Blog

  • திருமூலரின் வாழ்வியல் நெறி

    -முனைவர் த. மகாலெட்சுமி

    பக்தி நூலான திருமந்திரம் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையதாகும். இந்நூல் இறைவனைத் துதி செய்வதோடு நில்லாமல் பதி பசு பாசம் என்பனவற்றின் இணைப்பையும் உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும் நல் வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் சாத்திர நூலாகவும் விளங்குகிறது. பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம் குண்டலினி யோகம் மருத்துவம் நல்ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகும் இது. அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்திலும் பதியும்படிக் கூறுதல் திருமூலரின் சிறப்பு இயல்பாக அமைந்துள்ளது. திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல செய்திகளைப் பற்றிப் பேசுகிறது. அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்” என்பது நம் திருமூலர் திருமந்திரமாகும். இவற்றுள் திருமூலரின் வாழ்வியல் நெறிகளைச் சுருக்கமாகக் காண்போம்.

    திருமூலரின் பொதுநெறி

    திருமூலர் பெருமான் “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்…” என்று பாடி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்திற்கு வேண்டிய நல்லிணக்கச் செய்திகளைத் திருமந்திரத்தில் அழகாக விளக்கியிருக்கிறார். ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் எனத் திருமூலர் தொடாத துறைகளே இல்லை. திருமூலர் இயற்றிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர பாடல்களே இதற்குச் சான்று பகர்கிறது.

    தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
    மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
    திருவா சகமும் திருமூலர் சொல்லும்
    ஒருவா சகமென் றுணர்.           (ஔவையார், நல்வழி 40)

    திருவள்ளுவத் தேவர் இயற்றிய திருக்குறளும், திருநான்மறை எனப் போற்றப்படும், ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களின் முடிபும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரத் தமிழும், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், திருவாசகம் ஆகியனவும், திருமூலர் வாக்காகிய திருமந்திரமும் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் ஒன்றே என்று உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஔவையார் கூற்றே திருமந்திரத்தின் சிறப்புக்கு  மிகச் சிறந்த சான்றாகும். திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது, உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கும் அரும்பெரும் களஞ்சியமாக விளங்குகிறது.

    மனதே கோயில்

    கடவுளை அறிவதற்கும் அடைவதற்கும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு. இதில் அக வழிபாடு தியானம் அதாவது தவம், அதேபோலப் புற வழிபாடு பூஜை, தொண்டு ஆகியவைதான். உள்ளம் பெருங்கோயில் எனக்கூறிய ஆன்மநேய அருட்கவி திருமூலர். கடவுள் வெளியே இல்லை உன் உள்ளேயும் இருக்கிறார் என்பது தான் கடவுள் பற்றிய இவரது ஒற்றை வரிக் கண்டுபிடிப்பாகும்.  இதைத்தான் அகம்பிரம்மா என்று வேதம் கூறுகிறது. எனவே உள்ளத்தில் அன்பு இல்லாமல் கூடைகூடையாய்க் கோயிலுக்கு இலட்சார்ச்சனை செய்வதை விட, உள்ளன்போடு கடவுளை வணங்கினாலே போதுமானதாகும். இதனைத் திருமூலர்,

    அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
    என்போன் மணியினை எய்த ஒண்ணாதே  (திருமந்திரம் 272)

    உள்மனம் குழைந்து அவனை வணங்கிச் சரணடைய வேண்டும். அப்போதுதான் ஒப்பற்ற மணியாகிய அவனது திருவருள் உங்களுக்குக் கிடைக்கும். அதேபோன்று விண்வெளியையும், கோள்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறையில் முதலில் தன்னை யார் என்பதை அறிந்தகொள்ள யாரும் முற்படுவதில்லை. எனவே முதலில் உன்னை நீயே அறிந்துகொள், அப்படி அறிந்துகொண்டால், அனைத்தும் அறியலாம் என்கிறார் திருமூலர். இச்செய்தியை,

    என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
    என்னை அறிந்தபின் ஏதும்  அறிந்திலேன்   (திருமந்திரம் 2366)

    என்ற பாட்டில் சுட்டுகிறார்.

    ஆன்மிக விஞ்ஞானம்

    திருமூலரின் தன் பார்வையில் ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றாகக் காண்கிறார். ஆன்மிகத்தால் தான்பெற்ற அறிவியல் கருத்துக்களை விதைத்தார். குறிப்பாக மருத்துவ அறிவியலுக்கு முன்னோட்டமாகப் பல வியத்தகு அறிவியல் அற்புதங்களை விளக்குவதாக உள்ளன. திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களை  இன்றைய மகப்பேறு குறித்தும் பாடியுள்ளார். சேர்க்கையின்போது, பெண் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் குழந்தை மந்தனாகப் பிறக்கும். சிறுநீர் தேங்கியிருந்தால், ஊமைக் குழந்தையும் இரண்டுமே இருந்தால் குழந்தை குருடாகவும் பிறக்கும் என்று 481-ஆம் பாடலில் சொல்கிறார் திருமூலர். எனவே சேர்க்கையின்போது தூய்மையுடனும் உயர் எண்ணங்களுடனும் தம்பதிகள் இருந்தால் நல்ல குழந்தை உருவாகும் என்பது திருமூலரின் திருவாக்கு.

    எல்லா உயிர்களையும் நேசி!

    யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
    யாவர்க்குமாம் உண்ணும் போதுஒரு கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே 
     (திருமந்திரம் 252)

    உலகில் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும். பசுவுக்குப் புல் தருவது, ஏழைக்கு ஒரு கவளம் உணவு தருவது, துன்பத்தில் உள்ளவருக்கு ஆறுதல் சொல்வது, பெற்றோரைக் காப்பது, மற்றவருக்கு உதவுவது ஆகியன தர்மங்கள் என்கிறார் திருமூலர். ஆதலால், நாம் திருமந்திரம் காட்டும் வழிப்படி தர்மங்கள் செய்வோம்;  பொல்லாப் பிணியும், சொல்லொணா துயரங்களும் இல்லாத வாழ்வை பெற்று மகிழ்வோம்.

    ஆற்றரு நோய்மிக்கு அவனிமழை இன்றிப்
    போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
    கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் எல்லாம்
    சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே        (திருமந்திரம் 517)

    சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் கெடுவர் என்கிறார் திருமூலர். திருக்கோயிலை முன்னோர்கள் பக்தியுடன் கட்டினர். அதற்குப் பலகோடி சொத்துக்களையும் தந்தனர். ஆனால் அந்தச் சொத்துகளை இன்றைய மக்கள் அபகரித்து வாழ்கிறார்கள். கோயில்களை வியாபார நோக்கில் செயல்படும் மையங்களாக மாற்றி வருகிறார்கள். அதனால்தான் வளம்குன்றி மழையை இழந்தோம்; துயரங்களை அனுபவிக்கிறோம். அதேபோன்று மனிதன் இயற்கையைக் கடவுளாக வணங்கியவரை அதுவும் இயல்பாக உதவியது. இன்று இயற்கையை அழித்து, மாசுபடுத்துவதால் இயற்கைப் பேரிடர்கள் உருவாகின்றன. எனவே ஆலய பூசைகளை முறைப்படிசெய்து மழை பெறுவோம்.

    அன்பே சிவமயம்

    திருமந்திரம் நூலானது ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் அறியக்கூடிய எளிமையும் இனிமையும் உடைய பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.  ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவோம். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. இதைதான் நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தினால் இறைவன் உங்கள் மேல் அன்பு செலுத்துவார் என்று திருமூலரும் வலியுறுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.

    அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
    அன்பே சிவம்ஆவது ஆரும் அறிகிலார் (திருமந்திரம் 270)

    உடல்நலத்தின் அவசியம்

    மானிடனுக்கு உடம்பு இல்லாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும், எனவே இன்றய காலகட்டத்தில் உடலினைப் பேணிப் பாதுகாப்பது என்பது மிக அவசியமானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. உடலினைப் பேணி பாதுகாப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை திருமந்திரம் அழகாகக் குறிப்பிடுகிறது.

    உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.    (திருமந்திரம்724)

    தேகமான உடல் அழிந்தால் உயிர் அழிவதுடன் அறிவும் வளராது எனவே உடலை வளர்க்கும் முறையை அறிந்து, உடலை வளர்த்து உயிரையும் வளர்த்தேன் என்கிறது திருமந்திரம்.

    உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
    உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
    உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (திருமந்திரம் 725)

    இப்பாடலில் உடலினை இழுக்கென்றிருந்தேன், பிறகு அதனில் கடவுள் கோயில் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டு உடலைப் பாதுகாத்தேன் என்கிறார். நாம் ஒவ்வொருவரும் உடலினை பேணிப் பாதுகாத்து பயனுற வேண்டும். அவ்வாறு உடலையும் மனதையும் பேணிப்பாதுகாக்கத் திருமூலர் காட்டிய வழி அஷ்டாங்க யோகம் எனப்படுகிறது.

    அஷ்டாங்க யோகம்

    அஷ்டாங்கம் என்றால் அஷ்டாங்க (அஷ்ட + அங்க) என்பது எட்டு வகையான படிகள் (பகுதிகள்) என எளிமையாகக் கூறலாம். திருமூலர் காட்டிய எளிய வழி அஷ்டாங்க யோகம். ஒரு பாடலில் திருமூலர் “யோக விசேடமே அட்டாங்க யோகமாம்”  என்கிறார். பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சாத்திரத்தில் அத்யாயம் இரண்டு, ஸ்லோகம் இருபத்தி ஒன்பதில் அஷ்டாங்க யோகத்தை பற்றி எடுத்துரைக்கக் காணலாம். திருமூலரும் பதஞ்சலி முனிவரும் கூறிய அஷ்டாங்க யோகத்தைக் கீழே சுட்டக் காணலாம்.

    இயம நியமமே எண்ணிலா ஆதனம்
    நயமுறு பிராணாயா மம் பிரத்தி யாகாரஞ்
    சயமிகு தாரணை தியானஞ் சமாதி
    அயமுறும் அட்டாங்க மாவது மாமே. (திருமந்திரம் 552)

    அவை முறையே வருமாறு

    1. இயமம் : தவிர்க்கப்பட வேண்டியவை
    2. நியமம் : பின்பற்றப்பட வேண்டியவை
    3. ஆசனம் : இருக்கை
    4. பிராணாயாமம் : மூச்சுப் பயிற்சி
    5. பிரத்தியாகாரம் : மனதை புலன் வழி நாட்டத்திலிருந்து திருப்புதல்
    6. தாரணை : மனதை ஒருமுகப்படுத்துதல்
    7. தியானம் : மனதை ஒரே சிந்தனையில் நிலைநிறுத்துதல்
      8. சமாதி : ஆழ் நிலை தியானம்

    இவற்றில் முதல் ஐந்தும் உடலும், மனமும் சம்பந்தப்பட்டவை எனவே இதை பகிரங்க யோகம் என்றும், அடுத்த மூன்றும் மனமும், ஞானமும் சம்பந்தப்பட்டவை எனவே அதை அந்தரங்க யோகம் என்றும் குறிப்பிடக் காணலாம்.

    மேற்கூறிய எட்டு நிலைகளையும் படிப்படியாகக் கற்று முக்திஅடைய வேண்டும் என்பது நம் முன்னோர்களின் விருப்பம். இன்றைய காலகட்டத்தில் நம்மால் எந்த அளவுக்கு கடைப்பிடிக்க முடியுமோ அந்த அளவுக்குக் கடைப்பிடிக்க வேண்டும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை “முயற்சி என்பது முடிந்தவரை செய்வதல்ல; முடியும்வரை செய்வதே” எனவே முயற்சி செய்து முன்னேற்றம் அடைய வேண்டும்.

    இக்கட்டுரையில் குறிப்பிட்ட செய்திகள் யாவும் திருமூலரின் இனிய வாழ்வியல் நெறிகளை விளக்குவனவாக அமைந்தன. தற்கால விஞ்ஞான முன்னேற்றத்தால் நமக்கு பல அரிய நூல்களும், விளக்க உரைகளும் எளிதில் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி யோகத்தின் வழி வாழ்க்கை நடத்த இறைவன் நமக்கு உதவி புரிவான். யோகத்தின் வழி வாழ்க்கை வாழ்ந்தால் நம் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பதுடன் சமுதாயத்தில் அமைதியும், சாந்தமும் நிலவும்.

    *****

    கருவிநூற்கள்

    1. திருமந்திரம் மூலமும் உரையும் (2010), ராமையா பதிப்பகம், சென்னை
    2. பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம் (2009), முனைவர் சுடலி தியாகராசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சென்னை
    3. திருமந்திரம் விரிவுரை (2012), ஜி.வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ் சென்னை

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)
    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
    தரமணி, சென்னை – 113
    drmaha08@gmail.com, பேசி.9629208408

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180724 Vatsalya A4 wcol charcoal scan 300dpi wm

    குட்டிக் கரியதன் குட்டியிடம், கோகுலக்
    குட்டனவன் ராதையைக் காண்கிறான்: -சுட்டிப்
    பயலவர்க்கு எல்லாமே, பைங்கிளி ராதா:
    வயலிவர் ராதைநீர் வீச்சு’’….கிரேசி மோகன்….!

    Share
  • குறளின் கதிர்களாய்…(218)

    திருக்குறள்

    செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
    வினைக்கரிய யாவுள நட்பு.
    -திருக்குறள் -781(நட்பு )

    புதுக் கவிதையில்…

    எதுவுமில்லை
    நட்பைப்போல்,
    பெறுதற்கரிய பெருளாய்..
    பெற்றுவிட்டால்
    நட்பதுபோலப்
    பகைவர்தம்
    தீச்செயலுக்குத் தடையான
    காவலும் ஏதுமில்லை…!

    குறும்பாவில்…

    நட்புபோலில்லை பெறுதற்கரிய பொருளேதும்,
    பெற்றுவிட்டால் அதுபோல் காவலேதுமில்லை
    பகைவர்தம் தீச்செயல்களுக்குத் தடையாய்…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மனித வாழ்வதனில்
    மிகவும் சிரமமாய் பெறுவதிலே
    உண்மை யான நட்பதுபோல்
    உயர்வு மிக்க தேதுமில்லை,
    பண்பே யில்லா வகையில்தரும்
    பகைவர் தீச்செயல் தடையாக,
    கண்ணிய மிக்க நட்பதுபோல்
    காவலா யில்லை வேறெதுவுமே…!

    லிமரைக்கூ..

    நட்புபோல் பெற்றிட அரிதாய்
    வேறேதுமில்லை, பெற்றுவிட்டால் அதுபோலில்லை
    தீச்செயல் தடைக்காவல் பெரிதாய்…!

    கிராமிய பாணியில்…

    பெருசு பெருசு நட்பு பெருசு
    ஒலகத்தில நட்புதான் பெருசு..

    இல்ல இல்ல வேறேதுமில்ல
    செரமப்பட்டு கெடைக்கிற பொருள்
    நட்பப்போல வேறேதுமில்ல..

    இல்ல இல்ல வேறேதுமில்ல
    எதிரிசெய்யும் கெடுதியயெல்லாம்
    தடுத்துநெறுத்தும் காவலா
    இந்த
    நட்பப்போல வேறெதுவுமில்ல..

    அதால
    பெருசு பெருசு நட்பு பெருசு
    ஒலகத்தில நட்புதான் பெருசு…!

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180625 Vishwaroopam -Mahabharatham-cover for Shri Balakumaran’s book part II watercolour -Arches 300 gsm 10×14” (3 days)

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    பாலகுமார் நாவலுக்கு ,பாரதம் செய்தவர்,
    நீலகுமார் நிற்பது நீளகுமார்: -கோலகுமார்
    கேசவ் வரைந்ததைக் கண்டு கவுரவர்கள்
    பேச மறந்தார் பயந்து….!

    சுருதி ஒலிக்குள், பரிதி ஒளிக்குள்
    இறுதிமுதல் இல்லா இறைக்குள் -கருதி
    துதிக்கும் முனிவர்தம் தேடலுக்கு எட்டா
    ஸ்திதிக்குப் புகன்றேன் சரண்….!

    பசுக்களை மேய்த்தோய் வசுதேவன் மைந்தோய்
    விசுவமாய் எங்கும் விரிந்தோய் -அசையும்
    அசையா பொருள்களுக்கு ஆதார மான
    இசையே வணக்கம் உனக்கு…..கிரேசி மோகன்….!

    பகவான் உவாச….!
    ————————————————-

    ”எங்கிருந்(து) ஆரம்பம் எங்கெதில் சங்கமம்
    இங்கணம் இவ்வுயிரை நன்குணர்ந்தோர் -இங்கிலர்
    ஆதலால் சோதரர்காள் வேதனை வேண்டாம்வல்
    சூதினைக் கொல்லல் சிறப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • கிரேசி மோகனின் ‘ராஜ சியாமளா தண்டகம்”

     

     

    ராஜ சியாமளா தெண்டகம்(அடியேன் ‘’கண்ணன் அனுபூதியை’’ வெளியிட்ட சமயம், வக்கீலும், வானவில் கழகத்தின் தலைவருமான, எனது நண்பன் க.ரவி அன்பளிப்பாய்க் கொடுத்த ‘’ராஜ சியாமளாவின்’’ பேரில் எழுதிய தெண்டகம்….!) க.ரவி ஓர் அம்பாள் படமும் அளித்தான்(இணைத்துள்ளேன்….!)
    ———————————————

    பாடல்: கிரேசி மோகனின் ‘ராஜ சியாமளா தண்டகம்” 
    இசை: குரு கல்யாண்

    நிலாச்சில்லை தங்க நீள்முடியில் தாங்கி
    விலாநோகச் சேலை வலம்வரும் சின்ன
    இலாவல்லி இடையாள் சொலாச்சொல்லை உடையாள்
    கலாவல்லியை ராஜ ச்யாமளாவில் கண்டேன்….(1)

    சிரமுச்சித் தங்கும் சிறுபிறையும் அறிவும்
    கரும்பிச்சை கொள்ளும் கரும்பச்சை வடிவும்
    கரமர்ச்சிக்கின்ற கற்பனை யாழ் இசையும்
    தரும்பிச்சை கொள்வோர் தரணியிலே மேலோர்….(2)

    மேடான நெற்றி அதற்க்கீடாம் அம்மேரு
    தேடுகின்ற ஞானிக்கது திகழ்கின்ற ஊரு
    நாடுகின்ற அன்பர்க்கு நல்லறிவுச் சாறு
    பாடுஅவள் பேரு பயனடைவாய் பாரு….(3)

    ஓலையுற்ற செவிகள் ஓமிசைக்கும் கிளிகள்
    மாலையுற்ற கழுத்து மாலோலன் சங்கம்
    சேலையுற்ற தனங்கள் ஞானச்சீ தனங்கள்
    தாளையொற்றிப் பணிவீர் தாயளிப்பாள் குணங்கள்….(4)

    போகுமிடமெல்லாம் புகழ் உமக்குச் சேரும்
    ராகுகாலம் கூட மிகரம்யமாக மாறும்
    ஆதரவிக்கிங்கென்றும் அவளருளே போதும்
    ஆதலினால் அம்மா அபயமென்று ஓதும்….(5)

    சாமளையின் பாதச் சிலம்புனக்கு காப்பு
    கோமளையிரு காதின் குண்டலங்கள் யாப்பு
    நாமலைய வேண்டாம் நாலாயிரம் பாட
    தாமரையாள் தருவாள் நாமுகந்து நாட….(6)

    கல்வியவள் அருளால் கலவியாகப் படியும்
    வல்வினைகள் மாறி விளையாட்டாய் முடியும்
    செல்வமுனைத் தேர்ந்து சுவிகாரம் கொள்ளும்
    அல்மதியம் மாலை ஆதவனாய் ஒளிரும்….(7)

    ஸ்திரபுத்தியோடு ஸ்திதப் ப்ரஞ்ஞனாக
    பெருபக்தி கொண்டு பாரதிக்கு ஏக
    அறுபத்தி நான்கு ஆயகலை தம்மை
    குருவொத்து அளிப்பாள் வரசித்தி அம்மை….(8)

    ராணி லலிதாங்கி ராஜ சியாமளா
    வாணி மாதங்கி வாக்கிற் கதிபதியே
    பூநீ மகரந்தம் பொய்கை வண்டும்நீ
    நான்நீ ஆகிடயென் நாவில் அமர்வாயே….(9)

    மகரயாழை மடியினில் நீட்டி
    அகர உகர மகரம் மீட்டி
    சிகரமேரு சிரத்தினில் வீற்ற
    சகலகலா வல்லியைப் போற்று….(10)

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180722 Krishna avatar 01- A4 – watercolour -charcoal 100 dpi scan lr

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    வாசுதேவ ரைவசுதே வர்வெஞ்சி றைநீங்கி
    ஓசை யமுனா ஓய்ந்திட -நீசனவன்
    கூற்றனாய் வாய்த்தவன் கம்சன் கொலைக்கஞ்சி
    மாற்றான்தாய் பக்கம் மகன்….!

    நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
    கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
    அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
    குப்பம் நுழைந்தவனே காப்பு….!

    ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
    கருத்த நிறக்கண்ணன் நின்போல் -பிறப்பில்
    அனாதை ஆனாலும் ஆய்ச்சியர் அன்பால்
    அனாதி அவன்கதை ஆச்சு….!

    திரும்ப சிறையில் பிறந்து சிரித்து
    விரும்பி வ்ரஜமண் விரைந்து -கறந்த
    பசுக்கள் பால்மடி பச்சிளங் கன்று
    ருசிக்கும்முன் உண்ணகண்ணா ரா….!

    (யமுனை)ஆத்திலொரு காலாக (சிறை)சேத்திலொரு காலாக
    காத்திருக்கேன் கேள்விக் குறியாக -பூத்திருவை
    மார்பினில் சூடிய மாதவா, நேருக்கு
    நேர்பதில் கூறுவதென் நாள்….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 170-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. அனுபாலா எடுத்த இந்த நிழற்படத்தைத் திருமதி. சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார். இவ்விருவருக்கும் என் நன்றி!

    ”தொழுத கையராய் அழுத கண்ணராய் நிற்கும் அடியார்முன் ஆண்டவனும் நெகிழ்ந்திடுவான் உளம்!”

    இந்தப் படத்தினைக் காண்கையில் உம் உளத்தில் ஊறும் உணர்ச்சிகளைத் திரட்டிக் கவிதையாய்ப் படைத்திட கவிவலவர்களைக் கரங்கூப்பி அழைக்கின்றேன்.

    *****

    ”உள்ளத்தில் உறைந்திருக்கும் பரம்பொருளை வெளியில் தேடுவதில் பொருளில்லை. ஆகவே தேடுவோம் அவனை உள்முகமாய்” என்று உண்மை உரைக்கின்றார் ஆ. செந்தில் குமார்.

    கடவுளை சற்றே சிந்திப்போம்!

    இந்த
    உடலே திருக்கோயில்!
    உள்ளமே கருவறை! – அதில்
    உறைபவனே இறைவன்!
    உரைத்தாரன்றே திருமூலர்…

    இந்த
    உடலைப் பேணாமல்
    உள்ளத்தைக் காணாமல்
    உலகில் எங்கெங்கோ தேடினாலும்
    உட்பொருள் கிடைப்பானா?

    அந்த
    கோயிலின் புறத்தே
    கோவணத்திற்கும் வழியின்றி
    கோடி மக்கள் பசித்திருக்கக்
    கோயிலின் அகத்தே உண்டியலில்
    கோடி கோடியாய்க் கொட்டினாலும்
    கொலுவிருக்கும் குலசாமி அருளுமா?

    அந்த
    கடவுளைச் சற்றே சிந்திப்போம்!
    கடவுள் அதன் உட்பொருள்
    கட உள் என்பதாகும்!
    கண்களை மூடி மனதினுள்ளே
    கடந்து போவோம்!
    கடவுள் அங்கே இருப்பானே!

    அந்த
    உள்ளத்தின் உள் உறைபவன்தான்
    எங்கெங்கும் நீக்கமற நிறைந்துளான்!
    கண்ணைத் திறந்து காண்பவை எல்லாம்
    அவனின்றி வேறேது??

    *****

    ”நெஞ்சம் மகிழ நிறைந்திருக்கும் பிள்ளையார், நாம் தஞ்சம் அடைந்திடத் தாயாக வந்திடுவார்” என்று விநாயகரைத் தன் கவிதையின் நாயகராக்கிப் போற்றுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    சாலை விநாயகர்..!

    நெஞ்சம் மகிழவே
    ……….நிறைந்ததொரு பிள்ளையார்
    தஞ்சம் அடைந்திடவும்
    ……….தாயாக வந்திடுவார்
    எஞ்சிய சாலையும்
    ……….எங்கேயும் இல்லையே
    விஞ்சியே நிற்கும்
    ……….வரையில்லா எண்ணிக்கை
    மஞ்சளும் குங்குமமும்
    ……….மக்களும் கொண்டுபோய்ப்
    பஞ்சமிலாது பூசிடுவார்
    ……….பட்டிதொட்டி யெங்குமாய்
    அஞ்சுவிரல் ஐந்தும்
    ……….இரண்டாகச் சேர்த்துயர
    அஞ்சனக் கண்மூடி
    ……….அங்கே தொழுதிடுவார்

    *****

    ”கூட்டுக் குடும்பமெல்லாம் சீட்டுக்கட்டாய்ச் சிதறிவிட, கும்பிட ஆளின்றிக் குலதெய்வமும் தனிமையில் வாடுதே” என்று வருந்திப் பாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தனிமையில்…

    குடும்ப மெல்லாம் சேர்ந்திருக்க
    கூட்டுச் சேர்ந்து கும்பிட்டார்,
    குடும்ப நலனைக் காக்குமென்றே
    குலத்தின் தெய்வம் என்றுரைத்தார்,
    அடுத்து வந்த காலத்திலே
    அவரவர் பணியில் சென்றுவிட்டார்,
    கொடுத்து வந்த குலதெய்வமும்
    கொடிய தனிமையில் வாடிடுதே…!

    *****

    நல்ல கவிதைகளை நயமுடன் படைத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    கடவுளைக் காணலாம்!

    இருகரம் கூப்பி இறைவனை வணங்கும் மனிதா!
    பணிந்தே இறைவனை வேண்டும் வரம் யாதோ மனிதா!
    மாட மாளிகை வேண்டி நின்றாயோ மனிதா!
    பொன்னும், பொருளும் யாசித்தாயோ மனிதா!
    பட்டம் பதவி கேட்டு நின்றாயோ மனிதா!
    உன் குடும்பம் நலமுடன் வாழ வணங்கி நின்றாயோ மனிதா!
    ஏழை, எளியோர்க்கு உதவாமல், இறைவனை வேண்டிப் பலனில்லை!
    அன்னை, தந்தையைப் பேணாமல் ஆலயம் செல்வதில் பலனில்லை!
    பாவத்தினால் வந்த பணத்தினிலே
    இறைவனுக்குப் பங்கு கொடுப்பதும் பலனில்லை!
    உழைப்பவரின் ஊதியம் குறைத்துத்
    திருப்பணி செய்வதில் பலனில்லை!
    எளியவரை மகிழ வைத்து இறைவனைக் காணலாம்!
    கடுஞ்சொல் தவிர்த்தால் கடவுளைக் காணலாம்!
    ஆசை துறந்தால் ஆண்டவனை அடையலாம்!
    பிறர்கென வாழ்ந்தால் கடவுளாய் வாழலாம்!

    ”மனிதா! இருகரம் கூப்பி இறையிடம் வேண்டுவதென்ன? பொன்னும் பொருளுமா? பட்டமும் பதவியுமா? தன்னலமே என்றும் குறியா யில்லாமல் பிறர் நலமும் நாடு; துன்ப வித்தான ஆசையைத் துறந்து ஆண்டவனைத் தேடு” என்று நல்வாழ்வுக்கு வழிகாட்டும் வரிகளைத் தாங்கிநிற்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • முனைவர் நா. கணேசன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!

    பவள சங்கரி

    முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றியவர், நம் வல்லமை இதழ் மற்றும் குழுமத்தில் பல ஆண்டுகளாக தமது சிறந்த படைப்புகளையும், தமிழின் வேர்சொற்கள் குறித்த ஆகச்சிறந்த கருத்துகளையும், விவாத மேடைகளையும் ஏற்படுத்தி தமிழார்வலர்களின் சிந்தையின் விழிப்புணர்வை மலரச் செய்பவர் என்றால் அது மிகையாகாது..

    இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர், என்று நண்பர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கருத்துரையும் குறிப்பிடத்தக்கது. உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html

    அன்பு நண்பர், வல்லமை இதழின் சிறந்த பங்களிப்பாளர் முனைவர். நா. கணேசன் அவர்கள் வல்லமையாளர் விருது வழங்கும் வகையில் நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுவதை வாழ்த்தி வரவேற்கிறோம். குடத்திலிட்ட விளக்காக ஒளிரும் ஆகச்சிறந்த வல்லமையாளர்களை இவர்தம் அரிய முயற்சியால் கண்டடைந்து வெளிக்கொணர்வோம் என்று நம்புவோம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர் (271)

    நா. கணேசன்

     

    இந்த வார வல்லமையாளராக ‘சிவசிவா’ வி. சுப்பிரமணியன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    ’தமிழும், சைவமும் நமதிரு கண்கள்’ என்றார்  யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ ஆறுமுக நாவலர். விவிலியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வாழ்வின் முதல் பாகத்தில் ஐரோப்பியரிடம் பணியாற்றிய பின்னர், உரைநடை எழுதுவதற்கான பயிற்சியைப் பெற்று, சைவ சமயத்தினையும், தமிழ் இலக்கண நூல்களையும் நல்ல உரைநடையில் நாவலர் பெருமான் தமிழுக்குத் தந்தார். நல்ல அச்சகங்களும், பள்ளிகளும் அமைத்தார். இலங்கைத் தீவில் நாவலரின் தொண்டினால், சைவம் பிழைத்தது, இந்தியாவுக்கு வெளியே நாவலர் வழியில் சிவத்தொண்டு செய்வோர் பலராவர்.

    இந்நாளில், மரபுக் கவிதை இயற்றும் பயிற்சி குறைந்துகொண்டு வருகிறது. மரபுச் செய்யுள் இலக்கணத்தைக் கற்று, ஐயங்களைக் களைந்துகொள்ள நல்ல குழுமமாக ‘சந்தவசந்தம்’ குழு பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. கவிமாமணி இலந்தை சு. இராமசாமி, அதன் தலைவர். அக்குழுவில் ஏராளமான சைவபரமான, திருமுறைகளை ஒத்த பாடல்களை இயற்றி அளிப்பவர், ‘சிவசிவா’ சுப்பிரமணியன் ஆவர். இவர் பொறியியலும், பின்னர் மேலாண்மைப் பட்டமும் (MBA, IIM) பெற்று நியூ ஜெர்சியில் பல ஆண்டுகளாகக் கணித்தொழில் நுட்பத் துறையில் பணி செய்து வருகிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவ சிந்தனையில் மரபுச் செய்யுள்களைச் செய்து தருகிறார். அவரது வலைத்தளம்: http://madhisudi.blogspot.com .

    ஏராளமான விருத்தங்களும், நிறையத் திருப்புகழை ஒத்த சந்தப் பாட்டுகளும், சில அந்தாதிகளும் இயற்றியுள்ளார். யாப்பிலக்கணத்திலும், சைவம் பற்றியும் கேள்விகள் கேட்டால் ஆழ்ந்த அறிவுபூர்வமான விடைகளை அளிக்கும் விடையவன், இந்த வார வல்லமையாளர்.

    இந்த வாரத்தில் மூவலூர் மீது விருத்தங்கள் எழுதிவருகிறார். எடுத்துக்காட்டாக,

    காவலிங் காரெனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே
    சேவலங் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் செருந்தி கொக்கின்
    தூவலும் சூடிய தூயவன் இமையவர் துயர மாற
    மூவரண் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே

    நகைச்சுவையாக,

    சிவனுக்கும் இட்டலிக்கும் சிலேடை:

    பொடியோடும் சேருமே பொங்குமா மேலும்
    வடிவாகும் ஒத்திருக்கும் பூவை அடிமேலே
    ஆகுமே ஆவியுள் நிற்குமே இட்டலி
    ஆகுலம்தீர் ஈசன் அறி.

    ஏழை என்ற சொல்லை வைத்த மடக்கணிச் செய்யுள்:

    ஏழை மனமே! இறைஞ்சி அடிதொழாய்!
    ஏழை பணக்காரன் என்னாமல் ஏழை
    இடமிருக்கும் எம்பெருமான் வந்தருள்வான் விண்ணில்
    இடமிருக்கும் இங்குமுண்டு இன்பு!

    தமிழர்களிடையே என்றும் பெருஞ்சமயமாய் சைவம் இலங்குகிறது. 1500 ஆண்டுகளுக்கும் மேலாக, பக்தி இலக்கியம் பிரவாகமாய் தமிழ் இலக்கியங்களில் உருவாகியுள்ளது. அம்மரபின் தொடர்ச்சிக்கு, இந்தக் கணினி இணையக் காலத்தில் ‘சிவசிவா’ சுப்பிரமணியன் போன்றோர் உதவுகிறனர். சிவசிவாவைப் பாராட்டி மகிழ்கிறோம். அவருடனும் ஏனை சந்தவசந்தக் கவிகளிடமும் மரபுக்கவிதை கற்க வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • முதுகில் ஒரு குத்து

    நிர்மலா ராகவன்

     

    ஆராவமுது தன் டி.வி. சேனலின் வருமானத்தைப் பெருக்க வழி தேடிக்கொண்டிருந்த போதுதான் செந்தில் அந்த யோசனையைச் சொன்னான்.

    “அப்பா! எத்தனையோ பேருக்கு வெளியூருக்குப் போய் சுத்திப்பாக்க  ஆசை. ஆனா வசதி கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ரெண்டு மூணு  இடத்திலே பந்தயம் வெச்சு   இழுத்தடிக்கலாம்!”

    மலை ஏறி, பிறகு ஒரு கம்பியில் படுத்த நிலையில் ஆற்றைக் கடந்து,  மற்றும்  பிடிப்பிடியாக நெல்லை அள்ளி, (வழியில் இரு `பூதங்கள்’ அவர்களை மறித்து, பிடித்துத் தள்ள)  சேற்றில் ஓடி, அதற்கென வைக்கப்பட்டிருந்த கூடையில் நெல்லை நிரப்பி – இப்படி மனிதர்களின் உடல்பலம் மனோபலம் இரண்டையும் ஒருங்கே பரிசோதிக்கும் போட்டி அது. அமெரிக்காவில் பார்த்த நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி.

    பந்தயத்தில் ஜெயித்தால் பத்து லட்சம்!

    பல கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசை பிடித்து நின்றார்கள் எதிர்கால லட்சாதிபதிகள்.

    “பத்து வருடங்களாகியும் எங்களுக்குப் பிள்ளைப்பாக்கியம் இல்லை. அதற்கான சிகிச்சைக்குப் பணம் கிடைக்கும் என்ற ஆசையில்தான் இப்போட்டியில் சேர்ந்திருக்கிறோம்!” என்றாள் பூரணி. பருமனாக இருந்தாள். கணவர் புஜபராக்கிரமத்துடன் இருந்தார். வயது நாற்பதுக்குள்தான் இருக்கும் என்றாலும்,   அவர்களால் ஒன்றாக ஓடமுடியுமா? இல்லை, விரைவாக நடக்கத்தான் முடியுமா?

    `பாக்கிறவங்களுக்கு எல்லாரும் ஒரேமாதிரியாக இருந்தா அலுப்பு தட்டும்!’ என்ற செந்திலின் யோசனை அவர்களுக்குத் தெரியாது. “நம்பளை போட்டியிலே சேர்த்துக்கிட்டாங்க!” அப்போதே குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டது போல் பூரணி குதித்தாள்.

    அழகுப்போட்டியில் வென்ற இரு பெண்கள், விளையாட்டு வீரர்களான இரு இளைஞர்கள், குண்டும் ஒல்லியுமாக இரு ஆப்த நண்பர்கள்  என்று பத்து ஜோடிகளும் வெவ்வேறு விதமாக இருந்தார்கள்.

    “இரண்டு வயதான என் மகனுடைய இருதயச் சிகிச்சைக்கு வேண்டிய வசதி என்னிடம் இல்லை. அதற்காகத்தான் பெயர் கொடுத்தேன்.  என் உயிர்த்தோழி வந்தனாவும் என்னுடன்   பங்குபெற வந்திருக்கிறாள்!” என்ற கல்பனா வேறு மாநிலத்திலிருந்து வந்திருந்தாள். கணினித்துறையில் பட்டம் பெற்றிருந்தாள். பூரணியைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள். போட்டி துவங்கியது. பல கேமராக்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து ஓடியபடி இருந்தன. வார இறுதியில் ஒரு மாநிலத்திலிருந்து வேறொன்றிற்குப் போகவேண்டும்.

    `கல்பனாவையும், வந்தனாவையும்பற்றி நாம் தவறாக முடிவெடுத்துவிட்டோம்!’ என்று பிற போட்டியாளர்கள் பொறாமையுடன் முணுமுணுக்கும் வகையில் ஆறில் நான்கு இடங்களில் அக்குழு முதலாவது இடத்தைப் பிடித்திருந்தனர்.

    பூரணிக்கோ, அவள் எண்ணியதுபோல, இலவச சுற்றுலாப் பயணம்போல் இருக்கவில்லை அந்த அனுபவம். மூச்சு வாங்கியது. காலை விந்தித்தான் நடக்க முடிந்தது.

    “அவங்களுக்கெல்லாம் வயசாகலே! குரங்குமாதிரி ஏறிக் குதிக்க முடியுது!” என்று பொருமினாள். “திரும்பப் போயிடலாமா?” என்று மனைவியைக் கேட்டார் பரசுராமன், அனுதாபத்துடன்.

    “அதெல்லாம் முடியாது!” அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது.  ஏழாவது மாநிலத்தில், `இந்த இரண்டு விளையாட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்!’ என்ற அறிவிப்பு இருந்தது.  அது மட்டுமா!

    அதில் ஒன்றை முடித்ததும், அடுத்ததற்குப் போகமுடியாது, ஆங்கில எழுத்தான `U’ ஒரு கரும்பலகையில் வரையப்பட்டு இருந்தது. முதலில் போகும் குழு வேறு ஒரு குழு உறுப்பினரின் பெயர்களை மேலே எழுதி, தம் பெயரையும் பகிரங்கப்படுத்தி விட வேண்டும்.  அப்படிச் செய்தால், மேலே இருப்பவர்கள் இரண்டையும் முடித்தாகவேண்டும்.

    (`இதெல்லாம் அவசியமாடா? துரோகமில்ல?’ என்று ஆராவமுது தயங்கியபோது, ` இந்தமாதிரி ஏதாவது ஸ்டண்ட் செஞ்சாத்தான் எல்லாரும் இதைப்பத்தியே பேசுவாங்கப்பா. நம்ப ரேடிங்க் மேலே போகும்,’ என்று அவரைச் சம்மதிக்க வைத்திருந்தான் மகன்).

    `இது அசிங்கம்!’ என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு, ஒருவரும் கரும்பலகையில் மற்றவர் பெயரை எழுதவில்லை.

    இறுதிச்சுற்று நான்கே குழுக்களுடன் ஆரம்பித்தது. உடலில் அடி, மிகவும் தாமதமாக வந்தார்கள் என்று மற்றவர்கள் விலக்கப்பட்டு இருந்தார்கள்.

    “கால் விரல்லே உணர்ச்சியே இல்லை!” என்று முனகியபடி பூரணி மலைமேல் ஏறமுடியாது உட்கார்ந்தாள்.  இவ்வளவு தூரம் கடந்ததே அதிசயம் என்று தோன்றியது பரசுராமனுக்கு. “எதுக்கும்மா  இந்த விபரீத விளையாட்டு? போதும்னு போயிடலாமே!” என்றார். அலைச்சலில் பூரணியின் இடுப்பில் சதை அவ்வளவாகத் தொங்கவில்லை என்பது மட்டும்தான் திருப்திகரமாக இருந்தது.

    “அதெல்லாம் முடியாது!” அவள் குரல் மீண்டும் தீர்மானமாக ஒலித்தது. “அது ரெண்டும் எங்கே காணோம்?” “யாரைக் கேக்கறே?”

    “கல்பனா, வந்தானாவைத்தான்!”

    “பாவம்!  நாம்ப வந்த பஸ்ஸிலே அவங்களுக்கு இடம் கிடைக்கலே.  வந்து சேர இன்னும் அரைமணியாவது ஆகும்”.

    “அப்பாடா! இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு. கிளம்புங்க. ஓய்வா இருக்கவா இங்கே வந்திருக்கோம்?” என்று அவரை விரட்டியபடி,  புதிய உற்சாகத்துடன் எழுந்தாள் பூரணி. கால்வலி போன இடம் தெரியவில்லை.  வழியில் ஒரு U!

    வழக்கம்போல் அதைக் கடந்துபோன கணவரை, “கொஞ்சம் இருங்க,” என்று தடுத்தாள் பூரணி. அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து, “எதுக்கு பூரணி?” என்று தடுக்கப்பார்த்தவரிடம்,   “இது பந்தயம். இங்கே  உணர்ச்சிங்களுக்கு இடம் குடுக்கக் கூடாது!” என்று மிரட்டலாகக் கூறியபடி, கல்பனா, வந்தனா என்று எழுதினாள்.

    பஸ் நிறுத்தத்தில் கியூவில் தங்களுக்கு இருபது இடங்களுக்கு முன்னால் நின்றிருந்த கல்பனாவிடம், `என் மனைவிக்கு நிக்கவே முடியவில்லை. ஒங்க இடத்தைக் கொடுத்தா நல்லாயிருக்கும்,’  என்று அவர் கெஞ்சியபோது, சற்றும் யோசியாது, `அதுக்கென்ன!’ என்று பெருந்தன்மையுடன் பின்னால் போன இளம்பெண் பரசுராமனின் நினைவில் எழுந்தாள். 

    வழக்கம்போல், அசுரவேகத்தில் பல தடைகளைக் கடந்துவந்த கல்பனா தன் குழுவின் பெயர் அங்கே எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அலறினாள்.

    “ஐயோ! இப்படி எங்கள் முதுகில் குத்த அவர்களுக்கு எப்படி மனம் வந்தது!” என்று கதற ஆரம்பித்தாள்.

    “திரு, திருமதி பரசுராமன்! வாழ்த்துகள்! நீங்கள் போட்டியில் முதலாவதாக வந்திருக்கிறீர்கள்!” என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் முகமெல்லாம் சிரிப்பாகக் கூறினார்.

    `இந்த மனிதர் சொன்னதைக் கேட்டு அவங்க பேரை எழுதாம இருந்திருந்தா?’ என்று எழுந்த எண்ணத்தை ஒதுக்கினாள் பூரணி. பொது இடம் என்றுகூடப் பாராது, கணவரைக்  கட்டி அணைத்துக்கொண்டு, முத்தமாரி பொழிந்தாள்.

    அவரால் அவளுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. குற்ற உணர்ச்சி மிகுந்தது.  அதற்கடுத்த வாரம் பரிசளிப்பு விழா. பத்து குழுக்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்தார்கள். வந்தனாவின் வற்புறுத்தலால்  கல்பனாவும் வேண்டா வெறுப்பாக வந்திருந்தாள். பூரணியைப் பார்க்கவே பிடிக்காது, தலையை அதீதமாகக் குனிந்துகொண்டாள்.

    “பரிசுத்தொகையான பத்து லட்சம்..,” அறிவிப்பாளர் சற்று நிறுத்தி, ஒவ்வொரு குழுவினரையும் ஒரு பார்வை பார்த்தார்.  வாய் கொள்ளாத சிரிப்புடன், பூரணி எழுந்திருந்தாள்.

    “அத்தொகை கல்பனா-வந்தனா குழுவிற்கு அளிக்கப்படுகிறது!”  மேடையில் அமர்ந்திருந்த ஆராவமுது தலையை ஆட்டினார், அதை அங்கீகரிக்கும் வகையில்.

    “இதென்ன அநியாயம்! நாம்பதானே ஃபர்ஸ்ட் வந்தோம்!” என்று கணவரிடம் உரக்க முறையிட்டவளை “ஷ்!” என்று அடக்கினார் அவர்.

    (`அநீதிக்கும் ஏமாற்றத்துக்கும்  துணைபோகும் உங்கள் சேனலுக்கு இனி சந்தா கட்டமாட்டோம்’ என்று போட்டி முடிவை ஒருங்கே எதிர்த்த தொலைகாட்சி நேயர்களின் சீற்றத்துக்குப் பயந்து முடிவை மாற்றியதற்காக சேனலின் சொந்தக்காரரான ஆராவமுது தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார்.

    `நம்ப நாட்டு ஜனங்க இன்னும் தர்மம், நியாயம்னு கெட்டியா பிடிச்சுக்கிட்டு இருக்காங்கப்பா. நான் அதை யோசிக்காம போயிட்டேன்!’ – செந்தில் தன் தோல்வியை ஒப்புக்கொண்டிருந்தான்).

    “இப்போட்டியின் நோக்கம்  உடல் வலிமை, மனவலிமை இரண்டை மட்டும் பரீட்சை செய்வதில்லை. மனிதத்தன்மை என்றும் ஒன்றிருக்கிறது! பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும், அவர்கள் காலை வாருவது என்ன தர்மம்?” யாரோ எழுதிக்கொடுத்ததை உணர்ச்சியுடன் பேசினார் ஆராவமுது . “சராசரி என்று எடுத்துக்கொண்டால், பத்து இடங்களில் ஏழு இடங்களில் முதல் இடம் பிடித்திருக்கிறது கல்பனாவின் குழு.  திட்டமிடும் திறனாலும், எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காத குணத்தாலும் இறுதிச்சுற்றிலும் அவர்கள் வென்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்..,” வெளிப்படையாகக் குற்றம் சாட்ட விரும்பாது, குறிப்பாக பூரணியைப் பார்த்தார்.  அவளுக்கு அவமானமாக இருந்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டு, கடைக்கண்ணால் கணவரை நோக்கினாள்.

    ஒரு  பெருமூச்சு எழுந்தது அவரிடமிருந்து. அது நிம்மதியை வெளிப்படுத்திய பெருமூச்சு! குறுக்கு வழியில், நல்லவர் மனதை நோகடித்து… அப்படியாவது ஒரு குழந்தை பெற வேண்டுமா? பிறக்கும் குழந்தை ஏதாவது குறையுடன் பிறக்காது என்பது என்ன நிச்சயம்? “போகட்டும், விடுங்க! இந்த ஒலகத்திலே எல்லாருமே ஏமாத்துக்காரங்களா இருக்காங்க, ” என்று அவரைச் சமாதானப்படுத்துவதில் இறங்கினாள் பூரணி. 

    Share
  • படக்கவிதைப் போட்டி (171)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    மோகன்தாஸ் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நெம்புகோலான பிம்பங்கள்

    முனைவர் வே. சுமதி,

    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,

    பொள்ளாச்சி – 642 107

     

    காத்திருப்பின்

    பரவல்கள்

    பிரனையற்று

    எதையோ

    நோக்கியபடி

    கணத்துக்கிடக்கின்றன..

    செல்லரித்துப்போன

    வேண்டாத

    பிம்பங்கள்

    திக்கற்ற

    கானகத்தினுள்

    நுழைந்து,

    வாய்ப்புகளை

    நெம்புகோலாய்

    களையெடுக்கின்றன…

    மீள முடியாத

    சல்லடைகள்

    சலிப்பற்று

    கானல்நீராய்

    வரையப்பட்டுள்ளன

    நெடுஞ்சாலைகளில்….

    அளவிலா பிரியங்கள்

    குடிகொண்ட

    தருணங்களில்

    வேண்டா

    மனங்களின்

    அத்துமிறல்களும்

    சக்கரமாய்

    சுற்றிவருகின்றன…..

    தன்னகம்

    தொலைத்த,

    மாய உலகில்,

    வெக்கமற்ற

    பிம்பங்கள்

    குடியேறியுள்ளன

    சர்வாதிகாரத்தில்…..

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் _ 117

    நிர்மலா ராகவன்

    மதிப்பெண்கள் மட்டும் போதுமா?

    லாவண்யா வகுப்பில் எப்போதும் முதலாவதாக வருவாள். பேச்சுப்போட்டியில் அவளை யாராலும் வெல்ல முடியாது. `பள்ளிக்குப் பெருமை சேர்க்கிறாள்,’ என்று ஆசிரியைகளும், தலைமை ஆசிரியையும் அவளைக் கொண்டாடுவார்கள். பெற்றோரும் அப்படித்தான்.

    விளைவு: அவள் செய்வதை யாராவது கண்டித்தால், கோபம் தலைக்கேறும். எவராக இருந்தாலும் – அது ஆசிரியையாகவே இருந்தாலும், மரியாதை இல்லாது பேசுவாள். அவர்களும் அடங்கிப்போவார்கள்.

    எங்கு தவறு நேர்ந்தது?

    ஓயாது புத்தகங்களைப் படித்து, அதன்வழி பல விஷயங்களையும் தெரிந்துகொண்டால் புத்திசாலித்தனம் வளரலாம். ஆனால், தனது சொந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் நுண்ணறிவு வளரவில்லை லாவண்யாவுக்கு.

    பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே வந்தபின், பாடங்களில் வாங்கிய மதிப்பெண்களை மட்டும் வைத்துக்கொண்டு உலகைச் சமாளிக்க முடியுமா? பிறருடன் எப்படிப் பழகவேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டாமா?

    எப்போதும் சிறுபிள்ளைத்தனமாக, தன் உணர்வுகளுக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து நடந்தால், சிறு விஷயங்களுக்குக்கூட ஆத்திரம் எழும்.

    தலைவனாக வேண்டுமா? உணர்ச்சியைக் கட்டுப்படுத்து!

    தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு இந்தத் தன்மை இல்லாவிட்டால் மதிப்பை இழக்க நேரிடும்.

    கதை

    `இவனுக்குத் தெரியாததே இல்லை!’ என்று பிறர் மெச்சும்படி இருந்தான் அக்கல்லூரி மாணவன். விரிவுரையாளர்கள் மட்டுமின்றி, ரங்கனுடன் பேசுவதே தமக்குப் பெருமை என்பதுபோல் சகமாணவிகளும் நடந்துகொண்டதில், அவனுக்குக் கர்வம் தலைக்கேறியது. அவனுக்குப் பயந்தோ, இல்லை மதித்தோ, எல்லாரும் விட்டுக்கொடுத்தே பழகிவிட்டதால், தான் நினைத்தது நடக்காவிட்டால் எளிதில் கோபம் எழ ஆரம்பித்தது.

    கடினமான சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது எதிர்ப்பட்டவர்களின்மீது தன் இயலாமையைக் காட்டுவான். ஆத்திரமே அவனது தலையாய குணமாகியது.

    நல்ல படிப்பு, பெரிய உத்தியோகம் என்றான பின்னரும், `நானே ராஜா,’ என்பதுபோல் நடக்க, விரைவில் எல்லாரும் விலகிப்போனார்கள்.

    கல்லூரி நாட்களில் அவனுடைய சிறப்புகளைக் கண்டு மணந்த காதல் மனைவியும், `இது நான் பார்த்து மயங்கியவர் இல்லை!’ என்று கண்டவர்களிடம் எல்லாம் புலம்பினாள். மனைவி மட்டுமின்றி, அவனுடைய குழந்தைகளுக்கும் அவனைப் பிடிக்காமல் போயிற்று.

    ரங்கனுக்குத் தன் உணர்வுகள் புரியவில்லை. அதனாலேயே பிறரையும் புரிந்துகொள்ள இயலவில்லை. பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டால்தானே அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதும் விளங்கும்?

    ரங்கனுக்கு இதெல்லாம் புரியாததால், நாளடைவில், உத்தியோகத்தில் அவனுக்குக் கீழே வேலை பார்த்தவர்களுக்கு பதவி உயர்வும், பரிசுகளும் கிடைக்க, தன்மேலேயே பரிதாபம் எழுந்தது.

    வீட்டிலோ, வெளியிலோ, தனது உரிமை என்று அவன் எதிர்பார்த்த மரியாதை கிடைக்காததால் ஆத்திரம் அதிகரித்தது. தீய பழக்கங்களுக்கு அடிமையானான்.

    நம் உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது?

    கதை

    கடைக்குட்டியான அந்த மூன்று வயதுச் சிறுவனை அவனுடைய சகோதர சகோதரிகளுடன் ஒப்பிட்டுத் தாய் சிலாகிக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சி தாங்காது. அதை வெளிக்காட்டாது மறைக்க, தலையைக் குனிந்து, வாயை உப்பிக்கொள்வான்.

    “யாருக்கோ ரொம்ப பெருமை!” என்று தாய் அறிவிக்க, எல்லாரும் அவன் பக்கம் திரும்பி, பாசத்துடன் புன்னகைப்பார்கள்.

    அடிக்கடி இந்த வாக்கியத்தைக் கேட்டு, அடுத்த முறை எதற்காவது மகிழ்ச்சி ஏற்படும்போது, “அம்மா! நான் பெருமை!” என்று தெரிவிப்பான். யாராவது புகழ்ந்தால், மகிழ்ச்சி பெருகுகிறது. சிறுவனுக்குத் தன் மனம் புரிந்தது.

    (புகழ்ச்சி மனதுக்கு உகந்ததாக இருப்பதால்தான் பலரும் அதை உபயோகப்படுத்தி தம் காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார்கள். முக்கியமாக, சிறுமிகளையும் இளம்பெண்களையும் கவர முயற்சிக்கும் கயவர்கள்.

    யார் எதையும் நாடாது புகழ்கிறார்கள் என்பதை ஆராயும் அறிவு இருந்தால், வெற்றுப்புகழ்ச்சியில் மயங்கமாட்டோம்).

    மாறாக, நம்மிடம் யாராவது குறை கண்டுபிடித்துவிட்டாலோ ஆத்திரம் எழுகிறது.

    `மற்றவர் அவர் வழியில் யோசிக்கிறார். நமக்கு உகந்த வழியில் நாம் போவோமே!’ இந்த சிந்தனை எழுந்தால், கோபம் எழுந்த வேகத்தில் அடங்கிவிடும்.

    என் சிநேகிதி ஜூலியான், “நான் எப்போது கடைக்குப் போய் தலைமுடி வெட்டிக்கொண்டாலும், என் கணவர் கத்துவார்,” என்றாள், பேச்சுவாக்கில்.

    அவளுடைய கணவர் பலமுறை கோபித்தபோது, உடனே ஆத்திரப்பட்டவளுக்கு, சற்று நிதானமாக யோசித்தபோது அவரது போக்கின் காரணம் பிடிபட்டது.

    அலுப்புடன், “உங்களுக்கு முடியெல்லாம் கொட்டிப்போய் வழுக்கையாகி விட்டதால் என்னிடம் குறை காண்கிறீர்களோ?” என்று ஒரு முறை இவள் கேட்க, அவரது குறுக்கீடு நின்றுபோயிற்று.

    தன்னம்பிக்கை உள்ளவர்கள் தம்மை உணர்ந்தவர்கள். இவர்களே தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவர்களாக இருப்பார்கள். சிபாரிசில் வருபவர்கள்…

    கதை

    அரச வம்சத்தில் வந்தவள் என்பதால் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டவள் ஆஸ்மா. தன் சாதனைகளால், புத்திகூர்மையால், அப்பெரிய பதவிக்கு வந்திருப்பதாக எண்ணிக்கொண்டாள். அந்த எண்ணத்தால் விளைந்த கர்வத்தில், தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றாள்.

    கட்டுக்கடங்காத சூழ்நிலை ஏற்பட்டபோது, அதை எப்படி சமாளிப்பது என்று ஆஸ்மாவுக்குப் புரியவில்லை. திரும்பவும் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாதே என்று பயந்தவளாக, தன்கீழ் வேலை பார்த்தவர்களை ஓயாது விரட்டினாள். அவளுக்குப் பின்னால் அவர்கள், `ரொம்பத்தான் காட்டாதே!’ என்று பரிகசித்தது அவளுக்குத் தெரியாது!

    “சிலபேர் ஏன் இப்படி ஆடுகிறார்கள்?” என்று என்னைக் கேட்டார்கள்.

    “தகுதி இல்லாதவர்களுக்கு அவர்களுக்கு மீறிய பொறுப்பைக் கொடுத்தால் இப்படித்தான்!” என்றேன், சிறிதும் யோசியாது. ஆதாயத்தை எதிர்பார்த்து அவள் பக்கம் சார்ந்திருந்தவர்களுக்கு முகம் சுண்டிப்போயிற்று.

    மற்றவர்களுக்கோ, ஆஸ்மா ஏதாவது தவறு செய்தால், அதைப் பெருந்தன்மையுடன் மன்னிக்க முடியவில்லை. ஏளனமாகப் பேச ஆரம்பித்தார்கள். அவளிடம் ஏற்பட்ட அவநம்பிக்கையால், தம் வேலையிலும் முழுமனதுடன் ஈடுபடத் தோன்றவில்லை.

    தன் குறை நிறைகளைப் புரிந்திருந்தால், ஆஸ்மாவுக்குப் பிறரது உணர்வுகளையும் மதிக்கத் தெரிந்திருக்கும். அவர்களது மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருப்பாள்.

    அமைதிப்படுத்த ஒரு பயிற்சி

    `உங்கள் குழந்தை புத்திசாலியாக வளர..’ என்று பாலர் பள்ளிகளில் விளம்பரப்படுத்துவார்கள்.

    குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு வந்தாலும், பல விஷயங்கள் கற்பிக்கப்பட்டாலும், நல்ல சுற்றுச்சூழலில் வளர்ந்திருந்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்பது எவ்வளவு தூரம் உண்மை?

    கதை (படித்தது)

    வன்முறைக்குப் பெயர்போன பகுதி அது. அருகிலிருந்த ஆரம்பப் பள்ளியில் படித்த குழந்தைகள் அனைவருமே கொலையைக் கண்ணால் பார்த்தவர்கள். முதலில் அச்சமோ, வருத்தமோ எழுந்திருந்தாலும், அவ்வுணர்ச்சிகளிலேயே மூழ்கிவிடவில்லை.

    அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்த சிறுவர்கள் பாடத்தில் கவனம் சிதறாது இருந்ததைக் கண்டு வியந்த சிலர் ஆராய்ச்சி செய்தபோது, ஓர் உண்மை தெரியவந்தது: தினமும் காலையில், தங்களுடைய அபிமான பொம்மையை வயிற்றின்மேல் வைத்து, படுத்த நிலையில் மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளியே விடும்போதும் மூன்றுவரை எண்ண வேண்டும் என்று அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் உன்னிப்பாக எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடிந்தது. ஒரு நாள் அந்தப் பயிற்சி செய்யாவிட்டாலும், அமைதி குலைய, அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விடுமாம்.

    சூழ்நிலை நமக்குச் சாதகமாக இல்லாவிடினும், திறமையை வெளிக்காட்ட நம் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    ஒத்துப்போவது வெற்றிக்கு அறிகுறி

    தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவி என்னிடம் கூறினார், “எங்களிடம் தற்காலிகமாக வேலைக்கு வருகிறவர்களின் மதிப்பெண்கள் இரண்டாம்பட்சம்தான். (உலகளாவிய எல்லா கம்பெனிகளிலும் இப்படித்தான்). அவர்களுடைய ஆடை, மரியாதையாகப் பேசும் தொனி முக்கியம். பல விஷயங்களையும் புரிந்து வைத்திருப்பதோடு, பிறருடன் எப்படி இணைந்து பழகுவது என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தால்தான் நிரந்தரமாக ஆக்குவோம். வேலையில் சிறந்து, ஆனால் பிறருடன் சண்டை பிடித்துக்கொண்டே இருந்தால், யார் அவர்களுடன் ஒத்துப்போவார்கள்?”

    எந்த துறையானாலும், பிறருடன் ஒத்துப்போகிறவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். கிடைக்கும் வெற்றியும் நிலைக்கும்.

    தொடருவோம்

    Share
  • பூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன

    Posted on July 21, 2018

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    ++++++++++++++++++++++++
    ++++++++++++++
    See the source image

    பூதக்கோள் வியாழனுக்குப் புதியதாய் பனிரெண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிப்பு 

    சூரிய மண்டலத்தில் எல்லாவற்றிலும் பெரிய, மிகையான ஈர்ப்பு வீசை உடைய பூதக்கோள் வியாழனுக்கு அதிக எண்ணிக்கை யுள்ள [ இதுவரை 79 (2018 ஜூலை] விஞ்ஞானிகள் துணைக் கோள்கள் இருப்பதாய்க் கண்டுபிடித்துள்ளார்.  தற்போது சுற்றிக் கொண்டிருக்கும் நூதன விண்ணுளவி நாசாவின் ஜூனோ இந்த புதிய 12 துணைக்கோள்கள் கண்டுபிடிக்க உதவியது.  இனி ஆக்கப்படும் எதிர்கால மேம்பாட்டு விண்ணுளவி மேலும் புதிய துணைக்கோள் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.  இவற்றைக் கண்டுபிடித்த குழுவினர் தலைவர் கார்னகேயைச் சேர்ந்த ஸ்காட் ஸெப்பேர்டு.  2017 வசந்த காலத்தில் துவங்கி, புறக்கோள் புளுடோ கடந்து பெருநிறையுள்ள பிளானட் -X [Planet – X]  தேடிய போது,  விண்ணோக்கி மூலம் கண்டுபிடிக்கப் பட்டவை, இவை.  அந்த 12 புதிய துணைக்கோள்களில் ஒரு தனித்துவக்கோள் [Oddball] மட்டும்  வக்கிர திசையில் சுற்றுகிறது.  [கீழ் வரும் படத்தில் மஞ்சள் சுற்றுப்பாதை]

    அகில நாட்டு வானியல் ஐக்கியப் பேரவையைச் சேர்ந்த காரத் வில்லியம் [Gareth Williams]  குழுவினர் தகவலை வைத்து, 12 துணைக்கோள்களின் சுற்றுப்பாதை தூரங்களைக் கணிப்பார். கோள்கள் மெய்யாகவே வியாழனைச் சுற்றுகின்றன என்று உறுதிப் படுத்த ஓராண்டுக்கு மேல் நீண்ட காலம் எடுக்கிறது.  பூதக்கோள் வியாழனின் உட்புறத் துணைக்கோள்கள்  எதிர்க் கடிகாரச் சுற்றில் சுற்றி வருகின்றன.  வெளிப்புறத் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுற்றில் சுற்றிவர, ஒரே ஒரு புதிய துணைக்கோள் மட்டும் நேர்க் கடிகாரச் சுற்றில்  வியாழனைச் சுற்றுகிறது.  இந்த புதிய எதிர்ச்சுற்று கோள்கள் [Retrograde Planets]  மூன்று வித சுற்றுப்பாதைகளில் சுற்றுகின்றன.   அதாவது ஒரு காலத்தில் இந்த மூன்று குழுப்பாதைக் கோள்களும், மூன்று பெருங்கோள்களாய் சுற்றிவந்து, வால்மீன்களோ, முரண் கோள்களோ, பிற அண்டங்களோ மோதி, எதிர்ச்சுற்று சிறு துணைக் கோள்களாய் மாறின என்று கருதப் படுகிறது.  புதிய 12 எதிர்ச்சுற்றுக் கோள்கள் யாவும், ஒருமுறை பூதக்கோள் வியாழனைச் சுற்றிவர, விந்தையாகச் சுமார் ஈராண்டுகள் எடுத்துக் கொள்கின்றன.

    ++++++++++++++++

     வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சி
    2018 ஏப்ரல் 11 ஆம் நாள் நாசாவின் ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் வடதுருவப் பகுதியைச் சுற்றிவந்து முதன்முறை உட்சிவப்பு [Infrared]  முப்புறக் காட்சித் திரைப் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.  யூடியூப் படத்தை பாருங்கள்.  வடதுருவத்தில் கொந்தளிக்கும், அடர்த்தியான புயலடிப்புகள், எதிர்ப் புயலடிப்புகள் ஆட்டிப் படைப்பது தெரிகின்றன.  அத்துடன் முதன்முதல் விளக்கமான “சுழல் இயக்கி”  [Dynamo or Engine] காட்டப் பட்டுள்ளது.  பூமிக்கு அடுத்தபடியாக  அப்பால் ஆற்றலுடைய காந்த தளத்தை [Magnetic Field] பூதக்கோளான வியாழன் பெற்றுள்ளது. இந்த வி/ளக்கமான விஞ்ஞான அறிவிப்பு வியன்னா, ஆஸ்டிரியா ஈரோப்பிய ஐக்கியபூதளவியல் பொதுக் குழுவினர் கூட்டரங்கில்  [European Geosciences Union General Assembly] வெளியாகியுள்ளது.
    See the source image
    ஜூனோ விண்ணுளவில் பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறத் திரைப்படம் [3D Movie] எடுத்த கருவியின் பெயர் “ஜிராம்” [Jovian InfraRed Auroral Mapper – JIRAM].  பகலோ அன்றி இரவோ உட்சிவப்பு ஒளிப்பட்டை வியாழனின் ஆழ்தளத்தி லிருந்து எழுகிறது.  உளவும் கருவி 30 -45 மைல் [50 – 70 கி.மீ], வியாழன் முகிலுக்குக் கீழே ஊடுருவிப் படம் பிடிக்கிறது.  முதலில் எடுத்த படங்களில் வடதுருவ மேற்பகுதியில் எட்டுச் சுற்று துருவச் சூறாவளிகள் [Eight Circumpolar Cyclones] தெரிகின்றன.  அவற்றின் விட்டங்கள் நீட்சி 2500 மைல் [4000 கி.மீ] முதல் 2900 மைல் [4600 கி.மீ] வரை என்று கணிக்கப்பட்டு உள்ளன.  “ஜூனோ ஏவுவதற்கு முன் வியாழனின் துருவங்கள் எப்படி இருக்கும் என்று ஊகித்தோம்.  இப்போதுதான் எங்களுக்கு உறுதியாக வடதுருவப் பருவநிலை அமைப்பு புரிகிறது,”  என்று கூறுகிறார், ஜூனொ உளவு ஆராய்ச்சிக் கூட்டுழைப்பு விஞ்ஞானி, அல்பர்டோ ஏட்ரியானி.
    See the source image
    உட்சுழலும் காந்த விசைக்கோள் வியாழன்
    பூதக்கோள் வியழனின் உள்ளியக்கம் எல்லாம் முன்பு பூமித்தள நோக்கிகள் மூலம் அறிந்தவையே.  ஜூனோ உளவி இப்போது வெவ்வேறு வேகத்தில் உட்சுழலும் வாயு முகில் கோளங்களைக் காண் முடிகிறது.  முதன்முதல் ஜூனோ உளவி மூலம் கண்ட,  வியாழனின் காந்தவிசை இயக்கும் எஞ்சின் [Dynamo] வெளியிடப் பட்டது.

    https://www.nasa.gov/juno

    https://www.missionjuno.swri.edu

    The public can follow the mission on Facebook and Twitter at:

    https://www.facebook.com/NASAJuno

    https://www.twitter.com/NASAJuno

    More information on Jupiter can be found at:

    https://www.nasa.gov/jupiter

    ++++++++++++++++++++++++++++

    The Colorful Cloud Belts of Jupiter’s Southern Hemisphere Dominate This Stunnung Photo from NASA’s Juno Spacecraft in Orbit around the Gas Giant , Released on January 1, 2018.  Juno captured this Image on December 16, 2017.  It was Processed by Cityzen Scientist, Kevin M. Gill. 

    Credit : NASA / JPL -CALTECH / SwRI /  MSSS/ Kevin M. Gill

     

    +++++++++++++++

    2017 டிசம்பர் 16 இல் நாசா விண்ணுளவி ஜூனோ எடுத்த தெளிவான படங்கள் :

    https://www.space.com/12495-jupiter-juno-mission-photos-gallery.html

        பூதக்கோள் வியாழனின் வாயுச் சூழ்வெளியை எடுத்துக் காட்டும் வெவ்வேறு வாயுக்களின் பன்னிறப் பட்டைகளின் [Multicolored Ribbons]  படங்கள் பொதுநபர் பார்வைக்கு நாசா வலைத் தளத்தில் இடப்பட்டுள்ளன.   ஒரு படத்தில் பூதக்கோள் வியாழனின் நடுமைய ரேகையில் [Equator] மிகத் துல்லிய தெளிவு விளக்கமாய் வாயுப் பட்டைப் படம் எடுக்கப் பட்டுள்ளது.   அத்தெளிவுப் படங்களில் வாயுக்கள் திடப் பொருளைப் போல் நுணுக்க விபரங்கள் கிடைக்கின்றன. ஆரஞ்சு நிறப்பட்டை புள்ளிகள் இட்ட மரத்தடம்போல் [Speckled  Knotty Wood Plank]  தெரிகிறது.  வெண்ணீலப் பட்டை மணற் தளமுள்ள ஆறோட்டம்போல் [Sandy River Bottom] காணப் படுகிறது.  

     
    Citizen-scientist Gerald Eichstadt processed this image of Jupiter’s south polar region, which highlights the distinctive cloud bands that wrap around the gas giant.

    Credit: NASA/JPL-Caltech/SwRI/MSSS/Gerald Eichstadt

     

    அடுத்தோர் படத்தில் பூதக்கோள் வியாழனின் தென் துருவப் பகுதியில் புயல் காட்சிகள் இருப்பினும், பளிச்செனத் தெரியும் வண்ணத்தில் வளைய வாயுக்கள் தனித்தனியாய் வேறு பட்டுள்ளன.  பூதக்கோளை ஒருமுறைச் சுற்றிவர ஜூனோ விண்ணுளவி 53 நாட்கள் எடுத்துக் கொள்ளும் சுற்றுப் பாதை ஒன்றில் சுற்றி வருகிறது.   படம் எடுக்கும் கருவியின் பெயர் ஜூனோகாம் [JunoCam].  வாயுப் பட்டைகளுக்கு வண்ண மிட்டவர் பெயர்கள் :  கெவின் எம். கில் & ஜெரால்டு ஐக்ஸ்டாட்  [Kevin M. Gill & Gerald Eichstadt]. இருவரும் ஜெட் உந்துகணை ஆய்வுக்கூடத்தைச்    [JPL -JET PROPULSIOL LAB] சேர்ந்தவர்கள்.  படங்கள் எடுத்த தேதி : டிசம்பர் 16, 2017.  ஜூனோ விண்ணுளவி நடுமைய ரேகைக்கு மேல் 8453 மைல் [13,604 கி,மீ.] உயரத்தில் பறந்த போது எடுத்த படங்கள்.  தென் துருவத்தில் எடுத்த படங்கள் 64,899 மைல் [104,446 கி.மீ] உயரத்தில் ஜூனோ விண்ணுளவி பறந்த போது எடுத்தவை.

     

    அமெரிக்க விடுதலை நாள் [ஜூலை 4, 2016] கொண்டாட்ட தினத்தில் விழாவின் போது, அடுத்த முக்கியப் பாராட்டு நிகழ்ச்சி ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் சுற்றுவீதியில் துல்லியமாகப் புகுந்தது.  இது நாசாவின் துணிச்சலான முயற்சி.  இத்திட்டத்தில் இதுவரை எந்த விண்கப்பலும் செய்யத் துணியாதத் தீரச்செயல்களை ஜூனோ செய்துகாட்டப் போகிறது. இதுவரை அறியப் படாத பூதக்கோள் வியாழனின் வலுநிறைந்த கதிர்வீச்சு வளையங்கள் [Radiation Belts] பற்றி ஆய்வு செய்யும்.  வியாழக் கோளின் உட்தளத்தை ஆழமாய் உளவு செய்து, அது எப்படி உருவானது, நமது சூரிய மண்டலம் எப்படித் தோன்றியது போன்ற புதிர்களை விடுவிக்கும்.

    சார்லி போல்டன் [NASA Space Program Administrator]

    ++++++++++++++++++++++

    ஜூனோ விண்ணுளவி 1.7 பில்லியன் மைல் தூரம் பயணம் செய்து, பழுதின்றி முழுத்திறமையில் இயங்கியது.  பூதக்கோள் வியாழச் சுற்றுவீதி நுழைவு [Jupiter Orbit Insertion]  நுணுக்கமான, சவாலான ஒரு பெரும் விண்வெளிப் பொறியியல் எட்டு வைப்பு. இந்த முன்னோடி வெற்றியைச் சார்ந்தவைதான் மற்ற ஜூனோ திட்டக் குறிக்கோள்கள் எல்லாம்.

    ரிச்செர்டு நைபாக்கன் [ JPL Juno Project Manager]  

     

    அமெரிக்க நாட்டின் விடுதலை நாள் கொண்டாட்டம்

    2016 ஜூலை 4 அமெரிக்க விடுதலை நாளை மக்கள் கொண்டாடி வரும் சமயத்தில், அடுத்தோர் விண்வெளி வெற்றி அன்றைய தினத்தில் பாராட்டப் பட்டது.  அன்றுதான் ஐந்தாண்டுகள் பூதக்கோள் வியாழனை நோக்கிப் பயணம் செய்த ஜூனோ விண்கப்பல், அதன் சுற்றுவீதி ஈர்ப்புக்குள் வெற்றிகரமாய்ப் புகுந்தது.  சூரியனுக்கு அடுத்தபடியாய்ப் பூகோளத்தைப் பெரிதும் பாதிப்பது பூதக்கோள் வியாழனே.  சூரியக் கோள் மண்டலத்தின் வடிவத்தை வார்த்தது வியாழனே.  பூர்வப் புவியில் ஏராளமான பனித்தளப் பண்டங்களை  விதைத்தது வியாழனே.  பிறகுப் புவிமேல் வால்மீன்கள் போன்ற பல கொடூர அண்டங்கள் விழாமல், பாதுகாத்ததும் வியாழனே.  எப்படி முதலில் உருவானது வியாழன் ? மெதுவாக அது உருவானதா ?  அல்லது ஒரே சமயத்தில் ஒற்றை ஈர்ப்பு நிகழ்ச்சியில் குட்டி விண்மீன்போல் தோன்றியதா ?  அது நகர்ந்து வந்த தென்றால், ஆதியில் வடிவானது எப்படி ?  நாசாவின் இந்த ஜூனோ திட்டத்துக்குச் செலவு 1.1 பில்லியன் டாலர்.

    Juno Space Project

    இந்தப் புதிர்க் கேள்விகளுக்கு ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனை 37 முறை 3000 மைல் [5000 கி.மீ.] தூரத்தில் சுற்றிவந்து, பதில் கண்டு பிடிக்கும்.  இதற்கு முன்பு 1995 இல் வியாழனை நோக்கி ஏவிய முதல் கலிலியோ விண்கப்பல் 2003 ஆண் டுவரை சில ஆய்வுகளைச் செய்தது. ஆனால் ஜூனோ பூதக்கோள் வியாழனை ஆழமாய் உளவிடப் போகிறது. வியாழக் கோளின் ஈர்ப்பு விசைத் தளத்தை [Gravitational Field] வரைப்படம் செய்யும்.   அதன் உட்கருவில் இருப்பது என்ன ?  பாறைக் கருவா, உறைந்த திரவமா ? உலோகக் கருவா ?  இந்த வினாக்களுக்கு விரைவில் நல்ல தகவலை ஜூனோ விண்ணுளவி ஆய்ந்து அறிவிக்கப் போகிறது.

    முதலாவதாக 54 நாள் மெதுவான சுற்றுவீதியிலும் [54 Day Slow Speed Orbit] , பின்னர் 14 நாள் வேகச் சுற்றுவீதியிலும் [14 Day Fast Speed Orbit] ஜூனோ பூதக்கோள் வியாழனச் சுற்றிவரும்.  வியாழனின் காந்தசக்தி ஆற்றல் புவிக் காந்த சக்தியை விட 20,000 மடங்கு தீவிர உக்கிர மானது.  இதனை ஆழ்ந்து ஆராய ஜூனோ விண்ணுளவி 20 மாதங்கள் [240 நாட்கள்] வியாழக் கோளைச் சுற்றிவரும்.  இதுவரை பூதக்கோள் வியாழனின் 67 சந்திரன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  ஜூனோ தொடர்ந்து மேலும் புது சந்திரன் களைக் காணலாம்.

    Click to Enlarge

    விண்ணுளவி ஜூனோ வியாழனின் சுற்றுவீதி ஈர்ப்பில் நுழைந்தது

    2016 ஜூலை 4 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணுளவி ஜூனோவின் 650 நியூட்டன் உந்து தள்ளிகள் [Newton Thrusters] 35 நிமிடம் இயங்கி, வேகம் குறைக்கப் பெற்றுப் பூதக்கோள் வியாழனின் சுற்றிவீதி வட்டத்தில் புகுந்தது.  அப்போது விண்ணுளவியின் வேகம் 1212 mph [542 mps (meter per sec] தளர்ச்சி அடைந்து, வியாழனின் ஈர்ப்பு விசை ஜூனோவைத் தன் பிடிக்கொள் இழுத்துக் கொண்டது.  அதற்குப் பிறகு ஜூனோவின் ஆற்றல் மிக்க 18,698 சூரிய ஒளிச் செல்கள் பரிதியால் இயக்கமாகி விண்ணுளவிக்கு மின்சக்தி அளித்தன.

    +++++++++++++++

    “பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும்.  விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.”

    ஸ்காட் போல்டன்,  ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி

    (ஜூனோ விண்ணுளவியின்) முக்கிய முதலிரண்டு சோதனைகள் :

    1.  பூதக்கோள் வியாழனில் எவ்வளவு நீர் உள்ளது ?

    2.  வியாழக் கோளின் மைய உட்கருவில் இருப்பது கன மூலகங்களின் திரட்சியா அல்லது நடு மையம் வரை இருப்பது அழுத்த வாயுத் திணிவா ?

    ஸ்காட் போல்டன்

    Path & Probe of Juna

    “கடந்த நூற்றாண்டுகளில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”

    காலிலியோ (1564-1642)

    நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை.  நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை.  புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம். நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலும் சிறிது புதுத் தளத்தைக் கைப்பற்றுவதுதான்.

    தாமஸ் ஹக்ஸ்லி [Thomas Huxley] (1825-1895)


    Inside Jupiter

    2011 இல் பூதக்கோள் வியாழனை நோக்கி மீண்டும் நாசா பயணம்

    ஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதிச் செலவில் மீண்டும் நாசா 2011 ஆகஸ்டு 5 ஆம் நாள் பிளாரிடா கெனாவரல் ஏவுமுனைத் தளத்தில் சுமார் 200 அடி (60 மீடர்) உயரமுள்ள அட்லாஸ் -5 ராக்கெட்டில் (Atlas -5 Rocket) மனிதரற்ற ஜூனோ விண்ணுளவியை ஏற்றிக் கொண்டு ஆய்வுகள் செய்ய அனுப்பியுள்ளது. ஜூனோ விண்ணுளவி 5 ஆண்டுகள் 1740 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செந்நிறக் கோள் செவ்வாயைக் கடந்து, கோடிக் கணக்கான முரண்கோள்கள் சுற்றும், முரண்கோள் வளையத்தை ஊடுருவிச் (Asteroid Belt) சென்று, 2016 இல் புறக்கோள் வியாழனை நெருங்கி ஓராண்டு சுற்றி வரத் திட்டமிடப் பட்டுள்ளது.  அட்லாஸ் -5 ராக்கெட் சுடப்படும் முன்பு அதன் மேலடுக்கில் ஹீலியம் ஏற்றும் சாதனத்தில் கசிவு உண்டாகி பிரச்சனை எழுந்ததால், அதை அடைக்க ஏவுக் காலம் சற்று தாமதமானது.  ஆகஸ்டு 5 ஆம் தேதி ஏவப்பட்ட ஜூனோ விண்கப்பல் இப்போது சுமுகமாகப் பயணம் செய்து வருகிறது.

    ஜூனோ விண்ணுளவி முதல் இரண்டு ஆண்டுகள் பரிதியைச் சுற்றி வந்து, பூமிக்கு மீண்டு அதன் ஈர்ப்பு வீச்சு விசையில் மேலும் உந்தப்பட்டு (Earth Flyby) அடுத்த மூன்று ஆண்டுகள் வியாழனை நோக்கி வேகமாய்ச் செல்லும்.  பூமியிலிருந்து 390 மில்லியன் மைல் (640 மில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கும் பூதக்கோள் வியாழனுக்குப் பயணம் செய்ய முதன் முதலாக பரிதி மின்சக்தித் தட்டுகள் (Solar-Panelled Mission) மூன்று அமைக்கப் பட்டு இயங்கும் விண்வெளித் திட்டம் இது.  சூரிய மின்தட்டு ஒன்றின் நீளம் 30 அடி.  அகலம் 9 அடி.  பூதக்கோள் வியாழன் மீது படும் பரிதி ஒளி பூமியின் மீது விழும் ஒளியைப் போல் 25 மடங்கு குறைந்தது.

    ஆகவே ஜூனோ விண்ணுளவி வியாழனின் மறைவுப் புறத்தில் சுற்றாமல் துருவங்களைச் சுற்றி வரப் போகிறது.  இதற்கு முன்பு வியாழன், சனிக்கோள் நோக்கிச் செல்லும் இவ்வித நீண்ட பயணங்களுக்குக் கதிரியக்க முள்ள புளுடோனிய மின்கலம் பயன்படுத்தப் பட்டது.  ஜூனோவில் பரிதி மின்சக்தி திரட்ட, 120 டிகிரிக் கோணத்தில் இருக்கும் மூன்று சூரியத் தட்டுகளில் 18,000 பரிதிச் செல்கள் (Solar Cells) அமைப்பாகி உள்ளன.  பூதக்கோள் வியாழனின் துருவச் சுற்று வீதியில் 33 நீள்வட்டச் சுற்றுக்களை 3000 மைல் (5000 கி.மீ.) உயரத்தில் ஓராண்டு புரிந்து வர ஜூனோ திட்டமிடப் பட்டுள்ளது.  இறுதியில் பரிதி மின்தட்டுகள் பழுதடையும் போது வியாழக் கோளில் ஜூனோ விண்ணுளவி சுற்றுவீதியை முறித்துக் கொண்டு வியாழனில் விழும்படி நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்துள்ளார்.

    ஜூனோ விண்ணுளவித் திட்டத்தின் முக்கிய குறிப்பணிகள் என்ன ?

    பூதக்கோள் வியாழனே பரிதி மண்டலத்தில் சுற்றிவரும் மற்ற கோள்களை விடப் பெரியது.  அது சூரியனைப் போலிருக்கும் ஒரு வாயுக் கோள்.  வியாழனின் தோற்றத்தை யும் வளர்ச்சியையும் புரிந்து கொண்டால் ஓரளவு சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  ஜூனோ விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள ‘தூர முகர்ச்சிக் கருவிகள்’ (Remote Sensing Instruments) பூதக்கோளின் பல்லடுக்குச் சூழ்வெளியை உளவி அவற்றின் உஷ்ணம், உட்பொருட்கள்,  முகில் நகர்ச்சி, மற்றுமுள்ள தளப் பண்பாடுகளைப் பதிவு செய்து, பூமிக்கு மின்தகவல் அனுப்பி வைக்கும்.  மேலும் வியாழனில் தோன்றும் முகில் வண்ணப் பட்டைகளின் உள்ளமைப்பைக் கண்டறியும்.  சிறப்பாக கடந்த 300 ஆண்டு களாகக் காணப்படும் விந்தையான ‘கொந்தளிக்கும் செந்திலகம்’ (Violently-Active Red Spot) என்ன வென்று ஆழ்ந்து அறியப்படும்.

    எல்லாவற்றும் மேலாக பூதக்கோள் வியாழனில் உள்ள நீரின் செழிப்பை அறிந்து ஆக்ஸிஜன் எத்தனை அளவு இருந்தது என்று கணக்கிடவும், பரிதி மண்டலத் தோற்றத்தை உறுதிப் படுத்தவும் பயன்படும்..  அத்துடன் பூதக்கோள் வியாழனுக்கு நடுவே உள்ளது திண்ணிய கடும் பாறையா அல்லது வாயுத் திணிவு மிகுந்து வியாழன் உட்கருவில் அழுத்தமுடன் உறைந்து போய் உள்ளதா என்றும் அறியப்படும்.  வியாழக் கோளின் காந்த தளத்தையும், ஈர்ப்புக் களத்தையும் பதிவு வரைபடக் கருவி வரையும்.  பூதக்கோள் வியானின் துருவக் காந்தக் கோளத்தை (Polar Magnetosphere) உளவி அது எப்படி வியாழனின் சூழ்வெளி வாயு மண்டலத்தப் பாதிக்கிறது என்று ஆராயும்.  ‘வியாழனில் தென்படும் தென்துருவ, வடதுருவ ஓவியக் கோலங்களையும்’ (Polar Auroras) ஜூனோ ஆராயும்.

    வியாழக் கோளை முன்பு சுற்றிய நாசாவின் விண்கப்பல்கள்

    நாசா காஸ்ஸினி விண்கப்பல் (1997- 2004) இல் சனிக்கோளைச் சுற்ற அனுப்புவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, காலிலியோ விண்வெளிக் கப்பல், வியாழனைச் சுற்றிவர ஏவப்பட்டு, ஏராளமான விஞ்ஞானத் தகவல்களைப் பூமண்டலத்துக்கு அனுப்பியுள்ளது. விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூட்டிய, காலிலியோவின் பெயரைக் கொண்ட நாசாவின் விண்கப்பலே, வியாழனை ஆராயும் முதல் ‘விண்ணுளவி’ [Space Probe] ஆனது !  தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளி யின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு துணைக் கோள்களை முதலில் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ!

    நாசா 1972 இல் ஏவிய பயனீயர்-10, பயனீயர்-11 [Pioneer-10, Pioneer-11], அடுத்து1977 இல் அனுப்பிய வாயேஜர்-1, வாயேஜர்-2 [Voyager-1, Voyager-2] ஆகிய நான்கு முன்னோடி விண்சிமிழ்கள் பயணம் செய்து முதன் முதலில் வியாழன், சனிக்கோளின் விஞ்ஞான விபரங்களை உளவிப் பூமிக்கு ஏராளமான தகவல் அனுப்பின. 1987 இல் அனுப்பிய காலிலியோ விண்கப்பல் எட்டாண்டுகள் பயணம் செய்த பிறகு, 1995 இல் வியாழக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் இழுக்கப்பட்டு, நீள்வட்ட வீதியில் சுற்றி, ஓர் உளவுச்சிமிழை [Probe Module] வியாழ தளத்தில் இறக்கி, விண்வெளி வரலாற்றில் முதன்மை பெற்றது.  ஒரு ‘சுற்றுச் சிமிழும்’ [Orbiter] ஒரு ‘சூழ்வெளி உளவுச்சிமிழும்’ [Atmospheric Probe] இணைக்கப் பட்டிருந்த, காலிலியோ விண்வெளிக் கப்பல் இரண்டு முக்கியப் பணிகளை நிறைவேற்றத் தயாரானது. முதல் பணி வியாழனை நெருங்கி, சுற்றுச்சிமிழ் சுழல்வீதியில் விழானைச் சுற்றிவருவது. அடுத்த பணி உளவுச்சிமிழை விடுவித்து, வியாழ தளத்தில் அதை மெதுவாக இறக்குவது.  மின்சக்தி பரிமாறப் புளுடோனியம் டையாக்ஸைடு [PuO2] பயன்படும் இரண்டு ‘கதிர்வீச்சு வெப்ப ஜனனிகள்’ [RTG, Radioisotope Thermal Generators] அமைக்கப் பட்டிருந்தன.

    கொந்தளிக்கும் செந்திலகம்! பூதக்கோளில் புயல் காற்று !

    வியாழச் சூழகத்தில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது! மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன! அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது! புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph!

    வியாழனின் பெயர் பெற்ற ‘மாபெரும் செந்திலகம் ‘ [Great Red Spot] சீரிய தொலை நோக்கி தோன்றிய நாள் முதல், 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்பட்டு கொந்தளித்து வருகிறது! செந்திலகம் முட்டை வடிவானது! அதன் கொந்தளிப்புக்குக் காரணம் இன்னும் அறியப் படவில்லை.

    முகில் ஆட்டத்திற்குச் செந்நிறத்தைத் தருபவை, புறவூதா [Ultraviolet] ஒளியை விழுங்கும், கந்தகம் [Sulfur], ஃபாஸ்ஃபரஸ் [Phosphorus] போன்றவற்றின் இரசாயனக் கூட்டுறுப்புகள் [Compounds]. மாறிக் கொண்டே வரும் செந்திலகத்தின் தற்போதைய பரிமாணம் 16200 மைல் நீளம்; 8700 மைல் அகலம்.

    மாபெரும் புயல்கள் வியாழ மண்டலத்தில் திடீர் திடீரென வீசி அடிக்கின்றன!சூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றன! வாயுக் குமிழ்கள் தாறுமாறான வெப்பத் திட்டுகளை தாங்கிக் கொண்டு, புயல் காற்றுக்களைக் கட்டுப் படுத்த, வியாழனில் மேடு, பள்ளங்கள், மலைகள் ஏதும் இல்லாது, எல்லாத் திசைகளிலும், குறுக்கு நெடுக்காக முறுக்கி அடிக்கின்றன!

    (தொடரும்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180715 Garuda vahana watercolour brushpen A4 lr2

    புள்வா கனர்வி(ல்)லேந்தும், பூந்துழாய் மாதினை
    கல்யாணம் கட்டியக் கேசவர் , -எள்ளென்றால்
    எண்ணையாய் பக்தியை ஏற்கின்ற கோகுலக்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share