன்னு?
    என்னது காரண மிந்திரசித்தினு மாதாவென்
    னென்னெயறிந்தருளாதொழியின்னதினிக்காலம்
    (இராம சரிதம் விருத்தம்-105.1)

    அறுசீர் ஆசிரிய விருத்தம்:

    இருபது எழுத்துகள் வரை பெற்று அறுசீர்க்கழி நெடிலடி நான்கால் வருவது. இவை ஈரசைச் சீர் பெற்று வரும்.

    (எ-கா)
    அரசர்கோனே! மேன்மேலரும் துயர்பிடித்தீவண்ணம்
    புரிகுழலாழெனண்ணிப்போக்கும தொல்ல காலம்;
    இருபது கரங்கள் தங்கமிலங்கைவேந்தனெயொரிக்கால்
    க்கருதுக;களகசோகம் கைக்கொள்க கோபமிப்போள்!
    (இராம சரிதம் விருத்தம் -2.2)

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:

    இருபத்திரண்டு எழுத்துகளான எண்சீர்க் கழிநெடிலடி நான்கினால் வருவது.

    (எ-கா)
    ஒக்கெங்கும ரிந்திட்டவ யெல்லாம்நிரவே வீழ்
    ந்தொப்புள்ளச மைப்போடிட கெட்டித்தம்மில் விம்மி
    த்திக்கெங்குமு லைக்கின்றவனு ற்றொன்றுள வாகி
    த்திழ்க்கின்று தலைப்பந்திம லைப்பந்தி கனக்கே
    தக்கம்வரு மிப்போரிலி லங்கைக்கர சன்றன்
    சட்டற்றசி ரம்பத்தும றுத்தாலென்று மேடம்
    கைக்கொண்டும னத்தினுக னத்தோரு விவேகம்
    கைவந்தர சன்பண்டுக ழிந்தேடம்நி னைந்தான்.
    (இராமசரிதம். விருத்தம் -100.1)

    பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:

    இருபத்து நான்கு எழுத்துகள் வரை பெற்றுப் பதின்சீர்க் கழிநெடிலடி நான்கினால்
    வருவது.

    (எ-கா)
    “பிரியருதாத நீயிங்ஙனபி தாவுவெடிந்து நாடும்
    பிழுகியிரந்து காடுமுரைந்து போந்தவனோட கன்றான்,
    உருகுமல்லீநி னக்குடனுள்க்கு ருந்து விருந்த ல்லீவ
    ந்தொளிவுள்ளிலங்க புக்கது போரும் நிந்திறம் நில்க்கதெல்லாம்
    ஒருதுடநாங்கள் நின்னுடல்வெட்டி யொக்கனுகர்ந்தி தம்பெ-
    ற்றுளவிளயாட்ட மாடுவுதென்று சென்றணையின்ற நேரம்
    திரிசடகண்டு கொண்டுகனாவுதான றியித்த போதே
    திரிந்தகலும்நி சாசரிமார டங்கியுறங்கி னாரே”
    (இராம சரிதம். விருத்தம்- 4.1)

    முடிவுரை

    பாட்டின் வடிவத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கின்ற ஒரு நூலே இராம சரிதம் ஆகும். இராம சரிதத்தின் முக்கியத்துவத்தைப் பண்டிதர்களுக்கு இடையில் முதன் முதலாகக் கவனத்தில் கொண்டு வந்தவர் பேரா.ஹெர்மன் குண்டர்ட்டாகும். இந்நூல்
    கி.பி.12-ஆம் நூற்றாண்டிற்கு இடையிலோ அல்லது 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இராம சரிதத்தின் ஆசிரியர் சீராமன் என அந்நூலின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்நூல் எழுதப்பட்ட காலம், ஆசிரியர் முதலானவற்றில் மாற்றுக் கருத்துகள் நிலவுகின்றன. இந்நூலில் மொத்தம் 1814 பாட்டுகள், 164 படலங்களாகப் பகுத்து எடுத்துரைக்கப்பட்டுள்ளன. லீலாதிலகம் கூறும் பாட்டின் இலக்கணத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற நூலே இராம சரிதம் என்பதில் ஐயமில்லை.

    துணைநூல் பட்டியல்

    1. இராம சரிதம், பி.வி. கிருஸ்ணவாரியார், சாகித்திய பரிசத் சி.எஸ். லிமிடெட்,
    எர்ணாகுளம், முதல் பதிப்பு 1956, விலை.10
    2. இளங்குளம் குஞ்சன்பிள்ளை, லீலாதிலகம் குறிப்புகளுடன், நேசனல் புக் ஸ்டால்,
    கோட்டயம், 1962
    3. எருமேலி, மலையாள சாகித்தியம் காலக்கட்டங்களிலுடே, முதல் பதிப்பு, மே 1996, விலை.475.
    4. தொல்காப்பியம், பொருள் (இளம்பூரணர் உரை) கழகவெளியீடு, சென்னை, 1973
    5. பிரபாகரன், ம. தமிழ் மலையாளப் பாட்டு மரபுகள், EFEO, பாண்டிச்சேரி.
    6. பிரபாகரன், ம. பாட்டும் தொடையும்: திராவிட மொழிகளுக்கிடையேயான தொடர்பு EFEO, பாண்டிச்சேரி.
    7. மினாட்சிநாத பிள்ளை, ச.கம்பராமாயணமும் இராம சரிதமும் ஓர் ஒப்பாய்வு
    8. ராஜராஜ வர்மா, எ.ஆர். விருத்த மஞ்சரி, நேசனல் புக் ஸ்டால், கோட்டயம்,1974.
    9.வையாபுரிப்பிள்ளை, எஸ். தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம், மயிலாப்பூர், சென்னை,1949
    10. Abar Gromphy , Principles of Literary criticism, High Hill Published,1960
    11. George,K.M. Ramacaritam and the study of Early Malayalam, , National Book stall, Kottayam, 1956
    12. Subramanyan,S. The Commenness in the Metre of the Dravidian languages, D.L.A 1977

    ==========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆய்வாளரின் முயற்சி பாராட்டிற்குரியது. ஆனால் கட்டுரையில் கருத்துத் தொடர்பு இல்லை. முன்னுரையில் லீலாதிலகம் பற்றித் தொடங்கி, தொல்காப்பியம் பற்றி விளக்கம் கொடுத்து, இராம சரிதத்தில் முடிவுரை அமைந்துள்ளது. ஆய்வின் நோக்கம் என்ன, ஆய்வுச் சிக்கல் என்ன, அதற்குத் தீர்வு என்ன என்ற முறைப்படி கட்டுரையை அமைக்கவில்லை. லீலாதிலகம், இராமசரிதம் குறித்த தெளிவான அறிமுகமும் விளக்கமும் காலமும் இல்லை. “லீலாதிலகத்தின் பாட்டிலக்கணப்படி இராமசரிதம் பொருந்தியுள்ளது” என ஆய்வாளர் காட்டியுள்ளார். ஆனால், லீலாதிலக ஆசிரியர், பாட்டிலக்கியத்திற்கு இராம சரிதத்தை மேற்கோள் காட்டியிருப்பதாக மலையாள இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் பரமேச்வரன் நாயர் குறிப்பிடுகிறார். எந்த நூல் முதலில் தோன்றியது? எதற்கு எது எடுத்துக்காட்டாக அமைகிறது என்ற தெளிவு, ஆய்விற்குத் தேவை. இராம சரிதத்தையும் லீலாதிலகத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பிட்டிருப்பது நன்று. எனினும் கட்டுரையில் இலக்கண வரையறைகளை மட்டும் விளக்காது, ஆய்வாளர் புதிய முடிவுகளைக் கண்டறிய முயன்றிருக்க வேண்டும்.

    ==========================================================

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் – 303: டிம் பெர்னர்ஸ்-லீ

    இந்த வார வல்லமையாளர் என கணிஞர் டிம் பெர்னர்ஸ்-லீ அவர்களை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. இயற்பியல் ஆய்வரான டிம் வையவிரிவலை (World Wide Web) உருவாக்கி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைத் தொடர்பு கொள்ள சாதனை புரிய கால்கோள் இட்டவர்.  இணையம் அமைப்பது பற்றிய ஆவணங்களை எழுதி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. வையவிரிவலையின் 30-ம் பிறந்த நாளில், உலகை இணைக்கும் அற்புத சாதனத்தை வடிவமைக்க அடிக்கல் நாட்டிய விஞ்ஞானி ஸர் திம் பெர்னர்ஸ்-லீயை வாழ்த்துவோம். எல்லாக் கணினிகளிலும் இயங்கும் யூனிகோட் எழுதுருக்கள், எந்தத் தகவலையும் தேட உதவும் துழாவி எந்திரம், இதன் பெரிய கம்பெனி ஆக கூகுள், … இவை எல்லாம் ‘வெப்’ என்னும் வையவிரிவலையின் பங்களிப்பு தானே! ஆவணம் ஒன்றுடன் வேறொன்றை இணைக்கும் ஹைப்பர் -லிங்க் எனப்படும் அமைப்பை உருவாக்கி, அதனை ஒரு உலாவி (browser) வழியாகக் காணும் வழிமுறையை இவர் படைத்துத் தந்தார். ஏற்கனவே வேறு வழிமுறைகளில் இயங்கிக் கொண்டிருந்த இணையத்தினை அதனுடன் வெற்றிகரமாக இணைத்து செயல்படுத்தினார். இதன் மூலம் மக்கள் எளிதாகவும், வெற்றிகரமாகவும் ஒலி, ஒளி, எழுத்து ஆவணங்களை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இப்போது பெரும் வழக்கில் பயன்படுத்தப்படும் எச்.டி.டி.பி. மற்றும் எச்.டி.எம்.எல். (HTTP Hypertext Transfer Protocol, HTML Hypertext Markup Language) வழங்குமுறை தொழில் நுட்பங்கள் இதில் உருவானவையே. இப்பொழுது சோசியல் மீடியா என்று ட்விட்டர், பேஸ்புக் அதிக அளவில் இந்திய மொழிகளில் பயன்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக வலைத்தளங்கள் போலிச்செய்திகளை வெளியிடுவதிலும், பாலியல் வன்முறைக்கு கருவி ஆகவும் ஆகிவருகிறது. இதனை முளையிலேயே தடுக்காவிட்டால் பெரிய பிரச்சினை தான்.

    ஓர் இலக்கியக் குறிப்பு: இணையம் பற்றிப் பேசுகிறோம். நீர்ப் பகுதிகளில் வாழும் பறவைகள் நீந்த வசதியாக அதன் விரல்களுக்கு இடையே இணைந்த ஒரு சவ்வுத் தோல் இருக்கும். இதனைக் கொய்யடி என்பது பழைய தமிழ் வழக்கு. ஆங்கிலத்தில் webbed feet. திவாகரம், பிங்கலந்தை போன்ற நிகண்டுகளில் “குருகு வண்டானம் கொய்யடி நாரை” என்ற சூத்திரம் உள்ளது. இந்த நூற்பாவின் பொருள்: வண்டானமும் (Pelican), கொய்யடிநாரையும் (Flamingo) குருகுப் பறவை வகுப்புகள் ஆகும். குருகு = Water birds. ஃப்லெமிங்கோ எனப்படும் பூநாரைகளின் பாதம் கொய்யடி கொண்டவை. எனவே, பழைய தமிழில் கொய்யடி நாரை என்பது இந்த ஃப்லெமிங்கோ பறவைகளைத் தான். இஃதறியாமல், சென்னைப் பேரகராதி வண்டானம் என்பது கொய்யடி நாரை என்று குறிப்பிட்டுள்ளது. அது பிழை. வண்டானம் என்னும் பெலிக்கன் பறவைகள் நாரை இனம் அல்லவே. டிம் தந்த இணையத்தில் கொய்யடி நாரை என்னும் Flamingo பறவையின் துதிக்காலை பார்க்கலாமே. 

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • 2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    1. https://youtu.be/CPeN7GhTpz4
    2. https://www.thegreenage.co.uk/cos/nuclear-power-in-france/
    3. https://youtu.be/4YgmCu7dfS4
    4. https://www.dw.com/en/france-sticking-with-nuclear-power/av-38397323
    5. https://www.businessinsider.com/countries-generating-the-most-nuclear-energy-2014-3
    6. https://www.youtube.com/watch?v=TZV2HRKNvao
    7. https://www.youtube.com/watch?v=HMrQJoN-Ks4
    8. https://www.youtube.com/watch?v=kr4mFLws3BM
    9. https://www.youtube.com/watch?v=YfulqRdDbsg
    10. https://www.youtube.com/watch?v=Hn-P3qnlB10

    ++++++++++++++++++++++++

    பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப் படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

    BBC News (June 23, 2011)

    Image result for nuclear power in france

    ஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங்களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%). அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு.  பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தி லும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும்.  ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.

    BBC News (May 30, 2011)

    Image result for nuclear power in france

    பிரான்ஸ் நாட்டு அணுமின்சக்தி இயக்கத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள்.

    2018 நவம்பர் அறிப்பின்படிக் கடந்த 50 ஆண்டுகளாக

    1. பிரான்ஸ் தேசம் தற்போது தேவையான மின்சக்தி உற்பத்தியில் 75% அணுசக்தி மூலமாக பாதுகாப்பு முறையில் வெற்றிகரமாகப் பெற்று வருகிறது.  2035 ஆண்டுக்குள் அது 50% ஆகக் குறைக்கப்படும்.  அதாவது பிரான்ஸில் 17 பழைய அணுமின்சக்தி நிலையங்கள் 2035 ஆண்டுக்குள் நிறுத்தப் படும்.
    2. உலகத்திலே பேரளவு மின்சக்தி ஏற்றுமதி தொடர்ந்து செய்யும் நாடுகளில் பிரான்ஸ் முன்னணியில் நிற்கிறது. காரணம் மலிவான நிதியில் மின்சக்தி உற்பத்தியை பிரான்ஸ் செய்ய முடிகிறது.  அதலால் ஆண்டுக்கு மூன்று பில்லியன் ஈரோ [ 3.4 பில்லியன் டாலர் : ] பிரான்சுக்கு வருமானம் வருகிறது.
    3. கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ் அணுவியல் துறை நுணுக்க சாதனங்கள் விருத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளது.  குறிப்பாக அணுவியல் எரிக்கரு உற்பத்தி ஏற்றுமதியில் செல்வாக்கு அடைந்துள்ளது.
    4. அத்துடன் சுமார் 17% பங்கு மின்சக்தி அணுவியல் எரிக்கரு மீள் சுழற்சியில் [Recycled Nuclear Fuel] கிடைக்கிறது.

    +++++++++++++

     

    French nuclear power reactors

    பிரான்ஸ் எரிசக்தி உற்பத்தி மூல எருக்கள் [Energy Sources] 

    2016 ஆண்டில் பிரான்சின் மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 556 TWh [ terra watt hours [Gross].

    1. அதில் அணுமின்சக்தியின் பங்கு : 72% [403 TWh].
    2. நீரழுத்த மின்னாற்றல் : 12%  [65 TWh],
    3. இயல்வாயு + நிலக்கரி வெப்ப மின்சக்தி 8% [45 TWh];
    4. சூரியக்கதிர் + காற்றாற்றல் :  5% [ 31 TWh ]
    5. அதாவது பிரான்ஸ் மொத்தத் தேவை மின்சக்தி : 442 TWh [6,600 KWh/cappit] : கி.வாட் ஹவர் / காப்பிட்டா.
    6. 2013 இல் வீட்டு மின்சார விலை அளவு : 8 சென்ட்/கிலோவாட் ஹவர்.  [cents/Kwh]

    French nuclear power reactors

    Class Reactor MWe net, each Commercial operation
    900 MWE BLAYAIS 1-4
    910
    12/81, 2/83, 11/83, 10/83
    BUGEY 2-3
    910
    3/79, 3/79
    BUGEY 4-5
    880
    7/79-1/80
    CHINON B 1-4
    905
    2/84, 8/84, 3/87, 4/88
    CRUAS 1-4
    915
    4/84, 4/85, 9/84, 2/85
    DAMPIERRE 1-4
    890
    9/80, 2/81, 5/81, 11/81
    FESSENHEIM 1-2
    880
    12/77, 3/78
    GRAVELINES B 1-4
    910
    11/80, 12/80, 6/81, 10/81
    GRAVELINES C 5-6
    910
    1/85, 10/85
    SAINT-LAURENT B 1-2
    915
    8/83, 8/83
    TRICASTIN 1-4
    915
    12/80, 12/80, 5/81, 11/81
    1300 MWE BELLEVILLE 1 & 2
    1310
    6/88, 1/89
    CATTENOM 1-4
    1300
    4/87, 2/88, 2/91, 1/92
    FLAMANVILLE 1-2
    1330
    12/86, 3/87
    GOLFECH 1-2
    1310
    2/91, 3/94
    NOGENT S/SEINE 1-2
    1310
    2/88, 5/89
    PALUEL 1-4
    1330
    12/85, 12/85, 2/86, 6/86
    PENLY 1-2
    1330
    12/90, 11/92
    SAINT-ALBAN 1-2
    1335
    5/86, 3/87
    N4 – 1450 MWE CHOOZ B 1-2
    1500
    12/96, 1999
    CIVAUX 1-2

    1495

    1999, 2000
    Total (58)
    63,130

    Differences in net power among almost identical reactors is usually due to differences in cold sources for cooling

    “இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

    பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     


    “மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங் களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

    ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

    ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

    ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

    நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவதென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல் களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப் பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவை யும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

    லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

    “விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

    விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

    உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

    கட்டுரை ஆசிரியர்

    முன்னுரை:  2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

    தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    புகுஷிமா அணுமின் உலைகளின் தற்போதைய நிலை (ஜூன் 20, 2011)

    புகுஷிமா : 1  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.

    புகுஷிமா : 2  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.  அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கம் பரவி விட்டதாக ஐயப்பாடு.

    புகுஷிமா : 3  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  அரணில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக ஐயப்பாடு.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், இணைக்கப் பட்ட குகையிலும் காணப் பட்டது.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் குறைந்து பிறகு நீர் நிரப்பப் பட்டது.

    புகுஷிமா : 4  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்ததால்,
    தீயும் வெடிப்பும் நேர்ந்தன.

    புகுஷிமா : 5 & 6  அணு உலைகள் சுயமாய் நிறுத்தமாகின.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்து எரிக்கோல்களின் உஷ்ணம் ஏறியது.

    மொத்தக் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு 110,000 டன் என்று கணிக்கப் படுகிறது.  அது மீள் சுற்றியக்க வடிகட்டு முறையில் நீண்ட காலம் சுத்திகரிக்கப் பட வேண்டும்.

    அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

    புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு.  அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

    இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

    அணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்

    21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளு வது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :

    புகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.  இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது.  அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது.  ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.

    சென்ற வாரத்தில் எதிர்கல அணுமின் சக்தி உற்பத்தி பற்றிய 10 உலக நாடுகளின் முடிவுகள் :  (1. அர்ஜென்டைனா, 2. பிரேசில், 3. ஆர்மீனியா 4. கனடா, 5. சைனா, 6 பின்லாந்து, 7. பிரான்ஸ், 8. ஜெர்மனி, 9. இந்தியா, 10 ஜப்பான்) தெரிவிக்கப்பட்டன.  இக்கட்டுரையில் மற்ற 11 உலக நாடுகளின் முடிவுகள் கூறப்படுகின்றன.

    11. மெக்ஸிகோ :  துணை எரிசக்தி அமைச்சர் கார்லோஸ் பீடர்சன் புகுஷிமா அணு உலை விபத்துகள் மெக்ஸிகோ திட்டமிட்டிருக்கும் அணுமின் நிலைய நிறுவ ஆலோசனைகளை நிறுத்த வில்லை என்று அறிவித்துள்ளார்.

    12. நெதர்லாந்து :  டச் அரசாங்கம் திட்டமிட்டுள்ள புதிய அணுமின் நிலைய ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறது.

    13. ருமேனியா :  அணுமின் உலைகள் ஆதரவு பற்றி அரசாங்கக் கொள்கையில் மாறுதல் எதுவும் இல்லை.

    14.  ரஷ்யா :  ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடிவ் அகில நாடுகளில் சுனாமிப் பேரலைத் தாக்க எதிர்பார்ப்பு உள்ள அணுமின் நிலையங்களின் நீண்ட காலப் பாதுகாப்பு நிலை விதிகளின் தேவையை வற்புறுத்தினார்.  நிலநடுக்கப் பழுதுக் கோடுகளுக்கு (Seismic Fault Line) அப்பால் அமைக்கப் பட்டுள்ள ரஷ்ய அணுமின் நிலையங்களில் உடனடிக் கவனம் செலுத்தும் அவசியம் இல்லை என்றும் வலியுறுத்தி னார்.

    15. தென் ஆப்ரிக்கா :  தென் ஆப்ரிக்காவின் அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் கடற்கரையில் அமைந்துள்ள கோபெர்க் அணுமின் நிலையம் நீண்ட கால அபாய வெப்பத் தணிப்பு நீர் வசதி ஏற்பாடுகளை உடையது என்று அறிவித்தது.  ஒன்றே ஒன்றான இந்த இரட்டை அணுமின் நிலையம் 1800 MWe மின்சார உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது.  2011 மார்ச் 16 ஆம் தேதி தென் ஆப்ரிக்க அரசு 2030 ஆண்டுக்குள் 13% தகுதி மின்சாரப் பங்கு ஏற்றுக் கொள்ள 9600 MWe ஆற்றல் உள்ள அணுமின் நிலைய திட்டங்களைக் கட்ட அனுமதி அளித்திருக்கிறது.

    16 தென் கொரியா :  2011 மார்ச் 21 ஆம் தேதி தென் கொரியா கல்வி அமைச்சகம் தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையப் பாதுகாப்பு இயக்கங்களை மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  இப்போது 21 அணுமின் நிலையங்கள் 40% பங்கு மின்சாரம் அனுப்பி வருகின்றன. 2020 ஆண்டுக்குள் இன்னும் 35 புதிய அணுமின் நிலையங்களைத் தென் கொரியா நிறுவத் திட்ட மிட்டுள்ளது.

    17 சுவீடன் :  2009 ஆம் ஆண்டு செய்த முடிவின்படி தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஆயுட் கால இறுதியில் முற்றிலும் புதுப்பிக்கப் பட்டு மாற்றப் படும்.  2011 ஆண்டு இறுதிக்குள் ஈரோப்பியன் அணுசக்திப் பேரவைக்கு உலோக அழுத்தச் சோதனை விளைவு களை (Stress Tests) அனுப்ப வேண்டும்.

    18. சுவிட்ஜர்லாந்து :  2011 மே மாத இறுதியில் சுவிஸ் அரசாங்கம் ஆயுள் முடியும் அணுமின் நிலையங்கள் மூடப்படும் என்று முடிவு செய்தது.  அதாவது 2034 ஆண்டுக்குள் அனைத்து அணுமின் நிலையங்களும் நிறுத்தம் அடையும் என்றும் அறிவித்தது.

    19. டெய்வான் :  டெய்வான் ஜனாதிபதி தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும் என்று அறிவித்தார்.  அத்துடன் புதிதாய்க் கட்டத் திட்டமிட்ட அணுமின் நிலையங்கள் தாமதப் படாமல் அமைக்கப் படும் என்றும் கூறினார்.

    20. பிரிட்டன் :  பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப் படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

    21 அமெரிக்கா :  2011 மே மாதம் 17 ம் தேதி அமெரிக்க அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் (US Nuclear Regulatory Commission – NRC) இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க அணுமின் உலைகளின் அபாயப் பாதுகாப்பு இயக்க முறைகளை மீளாய்வு செய்து தமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நியமிக்கப் பட்ட ஆய்வு வினைக் குழுவுக்கு (A Task Force) அறிவித்தது.  ஜப்பான் அணு உலை வெடிப்புகள், அவற்றின் நேரடித் தொலைக்காட்சித் தரிசனம், ஜப்பானி யரின் நீண்ட காலத் தவிப்பு, அணு உலை இயக்க நிபுணரின் கட்டுப்படுத்த முடியாத தடுமாற்றம் அமெரிக்கர் உட்பட உலக மக்களின் வயிற்றைப் பெரிதாகக் கலக்கி இருக்கிறது.  1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் நிறுத்தமான புதிய அணுமின் நிலையத் திட்டங்கள் எல்லாம் மீண்டும் உயிர்தெழும் என்ற நம்பிக்கை மிகவும் தளர்ந்து போயுள்ளது.  அத்தகைய வெறுப்பும், அவநம்பிக்கை யும் இருந்தாலும் அமெரிக்கா வில் (2011) தற்போது அணுமின் உலைகள் அவசியத் தேவை என்பதற்கு 43% மக்கள் ஆதரவு அளிக்கிறார்.  இப்போது அமெரிக்கா வில் 104 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.  1977 இல் அணுமின் உலை ஆதரவாளர் 77%.  திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துக்களுக்குப் பிறகு ஆதரவு 59% ஆகக் குறைந்தது.  ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் 2011 இல் அணுமின் நிலைய ஆதரவு 43% ஆகக் குன்றி விட்டது !

    முடிவுரை:   பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரிய வில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவ தோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

    (தொடரும்)

    ***************

    தகவல்:

    1.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

    2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

    3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

    4.  Nuclear {Power in Japan (March 30, 2011)

    5. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

    6 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

    7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

    8.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

    9.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

    10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

    11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

    12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

    13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

    14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

    15 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant(Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

    16. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

    17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

    18. BBC News : Europe, French Nuclear Policy  (May 31, 2011)

    19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

    20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

    21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

    22 Wikipedea http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011)

    23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

    24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)

    25. BBC News : New UK Nuclear Plant Sites Named  (June 23, 2011)

    26. https://www.japantimes.co.jp/news/2018/03/09/national/fukushima-no-1-cleanup-continues-radioactive-water-rumors-also-prove-toxic/#.XI0k

    27.  https://www.theguardian.com/environment/2018/jun/03/was-fallout-from-fukushima-exaggerated

    28. https://www.iaea.org/newscenter/focus/fukushima/status-update  [March 14, 2019]

    29. https://www.fairewinds.org/fukushima-latest-updates  [January 18, 2019]

    30. http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-a-f/france.aspx  [November 2018]

    31http://www.nuclearpowerdaily.com/reports/Glowing_results_for_nuclear_power_at_Frances_EDF_999.html  [February 15, 2019] 

    32. https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_France  [March  10, 2019]

    ************************
    S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  March 16, 2019  [R-1]
    http:jayabarathan.wordpress.com/

    Share
  • பெண் காவலர்கள் படும் பாடு!

    -சேஷாத்ரி பாஸ்கர்

    சென்ற வாரம் நாரத கான சபாவில் காபி குடிக்கும் போது திடீரென நான்கு பெண் காவலர்கள் வேகமாக வந்து காபி வேண்டும் எனச் சொல்லி அதனை வேகமாகத் தரச் சொன்னார்கள்.

    அவர்கள் அனைவரும் பந்தோபஸ்து வேலைக்காக வந்தவர்கள். ஆளுநர் அந்தப் பக்கம் வருவதாக அறிந்தேன். நடுவில் ஒருவர் அந்தக் காபிக்கு பணமும் கொடுத்துவிட்டார். ஒரு சின்ன பேச்சும் ஒரு குட்டி இளைப்பாறலும் கிடைத்த சந்தோஷம் அவர்கள் முகத்தில்.

    அவர்கள் குடித்துக்கொண்டுடிருந்த போதே திடீரென அவர்கள் மேலதிகாரியின் விசில் சத்தம் கேட்டு எல்லோரும் கடகடவென எழுந்து எதிர்த்திசைக்குப் போய்விட்டார்கள். அந்தச் சின்ன ஓய்வும் போய்விட்டது. அதுவும் பெண் காவலர்கள் பாடு மிகக் கஷ்டம். சிறுநீர் கழிக்கக் கூட அவர்கள் ஒரு அலுவலகமோ,  உணவு விடுதியோ தேட வேண்டிய நிலை.

    குறைந்த பட்சம் அவர்கள் நிற்கும் அந்த இடத்தில் பாதை ஓரத்தில் ஒரு சின்ன பெஞ்ச் போல ஒரு சிமெண்ட் பலகை செய்து கொடுத்தால் அவர்கள் மேலும் சிறப்பாக பணியாற்றலாம். வெரிகோஸ் ஒரு பெரும் தொல்லை. இந்தக் கஷ்டப் பணியில் அவர்கள் சலிப்பு அடையாமல் இருக்கச் சில சலுகைகள் தேவை தான்.

    இதை எல்லாம் தாண்டி அவர்கள் பொது மக்களிடம் கனிவுடன் இருப்பது சாதாரண செயல் அல்ல. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அவர்கள் அந்த குடித்த நான்கு காபிக்கும் காசு கொடுத்தவர்கள். இனாமாக அதைப் பெறவில்லை. இங்கு பெண்ணாய் பிறக்க மட்டும் இல்லை வாழவும் மாதவம் செய்ய வேண்டும்.

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 7    

    -மேகலா இராமமூர்த்தி

    ஆண்களுக்கு நிகரான பெண் புலமையாளர்களை – கல்வியாளர்களை, சங்க காலத்துக்குப் பிறகு, தேடி அடையாளப்படுத்துதற்குப் பெரும் பிரயத்தனமும் முயற்சியும் தேவைப்படுகின்றது. அப்படிக் கண்டடைந்த பெண்டிரின் சிந்தனைகளும் அவர்கள் வாழ்ந்தகாலச் சமூகப் போக்கினை ஓட்டியே அவர்தம் படைப்புக்களில் பிரதிபலிக்கக் காண்கின்றோம்! அஃது இயற்கையும்கூட!     

    அவ் அடிப்படையில்தான் கிபி 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பெண்புலவோரின் சிந்தனைகள் மானுடக் காதலைப் பேசுவதாய் அமைந்திருக்க, அதற்குப் பிந்தைய பக்தி இயக்ககாலப் பெண்புலவோரின் சிந்தனைகள் இறையோடு ஒன்றறக் கலக்கும் தெய்விகக் காதலை விதந்தோதுகின்றன.

    இப்படி ஒவ்வொரு காலகட்டமாகக் கடந்து வருகையில் பெண்பாலாரின் படைப்புக்கள் குறைந்துகொண்டே வருவது பெண்கல்வியும் காலப்போக்கில் குறைந்து போயிருக்கின்றது என்பதையே  உணர்த்துகின்றது. இத்தகு பெண்கல்வித் தடைக்கோர் முடிவுவந்து மீண்டும் அவர்களின் கல்வி வானம் விடிவுகண்டது மேலைநாட்டாரின் வருகைக்குப் பின்னரே என்பதை மறுப்பதற்கில்லை.

    ஆங்கிலேயர், இந்தியாவில் தம் காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டி இந்தியரை அடிமைப்படுத்தியதால் நாம் நம் சுதந்தரத்தை இழந்தோம்; மேற்கத்தியரின் ஆங்கிலக் கல்விமுறைக்கு மாற்றப்பட்டோம் என்பவை வருந்தத்தக்கனவே எனினும், அவர்கள் காலத்தில்தான் சாதி மத பேதங் கடந்த அனைவருக்கும் பொதுவான ஒரு கல்வித் திட்டத்தை நாடு கண்டது என்ற வகையில் அது போற்றத்தக்கத்தே!

    ஆணாதிக்கச் சமூகத்தால் அடிமைப்படுத்தப்பட்டு, அறியாமை யிருளில் அகப்பட்டுக் கிடந்த பெண்களின் வாழ்வில் ஆங்கிலேயர் பரவலாக்கிய கல்விமுறை மீண்டும் அறிவொளி ஊட்டியது.

    பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைக் கண்டித்த இந்தியச் சமூகச் சீர்திருத்தவாதிகளின் எண்ணிக்கையும் இக்காலகட்டத்தில் அதிகரித்தது கண்கூடு. அவர்களில் முதன்மையானவர் ராஜா ராம்மோகன் ராய்.

    18-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் பிறந்த ராம்மோகன் ராய், சமூகத்தில் ஊறிக்கிடந்த மூடநம்பிக்கைகளுக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும் தீமூட்ட முதலில் தீக்குச்சி கொளுத்தியவர். பழமைவாதத்தில் பிடிமானம் கொண்ட பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்திருந்தும் அறிவுக்கும் மனிதத்தன்மைக்கும் பொருந்தாத மதச்சடங்குகளையெல்லாம் அவர் துணிந்து எதிர்த்தார். இறந்த கணவனோடு உயிருள்ள மனைவியை எரிக்கும் சமூகச் ’சதி’யை முடிவுகட்டப் பாடுபட்டு அதற்கு எதிரான சட்டத்தை அப்போதைய வங்காள ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு (Lord William Bentinck) அமல்படுத்த ராம்மோகன் ராய் வழிகோலினார்.

