Blog

  • பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை

     unnamed (1)
    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
     
     
    ++++++++++++++++
    நிலவில் தடம் வைத்துக் கால்
    நீண்டு மனிதர்
    செந்நிறக் கோள் செவ்வாயில்
    எட்டு வைக்கும்
    திட்டம் தயாராகி விட்டது !
    இன்னும்
    பத்தாண்டுகளில்
    செவ்வாய்க் குடியிருப்பு
    கட்டப்பட்டு
    காட்சித் தங்கு தளமாய்
    போக்குவரத்து 
    வாகனம் போய்வரும் !
    செல்வந்தர்
    முதலில் குடிபோகும் புதிய
    காலனியாய்ச்
    செவ்வாய்க்  கோளாகி
    சிவப்பொளி
    விண்வெளி யுகத்தில்
    சுடரப் போகுது ! மாந்தரைக்
    கவரப் போகுது !
    தென்னாப்பிரிக்க அமெரிக்க  தீரர்
    ஏலாம் முஸ்க்கின் முதல்
    சோதனை வெற்றி ! 
    பூதக்கன ராக்கெட்  காரேந்தி  
    சாதனைப் பயணம் !
     
    +++++++++++
     
     
    Tesla Car Crossed Mars and is going to Asteroid
     
     
     
    சூரியனைச் சுற்றிவரும் முதல் விண்வெளி டெஸ்லா கார்
    2018 பிப்ரவரி 6 ஆம் தேதி ஃபிளாரிடா கனாவரல் முனை நாசாவின் கென்னடி விண்வெளி மைய  ஏவு தளத்திலிருந்து விண்வெளிப் பூதகனக் கழுகு ராக்கெட் பளுச்சுமையாகச் செந்நிற டெஸ்லா காரைத் தூக்கிக் கொண்டு முதன்முதல் ஏவப்பட்டு வெற்றிகரமாகப் பயணச் சோதனை முடிந்தது.  பிரதம  ராக்கெட்டுக்கு முதற்கட்ட உயர்ச்சிக்கு உதவி செய்ய, ஒன்பது எஞ்சின்கள் ஒவ்வொன்றும் பெற்ற, மூன்று துணை ராக்கெட்டுகள் இயங்கின.   அவற்றின் பணி முடிந்து மூன்று துணை ராக்கெட்களும் தாமாகவே, மீள் பயன்பாட்டுக்கு  பூமிக்கு மீண்டன.  இது ஏவுப்பயண நிதிச் செலவைப் பேரளவு  குறைக்கும் உன்னத முறைப்பாடு.
    SpaceX Megarocket Carrying Payload Tesla Roadster Car
    ஒன்பது எஞ்சின் தள்ளும் உதவி உந்துகணை
    ஐந்து மில்லியன் பவுண்டு உந்துசக்தி [Thrust] உடைய பூதக்கன ராக்கெட்டின் உயரம் 230 அடி [70 மீடர்].  இது  சுற்றுப் பாதைக்கு ஏந்திச் செல்லும் பளுத்தூக்குத் திறம் [Payload Capacity] : 119,000 பவுண்டு [57 மெட்ரிக் டன்].  உலகிலே மிக்கப் பளுதூக்கும் வலுக் கொண்ட ஸ்பேஸ்–எக்ஸ் ஃபால்கன் கன ராக்கெட் [SpaceX Falcon Heavy Rocket] இது.  முதன்முறை சுமந்து செல்லும் டெஸ்லா ரோடுஸ்டர் [Tesla Roadster Sports Car] செந்நிறக் காரை, ராக்கெட் சூரியனைச் சுற்றிவரும் ஒரு சுற்றுப் பாதையில் விட்டுவிடும்.  நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வரும் செந்நிறக் கார், செவ்வாய்க் கோள் அருகில் செல்லும் பாதையில் இயங்கி வரும்.  ஏலான் முஸ்கின் திட்டம் ஒரே பாய்ச்சலில் செவ்வாய்க் கோளை நெருங்கி, மனிதத் தேவைக்குப் பளுவான சாதனங்களை, முதலில் இறக்க வேண்டும் என்பதே.  பிரதம ராக்கெட், மற்ற மூன்று  ராக்கெட்களும் பயன்படுத்திய எரிக்கரு கெரோசின் & திரவ ஆக்ஸிஜென்.
    டெஸ்லா காரில் அமர்ந்துள்ள காரோட்டி வெண்ணிற விண்வெளிச் சிறப்பு உடுப்பு அணிந்த பொம்மை மனிதன்.  அவன் பெயர் “தாரகை வீரன்” [ Starman].  இறுதியாக செவ்வாய்ப் பாதையில் குறுக்கிட்டு மோதி செந்நிறக்கார் செவ்வாய்க் கோளில் விழுந்துவிடும்.  காலம் கடக்க, விண்கற்களால் அல்லது சூரியன் கதிர்ப்பொழிவில் கார் உலோகம், நெளிந்து நொறுங்கிப் போகலாம்.  சூரியனைச் சுற்றும் பாதையில் இப்போது டெஸ்லா கார், செவ்வாய்க் கோளைக் கடந்து, முரண்கோள் ஒன்றை நெருங்குகிறது.  தனி விண்வெளி நிபுணர்  ஏலாம் முஸ்கின் அடுத்த திட்டம் என்ன என்பது இரகசியமாக உள்ளது.
    Falcon boosters land
    பளு உயர்த்தும் உதவி உந்துகணைகள் மீள் பயன்பாட்டுக்கு ஏவு தளத்துக்கு மீட்சி
     
     
    +++++++++++++++++++++
    Image result for Behold! SpaceX's 1st Falcon Heavy Rocket on the Launchpad
     
     
    விண்வெளிக் கழுகு ஏவுகணை, பளுக்கழுகு ஏவுகணைச் சோதிப்புகள்
    2017 டிசம்பர் 23 ஆம் தேதிவரை விண்வெளிக் கழுகு 9 ஏவுகணைக் குழுவகை வாகனங்கள்  [SpaceX Falcon 9 Family Vehicles Launch] 46 முறைச் சோதிக்கப் பட்டுள்ளன.  அவை யாவும் 2010 ஜூன் மாதம் முதல் டிசைன் செய்யப் பட்டவை.  அவற்றில் 44 ஏவுப் பணிகள் வெற்றி அடைந்தன.  ஒரு ஏவுகணைச் சோதனை ஏவு தளத்திலே முறிந்து போனது.  மற்றொரு ஏவுகணைச் சோதனை பாதி வெற்றி அடைந்தது.  ஒரு ஏவுகணை முன்னோடிச் சோதிப்பின் ஆரம்பத்தில் வெடித்து விட்டது.
    கழுகு ஏவுகணை : 9 சோதிப்பின் சிறப்பு : முதற்கட்ட உந்து கணை [First Stage Booster Rocket] பணி முடிந்த பிறகு பாதுகாப்பாக கீழிறங்கி, அடுத்த மீள் பயணத்துக்குப் பயன்படுகிறது.  அதனால் விண்கப்பல் ஏவுகணைச் செலவு பேரளவில் குறைகிறது.   25 முறை ஏவியதில் 20 முறை முதற்கட்ட உந்து கணைகள் மீள் பயனுக்கு மீட்கப் பட்டுள்ளன.  இப்போது  கழுகு ஏவு கணை -9  பளு தூக்கும் ஆற்றல் 50,300 கிலோ கிராம் எடையிலிருந்து 63,800 கிலோ கிராம் எடைக்கு மேம்படுத்தப் பட்டு, முதல் பளுக்கழுகு ஏவுகணைச் சோதிப்பு 2018 ஆண்டு ஜனவரியில் திட்டமிடப் பட்டுள்ளது.
    பூதகரமான பளுக்கழுகு ஏவுகணை சந்திரனுக்கும், செவ்வாய்க் கோளுக்கும் மனிதரைத் தூக்கிச் செல்லும் தகுதி ஆற்றல் உடையது.  2018 ஜனவரியில் நிகழப் போகும் சோதிப்பில் தூக்கிச் செல்லும் பளுச்சிமிழ் டெல்சா தளவூர்தி மின்சாரக் கார் [Telsa Roadster Electric car].  இந்தக் காரை டிசைன் செய்தவ நிபுணர் தென்னாப்பிரிகா அமெரிக்கர் ஏலான் முஸ்க். 2008 பிப்ரவரி முதல் 2012 டிசம்பர் வரை உலகம் முழுவதிலும் 2450 டெல்சா ரோட்ஸ்டர் மின்சாரக் கார்கள் ஓடி இயங்கி வருகின்றன.  இந்த செல்வீக அண்டவெளித் திட்டம் முழுக்க முழுக்க ஏலான் முஸ்க்கின் தனிப்பட்ட செலவு.  அமெரிக்க அரசாங்க உதவி எதுவும் இல்லை. உலக விண்வெளி நிபுணர்கள் ஏலான் முஸ்கின் பூத ஏவுகணை டெல்சா தளவூர்தியைத் தூக்கிச் செல்லும் வரலாற்று நாளை  ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்.
    Elon Musk’s Tesla Roadster
    Tesla Roadster in Falcon Heavy fairing.jpg

    The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation
    OPERATOR SpaceX
    MANUFACTURER Tesla
    INSTRUMENT TYPE Inert mass
    FUNCTION Dummy payload
    WEBSITE spacex.com
    PROPERTIES
    MASS Approximately 1,300 kg (2,900 lb)
    HOST SPACECRAFT
    LAUNCH DATE January 2018
    ROCKET Falcon Heavy
    LAUNCH SITE Kennedy LC-39A
    ORBIT Heliocentric
    Space X Spacecraft Cruise to the Moon
     
    [February 27, 2017]
     
    We are excited to announce that SpaceX has been approached to fly two private citizens on a trip around the Moon late next year. They have already paid a significant deposit to do a Moon Return Trip. 
    +++++++++++
    Space X Spacecraft Cruise to Moon 2018
     
    ++++++++++
     
     
     
     
    This year 2017, SpaceX will execute some key flight tests of Crew Dragon, a vehicle designed to carry astronauts, in preparation for our first human
    A close-up of Musk's face while giving a talk
    Elon Musk 
    Space X Falcon Heavy Rocket Pioneer
    BORN Elon Reeve Musk
    June 28, 1971 (age 46)
    PretoriaTransvaal (now Gauteng), South Africa
    RESIDENCE Bel AirLos AngelesCalifornia, U.S.[1][2]
    CITIZENSHIP
    • South Africa (1971–present)
    • Canada (1989–present)
    • United States (2002–present)
    ALMA MATER
    OCCUPATION Entrepreneurengineerinventor, and investor
    KNOWN FOR SpaceXPayPalTesla Inc.HyperloopSolarCityOpenAIThe Boring CompanyNeuralinkZip2
    NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6]
    TITLE
    SPOUSE(S)
    CHILDREN 6
    PARENT(S)
    RELATIVES
    SIGNATURE
    Elon Musk
     
    2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோள்  சுற்றுலாப் பயணப் போக்குவரத்து துவங்கும் திட்டம்.
     
     
    2025 ஆண்டில் அமெரிக்கா, ரஷ்யா, சைனா, ஐரோப்பிய நாடுகள் செந்நிறக் கோள் செவ்வாயிக்கு மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பலை ஏவும் முயற்சியில் முனைந்துள்ள போது, தனியார் தன்னார்வத்தில்  அதே குறிக்கோளை குறைந்த செலவில், மிகுந்த ஆற்றலில், வெகு விரைவாகச் செய்ய முனைகிறார் தென்னாப்பிரிக்க அமெரிக்கர் ஏலான் ரீவ் முஸ்க் [Elon Reeve Musk].  அவர் பிறந்தது : ஜுன் 28, 1071.  வயது 46.  அவர் ஓர் எஞ்சினியர், கண்டுபிடிப்பவர், கனயந்திரத் தொழில் அதிபர்.  உலகிலே பெரிய செல்வந்தர்.  அவரது உடைமை 20.8 பில்லியன் டாலர் [2017]   சூரிய நகர், டெல்ஸா, அண்டவெளிக் காலனி  [SolarCity, Tesla, and SpaceX]  நிறுவனங்களின் முதன்மை அதிபதி.
    Image result for spacex heavy lift rocket
     
    உன்னத செல்வந்தர் ஏலாம் முஸ்க்கின் ஞான ஒளி & குறிக்கோள்  [Vision & Mission] இவைதான் :
     
     
    1.  பூமிமேல் ஒரு முரண்கோள் வீழ்ச்சியோ அல்லது பூத எரிமலை வெடிப்போ நம்மை எல்லாம் அழித்து விடும்.  ஒரு நூதனப் படைப்பு வைரஸோ, கடுகளவு கருந்துளையோ,  கடும் பூகோளச் சூடேற்றமோ,  நமக்குத் தெரியாத ஓர் பேரழிவுப் போராயுதமோ நமக்கு மரணத்தை உண்டாக்கி விடலாம். மனித இனம் பல மில்லியன் ஆண்டுகளாகத் தோன்றி வளர்ச்சி அடைந்துள்ளது.  ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக அணுக்கரு வெடிப்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு , நாமே நம்மை அழித்துக் கொல்லத் துணிந்து விட்டோம்.  நாம் பூமியை விட்டு  அப்பால் கடந்து சென்று, வெளியேற வேண்டும்.
    2.  ஏலான் முஸ்க்கின் குறிக்கோள் :  மனிதப் பயண விண்கப்பல் செலவு 10 மடங்கு குறைய வேண்டும்.  இன்னும் 10 – 20  ஆண்டு களில் மனிதரைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்ப முடியும் என்று நம்புகிறார்.  2040 ஆண்டுக்குள் 80,000 மனிதர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்புக் காலனியைச் செவ்வாயில் நிறுவகம் செய்ய முனைகிறேன் என்று ஏலான் முஸ்க் சொல்கிறார்.  செவவ்வாய்க் கோள் சூழ்வெளியில் உயிர்வாயு [Oxygen] குன்றி யுள்ளதால், பயணப் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் மின்சக்தியில் இயங்கிவரும்.  2022 ஆண்டில்  முதல் மனிதரற்ற ] செவ்வாய்க் காலனி வாகனம் [MCT – Mars Colonial Transporter] அனுப்பப்படும்.  2024 ஆம் ஆண்டில் முதல் மனிதர் இயக்கும் செவ்வாய்க் காலனி வாகனம் ஏவப்பட்டு, செவ்வாயில் மனிதர் குடியேற வசதிகள் அமைக்கப்படும்.
    அண்டவெளிப் பூத ஏவுகணைச் சோதனை.  
    ++++++++++++++++++++
    Image result for spacex heavy lift rocket
    ஸ்பேஸ் X  துணைகணை பூமிக்கு மீள்கிறது
    Falcon Heavy    
    Falcon-heavy-crop.jpg

    Falcon Heavy getting ready for its first launch
    FUNCTION Orbital super heavy-lift launch vehicle
    MANUFACTURER SpaceX
    COUNTRY OF ORIGIN United States
    COST PER LAUNCH $90M for up to 8,000 kg to GTO[1]
    SIZE
    HEIGHT 70 m (230 ft)[2]
    DIAMETER 3.66 m (12.0 ft)[2]
    WIDTH 12.2 m (40 ft)[2]
    MASS 1,420,788 kg (3,132,301 lb)[2]
    STAGES 2+
    CAPACITY
    PAYLOAD TO LEO (28.5°) 63,800 kg (140,700 lb)[2]
    PAYLOAD TO GTO (27°) 26,700 kg (58,900 lb)[2]
    PAYLOAD TO MARS 16,800 kg (37,000 lb)[2]
    PAYLOAD TO PLUTO 3,500 kg (7,700 lb)[2]
    ASSOCIATED ROCKETS
    FAMILY Falcon 9
    COMPARABLE
    LAUNCH HISTORY
    STATUS on launchpad
    LAUNCH SITES
    TOTAL LAUNCHES 0
    SUCCESSES 0
    FAILURES 0
    FIRST FLIGHT January 2018 (planned)[3]
     
    BOOSTERS
    NO. BOOSTERS 2
    ENGINES Merlin 1D
    THRUST Sea level: 7,607 kN (1,710,000 lbf)
    Vacuum: 8,227 kN (1,850,000 lbf)
    SPECIFIC IMPULSE Sea level: 282 seconds[4]
    Vacuum: 311 seconds[5]
    BURN TIME 162 seconds[6]
    FUEL Subcooled LOX / Chilled RP-1[7]
    FIRST STAGE
    ENGINES Merlin 1D
    THRUST Sea level: 22,819 kN (5,130,000 lbf)
    Vacuum: 24,681 kN (5,549,000 lbf)[2]
    SPECIFIC IMPULSE Sea level: 282 seconds
    Vacuum: 311 seconds
    BURN TIME 162 seconds
    FUEL Subcooled LOX / Chilled RP-1
    SECOND STAGE
    ENGINES Merlin 1D Vacuum
    THRUST 934 kN (210,000 lbf)[2]
    SPECIFIC IMPULSE 348 seconds[6]
    BURN TIME 397 seconds[2]
    FUEL LOX / RP-1
    Share
  • திரு.வி.க. நினைவுகள்: 1

    -இன்னம்பூரான்
    11 02 2018

    நல்லதோர் வீணை செய்து

    nallathor

    தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி மகத்தானது. அவருடைய நாட்டுப்பற்று ஊரறிந்த தேசபக்தி.  இதழியலை அவர் உரமிட்டு வளர்த்தார். முதல் இதழ் ‘தேசபக்தன்’.  சூது வாது தெரியாத திரு.வி.க. அவர்கள் ஏமாற்றப்பட்டார். இதழ் கை மாறியது. ஆனால் செழிக்கவில்லை. பின்னர் ‘நவசக்தி’. அந்த இதழின் தொகுப்புகளை அவர் கட்டிக் (பைண்ட் செய்து) காப்பாற்றினார். அவையும் தொலைந்து போயின. சில வருடங்களுக்குமுன் அவற்றைத் தேடிஅலைந்து நான் களைத்துப்போனேன். ரோஜா முத்தையா ஆய்வு மையத்தில் ஓர் ஆண்டு மலர் மட்டும் கிடைத்தது.

    சில நாட்களுக்கு முன் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழில் வந்த செய்தி ஒன்று கண்டு என் மனம் நொந்தது.தற்காலம் அதருமமிகு சென்னையின் போரூர் பகுதியில் ‘செட்டியார் அகரம்’ என்ற பெயரில் அடங்கி விட்ட ‘துள்ளம்’ என்ற குக்கிராமம் தான் அவர் பிறந்த ஊர். அவருடைய தந்தை நடத்திய திண்ணைப்பள்ளியில் தான் அவர் தமிழ் பயின்றார். சுப்ரதீப கவிராயர், மு.ராகவையங்கார் போன்ற புலவர்கள் நிறைகுடங்களாகத் திகழ்ந்தனர். இதழாசிரியர் ஆனபின் ஒரு முறை, திரு.வி.க. அவர்கள் பிறந்த மண்ணைக் கண்டுகளிக்க அவர் சென்றார். மூன்று நாள் இரட்டை மாட்டு வண்டிப் பயணம். (இப்போது பஸ்ஸில் [ஓடினால்!] விரைவில் போய்விடலாம். அவருடன் ஆரம்பப் பள்ளியில் படித்த கிராமத்துப் பெண்மணி ஒருவர், அங்கு அவரால் ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்வது இயலாது என்பதை உணர்த்தி, அவரைச் சென்னைக்கே திரும்பச் சொன்னார். உண்மைதான்! தற்காலச் செய்தி என்ன என்றால், அங்கு அவருடைய இல்லத்தையே ஒரு நூலகமாக மாற்றிய அரசு, ‘பாப்பாத்தியம்மா! மாடு வந்தது’ என்ற கூற்றுக்கிணங்க,

    அத்துடன் தன் கைங்கர்யத்தை நிறுத்திக்கொண்டது. கேட்பாரில்லை. நூல்கள் களவு போயின; கிழிந்து போயின. நூற்றுக்கணக்கான நூல்கள் இருந்த இடத்தில் நாற்பது நூல்கள் கூட இல்லை. இந்த அவலம் நேர 16 வருடங்கள் தான் பிடித்தன. அவருடைய நூற்றாண்டு விழா எடுக்கப்போகிறார்களாம். ஆனால், நூலகத்தை விஸ்தரித்துப் பராமரிப்பதை பற்றி ஒரு சொல் கூட பேசப்படவில்லை.

    நல்ல வேளை. தமிழ்மரபு அறக்கட்டளையின் சுபாஷிணி இங்கிலாந்தில் இருந்த என்னைப் பத்து வருடங்களுக்கு முன்னால், திரு.வி.க, அவர்கள் எழுதிய நூல்களையாவது மின்னாக்கம் செய்வதற்காகச் சென்னைக்கு செல்லத் தூண்டினார். நானும் விரைந்தேன். திரு.வி.க. அவர்கள் போற்றிய முருகன் அருள் கிட்டியது என்று தோன்றுகிறது. மற்றவர்களின் மறுபதிப்புகளை மின்னாக்கம் செய்ய விரும்பாத எனக்கு, அவருடைய அத்யந்த மாணவர் பேராசிரியர் மு.வரதராசன் அவர்களின் சீடரும், திரு.வி.க. அவர்களின் ‘பெரிய புராணம்’ நூலை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற முனைவர்.அ.நாகலிங்கம் அவர்களின் நட்பு கிடைத்தது; அவரிடமிருந்து திரு.வி.க, அவர்களின் சாது அச்சுக்கூடத்தில் பிரசுரம் செய்யப்பட்ட  மூலநூட்கள் கிடைத்தன. அவற்றின் மின்னாக்கப்  பிரதிகள் செய்யப்பட்டன. அவை அந்த நூலகத்தின் மின்னாக்க நூலகத்தில் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. பின்னணியில் அக்னிஹோத்ரம் டாக்டர் வாசுதேவன் அவர்கள் (எனக்கு மின்னாக்கம் வாத்தியார்) மிளிருகிறார்.

    ******

    Reference:

    http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jan/27/tamiol-nadu-thiru-vi-kas-home-turned-into-library-without-books-1764009.html

    சித்திரத்துக்கு நன்றிhttp://1.bp.blogspot.com/_BmyhDEvtwuE/SYrbdaZXmMI/AAAAAAAAAyQ/MkjLwxTtnkE/w1200-h630-p-k-no-nu/nallathor+veenai.gif

    ******

    “…தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின்தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி…விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்…இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடிபுகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்…கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது…கலப்பால் வளர்ச்சியே உண்டு…தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது… அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?…இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத் தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?…இயற்கை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நட்டில் வாழ்ந்துவரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடைமை கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்…பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது…வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி. ’யாதும் ஊரே யாவருங்கேளிர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்காலத் தமிழர்  சிறுமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகாது…”

    ~தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள்   ஜூலை 5: 1928, ஏப்ரல்  10,11,12: 1929 & ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.

    Share
  • யாருமில்லா மேடையில்

    கவிஞர் ஜவஹர்லால்

     

    யாரு மில்லா மேடையி லேநான்

    நாட்டிய மாடுகின்றேன்; — கேட்க

    யாரு மில்லா அவையினி லேநான்

    பாடல் பாடுகின்றேன்.

    மலரின் அசைவை அதுதரும் மணத்தை

    நுகர வாருமென்றேன்; — அந்த

    மலரே வாடி உதிர்ந்திடு வரையில்

    மனிதர் நெருங்கவில்லை.

    தென்னையின் கீற்றுச் சலசலப் பொலியின்

    தேனிசை கேளுமென்றேன்; — அங்கே

    தென்னையின் அடியில் நிற்பவர் கூடச்

    சலசலப் புணரவில்லை.

    சாதிக ளெழுப்பும் சச்சர வொலியின்

    சத்தம் அடக்குமென்றேன்; — அந்தச்

    சாதிகள் இரைச்சல் இன்னிசை யெனவே

    சுவைத்தலை யேகண்டேன்.

    ஊழல் எனவொரு புற்றுநோய் நாட்டை

    உருக்குலைக் குதென்றேன்நான்; — அந்த

    ஊழலில் குளித்தே திளைப்பவர் என்குரல்

    உதறிடல் கண்டுநொந்தேன்.

    யாரு மில்லா மேடையி லாடும்

    நாட்டியம் என்னபயன் ? – கேட்க

    யாரு மில்லா அவையினி லேஎன்

    பாடலால் என்னபயன் ?

    Share
  • நேற்றைய நிழல்!

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++

    unnamed

    நேற்றைய தினத்திலே

    எனது துயரெல்லாம் வெகு தூரம்

    போய் விட்டது !

    இப்போ தவை மீண்டது போல்

    தெரியுது எனக்கு !

    நம்பிக் கிடக்கிறேன் இன்னும்

    நேற்றைய தினத்துக்கு !

    இப்போது

    திடீரெனப் பாதி அளவு

    வாடிக்கை

    மானிடனாய்க் கூட

    நானில்லை !

    உடலுக்கு மேல் விழுகிறது

    ஒற்றை நிழல் !

    திடீரென நேற்றைய

    தின நினைவு எனக்கு மீளுது !

    எனக்குப் புரிய வில்லை,

    என்னை விட்டு

    ஏனவள் போனாள் என்று.

    சொல்லாமலே சென்று விட்டாள் !

    தவறாக ஏதோ நான்தான்

    உளறி விட்டேன் !

    நேற்றைய கூற்றுக்கு

    இப்போது

    வேதனைப் படுகிறேன் !

    காதல் விளையாட் டெனக்கு வெகு

    சாதாரண மாய் இருந்தது !

    இப்போ தெனக்கு தேவை,

    ஒளிந்து கொள்ள

    ஓரிடம் !

    நேற்றைய தினம் நினைவில்

    நிழலாய்ச் சுற்றுது !

    +++++++++++++++

    Share
  • அவனருள் கும்பிடடா!

     
    நல்லவை சுமந்து நன்மைகள் ஆற்றின்

    நாடு போற்றுமடா – நல்லது

    அல்லவை சுமந்து அல்லல்கள் வளர்ப்பின்

    அகிலம் தூற்றுமடா!
    பிறப்பின் பயனும் பிறர்க்கெனச் சொல்லும்

    பணியை ஆற்றிடடா – தனிச்

    சிறப்பை அதிலும் செலுத்தியும் வாட்டும்

    சிறுமை தூற்றிடடா!
    வாழ்வின் பயனும் புகழெனச் சொல்லும்

    வாழ்வை அமைத்திடடா – மிகத்

    தாழ்வுறும் நினைவை அறவே தள்ளியும்

    தர்மம் சமைத்திட்டா!

     
    ஏற்றமும் இறக்கமும் இரட்டைப் பிறவிகள்

    என்பதை அறிந்திடடா – நிலை

    மாற்றியும் இயற்கை காட்டுதல் உணர்ந்து

    மமதை எறிந்திடடா!

     
    காற்று என்றும் ஓர்திசை தன்னில்

    காலமும் வீசாது – நலம்

    ஆற்றும் செயலில் நன்மைகள் விளையின்

    நாடுனை ஏசாது!
    நல்லவை விதைப்பின் நன்மைகள் விளையும்

    நினைவில் ஏற்றிடடா – துயரில்

    தள்ளிடும் நினைவுகள் தன்னைத் தள்ளும்

    தர்மம் போற்றிடா!
    நாடுனைப் போற்றும் வண்ணம் நடந்து

    நற்பெயர் பெற்றிடடா – பெரும்

    கேடன் என்றுனை ஊரார் சாடா

    கொள்கையில் முற்றிடடா!

     
    மகிழ்ச்சி என்பது மனத்துள் உள்ளது

    மறந்தும் போகாதே – நிகழும்

    நிகழ்ச்சிகள் யாவும் ஈசன் செயல்தான்

    எவரையும் நோகாதே!

     
    இறைவன் வழங்கும் கடுகுள் மலையும்

    இருக்கும் நம்பிடடா – கூர் அறிவும்

    காலமும் சமமாய் வழங்கிய

    அவனருள் கும்பிடடா!

     
    04.02.2018
    கவிஞர் இடக்கரத்தான்.

    Share
  • சிலம்பில் முரண்கள்!

    -முனைவா் பா.பொன்னி

    இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பல புதுமைகளைப் படைத்துள்ளார். மன்னா்களே தலைவா்களாக இருந்த நிலையினை மாற்றியமைத்துக் குடிமக்களையும் முதன்மை வாய்ந்தவா்களாகப் படைத்துக் காட்டிய திறம் அவருக்கு உரியது. சமயப் பொதுமையை படைத்துக் காட்டல், மூவேந்தரையும் படைத்துக் காட்டுதல், கணிகையா் குலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை பௌத்த துறவியாக மாற்றிக் காட்டுதல் என்று அவா் படைத்துக் காட்டிய புதுமைகளைப் பட்டியலிடலாம். அவ்வகையில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பல முரண்பட்ட சூழல்களையும் படைத்துக் காட்டியுள்ளார். அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    குழந்தைப்பிறப்பு :

    சங்க இலக்கியத்தில் அன்பின் ஐந்திணை வழிப்பட்ட தலைவன் தலைவிக்கு மட்டுமே குழந்தைப்பேறு சுட்டப்பட்டுள்ளது. பரத்தைக்குக் குழந்தைப்பேறு சுட்டப்படவில்லை. பரத்தையரிடம் சென்றுவர சமூகத்தில் முழு உரிமையும் பெற்றுள்ளவன் ஆண். அவன் உரிமைகொண்ட பெண்ணுக்கு இல்ல உரிமையும், வாரிசு உரிமையும் மறுக்கப்பட்டது என்பா். பரத்தையும் தனக்குக் குழந்தைப்பேறு இல்லை என்பதால் தலைவனின் குழந்தையைத் தன் குழந்தையாக நினைத்து அன்பு செலுத்துவதனை,

    வருகமாள என்உயிர் எனப் பெரிது உவந்து
    கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன்
    மாசுஇல் குறுமகள் எவன் பேதுற்றனை
    நீயும் தாயை இவற்கு…”   (அகம்16 -10 13) என்ற பாடல் அடிகளால் அறியமுடிகிறது. பரத்தை தலைவனை விடவும் தலைவனின் புதல்வன் மீது மிகுதியான பாசம் உடையவளாகக் காணப்படுவதனை கலித்தொகை 82 ஆவது பாடல் விளக்குகிறது.

    ஆனால் சிலப்பதிகாரத்தில் கணிகையா் குலத்தைச் சார்ந்த மாதவிக்கே  குழந்தைப்பேறு காணப்படுகிறது.

             ”விஞ்சையின் பெயா்த்து விழுமம் தீா்த்த
              எங்குல தெய்வப் பேர்ஈங்கு இடுகென
              அணிமேகலையார் ஆயிரம் கணிகையா்
              மணிமேகலையென வாழ்த்திய ஞான்று”                     ( அடைக்கலக்காதை 36–39 ) என்ற அடிகள் பரத்தையா் குல மாதவியின் பிள்ளைப்பேற்றினை விளக்குகின்றன. கோவலனும் மாதவியை பரத்தைக்குலத்தைச் சார்ந்த பெண் என்று எண்ணாமல் தன் மனைவி என்று எண்ணியமையாலேயே தன் குலதெய்வத்தின் பெயரினை இடுகின்றான். பெற்றோர் முன்னிலையில் கரம் பிடித்த மனைவியான கண்ணகிக்குக் குழந்தைப்பேறு  இல்லாமல் கணிகையா் குலத்தைச்சார்ந்த மாதவிக்குக் குழந்தைப்பேற்றினைப் படைத்துக் காட்டியிருப்பது சிலப்பதிகார முரண்களுள் ஒன்று எனலாம்.

    கணவனுக்கு உணவளித்தல்:

    மங்கல வாழ்த்துப் பாடலில் கோவலன் கண்ணகியின் திருமண நிகழ்வினைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள் அதற்கு அடுத்த காதையாக மனையறம் படுத்த காதையினை அமைத்துள்ளார். கோவலனும் கண்ணகியும் தமக்கென இருந்த ஏழ்அடுக்கு மாளிகையில் நான்காம் அடுக்கில் இன்பமுடன் இருந்தமையை, கோவலனுக்குக் கண்ணகியின் மீதிருந்த அளப்பறிய அன்பினை விளக்குவதாக இக்காதையை இளங்கோவடிகள் அமைத்துள்ளார். ஆயினும் மனையறம் படுத்த காதையில் கோவலன் கண்ணகியை உலவாக்கட்டுரை பல பாராட்டியமையை மட்டுமே விளக்கிச் சுட்டியுள்ளார். அதனை அடுத்து, 

           வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
          மறப்பருங் கேண்மையோ டறப்பரி சாரமும்
         விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
         வேறுபடு திருவின் வீறுபெறக் காண
         உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணா்க்க (மனையறம் படுத்த காதை 84 – 88 ) என்று கோவலன் கண்ணகியைத் தனிக்குடித்தனம் வைத்த செய்தியோடு இக்காதையை இளங்கோவடிகள் நிறைவு செய்கின்றார். அவள் கோவலனோடு இல்லறத்தில் எத்தகைய முறையில் இல்லற வாழ்வினை சிறப்புடன் நடத்தினாள் என்பது குறித்து அவா் விளக்கவில்லை.

    ஆனால் கொலைக்களக் காதையில் கண்ணகி கோவலனுக்கு உணவு சமைத்துப் பரிமாறும் காட்சியைக் காட்சிப்படுத்துகிறார். கவுந்தியடிகளால் கோவலன் கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி செம்மண்பூசிய சிறு இல்லத்தில் அவா்களை இருக்கச் செய்கிறாள். கோவலனுக்கு உணவு சமைத்துப் பரிமாற  ஐயையைத் துணை இருக்கச் செய்து புதுப்பாத்திரங்களை அளிக்கச் செய்கிறாள். உணவு சமைக்கத் தேவையான பொருட்களையும் கொடுக்கின்றாள்.

               மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபின்
              கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய்
              வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
              மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
              சாலி யரிசி தம்பால் பயனொடு
      கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப (கொலைக்களக் காதை 23–28) என்ற அடிகள் கண்ணகி கோவலனுக்கு உணவு சமைக்கப்பெற்ற பொருட்களைக் குறிப்பிடுகின்றன. கண்ணகி உணவு சமைத்த காட்சியினை,

               மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
              கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்
              திருமுகம் வியா்த்தது செங்கண் சேந்தன
              கரிபுற அட்டில் கண்டனள் பெயர
              வைஎரி மூட்டிய ஐயை தன்னொடு
      கையறி மடைமையின் காதலற்கு ஆக்கி…  (கொலைக்களக் காதை 29–33) என்ற அடிகளில் காட்சிப்படுத்துகிறார். உணவு சமைத்து முடித்த பின் கோவலனை உபசரித்தமையை,

     தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
    கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
    செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்
    கடிமலர் அங்கையில் காதலன் அடிசீா்
    சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி (கொலைக்களக் காதை 35–39) என்ற அடிகள் விளக்குகின்றன. கோவலனுக்கு உணவு பரிமாறியமையை,

               மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்
               தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
               குமரி வாழையின் குருத்துஅகம் விரித்தீங்கு
               அமுதம் எண்க அடிகள் ஈங்கு… (கொலைக்களக் காதை 40–43)

    என்று கண்ணகி கோவலனுக்கு உணவு பரிமாறிய காட்சியைப் பதிவுசெய்துள்ளார். கண்ணகி கோவலனுக்கு சமைத்து உணவு பரிமாறும் காட்சி மனையறம் படுத்த காதையில் வந்திருத்தல் பொருத்தமானது. ஆனால் கோவலன் உயிர்துறக்கும் நிகழ்வு நிகழும் கொலைக்களக் காதையில் படைத்துக் காட்டியிருப்பது அவலச் சுவையை மிகுவிப்பதற்காகவே எனலாம்.

    கோவலன் வணிகக்குடியினரை சந்திக்காதிருத்தல்:

    ஊா்காண்காதையில் புறஞ்சேரியில் கண்ணகியுடன் இருந்த கோவலன் கவுந்தியடிகளிடம் மதுரை மாநகரில் உள்ள பெருவணிகருக்குத் தனது நிலைமையை அறிவித்து வருவதாகக் கூறுகின்றான்.

               தொன்னகா் மருங்கின் மன்னா் பின்னோர்க்கு
              என்னிலை உணா்த்தி யான்வருங் காறும்   (ஊா்காண்காதை 21–22)

    என்ற அடிகள் இதனை விளக்குகின்றன. கவுந்தியடிகளும் கண்ணகியுடன் தங்குவதற்கு மதுரையில் இடம் பார்த்து வரும்படிக் கூறி கோவலனை அனுப்புகிறார். ஆனால் கோவலனோ கணிகையா் வீதி, எண்ணெண் கலைஞா் வீதி,  அங்காடி வீதி, நவரத்தினக் கடைவீதி, பொன்மிகு கடை வீதி, துணிக்கடை வீதி, கூல வீதி ஆகியவற்றைக் கண்டு வருகின்றானே தவிர, தன் வணிக குலத்தைச் சார்ந்த ஒருவரையும் கண்டு அவன் தன் நிலையை விளக்கவில்லை. இதுவும் சிலம்பில் காணப்படும் முரண்களில் ஒன்றாகும். இதற்குக் கோவலன் மனதில் இருந்த குற்றவுணா்வு காரணமாக இருந்திருக்கலாம்.அல்லது காப்பியத்தின் வளா்ச்சிக்காக இங்கோவடிகள் அவ்வாறு அமைத்திருக்கலாம் எனக் கருத வேண்டியுள்ளது.

    நீதி தவறும் சூழல்

    கண்ணகி கோவலன் கொலையுண்டபின் மதுரையை எரிக்கின்றாள். அவளது சினத்தைத் தவிர்ப்பதற்காக மதுராபதித் தெய்வம் அவள்முன் தோன்றி பாண்டியா் குலத்தின் சிறப்பினைக் குறிப்பிடுகிறது. அப்போது பராசரன் என்னும் அந்தணன் கதையைக் கூறுகிறது.

    சேரமன்னனின் பரிசினைப் பெற்று தன் ஊரினை நோக்கி வந்த பராசரன் திருத்தங்கால் என்னும் இடத்தில் விளையாண்டு கொண்டிருந்த அந்தணச் சிறுவா்களைக் காண்கிறான். தனக்கு இணையாக மறை ஓதுபவா்க்குத் தன்னிடம் உள்ள பரிசுகளில் சிறிய மூட்டையைத் தருவதாகக் கூறுகிறான். வார்த்திகன் என்னும் அந்தணனின் மகன் சிறப்பாக ஓதி அவனிடம் பரிசு பெற்றுத் தன் இல்லம் செல்கின்றான்.அரசுப் பணியாளா்களில் சிலா் அவா்களது வளத்தினைக் கண்டு பொறாமை கொண்டு வார்த்திகனை அரசியல் முறைக்குப் புறம்பாகப் புதையல் பொருளைக் கவா்ந்து கொண்டவன் இவன் என்று கூறி குற்றம்சாட்டிச் சிறைக்கோட்டத்தில் இட்டனா். சிறையில் இடப்பட்ட வார்த்திகனின் மனைவி கார்த்திகை என்பாள் துயரமடைந்தாள். அவளின் நிலைஉணா்ந்த கொற்றவைக் கோவிலின் கதவு மூடிக்கொண்டது. அதுகேட்டு பாண்டிய வேந்தன் தன் ஆட்சியில் கொற்றவைக்கு மனக்குறை ஏற்பட்டதை அறிந்து அதன் காரணத்தை ஆராய முற்பட்டான். வார்த்திகனை சிறையில் இருந்து வெளிக்கொணா்ந்தான்.

    அந்தணன் மனைவி கார்த்திகைக்குத் துன்பம் ஏற்பட்ட நிலையில் கொற்றவை கோவில் கதவு மூடிக்கொண்டது என்று குறிப்பிடும் இளங்கோவடிகள் கோவலன் கொலை செய்யப்பட்ட நிலையில் ஏதேனும் இதுபோல் நிகழ்வு நடந்தமையைக் குறிப்பிடவில்லை. இந்த முரணும் ஆராய்ச்சிக்குரிய ஒன்று எனலாம். நடுகல் வழிபாட்டினைப் பெருந்தெய்வ வழிபாடாக மாற்ற முயன்ற நிலையில் அந்தணா்களுக்கு என்று சிறப்பாக முதன்மைதர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருந்ததா என்பதும் ஆய்விற்கு உரியது.

    சிலப்பதிகாரத்தில் காணக்கூடிய இம் முரண்கள் யாவும் காப்பியத்தின் வளா்ச்சிக்கு உதவுவதற்காகவோ, பாத்திரத்தின் மீதான பண்புநலனில் மாற்றம் கொள்வதற்காகவோ, அக்காலச் சூழலின் நிர்ப்பந்தம் காரணமாகவோ ஆசிரியரால் படைத்துக்காட்டப்பட்டுள்ளவை எனலாம்.

    ******
    கட்டுரையாசிரியர்
    உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவா்
    தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் மகளிர்  கல்லூரி (தன்னாட்சி)
    சிவகாசி

     

     

     

    Share
  • அழகு…!

    – ஆ. செந்தில் குமார்

    இளைஞர்க்கு அழகு போராடும் துணிவு!
    கலைஞர்க்கு அழகு இயம்பும் அறிவு!

    அறிஞர்க்கு அழகு அறிவின் திணிவு!
    கவிஞர்க்கு அழகு கருத்தின் செறிவு!

    செல்வர்க்கு அழகு எளிமையாய் இருத்தல்!
    சிறுவர்க்கு அழகு பணிவாய் இருத்தல்!

    தமிழுக்கு அழகு தொன்மையில் இளமை!
    தமிழர்க்கு அழகு விருந்தோம்பல் இனிமை!

    கதிருக்கு அழகு தலை குனிவு! – நெற்
    குதிருக்கு அழகு முழு நிறைவு!

    நிலவிற்கு அழகு களங்கமாய் இருத்தல்!
    உலகிற்கு அழகு பொறுமையாய் இருத்தல்!

    அழகு என்பது அகத்தைப் பொறுத்தது!
    இனிமையாய் இருப்பதே அனைத்திலும் சிறந்தது!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(203)

    -செண்பக ஜெகதீசன் 

    வானோக்கி வாழு முலகெல்லாம் மன்னவன்
    கோனோக்கி வாழுங் குடி. (திருக்குறள்-542: செங்கோன்மை) 

    புதுக் கவிதையில்… 

    வையத்து உயிர்களெல்லாம்
    வான்மழையை நம்பியே
    வாழ்கின்றன…

    நாட்டின் குடிமக்களெல்லாம்
    அரசின்
    நல்லாட்சியை

    நாடியே வாழ்கின்றனர்…! 

    குறும்பாவில்… 

    அகிலத்து உயிர்களெல்லாம்
    வாழ்வது வான்மழையை எதிர்பார்த்துத்தான்,
    நாட்டுமக்கள் நல்லாட்சி நோக்கித்தான்…! 

    மரபுக் கவிதையில் 

    மண்ணில் பெய்து வளம்சேர்க்கும்
    -மழையை நம்பி வாழ்கின்ற
    எண்ணில் நில்லா உயிர்கள்போல்,
    -எல்லா வளமும் நிறைந்திருந்தும்
    எண்ணம் நல்லதாய்க் கொண்டேதான்
    -எல்லா மக்களும் நலம்பெறவே
    கண்ணிய மாக ஆட்சிசெய்யும்
    -காவலன் நாடும் குடிமக்களே…! 

    லிமரைக்கூ… 

    மழைநாடும் மன்னுயிர்கள் போலே,
    நாட்டுமக்கள் நாட்டம் கொள்வார்கள்
    நல்லாட்சிதரும் மன்னன் மேலே…! 

    கிராமிய பாணியில்… 

    வேணும் வேணும் நல்லாட்சி
    எப்பவும் வேணும்
    மக்களக்காக்கும் நல்லாட்சி…

    ஒலகத்திலவுள்ள உசிரெல்லாம்
    வானத்துமழய நம்பியேதான்
    வாழ்க்கநடத்திக் கொண்டிருக்கு…

    அதுபோல
    நாட்டுலவுள்ள மக்களெல்லாம்
    நம்பியிருக்கது
    நல்ல ஆட்சி நடத்துற
    நல்ல ராசாவத்தானே…?

    அதால
    வேணும் வேணும் நல்லாட்சி
    எப்பவும் வேணும்
    மக்களக்காக்கும் நல்லாட்சி…!

     

     

     

    Share
  • தேர்தல்!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    பாலாறும் தேனாறும்
    பாய்ந்தோடும் ஊரெல்லாம்
    பலருக்கும் இலவசங்கள்
    பக்குவமாய் கிடைத்துவிடும்
    வேலையற்ற அனைவருக்கும்
    விரைவில் வேலைகொடுத்திடுவோம்
    வாக்களித்துத் தேர்தலிலே
    வாகைசூட வைத்திடுங்கள்!

    ஆட்சிதனில் அமர்ந்தவுடன்
    அனைவரையும் அணைத்திடுவோம்
    அக்கிரமங்கள் அனைத்தையுமே
    அடியோடு அழித்திடுவோம்
    போக்குக்காட்டிப் பொய்யுரைக்கும்
    பொறுப்பற்ற தலைமைகளைத்
    தேர்தல்தனில் வென்றபின்னர்
    திசைதெறிக்க ஓடவைப்போம்!

    காவல்துறை நீதித்துறை
    கசடனைத்தும் களைந்தெறிவோம்
    கற்பழிப்பு வழிப்பறிக்கு
    காட்டமாட்டோம் கருணையினை
    போதைவகைப் பாவனையைப்
    பொங்கிநின்று பொசுக்கிடுவோம்
    காதலுடன் வாக்களித்துத்
    தேர்தல்வெல்லச் செய்திடுங்கள்!

    இப்படிப் பலவற்றை
    ஏறும்மேடை பலவற்றில்
    செப்பமாய் உரைத்தபடி
    சிறப்பாக வணங்கிநிற்பார்
    வாக்குப்பெற்று தேர்தல்வென்று
    வசதியுடன் வந்தபின்னர்
    வாக்களித்த மக்களெலாம்
    மண்டியிட்டு வணங்கிநிற்பார்!

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 7

    க. பாலசுப்பிரமணியன்

    தடங்கல்களை எப்படித் தாண்டிச் செல்வது ?

    வாழ்ந்து-பார்க்கலாமே

    கிம் பீக் (Kim Peek) என்பவர் 1951ம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். பிறக்கும் பொழுதே இவருடைய மூளையில் சில குறைபாடுகள் இருந்தன. இவருடைய தலை சாதாரணமாக இருப்பவர்களின் தலையைவிடச் சிறிது பெரிதாகவும் மற்றும் இவருடைய மூளையில் வலது இடது மூளைகளை இணைத்துச் செயல்படும் கார்பஸ்கால்சோம் (CorpusCallosum) என்ற பகுதி வளர்ச்சியடையாமலும் இருந்தது. இதனால் இவ்வருடய மூளையின் செயல்பாட்டில் பல தாக்கங்கள் இருந்தன. உதாரணமாக இவரது வலது மூளையும் இடது மூளையும் தனித்தனியாக வேலைபார்த்ததால் இணைந்த ஒருங்கிணைப்பு இல்லாமலும் இருந்தது. அதன் காரணமாக இவர் ஒரு புத்தகத்தைப் படிக்கும் பொழுது இவருடைய ஒரு கண் ஒரு பக்கத்தையும் மற்றொரு கண் மற்றொரு பக்கத்தையும் பார்த்ததால் இரண்டு பக்கங்களையும் ஒரே நேரத்தில் இவரால் படிக்க முடிந்தது. அது மட்டுமல்ல. மூளை வளர்ச்சி சற்றே குறைவாக இருந்தாலும் இவருக்கு அபரிமிதமான ஞாபக சக்தி இருந்ததால் படித்த புத்தகங்களை உடனே நினைவில் கொள்ளவும் அதை முழுவதுமாக திரும்பிச் சொல்லவும் முடிந்தது. பள்ளிக்கூடங்களில் இவர் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இவருடைய தந்தை இவரை அருகில் உள்ள ஒரு நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர் தொடர்ந்து புத்தகங்களை படித்து ஒரு சிறிய காலத்திலேயே சுமார் 12000 புத்தகங்களை படித்தது மட்டுமென்றி அனைத்தையும் நினைவில் கொள்ளும் ஆற்றல் கொண்டார்.

    இவருடைய ஆற்றல்களை வெளிப்படுத்தும் வண்ணம் இவரை மையமாக  முன்னிறுத்தி ஒரு நிழற்படம் (cinema) எடுக்கப்பட்டது. “ரெயின் மேன்”(Rain Man ) எனப்படும் அந்தப் படம் ஒரு ஆஸ்கார் பரிசையும் பெற்றது. இவரை நேர்காணல் செய்த அந்தப்படத்தின் நடிகர்  காப்மான் (Hoffmaan) இவரைப் பற்றிச் சொல்லும் பொழுது ‘நானோ ஒரு நட்சத்திரமாக இருக்கின்றேன். நீங்களோ அதற்கு அப்பாற்பட்ட ஒரு சொர்க்கமாக இருக்கின்றீர்கள்” (I was only a Star. But you are from Heaven) என்றார். தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் அவருடைய உடல் இடர்ப்பாடுகளை பற்றிக் கேட்டபொழுது அவர் கூறினார் ” எந்த உடல் இடர்ப்பாடும் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு தடங்கலாக இருக்க முடியாது” இவர் ஒரு சாதனை மனிதர். “வாழ வேண்டும்’ என்ற ஒரு தன்னம்பிக்கை, ‘சாதிக்க வேண்டும்” என்ற ஒரு ஈடுபாடு, இவரிடம் இருந்தன. ‘திறன்களை” முழுமையாக உபயோகித்தல் போன்றவை ஒருவருடைய வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றது என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

    வாழ்க்கையிலே பிரச்சனைகளையும் தோல்விகளையும் வளர்ச்சிப்பாதையில் தடங்கல்களை சந்திக்காத மனிதர்களே கிடையாது. ஆகவே சிறு வயதிலிருந்தே குழந்தைகளை இவை அனைத்தையும் எதிர்பார்க்கவும் சந்திக்கவும் சமாளிக்கவும் தயார் படுத்த வேண்டும். வெறும் வெற்றிகளையும் சுகங்களையும் சந்தோஷங்களையும் மட்டுமே குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தி வாழ்க்கையில் அவைகளை மட்டுமே சந்திக்கவேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கி வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் தோல்விகளையும் துயரங்களையும் பிரச்சனைகளையும் கண்டு துவண்டு விடுவார்கள். தன்னம்பிக்கையை இழந்து வாழ்வே தொலைந்து விட்டது என்ற எண்ணத்தில் மனநோயாளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.

    பிறப்பிலே ஏற்பட்ட உடல் ஊனங்கள், வாழ்க்கைப் பாதையில் நோய்களாலோ அல்லது விபத்துக்களாலோ ஏற்பட்ட ஊனங்கள் மற்றும் மனநலக் கோளாறுகள் இவற்றைத் தாங்கிக்கொண்டு சாதனை படைத்தவர்கள் ஏராளம் .. ஏராளம்!  அமெரிக்காவில் அலபாமா என்ற இடத்தில் பிறந்த ஹெலன் கெல்லர் (Helen Keller) தன்னுடைய இரண்டு வயதிலேயே கண்களில் ஏற்பட்ட நோய் காரணமாகப் பார்வையை இழந்தார். ஆனால் அவருடைய சாதனைகள் உலகையே வியக்க வைக்கும் வகையில் அமைந்தன. லூயி ப்ரைல்லே தன்னுடைய சிறிய வயதில் ஒரு விபத்தின் காரணமாக ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக தன்னுடைய இரண்டு கண்களின் பார்வையை இழந்தாலும் தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்காக  பிரெய்லி எழுத்து (Braille system) முறையை வடிவமைத்து அவர்களுக்கு கற்றலுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

    குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கனவு காண வழிவகுக்க வேண்டும். அவர்கள் கனவுகளை ஏளனம் செய்தோ அல்லது நிராகரிக்கவோ கூடாது. அந்தக் கனவுகளை அடைய என்னென்ன வழிகள் என்பதைப்  பெற்றோர்கள் அருகில் அமர்ந்து விவாதிக்க வேண்டும். அந்த கனவுகளை அடையும் பாதையில் என்னென்ன கடினங்களை எதிர்கொள்ளவேண்டும். அதற்குத் தேவையான தயாரிப்புக்கள் என்ன என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

    குழந்தைகளின் வளர்ச்சி வெறும் மதிப்பெண்களை பெறுவதில் மட்டும் இருப்பதில்லை. இளம் பிராயத்தில் வாழ்க்கையின் உண்மைகளையும் தேவைகளையும் அறிந்து கொள்ளாவிட்டால் அவர்கள் தோல்வியைத் தழுவிக்கொண்டு இருப்பார்கள். இன்றைய சமுதாயத்தில் நல்ல பட்டம் பெற்ற பல பேர்கள் நேர்காணலில் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவதும், வேலையிலே சேர்ந்தபின் திறனற்றவர்களாகக் கருதப்படுவதும் நிதர்சனம்.

    வாழ்க்கை கல்வி வெறும் எழுத்தறிவு அல்ல. புத்தகங்களை படிப்பதும் காகிதங்களில் எழுதுவதும் மட்டும் கல்வியின் வெளிப்பாடாகக் கருத முடியாது. கருதவும் கூடாது. தன்னுள்ளே புதைந்து கிடக்கின்ற திறன்களை தகுந்த அளவில் தகுந்த வழியில் தகுந்த இடங்களில் வெளிப்படுத்துதல் கல்வியின் சீரிய நோக்கமாகும். இதற்குத் தன்னம்பிக்கையும் தன்னார்வமும் மிக அவசியம். சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார் ” நீ உன்னை நம்பு. உலகம் உன் காலடியில் நிற்கும்.” (Believe in yourself. The world will be at your feet) அலெக்சாண்டர் டூமாஸ் என்ற ஒரு மேதை கூறுகின்றார் : ” ஒரு நோயாளிக்கு மருந்துகள்  மற்றும் போதாது. நாம் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கை அதைவிட மிக்க அவசியம்”

    நாளைக் காலையில் நம்முடைய குழந்தைகள் தன்னம்பிக்கையும் முயற்சியும் உள்ள செல்வங்களாக எழுந்தால் நம்முடைய சமுதாயத்திற்கு வருங்காலத்திற்கான ஒளிவிளக்கு நிச்சயமாக ஏற்றப்பட்டிருக்கும்.

    (தொடரும்)

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (94)

    நிர்மலா ராகவன்

    நலம்-1-1-1

    `வெளிநாட்டுக்குப் போனோமா! ஒரு இடம் விடாமல் சுத்தினேன். இன்னும் ஒரு வாரத்திற்கு எழுந்திருக்க முடியாது!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாள் கமலா. `ஆனா, எங்க வீட்டுக்காரர் இருக்காரே, சுத்த மோசம்! எதுக்கு வீண் அலைச்சல்னு பாதி நேரம் ஹோட்டல்லேயே தங்கிட்டார்!’ என்று கண்டனம் தெரிவித்தாள்.

    இதில் யார் செய்தது புத்திசாலித்தனம்? உடல் நோக அலைந்த கமலாவா, தன்னால் இவ்வளவுதான் முடியும் என்று தன்னையே தடுத்துக்கொண்ட அவளது கணவரா?

    முன்பு எப்போதோ பயணித்தபோது, `உயிர் வாழ்வதே உணவருந்தத்தான்!’ என்று ஓயாது சாப்பிட்டு, உடல் நிலை சரியாக இல்லாமல் போக, பயணமே வேண்டாம் என்றிருப்பவர்களும் உண்டு. தவறு செய்தால் என்ன! அதிலிருந்து கற்கலாமே! அடுத்த முறை சற்று ஜாக்கிரதையாக இருந்தால் போயிற்று.

    இப்போது நம் தினசரி வாழ்க்கையை கமலாவின் பயணத்துடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். நம்மால் முடியுமா என்றே யோசிக்காது, எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொள்கிறோம். பிறகு உடல் ஓய்ந்துவிடுகிறது.

    கதை

    தம் மகன் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராவல் தினேசனின் பெற்றோருக்கு. அவர்களிடம் அதற்கான பொருள் வசதியும் இருந்தது.

    பதினாறு வயதான தினேசனின் தினசரி நடப்பு இப்படி: காலை ஏழு மணிக்குப் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுவான். வீடு திரும்ப நாலரை மணி ஆகிவிடும். அவசர அவசரமாக எதையோ சாப்பிட்டுவிட்டு, டியூஷன் அல்லது பியானோ வகுப்பு. அதன்பின் வீட்டுப்பாடம். தூங்குமுன் அரைமணி தொலைகாட்சி.

    `இளம் வயதில்தான் கற்க முடியும். இல்லாவிட்டால், பெரியவனானதும் ரொம்பக் கஷ்டப்படுவாய்!’ என்று தந்தை தினமும் சொல்வதை ஏற்று, அதன்படி நடக்கிறான் பையன். ஆனாலும், தனக்கு ஏன் மகிழ்ச்சி இல்லை, எப்போதும் சோர்வாக இருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. தன் நலனுக்குத்தானே செய்கிறார்கள் என்று பெரியவர்களை எதிர்க்கத் தோன்றவில்லை.

    சுறுசுறுப்பு என்றால் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காது, எதையாவது செய்துகொண்டே இருப்பதல்ல. `பயனுள்ள காரியம்’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், நேரம் போகப்போக, தளர்ச்சி உண்டாக, எடுத்த காரியம் விரைவில் முடிவதில்லை. இப்போது மனமும் சோர்வடைய, பொறுமை மீறுகிறது. `ஏன்தான் ஆரம்பித்தோமோ!’ என்று நம்மையே நொந்துகொள்ளும் நிலை வருகிறது.

    இப்படி நம் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ள நம்மையறியாது என்னென்னவோ செய்கிறோம்.

    என்ன சொல்வார்களோ!

    பிறர் என்ன சொல்வார்களோ என்று பயந்தே பலர் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தயங்குவது உண்டு. திறமை இருக்கலாம். ஆனால் வேண்டாத உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு, அவர்கள் தம்மால் இயன்றதைச் செய்யத் தவறிவிடுகிறார்கள். பழி — அதிர்ஷ்டத்தின்மேல்.

    `குடும்பத்தில் நடப்பதையெல்லாம் இப்படி – உங்களைப்போல — வெளியில் சொல்ல முடியுமான்னு பயம். அதான் நான் எழுதறதில்லே!’ என்று என்னிடம் தெரிவித்தாள் திருமணமான பெண்ணொருத்தி.

    இவளுக்குத் தன்னால் ஏன் தைரியமாக எழுத முடிவதில்லை என்ற ஏக்கம். பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால், நம் தரத்தைக் குறைத்து எடைபோட்டுவிடும் அபாயம் உண்டு.

    கதை

    “எனக்கு பேனா பிடிச்சு, ஒரு வார்த்தையாவது எழுதணும்னு ஆசை!” என்றாள் மாலதி. பெரிய படிப்பு படித்திருந்தாள். ஆனால் இப்போது கதைப்புத்தகம்கூட படிக்கப் பிடிக்காதாம்.

    இலக்கு இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படி அடைவது என்று முயற்சிக்க வேண்டாமா!

    “தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க, நிறையப் படிக்க வேண்டும். புதிய, பழைய புதினங்கள், பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாறு..,” என்று நான் அடுக்க, அதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொருத்தி, “நீங்க இப்பவும் படிக்கிறீங்களா!’ என்று அதிசயப்பட்டாள்.

    அவளுடைய ஆச்சரியம் என்னைத் தொற்றிக்கொண்டது. படிப்பதற்கு வயது ஒரு தடையா!

    “நான் எதை, எப்படி எழுதப்போகிறேன் என்று நண்பர்களிடம் விவாதிப்பேன்!” என்றார், எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த முத்து.

    அவர்கள் `இதெல்லாம் நன்றாக இல்லை. சுவாரசியமே இல்லை,’ என்றால் இவரது உற்சாகம் குன்றிவிடும். எழுதுவதற்குமுன்னரே தமக்குத் தடை விதித்துக்கொள்வார். உருப்படியாக எதையும் ஏன் எழுத முடியவில்லை என்று அவருக்குப் புரியவில்லை.

    ஏதாவது பேட்டி கொடுத்ததும் சிலர், `எப்படி எழுதப்போகிறீர்கள்?’ என்று விசாரிப்பார்கள். தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அது எழுத்தாளர்களின் கற்பனைக்கு இடையூறு.

    கதை

    மலேசிய நாட்டில் விவாகரத்தைப்பற்றி எனக்குப் புள்ளிவிவரம் சேகரித்துக் கொடுத்தவர், “எப்படி எழுதப்போகிறீர்கள்?” என்று விசாரிக்க, “தெரியாது!” என்று நான் பதிலளித்தேன்.

    என்னைப் பொறுத்தவரை, நான் எதை, எப்படி எழுதப்போகிறேன் என்று எழுதி முடிக்கும்வரை எனக்கே தெரியாது.

    அதை அவரால் நம்ப முடியவில்லை. கோபத்தை வெளிக்காட்டினார். “அது எப்படி, இப்படிச் சொல்கிறீர்கள்? நாங்கள் இவ்வளவு உதவி செய்கிறோம்..,” என்று ஆரம்பித்தார். நிறைய தாக்கினார்.

    வேண்டுமென்றே சண்டை போடுகிறாரா?

    “நான் எழுதுமுன் யாரிடமும் அதைப்பற்றிக் கூறுவதில்லை. If you want to argue..,” என்று இழுத்தேன். அவர் சட்டென்று அடங்கிப்போனார்.

    அவருடைய மேலதிகாரியின் உத்தரவுப்படி எல்லாம் கொடுத்தாயிற்று. இவளிடமின்று கழன்றுகொண்டால் போதும் என்று நினைத்திருப்பார்.

    பிறரது எதிர்பார்ப்பின்படி எப்போதும் நடப்பது நமக்கு உகந்ததா என்று எண்ணிப்பார்த்தால், அவசியமில்லாததைத் தவிர்க்க இயலும். வாழ்க்கைச் சக்கரத்திற்கு இன்னொரு எண்ணை.

    கதை

    சுதாவின் கணவருக்கு வெளிநாட்டிலிருந்து அவருடைய அலுவலகத்திற்கு வருகை புரிபவர்களைக் கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். அப்போதெல்லாம் நடக்கும் இரவு விருந்துபசாரத்தில் அவளும் கலந்துகொண்டாக வேண்டும். அது மரியாதை என்று கருதப்பட்டது.

    சுதாவோ வெளிவேலை செய்பவள். வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு பகல் நேரத்தைக் கழிப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் இரவிலும் அவர்களைப் பிரிந்து, முன்பின் பழக்கமில்லாதவர்களுடன் அர்த்தமில்லாமல் பேசிச் சிரிப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை. அத்துடன், மறுநாள் உடல் ஓய்ந்துவிடும்.

    தனக்குப் பிடித்ததில் மட்டும் ஈடுபடுத்திக்கொண்டு, கட்டுப்பாட்டுடன் இருந்ததில் சுதாவின் வாழ்க்கையில் சிக்கல் கிடையாது.

    `இவள் என்ன, இப்படி இருக்கிறாளே!’ என்று பிறர் நினைத்திருக்கலாம். அவர்களுக்கு அவளைப்போல் துணிச்சலாக நாம் இல்லையே என்ற ஏக்கம். அவள் பெற்ற குழந்தைகளுக்கோ, `அம்மாவுக்கு எங்களுடன் இருக்கத்தான் பிடிக்கும்!’ என்று கொள்ளைப்பெருமை.

    சிலர், வெளிப்படையாகவே தம்மிலிருந்நது மாறுபட்டவர்களைத் தாக்கி, அதில் அற்ப மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு பிறரின் மகிழ்ச்சியையும் சுயகௌரவத்தையும் பறிப்பவரிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால்தான் நிம்மதி.

    பிரச்னையா? தீர்வை யோசி!

    கானடா நாட்டில் சில பெண்மணிகளைப் பேட்டி கண்டேன்.

    காதரின் என்ற வெள்ளைக்கார பெண்மணி, “நான் இங்கிலாந்தில் பிறந்து வாழ்ந்தவள். கல்யாணத்திற்கு முன்பே என் கணவருக்கு இங்கு வருவதாக யோசனை இருந்திருக்கிறது. ஆனால் அதை என்னிடம் கூறவில்லை. முன்பே தெரிந்திருந்தால், நான் சம்மதித்திருக்கவே மாட்டேன்!” என்றாள் தீராத கசப்புடன்.

    அவளுக்கு அறுபது வயதுக்குமேலிருக்கும். முப்பது ஆண்டுகளாக கசப்பிலேயே உழன்றிருக்கிறாள்! மாற்ற முடியாது என்ற நிலையில், வந்ததை ஏற்றுக்கொண்டிருந்தால் புதிய சூழ்நிலையில் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கலாமே!

    மலேசியாவிலும் ஒரு பெண்மணி இப்படித்தான். “இங்க வந்து நன்னா மாட்டிண்டாச்சு!” என்று என்னிடம் சலித்துக்கொண்டாள். கணவருக்கு நல்ல ஊதியம் கிடைக்கும் என்று அயல்நாட்டுக்கு வரும்போது இருந்த எதிர்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

    “இந்தியாவிலேயே இருந்திருந்தா, என் பெண்ணுக்கு பாட்டு, டான்ஸ் எல்லாம் கத்துக்குடுக்கலாம்!” என்ற மேலும் அரற்றியவளிடம், “இங்கேயும்தான் கத்துக்குடுக்கறவா இருக்காளே!” என்றேன், மெள்ள.

    `இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம்!’ என்றெல்லாம் நடக்காத காரியங்களை அடுக்குவதைவிட, இன்று என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கலாமே!

    சூழ்நிலைக்கு ஏற்ப நம்மைச் சிறிதளவாவது மாற்றிக்கொண்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். குறைந்த பட்சம், சிக்கல் இல்லாத வாழ்க்கையால் நிம்மதியாவது நிலைத்திருக்கும்.

    தொடரும்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4258

    பார்த்தோர் பசுமையாய், பாராதோர் பூதமாய்,
    சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய், -ஆர்த்தொலிக்கும்,
    சங்கில் மவுனமாய், சக்கரத்தில் சீற்றமாய்,
    எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்….!

    Share
  • ’’சிவ ராத்திரி’’

    download (1)

     

    “இன்றுசிவ ராத்திரி ஈசன் இறைவியை
    மன்றில் கலந்து மகிழும்நாள் -ஒன்றாய் –
    நமச்சிவாய மந்திரத்தை நாளெல்லாம் ஓதி –
    உமைச்சுமையான் தாளிரெண்டை உன்னு “….கிரேசி மோகன் ….

     

    வெறுத்துப் பேசுவதாய், கார்முகில் வண்ணா
    அருத்தம் கொள்ளாதே , கேளென் -வருத்தத்தை,
    கண்ணனுனைக் காணாது போனாலென் கண்கள்முக்
    கண்ணனைக் காணப்போம் காண்….கிரேசி மோகன்….!

    சிவராத்ரியுடன் ‘’பனி’’ சிவசிவா என்று விலகும்…பனிக்குக் காரணமான பெருமாள்(மார்கழிக் கண்ணன்) சிவநாமம் ஜபிக்கிறார்….!

    ’’தாணு(சிவன்) சிவராத்ரி தூக்கமேனோ, பாற்கடலில்
    வேணு(திருமால்) தூக்கத்தை விட்டொழித்தார்: -மோன
    முனிகுரு தட்ஷிணா மூர்த்தியின் நாமம்
    பனிமார் கழியோன்ஜ பிப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    பாரதியாரின் ‘’குயில் பாட்டு’’…..!
    ————————————————————————-

    IMG_4257 (1)

    ’’கூட்டுக் குயிலுக்கோர், கீதையாம் பாட்டினை,
    கூட்டியிசை ஹார்மனி கண்ணனை: -கோட்டுக்குள்
    போட்டதற்கு வாஷிங்கை(WASHINGTON KESHAV) பூசிய கேசவ்கை
    போட்டிருக்கும் காப்பு பிரஷ்(BRUSH)’’….கிரேசி மோகன்…

    Share
  • இன்று ஒரு முகம் கண்டேன் !

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++

    unnamed

    இன்று ஒரு முகம் கண்டேன்

    கண்ட பொழுதை மறக்க முடியமா ?

    இருவரும் சந்தித்த இடத்தை

    மறக்க இயலுமா ?

    எனக்குத் தகுதி யானவள் அவளே;

    எமது சந்திப்பை

    இந்த உலகம் அறிய வேண்டுமென

    விழைபவன் நான்.

    வேறோர் நாளெனின் நினைவில் கொள்ளேன்.

    தெரியாமல் போகும்.

    இன்றென் கனவில் தோன்றுவாள் !

    வீழ்வேன் காதலில் ! ஆம் நான்

    வீழ்வேன் காதலில் !

    மீண்டும் என்னை அழைக்கிறாள்

    மறுபடி !

    இதுபோல் வேதனை இதுவரை

    எனக்கில்லை !

    தனித்துக் கிடந்தேன் !

    சிலவற்றை நான் இழந்தேன் !

    மற்ற பெண்டிரை நானினி நோக்கேன் !

    உன்னைப் போல் இல்லை

    அப்பெண்டிர்;

    மீண்டும் என்னை விளிக்கிறாள்

    மறுபடி !

    வீழ்ந்தேன் காதலில் ! ஆம் நான்

    வீழ்ந்தேன் காதலில் !

    ++++++++++++++++++

    Share