Blog

  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (7)

    லியோ டால்ஸ்டாய்  (Leo Tolstoy) 

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    சைமன், மைக்கேலிடம் அந்தச் செல்வந்தர் கொடுத்த விலையுயர்ந்த தோலைக் கொடுத்துக் கவனமாகப் பூட்ஸ்கள் தைக்கச் சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையில் ஆழ்ந்தான். மைக்கேல், தோலை மேசையில் விரித்து வெட்டத் தொடங்கினான். மெட்ரீனா, மைக்கேல் எப்படிப் பூட்ஸ்க்கு வெட்டுகிறான் என்று பார்க்க விரும்பி மேசை அருகில் வந்தாள். அவளுக்கும் பூட்ஸ், செருப்புகள் தைப்பது பற்றிக் கொஞ்சம் தெரியும். மைக்கேல், தோலைப் பூட்ஸ்க்கு வெட்டாமல் வேறு விதமாக வெட்டுவதைப் பார்த்து திகிலடைந்தாள். அவனுக்குத் தன்னைவிட அதிகம் தெரியுமென்று நினைத்து ஒன்றும் கேட்கவில்லை. சற்று நேரம் கழித்துத் திரும்பவும் வந்த போது அவன் பூட்ஸ்க்குப் பதில் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தான். மெட்ரீனாவின் மனதில் கவலை குடி கொண்ட போதும் மைக்கேலிடம் ஒன்றும் கேட்கவில்லை.

    இரவு சைமன் தன்னுடைய வேலையை முடித்து விட்டு மைக்கேல் முடித்து வைத்திருந்தை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தான். பூட்ஸ்களுக்குப் பதில் ஒரு சோடி மிருதுவான செருப்புகள்!! “மைக்கேல் இது வரையிலும் ஒரு தவறும் செய்ததில்லையே? அந்தச் செல்வந்தர் பூட்ஸ்கள் கேட்டிருந்தார். மைக்கேலோ மிருதுவான செருப்புகள் தைத்திருக்கிறான், அந்தச் செல்வந்தரிடம் நான் என்ன சொல்வேன்? இந்த விலையுர்ந்த தோலை என்னால் வாங்கிக் கொடுக்க முடியாதே” என்று கலங்கினான்.
    சைமன், மைக்கேலை நோக்கி, ”ஏன் இப்படிச் செய்தாய்?” அவர் பூட்ஸ்கள் கேட்டிருந்தார். நீ மிருதுவான செருப்புகள் தைத்திருக்கிறாய், நான் அழிந்து விடப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த போது யாரோ கதவைப் பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அவர்கள் கதவைத் திறந்த போது, காலையில் அந்தச் செல்வந்தருடன் வந்த பணியாள் குதிரையிலிருந்து இறங்கி நின்று கொண்டிருந்தான். சைமன் அவனை வீட்டிற்குள் அழைத்து “உனக்கு என்ன உதவி வேண்டும்?” என்று கேட்டான்.

    அதற்கு அந்தப் பணியாள், “என்னுடைய எசமானி, அந்தப் பூட்ஸ்கள் விஷயமாக இங்கு என்னை அனுப்பினாள்” என்றான்.

    “பூட்ஸ்களுக்கு என்ன?’

    “எசமானுக்குப் பூட்ஸ்கள் இனித் தேவையில்லை, அவர் இறந்துவிட்டார்”..
    “எப்படி நடந்தது?”.

    “நாங்கள் வீடு சென்றவுடன் பணியாட்கள் அவர் வண்டியிலிருந்து இறங்கக் கதவைத் திறந்த போது, அவர் இறந்து போயிருந்தார். அவருடைய விரைத்துப் போன சடலத்தை வண்டியிலிருந்து இறக்க மிகவும் கடினமாக இருந்தது. என் எசமானி, என்னிடம் இனி பூட்ஸ்கள் தேவையில்லை. சடலத்திற்கு அணிவிக்க மிருதுவான செருப்புகள் வேண்டும், எவ்வளவு நேரமானாலும் சரி, காத்திருந்து தைத்த பின் வாங்கிக் கொண்டு வா என்று கூறி அனுப்பினாள்” என்றான்.

    மைக்கேல் செருப்புகளையும், மீதியிருந்த தோலையும் சேர்த்துக் கட்டி அந்தப் பணியாளிடம் கொடுத்தான். அவனும் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றான்.

    தொடரும்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    பசு உவாச….!
    ——————————–

    171030 Vatsalyam watercolour A4
    171030 Vatsalyam watercolour A4

    எண்ணம் ஒடுங்கிட ஏகாந்தம் கூடிட
    கண்ணன் கருநீலக் காயாம்பூ -வண்ணன்
    நினைப்பும் நாலுகாலன் நானும் கலக்க,
    கனைப்பை மறந்தேனே காண்….!

     
    ”மாலோல பாகவதர், மாடை மடியிட்டு
    தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -ஏலேலோ
    வாழ்க்கையில் சிக்கி வழிதவறும் எங்களை
    ஊழ்கையில் சிக்கா(து) உதவு”….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    வசன வெண்பா….!
    —————————————-

    unnamed

    ”ஆ’’காட்டு கண்ணா ,அதுயிருக்கு கொட்டிலில்!
    நா(ன்)கேட்டேன் நின்வாயை நந்தகுமார் -’’மா’’கேட்டாள்,
    மண்ணத்தின் றாயாமே மாதவன்(கண்ணனின் நண்பன்) சொல்லிவிட்டான்
    கண்ணைப்பார் பின்னர்வாய்க் குள்!’’….கிரேசி மோகன்….!

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 9

    அவ்வை மகள்

    வேட்கை இருந்தால் மட்டுமே உலகை மாற்ற முடியும்

    இறையியல்-சிந்தனைகள்

    ‘People with Passion can change the world for the better’ என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் பொன்மொழி. உலகை இன்னும் சிறப்புறடைத்ததாய் மாற்ற வேண்டும் என்கிற வேட்கை ஸ்டீவ் ஜாப்ஸிற்கும் வள்ளலாருக்கு ஒன்று போல் இருந்தது. இவ்வகையில் இவர்களிருவரையும் ஒப்பிட்டு நோக்கவேண்டுமெனில், உலகை மாற்றவேண்டும் என இருவரும் ஏன் வேட்கை கொண்டனர் என்பதிலிருந்து துவங்குவது நல்லது.

    19-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய சமூக-சமய சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் வள்ளலார். ஆன்மிகம் ஒரு தலையாய இக்கட்டில் இருந்த காலகட்டத்தில், ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே அங்கு, சமூகத்தில் நிலவும் தாழ்வுகளைக் களையமுடியும் என்பதான வேட்கை கொண்டவர் வள்ளலார். எனவே தனது ஆன்மீகப்பாண்டித்தியத்தை மிகச் சரியாகப் பதப்படுத்தி – அதனைப் பயன்படுத்தி – சமுதாய சீர்திருத்தங்களை சமய உணர்வு வாயிலாக விளைத்தவர் அவர்.

    21-ம் நூற்றாண்டில் உலகில் தோன்றிய தொழில்நுட்பச் சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். தொழில் நுட்பம் ஒரு தலையாய இக்கட்டில் இருந்த காலகட்டத்தில், தொழில் நுட்ப விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே அங்கு, சமூகத்தில் நிலவும் தாழ்வுகளைக் களையமுடியும் என்பதான வேட்கை கொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். எனவே தனது தொழில்நுட்பப் பாண்டித்தியத்தை மிகச் சரியாகப் பதப்படுத்தி – அதனைப் பயன்படுத்தி – சமுதாய சீர்திருத்தங்களை தொழில்நுட்ப உணர்வு வாயிலாக விளைத்தவர் அவர்.

    ஆக, சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் இவர்கள் பார்வையில் பட்டதன் காரணம் – இவர்களது இயக்கம் எழுந்தது என்றே கொள்ளலாம். ஆனால், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்பவை பூமியின் நிலப்பரப்பிலே எங்கோ ஓரிடத்திலே ஏற்படும் சிறு பள்ளமோ சிறு மேடோ அல்ல. சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் பரிமாணம் வெகுபெரியது. நீள -அகல-ஆழ அளவீடுகள் கொண்டு பார்த்தால், பூகோளத்தைத் தீண்டி, புலம் பல கடந்து, புலன்களைத் தழுவி நிற்கும் மனப்பிரதேசங்களினூடே மனிதர்கள் பற்றி நிற்கும் நம்பிக்கைகளுக்குள், அவர்களது பழக்கவழக்கங்களுக்குள், அவர்தம் தலைமுறைக் கடப்பாடுகளுக்குள், பூடகமாகவும் உறுதியாகவும் விளைந்தெழுந்து பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பவையே ஏற்றத் தாழ்வுகள். இவை ஒரு நாளில் உருவாவதில்லை ஆனால் ஒவ்வொரு நாளும் முளைப்பவை – வளர்பவை-வேர்விடுபவை. எனவே, நேற்றைய விருட்சத்தின் ரூபம் இன்று – மெருகேறுகிறது – பலப்படுகிறது, வலிதாய்ப் பொலிகிறது; நாளை இன்னமும் பெரிதாய் திடமாய் அது வேரூன்றும் எனும் கதையாய், பரிணாம வளர்ச்சி காண்பவை ஏற்றத் தாழ்வுகள்.

    மேலும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சும்மாவேனும் எவரும் ஓரிரவில் ஏற்பட்டுவிடமுடியாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த வலிதான விசை வேண்டும்; நீண்ட கால அவகாசம் வேண்டும்; பலபேர் வேண்டும். எனவே மிகப்பெரிதாக பிரயத்தனம் செய்ய வேண்டும். இவ்வாறான தன்மையுடன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நிற்கிற நிலையில், அவை பலதருணங்களில், பலகாரணங்களாலும் விரும்பப்படுபவையாக – ஏற்றுக்கொள்ளப்படுபவையாக, வசதிகளை, சலுகைகளை அளிப்பவையாக உள்ளன என்பதால் அவை அவ்வப்போது பிரியமாகவே ஏற்படுத்தப்படுபவை – ஏற்படுத்திக் கொள்ளப்படுபவை என்பதும் இங்கே உணரப்படவேண்டும்.

    ஆக, சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் உள்ள சவால்கள் கொஞ்சம் நஞ்சமில்லை.

    இந்நிலையில், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நிரவிச் சமன்படுத்த எவரேனும் முனைகிறார் என்றால் – முதலில் அவர் சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் தன்மையை உள்ளது உள்ளவாறு முற்றும் உணர்ந்த, அசாத்தியமான அனுபவம் கொண்டவராக இருக்கவேண்டும். மேலும், அவர், ஒரு தீர்க்கதரிசியாக இருக்கவேண்டும்: தான் மேற்கொள்ளப்போகும் அணுகுமுறைகளின் ஏற்றத்தாழ்வுகளையும், அவை சந்திக்கப்போகும் சவால்களையும், பல்வேறு நிலைகளில் நின்று, பல்வேறு கோணங்களில் பார்த்துப் பழகும் திறமையும் பொறுமையும் கொண்டவராக இருக்கவேண்டும். அடுத்து, அவர், தமது அணுகுமுறைகளைத் தகவமைப்பு செய்து, காலப் பகிர்வீடு செய்து, தளம் தளமாய் தரநிர்ணயம் செய்யவேண்டும். இதற்கு வேகம் வேண்டும்; விவேகமும் வேண்டும் – இவை இரண்டினையும் எவ்வாறு எவ்வளவீட்டில், எப்போது கலப்பது என்பதும் அந்தக் கலவையை எப்போது, எவ்வாறு, எத்தனை வேகத்தில், எங்கு உபயோகிப்பது என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் அளவெடுத்து இயங்கும்போதும் அவருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை, அவதூறுகளை அவர் தாங்கியவாறு, எத்தனைக்காலம் தாமதம் ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் அளப்பரிய மனோதிடமும், காலம் கனியக் காக்கும் பொறுமையும் கொண்டவராகவும் அவர் இருக்க வேண்டும். இது மிகப்பெரிய கலை – மிகப்பெரிய திறன் – மிகப்பெரிய ஆளுமை. இக்கலையும், திறனும், ஆளுமையும் மிகச்சரியான விகிதாரச்சத்திலே வாய்க்கப்பெற்றவர்கள் மட்டுமே சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நிரவு செய்யும் மாபெரும் சவாலை எதிர்கொள்ளும் முயற்சியில் இறங்கும் இலாயக்கு பெறுகிறார்கள். மற்றவர்கள் எண்ண நிலையிலயோ, முனைப்பிலேயோ, அல்லது வழியிலோ மாய்ந்துபோகிறார்கள்.

    இருபதாம் நூற்றாண்டில் உதித்த மிகப்பெரும் உலகதத்தலைவர்களுள் மகாத்மா காந்தி எவரும் அடையமுடியாத மிகமிக உயர்நிலையில் இருத்திவைத்துப் போற்றப்படுகிறார் என்றால், அதற்கு அவர் சாதித்துக் காட்டிய இந்திய விடுதலை தான் காரணமா என்றால், அது இல்லை. அவர் உண்மையில் சாதித்தது ஆன்ம வெற்றி மட்டுமே. ஆன்ம வெற்றி என்பது என்ன என்றால், எவரொருவது அணுகுமுறை, பிறரின், பார்வையை, உள்ளத்தை, அறிவைத் தாண்டி, அவரது ஆன்மாவைத் தீண்டுகிறதோ அது மட்டுமே ஆன்ம வெற்றி. காந்தி, தமது அணுகுமுறையினால் உலகில் ஒவ்வொரு ஆன்மாவையும் தீண்டினார்.

    அன்று, சிகாகோ நகரத்து பன்னாட்டு மத மாநாட்டில், விவேகானந்தர் கண்டது ஆன்ம வெற்றி, வள்ளுவன் கண்டது ஆன்ம வெற்றி, கட்டபொம்மன் கண்டது ஆன்ம வெற்றி, கண்ணகி கண்டது ஆன்ம வெற்றி. சமகாலத்தவரும், பிற்காலத்தவரும், முற்காலத்தவரும் என எவருமே காட்டியிராத அணுகுமுறையை இவர்கள், எவ்வித இலாப நோக்குமின்றி, விளம்பரத் தேடலுமின்றி, சுயம்புவாய், மிகக் கடப்பாட்டுடன் காட்டிய அந்த நொடியில் தான் மற்றவர்க்கு ஆன்ம வெற்றி தந்தார்கள். மற்றவர்க்கு இவர்கள் ஏற்படுத்தித் தந்த ஆன்ம வெற்றியினால் இவர்களை, உலகம், பெற்றியாளர்களாகக் கொண்டாடுகின்றது.

    வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவருமே ஆன்மவெற்றி கண்ட பெற்றியாளர்களே. நான் ஏற்கனவே கூறியது போல, பிற்காலத்தவரும், முற்காலத்தவரும், தற்காலத்தவரும் என எவருமே காட்டியிராத அணுகுமுறையை இவர்கள் காட்டிப் போயிருக்கிறார்கள். வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் என்பது மிக மிக மிக கவனத்துடன் எடுத்தாளப்பட்ட வாசகம், மொழியளவிலாகட்டும் பொருளளவிலாகட்டும் சமரச சன்மார்க்கம் என்பது சட்டென்று, விரைவாய், புலன்களைக் கடந்து, உள்ளத்தையும், அறிவையும் கடந்து கடைக்கோடி மனிதனது ஆன்மாவை ஆலிங்கனம் செய்யும் அற்புதமான ஆனால் எளிதான சித்தாந்தம்.

    சமரசம் (Harmony) என்பது வசீகர வார்த்தை – இதனை பரம ஆமோதிப்பு எனலாம்; மார்க்கம் என்பது “வழி” (pathways) என்பதாகிறது. சமரச சன்மார்க்கம் என்பது – “உனக்குள்ள வழிகளுக்கெல்லாம் – உனக்கு வேண்டும் வழிகளுக்கெல்லாம் இங்கே வழி உண்டு” என்பதான அழைப்பை அளிக்கும் அற்புத வாசகம். அப்படியென்றால், “நீ இதுகாறும் எவ்வழியில் சென்றிருப்பினும், நீ இந்த சமரச சன்மார்க்கம் வந்தாயென்றால், நீ உன்வழியிலேயே செல்லலாம் – அதுமட்டுமல்ல நீ உன்வழியே சென்று, உனது விருப்பம்போல் நன்மை சேர்க்கும் இன்னபிற புதுவழிகளையும் இங்கே காணலாம்!” என உற்சாகத்துடன் வற்புறுத்தலின்றி, சமாதானமாக, அனைவரையும் அழைக்கும் சீரிய குரலது. உரக்க வேண்டுபவர்க்கு உரத்ததாயும், சன்னமாய் வேண்டுவோர்க்கு சன்னமாயும் ஒலிக்கும் ஒலித்தகவமைப்பை சமரச சன்மார்க்கம் எனும் வாசகத்தில் காண்கிறோம். இந்த வாசகத்தைத் தேர்ந்தெடுக்க வள்ளலார் பெரிதும் பெரிதும் எண்ணியிருக்கவேண்டும். அன்றைய காலகட்டத்தில் நிரவிப்பரவியிருந்தவை உள்நாட்டுச் சமயங்கள் மட்டுமல்ல; இறக்குமதியாகியிருந்த பிறநாட்டு சமயங்களும் தாம். பிறர் ஆளுகைக்கு உட்பட்டதால் நமக்குள் அன்று பிளவு சக்திகள் ஏராளமாகவே விளைக்கப்பட்டிருந்தன. இவையாவும் ஒன்றுக்கொன்று எதிரணிக்கொள்ளும் அபாயம் அன்று நிரம்பியிருந்ததும், மக்களின் ஏற்றத்தாழ்வுகளைப் பயன்படுத்திப் பிறநாட்டுச் சமயங்கள் மண்ணின் மூலச்சமயங்களிலிருந்து மக்களை இடமாற்றம் செய்துகொள்வதுமாயும் இருந்த நிலைமையையும் வள்ளலார் உற்று நோக்கியிருக்கிறார்.

    சாதிகள் எனும் மனிதகுல வகைப்பாடு ஏற்புடையது அல்ல என்றாலும் வெவ்வேறு சாதியினர் அன்று பரஸ்பரம் நல்லிணக்கத்துடன் ஒருங்கிணைந்தே வாழ்ந்தனர் என்ற நிலையில், மாபெரும் சதி நடந்தது. சாதியை அயலாரும் அயலார் தூண்டுதலில் நம்மாருமே ருசுப்படுத்தி – பூதாகரமாக்கி அமைதியைக் குலைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் கிளம்பலாயின. அதனை வள்ளலார் கவனித்தவரானார். இவற்றில், ஊரிரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதாக, அந்நியர் மதத்தாலும் ஆட்சியாலும் காலூறும் சாதுரியத்தையும் அவர் காணாதவரில்லை. அன்றைய காலகட்டத்தில், ஜான் ஸ்டூவர்ட் எழுதிய பிரித்தானிய இந்தியாவின் வரலாறு (History of British India) என்னும் நூல் 1817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. இப்புத்தகத்தில் இந்தியர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் எத்தனை இழிவாகப் பேசமுடியுமா அத்தனை இழிவாகப் பேசப்பட்டிருக்கிறது. நமது பண்பாடு காட்டுமிராண்டித்தனமானது, எதிர்மறையானது, நாமனைவரும் மோசமானவர்கள் என்று இந்நூல் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது. இந்நூல் ஏன் எழுதப்பட்டது என்றால் ஆங்கில அதிகாரிகள் இந்தியா வருவதற்கு முன் அவர்களுக்குப் பயிற்சி தருவதற்காகத்தான். இது ஒரு உளவியல் யுக்தி – ஆங்கிலேய அதிகாரிகளின் உளப்பாங்கை முன்கூட்டியே இந்தியருக்கு எதிராய் மாற்ற இப்புத்தகத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். இந்திய மக்களுக்கு சதிசெய்யும் – வன்முறை செய்யும் – அதிகாரம் ஓச்சும் படியாக அதிகாரிகளின் உளப்பாங்கை முன்கூட்டியே தயார்நிலைக்குக்குக் கொண்டுவரும் Psychological Conditioning இது. ஆக, இந்தியா வந்திறங்கும் முன், ஆங்கிலேய அதிகாரிகள் மேற்கொள்ளும் முன்பயிற்சியில் History of British India என்பது ஒரு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டது – அதனை அவர்கள் கற்றுத்தேறவேண்டும் – இப்புத்தகத்தின் சார்பாக இந்தியனை எப்படி ஆளுவது – கையாளுவது – என்பதான யுக்திகள் – அதிகாரிகளின் முற்பயிற்சியிலே வடிவமைக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும் – அந்த யுக்திகளில் அவர்கள் ஜெயிக்கவேண்டும் என்பதான ஏற்பாடு இது.

    “Divide and Rule” எனும் விரிவான மகாயுக்தி ஆங்கிலேய அதிகாரிகளின் முற்பயிற்சியின் முக்கிய அங்கம். Divide and Rule என்பதன் பொருள் என்னவென்றால், ” the policy of maintaining control over one’s subordinates or subjects by encouraging dissent between them.” அதாவது, தாம் ஆளத்துடிக்கும் – அடிமைப்படுத்தத் துடிக்கும் ஒரு மக்கள் கூட்டத்திற்குள் பிரிவினை பேதங்கள் வளர்த்து அவர்களிடையே ஒற்றுமை உருவாகாதவாறு வேற்றுமையையும் வெறுப்பையும் உருவாக்குவது” என்பது. இவ்வாறான தந்திரம், ஆங்கிலேயனது கால்பதிப்பிற்கும், வேரூன்றலுக்கும் பெரிதும் உறுதுணைபுரியும் என்பதுதான் ”Divide and Rule” ன் பிரதான உள்நோக்கம். மக்களுக்கிடையே பிரிவினை செய்வது எப்போது சுலபமாகும் என்றால் மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக ஊதிவிடுவதால் மட்டுமே. அதற்கு அவர்கள் தோதாக எடுத்துக்கொண்டது நமக்குள்ளே இருந்துவந்திருந்த பன்முகத்தன்மை ( “diversity” ). நமது நம்பிக்கைகளிலும் – பழக்கவழக்கங்களிலும் – நமக்குள்ளே பல ஒற்றுமைகள் இருந்தபோதும் பல மாறுபாடுகளும் இருந்தன. இந்த மாறுபாடுகள் எல்லாம் வேறுபாடுகள் அல்ல. அவை ஒன்றின் பலபரிமாணங்கள். ஒன்றின் எல்லாப் பரிமாணங்களையும் “நம்ம அஞ்சு விரலும் என்ன ஒண்ணுபோலயா இருக்குது?” என்றவாறு வெறுப்பின்றி அனைவரும் சுலபமாய் ஏற்றுக்கொண்டு ஒத்து வாழ்ந்த அமைதி உலகத்தில் தான் நாம் இருந்துவந்தோம்.

    ஆனால் அப்போதோ நம் மக்களை மிகமோசமாகப் பிரிவினை செய்ய நமது மதங்களை – சாதிவகைப்பாட்டை – ஊதிக்கிளப்பும் களவு நெஞ்சத்துடன் ஆங்கிலேயர்கள் உள்ளேவந்தனர். சாதுரியமும், கள்ள நெஞ்சும் கொண்டவாறு தயார் நிலையில் வந்த அவர்கள் நம் விஷயங்களை நன்கு அறிந்தவர் தந்திரமொழிகளில் நம்மைப் பற்றி நம்மிடமே பேசலாயினர். நம்மைப் பற்றிய விஷயங்கள் ஒருதலைப்பட்சமாக, கபடமாகவே நமக்கே அறிமுகப்படுத்தப்பட்டது. நம் மதங்களைப் பற்றி மோசமான எண்ணமும், நாம் பிற்போக்கு வாழ்க்கை வாழ்பவர்களே என நம்மை நாமே நம்பிக்கொள்ளும் வண்ணம் உளவியல் யுக்திகள் நம்முள் செலுத்தப்படலானது. நாம் யாரில்லையோ அதுவாக நம்மை நாமே ஏற்றுக்கொள்ளும் மனோநிலைக்கு நாம் தள்ளப்பட்ட ஒரு துர்பாக்கிய காலமது. ஆட்சிப்பிடிக்கவும் மதம் பரப்பவுமென ஆட்சியாளர்களும், மதபோதகர்களுமாக அன்று மக்களை சிந்திக்கவிடாமல் திக்குமுக்காட வைத்தனர். அவ்வாறானதொரு காலத்தின் கட்டாயத்தில், போக்கறியா மக்கள், தம்மைப் பற்றிப் பிறர் சொல்லக்கேட்டு அதனை நம்பினர். அதில், புரட்டும் பொய்யுரைகளும் வார்க்கப்படுவதை அவர் அறியார். அந்த நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை பின்னாளில் வந்த பாரதி கொதித்தெழுந்து குமுறிய, “ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? என்ற தொனியில் தெரிந்துகொள்ளலாம்.

    அவ்வாறானதொரு நிலையில் தான், சொந்த மண்ணின் மதங்களையே முற்றும் அறிந்திராத மக்களின் அறியாமையை விலக்கியாகவேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதை வள்ளலார் உணருகிறார். எனவே, சொந்த மண்ணில் உதித்தெழுந்த நம் உன்னத மதங்களின் சாராம்சங்களைப் பிழிந்துச் சாறெடுத்து, அச்சாற்றமுதுகளை இணைத்துச் சேர்த்து விழுமியதான ஒரு பொது மதம் நமக்குத் தேவை என்கிற தீட்சண்யம் அவருக்குள்ளே எழும்பியிருக்கிறது. அந்த தீட்சணியத்தினால்தான், நம் உயரிய மதங்களின் உன்னத சங்கமத்தை உருவாக்கும் பொறுப்பைத் தானே மேற்கொண்டிருக்கிறார் அவர். பன் மார்க்கங்களும் சன்மார்க்கத்தில் சமரசமாய் சங்கமிக்கும் நிலையே சமரச சன்மார்க்கம். “புற மதங்கள் அண்ணாந்து வியந்து பார்க்கும் அளவிற்கு இங்கே அளப்பரிய பொக்கிஷங்கள் உள்ளனவே. எம்மார் மதங்களில் உள்ள தேனமுதை, கற்கண்டை எம்மக்கள், எடுப்பாய்ப்பிடித்து, சுவைத்து உண்டுமகிழ, இதோ வாகானதொரு பொற்கலத்தில் நான் வார்த்தளிக்கிறேன்!” என வள்ளலார் செய்த புதுப்புரட்சியே சமரச சன்மார்க்கம். இந்த மதவிணைப்பு (Synthesis of Religions) முனைப்பிலே நமது சமயங்களின் பலத்தை வீணாக்குமாறு கிடக்கிற சாதி வேறுபாடுகள் முற்றிலும் நீக்கப்படவேண்டும் என்பதிலே வள்ளலார் கொண்ட உறுதி வார்த்தை வர்ணனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அவரது அம்முயற்சிகளை உணர்வால் மட்டுமே காணமுடியும்.

    இவ்வகையில், கடவுள் எனப்படுபவர் யார் அவரது உண்மைத்தன்மை தான் யாது என்பதனை விளக்கமுற்படும்போது, “அருட்பெருஞ்சோதி – அருட்பெருஞ்சோதி – தனிப்பெருங்கருணை – அருட்பெருஞ்சோதி!” என்கிறார். வள்ளலாரின் இந்த வாசகம் பிரபலமானது. இவ்வாசகத்தை க்கேட்ட மாத்திரம், “வள்ளலார்” என்று கேட்டவர் வாய் தானே மொழியும். இறைவனை ஜோதியாகப் பார்ப்பதும், திருவருட்பாக்களுக்கு “திருமுறை’ என்றே பெயரிட்டிருப்பதும், சிவனே ஜோதி – என்பதுவும் சைவசித்தாந்தத்தை ஆணிவேராய்க்கொண்டுதான் சமரச சன்மார்க்கம் கட்டமைக்கப்படுவது என்பது வெள்ளிடைமலை. சமரச சன்மார்க்கக்கட்டமைப்பை வள்ளலாருக்கு முன்சென்ற தாயுமானவர் சிந்தனைகளிலும் காணமுடியும் என்றாலும் சமரச சன்மார்க்கத்திற்கென ஸ்திரமானதொரு வழிமுறை நிலைப்பாட்டை நிறுவிப்போந்த பெருமை வள்ளலாரையே சாரும். இக்கட்டமைப்பிலே வைணவ, சமண, புத்த மதங்களின் சிலபல வெளிப்படை அடையாளங்களையும் கூட நம்மால் காணமுடியும் என்றாலும் கடவுளைப் பற்றிய உருவகத்தை, சைவமுறைப்படி ஜோதியாகவே அன்று உறுதிப்படுத்திய பாங்கிலே வள்ளலாரது அறிவியல் அணுகுமுறைகளையும் நாம் சிந்தித்தாகவேண்டும்.

    வள்ளலார் காலத்தில் நியூட்டன் மிகப்பிரபலமானவர். வள்ளலாருக்கு ( (5 October 1823 – 30 January 1874) முந்தையவர் நியூட்டன் ( 25 December 1642 – 20 March 1726). ஆங்கிலேயர் என்பதால், நியூட்டனை வெகு அதிகமாகவே நாம் புகழும் – புகழவேண்டிய கால நிலை அன்று நிலவிவந்தது. நியூட்டனின் ஒளி பற்றிய கண்டுபிடிப்புகள் கல்விப்பாடமாக இங்கு அன்று நிறைவேறப்பட்டன. நியூட்டனின் ஒளிப் பரிசோதனைகளை அந்நாளில் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் (1818: செரம்பூர் கல்லூர, ஹவுரா ; 1847: இந்தியத் தொழில்நுட்பக்க கழகம், ரூர்கி; 1857: பம்பாய் பல்கலைக் கழகம்; 1857: சென்னைப் பல்கலைக்கழகம்; 1857: கல்கத்தா பல்கலைக்கழகம்), அங்கு மாணாக்கர்கள் செய்துபார்க்கும் வகையில் பரிசோதனைக்கருவிகள் மற்றும் பயிற்சிமுறைகளாக நம்மவரிடையே பிரபலமாகின. அவ்வேளையில், நம் மதத்தின் அறிவியல் கூறுகளை எடுத்தியம்ப வள்ளலார் துடித்திருக்கக்கூடும். மூடநம்பிக்கைகள், பிற்போக்குச்சிந்தனை என்று மதத்தை இழித்தும் பழித்தும் காட்டும்போது நமது மதங்கள் அறிவியலுக்குப் புறம்பானவை என்று சாகசப் பேசசு பேசுவது அன்றைய நாசசக்திகளின் பாணியாகவே இருந்துவந்தது. எனவே, “நீ அறிவியல் என்று பேசுகிறாயே அந்த அறிவியல் வழி நீ காட்டும் ஒளிக்கோட்பாடுகள் உமக்குப் புதிது ஆனால் எமக்கு அவை முன்னமே தெரியும்! கேட்டுக்கொள் – ஒளி என்பது பிரபஞ்சத்தின் ஜீவாதாரம் என்பதை யாமென்றோ அறிவோம். ஒளி என்பது யாம் வணங்கும் தெய்வம்! ஒளி எங்கள் எங்கள் வாழ்முறை!” என்று நெஞ்சுநிமிர்த்திச் சொல்லும் அறிவியல் பரிஷையை பாமர மக்களின் தினசரி மொழியாக்கும் உத்வேகம் வள்ளலாருக்கு இருந்திருக்கவேண்டும் என்றே நாம் காணமுடிகிறது.

    “அருட்பெருஞ்சோதி – அருட்பெருஞ்சோதி – தனிப்பெருங்கருணை – அருட்பெருஞ்சோதி!” என்ற வள்ளலாரின் குரல் ஒலிக்குரல் அல்ல அது ஒளிக்குரல் – அது மணிக்குரல் அல்ல மாணிக்கக்குரல். அது அன்றே அவர் விடுத்த நாட்டின் விடுதலைக்கான அழைப்பு – தனிமனிதனின் ஞான விடுதலைக்கான அழைப்பு.

    கருணை என்பது இந்தியதேசத்து மதங்களில் இணையறக் கலந்திருக்கிறது எனினும், கருணை என்பதை சமரச சன்மார்க்கத்தில் முந்துறுத்தி இருப்பது – கிருத்துவப் பரப்புரைக்கு இணையான யுக்தி எனவே கொள்ளலாம்.

    வடலூரில் அவர் நிறுவிய சத்ய ஞான சபை எண்ணுந்தோறும் – எண்ணுந்தோறும் – புதுப்புதுப் புரிதலை நம்முள்ளே வார்க்கும் அற்புதக் கோட்டம். எண்கோண வடிவம் – மூன்று சபைகள் (சிற்சபை, பொற்சபை, ஞான சபை) என உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கருவறைக்கு ஏழு திரைகள். வடலூர் ஆலயத்தின் வடிவமைப்பை பல்வேறு சித்தாத்தங்களிலிருந்த விளக்க முடியும். வள்ளலாரது அறிவியல் வழிப்படி சென்று ஒளிவழி பார்த்தால் ஒளியின் உருவாக்கமே இக்கோயில்.

    ஒளிக்கு எட்டு குணங்கள் உண்டு – பிரதிபலிப்பு, விலகல், உள்ளீட்டுப் பிரதிபலிப்பு, பரவல், சிதறல், விளிம்பு விலகல், படிதல், முனைவாக்கம் (Reflection, Refraction, Total Internal Reflection, Dispersion, Scattering, Diffraction, Interference, Polarization).

    ஒளிக்கு மூன்று நிலைகள் உண்டு – துகள் நிலை, அலைநிலை, துகளலை நிலை (particle nature, wave nature, wave-particle dualism).

    வெள்ளொளிக்கு – ஏழு பாகங்கள் உண்டு – ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு (VIBGYOR).

    தைப்பூசத்தன்று வடலூரில் ஏழுதிரைகளும் திறக்கப்படுவது – ஒளியின் ஏழுபாகங்களும் இணைந்து ஒன்றென வெள்ளொளியாய்த் திகழ்வதைக் குறிக்கிறது. அன்று பவுர்ணமி என்பதும் காண்க.

    அறிவியல் அடித்தளம் இடுவது மட்டுமே வள்ளலாரின் நோக்கமில்லை. நாட்டின் பல அடையாளங்களுள் மதம் என்னும் அடையாளமும் முக்கியமானது – அதுவும் உலகோருக்கெல்லாம் வாரிவாரி வழங்கக்கூடிய கருவூலமாய் நல்லதொரு மதப்பின்னணி உள்ள ஒரு நாட்டில் – பொன்னும், வைரமும், பொக்கிஷமுமாய் – மதக் கோட்பாடுகள் காணப்பெறுகிற ஒரு நாட்டில் – வேற்று மதம் தேடிபோகும் தேவையில்லையே – இங்குள்ள பொன்னையும், வைரத்தையும், பொக்கிஷங்களையும் திரட்டி, இருத்திப் பாதுகாத்து உலகுக்கு அளிப்பதே இன்றைய தலையாய பணி என்பதை அவர் அன்று உணர்ந்த வாக்கில் சத்யஞான சபை உருவானது என்பதை வள்ளலாரது வாக்கே காட்டுகிறது.

    “எச்சபை பொதுவென இயம்பினர் அறிஞர்கள்
    அச்சபை யிடங்கொள்ளும் அருட்பெருஞ் ஜோதி”

    ஒட்டுமொத்தத்தில், நம் மண்ணின் மூலமதங்கள் யாவும் எத்தனைச் சிறப்பானவை – இவற்றின் விழுமிய சாரம் எத்தனை ஆனந்தம் அளிக்கிறது – பற்ற இது எத்தனை இலகுவாய் இருக்கிறது – இதனைப் பாட எத்தனைப் பரவசம் பிறக்கிறது என மக்களுக்கு வெறியின்றி, நிதானமாய் எடுத்துரைக்க எழுந்த வள்ளலாரின் அமைதிப்புரட்சி ஒரு அனாயாசப்பபுரட்சி. இந்த சமயத்திரட்சியை ருசிக்கும் எவரும் புறமதங்களில் சொல்லப்படுகிற யாவும் அதற்கு மேலேயும் கூட நம் சமயங்களில் ஏற்கனவே உள்ளன என்பதை அறிவார்ந்த அறிவால் உணரமுடியும். வள்ளலாரது தர்மசாலையும், இயற்கை வாழ்வும் மானுட சேவையின் மற்ற பரிமாணங்கள். இவை பற்றி பேசுவோம்.

    Share
  • அன்னை பிறந்தநாள்….!21-2-2018

     

    ’’அன்னை பிறந்தநாள், அல்லி மலர்ந்தநாள்,
    முன்னை வினைகள் முடிந்தநாள், -அன்னையே
    சைதன்ய சக்தியே, சச்சிதா னந்தமே
    கைதந்து சேர்ப்பாய் கரை’’….கிரேசி மோகன்….!

    கண்ணை இமைகாக்கும், தென்னை குலம்காக்கும்
    அன்னை நமைகாக்கும் அற்புதம் -விண்ணை
    இறங்கவைத்து மண்ணில் இருத்திய தாயின்
    பிறந்தநாள் நாளை போற்று….கிரேசி மோகன்….!

    கரணா திகளைக் கருத்தில் கொள்ளாய்
    திறனாய்வு தன்னைத் தவிர்ப்பாய் -சரணா
    கதியென்(று)அன் னையிரு கால்களில் வீழ்வாய்
    விதியுந்தன் காலில் விழும்….கிரேசி மோகன்….!

    “சாட்சியில்லா மோனத்தில் ,சாத்விக கானத்தில் ,
    மாட்சிமை மூர்கர்கள் மெய்(உடல்)மனத்தின் -ஆட்சியில்லா-
    வேளையில் , பூமிக்கு வந்தசை தன்யமே
    நாளைநீர் அன்னைஎ னக்கு “….கிரேசி மோகன் ….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed

    ’’அர்ஜுன உவாச’’….!
    ———————————————-

    சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
    நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
    வருவாய் அருகே குருவாகிக் காட்டு
    பரிமேல் அழகா பரிவு….கிரேசி மோகன்….!

    Share
  • தனிமையோடு பேசுங்கள்..!

     

    பெருவை பார்த்தசாரதி

    ==============================

    C2TQmRJWgAAlGl1

    மனிதப்பிறவி என்பது அரிதாகும் அதைவிடவும்..

    …….மனத்திலெழும் சிந்தனா சக்தியென்பது அற்புதமாம்.!

    கனியுமாமங்கே கருத்துடன் செறியும் எண்ணம்..

    …….காலத்தேயது வெளிப்படும் காதுக்கினிய பேச்சாக.!

    இனியசொல்லே இல்லாமல் இடைவிடாமல் பேசும்..

    …….இயல்புள்ள மனிதருமிங்கே உண்டு இவர்தவிர்த்து.!

    தனிமையிலே பேசினால்நம் தன்னிலை அறியலாம்..

    …….தக்கதோர் இடமதற்கு பொருத்தமா யமையவேணும்.!

     

     

    முனிவனும் யோகியும் முற்றுமெதையும் துறந்தாலும்..

    …….தனிமையில் சிந்தித்ததால் தன்னிகரற்று விளங்கினர்.!

    மனித வளமென்று சொல்வதெல்லாம் எதைவைத்து..

    …….மனிதரின் மனதிலெழுமுயர் எண்ணங்கள் வைத்தே.!

    பனிப்படலம் விலகவங்கு பகலவன் தோன்றியது..

    …….போலேநம் மனவழுக்ககல நற்சிந்தனை வேண்டும்.!

    இனியவை நாற்பது இன்னாநாற்பதெனும் காவியமும்..

    …….இன்புற இறுதிநிலையென இதைத்தான் இயம்பியது.!

     

     

    அண்டசராசரத்தில் அனுதினம் ஆயிரம் நிகழ்வுகள்..

    …….ஆண்டவனை அடிபணிய ஆங்கோர் சந்தர்ப்பமாம்.!

    பண்டிகை விழாவெனில் மண்டபத்தில் கூடிநின்று..

    …….பலருடன் பேசும்மனம் விசாலமடைய வழியதுவாம்.!

    கொண்டாடும் இடத்தினிலே கூடியிருக்கும் பலரும்..

    …….கொத்துமலர் கொண்டு வாழ்த்திப்பேச நலமுண்டாம்.!

    கண்டவருடன் கண்டதையும் பேசாமல் ஒதுங்கித்..

    …….தனிமையிலே பேசித்தன் சுகத்தை காப்போருமுண்டு.!

     

     

    தன்னையறியவே தனிமையில் பேசினர் சித்தர்கள்..

    …….தன்னுடலழகும் தகும் புறத்தோற்றமும் தவிர்த்தார்.!

    தன்சிந்தையை தன்சுற்றத்தை தன்னியல்பை நீக்கி..

    …….தனிமைத்தவம் கொண்டார்தன் ஐம்புலன்க ளடக்க.!

    தன்வாழ்வை இயற்கை யோடிணைத்து வித்தகரானார்..

    …….தமிழிலக்கியம் செழிக்கத் தன்னையு மர்ப்பணித்தார்.!

    பின்னரிந்த உண்மையறியாத மாந்தரும்–சித்தரைப்..

    …….பித்தனென்றே பேசினர்..வாழ்வியல் தத்துவமறியா.!

    ==============================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::12-02-18

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 49

    க. பாலசுப்பிரமணியன்

    அறவழி நில்லாத வாழ்க்கையின் பயனென்ன ?

    திருமூலர்-1-1-2

    அறம் சார்ந்த வாழ்க்கையை எப்பொழுது தொடங்கவேண்டும்?  உணர்ச்சிகளால் உந்தப்பட்டு உலக மாயைகளில் உழன்று குடும்ப வாழ்க்கையில் முழுதான கவனம் செலுத்தி, வருங்காலத்திற்காக சொத்து சேமித்து வைக்கும் நேரத்திலா? அல்லது வாழ்ந்து முடித்துவிட்டோம் என்று எண்ணி எல்லாம் துறந்த நிலையிலே மனம் இருக்கும் நேரத்திலா? இந்தக் கேள்விக்கு எங்கே சரியான பதில் கிடைக்கும்?

    வாழ்ந்து அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையில் நாம் உலக மாயையில் இங்கும் அங்குமாகப் பறந்து கொண்டிருக்கின்றோம். தேவையுள்ள பொருள்களை மட்டுமின்றி தேவையற்ற பொருள்களையும் சேர்த்து பொருட்சுமை மட்டுமின்றி மனச்சுமையிலும் மூழ்கிக்கொண்டிருக்கின்றோம். அறத்தை மறந்து வாழ்கின்ற வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களின் குணாதியங்களை எப்படி வர்ணிக்கலாம் ? பட்டினத்தாரின் இந்தப் பாடல் அதற்கு ஒரு உதாரணமாக விளங்குகின்றது.

    ஓயாமற்  பொய்ச்சொல்வர் நல்லோரை நிந்திப்ப ருற்றுப்பெற்ற

    தாயாரை வைவர் சதியா யிரஞ்செய்வர் சாத்திரங்கள்

    ஆயார் பிறற்குப காரஞ்செய் யார்தமை யண்டினர்க்கொன்

    றீயா ரிருந்தென்ன போயென்ன காண்கச்சி யேகம்பனே

    இந்த குணாதிசயங்களுடன் அறத்தைப் பற்றி சற்றும் நினையாதவர்கள் வாஸ்க்கை எப்படிப்பட்டது? “இன்றிருப்பார் நாளையில்லை என்னும் பெருமை படைத்த இவ்வுலகில்” கிடைத்த சிறிய வாழ்வில் நல்ல பல செயல்களை செய்யாமல் அதைத் தள்ளிப் போட்டு வாழ்க்கை வீணடிப்பவர்களுக்கு என்ன புத்திமதி கூற முடியும்? திருமூலரின் இந்தப் பாடல் அதற்கு பதில் அழிப்பது போல் அமைந்துள்ளது.

    கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே

    விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்

    குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்

    விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே

    எல்லாப் பொருள்களும் தோன்றி மறைகின்ற நிலையில் இருக்கும் நிலையை அறியாத மனம் எல்லாம் தனதே என்ற கருத்தை வைத்துக்கொண்டு அறத்தை செய்யாமல் வீணாக வீழ்கின்றதே என்ற திருமூலரின் கருத்து எவ்வளவு உண்மையானது. !

    அறத்தைச் சாராத வாழ்க்கையை வாழ்ந்து தேவையற்ற பொருள்களை மிகுதியாகச் சேர்த்து வைத்து பிற்காலத்தில் “இந்தப் பொருளை எங்கு விட்டுச் செல்வேன்? இதை யார் பாதுகாப்பார்கள்?” என்ற கவலையை மனதில் கொண்டு கூற்றுவனின் அழைப்பினை ஒதுக்கமுடியாமல் அவதிப்படுகின்ற உள்ளங்கள் தான் எத்தனை! உடலை விட்டு நீங்கும் நேரத்தில் இந்த அறிவு கிடைத்து என்ன பிரயோசனம்? இந்த மாயையில் அகப்பட்டு அவதிப்படும் நெஞ்சங்களை நோக்கிப் பட்டினத்தார் பாடுகின்றார்:

    வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்

    பீடிருக்க வூணிருக்கப்  பிள்ளைகளுந் தாமிருக்க

    மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்

    கூடிருக்க நீபோன  கோலமென்ன கோலமே.

    எவ்வளவு ஆழமாக உண்மைகளை நம் முன்னே எடுத்து நிறுத்துகின்றார் பட்டினத்தார்!

    இந்தக்  கருத்தை வலுப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் இந்த வரிகள்

    குடமுடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்

    உடல் உடைந்தால் இறைப்பொதும் வையாரே !

    பட்டினத்தாரைத் தொடர்ந்து இந்தப் புலம்பலை நாம் பத்திரகிரியாரிடமும் பார்க்கின்றோம்.

    வேடிக்கை யுஞ்சொகுசு மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்

    வாடிக்கை யெல்லா மறந்திருப்ப தெக்காலம் ?

    பட்டுடை பொற்பணியும் பாவனையுந் தீவினையும்

    விட்டுவிட் டுன்பாதம் விரும்புவதெக்காலம் ?

    இவ்வாறு உலக மாயையில் விழுந்து எல்லாம் எனக்கே என்ற எண்ணம் கொண்டு தன் உண்மை நிலையை அறியாது ஆசைப்படும் நெஞ்சங்களுக்கு தாயுமானவரின் இந்த வரிகள் உண்மை நிலையை விளக்கும்

    ஆசையும் பெருங்காற்றூடு இலவம்பஞ்சு

    எனவும் மனது அலையும் காலம்

    மோசம் வரும்;  இதனாலே கற்றதும்கேட்

    டதும்தூர்ந்து, முக்திக்கு ஆன

    நேசமும்நல் வாசமும் போய்ப் புலனாய் இல்

    கொடுமை பற்றி நிற்பர்: அந்தோ

    தேகபழுத்து அருள்பழுத்த பராபரமே !

    நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?

    (தொடரும்)

    Share
  • உலக வாழ்க்கை ஒரு சக்கரம்

     – ஆ.செந்தில் குமார்

    விலங்கோடு விலங்காக
    வேட்டையாடி வாழ்ந்து வந்தான்!
    குகையே இவன் குடியிருப்பு!
    கூரிய கல்லே ஆயுதம்!

    விலங்கு மனிதனை
    விளங்க வைத்தது வேளாண்மை!
    நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு
    நாகரிக வாழ்க்கையில் நிலைத்தான்!

    நதிக்கரைகள்தான்
    நாகரிகத்தின் தொட்டில்கள்!
    உழவனே அந்த நாகரிகத்தின்
    உயர் வளர்ச்சிக்கு உதவியவன்!

    நிலத்தைப் பண்படுத்தினான்
    வேளாண்மை வளர்ந்தது!
    மனத்தைப் பண்படுத்தினான்
    பண்பாடு செழித்தது!

    கால்நடைகளைப் பழக்கினான்
    உழைப்பின் சுமை குறைந்தது!
    கற்பனையை உயர்த்தினான்
    வாழ்வின் இனிமை உயர்ந்தது!

    இக்கால மனிதன் இயற்கையைச் சிதைத்து
    இன்பம் காண்கிறான்!
    அறிவியலின் துணைகொண்டு
    அகிலத்தை ஆள்கிறான்!

    கற்கால மனிதன் காட்டில்
    அரைநிர்வாணமாய் இருந்தான்!
    இக்கால மனிதன் அதையே
    நாகரிகம் என்கிறான்!

    கற்கால மனிதனிடம்
    பண்பாடு இருக்கவில்லை!
    இக்கால மனிதனிடமும்
    அது இருப்பதில்லை!

    கற்கால மனிதன்
    அறிவில் வளர்ந்தான்…
    நாகரிகம் பிறந்தது!
    பண்பாடு பிறந்தது!

    இடைக்கால மனிதன்
    அறிவில் வளர்ந்தான்…
    நாகரிகம் வளர்ந்தது!
    பண்பாடு வளர்ந்தது!

    இக்கால மனிதன் அறிவில்
    வளர்ந்துகொண்டேயிருக்கிறான்…
    நாகரிகம் தேய்கிறது!
    பண்பாடு தேய்கிறது!

    வருங்கால மனிதன் அறிவின்
    உச்சத்தில் இருப்பான்…
    நாகரிகம் மறையும்!
    பண்பாடு மறையும்!

    அவனும் மறைவான்!
    உலகமே அழிந்து மறையும்!

     

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (262)

    இவ்வார வல்லமையாள்ர்களாக விஞ்ஞானி சுமிதா மித்ராவை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இவர் அமெரிக்க பேடண்ட் அலுவலகத்தின் பாராட்டுக்கும், அங்கிக்காரத்துக்கும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்

    சுமிதா மித்ரா நானோபார்ட்டிகிள்ஸ் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்சொத்தைகளை அடைக்கும் வழியை கண்டுபிடித்துள்ளார். இது தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை விட பலமடங்கு மேம்பட்டதாகவும், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும் எனவும் தெரிகிறது

    3எம் எனும் கம்பனியில் வேலை செய்தபோது இதை கண்டுபிடித்த்து இதுவரை சுமார் 60 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இது பலனளித்துள்ளது.

    இது தவிர பல்சொத்தைகளை அடைக்கும் பசைகள், நானோகாம்பொசிட் வகை தொழில்நுட்பம் ஆகியவற்றையும் சுமிதா மித்ரா கண்டுபிடித்துள்ளார். 3எம் கம்பனியில் இருந்து ஓய்வுபெற்று சொந்தமாக தொழில்நுட்ப கம்பனி ஒன்றை துவக்கி நடத்தி வருகிறார்

    இவர் அமெரிக்காவில் வசித்தாலும் இவரது சொந்த ஊர் கல்கத்தா ஆகும். கல்கத்தா ரெசிடென்ஸி கல்லூரி மாணவி ஆவார். இவரது கணவர் சாம் மித்ரா ஆவார். தன் கணவருடன் இணைந்து தான் வசிக்கும் மின்னியபொலிஸ்- செயிண்ட்பால் நகரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இலவசமாக அறிவியல் குறித்து உரை நிகழ்த்துவதில் தன் விடுமுறைகளை இவர் செலவிடுகிறார்

    அறிவியல், மாணவர் மேல் கொண்ட அன்பு, உழைப்பு, ஊக்கம் ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுமிதா மித்ராவை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வல்லமையாளர் சுமித்ரா மித்ராவுக்கு நம் நல்வாழ்த்துகள்

    இவரை பரிந்துரைத்த அண்ணாகண்ணன் அவர்களுக்கு நம் நன்றி

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180219 Gopala Gita - Vishwaroopa -24x32cms watercolour Indian ink. New series
    180219 Gopala Gita – Vishwaroopa -24x32cms watercolour Indian ink. New series

    ’’பசுவரும் முன்னே, விஸுவரூபர் பின்னே,
    கொசுவாகக் காண்டீபர் கெஞ்ச ,-’’அசுவரதம்
    ஏறு முதலில், அருச்சுனாபின் கீதையின்
    சாறுண்டு கொல்நூறு பேரு’’….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 148-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    piegons

    சோடிப் புறாக்களைத் தேடிப்பிடித்துக் கலைநயத்தோடு படமெடுத்து வந்திருக்கின்றார் திரு. ஆய்மன் பின் முபாரக். இணையற்ற இவ்விணையர் குறித்துக் கவினோடு கவியெழுதுங்கள் என்று இக்காட்சியைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்குரியோர்.