    இவரைப் போலவே ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ஜோதிபாய் ஃபூலே, டாக்டர் அம்பேத்கர் என்று சீர்திருத்தச் சிந்தனை கொண்ட ஆடவர் பலர் பெண்களுக்கெதிரான ’சதி’யையும், சமூகத்தின் சாதி வேறுபாடுகளையும் கடுமையாய் எதிர்த்தனர். பெண் கல்வியின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தினர்.

    ஆண்களேயன்றிப் பெண்களும் பெண்கல்விக்கு ஆதரவாகவும், பெண்கள்மீதான வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பாடுபட்டிருக்கின்றனர். அவ்வகையில், ஜோதிபாய் ஃபூலேயின் துணைவியாரான சாவித்ரிபாய் ஃபூலே சிறந்த கவிஞராகவும், பெண்களுக்கான முதல் பள்ளியை பூனேயில் நிறுவிய சாதனையாளராகவும் திகழ்கின்றார்.

    நவீன இந்தியாவின் முதல் பெண்ணியவாதியாகக் கருதப்படுபவர் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மராத்தியரான, தாராபாய் ஷிண்டே (Tarabai Shinde) எனும் பெண்மணி. அவர் தம்முடைய ’Stripurush Tulana’ (A Comparison Between Women and Men) எனும் நூலில் அன்றைய சமூகத்தில் நிலவிவந்த சாதி அடிப்படையிலான சமத்துவமின்மை, ஆணாதிக்கம், சாதி வேறுபாடின்றி எங்கும் நிலவிவந்த பெண்கள் மீதான அடக்குமுறை ஆகியவற்றை மிகத் துணிச்சலாகப் பதிவு செய்திருக்கின்றார். சமூகத்தின் வரவேற்பை இந்நூல் அப்போது பெறாவிடினும், மற்றொரு சீர்திருத்தப் பெண் சிந்தனையாளரான, சாவித்ரிபாய் ஃபூலே இந்நூலைப் பெரிதும் பாராட்டியிருக்கின்றார் என்றறிகின்றோம்.

    நம் தமிழகத்திலும் பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு உரத்துக் குரலெழுப்பிய போராளிகள் பலர் 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றினர். தந்தை பெரியார், திரு.வி.க., புரட்சிக் கவிஞர்களான பாரதி, பாரதிதாசன் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    ”ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற
    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”
    என்று பெண்ணடிமைக்கும் பெண்கல்விக்கும் எதிரானவர்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுகின்றார் பாரதியார்.

    ”கல்வியில்லாப் பெண்கள் களர்நிலம்
    அங்கே புல்விளையலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை”
    என்றார் பாரதிதாசன் உறுதிபட.

    ”ஆண்களால் பெண்களுக்கு விடுதலையோ சம உரிமையோ கிடைக்காது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்த பெரியார், ”பெண் விடுதலைக்கு ஆண்களைவிடப் பெண்களே இப்போது பெரிதும் தடையாக இருக்கின்றார்கள்; ஏனெனில், இன்னமும் பெண்களுக்குத் தாம் முழு விடுதலைக்குரியவர்கள் என்ற எண்ணமே தோன்றவில்லை; இயற்கையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகத்தான் படைத்திருக்கின்றது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்” என்று 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த நம் பெண்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டியதோடு, அந்த அடிமை மனநிலையைக் கண்டிக்கவும் செய்தார்.

    அன்றைய பெண்களில் பலர் பெரியாரின் கூற்றுக்கிணங்க ஆடவர்க்கு அஞ்சியும் அடங்கியுமே நடந்தனர் எனினும் அவர்களினின்று(ம்) மாறுபட்டு, பெண் விடுதலைக்கும், பெண்ணுரிமைக்கும் குரலெழுப்பிய பெண்டிரும் தமிழகத்தில் இருக்கவே செய்தார்கள்.

    அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் மூவலூர் இராமாமிருதத்தம்மையார். பெண்களைச் சிறுமைப்படுத்தும் ’தேவதாசி’ முறையை ஒழிக்கக் கடுமையாகப் பாடுபட்டச் சமூகச் சீர்திருத்தவாதி அவர். திராவிட இயக்கச் சார்பாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய அவர், ’தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்ற நாவலை 1936-இல் எழுதினார்.

    தலைப்பு, தாசிகளின் ஒழுக்கத்தை இழித்துரைக்கும் நாவலோ என்றோர் ஐயத்தை நமக்கு ஏற்படுத்தினாலும் நாவலின் பேசுபொருள் அதற்கு நேர்மாறானது. தாசிகளை உருவாக்கி நிலைநிறுத்தும் சமூக அமைப்பையும், அதன் பழமைவாதத்தை ஆதரித்தபடியே ஒழுக்கநெறி பேசுவோரின் போலித்தனத்தையும் தாசிகளைக்கொண்டே இந்நாவலில் கடுமையாய்ச் சாடியிருக்கின்றார் இராமாமிருதத்தம்மையார். தாசி குலத்தவரும் ஏனைய பெண்களைப் போலவே சமமான உரிமையுடன் திருமணம் செய்துகொண்டு சுய மரியாதையுடன் வாழ்வதற்கு அறைகூவல் விடுக்கின்றார் அவர். தாசிகளின் மோசவலை பற்றிப் பேசுபவர்கள் குடும்பப் பெண்களை தெய்வநிலைக்கு உயர்த்துவார்கள். நீ பரத்தமை ஒழுக்கமுடைய ஆண்மகன் எனில் பெண்ணின் கற்பைப் பற்றிப் பேச உனக்கென்ன தகுதி இருக்கின்றது என்று காட்டமாக வினா எழுப்புகின்றது இந்நாவல்.

    பெண் போராளிகளில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார். மருத்துவராகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்த அவர், 1926-இல் சென்னை மாகாணச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். சென்னை மாநகராட்சியின் முதல் பெண் துணைமேயர் (The deputy chairperson of the legislative council) என்ற சிறப்பும் அவருக்குண்டு. அகில இந்தியப் பெண்கள் அமைப்பின் தலைவராக (President of All India Women’s Conference – AIWC) 1931-இல் தேர்வானார்.

    தேவதாசி முறை ஒழிப்பு, இருதாரத் தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய மணங்களைத் தடைசெய்யும் சட்டம் போன்றவற்றை அரசு நடைமுறைப்படுத்தியதில் முத்துலட்சுமி அம்மையாரின் பங்கு முக்கியமானது.

    பெற்றோரால் கைவிடப்பட்ட அநாதைக்குழந்தைகளின் பாதுகாப்புக்கும், அவர்தம் வளமான எதிர்காலத்துக்கும் உதவும் வகையில் முத்துலட்சுமி அம்மையாரால் உருவாக்கப்பட்டதே சென்னை அடையாற்றிலுள்ள அவ்வை இல்லம். முத்துலட்சுமி அம்மையாரின் சேவைகளைப் பாராட்டி மத்திய அரசு 1956-இல் ’பத்ம பூஷண்’ விருது வழங்கி அவரைக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

    [தொடரும்]

    *****

    https://www.indiacelebrating.com/general-awareness/social-reformers-of-india/

    https://en.wikipedia.org/wiki/Savitribai_Phule

    https://en.wikipedia.org/wiki/Tarabai_Shinde

    https://en.wikipedia.org/wiki/Moovalur_Ramamirtham

    https://en.wikipedia.org/wiki/Muthulakshmi_Reddi

     

    Share
  • திருமந்திரம் கூறும் நால்வகை நிலையாமை

    ஷா. முஹம்மது அஸ்ரின்,
    முதுகலைத் தமிழ் முதலாமாண்டு,
    ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20.
    E-mail:  smdazrin1998@gmail.com.

    ********************************************************

    பதினெண் சித்தர்களுள் காலத்தால் முற்பட்ட திருமூலரால் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் பாடப்பட்டு 3000 பாடல்களைக் கொண்ட நூல், திருமந்திரம். இந்நூல் 9 தந்திரங்களைக் கொண்டுள்ளது. முதல் நான்கு தந்திரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உணர்த்துகின்றன. பின்வரும் ஐந்து தந்திரங்களும் வீடுபேறு, வீடுபேற்றுக்கான வழி, வழிபாடு, வழிபாட்டுறுதி, வாழ்வு ஆகிய ஐந்தையும் உணர்த்துகின்றன. கலிவிருத்தத்தால் பாடப்பட்ட இந்நூல் தமிழில் தோன்றிய முதல் யோக நூலாகவும் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகவும் திகழ்கிறது. சைவ சித்தாந்தத்திற்கு வித்திட்ட திருமந்திரம் கூறும் நிலையாமை குறித்த செய்திகள் இக்கட்டுரையில் ஆய்வுப் பொருளாகின்றன.

    நிலையாமை – விளக்கம்:

    நிலையாமை என்ற சொல்லுக்கு “உடலை விட்டு உயிர் பிரிந்தபின் ஆன்மாவுக்குத் துணையாக வராத உலக வாழ்விற்கு மனிதனுக்குத் துணைநின்ற பொருள்கள்” என்று பொருள் கொள்ளலாம்.  மனிதன் உயிர் வாழும் வரை துணையாக இருக்கும் நான்கு பொருள்களைத் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    யாக்கை நிலையாமை:

    திருமந்திரத்தில் யாக்கை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 187 முதல்  211 வரை இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மனிதனின் மரணத்துக்குப்பின் அவனது ஆவியுடன் வருவனவற்றையும் வராதனவற்றையும் திருமூலர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

    ”பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
    உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
    கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
    மண்டி அவருடன் வழிநட வாதே.”      (திருமந்திரம் – 188)

    என்ற பாடலில் கூரைபோல விழும் உடலில் இருந்து வெளிப்படும் ஆவியோடு, ஐம்பொறிகளைக் கொண்டியங்கிய உடலும், அவ்வுடலால் பிறந்தவர்களும், அவ்வுடலை மணந்தவர்களும்  துணையாக வரமாட்டார்கள். மாறாக அவ்வுடலால் செய்யப்பட்ட நன்னெறிகளே துணையாக வருமென்று யாக்கையின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார். மேலும்,

    ”ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
    பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு.” (திருமந்திரம் – 189)

    என்ற பாடலில் உடலை விட்டு உயிர் நீங்கினால் உயிருடன் இருந்தபோது உடலுக்கு வைத்த  பெயர் கூட நிலையாது, அவ்வுடல் பிணம் என்ற பெயரைப் பெறும் என்று திருமூலர் கூறுகிறார்.

    ”குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
    உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.”  (திருமந்திரம் – 202)

    என்ற பாடலில் உடைந்த குடத்தைக் கூட ஓடென்று வீட்டிலோர் ஓரத்தில் பல நாட்கள் வைக்கமுடியும். ஆனால், உயிரில்லாத உடலை அவ்வாறு வைக்க இயலாது என உயிரற்ற உடலின் நிலையைக் குறிப்பிட்டுள்ளார்.

    ”பால்துளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
    தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்.”  (திருமந்திரம் – 211)

    என்ற பாடலில் உயிரானது உடலைத் தோற்பையாகப் பயன்படுத்திவிட்டு தனது தொழில் முடிந்த பிறகு உணவருந்திய எச்சில் வாழையிலை போன்று தூக்கி எறிந்திடும் என்கிறார், திருமூலர்.

    செல்வம் நிலையாமை:

    திருமந்திரத்தில் செல்வம் நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 212 முதல்  220 வரை இடம்பெற்றுள்ளன. நிலையில்லாத செல்வத்தை உவா (அமாவாசை) நாளில் மறையும் நிலவோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். அப்பாடல்,

    ”இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்குந்
    துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா. ” (திருமந்திரம் – 213)

    உலக வாழ்வில் நல்வழிக்குப் பயன்படுத்தாமல் சேர்த்து வைத்த செல்வத்தை மறுமை வாழ்வுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற கருத்தை பின்வரும் பாடலில் கூறுகிறார்.

    ”ஈட்டிய தேன்பூ மணங்கண்  டிரதமும்
    கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
    ஓட்டித் துரந்திட் டதுவழி யார்கொளக்
    காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.” (திருமந்திரம் – 215) 

    மணம் வாய்ந்த பூக்களைத் தேடி அவற்றிலிருந்து தேனீக்கள் தேனைச் சேர்த்துத் தமது கூட்டில் வைக்கும். அத்தேனைப் பல சூழ்ச்சிகள் செய்து மனிதன் கைப்பற்றுகிறான். அதுபோல, மனிதன் அரும்பாடுபட்டுச் செல்வத்தைச் சேர்த்தாலும் அவன் உயிரோடு இருக்கும்போதே அது பிறரால் கவரப்படுகிறது என செல்வத்தின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார்.

    ”மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
    கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்.”  (திருமந்திரம் – 217) 

    முன்னர், செல்வத்தைத் தேனீ சேர்க்கும் தேனுக்கு ஒப்பாகக் கூறிய திருமூலர் இப்பாடலில் நீரில் செல்லும் கலத்திற்கு (படகுக்கு) ஒப்பாகக் கூறியுள்ளார். செல்வமும் செல்வத்தால் பெறப்படுகிற பொருள்களும் நீரில் செல்லும் மரக்கலம் கவிழ்வது போல அழிந்தொழியும் எனச் செல்வத்தின் நிலையாமையைக் குறித்துப் பாடுயுள்ளார்.

    இளமை நிலையாமை:

    திருமந்திரத்தில் இளமை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 221 முதல்  228 வரை இடம்பெற்றுள்ளன. இளமை என்பது மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்வின் பாதையை நிர்ணயம் செய்யும் பருவம். மனிதனின் உடல் உறுதியோடு காணப்படும் பருவம். அப்பருவத்தின் நிலையாமையைத் திருமூலர்,

    ” கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
    விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்.”     (திருமந்திரம் – 221)

    என்ற பாடலில் சூரியன் கிழக்கில் உதயமாகி (பிறந்து) மேற்கில் மறையும் வரையுள்ள (இறப்பு) இடைப்பட்ட கால அளவே மனிதனின் இளமை என்று குறிப்பிடுகிறார். மேலும்,

    ” தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை.”  (திருமந்திரம் – 223)

    என்ற பாடலில் இளமை தேய்ந்து ஒழியக்கூடியது எனப் பாடியுள்ளார்.

    உயிர் நிலையாமை:

    திருமந்திரத்தில் உயிர் நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 229 முதல்  238 வரை இடம்பெற்றுள்ளன. உடல் (யாக்கை), செல்வம், இளமை ஆகியவற்றை முதலில் கூறிய திருமூலர் உயிரின் நிலையாமையை இறுதியாகக் குறிப்பிடுகிறார். உடலையும் செல்வத்தையும் இளமையையும் உயிரில்லாமல் அனுபவிக்க இயலாது. உயிரின் நிலையாமையைக் குறித்து,

    ” தழைக்கின்ற செந்தளிர் தண்மலர்க் கொம்பில்
    இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்.”    (திருமந்திரம் – 229)

    என்ற பாடலில் பல கிளைகளைக் கொண்ட மரத்திலிருந்து பழுப்புற்று உதிரும் இலை போலப் பல உறுப்புகளைக் கொண்ட உடலை விட்டு உயிர் பிரிந்துவிடும் எனக் கூறுகிறார்.

    முடிவுரை:

    இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் 70 வயதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் வாழப்போகும் சில ஆண்டுகளாவது உயிரைக் கொண்டு இயங்குகின்ற உடலாலோ, செல்வத்தாலோ, இளமைத் துடிப்பாலோ பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமையை விளைவிக்காது வாழ்வதற்குத் திருமூலரின் இப்பாடல்கள் துணைபுரியும்.

    துணைநின்ற நூல்கள்:

    1. திருமூல நாயனார் – திருமந்திரம், திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை – 01.
    2. தமிழ் இலக்கிய வரலாறு, ஜமால் முகமது கல்லூரி வெளியீடு, திருச்சி – 20.

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 22

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

    குறள் 211:

    கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
    டென்னாற்றுங் கொல்லோ உலகு

    இந்த ஒலகத்துல நாம மழைய தருத மேகத்துக்கு என்ன செய்யுதோம். அந்த மழை மாதிரி உள்ளவங்க பதிலுக்கு என்ன கெடைக்கும்னு எதிர்பாத்து ஒதவி செய்யமாட்டாங்க.

    குறள் 212:

    தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு

    ஒருத்தன் முயற்சி செஞ்சு சம்பாதிச்ச பொருளெல்லாம் தேவைப்படுதவங்களுக்கு ஒதவி செய்யத்தான்.

    குறள் 213:

    புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
    ஒப்புரவின் நல்ல பிற

    தேவ ஒலகத்திலயும் , இந்த பூமிலயும் ஒழைக்க முடியாம இருக்கவங்களுக்கு ஒதவுத கொணத்த மாதிரி வேற நல்ல செயல பாக்குதது சங்கடந்தான்.

    குறள் 214:

    ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்

    ஒழைக்க முடியாதவங்களுக்கு ஒதவி செய்யுதவன் தான் உசிரோட வாழுதவன் மத்தவன் செத்தவனுக்கு சமானம்.

    குறள் 215:

    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு

    ஒலகம் நல்லா வாழணும்னு நெனைக்க பெருமக்களோட சொத்து எல்லாருக்கும் உபயோகப்படுத நீர் நெறஞ்ச ஊருணிக்கு சமானம்.

    குறள் 216:

    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின்

    ஈர நெஞ்சம்இருக்குதவன் கிட்ட சேருத சொத்து ஊருக்கு நடுவுல இருக்க மரம் பழுத்து குலுங்குதது போல எல்லாருக்கு ஒதவியா இருக்கும்.

    குறள் 217:

    மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின்

    மத்தவங்களுக்கு ஒதவுத குணமுள்ள பெரிய மனுசன்கிட்ட சொத்து சேந்திச்சின்னா அது ஒரு மரத்தோட எல்லா பாகமும் மருந்தா பலன் தருதது போல ஆவும்.

    குறள் 218:

    இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
    கடனறி காட்சி யவர்

    செய்ய வேண்டிய கடமைய உணந்த ஒசந்த அறிவாளிங்க தங்கிட்ட கொடுக்குததுக்கு ஒண்ணுமில்லன்னாலும் ஒதவி செய்ய தயங்க மாட்டாங்க.

    குறள் 219:

    நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
    செய்யா தமைகலா வாறு

    மத்தவங்களுக்கு ஒதவுதையே தங்கடமையா செய்யுத ஒருத்தன் ஏழையாயிட்டான்னு அறிஞ்சுகிடதது அவனால பொறத்தியாருக்கு ஒதவ முடியாம போகுத நெலமய வச்சிதான்.

    குறள் 220:

    ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
    விற்றுக்கோள் தக்க துடைத்து

    இருக்குதத மத்தவங்களுக்கு கொடுத்து ஒதவினா கெடுதல் வரும்னு தெரிஞ்சிச்சினா நம்மள வித்தாவது அந்த கெடுதல வாங்குத அளவுக்கு அது தகுதியுள்ளது.

    Share
  • சுவாமி விபுலானந்த அடிகளாரின் பன்முகப் புலமையும் வாய்க்கப்பெற்ற சந்தர்ப்பங்களும்

    -சந்திரகௌரி சிவபாலன் (கௌசி)

    காலங்காலமாய் விரைகின்ற பொழுதுகளிலே சில அற்புதமான அவதாரங்கள் தோன்றித் துளங்கி மறைந்து போகின்றனர். ஆனால், காலம் காலமாய் அவர்கள் ஆற்றிய சேவைகள் அவர்களை இறவாப் பேறு பெற்ற பெரியார்களாக உலக அரங்கிலே வாழ வைக்கின்றன. மகத்தான மக்கட் பிறப்பிலே இறைவனால், பார்த்துப் பார்த்து நுண்ணறிவை ஊட்டிப் படைக்கப்பட்ட படைப்புக்களே கிழக்கின் ஜோதி விபுலானந்த அடிகளார் போன்ற துறவிகள்.

                    அறிவுப்பசி மட்டுமன்றி அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்து, சாதிமத பேதமின்றி ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, சமூகத்துறவியாக, சமூகச்சீர்திருத்தவாதியாக, சமயம், மொழி, கல்வி, கலை என ஐம்பது ஆண்டுகளுக்குள்ளேயே பல பக்க சாதனைகள் புரிந்து,  வாழ்ந்து உலக வாழ்க்கையைத் துறந்த அடிகளார் அவர்களின் வாழ்க்கையும், அதற்கான சந்தர்ப்பங்கள் அவருக்குக் கிடைத்தமையும், அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டமையும், கற்றதைக் கொண்டு தன்னை விளங்கச் செய்தமையும், காலம் காலமாய் அழியாப் புகழை தேடிக் கொண்டமையும் ஆச்சரியத்தில் ஆற்றும் விடயங்களாகக் காணப்படுகின்றன. கற்பனை பண்ணிப் பார்க்கமுடியாத அளவிற்கு பிரமாண்டமாக என் மனக்கண்ணில் தோன்றுகின்றார்.

                    தமிழர்களுக்கு விபுலானந்த அடிகளார் அடையாளம் என்றால், விபுலானந்த அடிகளாருக்கு மட்டக்களப்பு மண் அடையாளமாகக் காணப்படுகின்றது. திருகோணமலை, அம்பாறை, பொலனறுவை ஆகிய மாவட்டங்களை எல்லையாகக் கொண்ட மீன்பாடும் தேனாடு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திலே காரைதீவு என்னும் பிரதேசத்திலேயே அடிகளார் அவதரித்தார். கிழக்குத் திசையிலே வங்கக்கடல் காட்சியளிக்க மேற்குத் திசையிலே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளிகள் பச்சைப்பசேலென்று படர்ந்து காணப்பட தென்றல் இசையெழுப்பும் தென்னைமரச் சோலைகளும், அல்லி, ஆம்பல், கலைமகள் வீற்றிருக்கும் கண்கவரும் தாமரைகள், இதழ் விரிந்து அழைத்திருக்கும் அழகுத் தடாகங்கள், மா,பலா, கமுகுத் தோட்டங்களும் அமையப்பெற்று காரைதீவு மகள் காட்சியளிப்பார். இயற்கை எழில் பொங்கும், இயல்பாகவே கவித்துவத்தை ஊட்டுகின்ற நிலம் அடிகளாரின் இயல், இசை அறிவுக்கு அடித்தளமிட்டது.

    இதனையே கவிஞர் பரஹம்ஸதாசர் ~~கமுகு, மா, கதலி தென்னை, கன்னல் நெற் தென்னலொடு திமு திமுவெனச் செழுந்தமிழ் வளரச் செய்யும் அமைதி காரேறு தீவு அம்புவிக்கும் உவந்தளித்த தமிழ்மணி விபுலானந்தன் என்று பாராட்டுகின்றார்.

                    அடிகளார் அவர்களுக்குத் தம்பிப்பிள்ளை என்னும் நாமத்தையே பெற்றோர் சூட்டினர். இளமையில் நோய்வாய்ப்பட்டதனால் கதிர்காமம் கொண்டு சென்று அவருக்கு மயில்வாகனன் என்னும் நாமம் சூட்டப்பட்டது. எப்பொழுதும் சாந்தமாகவே காணப்படும் இவரை, மயில்குஞ்சு என்று இளமையிலே அனைவரும் அன்புடன் அழைப்பார்கள். 1922 ல் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருந்த இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து பிரபோதசைதன்யர் என்னும் பிரமச்சரிய ஆச்சிரமப் பெயர் சூட்டப்பட்டார்.  1924 ஆம் ஆண்டு பௌர்ணமி சித்திரை தீட்சையின் பின்பே விபுலானந்த அடிகளார் என்னும் நாமம் சூட்டப்பட்டது. விபுலம் என்றால், அறிவு. ஆனந்தம் என்றால், மகிழ்விப்பவர். அறிவினால் உலகை மகிழ்விப்பவர் என்னும் அதி அற்புதமான கருத்தமைந்த பொருத்தமான பெயர் இவருக்குச் சூட்டப்பட்டது. இவர் குணம் நாடி, குறிப்பிட்ட நாமங்கள் அவரை வந்து அமைந்தாலும் காரணப் பெயராக அமையும் விபுலானந்த அடிகளார் என்னும் நாமமே உலகலாவிய ரீதியில் நின்று நிலைக்கின்றது.

                       ஒருமுறைதான் படிப்பார் உள்ளத்தில் பதித்துவிடுவார். இவர் அறிவுத் திறமை மேலும் வெளிப்பட இவரின் தந்தையார் சாமித்தம்பி அவர்கள் வீட்டிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பெரியபுராணவசனம், பஞ்சதந்திரம், வினோதரசமஞ்சரி, வில்லிபாரதம், நைடதம், கந்தபுராணம், காசிகாண்டம், முதலிய நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தந்தையாரால் தரப்பட்டது. நுனிப்புல் மேய்வது போலன்றி ஒவ்வொன்றையும் முழுவதுமாகக் கற்றாலன்றி மற்றைய நூல் தரப்படமாட்டாது. துறைபோக ஒன்று கற்றதன் பின்பே மற்றைய நூல் தரப்படும் என்னும் தந்தையாரின் கட்டளையின் படியே தான் கற்றதாக அடிகளார் கூறியுள்ளார். பொறுப்பான தந்தை அமையப்பெற்றதும் அடிகளாருக்கு ஆரோக்கியமாகவே பட்டது. அவர் வழிகாட்டலில் கற்றகல்வி நுண்மாண் நுழைபுலம் போல் அறிவுடையவராக்கியது.

                       இவர் வடமொழி, இலத்தின், கிரேக்கம், பாளி, சிங்களம், ஆங்கிலம், வங்காளம், அரபு ஆகிய மொழிகளில் கொண்ட ஆழ்ந்த அறிவே ஏனைய இலக்கியங்களுடன் தமிழ்மொழியை ஒப்பிட்டுத் தமிழின் இன்பம் நுகரக்கூடியதாக இருந்ததுடன் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் ஒன்றாகவே ஆய்வுசெய்த முதல் வித்தகராகவும் திகழக்கூடியதாகவும் இருந்தது.

    கிரேக்க இலக்கியங்களை ஒப்பிட்டு சிறப்பான நூல்கள் எழுதியுள்ளார். மதங்கசூளாமணி என்னும் நூல் தமிழ் நாடகம் பற்றிய ஆய்வுப் பெட்டகமாகத் திகழ்கின்றது. தரங்கயனாரின் தசரூபத என்னும் வடமொழி நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வடமொழி நாடகம் எப்படி இருக்கவேண்டுமென்று  அதிலுள்ள எடுத்துக்காட்டியல் என்னும் பகுதியில் விளக்கியுள்ளார். செக்ஸ்பியர் நாடகங்களுடன் ஒப்பிட்டு மேற்கு நாட்டு நாடகங்களில் நாடக உறுப்புக்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதை விளக்குகின்றார். இவ்வாறு செக்ஸ்பியர் நாடகங்களுடன் ஒப்பிட்டு தமிழ் நாடகங்களுடன் ஆய்வு செய்ய இவருக்கு ஆங்கில அறிவு மேம்பட்டுக் காணப்பட்டது. இவ்வாறு ஆங்கில அறிவு மேம்பட மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி என்னும் ஆங்கிலப் பாடசாலை மெதடிஸ்த மிஷனரிமாரும் கத்தோலிக்கக் குருமாரும் அடியெடுத்துக் கொடுத்தனர். காலைப்பொழுது பாடசாலைப் பாடங்கள், மாலைப்பொழுது பாரத வசனங்கள் கற்பது என பழகிய பழக்கமானது பின் நாளில் தமிழும் ஆங்கிலமும் ஒன்றாகக் கற்க இலகுவாக இருந்தது. அதேபோல் கணிதத்தை இவர் புனித மைக்கேல் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் இருந்த பிரெஞ்சு அதிபர் வண.பொனல் என்பவரிடம் கற்றார். இது இவரது கணிதத்திறமைக்கு அடிகோலாக அமைந்ததுடன், யாழ்நூல் ஆராய்ச்சிக்குக் கணிதத் திறமையும் காரணமாக அமைந்தது.

                     இசைமேல் ஆர்வம் தோன்ற மட்டக்களப்பு வாவியிலே பூரணநிலவு பொங்கிப் பூரிக்கும் பொழுதினிலே அங்கு பொங்கி எழும் நீரரமகளிர் காந்தர்வ இசையில் களிப்புற ஆழக்கடல் நோக்கி வாவியிலே பயணம் செய்வார். அவ்விசை கேட்டு மகிழ்ந்தின்புறுவார்.

    அதனை அடிகளார் வர்ணிக்கும் பாங்கை நோக்குவோம்

    அஞ்சியிறை புள்ளொலியும் ஆன்கன்றும் கழுத்தில்
    அணிமணியின் இன்னொலியும் அடங்கியபின் நகரார்
    பஞ்சியைந்த அணிசேரும் இடையாமப் பொழுதில்
    பாணனொடும் தோணியிசை படர்ந்திரனோர் புலவன்
    தேனிலவு மலர்பொழில் சிறைவந்து துயில
    செழுந்தரங்கத் தீம்புனலில் நண்டினங்கள் துயில
    மீனலவன் சிலவந்து விண்ணிலவன் துயில
    விளங்கு மட்டு நீர்நிலையில் எழுந்ததொரு நாதம்

    அதுபோல், ஆண்டுதோறும் ஆனித்திங்களிலே மட்டக்களப்பு மாநிலமெங்கும் காணப்படும் கண்ணகி அம்மன் ஆலயங்களில் பாடப்படும் பாடல்களும் சிலப்பதிகார பாடல்களின் சிலம்பொலிகளும் விபுலானந்த அடிகளாரின் இசை ஆராய்ச்சிக்கு அடிமனது ஆரம்பக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.   விஞ்ஞானத்தையும் தமிழையும் ஒன்றாகக் காணும் திறமை அடிகளார்க்கு இருந்ததனால்,  கணிதம், பௌதிக விஞ்ஞானம், தமிழ் இசை அறிவு கலந்து இவர் யாத்து, 1947ல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் வெளியீடு செய்யப்பட்ட யாழ்நூலானது அரங்கேறக் காரணம் பற்றி அவரே ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். ~~எந்த நூலை வாசித்தாலும் தேனாகத் தித்திக்கவில்லை சிலப்பதிகாரமே தேனாகத் தித்தித்தது|| எனத் தன் வாயாலேயே எடுத்துரைத்திருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையை ஆராய்ந்தார். சிலப்பதிகாரத்தின் உரையில்லாத பகுதிகளுக்கு உரைதேடப் புகுந்த ஆராய்ச்சியின் பயனும், மாதவியும் கோவலனும் கடற்கரையிலே இருந்து மாறிமாறி மீட்டிய யாழ் இசையும் இவர் கருத்தைக் கவர்ந்தது. இவ் யாழை யாம் ஏன் மீண்டும் பெற முடியாது என்று சிந்தித்தார். வங்கக்கடலன்னை கொண்டு சென்ற முளரியாழ், சுருதிவீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டிவீணை, போன்றவற்றை அடிகளார் பழந்தமிழ் நூல்களில் கற்றவற்றைக் கொண்டு மீண்டும் 23 ஆண்டுகள் உழைத்து உலகிற்கு செய்தளித்தமை கண்டு இசைத்தமிழ் அன்னை ஆச்சரியத்தில் அகலக்கண் விரித்தாள்.

                 யாழ் கருவியை பெண்ணின் 7 வகைப் பருவத்துடன் ஒப்பிட்டு அடிகளார் வர்ணித்திருக்கும் பாங்கு இன்புறத்தக்கது. ~~சரித்திரகால எல்லைக்கெட்டாத காலத்திலே வில் யாழெனக் குழவியாயுதித்து மழலைச்சொற்பேசி சீறியாழ் என்னும் பேதைப் பருவமெய்தி, பாணனொடும் பாடினியொடும் நாடெங்கும் திரிந்து ஏழைகளும் இதயம் களிப்பெய்த இன்சொல் கூறிப் பின் பேரியாழ் என்னும் பெயரோடு பெதும்பைப் பருவமெய்திப் பெரும் பாணரோடு சென்று குறுநில மன்னரும், முடிமன்னரும், தமிழ்ப்புலவரும், கொடைவள்ளல்களும் கேட்டு வியப்பெய்தும் வண்ணம் நயம்பட உரைபகர்ந்து அதன்பின் மங்கைப்பருவமெய்தி அப்பருவத்திற்கேற்ப புதிய ஆடையும் அணிகலன்களும் பூண்டு நாடக அரங்கத்திலே திறமை காட்டி மடந்தைப் பருவம் வந்தெய்தலும், திருநீலகண்ட பெரும்பாணரோடும், மதங்கசூளாமணியாரோடும் அம்மையப்பர் உறைகின்ற திருக்கோயில்கள் பலவற்றை வலம் வந்து தெய்வ இசையினாலே அன்பருள்ளத்தினை உருக்கி, முத்தமிழ் வித்தகராற் பாராட்டப்பட்டு அரிவைப் பருவம் வந்து எய்துதலும் அரசிளங்குமரிகளுக்கு  இன்னுயிர்ப் பாங்காகி அவர்க்கேற்ற தலைவரை அவர்பாற் சேர்த்துச் சீரும் சிறப்பும் எய்தி இன்று யாழ் என்னும் மொழி நங்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினாள்|| என்று எடுத்துரைத்தார். மீண்டும் உயிர் பெற வைத்தார்.

               அடிகளாரின் சமூகசேவைக்கு வாலிபப் பருவத்தில் அவர் பயின்ற படைப்பயிற்சி உரமெடுத்துக் கொடுத்தது. ஐரோப்பிய மகாயுத்த காலத்திலே தரைப்படையில் சேர்ந்து குதிரையேற்றம், துப்பாக்கிப் பிரயோகம், முதலிய படைப்பயிற்சிகள் பெற்றார். கடற்;கரையில் காவல் இருந்து எதிரிகளை நாட்டுக்குள் புகவிடாமல் காத்தார். சமூகத்தொண்டு தீண்டாமை ஒழிப்பு, சமயத்தொண்டு இவை எல்லாம் இவரை ஒரு வீரத் துறவியாகவே காட்டுகிறன.

                     யோக சுவாமிகளின் தொடர்பே இவருக்கு ஆன்மீக வளர்ச்சிக்குத் துணையாகத் திகழ்ந்தது.

                    பாரதிமேல் கொண்ட தீராத நாட்டம், தமிழை நவீனப்படுத்தும் பண்பு, ஒப்பியல் கல்வி இவையே பாரதியை உலகுக்கு வெளிப்படுத்த உதவியாக இருந்தன. பாரதியைப் பித்தன் என்றும், கஞ்சாக்கவி என்றும், அவர் பாடல்கள் வீண் உரைநடையென்றும், தூற்றிய தமிழறிஞர்களைக்  கற்றறிந்தார் ஏற்றுவது கலித்தொகை மட்டுமன்று கண்ணன் பாட்டுமே என்று கூறிப் புரியவைத்தவர் விபுலானந்த அடிகளாரே என்பது வெள்ளிடைமலை. “தமிழர்களின் பண்பாட்டை பாரதியார் கண்களைக் கொண்டு பார்க்க வேண்டும்|| என்று பாரதியைப் பெருமைப்படுத்தினார். பாரதி பெருமையை உலகுக்குணர்த்த முதற்காரணம் அடிகளார் என்றால், அது மிகையில்லை. இது மறைக்கப்பட்ட உண்மையுமாகின்றது.

                    அடிகளார் தமிழிசை  சம்பந்தமாக நிகழ்த்திய சொற்பொழிவுகளும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இப்பொழுது நூல்களாக வெளிவந்துள்ளன. எதையும் ஆழ்ந்து நோக்கும் அவர் சிறப்பை நடராசவடிவம் என்னும் நூல் விளக்குகின்றது. ஆரியமும் தமிழும் வல்ல பண்டிதமணியாருக்கு ஆங்கிலமொழிக் கவிநயத்தை எடுத்துக்காட்டக் கருதி எழுதப்பட்ட பாட்டுடை உரைத்தொடரே ஆங்கிலவாணி என்னும் கட்டுரையாகும். அடிகளாரின் கற்பனை வளத்தினையும், கவித்துவத்தினையும் அவரால் எழுதப்பட்ட தனிப்பாடல்கள், தில்லைமாநகர் திருவமர்மார்பன் திருக்கோயிற்காட்சி,  கங்கையில் விடுத்த ஓலை, நீரரமகளிர் இன்னிசைப்பாடல், மொழிபெயர்ப்புப் பாடல்கள் போன்றன மெய்ப்பிக்கின்றன.

                 முத்தமிழ் வித்தகர், சென்னை இராமகிருஸ்ண மடத்துறவி, அண்ணாமலைப் பல்கலைக்கழக முதல் பேராசிரியர், கரந்தை தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவர் தமிழவேள் உமாமகேஸ்வரனாரின் ஆருயிர்த் தோழர், பன்மொழிப் புலமையாளர் எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகும் அறிவுஞானம் பெற்ற அடிகளாரின் நினைவுநாளை இலங்கைஅரசு அகில இலங்கை தமிழ்மொழி தினமாக பிரகடனப்படுத்தி கௌரவித்தது என்பது ஆச்சரியப்படும் விடயமல்ல.

                    முற்றுமுழுதான அறிவுத் திறனும், அயராத உழைப்பும் தமிழ், இலக்கியம், சமயம், கலை, சமூக நாட்டுப்பணிகளும் இவர் உள்ளத்தில் ஊற்றாய் ஊறிக்கொண்டிருந்தமையே இறவாப்புகழ் பெற்று என்றும் உலகமெலாம் போற்றப்படும் உத்தம துறவியாக, வித்தகராக, அடிகளார் திகழ்வதற்கு காரணமாகின்றன. கலியுக அகத்தியர், புதுமைக்கபிலன், குருபரம்பரையின் குலவிளக்கு, வீரத்துறவி இவ்வாறாக அறிஞர்களால் போற்றப்படும் அடிகளார் பிறந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்னும் போது எனக்குள்ளும் மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகிக்கின்றது.

    சந்திரகௌரி சிவபாலன் (கௌசி)
    B.A. Dip.in.EDu (Cey)
    சோலிங்கன்
    ஜேர்மனி

    Share
  • படக்கவிதைப் போட்டி – 204

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிரேம் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 203-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    தன் கலைத்திறனை வீண் செய்யாது பிரவீண் நேர்த்தியாக எடுத்திருக்கும் இந்தக் கறுப்புவெள்ளைப் புகைப்படத்தை படக்கவிதைப் போட்டி 203க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    முதுகுச் சுமையோடு பவ்யமாய்க் கண்மூடிநிற்கும் இவ் இளைஞனின் நெற்றியைப் பற்றி வெற்றித் திலகமிடும் வளைக்கரங்கள் யாருடையவை எனும் சிந்தனை நம் மனத்தில் வட்டமடிக்கின்றது. வழக்கம்போலவே விடைதேடும் வேலையை வித்தகக் கவிகளிடம் விட்டுவிட்டு நாம் விலகி நிற்போம்!

    *****

    ”கனவிலும் நனவிலும் சுலபமாய்ப் பணக்காரன் ஆவதெப்படி என்பதையே மனித மனம் சிந்தித்திருப்பதையும் அதற்கு உதவ இறைக்கே முறையற்ற வகையில் கையூட்டளிக்கப் பேரம் பேசுவதையும் அறிந்த ஆண்டவனோ கோயிலைவிட்டே வெளிநடப்புச் செய்கின்றான்” என்ற நற்சிந்தனையைத் தன் கவிதையில் பதிவு செய்திருக்கின்றார் நாங்குநேரி வாசஸ்ரீ. 

    கடவுளின் வெளிநடப்பு

    எங்கு வந்தாய் மகனே
    எதனைத் தொலைத்தாய்
    வாழ்க்கைத் தத்துவத்தை உணராது
    விழுந்துவிழுந்து தொழுகின்றாய்
    விடியலில் குளித்து
    விரும்பி உண்ணா நோன்பிருந்து
    நூலைக் கையில் கட்டிக்கொண்டு
    நூறுரூபாய் காணிக்கையிட்டு
    எளிதாய் பணக்காரனாகும் வழியை
    என்னிடமே கேட்கின்றாயே
    அடுத்தவனை ஏமாற்றாது
    அகன்ற இவ்வுலகில் முன்னேற
    ஒருமுறை உழைத்துப்பார்
    ஓராயிரம் கதவுகள் திறக்கும்
    கனவுகலைந்து எழுந்த மனிதன்
    காய்கறிக்கடை திறக்கத் தீர்மானித்தான்
    காலையில் குளித்துக் கிளம்பி
    இதோ கடவுளைக் காண
    இங்கே மீண்டும் வந்துள்ளான்
    அப்படியே செய்கிறேன் நீ சொன்னபடி
    அதிகவருமானம் கிடைக்கச்செய்தால்
    அதில் பத்துசதவிகிதம் உனக்கு
    கண் திறந்தது பார்த்த போது
    கடவுள் நின்றிருந்த இடத்தில்
    அவருக்குப் பதில் வாசகம்
    திருந்தாத மாந்தர் நீர்
    தீர்வுசொன்ன எனக்கே கையூட்டா
    வேதனை மிகுதியால் நான்
    வெளிநடப்பு செய்கின்றேன்.

    *****

    ”இறைவா! உனை வேண்டிநின்ற வேளையில் எனக்காக மந்திரம் சொல்லி நெற்றியில் பொட்டிட்டு வாழ்த்திநின்ற உருவத்தில் உன்னைக் கண்டேனே! அன்பே சிவமென்று உணர்ந்து கொண்டேனே” என்று நெகிழும் இளைஞனை நமக்குக் காட்டுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

    நம்பிக்கை

    கணனி சுமந்து வந்தேன்
    உன் சன்னதிக்கு,
    கடவுள் உன்னை
    நெஞ்சில் சுமந்து வந்தேன்
    நித்தம் என்னைக்
    காத்து நிற்பாய் என்ற
    நம்பிக்கையுடன்!

    வேலைக்குச் செல்லும் முன்னே
    இந்நாள் நன்னாளாய் அமையக்
    கண்மூடி வேண்டி நின்றேன்
    பிறருக்குத் தீங்கு நினைக்காது
    உன் சுமையை நீயே சுமந்து
    முயற்சி செய்து முன்னேறு
    எந்நாளும் நன்னாளாய் மாறிடுமே
    என்று நீ சொல்ல உணர்ந்தேன்

    கையேந்தி நின்றேன்
    உன் வாசல் முன்னே
    விழிகள் மூடி
    வழிகாட்டிட வேண்டி நின்றேன்
    நெற்றிப்பொட்டில் போட்டு வைத்து
    வேண்டி நின்ற அத்தனையும்
    உனக்குக் கிடைக்கட்டும் என்று
    வாழ்த்தி நின்ற உருவம் கண்டேன்

    வயதில் மூத்த மனிதராய்
    எனக்காக மந்திரம் சொல்லி
    நான் நினைத்ததெல்லாம்
    கிடைக்க வேண்டி
    வாழ்த்தி நின்ற அவர்
    கண்களில் கண்டேன்
    அன்பே சிவம் என்று!

    கல்லாய் நீ இருந்தாலும்
    கடவுள் என்று நம்பி
    கண் மூடி நின்றேன்
    என் மனக்கண்ணைத் திறந்தாயே
    காணும் சக மனிதன் உருவில்
    கடவுளைக் காணும்
    அருள் எனக்குத் தந்தாயே!

    *****

    ”கல்லைக் கடவுளாய்க் காண்பதும், அர்ச்சகர் சொல்லை ஆசியாய் ஏற்பதும் நம் நம்பிக்கையே!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நம்பிக்கை…

    கல்லைக் கடவுள் சிலையாக்கி
    கோவில் கட்டினோம் நிலையாக்க,
    எல்லை யில்லா அருள்பெறவே
    எடுத்துக் கருவறை வைத்ததையே
    எல்லா நாளும் பூசைசெய்ய
    ஏற்க வைத்தோம் அர்ச்சகரை,
    கல்லில் கடவுள் நம்பிக்கைதான்
    கோவில் அர்ச்சகர் ஆசியுமே…!

    *****

    ”இலக்கினை எட்டுதற்கு இறையிடம் தஞ்சமாகு; தீய எண்ணங்களைக் களையெடுத்து நல்லனவற்றை முளைக்கவைத்தால் முன்னேற்றம் தடைப்படாது” என்ற நல்ல கருத்தைத் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    திலமிட்ட நெற்றியில் திரளான சிந்தனைகள்..!

    உலகாளும் இறையி டத்தில்
    ……………ஓர்வரமா வேண்டு கின்றீர்.?
    பலவரத்தை வேண்டி னாலும்
    ……………பகவானும் கொடுத்த ருள்வான்.!
    திலகமிட்ட நெற்றிக் குள்ளே
    ……………திரண்டுவரும் சிந்தை கொண்டு..
    சிலகாலம் பொறுத்தி ருந்தால்
    ……………சிலவரலாம் நல்ல தாக.!

    அலவுகின்ற மனக்கு ழப்பம்
    ……………அமைதியாகும் ஆல யத்தில்.!
    கலங்குகின்ற மனதை என்றும்
    ……………கடவுளுமே தெளிய வைப்பான்.!
    இலக்கினைநீ எட்டு தற்கு
    ……………இறைவனிடம் தஞ்ச மாகு.!
    உலகத்தில் நல்ல வற்றை
    ……………ஒருபோதும் ஒதுக்க வேண்டாம்.!

    களையெடுக்கும் தீய வற்றைக்
    ……………கடமையென்று கொண்டு விட்டால்.!
    முளைகொண்டு எழுநல் எண்ணம்
    ……………முன்னேறும் தடைப்ப டாது.!
    விளைநிலமாம் வளரும் சிந்தை.!
    ……………விதைக்கவேண்டும் நல்ல தையே.!
    இளைஞராக இருக்கும் போதே
    ……………இவையெல்லாம் தேவை அன்றோ.!

    *****

    ”விரிவானில் இலத்திரனியல் பொறிகளுடன் நடக்கும் மரண விளையாட்டான போரினை நேர்த்தியாய் விவரித்து, வென்றால் வெற்றிப் புகழ்மாலை; (மேலுலகம்) சென்றால் புகழொடு பூமாலை” என்று தன் சுந்தரக் கவிச் சொற்களால் சிந்தை கவர்கின்றார் திரு. யாழ். பாஸ்கரன்.

    வெற்றித் திலகம் நெற்றியில் இட்டு
    வென்று வா மகனே சென்று என்று
    வெஞ்சமர்களம் காண வழி அனுப்பும்
    நெஞ்சுரம் கெண்டவீரத்தாயவள் வாழி வாழி

    ஈன்ற தாய் அவள் இட்ட கட்டளைக்கு
    இம்மியளவும் மறுப்பு இல்லை
    இனி பொறுப்பதற்கு நேரமில்லை
    இப்போதே எடு வாளை என்று புறப்பட்ட வீரன் வாழி வாழி

    சமர்க்களம் என்ன சாப்பாட்டுப் பந்தியா
    சம்மணம் இட்டு அமர்ந்து உண்டு களிக்க?
    சாவு ஈவு இரக்கமின்றி விளையாடும்
    சதிராட்டத் திடல் சற்றே அயர்ந்தால் பறந்திடுமுயிர்

    ஈட்டி முனை முன் மார்பு காட்டும் போர்முனை அல்ல இது
    இலத்திரனியல் பொறிகளுடன் ஒரு மரண விளையாட்டு
    எறிகணைகள் சீறிச் சிரித்திடும்
    ஏவுகணைகள் மாறி மாறி மறித்திடும்

    விரி வானில் திரிகின்ற வான்கலங்கள்
    வெறிகொண்டு திரிகொளுத்தி வீசி எறிந்த
    வெடிகுண்டால் விண் அதிரும் மண் நடுங்கும்
    வெடித்துச் சிதறியது குண்டுகள் மட்டும் அல்ல அமைதியும் தான்!

    வென்றால் வெற்றிப் புகழ்மாலை
    வீழ்ந்தால் புகழொடு பூமாலை
    வென்றாலும் சென்றாலும் வீரனுக்கு
    ஈன்ற தாய்நாடு காப்பதே முதல் வேலை

    பைந்தமிழ்ச் சொல்லெடுத்து நல்ல பாமாலை தொடுத்திருக்கும் கவி வலவர்களுக்கு என் பாராட்டு!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தேர்ந்தெடுத்திருப்பது…

    தாய் மனம்!

    பெற்றவள் விட்டுச்சென்ற
    முதல் வருடத் திதி!

    பிண்டங்கள் கரைத்து
    பிறவியும் வெறுத்து
    சாத்திரங்கள் முடித்து
    கண்ணீரும் துடைத்துக்
    கோயிலினுள் சென்றேன்

    கண்கள் மூடி
    மௌன மொழியினில்
    கதறி அழுகையில்

    தெய்வத்தின் திசையிலிருந்து
    திலகம் அணிவித்தாள்
    எவளோ ஒருத்தி…!

    அக்கணமே
    உணர்ந்தேன் நான்….
    கருவறை கொண்டவை
    எல்லாம் கோயில்கள்தான்!!

    ”மறைந்த அன்னைக்குத் திதி முடித்துக் கோயில் கருவறையில் அன்னையின் நினைவோடு நின்றவேளையில் திலகமணிவித்த மாதொருத்தி எனக்கு உணர்த்தினாள்…கருவறை கொண்டவை அனைத்துமே கோயில்கள்தாம்!” எனத் தெளிவுறும் இளைஞனை கண்முன் நிறுத்தி நம் அகங் குழைத்திருக்கும் திருமிகு. காந்திமதி கண்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

     

     

    Share
  • (Peer Reviewed) பாலக்காடு வட்டார முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள்

    முனைவர் த. கவிதா,
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை மற்றும் ஆய்வு மையம்,
    அரசுக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு,
    கேரளா – 678104.
    மின்னஞ்சல்: kavithavictoria@gmail.com
    பாலக்காடு வட்டார முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள்

    உலக நாகரிகங்களுள் பழைமை மிக்க நாகரிகமாக விளங்குவது,  தமிழ் நாகரிகம். அந்த நாகரிகத்திற்குரிய  மக்கட் தொகுதியினர்  ஒரு காலத்தில் பாரதம் முழுக்கப் பரந்து வாழ்ந்திருந்தனர்  என்பது அறிஞர்களின் கணிப்பு. உலக மொழிக் குடும்பங்களில் ஒன்றாக விளங்கும் திராவிட மொழிக் குடும்பத்தில், தலைமை சான்ற மொழியாகத் திகழ்வது, தமிழ் மொழியே. அத்தமிழ் மொழியிலிருந்து பல கிளை மொழிகளும் தனி மொழிகளும் உருவாகியிருக்கின்றன. தமிழின் கிளை மொழிகளில் பழங்குடியினரின் மொழிகள் பலவும் அடக்கம். பழங்குடியினரின் மொழிகள் சில, தனித் தகுதி பெறும் அளவுக்கு மாறியிருக்கின்றன. எனினும் அவற்றில் சில பழந்தமிழ்ச் சொற்கள் அவ்வாறே வழங்கப்படல் உண்டு. பல சொற்களோ சிற்சில நிலைகளில் மருவி வழங்கும் நிலையில் வழக்கிலுள்ளன.

    பழந்தமிழரின் பண்பட்ட வாழ்வினை எடுத்துரைக்கும் உரைகல்லாக விளங்குவன, செவ்விலக்கியங்களாகிய பழந்தமிழ் இலக்கியங்களே. அவ்விலக்கியங்களின் வழி அறியலாகும் பழந்தமிழரின் வாழ்வியல் முறைகள் பலவற்றைப் பழங்குடியினரின் வாழ்வியலில் இன்றைக்கும் கண்டு மகிழ முடிகின்றது. அவ்வகையில் கேரள மாநிலத்தின்  பாலக்காடு மாவட்டத்திலுள்ள  அட்டப்பாடி மலைப் பகுதிகளில்  வாழ்ந்து கொண்டிருக்கும் முடுகர் இன மக்களின்  வாழ்வியலிலும் பல பழந்தமிழ் மரபுகள் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருவதைப் பார்க்கின்றோம்.

    பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய கேரளத்தில் உள்ள மலைப் பகுதிகளில்  முடுகர் இன மக்கள் வாழ்ந்து வந்தாலும் பிற மொழித் தாக்குதலுக்கும்  பிற நாகரிகத் தாக்குதலுக்கும் அவ்வளவாக ஆட்படாமல்  தங்களுக்கான தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இனமாக அவர்களை அடையாளம் காண முடிகின்றது. பழந்தமிழின் வட்டார வழக்கு மொழி என்ற தகுதிப்பாட்டிற்குரிய  முடுகா மொழியினைப் பேசி வரும் அம்மக்களின் வாழ்வியலிலும் பழந்தமிழ்ப்  பண்பாட்டின் பல கூறுகளைக்  கண்டுணர முடிவது சிறப்பு.

    முடுகர் இன மக்கள் பேசும் மொழியானது பழந்தமிழோடு மிக நெருங்கிய தொடர்புள்ள மொழியாக விளங்குவதை அறிய முடிகின்றது.  சான்றுக்குச் சில சொற்கள் கீழே தரப்படுகின்றன.

          தமிழ் மொழி                                                   முடுகா மொழி

    உயர்திணைப் பெயர்கள்

       தாய்                                                                            அவ்வ, அவ்வெ, அப்ப (abba)

       தந்தை                                                                       அம்ம, அம்மெ

      என் தந்தை                                                              தந்தெ

      குழந்தை                                                                   பிள்ளெ

      கணவன்                                                                   ஆளெ(ன்)

      மனைவி                                                                    பெண்டு

      தாத்தா                                                                       அச்சா

     பாட்டி                                                                           அச்சி

    ஆண்குழந்தைகள்                                             ஆம்பிள மக்கா

    பெண்குழந்தைகள்                                            பொம்பிள மக்கா

    அஃறிணைப் பெயர்கள்

    யானை                                                                        ஆனெ

    பூனை                                                                           பூனெ

    மான்                                                                              மா

    அணில்                                                                        அணாலு

    மலையணில்                                                          பெளிலு (beLilu)

    குரங்கு                                                                          குராங்கு

    வெள்ளைக் குரங்கு                                             பிசினிக் குராங்கு (bisini)

    காட்டெருமை                                                          காட்டி

    உடும்பு                                                                          பிருகா (biruga)

    கோழி                                                                             கோயி

    கரையான்                                                                   சிதாலு

    முயல்                                                                              முசாலு

    காற்று                                                                             காத்து, காலு

    மழை                                                                                மகெ

    மேகம்                                                                              மஞ்சு

    வீடு                                                                                    கூரெ

    ஊர்                                                                                    ஊரு

    மலை                                                                               மலெ, வரெ

    ஆறு                                                                                  கரெ

    குகை                                                                               அளெ

    பழம்                                                                                 பகெ

    கிழங்கு                                                                          கிகாங்கு

    நூரைக் கிழங்கு                                                      நூரேக் கிகாங்கு

    கீரை                                                                                அடா

    உரல்                                                                                உராலு

    உலக்கை                                                                     உலாக்கெ

    மூங்கில்                                                                        மூங்கா

    முறம்                                                                              முறா, மொறா

    சோறு                                                                             சோறு, அன்னம்

    காளான்                                                                        குமினு

    கேழ்வரகுக் களி                                                     புட்டு

    தினை                                                                            பாண்டி

    தேன்                                                                                தேனு

    கொம்புத்தேன்                                                        கோலன்

    மலைத்தேன்                                                             பெருந்தேன்

    வழி                                                                                  வெயி, பயி(bayi)

    குழி                                                                                 குயி

    குழல்                                                                             குவாலு

    பறை                                                                             பறெ

    வளையல்                                                                  வளெ

    வினைச்சொற்கள்

    உறங்கு                                                                       உறாங்கு

    இறங்கி                                                                      இறாங்கி

    காய வைத்து                                                         உணக்கி

    சமைக்க வேண்டும்                                         அடோணு(ம்)

    தின்கின்றோம்                                                     திங்கடோ(ம்)

    மூவிடப் பெயர்கள்

    நான்                                                                            நானு

    நீ                                                                                     நீ

    நீங்கள்                                                                      நிம்ம

    நாங்கள்                                                                   நம்ம

    உனக்கு                                                                     நினக்கு

    உங்களுக்கு                                                           நிமக்கு

    இவ்வாறான முடுகா மொழிச் சொற்களை நாம் கண்ணுறும்போது  அவை பழந்தமிழின்  பல சொற்களையும் சில வடிவ மாற்றத்தோடு வழங்கி வருவனவாகக் காணப்படுகின்றன. அதனால் பழந்தமிழின் ஒரு வட்டார வழக்கு மொழியாக இம்மொழியினை இனங்காண வழியுண்டு.

    முடுகா மொழியில் “தாய்” என்ற உறவு முறைச் சொல், “அவ்வ”  அல்லது “ அப்ப” (abba)  என்று இடம் பெறுகின்றது. இச்சொல் செவ்விலக்கியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் பதிவாகியுள்ளது.

          “அவ்வையர் ஆயினீர்: நும் அடி தொழுதேன். (மணி –பாத்திரம் பெற்ற காதை – 137)

    என்று மணிமேகலை கூறுகின்ற கூற்றில் “அவ்வை” என்ற சொல் இடம் பெறுவதைப் பார்க்கின்றோம்.  இச்சொல் முடுகர் நாவில் ஒலிக்கப்படும்  பொழுது  சிற்சில சமயங்களில் “அப்பா” (abba) என்றும் மாறுகின்றது. இங்கு வகரம் ஒலிப்பு ஒலியாகிய பகரமாக (ba) மாறியொலிக்கின்றது. உச்சரிப்பு எளிமை கருதி இத்தகைய மாற்றத்தினைப் பெறுகின்றது.

    முடுகர் இன மக்கள், தந்தையை விளிக்கும் போது”அம்ம” என்கின்றனர். ஆனால் பிறரிடம் தந்தையைப் பற்றிப் பேசும் போது “என்னு தந்தெ” என்று கூறுவதுண்டு. இச்சொல் வழக்காறும்  சங்ககாலத்திற்குரியதே.

       “குறுக வாரல் தந்தை” (அகநா – 195)

    என்ற அகநானூற்று  அடியினில்  அச்சொல் இடம்பெறுவதுண்டு.

    பறவைகளின்  குஞ்சுகளைத் தொல்காப்பியம்  “பிள்ளை” என்று குறிப்பதுண்டு.

         “அவற்றுள் பார்ப்பும் பிள்ளையும்  பறப்பவற் றிளமை”(தொல் 1503)

    என்பது நூற்பா. ஆனால் முடுகர் மொழியில் அச்சொல் உயர்திணையில் குழந்தையினைச் சுட்ட வரும்  சொல்லாக அமைகின்றது. குழந்தையை அம்மக்கள் “பிள்ளெ” என்பார்கள். மட்டுமின்றி பன்மை நிலையில் குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது “மக்கள்”  , “மக்களு”  என்ற சொல், முடுகரிடையே புழக்கத்திலுள்ளது.

       ”…………..வடமொழிப் பெயர் பெற்ற

        முகத்தவன் மக்களுள்  முதியவன் புணர்ப்பினால்” (கலித் – 25 – 2)

    என்னும் கலித்தொடரில்  பன்மையில் குழந்தைகளைச் சுட்டுவதற்கு  ”மக்கள்” என்ற சொல் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம்.

    முடுகர்கள் கணவனை “ஆளெ(ன்) என்றும் மனைவியை “பெண்டு” என்றும் கூறுவர். இச்சொற்கள்  சங்க இலக்கியங்களில்  காணப்படுவது கண்கூடு. திருமுருகாற்றுப் படையில்  முருகனைச் சிறப்பித்துப் பேசும் நக்கீரர்,  “இசைபேர் ஆள”(திருமுரு – 270) என்று விளிப்பதுண்டு. இங்கு ”உரியவன்”, ”ஆள்பவன் ” என்ற பொருள்களில்  “ஆளன்” என்ற சொல் இடம் பெறுகின்றது. ஆகவே ‘இல்லத்தை ஆள்பவன்’, ’மனைவிக்கு உரியவன்’ என்ற பொருள்களில் முடுகர்கள் கணவனை  ‘ஆளெ(ன்)’ என்ற சொல்லால் புலப்படுத்துகின்றார்கள் என்று  கருதலாம்.  சங்கத் தமிழர், அரசனின் மனைவியைக் குறிப்பதற்கு “பெருங்கோப்பெண்டு” என்று மொழிந்திருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே முடுகர்களும் மனைவியை பெண்டு என்ற சொல்லால்  வழங்குவதில் தவறில்லை .

    மான் என்னும் உயிரினம் சங்ககாலத்தில்  “மா” என்றழைக்கப்பட்டதுண்டு. முடுகர்கள்  இன்றளவும்  மானைச் சுட்டுவதற்கு “மா” என்பதனையே  வழக்கத்தில் வைத்திருக்கின்றார்கள். “மாப்பிணை” (புறநா – 2) என்றவாறு அமையும் புறநானூற்றுச் சொல், மான்பிணையைச் சுட்டுவதற்கு வந்ததாக அமைகின்றது. ”அணில்” என்னும் சிறுபிராணி, முடுகர்களால் “அணாலு” என்று கூறப்படுகின்றது. மலையணிலைக் குறிக்கும் போது “பெளிலு” (beLilu) என்பர்.

      “அணிலாடு முன்றில்” (குறுந் – 41)

      ”கிளி விளி  பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை” (அகநா – 12)

    என்ற  பழந்தமிழிலக்கியத்  தொடர்களில்  அணில், வெளில் என்ற சொற்கள் இடம் பெறுவதைப் பார்க்கின்றோம். இச்சொற்கள்

    அணில் – அணல் – அணலு –  அணாலு என்றும்

    வெளில் – வெளிலு – பெளிலு (beLilu) என்றும் மருவி, முடுகர்களால் வழங்கப்படுகின்றன.

    “கறையான்”  எனும் சிறு உயிரினத்தை முடுகர் இன மக்கள் “சிதாலு” என்பர். இச்சொல் வழக்காற்றினை  “முது  சுவர்க் கணச்சிதல் அரித்த” (சிறுபாண் – 133) என்றவாறு சிறுபாணாற்றுப்படையில் காணலாம்.

    “முயல் சுட்ட வாயினும் தருகுவோம்” (புறநா – 319) என்னும் தொடரில் இடம் பெறும்  ”முயல்”  என்ற சொல், முடுகா மொழியில் “முசாலு” என்று மாற்றமடைகின்றது. இங்கு   முயல் – முசல் – முசால் – முசாலு என்று மாற்றமடைவதைப் பார்க்கின்றோம். முடுகர்கள் வீட்டினை “கூரெ” என்று சுட்டுவர். இச்சொல் பழந்தமிழிலக்கியங்களில் இடம் பெறுவதுண்டு. ”குறுங் கூரைக் குடிநாப்பண்” (பட்டினப் – 81)  என்பார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். மலையினைச் சங்க கால மக்கள் “வரை” என்றும் வழங்குவர்.  “பனிபடு நெடு வரை” (புறநா – 6) என்னும்  தொடரே அதற்குச் சான்று. அச்சொல்லினை முடுகர் இன மக்கள் “வரெ” என்று கூறுவர்.

    காற்றினை “காத்து”, “காலு” என்ற இரு நிலைகளில் கூறுவது முடுகர் இன மக்களின் வழக்கமாகும். அவ்வாறே “மேகம்” என்பதனை “மஞ்சு” என்ற  சொல்லால் அம்மக்கள் கூறியமைவதுண்டு. “குகை” என்பதோ “அளெ” என்ற சொல்லால்  குறிக்கப்படும்.

            “காற்று என்னக் கடிது” (மதுரைக் 52)

             “கால் உணவாக” (புறநா – 43)

            “அகல் இரு வானம்  அம் மஞ்சு ஈன” (அகநா – 71)

           “அளைச் செறி  உழுவை” (புறநா – 78)

    போன்ற சங்கத் தொடர்களில் காற்று, கால், மஞ்சு, அளை முதலான சொற்கள் இடம் பெறுகின்றன. அச்சொற்களே சிறு அளவிலான மாற்றங்களுடன் முடுகா மொழியில்  வழங்கப்படுகின்றன. அங்ஙனமே

                “உரற்கால் யானை” (குறுந் – 232)

                “பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை” (குறுந் – 238)

    என்ற சங்கத் தொடர்களில் காணலாகும்  “உரல்”, ”உலக்கை”  என்பன முறையே “உராலு”, ”உலாக்கெ” என்ற நிலையில் முடுகர் மொழியில்  சற்று நீண்டு ஒலிக்கப் படும் சொற்களாக மாற்றமடைகின்றன.

    குறுந்தொகைத் தலைவி, மலைத் தேனைப் பற்றிக் கூறும் போது “பெருந்தேன்” என்று சிறப்பித்துக் கூறுவாள்.  “பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” (குறுந் – 3) என்பது  குறுந்தொகைத் தலைவியின் கூற்று. முடுகர் மொழியிலும் மலைத்தேனைக் குறிப்பதற்கு “பெருந்தேனு” என்ற சொல்லே  பயன்பாட்டில் உள்ளது.

    “நகம்” என்னும் சொல் முடுகர் மொழியில் “ஒயிரு”, நகா” என்ற சொற்களால் வழங்கப்படுகின்றது.  ”உகிர்” என்ற சொல் உகிர் – ஒகிர் – ஒகிரு – ஒயிரு என்று முடுகர் மொழியில் மருவியிருக்க வேண்டும். ”வள் உகிர்க் குறைத்த” (சிறுபாண் – 136) என்ற பத்துப்பாட்டுத் தொடரில்  ”உகிர்”  என்ற சொல்  நகத்தைக்  குறிப்பதாக  அமைகின்றது. அவ்வாறே “கீரை”  என்ற சொல்லின் வேறு வடிவமான “அடகு” என்னும் சங்கச் சொல், முடுகர் மொழியில் “அடா”  என்ற நிலையில் காணப்படுகின்றது.  இங்கு ஈறு மறைந்து  ஈற்றயல்  நீண்டு அமைந்த சொல்லாக மாறி விடுவதை உணரலாம். ”படப்பை கொய்த அடகு” (புறநா – 140)  என்று புறநானூற்றில்  அச்சொல் இடம்பெறுவதுண்டு.

    “உறங்கு” எனும் வினைச்சொல் “உறாங்கு” என்றும் “இறங்கி” என்பது “இறாங்கி” என்றும் ”காயவைத்து” என்பது “உணக்கி” என்றும் முடுகர் மொழியில்  மொழியப்படுகின்றன.

    “தீஞ்சோற்று க் கூவியர் தூங்குவனர் உறங்க”(மதுரைக் – 627)

    “ஞாழல் இறங்குஇணர்ப் படுசினை” (ஐங்குறு – 142)

    “வெள்ளெள் சுளகிடை உணங்கல்”(புறநா – 321) ஆகிய பழந்தமிழ்த் தொடர்களில் முறையே உறங்கு, இறங்கு, உணங்கல் சொற்கள் இடம்பெறுவதுண்டு. இப்பழந்தமிழ்ச் சொற்களே சற்று மாறுதல்களோடு முடுகர்களிடையே  காணப்படுகின்றன. ”சோறு” என்ற சொல் சங்க காலத்தில் உணவைக் குறித்த சொல்லாக  வழங்கப்பட்டது. முடுகர்களும்  உணவினைக் குறிப்பதற்கு  “சோறு” என்ற வழக்காற்றினையே பயன்படுத்துகின்றனர். ”சோறு வாக்கிய கொழுங்கஞ்சி” (பட்டினப் – 44) என்பது பட்டினப்பாலைத் தொடராகும்.

    உணவு சமைத்தலைக் குறிப்பிடுவதற்கு முடுகர்கள் “சோறு அடோணு(ம்)” என்பர். ”அடுதல்” என்பது ”சமைத்தல் ” என்ற பொருளைத் தரும் சங்கச் சொல்லாகும். ”புளிப் பெய்தட்ட” (புறநா – 248) என்னும் புறநானூற்றுத் தொடரே அதற்குச் சான்றாகும். மேலும் சங்க காலத்திலிருந்து  இன்று வரை மாறாமல் தமிழில் வழங்கி வருகின்ற  ழகரச் சொற்கள் அனைத்தும் முடுகர் மொழியில்  ககரம் அல்லது யகரம் பெற்ற நிலையில் மாறியமைவதைப் பார்க்க முடிகின்றது. சில சொற்களில் வகரமும்  இடம் பெறுதலுண்டு. அவை பின்வருமாறு

    தமிழ்                                                   முடுகர் மொழி

    மழை                                                   மகெ

    வழி                                                       வெயி, பயி (bayi)

    பழம்                                                     பகெ

    குழல்                                                    குவாலு

     குழி                                                       குயி

    வாழை                                                 பாகெ (baage)

    கோழி                                                   கோயி

    பழநி                                                       பணலி

    என்பனவாக மாறியமைவதைப் பார்க்கும் போது முடுகர் மொழியில் ழகர ஒலி இல்லை என்ற முடிவிற்கு வர முடிகின்றது. அத்துடன்  “பழநி” என்பது  முடுகர் மொழியில்  ஒலியிடம்பெயர்தல் முறையில்  ”பணலி” என்று மாறிப் போவதை அறிய முடிகின்றது. இங்கு ழகரம், லகரமாக  மாறிவிடுகின்றது; நகரம் ணகரமாகி ஒலிக்கின்றது.

    தொடர்கள்

             தமிழ்                                                                 முடுகா மொழி

    எனது தந்தை                                                            என்னு தந்தெ , என்னுது அம்மெ

    உன்னுடைய தாய்                                                நின்னுது அவ்வெ

    அவனுடைய தந்தை                                           அவானுது தந்தெ

    கீரை கடைந்திருக்கின்றேன்                       அடா கடாந்திருக்கேரு

    கேழ்வரகுக்களி சமைக்க வேண்டும்     புட்டு அடோணு(ம்)

    அமைதியாக உறங்கு                                         சப்பெந்து உறாங்கு

    வயதுக்கு வந்து விட்டாள்                                 நிறேந்திருக்கா

    காற்று இறங்கி மழை பெய்கின்றது       காலு றாங்கி மகெ பெய்யிடு

    என்றவாறு முடுகா மொழித் தொடர்கள் அமைகின்றன.

    வாழ்வியல் முறை

    இன்றைய பல பழங்குடியினரின் வாழ்வியல் முறையானது பழந்தமிழ்ப் பண்பாட்டினை தற்காலத்தில் நேரில் கண்டுணரும் வகையில் அமைந்துள்ளது  வியப்பிற்குரியதே. அவ்வகையில் முடுகர் இன மக்களின் மொழி மட்டுமல்லாது   வாழ்வியல் முறைகளும் பழந்தமிழரின் வாழ்வியல் முறைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாக அமைந்து காணப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாகின்றோம்.

    சங்க இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டிய களவு மண வாழ்வு, ஆண் பெண்ணுக்குப் பொருள் கொடுத்து மணம் செய்துகொள்ளுதல், வடவர்  தொடர்பற்ற மணச் சடங்குகள் , காட்டெரிப்பு வேளாண் முறை, வேட்டைச் சமூகமாக இருந்த நிலை, கிடைத்தவற்றைப் பாதீடு  செய்யும் வழக்கம், இறந்தோரைப் புதைக்கும் வழக்கம், தாய்த்  தெய்வ வழிபாட்டு மரபு, ஒரு தலைவனின் கீழ் இயங்கும் சமூகமாகத் திகழ்தல் என்று பல நிலைகளிலும் சங்க கால வாழ்வின் தொடர்ச்சியை  இன்றைக்கு வரைக்கும் முடுகர் வாழ்வில் கண்டுணர முடிகின்றது.

    ஆய்வின் தேவை

    திராவிட  மொழியாராய்ச்சியில்  பழந்தமிழோடு  நெருங்கிய உறவுடைய மொழிகள்  எவையெவை என்பதை அறிந்து வெளிக்கொணர வேண்டியதன் தேவை கருதி  இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டுமன்றி, பழந்தமிழர்களின் மறைந்து போகாத பண்பாட்டு மரபுகளையும்  வெளிக்கொணர்வதற்கும்  இவ்வாய்வு உதவுகின்றது.

    ஆய்வு நோக்கம்

    கேரள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் பலரும் பண்டைய தமிழ்க் குடிகளேயாவர். எனவே அவர்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள் மிகுதியாகப் படிந்திருக்கின்றன. அவ்வகையில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மலைப் பகுதிகளில் வாழும் முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள்  படிந்திருப்பதை  ஆய்ந்து காணும் நோக்கத்துடன்  இவ்வாய்வு அமைய உள்ளது.

     ஆய்வு நெறிமுறைகள்

    பழந்தமிழ்ச் சொற்களோடு  முடுகா மொழிச் சொற்களை ஒப்பீட்டு நோக்கில் காணுதல், பழந்தமிழ்ச் சொற்களிலிருந்து முடுகா மொழிச் சொற்கள் எவ்வாறு மாற்றங்களை அடைந்திருக்கும்  என்பதை  மொழியியல் நோக்கில் காணுதல், செவ்விலக்கிய காலப் பண்பாட்டுச் சுவடுகள்  முடுகர்களின் வாழ்வியலில் எவ்வாறு படிந்திருக்கின்றது என்பதைச் சான்றுகளுடன் விளக்கிக் கூறுதல் முதலான நெறிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன.

    முன்னோடி ஆய்வுகள்

    முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலைப் பற்றிய விரிவான ஆய்வுகள்  இதுவரை நிகழவில்லை. குமாரன் வயலேரியினுடைய ”ஆதிவாசி புராவிர்த்தம்”, சங்கரன் குட்டி எழுதிய ”கேரளம் நூற்றாண்டுகளுக்கு முன்பு”, வேலப்பன்.கெ எழுதிய ”ஆதிவாசிகளும் ஆதிவாசி பாஷகளும்”, பக்தவத்சல பாரதியினுடைய ”தமிழர் மானிடவியல்” ஜி, ஜான். சாமுவேல் எழுதிய ”திராவிட மொழிகளின் ஒப்பாய்வு – ஓர் அறிமுகம்” முதலிய நூற்களையும் எட்கர் தர்ஸ்டன் போன்றோரின் ஆய்வுகளையும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

    ஆய்வின் முக்கியத்துவம்

    பழந்தமிழின் பேச்சு வழக்குகளை உணர்ந்துகொள்ள வேண்டுமானால்  இன்றைய பழங்குடியினரின் மொழிகளை ஆய்ந்தறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வகையில்  இவ்வாய்வு இன்றியமையாததாகின்றது. மட்டுமன்றி பழந்தமிழ் இலக்கியங்களின் வழி அறியலாகும் பழந்தமிழர்களின் வாழ்வியல் நெறிகள் பலவற்றை இன்றைய பழங்குடியினர் வாழ்வில் கண்டுணரும்போது  உள்ளதை உள்ளவாறு கூற விழைந்த இலக்கியங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள் என்பது உறுதியாகின்றது.

    ஆய்வேட்டின் அமைப்பு

                முன்னுரை

    1. முடுகர் இன மக்கள் – ஓர் அறிமுகம்.
    2. முடுகாமொழிப் பெயர்ச் சொற்களில் பழந்தமிழ் வழக்காறுகள்.
    3. முடுகாமொழி வினைச் சொற்களில் பழந்தமிழ் வழக்காறுகள்.
    4. முடுகாமொழித் தொடர்களும் பழந்தமிழும் .
    5. முடுகர் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள்.

                   முடிவுரை

                 துணைநூற்பட்டியல்

                 பின்னிணைப்புகள்

    என்ற நிலையில்  ஆய்வேட்டின் அமைப்பு அமைய உள்ளது.

      ஆய்வின் பங்களிப்பு

    பழந்தமிழின்  சொல்வழக்காறுகள் பலவும் தற்காலத் தமிழில்  வழக்கற்றுப் போய்விட்டன. ஆனால் கேரள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினரிடம்  இன்றும் புழக்கத்திலுள்ளன. அதனால் பழந்தமிழின் வட்டார வழக்கு  மொழிகள்  மறைந்து விடவில்லை என்பதை எடுத்துரைக்கும்  வண்ணம் இவ்வாய்வு அமையவுள்ளது. அதைப் போன்றே பழந்தமிழர்களின்  வாழ்வியல் கூறுகளை  பழந்தமிழிலக்கியங்கள் வாயிலாக உணர்ந்தறிந்ததுடன்  தற்காலக் கேரளப் பழங்குடிகளிடமும் கண்டுணர்வதன் மூலமாகப்  பண்டைத் தமிழகம்  மற்றும் பண்டைத் தமிழர்  வரலாற்றினைத் தேடுவதற்கான ஆய்வுப் பரப்பு விரிவடைகின்றது.

    ஆய்விற்குத் துணை நிற்கும் நூற்களாவன:                  

         1.அகத்தியலிங்கம். ச ,  திராவிட மொழிகள் , மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை -08.

         2.இராசமாணிக்கனார் . மா, பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னை பல்கலைக்கழகம்.

    1. இராமநாதன் செட்டியார், சங்க காலத் தமிழர் வாழ்வு, முத்தையா நிலையம், – சென்னை – 84.

          4.கதிர்முருகு(உ.ஆ), முத்தொள்ளாயிரம் , சாரதா பதிப்பகம், சென்னை -14.

    1. கருணாகரன் . கி , சமுதாய மொழியியல் , மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு , சிதம்பரம் – 1.
    1. குலசேகரன். எஸ், பழந்தமிழின் புதிய பரிமாணங்கள் , திருமகள் வெளியீடு, சென்னை – 90.
    1. கோவிந்தன் கா. (மொ.பெ.ஆ) , திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், முல்லை நிலையம், தி. நகர், சென்னை.
    1. கவுமாரீஸ்வரி .எஸ். (தொ.ஆ) ,பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை – 14.
    1. சக்திவேல் . சு, தமிழ்மொழி வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், லிங்கித்தெரு, சென்னை – 108.
    1. சக்திவேல் . பே, தமிழர் தொன்மம், மெய்யப்பன் பதிப்பகம், புதுத் தெரு, சிதம்பரம் -1.
    2. சண்முகம் பிள்ளை.மு. (ப. ஆ), தொல்காப்பியம் –பொருள்- இளம்பூரணம் , முல்லை நிலையம், மண்ணடி, சென்னை – 1.
    1. சற்குணவதி. மு. மண்ணில் வாழும் மலைமக்கள், தமிழ்க் கடல் பதிப்பகம், அரக்கோணம், வட ஆர்க்காடு, அம்பேத்கார் மாவட்டம் -3.
    1. சிதம்பரனார். சாமி, எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும், அறிவு பதிப்பகம்,

         சென்னை -14.

    1. சிதம்பரனார். சாமி, பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், அறிவு பதிப்பகம், சென்னை- 14.
    1. சிதம்பரனார். சாமி, பதினெண்கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும், அறிவு பதிப்பகம்,

           சென்னை 14.

    1. சுப்பிரமணியன். கா, சங்ககாலச் சமுதாயம், என். சி.பி. எச், சென்னை – 98.
    2. சோமசுந்தரனார்.பொ.வே (உ.ஆ), சிலப்பதிகாரம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 1.
    1. பாரதி. பக்தவத்சல, தமிழர் மானிடவியல், அடையாளம், திருச்சி – 10.
    2. மாதையன்.பெ, சங்க இலக்கியத்தில் குடும்பம், என்.சி.பி.எச். சென்னை-98.
    3. மாதையன்.பெ, சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், என்.சி.பி.எச்,சென்னை-98.

    மலையாள நூற்கள்

    1.குமாரன் வயலேரி, ஆதிவாசி புராவிர்த்தம், டி.சி.புக்ஸ், கோட்டயம் – 1

    2.சங்கரன் குட்டி,கேரளம் நூற்றாண்டுகளுக்கு முன்பு,கரண்ட் பிரிண்டர்ஸ், திருச்சூர்.

    3.விஷ்ணு நம்பூதிரி.எம்.வி,நாடோடி விக்ஞானியம்,டி.சி.புக்ஸ், கோட்டயம் – 1.

    4.வேலப்பன்.கே, ஆதிவாசிகளும் ஆதிவாசி பாஷகளும், கேரளா மொழி நிறுவனம்

       நலந்தா, திருவனந்தபுரம் – 3.

    அகராதிகள்

     1.இராசா. கி, புறநானூறு அகராதி, பாவை பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை- 14.

      2.கதிரைவேற்பிள்ளை.நா, தமிழ்மொழி அகராதி, ஏசியன் எடுகேஷனல் சர்வீஸ், புதுதில்லி -16

       3.கழகப் புலவர் குழுவினர், கழகத் தமிழ் அகராதி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி – 6.

     4.சக்திவேல்.சு, மானிடவியல் கலைச் சொல்லகராதி, மணிவாசகர் நூலகம், சென்னை – 1.

    1. சண்முகம் பிள்ளை.மு, தமிழ் – தமிழ் அகர முதலி,தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.
    2. மாதையன்.பெ,சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் -10.                              

     

    ஆய்வாளர் பற்றிய குறிப்பு

    பெயர் :    முனைவர் த. கவிதா

    பணி அனுபவம்:  உயர்கல்வித் துறையில் 12 ஆண்டுகளாகப்   பணியாற்றுகிறார்.

    முனைவர் பட்டத் தலைப்பு: ” பாலக்காடு மற்றும் கோவை மாவட்ட மலசர் பழங்குடிகளின் வாழ்வியல் –ஓர் ஆய்வு.

    ஆய்வுக் கட்டுரைகள்:       இருபத்தைந்திற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுக் கோவைகளில்  வெளிவந்துள்ளன. பத்திற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்,  கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டுள்ளன.

    ஆய்வுத் திட்டப் பணிகள்:   சென்னை, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நிதி உதவியுடன் “பாலக்காடு வட்டாரப் பழங்குடியினர் மொழிகளில்  பழந்தமிழ் வழக்காறுகள்” என்னும் பொருண்மையில்  மேற்கொண்ட ஆய்வுப் பணி (2013 – 2014.) நிறைவடைந்துள்ளது. இப்பொருண்மையின் கீழ்  இரவாளர், இருளர், காடர், மலசர் ஆகிய பழங்குடியினரின் மொழிகளுக்கும் பழந்தமிழுக்கும் உள்ள உறவு நிலை ஆய்ந்தறியப் பெற்றுள்ளது.

    நூல் வெளியீடு:  மலசர் பழங்குடிகள், 2011, அருள் பதிப்பகம், பெரியார் தெரு, சென்னை – 78.

    =============================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    1.மரபுகள் என்று தலைப்பிற்கு பதிலாக முடுகர் இன மக்களின் வாழ்வியலில் புழக்கத்தில் உள்ள பழந்தமிழ் சொற்கள் என்ற தலைப்பு பொருத்தமானதாக இருக்கும்.

    2.ஆய்வு நோக்கம் என்ற தலைப்பு வரையிலான விவரங்கள் தலைப்பை ஒட்டியனவாக அமைந்துள்ளது சிறப்பிற்குரியது. அதற்கு மேல் வருகின்ற தலைப்புகளும் விளக்கங்களும் ஆய்வேட்டை அடிப்படையாகக் கொண்ட
    துணைத்தலைப்புகளுடனும், துணைநூற்பட்டியலுடனும் விளங்குகிறது.
    ஆய்வின் நோக்கம் முன்னமேயே கூறியிருப்பின், பொருந்துவதாகும். பிற்பகுதி ஆய்வேட்டின் அறிமுகவுரையாகத் தோன்றுகிறது. இதற்கான காரணத்தை ஆய்வாளர் தெளிவுபடுத்தியிருக்கலாம்.

    =============================================================

    Share
  • சேக்கிழார் பா நயம் – 29

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

    திருக்கைலாயத்தில்  அருளிய வாக்கின் வண்ணம் , சுந்தரமூர்த்தி  ஸ்வாமிகளை  உரிய காலத்தில் தடுத்தாட் கொள்ளவே , அவர் திருமணநாளில்  சிவபிரான்  முதிய  அந்தணராக எழுந்தருளினார்! அங்கே சுந்தரர்  தம் வழிவழி  அடிமை  என்ற பழைய மூல ஓலை ஒன்றைக் காட்டி  அவையோரிடம்  வாதிட்டு வென்றார்! அவர்,  ‘’சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆரூர்ப்பித்தனாகிய தமக்கு வழிவழிஅடிமை!’’ என்று  எழுதப்பெற்ற மூலஓலையைக்   காட்டி வழக்கில்  வென்றார். அவ்வாறு தம்  அகடிதகடனா சாமர்த்தியத்தால்    காட்டிய  மூலஓலை,

    முன்னோர்  எழுத்துடன்  ஒப்பிட்டுப்பார்க்கப்    பெற்றது. எதையும்  சாதித்  தருளும் இறைவன்  செயலை  மீண்டும்   சோதிக்க  எண்ணிய  அவையினர், ‘’அப்படியானால் இங்கே  நெடுங்காலம்  வாழ்ந்திருந்த உங்கள்  பழமையான இல்லத்தைக் காட்டுங்கள்’’ என்றனர். அப்போதும்  தம்  இறைமைத்  தன்மையை உணராத சுந்தரரையும் அந்தணர்களையும் நோக்கி, ‘’இன்னும் என்னை அறிந்துகொள்ளவில்லை   என்றால்,  என்னுடன்   வாருங்கள்!’’ என்று  கூறி,. அவர்களை அவ்வூரின்    திருக்கோயிலாகிய  ‘’ திருவருட்டுறை’’ யினுள்சென்றார்!

    அவரைப்பின் தொடர்ந்து வந்த சுந்தரரும் அந்தணர்களும் அங்கேயே  அந்தமுதிய அந்தணர்  மறைந்து  விட்டதை அறிந்து  திகைத்தனர்.

    அப்போதும் பிறப்புவாசனையால்  பீடிக்கப் பெற்றிருந்த சுந்தரர் நல்லறிவை இழந்து, ‘’ அந்தணரே!  நீங்கள் எங்கள்சிவன்   கோயிலுக்குள்  ஏன்    நுழைந்து  மறைந்தீர்கள்?’’  என்று கேட்டார். மலமாயையின் பிணிப்பு எளிதில் விலகாது என்பதை இங்கேநாம் உணர்ந்து  கொள்கிறோம். உடனேஅனைவர்  முன்னும் இறைவன் இடப வாகனத்தில் பார்வதியுடன் காட்சி யளித்தார்! அப்போதுதான் வந்த அந்தணர் இறைவனே என்பதை  அனைவரும்  உணர்ந்து  கொண்டனர். இவ்வாறு தம்மை மறைத்துக் கொள்ளுதல் இறைவனின் ஐந்தொழில்களுள் ஒன்றாகும்!  அனைவரின் அறிவையும்  உணர்வையும் நினைவையும் மறைத்துத் தம்மையும் மறைத்துக் கொண்ட நிலையை இங்கே  நமக்குச் சேக்கிழார் உணர்த்துகிறார்!

    அப்போதுதான்  சுந்தரர் மையல் மானுடமாகி  மயங்கியதை ஆண்டவன் உணர்த்தினார். ‘’சுந்தரா, நீ முன்பு கைலையில் எமக்கு அணுக்கத் தொண்டனாகி, அடிமைத் தொண்டு செய்தாய்! உன்னுடைய வேட்கை உன்னை இங்கே மானிடனாய்ப்   பிறக்கச்    செய்தது!  என் ஏவலால் இங்கே பிறந்தாய். இந்த நிலவுகில் உன்னைத் தொடர்ந்து வந்த  துன்ப வாழ்க்கையின்   தொடர்ச்சி விலகி,  நீ உய்தி பெறும்  பொருட்டு , உன்னைத்  தொடர்ந்து இங்கு   வந்தேன்!   நீ அன்று அங்கே  என்னை வேண்டிக் கொண்டமையால்,  நல்லறிவு  மிக்க,  நான்மறை  உணர்ந்த , அந்தணர் முன்னே  நாமே உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம்! ‘’  என்று அருளிச் செய்தார்!

    இதனையே,

    ‘’முன்பு நீ நமக்குத் தொண்டன்!  முன்னிய வேட்கை கூரப்
    பின்பு நம் ஏவலாலே பிறந்தனை,  மண்ணின் மீது
    துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து
    நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோ ம்” என்றார்’’

    என்ற   பாடல்  குறிக்கிறது!  இந்தப் பாடல் குறிக்கும் உள்ளுறைப் பொருளை    இங்கே

    நாம் உணர்ந்து கொள்ள  வேண்டும்!  சுந்தரர்  அந்தணர் இல்லத்தில்  பிறந்தது, அவர் வேதம் பயின்றது,  அரசரின்  செல்வத்  திருமகனாய்  வளர்ந்தது, திருமணம்  செய்து கொள்ளவிருந்தது    ஆகிய அனைத்தும்  அவர்  இப்பிறவியில்  தொகுத்துக்  கொண்ட  பெருஞ்செல்வமாகும்! அவர்  அறம், பொருள், இன்பம்  ஆகிய மூவகை உறுதிப்  பொருள்களையும் பெற்றார்! ஆனாலும்,  இப் பெரும்பொருட்  செல்வங்களை  அனுபவித்து மகிழ்வதை விட, இறைவன் அருட்செல்வத்தை  அடைவதே  சிறப்பு. இதனைத்  திருக்குறள்,

    ‘’வகுத்தான்  வகுத்த   வகையல்லால்   கோடி
     தொகுத்தார்க்கும்   துய்த்தல்  அரிது!’’   

    ‘’ அருட்செல்வம்   செல்வத்துட்   செல்வம்   பொருட்செல்வம்
     பூரியார்   கண்ணும்   உள!’’

    என்று   கூறுகின்றது! ஆதலால்  இந்த நல்லறிவை  நமக்கும் வழங்கி  மகிழ்கிறார்  இறைவன்! இறைவன்  எங்கும்  என்றும்  எப்போதும் நம்மைத் தொடர்ந்து வருவான்  என்பதையும்  நாம் உணர்கிறோம்! இப்படியே  நம் சிந்தனையைத்  தூண்டி  நல்லறிவை  ஊட்டும் நயத்தை  சேக்கிழார்  பெருமானின் பாடலில் நாமும்  உணர்ந்து  கொள்கிறோம்!

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 21

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 21 – தீவினையச்சம்

     

    குறள் 201:

    தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
    தீவினை யென்னுஞ் செறுக்கு

    கெட்டவங்க கெடுதல் செய்யுததுக்கு அஞ்ச மாட்டாங்க. நல்லவங்க கெடுதல் செய்யுததுக்கு பயந்து நடுங்குவாங்க.

    குறள் 202:

    தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்

    கெட்ட செயல செய்யுததுனால கெடுதலே வெளையும் ங்கதால கெட்ட செயல நெருப்ப விட கொடும னு நெனைச்சி பயந்துக்கிடணும்.

    குறள் 203:

    அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்குஞ் செய்யா விடல்

    கெடுதல் செஞ்சவங்களுக்கு அத பதிலுக்கு செஞ்சு பழிவாங்காம  இருக்குதது தான் அறிவுல எல்லாம் ஒசந்த அறிவுனு சொல்லுவாங்க.

    குறள் 204:

    மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு

    மறதி ல கூட பொறத்தியாருக்கு கெடுதல் செய்யாம இருக்கணும். அப்டி செய்தாம்னா அவனுக்கு கேடு உண்டாக்க அறக்கடவுள்  நெனைக்கும்.

    குறள் 205:

    இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
    இலனாகும் மற்றுப் பெயர்த்து

    தன்னோட ஏழ்ம காரணமா ஒருத்தன் கெட்ட செயல செய்தாம்னா அவன் திரும்ப வறுமல கெடந்து சீரளியுவான்.

    குறள் 206:

    தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
    தன்னை அடல்வேண்டா தான்

    துன்பம் தன்னைய சுத்தி சுத்தி வந்து வருத்துதத விரும்பாதவன் மத்தவங்களுக்கு கெடுதல் செய்யாம இருந்துக்கிடணும். .

    குறள் 207:

    எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
    வீயாது பின்சென் றடும்

    எத்தாம் பெரிய பகை இருந்தாலும் தப்பிச்சிக்கிடலாம். மத்தவங்களுக்கு கெடுதல் செய்யுததனால வர பகை பொறத்தாலயே இருந்து தொந்தரவு செஞ்சுகிட்டே இருக்கும்.

    குறள் 208:

    தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயா தடியுறைந் தற்று

    பொறத்தியாருக்கு கெடுதல் செஞ்சவன கேடு எப்டி அண்டும்னா, அவனோட நெழல் விடாம அவன் காலுக்கு கீழ தங்குதது போல.

    குறள் 209:

    தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
    துன்னற்க தீவினைப் பால்

    தன்னத் தானே விரும்புதவன் எத்தன சிறிசான கெட்ட செயலயும் செய்யாம விட்டுபோட்டு போயிடணும். .

    குறள் 210:

    அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
    தீவினை செய்யான் எனின்

    ஒருத்தன் தப்பான வழில மத்தவங்களுக்கு கெடுதல் செய்யாம வாழ்ந்தாம்னா அவன கேடு இல்லாதவன் னு அறிஞ்சிக்கிடலாம்.

    Share
  • அல்லாள இளைய நாயக்கர்

    -M.B. திருநாவுக்கரசு

    மன்னர்களில் பல வகையினர் உண்டு. மக்களை வதைத்து கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர்கள் சிலர் இருந்திருந்தாலும், மக்களின் நன்மைக்காக, அவர்களது நலன் காககும் திட்டங்களைச் செயல்படுத்தியவர்களும் உண்டு. மக்களுக்காகவே வாழ்ந்து, அவர்களுக்காகவே உயிர்நீத்த மன்னர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். கல்லணை கட்டிய கரிகாலச் சோழனை 2 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் நினைவில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல, கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சிற்றரசரான அல்லாள இளைய நாயக்கர், அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் நலன் பேணும் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.

    விவசாயப் பயன்பாட்டுக்காக காவிரி ஆற்றின் அருகே அல்லாள இளைய நாயக்கரால் வெட்டப்பட்ட ராஜவாய்க்கால், இன்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதுடன், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது.

    இந்த நிலையில், மன்னரின் சிறப்பைப் போற்றும் வகையில் அவருக்கு ஜேடர்பாளையத்தில் சிலை அமைக்க வேண்டுமென ராஜவாய்க்கால் பாசன விவசாயிகளும், பொதுமக்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

    ராஜவாய்க்கால் வெட்டிய அல்லாள இளைய நாயக்கருக்கு, குவிமாடத்துடன் கூடிய உருவச் சிலை அமைப்படும் என கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பரமத்திவேலுார் அருகேயுள்ள இருக்கூரைச் சேர்ந்தவரும், அல்லாள இளைய நாயக்கர் வம்சாவளியைச் சேர்ந்தவருமான பி.சோமசுந்தரம் கூறும்போது, “கடந்த 1622 முதல் 1655-ம் ஆண்டு வரை அரைய நாடுகளில் ஒன்றான பரமத்தியை தலைமையிடமாகக் கொண்டு அல்லாள இளைய நாயக்கர் ஆட்சிபுரிந்தார் என கல்வெட்டுச் சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பரமத்தியில் இருந்து திருச்சி கொடுமுடி வரை அல்லாள இளைய நாயக்கர் ஆட்சி செய்துள்ளார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டில், அதாவது 1623-ல் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் அருகே, விவசாயப் பயன்பாட்டுக்காக ராஜவாய்க்கால் வெட்டினார். இந்த வாய்க்கால் 24 அடி அகலமும், 33 கிலோமீட்டர் தொலைவும் கொண்டது.

    இதன்மூலம் நேரடியாக 5,116 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றதாக சான்றுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட இந்த வாய்க்கால்தான், தற்போதும் சுற்றுவட்டார விளை நிலங்களுக்கு பாசன ஆதாரமாக உள்ளது.

    இதேபோல, ஏராளமான கோயில் திருப்பணிகளையும் அல்லாள இளையநாயக்கர் மேற்கொண்டுள்ளார். இதற்கான செப்புப் பட்டயம், கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ராஜவாய்க்கால் வெட்டிய அல்லாள இளைய நாயக்கரைப் பெருமைப்படுத்தும் வகையில், ரூ.30 லட்சம் மதிப்பில் ஜேடர்பாளையத்தில் குவிமாடத்துடன் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    இந்த ராஜவாய்க்காலைத் தொடர்ந்து, கொமாரபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் மற்றும் மோகனுார் வாய்க்கால்கள் மக்களுக்கு பாசன வசதி அளிக்கின்றன” என்றார்.

    ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி ஓ.பி.குப்புதுரை கூறும்போது, “எவ்வித வசதிகளும் இல்லாத 1623-ம் ஆண்டில், மனித உழைப்பை மட்டுமே பயன்படுத்தி ராஜ வாய்க்கால் வெட்டியுள்ளார் அல்லாள இளைய நாயக்கர். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பெரிதும் பயனடைந்துள்ளனர். இவ்வாறு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சிபுரிந்த அல்லாள இளைய நாயக்கருக்கு, தமிழக அரசு மணி மண்டபம் கட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது வரவேற்கத் தக்கது” என்றார்.

    M.B.Thirunavukkarasu M.Sc(Geo).,
    Research Scholar,
    Centre for Water Resources,
    Anna University Chennai,
    Chennai -25
    Mobile +91 9941527517

    Share