Blog

  • ஈழத்தின் குரலாய்…!

     

    ஆ. செந்தில் குமார்

     

    வஞ்சியவள் சீதையின்
    வாட்டத்தைப் போக்கி – காத்து நின்ற
    அஞ்சனையின் மைந்தனவன்
    அனுமனைப் போன்று
    எதிரிகளின் படைதம்மை வீழ்த்தியே நித்தம்
    எமைக் காத்து நின்றான் எமது அண்ணன்!

    எங்குமே காணாத அவன் வீரம் கண்டு
    சிங்கக் கொடியுமே வீழ்ந்தது அன்று!
    சங்கும் முழங்கியது அவன் வீரம் கொண்டு
    எங்கும் தமிழ் ஒலிக்க செய்திட்டான் அவனே!

    செங்காந்தள் மலர் போன்ற தன் மனதைக் கொண்டு
    செந்தமிழர் தம் மனதில் கோலோச்சி நின்றானே!
    செங்கதிரோன் ஒளி போன்ற அவன் கண்ணைக் கண்டு
    எதிர்த்து நின்ற சேனைகளும்
    அஞ்சியது அன்று!

    நெஞ்சுரமே சிறிதுமின்றி இருந்த நம் பகைவர்
    வஞ்சனைகள் பல சேர்ந்து வீழ்த்தியது நம் படையை!
    முத்து முத்தாய் பொழிகின்ற வான் மழையைப் போல
    கொத்து கொத்தாய் பொழிந்தன குண்டுகள் தலை மேலே!

    செங்குருதி பெருக்கெடுக்க தலைசாய்ந்த நம் மக்கள்!
    எங்குமே மரணத்தின் ஓலம் – நாடே
    பிணக்காடாய் மாறிய அவலம்!
    அறமின்றி
    மறம் சிறிதுமின்றி
    வஞ்சனையின் துணைக்கொண்டு
    இன அழிப்பு செய்திட்டார் நம் பகைவர்!
    பிஞ்சென்றும் பூவென்றும்
    பால் மணம் மாறா
    பிள்ளையென்றும் பாராமல்
    நஞ்சு மனம் கொண்டு அவர்கள்
    கொன்று கொன்று குவித்தனரே!
    கங்குகரை காணாத
    கடல் போன்ற மக்கள்
    பொங்கி வந்த வேதனையால்
    சிலையாகி நின்றனரே!

    இன்றளவும் கிடைக்கவில்லை
    இதற்கு ஒரு நீதி!
    எங்களுக்கும் காலம் வரும்
    எம்மண்ணில் விதைக்கப்பட்ட வீரமும்
    முளைத்து வரும்!
    அது வரையும் காத்திருபோம்!
    ஈழத்தை வென்றெடுப்போம்!
    புலிக்கொடியை நாட்டிடுவோம்!

    Share
  • சமுதாயப் பிரச்சனை?

    பவள சங்கரி

     

    2 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 26,500 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள். மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதில் 30% மாணவர்கள் தேர்வுகளில் ஏற்படும் தோல்விகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாதிப் பிரச்சனை , தேர்வுகள் போன்ற காரணங்களால் இது போன்று அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக நடுவண் குற்றவியல் ஆவணக் காப்பகத்திலிருந்து தகவல் தரப்பட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சர் மேலவையில் அறிவித்துள்ளார். சமுதாயப் பிரச்சனைகள் காரணமாக மாணவர்கள் இறப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டியது அவசியம். கல்வித் திட்டங்களிலும், தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வருவதோடு இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலும், மருத்துவ மனநல ஆலோசனைகளும் அவசியமாகிறது.

    Share
  • யுகாதி வாழ்த்துகள்…..!

     

    யுகாதி அன்று எழுதியது….!
    ————————————————

    தகாது தவிர்த்துநல் தக்கவை ஏற்று
    யுகாதியில் எந்தரோக்க ளோடு -மகானுவாய்
    சித்திறையை சேர்வதற்கு சாதகம் செய்திட
    சித்திரையில் காண்பாய் ஜெயம்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161027 – Rajagopala -wcol-lores

    கண்ணபிரான் காயாம்பூ வண்ணபிரான் வெண்ணைமண்
    தின்னபிரான் நற்கீதை சொன்னபிரான் -பின்னமுறான்
    முன்னவனாம் தென்மதுரை அன்னையவள் அண்ணனையே
    எண்ணவரும் ஏகாந்தம் இங்கு….கிரேசி மோகன்….!

    Share
  • ’’படமும் பாடலும்….!

     

    ராஜாஜி பாடல்….!
    ——————————————

    கருத்து மூதறிஞர் ராஜாஜி….
    —————————————————-

    ”உள்ளே உறங்குபவர் வெள்ளே வரமாட்டார்,
    வெள்ளே விழித்திருப்போர் வேலிதாண்டிச் -செல்லார்
    சுடுதடியால் வெட்டியான் செத்தோரை சாத்தும்,
    சுடுகாட்டிற்(கு) ஏனோ சுவர்’’….கிரேசி மோகன்….!

    படமும் பாடலும்….!
    —————————————–
    ”அடியேன் இரண்டு ஓவியங்கள் கிண்டியில் பொறியியல் படிக்கும் காலத்தில் வரைந்தேன்….இருவருமே மூதறிஞர்கள்….ஒருவர் ‘’ராஜாஜி’’….மற்றவர் ‘’சோ ராமாசாமி’’ அவர்கள்….திரு. சோ சார் ஓவியத்தில் கையெழுத்து வாங்கி தருவதாக ஓவியத்தை வாங்கிச் சென்ற எங்கள் குடும்ப வைத்தியர்(டாக்டர் ஜெகதீஸன் ‘’சோ சாருக்கு’’ நெருங்கியவர்) இப்போது சொர்கத்தில் உள்ளார்(’’டாக்டர் சோ வந்துருக்கார் சொர்கத்திற்கு கையெழுத்து வாங்கி வையுங்கள் அடியேன் வருகையில் கலெக்ட் செய்து கொள்கிறேன்’’)…..’’ராஜாஜி’’ ஓவியத்தில் வாங்கித் தருவதாகச் சொன்ன என் தாத்தாவும் சொர்கம் சென்று விட்டார்….!

    எனது ‘’சாக்லேட்-கிருஷ்ணா’’ ‘’சோ சாரின்’’ ‘’சம்பவாமி யுகே யுகே’’, வாலி சாரின் ‘’கலியுகக் கண்ணன்’’ தழுவல் என்றால் மிகையாகாது…

    ‘’சோ சார்’’ சொர்கம் சென்றுள்ளார் ‘’ஜெ-அம்மாவுக்கு’’ ஆலோசனை வழங்க….வாழ்க ‘’சோ சார்’’ வளர்க அவரது புகழ்….

    என்னால் முடிந்த இரங்கற்பா சோ சாருக்கு….!

    பாடல்
    ————–

    ‘’சே’’என்(று) எவருமே சொல்லமாட் டார்துக்ளக்
    ‘’சோ’’என்ற ராமசாமி சொல்வதை; -’’நா’’வென்ற
    நாடகத் தந்தை நயத்தகு வாக்கது
    ஆடகச் செம்பொன் அழகு’’….கிரேசி மோகன்….!

    விவேகா ஃபைன் -ஆர்ட்ஸ் பூஜைப் பாடலில் ‘’ஆடகச் செம்பொன் மேனி முருகனே ‘’ என்ற வரி வரும்….முருகரும் அழகு ,சோ சாரின் எழுத்தும் அழகு’’…..!

    Share
  • வேலியையே மேயும் பயிர்கள்?

     

    பவள சங்கரி

     

    நீரவ் மோடியின் பஞ்சாப் தேசிய வங்கியின் மோசடி அலையில் விஜய் மல்லய்யாவின் 9,000 கோடி மறக்கப்பட்டது. இந்தியாவிற்கு மல்லய்யாவை கொண்டு வருவதற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்ற நடுவர் சொன்ன கருத்துகள் வேதனைக்குரியது .. கடன் அளித்த வங்கித் துறையினரே பல தவறுகள் செய்திருக்கும்போது விஜய் மல்லய்யாவை எப்படி குற்றவாளி என்று அறிவிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கு தொடர்ந்த இந்திய அரசு வங்கி நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின்னர்தான் இந்த வழக்கை தொடுத்தனரா என்ற ஐயம் எழுகிறது. வங்கித் துறையின் செயல்பாடுகள் இந்திய பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடியதாக உள்ளது.

    Share
  • ’படமும், பாடல்களும்’’…..!

     

    ஐயப்பன் வெண்பாக்கள்
    ——————————

    ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
    வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணென்ற
    பெண்மைக்கும் பெண்பாதி ஆண்மைக்கும் சேயானோய்
    உண்மைக்குள் உய்ய உதவு….

    அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
    கரியாடை பூண்டோன் கரத்தில் -அறிவே
    அரனில் அரியை அறிய புரிவாய்
    சரணம் சபரி மலைக்கு….

    அத்தனும் பித்தனும் சித்தம் ஒருமித்த
    தத்துவமே தான்தோன்றி தற்பரமே -சத்குரு
    ஈசா சபரிகிரி வாசா சரணமுற்றோர்
    நேசா வணக்கம் நினக்கு….

    வங்கக் கடல்கடைந்த சிங்கனும் சங்கரனும்
    அங்கம் கலக்க அவதரித்த -எங்களின்
    அண்ணா மலைபுர அய்யன்தேர் கண்டதில்
    பண்ணாத பாவமும் போச்சு….

    பிறப்பெனக்கு வேண்டும்நின் பம்பையில் நீராய்
    இறப்பணைந்த கற்பூரத் தீயாய் -மறப்பெனக்கு
    காமக் குரோத உலோபமத மாச்சரியம்
    நாமத் திருநீறோ னே…

    பங்குனி உத்திரத்தன்று எழுதியது….!
    ———————————————-

    ’’பங்குனி உத்திரா பந்தளப் புத்திரா
    செங்கட் திருமால் சுமந்தவா -இங்குநீ
    தோன்றிய இந்நாளில் தோத்திரம் செய்வோர்க்கு
    ஊன்றிடும் கோலுன் உறவு’’….

    ’’பிணிகொண்டு கூற்றின் படிவாசல் நிற்போர்
    மணிகண்டன் நாமம் முழங்க -இனிகண்டம்
    இல்லையென்(று) ஆகிடும் ஈரொன் பதாம்படிமுன்
    தொல்லையாம் தேங்காய் தெறித்து’’….

    ’’மீனாள் திருமணத்தில் மாலோன் அழகுகண்டு
    மான்மழு வாளன் மயங்கினான் -கானில்
    அபரிமித மோஹினியை ஆலிங் கனித்திட
    சபரிகிரி வாசன் ஜனிப்பு’’….

    ”சங்குதிரி சூலத்தை சேரப் பிறந்தவன்,
    பங்குனி உத்திரன்முன், பம்பையில் -முங்கி
    சரணம் விளிப்போர்க்கு சாதகங்கள் இன்றி
    மரண ஜனனம் முடிவு’’….

    ஐயப்பன் திருப் புகழ்….
    —————————

    “புலிவா கணத்தில் மணிமா லையுற்ற,
    மலையே றுபக்தர் -குருநாதா
    திருவா திரைக்கும் திருவோ ணருக்கும்
    சிசுவாய் ஜனித்த -சபரீசா

    புலிவால் பிடித்த கதையாய் ஜகத்தில்
    புழுவாய் துடிக்கும் -எமதான்மா
    அருணா சலத்தில் ரமணே சருற்ற
    அனுபூ திபெற்று -இகவாழ்வில்

    ஜொலியாய் ஜொலிக்க வருவாய் சுருக்க
    குருவாய் இருக்க -எரிமேலி
    விசுவா சமிக்க திருவா வர்நட்பு
    உடையோய் எனக்கு -அருள்வாயே

    பலிமேல் பதித்த அடியால் வரத்தை
    உறமால் குடைக்குள் -சிறிதாகி
    உலகேழ் அளக்க விரிவான் விதிர்க்க
    வளர்மோ கினித்தாய் -பெருமாளே”….(or ) பெறும்ஆளே…

    “ஈரைந்து மாதங்கள் ஈன்றோள் மடியிருந்து,
    பாரைம் புலன்களால் பாழுற்றாய் , -ஈரொன்,
    பதுபடி ஏறி பதிசபரி ஈசன்
    கதியென்(று) இருமுடி கட்டு”….

    ”இன்று வருவாரோ!, நாளை வருவாரோ!,
    என்று வருவார் எமனென்று, -மென்று
    முழுங்கிடாது நெஞ்சே, மணிகண்டன் தாளில்
    புழங்கிட நீலிமலை போ”….

     

    “வீறுபுலி வாகன(ம்)உ லாவுமுகம் ஒன்று
    வாவருடன் தோழமைகு லாவு(ம்)முகம் ஒன்று
    மாறுபடு மோகினிசு மந்தமுகம் ஒன்று
    மேலரவம் பூணுமரன் தந்தமுகம் ஒன்று
    மாறன்வழி போகாமல் மேய்க்கும்முகம் ஒன்று
    ஏறுமடி யார்கள்பயம் போக்குமுகம் ஒன்று
    கூறும்சர ணாகதியை கேளு(ம்)முகம் ஒன்று
    கானிலுறை காந்தசப ரீசமணி கண்டா”….!

    ‘இளங்காலை சூரியன்போல் இன்று மணிகண்டர்
    அலங்காரம் அற்புதம், அந்தோ, -விளங்காது,
    சாஸ்தா சரணமென்று சொல்லிடச் செல்லாது,
    WASTEடாய் அமர்ந்தேனே வீடு’’….கிரேசி மோகன்

    ——————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ‘’சாகக் கிடக்கும் சிலருக்கு நீசொல்லும்
    யோகநலம்(யோகஷேமம்) எப்படி யாதவா! -பாகனுரை(தேர்பாகன் கண்ணன் உரை)

    வீணாகிப் போகா விடாமுயற்சி யோகமிது
    தானாக மீறாது தன்வரம்பை -வாநாளில்
    எள்ளளவு செய்வோரை எப்பயம் சூழ்ந்தாலும்
    உள்ளிருந்து காக்கும் உரை”….!கிரேசி மோகன்….!

    Share
  • ’’படமும் பாடலும்’’….!

     

    பட்டம்மாள் பேத்தி நித்யஸ்ரீ வீட்டுக்கு விஜயம்….!
    ————————————————————————————————–

    ”பாட்டியின்(பாட்டம்மாள்) ஓவியம் பார்க்கும் பரவசத்தில்
    ஓட்டமாய் வந்தாரென் வீட்டுக்கு -நாட்டமாய்
    ஃஃபோட்டோபோஸ்(Photo Pose) தந்தார், படிதாண்டா பத்தினிக்கு
    பாட்டுப்பெண் பார்த்த பலன்’’….கிரேசி மோகன்….!

    Dr.டி.கே.பட்டம்மாள்….!
    —————————————————

    ’’பட்டம்மாள் நிதயஸ்ரீ பேத்திக்கு சொத்தாக
    விட்டுப்போ னாள்பாட்டைப் பாசுரமாய் : கிட்டப்போய்
    டாக்டரம்மா மாத்திரை தாருமென்றால், தந்திடுவார்
    டாக்டரம்மா சங்கீத டானிக்’’….!கிரேசி மோகன்….!

    Share
  • ’’படமும் பாடலும்’’….!

     

    சு.ரவியின் யசோதா கண்ணன்(ரவி வர்மர் என்று நினைக்கின்றேன், அந்த ஓவியம் பார்த்து வரைந்தது, வெண்பா எழுதியது)….!
    ————————————————————–

    அம்மணக் கண்ணன், அலங்காரம் செய்கையில்
    கம்மென நிற்பதன் தாத்பர்யம் -நம்மனம்
    புத்தியை மாற்றிடும் யுக்தியாம் கீதையை
    ஒத்திகை பார்ப்பதற்க் கோ….!

    அன்னை புரியும் அலங்காரம் பாராது
    என்னதான் அப்படி யோசனை -கண்ணனே
    ராதை பிறந்தாளா? காதல் புரிவாளா?
    ஆதலினால் தானே அலுப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு!

    -மேகலா இராமமூர்த்தி

    நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே அளவிற் பெரியது, ஆற்றல் வாய்ந்தது எனும் பெருமைக்குரியது யானை. அதனால்தான் பண்டை அரசர்கள் களிறுகளை (ஆண்யானைகள்) போர்க்களங்களில் பயன்படுத்தினர். அவற்றை வெல்வதை வீரத்தின் அடையாளமாய்க் கருதினர்.

    ’களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ என்று ஆடவரின் வீரக் கடமையை வியனுலகுக்கு உணர்த்தினார் பொன்முடியார் எனும் புலவர் பெருமாட்டி.

    ஒரு களிற்றைக் கொல்பவனையே வீரன் எனப் போற்றிய தமிழ்ச் சமூகம் ஆயிரம் யானைகளை ஒருவன் போர்க்களத்தில் கொன்றால் என்ன செய்யும்?

    அவன்புகழ் தரணியெங்கும் பரவும் வகையில் பரணியே பாடிவிடும்.

    ஆம்!

    ”ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
    மானவனுக்கு வகுப்பது பரணி”
    என்று இச்செய்தியைக் குறிக்கின்றது இலக்கண விளக்கம் எனும் இன்தமிழ்ப் பனுவல்.

    வடிவத்தில் மட்டுமன்று…மற்ற நிலவாழ் விலங்குகளைக்
    காட்டிலும் பெரிய அளவிலான மூளை உடையதும் யானையே. மனிதர்களின் மூளையிலுள்ள நியூரான்களைவிட மூன்று மடங்கு அதிகமான நியூரான்கள் (நரம்பு செல்கள்) யானையின் மூளையில் உள்ளன என்று கண்டறிந்துள்ள அறிவியல், அவற்றின் புத்திக்கூர்மைக்கு இந்த நியூரான்களின் எண்ணிக்கையே காரணம் என்கின்றது. அறிவில் மட்டுமா யானைகள் சிறந்தவை…அல்ல… அல்ல! அன்பெனும் உயர்பண்பிலும் ஈடு இணையற்றவை அவை!

    இதற்கு எண்ணிறந்த சான்றுகளைச் சங்கத் தமிழ்ப் பனுவல்கள் நமக்களிக்கின்றன.

    அவற்றிலிருந்து சில…

    வறண்ட பாலைநிலம் அது! அங்கே தன் இன்துணையான பிடி (பெண்யானை), நா வறட்சியால் வருந்திநிற்கக் காண்கின்றது களிறு. அதன் தாகத்தைத் தீர்க்க நீர்தேடி நெடுந்தூரம் அலைகின்றது. வெகுதொலைவுக்கு அப்பால் ஓர் ஊற்று தென்படுகின்றது; அதனடியில் சிறிதளவு நீர் இருப்பதைக் கண்ணுற்றது களிறு. மீண்டும் பிடியைத் தேடிச்சென்று அதனை இத்துணைத் தொலைவு அழைத்துவருவதைக் காட்டிலும் நாமே நீரை முகந்துசெல்வதே அறிவுடைமை என்று தெளிந்த அக்களிறு, தன் சொரசொரப்பான துதிக்கையில் நீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டு காதல் பிடியை நாடி ஓடுகின்றது.

    …கல்லூற்று  ஈண்டல  கயன்அற  வாங்கி
    இரும்பிணர்த்
     தடக்கை நீட்டி  நீர்நொண்டு
    பெருங்கை
     யானை  பிடியெதி  ரோடும்… (நற்: 186)

    பிறிதொரு சமயம் களைத்திருந்த பிடியானையை மலையோரம் உறங்கவைத்த களிறு, அதற்கு உண்ணுதற்கு வேண்டிய பழங்களைப் பறித்துவருவதற்காகச் சிறிதுதொலைவிலிருந்த வாழைத் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கிருந்தபடியே உறங்கிக்கொண்டிருந்த பிடி பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதையும் அவ்வப்போது கவனித்துக்கொண்டுதான் இருந்தது. வாழைப்பழக் குலையை முறித்தெடுத்துக்கொண்ட அது, மீண்டும் தன் பார்வையைப் பிடியை நோக்கித் திருப்பியபோது, உறங்கிக்கொண்டிருந்த பிடியை அங்கே காணவில்லை. அச்சமும் கவலையும் கொண்ட களிறு பெருங்குரலில் பிளிறத்தொடங்கியது.

    உண்மையில் பிடியென்னவோ அதே இடத்தில்தான் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருந்தது. அவ்வேளையில் வானத்தில் நகர்ந்துகொண்டிருந்த மஞ்சு (மேகம்) ஒன்று, சரியாக அந்த மலைப்பக்கம் வரவே, அது துஞ்சிக்கொண்டிருந்த பிடியை, களிற்றின் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது; அவ்வளவுதான்! அதற்கே அந்தக் களிறு அப்படி ஓலமிட்டுத் தன் வேதனையை வெளிப்படுத்தியது என்றால் அந்த விலங்குக் காதல் மனிதக் காதலினும் புனிதமானது என்பது திண்ணமாய்த் துலங்குகின்றது அல்லவா?

    …..பலவுடன்
    வாழை ஓங்கிய வழையமை சிலம்பில்
    துஞ்சுபிடி மருங்கின்  மஞ்சுபடக் காணாது
    பெருங்களிறு பிளிரும் சோலை வர்
    சேண்நெடுங் குன்றம் காணிய நீயே.      (நற்:  222 – கபிலர்)

    பொதுவாக ஆண் விலங்குகள் தம் காமவேட்கை தீர்ந்தவுடன், (அதனைத் தீர்த்த) பெண் விலங்கை கழற்றிவிட்டுச் சென்றுவிடும் இயல்புடையவை. ஆனால் அதிலும் வேறுபட்டது களிறு. காமம் தீர்ந்ததும் பிடியின் பிடியிலிருந்து தப்பிச்செல்லும் குணம் அதற்கில்லை. தன் உயிர்போகும் அளவும் தன் பெண்துணையைப் பிரியாது வாழும் உயர்ந்த ஒழுக்கமுடையது அது!

    அவ்வாறு காதல் வாழ்வில் களிப்புற்றிருந்தன ஒரு களிறும் பிடியும். அந்தப் பிடியானை கருவுற்றது. அது கன்றினை ஈனுவதற்கு வசதியாக மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்த, நிழல்மிகு மலைப்பக்கத்தில் அதனைத் தங்க வைத்தது களிறு. சின்னாட்களில் கன்றினை ஈன்றது பிடி. களிறுகொண்ட களிக்கு அளவேது?

    பால்சுரந்த மடியோடும், சோர்வளிக்கும் பசியோடும் வாடியிருந்த பிடியைக் கண்ட அந்தக் கரிய களிறு, அதன் பசியைப் போக்குவதே தன் முதற்கடமை என்றுணர்ந்து அருகிலிருந்த தினைப்புனத்துக்குச் சென்று, அங்கே ஓங்கிவளர்ந்து வளைந்திருந்த தினைக்கதிர்களைக் கவர்ந்துகொண்டுவந்து பிடிக்கு உண்ணத்தந்து அதன் பசியாற்றிற்று.

    நெடுங்கழை  நிவந்த  நிழல்படு  சிலம்பின்
    கடுஞ்சூல்
     வயப்பிடி  கன்றீன்று  உயங்கப்
    பாலார்
     பசும்புனிறு  தீரிய  களிசிறந்து
    வாலா
     வேழம்  வணர்குரல்  கவர்தலின்….(நற்: 393 – கோவூர்கிழார்)

    மற்றொரு நாள், கன்றீன்றிருந்த அந்தப் பிடியையும் அதன் கன்றையும் தாக்கி அழிப்பது எளிது என்று கருதிய புலி ஒன்று, அவற்றைக் களிறு காத்து நிற்பதை அறியாது, அவற்றைத் தாக்கமுற்பட, அருகே மற்றவர் பார்வையில் படாது மறைந்திருந்த களிறு பாய்ந்துவந்து புலியைத் தாக்கி வீழ்த்திவிட்டு, குருதிக்கரை படிந்த புலால்நாற்றம் வீசும் கோட்டோடு (தந்தம்) பிடியையும், இளங்கன்றையும் அணைத்தபடியே அவ்விடத்தைவிட்டு அழைத்துச்சென்று, தேனைச் சேகரித்துக்கொண்டிருந்த வண்டுகளெல்லாம் அஞ்சி ஓடுமாறு வேங்கைமரத்தின் பொன்போன்ற மலர்கொத்துக்களைப் பறித்துக் கன்றுக்கும் காதல் மடப்பிடிக்கும் ஊட்டி மகிழ்ந்தது.

    புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட்டு
    ஒலிபன்
    முத்தம் ஆர்ப்ப  வலிசிறந்து
    வன்சுவல்
    பராரை முருக்கிக் கன்றொடு
    மடப்பிடி
    தழீஇய தடக்கை வேழம்
    தேன்செய்
    பெருங்கிளை இரிய வேங்கைப்
    பொன்புரை
    கவழம் புறந்தருபு ஊட்டும்…(நற்: 202 – பாலை பாடிய பெருங்கடுங்கோ)

    காலடிகளைத் தரையில் ஊன்றமுடியாதபடி கனல் பறந்துகொண்டிருந்த முதுவேனிற் காலத்தில் ஒருநாள், நீர் வேட்கையோடு களிறும் பிடியும் கன்றும் அலைந்துகொண்டிருந்தன. சிறிய ஊற்றொன்று அவற்றின் பார்வையில் பட்டது. குட்டியானை குதித்துக்கொண்டு முதலில் சென்று தன் அடியால் நீரைக் கலக்கி விளையாடத் தொடங்கியது. அவ்வூற்றில் சிறிதளவே நீரிருந்ததைக் கவனித்த களிறு, தன் பிடிக்கு முதலில் அச்சீன்னீரை ஊட்டிவிட்டு எஞ்சியிருந்தைத் தான் பருகியது.

    அடி தாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
    கடியவே கனங்குழாஅய் காடென்றார் அக்காட்டுள்
    துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
    பிடியூட்டிப்  பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே  (கலி:11)

    குடும்பத்தை அன்பாய்ப் பேணுவது எப்படி எனும் அரிய பாடத்தை ஆண்மக்கள் களிற்றியானையிடம் கற்க வேண்டும்.

    அன்போடு இணைந்துவாழும் யானைக் குடும்பத்தில் யானைக் கன்று ஏதேனும் இறந்துபட்டால், மற்ற யானைகள் மண்ணுக்குள் தம் தலையைப் புதைத்துத் துக்கம் அனுசரிக்கும். இறந்த யானையின் உடல்மீது மண்ணைப்போட்டு அவ்வுடலைப் புதைக்கும் வழக்கமும் யானைகளிடம் உண்டு.

    அதுமட்டுமன்று…விதியாலோ மனிதரின் சதியாலோ நீண்டகாலம் பிரிந்துவிட்ட யானையைக்கூட பார்த்த அளவிலேயே  அடையாளம் கண்டுகொள்ளும் அற்புத நினைவாற்றல் கொண்டவை யானைகள். குறுக்குவழிகளைக் கண்டுபிடித்துப் பயணிப்பதிலும் அவை மிகுந்த சாமர்த்தியசாலிகள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    யானைகளிடம் இருப்பவை அனைத்துமே நல்ல குணங்கள்தாமா? தீயவை என்று ஏதுமில்லையா என்று வினவுதிராயின்…

    உண்டு என்றே சொல்வேன். ஆண் யானைகளுக்கு அவ்வப்போது மதம் பிடிக்கும். அவற்றின் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளிலிருந்து வழியும் மதநீரானது (musth/must) அவற்றை மூர்க்கமாய் மாற்றும் நீர்மையுடையது.

    யானைகளுக்கு மட்டுமா…? மனிதர்களுக்கு மதம் பிடிக்கும்போதும் அதுதானே நடக்கின்றது!

    மதமென்னும் அழிகுணத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் யானைகளிடம் நாம் அறிந்து பின்பற்றவேண்டிய அருங்குணங்களே மிகுதி என்று துணிந்து சொல்லலாம்.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. நற்றிணை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை

    2. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்

    2. https://www.fbvideo.com/videos/1246294048836184

     

     

    Share
  • வாழ்வுக்கு வழிவகுக்கும்!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    காசமெனும் நோய்தானும்
    கதிகலங்க வைத்ததுவே
    கவலையுடன் பலபேரும்
    காசமதில் உழன்றனரே
    மேதினியில் வியாதிபல
    வந்துகொண்டே இருக்கிறது
    விருப்புடனே வியாதிதனை
    வரவேற்பார் யாருமுண்டோ!

    என்றாலும் சிலபேர்கள்
    இதைமனதில் கொள்ளாமல்
    எவர்கருத்தும் கேட்காமல்
    இறுமாந்தே நடக்கின்றார்
    ஆரம்பம் நடக்குமுள்ளே
    அவர்க்கு அதுதெரியாது
    ஆபத்து மெள்ளவந்து
    அங்கேயே அமர்ந்துவிடும்!

    ஆபத்தாய் வந்ததுவே
    அகிலமதை உலுக்கிநிற்கும்
    ஆலகால விஷமான
    புற்றுநோயின் வருகையதே
    தப்பிதமாய் நடந்திடுவார்
    புற்றுநோயைக் கண்டவுடன்
    முப்பொழுதும் கவலையிலே
    மூழ்கிடுவார் வாழ்வினிலே!

    புற்றுநோய் வருவதற்குப்
    பொதுவான காரணங்கள்
    செப்பமாய்ச் சொன்னாலும்
    சிலவுமிப்போ சேர்ந்துளது
    மொத்தமாய் பெருகிவரும்
    விஞ்ஞானக் கருவிகளும்
    புற்றுநோய் பெற்றுத்தர
    சற்றேனும் தவறவில்லை!

    புகைப்பழக்கம் குடிப்பழக்கம்
    புற்றுநோயை வரவழைக்கும்
    என்றெங்கும் பரப்புரைகள்
    ஏராளம் நடக்கிறது
    வருகின்ற சினிமாக்கள்
    புகைகுடியைக் காட்டிநின்றால்
    வளர்ந்துவரும் தலைமுறைகள்
    புற்றுநோய்க்கு என்னசொல்லும்!

    ஊடகங்கள் அத்தனையும்
    உழைப்பதற்கு இருந்தாலும்
    கேடுதரும் விஷயங்களைக்
    கிழித்தெறிந்து விடவேண்டும்
    குடிபற்றி புகைபற்றி
    விளம்பரங்கள் போடுவதை
    அடியோடு அகற்றிவிட
    அவையாவும் வரவேண்டும்!

    புற்றுநோய் என்றதுமே
    புலனெல்லாம் ஒடுங்குகிறது
    உற்றவரும் மற்றவரும்
    ஒருவாறு நோக்குகிறார்
    பெற்றெடுத்த பிள்ளைகூட
    சற்றுத்தள்ளி நிற்கின்றார்
    மற்றநோயைப் புறந்தள்ளி
    புற்றுயே நிற்கிறது!

    நாகரிகம் எனக்கருதி
    நாளும்பல செய்கின்றோம்
    நமக்குநன்மை செய்தவற்றை
    நாமொதுக்கி விட்டுவிட்டோம்
    வாழ்வெல்லாம் பலநோய்கள்
    வருவதற்கும் காத்திருக்கு
    மனமதனை மாற்றுவதே
    வாழ்வுக்கு  வழிவகுக்கும்!

     

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 9

    By
    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

     

    அந்தப் பெண், தன்னிடம் சிறுமிகள் வந்து சேர்ந்ததை விவரித்தாள். “ஆறு வருடங்களுக்கு முன்பு, ஒரே வாரத்தில் இவர்கள் பெற்றோர் இறந்து விட்டனர். தந்தை மரம் வெட்டுபவன். ஒரு நாள் மரம் வெட்டும் போது அவன் மேல் மரம் விழுந்து வயிறு நசுங்கி விட்டது. உடலை வீட்டிற்க்குக் கொண்டு வரும் முன்பே அவன் உயிர் பிரிந்து விட்டது. ஊரார் அவனை அடக்கம் பண்ணினர். மூன்று நாட்களுக்குப் பின் அவன் மனைவி இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவள் மிகவும் ஏழை. அவளுக்கு உற்றார், உறவினர் ஒருவரும் கிடையாது. பிரவசத்தின் போதோ அல்லது மரணத்தின் போதோ ஒருவரும் அருகில் இல்லை.

    நானும் என் கணவரும் அடுத்த குடிசையில் வாழ்ந்து வந்தோம். குழந்தைகள் பிறந்த மறுநாள் காலை அவளைப் பார்க்கச் சென்ற போது அவளுடைய இறந்த உடல் குளிர்ந்து விறைத்துப் போயிருந்தது. அவள் சடலம் குழந்தையின் மேல் உருண்டு கால் நசுங்கி விட்டது.

    ஊரிலுள்ளவர்கள் ஒன்று கூடிச் சடலத்தைக் கழுவி அடக்கம் பண்ணின பின்பு குழந்தைகளை யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி எழும்பியது. எனக்குக் குழந்தை பிறந்து எட்டுவாரங்களாகியிருந்து. ஊரில் நான் மட்டும்தான் பாலூட்டும் தாயாக இருந்ததால் இந்தக் குழந்தைகளுக்கும் பால் கொடுத்து வளர்க்க ஒப்புக் கொண்டேன். ஊர்க்காரர்களும் “இப்போது நீ குழந்தைகளைக் கவனித்துக் கொள், அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிப் பின்பு நாம் ஒரு முடிவெடுக்கலாம்” என்றனர். முதலில் ஊனமுற்ற குழந்தைக்கு நான் பால் கொடுப்பதில்லை. அந்தக் குழந்தை பிழைக்காது என்று நினைத்தேன். ஆனால் ஏன் ஒன்றுமறியாத குழந்தை துன்ப படவேண்டும் என்று நினைத்து அதற்கும் பால் கொடுக்க ஆரம்பித்தேன். நான் இளமையாகவும், நல்ல உடல் பலத்தோடும் இருந்ததால் தேவைக்கு அதிகமாகப் பால் சுரந்தது. இறைவனின் சித்தப்படி இந்தக் குழந்தைகள் நன்றாக வளர்ந்தனர். ஆனால் என் மகனோ இரண்டு வயதான போது இறந்து விட்டான். எங்களுக்குச் செல்வம் பெருகிய போதிலும் எனக்கு வேறு குழந்தைகள் பிறக்கவில்லை. என் கணவருக்கு ஒரு ஆலையில் வேலை கிடைத்தது. நல்ல வருமானம் இருப்பதால் கவலையில்லாமல் வாழ்கிறோம். இவர்கள் இல்லாவிட்டால் என் வாழ்க்கை வறண்டு போயிருக்கும். இந்தச் சிறுமிகள் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்கள். இவர்களை நான் எப்படி நேசிக்காமல் இருக்கமுடியும்?”, என்று சொல்லிக் கொண்டு ஊனமுற்ற சிறுமியை அணைத்துக் கொண்டு மற்ற சிறுமியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள். மெடீனா அவள் சொல்லி முடித்தை கேட்டுத் “தாயும், தந்தையும் இல்லாமல் ஒருவரால் வாழ முடியும். ஆனால் கடவுள் இல்லாமல் வாழ முடியாது, என்ற பழமொழி எவ்வளவு உண்மை” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

    அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது மைக்கேல் உட்கார்ந்திருந்த மூலையிலிருந்து திடீரென்று மின்னலடித்தது போல் வெளிச்சம் தோன்றி அந்தக் குடிசை முழுவதும் பிரகாசமடைந்தது. எல்லோரும் அவனைப் பார்த்த போது மைக்கேல் உட்கார்ந்து கைகளைக் குவித்துக் கால் முட்டுக்களில் ஊன்றி மேலே நோக்கிப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டிருந்தான்.

    தொடரும்

    Share
  • குயவன்

     

     

     

    த. ஆதித்தன்

     

    பெற்றோர்களின் வறுமையால் சொந்த கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்துவிட்டான் சட்டைநாதன்.  ஆட்டோ ஓட்டும் அவன் சித்தப்பா மாநகராட்சிப் பள்ளியில் அவனை ஒன்பதாம் வகுப்பு  சேர்த்து விட்டிருக்கிறார்.

     

    காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருந்து சித்தப்பாவின் ஆட்டோவைத் துடைத்துக் கொடுப்பது, தெருக்குழாயில் வீட்டிற்குத் தேவையான தண்ணீர் பிடித்துக் கொடுப்பது,  கடைக்குச் சென்று வீட்டிற்கு வேண்டியவற்றை வாங்கி கொடுப்பது உள்ளிட்ட காலைக் கடன்களை முடித்து விட்டு பள்ளிக்குத்  தயாராக மணி காலை 8.30 ஆகிவிடும்.  பின்னர் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்றால் பள்ளிக் கூடம் வந்துவிடும்.  ஓட்டமும் நடையுமாக சென்றால் வீட்டுப் பாடங்களை முடிக்க நேரம் கிடைக்கும்.  மாலையில் வீடு சென்றால் பீடி சுற்றும் தொழிலாளியான சித்திக்கு உதவி செய்வதிலேயே நேரம் கடந்துவிடும் இவனுக்கு வீட்டுப்பாடம் செய்வதற்கு நேரம் ஏது.

    வகுப்பாசிரியை தெரசாவின் கோபக் கணைகள் மட்டும் இல்லை என்றால் இவை ஒன்றும் அவனை பாதித்திருக்காது.

    இதேபோன்று ஆசிரியர்கள் இருப்பார்களோ;  மாட்டார்களோ           தெரியாது.  ஆனால் தெரசா டீச்சர் மட்டும் அப்படி.

    அவர் வகுப்பு நடத்தாமல் ஊர்க்கதை பேசுவதுதான் அதிகமாக இருக்கும்.  அப்படி பொதுவாகப் பேசும்போது கூட அவரின் பேச்சில் அன்பைக் காண முடியாது.  அதிகாரத்தைதான் காணமுடியும்.

    சட்டைநாதன் ஒருநாள் பள்ளிக்கு வர தாமதமாயிற்று,  காரணம் அன்று தெருக்குழாயில் தண்ணீர் வராததால் இரண்டு தெரு தள்ளி உள்ள அடிபைப்பில் இருந்து தண்ணீர் பிடிக்க வேண்டியதாயிற்று.  அந்த சோர்வால் பள்ளிக்கு வேகமாக நடந்து வர முடியவில்லை

    “ குட் மார்னிங் டீச்சர் ”என்றான்.

    தெரசா டீச்சரின் முகம் அனலைக்கக்கியது. “ ஏண்டா லேட்டு?”

    “லேட்டாயிடுச்சி டீச்சர்”

    “காரணம் கேட்டா அதையே சொல்ரே”?  சீறி விழுந்ததோடு “வீட்டுப்பாட நோட்டை எடு” என்றார்.

    வீட்டுப் பாடம் முடிக்கலை டீச்..ச…ர்…” சொல்லி முடிக்கும் முன்பே அவர் கையில் இருந்த பிரம்பு அவனைப் பதம் பார்த்தது.

    “வகுப்புக்கு உள்ள வராத …, வெளிய நின்னே பாடத்த கவனி… மதியம் சாப்பாட்டு டைம்ல ஸ்டாப் ரூமுக்கு வந்து வீட்டுப் பாடத்த முடிச்சுக் குடுத்திட்டு வகுப்புக்கு உள்ள போ” என்றார்.

    வகுப்பாசிரியர் சொன்னதால், அதிலும் தெரசா டீச்சர் சொன்னதால் எந்த பாட வேளையிலும் உள்ளே செல்ல முடியவில்லை.

    நேரம் ஆக ஆக கால் வலித்தது.  உள்ளே தமிழ் வகுப்பு நடந்தது, “  நல்ல களிமண்னைக் கொண்டு எத்தகைய உருவத்தையும் செய்ய முடியும்.  அது குயவன் கையாளும் விதத்தைப் பொறுத்தது.  அதுபோல மாணவர்களே உங்களை வடிவமைப்பது சமூகக் குயவன்.  ஆம் சமூகமாகியக்  குயவன்” என பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

    மதிய உணவு வேளை வந்ததும் ஆசிரியர் அறையின் வெளியே அமர்ந்து வீட்டுப் பாடங்களை முடித்தான்.  தெரசா டீச்சரிடம் கொடுத்துவிட்டு சத்துணவு சாப்பிட வேகமாக ஓடிச் சென்றான். பசி வயிற்றைக் கிள்ளி எடுத்தது.  எல்லோரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள்.  சத்துணவுக் கூடத்திற்குள் எட்டிப் பார்த்தான்.  பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள்.  வெளியே மாணவர்கள் கொட்டியிருந்த மீதமான சாப்பாடு ஒர மரத்தடியில் கிடந்தது.  தண்ணீர் குடிக்கலாம் என அருகில் இருந்த குழாயைத் திருகினான்.  ஏற்கனவே காலியாகியிருந்ததால் சொட்டு சொட்டாக சில துளிகள் விழுந்தன.  அப்படியே அருகில் இருந்த திண்டில் ஏறி வெளியில் பார்த்தான்.

    சாலையின் எதிர்புறம் ஒரு தனியார் பள்ளி.  அப்பள்ளியின் கேண்டீன் கண்ணில் பட்டது.  இவன் வயதை ஒத்த மாணவர்கள் இருவர் ஐஸ்கிரீமை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்படியே திண்டில் இருந்து இறங்கி குழாய் அருகில் அமர்ந்தான்.  குழாயில் இருந்து சிறு துளி மண்ணில் விழுந்தது.

    சட்டை நாதன் மனதுள் என்னென்னவோ தோன்றியது.  “இவ்வளவு கஷ்டங்களையும் நான் எதுக்குத் தாங்கிக்கணும்?”

    “வயிற்றுப் பிழைப்புக்காகவா?

    “ஏழையாய் பிறந்ததற்காகவா?

    அவன் அருகில் எந்த குயவனும் இல்லை.

    …..

     

     

     

    Share
  • மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 4

     

    இன்னம்பூரான்
    14 03 2018

    உலகம் புகழும் விஞ்ஞானிகளில் மிகவும் சிறந்த மனிதப்பிறவியாக கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் பிறந்த தினம் இன்று. “ சற்றும் சிந்திக்காமல் அதிகாரத்துக்கு பணிவது தான் வாய்மைக்கு விரோதி.” என்பது அவருடைய பொன்வாக்கு. இன்று மறைந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்கள் “ இறைவன் பகடை உருட்டுவதுடன் நிற்காமல், அவற்றை கண்காணாத இடத்தில் வீசிவிடுகிறார்.” என்கிறார்.

    ஐன்ஸ்டீனின் பொன்வாக்கு தொன்மத்துக்கும் பொருந்தும்; மதமாச்சர்யங்களுக்கும் பொருந்தும்; நாத்திகம் தான் சுயமரியாதைக்கு இடம் தரும் என்ற மாயத்துக்கும் பொருந்தும்; வாழ்வியலை அலக்கழிக்கும் தீவினைகள் யாவற்றுக்கும் பொருந்தும். ஸ்டீஃபன் ஹாக்கிங் பிரபஞ்சத்தின் மாயாஜாலங்களை சுருக்கமாக புடம் போட்டுப் பகர்ந்து விட்டார்.

    அவரே அது பற்றி மையமாக குறிப்பு வரைந்திருக்கும் போது, அதை ஓரளவாவது தெளிவு படுத்த பதிவுகள் தேடினேன். என்னுடைய அம்மா என்றோ எழுதி வைத்திருந்த ஒரு பதிவு ஞாபகத்துக்கு வந்தது. அவர் பள்ளியில் சென்று படித்தது சொற்பம். அனுபவம் அபாரம். அணுகுமுறை தெய்வீகம் என்று சொன்னால் மிகையாகாது என்று வாசகர்களே கூறினார்கள்.

    மதாபிமானம் பாராட்டாத, சுயமரியாதை என்பதை விலக்கிய,அகந்தையற்ற அவரின் வாழ்வியல் நன்கு தான் அமைந்திருந்தது. ஆனால் என்ன? செல்வம், பின்னர் வறுமை, பின்னர் வறுமையின்மையும் செல்வமின்மையும். அவர் சொல்லில் அவருடைய தாத்பர்யத்தைக் கேட்போம்:

    “உ
    ஸ்ரீ:
    எல்லாம் அவன் செயல்

    கதைச்சுருக்கம்

    எனக்குத் தெரிந்த வரையில் இந்த உலகம் ஒரு மாயை. சினிமா இப்படியிருக்கையில் கலியுகம் முடியும் போது க்ருன் (கிருஷ்ண) பகவான் ஆலிலையில் துயில் கொள்கிறான். கடல் பொங்கி அமர்ந்த பிறகு ஸ்ரீராப்தி (க்ஷீராப்தி) நாராயணனாக அவதரிக்கிறார் என்று கேள்வி. அப்போது நாரயணன் ப்ரம்மாவை வரவழைக்கிறார். உடனே இருவரும் யோஜனையில் ஆழ்ந்து எப்படி உலகத்தை உண்டாக்குவது என்று நினைக்கிறார்கள். உடனே நாராயணன் ப்ரம்மாவை உலகத்தைப் படைக்கும்படி சொல்கிறார் நீ அதை செய்து முடி. நான் உலகத்தைப் படைத்து முடிக்கிறேன். நீ உலகத்தில் புல், பூண்டு, விலங்கினங்கள் மனிதன் ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் படைத்து விடு என்று நாராயணன் ப்ரம்மாவிற்கு சொல்லி விடுகிறார். அதே போல் நாராயணன் படைத்து விடுகிறான். ப்ரம்மா ச்ருஷ்டி செய்துவிடுகிறார். பிறகு அவர்களுடைய செயல் கொண்டு, உலகப் ப்ரபஞ்சம் ஆகி மனிதர்கள் உற்பத்தியாகி உலகப் ப்ரபஞ்சமாகி விடுகிறது. இப்படியிருக்கும் போது மனிதர்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதற்கிடையில் வருணபகவான் வந்து மழை பெய்து உலகம் செழிப்பாகவும் வைக்கிறான். நன்றாக ஜனங்கள் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து குடும்பம் நடத்துகிறார்கள் அவர்களுக்குக் கதம்பமாக குழந்தை பிறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை யார் கொடுக்கிறான். எல்லாம் அவன் தான் கொடுக்கிறான் என்று அவர்கள் நினைப்பதில்லை. அது வந்து அவன் தான் கொடுக்கிறான் என்று அவர்கள் நினைப்பதில்லை அது வந்து அவன் கொடுக்கிறான் என்று அவர்களுக்குத் தெரியாது ஏதோ நமக்கு குழந்தை பிறக்கிறது. (பிறக்கிறது – நல்லது என்று சந்தோஷப் படுவார்கள். அதனால் அவர்கள் பகவானை மறந்து விடுவார்கள். அதையும் பகவான் அவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டு, சிரித்துக்கொள்வார். ஆனால் அவர்கள்மேல் கோபப்படமாட்டார். அவர்களுக்கு மாயை ஆகப்பட்டது அவர்களை மறக்க வைத்துவிடும். ஆனால் பகவானை வந்து நி நைக்கும் அளவுக்கு உலகத்தில் எல்லா இடத்திலும் கோயில் கொண்டிருக்கிறான். அதனால் ஜனங்கள் எப்போது அவன் நினைவு வருகிறதோ அப்போது அவர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். அதுவும் அவன் அவர்கள் மனதில் புகுந்து ஒரு தரமாவது என்னை வந்து பார் என்று நினைவு படும்படி செய்கிறார். அது போல் அவர்கள் மனதில் தோன்றினதும் உடனே அவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள். எப்பவும் நான் நினைத்த காரியம் நன்றாக நடக்கவேண்டும் என்றால் அவனை ஒரு நிமிஷமாவது நினைக்க வேண்டும். அது மாதுரி எவ்வளவோ / காரியம் என் கண் முன்பே நடந்திருக்கிறது. அதனால் தான் அவன் செயல் என்று சொல்வது உண்டு. அது போல் எனக்கு ஆத்வார்களுக்கு பகவான் தெரிசனம் தருகிறான். அது மாதுரி எனக்கும் கனவில் பகவான் சேர்வை தருகிறான் அப்போது நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படி பகவானை ப் பார்த்துக்கொண்டு இருப்பது மனதிற்கு ஆனந்தமாக இருக்கிறது. நான் மெய் மறந்து போய் திடீரென்று விழித்துக் கொள்வேன் என்னடா விடிந்தது தெரியாமல் இருப்பேன் பிறகு நினைப்பேன் மறுபடியும் பகவான் கனவில் வரமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டு இருப்பேன். ஆனால் ஆழ்வார் மூன்று பேருக்கு பகவான் தெரிசனம் கொடுத்தான் அதை நினைத்து நாம் என்ன வெரும் ஒன்றும் தெரியாத எனக்குக் கனவில் பகவான் வந்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். நமக்கு என்ன கவலையிருந்தாலும் நாம் அவனை நினைக்க வேண்டும். அது என்னுடைய கொள்கை. அதே போல் ஏழுமலையானும் எனக்குக் கனவில் வருவார். இதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன் ஏன் என்றால், நான் சொல்லலாம்; கேட்பவர்கள் நம்பவேண்டுமே. அதனால் தான் யாரிடமும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு நிச்சியமாக கனவில் வந்து நீ கவலைப்படாதே. நான் உன் குழந்தைகள் குடும்பம் எல்லாவற்றையும் காப்பாத்துகிறேன் என்கிறமாதிரி கையை காண்பிப்பார். நான் அவனை நினைத்தால் எனக்கு பலன் கிடைக்கிறது. நானும் மாயையில் சிக்கி எழுந்து, இப்போது பகவானைப் பார்க்கிறேன். அதனால் எனக்கு அவனுடைய செயல் பட்டுப் பலன் இருகிறது நான் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைப்பேன் யார் அழைத்துப்போவார்கள் எனக்கோ வயதாகி விட்டது கவலைப்பட்டுக்கொண்டு பகவானை நினைப்பேன். அவர் உடனே கனவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போகிற மாதிரி வருவார். எனக்கு அதனால் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைக்க மாட்டேன். /// இருந்தாலும் பகவான் என்ன சொல்கிறார் என்றால், நான் உன்னுடைய ஹ்ருதயத்தில் கோவில் கொண்டுள்ளேன். அதனால், நீ என்னை ஹ்ருதயத்திலேயே பார்த்துக்கொள் என்று சொல்கிறார். அதனால் மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். இப்போது அவன் செயல் என்று நினைத்து எந்தக்காரியத்தையும் நடத்தவேண்டும்….இன்னும் ஒரு அதிசயம் என்ன என்றால், நான் சனிக்கிழமை தோறும் வெங்கடாசலபதி பெருமாளுக்கு துளிமாலை சாத்தி வந்தேன்…என்று திருவேங்கடமுடையானை வேண்டிக்கொள்வேன்… அவனும் எனக்கு பலன் கொடுக்கிறான். இருந்தாலும் அவன் செயல் தான் என்று நினைத்துக்கொள்வேன். எனக்கு கனவில் கிழவர் போல் என் கண்ணில் படுவார். அந்த மாதிரி கனவில் வருவதும், போவதுமாக இருப்பதால், எனக்கு உடம்பு என்று வந்தால் கூட சரியாகி விடுகிறது. மறந்து போய் துளசி மாலை போடவில்லை என்றால், கனவில் ஏன் போடவில்லை என்று கேட்பார். அவர் சொல்வது போல் என் ஹ்ருதயத்திலே இருக்கிறார் அதனால் தான் நான் என் ஆத்மாவை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்ஆனால், இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்….

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share