’’அன்னை பிறந்தநாள், அல்லி மலர்ந்தநாள்,
முன்னை வினைகள் முடிந்தநாள், -அன்னையே
சைதன்ய சக்தியே, சச்சிதா னந்தமே
கைதந்து சேர்ப்பாய் கரை’’….கிரேசி மோகன்….!

கண்ணை இமைகாக்கும், தென்னை குலம்காக்கும்
அன்னை நமைகாக்கும் அற்புதம் -விண்ணை
இறங்கவைத்து மண்ணில் இருத்திய தாயின்
பிறந்தநாள் நாளை போற்று….கிரேசி மோகன்….!

கரணா திகளைக் கருத்தில் கொள்ளாய்
திறனாய்வு தன்னைத் தவிர்ப்பாய் -சரணா
கதியென்(று)அன் னையிரு கால்களில் வீழ்வாய்
விதியுந்தன் காலில் விழும்….கிரேசி மோகன்….!

“சாட்சியில்லா மோனத்தில் ,சாத்விக கானத்தில் ,
மாட்சிமை மூர்கர்கள் மெய்(உடல்)மனத்தின் -ஆட்சியில்லா-
வேளையில் , பூமிக்கு வந்தசை தன்யமே
நாளைநீர் அன்னைஎ னக்கு “….கிரேசி மோகன் ….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *