இந்த வார வல்லமையாளர் (265)
இவ்வார வல்லமையாளராக தென்னிந்திய திரைத்துறை மையம் அமைப்பை தேர்ந்தெடுக்கிறோம்.
இந்த அமைப்பு புதியதாக இளம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் பெண்களால் துவக்கபட்ட அமைப்பாகும். சென்னையில் சமீபத்தில் இயங்க துவங்கியுள்ள இந்த நிறுவனம் திரைத்துறை பெண்களுக்கு குரல் கொடுத்து செய்திகளில் இடம் பிடித்தது. இதன் தலைவி வைஷாலி சுப்பிரமணியன்
பெண்கள் பாலியல் ரீதியாக பணியிடங்களில் துன்புறுத்தப்படும் விகிதம் மிக அதிகம் எனில் திரைத்துறையில் இது மிக அதிகம் எனும் குற்ற்சாட்டு உண்டு. செக்ஸ் டார்ச்சர் காரணமாக நடிப்பை விட்டுவிட்டு ஓடிய நடிகையர் ஏராளம். அதை எதிர்த்து குரல் கொடுக்கும் அமைப்பாக இது உருவெடுத்துள்ளதாக வைஷாலி கூறுகிறார்
நடிகையர் என மட்டும் இன்றி சினிமாவில் நடிக்கும் துணைநடிகையர், பூக்களை கட்டி சினிமா கம்பனிக்கு விற்கும் பாட்டி, சினிமா கம்பனியில் பாத்திரம் கழுவும் பெண்கள் என அனைத்து மட்ட பெண்களுக்கும் குரல் கொடுக்கவும், நியாயமான ஊதியம் வழங்க கோரியும் போராட இருப்பதாக கூறுகின்றனர் இவர்கள்.
பல படப்பிடிப்பு மையங்களில் நடிகையருக்கு போதுமான கழிப்பிடம், பாதுகாப்பு ஆகியவையே இல்லை என்றும் இரவு நேர ஷூட்டிங் முடிந்து பாதுகாப்பாக திரும்புவதே கடினம் என்றும் சினிமா படம் எடுக்கையில் உடல் உபாதை, மாதவிடாய், பேறுகால சிரமங்களுக்கு கூட எந்த தீர்வும் இல்லை என ஆதங்கபடுகின்றனர்
பல சினிமா பிரபலங்கள் இவர்களின் இம்முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். “சினிமா நடிகையர் மேல் இனி யாரும் கைவைக்க முடியாது” எனும் போர்க்குரலை எழுப்பி பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வரும் இவ்வமைப்பினரை பாராட்டி இதுபோன்ற விழிப்புணர்வு அனைத்து துறைகளிலும் வரவேண்டும் எனும் நோக்கில் இவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )