Blog

  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 10

    -மேகலா இராமமூர்த்தி

    நல்ல நண்பர்களோடு நட்பு பாராட்ட வேண்டியதன் அவசியத்தையும், ஆன்றவிந்தடங்கிய சான்றோரிடத்து நடந்துகொள்ள வேண்டிய முறைகளையும் விளக்கமாய்ப் பேசுகின்ற நாலடியார், உயர்ந்த பண்புடைய நல்லினத்தாரொடு நாம் இணங்கியிருக்கவேண்டியதன் இன்றியமையாமையையும் எடுத்தியம்புகின்றது.

    மறலிவரும் வழியை மாந்தர்கள் யாரும் அடைக்கவியலாது. அவன் தான் திட்டமிட்ட காலத்தில் வந்தே தீருவான். எனினும் வாழுங்காலத்தில் நல்லவரோடு பழகுதலும், நன்னெறியில் ஒழுகுதலும், தீயோரையும் தூயோராய் மாற்றும் பெற்றியது எனும் உண்மையை நாலடி நவில்கின்றது.

    ஆழ்ந்து ஆராயுமிடத்து மனிதப் பிறவி துன்பம் நிறைந்ததே என்றாலும், பிறர்க்குதவும் நெஞ்சமுடையவர்களான பெரியார்களோடு எப்போதும் நேயஞ்செய்து அணுகியிருக்கப் பெற்றால், அப்பிறவியை யாரும் வெறுக்கமாட்டார்கள் என்பது பின்வரும் நாலடியார் புகலும் நற்கருத்து.

    இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
    பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள்

    பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டேஞ்ஞான்றும்
    நண்பாற்றி நட்கப் பெறின்.   (நாலடி – 174)

    இறைதொழும் அடியார்க்குக்  கறைக்கண்டனின் குமிண்சிரிப்பும், எடுத்த பொற்பாதமும் மனித்தப் பிறவியைப் பொருளுடையதாக்குவதுபோல், பண்பாளர்களுக்கு நல்லினத்தின் துணை வாழ்வினைப் பயனுள்ளதாக்கும்.

    நற்குடிப் பிறத்தல் என்பது எல்லார்க்கும் வாய்க்கும் பேறன்று. ஒழுக்கமும் நற்பண்பும் இல்லாத கீழ்க்குடியில் ஒருவர் பிறந்துவிட்டாலும், நல்லினத்தாரின் கூட்டுறவும் நட்பும் கிட்டுமானால் அவரும் நல்லியல்பில் மலைபோல் நிலைத்து நிற்பர். இஃது, ஊரின் சாக்கடை நீர் கடலைச் சேர்ந்தால் அதுவும் கடல் நீர் எனும் பெருமையோடு தீர்த்தமாதலை ஒக்கும் எனும் அரிய உண்மையை நாலடியார்வழி அறிகின்றோம்.

    ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
    பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் – ஒருங்
    குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
    நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.  (நாலடி – 175)

    கல் ஒன்றுதான்! வாசலில் இருக்கும்போது படிக்கல்லாக மிதிபடுகின்றது; கோயில் கருவறையில் பிரதிட்டை செய்யப்படும்போது இறையாக மதிக்கப்படுகின்றது. எனவே பொருள் ஒன்றானபோதும் இடம் அதன் மதிப்பை மாற்றிவிடுகின்றது. 

    மேலோரின் கேண்மையால் கீழோரும் மேலோராய் மேன்மையுறுவர் என்பதுபோல், மேலோர் கீழோரோடு தொடர்பு கொள்வரேல் அவர்தம் மதிப்பை இழப்பர் என்பதையும் நமக்குச் சான்றுகாட்டி விளக்குகின்றது நாலடியார்.

    மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த
    இனத்தால் இகழப்படுவர் – புனத்து

    வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
    எறிபுனந் தீப்பட்டக் கால்.  (நாலடி – 180)

    காட்டினுள்ள மணங் கமழ்கின்ற சந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்று வீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்துவிடும். அஃதொப்ப, மனத்தால் மாசு மறுவிலாத சான்றோரேனும் தாம்சேர்ந்த தீய இனத்தினால் பெருமைகுன்றிப் பழிக்கப்படுவர். எனவே சிற்றினம் சேராதிருப்பது நல்லினத்தாரின் பெருமையை நானிலத்தில் உயர்த்தும்.

    அறிவிலா மாந்தர்கள், மனைவாழ்வின் சார்பினால் களிப்புற்றிருக்கின்றோம்; உலக வாழ்க்கைக்கு வேண்டிய பொன் முதலிய எல்லா நலங்களிலும் நிறைந்திருக்கின்றோம் என்று கருதி அவற்றின் நிலையிலாப் பொய்த்தன்மையை மறந்து ஒழுகும் இயல்புடையவர்; ஆனால், அச்சார்புகள் நிலைத்திருப்பனபோற் காணப்பட்டுப் பின் நிலையாமற்போம் என்று உணர்ந்த மேலோரோ எக்காலத்திலும் அவற்றை விரும்பாமல் பற்றற்று ஒழுகுவர் என்பது நாலடியார் காட்டும் நல்லோர் வாழ்வு.

    இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
    பொச்சாந் தொழுகுவர் பேதையார் – அச்சார்வு
    நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்

    என்றும் பரிவ திலர்.  (நாலடி – 184)

    ”நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மை கடை” என்று நாயனார் நவின்றதும் இஃதே!

    மேன்மக்கள் தம்மிடம் குற்றம் ஏற்படாவண்ணம் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ஏன்?

    அவர்களிடத்து உண்டாகும் குற்றம் வெள்ளையெருதின்மேல் இட்ட சூடுபோல அனைவருக்கும் விளங்கித் தோன்றும். அதேசமயம் அந்த வெள்ளையெருதைச் சூடிடுதலே யன்றிக் கொன்றாற்போன்ற துன்பங்களைச் செய்தாலும் கீழ்மக்களிடத்தில் எந்தக் குற்றமும் விளங்கித் தோன்றாது. காரணம்…கீழோரை யாரும் ஒரு பொருட்டாக மதியார். மேலோரின் செயல்களோ அனைவராலும் உற்றுநோக்கப்படும். ஆதலால் அவர்கள் தங்கள் செயல்களில் மாசு நேராமல் காத்தல் அவசியமாகின்றது.

    பெருவரை நாட! பெரியோர்கட் டீமை  
    கருநரைமேற் சூடேபோற் றோன்றும்; – கருநரையைக்
    கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
    ஒன்றானும் தோன்றாக் கெடும்.  (நாலடி – 186)

    இதே கருத்தை,

    ”குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
    மதிக்கண் மறுப்போல் உயர்ந்து” என்று வள்ளுவப் பெருந்தகையும், 

    ”கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்
    ஒன்றும் சிறியார்கண் என்றானும் – தோன்றாதாம்
    ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
    குன்றின்மேல் இட்ட விளக்கு” என்று பழமொழி நானூறும் பாங்குறப் பகர்கின்றன.

    கீழோன் ஒருவன் முகஞ்சுளித்துப் பிறரைப்பற்றிக் கொடிய கோளுரை கூறித் தம்மை மயக்கினாலும், அம்மக்கள்பால் மனவேறுபாடு சிறிதுமின்றி முற்கொண்ட கருத்துறுதியினின்று அசைதலில்லாதவரே விளக்கினில் எரியும் ஒள்ளிய தீப்பிழம்புபோன்று அழுக்கற்ற நெஞ்சுடையவராவர். ஆகலின் பிறரின் கோளுக்கும் குறளைக்கும் செவிமடுக்காது தாம் கொண்ட கொள்கையில் உறுதியுடையோராய்த் திகழ்தலே மேன்மக்கட்கு அழகாகும் என்றறிக.

    கடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி 
    மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
    துளக்க மிலாதவர் தூய மனத்தார்
    விளக்கினுள் ஒண்சுடரே போன்று.  (நாலடி – 189)

    நல்லாரைக் காண்பதுவும், நல்லார் சொல் கேட்பதுவும், நல்லாரோடு இணங்கியிருப்பதுவும் எல்லார்க்கும் நன்மை பயக்கும்!

    *****

    துணை நூல்கள்:

    1. 1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
    3. பழமொழி நானூறு – ம. இராசமாணிக்கம் பிள்ளை

     

    [தொடரும்]

     

     

    Share
  • இச்சையின் பிடியிலிருந்து இளம் பிஞ்சுகளைக் காப்போம்…!

    ஆ. செந்தில் குமார்.

    அனைத்திலும் குழந்தைகள் முதன்மையாக இருப்பதற் கேங்கும் பெற்றோரால்…
    அகவை ஐந்தை எட்டுவதற்குள் ஆற்ற வியலா மனவுளைச்சல்…
    அளித்திடும் இந்த கல்விமுறை அடிப்படை மாபெரும் தவறல்லவா…?

    பகட்டு வாழ்வே மகிழ்வளிக்கும் என்று எண்ணும் மாணவனை…
    பணம்காய்க்கும் மரமாய் உருவாக்கத் தெரிந்த இந்த பள்ளிகட்கு…
    பண்பில் உயர்ந்த சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தெரியாதா…?

    வழித்தடம் பிறழும் மனிதனுக்கு வாய்ப்புகள் இங்கே ஏராளம்…
    வீதிக் கிரண்டு மதுக்கடைகள் விதிமுறை மீறித் திறந்திருக்கும்… இளைஞன்
    வாசத்தை மட்டும் முகர்ந்துவிட்டு வந்த வழியே செல்வானா?

    இதயம் கவரும் திரைத்துறையில் அரைகுறை ஆடைக் கலாச்சாரம்…
    இருக்கும் ஊடகத்தில் பெரும்பாலும் இச்சையைத் தூண்டும் விளம்பரங்கள்…
    இம்மி அளவேனும் இவற்றுக்கு சமுதாய அக்கறை வேண்டாமா…?

    வன்முறை ஆபாசம் மலிந்திருக்கும் இணைய வசதிகள் மிகுந்திருக்கும்…
    வயது வரம்பின்றி யாவருமே பார்த்திடும் அந்த நிலையிருக்கும்… காணும்
    வயதில் முதிர்ந்த கிழவனுமே புத்தன் காந்தி ஆவானா…?

    அலைபாயும் பருவத் தொடக்கத்தில் அன்பைச் செலுத்த மறந்துவிட்டு…
    ஆப்பிள் ஆண்டிராய்டு அலைப்பேசி பகட்டுக்காக வாங்கித் தந்து…
    அழிவுப் பாதையின் வாயிலுக்கு அழைத்துச் செல்வது முறைதானா…?

    அழகுற அணிந்தும் பயனில்லை அப்பட்டமாய்த் தெரியும் அங்கங்கள்…
    அதுபோன் றிருக்கும் ஆடைகளை அணிவதற் கனுமதி அளித்துவிட்டு…
    அன்னை தந்தை இருவருமே குய்யோ முறையோ எனலாமா…?

    அகவை ஐந்து ஆனாலும் ஐம்பதைக் கடந்துச் சென்றாலும்…
    அன்னை தந்தை இருவருக்கும் அன்புக் குழந்தை என்றாலும்…
    அடுத்தவர் கண்களில் அக்குழந்தை அங்ஙனம் தோன்றுமென எண்ணலாமா…?

    இருபத்து நான்கு மணிநேரம் இயற்கை நமக்கு அளிக்கையிலே…
    இருபத்து நான்கு மணித்துளிகள் தம் பிள்ளைகட்கு ஒதுக்காமல்…
    இருக்கும் மணித்துளி அனைத்தையுமே காசுகளாக்கி என்ன பயன்…?

    இணைய சேவைகள் அனைத்திலுமே நெறிமுறை ஏதும் வேண்டாமா…?
    இச்சை கொண்டோர் பிடியிலிருந்து பிஞ்சுகளைக் காக்க வேண்டாமா…?
    இந்திய அரசு நினைத்துவிட்டால் ஒருநொடி இதற்குப் போதாதா…?

    பண்பில் சிறந்த குழந்தைகளை பெற்றோர் உருவாக்கித் தரவேண்டும்…!
    பண்பில் சிறந்த சமுதாயத்தை பள்ளிகள் உருவாக்கித் தரவேண்டும்…!
    பண்பில் சமுதாயம் சிறந்திடவே அரசு வழிவகை செயவேண்டும்…!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180720 Krishnapremi A4 Wcol charcoal -lr 100dpi

    ‘சங்கூ துதுமந்தி,சாட்டையில் கண்ணபிரான்
    அங்கிருந்த வாறே அருச்சுனர்க்கு -சங்கீதை(சங்கு கீதை)
    சொல்கின்றார் ’’சவ்யஸாஸி சோம்பல் அழகல்ல
    வில்கன்றை ஏந்து விஜய்’’….கிரேசி மோகன்….!

    Share
  • பாலக்காடுமாவட்டத் தமிழின மக்களிடையே வழக்கிலிருக்கும் ஒப்பாரிப் பாடல்களில் வாழ்வியல் விழுமியங்கள்

    முனைவா் ஆறுச்சாமி.செ, உதவிப்பேராசிரியா், கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம் ஈச்சநாரி, கோவை-21

    ஒப்பாரிப் பாடல்கள்

                இறந்தவா் அருகிலிருந்து இறந்தவரின் பெருமைகளைக் குறித்துப் பெருந்துன்பப்பட்டு அவரது உறவினா்கள் புலம்பும் கையறுநிலைப் பாடல்களே ஒப்பாரிப் பாடல்களாகும்.

    “கழிந்தோர் தேவத்து அழிபடா் உறீஇ

    ஒழிந்தோர் புலம்பியக் கையறு நிலை”    ( தொல். பொரு புறம்.. 1025)

    என்று தொல்காப்பியம்; ஒப்பாரி குறித்துக் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எண்வகை மெய்ப்பாடுகள் குறித்து கூறவரும் தொல்காப்பியா் அதில் ஒருவகையான ‘அழுகை’ தோன்றுவதற்கான நிலைக்களன்களைச் சுட்டுகையில்,

                            “இளிவே இழவே அசைவே வறுமையென

                            விளிவில் கொள்கை அழுகை நான்கே”          ( தொல். பொரு. 1199)

    என்கிறார் இறப்பில் ஏற்படுவது அழுகை என்கிறார். இதுவே ஒப்பாரியின் தொடக்கநிலை எனக் கொள்ளலாம். அழுகையில் உருவாவதே ஒப்பாரிப் பாடலாகும்.

    ஒப்பாரி – சொல் விளக்கம்

                தமிழில் ஒப்பாரிக்கு ஒப்பாரி, பிலாக்கணம், பிணக்கானம், கையறுநிலைப் புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு, அழுகைப்பாட்டு போன்ற பல பெயா்கள் வழங்கப்படுகின்றன.

                ஒப்பாரி என்பது ‘ஒப்ப + ஆரி = ஒப்பாரி’ எனும் வகையில் உருவானதாகும். இதற்கு தமிழ்ப் பேரகராதி ‘அழுகைப் பாட்டு’ என்று பொருள் கூறுகிறது. ஆங்கிலத்தில் ஒப்பாரி என்பதற்கு  Elegy, Dirge, Death, Lament, Mourning songs போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    ஒப்பாரி- பாடுபொருள்

                இறந்தவரின் அருமை, பெருமைகள், குணநலன்கள், இறந்தவரின் இழப்பால் அவா் குடும்பத்தார் அடையும் துன்பம் போன்றவை ஒப்பாரியில் பாடுபொருள்களாக அமைகின்றன. பெண்கள் மட்டுமே ஒப்பாரி பாடுகின்றனா். ஆண்கள் பாடுவதில்லை. ஒப்பாரி பாடத் தயங்கினால் உடனே வயதானவா்கள்,

                                        “ஒப்பாரி பாடுங்கடிங் கொப்பனோளிகளா

                                        தப்பாம பாடுங்கடி தாசனோளிகளா”

    என்று பாடி ஒப்பாரியைத் துவங்கி வைப்பா். இவ்வின மக்களிடையே சேகரிக்கப்பட்ட ஒப்பாரிப் பாடல்களைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்திக் காணலாம்.

    .       பெற்றோர்இறப்பில் மகள் பாடும் பாடல்

    ஆ.      கணவனை இழந்த மனைவி பாடும் பாடல்

    இ.       சகோரதனை இழந்த சகோதரி பாடும் பாடல்

    ஈ.        மாமியாரை இழந்த மருமகள் பாடும் பாடல்

    உ.       அண்ணன் மனைவி (அண்ணியின் )இறப்பில் பாடும் பாடல்

    அ . பெற்றோர் இறப்பில் மகள் பாடும் பாடல்  

                                        ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

                                        தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’

    என்பது ஆன்றோர் வாக்கு. தாயும், தந்தையும் தம் நலனைக் கருத்தில் கொள்ளாது பிள்ளைகளின் மேன்மைக்காகப் பாடுபடுபவா்கள். பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக அவா்கள் எல்லாவிதத் துன்பங்களையும் தாங்கிப் பிள்ளைகளை வளா்க்கின்றனா்.

                பத்துமாதங்கள் வயிற்றில் சுமந்து, வலிகளையெல்லாம் தாங்கிக் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் தாய். பின்னா் தன் விருப்பு வெறுப்புக்களைக் குறைத்துக்கொண்டு, தான் பெற்ற பிள்ளைக்காக அவள் வாழ முற்படுகிறாள். தன்னைப் பெற்று வளா்த்துச் சீராட்டி, பாராட்டி வளா்த்த தாய் இறந்தவுடன் அத்துன்பத்தைத் தாளாமல் மகள் அழுகிறாள். தன்னை வளா்த்த தாயினைப் பிரிந்த துயரத்தில் அவள் இருந்தால் தன்னை எப்படியெல்லாம் கவனித்திருப்பாள் என்று கூறி அழுகிறாள்.

                                        “வடக்கே வளஞ்சிருக்கும்

                                        வளையாச் சிறு மூங்கோ

                                        வாட்டிக் கணுவொடச்சு

                                        வரிசை வச்சும் போளதட்டி

                                        வரிசை வரும் நாளையிலே – சிறு

                                        வயசிலையோ தாயௌந்தே

                                        தெக்கே வளஞ்சிருக்கும்

                                        சின்னக் கணு மூங்கோ

                                        சீவிக் கணுவொடச்சு

                                        சீருவச்சும் போளதட்டி

                                        சீருவரும் நாளையிலே

                                        சிறுசிலையோ தாயௌந்தே

                                        கோடெ மளபேயும்

                                        கொம்பளவு தண்ணிவரும்

                                        கொம்பளவு தண்ணியிலெ – என்

                                        குயிலி நனஞ்சு வந்தா – என்

                                        தாயோ இங்கிருந்தா

                                        எலுமிச்சங்காப் பட்டெடுத்து

                                        கூந்தேலுணா்த்துமிம்பா

                                        கொளந்த பசியாத்துமிம்பா

                                        தாயோ காணமிங்கோ

                                        எலுமிச்சங்காப் பட்டெடுத்து

                                        கூந்தலுணா்த்தலியே

                                        கொளந்த பசியாத்தலியே..”

    என்று அப்பாடல் அமைகிறது.

                பிள்ளைகளைப் பெற்று வளா்ப்பது தாயாக இருந்தாலும் அப்பிள்ளைகளின், உயா்வுக்கும், வாழ்வுக்கும் ஆதாரமாக இருப்பவா் தந்தைதான். அனைத்துச் செல்வங்களையும் குறையாமல் அளித்துச் சீரும் சிறப்புமாய் வாழ்க்கையை அமைத்துத் தர தந்தையே முக்கியக் காரணமாயிருக்கிறார். அத்தகைய தந்தை இறந்து போனால் அதன்மூலம் ஏற்படும் துன்பங்களை ஒப்பாரி மூலம் வெளிப்படுத்துகிறாள் மகள்.

                                        “ஆத்துக்கு அந்தப் பக்கம் – இவ

                                        அருங்கிளியே மாலையிட்ட

                                        அப்பனுக்கு சீக்குமுன்னு

                                        ஆனைமேலே காயுதங்கோ – நான்

                                        காயுதத்தைக் கண்டுடனே

                                        ஆனைக்குந் தீனுவச்சு கூடவந்த

                                        ஆளுக்குஞ் சாதமிட்டு

                                        ஆனைமேலே கால்போட்டு

                                        அஞ்சாம வந்துவிட்டேன்

                                        ஆறும் பெருகி வரும்

                                        அக்கரையும் பொங்கிவரும்

                                        ஆனையுட்டும் கீளெறங்கி

                                        ஆத்தேயடிச் செறக்கி

                                        அடிவரிசே பாலங்கட்டி – நான்

                                        ஆத்தயுட்டும் மேலேறி

                                        அலச்சுத்தா போகமுடியும்.

                                        குத்தியுட்டும் பொம்மாரே – நான்

                                        பொறந்ததா அரண்மனைக்கு

                                        போறான்னா சேதியுன்னு – நீ

                                        தட்டும் பறையடங்கு

                                        சருகாட்டம் சித்த நிக்கும்”

    என்று அப்பாடல் அமைகிறது.

    ஆ . கணவனை இழந்த மனைவி பாடும் பாடல்

                தன்னுடன் இல்லறம் நடத்திய கணவன் தன்னைவிட்டுப் பிரிந்து போனால் அத்துயரம் மனைவிக்கு தாங்கொணாத் துயரமாகும்.

                            “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்”

    என்று அத்துயரம் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். ஊனும், உயிருமாய் ஒன்றிணைந்து வாழ்நதிருந்த தன் கணவன் தன்னைவிட்டு இறந்தவுடன் மனைவியால் அதை தாங்க முடிவதில்லை. கணவன் தன்னிடம் காட்டிய அன்பையும், ஆதரவையும், கணவனின்றி தானும், தன் பிள்ளைகளும் படும் துயரங்களையும் தன் பாடலில் ஒப்பாரியாய் வைத்துப் பாடுகிறாள்.

                                        “கோட்டைசுத்தி கல்பொறுக்கி

                                        கோபுரங்கோள் உண்டுபண்ணி

                                        கோபுரத்துக் குள்ளாலே

                                        கோடி போட்டாந் தன்னாசி

                                        கொள்ள பணந் தாரனும்பான்

                                        கொடியே யெடும்னும்பா

                                        கொள்ள பணம் தாரண்ணாலும்

                                        கொடியே யெடுக்க மாட்டேன்

                                        கொள்ளப் பணம் வாங்கமாட்டேன்

                                        கோபுரத்துக்குள் ளிருக்கும்

                                        கொம்பானை வேணுமிம்பேன்

                                        மாடிசுத்தி கல்பொறுக்கி

                                        மண்டபங்கோள் உண்டுபண்ணி

                                        மண்டபத்துக் குள்ளிருக்கும்

                                        என் மதயானை வேணுமிம்பேன்

                                        வள்ள பணந் தாரனும்பான்

                                        வளையே யெடும்னும்பான்

                                        வள்ளப்பணம் வாங்கமாட்டேன்

                                        வளையே யெடுக்க மாட்டேன்

                                        மண்டபத்துக் குள்ளிருக்கும்

                                        என் மதயானை வேணுமிம்பேன்

                                        பொன்னும் புளியமரம்

                                        பொதச்சுந்தான் போகணும்பான்

                                        பொன்னும் விசிறி கொண்டு

                                        பொதுக்கிணற்றுத் தீர்த்தங்கொண்டு

                                        புகையமைக்க வந்தவங்கோ

                                        புகையை யமைக்காம

                                        பொன்னுயிர சூரையிட்டோம்

                                        தங்கோ புளியமரம்

                                        தாளன் புடிச்சு போகணும்பான்

                                        தங்கோ விசிறி கொண்டு

                                        தனிக்கெணற்றுக் தீர்த்தங்கொண்டு

                                        தாறனை அணைக்காம

                                        நல்லுயிரைச் சூரையிட்டோம்”

    இ. சகோதரனை இழந்த சகோதரி பாடுவது

                சகோதரன் – சகோதரி உறவுமுறை பாசப்பிணைப்பு நிறைந்ததாகும். சகோதரிக்குத் திருமணமானவுடன் அவளுக்கும், அவள் பிள்ளைகளுக்கும் சகோதரன் சீா்வரிசைகள் செய்து அழகு பார்க்கிறான். தாய்மாமன் சீர் நாட்டுப்புறச் சடங்குகளில் முக்கியமான சீராகும்.

                அத்தகைய சிறப்புக்குரிய சகோதரன் இறந்துபோனால் சகோதரி ஆதரவற்றவளாகிறாள். தன் சகோதரனின் பாசப்பிணைப்பும், இனி தன்னை ஆதரிக்க யாருமில்லையே எனும் ஏக்கமும் அவளது ஒப்பாரியில் எதிரொலிக்கிறது.

                                        “பத்துக் குஞ்சோம் பொட்டுவண்டி

                                        பாதையிலே சாரோடும்….. ஏ

                                        பாதையிலே போறவரு …. ஏ

                                        பச்சவண்டி யாருதுன்னா

                                        பாதை சாருக்காருது

                                        பச்சவண்டி நம்முளுது

                                        பச்சவண்டிக் குள்ளிருக்கும்

                                        பாதால எமபொறப்பு……..நான்

                                        பாலக் கொண்டி பக்கம் வச்சு

                                        பன்னீரே கிட்ட வச்சு………நான்

                                        பாலே குடியுமிண்ணா

                                        பன்னீரே சாப்பிடுங்கோ

                                        பாலும் பாசியுமில்லே

                                        பன்னீரோ தாகமில்லே…..உன்

                                        பாடு கொற சொல்லுமின்னா

                                        அண்ணா இன்னக்கி

                                        பாடு கொற செல்லியிட்டா

                                        அண்ணா சாமிறெயங்கீரும்

                                        உங்கொ தங்கமுகம் வாடீரும்”

    ஈ . அண்ணியின் இழப்பில் பாடப்படும் பாடல்

                சகோதரனின் மனைவி (அண்ணி) இறந்து போனால் சகோதரிபாடும் பாடலில் அண்ணியின்றி வாடும் அண்ணன், பிள்ளைகள் ஆகியோரின் துன்பம், தன்னை ஆதரித்த அண்ணியின் பாசம் போன்றவை பாடுபொருள்களாக அமைகின்றன.

                                        “இக்கி பச்சக்கல்லு சூட்டடுப்பு

                                        பால்காச்சப் போட்டடுப்பு

                                        இக்கிப் பாலோ கலந்தாலும்

                                        இக்கிப் பாசம் பிரியாது

                                        இன்னக்கிப் பாலும் கலராச்சோ

                                        பாசம் பிரியாச்சோ…..

                                        இக்கி நீலக்கல்லு சூட்டடுப்பு

                                        நெய்காச்சப் போட்டடுப்பு

                                        இக்கிப் நெய்யோ கலந்தாலும்

                                        இக்கிப் நேசோம் பிரியாது

                                        இன்னக்கிப் நெய்யும் கலராச்சோ

                                        நேசம் பிரியாச்சோ…..”

    உ . மாமியார் இழப்பில் மருமகள் பாடுவது     

    தாயைப் போல தன்னைப் பேணிக் காத்த தன் மாமியார் இறந்து போனவுடன் அவரின்றித் தானும், தன் கணவனும், குழந்தைகளும் பெரியவர்கள் துணையின்றி ஆதரவற்றுப் போனதை எண்ணி மருமகள் ஒப்பாரி பாடுகிறாள்.

                                        “மாமியோ நல்ல மாமி – எனக்கு வந்த

                                        மன்னவரோ ராசபுத்தி – இக்கி

                                        மன்னவரேப் பெத்தெடுத்தோம்

                                        மதிப்புள்ளோர் காலமிங்கோ – இக்கி

                                        மயிலி நான் தொணையௌந்தேன்

                                        மன்னவரோ தாயௌந்தார்.

                                        இக்கி கோட்டயோ நல்ல கோட்ட – எனக்கு வந்த

                                        கொண்டவரோ நல்லபுத்தி

                                        கொண்டவா; மேல் குத்தமில்லே

                                        கோட்டைமேல் தோசமில்லே – என்னக்

                                        கொண்டவரேப் பெத்தெடுத்தோம்

                                        கொணமுள்ளோர் காணமிங்கே – இக்கி

                                        குயிலி நான் தொணையௌந்தேன் – என்னக்

                                        கொண்டவரோ தாயௌந்தார்”

    பயன்பட்ட நூற்கள்,

    1. சு. சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு
    2. ஆறு. அழகப்பன், நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு
    3. தொல். பொருள். பா. 1205
    4. தொல். பொருள். பா. 1199
    5. சிலப்பதிகாரம்.

     தகவலாளிகள்

    1. பாக்கியம்மாள், தகவலாளி, வேலந்தாவளம், வடகரப்பதிப் பஞ்சாயத்து பாலக்காடு.

    2.மாரியம்மாள் , தகவலாளி,  புதுச்சேரி பஞ்சாயத்து, பாலக்காடு.

    Share
  • தொல்காப்பிய உரையாசிரியர்களின் சங்கநூல் பயிற்சி

    -முனைவர். இரா. இலக்குவன்                                              

    இன்று கிடைக்கின்ற தமிழ் இலக்கண நூல்களுள் முதன்மையானதாகவும் வளமான உரைமரபுடனும் விளங்குவது தொல்காப்பியம் ஆகும். இதற்குப் பல்வேறு காலகட்டங்களில் ஏழு உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகள் உள்ளன. காலவரிசைப்படி தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர் என்று போற்றத்தகும் இளம்பூரணர் (கி.பி.11 ஆம் நூற்றாண்டு), அவருக்குப்பின் சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார், ஆத்திரேயர் ஆகியோர் தொல்காப்பிய உரையாசிரியர்களாவர். இவர்களுள் சேனாவரையர், கல்லாடர், தெய்வச்சிலையார், ஆத்திரேயர் ஆகிய உரையாசிரியர்கள் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை எழுதியுள்ளனர்.

    வியாகரணம் (சொல்) என்பது வடமொழியாளர்களிடையே ஒரு தனிக் கல்வியாகப் பயிலப்பட்டும் போற்றப்பட்டும் வந்ததும் வேதப்பயன்பாட்டுக்காக உருப்பெற்றதும் ஆகும். எனவேதான் வடமொழி முனைப்பு மிக்க அக்காலத்தில் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் அதிகமான உரைகள் எழுந்தன.

    தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியரான இளம்பூரணர் காலத்திலும் அதற்கு முன்னருமாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், அதனடியாகத் தோன்றிய வடமொழி மரபின் மேலாதிக்கம், இலக்கிய வளர்ச்சி மற்றும் பாடுபொருட்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை தொல்காப்பியம் தவிர்த்த வடமொழிச்சார்பு இலக்கண மரபுகளை வளர்த்தெடுத்தன. உரையாசிரியர் காலங்களில் சங்க இலக்கியப்பயிற்சி பொதுவாக எந்நிலையில் இருந்தது என்பதும் ஆய்வுக்குரியதாகும்.

    கி.பி 7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் நிலவிய சமூக அரசியல் சூழல்களும் வடமொழி மரபின் தாக்கங்களும் அவற்றுடன் தமிழ் நடத்திய கொள்வினை கொடுப்புவினை உறவுச்சூழல்களும் அகமும் புறமுமான சங்கச்செய்யுள் மரபினை பின்னுக்குத் தள்ளுவனவாய் அமைந்தன.     சங்ககாலத் தமிழ் வழக்கு நின்று போய் வெகுகாலமாகி விட்டது. அதன் சிறப்பியல்புகளான இனிமை தெளிவு சுருக்கம் நேர்மை முதலிய பண்புகள் யாவும் பெரும்பான்மை இலக்கியங்களின்றும் நீங்கிப் பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டன” என்று கூறும் வையாபுரிப்பிள்ளை பின்னர் நடந்த மீட்சியியக்கத்தில் உரையாசிரியர்களின் பங்கு முக்கியமானது என்று கருதுகிறார், (தமிழ்ச்சுடர் மணிகள்).

    இக்காலத்தில்தான் இளம்பூரணர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதுகிறார். பேராசிரியர் உரை பொருளதிகாரத்தின் பின்னான்கியல்களான செய்யுளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் ஆகியவற்றிற்கு மட்டுமே கிடைத்துள்ளது. எனினும் தொல்காப்பியம் முழுமைக்கும் அவர் உரை எழுதியமைக்குச் சான்றுகள் அவரது உரையினுள் காணக்கிடைக்கின்றன. நச்சினார்க்கினியரும் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவராவார்.

    சங்க இலக்கியம் என்பது பாட்டும் தொகையும். தொல்காப்பியத்தின் காலம் வேறு; சங்க இலக்கியக் காலம் வேறு. உரையாசிரியர்கள் காலம் வேறு. இவற்றைப் பற்றி முடிந்தமுடிவு எதுவும் இல்லையெனினும் தொல்காப்பியத்தின் மூலத்தோற்றம் கி.மு. முதல் நூற்றாண்டினது என்றும் அதன் இறுதி வடிவம் கி.பி.500 க்கு முன் இருக்க முடியாது என்றும் கமில் சுவலபில் கருதுகிறார். (kamil zvelebil). சங்ககாலத்தின் காலம் தொல்காப்பியத்தின் காலத்திற்கு முன்னும் பின்னுமான விரிந்த காலப்பரப்பை அடக்கியது.

    இளம்பூரணர்

    இளம்பூரணர் தமது உரையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, பரிபாடல், புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து ஆகிய எட்டுத்தொகை நூல்களையும் சிறுபாணாற்றுப்படை தவிர்த்த பிற பத்துப்பாட்டு நூல்களையும் பயன்படுத்துகிறார். இளம்பூரணர் தமது பொருளதிகார உரையில் 1308 இடங்களில் மேற்கோள் பாடல்களைத்தருகிறார்.

    சங்க நூல்களைக் குறிப்பிடும் முறைகள்:

     அரிமான் இடித்தன்ன என்னும் பாலைக்கலியுள் (செய்.67 உரை)
    நகையா கின்றே தோழி என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள்
    (மெய்ப்.4.உரை)
    அறனின்றி அயல் தூற்றும்’ என்னும் கலியுள் (செய்.72.உரை) எனப் பாடலின் முதல் தொடரையும் நூற்பெயரையும் (கலித்தொகை) நூலின் உட்பிரிவையும் (பாலைக்கலி) இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.

    தொடியுடை தோள் மணந்தனன் என்னும் பாட்டுள் (செய்.68 உரை)
    பூந்தாமரைப் போதலமர என்னும் பாட்டுள் (செய்.68. உரை)
    நெடுங்கயிறு வலந்த என்னும் பாட்டினுள் (செய்.59.உரை) என்று நூற்பெயர் சுட்டாமல் பாடலின் முதல் தொடரை மட்டுமே குறிப்பிட்டு நூல்பெயரைக் குறிப்பிடாத போக்கும் அவரிடம் காணப்படுகிறது.

    கலி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டு கொள்க (அகத்.15.உரை)
    கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் (புறத். முகப்புரை) எனச் சான்றோர் செய்யுளில் முதலாவதாகக் கலித்தொகையை வைத்துப் பேசுகிறார். கலித்தொகையை அவர் கலி (அகத்.15.உரை) என்றும் கலிப்பா (செய்.132.உரை) என்றும் கலித்தொகை (செய்.132.உரை) என்றும் கலிப்பாட்டு (புறத்.27) என்றும் தமது உரையில் குறிப்பிடுகிறார். கலித்தொகையை முதலாவதாக வைத்து எண்ணும் மரபு அவருடையது என்பது விளங்குகிறது. எட்டுத்தொகை நூல்களை வரிசைப்படுத்தும் ஒரு வெண்பா கலித்தொகையை இறுதியாக வைக்கிறது.

    மையற விளங்கிய என்னும் மருதக்கலியுள் (கற்பு.6.உரை)
    இகல்வேந்தன் சேனை என்னும் முல்லைக்கலியுள் (களவு.21 உரை)
    என்று கலித்தொகையின் உட்பிரிவுகளான மருதக்கலி, முல்லைக்கலி, பாலைக்கலி, நெய்தற்கலி, குறிஞ்சிக்கலி ஆகியவற்றையும் இளம்பூரணர் குறிப்பிடுவர்.

    பேராசிரியர்:

    பேராசிரியர் பொருளதிகார உரையில் எட்டுத்தொகை நூல்களிலிருந்தும் குறிஞ்சிப்பாட்டு தவிர்த்த பிற பத்துப்பாட்டு நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாள்கிறார். 

    மணி நிற மலர்ப்பொய்கை என்னும் கலிப்பாவினுள் (செய்.76.உரை)
    அறவோ ருள்ளா ரருமறை காப்ப (செய்.121.உரை) என்னும் பரிபாடலுள்”‘ என நூலின் பெயரைக்குறிப்பிடுகிறார்.  சங்க இலக்கியத்தைப் பாட்டும் தொகையும் என்று குறிப்பிட்டவர் பேராசிரியரே ஆவர்.

    நச்சினார்க்கினியர்:

    நச்சினார்க்கினியர் அதிகமான நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாள்பவர் ஆவார். இவரது பன்னூல் பயிற்சியால் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று போற்றப்படுகிறார். இவர் சங்க இலக்கியங்களான கலித்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றிற்கு உரை எழுதியவர். மேலும் குறுந்தொகையின் கடைசி 20 பாடல்களுக்கு உரை எழுதினார் எனவும் கருதப்படுகிறது. (இளங்குமரன், இரா,) நச்சர் தமது உரையில் 2536 மேற்கோள் பாக்களைக் காட்டுகிறார்.

    சங்க இலக்கியங்கள் அனைத்தையும் எடுத்தாளும் நச்சர் நூலின் பெயர் , அதன் உட்பிரிவு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து என நூல்களின் பெயரையும் மணிமிடைபவளம், களிற்றியானை நிரை, நித்திலக்கோவை, பாலைக்கலி, முல்லைக்கலி போன்ற நூலின் உட்பிரிவுகளையும் நச்சர் குறிப்பிடுகிறார்.

    விசும்புற நிவந்த என்னும் அகப்பாட்டும் அது (புறத்.5.உரை)
    இக்களிற்றியானைனிரையுள் (அகத்.3.உரை)
    சுணங்கணி வனமுலை என்னும் குறிஞ்சிப்பாட்டும் அது. ‘வீங்குநீர்’ என்னும் மருதக்கலியுள்…………….(அகத்.3.உரை) எனப் பாடல் மற்றும் பாடல்களின் முதற்தொடரையும் நூற்பெயரையும் நச்சர் எழுதுகிறார்.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் சங்க அக இலக்கியங்களை தத்தமது உரைகளில் மேற்கோளாகப் பயன்படுத்தும் விதத்தைக் காணலாம்.

    நற்றிணை

    இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  60
    பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள்   11
    நச்சர் காட்டும் மேற்கோள்கள்       129

    குறுந்தொகை

    இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  129
    பேராசிரியர்                         101
    நச்சர்                              227

    ஐங்குறுநூறு

    இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  70
    பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள்   22
    நச்சர்   காட்டும் மேற்கோள்கள்      169

    அகநானூறு

    இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  93
    பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள்  177
    நச்சர் காட்டும் மேற்கோள்கள்        263

    கலித்தொகை

    இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  159
    பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள்  186
    நச்சர் காட்டும் மேற்கோள்கள்        313

    பரிபாடல்

    இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  4
    பேராசிரியர்  காட்டும் மேற்கோள்கள்  6
    நச்சர்      காட்டும் மேற்கோள்கள்    5

    உரையாசிரியர்கள் அதிகமாக மேற்கோள் காட்டும் அக நூல் கலித்தொகை ஆகும். கலி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டு கொள்க என்று இளம்பூரணர் அந்நூலைச் சங்க செய்யுளில் முதன்மையானதாகக் காட்டுவதைக் காணும்போது உரையாசிரியர்கள் காலத்தில் அந்நூல் பெற்றிருந்த சிறப்பிடம் புலனாகிறது. மேலும் நச்சர் சங்க நூல்களுள் இதற்கு மட்டுமே உரை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    உரையாசிரியர்களால் மிகக் குறைவாகக் காட்டப்படும் நூல் பரிபாடல் ஆகும். பரிபாடல் 70 பாடல்களை உடையது எனினும் தற்போது 22 பாடல்களே கிடைக்கின்றன. தொல்காப்பியர் குறிப்பிடும் பரிபாட்டு காமப்பொருண்மையதாகவே வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பரிபாடல் எழுபதும் கடவுளர் வாழ்த்துதல் பொருண்மையதாக உள்ளன. இதை சங்கப்பனுவல்களுள் மிகப் பிற்பட்டதும் பக்தி இலக்கியக் காலத்தை ஒட்டியதும் எனக்கொள்ளமுடிகிறது. எனவேதான் உரையாசிரியர்களால் இது பெருமளவில் மேற்கோளாக எடுத்தாளப்படவில்லை என்று கருதப்படுகிறது.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் தங்களது சங்க இலக்கியப் புலமையை கீழ்கண்ட வகைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

    1. அதிக அளவில் மேற்கோள்களாக எடுத்தாளுதல்
    2. பாடல்களைப் பாடவேறுபாடுகளுடன் தருதல்
    3. குறையுடன் உள்ள மூலப்பனுவலை செம்மையாக்கல்

    4.சங்கப்பாடல்களுக்கு தொல்காப்பிய மரபு வழி திணை, துறை வழங்குதல்

    பாடல்களைப் பாடவேறுபாடுகளுடன் தருதல்:

    நற்றிணையில் 380ஆவது பாடல் இளம்பூரணராலும் நச்சராலும் மேற்கோள்காட்டப்படும் போது நற்றிணையின் அடியெல்லையை மீறியதாக, இளம்பூரணர் 14 அடிகளுடனும் நச்சர் 15 அடிகளுடனும் காட்டுகின்றார். இப்பாடல் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பில் 12 அடிப்பாடலாகவே உள்ளது. இளம்பூரணர் (கற்பியல்,145 உரை)

    ”புரையோ ரன்ன புரையு நட்பின்
    இளையோர் கூம்புகை மருவோர் ஆங்குக்
    கொண்டுசெல் பாணநின் தண்துறை யூரனைப்” என்று 3 அடிகளை (9 முதல் 11 அடிகளாக) இணைத்து 14 அடிப்பாடலாகத் தருகிறார்.

    நச்சர் தமது உரையில் (கற்பியல் 147 உரை)

    புரையோ ரன்ன புரையு நட்பி
    னிளையோர் கூம்புகை மருள வோராங்
    கட்டங் காது விட்டாங் கமைத்துக்
    கொண்டுசெல் பாணநின் தண்துறை யூரனைப்

    என்று 4 அடிகளை (9 முதல் 12ஆம்அடிகளாக) இணைத்து 15 அடிப்பாடலாகத்தருகிறார். மேலும் இப்பாடல் நற்றிணைப்பதிப்பிலும் இளம்பூரணர், நச்சர் உரைகளிலும் பாடவேறுபாடுகளுடன் காணப்படுகின்றது.

    வ.எ         அடி நற்றிணை இளம்பூரணர்       நச்சர்

     

    1 4      அதனால்    இதனால் அதனால்
    2 10     ——    மருள்வோர் மருளவோர்
    3 11     பூணிலை பூணிலை பண்ணிலை
    4 12   வேட்டதில் வேட்டத்தில் வேட்டதில்

     

    உரையாசிரியர்கள் இருவரும் நற்றிணை மூலபாடத்துடன் வெவ்வேறு இடத்தில் பாடவேறுபாடு கொள்கின்றனர். நச்சர் ஓர் இடத்திலும் இளம்பூரணர் 2 இடங்களிலும் இருவரும் தத்தமக்குள் ஓர் இடத்திலும் என 4 இடங்களில் வேறுபட்ட பாடம் கொள்கின்றனர்.

    குறையுடன் உள்ள மூலப்பனுவலை செம்மையாக்கல்:

    உ.வே.சா-வுக்குக் கிடைத்த பரிபாடல் ஏட்டுச்சுவடிகளில் முதலிலும் இறுதியிலும் உள்ள ஏடுகள் அழிந்திருந்தன. எனவே பரிபாடலின் முதல் பாடல் எதுவென்று அவரால் அறியமுடியவில்லை. அந்நிலையில் உ.வே.சா. தொல்காப்பியச்செய்யுளியல் உரையில் உள்ள இளம்பூரணர் மேற்கோள் வழியே பாடலை மீட்டெடுத்தார் என்பதை அவரது கூற்று வழியே காணலாம்.

               இந்நூற் பரிசோதனைக்குக் கிடைத்தவை முதலிலும் இறுதியிலும் இர்க்க வேண்டிய ஏடுகளில்லாமலும் இடையிலுள்ளவை ஒடிந்தும் இராமபாண வாய்ப்பட்டும் பழுதுற்றிருந்த பழம்பிரதிகளாதலின் அவற்றிற் காணப்படாமல், ”கட்டுரை வகையின்” என்னும் தொல்காப்பியச்செய்யுளியற் சூத்திர வுரையில் (119) இளம்பூரணவடிகள் காட்டிய மேற்கோள்களிற் காணப்பெற்ற இப்பாடல் மிகச்சிதைந்திருந்த உரைப்பகுதியால் இந்நூலின் முதற் செய்யுளென்று அறியப்பெற்றுத் தமிழ்த்தெய்வத்தின் திருவருட்செயலை நினைந்து இன்புற்று இங்கே பதிப்பிக்கலாயிற்று. (பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும்)

    கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்து” என்ற நூற்பா உரையில் பரிபாடல் பாட்டு முழுவதையும் பகுதிகளாகப் பிரித்து அதன் செய்யுள் உறுப்புகளையும் மேற்கோளாகத் தருகிறார். பாடலின் இடையிடையே,

    இது தரவு
    இஃது எருத்து
    இவை நான்கும் அராகம்
    இஃது ஆசிரியம்
    இது பேரெண்
    இதுவும் ஆசிரியம்
    இவையாறும் பேரெண்
    தனிச்சொல்
    இது சுரிதகம்
    இவை சிற்றெண்ணும் பேரெண்ணும் இடையெண்ணும்
    இது சுரிதகம்

    என்று செய்யுள் உறுப்புகளை இளம்பூரணர் சுட்டிக்காட்டும் மரபு பரிபாடல் பதிப்பினுள் பிறபாடல்களில் பயிலப்பெறவில்லை. இத்தகைய மரபு இளம்பூரணர் அளித்த கொடையாகும்.

    உ.வே.சா கண்டெடுக்காத பரிபாடலடிகள்:

    செய்யுளியல் 123 ஆவது நூற்பா உரையில். ‘முட்டடியின்றிக் குறைவு சீர்த்தாயும்’ வருவனவற்றிற்கு மேற்கோள்களாக,

    ‘நின்னொக்கும் புகழ் நிழலவை” (பரி.1:55) எனவும்

    ”கறையணி மிடற்றினவை
    கண்ணணி நுதலினவை
    பிறையணி சடையினவை” என வரும் என்பார் பேராசிரியர். கறையணி மிடற்றினவை எனத் தொடங்கும் மூன்றடிகள் நச்சராலும் இந்நூற்பா உரைப்பகுதியில் மீளவும் எடுத்துக்காட்டப்படுகின்றது. எனினும் தொல்காப்பிய உரைப்பதிப்பாசிரியர்களோ பரிபாடலைப் பதிப்பித்த உ.வே.சா வோ பிற பரிபாடல் பதிப்பாளர்களோ இவ்வடிகளை பரிபாடல் எனக் குறிக்கவில்லை.

    பேராசிரியர் தமது உரையில், இப்பாடலில் கீழே, ‘மேற்காட்டிய பரிபாடற் செய்யுளுள்” ஒருசார் என்பது ஒழியசை; என்னை? அது சீராகலின் அதனொடு சில அசை கூடியன்றி அசையெனப்படாமையின் ”ஆங்கு” என வருந் தனிச்சொல் வழியசையெனப்பட்டது” என்று எழுதுவர். பேராசிரியர் ‘மேற்காட்டிய பரிபாடற் செய்யுளுள்’ என்று குறிப்பிடுவதால் அவ்வடிகள் பரிபாடல் என்று கருதுதல் தகும். எனினும் முதலாவது பரிபாடலிலிருந்து ஓர் அடியும் மேற்கோளாகத் தருவதால் ‘மேற்காட்டிய பரிபாடற் செய்யுள்’ எது என்பதில் மயக்கம் ஏற்படுகிறது. பேராசிரியர் தமது உரையில் மேற்காட்டிய பரிபாடலுள் ‘ஒருசார்’ ஆங்கு என்ற சொற்கள் பயின்று வருவதாகக் கூறி அதற்கு விளக்கமும் தருவது காணத்தக்கது.

    ஒருசார் என்ற அசையும் ஆங்கு என்ற தனிச்சொல்லும் முதலாம் பரிபாடலுள் உள்ளனவா என்று ஆய்ந்தபோது ஆங்கு என்ற தனிச்சொல் இருப்பதும் ஒருசார் என்ற அசை இல்லாமையும் கண்டறியப்பட்டது. எனவே பேராசிரியர் முதலாவது பரிபாடலைக் குறிக்கவில்லை என்று புலப்படுகிறது. கறையணி மிடற்றினவை என்ற பாடலடிகள் உள்ள பரிபாடலில்தான் ஒருசார், ஆங்கு ஆகிய சொற்கள் இருக்கவேண்டும் என்றும் அதையே பேராசிரியர் குறித்தார் என்றும் உய்த்துணரமுடிகிறது. இப்பாடலடிகள் சிவனைப்பற்றிய வருணணையாக உள்ளன. எனவே இதைச் சிவனைப்பற்றிய பரிபாடல் என்று கருத இயலுகிறது.

    சங்கப்பாடல்களுக்கு தொல்காப்பிய மரபு வழித் திணை, துறை வழங்குதல்:

    அக இலக்கியங்கள் பாடப்பட்ட காலத்தில் தொகுக்கப்படவில்லை. அவை பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொகுக்கப்டடு திணை, கூற்று ஆகியன வழங்கப்பட்டன. உரையாசிரியர்கள் அவற்றிலிருந்து மாறுபட்டுத் தொல்காப்பிய விதிப்படி கூற்றுவகைகள் வழங்குகின்றனர். விரிக்கிற் பெருகும்.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் சங்க இலக்கியங்களுக்குத் திணை துறை வகுத்த முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவை தொல்காப்பிய மரபல்லாது பிற்கால மரபுவயப்பட்டதாகும். நச்சர் .”தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானுற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப்பொருளாகத்துறை கூற வேண்டுமென்றுணர்க” என்று புறநானூற்றுக்குத் திணை, துறை வகுத்த மரபைக் கண்டிக்கிறார். ஏலவே தொல்காப்பிய மரபுப்படியே தொகை நூல்களுக்கு திணை, கூற்று வகைகள் கூறவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

    அதோடு நில்லாது நச்சர் புறப்பாடல்கள் 111க்குத் தொல்காப்பியப் புறத்திணை மரபுப்படி திணை துறைகள் வகுத்துத் தருகிறார். இளம்பூரணர் 76 புறநானூற்றுப்பாடல்களுக்குத் தொல்காப்பியப் புறத்திணை மரபுப்படி திணை துறைகள் வகுக்கிறார். (இலக்குவன், இரா, 2013).

    புறம் 308 ஆவது பாடலுக்குப் பதிப்பில் அடிக்குறிப்பு இல்லை. நச்சர் உரை மூலம் ”இது சீறூர் மன்னன் வேந்தனைப் புறங் கண்டது” என்ற அடிக்குறிப்பைப் பெறமுடிகிறது.

    புறம் 349 ஆவது பாடலுக்குப் பதிப்பில் அடிக்குறிப்பில்லா நிலையில் ”பெருஞ்சிக்கல் கிழான் மகட்கொடை மறுத்தது” என்ற குறிப்பு இளம்பூரணர் உரையில் காணக்கிடைக்கிறது.

    முடிவுரை

    தொல்காப்பிய உரையாசிரியர்களின் சங்கநூல் புலமைக்குச்சில சான்றுகளைக்கண்டோம்.  உரையாசிரியர்கள் தொகை நூல்களைத் தொல்காப்பிய மரபிற்கு ஏற்பவும் மாறுபட்டும் மேற்கோள்களாகத் தந்தும் அவை இரண்டிற்கும் தமிழ்கூறும் நல்லுலகில் நிலையானதொரு உறவை உருவாக்கி வலுப்படுத்தினர். தொகை நூல்களின் பாடல்கள் பலவற்றிற்கு உரைகள், பாடவேறுபாடுகள் தந்து அவற்றை மெருகேற்றினர். தொல்காப்பிய மரபிற்குள் பொருந்தியும் பொருந்தாமலும் வரும் சங்க இலக்கிய இயல்புகளையும் வளர்ச்சிகளையும் இதற்குள் உள்ளடக்கிப் பேசுகின்றனர். தொல்காப்பியத்திற்கும் தொகை நூல்களுக்கும் இன்று நிலவும் அதிகாரபூர்வமான உறவு நிலைபெற்றதில் இவ்வுரையாசிரியர்களின் பங்கு முக்கியமானதாகும்.

    துணைநூல் பட்டியல்

    1.இளம்பூரணர் (உ.ஆ) தொல்காப்பியம் பொருளதிகாரம், திருநெல்வேலி   தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1982.

    2.கோபாலையர்,தி.வே., அரணமுறுவல்,ந., தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (முதல் பகுதி) தமிழ் மண் பதிப்பகம், சென்னை, 2000.

    3.கோபாலையர்,தி.வே., அரணமுறுவல்,ந., தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (இரண்டாம் பகுதி) தமிழ் மண் பதிப்பகம், சென்னை, 2000.

    4.கோபாலையர்,தி.வே., அரணமுறுவல்,ந., தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (மூன்றாம் பகுதி) தமிழ் மண் பதிப்பகம், சென்னை, 2000.

    5. வையாபுரிப்பிள்ளை, எஸ்., தமிழ்ச்சுடர்மணிகள், குமரிமலர் காரியாலயம், சென்னை, 1949

    6.Zvelebil, Kamil., The Smile of Murugan on Tamil Literature of south India, Tuta sub aegide pallas, Leiden,1971

    *****

    கட்டுரையாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை,
    வெ.ப.சு. தமிழியல் ஆய்வுமையம்,
    ம.தி.தா. இந்துக்கல்லூரி,
    திருநெல்வேலி.

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (278)

    சக்திசக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

     

    அன்பான வணக்கங்கள். அதற்குள் ஒருவாரம் பறந்தோடி விட்டதா? காலம் எனும் இந்தக் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது போலிருக்கிறதே ! எது எப்படியாயினும் இதோ இந்த வாரத்தில் இங்கிலாந்தின் செய்திகளோடு உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

    வாரம் வந்து போன வேகம் போல எம்மிடையே ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் ஜனாதிபதி திரு டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் எம்மிடையே வந்து விட்டு சென்று விட்டார். அவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் முதல் வெளிநாட்டுத் தலைவர் அவரைச் சந்திக்கச் சென்றது இங்கிலாந்துப் பிரதமர் திருமதி தெரேசா மே அவர்கள். அப்போதே இங்கிலாந்துக்கு வருமாறு அவருக்கு தெரேசா மே அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பலமுனைகளில் இருந்து அவருக்கு எதிரான குரல்கள் கிளம்பின. அதன் எதிரொலியாக அமெரிக்க அதிபர் தான் தற்போது இங்கிலாந்துக்கு விஜயம் செய்யப்போவதில்லை என்று தனது வழமையான ட்வீட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து “அவர் வருவாரா இல்லை மாட்டாரா?” எனும் வாதம் தொடர்ந்தது. கடந்த ஆண்டு அவர் இவ்வருடம் ஜூலை மாதம் 12ம் திகதி இங்கிலாந்து வருவதாகவும் அது தேசத் தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பாக இல்லாமல் அவர் மேற்கொள்ளும் ஒரு உத்தியோகபூர்வ விஜயமாக அமையும் என்றும் அறிவிக்கப்பட்டது. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று எண்ணுகிறீர்களா? தேசத்தலைவருக்கு அளிக்கப்படும் விஜயமென்றால் விமானநிலையத்தில் பிரதமரினால் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு, இங்கிலாந்து மகாராணியாரோடு ஒன்றாக பிரமாண்டமான நகர ஊர்வலமும் அவ்விஜயத்தில் அடங்கும். ஆனால் இவருக்கோ விமான நிலைய வரவேற்பு இங்கிலாந்தின் வர்த்தக அமைச்சரினால் ஆடம்பரம் அதிகமின்றி அளிக்கப்பட்டது.

    திரு ட்ரம்ப் அவர்களின் விஜயம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கான காரணங்கள் பல. அவரின் வருகையை எதிர்த்து பல முன்னணிகள், அமைப்புகள் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தன. அத்தோடு ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடுத்த வருடம் விலகிய பின்னால் வர்த்தக உடன்படிக்கையில் முதலாவதாக எதிர்பார்க்கப்படும் உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்காவுடன் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு. இதைப்பற்றி நேரத்துக்கு ஒரு கொள்கை பேசும் அமெரிக்க ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிய பல அரசியல் அவதானிகளும், அரசியல்வாதிகளும், மக்களும் ஆவலாக இருந்தார்கள். இங்கிலாந்து விஜயத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியை பின்லாந்தில் சந்திக்க இருந்தார். இங்கிலாந்தில் நடந்த நிகழ்வான ரஷ்ய முன்னாள் உளவாளியின் மீதான இரசாயன தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்பது இங்கிலாந்தின் நிலைப்பாடு. அத்தோடு அத்தாக்குதலின் எதிரொலியாக இங்கிலாந்துப் பிரஜைகள் இருவர் அதே இரசாயன பொருளினை அறியாமல் கையாண்டதால் ஒருவர் இறந்து மற்றொருவர் தீவிர சிகிச்சைக்குள்ளாகப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் ரஷ்யாவே காரணம் என்று இங்கிலாந்து குற்றம் சாட்டுகிறது. இவற்றைப்பற்றி அமெரிக்க ஜனாதிபதி தனது ரஷ்ய ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையின் போது குறிப்பிடுவாரா? எனும் கேள்வி இங்கிலாந்தின் கேள்விக்குறியாக இருந்தது.

    வந்திறங்கிய அமெரிக்க ஜனாதிபதி வந்ததும் அடித்தாரே ! ஒரு செம அடி எமது பிரதமருக்கு. ஆமாம் ரெக்ஸிட் எனும் பூதத்தை ஒருவாறு ஒரு வலைக்குள் அடக்கி வைத்து வொட்டேன் என்றிருந்த எமது பிரதமருக்கு ஒரு அதிர்ச்சியாக அப்பிரெக்ஸிட்டுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் டேவிட் டேவிஸ் பிரதமரின் ப்ரெக்ஸிட் நோக்கிய கொள்கையில் நம்பிக்கையின்றி ராஜினாமா செய்ய, அவரைத் தொடர்ந்து அவரது பாராளுமன்ற உதவியாளரும், அதைத் தொடர்ந்து புரளிகளுக்குப் பெயர்போன வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜான்சனும் இராஜினாமா செய்தார். அமைச்சரவையில் இத்தகைய ஒரு பிரிவு தோன்ற அமெரிக்க அதிபர் அக்குட்டையை மேலும் குழப்பும் முகமாக பிரதமருக்கு எதிராகவும், பொரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் ஒரு பேட்டியளித்தார். என்னே ஆச்சரியம் அடுத்தநாள் பிரதமருடனான சந்திப்பு முடிந்ததும் அதே அமெரிக்க அதிபர் தான் அளித்த பேட்டியை அப்படியே மறுதளித்தார். அமெரிக்க அதிபரைப் பற்றிய பலரின் அபிப்ராயத்தை அவர் நிரூபித்து விட்டார்.

    அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளை மற்றுமோர் மடலில் ஆராய்வோம். இங்கிலாந்துப் பிரதமர் ஒரு அரசியல் சூறாவளியினூடாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். நாட்டின் நலனை முன்னிட்டு ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வின் தாக்கத்தை மட்டுப்படுத்த முயல்கிறார் பிரதமர். பிரதமருக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையோ மிகவும் பலவீனமானது. ஒருபுறம் பிரெக்ஸிட் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வாதிடும் அவரது கட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஒருபுறமும், ப்ரெக்ஸிட் கொள்கையை மெதுமையானதாக்க வேண்டும் என வாதிடும் அவரது கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகள் மறுபுறமும் அவரது நிலையை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கி விட்டார்கள். 17,18ஆம் திகதிகளில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இரு முக்கிய பிரெக்ஸிட் சம்பந்தமான சட்டமூலங்கள் பத்து வாக்குகளுக்கும் குறைவான பெரும்பான்மையினால் நிறைவேறியது. பெருமூச்சு விட்டார் பிரதமர்.

    வந்ததே சந்தது பாருங்கள் பாராளுமன்றத்துக்கான சம்மர் விடுமுறை தப்பி விட்டார் பிரதமர் செப்டெம்பர் மாதம் வரைக்கும், பொறுத்திருந்து பார்ப்போம் அரசியலில் இரண்டு வாரங்களே மிகப்பெரிய சவால் அல்லவா ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வாழ்வியல் ஞானி!

    பவள சங்கரி

    சீனப் பயணி யுவான் சுவாங் நம் இந்தியாவிற்கு வந்த போது, நாட்டு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு, இயற்கை சீற்றம், வழியில் சாப்பாடு கூட கிடைக்காமல் துவண்ட நிலை இப்படி எத்தனையோ கடும் இன்னல்களைக் கடந்துதான் இந்தியா வந்தார். அப்படி வரும் வழியில் ஒரு முறை சில கொள்ளையர் அவரை சிறை பிடித்தனர். அவர்களுக்கு கொள்ளையில் அதிகமான வருமானம் கிடைத்துவிட்டால், துர்கா தேவிக்கு ஒரு ஆண் மகனை பலி கொடுக்கும் வழமை இருந்திருக்கிறது. அன்று அப்படி அவர்கள் பலி கொடுக்க வேண்டிய தருணத்தில் இளந்துறவியான யுவான் சுவாங்கைக் கண்டிருக்கிறார்கள். அவருடைய அழகையும், அறிவையும், இளமையையும் வைத்து அவர்தான் தங்கள் துர்காதேவிக்கான சிறந்த படையலாக இருக்க முடியும் என்று முடிவு செய்து அவரை இழுத்துச் செல்கிறார்கள். அப்போது அவ்வூர் மக்கள் அவரை விட்டுவிடும்படியும் தங்களில் யாராவது ஒருவரை பலி கொடுத்துக் கொள்ளட்டும் என்று மன்றாடியும் அந்தக் கொள்ளையர் செவி சாய்க்கவில்லை. அவர்கள் யுவான் சுவாங்கை பலி பீடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவரோ, எந்த விதமான அதிர்ச்சியோ, அச்சமோ, சலனமோ இல்லாமல் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தாராம். அதைக் கண்ட கொள்ளையர்களுக்கு அவரக் கொலை செய்ய மனம் வராமல் விட்டுவிட்டார்களாம்.. துறவு கொடுத்த அந்த அமைதியும், கருணையும், ஆழ்ந்த ஞானமும் அவரை அந்த அளவிற்குப் பக்குவப்படுத்தி வைத்திருந்ததாம். இப்படித்தான் நம் ஊரிலும், பல துறவிகள் மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள பல பெண்களும் கர்ம யோகிகளாக மிகுந்த பக்குவமான மனம் பெற்றவர்களாகவே உள்ளனர். இந்த விதத்தில் பெரும்பாலான பெண்கள், ஆண்களைக் காட்டிலும் மற்றுமொரு படி உயர்ந்தவராகவே இருப்பது கண்கூடு. அதனாலேயே நம் நாட்டில் இன்றளவிலும் கூட்டுக் குடும்ப முறைகள் கூட சிறந்து விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.

    Share
  • ”ஸ்ரீ ரமண வசனாம்ருதம்’’….!

     

     

    ‘’சிரித்திடும் நானார்! , சிரிக்கவைக்கும் நானார்! ,
    விறைத்திட சுடுகாட்டில் வேக -எறிந்திடும்
    நானார்! ,எரிந்திடும் நானார்! , எரிந்தபின்
    நானார்! , புனரபிதான் நான்’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    KRISHNA FOR TODAY….!
    ————————————————-

    180718 Krishna Leela A4 wcol charcoal wm

    அளித்திடுவார் உச்சியை, ‘ஆ’போல் உனக்கும்
    களித்திரு கண்ணன் கலப்பில் -பளிச்சென
    நாக(ம்)(குண்டலினி) ஏறா மல்நாம்உச்சி, நாம சஹஸ்ரத்தால்(சஹஸ்ரஹார சக்ரம்-விஷ்ணு சஹஸ்ர நாமம்-சக்ரம் சுதர்ஸனம்)
    வேகமாய் நித்ரை விழிப்பு….!

    அந்தரங்க சுத்தியுடன் அந்த(அ)ணங்கு(கோமாதா பெண்தானே) ‘ஆ’போல,
    அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
    வைகுண்டம் வாவென்று கைகொடுத்து உச்சிமுகர்
    பைகொண்ட நாகமுற்ற பொற்பு(அழகு)….!

    ”பாதுகை ஆயிரம்’’….!
    ————————————————–
    பைகொண்ட பாம்பில் படுத்த பரம்பொருள்
    வைகுண்ட நாதர் வடிவத்தை -கைகொண்டு
    ஏந்தும்கால் பாதுகையே நீந்திவா பாற்கடலில்
    ஏந்திச்செல் என்னை எடுத்து….!

    அப்பண ஆதி அனந்தன் அமர்ந்தவரே,
    சொப்பனம் இவ்வுலக சாராம்சம் -அற்பநான்
    எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    வேறார்வம் கொள்ளாது ஆராப் புலனடக்கி
    நாரா யணனை நினைப்பதே -சாராம்சம்
    அன்நிலைக்கு செல்ல அனுபூதி தந்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
    சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசனாய்
    நீளப் படுத்தவரே நீலபத்ம நாபரே
    கோலத் திருவுருவே காப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • Google hit with record EU fine over Shopping service

    Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est. Sed diam voluptua. Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.

    CoverNews Pro

    Aenean? Morbi purus incidunt quam dolorum eiusmod facilisis, molestias corrupti. Sociis debitis, autem ex primis praesent!

    Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua. Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.

    Sint repudiandae voluptatem fugiat porttitor, sodales reiciendis dignissim, magnis veniam vehicula netus! Ab! Dis magnam impedit officia libero? Molestias nascetur. Exercitationem laborum?

    Commodi ultrices dolorum at parturient felis! Consequat explicabo lobortis soluta pretium consectetuer molestias

    Share
  • Business booming for giant cargo planes

    Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua. Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.

    Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.

    Share
  • ‘Somebody threatened to burn the school down’

    Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.

    Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.

    Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.

    Share
  • Searching for the forgotten heroes of World War Two

    Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.

    Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.

    Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.

    Share
  • நரகமதைச் சுமந்து நிற்பாள் !

    (எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா)

    பாரினிலே  பெரும்   படைப்பாய்
    பரிணமித்த படைப்பு  என்றால்
    பாங்கான  பெண் படைப்பே
    ஆகும் எனக்  கண்டிடலாம்
    அப்படைப்பை பிரம்ம  தேவன்
    ஆக்கிவிட  எடுத்த  நாள்
    அப்பிரமன் படைப்பு  அதற்கே
    அதிக சவால் ஆகிருக்கும் !

    அழகாக  முகம் அமைக்க
    அதிக  நாள்   ஆகிருக்கும்
    அன்பு பாசம் நேசம்வைக்க
    அதற்கும் நாள் எடுத்திருக்கும்
    பொறுமை எனும் நகையணிய
    வெகு நாளே வந்திருக்கும்
    பெண்மை அங்கே உருவாக
    பிரம்ம தேவன் களைத்திருப்பான்  !

    கருவறையை உள்ளே வைத்தான்
    கருணைதனை நிறைய வைத்தான்
    அருமை நிறை அன்னையென
    அவள் படைப்பை அளித்தானே
    வருகின்ற துயரம் எலாம்
    மனம் ஏற்க அவள்படைப்பை
    மாண்பு நிறை படைப்பாக
    படைத்து விட்டான் பிரமனவன்  !

    தங்கையென பெயர் பெறுவாள்
    தமக்கை என மாறிடுவாள்
    தன்னிகரே இல்லை எனும்
    தாயாக அவள் இருப்பாள்
    மங்கலமே அவள் ஆவாள்
    வருவோர்க்கு உணவு அளிப்பாள்
    எங்குமே அவள் தேவை
    எவர்க்கும் நிகர் இல்லையன்றோ !

    பிள்ளைபெறும் பெரும் பொறுப்பை
    பிரம்ம தேவன் கொடுத்துள்ளான்
    பேணி அவள் வளர்த்துவிட
    பெரும் பாடு பட்டிடுவாள்
    வளரும் பிள்ளை வாழ்வளிக்கும்
    என்று அவள் வளர்ப்பதில்லை
    பிள்ளை வாழ்வு மனமெண்ணி
    பெருங் கனவே கண்டுநிற்பாள்  !

    கவலை  எல்லாம்  உள்வாங்கி
    கண்  நீரால்  கரைத்திடுவாள்
    கடும் பசியே வந்திடினும்
    காட்டாமல் அவள் இருப்பாள்
    சுடு சொற்கள் கேட்டாலும்
    சுகம் என்றே எடுத்துநிற்பாள்
    சொர்க்கம் என நினைத்தவளும்
    நரகமதை சுமந்து நிற்பாள் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180716 Vatsalya – Canson 21.5×29.5inch mixed media (charcoal,pastel,acrylic and watercolour) -lr

    ”மாலோலன் பாடுகிறார் மாடை மடிதாங்கி,
    தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -காலேல(காலையில்)
    கேசவ் அனுப்ப கலிதீர்ந்து போனது
    வாசனையாய்(பிராரப்தம்,ஆகாமி….!) என்வெண்பா வாய்”….கிரேசி மோகன்….

    Share