நெம்புகோலான பிம்பங்கள்

0

முனைவர் வே. சுமதி,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,

பொள்ளாச்சி – 642 107

 

காத்திருப்பின்

பரவல்கள்

பிரனையற்று

எதையோ

நோக்கியபடி

கணத்துக்கிடக்கின்றன..

செல்லரித்துப்போன

வேண்டாத

பிம்பங்கள்

திக்கற்ற

கானகத்தினுள்

நுழைந்து,

வாய்ப்புகளை

நெம்புகோலாய்

களையெடுக்கின்றன…

மீள முடியாத

சல்லடைகள்

சலிப்பற்று

கானல்நீராய்

வரையப்பட்டுள்ளன

நெடுஞ்சாலைகளில்….

அளவிலா பிரியங்கள்

குடிகொண்ட

தருணங்களில்

வேண்டா

மனங்களின்

அத்துமிறல்களும்

சக்கரமாய்

சுற்றிவருகின்றன…..

தன்னகம்

தொலைத்த,

மாய உலகில்,

வெக்கமற்ற

பிம்பங்கள்

குடியேறியுள்ளன

சர்வாதிகாரத்தில்…..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *