Blog

  • குறுந்தொகை நறுந்தேன் – 23

    -மேகலா இராமமூர்த்தி

    “ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது  தமிழியம். தமிழ்மகள் அதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்திருக்கின்றாள். தமிழ்ச் சமுதாயம் பெண்குலத்தைப் பொறுமைக்குலமாக அன்று பயிற்றுவித்திருக்கின்றது.  ஆதலின் கணவனின் பரத்தமைக்காக மனைவி ஊடினாலும், அவனைக் கண்டித்தாலும் அவனை முற்றாய் வெறுக்கவில்லை; மனைவாழ்க்கையில் மீண்டும் இடந்தர மறுக்கவில்லை என்பதைச் சங்கப்பாடல்கள் பறைசாற்றுகின்றன.

    பரத்தைவீடு சென்ற தலைவன் தன் மனை புகவேண்டும்; தலைவியொடு இணைந்து வாழவேண்டும் என்பதே அவளின் வழிகாட்டியாகவும், நலம்விரும்பியாகவும் flowersதிகழ்கின்ற அறிவுசால் தோழியின் உட்கிடையாகவும் இருந்திருக்கின்றது. ஆதலால்தான் விதைவிதைத்த உழவர் நெல்லொடு பெயர்கின்ற, பல்வேறு பூக்கள் மலரும் ஊரனான தலைவனுடைய மனைவாழ்க்கை பொலிவுபெற வேண்டும் எனும் தன் வேட்கையை வெளிப்படுத்துகின்றாள்.

    நடைதவறிய தலைவனைத் துறந்து தலைவி தனித்தோ, வேறோர் ஆண் துணையைத் தேடிக்கொண்டோ வாழவேண்டும் என்று அவளும் விரும்பினாளில்லை.

    …..வித்திய  உழவர்  நெல்லொடு  பெயரும்
    பூக்கஞல்  ஊரன்  தன்மனை
    வாழ்க்கை  பொலிக  என வேட் டேமே. (ஐங்: 3 – ஓரம்போகியார்)

    அவ்வண்ணமே தலைவனும் சில காலத்தில் தன் தவற்றையுணர்ந்து திருந்தி, மனம்வருந்தி தலைவியொடு திரும்பவும் மனையறம் பேணத்தொடங்குவதாகவே அகப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. இதுவே அற்றைத் தமிழ்ப் பண்பாடு.

    இனி நம் தலைவி இல்லில் நிகழ்ந்தவற்றைக் கண்ணுறுவோம்!

    வாயில்கள் பயன்படாத நிலையில் தானே வீட்டினுள் துணிந்து நுழைந்துவிட்ட தலைவனைத் தலைவியும் மன்னித்து ஏற்றுக்கொண்டுவிடுகின்றாள். அவர்களின் மனைவாழ்க்கையில் மகிழ்ச்சிப் பூ மீண்டும் மலரத்தொடங்கியிருந்தது.

    மாலைக்காலம் அது!

    வானமேடையில் வலம்வரத் தொடங்கியிருந்த வெண்ணிலா தன் தண்ணொளியை பூமிக்கு அட்டியின்றிmoon அள்ளி வழங்கவே, மட்டிலா மகிழ்ச்சிகொண்ட பூமி அக்குளுமையில் குளித்தது; உளம் களித்தது. அப்போது அலர்ந்த அல்லிப்பாவையும் மலர்ந்தமுகத்தோடு தன் மோகனமுறுவலை நிலவரசனைப் பார்த்து இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தாள்.

    அவ்வேளையில் தலைவனைக் கண்டுசெல்ல முன்பு அவனுக்குத் தூதாய் வந்த பாணன் வீட்டுக்கு வந்திருந்தான். தோழியும் அப்போது வீட்டில்தான் இருந்தாள். பாணனைக் கண்டவள், அவனை வரவேற்றுவிட்டுத் தலைவன் தலைவியரின் இனிய இல்லறத்தைப் பாணனோடு பகிர்ந்துகொள்ள விழைந்தவளாய்,

    ”பாண காண்! இல்வாழ்க்கை அன்புடைமை எனும் பண்புடைத்து! வெற்றியையுடைய நம் தலைவன், மாலைக்காலத்தில் விரிந்த வெள்ளிய நிலவொளியில், குறுகிய கால்களையுடைய கட்டிலில் மணமிகு மலர்பரப்பிய படுக்கையில் விருப்பத்தோடு தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு கிடைகொண்ட களிற்றைப்போல் பெருமூச்சு விட்டனன்.  அப்புதல்வனின் தாயாகிய தலைவியோ புதல்வனைத் தழுவிக்கிடக்கும் தலைவனின் முதுகுப்புறத்தைத் தழுவினாள். மகிழ்ச்சிதரும் இந்நிகழ்ச்சி எத்துணை அழகுடையது!” என்றாள் பூரிப்போடு.

    கண்டிசின்  பாண  பண்புடைத்  தம்ம
    மாலை
     விரிந்த  பசுவெண்  ணிலவிற்
    குறுங்காற்
     கட்டில்  நறும்பூஞ்  சேக்கைப்
    பள்ளி
    யானையின்  உயிர்த்தனன் அசையிற்
    புதல்வன்  தழீஇயினன்  விறலவன்
    புதல்வன்  தாயவன்  புறங்கவைஇ  யினளே. (குறுந்: 359 – பேயன்)

    தலைவன் தலைவியரின் பள்ளியறையில் வலியநுழைந்து அவர்கள் பள்ளிகொண்டிருந்த காட்சியைக் கண்டே தோழி இவ்வாறு விவரித்தாள் என்று பொருள்கொள்ளுதல் கூடாது! அவ்விணையரும் மகவும் கொண்டிருந்த அன்புப் பிணைப்பை கற்பனையில் கண்டோ, தற்செயலாகப் பார்த்தோதான் அவள் பாணனுக்குச் சொல்லியிருக்கவேண்டும் என்று பொருள்கொள்வதே சாலப் பொருத்தமுடைத்தாகும்.

    இதே பொருள்தரும் பாடலொன்று ஐங்குறுநூற்றிலும் அமைந்திருக்கின்றது.

    புதல்வன்  கவைஇயினன்  தந்தை  மென்மொழிப்
    புதல்வன்  தாயோ  இருவரும்  கவையினள்
    இனிது  மன்றஅவர்  கிடக்கை
    நனியிரும்  பரப்பின்இவ்  உலகுடன்  உறுமே.   (ஐங்: 409)

    தலைவன் தலைவியரின் இல்லற மாண்பைக் காணவந்த செவிலித்தாய், அவர்களின் அன்பையும் அந்நியோன்யத்தையும் நாற்றாய்க்கு விளக்குகையில்,

    ”தலைவன், தலைவி, புதல்வன் ஆகிய மூவரும் ஒரே deersபடுக்கையில் கிடக்கும் காட்சியானது மான்பிணையானது தன் குட்டியோடும் ஆண் மானோடும் இணைந்திருக்கும் மாண்பினை ஒத்திருந்தது” என்று உளம்பூரித்துக் கூறுவதை ஈண்டு நாம் இணைத்துப் பார்க்கலாம்.

    மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
    புதல்வன் நடுவ ணாக நன்றும்
    இனிது மன்றஅவர் கிடக்கை
    முனிவின்றி 
    நீல்நிற
     வியலகங்  கவைஇய
    ஈனும்
    உம்பரும் பெறலருங்  குரைத்தே.   (ஐங்: 401)

    அன்பும் அறனும் உடைத்தாய்த் திகழவேண்டும் இல்வாழ்க்கை!
    அதன் பண்பும் பயனும் அதுதானே?

    தவறுதல் மனித இயற்கை; தன் தவற்றை என்ணி வருந்துதல் அறம்; அவ்வாறு வருந்துவோரை வன்மொழிகளாலும் புன்மொழிகளாலும் புண்படுத்தாது, அன்பாலும் பண்பாலும் பண்படுத்தும் குறுந்தொகைத் தலைவியை இங்கே நாம் காண்கிறோம்.

    அகவையில் இளையோளாக இருப்பினும் அறிவில் முதிர்ந்திருக்கும் அச்சிறுமுதுக்குறைவியை நாமும் வாழ்த்தி விடைபெறுவோம். அவள் இல்லறம் பார் போற்றும் நல்லறமாய்த் திகழட்டும்!

    நற்றமிழ்ப் புலவர் இயற்றிய நல்லகுறுந்தொகை, பழந்தமிழரின் காதல் வாழ்வையும், அவர்தம் விழுமியங்களையும், சீர்த்த நாகரிகத்தையும், இயற்கையோடும் இதர உயிர்களோடும் அவர்கள் கொண்டிருந்த இணையற்ற பிணைப்பையும், எதனையும் கூர்ந்துநோக்கும் அவர்தம் நுண்மாண் நுழைபுலத்தையும் நாம் அறிந்துகொள்ள நல்லதோர் வாய்ப்பை நல்குகின்றது.

    நான் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் உரையாசிரியர்களால் அதிக அளவில் மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் எனும் பீடும் பெருமையும் உடையது குறுந்தொகை. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இளம்பூரணஅடிகள் குறுந்தொகையை 126 இடங்களில் பயன்படுத்தியுள்ளார். பேராசிரியர் 103 இடங்களில் இப்பாடல்களை மேற்கோள் காட்டுகின்றார். உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரோ அனைவரினும் அதிகமாய் 223 இடங்களில் குறுந்தொகையை எடுத்தாண்டுள்ளார் என்பதை அறியும்போது குறுந்தொகையின் பெருமை வெள்ளிடைமலையாய்த் துலக்கமாகின்றது அன்றோ?

    ”பெருந்தொகை தந்தாலும் குறுந்தொகைக்கு ஈடாய்
    ஒருபாடல் இயற்றக்கூட ஒருவரும் இல்லை நம்மிடம்!”

    அத்துணைச் சிறப்பு வாய்ந்த குறுந்தொகை நறுந்தேனிலிருந்து ஒருசில துளிகளை மட்டும் இக்கட்டுரைத் தொடரில் சுவைக்கத் தந்தேன்.
    மீதமுள்ள பாடல்களையும் ஊக்கத்தோடு படித்தின்புறுக என்பதை என் வேண்டுகோளாய் வைக்கின்றேன்.

    பழமென இனித்திடும்
    சங்கப் பனுவல் கற்றால்
    கிழம் போம்! கீழ்மை போம்!
    ஆதலினால் காதலோடு கற்பீர் அதனை!

    [முற்றும்]
     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4256

    “வாமத்த்தில் தாம்பு, வலத்தால் தயிர்கடைய
    ஜாமத்தில் கண்ணன் ஜனித்தது, -பூமத்ய,
    பாரம் குறைக்கவல்ல, பாகவத ஓவியக்
    காரனிவன் கேசவ்கா க”….கிரேசி மோகன்….!

    Share
  • தமிழ் இயக்கக் கலந்துரையாடல்

    இனிய வணக்கம் நண்பர்களே!

    கொங்கு மண்டல தமிழ் இயக்க அமைப்புக் கூட்டக் கலந்துரையாடல், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ. முனைவர்.கோ.விசுவநாதன் அவர்கள் தலைமையில், கவிஞர் பதுமனார், கவிஞர்.அப்துல் காதர், திரு சுகுமாரன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற உள்ள நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள தமிழ் ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.

    IMG-20180203-WA0052

    IMG-20180203-WA0053
    இடம் – செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.
    நாள் : பிப்ரவரி 14, 2018
    நேரம் : காலை 10 மணி முதல்

    Share
  • திருப்பூர் அரிமா விருதுகள் 2018 * ரூ 25,000 பரிசு

    திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

    ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள் ( 2 பிரதிகள் ), திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி மார்ச் 15 , 2018.

    முகவரி:

    94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர், திருப்பூர் 641 604 .) /0421 2212210

    செய்தி: சாமக்கோடாங்கி ரவி * samakkodaonkey ravi@gmail.com

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 5

       தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    மறுநாள் காலை, சைமன் எழுந்த போது, மெட்ரீனா, அயல் வீட்டிலிருந்து ரொட்டி கடன் வாங்கச் சென்று விட்டாள். அந்தப் புதிய மனிதன், பெஞ்சின் ஒரத்தில் அமர்ந்து கைகளைக் கூப்பிக் கூரையை பார்த்த வண்ணமாக உட்கார்ந்திருந்தான். முகம் முந்தைய இரவை விடத் தெளிவாகவும் பிரகாசமாகவும் இருந்தது.

    சைமன், அவனைப் பார்த்து அவனுக்கு ஏதாவது தொழில் தெரியுமா என்று கேட்டான்.
    “எனக்கு ஒன்றும் தெரியாது”

    “உன் பெயரென்ன?

    “மைக்கேல்”
    “மைக்கேல், மனிதனுக்கு உணவும், உடையும் தேவை. உன்னைப் பற்றி நீ சொல்ல விரும்பாவிட்டால் பரவாயில்லை. ஆனால் ஏதாவது தொழில் செய்ய வேண்டும். செருப்புத் தைக்கும் வேலையை நீ கற்றுக் கொண்டால் என்னுடன் தங்கியிருக்கலாம். உணவும் உறையிடமும் கொடுக்கிறேன்” என்றான். மைக்கேலும் அதற்கு இணங்கினான். சைமன் செருப்புத் தைக்கச் சொல்லிக் கொடுத்த போது மைக்கேல் மிகவும் எளிதாகப் புரிந்து கொண்டான். இரண்டு மூன்று நாட்களில் மிகவும் திறமையுடன் சைமனின் உதவி இல்லாமல் செருப்புகள் தைக்கத் தொடங்கி விட்டான். அவன் தைத்த செருப்புகள் போல் இது வரையிலும் ஒருவரும் தைக்கவில்லையாதலால், அவன் புகழ் எங்கும் பரவியது. பிற ஊர்களிலிருந்து மக்கள் வந்து செருப்புத் தைக்கக் கொடுத்தனர். சைமனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.

    தொடரும்

    Share
  • பாப்பா நீ படி.. படி.. படி..!

    – ஆ. செந்தில் குமார்

    பாப்பா நீ படி.. படி.. படி..!  அதுதான்
    வாழ்கைக்கு ஏணிப்படி!
    வெற்றிப்படியை எட்டும்படி
    படிப்படியாய் நீ படி!

    அன்னை சொல்லும்படி                         babies
    தந்தை நினைக்கும்படி 
    ஆசிரியர் மெச்சும்படி
    படிப்படியாய் நீ படி!    (பாப்பா…)

    ஒழுக்கத்தில் சிறக்கும்படி
    இழுக்கென்பது இல்லாதபடி
    எழுச்சியாய் இருக்கும்படி
    படிப்படியாய் நீ படி!   (பாப்பா…)

    நல்லோரின் எண்ணப்படி
    எல்லோரும் போற்றும்படி 
    இல்லாமை நீங்கும்படி
    படிப்படியாய் நீ படி!    (பாப்பா…)

    தன் காலால் நிற்கும்படி
    தக்கோன் என விளங்கும்படி
    தரணிக்கு உதவும்படி
    படிப்படியாய் நீ படி!    (பாப்பா…)

    சான்றோனாய் மாறும்படி
    சாகாமல் பெயர் நிலைக்கும்படி
    சிறிதும் சலிக்காதபடி
    படிப்படியாய் நீ படி!   (பாப்பா…)

    நாள்தோறும் நல்லபடி
    நல்லது மனதில் பதியும்படி
    நாடு மேலும் உயரும்படி
    படிப்படியாய் நீ படி!      (பாப்பா…)

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4255

    கீதைக் கடமையைக் கண்ணன் மறந்துகாதல்
    ராதைப் பலனை எதிர்ப்பார்த்து -போதை
    படபடப்பில் பார்க்கின்றான் பாவையோ பாதம்!
    அடகடவு ளேயென்ன திது….!

    ” காலில் கனத்தராதை, தோளிங்க நர்த்தனத்தால்
    காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
    மாதைக் கால்சுமந்து காதல்கூத் தாடுகிறான்
    கீதை வரிகள் மறந்து”….!

    ” அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
    அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு
    கீதை, ஆவின்தன் கரணா கதிக்கு
    தாதை அளித்திடுவார் தாள்”….!
    கனிச்சுவை ராதை கமலஇதழ் கவ்வி
    துணிச்சலுடன் முத்தம் திணித்து -அனிச்ச
    மலராள் அலறும்முன் மன்னிப்பு கேட்பான்
    தளரான் எதற்கும் துணிந்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180205 - Yadava 20 Krishna Rukmini -lr Marriage of Rukmini and Krishna: Rukmini was bedecked with ornaments as though it meant to subdue her beauty. Krishna, in his leela, performed the rituals as was the custom. The agni (fire) in the altar went around the divine couple in reverence. Krishna went round the fire as though he went around himself in the form of fire.  He also looked up to see the star Arundathi (of the Ursa Majar constellation), the wife of Vasishta. This ritual was meant to emulate sage Vasishta and Arundathi’s ideal marriage. Dwaraka flourished in dharma because of the presence of the divine couple.
    180205 – Yadava 20 Krishna Rukmini -lr
    Marriage of Rukmini and Krishna: Rukmini was bedecked with ornaments as though it meant to subdue her beauty. Krishna, in his leela, performed the rituals as was the custom. The agni (fire) in the altar went around the divine couple in reverence. Krishna went round the fire as though he went around himself in the form of fire.
    He also looked up to see the star Arundathi (of the Ursa Majar constellation), the wife of Vasishta. This ritual was meant to emulate sage Vasishta and Arundathi’s ideal marriage. Dwaraka flourished in dharma because of the presence of the divine couple.

    ராதை புலம்பல்….கிருஷ்ண சமாதானம்

    ’’அம்மியில்லை, அண்ணாந்து அருந்ததி காட்டவில்லை,
    நம்முடைய சந்திப்போ நட்டநிசி -விம்மியழும்
    ராதைக்குக் கண்ணன் ரகசியமாய்க் கூறினார்,
    மாதேநீ ருக்கு மணி’’….கிரேசி மோகன்…..!

    Share
  • மயங்கொலிச் சொற்கள்

    ஆ. செந்தில் குமார்.

    அனையின் அணைப்பு பிள்ளைக்கு இனிமை!
    கனலின் அண்மை பஞ்சிற்கு அன்மை!

    ஊன் கலந்த ஊண் தவிர்த்தல் நலம்!
    கனி உணவே அதனினும் நலமென கணிப்பாய்!

    தண்மதி தண்னென தன்னொளி பாய்ச்சினாலும்
    கனல் கணை தைத்தால் கனைக்கும் பரி!

    காணத்திற்காக கானம் அழித்தால்
    கானலை நாம் காணலாம் என உணர்வாய்!

    சேணையும் சேனையும் கொண்டு வென்றாலும்
    கோன் இல்லா அரசு கோண் ஆகிப்போகும்!

    பொருள் :-
    அனை – அன்னை
    அணை – தழுவுதல்
    கனல் – நெருப்பு
    அண்மை – அருகில்
    அன்மை – தீமை
    ஊன் – மாமிசம்
    ஊண் – உணவு
    கனி – பழம்
    கணி – கணிப்பு
    தண் – குளிர்ந்த
    தன் – தன்னுடைய
    கணை – அம்பு
    கனை – கனைத்தல்
    பரி – குதிரை.
    காணம் – பொன்
    கானம் – காடு
    கானல் – பாலை நிலம்
    காணல் – பார்த்தல்
    சேணை – அறிவு
    சேனை – படை
    கோன் – அரசன்
    கோண் – கோணல்

    குறிப்பு :-
    °°°°°°°°°°

    மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில்கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

    நன்றி : விக்கிபீடியா.

    Share
  • ஆன்மீகப் பொக்கிஷம் !

     

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா 
    ஆடைதனைக் குறைத்தார்
    ஆணவத்தைக் களைந்தெறிந்தார்
    நாடிநின்றார் நம்ரமணர்
    நல்வழியைக் காண்பதற்கு
    ஓடிவந்தார் அண்ணாமலை
    ஒடுக்கிநின்றார் மனமதனை
    வாடிவிடா அவரிருந்தார்
    வழங்கிநின்றார் அருளையெலாம் !

    தன்னையே அறிவதற்குத்
    தவமிருந்தார் ரமணரிஷி
    தனிமைதனை இனிமையாய்
    தவமுனிவர் ஏற்றுநின்றார்
    பொய்மையாம் உடலுக்குள்
    மெய்மையைத் தேடிநின்றார்
    மெய்மையை உணர்ந்தவவர்
    மேதினியில் ரிஷியானார் !

    அத்வைத தத்துவத்தை
    அனைவருக்கும் காட்டிநின்றார்
    ஆடம்பரம் அனைத்தும்
    அவர்க்கு வெறுப்பாச்சு
    ஆசைதனைக் குறைத்த
    ஆன்மீகப் பொக்கிஷமாய்
    அகிலமே போற்றும்வண்ணம்
    ஆகிவிட்டார் ரமணரிஷி !

    சொத்துக்கள் சேர்க்கவில்லை
    சுகதுக்கம் நோக்கவில்லை
    சத்தான உணவேதும்
    தானவரும் உண்ணவில்லை
    மாடிமனை ஆடம்பரம்
    மனமதிலும் இருக்கவில்லை
    மாசில்லா வழிதேடி
    மாமுனிவர் தவமிருந்தார் !

    Share
  • செவ்வாய்வணக்கம்!!!

     

    #மங்களத்துச்செவ்வாய்
    கங்கணத்தில் தோசமாய்
    சங்கடம் தருவதாய்
    இங்கொரு செய்தியுண்டு!!
    #மண்ணாளும் யோகமும்
    பொன் பொருள் தாகமும்
    விண்ணோர்கள் வழிவந்து
    இன்நாளில் வாழ இவராசியுண்டு!
    #காதலைக் காமத்தை
    கற்பிப்பதிவரே….
    கல்யாணம் காண்போர்க்கு
    நல்ஞானம் போதிப்பவரிவரே!!
    #செல்வாக்கு..சேமங்கள்..
    சொல் வாக்கு தருகின்ற
    சுபரான செவ்வாய்
    சுகமான நாள்!!வணக்கம்!!

     
    ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி

    Share
  • SRI AUROBINDO or The Adventure of Consciouness -Satprem ….!

    One is seated before a closed door, a heavy door of BRONZE, and one remainsthere with the Will that it open, to pass through the other side, filled with white light. All the Aspiration gathers in to single beam, pushing harder, until suddenly the BRONZE door gives way. And one enters , as if precipitated into the light-MOTHER….Then one is truly born….!

    “ஃப்ரான்ஸ்(FRANCE ) மதர்சொன்னார் பேஜ்(PAGE)தொண்ணூற் ஆறிலே-
    ப்ரான்ஸ் (BRONCE) கதவுதிறக்க பேரொளி::- டான்ஸாடும் –
    கான்ஷியஸ்னஸ் கொண்டோரே கற்பனை அல்லநிஜம் –
    வான்ஷீயெஸ்(வான்-she -yes ) ஸாய்வந்த வள்”…..கிரேசி மோகன் ….!

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்-47

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவன் என்றும் மனத்துணையே வழித்துணையே

    திருமூலர்-1-1-2

    சிந்தையிலே பராசக்தியை நிறுத்தி அவள் திருவருளை முழுநிலவாய் தன் அகக்கண்ணில் கண்ட அபிராமி பட்டர் பக்தியின் பரவச நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றார். எப்படி நம்மால் இவ்வாறு இறையோடு ஒன்றிய நிலையை அடைய முடியும்? இதற்காக என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் ? இந்த நிலையை அடைவதற்கு முன்னால் நாம் இந்த உலகின் பற்று பாசங்களிலிருந்து விடுதலை பெற வேண்டாமா? மனமோ மரம் விட்டு மரம் தாவும் ஒரு குரங்கினைப் போல் ஒரு எண்ணத்திலிருந்து இன்னொன்றுக்கு ஓடுகின்றதே ! என் செய்ய?

    அடியார்கள் பலரும் “இறைவா! இந்தத் துயர வலையிலிருந்து உன்னால் தான் என்னைக் காக்க முடியும்” என்று கூறி எப்படியெல்லாம் இறைவனால் நம்மைக் காக்க முடியும் என்று கற்பனை செய்து பார்க்கின்றனர் ‘

    பட்டினத்தார் பாடுகின்றார்:

    மந்திக் குருளையொத் தேனில் நாயேன் வழக்கறிந்துஞ்

    சிந்திக்குஞ் சிந்தையை யானென்செய் வேனெனைத் தீதகற்றிப்

    புத்திப் பரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல்

    எந்தை கூறியவன் காணத்த னேகையி லாயத்தனே.

    இறைவன் என்றும் நமக்குத் துணையாக உள்ளான். அவன் துணையில்லையெனில் நாம் தனியாக நின்று வினைகளில் விழுந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளுவது மிகக் கடினம் என்று உணர்ந்த மாணிக்கவாசகரோ  இவ்வாறு கூறுகின்றார்:

    தனித் துணை நீ நிற்க யான் தருக்கித்

    தலையால் நடந்த

    வினைத் துணையேனை விடுதி கண்டாய்

    வினையேனுடைய

    மனத் துணையே என்தன் வாழ்முதலே

    எனக்கு எய்ப்பில் வைப்பே

    தினைத் துணையேனும் பொறேன்

    துயர் ஆக்கையின் திண் வலையே

    மனத்துணையே என்று அழைத்து இறைவனிடம் தான் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிசெய்கின்றார். “வழிமுதலே” என்று அழைக்கும் பொழுது பிறப்பிலிருந்து இறைவனுடன் தான் கொண்டுள்ள உறவுக்கும் வாழ்வின் வழியெல்லாம் அவன் துணையைப் போற்றி வளர்ப்பதற்கும் உள்ள அவர் சிந்தனை வெளிப்படுகின்றது

    அப்பர் பெருமானோ இதற்கும் மேலான ஒரு நிலைக்குச் சென்று தன்னுள் இருந்து தன்னை ஆட்டிவைப்பதே அந்த இறைவன் என்று இரண்டறக்கலந்த நிலையை விளக்குகின்றார்.

    எம்பிரான் என்றதே கொண்டு என்னுள்ளே புகுந்து நின்றிங்கு

    எம்பிரான் ஆட்ட ஆடி என்னுள்ளே உழிதர் வேளை

    எம்பிரான் என்னைப்பின்னைத் தன்னுள்ளே சுரக்கும்

    எம்பிரான் என்னில் அல்லால் என்செய்கேன் ஏழையேனே.

    திருமூலரோ அவனை ஒரு முறை நினைத்தாலே போதும். நினைத்த மாத்திரத்தில் நம்முள் வந்து அமர்ந்து நம்மோடு ஒன்றாகி நமக்கு அருள்புரிபவனாக இறைவன் ஆகிவிடுகின்றார் என்பதை உணர்த்தும் வகையில் கூறுகின்றார் :

    நினைக்கின் நினைக்க நினைப்பவர் தம்மைச்

    சுனைக்குள் விலைமலர் சோதியி னானைத்

    தினைப் பிளந்து அன்னசிறுமைய ரேனும்

    கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தவரே

    சிந்தையிலே எப்படி சிவனை நிறுத்த முடியும்? அவ்வளவு சக்தி வாய்ந்த அவனை ஒரு கோயிலில் தானே வைக்க முடியும் ? கோவிலில் அவனை வைத்தல் நம் சிந்தையிலே அவன் எப்படி வருவான் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல் “

    உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்

    வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

    தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

    கள்ளப் புலனைந்து கால மணிவிளக்கே.

    உள்ளத்தில் அவனை நிறுத்தி உடலையே கோயிலாக்கி அவனை ஆராதித்து வந்தால் நமக்குத் துயர் எவ்வாறு வரும்? நெஞ்சில் அமைதிக்கு அதை விடச் சிறந்த வழி ஏது?

    இந்த அமைதியைத் தன் அறிவாலும் தவப்பயனாலும் கண்டறிந்த திருமூலர் நமக்கு என்ன அறிவுரை அளிக்கின்றார் ?

    இல்லனு மல்லன் உளனல்லன் எம்பிறை

    கள்ளது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்

    தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி

    சொல்லாருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.

    (தொடரும்)

    Share
  • ஞாநி

    மாதவன் இளங்கோ

    ஞாநியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே.

    நான் இந்தியா வந்திருந்த போது ஞாநியின் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய ‘விசாரணை’ திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு, ஞாநி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரனுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். “இவர் பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய நண்பர். இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தனையும் அருமை.” என்று கூறிய போது நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள். தன் மகன் மனுஷ் நந்தனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுவது போல் இருக்கிறது அவருடைய உடல்மொழி.

    அதன் பிறகு மகேந்திரன் அவர்களுக்கு என்னுடைய புத்தகத்தை வழங்கினார். அவரோ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு பார்வை பார்த்து விட்டு, ‘இதில் உங்கள் கையெழுத்து போட்டு கொடுங்கள்!’ என்று கூறியபோது, எனக்கு கண்களில் நீர் சொரிய ஆரம்பித்துவிட்டது. அடக்குவதற்கு சற்றுத் திணறித்தான் போனேன். அறிவை இதயம் கைப்பற்றிக்கொள்ளும் அற்புதத் தருணங்கள் இவை.
    நிறைகுடங்கள் அவர்கள்.
    அவரை நான் சந்தித்த பொழுதுகளில் எடுத்த புகைப்படங்களையும் அது சார்ந்த என்னுடைய நினைவுகளையும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

     இவை அவர் பெல்ஜியம் வந்த பொழுது எடுத்த புகைப்படங்கள். அதன் பிறகு ஒவ்வொருமுறை இந்தியா வந்த பொழுதும் மறக்காமல் அவரைச் சந்திப்பேன். அவருடைய வீடு கிட்டத்தட்ட சத்திரம் போன்றது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை வந்து சந்திக்கலாம். ஒருமுறை கூட அவர் தனியாக இருந்து நான் பார்த்ததில்லை. இளைஞர்களை அவர் எப்படி தன்பால் ஈர்த்து வைத்திருக்கிறார் என்று பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. முதல்முறை அவருடைய வீட்டுக்கு சென்ற பொழுது, குழந்தையைப் போல் வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். அந்த வீட்டில் இருந்த எல்லாவற்றைப் பற்றியும் அவருக்கு சொல்வதற்கு ஏராளம் இருந்தது. நடிகர் சிவக்குமார் வரைந்து அவருக்குப் பரிசளித்த ‘காந்தியடிகள்’ ஓவியம் ஒன்றைக் காண்பித்தார். அவருடைய மகன் மனுஷ் எடுத்த புகைப்படத்தைக் காண்பித்து அது தனக்கு மிகவும் பிடித்தமான புகைப்படம் என்று கூறினார். அவை அனைத்தையும் நான் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். அவரது வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் “ஞாநியின் கேணி”. இலக்கிய வட்டாரத்தில் கேணி சந்திப்புகள் பிரபமாலானவை.

     அவர் பெல்ஜியத்துக்கு வந்திருந்த பொழுது லூவன் நகரில் என்னுடைய வீட்டிற்கு மிக அருகிலேயே இருந்த “Groot Begijnhof” (ஆங்கிலத்தில்  ‘Beguinage’) என்கிற இடத்துக்கு இன்னொரு நண்பருடன் சென்றிருந்தேன். அது நோன்பு மேற்கொள்ளாத துறவு சார்பற்ற கன்னியர் தங்கும் குடியிருப்பு. லூவன் நகரின் இடையே ஓடும் டெய்லே என்கிற குறுநதிக்கு இருபுறமும் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த அந்த இடத்தில் கிட்டத்தட்ட நூறு வீடுகள். எண்ணூறு வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் அந்த இடத்தை ஞாநி மிகவும் ரசித்தார். அப்போது இந்தியாவின் தேவதாசி மரபைப் பற்றி பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்த பொழுது, டெய்லே நதிக்கு அருகே இருந்த பூங்கா ஒன்றைக் கண்டவுடன், அந்த சூழல் அவருக்கு மிகவும் பிடித்துவிட, நோட்டுப்புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டார். நானும் என்னுடைய நண்பரும் புல்வெளியின் மீது படுத்து சூரிய குளியல் எடுக்க ஆரம்பித்துவிட்டோம்.

    ‘பெகெய்னாஃப்’ தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்த கேணி ஒன்று எங்கள் கண்களில் பட்டது. உடனே ஞாநியின் இல்லக் கேணி என்னுடைய நினைவுக்கு வந்தது. உடனே அவரை அதன் மீது அமர வைத்து இந்தப் புகைப்படத்தைக் கிளிக்கினேன். அவருக்குள் இருக்கும் ‘natural director’ இந்தப் புகைப்படத்தில் என்னை இயக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    இது நகரின் மையத்தில் அமைந்த ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்த பொழுது எடுத்த படம்.

    எங்களுக்கு அருகே ஒரு பெல்ஜியத் தம்பதியினர் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார். அதுதான் ஞாநி. நான் இடைமறித்து, “ஞாநி இந்தியாவில் ஒரு பெரிய எழுத்தாளர்” என்று கூறினேன். அதற்கு அந்த முதியவர் மெல்லிய புன்னகையுடன் தானும் ஒரு கவிஞர் என்றும், டச்சு மொழியில் நிறைய கவிதைகளை தான் எழுதியிருப்பதாகவும் கூறினார். ஞாநி உற்சாகத்துடன், “உங்களுடைய கவிதை ஒன்று கூறுங்களேன்” என்றார். முதியவரும் கவிதையைச் சொல்ல ஆரம்பித்ததும் எனக்கும் அவருடைய மனைவிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனெனில் அது ‘குசு’ பற்றிய கவிதை. ஞாநிக்கு நான் அதை மொழிபெயர்த்தேன். உடனே அவர் சிரித்துவிட்டு தானும் குதவழி காற்றோட்டம் பற்றி நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு நாங்கள் ‘ஜோசப் ப்யுஜோ(ல்)’ என்கிற குசுவிசைக்கலைஞரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

    இப்படி எங்கு சென்றாலும், எதைப் பார்த்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவதற்கான விஷய ஞானம் கொட்டிக்கிடந்தது ஞாநியிடம். அப்படிப்பட்ட மனிதரை இழந்துவிட்டது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாகப் படவில்லை எனக்கு. அவரைப் போன்றவர்களுக்கு இப்பொழுதுதான் தேவை அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.  இதற்காகவே எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் நான் அதிக நாட்டம் கொண்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது வாசிக்கவேண்டும். அல்லது மாதத்துக்கு ஒரு மணிநேரமாவது ஒரு எழுத்தாளனை சந்திக்கவேண்டும். அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு இது ஒரு குறுக்கு வழி. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் எழுத்தாளர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொழுதும், அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிய பிறகே பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஹங்கேரி நாட்டு இசையறிஞர் பிரான்ட்ஸ் லிஸ்ட்டினுடைய வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது – “விசனம் தோய்ந்தது ஆயினும் வீறார்ந்தது கலைஞனின் விதி” (“Mournful and yet grand is the destiny of the Artist”).

     

     அறிவார்ந்த மனிதர்களை இழந்த பிறகு அவர்களுடன் நான் இருந்த கணங்களை நினைத்துப்பார்க்கும் பொழுதான் புரிகிறது அந்தத் தருணங்கள் எவ்வளவு தரமான முறையில் கழிந்திருக்கிறது என்று. அதே சமயம், அவர்களுடன் இன்னமும் அதிகமாக நான் கழித்திருக்க வேண்டிய நேரத்தை, இந்த பெல்ஜியம் வாழ்வு எப்படித் தின்று விழுங்கியிருக்கிறது என்று நினைக்கும் பொழுது எனக்கு அது வலிமிகுந்ததாக இருக்கிறது.

    ஞாநியுடன் இறுதியாக கடந்த வருடம் கே.கே நகர் சரவணபவன் உணவகத்தில் மாலை உணவு அருந்தியது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதுதான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

     

    “ஞாநி” என்று உரிமையோடு அவரை அழைக்கலாம். வயது வித்தியாசம் பார்க்காத மனிதர். அவருடன் உரையாடலாம்; விவாதம் புரியலாம்; அவர் செயல்களைப் பற்றி கேள்வி எழுப்பலாம். கேள்வி கேட்பதின் முக்கியத்துவத்தைப் பற்றி சளைக்காமல் பேசிக்கொண்டே இருப்பார். பிறர் காலில் விழுவது அவருக்கு அறவே பிடிக்காது. எழுத்து, ஓவியம், நாடகம், இதழ் ஆசிரியர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி என்று பன்முகங்கள் கொண்ட, பல திறக்குகளில் பம்பரமாகச் சுழன்று உற்சாகத்துடன் பணியாற்றியவர். மறைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புகூட ஒரு யூட்யூப் சேனலைத் துவக்கி அதில் ஒவ்வொரு வாரமும் வந்து பேசுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை.

     

    அவரைப் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவருடைய ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகத்தை நிச்சயம் பெற்றோர்கள் வாசிக்கவேண்டும். என் மனைவிக்கு மிகவும் பிடித்த புத்தகம் அது. அதை அவரிடமே அவள் கூறியிருக்கிறாள். ஒரு மாதத்துக்கு முன்புகூட என் எட்டு வயது மகன் கேட்ட கேள்வியொன்றுக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியாமல் அந்த புத்தகத்தை மீண்டும் எடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள்.

    இன்றைய தலைமுறை ஒரு neurotic தலைமுறையாக மாறிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இன்றைய இளைஞர்கள் அற்ப விஷயங்களையெல்லாம் பெரிதாக்கி மனஅழுத்தத்திற்குள்ளாகிறார்கள். ஞாநிக்கு எத்தனை உடல் உபாதைகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் காட்டிக்கொள்ளவே மாட்டார். அதைப் பற்றி நாம் கேட்டால்கூட ஒரு புன்னகையுடன் விளக்குவார். எப்போதும் உற்சாகத்துடனும், புதுப்புது யோசனைகளும், எழுதுவதும், தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்வதும்,  இளைஞர்களுக்கு வழிகாட்டுவதும் என்று மும்முரமாக இருந்தது அவருடைய வாழ்க்கை. வார்தா புயலுக்காக முகநூலில் “Belgium For Chennai” என்கிற தலைப்பில் ஒரு பதிவெழுதி, பெல்ஜியத்திலிருந்து நிவாரண நிதி திரட்டிக் கொண்டுவந்த போதுகூட அவருடைய அறிவுரையின்படியே செயல்பட்டு பள்ளிகளுக்கு நிதியும், ஆய்வக உபகரணங்களையும் வழங்கினோம்.

     

    // பேசும்போது நம்மை தொட்டுக்கொண்டே இருப்பதும், நட்பார்ந்த சிரிப்புடன் முகத்தை நம் முகம் அருகே கொண்டுவந்து அடித்தொண்டையில் உரக்கப்பேசுவதும் அவருடைய பாணி. பேச்சில் அடிக்கடி ‘என்ன? என்ன?’ என்பார்//

    என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதி இருந்த அஞ்சலிக்குறிப்பில், இந்த வரிகளை வாசித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. ஞாநி என் அருகே அமர்ந்து என்னைத் தொட்டுக்கொண்டே “என்ன? என்ன?” என்று அவருக்கே உரித்தான கரகரத்த குரலுடன் பேசிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.
    I’ll miss you, Gnani.
     இப்போதும் என்னுடைய அறையிலுள்ள மேஜையில் அவர் வரைந்த பாரதி படம், அவருடைய  கையெழுத்துடன் கம்பீரமாக வீற்றிக்கிறது. அதில் “அன்பென்று கொட்டு முரசே” என்று அதிர்ந்து கொண்டிருக்கிறது அந்த ஓவியத்தின் உயிர்ப்பு.

    Share