    ”இருநிலா  இணைந்து  பாடி
    இரையுண்ணும் செவ்வி தழ்கள்
    விரியாத தாமரை போல்
    ஓர்இணை  மெல்லி யர்கள்
    கருங்கொண்டை கட்டி  ஈயம்
    காயாம்பூக்  கொத்து மேலும்
    ஒருபக்கம் இருவா ழைப்பூ
    உயிருள்ள அழகின் மேய்சல்!” என்று புறாக்களின் எழிலைத் தன் ’அழகின் சிரிப்பில்’ அருமையாய் வடித்துத் தந்திருக்கின்றார் பாவேந்தர்.

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் அதனைத் தம் வாழ்வில் உயிரினும் மேலாய்க் கடைப்பிடிக்கும் புறாக்களின் நனிநாகரிகத்தை மானுடரும் பின்பற்றுதல் நன்று.

    இனி கவிஞர்களின் முறை…

    ”சாதி மதம் பாராது, சாதகத்தைச் சாராது வேசமில்லாப் பாசத்தோடு இணைந்திருக்கும் இவ்இனிய புறாக்கள் உண்மைக் காதலுக்குத் தக்கதோர் சான்றாய்த் திகழ்கின்றன” எனப் புகழ்கின்றார் திரு ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி. 

    இணைந்த உயிர்கள்!!

    #மாசிமாதம் ஓரிரவு…
    மகிழ்ச்சி ததும்பும் தேனிலவு!
    ஜோடி போட்ட மாடப்புறா
    சொக்கவைக்கும் காதல்நிலா!!
    #வண்ணப்பறவைகள் ரெண்டு
    வற்றாத பேரன்பு கொண்டு
    காதலின் உச்சத்தைக் கண்டு
    காட்டிடும்தோரணை கற்கண்டு!!
    #விரும்பும் துணையின் அருகிலே
    விசனம் மறந்த நிலையிலே
    விழிகள் பேசும் மொழியிலே
    விழுந்தன மனங்கள் மையலிலே!!
    #சாதி மதம் பார்க்கவில்லை
    சாதகத்தைத் தேடவில்லை
    சம்மதிக்கும் உள்ளங்களைச்
    சாய்க்கத்தடைகள் உலகிலில்லை!!
    #உண்மை அன்பு மலர்ந்துவிட்டால்
    உடைப்பதென்ன சுலபமா??
    உயிர்கள்இங்கு இணைந்துவிட்டால்
    உளிகள் கூட உறவுதான்!!
    #வேசமில்லாப் பாசத்துக்கு
    மோசமென்றும் கிடையாதே!!
    மோட்சம் பூமியில் உள்ளதெனும்
    சூட்சுமம் அறிவோர் மெய்க்காதலரே!!!

    *****

    ”கடவுள் பேதம் எமக்கில்லை; எங்கும் குடியிருப்போம்! சாதி பேதமும் எமக்கில்லை; எவரையும் காதலிப்போம்!” என்று பேதமற்ற உயர்ந்த வாழ்வின் மாட்சியைப் பேசும் உன்னதப் புறாக்களைக் காட்சிப்படுத்தியுள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தெரிந்திடுவீர் எம் காதல்

    கடவுள்களில் பேதமில்லை எங்கும் இருப்போம்
    கோபுரத்தில் வாழுகிறோம் குடும்பத் தோடே,
    அடுத்துள்ள தேவாலயம் மசூதியும் வீடே
    அங்கிருந்தே இரைதேடிச் செல்வோம் காடே,
    இடையில்வரும் காதலிலே இணைந்தே செல்வோம்
    இடைஞ்சலாக எவருமெங்கள் இனத்தில் இல்லை,
    நடைமுறையில் மனிதர்போல் நாங்க ளில்லை
    நாட்டுப்புறா எம்காதல் தெரியும் தானே…!

    *****

    ”ஆண் பெண் புறாக்கள் ஒன்றிணைந்து காதலர் தினம் கொண்டாடுகின்றனவோ?” என்று வேடிக்கையாய் வினவும் கவிஞர் திரு. பழ. செல்வமாணிக்கம், ”பணம் பார்த்து வருவதன்று காதல்! நல்ல குணம் பார்த்து வருவதே உண்மைக்காதல்! உயிரைத் தருவதன்று காதல்! உயிராய் வாழ்வதே காதல்” என்று காதலின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்துகின்றார்.

    உண்மைக் காதல்

    நெருங்கி நிற்கும் இரண்டு வண்ணப் புறாக்கள்!
    காதல் வானில் சிறகடித்துப் பறக்கும்!
    அருமைப் புறாக்கள்!
    ஆண் புறாவின் அருகில் மயங்கி நிற்கும்!
    பெண் புறா!
    இந்த பெண் புறாவின் இணையென்ற மகிழ்வில்
    ஆண் புறா!
    காதலர் தினத்தை கொண்டாடுகின்றனவோ!
    இந்தப் புறாக்கள்!
    இல்லை! இல்லை!
    உண்மை காதலருக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தானே!
    அழகைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
    மனதைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
    வசதியைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
    குணத்தைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
    அன்பின் வடிவம் காதல்!
    புரிதலின் பொருளே காதல்!
    தோழமை என்பது காதல்!
    ஒற்றுமை என்பது காதல்!
    விட்டுக் கொடுப்பது காதல்!
    “நான் “ மறைவது காதல்!
    “நாம்” என்று தெளிவது காதல்!
    சுயநலம் மறப்பது காதல்!
    உன் துயர், எனதென நினைப்பது காதல்!
    யாசித்துப் பெறுவதா காதல்!
    தானாய் மலர்வது காதல்!
    மாலையால் இணைவதா காதல்!
    மனதால் இணைவதே காதல்!
    உயிரைத் தருவதா காதல்!
    உயிராய் வாழ்வது காதல்!

    *****

    ”உண்மைக் காதலுக்கோர் உதாரணமாய், பகுத்துண்ணும் தன்னலமற்ற குணத்துக்கோர் சான்றாய் வாழும் புறாக்களை மனிதன் பந்தயத்துக்குப் பயன்படுத்துகின்றான் நேயமின்றி.  அந்தோ! மாந்தன் விளைவிக்கும் குந்தகமறியாது அந்தகனிடம் அகப்பட்டுக்கொள்கின்றதே அருமைப் புறா!” என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    மனிதனும் புறாவும்..!

    மாடத்தில் மட்டுமே கூடுகட்டி வாழும்
    ……….மனிதனோடு பழகும் பண்பு கொண்டது..!
    ஆடலுடன் பாடலும் செய்யும் அதையே
    ……….அதிசயித்து நமைப் பார்க்கத் தோன்றும்.!
    கூடயிருக்கும் குஞ்சுப் புறாவுக்குத் தன்
    ……….குரல்வளைச் சேர்த்த உணவு ஊட்டும்..!
    ஊடல் கொள்ள இணையாய் ஒன்று
    ……….உரு வானால் வேறொன்றை நாடாது..!

    துணையாய்த் தேடி வந்த சோடியுடன்
    ……….தன் தலைசாய்த்து வட்டமிட்டு ஆடும்..!
    இணையிடும் முட்டையை தன்னல மின்றி
    ……….இரவுபகல் அடை காக்கும் குணமாம்..!
    பிணைக் கைதி போலதனை அடைத்து
    ……….பின்னர்ச் சோடி பிரித்து பறக்கவிடுவார்.!
    கிணற்றுத் தவளைபோல வாழு மதற்குக்
    ……….கிட்டுமா இனியும் சுதந்திர வாழ்க்கை..!

    பந்தயத்தில் பறக்கவிட புறா வளர்ப்போர்
    ……….பாங்கா யதனைக் காப்பார் பணமாக்க..!
    பந்தமென வரும்போது ஒன்றாகக் கூடியே
    ……….பாங்காகப் பிரித் துண்ணும் தானியத்தை.!
    குந்தகமும் ஆபத்தும் நிறைந்த வாழ்வில்
    ……….குணமுள்ள பறவை யெனப் புகழுண்டு..!
    அந்தகனை அடையாளம் காணத் தெரியா
    ……….அகப்பட்டுக் கொள்வ ததன் விதியோ..!

    *****

    மாமிசம் உண்டு வந்ததோ பெண்புறா என்று அதன்மீது காதல்கொண்ட ஆண்புறா அதனை ஐயுற்றுக் கடிந்துகொள்வதை அழகிய கவிதையாக்கியிருக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    சேவல்-
    என்னடி ஹப் அடிக்குது? எதைத் திண்டு தொலைச்சே
    கீழ் மாடி மேசையிலே கெடக்குதே பழங்களெல்லாம்
    கூடத்துக் கோணியெல்லாம் குவிஞ்சிருக்கே தானியங்க
    அதையெடுத்துத் தின்னாம ஆட்டுக்கறி தின்னியா?
    குவிச்சிருந்த விதவிதமாப் பழத்தையெல்லாம் விட்டுப்பிட்டு
    கவுச்சியில ஆசப்பட்ட போக்கத்த புழுப் பொறுக்கி

    அடச்சே! உன்னால பெரிய பேஜாராப் போச்சு
    இந்த நாத்தத்தோட எப்படியுன்னை
    நான் பக்கத்தில வச்சுக்கிறது.
    ஓடு போ சீக்கிரம் சொண்டைக் கழுவிட்டு வா!

    பேடு-
    எதுக்காம்?

    சேவல்-
    ஏன் உனக்குத் தெரியாதா
    புதுசாக் கேக்கிறியே! அதுக்குத்தான்.
    பழம் மணக்கும் சொண்டோட
    பக்கத்த வந்து நில்லு.
    இழவுக் கவுச்சி மணம் எனக்குச் சகிக்காது
    ஓடு போய் வாய ஒடனே கழுவிட்டுவா
    ஒட்டி உரசிக்கலாம் உயிரைக் கலந்துக்கலாம்.

    *****

    புறவின் சிறப்புக்களைப் படிப்போர் இரசிக்கும்வண்ணம் துடிப்போடு கவி வடித்துத் தந்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவு பெற்றிருக்கும் கவிதை அடுத்து..

    புறாக்கள் சொல்லும் பாடம்

    பிறன்மனை நோக்காமை பேராண்மை!
    பகன்றது வள்ளுவன் சொல்லாண்மை!
    தன்னிணை மண்ணில் வாழும்வரை
    தரங்கெட் டடுத்ததை நாடாமல்
    உயரிய வாழ்க்கை வாழ்ந்திடுதே
    உலகில் உள்ள புறாக்கூட்டம்!
    மனிதா உனக்கு உரைக்கிறதா?
    மனதில் ஏதேனும் பதிகிறதா?

    கூட்டங்கூட்டமாய் வாழ்ந்திடுமே! புறாக்கள்…
    கூடி உண்டு களித்திடுமே!
    காக்கை குருவி எங்கள் சாதி!
    கவி பாடினான் பாரதி!
    மனிதா… மனிதா… நீ…
    சகமனிதனுடன் மோதி…
    சுடுகாட்டிலும் சாதி!
    சுட்டிக்காட்டுவதென்ன நீதி???

    கீழ்மேல் என்றெல்லாம் பாராது
    காழ்ப்புணர்ச்சி தம்முள் இருக்காது
    சமாதானத் தூதுவன் நம்
    சமுதாயத்திற்குச் சொல்லிடும் பாடமிது!
    தன்னலம் கொண்ட மனிதரெல்லாம்…
    தரணியில் படைத்த சாதிமதங்கள்…
    கூட்ட உணர்வைக் கொண்டுளது!
    கூட்டு உணர்வைக் கொண்டுளதா???

    கூட்டங்கூட்டமாய் ஒற்றுமைபேணி வாழ்கின்றன புறாக்கள். மனிதனோ ஒற்றுமையில் நாட்டமின்றிச் சக மனிதனோடு எப்போதும் மோதி, சுடுகாட்டிலும் பார்க்கின்றான் சாதி! இஃதென்ன நீதி?

    வள்ளுவன் மாந்தருக்குரைத்த ஒழுக்கத்தையும், பிறன்மனை நோக்காப் பேராண்மையையும் பின்பற்றி நடப்பதென்னவோ பறவையினத்தைச் சேர்ந்த புறாக்களே! என்று புறவினத்தின் பெருமையினைப் பரக்கப்பேசும் – உரக்கப்பேசும் இக்கவிதையினை யாத்த திரு. ஆ. செந்தில்குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வுசெய்யப்படுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share
  • களிப்புற்று நின்றிடுவோம் !

     
    எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

     

     

    விண்ணுக்கும் காதல் மண்ணுக்கும் காதல்
    மண்ணிலுள்ள மனிதருக்கு மனமெல்லாம் காதல்
    ஆண்டவனின் அருங்கொடையாய் அமைந்திருக்கும் காதல்தனை
    அனைவருமே வாழ்த்திநின்று ஆனந்தம் அடைந்திடுவோம் !

    மானிட இனத்துக்கு மருந்தாக இருப்பதுதான்
    வரமாக வந்திருக்கும் காதலெனும் உணர்வாகும்
    காதலுடன் வாழுகின்றார் காலமெலாம் வாழுகின்றார்
    காதலினை போற்றிநின்று களிப்புற்று நின்றிடுவோம் !

    காதலிலே பலவகைகள் காணுகிறோம் வாழ்க்கையிலே
    காதலிலே மோதல்வரும் களிப்புமங்கே சேர்ந்துவரும்
    மோதலுடன் காதல்வந்தால் முடிவல்ல எனநினைப்பீர்
    காதலது தளைப்பதற்கு கால்கோளே அதுவன்றோ !

    காதலில்லா வாழ்வினைநாம் கசப்பென்றே எடுக்கவேண்டும்
    காதலென்னும் பயிர்வளர்ந்தால் கனிவுமங்கே துளிர்த்துவிடும்
    காதலித்துப் பாருங்கள் கண்டிடுவீர் பேரின்பம்
    ஆதலினால் காதல்தனை அனைவருமே வாழ்த்திடுவோம் !

    காதல்பற்றிக் காவியங்கள் கருத்துடனே வந்திருக்கு
    காதலிக்கும் காதலர்கள் காதலுடன் வலம்வருவார்
    காதலுடன் நாம்படித்தால் காதலுடன் வாழ்ந்திடலாம்
    காதலுடன் யாவரையும் கைகுலுக்கி நின்றிடுவோம் !

    Share
  • அந்த வார்த்தை உச்சரி!

    jaya

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     +++++++++++ 

    அந்த வார்த்தை உச்சரி!
    கண்ணே!
    அந்த வார்த்தை உச்சரி!
    வந்திடும் உனக்கு  விடுதலை!
    அந்த வார்த்தை சொல்லிச் சொல்லி
    என்னைப் போல இருந்திடு !
    சிந்திக்கும் எனது வார்த்தையை
    முந்தி நீயும் சொல்லிடு!

    காதலென்று
    அந்த வார்த்தை உன்
    காதில்  பட்ட துண்மையா?
    வார்த்தை கேட்டுத் தினம்
    துள்ளு தென்மனம்
    அள்ளும் அந்திப் பொழுதிலே.

    காதலெனும் அந்த வார்த்தை
    எனக்கு
    ஆதியிலே  புரிய வில்லை !
    புரிந்த தின்று
    அந்த இனிய வார்த்தையே !

    சென்று போன இட மெல்லாம்
    செவியில் பட்டது
    அந்த இனிய வார்த்தையே !
    நல்ல  நூலில் இருந்தது !
    தொல்லை நூலில் இருந்தது !
    அந்த வார்த்தை
    காதலென்று
    எந்த நேரம் சொல்லிடு !

    உள்ளும் உணர்ச்சி உண்மை யென்று
    துள்ளும் எந்தன் நெஞ்சமே!
    ஒவ்வொரு மனிதனுக்கும்
    ஒளிகாட்டச்
    செல்வ தென்பணி யப்பா!
    எடுத்துச் சொல்
    அந்த வார்த்தை,
    வழிகாட்டும்  உனக்கும் எனக்கும்

    அந்த வார்த்தை!
    எப்போதும்
    எந்தன் நினைவில் இருக்குமே!
    அந்த வார்த்தை
    காதல் ! காதல் !! காதலே !!!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (149)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    28109608_1566357453418448_592021747_n
    சாய் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.02.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share