Blog

  • மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 3

     

    இன்னம்பூரான்
    13 03 2018

     

    இனி விஷயத்துக்கு வருவோம். மதாபிமானமும், சுயமரியாதையும் வாழ்வியலின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி உடையவை. அவற்றை விலக்கி வாழும் திறன் சாத்தியமெனினும், மிகவும் சிலரே அவ்வாறு வாழ்வதை இயல்பாக வைத்துக்கொள்கிறார்கள். தேசீய அளவில் பார்க்கப்போனால், இங்கிலாந்தில் அத்தகைய வாழ்வியல் தென்படுகிறது. அமெரிக்காவில் மிகவும் குறைவு; ஏன்? அங்கு பைபிள் பெல்ட் என்று வருணிக்கப்படும் மாநிலங்களில் மதவெறி தென்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் அவரவர் போக்கை அவரவர்கள் கடைபிடிப்பதில் சிக்கல் ஒன்றும் இல்லை. ஹிந்து சனாதன தர்மமோ, கிருத்துவமோ, இஸ்லாமியமோ, நாத்திகமோ மூளைச்சலவையில் ஈடுபட்டால், அது நலம் பயக்காது.
    வாழ்வியலின் பரிமாணங்களில் மிகவும் உயர்ந்தது நன்னடத்தை. வாய்மை, நியாயம், சரியான அணுகுமுறை ஆகியவை அதில் அடங்கும். மதாபிமானம், சுயமரியாதை ஆகிவற்றை தவிர்த்து வாழக்கூட அவை உதவும். அண்ணல் காந்தி அதற்கு நல்லதொரு உதாரணம்; அவர் கூட தன்னை ஹிந்து என்று தான் அடையாளம் காட்டிக்கொண்டார். அந்த மதாபிமானம் அவருடைய வாழ்வியலுக்கு முட்டுக்கட்டை போடவில்லை. அந்த அணுகுமுறையை சிறிதேனும் கடைப்பிடிப்பது நல்லது.

    இத்தருணம் ‘அறிவியல்’ என்ற சொல்லின் எல்லையைப் புரிந்து கொள்வோம். அது ‘விஞ்ஞானம்’ என்ற சொல்லின் ஒரு பின்னம் எனலாம். விஞ்ஞானமே அறிவியலின் பின்னம் என்பதில் முரண் ஒன்றுமில்லை. உபனிஷத்கள், சித்தர் பாடல்கள், திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்கள் அறிவியல் இல்லை என்று பிரசாரம் செய்வது மதியீனம். அதே சமயம் இன்றைய விஞ்ஞான புரிதல்கள், நிரூபணங்கள் நிரந்தரமானவை அல்ல. விஞ்ஞானத்தின் தனிச்சிறப்பே திறந்த அணுகுமுறை. அதை தவிர்த்து விட்டு தனது அபிப்ராயங்கள் தான் இறுதி முடிவு என்று பறை கொட்டுவதை போல் வாழ்வியலுக்கு முரண் யாதுமில்லை.

    ஒரு சிறிய உண்மைச் செய்தி. பெங்களுரில் பேரின்பத்தைப் பற்றி, இன்பத்தைப் பற்றி, மனநிறைவைப் பற்றி ஒரு விஞ்ஞான ஆய்வு நடந்து வருகிறது, துறவிகள் வாழும் ஒரு பல்கலை கழகத்தில். அதன் பெயர் ஸாரா ஜே மடம் & பல்கலைக்கழகம். பெளத்த பிக்ஷுக்கள் அங்கு பெரும்பாலும் பிரார்த்தனை செய்த வண்ணம் இருப்பார்கள்; மதாபிமானம் நிறைந்த இடம் அது. பெளத்த மதம் சார்ந்த சடங்குகளுக்கு பஞ்சம் இல்லை. குரு-சிஷ்ய உறவு தான் அங்கு பிரதானம். அந்த பிக்ஷுக்கள் விஞ்ஞானத்தின் மீது தீராத காதல் கொண்டவர்கள்.
    அங்கு என்ன ஆய்வு நடக்கிறது என்பதை உரிய நேரத்தில் கூறுகிறேன்.

    (தொடரும்)

    …தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின் தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி… விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்…இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்…கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு…தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது… அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?…இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?…இயகை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாய்க் கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்… பார்ப்பனர் பார்ப்பனல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது… வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி . ’ யாதும் ஊரே யாவருங்கேளீர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்காலத் தமிழர் சிறுமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகுது…”
    தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள் ஜூலை 5: 1928, ஏப்ரல் 10,11,12: 1929 ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ’’மேல்கோட்டை செல்லத்தின்(செல்லப்பிள்ளை) கால்மாட்டைக் கன்றுண்ண,
    மால்பாட்டுக்(கு) ஓட்டம் மதியாது, -ஸோல்மேட்டை(ஆவினம்),
    விட்டாலும் கன்று, விடாது கருப்பனை;
    கெட்டாலும் விட்டலன் கால்’’….கிரேசி மோகன்….!

    “கேசவர்தாள் மாடாக, கேசவ்கைக் கோடாக,
    பாசிப்புல் மேடாக, பண்டரி , -வாசனவர்,
    வீடாக, வீற்றக்கல் ஓடாக, போற்றும்பா
    ஏடாகச், செய்பிறப்(பு) ஏழு”….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (265)

    இவ்வார வல்லமையாளராக தென்னிந்திய திரைத்துறை மையம் அமைப்பை தேர்ந்தெடுக்கிறோம்.

    இந்த அமைப்பு புதியதாக இளம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் பெண்களால் துவக்கபட்ட அமைப்பாகும். சென்னையில் சமீபத்தில் இயங்க துவங்கியுள்ள இந்த நிறுவனம் திரைத்துறை பெண்களுக்கு குரல் கொடுத்து செய்திகளில் இடம் பிடித்தது. இதன் தலைவி வைஷாலி சுப்பிரமணியன்

    பெண்கள் பாலியல் ரீதியாக பணியிடங்களில் துன்புறுத்தப்படும் விகிதம் மிக அதிகம் எனில் திரைத்துறையில் இது மிக அதிகம் எனும் குற்ற்சாட்டு உண்டு. செக்ஸ் டார்ச்சர் காரணமாக நடிப்பை விட்டுவிட்டு ஓடிய நடிகையர் ஏராளம். அதை எதிர்த்து குரல் கொடுக்கும் அமைப்பாக இது உருவெடுத்துள்ளதாக வைஷாலி கூறுகிறார்

    நடிகையர் என மட்டும் இன்றி சினிமாவில் நடிக்கும் துணைநடிகையர், பூக்களை கட்டி சினிமா கம்பனிக்கு விற்கும் பாட்டி, சினிமா கம்பனியில் பாத்திரம் கழுவும் பெண்கள் என அனைத்து மட்ட பெண்களுக்கும் குரல் கொடுக்கவும், நியாயமான ஊதியம் வழங்க கோரியும் போராட இருப்பதாக கூறுகின்றனர் இவர்கள்.

    பல படப்பிடிப்பு மையங்களில் நடிகையருக்கு போதுமான கழிப்பிடம், பாதுகாப்பு ஆகியவையே இல்லை என்றும் இரவு நேர ஷூட்டிங் முடிந்து பாதுகாப்பாக திரும்புவதே கடினம் என்றும் சினிமா படம் எடுக்கையில் உடல் உபாதை, மாதவிடாய், பேறுகால சிரமங்களுக்கு கூட எந்த தீர்வும் இல்லை என ஆதங்கபடுகின்றனர்

    பல சினிமா பிரபலங்கள் இவர்களின் இம்முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். “சினிமா நடிகையர் மேல் இனி யாரும் கைவைக்க முடியாது” எனும் போர்க்குரலை எழுப்பி பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வரும் இவ்வமைப்பினரை பாராட்டி இதுபோன்ற விழிப்புணர்வு அனைத்து துறைகளிலும் வரவேண்டும் எனும் நோக்கில் இவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி 151-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பலவண்ணங்களைச் சிதறடித்துச் சாலம் காட்டும் இந்தப் புகைப்படத்திலிருப்பது மலரா? இலையா? என்று மலைக்கவைக்கிறது இதனைப் புகைப்படம் எடுத்திருக்கும் கலைத்திறன்! இப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பனே இப்புகைப்படத்தை எடுத்தவருங்கூட. அவருக்கு என் நன்றியும் பாராட்டும்!

    நீலமும் பச்சையும் கலந்தொளிரும் இந்தக் கோலமிகு படத்திற்குக் கருத்தொடு கவிவடிக்கக் கவிவலவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களைக் கனிவோடு வரவேற்போம்!

    *****

    ”அக இருளாம் அறியாமையைப் போக்கி ஒளியேற்றிடும் கல்வி; கதிரவனைக் கண்டு காணாமற் போகும் பனித்துளிபோல் எதிரில் நிற்கும் இன்னலை இல்லாமல் ஆக்கிடும் கல்விதரும் நல்லறிவு” என்று படத்தில் காணும் புறஒளியோடு அறிவொளியேற்றும் கல்வியை ஒப்பிட்டுக்காட்டியுள்ளார் திரு. ஆ. செந்தில் குமார்.

    வாழ்வில் ஒளியேற்றும் கல்வி…!

    உதய வானில் சிறகடிக்கும் வண்ணப் பறவை போல…
    இதயம் கூட அமைதி அடையும் நல்ல நூல்களை நாட…!
    இதிகாசங்களும் ஆன்றோர் பலரும் காட்டும் வழி போல…
    எதிர்காலம் கூட வண்ணமயம் கற்ற வழி நிற்க…!

    புற இருளைப் போக்கிவிடும் ஆதவனைப் போல…
    அறியாமை அகஇருளை அகற்றிவிடும் கல்வி…!
    பிறவாமை வேண்டிநிற்கும் ஞானியரைப் போல…
    சிறப்புபல தந்திடுமே கற்கும் நல்ல கல்வி…!

    கதிரவனைக் கண்டுவிட்ட பனித்துளியைப் போல…
    எதிர்த்துநிற்கும் இன்னல்களைப் போக்கிடும் நல்லறிவு…!
    விதி வழியே சென்றிடுவோம் என்று சொல்லும் மனதும்…
    மதிநுட்பம் இருந்துவிட்டால் மாற்று வழியைத் தெரியும்…!

    மதயானை போன்றிருக்கும் மாந்தர்தம் மனதை…
    இதமாக்கி நெறிப்படுத்தி ஒளியேற்றும் கல்வி…!
    எதிரேறு பொறுத்தக்கல் ஆகின்றதோர் தெய்வம்…
    எதன்பொருட்டும் வருந்தாதோர் இலக்கடைவது திண்ணம்…!

    *****

    ”வாழ்வில் தலைநிமிர நல்ல நூல்களை நோக்கிக் குனி” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன் கனிவாய்.

    ஒளி பிறக்க…

    தலை குனி,
    நல்ல நூல்களை நோக்கி..

    ஒளி வட்டம்
    உன் தலையைச் சுற்றி
    வராவிட்டாலும்,
    உறுதியாய் நீ
    தலை நிமிர்வாய்,
    தானாய் ஒளி பிறக்கும்-
    வாழ்க்கையிலே…!

    *****

    ”சூடிக்கொள்ளவும் முடியாது; பாடிப்பரவி இறைவனுக்குச் சேர்ப்பிக்கவும் இயலாது! நெகிழி மலரே! மணமில்லா உன்னால் யாருக்கென்ன பலன்?” என்று மலரை நோக்கி வினாத் தொடுக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    நெகிழிப்பூவே உனக்குப் புகழில்லை புவியுலகில்!

    அன்றாடம் தன்னிதழ்கள் பிரித்து மலராது
    ……….அழுக்காகும் அழுகாத நெகிழிப் பூக்கள்..!
    குன்று போலக் கடைகளிலே குவிந்திடும்
    ……….கண்கள் கூசுமளவிற்கு நிறமிகள் உண்டு..!
    இன்புறும் அளவுக்கு மணமென்ப தில்லை
    ……….இல்லாளுமிதை ஒரு நாளும் விரும்பாள்.!
    என்று மிதற்கெனவே தனி மதிப்பில்லை
    ……….எதற்கு மிதன் உபயோகம் பெரிதுதான்..!

    வாடிவிடும் தன்மையோ இதற்கு இல்லை
    ……….வாழ்த்தக் கொடுப்பதற்கும் வழி யில்லை..!
    கோடீஸ்வரன் இறந்து விட்டால் அவன்
    ……….கழுத்தில் நீண்ட நாள் தொங்கிடுமன்றோ..!
    சூடிக்கொள்ளவும் முடியாது வாயினால்
    ……….பாடிபகவானுக்கு பூஜை செய்ய இயலாது..!
    ஓடிவரும் வண்டினங் களிதை அண்டாது
    ……….ஒளியூட்டினால் சற்றே அழகு மிகக்கூடும்..!

    செங்கதிரோன் ஆசியுடன் சோலையிலே
    ……….செழித்து சிந்தனை குளிரச்செயும் மலரே..!
    தங்கத்தைப் போலப் பெருமை உனக்கு
    ……….மங்காத புகழும் பெருமதிப்பும் உண்டாம்..!
    மங்கையர் சூடும் மலருக்கெது ஈடாகும்
    ……….மலரின் வாசனைக் கெதுவும் ஒப்பாகா..!
    அங்கத்தில் அணிய முடியா நிலையில்
    ……….அலர் மாலையில் சேருமா?..நெகிழிப்பூ..!

    *****

    மூச்சுப்பயிற்சியாம் வாசி யோகத்தில் தேர்ச்சி பெற்றோர், நீலமும் பச்சையுமாய் ஒளிக்குமிழிகளைத் தம் புருவ மத்தியில் காண்பதை, படத்தில் அணிவகுத்திருக்கும் அவ்விரு நிறங்களோடு அழகாய் இணைத்துப் பார்க்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

    ஒருபுனல் தம்பமிடை சிலம்பமும் எழுந்ததே!
    இருபுனல் கபாடமுள் உருபுனல் லலாடமும்

    வருபுனல் தடாகமுடி இருபுயக் கதம்பமும்
    தருபுனல் தெறிக்குமிழி இருநிறக் கபம்பமும்
    ஒருபுனல் தம்பமிடை சிலம்பமும் எழுந்ததே!

    *****

    புகைப்படத்தில் ஒளிரும் புறவண்ணங்களை அறிவொளியோடும் கல்வியோடும் யோகத்தோடும் பொருத்திப் பார்த்துத் திருத்தமாய்ப் பாப்புனைந்திருக்கும் பாவலர்களுக்குப் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது இனி…

    மன எழுச்சியே மகிழ்ச்சி

    செயற்கையான மலர்இதழ்கள்
    செய்துவைத்து அதன் மேலே
    சிறுமின்விளக்குகள்ஒளிபாய்ச்சிச்
    சிதறவைக்குது இருளைத்தானே!!
    மேல்நோக்கிஎழுகிற எண்ண அலை
    மேம்பட்டால் வராது வாழ்வில் பிழை!!
    ஒருநிலைப்படுத்தும்ஆற்றல் நிலை
    ஓங்கிடப்பெய்யும்பேரானந்த மழை!!
    இயற்கையான உடலுக்குள்ளும்
    இருட்டைவிரட்டிட மார்க்கமுண்டு!!
    உள்ளமென்னும் வீட்டுக்குள்ளே
    உதிரத்தில் உருவாகும் மின்சாரம்!
    நரம்புகள்வழியே அது பாய்ந்து
    இருதய பல்பை எரியவைக்கும்!!
    நாசம் செய்யும்கெட்டசிந்தனைகள்
    நன்மையை என்றும் கொடுக்காது!!
    நினைப்புக் கலப்பையில் ஏர் உழுது
    நிலமாம் மனசைச் சமன்படுத்தி
    நடுகிற நாற்று செயலாய் ஆகி
    நன்கு வளர்ந்து மகசூல் பெருகும்!
    வாழ்வுத் தோட்டத்தின் விளைச்சல்
    வருங்காலவசந்தத்தை வழங்கும்!!
    பொம்மைப் பூக்கள் போலன்றி
    உண்மைவாசம் வாழ்வில் வீசும்!!

    வெளிச்சத்தை புறத்தே மட்டுமன்று அகத்தேயும் கருவாக்கி உருவாக்கலாம். ஆம்! உளமெனும் வீட்டுக்குள் உதிரத்தில் உருவாகும் மின்சாரம் நரம்புகள் வழிப்பாய்ந்து இதய விளக்கை எரியவைக்கும்.

    மனத்தைச் சமன்படுத்தி, நற்சிந்தனைகளை நட்டுவைத்தால், வாழ்வெனும் தோட்டம் வாசமில்லாப் பொய்ப்பூக்களின் தொகுப்பாய் ஆகாமல், நேசத்துக்குரிய மெய்ம்மலர்களாய் மணம் பரப்பும்” என்று வாழ்வியல் பாடம் சொல்லும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஏ. ஆர். முருகன் மயிலம்பாடி இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டு!

     

     

    Share
  • SRI AUROBINDO

     

    SRI AUROBINDO or The adventure of consciousness -Satprem…..!
    ——————————————————————————————————————————————————————-
    HE is the CHILD of the waters, HE is the CHILD of forests,the CHILD of things stable,
    and the CHILD of things that move…..Even in the stones HE is there….!Rescue thy FATHER
    in thy knowledge keep him safe, thy FATHER becomes thy SON and bears thee….!

    “சேயவர் நீரிலே ,சேயவர் கானிலே
    சேயவர் சேதனஅ சேதனத்தில்; -தாயென
    சாலப் பரிந்தூட்ட சேயவர் ராட்சஸமாய்
    காலக் கணக்கில் குடிப்பு”….!

    “சேயவர் நீரிலே ,சேயவர் கானிலே
    சேயவர் சேதனஅ சேதனத்தில்; -மாயையாம்-
    மாறாத தோட்டத்தில் தீராத ஆட்டத்தை
    சீராக ஆடிடும் சேய்….!

    “சேயவர் நீரிலே ,சேயவர் கானிலே
    சேயவர் சேதனஅ சேதனத்தில்; -மாயையாம்-
    வித்தை புரிந்திடும் ,சித்தப்பா ஆக்கிடும்
    அத்தை முகத்தில் அசைந்து (மீசையாய் -அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா)….!

    “சேயவர் நீரிலே ,சேயவர் கானிலே
    சேயவர் சேதனஅ சேதனத்தில்; -மாயையாம்-
    விந்தை புரிந்திடும், வேடம் புனைந்திடும்
    தந்தை மகனாய் தரித்து (ஆத்மாநாம் புத்ரானாம்)….!கிரேசி மோகன் …..!

    HE is the PLAY….!
    HE is the PLAYER….!
    HE is the PLAYGROUND….!

    HE PLAYS for HIMSELF….!BAGAWAN SRI AUROBINDO….!

    ”ஆட்டம் அவர்தான், அதைக்காணும் ஆடியன்ஸ்
    கூட்டம் அவர்தான், களமுமவர், -நாட்டமோ
    சண்டிக் குதிரையாய் சச்சிதா னந்தராட்டம்
    ஒண்டிக்கே ஒண்டியாம் ஓய்’’….கிரேசி மோகன்….

    Evolyution is eternal….!
    The ADULT SOUL regains its origin….!

    The SON becomes once again THE FATHER…or more truly

    THE FATHER, who had become THE SON,becomes HIMSELF once more….!

    SRI AUROBINDO or The adventure of consciousness -Satprem…..!

    “தந்தை(ஆன்மா) மகனான(ஜீவன்) , தாத்பர்யம் என்னவென்றால்,
    விந்தை மகன்மீண்டும் தந்தையின் -சிந்தையில் ,

    வந்தான் உதித்திட, வெற்றிபரி ணாமத்தின்,
    முந்திடும் ஜீவன் மகான் (மகன் ஆன்ம மகானானார்)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”சிஸுபாலர்(கண்ணன்) காலில், பசுமாடு மேய்தல்,
    விசுவாஸம் இல்லை வயதில்; -நிஸிவண்ணன்
    தாள்பணிந் துகிட துவமேவ என்றுநிதம்
    கால்மாட்டில் மாடாய்க் கிட’’….கிரேசி மோகன்….!

    Share
  • புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனையா?

     

    பவள சங்கரி

    தலையங்கம்

    தொழில்நுட்பங்கள் முன்னேறி வருவதும், அதனால் தக்கவாறு பயன் பெறுதலும் பாராட்டிற்குரியது. ஆனால் அதே சமயம் அவை யார் யாருக்கு எந்த வகையில் பயனளிக்கக் கூடியது என்பதை நன்கு ஆய்ந்தறிந்த பின்பே அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் அவசியம். இல்லையென்றால் அவை தேவையற்ற விரயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான ஆதாரமே இந்தத் திட்டம். காரணம் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்புடையது அனைத்தும் இந்தியாவிற்கு ஏற்புடையதன்று. சமீபத்தில் சந்தைக்கு வந்துள்ள அனைத்து வாகனங்களும் நிரந்தர ஒளியேற்றப்பட்டு (ஹெட் லைட் எப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பது) வருகின்றன. இவை நமக்குத் தேவையா, இதனால் நமக்கு என்ன பயன் என்ற ஆய்வு நடத்தப்பட்டதா? மேலை நாடுகளில் அதிக நேரங்கள் பனியால் அல்லது இருட்டினால் சூழப்பட்டுள்ள சூழ்நிலைகள் இருக்கின்றன என்பதால் அங்கு இதுபோன்ற வடிவமைப்புடன் தயாரிக்கப்படும் வாகனங்கள் பயனுள்ள வகையில் அமையும். வருடத்திற்கு சுமாராகப் பத்து மாதங்கள், இரவு நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் பிரகாசமாக, சூரிய ஒளியில் மின்னிக்கொண்டிருக்கிற இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இது போன்ற வடிவமைப்புகளுடனான வாகனங்கள் நிச்சயம் பயனற்றது. இதனால் தேவையற்ற செலவுகளும், தேய்மானங்களும் ஏற்படும் வாய்ப்புதான் அதிகம். உற்பத்தியாளர்களின் இலாபம் கருதி மட்டுமே செய்யப்படும் செயல் திட்டம் இது. இதனால் வாகன உபயோகிப்பாளர்களுக்கு பணம் விரயமே தவிர வேறு எந்த பயனும் இல்லை. வாகன உற்பத்தியாளர்களும், அரசும் இது குறித்து தகுந்த ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (152)

     

     

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஜேக்சன் ஹெர்பி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (17.03.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • போதிதர்மரும் தங்கமீன்களும்

    என்னுடைய எட்டு வயது மகன் மாதம்தோறும் ஒன்றிரண்டு புத்தகங்கள் தவறாமல் வாசிக்கிறான். எந்த நேரமும் கதைகள், கட்டுரைகள், நாட்குறிப்பு, பாடல்கள், சொந்தக் கருத்தாக்கங்கள் என்று எந்நேரமும் எழுதிக்கொண்டு அவனொரு கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். செய்யும் கலையில் லயித்திருக்கும் அஃதொரு ஆழ்ந்த தியானநிலை என்பதை ஒரு படைப்பாளியாக அறிவேன். ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென்று என்னிடம் வந்து அவனுடைய கதைகளைப் புத்தகமாக்குவது பற்றிக் கேட்டான். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, “நீயே அவருக்குக் கடிதம் எழுது..” என்று கூறினேன். அவனாகவே அவருக்குக் கடிதமும் எழுதிவிட்டான். அவரும் பெருந்தன்மையோடு அந்தக் கடிதத்தை  நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதை வாசித்து விட்டு பேராசிரியை லோகமாதேவி அவர்களிடமிருந்து என் மகனுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் வந்தது. அதில் இரண்டு, மூன்று இடங்களில் கடிதம் எழுதியதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். அதற்குக் காரணம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று நான் முடிவெடுத்து ஒதுங்கியது. அவருக்கு எழுதிய பதில் கடிதத்தில், “சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினேனே தவிர, நண்பர்களிடமிருந்து விலகி இருக்கவேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல.” என்று தெரிவித்திருந்தேன். இந்தப் பதிவை எழுதுவதற்கும் அது ஒரு தூண்டுதலாக அமைந்தது. மேலும் சில நண்பர்களும் இதுகுறித்து என்னைக் கேட்டார்கள்.

    முகநூல் மட்டுமல்ல, குடும்பப் புலனக் குழுக்களில் [WhatsApp] இருந்துகூட வெளியேறினேன். அதற்குப் பல காரணங்கள். காணி நிலம் வேண்டுமென்பதில்லை என் ஆசை. விதைகள் வேண்டுமெனக்கு. ஆமாம், நான் ஒரு விவசாயியைப் போன்றவன். நேரமே என்னுடைய விதை. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அப்படியே என அறிவேன். சரியான நிலத்தில் உழுது, பயிரிட்டு அதில் விளைச்சலைக் காண விரும்புகிறேன். இணைய உலகம் 24 x 7 விழித்துக்கொண்டே இருக்கிறது. உலகமெங்கும் நண்பர்களிருக்கிறார்கள். காலையில் எழுந்தவுடன் கிழக்கிலிருந்து வந்திருக்கும் செய்திகளைப் பார்த்து ஒவ்வொன்றுக்கும் பொறுப்புடன் பதிலளிப்பது; முடிந்தால் ஓரிருவருடன் உரையாடல்கள். பிறகு அடித்துப் பிடித்துக்கொண்டு நாளைத் துவக்க வேண்டியது. அத்தோடு முடிந்ததா என்றா அதுவும் இல்லை. நாள் முழுவதும் ஒரு மணிநேரத்துக்கு ஒன்பது முறை புலனம் பார்த்துக்கொண்டு, எதைப் பற்றியாவது எவருடனாவது விவாதித்துக்கொண்டிருப்பது. இதனால் செய்யும் எந்தப் பணியிலும் கவனம் கூடவில்லை. என்னுடைய “கவன நீட்டம்” [Attention Span] வெகுவாகக் குறைந்து விட்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. ஒரு காலத்தில் புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்தால் உலகையே மறந்து வாசித்துக் கொண்டிருப்பேன். ஆனால் முகநூல் மற்றும் புலன உலகுக்குள் புகுந்ததிலிருந்து நாற்பது பக்கங்கள் வாசிப்பதற்குள் நான்கு முறை கைப்பேசியை எடுத்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்.

    மாலை வீடு வந்து சேர்ந்ததும் மீண்டும் முகநூல், புலனம் வழி  உரையாடல்கள் துவங்கிவிடும். தரமான புத்தகங்களைத் தேடிப்  பிடித்து வாசிப்பது, எழுதுவது, பியானோ வாசிப்பது, நண்பர்களிடம்   உரையாடல் (blood & flesh நண்பர்கள்,  சமூக வலைதள நண்பர்களல்ல), குடும்பம், தோட்டம், தொழில், யோகா என்று பல திறக்குகளில் இயங்கிக்கொண்டிருந்தவன், புலனத்தில் வரும் ஒன்றுக்கும் உபயோகமற்ற செய்திகளையெல்லாம் அதிதீவிரமாக வாசித்து அவற்றுக்கு என்னுடைய கருத்துக்களை மிகுந்த பொறுப்புணர்வுடன் சொல்லிக் கொண்டிருக்கும் நிலைக்கு என்னை அறியாமலேயே நகர்த்திச் செல்லப்பட்டுவிட்டேன். இரவு தூங்கப் போகலாம் என்று நினைக்கும் பொழுது, அமெரிக்கா விழித்துக்கொண்டு விடுகிறது. அவ்வளவுதான். முடிந்து போயிருந்த விவாதம் ஒன்று மீண்டும் தொடங்கும். நான் டின்னிட்டஸால் அவதியுற்றிருந்த காலங்களில் இந்த உரையாடல்கள் என் இரவைக் கடப்பதற்குப் பேருதவி புரிந்தது என்பது உண்மையென்றாலும், பேய்க்கு பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கதையாகிவிட்டிருந்தது என் நிலை. ஒரு முறை ப்ரசல்ஸ் மாநகரத்தில் கார் ஒட்டிக்கொண்டிருக்கும்போது, சிவப்பு சமிக்ஞை விழாதா என்று ஏங்கி, விழுந்தவுடன் குதூகலத்துடன் கைபேசியை எடுத்துச் செய்தி வந்திருக்கிறதா என்று பார்க்குமளவு அடிமையாகி விட்டிருந்தேன். இன்னொரு முறை நண்பர் கார்த்திக்கின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர்களுடன் பேசாமல் புலனம் வழி யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தேன். எரிச்சலடைந்த என்னுடைய தோழி திவ்யா, “மாதவன், போனை சற்று நேரம் தூரமாக வைக்கிறாயா?” என்று திட்டினாள்.

    “உன் நேரத்தை எப்படி நிர்வகிக்கிறாய்” என்று நண்பர்கள் வியப்புடன் கேட்குமளவிற்கு பல செயல்களில் என்னை உட்படுத்திக்கொண்டிருந்தவன் இப்படியொரு பரிதாபகரமான நிலைக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்று தீவிரமாக ஆய்ந்து பார்த்தேன். மேலும், எங்கள் வீட்டில் அடிக்கடி ஆய்வுக் கூட்டம் [Retrospective] நடத்துவோம். அதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அனைவரும் பச்சை நிறத் தாள்களில் வீட்டில் “நன்றாகப்  போய்க்கொண்டிருக்கும் விஷயங்களை” எழுத வேண்டும். சிவப்பு நிறத் தாள்களில் “மோசமாகப் போய்க்கொண்டிருக்கும் விஷயங்களை” எழுதவேண்டும். இறுதியாக நீல நிறத் தாள்களில்  “பிரச்சினைகளைக் களைவதற்கான யோசனைகளை” எழுத வேண்டும். ஒவ்வொரு முறையும் அதிகமான ரெட் கார்டுகளை வாங்குவது அடியேனே. என் மனைவியும், மகனும் ஒரு மூன்று மாத காலம் என்னை கிழித்து எடுத்துவிட்டார்கள். அவர்களுக்கான நேரமே ஒதுக்குவதில்லை. எந்த நேரமும் கைப்பேசியிலேயே கிடக்கிறேன் என்பது அவர்கள் வாதம். அது முற்றிலும் சரியே! என் நூலகத்திலிருக்கும் புத்தகங்களும், என் வீட்டுச் செடிகளும், மரங்களும்கூட இதையே என்னிடம் எப்படித் தெரிவிப்பது என்று எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. இல்லத்தில் “Sunday – no device day!” என்கிற முறையை அமல்படுத்தினோம். ஆனால் அதன் மூலம் நாங்கள் நினைத்த அளவுக்கு எந்த மாற்றமும் உண்டாகவில்லை. எனவேதான் முகநூல், புலனக் குழுக்கள் அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக்கொண்டேன். விலகுவதற்கான காரணங்களை விளக்கமாக எழுதி அத்தனை குழுக்களுக்கும் அனுப்பினேன். எல்லோரும் ஆதரவு தெரிவித்தார்கள். குழுக்களில் இருந்து மட்டுமே விடைபெறுகிறேன். ஆனால் எனக்குத் தனியாகச் செய்தியோ அல்லது மின்னஞ்சலோ அனுப்பலாம் என்று தெரிவித்தேன். அன்று வரை ரத்தமும் சதையுமாகப் பழகி, அவர்களுடனான உரையாடல்களுக்காக என் உடல், பொருள், ஆவி அத்தனையும் கொடுத்து வந்திருந்தேன். 😉 ஆனால் பாருங்கள், அன்றிலிருந்து இன்று வரை எனக்குத் தனியாக வந்த செய்திகளைக் “கைவிட்டு எண்ணிவிடலாம்”. என் இல்லாமையை பெரும்பாலானவர்கள் உணரவில்லை என்பது எனக்குத் தெளிவானது. ஆனால், என் தனிப்பட்ட நேரத்தின் பெரும் பகுதியை அவர்களுக்குத்தான் செலவழித்தேன். எனவே, சமூக வலைதளம் என்பது என்னளவில் ஒருவித மாயையே; போதையே. அஃதொரு மாயவலை.

    சிறுவயதில் அப்பா அடிக்கடி சென்னை மாநகருக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரை வழியனுப்பிவிட்டால், அதை முற்றிலும் மறந்து நண்பர்களுடன் விளையாட்டுகளில் மூழ்கிவிடுவோம். அவரும் அவருடைய பணிகளையெல்லாம் முடித்து விட்டு, ஓரிரு நாட்கள் கழித்து இரவு நேரத்தில் வீட்டிற்குத் திரும்புவார். காலையில் எழுந்தவுடன் அப்பா உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது கொண்டாட்டமாக இருக்கும். ஓடிச் சென்று அவருடைய பெட்டியைத் திறந்து என்ன வாங்கி வந்திருக்கிறார் என்று துழாவுவோம். அதில் ஒரு சுவாரசியம் இருக்கும். இப்போதெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் பரிமாற்றம் நடக்கிறது. இதை எங்கள் வீட்டு ஆய்வுக் கூட்டத்தில் ஒருமுறை பேசி அலசியிருக்கிறோம். அன்றிலிருந்து, நான் நண்பர்களைச் சந்திக்கச் சென்றாலோ, வெளியூர் அல்லது வெளிநாடு சென்றாலோ என் மனைவியிடமிருந்து எந்தச் செய்தியும் வராது. நானாகத் தொடர்புகொண்டால்தான் உண்டு.

    எவ்வளவு பிரச்சினைகளைத்தான் ஒரு மனிதன் தீர்த்துவைக்க முடியும் என்கிற அளவுக்கு பிரச்சனைகளின் குவியலாக இருக்கிறது சமூக வலைத்தளம். அங்கு தொடர்ச்சியாக நடந்து வரும் புரட்சிகளின் ஜ்வாலை என்னைச் சுட்டெரிக்கின்றது. எல்லாமே அவசர புரட்சிகள். இந்த வாரம் புதிதாக உதயமாகும் புரட்சி, முந்தைய வாரம் உதித்த புரட்சியை அஸ்தமிக்கவைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு மேல் எதுவுமே நீடிப்பதில்லை. ஏனெனில் அடித்தளத்தை மாற்றும் நோக்கத்துடன் நாம் செயல்படுவதில்லை. அப்படியே செயல்பட்டாலும் அதில் நீடித்த முயற்சிகள் இருப்பதில்லை. பல புரட்சிகள் வெறும் திசைதிருப்பல்களாகவே வருகிறது. புரட்சிக் கருத்து கூறுபவர்களிடம் தீர்க்கமாக எதையேனும் பரிந்துரைத்தால் மௌனமாகக் காணாமல் போய்விடுகிறார்கள். எனவே, அவற்றை வெறும் உணர்ச்சிகர எதிர்வினைகளாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். அதுதான் நம்முடைய படைப்பாற்றலுக்கு [Creativity] முழுமுதற்காரணம். ஆனால், நம்முடைய ஆகப்பெரும் குறைபாடும் இந்த “உணர்ச்சிவசப்படுதலே”. அதனாலேயே பலமுறை சமநிலையை இழக்கிறோம். அதுசார்ந்த விழிப்புணர்வும் நமக்கு இல்லை. உணர்ச்சிகளின் மீது கொஞ்சம் கண் வையுங்கள் என்று பேசினால் அதற்கும் கொந்தளிக்கிறார்கள். இதையெல்லாம் விமர்சிக்கும் அதே சமயம், புதிய மாற்றங்களை வரவேற்பவனாகவும், ஒரு தொழில்நுட்ப வல்லுநராகவும், சமூக வலைத்தளங்களை முற்றிலும் வேண்டாம் என்றும் கூறமாட்டேன். அவற்றை உபயோகிக்கும் விதம், செய்திகளை எதிர்கொள்ளும் விதம் மற்றும் உபயோகிக்கும் காலஅளவு போன்றவை  பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே கூறுகிறேன்.

    இரண்டு வருடங்களுக்கு முன்பு நானேகூட முகநூலைப் பயன்படுத்தி வெள்ள நிவாரண நிதி திரட்டி சென்னைக்குக் கொண்டுவந்தேன். ஆனால், எனக்கு நெருங்கிய வட்டத்திலேயே என்னுடைய சாரதி, பணியாளர்கள், உற்றார், சுற்றார், என்று அடிப்படைத் தேவைகளுக்காக அன்றாடம் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுதற்கான வல்லமையையே முழுவதும் பெற்றுவிடாத நிலையில், பெயர் தெரியாதவர்களுக்கு உதவி புரிவது எனக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. அதையும் அவர்களை அருகில் வைத்துக்கொண்டே செய்யும்போது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பெயர் தெரியாதவர்களுக்கு உதவி செய்யவேண்டாமென்பது என்னுடைய கருத்தல்ல. சுற்றி இருப்பவனின் கண்ணீருக்கு நெஞ்சைக்  கல்லாக்கிக்கொண்டு, எங்கோ இருப்பவனுக்கு அழுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதே என் மனசாட்சி என்னிடம் கேட்கும் கேள்வி. அதுபோன்று கன்னத்தில் அறையும் விதமாக சில நிகழ்வுகள் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு அலைந்தபோதே நடந்திருக்கிறது. அதைத்தான் நான் மாயை என்பது. மேலும், சமூக வலைத்தளங்களில் நடக்கும் பல போராட்டங்களுக்கு வெறும் தார்மீக ஆதரவை மட்டும் தந்துப் புரட்சி செய்துகொண்டிருப்பதும் என்னுடைய குற்றவுணர்வை அதிகப்படுத்துகிறது.

    இன்னொன்று – எல்லாவற்றுக்கும் கருத்து கூறவேண்டிய சமூக அழுத்தமும் அங்கு அதிகமாக இருக்கிறது. கருத்து கூறாதவனை உணர்ச்சியற்றவனாக பாவிக்கும் மனநிலையும் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கருத்துக்கூறாதவன் செய்துகொண்டிருக்கும் அரிய பல சமூகப் பணிகள் குறித்து இமியளவும் அப்படி விமர்சிப்பவர்களுக்குத் தெரிந்திருக்காது. இவையனைத்துக்கும் மேலாக நான் ஏற்கனவே சொன்னதுபோல் எனக்கு என் நேரம் வேண்டும். இணைய உலகில் நடந்துகொண்டிருக்கும் எல்லாவற்றையும் சிறிது நேரம் மறந்து, கண்களை மூடி, மனதைச் சற்று அமைதிப்படுத்தி, சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனித்தீர்களேயானால் நான் கூற வருவதில் இருக்கும் உண்மை புலப்படலாம்; நியாயம் புரியலாம்.

    தற்போதெல்லாம் நான் செய்தித்தாள்களைக்கூட அவ்வளவாக வாசிப்பதில்லை. செய்திகளுக்கா பஞ்சம் நம்மிடம். அன்றாடம் ஏதாவது ஒரு செய்தி; ஏதாவது ஒரு பிரச்சினை. வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் முன்னெப்போதைவிடவும் தற்போது உலகம் அமைதியாகத்தான் இருக்கிறது என்கிற நேர்மறைச் சிந்தனை கொண்டவன் நான். முன்பெல்லாம் செய்திகள் வரலாறுகளான பிறகே நமக்குத் தெரிய வரும், அதனால், Ignorance was bliss. ஆனால் இப்போதெல்லாம் ஆயிரம் செய்திகள் அடுத்தடுத்த நிமிடங்களிலேயே அதிரடியாக அடுப்பங்கரைக்கும், படுக்கையறைக்கும், அவ்வளவு ஏன் கழிப்பறை வரை நம்மைத் தேடி வந்து தாக்குகிறது.  நம்மைச் சுற்றி நடக்கும் “முக்கியமான விஷயங்களை”, “அவசியமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளைப்” பற்றிய விழிப்புணர்வைக் கொன்றழித்து விட்டு, ஒரு மாய உலகில் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன பெரும்பாலான செய்திகள். நாமறியாமலேயே நாமெல்லோரும் மனநோயாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் வலி மிகுந்த உண்மை.

    செய்திகள் வேண்டாம் என்று கூறவில்லை. தேவையான செய்தி, தேவையற்ற செய்தி எவை என்பதை இனங்காண முயல வேண்டும்; முன்னுரிமைப்படுத்தவேண்டும். ஆனால், இன்றைக்கு முக்கால்வாசி செய்திகள் சந்தேகமில்லாமல் Toxic-ஆக இருக்கிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் வலம் வரும் மதம், அரசியல் சார்ந்த நச்சுத்தன்மை வாய்ந்த செய்திகளும், அது சார்ந்த சண்டைகளும், சச்சுரவுகளும் பெரும் அச்சுறுத்தலைத் தருகின்றன. நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்கூட வெறும் முகநூல் சண்டையில் பிரிந்துபோனதைப் கண்ணுற்றிருக்கிறேன். இதுபோன்ற நச்சுத்தன்மை வாய்ந்த செய்திகளுக்கு ஏன் மனிதர்கள் இரையாகிறார்கள்? ஒரு நாளைக்கு 4 செய்திகள் வாசிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடத்திற்கு ஆயிரத்து ஐநூறு செய்திகள். இதில் எத்தனைச் செய்திகள் நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப் பயன்பட்டிற்கும், எத்தனை பேர் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுத்த உதவியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றுகூட இல்லை.

    ஒரு சில தேர்ந்தெடுத்தத் தளங்களை மட்டும் தொடர்ந்து வாசிக்கிறேன். இது தவிர தேவையான செய்திகள் நம்மை எவ்வழியிலேனும் வந்தடையும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மற்றபடி புத்தகங்கள் போதுமெனக்கு. கடந்த ஐந்து வருடங்களில், நான் அதிகமான புத்தகங்கள் வாசித்த வருடம் கடந்த வருடமாகத்தான் இருக்கும். எண்ணற்ற புத்தகங்கள். அதில் ஒரு முக்கியமான புத்தகமாக கால் நியூபோர்ட்டினுடைய “DEEP WORK”  புத்தகத்தைச் சுட்டுவேன். என்னுடைய அலுவலக நூலகத்தில்தான் முதன்முறையாக இந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். “DEEP WORK” என்கிற தலைப்பு என்னை மிகவும் கவர்ந்ததால், அதை எடுத்துப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். அப்போதைய என்னுடைய சிந்தனைகளுக்கு இந்தக் கருத்தாக்கம் ஒத்துப்போனதால், அன்று மாலையே அந்தப் புத்தகத்தை வாங்கினேன். கவனச்சிதைவு நிறைந்த இந்த உலகில் நாம் அனைவருமே நுனிப்புல் மேய்பவர்களே. செய்யும் தொழிலில், செயலில், கலையில் “தேர்ச்சித்திறத்தை” [Mastery] அடையவேண்டுமென்றால், சித்தி கிட்டவேண்டுமென்றால் இந்த “DEEP WORK” மிகவும் அவசியம். நுனிப்புல் மேய்வதன் மூலம் எதிலும் MASTERY அடையமுடியாது. இயந்திரம் போன்று மாறுதல் இல்லாத, சுவையற்ற பணிகளை பெரும் சலிப்புடன் வாழ்க்கை முழுமைக்கும் செய்துகொண்டிருக்கவேண்டியதுதான். கால் நியூபோர்ட், கவனச்சிதைவுகளுக்கு மத்தியில் எதிலும் ஆழ்ந்து செயல்படுவதன் அவசியத்தை எடுத்துரைத்து, அதை அடைவதற்கு சில விதிகளை முன்வைக்கிறார். அதில் மூன்றாவது விதி என்ன தெரியுமா? “சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுங்கள்!” [Quit Social Media] என்பது.

    கடந்த ஜனவரி மாதம் என்னுடைய பத்தாம் வகுப்புத் தோழர்கள் அவர்கள் உருவாக்கியிருக்கும் புலனக் குழுவில் என்னை இணைத்தார்கள். என்னை அந்தக் குழுவில் அவர்கள் இணைப்பது இது இரண்டாவது முறை. மறுப்பதற்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. அடுத்த வருடத்தோடு நான் பத்தாம் வகுப்பு படிப்பு முடிந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிறது என்று நண்பனொருவன் நினைவுபடுத்தினான். ஒன்றிரண்டு குழுக்களில் இருப்பதில் பிரச்சினையில் இல்லை. பல குழுக்களில் இருந்தால் அது நம் நேரத்தைத் தின்றுவிடும். ஆனால், அதற்கென்று குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கிவிடவேண்டும். அதிக நேரம் செலவழிக்கக்கூடாது. நான் பகிரும் தகவல்களின் மூலம் அவர்களுக்கு ஏதெனும் பயனிருக்கிறதா என்று கணக்கெடுப்புகூட நடத்தினேன். பெரும்பாலான புலனக் குழுக்களில் யாரும் அவர்களைப் பற்றி பேசிக்கொள்வதில்லை. மீம்ஸ்களிலும், பயனற்ற துணுக்குகளிலும் நேரத்தை வீணாக்குகிறார்களே என்று மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு மணித்துளியும் ஒரு விதையன்றோ? அத்திப் பூத்தாற்போல சில சமயங்களில் யாரேனும் மலரும் நினைவுகளைக் கொண்டுவருவார்கள். ஆனால், நான் ஏற்கனவே கூறியது போல் என்னுடைய நிலம் பெரியது; விதைகள் குறைவு. என் பட்டியலில் இருக்கும் விஷயங்களைச் செய்து முடிப்பதற்கு நேரமே போதவில்லை. இப்போது இந்தக் குழுவில் என்னுடைய இயக்கம் சற்று அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. நான் ஒரு extrovert! மற்றவர்களிடம் பேசுவதன் மூலமாகவே என்னுடைய உற்சாகத்தையும் ஆற்றலையும் பெறுகிறேன். ஆனால், அவர்கள் எல்லோருமே நேரில் வந்து உரையாடினால் அதைவிட மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்த முறை இந்தியாவுக்கு செல்லும்போது அவர்களில் பெரும்பாலானவர்களைச் சந்திக்க இருக்கிறேன். அதன் பிறகு விலகலாம் என்றிருக்கிறேன். தற்போதைக்கு நட்புகளின் சிந்தனைக்கு முக்கியமான சில விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகக் குழுவில் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

    சில நாட்களுக்கு முன்பு என்னுடைய மனைவியிடம் “லூவன் நகரில் இருக்கும்போது நிறைய எழுதினேன். ஆனால் இப்போது இங்கே தீனன் நகரம் வந்த பிறகு அந்த அளவுக்கு எழுத முடிவதில்லை.” என்று கூறினேன். அதற்கு அவள், “அப்போதெல்லாம் நீ அடிக்கடி பேருந்திலும், இரயிலும் பயணிப்பாய். சுற்றி நடப்பதை அவதானித்து, மாலை வீட்டுக்கு வந்ததும் சொல்வதற்கு விஷயங்கள் உன்னிடம் ஏராளம் இருக்கும். இப்போதெல்லாம் தனியாகக் காரில் செல்கிறாய். காரணம் அதுவாகக்கூட இருக்கலாம்.” என்றாள். அவள் கூறியதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. என்னுடைய சக பயணிகளை நான் அவதானித்ததை வைத்து நான் எழுதிய சிறுகதைகளே நான்கைந்து தேறும். மாறாக காரில் செல்லும்போது நிஜ உலகத்திடமிருந்து தொடர்பு அறுந்துவிட்டதைப்போல உணர்ந்திருக்கிறேன். நெடுஞ்சாலைகளில் பலவித வாகனங்களையும் சிவப்பு விளக்குகளையும் தவிர வேறெதையும் பார்க்கமுடிவதில்லை. அதிலென்ன சுவாரசியம் இருக்கிறது.  இரத்தமும் சதையுமாக நம்மைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும் நிஜ மனிதர்களின் தொடர்பைத் துண்டித்துவிட்டு வேறு உலகில் சஞ்சாரம் செய்து அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதும் அதைப் போன்றதே. எப்படி இணையத்தில் வாசிப்பது ஒரு  சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் வாசிப்பதற்கு ஈடாகாதோ, அதுபோலவே, சமூக வலைத்தளங்களில் லைக் இட்டுவிட்டு உரையாடிக்கொண்டிருப்பது என்பது, ஒரு நண்பனுடன் காலாற நடந்துச் சென்று தெருமுனையில் தேநீர் பருகிக்கொண்டே உரையாடுவது போலாகாது.

    அதெல்லாம் சரி, இந்தப் பதிவுக்கும் “போதிதர்மரும் தங்கமீன்களும்” என்கிற தலைப்புக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதுதானே? விஷயத்துக்கு வருகிறேன். ஒரு வருடத்துக்கு முன்பு டாக்டர் எரிக் தோபோலுடைய “The Creative Destruction of MEDICINE” என்கிற புத்தகத்தை வாசித்தேன். அதில் எரிக், தொன்னூறுகளில் 12 நொடிகளாக இருந்த  மனிதனுடைய “கவன நீட்டம்” தற்போது 8 நொடிகளுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தங்கமீன்களின் கவன நீட்டமான 9 நொடிகளைவிடவும் குறைவு என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு. இந்த ஆராய்ச்சியே தவறு என்றுகூட ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆராய்ச்சி நமக்கு முக்கியமில்லை. ஆனால் இதை வாசிக்கும்போது எனக்கு பௌத்தத் துறவியான போதிதர்மர் நினைவுக்கு வந்தார். மீன்தொட்டியில் இருக்கும் தங்கமீன்களைப் பார்த்திருக்கிறீர்களா? உயிரோடு இருக்கிறதா, இல்லையா என்று சந்தேகம் தோன்றுமளவுக்கு, தியானநிலையில் இருக்கும் போதிதர்மரைப் போன்று முண்டைக்கண்கள் எதையோ உற்று நோக்கிக்கொண்டு அசைவற்றுக் கிடக்குமவை. மீன்தொட்டியைச் சற்று லேசாகத் தட்டினால் போதும், அந்தக் கணமே திடுக்கிட்டு, வெடுக்கென்று திரும்பி சடுதியில் ஓடி ஒளிந்துகொள்ளும். அதற்கு மாறாக, குகைச்சுவரை உற்று நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்த போதிதர்மரைக் கயிற்றால் கட்டி இழுத்தாலும் மனிதர் அசரவில்லையாம். அது ஒரு “DEEP WORK” நிலை. சமூக வலைத்தளம் ஒரு மீன்தொட்டி போன்றதே. அதில் முண்டைக்கண் துருத்திக்கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றன நம்முடைய மனங்கள். தொட்டியை டொக்கென்றும், டக்கென்றும் தட்டி கவனத்தைத் திசைதிருப்புவதற்கென்று ஒரு கூட்டமே அலைந்துகொண்டிருக்கிறது. அவர்களின் தட்டல்களுக்காகவே காத்துக்கொண்டிருந்தது போன்று, எதிர்ச்செயலாய் திடுக்கென்றும், வெடுக்கென்றும், நடுக்கத்துடன் இங்குமங்கும் அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன தங்கமீன்களாய் நம் மனங்கள்.

    Share
  • கலியன் ஒலிமாலை விழா

    -முனைவர் இரா. மதன் குமார் 

    முன்னுரை

    இறைவன், பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம் மற்றும் அர்ச்சை ஆகிய நிலைகளில் அருள்கின்றான். இவற்றுள், அர்ச்சை என்பது, திவ்யதேசங்களில் பெருமாள், உருவத்திருமேனி கொண்டு விளங்கியருள்கின்ற அருள்நிலையாகும். பிற நிலைகளைக் காட்டிலும், அர்ச்சையில், பெருமாளின் எளிமையும், அடியார்களின் பக்தியாகிய பெருந்திறமும் மிகச்சிறப்பாக வெளிப்படும். அதனாலேயே, திருமங்கையாழ்வார், பெருமாளின் அர்ச்சைநிலையினை மிகவும் விரும்பி, திவ்யதேசங்கள்தொறும் சென்றார்; அங்கு, பெருமாளின் திருஉருவினைக் கண்ணாரக் கண்டு, வாயாரப் பாடி, மனமார, அவனது திருவருளைப்பெற்று இன்புற்றார்.

    அன்று ஆழ்வார், திவ்யதேசங்கள்தொறும் சென்று பாடிப்பெற்ற பேரின்ப அனுபத்தை, இன்றளவும் நாம் பெற்றுய்யக் கருவியாக, ‘கலியன் ஒலிமாலை விழா’ என்னும்  ‘திருநாங்கூர் கருட சேவை விழா’ அமைகிறது. திருநாங்கூர் மணிமாடக்கோயில் உள்ளிட்ட,  பதினொரு திவ்யதேசத் திருப்பாசுரங்களையும் மையமாகக்கொண்டு அமைகின்ற இப்பெருவிழாவின் அருள்நிகழ்வுகள் குறித்தும், அத்திருப்பாசுரங்கள் வழியே, திவ்யதேசங்களின் ஏற்றம் குறித்தும் இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    திருநகரியிலிருந்து புறப்பாடு

    தை அமாவாசை நாளின் முதல்நாள் இரவில், திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், குமுதவல்லியாரோடு புறப்பட்டுத் தான் பிறந்த திருத்தலமாகிய திருக்குறையலூரினை அடைகின்றார். ஐந்து நரசிம்மத் திருத்தலங்களுள், உக்கிரநரசிம்மத் தலமாகிய திருக்குறையலூரில் வீற்றிருக்கின்ற பெருமாளைச் சிங்கவேள்குன்றத்துக்குரிய பத்துத் திருப்பாடல்களாலும் ஆழ்வார் போற்றிப்பணிகின்றார்.

    அதன் பின்னர், திருக்குறையலூருக்கு அருகே அமைந்துள்ள மங்கைமடமாகிய திருத்தலத்தை அடைகின்றார். ஆழ்வார், குமுதவல்லியாரின் திருச்சொல்லுக்கு இணங்கி, அன்றாடம் அடியவரின் பசிப்பிணிபோக்கிய நிலையமாதலால் இவ்விடம் ‘மங்கைமடம்’ என்கின்ற திருப்பெயரில் விளங்குகிறது. மங்கைமடத்திலுள்ள, வீரநரசிம்மத் திருத்தலத்தினையும், சிங்கவேள்குன்றத்துக்கு உரிய திருப்பாடல்களால் ஆழ்வார் போற்றிமகிழ்கின்றார். பின்னர், மங்கைமடத்திலிருந்து புறப்படுகின்ற ஆழ்வார், திருக்காவளம்பாடியை அடைகின்றார்.

    திருக்காவளம்பாடிக் கண்ணனைப் போற்றுகின்றார்

    சத்தியபாமாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்திரனின் சோலையிலிருந்து பாரிசாத மலரினைக் கொணர்ந்தளித்த பெருமாளே, திருக்காவளம் பாடியில் உறைகின்றான் என்கின்றார் திருமங்கையாழ்வார்.

    பாரிசாத மலருக்காக, இந்திரனோடு போரிட்ட கண்ணன், தான் உறைவதற்கு இயைந்த காவளத்தை (மலர்ப்பொழிலை) நாடி மண்ணுலகுக்கு வந்தான். கண்ணன் தனக்கு உவந்த காவளம் இடம்கொண்டிருந்த இத் திருத்தலத்திலேயே தங்கிவிட்டான். ஆதலால், இத் திருத்தலமானது, ‘ திருக்காவளம்பாடி’ எனப் போற்றப்பெறுகிறது.

    “ ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று
     காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
     பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை
     காவளம் பாடிமேய கண்ணனே! களைகண் நீயே ” (பெரிய திருமொழி, 4:6:8)     எனத் திருமங்கையாழ்வார் காவளம்பாடிக் கண்ணனைப் போற்றியுள்ளார். 

    மடவரல்மங்கை உறைகின்ற திருத்தலம்
    இத் திருத்தலத்துத் தாயாரை ஆழ்வார், ‘மடவரல்மங்கை’ எனப் போற்றும்முகமாக,

    “படஅரவு உச்சி தன்மேல் பாய்ந்து நடங்கள் செய்து
     மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தி னானே ” (மேலது, 4:6:5)

    எனப் பாடியுள்ளார். அதன்பொருட்டு, இத் திருத்தலத்தில் தாயாருக்கு ‘மடவரல்மங்கை’ என்கின்ற திருப்பெயரும் வழங்கிவருகிறது. திருக்காவளம்பாடியில், ‘தா அளந்து உலகமுற்றும்’  என்று தொடங்குகின்ற திருப்பதிகச் சொல்மாலையினை இறைவனுக்குச் சூட்டி வழிபட்ட பின்னர், ஆழ்வார், இங்கிருந்து புறப்பட்டுத் திருமணிக்கூடத்தை அடைகின்றார்.

    திருமணிக்கூடத்தில் திருமங்கையாழ்வார்

    திருமணிக்கூடத்தின் வரதராசப்பெருமாளை ஆழ்வார்,

    தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத்து அருளிமன்னு
    காம்புடைக் குன்றம் ஏந்திக் கடுமழை காத்த எந்தை
    பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன்புரண்ட எங்கும்
    தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே ” (மேலது, 4:5:1)

    எனத் தொடங்குகின்ற திருப்பாசுரத்தால் போற்றுகின்றார்.

    ஆழ்வார் திருமணிக்கூட நாதனைப் போற்றத் துணிந்தவேளையில், அவர்தம் சிந்தையில் கஜேந்திரக் களிற்றுக்கு அவன் இரங்கியருளிய அருள்நிலையினைக் குறித்த உணர்வு எழுகிறது. அதனால் அவ் அருள்நிலையினை மறவாமல் திருமணிக்கூடநாதனை,

    ”தூம் புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்து ” (மேலது பாடல்)

    எனப் போற்றிப் பாடியுள்ளார். திருமணிக்கூடநாதனைத் திருமங்கையாழ்வார், கஜேந்திரனைக் காத்தருளிய பெருமானாகப் போற்றியதால், அத் திருத்தலத்துப் பெருமாளுக்கு, ‘கஜேந்திரவரதன்’ என்கின்ற திருப்பெயரும் வழங்கிவருகிறது. திருமணிக்கூடத்தைப் போற்றி வழிபட்ட பின்னர், ஆழ்வார், திருப்பார்த்தன் பள்ளியை வழிபடப் புகுகின்றார்.

    திருப்பார்த்தன் பள்ளியில் வழிபாடு

    இத் திருத்தலம், அர்ச்சுனனின் நீர்வேட்கையினைப் போக்கியருளியது என்கின்ற அருட்சிறப்போடு விளங்குகிறது. அர்ச்சுனனாகிய பார்த்தனுக்காக உருவாகிய இத் திருத்தலத்தைத் திருமங்கையாழ்வார், ‘பார்த்தன் பள்ளி’ என்றே போற்றியமைகின்றார். இங்கு உறைகின்ற இறைவனை ஆழ்வார், ‘பார்த்தன்பள்ளிச் செங்கண்மால்’ எனப் போற்றுகின்றார். இத் திருத்தலத்து இறைவனுக்கு, ‘கவள யானைக் கொம்பொசித்த’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகச் சொல்மாலையினைச் சூட்டிக்களித்த பின்னர், ஆழ்வார், மஞ்சக்குளி மண்டபத்தை அடைகின்றார்.

    மஞ்சக்குளி மண்டபத்தில் திருமஞ்சனம்

    மஞ்சக்குளி மண்டபத்தில் ஆழ்வாருக்குத் திருவரங்கநாதன் அருளிய திருமஞ்சனக் காப்பும், திருநறையூர் பெருமாள் சூடிக்களைந்த பட்டு, மலர்மாலை முதலான சிறப்புகளும் வழங்கி வழிபாடு நிகழ்த்தப்பெறுகிறது. திருஅரங்கநகரில் ஆழ்வார், ஒரு திருக்கார்த்திகை நாளன்று, திருவரங்கனின் முன்னால் இருந்து, தமது  திருநெடுந்தாண்டகம் முதலான அறுவகைப் பிரபந்தங்களையும் தேவகானத்தில் பாடி இன்புற்றார். ஆழ்வாரின் அருள்தமிழினை மெச்சி மகிழ்ந்த இறைவன், தம்மைப் பாடிப் புண்பட்ட ஆழ்வாரின் மிடறு குளிர்கின்றவகையில் தனக்குரிய தைலக்காப்பினை அவருக்குத் தந்தருளினான். இச் செய்தியானது கோயிலொழுகு என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

    “ஒரு கார்த்திகை திவ்ய மஹோத்ஸவத்திலே பெருமாளும் நாய்ச்சிமார்களும் திருமஞ்சனம் கண்டருளி, உடுத்துப் பூசி முடித்து ஒப்பித்திருக்க, திருமங்கையாழ்வாரும் ‘திருநெடுந்தாண்டகம்’ என்று ஆறு ப்ரபந்தத்தை யிட்டருளி, பெருமாள் திருச்செவி சாத்தும் படி தேவகாநத்திலே ஏறிட்டு அபிநயித்து அநுஸந்திக்க பெருமாளும் போராவுகந்தருளி, ஆழ்வாருக்கு ஸகலவரிசைகளும் சாதிக்கத் திருவுள்ளம் பற்றி, . . . இக்கலியன் தேவகானத்திலே மிகவும் பாடுகையாலே அவர்மிடறு தொந்தது. இன்று நாம் சாத்தியிருந்த தைலக்காப்பை அவர் மிடற்றிலே தடவுங்கோள் என்று பரிநங்கை நியமிக்க பரிகரமும் அப்படியே செய்ய திருமங்கைமன்னன் கருத்தார்த்தராய் தம்மிடத்து எழுந்தருளினார்.” (கோயிலொழுகு, பக்கம்:8)., என ஆழ்வார், தனது திருத்தமிழுக்காக இறைவனிடமிருந்து அருட்பேற்றினைப் பெற்றநிலையினைக் கோயிலொழுகு போற்றியுரைக்கிறது.

    இந்நிகழ்வின்போது அரங்கநகர்ப் பெருமாள், திருமங்கையாழ்வாரிடம், நீர் வேண்டுவது யாதென? வினவ, ஆழ்வாரும், ‘நம்மாழ்வாரின் திருப்பாடல்களுக்கு வேதத்தகுதியினை வழங்கி, அவற்றை மார்கழித் திங்களின் அத்யயநப் பெருவிழாவின்போது கேட்டருள வேண்டும்’ என இறைவனிடம் வேண்டிக்கொள்ள, இறைவனும் அவ்வாறே அருள்செய்தார் என்ற செய்தியும் மேற்கூறிய நிகழ்வோடு தொடர்புடையதாக அமைகின்றது. இவ்வாறு, நம்மாழ்வாரின் திருப்பாடல்களுக்கு வேதத்தகுதியைப் பெற்றுத்தந்த திருமங்கையாழ்வாரே, தமிழ்வேதங்களாகிய திவ்வியப் பிரபந்தங்களை மார்கழியில் ஓதுகின்ற அத்யயநப்பெருவிழாவிற்கு அடித்தளம் அமைத்துத்தந்தார் என்பது குருபரம்பரை வழக்கமாகப் போற்றப்பெறுகிறது.

    அதுபோன்றே,  திருநறையூர்ப் பெருமானின் மீதும் ஆராத பேரின்பக் காதல் கொண்டு சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல் ஆகிய மடல் இலக்கியங்களைத் தந்த பேரன்பிற்குப் பரிசாக, திருமங்கையாழ்வாருக்கு, திருநறையூரிலுள்ள சீனிவாசப்பெருமாளின் மாலை, திருப்பட்டு முதலான அருட்பேறுகளும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுகிறது.

    இவ்வாறு, மஞ்சக்குளி மண்டபத்தில், தனது தமிழுக்காக அரங்கநகர்ப் பெருமாளும், திருநறையூர்ப்பெருமாளும் தந்த அருட்பேறுகளைப் பெற்றுக் கொண்ட களிப்போடு ஆழ்வார், திருநாங்கூர் மணிமாடக்கோயிலை அடைகின்றார்.

    நந்தா விளக்கினைப் போற்றுகின்றார்

    திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் உறைகின்ற நந்தாவிளக்குப் பெருமாளையும், புண்டரிக வல்லித் தாயாரையும், ‘நந்தாவிளக்கே! அளத்தற்கு அரியாய்’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி வழிபடுகின்றார் ஆழ்வார். திருநாங்கூரின் திருமணிமாடக்கோயிலில் உறைகின்ற இறைவனை, ‘நந்தா விளக்கே’ என விளித்துப்போற்றியதன் நிலையாக, அங்கு உறைகின்ற பெருமாளுக்கு ‘நந்தாவிளக்கு’ என்னும் பொருள்படுகின்ற ‘நந்தாதீபன்’ என்கின்ற திருப்பெயரும் வழங்கிவருகிறது. திருநாங்கூர் மணிமாடக் கோயிலைப் பாடிப்பரவி இன்புற்ற பின்னர் திருமங்கையாழ்வார், திருத்தெற்றி அம்பலத்தினை அடைகின்றார்.

    அம்பலத்து அரங்கனைப் போற்றுகின்றார்

    வைணவ திவ்யதேசங்களுள், ‘அம்பலம்’ என்னும் பெயருடைய திருத்தலம், இது ஒன்றேயாகும். (திருத்தெற்றி அம்பலம் – தெற்றி – திண்ணை). இத் திருத்தலத்தில் இறைவனின் பள்ளிகொண்ட திருக்காட்சியானது விளங்குகிறது. ‘செங்கண்மால் அரங்கர்’ என்பது இத் திருத்தலத்தில் உறைகின்ற இறைவனின் திருப்பெயராகும். ‘செங்கமலவல்லி’ என்பது, தாயாரின் திருப்பெயராகும். கிழக்கு நோக்கியவாறு, ஆதிசேடனாகிய பாம்பணையில் துயில்கின்ற செங்கண்மால் அரங்கனைத் திருமங்கையாழ்வார்,

    “திருத்தெற்றிஅ ம்பலத்துஎன் செங்கண் மாலே ” (பெரிய திருமொழி, 4:4:10)

    எனப் போற்றியுரைத்துள்ளார். இங்கு உறைகின்ற அரங்கனை ஆழ்வார், ‘மாற்றரசர் மணிமுடியும்’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி மகிழ்ந்த பின்னர் திருவண்புருடோத்தமத்தைச் சென்று சேர்கின்றார்.

    புருடோத்தமனைப் போற்றுகின்றார்

    அவதாரங்களின் வாயிலாகப் பல துன்பநிலைகளைத் தான் உற்றபோதிலும், இறைவன், அனைத்து உயிர்களுக்கும் நன்னிலை நல்கிக் காத்தருள்கின்றான். எடுத்துக்காட்டாக, குறளுருவாக வந்து மாவலியிடத்தில் மாயம்செய்து மண்ணளந்த பெருமாள், இராமாவதாரத்தில் தன் திருவடிகள் மண்ணில் தோயும்படிக் கானகத்தில் நடந்து திரிந்தான். இவ் அவதார நோக்கங்கள் அனைத்தும், மண்ணுலக உயிர்களுக்கு நன்னெறிகாட்டுகின்ற பொருட்டு மேற்கொள்ளப்பட்டவையாகும். இவ்வாறு, உலக உயிர்கள் அனைத்தும் நன்னிலை பெறவேண்டி நற்செயல்புரிகின்ற அவனுக்கு, ‘உயர்குணமுடைய உத்தமன்’ என்ற திருப்பெயர் பொருத்தமுடையதாகும். அப் பொருள் அமைகின்றவகையில், ‘புருஷோத்தமன்’ என்கின்ற திருப்பெயரோடு இறைவன் இத் திருத்தலத்தில் உறைகின்றான்.

    இறைவனின் உத்தம அருள்குணத்தைப் போற்றுகின்றவகையில் அமைந்த, ‘புருஷோத்தமன்’ என்கின்ற திருப்பெயரினை ஆழ்வார், ‘புருடோத்தமன்’ என்று தமிழ்ப்படுத்திக்கொண்டும், இத் திருத்தலத்தினை ‘வண்புருடோத்தமம்’ என்றும் போற்றியமைகின்றார். ‘நாங்கூர் வண்புருடோத்தமம்’ என்பது திருமங்கையாழ்வாரின் திருமொழியாகும். இத் திருவண்புருடோத்தமத்தைத் திருமங்கையாழ்வார், 

    “கம்ப மாகடல் அடைத்துஇலங் கைக்குமன் கதிர்முடி அவைபத்தும்    அம்பினால் அறுத்து அரசுஅவன் தம்பிக்கு அளித்தவன் உறைகோயில்
    செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
    வம்புலாம் கமுகு ஓங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே ”
    (பெரிய திருமொழி, 4:2:1)

    எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி மகிழ்ந்த பின்னர், திருவைகுந்த விண்ணகரைத் தொழப்புகுகின்றார்.

    பரமபதநாதனைப் போற்றுகின்றார்

    இறைவன், பரமபதத்தில் நித்யசூரிகளுக்கு அருள்செய்வதாகிய திருக்கோலத்தில் காட்சிதருவதாகிய திருவைகுந்தவிண்ணகரை ஆழ்வார்,

    “சங்குமலி தண்டு முதல் சக்கர முனேந்தும்
    தாமரைக்கண் நெடிய பிரான் றானமருங் கோயில் ” (பெரிய திருமொழி, 3:9:10)

    எனப் போற்றியுள்ளார். திருவைகுந்தவிண்ணகரை, ‘சலங்கொண்ட இரணியனது அகல்மார்வம் கீண்டு’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி மகிழ்ந்த பின்னர் ஆழ்வார், திருச்செம்பொன் செய்கோயிலை அடைகின்றார்.

    செம்பொன் அரங்கரைப் போற்றுகின்றார்

    இராவணனைக் கொன்றொழித்த பின்னர், இராமபிரான் தங்கத்தால் ஆன பசுவினை வழிபட்டு வந்தார். அந்தணர் ஒருவர் அதனைத் தானமாகப் பெற்று, இறைவனுக்கு இத் திருக்கோயிலை அமைத்ததாகக் கூறப்படுகிறது. இத் திருத்தலத்தின் செம்பொன் அரங்கரையும், அல்லிமலர் நாச்சியாரையும் திருமங்கையாழ்வார், ‘பேரணிந்து உலகத் தவர்தொழு தேத்தும் பேரருளான்’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றிய பின்னர் திருஅரிமேய விண்ணகரைப் போற்றப்புகுகின்றார்.

    திருஅரிமேய விண்ணகரில் வழிபாடு

    ‘அடியவர்க்கு அருளவேண்டி, அரியாகிய பெருமாள் விரும்பி உறைகின்ற திருத்தலம்’ எனத் திருமங்கையாழ்வார்,  இத் திருத்தலத்தினைப் போற்றியுரைக்கின்றார்.

    ”திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத்
    தீவினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
    அருள்நடந்து இவ் ஏழுலகத்தவர் பணியவானோர்
    அமர்ந்தேத்த இருந்த இடம் ” (பெரிய திருமொழி, 3:10:1) 

    எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் திருஅரிமேயவிண்ணகரைப் போற்றி வழிபட்டபின்னர், ஆழ்வார், திருநாங்கூர் மணிமாடக்கோயிலை அடைகின்றார்.

    திருநாங்கூரில் பதினொருவரும் எழுந்தருளல்

    ஆழ்வார் போற்றிப்பணிந்த ஒன்பதுத் திருத்தலங்களின் உற்சவப் பெருமாள்களும் பல்லக்கில் எழுந்தருளித் திருநாங்கூர் மணிமாடக் கோயிலை அடைகின்றனர். திருநாங்கூர் திருப்பதிகளில் அமைந்த, எஞ்சிய இரு திருத்தலங்களாகியத் திருவெள்ளக்குளம் மற்றும் திருத்தேவனார்த் தொகை ஆகிய திருத்தலங்களின் பெருமாள்களும் பல்லக்கில் எழுந்தருளித் திருநாங்கூர் மணிமாடக்கோயிலை அடைகின்றனர். அங்குப் பதினொரு பெருமாள்களுக்கும் திருமஞ்சனமும், திருஒப்பனையும் நடைபெறுகிறது. அப்பொழுது, திருமங்கையாழ்வாருக்கும், குமுதவல்லிநாச்சியாருக்கும், ஆழ்வாரின் ஆன்மார்த்த வழிபாட்டு மூர்த்தியாகிய சிந்தனைக்கு இனிய பெருமானுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    பதினொரு திருத்தலத்துப் பெருமாளையும் பாடிய திருப்பதிகங்களின் முதலாவது திருப்பாசுரம் மட்டும் அங்குப் பாடப்பெற்றுப் பதினொரு பெருமாள்களுக்கும் கற்பூர வழிபாடு நிகழ்கிறது. அதன்பின்னர், இரவு பதினொரு திருத்தலத்துப் பெருமாள்களும் பெரியதிருவடியில் எழுந்தருளித் திருக்காட்சி நல்குவதைத் திருமங்கையாழ்வார் குமுதவல்லியாரோடு அன்னவாகனத்தில் வீற்றிருந்தவாறு கண்டு இன்புறுகின்றார்.

    பதினொருவரின் திருக்காட்சி

    மணிமாடக்கோயிலின் திருவாயிலில், அன்னவாகனத்தில் திருமங்கையாழ்வார், குமுதவல்லிநாச்சியாரோடு கூப்பிய கரத்தோடு வீற்றிருப்பார். திருமங்கையாழ்வாரின் இன்பத்தமிழை மெச்சி, அவருக்குப் பதினொரு திருத்தலத்துப் பெருமாள்களும் பெரிய திருவடியாகிய கருடவாகனத்திலிருந்து காட்சியருள்வது, காண்பதற்கரிய திருக்காட்சியாகும்.

    இத் திருநாளின்போது, திருவண்புருடோத்தமத்திலிருந்து, மணவாள மாமுனிகளும் திருநாங்கூர் மணிமாடக்கோயிலுக்கு எழுந்தருளி திருமங்கையாழ்வாரின் அருட்பொலிவினைக் கண்ணாரக் கண்டு மகிழ்கின்றார்.

    வடுகநம்பி மண்டபத்தில் திருமங்கையாழ்வார்

    திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் பதினொரு கருடசேவையினையும் கண்டின்புற்ற பின்னர், திருமங்கையாழ்வார், மூன்றாம் நாள் காலையில் வடுகநம்பி மண்டபத்தை அடைகின்றார். அங்குத் தங்கித் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர், கருடசேவைக்கு முன்னதாகப் பாடாமல் எஞ்சியுள்ள இரு திருத்தலங்களில் ஒன்றாகிய திருவெள்ளக்குளத்தை அடைகின்றார்.

    அண்ணனைப் பாடுகின்றார்

    திருவெள்ளக்குளத்துப் பெருமாளை, ‘கண்ணார் கடல்போல’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றியநிலையில், அவ் இறைவனை ‘அண்ணா’ என ஆழ்வார் போற்றியுள்ளார். திருவேங்கடநாதனை ‘அண்ணா’ எனப் பாடிய திருமங்கையாழ்வார், இத் திருத்தலத்தில் உறைகின்ற பெருமாளையும், ‘அண்ணா’ என விளித்துப் போற்றியுள்ளார். ஆதலால், இத் திருத்தலமானது திருவேங்கடத்துக்கு இணையானதாகப் போற்றப்பெறுகிறது. ஆழ்வாரிடமிருந்து ‘அண்ணா’ என்ற அமுதமொழி எழுந்த இத் திருத்தலமானது ‘அண்ணங்கோயில்’ என்று போற்றப்படுகிறது.

    ஆழ்வார், திருவேங்கடமலையில் உறைகின்ற பெருமாளைத் திருவெள்ளக்குளத்தில் கண்டு வழிபட்டு இன்புற்றதாகக் கூறுவது வழக்கம்.

    கண்ணார் கடல்சூழ் இலங்கைக்கு இறைவன்தன்
    திண்ணாகம் பிளக்கச் சரம்செல உய்த்தாய்
    விண்ணோர் தொழும் வேங் கடமாமலைமேய
    அண்ணா! அடியேன் இடரைக் களையாயே ” (பெரிய திருமொழி, 1:10:1)

    எனத் திருவெள்ளக்குளத்துப் பெருமாளை ஆழ்வார், திருவேங்கடநாதனாகவே எண்ணிப் போற்றியுள்ளார். ஆழ்வார், திருவேங்கடவனை எண்ணியவாறு, இத் திருத்தலத்துப் பெருமாளை, ‘அண்ணா!’ என்று அழைத்ததன் காரணமாக, இத் தலத்துப்பெருமாளை திருவேங்கடநாதனுக்கு அண்ணன் என்று கூறுகின்ற வழக்கம் உண்டு. அவ் வழக்கத்தினால் இத் திருத்தலமானது, அண்ணங்கோயில் என்னும் பெயராலும் வழங்கப்பெறுகிறது.

    திருவெள்ளக்குளத்தைப் போற்றிவழிபட்டபின்னர் ஆழ்வார், திருத்தேவனார்த் தொகையாகிய திருத்தலத்தை அடைகின்றார்.

    திருத்தேவனார்த் தொகையில் திருமங்கையாழ்வார்

    ‘வானவர் அனைவரும் இறைவனைப் பணிவதற்கு புகுந்த இடம்’ என இத் திருத்தலமானது திருமங்கையாழ்வாரால் போற்றப்பெறுகிறது. இங்கு உறைகின்ற இறைவன், தெய்வநாயகன் எனப் போற்றப்பெறுகின்றார். தாயார், ‘மாதவநாயகி’ என்கின்ற திருப்பெயரோடு போற்றப்பெறுகின்றார். இத் திருத்தலத்தைத் திருமங்கையாழ்வார், ‘போதலர்ந்த பொழில்சோலை’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டபின்னர், திருவாலி திருத்தலத்தை அடைகின்றார். திருநகரித் திருத்தலத்துக்குரிய முப்பதுத் திருப்பாடல்களையும் திருமங்கையாழ்வார் திருவாலி திருத்தலத்திலேயே பாடி அங்கு உறைகின்ற பெருமானை வழிபடுகின்றார்.

    திருவாலியில் திருக்காட்சி

    திருவாலித் திருத்தலத்தினை வழிபட்ட பின்னர், ஆழ்வார், திருநகரியை அடைகின்றார். அதுகாறும், திருநாங்கூர்த் திருப்பதிகள் அனைத்தையும் பாடிப் பரவிய திருமங்கையாழ்வாருக்கு, திருநகரியில் உறைகின்ற வயலாலி மணவாளன், பெரியதிருவடியில் எழுந்தருளி, எதிர்வந்துத் திருக்காட்சி தருகின்றார். அங்கு இறைக்காட்சியைக் கண்டவுடன், தான் பரமபதஅனுபவத்தைப் பெற்றுவிட்டதாக ஆழ்வார் பாடுகின்றவகையில் ‘கற்றார் பரவும்’ எனத் தொடங்குகின்ற திருக்கண்ணபுரத்துக்கு உரிய திருப்பாடலானது பாடப்படுகிறது.

    ”கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
     பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
     வற்றா நீர்வயல்சூழ் வயல்ஆலி அம்மானைப்
     பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன் ” (பெரிய திருமொழி, 8:9:8)

    எனப் பாடி, தான் பிறவாத பெருநிலையைப் பெற்றுவிட்டதனை எண்ணியும், பெரிய திருவடியில் இறைவனின் திருக்காட்சியினைக் கண்ட பேற்றினை வியந்தும், ஆழ்வார் இன்புறுகின்றார். ஆழ்வாரின் இத் திருக்காட்சிப் பேற்றினை, அடியார்கள் வணங்கி மகிழ்வதுடன், கலியன் ஒலி மாலை விழாவானது இனிதே நிறைவுறுகிறது. 

    முடிவுரை

    திருமங்கையாழ்வாரால் போற்றிப் பாடப்பெற்ற திருநாங்கூர் திவ்யதேசங்கள் இன்றளவும், அவர்தம் பெரியதிருமொழியில் சுட்டப்பெற்றவாறு ஏற்றம் பெற்றுவிளங்குகின்றன. இதற்கு, அந்தந்த திவ்யதேசங்களிலும் விளங்குகின்ற பெருமாள் மற்றும் தாயாரின் திருப்பெயர்கள், ஆழ்வாரின் அருந்தமிழ்ப் பாசுரத் தொடர்களாகவே அமைந்துள்ளமை எடுத்துக்காட்டாகும். திருவரங்கத்தில் நிகழ்கின்ற பகல்பத்து மற்றும் இராப்பத்து உற்சவத்தில், ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்தப்பாசுரங்கள் அரையர் சேவையெனப் போற்றப்பெறுவது வழக்கம். அதுபோன்றே, ஆழ்வாரின் அருந்தமிழைக் கொண்டாடுகின்ற தனிப்பெரும் விழாவாக இக்கருடசேவைப் பெருவிழாவானது ஆண்டுதோறும் நிகழ்த்தப்பெறுகிறது.

    இப்பகுதியானது, காவிரி பாய்கின்ற வயல்வெளிகள் நிறைந்தது. இப்பகுதியிலுள்ள பாமரமக்கள், ஆழ்வாரின் பிரபந்தப்பாசுரங்களைச் சொற்பொருள் தெளிவுடன் குற்றமறக் கற்றுத் தெளிந்த அறிவுடையவர்கள் அல்லர். ஆயினும், குறையாத அன்பினால் ஆழ்வாரைத் தம்மவராக  வரித்துக்கொண்டவர்கள். அவரையே பெருமாளாகக் காணுகின்ற பக்தித்திறம் உடையவர்கள். அறிவுக்கண் கொண்டல்லாமல், அன்புக்கரம் கொண்டு ஆழ்வாரை வணங்குபவர்கள். அதனால், ஒவ்வோர் ஆண்டும் கருடசேவைக்காகத் திருமங்கையாழ்வாரும், குமுதவல்லி நாச்சியாரும் தங்களது வயல்வெளிகளின் வழியாகக் கடந்து செல்வதையே பெரும்பேறாகக் கருதுபவர்கள்.  அதனால்,  ‘தமது வயல்வெளியில் விளைச்சல் பெருகும்’ என்று நம்புபவர்கள்.

    ‘அன்பு குறையாத, நிலையான நம்பிக்கையே பக்தி’ என்னும் தத்துவத்தைத் திருமங்கையாழ்வார், அவர்கள் வழியாக உணர்த்தியுள்ளார் என்பதற்கு, ‘கலியன் ஒலிமாலை விழா’ பெருஞ்சான்றாக உள்ளது.

    ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

    1. நாலாயிரத் திவ்ய பிரபந்தம், எம். நாராயண வேலுப்பிள்ளை (உரையாசிரியர்), முல்லை நிலையம், சென்னை முதல் பதிப்பு: 2000.
    1. கோயிலொழுகு, கிருஸ்ணஸ்வாமி அய்யங்கார் (பதிப்பாசிரியர்), ஸ்ரீரங்கநாச்சியார் அச்சுக்கூடம், திருவரங்கம், திருச்சி- 6. பதிப்பு ஆண்டு: 1976.

    *****

    கட்டுரையாசிரியர்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

     

     

    Share
  • பழந்தமிழக வரலாறு -2

    காலமும்  வரலாறும்

     கணியன்பாலன்

    காலம் குறித்தப் புரிதலோ, காலம் குறித்தத் தெளிவோ இன்றி எழுதப்படும் வரலாறு, ஒரு முழுமையான வரலாறாக இருக்க முடியாது. கி.பி. 17ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும், கி.பி. 21ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமிடயேயான வேறுபாடுகள் உள்ளன. இந்த இரண்டு காலகட்ட உலகமும் வேறு வேறானவை. அதில் வாழ்ந்த, வாழ்ந்து வருகிற மனிதர்களும் வேறு வேறானவர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம். சான்றாக 17ஆம் நூற்றாண்டு தமிழன் ஒருவனால், 21ஆம் நூற்றாண்டுத் தமிழனின் வாழ்வை கற்பனை கொண்டுகூட பார்க்கமுடியாது. இரண்டு வாழ்வுக்குமிடையேயான வாழ்க்கை, வசதிகளும், சமூகத் தனிமனித உறவுமுறைகளும், அரசியல், பொருளாதாரம் கலை, இலக்கியம் போன்றவைகளும் கற்பனையிலும்கூட காணமுடியாத அளவு மாற்றம் அடைந்துள்ளன. ஆகவே வரலாற்றில் காலம் மிகமிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டாகவேண்டும். நவீன இயற்பியலில் வெளி, காலம்(SPACE & TIME) ஆகிய இரண்டும் அனைத்து அறிவியலுக்குமான அடிப்படையாகக் கருதப்படுகிறது. வெளி-காலம் ஆகியவற்றால் ஆன பொருளாக நமது அண்டம் இருக்கிறது எனவும், காலம் என்பது நமது அண்டத்தின்(UNIVERSE) நான்காவது பரிமாணமாக(FOURTH DIMENSION) இருக்கிறது எனவும் நவீன அறிவியல் கூறுகிறது. நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன் ஆக்கிங் அவர்கள் எழுதிய “காலம்” என்ற நூல் அண்டம், காலம் முதலியன குறித்த விரிவான விளக்கத்தைத்தருகிறது என்பதோடு காலத்தின் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

    பழந்தமிழர் மரபும் காலமும்:

    “முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்

    இயல்பென மொழிப இயல்பு உணர்ந்தோரே” என்கிறார் தொல்காப்பியர் (தொல்காப்பியம், அகத்திணையியல்-4). இங்கு ‘நிலம்’ என்பது இடம் அல்லது வெளி என்ற பொருளிலும், ‘பொழுது’ என்பது காலம் என்ற பொருளிலும் சொல்லப்பட்டுள்ளது. நமது பழந்தமிழக மரபுப்படி, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றிலும் முதற்பொருள் என்பது அனைத்திற்கும் அடிப்படையாகக் கருதப்பட்டது. நவீன அறிவியல், வெளி, காலம் ஆகிய இரண்டையும் அனைத்திற்கும் அடிப்படையாகக் கருதுவதுபோன்றே தொல்காப்பியரும் இடம், காலம் என்பதை அனைத்திற்கும் அடிப்படையான முதற்பொருள் எனக் கூறியுள்ளார். அதனால்தான் மொழியியல் அறிஞர் டாக்டர் கபில் சுவெலபில் அவர்கள், “மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும்”(one  of  the finest  monuments of human intelligence) என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று தொல்காப்பியம்” எனக்கூறியுள்ளார் எனலாம்(1).

    எண்ணியம் என்கிற சாங்கியத்தைத் தோற்றுவித்தத் தொல்கபிலர் ஒரு தமிழர் ஆவார் என்பதோடு அவர் ஒரு பொருள்முதல் மெய்யியல் அறிஞரும் ஆவார். அவர் வெளி, காலம், இயக்கம் ஆகியன பருப்பொருளின் கூறுகள் எனவும், அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை எனவும் கூறியுள்ளதாகக் கூறுகிறார் கிரபின் என்கிற உருசிய அறிஞர்(2). இந்த எண்ணியச்சிந்தனையை அடிப்படையாகக்கொண்டுதான் இடம், காலம் ஆகியவற்றின் இயல்புகள்தான் முதற்பொருள் என்கிறார் தொல்காப்பியர். ஆகவே நமது முன்னோர்கள் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு தொல்கபிலரும்,  தொல்காப்பியருமே  சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆவர். அறிவியல், மெய்யியல் ஆகியவற்றில் காலம் எந்தளவு முக்கியமானதோ அதைவிட ‘வரலாறு’ என்பதில் காலத்திற்கு முக்கியத்துவம் உண்டு. ஆகவே காலம் பற்றிய தெளிவு இன்றி படைக்கும் வரலாறு ஒரு முழுமையான வரலாறாக இருக்காது.

    பழந்தமிழக வரலாற்றில் காலம்:

    பழந்தமிழக வரலாற்றில் காலம் குறித்தத் தெளிவு இதுவரை உருவாகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சேரன் செங்குட்டுவன், பரணர், அதியமான் போன்றவர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் அவர்களை கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதுகிற அவலநிலை இருந்துவருகிறது. இரண்டுக்குமிடையே நான்கு நூற்றாண்டுகள் கால இடைவெளி இருக்கிறது. முன்பு கூறியதுபோல் கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களை கி.பி. 21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதுவதுபோல்தான் இதுவுமாகும். “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுகள், இந்தியத் தமிழகத் தத்துவ வரலாறு, வெளிநாட்டார் குறிப்புகள், வட இந்திய வரலாறு, உலக வரலாறு, இனக்குழு வரலாறு & நகர அரசு உருவாக்கம் போன்ற பலதளங்களில், பலகோணங்களில் ஆய்வு செய்து நமது பழந்தமிழக வரலாற்றின் காலத்தை ஓரளவு துல்லியமாகவே உறுதி செய்துள்ளது.

    அதன்படி சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான காலகட்டம் என வரையறை செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட வேந்தர்கள், வேளிர்கள் போன்ற ஆட்சியாளர்களின் காலகட்டம் என்பது கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டமாகும். சங்க இலக்கியங்களான பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய ஆறு தொகை நூல்களும், பத்துப்பாட்டில் 2 முதல் 9 வரையான எட்டு பாடல்களும், தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் முதலியனவைகளும் சேர்ந்து ஆகமொத்தம் உள்ள 2000க்கும் மேற்பட்ட பாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு நமது வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.

    தொல்கபிலர் காலம்:

    எண்ணியம் என்கிற சாங்கியம் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது எனவும் மகாபாரதத்திலேயே சாங்கியம் சநாதமானது(காலங்கடந்தது) எனக் கூறப்பட்டுள்ளது எனவும், உபநிடதங்கள் கூட சாங்கியம் அவற்றுக்கு முந்தையது எனக்காட்டுகின்றன எனவும் சாங்கியம் புத்தருக்கு முந்தையது எனக் கார்பேயும், கெச்.பி. சாத்திரியும் வாதிடுகின்றனர் எனவும் சட்டோபாத்தியாய கூறுகிறார்(3). மேலும் மெய்யியல் அறிஞர்கள் பலர் சாங்கியம் கிட்டத்தட்ட வேதத்துக்கு முந்தைய ஆரியமில்லாத சிந்தனைப்போக்கு எனக் கருதுகின்றனர் எனவும்(4), கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்கிற தொன்மை உபநிடதங்களின் காலத்தைக்குறிக்கிறது எனவும் ‘இந்தியாவில் மெய்யியல்’ என்கிற நூல் கூறுகிறது(5). சாங்கியம் என்கிற எண்ணியத்தின் மூலவர் வடமரபுப்படி கபிலர் எனவும் சங்க இலக்கியங்களைப் பாடியுள்ள தொல்கபிலரே சாங்கியத்தின் மூலவர் எனவும்  அவர் தமிழர்தான் எனவும் பல கோணங்களில் ஆய்வு செய்து உறுதி செய்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(6). ஆகவே மிகப்பழங்காலத்தைச் சேர்ந்த, மகாபாரதத்துக்கும் உபநிடதங்களுக்கும் முந்தைய சாங்கியம் என்கிற எண்ணியத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பதால் சாங்கியத்தின் மூலவரான தொல்கபிலரின் காலம் கி.மு. 750 ஆகும்.

    தொல்கபிலர் பாடிய ஆறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. தொல்கபிலரது தொன்மையையும், அவரது சிறப்பையும் குறிக்கும் விதத்தில்தான் சங்க இலக்கியம் இவரைத் தொல்கபிலர் எனக் குறித்துள்ளது. இந்திய மொழிகளில் சாங்கியம் என்கிற எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது பக்குடுக்கை நன்கணியாரின் புறம் 194ஆம் பாடல் ஆகும். சங்ககாலப் புலவரான இவர் மகாவீரர், புத்தர் ஆகியோரின் சம காலத்தவராக, அதாவது கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்(7). ஆகவே தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார் ஆகியவர்களின் காலங்களைக் கொண்டு சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் தொடங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

    நலங்கிள்ளியின் உச்சயினி படையெடுப்பு:

    முத்தொள்ளாயிரம் என்கிற நூல் பாண்டியன் மாறன் வழுதி, சோழன் நலங்கிள்ளி, சேரன் குட்டுவன் கோதை ஆகிய மூன்று சமகால வேந்தர்களைப் பற்றிப் பாடுகிறது என்பது எமது ஆய்வில் கண்டறியப்பட்டது. அந்நூலின்படி சோழன் நலங்கிள்ளி உச்சயினிவரை படையெடுத்தான் என்பதும் அறிந்து கொள்ளப்பட்டது. டி.டி. கோசாம்பி அவர்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் தெற்கேயிருந்து வந்த சாதவாகனர்கள் உச்சயினியைத் தாக்கி சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தனர் என்கிறார்(8). சுங்கவம்சத்தின் ஆட்சிக்காலம் என்பது கி.மு. 187 முதல் கி.மு. 75 வரை ஆகும். சாதவாகன அரசுகள் பற்றிய ஆய்வில் கி.மு.180-124 வரை சதகர்ணி என்பவன் ஆண்டான் எனவும், அதன் பின் வந்தவர்கள் பலவீனமானவர்கள் எனவும் அதற்குப்பின் வலிமையாக இருந்தவன் புலுமாயி(கி.மு.30-6) என்பவன் எனவும் அறியப்பட்டது. ஆகவே கி.மு. 124 முதல் கி.மு. 30வரை சாதவாகனர்கள் மிகவும் பலவீனமாக இருந்தார்கள்(9). ஆதலால் அவர்களால் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில்(கி.மு.100-75) உச்சயினியைத் தாக்கியிருக்க முடியாது என்பது அறியப்பட்டது. எனவே தெற்கேயிருந்து வந்த வேறுயாரோதான் உச்சயினியைத் தாக்கி சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தார்கள் என முடிவு செய்ய முடிந்தது.

    தலைவடிவ நாணயங்களை வெளியிட்ட பாண்டியன் வெள்ளியம்பலத் துஞ்சிய பெருவழுதி, சேரமான் மாக்கோதை ஆகியவர்களுக்குப் பின் வந்தவர்கள்தான் முறையே பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன் கோதை ஆகிய வேந்தர்கள் ஆவர். இந்தத் தலைவடிவ நாணயங்களை வெளியிட்டவர்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பதால் அதன்பின் ஆட்சிக்கு வந்த   பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன்கோதை ஆகியவர்களின் ஆட்சிக்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் துவக்கம் ஆகும். பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன்கோதை ஆகிய இருவரும்  முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்ற  சோழன் நலங்கிள்ளியின் சமகாலத்தவர்கள் ஆவர். மேலும் குட்டுவன் கோதை வெளியிட்ட நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் சோழன் நலங்கிள்ளியின் ஆட்சிக்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் துவக்கம்(கி.மு.100-75) என முடிவு செய்யப்பட்டது. அவன் உச்சயினி மீது படையெடுத்தான் என முத்தொள்ளாயிரம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே சோழன் நலங்கிள்ளிதான் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில்(சுமார் கி.மு.85-80), உச்சயினி மீது படையெடுத்து சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தவன் என முடிவு செய்ய முடிந்தது.

    இறுதிக்காலம்:

    நலங்கிள்ளிக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவனது மகன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னிதான் சங்ககால இறுதிச் சோழவேந்தன் ஆவான். இவனது ஆட்சிக்காலம் கி.மு. 75-50 வரையான ஆண்டுகள் ஆகும். சேர, பாண்டிய வேந்தர்களின் ஆட்சிக்காலமும் கி.மு. 50க்குள் முடிவடைகிறது. இவர்களுக்குப்பின் வந்த வேந்தர்கள் குறித்தக் குறிப்புகள் சங்ககாலப் பாடல்களில் இல்லை. ஆகவே சங்ககாலத்தின் இறுதிக்காலம் என்பது கி.மு. 50 என வரையறை செய்யப்பட்டது. ஆகவே தொல்கபிலர் காலம் சங்ககாலத்தின் தொடக்ககாலம் என்பதால், சங்ககாலம் என்பது கி.மு.750 முதல் கி.மு.50 வரை என முடிவு செய்யப்பட்டது.  இந்த சங்ககாலத்தில் இருந்த ஆட்சியாளர்களின் காலத்தை(கி.மு.350-50) பத்து காலகட்டமாகப் பிரித்து, அவர்களின் காலகட்டங்களையும், ஆண்டுகளையும் துல்லியமாகக் கண்டறிந்து, அவர்களின் காலவரிசைப்படியான  வரலாற்றை “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலில் கட்டமைப்பதற்குக் கீழ்கண்ட சில சிறப்பம்சங்கள் அடித்தளமாக இருந்துள்ளன.

    சிறப்பம்சங்கள்:

    1.திட்டவட்டமான சான்றுகளைக்கொண்ட உலக வரலாற்றுக்காலத்தை அடிப்படையாகக்கொண்டு தமிழக வரலாற்றுக்காலத்தை கணித்துக் காலநிர்ணயம் செய்தது. கிரேக்க வீரன் அலெக்சாந்தரின் இந்தியப் படையெடுப்பு ஆண்டுகளைக் கொண்டும், மகத அரசில் ஏற்பட்ட நந்தர்-மௌரியர் ஆட்சி மாற்ற ஆண்டுகளைக் கொண்டும், அசோகனின் கல்வெட்டு ஆண்டுகளைக்கொண்டும், மாமூலனாரின் காலத்தையும், செருப்பாழிப் போரின் ஆண்டையும் கணித்துக் காலநிர்ணயம் செய்தது.

    2.பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய ஆறு தொகைநூல்களையும் பத்துப்பாட்டில் 2-9 வரையான எட்டு பாடல்களையும், தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் ஆகியவற்றின் ஒரு சில விடயங்களையும் மட்டும் பயன்படுத்திக் கொண்டது; சிலப்பதிகாரம், கலித்தொகை, பரிபாடல் ஆகிய பிற்கால நூல்களில் உள்ள விடயங்களை, மேலே குறிப்பிட்ட ஆதார இலக்கியங்களின் தரவுகளோடு இணைந்து போகும்பொழுது மட்டுமே பயன்படுத்திக்கொண்டது.

    3.சங்ககாலப் புலவர்கள் பெரும்பாலும் நிகழ்கால நிகழ்வுகளையே தங்கள் பாடல்களில் பாடியுள்ளனர் என்பதைக் கண்டறிந்து அதனை சங்க காலத்துக்கான காலவரிசைப்படியான வரலாற்றைக் கணித்துக் கால நிர்ணயம் செய்யப் பயன்படுத்திக் கொண்டது.

    4.புலவர்கள் பாடிய தலைவர்கள், தலைவர்களைப் பாடிய புலவர்கள் என்கிற தலைவர்கள்-புலவர்கள் தொடர்பை ஒரு முறைப்படுத்தி, வரையறுத்துத் தொகுத்து, அதனைக்கொண்டு கோட்டியல் வரைபடமுறையை உருவாக்கி, தலைவர்கள்-புலவர்களின் கால கட்டங்களையும், அவர்களின் ஆட்சி ஆண்டுகளையும் கணித்துக் கால நிர்ணயம் செய்து தமிழக வரலாற்றைக் காலவரிசைப்படி தொகுத்தது.

    5.இனக்குழு நிலையில் இருந்து அரசு உருவான காலகட்டம் வரையான வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை மார்கன், ஏங்கெல்சு, டாங்கே ஆகியவர்களின் நூல்களில் உள்ள சிவப்பிந்திய, கிரேக்க, உரோம, இரிக் வேதகால இனக்குழுக்களின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை தமிழக சங்ககாலத்துக்கும் அதற்கு முந்தைய காலத்துக்கும் ஒப்பிட்டு சங்ககாலம் என்பது அரசு உருவாகி நிலைபெற்ற காலம் என்பதை நிறுவியது.

    6.அசோகன் கல்வெட்டு, காரவேலன் கல்வெட்டு, புகளூர்க் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு போன்றவைகளின் ஆண்டுகளையும், முதுகுடுமிப் பெருவழுதி நாணயம், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்,  கொல்லிப்பொறை, மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் போன்றவைகளின் ஆண்டுகளையும், இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டையும் நமது சங்ககால இலக்கியக் கணிப்பு ஆண்டுகளோடு பொருந்திப் போகச் செய்து, தமிழக வரலாற்றைக் காலவரிசைப்படி வரையறுத்து நிர்ணயித்திருப்பது.

    7.தொன்மங்கள், புராணங்கள், வாய்மொழிக்கதைகள் போன்றனவற்றை வரலாற்றுச் சான்றாதாரமாகக் கொள்ளாது, முழுமையாக அவைகளைத் தவிர்த்திருப்பது, பிற சான்றாதாரங்களுக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் அவைகளை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பது; பதிகம், பாயிரம், அடிக்குறிப்புகள் போன்றனவற்றைப் பிற சான்றாதாரங்களோடு இணைத்துப் பயன்படுத்தியிருப்பது.

    பார்வை:

    1.உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன், தமிழ்மண் பதிப்பகம், 2009,  பக்: 64, 68-71.

    2.’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ வி.கிரபின், இரசிய நூல், முன்னேற்றப் பதிப்பகம், 1987, மாஸ்கோ பக்:45, 46..

    3.இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, பக்: 196.

    4,5.இந்தியாவில் மெய்யியல், மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா, தமிழில் சா. செயராஜ், டிசம்பர்-2011, NCBH, பக்: 23, அணிந்துரை-XII.

    6.க.நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும் சரக சம்கிதையும், 2009, பக்: 21.

    7.க.நெடுஞ்செழியன், ‘சங்கஇலக்கியக் கோட்பாடுகளும், சமயவடிவங்களும்’ இரண்டாம்பதிப்பு, 2009, பக்: 21

    8.டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, தமிழில்-ஆர்.எசு. நாராயணன், செப்டம்பர்-2006, NCBH,  பக்:388.

    9.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 275, 310-313.

    Share
  • பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – பகுதி 1

    -பேரா. பீ.பெரியசாமி

    1:0 முன்னுரை

    பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாக, இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், எதிர்பெய்து பரிதல், ஏதம் ஆய்தல், பசியட நிற்றல், பசலை பாய்தல், உண்டியிற் குறைதல், உடம்பு நனி சுருங்கல், கண் துயில் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக் கோடல், மெய்யே என்றல், ஐயஞ் செய்தல், அவர் தமர் உவத்தல், அறனழிந்துரைத்தல், ஆங்கு நெஞ்சழிதல், எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல், ஒப்புவழி உவத்தல், உறுபெயர் கேட்டல், கலக்கம் எனும் இருபதையும் கூறியுள்ளார் தொல்காப்பியர். (தொல்.மெய்.22) இம்மெய்ப்பாட்டினையும் இதனை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இவ்வியல் ஆராயவுள்ளது.

    1:1 பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் இங்கே தொல்காப்பியர் கூறியுள்ளதன் காரணத்தை,

    “மேல் நடுவ ணைந்திணைப் பகுதியாகிய களவிற்கும் கற்பிற்கு முரிய மெய்ப்பாடு உணர்த்தி, அதன்பின் கைக்கிளைக் குரியவருமாறு உணர்த்தினான். இனி இச்சூத்திரத்தாற் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று” இவற்றுள், இன்பத்தை வெறுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட இருபதும் ஆராயின் நடுவணைந்திணை யல்வழி வரும் என்றவாறு.”  (இளம்.,மெய்.22)

    என இளம்பூரணர் கூறியுள்ளார். முதலில் எண்வகை மெய்ப்பாட்டினைக் கூறிய தொல்காப்பியர் அதனைத் தொடர்ந்து அகத்திற்கும் புறத்திற்குமான மெய்ப்பாடுகளைக் கூறினார். அடுத்ததாக அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாக ஆறு அவத்தைகளைக் கூறினார். அடுத்து பெருந்திணைக்குரிய இம்மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார்.

    1:1:1 இன்பத்தை வெறுத்தல்

    இன்பத்தை வெறுத்தலென்பது, “கோலஞ்செய்தல் முதலியனவற்றை வெறுத்தலும் தென்றலும் நிலவு முதலாயினவற்றை வெறுத்தலும் இவ்வாறு களவின்கண்வரிற் பிறர்க்கும் புலனாம். கற்பின்கண் வரிற் இயல்வழி மங்கல மின்றாம்.” (மேலது) எனவும், “யாழுங் குழலுங் பூவுஞ் சாந்தும் முதலாக இன்பத்திற்கேதுவாகிய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல். அவை காமத்திற்கு ஒருவகையான் ஏதுவாகலின் ‘மன்னிய வினைய நிமித்த’ மெனப் படுமாகலான் அவற்றை வெறுத்தல் புணர்ச்சிக் கேதுவாகா தன்றேயாயினும் அதனை ஆராய்ந்துணரின் நிமித்தமென வேண்டுமென்பான் ‘நலத்தக நாடின் அதுவே’ என்றானென்பது.” (பேரா.,மெய்.22) எனவும், “தனிப் படர்மெலியுங் காதலர், கூட்டத்தின் முன்னும் உடனுறைபொழுதும் தமக்கினி தாயவற்றையே பிரிந்து தனித்தவழி வெறுக்குங் குறிப்பு. நிலவு, தென்றல், ஆரம், ஆயம், மாலை, கண்ணி முதலிய இன்பப் பொருள்கள் பிரிவாற்றாக் காதலர்க்குத் துன்பமாதல் இம்மனவியல் பற்றியதாகும்.” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர் உரைகொள்வர். தலைவனோடு சேர்ந்திருக்கும் காலத்தில் இன்பத்தை ஏற்படுத்திய தென்றல், நிலவு முதலியன அவனில்லாத நேரத்தில் காணும்போது துன்பத்தை ஏற்படுத்தும். அதனால் இன்பத்தை ஏற்படுத்தியவற்றை வெறுத்து ஒதுக்குதலே இன்பத்தை வெறுத்தல் எனும் மெய்ப்பாடாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1127-ஐயும்; பாரதி குறள்.396 – ஐயும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம், இராசா ஆகியோர்,

    நின்வலித்த மைவென் மன்னோ வல்கற்
    புன்கண்
    மதலையொடு பொருந்திக் கொடுங்கோற்
    கல்லாக்
    கோவல ரூதும்
    வல்வாய்ச்
    சிறுகுழல் வருந்தாக் காலே.” (அகம்.74)

    எனம் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், “ஊதிப்பழகாத கோவலர்கள் (சிறுவர்கள்) ஊதுகின்ற வாயையுடைய சிறிய வேய்ங்குழலோசை வருத்தாக்கால் கல்லா  – என்னை வருத்துமென்றறியாத எனினுமாம் என்பதில் கோவலர்கள் ஊதுகின்ற குழலின் ஓசையின் இன்பத்தை வெறுத்து தலைமகன் பிரிவின்கண் தன்நிலையைத் தோழிக்கு தலைவி சொல்லியது. இதில் ‘இன்பத்தை வெறுத்தல்’ எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.  இதனை, ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘கல்லாக் கோவல ரூதும், வல்வாய்ச் சிறுகுழல் வருந்தாக் காலே’ என்புழி இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக்கு ஏதுவாம் என்பது கருத்து என்றார், பேரா.” (ந.மு.வேங்டசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை,ப.178) என ந.மு. வேங்கடசாமி கூறியுள்ளார். இது பேராசிரியர் கருத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாய் உள்ளது. மேலும் பேராசிரியர்,

    “…………………… …………………. எல்லி,
    மனைசேர் பெண்ணை மடிவா யன்றி
    றுணையொன்று
    பிரியினுந் துஞ்சா காணெனக்
    கண்ணிறை
    நீர்கொண்டு சுரக்கு
    மொண்ணுத
    லரிவையா னென்செய்கோ வெனவே” (அகம்.50)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், இரவில் மனையைச் சேர்ந்த பனையிலுள்ள மடிந்த வாயையுடைய அன்றில் தன் சேவலராகிய ஒன்று பிரியினுந் துயிலாது காண். அங்ஙனமாக நான் பிரிந்து யாது செய்வேனென்று கண்கள் நிறைந்த நீர்கொண்டு (பின் அதனை அழித்து) மறைப்பாளெனத் தோழி பாணனை நோக்கி கூறுகின்றாள். ‘கண்ணிறை நீர்கொண்டு சுரக்கும் ஒண்ணுதல் அரிவையான் என்செய்கோ வெனவே’ என்பதில் கண்துயில் மறுத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளதே யொழிய இதில் இன்பத்தை வெறுத்தல் என்பது வெளிப்படவில்லை எனவே இஃது பொருந்தாது.

    “‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து, இன்பத்தை வெறுத்தல் என்பது இன்பத்திற் கேதுவாய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல் என்று கூறி, அதற்கு ‘எல்லி மனைசேர்….. என் செய்கோ எனவே’ என்னும் பகுதியை எடுத்துக்காட்டினார், பேரா.” (ந.மு.வேங்டசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை,ப.124) என ந.மு.வேங்டசாமி கூறியுள்ளார். இருப்பினும் இது எவ்வாறு பொருந்தாது என்பது மேலே கூறப்பட்டது.

    1:1:2  துன்பத்துப் புலம்பல்

    துன்பத்துப் புலம்பலென்பது, “துன்பத்தின் கண்ணே புலம்புறுதல்.” (இளம்.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாது துன்புறுங்காலை அவ்வாற்றாமை தலைமகற்கின்றித் தானே துன்புறு கின்றாளாகச் சொல்லுதல். அவை கூட்டத்தை வெறுத்த குறிப்பாயினும் அக்கூட்டத்திற்கே நிமித்தமாகும் ஆராய்ந்துணரினென்றவாறு.” (பேரா.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாமையான் படருற்று மெலிந்து வருந்துதல், இதுவும் அழுகைக்குப் பொருளாக வரும்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகனின் பிரிவைத் தாங்க இயலாத தலைமகள் அதனை நினைந்து புலம்பல் துன்பத்துப்  புலம்பலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும் குறள்.1162 ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் குறள்.1167 ஐயும்; மேலும், பாரதி குறள்.1162 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். மேலும் பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர்,

    நின்னுறு விழுமங் களைந்தோ
    டன்னுறு
    விழும நீந்துமோ வெனவே” (அகம்.170)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் நினது மிக்க துன்பை நீக்கினோள் தனது மிக்க துன்பத்தை நீக்குவாளோ? எனத் தலைவனிடம் கூறக்கேட்டு நண்டிடம் தலைவி கூறியது. இதில் ‘துன்பத்துப் புலம்பல்’ எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது இதனைக், “காக்கை பெடையோடு யாமத்து இறாக் கனவும் என்பதால், தலைவி, தலைவனுடன் கூடி, முன்பு பெற்ற இன்பத்தை நினைத்து வருந்துகிறாள் என்னும் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறது.” (நா.மீனவன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.113) எனவும், “ ‘இன்பத்தை வெறுத்தல்’  என்னும் சூத்திர உரையினும் இச்செய்யுளைப் பேராசிரியர் காட்டினார்.” (புலியூர்க் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.109) எனவும், “‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து  ‘நின்னுறு விழுமங்களைந்தோள், தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே’ என்பது துன்பத்துப் புலம்பல் என்னும் மெய்ப்பாடு ஆகுமென்றும் ………………. கூறினார் பேரா” (ந.மு. வேங்கடசாமி நாட்டார், அகநானூறு, மணிமிடை பவளம், ப.101) எனவும் அகநானூற்று உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். இதன்வழி இவ்வகப்பாடலில் இம்மெய்ப்பாடு பயின்று வந்துள்ளமைப் புலப்படுகிறது.

    1:1:3 எதிர்பெய்து பரிதல்

    எதிர்பெய்து பரிதலென்பது, “தலைமகன் முன்னின்றி அவனின்றாகப் பெய்துகொண்டு வருந்துதல்” (இளம்.,மெய்.22) எனவும், “உருவு வெளிப்பாடு; அது தலைமகனையும் அவன் தேர்முதலாயினவற்றையுந் தன்னெதிர் பெய்து கொண்டு பரிந்து கையறுதல்.” (பேரா.,மெய்.22) எனவும், “உருவெளி கண்டிரங்குதல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகள் காதல் மிகுதியால் தலைமகன் தன்னெதிரே இல்லாத நிலையிலும் எதிரே இருப்பதாகக் கண்டு இரங்குதல் எதிர்பெய்து பரிதலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணர் குறள்.1123 ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் ஐங்.418 ஐயும்; பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர், குறுந்.301.ஐயும்;  தாசன் குறள்.1126 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:4 ஏதம் ஆய்தல்

    ஏதமாய்தலென்பது, “குற்றமாராய்தல்” (இளம்.,மெய்.22) எனவும், “கூட்டத்திற்கு வரும் இடையூறுண்டென்று பலவும் ஆராய்தல். அது நொதுமலர் வரையக் கருதுவர் கொல்லெனவும், பிரிந்தோர் மறந்து இனிவாரார் கொல்லெனவுந் தோன்றும் உள்ள நிகழ்ச்சி” (பேரா.,மெய்.22) எனவும், “கூட்டத்திற்கு இடையூறாம் தீமை பலவும் ஆராய்தலாம் ஆற்றிடைத் தலைவன் ஊற்றினுக் கழுங்கல், பிரிந்தவர் மறந்து துறந்தனர் கொல்லெனத் துயரல், ஏதிலர்வரைவின் தீதினையஞ்சல் போல்பவை யெல்லாம் இதில்பாலடங்கும்.” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

     ஏதமாய்தலென்பது குறியிடத்தே கூட்டத்திற்கு வரும் தலைவனுக்கு நேரும் இடையூறுகளை ஆராய்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1165 ஐயும்; பாரதி குறுந்.268, 217, 307, கலி.11 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், குறுந்.307 ஆம் பாடலையும்; பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர்,

    வாரார் கொல்லெனப் பருவருந்
    தாரார்
    மார்பநீ தணந்த ஞான்றே (அகம்.150)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தாரையணிந்த மார்பனே! நீ பிரிந்தகாலை வாரார்கொல் என்று துயருறுவாள் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை, “ஏதம் ஆய்தல்’  என்னும் மெய்ப்பாட்டிற்கு,  ‘வாரார் கொல் எனப் பருவரும் தாரார் மார்ப நீ தனந்த ஞான்றே’ என்பதை ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்துப் பேராசிரியர் காட்டினார்” (புலியூர் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், பக். 67-68) எனப் புலியூர் கேசிகன் தமது உரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், “ந.மு.வேங்கடசாமி” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, மணிமிடை பவளம், ப. 63), “மா.பரமசிவம்” (மா.பரமசிவம் அகநானூறு, ப. 186) ஆகியோரும் தமது அகநானூற்று உரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளனர்.

     1:1:5  பசியட நிற்றல்

    பசியட நிற்றலென்பது, “உண்ணாமை” (இளம்.,மெய்.22) எனவும், “பசிவருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல்” (பேரா.,மெய்.22) எனவும், “தனிமை ஆற்றார் ஊண் உவர்த்துப் பிறரை அடும் பசிப்பிணியை அறவே தாம் அடும் ஆற்றல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தனக்கு பசி உண்டாகியும் உணவை உண்ணாது தலைவனின் பிரிவை எண்ணி வருந்துதல் பசியட நிற்றலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும். குறள்.1128 ஐயும்; பேராசிரியர், பாரதி, குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர்,

    அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்
    பாலு
    முண்ணாள் பழங்கண் கொண்டு
    நனிபசந்
    தனளென வினவுதி.” (அகம்.48)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், அன்னாய் வாழீ! நான் சொல்வதை விரும்பு. அன்னையாகிய நின்மகள் பாலும் உண்ணுகின்றிலள். துன்பங்கொண்டு மிகவும் நிறம் வேறுபட்டாள், என்று வினவுகின்றாய் என்பதில் பாலும் உண்ணாள் என்பது பசியட நிற்றலை வெளிக்காட்டியது. இதனை, “பாலும் உண்ணாள் என்புழி உம்மை உயர்வு சிறப்பு பாலும் உண்ணாள் எனவே ஏதும் உண்டிலள் என்றாயிற்று. ஈண்டுச் செவிலி கூற்றைத் தோழி கொண்டு கூறிய  ‘பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள்’ என்பது புணர்ச்சிக்கு நிமித்தமாகாதன போன்று காட்டி ஆராய்வார்க்குப் புணர்ச்சி நிமிர்த்தமாகத் தோன்றுகின்ற மெய்ப்பாடுகளாம். இங்ஙனமாதலை – துன்பத்துப் புலம்பல், பசியட நிற்றல், பசலை பாய்தல், என்றோதுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். இவற்றுள் பசியட நிற்றல் என்னும் ஒரு மெய்ப்பாட்டிற்கே பேராசிரியர் “அன்னாய்………….  வினவுதி” என்னும் இவ்வடிகளை எடுத்துக்காட்டினர்.” (பொ.வே.சோமசுந்தரம், அகநானூறு, பா.48 உரை) என பொ.வே. சோமசுந்தரம் கூறியுள்ளார். மேலும் இதனை, “ந.மு.வேங்கடசாமியும் தமது அகநானூற்று உரையில் எடுத்துக்காட்டியுள்ளார்.” (ந.மு.வேங்கடசாமி நாட்டார், அகநானூறு, களிற்றியானைநிறை, ப.120) எனவே இம்மெய்ப்பாடு இவ்வகநானூற்றுப் பாடலில் வெளிப்பட்டுள்ளது.

    1:1:6 பசலை பாய்தல்

    பசலை பாய்தலென்பது, “பசலை பரத்தல்” (இளம்., (பேரா.,மெய்.22). எனவும், “கூட்டம் பெறாது ஆற்றாத் தலைவியர் காதற் நோயால் தம் மாமைக்கவின் இழந்தெய்தும் நிறவேறுபாடு.” (பாரதி.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாமையான் மாமைக்கவின் மாறி மேனி பசப்பூர நிற்றல். (பாய்தல்-பரவுதல்) இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் பொருள்கொள்வர். பசியட நின்ற தலைவி உடல் வலியிழந்தமையால் மேனியில் பசலை பரவுதல் பசலை பாய்தலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1188-ஐயும்; பேராசிரியரும் குழந்தையும், குறுந்.27-ஆம் பாடலையும்; பாரதி, ஐங்.231, குறுந்.27 – ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம், ஐங்.231-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை. 

     1:1:7. உண்டியிற் குறைதல்

    உண்டியிற் குறைதலென்பது, “உணவு சுருங்குதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “பசியட நிற்றலேயன்றிச் சிறிது உண்டி யூட்டியவழிப் பண்டுபோலாது கழியவுஞ் சிறிதுண்டல்.” (பேரா.,மெய்.22). எனவும், “உற்றார் ஊட்டும் உணவை மறுப்பிற் கடுப்பரென்றஞ்சித் தன் வெறுப்பை மறைத்துட்கொண்டதுபோற் சிறிது உண்டுவைத்தல், முன் பசியட நிற்றல், தனிப்படர் மெலிவால் பசிப்பிணியுணராத கை கடந்த காதல்நிலை குறிக்கும்; இது, ஆனாக்காதலால் ஊண் ஒல்லாமையால், பண்டையளவினும் உண்டி சுருங்குதலைச்சுட்டும் “தீம்பாலூட்டினும் வேம்பினும் கைக்கும்” (இ.வி.ப.573) எனும் பழைய பாட்டடி இவ்வியல்பை விளக்குவதறிக.” (பாரதி.,மெய்.22) எனவும், “தாயார் பரிந்து உணவு ஊட்டியவழி நனி உண்ணாது கழியவும் குறைத்துண்ணல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இயல்பாக உணவு உண்ணும் அளவினின்று தன் காதலர் பிரிவால் குறைத்து உண்ணுதல் உண்டியிற் குறைதலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும்,

    பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு” (அகம்.48)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் பாலும் உண்ணாமல் இருக்கிறாள் என்பது எதையும் உண்ண மறுக்கிறாள் என்பதை வெளிக்காட்டுகிறது. இது பசியட நிற்றலின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது சிறிதுண்ணல் எனவே இம்மெய்ப்பாட்டிற்கு இது பொருந்தாது. மேலும், இம்மெய்ப்பாட்டினை விளக்கப் பேராசிரியர், பாரதி, பாலசுந்தரம் ஆகியோர்,

    தீம்பா லூட்டினும் வேம்பினுங் கைக்கும்
    வாரா
    யெனினு மார்வமொடு நோக்கு
    நின்னிற்
    சிறந்ததொன்  றிலளே
    யென்னினும்
    படாஅ  லென்னிதற் படலே.” (இ.வி.ப.௫௨௭)

    எனும் இலக்கண விளக்கப் பழம்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், இனிய பாலை ஊட்டினாலும் அதனை வேம்பினைக் காட்டினும் கசப்பு என ஒதுக்குவாள். நீ வாராது போனாலும் உன்னுடைய வருகையை விருப்பத்தோடு நோக்குவாள். என் தலைவி நின்னைக் காட்டினும் சிறந்ததொன்று இல்லையென்பவள். எனது சொல்லினும் அமைகின்றிலள் – இதனைப்படுதலெப்படி? என்பதன்வழி இம்மெய்ப்பாடு வெளிப்படாது நின்றது. இது உணவை வெறுத்தல் என்பதை உணர்த்துதலால் பசியட நிற்றலென்பதின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது உணவைச் சிறிதளவு உண்ணுதல் இங்கு இப்பழம்பாடல் உணவு உண்ணாமையே உணர்த்துகிறது.

    1:1:8 உடம்பு நனி சுருங்கல்

    உடம்புநனி சுருங்கலென்பது, “உண்ணாமை காரணமாகத் தன்னுடம்பு மிகச் சுருக்கமுறுதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “அவ்வுண்ணாமை உயிரிற் செல்லாது உடம்பிற் காட்டுதல்.” (பேரா.,மெய்.22). எனவும், “உணவில்லாமையும் தணப்பொல்லாமையும் நலிய உடல் நாளும் மெலிதல்.” (பாரதி.,மெய்.22) எனவும், “பசியட நிற்றலானும் உண்டியிற் குறைதலானும் மேனி மெலிவுறுதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். உண்ணாமை காரணமாகவும், சிறிதுண்ணலினாலும் உயிர்போகாது உடம்பு தன்னளவின்றி சுருங்குதல் உடம்புநனி சுருங்கலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1234-ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் குறுந்.290-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:9. கண்துயில் மறுத்தல்

    கண்துயில் மறுத்தலென்பது, “உறங்காமை” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “இரவும் பகலுந் துஞ்சாமை.” (பேரா., குழந்தை, இராசா, மெய்.22)., எனவும், “இது தண்டாக்காதல் கொண்டார் துயிலாமை” (பாரதி.,மெய்.22) எனவும், “உடம்பு சோர்வுற்ற காலையும் உள்ளம் உறங்க ஒருப்படாமையின் கண்துஞ்சாதிருத்தல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கண்துயில் மறுத்தலென்பது தலைவனைக் காணாததால் உண்டியிற் குறைந்து உடம்புநனி சுருங்கிய தலைவி உணவு மறுத்து உறக்கம் பெறாமல் தவித்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1168-ஐயும்; பாலசுந்தரம் குறுந்.6 ஆம் பாடலையும்; பாரதி குறள்.1179, குறுந்.6, 11, 329, 5, 365, கலி.6 ஆகிய பாடல்களையும்; பேராசிரியரும் குழந்தையும்,

    புலர்குர லேனற் புழையுடை யொருசிறை
    மலர்தார்
    மார்ப னின்றோற் கண்டோர்
    பலர்தில்
    வாழி தோழி யவரு
    ளாரிருட்
    கங்கு லணையொடு பொருந்தி
    யோர்யா
    னாகுவ தெவன்கொ
    னீர்வார்
    கண்ணொடு நெகிழ்தோ ளேனே” (அகம்.82)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தோழியே! முற்றிய கதிரையுடைய தினைப்புனத்தின் ஒருபக்கத்தில் நின்றோனாகிய பரந்த தாரையணிந்த மார்பனைக் கண்டோர் பலர்தில். அவருள் ஆரிய இருட் கங்குலிலே படுக்கையொடு பொருந்தி நீர்வடியுங் கண்ணோடு நெகிழ்ந்த தோளையுமுடையேன் யானொருத்தியேயாகுதல் என்னையோ! என்பதில் படுக்கையில் உறங்காது தவிக்கும் தலைவியின் நிலை கூறப்பட்டுள்ளமையின் இது கண்துயில் மறுத்தலானது. மேலும் இதனை,  “ ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘கண்டுயில் மறுத்தலென்பது’ இரவும் பகலுந் துஞ்சாமை; அது ‘புலர்குர லேனல் …… ……… ……………….. நெகிழ்தோளேனே’ எனவரும் எனவும் உரைத்தார் பேரா.” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை, ப.82) என ந.மு.வேங்கடசாமி தமது அகநானூற்று உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

    1:1:10. கனவொடு மயங்கல்

    கனவொடு மயங்கலென்பது, “கனவை நனவென மயங்குதல்” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “அரிதினில் துயிலெய்திய வழித் தலைமகனைக் கனவிற்கண்டு பின்னர் அவனன்மையின் மயங்கும் மயக்கம்.” (பேரா., குழந்தை, இராசா, மெய்.22), எனவும், “நயந்தோர் பிரிவால் அயர்ந்தகாதலர் கனவிற்றுணைவரைக் கண்டுகளித்து விழித்தபின் காணாது வெருளுதலாகும்.” (பாரதி.,மெய்.22) எனவும், “தண்ணுணர்வின்றி ஒருகால் துயிலெய்தியவழி நேர்ந்த கனவிடத்துக் காதலனைக் கண்டு களித்து விழித்த விழிக் காணாமையின் கலங்குதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். காதலுணர்வு மேலோங்கிய காரணத்தால் கனவில் தலைவனைக் காணும் தலைவி அவனை நேரில் காண்பதாக நினைத்து மயக்கமுறுதல் கனவொடு மயங்கலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1217-ஐயும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர், கலி.128-ஆம் பாடலையும்; பாரதி குறுந்.30, குறள்.1213 மற்றும்,

    “……………….. ……………………… ……யாழ, நின்
    கோடேந்து
    புருவமொடு குவவுநுதல் நீவி
    நறுங்கதுப்
    புளரிய நன்னர் அமையத்து
    வறுங்கை
    காட்டிய வாயல் கனவின்
    ஏற்றேக்
    கற்ற உலமரல்” (அகம்.39)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், நான் உன்னுடைய அழகிய புருவங்களையும் சிறிய நெற்றியையும், நறுமணக் கூந்தலையும் தடவ நினைத்து முயன்றேன். உன்னைத் தழுவுதல் போன்ற என் கையை வெறுங்கை ஆக்கிய பொய்யான அக்கனவை நினைத்து ஏற்பட்ட மனச் சுழற்சியை நீ அறியவில்லை. அதனால் நீ என்னை நினைத்ததும் உண்டோ? என்று ஊடல் கொள்கிறாய்! எனத் தலைவியை நோக்கி தலைவன் கூறுகின்றான். இதில் அவன் கனவை நனவாக மயங்கியமை வெளிப்பட்டுள்ளது.

     1:1:11. பொய்யாக்கோடல்

    பொய்யாக் கோடலென்பது, “தலைவன் கூற்றுத் தன்னைப் பொய்யாகக் கோடல்.” (இளம்., தாசன், குழந்தை, இராசா, மெய்.22). எனவும், “மெய்யைப் பொய்யாக் கோடல்” (பேரா.,மெய்.22). எனவும், “காதல் மிகையால் மெய்யைப் பொய்யாகத் திரித்துக்கோடல்.” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவன் தண்ணளி செய்யவும் பிரிவச்சத்தான் அதனைப் பொய்யாகக் கற்பித்துக் கொண்டு இனைதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைவன் கூறும் கூற்றையும்;  அவன் செய்யும் தண்ணளியையும் பொய்யாகக் கொள்ளுதல் பொய்யாக் கோடலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.88 – ஆம் பாடலையும்; பாரதி, குறள்.1311, கலி.88 ஆகிய பாடல்களையும்; குழந்தை கலி.68 ஆம் பாடலையும்;  பாலசுந்தரம் கலி.68, 41 ஆகிய பாடல்களையும்;  பேராசிரியர், கலி.68, 41 ஆகிய பாடல்களும்; மேலும் பேராசிரியரும் இராசாவும்,

    வருது மென்ற நாளும் பொய்த்தன
    வரியே
    ருண்கணீரு நில்லா.” (அகம்.144)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், தலைவன் வருவேனென்ற நாளும் பொய்த்தன; வரி பொருந்திய மையுண்ட கண்களில் நீரும் நிற்கின்றில எனும் செய்தி கூறப்பட்டுள்ளது. இதில் தலைவன் ஒரு காலத்தைக் குறிப்பிட்டு இக்காலத்தில் நான் திரும்பி வந்துவிடுவேன் எனக்கூறி தலைவியிடம் விடைபெற்று சென்றிருப்பான் அக்காலத்தின் வரவை இயற்கை உணர்த்திய உடனே அவன் வருவேனெனக் கூறிய காலம் வந்துவிட்டது; அவன் வரவில்லையே என அவன் கூறிய கூற்றைப் பொய்யென நினைத்தல் பொய்யாக் கோடல் ஆகும். எனவே இப்பாடலில் பொய்யாக் கோடலென்பது பொருத்தியாளப்பட்டுள்ளது. மேலும், இதனை, “பேரா. ‘பொய்யாக் கோடல்’ என்ற பகுதிக்கு உதாரணமாக “வருதுமென்ற நாளும் பொய்த்தன, வரியே ருண்கணீரு நில்லா” என்பதனைக் காட்டியுள்ளார்.” (மா. பரமசிவம், அகநானூறு, பக்.172-173) என மா.பரமசிவம் தமது உரையில் எடுத்தாண்டுள்ளார். இதனை மேலும், “புலியூர் கேசிகன்” (புலியூர் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.56,), “ந.மு.வேங்கடசாமி” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, மணிமிடை பவளம், ப.52) ஆகியோரும் தமது உரையில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

    [தொடரும்…]

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    விளாப்பாக்கம், ஆற்காடு.

     

     

    Share
  • மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 2

     

    இன்னம்பூரான்

    09 03 2018

    இந்த தொடரின் முதல் பகுதி ஒரு பீடிகையாக இருந்த போதினும், இதை என் வலைப்பூவின் உலகத்தமிழ் வாசகர்களில் பலர் படித்தனர்; நண்பர்கள் ஒரு அரிசோனன், வ.கொ. விஜயராகவன் ( பல வருடங்களுக்குப் பிறகு), சி.ஜெயபாரதன் ஆகியோர் ஆழ்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நன்றி. என்னை வீழ்த்திய இடம் சென்னை ராஸ்தாக்கள் அல்ல. அவை என்னை கொன்றிருக்கக்கூடும். நான் வாழும் இடத்திலேயே காலை உடற்பயிற்சி செய்த இடத்தில் கவனம் பாண்டிச்சேரி தமிழ் ஆய்வு பாடங்கள் மீது செல்ல, உடல் பள்ளத்தில் விழுந்து முகம் ஈயச்சொம்பு போல் நசுங்க, மூக்கு உடைந்தது; நான் தேறி வருகிறேன். இதுவே பகுத்து அறிவதற்கு உவமையாக அமைந்து விட்டதை பாருங்கள். போலி பகுத்தறிவும் கவனக்குறைவால் தான். தும்பையும் விட்டு விட்டு வாலையும் விட்டு விட்டு, காலை பிடிப்பது போல், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது போல் அமைந்து விட்டது. ஈ.வே.ரா.அவர்களின் உன்னதமான சமுதாய சீர்திருத்தங்கள் காழ்ப்புணர்ச்சியினாலும், வன்முறையினாலும், பகைமை அணுகுமுறையினாலும் பாழாயின. அவரின் சிலையை உடைப்பதினால் நன்மை ஏற்படப்போவதில்லை; அவர் பிள்ளையாரை உடைத்துக் கண்ட பயன் யாது? நான் எழுத நினைப்பது எல்லாம் அன்றாடம் மாறிவிடுகின்றன. திரு. ஒரு அரிசோனன் ‘ஒரு இனம் தெரியாத தவிப்பு’ என்றதில் ஒரு உண்மை இருக்கிறது. மதாபிமானம் மதவெறியாக அதிக முயற்சி தேவையில்லை; சுயமரியாதை பிறரை தாழ்த்த நினைக்கும்போது, பூணலையும், குடுமியையும் அறுக்க விழையும்போது, தன்னையே மாய்த்துக்கொள்கிறது; தன் வாழ்வியலை சிதைத்துக்கொள்கிறது. தமிழ்தென்றல் திரு.வி.க. அவர்களின் சகிப்புத்தன்மையை புறம் தள்ளி விடுகிறது. இது நிற்க.

    தற்காலம் அசட்டுத்தனமாக சிலை உடைப்பு தலையெடுத்த போது, அதை பிரதமர் முளையிலே கிள்ளி விட்டார் என்றாலும், பட்ட கறை பட்ட கறை தான்.

    ஆலயத்திலிருக்கும் விக்ரஹங்கள் ஆனாலும் சரி, மனிதர்களின் சிலையாயினும் சரி, ஒரு கிரேக்க பாடம் படிப்போம் இன்று. மஹாத்மா காந்தி, நேரு, ஈ.வே.ரா. ஆகியோர் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர்களின் சிலாரூபங்கள், மரணத்தையும் கடந்து, அதனால் ஏற்பட்ட இழப்பையும் கடந்து, மாண்டோர்களின் சிலைகளில் உறையும் உயிர்மை சிரஞ்சீவி என்க. ஏன்? அசோகரின் கல்வைட்டு, ராஜராஜன் கட்டிய பெரிய கோயில், எல்லா கோயில்களில் உள்ள சிற்பங்கள், அங்கிருந்து திருடப்பட்ட சிற்பங்கள், மோனா லீசாவின் ஓவியம், சலப சாத்திரத்தின் நுன்கணக்குப்படி அமைக்கப்பட்ட ஆலயங்கள் எல்லாமே வாழ்வியலின் இறவா நிலையை குறிப்பிடுகின்றன எனலாம். இன்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

    (தொடரும்)

    -#-

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  •  நான் அறிந்த சிலம்பு – 242

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்கட்டுரை காதை

    சோதிட வார்த்தை

    ஆடிமாதத்தின்
    கிருஷ்ண பட்சத்து அஷ்டமியும்
    கார்த்திகையின் குறையும் சேர்ந்த
    வெள்ளிக் கிழமையில்,
    தெளிவாக அமைந்த தீக்கதுவினாலே,
    புகழில் சிறந்த மதுரை நகரத்துடன் சேர்ந்து
    மன்னனும் கேடு வாய்க்கப் பெறுவான்
    என்ற வாக்கு உண்டானது.

    பாண்டியன் முறைபிழைத்த காரணம்

    கோவலனின் முற்பிறப்பு வரலாறு

    மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த
    கலிங்க நாட்டில்
    இனிமையான நீர் நிறைந்த
    மருதநிலம் அமைந்த சிங்கபுரத்திலும்
    மூங்கில் காடுகள் நிறைந்த கபிலபுரத்திலும்
    அரசை ஆள்கின்ற செல்வம் உடைய
    நேர்த்தியான மாலையணிந்த
    அரசனாகிய
    திருவேலினை ஏந்திய
    பெரிய கையை உடைய
    வசு என்பவனும்
    குமரன் என்பவனும்
    என்றும் அழியாத செல்வமுடைய
    சிறந்த குடியில் தோன்றிய
    இந்த இருவரும்
    தம்முள் பகையுற்றனர்.
    ஆறு காவதத்துக்கு
    இடைப்பட்ட நிலத்தில்
    ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ளப்
    போர் தொடுத்தனர்.

     

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (98)

    நிர்மலா ராகவன்

     

    உறவுகள் பலப்பட

    `கணவன்-மனைவியாகட்டும், ஒன்றாக வாழும் இரு ஆண்களாகட்டும், அவர்களது உறவைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. பத்து நிமிடங்களுக்குள் அவர்களுக்குள் சண்டை வருகிறதா என்று பாருங்கள்!’ ஓர் உளவியல் நிபுணர் எனக்குத் தந்த குறிப்பு.

    இரு மனிதர்கள் நெருக்கமாக வாழ்ந்தால், சிறு சண்டை பூசல்களைத் தவிர்க்க முடியாது. இதனால்தான் ஓரிரு தலைமுறைகளுக்குமுன் தம்பதிகளைப் பிரித்து வைப்பார்கள் — ஆடி மாதம், கர்ப்பமாகி ஐந்தாம் மாதம் என்று ஏதேதோ சாக்கில்.

    சில தினங்களோ, மாதங்களோ அப்படிப் பிரிந்திருந்து, பிறகு புகுந்த வீட்டுக்கே ஒரு பெண் திரும்பி வரும்போது, மறைந்துபோன ஈர்ப்பு தம்பதிகளுக்குள் மீண்டும் தலைதூக்கும். சில காலமாவது நிலைத்திருக்கும்.

    பத்து நாட்களுக்குள் மீண்டும் ஏதாவது அபிப்ராய பேதம் வரலாம்.

    `குழந்தைகள்மேல் உனக்கு இருக்கிற அக்கறை எப்பவும் என்மேல் கிடையாது!’ என்று சாடுவான் கணவன்.

    இந்த வாக்கியத்தில் `எப்பவும்’ என்று இருப்பதைத் தவிர்த்தால் சண்டை பெரிதாக வளராது.

    `நீங்கள் மட்டுமென்ன? முன்பொருமுறை..,’ என்று மனைவி எதிர்த்து வாதாட இது வழி செய்துவிடுகிறது.

    இப்படி இருவரும் மற்றவரது குறைகளையே, அல்லது தமக்குப் பிடிக்காதவற்றையே, பெரிதுபண்ணிக் கொண்டிருந்தால், இல்வாழ்க்கையில் அமைதி ஏது?

    பணம் = அதிகாரம்

    குடும்பத்தில் வரவு செலவைக் கவனித்துக்கொள்ளும்வரைதான் தன் அதிகாரம் நிலைத்திருக்கும் என்று கணக்குப்போடுவார்கள் சிலர். துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவன் பத்து பேரைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டு வருவதில்லையா, அது போல!

    கதை

    மனைவி சம்பாதிப்பதை அப்படியே வாங்கிக்கொண்டுவிடுவான் அகிலன். அவள் கொடுக்க மறுத்தால், அவள் நடத்தையைக் கேவலமாகப் பேசுவான். அது பொறுக்காது, `கேவலம், பணம்தானே! தொலையட்டும்!’ என்று கொடுத்துவிடுவாள் தாராவும்.

    அகிலனின் அதிகாரத்தில், ஓயாத கட்டுப்பாட்டில், தாராவின் மன இறுக்கம் அதிகரித்தது.

    `என்னுடன் படித்தவன் என்மேல் உயிராக இருந்தான். அவன் கேட்டபோது, அவனையே கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டும்!’ என்று அவள் யோசனை போயிற்று.

    கணவன்மேல் அதிருப்தி, காழ்ப்பு இருக்கலாம். ஆனாலும், இத்தகைய எண்ணத்தால் என்ன பயன்? குழப்பம்தான் விளையும். காதலனாக இருப்பவன் கணவனானபின்பும் அப்படியே இருப்பான் என்று சொல்வதற்கில்லை. அதோடு, அவள்மேலும் குறை இருந்ததே! எதற்காக அவ்வளவு தூரம் விட்டுக்கொடுத்துப்போனாள்?

    விவாகரத்து செய்யலாமா என்று அடுத்த யோசனை வந்தது. புதிய பாதையில் இன்னும் என்னென்ன இடர்கள் இருக்குமோ, இருக்கிறதையே செப்பனிட்டுக்கொள்ளலாம் என்று தோன்றிப்போயிற்று. கணவனை மாற்ற முடியாவிட்டாலும், நாம் மாறலாமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது தாராவிற்கு.

    `நான் சம்பாதிப்பதை உங்களுக்கு எதற்குக் கொடுக்க வேண்டும்?’ என்று திமிறினாள்.

    இவளுடன் சண்டை போட்டு வெல்ல முடியாது என்று புரிந்துகொண்டான் அகிலன். `நமக்குள் என் பணம், உன் பணம்னு என்னம்மா வித்தியாசம்?’ என்றான் குழைவாக. அதிகாரம் நிலைத்திருக்க வேண்டுமானால் கட்டுப்படுத்தும் முறைகளை மாற்ற வேண்டும்.

    தாரா இணங்கவில்லை. மீண்டும் வாய்ச்சண்டை. இறுதியில், ஒரு மாதத்தில் மொத்த செலவு எவ்வளவு என்று உத்தேசமாகக் கணக்கிட்டு, அதை இருவருமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவள் ஓர் உபாயம் கூறினாள்.

    அகிலனின் தந்தை மட்டுமே சம்பாதித்தபோது, அவரது கட்டுப்பாட்டில் குடும்பம் இருந்திருக்கலாம். ஆனால், காலம் மாற, மாற, அதற்கேற்ப மாறினால்தான் அமைதியோ, மகிழ்ச்சியோ தழைக்கும் என்றவரைக்கும் அவனுக்குப் புரிந்தது. புதிய ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டான் – அரைமனதாகத்தான்!

    அதன்பின், இருவருக்குமே பொருளாதார சுதந்திரம் இருந்தது. மனைவியிடம் தன் தவற்றை ஒத்துக்கொண்டான்: “கணவனுக்கு மனைவி அடங்கி நடக்க வேண்டும், அவன் சொல்வதையெல்லாம் கேட்பவள்தான் நல்ல மனைவி என்று நினைத்திருந்தேன்!”

    (1981- ல், பிரிட்டிஷ் இளவரசி டயானா தன் கல்யாணத்தின்போது, `கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன்,’ என்று சபதம் செய்ய மறுத்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, அவளுடைய துணிச்சல் பெரும் புரட்சியாகக் கருதப்பட்டது).

    உடலுறவும் சோர்வும்

    உடல் சோர்வடைந்திருக்கும்போது, வேறு உறவில் எப்படி நாட்டம் போகும்? சீக்கிரமே படுத்துத் தூங்கிவிடுவது தாராவின் வழக்கமாக இருந்தது.

    `ஏதாவது நடந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!’ என்று கூறிப்பார்த்தான் அகிலன்.

    `வெளியிலும் வேலை, வீட்டிலும் வேலை. எப்பவும் களைப்பாக இருக்கிறது!’ என்று தாரா அலுத்துக்கொண்டாள். கனமான வேலைகள் அவனுடையது, சமையல் அவள் பொறுப்பில் என்று பிரித்துக்கொண்டார்கள்.

    `வீட்டு வேலை மாறுதல் இல்லாமல், ஒரேமாதிரி இருக்கிறதே! இவ்வளவு சலிப்பைத் தருவதாக இருக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது!’ என்று ஆச்சரியப்பட்ட அகிலன் மனைவியைப் புரிந்துகொண்டான். `ஓயாமல் என்ன வேலை! இன்று வெளியில் போகலாம், வா!’

    வாரத்தில் ஒரு நாளாவது அவர்கள் தனித்து வெளியில் போனதால், நெருக்கம் அதிகரித்தது.

    நண்பர்களுடனேயே காலத்தைக் கழிப்பவர்கள், முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ளும் மனைவியிடம், `என் முகத்தையே பார்த்துப் பார்த்து உனக்குப் போரடிக்கவில்லை?’ என்று விளையாட்டுப்போல் கேட்பார்கள்.

    ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருப்பதால் ஏற்படும் சலிப்பைப் போக்க இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். புதிய இடங்களுக்குப் பயணம் செய்தால், மனம் புத்துணர்ச்சி அடையுமே!

    பேசும்போது கவனி

    வாய் திறந்து பழிக்காவிட்டாலும், சில செயல்கள் தாம்பத்திய உறவில் ஏமாற்றத்தை விளைவிக்கின்றன.

    மனைவி ஏதாவது சொல்லும்போது, நாளேடு, கைத்தொலைபேசி என்று ஏதாவது சாதனத்தில் மூழ்கி, `சொல்லு. காதில் விழுகிறது!’ என்பான் கணவன். இருந்தாலும், ஒருவர் பேசும்போது, கண்களைக் கவனித்துக் கேட்பது போலாகுமா?

    ஓருயிர், ஈருடல்?

    இது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாது. ஒவ்வொருக்கும் தனிப்பட்ட இலக்கு இருந்தால்தான் அவருக்கு நிறைவாக இருக்கும். இல்லாவிட்டால், எதையோ இழந்த உணர்வைத் தவிர்க்க முடியாது.

    இதற்காக, ஒரே குடும்பத்தில் இருக்கும் இருவர் வெவ்வேறு திசைகளில் பயணிக்க வேண்டுவது அவசியமில்லை. ஒருவரது தோற்றத்திலும் செய்கையிலும் மற்றவர் சிறிதளவு ஆர்வம் காட்டினாலே போதும்.

    இப்போது வேண்டாம்!

    `நான் சொல்வதை நீ அப்படியே கடைப்பிடித்து நடக்க வேண்டும்!’ என்று கணவர் சொல்வாரோ என்று பயந்து, படித்த பெண்கள் தற்காலத்தில் திருமணம் என்றாலே அஞ்சுகிறார்கள். முப்பது வயதுக்குமேல்தான் மணமுடிக்க இசைகிறார்கள் — நிறைய நிபந்தனைகளுடன். அதில் முக்கியமானது – கணவரது பெற்றோர் அவர்களுடன் சேர்ந்து இருக்கக்கூடாது.

    ஏன் தனிக்குடித்தனம்?

    கூட்டுக்குடும்பத்தில், `நான் செய்த தவற்றை நீங்களும் செய்துவிடக்கூடாது!’ என்று `நல்ல மனதுடன்,’ எந்தச் சிறிய காரியத்தையும் எப்படிச் செய்வது என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருப்பார் ஒருவர். வயதும் அனுபவமும் இருப்பதாலேயே ஒருவர் தலைவராக முடியாது.

    அதைக் கேட்டு நடப்பவருக்கு ஆத்திரமும் குழப்பமும்தான் எழும். நாளடைவில் சுயமாக எதையும் செய்யும் ஆர்வமும் திறனும் அற்றுப்போகலாம்.

    அவரவர் காரியத்தை முடிந்த அளவுக்குச் சுயமாகச் செய்தால்தான் நிறைவாக இருக்கும். உதவி தேவையென்றால் மட்டும் பிறரை நாடலாம்.

    கல்யாணம் ஆனதால் மட்டும் ஒருவர் தன் தனிமனித சுதந்திரத்தை இழந்துவிட வேண்டுவதில்லை. அவ்வுணர்வு அளவு மீறினால்தான் பிரச்னை.

    Share