Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180206 Yadavabhyudayam 19 - lr - Dwaraka 24x32cms Jarasandha attacks Mathura. Krishna doesn’t attack Jarasandha as Bheema was destined to kill him. Krishna commands the king of the sea to provide an island. There, Krishna has the city of Dwaraka constructed by Vishwakarma, which the devas feel that it was a reflection of their own city Amaravati.He transports the citizens of Mathura by his yogamaya to Dwaraka. The whole city was like a heap of gems, Krishna being the central gem; It was like a gem necklace worn by the sea. The devas thought it was a reflection of their own city Amaravati. With the presence of Krishna, Dwaraka was protected from the internal and external afflictions. Rukmini, daughter of the Vidarbha king were the divine couple. Born to the Vidarbha king, Bhishmaka, Rukmini was Lakshmi incarnate. Krishna was always in her mind. Krishna carries her away, on the wishes of Rukmini. As she came out of the temple and saw Krishna, her glances were like garlands she placed on him during the swayamvara. He grasps her hand - which looked like a bee desiring for her lotus face and her eyes became the bees for his lotus face.
    180206 Yadavabhyudayam 19 – lr – Dwaraka 24x32cms Jarasandha attacks Mathura. Krishna doesn’t attack Jarasandha as Bheema was destined to kill him. Krishna commands the king of the sea to provide an island. There, Krishna has the city of Dwaraka constructed by Vishwakarma, which the devas feel that it was a reflection of their own city Amaravati.He transports the citizens of Mathura by his yogamaya to Dwaraka. The whole city was like a heap of gems, Krishna being the central gem; It was like a gem necklace worn by the sea. The devas thought it was a reflection of their own city Amaravati. With the presence of Krishna, Dwaraka was protected from the internal and external afflictions.
    Rukmini, daughter of the Vidarbha king were the divine couple. Born to the Vidarbha king, Bhishmaka, Rukmini was Lakshmi incarnate. Krishna was always in her mind. Krishna carries her away, on the wishes of Rukmini. As she came out of the temple and saw Krishna, her glances were like garlands she placed on him during the swayamvara. He grasps her hand – which looked like a bee desiring for her lotus face and her eyes became the bees for his lotus face.

    ’’மாலை துவாரகா மத்தியில் மாலர்கோன்
    நீல மணிவண்ணர் நிற்கின்றார்: -கோலமலர்
    கண்ணனைக் கண்டவர் காதலி ருக்மணி
    கண்களால் வண்டாய்க் கலப்பு’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180205 Yadavabhyudayam 18 -  wm-24x32cms  Desika describes Krishna in Mathura. Ugrasena was made king and Krishna preferred to be the crown prince. The royal umbrella held over him was a lotus from his navel. The flywisk (chamaras) on either side appeared as though it was his hamsa avatara.  He was adorned with the crown brought to him by Garuda. The vedas which served as the cows were now his four royal horses. His flute attained the original form of the conch. Ugrasena ruled the kingdom with the help of Krishna.
    180205 Yadavabhyudayam 18 – wm-24x32cms Desika describes Krishna in Mathura. Ugrasena was made king and Krishna preferred to be the crown prince. The royal umbrella held over him was a lotus from his navel. The flywisk (chamaras) on either side appeared as though it was his hamsa avatara. He was adorned with the crown brought to him by Garuda. The vedas which served as the cows were now his four royal horses. His flute attained the original form of the conch. Ugrasena ruled the kingdom with the help of Krishna.

     

    ”கண்ணன் உதவியுடன் கம்ஸ மதுராவை
    உன்ன தமாயாண்டார் உக்கிரர் :- மென்மையாம்
    அன்னத்தின் சாமரம், ’ஆ’க்கரசு அந்தஸ்து,
    விண்ணப்பர்(கருடர்) உச்சி வரைந்தார்(கிரீடம்)-முன்னைப்புல்-
    லாங்குழல்வெண் சங்காய் லபித்திட, நாபியின்,
    தாங்கு குடைகுமு தம்’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (260)

    இவ்வார வல்லமையாளராக பேராசிரியர் கண்மணி அவர்களை அறிவிக்கிறோம்.

    நாம் அனைவரும் “பழைய சோறு” என அறியும் உணவு இவரால் “ஐஸ் பிரியாணி” என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    அரை நூற்றா ண்டுக்கு முன்பு வரை என் அருமை எல்லோருக்கும் தெரிந்து தானே இருந்தது.
    எதனால் இந்த திடீர் மாற்றம்?
    என்னை எல்லோரும் ஒதுக்கி விட்டார்கள்.
    வெறும் வயிற்றில் ஒரு செம்பு நிறைய என்னை ஊற்றிக் குடித்துவிட்டு தெம்பாக வேலை பார்த்த பாட்டாளி வர்க்கத்திற்கு இப்போது என் நினைவே இல்லாமல் போய் விட்டதே !? அந்த அளவிற்கு போலி நாகரிகம் மேலாதிக்கம் செலுத்துகிறது.

    வட்டில் நிறைய என்னைப் போட்டு கெட்டித்தயிர் ஊற்றி பச்சை மிளகாயைக் கல்உப்போடு சேர்த்துக் கடித்துச் சுவைத்தவர் அளவிட முடியுமா?
    பச்சை வெங்காயத்தைக் கூட்டி பசியாற்றியதோடு ஆரோக்கியத்தையும் கட்டிக் காத்ததெல்லாம் பழைய கதையாகி விட்டது.
    ஊறுகாயும் ,வடகமும் ,வத்தலும் என எத்தனை எண்ணிலடங்கா கூட்டாளிகள்.எல்லாம் எளிமையின் சின்னங்கள்.
    ஒருவேளை இந்த எளிமை தான் என்னை ஓரங்கட்ட வைத்து விட்டதோ?!

    என்னோடு சேர்த்து வைத்துச் சுவைத்த பக்கஉணவுகள் —-அவற்றுக்கு எல்லாம் இன்னும் மவுசு குறையவில்லை.
    மாதா ஊட்டாத சோறு மங்கா ஊட்டும் என்பார்களே —ஒரு ராஜபாளையம் சப்பட்டை —தோல் சீவி துண்டு போட்டால் —இந்த இணைக்கு ஈடு எது?
    பங்குனி சித்திரை கத்தரி வெயிலின் போது களைப்பு நீங்க என்னளவிற்குத் தகுதியான வேறு உணவு எது?
    சப்பட்டை சீசன் ஓய்ந்து பஞ்சவர்ணம் வந்தால் தோலைச் சீவ வேண்டியதில்லை.—உரித்து விட்டு என்னோடு கடித்துச் சாப்பிடுவது தானே ருசி.
    எல்லா மாம்பழமும் வரத்து குறையும்போது வரத்தொடங்கும் காசாலட்டு;சும்மா கழுவித் தோலோடு வைத்துக்கொண்டு ஒருவாய்சோற்றுக்கு ஒருகடி

    சைவம் மட்டும் அல்லாமல் அசைவத்திற்கும் ….அசராமல் ஈடு கொடுத்தேன்.
    ஒரு விரலளவு சீலா கருவாடு போதும்;அப்படியே எல்.பி.ஜி .காஸ் அடுப்பிலேயே சுட்டு விடலாம்…பானை சோறும் காலி.
    இன்னும் வக்கணையாக வேண்டுமென்றால் ……
    “மையூன் தெரிந்த நெய்”யில் வெடித்து வேகத் தொடங்கும் …..வெடிகறி
    இப்படியே இன்னும் நீட்டிக்கொண்டே போகலாம்.
    நீர்ச்சோறு /பழையது என்றெல்லாம் பெயர் பெற்ற எனக்கு மாணவர் கூட்டம் வைத்த பெயர் தான் ஐஸ் பிரியாணி.
    என்னோடு போட்டி போட …..ஹைதராபாதி /செட்டிநாடு /ஆம்பூர் …..இன்னும் என்னென்ன …..
    பருப்புச் சோறுக்கு நெய் ஊற்றித் தயிரோடு உண்ணும் கூட்டத்தைப் பார்த்து ரசித்துச் சிரித்து விடலாம்…….குழந்தைக் கூட்டம் என்று ….
    ஆனால் அதைக் கூகைக்குப் பலியாகப் படைத்த சமுதாயம் தமிழ்ச் சமுதாயம் என்றால் ……கொடுமை …கொடுமை என்று கூக்குரலிடத் தோன்றுகிறது.
    உஷ்ஷ் ….எழுத்து கத்தக் கூடாது .
    அமைதி …அமைதி ……அமைதி ”

    மையூன் புழுக்கல் எனும் சங்கத்தமிழ் சொல்லாடலுக்கும் மிக புதுமையான, ஆனால் ஏற்கும் வண்ணம் புழுக்கல் என்பது அரிசி அல்ல, இறைச்சி புழுக்கலே எனும் விளக்கமும் அளித்தார். “உரை ஆசிரியர்களின் உரை என்பது விளக்கு கம்பம் போல, அதை ஒரு பாதைகாட்டியாக தான் பயன்படுத்தவேண்டுமே ஒழிய, அதையே சாசுவதமாக பிடித்து நின்றுவிடகூடாது” எனும் சிறப்பான வழியும் காட்டுகிறார்.

    இவரது தமிழின் மேன்மையை பாராட்டி இவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share
  • படக்கவிதைப் போட்டி 146-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    bulls

    கம்பீர நடைபயிலும் காளைகளைப் படமெடுத்து வந்திருக்கின்றார்  திரு. நித்தி ஆனந்த். படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தேர்வு செய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். படமெடுத்தவர், அதனைத் தேர்ந்தெடுத்தவர் இருவருக்கும் என் நன்றி உரித்தாகுக!

    மாடே செல்வமென்று மக்கள் வாழ்ந்த காலம் இன்று மலையேறிவிட்டது. அதனால் மாடுகளோடு கூடிவாழ்வோரும் குறைந்துவிட்டனர். இத்தகு சூழலில் சாலையில் மாடுகளை ஓட்டிச் செல்வோரைக் காண்கையில் இவை எங்கே செல்கின்றன…உழுதற்கா… இல்லை…அடிமாடாய் அழிதற்கா எனும் கவலையும் எழவே செய்கின்றது.

    விடைகள் (காளைகள்) நகரும் பாதைகுறித்து விடைபகரும் பொறுப்பை நம் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்!

    ***** 

    சீமை மாடுகள் வந்தபிறகு நாட்டுமாடுகள் மீது நம் மக்களுக்கு நாட்டங்குறைந்துவிட்டது; அழிவைநோக்கிச் செல்லும் நாட்டு மாட்டினத்தை உடன் காப்பது நம் கடன் என்கிறார் திரு. ஏ.ஆர். முருகன். 

    மாடுகளின் மாண்பு!!

    செவலை மயிலையுன்னு
    எவ்வளவோ மாட்டினங்கள்
    அவ்வளவும் இன்னிக்கு
    அதிசயமாய் ஆயிடுச்சு
    நாட்டுப்பசும்பால் காயவச்சு
    புரை போட்ட தயிரு கடஞ்ச
    வெண்ணெயில நெய் எடுத்து
    வச்ச கையின் வாசம்
    வீதியிலும் மணமணக்கும்!!
    சீமையில இருந்து
    ஜெர்சி…சிந்துனு
    வந்ததுக்குப்பின்னால
    நாட்டுக்கன்னுக மேல
    நாட்டங்கொறஞ்சுபோச்சு!!
    இருக்கும் ஒண்ணு ரெண்டும்
    இப்பொவோ அப்பொவோனு
    அழிவ நோக்கிப்போயிட்டிருக்கு!
    கெடாரி நாலு பாதையில போறத
    பாக்கிறதில் மகிழ்ச்சி!!
    கட்டுத்தறி தவறாம
    நாட்டு மாடு வளர்க்க
    விவசாயிகள் அனைவருக்கும்
    விழிப்புணர்ச்சி வரவேணும்!!
    எருவுக்கு சாணம்
    மருந்துக்கு கோமியம்
    விருந்துக்குபால்மோர்தயிர்
    இத்தனையும் கொடுக்கிற
    உத்தமமான ஆவினத்தின்
    உருப்படிகள் பெருக வேணும்!!
    கால்நடைச் செல்வங்களை
    காப்பாற்றி வச்சாத்தான்
    அடுத்த தலைமுறைக்கும்
    அவைகளால் பயன்கிடைக்கும்!!
    மாடுகள் தானேனு
    மட்டமா நினைக்காம
    சாமியோட ரூபமுன்னு
    காமிப்போம் அகிலத்திற்கு!!

    *****

    ”எது இனிய வாழ்க்கை? தொலைந்துபோன கிராமம், அழகிய கிராமம்” எனும்  மூன்று முத்தான தலைப்புக்களில் மண்ணின் மணங்கமழும் கிராமத்து எழில் வாழ்க்கையையும், கிராம மக்களின் வெள்ளந்தி உள்ளத்தின் மகிமையையும், கிராமங்களை விட்டகன்றதால் நம் இன்பமும் நமைவிட்டு அகன்றுவிட்டதையும் நெஞ்சைத் தொடும் கொஞ்சுதமிழ் வரிகளில் கவிதைகளாய் வடித்துள்ளார் திரு. ஆ.செந்தில் குமார். 

    எது இனிய வாழ்க்கை?

    தென்னங்கீற்றில் கூரை வேய்த
    சின்னதாய் ஒரு ஓலைக் குடிசை!
    குடும்பத்தின் பசி போக்க
    குறைவிலா பயிர் வளர்நிலம்!

    நீருடைய என்றும் வற்றாத 
    நிலத்திடையே ஒரு கிணறு!
    அதைச் சுற்றி வளர்ந்த
    அழகான பத்து தென்னைமரங்கள்!

    பால்தரும் பசுமாடு இரண்டு – நிலத்தைப்
    பண்படுத்த எருதுகள் இரண்டு!
    பட்டியில் சில ஆடுகள்!
    பண்ணையில் சில கோழிகள்!

    […]

    நிழலுக்கு ஒரு வேப்பமரம் – அதனடியில்
    அழகாய் ஒரு கயிற்றுக்கட்டில்!
    உழைத்த களைப்புக்கு பழங்கஞ்சி!
    பிழைப்புக்கு சிறிது பணம்!

    கையால் குத்திய அரிசி – சமைக்க
    களிமண்ணால் செய்த பாண்டங்கள்!
    அன்பைப் பரிமாறும் மனைவி!
    பண்பில் சிறந்த குழந்தைகள்!

    பக்கத் துணையாய் உறவுகள்!
    படுத்த உடனே உறக்கம்!
    இதைவிட இனிமை இனியுண்டோ?
    இப்பிறவியில் கிடைக்க வாய்ப்புண்டோ?

    *****

    தொலைந்துப் போன கிராமம்

    […]
    நெல்விளைந்த பூமியெல்லாம் கல்முளைத்த மனையாச்சு!
    கல்நட்ட கழனியெல்லாம் கண்கவரும் வீடாச்சு!

    வழிப்போக்கர் ஓய்வெடுக்கத் திண்ணைவைத்த வீடில்லை!
    எழிற்தோற்றம் கொண்டிருந்த ஏரியிலும் நீரில்லை!
    ஆட்டுக்கல்லும் அம்மியும் காண்பதெல்லாம் அரிதாச்சு!
    வீடுகளில் திருக்கை உரலுலக்கையனைத்தும் போயாச்சு!

    பனைமரங்களெல்லாமே அழிவின் விளிம்புக்கு வந்தாச்சு!
    சினையாக மாட்டுக்கு ஊசியே என்றாச்சு!
    நாதியற்றுப் போய்விட்ட நாட்டு மாட்டினங்கள்!
    சேதிசொல்லும் குட்டிச்சுவர் பழங்கால சரித்திரங்கள்!

    […]

    *****

    அழகிய கிராமம்

    கருக்கல்லில் கண்விழிப்பர்! கழனிக்குச் சென்றுழைப்பர்!
    மாடுகன்று ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றிடுவர்!
    தொழுவத்தைத் தூய்மைசெய்து வாயிலில் சாணந்தெளிப்பர்!
    அழகான மாக்கோலம் வீட்டிற்கழகுசேர்க்க இட்டிடுவர்!
    எருக்குழியை ஏற்படுத்தி தொழுவுரத்தைச் சேகரிப்பர்!

    […]

    பச்சைப் பட்டாடை போன்றிருக்கும் வயல்வெளி!
    வயல்களைப் பிரித்திருக்கும் வரப்பென்ற இடைவெளி!
    அதிகாலைப் பொழுதினிலே நனைத்திருக்கும் பனித்துளி!
    செங்கதிரோன் உதயத்திலே சிவந்திருக்கும் வான்வெளி!
    இத்தகு கிராமமே சிங்காரச் சமவெளி!

    பனையோலைக் குடிசையெல்லாம் எளிமையினைப் பறைசாற்றும்!
    ஐய்யனார் கோயிலெல்லாம் பக்தியின் திடங்காட்டும்!
    முதியோரின் பேச்செல்லாம் வெள்ளந்தி மனங்காட்டும்!
    மக்களின் மனதெல்லாம் மாட்டிடமும் பாசங்காட்டும்!
    இத்தகு கிராமத்திலே இருப்பதுவேநம் மனதின்நாட்டம்!

    *****

    ”ஆடு மாடுகளைச் சொந்தப் பிள்ளைகள்போல் பாடுபட்டு வளர்ப்பவன் உழவன். அவன் சேற்றில் கால்வைத்தால்தான் நம் மக்கள் சோற்றில் கைவைக்க முடியும். ஆனால் இன்றோ… வான்பொய்த்து வளங்குன்றிப் போனதனால் கழனிகளெல்லாம் கட்டுமனைகள் ஆனதே” என்று வெதும்புகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    அனைத்துயிர்க்கும் அவனே நண்பன்..!

    அதிகாலையில் ஆதவன் தோன்றுமுன் அவனெழுவான்..
    ……….ஆடுமாட்டைத் தன்பிள்ளையெனப் பேணிக் காப்பான்.!
    கதிரவனைத் தொழுதபடி ஏருழுவான் ஏற்றமிறைப்பான்..
    ……….கதிர்நெல்லைக் காணவயல் களத்திலே கடுமுழைப்பான்.!
    நதிதீரம் நாடியேயிவர்கள் வாழ்க்கையாம் தன்னலமின்றி..
    ……….நானிலத்துக்காக உழைத்து உலகுக்கே நண்பனாவான்.!
    விதியேயெனக் காலமுழுதும் கடமையாற்றும் நற்பண்பு..
    ……….விதிமாற்றத்தால் கண்ணீர் விட்டுக் கலங்குகிறானின்று.!

    உதிரத்தை வியர்வையாக்கி உழைக்கின்ற வர்க்கம்தான்..
    ……….ஊராரும் உணவுக்காக நம்பிவாழும் உயருழவன்தான்.!
    எதிரிகளென்றால் இயற்கையின் சீற்றம்தான் அதிகம்..
    ……….என்றைக்கு மோருயர் நிலையில்லாத வாழ்க்கைதான்.!
    நிதிப்பற்றாக்குறை என்பதெப்போது மிருக்கும்! அவன்..
    ……….நிலத்தைச் சீர்படுத்தி விளைபயிர் செழிக்கவே!..இவன்..
    குதிகால் குவலயத்தில் பதியாவிட்டால்?..ஒருவேளைக்..
    ……….கூழுக்கும் கஞ்சிக்கும் சோற்றுக்கும் கடும்பஞ்சம்தான்.!

    அனைத்துத் தொழிலுக்கும் முதலானது உழுதொழில்..
    ……….அனைத்துலக ஜீவிகளுக்கும் உழவனே நல்நண்பன்.!
    நினைவில் கொள்ளுவீர் நீர்! அறிவியல் வளர்ந்தாலும்..
    ……….ஆருமுணவின்றி வாழ்தலியலா தென்பது இயற்கை.!
    பனைமரத்தை வளர்க்காமலே பலருக்கும் பயன்தரும்..
    ……….பாருலகுக்கு அதுபோல நீரும்நிலவளமும் பலன்தரும்.!
    வினைசெய்யும் வஞ்சகத்தார் இன்று விளைபயிரழித்து..
    ……….விளை நிலைத்தையும் வீட்டுமனையாக்கி விட்டனரே.!

    *****

    ”எம்மை எங்குக் கொண்டு போறீக எஜமான் மாருகளே! எடைபோட்டு விற்பதற்கா!? பால்கொடுத்துக் காத்த எமக்கு நீர்காட்டும் பரிவிதுவோ?” என்று காளைகள் கண்ணீரோடு கேள்வி எழுப்பக் காண்கிறோம் திரு. எஸ். கருணானந்தராஜாவின் கவிதையில்!

    பொட்டு வச்ச நெத்தியில பூமாலை ஒண்ணு சுத்தி
    தொட்டுக்கிட்டுப் போறதுக்கும், தோழியரைச் சேத்து வச்சி
    எங்க கொண்டு போறீங்க எஜமான் மாருகளே – எங்கள
    எடை போட்டு விற்பதற்கா எஜமான் மாருகளே!

    கொம்புக்கு எடை கழிச்சி குழம்புக்கும் எடை கழிச்சி
    இம்புட்டுத்தான் மிச்சமென்பார் யாவாரி மாரே –அத
    ஏத்துக்கிட்டுப் போவிகளோ எஜமான் மாருகளே

    தோலைக் கழிச்சிப்பிட்டுத் தோராய நிறைபோட்டு
    மேலே ஒண்ணும் தேறாதெம்பார் யாவாரி மாரே –காச
    வேண்டிக்கிட்டுப் போவிகளோ எஜமான் மாருகளே

    காலம் முழுதுமுங்க காலடியிலே கிடந்து
    பாலூத்திக் கொடுத்ததுக்கு எஜமான் மாருகளே–உங்க
    பரிசு இதுதானோ எஜமான் மாருகளே

    ஓரத்திலே எங்காச்சும் உயிர் பிரிஞ்சு போம் வரைக்கும்
    பாரங் கொடுக்காம எஜமான் மாருகளே – நாங்க
    படுத்தாலும் பயன் தருவோம் எஜமான் மாருகளே.

    கொல்லக் கழுத்தறுத்து குருதி கொட்டி நாங்க விழ
    அல்லாஹு அக்பரென்று தக்பீர் செய்கையிலே –அத
    அருகிருந்து பார்ப்பீகளோ எஜமான் மாருகளே!

    நாங்க தந்த பால் குடிச்ச நம்மூட்டுப் புள்ளைங்கள
    ஓங்க வச்சு உயர்த்திடுங்கோ எஜமான் மாருகளே –எங்க
    உயிரதுக்குப் பயன்படட்டும் எஜமான் மாருகளே.

    *****

    மடுத்த வாயெல்லாம் மெய்வருத்தம் பாராது பாரமிழுக்கும் பகடுகளின் அவல நிலையைத் துல்லியமாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    இனி வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    தேடியே

    செல்வ மென்றே மாடதையும்
    சேர்த்துக் கொண்ட நம்முன்னோர்,
    இல்ல மதிலே ஓருறுப்பாய்
    இணைத்தார் நமது வாழ்வினிலே,
    புல்லும் மேய இடமின்றிப்
    போனதா லின்று கிராமத்தில்,
    செல்கிறார் மாந்தர் மாட்டுடனே
    சேர்ந்தே தேடிட பிழைப்பினையே…!

    செல்வமென்று மாட்டைக் கருதிய திருநாட்டில் இன்று அவை பசித்தால் புசிக்கக்கூடப் புல்லில்லை; இந்த அவலத்தை எடுத்தியம்பச் சொல்லில்லை!

    கழனிகள் காய்ந்துவிட்டதால் காளைகளும் உழவின்றி ஓய்ந்துவிட்டன. எனவே உழைக்கும் வர்க்கத்தவரான உழவரும் அவரின் உறுதுணையான மாடுகளும் பிழைப்புத்தேடி ஊரைவிட்டுச் செல்வதை எளிமையாய்ச் சொல்லியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • நாளை வெம்புவார்!

     

    தண்ணிகேட்டு முதல்வர்பாவம் ஓடுறார் – தண்ணி

    தரமறுத்து கதவைஅங்கு மூடுறார்! – என்ன

    பண்ணித்தான் அவர்தொலைப்பார்

    பெருசுசெய்த பாவமின்னும்

    தொடருது – இருள் – படருது!
    செத்துப்போன உயிர்மீண்டும் வருமா? – தலை

    சாகடித்த காவிரிகை தருமா? – வாழ்க்கை

    வெத்தாகும் எனத்தெரிந்து

    வழக்குதனை திரும்பஅன்று

    பெற்றார் – வாழக் – கற்றார்!
    கறந்தபால் மீண்டும்மடி புகாது – நம்மைக்

    கதறவைத்த தலைசெயல் தகாது – நாட்டு

    நலனைமிக அவர்மறந்து

    நன்குதன்னைக் காக்கவுமே

    செய்தார் – வாகை – கொய்தார்!
    ஊழல்வழக்கில் சிக்கமனம் பதைத்தார் – மிக

    ஊசலாடும் மனசாட்சி புதைத்தார் – தன்னை

    வாழத்தான் செய்வதற்கு

    வழக்கதனை வாபஸ்வாங்கிப்

    பிழைத்தார் – பாவம் – இழைத்தார்!
    நடுவர்மன்றத் தீர்ப்பையுமே மதியார் – உச்ச

    நீதிமன்ற வாசல்தனை மிதியார் – கன்னடர்

    நடுவனரசு சொல்லுவதை

    நன்றெனவே கேட்கும்மனம்

    இல்லார் – பெரும் – பொல்லார்!
    நம்நாட்டு மக்களுமே சரியிலே – இவர்

    நடந்துகொள்ளும் விதமெதுவும் புரியலே – என்றும்

    தும்பைவிட்டு வால்பிடிக்கும

    தேவையற்ற செயல்செய்யப்

    பறப்பார் – கடமை – மறப்பார்!
    மஞ்சுவிரட்ட ஒற்றுமையாய் நிற்பார் – அதில்

    மலையளவு வெற்றிபெறக் கற்பார் –

    அணையில் கொஞ்சமுமே நீரின்றி

    காளைஎட்டிப் பார்த்திடினும்

    வருந்தார் – என்றும் – திருந்தார்!
    முந்துரிமை விதிச்சிறப்பை அறியார் – அதை

    முறையாகப் பயன்படுத்தத் தெரியார் – நமைச்

    சந்திதனில் நிற்கவைக்கும்

    சதிகாரர் அரசியலை

    நம்புவார் – நாளை – வெம்புவார்!
    06.02.2018
    கவிஞர் இடக்கரத்தான்

    Share
  • நிதிநிலை அறிக்கை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    பாரதப் பிரதமர் மோடி அவர்களின் இந்த ஆட்சிக்காலத்தின் இறுதி நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள அறிவிப்புகள் வெறும் அலங்கார வார்த்தைகளின் தொகுப்பாகவே உள்ளன. 10 கோடி மக்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு 5 இலட்சம் உரூபாய் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஆண்டின் மொத்த மதிப்பு 50 இலட்சம் கோடி உரூபாய் ஆகிறது. இதற்கு நிதிநிலை அறிக்கையில் எந்த விதமான உரூபாய் பங்கீடு (Budgetery support) இல்லை. இருப்பினும் இதை செயல்படுத்துவதாக எடுத்துக்கொண்டால் இதற்கான கட்டமைப்புகள் உள்ளனவா என்றால் அதுவும் மிகப்பெரிய கேள்விக்குறியாகும். இதற்கான மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவ உயர்நிலைக் கல்லூரிகள் என அனைத்தையும் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியமாகக்கூடும். இல்லாவிட்டால் இந்தத் திட்டம் மற்றுமொரு அவலம் நிறைந்த அரசு மருத்துவமனைகளுக்கானதாக மட்டுமே இருக்கக்கூடும். குறைந்த அளவு தொகையையாவது மக்களிடம் பெற்று அதனுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்பட்சத்தில் சிறு சாத்தியமாவது உருவாகலாம் என்ற நம்பிக்கை வரும்.

    வங்கிகளுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து 2.40 இலட்சம் கோடி மூலதன நிதியாக அளிப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். இதற்குரிய வட்டி விகிதாச்சாரப்படி அல்லது ஈவுத் தொகையாக அரசிற்கு வங்கிகள் செலுத்துகிறதா என்றால் இதுவும் மிகப்பெரியக் கேள்விக்குறியாகும். செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாராக்கடனாக 13,000 கோடி உரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாதாமாதம் பெருந்தொகைகள் வாராக்கடனாக இருக்கும்பட்சத்தில் வங்கிகள் மற்றும் அரசின் நிதி நிலைமைகளும் மிகப்பெரிய எதிர்விளைவுகளை சந்திக்கலாம் என்ற எண்ணமே மேலோங்குகிறது. வங்கிகளுக்குப் பிணையாகக் கொடுக்கப்பட்டுள்ள சொத்துகளை நிர்வகிக்க ஒரு தனி ஆணையம் உருவாக்கி அதன் மூலமாக வருவாய் ஈட்டினால் இந்தப் பிரச்சனைகளில் பாதியையாவது குறைக்க முடிவதோடு வங்கிகளுக்கும் வருமானம் வரும்.

    இரயில்வேத்துறையும் நிதி ஒதுக்கீடும் குறித்த முழுமையான அறிவிப்புகளும் இல்லை. பிரதமர் மோதி அவர்களின் கனவுத் திட்டமாகிய புல்லட் ரயில் திட்டம், அதற்கான நிதி ஒதுக்கீடும், நூற்றுக்கும் அதிகமான இரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான நிதி ஆதாரங்களுக்கான அறிவிப்பும் இல்லை. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலமாக புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்துவதாக அறிவித்ததை ஜப்பானிய நிர்வாகம் நிராகரித்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இப்படி இந்த நிதிநிலை அறிக்கையில், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் ஏதுமின்றி, தெளிவற்ற சூழலே காணப்படுவது வருத்தம் அளிக்கக்கூடியதாகவே உள்ளது.

    Share
  • பூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன

    Posted on February 4, 2018

    unnamed

     
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
     
    ++++++++++++++++++
    Image result for neutrino

    அற்பச் சிறு நியூட்டிரினோ 
    அகிலாண்டம் வடித்த
    சிற்பச் செங்கல் !
    அண்டத்தைத் துளைத்திடும்
    நுண்ணணு !
    அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த
    கோடான கோடி
    அக்கினிப் பூக்கள் !
    சுயவொளிப் பரிதியின்
    வயிற்றில் உண்டானவை !
    வலை போட்டுப் பிடிக்க முடியாத
    வானியல் குஞ்சுகள் !
    ஒளிவேகத்தில் செல்லும் மின்மினிகள் !
    கண்ணுக்கும் தெரியா !
    கருவிக்கும் புரியா !
    எதோடும் இணையா !
    முன்னூறுக்கும் மேற்பட்ட
    நுண்ணணுக்கள்
    விண்வெளியில் விளையாடும் !
    பிரபஞ்சத்தின்
    சீரமைப்பு முரணுக்குக்
    காரணம்
    நியூடிரி னோவா ?
    பிரபஞ்ச மூலச் சிசுவைப் படம்
    பிடிக்கப் போகிறார் !
    செந்நெறி முறையில் பெருஞ்சக்தி
    அகிலக் கதிர்களாய்,
    நியூடிரினோ துகள்களாய்,
    காமா கதிர்களாய்,
    பூமழை பொழிகிறது !

    +++++++++

     

    Image result for three cosmic messengers
    எங்கள் ஆய்வுக் கணினி மாடல், பிரபஞ்சத்தில் வியக்கத் தக்க முறையில், பேரளவு சக்தி பெற்ற,  மூன்றுவித அகிலவியல் துகள்கள் ஏந்திய தூதரைப்  [Three Types of Cosmic Messenger Particles]  பற்றி அறிந்து கொள்ள ஒரு பாதை காட்டுகிறது.  பேரசுரசக்தி வாய்ந்த நியூடிரினோக்கள், உயர்சக்தி அகிலக் கதிர்கள் [High Energy Cosmic Rays], பெருஞ்சக்தி காமா கதிர்கள் ஆகியவற்றின் திரட்சி அளவுகளை ஒப்பு நோக்கினால், அவற்றின் பேரளவு சக்தியுள்ள துகள்கள் இடையே ஓர் பௌதிக  உடன்பாடு இருப்பது எங்களுக்குத் தெரிகிறது.

    வட துருவச் சூழ்வெளியில் தோன்றிய நியூட்டிரினோக்கள் பொதுவாக மிவான் நியூட்டிரினோக்கள் [Muon Neutrinos].  அவை பூமி விட்டத்தைக் [13,000 கி.மீ / 8000 மைல்] கடந்து தென் துருவத்தை நெருங்கும் போது, குவாண்டம் துடிப்புகளில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ [Tau] நியூட்டிரினோக்களாக மாறிப் பனிப்பேழைக் [IceCube Neutrino Observatory] கருவியால் பதிவு செய்யப் படுகின்றன.  இவ்விதம் ஆழ்ந்து உளவு செய்ய பனிப்பேழைத் திட்டம் எங்களுக்கு]ப் பேருதவி செய்கிறது.

    ஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் [IceCube Neutrino Observatory] திட்டம்]

    Image result for three cosmic messengers
    எங்கள் புதிய கணினி மாடல் அசுரசக்தி நியூரினோக்கள், உயர் சக்தி காமா கதிர்கள் ஆகியவை, துகள்கள் மோது கையில் [Particle Collisions] அகிலக் கதிர்களின் சேய்த் துகள்களாக [Daughter Particles of Cosmic Rays]  இயற்கையாக உற்பத்தி ஆகின்றன.  இவ்விதமாக தாய்த் துகள்களின் [Parent Particles] உடன்பாட்டு சக்தி தொகுப்பின் விகிதப்படி [Comparable Energy Budget] வம்சா வழியில் பெறுகின்றன. இம்மூன்று ஒத்த சக்தி அகிலத் தூதர்கள் தற்காலியமாகத் தோன்றியவை அல்ல  என்பது  அறியப் படுகிறது.
    கோதா முரசே [துணைப் பேராசிரியர், வானியல் 
    பௌதிகம், வென்சில்வேனியா மாநிலம், யு.எஸ்.ஏ.]
     
     
    Image result for three cosmic messengers
     
     
    2018 ஜனவரியில் தீர்வான வானியல் துகள் பௌதிகத்தின் மாபெரும் மர்மங்கள்.
     
    உயர்சக்தி  அகிலக் கதிர்கள், அசுரசக்தி நியூடிரினோக்கள்,  பெருஞ்சக்தி  காமா கதிர்கள் ஆகியவற்றின் மூலத்தோற்றம் என்ன என்பது முதலாவது மர்மம்.  2018 ஜனவரியில் தயாரித்த புதியதோர் கணினி மாடல் மூலம் தெளிவானது என்ன ?  இந்த மூன்று வித உயர்சக்தி  தூதர்கள்,  பெருநிறைக் கருந்துளை களின் ஆற்றல் மிக்க உந்துவிசைகளால், அகிலக் கதிர்கள் விரைவாக்கம் [Accelerated by Powerful Jets from [Supermassive Black Holes] பெற்று, விண்வெளியில் வீசப்படுகின்றன.  அப்புதிய  கணினி மாடல் மூன்று விதக் காஸ்மிக் தூதர் துகள்கள் [Three Types of Cosmic Messenger Particles] தோற்றத்துக்கு விளக்கம் அளிக்கிறது.  இந்த விஞ்ஞான அறிக்கையை இயற்கை பௌதிக இதழ் [Journal Nature Phyysics]  வலை முகப்பில் முன்னதாக,  2018 ஜனவரி 23 இல் வெளியிட்டவர் இருவர் : கோதா முரசே & கி ஃபாங் [Kohta Murase & Ke Fang].  முதல் வானியல் துகள் விஞ்ஞானி, பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக் கழகம்.  இரண்டாம் பௌதிகத் துகள் விஞ்ஞானி மேரிலாண்டு பல்கலை கழகத்தைச் சேர்ந்தவர்.
    Icecube Project
    முப்பெருஞ்சக்தி தூதர்கள்  பேரளவுக் களஞ்சியமான அகிலக் கதிர்களின் சேமிப்பிலிருந்து வெளியேறுகின்றன.  இந்த அகிலக் கதிர்களுக்கு விரைவாக்கம் தந்து தூண்டுபவை : பெருநிறைக் கருந்துளைகளின் உந்துகணைகளே [Cosmic Rays accelerated by Powerful Jets from Supermassive Black Holes].  உயர்சக்தி அகிலக் கதிர்கள் கருந்துளைகளின் தீவிர ஒளிமந்தைக் குழுமத்திலிருந்து [Active Galactic Nucleus]  தப்பி ஓடுகின்றன. ஆனால் அவை கருந்துளை களின் காந்தச் சூழ்வெளிக் கோட்டைக்குள் அடைக்கப் பட்டுள்ளன.   அசுரசக்தி நியூடிரினோக்கள், உயர்சக்தி காமா கதிர்கள் அந்த காந்த வெளியில்தான் உற்பத்தியாகின்றன.  அகிலக் கதிர்களும், நியூடிரினோக்களும் முடிவாகப் பூமியின் மீது  பொழிகின்றன.  இப்போது தென் துருவ  அண்டார்டிகாவில் அமைக்கப் பட்டுள்ள பனிப்பேழை [IceCube Neutrino Observatory] ஆய்வுத் தொட்டியில் அசுரசக்தி நியூடிரினோக்கள் [Greater than  One million mega – electron-volts] கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  உயர்சக்தி காமா கதிர்கள் [Energy Greater than a billion times than a Photon (ஒளித்துகள்)] ஃபெர்மி காமா கதிர் விண்ணோக்கி உளவகம்  [Fermi Gamma-Ray Space Telescope Observatory] பதிவு செய்துள்ளது.

    Neutrinos from Sun

     

    https://www.youtube.com/channel/UCqhypTo6SWmi5bbVBmUf9NA

    https://www.youtube.com/watch?v=aMnGWqoDaAA

    https://www.youtube.com/watch?v=iv-Rz3-s4BM

    http://www.telegraph.co.uk/news/worldnews/antarctica/10466476/Neutrinos-from-outer-space-found-in-Antarctic.html

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yjodNwu2r8s

    http://www.nsf.gov/news/special_reports/science_nation/icecube.jsp

    ++++++++++++++

    பனிப்பேழைத் திட்டத்தில் தூர விண்வெளி அரங்குகளிலிருந்து வரக் கூடிய 35 நியூட்டிரினோக்களைப் பதிவு செய்தோம்.  அவை மிக்க உயர் சக்தி உடையவை.  ஏனெனில் அவை வெகுதூரப் பயணத்தில் இயங்கி எவற்றுடனும் ஈடுபடாமல், பிரபஞ்சத் தகவல் கொண்டு வருபவை. மேலும் பூமியில் தோன்றும் நியூட்டிரினோக்களின் பண்பாடுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

    ஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம், நீல்ஸ் போர்க் ஆய்வுக்கூடம், கோபன்ஹேகன் பல்கலைக் கழகம்]

     

    தென் துருவத்தில் நியூட்டிரினோ பற்றிய பனிப்பேழை ஆராய்ச்சிகள்

    2010 டிசம்பரில் தயாரிக்கப்பட்ட தென்துருவப் பனிப்பேழை [Icecube] நியூட்டிரினோ ஆராய்ச்சித் திட்டம் 12 உலக நாடுகளின் 44 ஆய்வுக் கூடங்கள் பங்கெடுத்துப் பிரபஞ்ச மர்மமான நியூட்டிரினோக்களைப் பற்றி ஆழ்ந்து உளவு செய்ய உருவாக்கப் பட்டது.

    Fig 3 Catching High Energy Cosmic Rays

    பனிப்பேழை மாபெரும் ஒரு துகள் கண்டுபிடிப்புச் சாதனம்.  அதில் 86 வடங்கள், ஒவ்வொன்றிலும் 60 டிஜிட்டல் ஒளிப்பதிவு அமைப்பைக் [86 cables each with 60 Digital Optical Modules ] கொண்டுள்ளன. பனிப்பேழை அமைப்பு பூமிக்குக் கீழே 1.5 கி.மீ. ஆரம்பித்து 2.5 கி.மீ. வரை முடிவது. ஒவ்வொரு வடமும் வெந்நீரில் தோண்டிய துளையில் 2.5 கி.மீ. தூரம் நுழைக்கப் பட்டுள்ளது.  நியூட்டிரினோ பனித்திரட்சியில் மிக அபூர்வமாக பிண்டத்துடன் பின்னி இயங்குகிறது.  அப்படி மோதி இயங்கும் போது கதிர் வீசும் மின்னேற்றத் துகள்  [Charged Particle] ஒன்று தோன்றுகிறது. அதைத் தான் டிஜிட்டல் ஒளிப்பதிவுக் கருவி கண்டுபிடிக்கிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக [2011 – 2013] 5200 ஈடுபாடுகள் பதிவாகியுள்ளன. மூன்று வித நியூட்டிரினோக்கள்  இருப்பதாக நம்பப் படுகின்றன. அவை : எலெக்டிரான், மூவான், டௌ [Electron, Muon, Tau Neutrinos].  அவற்றைப் பற்றி பனிப்பேழைத் திட்ட துணைப் பேராசிரியர் ஜேஸன் கோசினென் கூறுகிறார்: “நாங்கள் கண்டுபிடித்து முடிவு செய்தது,  நியூட்டிரினோக்கள் [மூவான்கள்] உயர் சக்தி நிலையில் குவாண்டம் துடிப்பியக்கத்தில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ நியூட்டிரின்களாக மாறுகின்றன. பிரபஞ்சத் தூதாகக் [Messengers from the Universe] கருதப்படும் நியூட்டிரினோ பற்றி விஞ்ஞானிகள் இன்னும் பூரணமாக அறியவில்லை.  இந்த பனிப் பேழை ஆராய்ச்சிகள் அவற்றைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள மட்டும் உதவுகின்றன.”

    Icecube Neutrino Project

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sZPLcv-ASwc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6P9fEhuyx50

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gssq7Kngyow

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gX7jxnDMSHw

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o-y4m6c2h8o

    “அதனுடைய திணிவு நிறை எலெக்டிரானை விட மிகச் சிறியது ! ஃபெர்மி அந்த நுண்ணணு வுக்கு “நியூட்டிரினோ” என்று பெயரிட்டார் ! அவற்றின் சுழற்சி 1/2 (Spin 1/2) என்று இருக்கலாம் என்பது எனது யூகம். அவை மற்ற பிண்டத் துகளுடனும், ஒளித்திரளுடனும் இணைப்பாடு இல்லை. (No Interactions with Matter or Photons)”

    நோபெல் பரிசு விஞ்ஞானி : உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) (1930)

    “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன்களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூடிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூட்டிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல்வாதிகள் (Cosmologists). நியூட்டிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.”

    ஜான் லேனர்டு விஞ்ஞானி ஹவாயி பல்ககைக் கழகம்

    Ice-cube observatory -2

    புதிரான கருமைச் சக்தியின் மர்மான நுண்ணணுக்கள் !

    பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் திணிவுப் பகுதியான கருமைச் சக்தி (Dark Energy) மனிதக் கண்ணுக்குப் புலப்படாமலும் என்னவென்று விளக்க முடியாமலும் “அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது ! அதைப் போன்று அடுத்து மர்மமானது பிரபஞ்சத்தின் கால் பகுதியாக இருக்கும் “கருமைப் பிண்டம்” (Dark Matter) ! புதிருக்குள் புதிரான நியூட்டிரினோ துகள்கள் பிரபஞ்சப் பிண்டத்தின் மூலத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்க உதவலாம் ! அகிலவெளிப் புதிர்களை ஆழ்ந்து ஆராய விஞ்ஞானிகள் நுண்ணணு விரைவாக்கி கள் (Particle Accelerators), தொலை நோக்கிகள், துணைக்கோள்கள் ஆகியவற்றைத் தற்போது பயன்படுத்தி வருகிறார்.

    சில உயர்ச் சீரமைப்பு நுண்ணணுக்கள் (Super Symmetric Particles) மிகப் பலவீனமாக உடனியங்கும் துகள்களின் பிரதானக் குடிகள் (Prime Candidates for the very weakly interacting Particles) என்று ஜப்பானிய விஞ்ஞானி முராயமா கருதுகிறார். விரைவாக்கி கள் நுண்ணணுக்கள் எவ்விதம் தம்முள் உடனியங்குகின்றன என்று உளவவும், அவற்றின் திணிவு நிறையை (Mass) அளக்கவும் உதவுகின்றன. அம்முறையில் “நியூடிரினோ பௌதிகம்” (Neutrino Particle Physics) ஓர் மகத்தான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது ! 1995 ஆம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் தேசீய ஆய்வகத்தில் நியூட்டிரினோ வின் திணிவு நிறையை 5 eV (5 Electron Volt) (Mass of Neutrino is 1/100,000 of the Mass of Electron) என்று கண்டுபிடித்தது விண்வெளித் தேடலில் முக்கியத்துவம் பெறுகிறது !

    பிரபஞ்சப் பெரு வெடிப்பிலிருந்து கோடானகோடி நியூட்டிரினோ நுண்ணணுக்கள் சிதறி விண்வெளி எங்கும் பில்லியன் ஆண்டுகளாய்ப் பொழிந்து வந்துள்ளன. சூரியனைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் நியூட்டிரினோக்களை உற்பத்தி செய்கின்றன. வெடித்துச் சிதையும் சூப்பர்நோவாக்கள் நியூட்டிரினோக்களை வெளியாக்கி வருகின்றன ! எலெக்டிரானுக்கும் சிறிதான நியூட்டிரினோவுக்கு முதலில் நிறையில்லை என்றுதான் விஞ்ஞானிகள் கருதி வந்தனர். மேலும் நியூட்டிரினோ எலெக்டிரான் நியூடிரினோ, மியூவான் நியூட்டிரினோ, டௌ நியூட்டிரினோ (Electron Neutrino, Muon Neutrino & Tau Neutrino) என்று மூன்று வகையில் மிகச் சிறிதாக இருப்பதாலும், அவற்றைப் பிடித்துப் பரிமாணம், பண்பாடுகளைக் காண முடியாது. நியூட்டிரினோவின் நிறையை விரைவாக்கிகளில் கணிக்க முடியாது. கனடாவில் பூமிக்கடியில் பல மைல் ஆழத்தில் இருக்கும் ஸட்பரி சுரங்கத்தில் அமைக்கப் பட்டுள்ள “ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககத்தில்” (Sudbury Neutrino Observatory SNO) பரிதியின் நியூட்டிரினோக் களைக் கனநீரில் பிடித்துப் பண்பாடுகளைக் காண முடிகிறது. அதுபோல் ஜப்பானில் நியூட்டிரினோவை நோக்க “உயர் காமியோகந்தே” (Super_Kamiokande) என்னும் பிரமாண்டமான விஞ்ஞானச் சாதனம் ஒன்று உள்ளது !

    நியூட்டிரினோவைக் கண்டுபிடித்த உலக விஞ்ஞானிகள் !

    13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிரபஞ்சத்தில் நியூட்டிரினோப் பொழிவுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பிரபஞ்சம் கனலில் கொதித்து விரிந்து, விரிந்து மெதுவாகக் குளிர்ந்து அகிலப் பின்புலக் கதிர்வீச்சு (Cosmic Background Radiation) உஷ்ணம் தற்போது 1.9 டிகிரி கெல்வின் (-217 டிகிரி செல்ஸியஸ்) ஆக உள்ளது. ஆனால் நியூடிரினோவின் இருப்பு முதன் முதலில் 1930 ஆம் ஆண்டில் ஆஸ்டிரிய விஞ்ஞானி உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) [1900-1958] என்பரால் அறிமுகமானது. அணுக்கருப் பீட்டாத் தேய்வில் சக்தியின் அழிவின்மைக் கோட்பாட்டை விளக்க வரும் போது புதுத் துகள் ஒன்றின் நிழல்தடம் அவருக்குத் தெரிந்தது. அதன் நிறை எலெக்டிரான் நிறையை விடக் குறைவானது ! அதற்கு எந்த மின்னேற்றமும் இல்லை (No Electrical Charge) ! ஏறக்குறைய புலப்படாத நுண்துகள் (Almost Invisible Particle) ! மற்ற துகள்களுடன் உடன்சேர்ப்பில்லை (No Interaction with Other Particles).

    இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi) (1901-1954) அந்தத் துகளுக்கு “நியூட்டிரினோ” (Little Neutral One) என்று பெயரிட்டார். ஆனால் 1956 இல் ஃபிரெடிரிக் ரையின்ஸ் & கிளைடு கோவன் (Fred Reines & Clyde Cowan) இருவரும் முதன்முதலில் அணு உலையில் நியூட்டிரினோ உடனியக்கங்களை நிகழ்த்திக் காட்டினர். நியூடிரினோவின் நிறை எலெக்டிரான் நிறையை விடச் சிறியது என்று 1933 இல் எடுத்துக் காட்டியவர் எஃப். பெர்ரின் (F. Perrin). 1934 இல் ஹான்ஸ் பெத்தே & ரூடால்ஃப் பையர்ஸ் (Hans Bethe & Rudolf Peiers) இருவரும் நியூட்டிரினோவின் “குறுக்குப் பரப்பு” (Cross Section means Probability of Interaction) எலெக்டிரானின் குறுக்குப் பரப்பை விட மில்லியன் மடங்கு சிறியது என்று நிரூபித்தனர்.

    Fig 1B Neutrino Production

    அகிலக் கதிர்கள், சூரியன் போன்ற சுயவொளி விண்மீன்கள், அணு உலைகள், பூமிக்குள் நிகழும் கதிரியக்கத் தேய்வுகள் (Cosmic Rays, Sun Like Stars & Nuclear Reactors, Radioactive Decay within the Earth) ஆகிய நான்கு முறைகளையும் சேர்த்துப் பல்வேறு முறைகளில் மூன்றுவித நியூட்டிரினோக்களும் உண்டாக்கப் படுகின்றன ! வலுவில்லாத நுண்ணணு நியூட்டிரினோ விழுங்கப் படாமல் 600 டிரில்லியன் மைல் (மில்லியன் மில்லியன் மைல்) தடிப்புள்ள ஈயத்தைக் கூட ஊடுருவும் வல்லமை பெற்றது ! பரிதியிலிருந்து வினாடிக்குச் சுமார் 10 மில்லியன் நியூட்டிரினோக்கள் வெளியாகி ஒளிவேகத்தில் நம்மை ஊடுருவிச் செல்கின்றன ! எந்தப் பிண்டத் துகளுடன் இணையாத நியூட்டிரினோ அண்டக் கோள்களைத் துளைத்துச் செல்பவை ! சூரியன், சந்திரன், பூமி அனைத்தை யும் ஊடுருவிச் செல்பவை ! சூரியன் மட்டும் ஒவ்வொரு வினாடியும் 200 டிரில்லியன், டிரில்லியன், டிரில்லியன் நியூட்டிரினோக் களை உற்பத்தி செய்கிறது ! வெடித்துச் சிதையும் ஒரு சூப்பர்நோவா சூரியனை விட 1000 மடங்கு மிகையான நியூட்டிரினோக்களை வெளியாக்கும் ! சுமார் 65 பில்லியன் நியூட்டிரினோக்கள் பரிதியிலிருந்து ஒவ்வொரு வினாடியும் 1 சதுர மீடர் பூமியின் சதுரத்தில் பாய்ந்து விழுகின்றன !

    கனடாவின் ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககம் (SNOLAB)

    அமெரிக்காவின் புருக்ஹேவன் தேசீய ஆய்வகத்தின் கூட்டுறவுடன் அண்டாரியோ, கனடாவில் ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககம் (SNO) 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1999 அக்டோபர் முதல் இயங்கத் துவங்கியது. அந்த ஆய்வகம் 6800 அடி ஆழத்தில் குடையப்பட்ட ஒரு சுரங்கத்தில் (Sudbury, Ontario Creighton Mine) அமைக்கப் பட்டுள்ளது. உளவும் பிளாஸ்டிக் கலத்தில் சுமார் 1000 டன் பூரணத் தூயக் கனநீர் (1000 Ton Ultra Pure Heavywater in Acrylic Plastic Container) கொண்டது. அந்த பூதக் கலமானது 7000 டன் தூய சாதா நீர் சுற்றியுள்ள கவசப் பானையில் வைக்கப் பட்டுள்ளது. அதில் பயன்படும் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1000 டன் கனநீரைக் கனடா வாடகைக்குக் கொடுத்துள்ளது. அந்த சாதா நீர்ப் பானையில் 9500 அடுக்குப் படம் நோக்குக் கருவிகள் மூலம் (Photomultiplier Tubes PMT) நியூட்டிரினோக்கள் கனநீரில் உண்டாக்கும் நீல நிறச் “செராங்கோவ் கதிர்வீச்சைப்” (Blue Glow – Cerenkov Radiation) படம் எடுக்கலாம்.

    அறியப்படாத சில வித நியூட்டிரினோக்கள் கருமைப் பிண்டத்துக்கு மூலமாகுமா ?

    பரிதியைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் அணுப்பிணைவு சக்தியில் கனல் வீசினாலும் நியூட்டிரினோ நுண்ணணு எவ்விதம் வெளியாகிறது என்பது அறியப்ப டாமல் பிரபஞ்சப் புதிராகவே இருந்து வருகிறது ! வானியல் விஞ்ஞானிகள் கண்ணுக்குப் புலப்படும் ஒளிமயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் இன்னும் ஏராளமான பிண்டம் (Matter) இருப்பதாகக் கணிக்கிறார்கள். ஏனெனில் காலாக்ஸி ஒளிமந்தைகளை ஏதோ கண்ணுக்குத் தெரியாத பிண்டங்களின் கவர்ச்சி நகர்த்திச் செல்கிறது. அந்தப் பிண்டம் ஒளியைத் தடுத்து மறைப்ப தில்லை ! மேலும் அந்தப் பிண்டம் ஒளியை உமிழ்வதுமில்லை ! ஆகவேதான் கண்ணுக்குத் தெரியாத அந்தப் பிண்டம் “கருமைப் பிண்டம்” (Dark Energy) என்று அழைக்கப் படுகிறது !

    இப்போது விஞ்ஞானிகள் மனதில் எழும் வினாக்கள் இவைதான் ! இதுவரை அறியப்படாத சில வித நியூட்டிரி னோக்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கணிக்கப் பட்ட கருமைப் பிண்டத்துக்கு அடிப்படை ஆகுமா ? இன்னும் புலப்படாமல் இருக்கும் புதிய நியூட்டிரினோக்கள் பிரபஞ்ச வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கக் காத்துக் கொண்டுள்ளனவா ? அந்தக் கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் அளிப்பவர் : ஹவாயி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் லேனர்டு (John Learned) என்னும் வானியல் விஞ்ஞானி ! “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன் களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூட்டிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூட்டிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல் வாதிகள் (Cosmologists).” நியூடிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறார் ஜான் லேனர்டு.

    பிரபஞ்சத்தில் பேரளவு பிண்டம் எவ்விதம் ஆதியில் உண்டானது ? நியூட்டிரினோக்களைத் தவிர்த்துக் கருமைப் பிண்டத்தில் இன்னும் புலப்படாமல் இருக்கும் நுண்ணணுக்கள் பங்கேற்றிருக்கலாம் ! பிண்டம் எப்படித் தோன்றியது என்று அவை விஞ்ஞானிகளுக்குப் புதிய பாடத்தைப் போதிக்கலாம் ! பிரபஞ்சப் பெருவெடிப்பு நேர்ந்த போது பிண்டமும், எதிர்ப் பிண்டமும் (Matter & Antimatter like Electron & Positron) சமப் பரிமாணத்தில் படைக்கப் பட்டிருக்க வேண்டும் ! ஆனால் பிண்டமும் எதிர்ப் பிண்டமும் சேரும் போது அவை இணைந்து அழிகின்றன ! அப்படிச் சம அளவில் படைக்கப் பட்டிருந்தால் அவை அழிந்து வெறும் கதிர்வீச்சு மட்டும் (Radiation Energy) பிரபஞ்சத்தில் நிரம்பி யிருக்கும் ! ஏராளமாக ஏன் பிரபஞ்சத்தில் பேரளவு ஈர்ப்பாற்றல் கொண்ட பிண்டம் கொட்டிக் கிடக்கிறது ?  ஒரு வேளை நியூட்டிரினோக் கள் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலச் “சீரமைப்பு முரணுக்குப்” (Early Asymmetry of the Universe) பங்கேற்றி யிருக்கலாம் ! அது மெய்யானால் நமது உயிர்வாழ்வுக்கும் நியூட்டிரினோக்களே மூல காரணமாக இருக்கும் !

    [தொடரும்]

     ++++++++++++++++++++++

    building-blocks-of-the-universe1.jpg 

     

    six-types-of-quarks.jpg

    புரிந்தும் புரியாத அகிலவெளிப் புதிர்கள் !

    அது விட்டுப் போவ தில்லை இன்னும் !
    அதை உணர்வேன், ஆனால் புரிவ தில்லை !
    கையில் கொள்ள முடிய வில்லை !
    மறந்து போகவும் இயல வில்லை !
    அது முழுவதும் அகப் பட்டால்
    அளக்க முடிய வில்லை என்னால் !

    ரிச்சர்டு வாக்னர், ஜெர்மன் இசைக்கலைஞர் [Richard Wagner (1813-1883)]

    மாபெரும் சக்தி வாய்ந்த மிக நுண்ணிய துகள்கள்தான் பிரபஞ்சத்தின் பெரும்பான்மைச் சக்தி இயக்கங்கள் பற்றிய வினாக்களுக்கு விடை அளிக்கின்றன.

    ஸ்காட் வேக்லி, (Scott Wakely) துணைப் பேராசியர், சிகாகோ பல்கலைக் கழகம். (2006)

    இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே புரோட்டான்களும், நியூட்ரான்களும்தான் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட மூலாதாரப் பரமாணுக்கள் (Subatomic Particles).  அவை கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அவைதான் அணுவின் பிளக்க முடியாத மூலப் பரமாணுக்களாய்க் கருதப்பட்டன.  1960 ஆண்டுகளில் அவற்றுக்கும் நுட்பமான துகள்களால் பரமாணுக்கள் உருவாகியுள்ளன என்று அறியப் பட்டது.  புதுமுறைச் சோதனைகள் மூலம் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் உறுதியற்ற உள்ளமைப்பை இப்போது அழுத்தமாய்ச் சொல்ல முடிகிறது.

    கிளாஸ் ரித் & ஆன்டிரியா சேஃபர் (Klaus Rith & Andreas Schafer)

    நுண்துகள் பௌதிகத்தின் நிலை பெற்ற மாதிரி விதி (The Standard Model of Particle Physics) விஞ்ஞான வரலாற்றில் வெற்றியின் உச்சத்திலும், அதைத் தாண்டிய முன்னேற்ற துவக்கத்திலும் கால அச்சின் மீது ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது !

    கார்டன் கேன், (Goron Kane) பௌதிகப் பேராசிரியர், மிச்சிகன் பல்கலைக் கழகம்.

     

     

     

     

    தற்போதிருக்கும் விஞ்ஞானக் கருவிகளால் அளக்க முடியாதபடிக் குவார்க்குகள் மிக மிக நுண்ணியவை.  அவற்றின் பளுவை நிறுக்க முடியாது.  குவார்க்குகளைப் பிரிக்க முடியாது.  ஒரு புரோட்டானைப் பிளக்க முயலும் போது, குவார்க்குகள் பத்து டன் விசை வலுவுடன் ஒட்டிக் கொள்கின்றன.  அவை மிக நுட்பமாக இருப்பதால் புரோட்டானுள் பில்லியனில் ஓரளவான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.  புரோட்டான் பளுவிலும் மிகச் சிறிய விகிதமாகக் குவார்க் உள்ளது.  புரோட்டானில் குவார்க்குகள் அடைத்துக் கொண்ட சிற்றிடம் போகக் காலியாகக் கிடக்கும் இடத்தில் இருப்பதென்ன என்னும் வினா எழுகிறது.  அந்தக் காலி மனையில்தான் குளுவான் எனப்படும் பிசின் குவார்க்குகளைப் பிணைக்கும் ஒட்டு விசையாக நிரப்பிக் கொண்டுள்ளது !  அத்தகைய குவார்க், குளுவான் பிசினே பிரபஞ்சத்தின் 98% பளுவாகவும் பரவியுள்ளது !  இயற்கையானது கோடான கோடி முறைகளில் பளுவில்லா குவார்க்குகளையும், வலுவான குளுவான்களால் பிணைத்து பிரபஞ்சத்தைப் படைத்துள்ளது !

    fundamental-particles-chart.jpg

    1.  http://www.ps.uci.edu/~superk/neutrino.html  [1998]
    2.  http://en.wikipedia.org/wiki/IceCube_Neutrino_Observatory  [February 21, 2015]
    3.  https://icecube.wisc.edu/masterclass  [March 18, 2015]
    4.  http://phys.org/news/2013-05-icecube-neutrino-observatory-evidence-extraterrestrial.html  [My 16, 2015]
    5.  http://en.wikipedia.org/wiki/Neutrino [May 19, 2015]
    6. http://en.wikipedia.org/wiki/Neutrino_detector  [May 20, 2015]
    7.  https://icecube.wisc.edu/outreach/neutrinos

    (தொடரும்)

    *****************************

    Image Credits : Scientific American (May 2003)

    தகவல்:

    1.  Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2.  National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3.  National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4.  Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku  (2005)

    10. 50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11  Astronomy Magazine – What Particle Physics Says about the Universe By: Scott Wakely (September 2006)

    12  Scientic American – ” The Mystery o Nucleon (Protons & Neutrons) Spin ”  By : Klaus Rith & Andreas Schafer (July 1999)

    13  Scientific American ” The Dawn of Physics Beyond the Standard Model ” By : Gordon Kane Professor of Physics, University of Michigan  (February 20, 2006)

    14. https://www.technology.org/2018/01/23/three-types-of-extreme-energy-space-particles-may-have-unified-origin/  [January 23, 2018]

    15.  https://www.space.com/39475-monster-black-hole-jets-high-cosmic-particles.html [January 24, 2018]

    16. http://www.ibtimes.co.uk/scientists-have-discovered-origins-most-mysterious-particles-universe-1656859  [January 26, 2018]

    *******************************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  February 3, 2018 [R-1]

    Attachments area
    Preview YouTube video Scientists have discovered the origins of the most mysterious particles in the universe

    Scientists have discovered the origins of the most mysterious particles in the universe

    Preview YouTube video IceCube Neutrino Observatory – Animated Overview

    IceCube Neutrino Observatory – Animated Overview

    Preview YouTube video Neutrino, measuring the unexpected–IceCube

    Neutrino, measuring the unexpected–IceCube

    Preview YouTube video A Day at SNOLAB

    A Day at SNOLAB

    Preview YouTube video inside snolab

    inside snolab

    Preview YouTube video Public Lecture—Neutrinos Get Under Your Skin

    Public Lecture—Neutrinos Get Under Your Skin

    Preview YouTube video Segre Lecture: Understanding Neutrinos Using Deep Dark Scien

    Segre Lecture: Understanding Neutrinos Using Deep Dark Scien
    Share
  • படக்கவிதைப் போட்டி (147)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    27399637_1549686468418880_1099346604_n
    ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.02.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • நற்றிணை காட்டும் கடல் பறவைகளும் அவற்றின் வாழிடச் சூழலமைவும்

    -முனைவர் இரா.சுதமதி

    சங்க இலக்கியப் பாடல்கள் மனித வாழ்வு சார்ந்த, சாராத உயிரினங்கள் பற்றிய செய்திகளைத் தமக்குள்ளே பதிவுசெய்து வைத்திருப்பவை. அவற்றில் காட்டுயிரிகளைப் பற்றியும் கடலுயிரிகளைப் பற்றியும் ஏராளமான பதிவுகள் காணப்படுகின்றன. நெய்தல் திணைக்குரிய கருப்பொருள்களுள் ஒன்றான கடல் பறவைகள் குறித்த சங்க இலக்கியச் செய்திகள் வியப்பிற்குரியவை. கடல் பறவைகள், அவற்றின் வாழிடச் சூழலமைவு பற்றிச் சங்கப் புலவர்கள் கூர்நோக்குத் திறனோடும் அறிவியல் நுட்பத்துடனும் எடுத்துரைப்பது ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. நற்றிணைப் பாடல்களைச் சான்றாகக் கொண்டு கடல் பறவைகள் பற்றிய சங்கத் தமிழரின் அறிவையும் பல்லுயிர்ப் பரவலுக்கு இடமளித்த கடற்கரைச் சூழலமைவையும் ஆராய இக்கட்டுரை முற்படுகிறது.

    கடல் பறவைகள்

    கடலையும் கடல் சார்ந்த நிலம், மரங்கள், கழிகள் ஆகியனவற்றையும் சார்ந்து வாழும் உயிரிகள் கடல்சார் உயிரிகள் ஆகும். கடற்கரைகளையும் கழிமுகங்களையும் இருப்பிடங்களாகக் கொண்டு  இவை உயிர் வாழ்கின்றன. கடல் பறவைகள், நீர்நாய், நண்டுகள், ஆமைகள், தாவரங்கள் ஆகியவற்றைக் கடல்சார் உயிரிகளாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

    இவற்றுள் நெய்தல் பாடல்களின் கருப்பொருளாகவும் அகப்பொருள் சுவைக்குச் சான்றாகவும் பாடப்பட்ட கடல் பறவைகள் பற்றிய செய்திகள், அவற்றின் வாழ்வியல் முறையை அறிந்து கொள்ளப் பெரிதும் துணை நிற்கின்றன. இவற்றை அறிய முற்படுவது, இன்றையச் சூழ்நிலையில் கடல் பறவைகளை இயற்கைச் சூழலோடு பாதுகாப்பதற்கும் அவற்றின் வாழிடச் சூழலை மேம்படுத்துவதற்கும் உதவும் என்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

    நற்றிணையில் கடல் பறவைகள்

    நற்றிணைப் பாடல்கள் குருகு, சிறுவெண்காக்கை, நாரை, அன்றில் என்னும் கடல் பறவைகளைப் பற்றிய செய்திகளை விரிவாகக் கூறுகின்றன. குருகு நீரில் வாழும் உயிரினங்களைத் தின்னும் பறவை. ‘கருங்கால் வெண்குருகு” 1 எனச் சங்கப் பாடல்கள் இதனைக் குறித்துக் கூறுகின்றன. சிறுவெண்காக்கை, ஆலாக்கள் (Terns) எனப்படும் நீர்ப்பறவையாகும். இவை நீர்நிலைகளில் கூட்டமாகக் காணப்படும். தலையும் வயிறும் வெண்ணிறமாகவும் உடல் சாம்பல் நிறத்திலும் இருக்கும். வெண்ணிறச் சிறகுத் தொகுதியும் கருநிற இறகுகளும் கொண்ட நீர் இறங்கு பறவை நாரை ஆகும். இவற்றின் கால்களும் அலகும் செந்நிறமானவை. சதுப்பு நிலங்கள், களிமண் நிலங்கள், நீர்நிலைகள் இவையே இவற்றின் வாழ்விடமாகும். அன்றில் பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பறவை. ஆணும் பெண்ணும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது வாழும். இவை சதுப்பு நிலங்களில் கூட்டமாக இரை தேடக் கூடியவை.

    இப்பறவைகள் உண்ணும் இரை, இரை தேடுதல், அவை தங்குமிடம், அவற்றின் வாழிடச் சூழல், வாழ்க்கை முறை, பிற உயிரினங்களுடனான அவற்றின் தொடர்பு ஆகிய செய்திகள் நற்றிணை வழி இங்கு விரிவாக ஆராயப்படுகின்றன.

    உணவுச் சூழல்

    ’நெய்தல் திணை மண்டலம்’ என்பது கடலும் கடல் சார்ந்த பகுதியும் (coastal eco system) என்று இலக்கணப்படுத்தப்படுகிறது. இங்கு அதிக அளவில் கடலுடன் வண்டல் கலப்பு ஏற்படும். அத்துடன் உப்பு நீரும் நன்னீரும் இணையும். இந்த மாறுபட்ட சூழல் அமைப்பு வெப்ப மண்டலப் பகுதிகளில் அபரிமிதமான விளைச்சலைக் கொடுக்கிறது. வெப்ப மண்டல நெய்தல் நிலங்களில்தான் உலகத்தில் அதிக உற்பத்தித் திறன் வாய்ந்த அலையாத்திக் காடுகள், பவளத் திட்டுக்கள் காணப்படுகின்றன. இங்கு எண்ணற்ற மீன் இனங்கள் பல்கிப் பெருகுகின்றன. கடலின் உட்பகுதியில் அதிக அலையின் வேகமும் பிற உயிர்களின் தாக்குதலும் இருப்பதால் அலையாத்திக் காடுகள் உள்ள பகுதிகளில் மீன்கள் முதலிய கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் குஞ்சு பொரிக்கின்றன’2 என்கிறார் சூழலியல் எழுத்தாளர் பாமயன். இதனால் கடல் பறவைகளுக்கான உணவுச் சூழல் இப்பகுதிகளில் இயல்பாக அமைந்திருப்பதை அறியலாம். கடல் பறவைகள் பெரும்பாலும் மீனையே உணவாக உட்கொள்கின்றன. குறிப்பாக இறாமீனைக் குருகுகளும் நாரைகளும் சிறுவெண்காக்கைகளும் உணவாகக் கொள்வதை நற்றிணை கூறுகிறது.

    ‘இறவு ஆர் இனக் குருகு’- 131: 6

    ‘சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை’                           – 31:2

    ‘…………………………..ஈர்ம் புற நாரை
    இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து’               – 127:1,2

    இறா எனப்படும் இறால் மீன்கள் நன்னீரிலும் உவர் நீரிலும் காணப்படும் உயிரினம் ஆகும். இறால் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்பட்டு கடலோரங்களிலும் சதுப்பு நிலங்களிலும் ஒதுங்குகின்றன. இவ்விடங்களில் பறவைகள் இரைதேடி வருகின்றன. இதனை நற்றிணையும் எடுத்துரைக்கிறது.

                    ‘………………………….இருங்கழி
                    இரை ஆர் குருகின் நிரை பறைத் தொகுதி’ – 123:1,2

                   ‘சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை
                    பாயிரும் பனிக்கழி துழைஇ’                   – 31:2,3

                   ‘நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
                    நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு
                    குப்பை வெண்மணல் ஏறி’                         – 291:1-3

    இப்பாடலடிகள் கடல் பறவைகள் இரை தேடும் இடங்களான உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள் பற்றிய குறிப்புகளைத் தருவதைக் காணலாம். மேலும் மீனவர் பிடித்து வரும் வலைகளில் உள்ள மீன்களையும் கடற்கரையில் உலர்த்தப்படும் மீன்களையும் இப்பறவைகள் உணவாகக் கொள்கின்றன.

                    ‘முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவை
                    படுபுள் ஓப்பலின் பகல்
    மாய்ந்தன்றே’
       – 49:3,4

    ‘நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
    இனப்புள் ஓப்பும் எமக்கு’                                                             – 45:6,7

    கடல் பறவைகள் நாட்காலையிலும் பொழுது சாயும் வேளையிலும் இரை தேடும் செய்திகளை நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர்.

                    ‘பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்
                    சிறுவெண்காக்கை நாள் இரை பெறூஉம்’    – 358:8,9

                  ‘எல்லை சென்ற பின் மலரும் கூம்பின
                    ………………………………………
                    இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்
                    புள்ளும் பிள்ளையொடுவதிந்தன’         – 385:1-5

    கடல் பறவைகள் கூட்டமாக இரைதேடி உண்பன. தவிர, தன் துணையோடும் இரை தேடுகின்றன.

                    ‘வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
                    …………………………………………..
                    கருங்கால் வெண்குருகு’            – 54:1-4

                   ‘பாடு இமிழ் பனிக்கடல் துழைஇ பெடையொடு
                    உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை’  – 91:3,4

    இப்பாடலடிகள் வழி கடல் பறவைகளின் இரை, அவை இரை தேடும் இடங்கள், இரை தேடும் நேரம், இரை தேடும் முறை முதலிய உணவுச் சூழல் குறித்த செய்திகளை அறிய முடிகிறது.

    வாழிடச் சூழல்

    திணை என்ற தமிழ்ச் சொல்லுக்கு வாழிடம் என்பதோடு மட்டுமல்லாது ஒழுகலாறு என்ற மற்றோர் ஆழமான பொருளும் உள்ளது’3 எனக் கூறுகிறார் பாமயன். கடல் பறவைகள் கடலை ஒட்டிய கடற்கரைச் சோலைகளிலும் மரங்களிலும் தம் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. இப்பறவைகள் கடற்பகுதியிலுள்ள புன்னை மரங்களிலும் பனை மரங்களிலும் கூடு கட்டி வாழ்வதை நற்றிணையின் பல பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

                    நீ உணர்ந்தனையே தோழீ வீ உகப்
                    புன்னைப் பூத்த இன் நிழல் உயர் கரைப்
                    பாடு இமிழ் பனிக்கடல் துழைஇ, பெடையோடு
                    உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை
                    ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன்
                    மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,
                    தாய்ப் பயிர் பிள்ளை வாய் படச் சொரியும்
                    கானல் அம் படப்பை  – 91:1-8

    இப்பாடல் கடற்கரைச் சோலையில் உள்ள புன்னை மரக் கிளையில் கூடுகட்டித் தன் பெடையோடும் குஞ்சுகளோடும் வாழிடச் சூழலை அமைத்துக் கொண்ட நாரை குறித்த செய்தியை அழகுற எடுத்துரைப்பதைக் காணலாம்.

     இறவு அருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
      வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய
      கருங்கோட்டுப் புன்னை இறை கொண்டனவே  -67:3-5

    என்னும் பாடல் வரிகளும் குருகுகள் புன்னை மரத்தில் தங்கிய செய்தியை எடுத்துரைக்கின்றன.

    புன்னை மரம் ஒரு நெய்தல் நிலத் தாவரமாகும். இது ஆழ வேரூன்றி வளர்வது. சங்கத்தமிழர் கடல் அரிப்பைத் தடுக்கப் புன்னை மரங்களைக் கடற்கரைகளில் நட்டு வளர்த்தனர். அவை கடற்கரைச் சோலையாக இன்நிழலைத் தந்தன. பேரலைகளைத் தடுத்தன. இதனால் கடல் பறவைகள் புன்னை மரங்களில் இளைப்பாறியும் கூடுகள் கட்டியும் தம் வாழிடச் சூழலை அமைத்துக் கொண்டன.

    புன்னை மரம் போலவே பனை மரமும் கடல் பறவைகளின் வாழிடமாக அமைந்திருப்பதை நற்றிணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பனை மரம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தாவரம். வறண்ட நிலப்பகுதிகளிலும் கடலோரங்களிலும் இவை ஏராளமாகக் காணப்படுகின்றன. நீண்டு உயர்ந்த இம்மரங்களின் மடல்களில் குருகுகளும் நாரைகளும் காகங்களும் கூடு கட்டி வாழ்வதையும், குறிப்பாக அன்றில் பறவைகள் இம்மரங்களைத் தம் வாழ்விடமாகக் கொண்டிருப்பதையும் நற்றிணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
    வீங்கு
    மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு
    நள்ளென்
    யாமத்து உயவுதோறு உருகி                                 – 199:1-3

    தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
    மன்றப்
    பெண்ணை வாங்கு மடல் குடம்பைத்
    துணைபுணர்
    அன்றில் உயவுக் குரல் கேட்டொறும் – 303:3-5

    புன்னை, பனை தவிர கடற்கரைச் சோலையில் உள்ள மரங்களிலும் பறவைகள் தம் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன.

    ’வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன்
    கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர  – 117:3,4

    கூடுகட்டி வாழும் கடல் பறவைகள் இரைதேடும் பொருட்டும் பகல் பொழுதில் இளைப்பாறவும் தாழை (நற்.131), கப்பலின் பாய்மரம் (நற்.258), வயல்வெளிகள் (நற்.263), மணல்மேடுகள் (நற்.272, 291) இவற்றை நாடுவதைச் சங்கப் புலவர்கள் உற்றுநோக்கிப் பாடியுள்ள திறம் வியத்தற்குரியது.

    கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் கூடுகட்டும் வழக்கத்தைக் கொண்டிருப்பது நீர்ப்பறவைகளின் தனிப்பண்பாகும். கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய பாதுகாப்பான மரங்கள் இருக்கும் நீர்நிலைகளில் அவை ஆயிரக்கணக்கில் கூடுகின்றன.

     நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை
    கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி– 159:3,4

    பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய
    சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்
    துறை புலம்பு உடைத்தே      -231: 2,3

    ஒரு சூழல் செழிப்பாக, உயிர் வளத்துடன் குன்றாத வளர்ச்சியைத் தரும் தன்மையுடன் இருக்கிறதா, மாசுபட்டிருக்கிறதா, சீர் கெட்டிருக்கிறதா என்பதை அறிய பறவைகள் சிறந்த அடையாளமாகும். சுற்றுச்சூழல் சீர்கேடு, வாழிடச் சூழலில் ஏற்படும் பாதகமான மாற்றங்கள் காரணமாக நீர்ப்பறவைகள் புதிய இடங்களைத் தேர்ந்தெடுப்பது உண்டு எனச் சுற்றுச்சூழலியலார் கூறுகின்றனர். நற்றிணைச் செய்திகளை ஆழ்ந்து நோக்கினால் சங்க காலக் கடல் சூழல் பல்லுயிரிப் பெருக்கத்திற்கும் வளத்திற்கும் சான்று பகருவதாகவே அமைந்துள்ளது எனலாம்.

    சூல் கொண்ட பெண் நாரை சூலினால் ஏற்பட்ட வருத்தத்தால் நெய்தல் நிலத்தை விடுத்து மருத நிலத்தில் தங்கியதாகக் கூறப்படும் பாடல் (263:4,5) தவிரச் சூழல் சீர்கேடு காரணமாகப் பறவைகள் இடம் பெயர்ந்ததாகச் செய்திகள் ஏதும் நற்றிணையில் பதிவாகவில்லை என்பது பழந்தமிழகத்தின் கடல் சூழல் வளத்திற்குச் சான்று எனலாம்.

    உறவுச் சூழல்

    ‘கருப்பொருள்கள் தங்களுக்குள் கொள்ளும் உறவு, தமது சுற்றத்துடன் கொள்ளும் உறவு, அதாவது உயிருள்ளவற்றோடு, உயிரற்றவற்றோடு கொண்டிருக்கும் உறவுதான் திணையம் என்பதாகும். இந்த உறவுகளை நுட்பமாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சூழலில் இயங்கும் போது அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கான உறுதிப்பாடு ஏற்படுகிறது’4.

     பறவைகளுக்கும் மனிதனுக்குமான உறவு என்பது நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் மாற்றங்களைச் சந்தித்தே வந்துள்ளது எனலாம். ஒரு காலத்தில் பறவைகளுடன் இணக்கமாக இருந்த மனிதன் தற்போது பறவைகளை நுகர்வுப் பொருளாகவோ அல்லது தனக்குத் தொடர்பில்லாத ஓர் உயிரினமாகவோ பார்க்கத் தொடங்கி விட்டானோ என்ற ஐயம் எழுகிறது.

    பறவைகள் இணையாக வாழ்பவை. கூடு கட்டி, முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரித்து, தம் குஞ்சுகளுக்கு இரை தேடித் தருபவை. இணையில் ஒன்று பறக்க இயலாத சூழலில் இருந்தால் அதற்கும் இரையைத் தேடித் தருபவை. சங்க அகப்பாடல்களில் தலைவன் தலைவியர் இணைந்து வாழ்வதற்கும் பிரிவுச் சூழலில் ஒருவரையொருவர் நினைத்து உருகுவதற்கும் பறவைகளின் வாழ்வியல் சூழல்களே சான்றாகக் காட்டப்படுகின்றன.

    ஒன்று இல் வாழ்க்கை அன்றில் போலப்
    புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை          – 124:1,2

    ‘………………………………இரை வேட்டு
    கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது
    கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு
    முடமுதிர் நாரை கடல் மீன் ஒய்யும்                                       – 263:4-7

    கடல் அம் காக்கைச் செவ்வாய்ச் சேவல்
     ‘……………………………கொடுங் கழி
     இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்
     புள்ளும் பிள்ளையொடு வதிந்தன’         – 385:3-5

    இப்பாடல்களின் வரிகள் கடல் பறவைகள் தம் துணையோடும் குஞ்சுகளோடும் வாழ்ந்த உறவுச் சூழலை விளக்கி நிற்பனவாகும்.

    பறவைகள் மரங்களோடும் உறவுச் சூழலைக் கொண்டிருப்பவை. இந்த உறவே பல்லுயிர்ப் பரவலுக்குக் காரணமாக அமைகிறது.

                    ‘புது மணற் கானல் புன்னை நுண் தாது
                    கொண்டல் அசை வளி தூக்குதொறும் குருகின்
                    வெண்புறம் மொசிய வார்க்கும்’                                                     – 74:7-9 

                    ‘நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர
                    கோடு புனை குருகின் தோடு தலைப்
    பெயரும்         – 375:1,2

    என்னும் பாடல் வரிகளில் கடல் பறவைகளால் மரங்களில் பூத்த பூக்களிலிருந்து மகரந்தத் தாதுக்கள் உதிரும் செய்தி கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இதனால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கான சூழல் உருவாவதை அறிய முடிகிறது. மகரந்தச் சேர்க்கை, மரங்களில் பூக்கள், பழங்கள், விதைகள் உருவாவதற்கும், மரங்கள் அதிக அளவில் தோற்றம் பெறுவதற்கும் அதனால் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் அடித்தளமாக அமைவதைக் காணலாம்.

    கடற்கரைச் சூழலமைவு

    நற்றிணை நெய்தல் திணைப் பாடல்கள் கடற்கரைச் சூழலமைவை அழகுறப் புலப்படுத்தி நிற்பனவாகும். கடற்கரைச் சூழலே கடல் பறவைகளின் வருகைக்கும் பெருக்கத்திற்கும் காரணமாக அமையக்கூடியது. பழந்தமிழகத்தில் இத்தகைய வளமான கடற்சூழல் இருந்ததைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.

                      ‘……………………………தழையோர்
                    கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
                    தெண் திரை மணிப்புறம் தைவரும்
                    கண்டல் வேலி நும் துறை
                    கிழவோற்கே            – 54:8-11

    நீர்த் திவலைகள் தடவும் ஞாழல் மரங்களும் தாழை மரங்களும் நிறைந்த கடற்கரை எனவும்,

                    ‘கோட் சுறா வழங்கும் வாள் கேள் இருங்கழி
                    மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய
                    பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்
                    வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்’                                          – 78:1-4

    சுறாமீன்கள் உலவும் உப்பங்கழியிடத்தே பூத்த நெய்தலின் மலர்கள் நிறையுமாறு புன்னையின் தாதுக்கள் உதிர்ந்து சிந்துவதும், விழுதுகள் தாழ்ந்த தாழையின் பூமணம் நிறைந்து விளங்குவதுமாகிய கடற்கரைச் சோலை எனவும் கடற்கரைச் சூழல் பற்றிய செய்திகளை நற்றிணைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

    இத்தகைய அழகிய சூழலை விளக்கும் பாடல்கள் சங்க இலக்கியம் எங்கும் நிரம்பிக் காணப்படுகின்றன. வளமான கடற்கரைச் சூழலைக் கண்டுகளித்த சங்கப் புலவர்களின் சிந்தையிலும் பாக்களிலும் அச்சூழல் இயல்பாகப் பதிந்து பாடுபொருளாக மாறியிருக்கக் கூடும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

    இன்று கடற்கரைச் சோலைகளும் இல்லை. புன்னையும் தாழையும் ஞாழலும் பனைமரங்களும் கடற்கரையை அணி செய்யவும் இல்லை. கடற்கரைகள் கண்ணையும் மனத்தையும் கவரும் கேளிக்கை விளையாட்டுத் தலங்களாகவும் நட்சத்திர விடுதிகளாகவும் வானுயர்ந்த கட்டடங்களாகவும் உருமாறி வருகின்றன. பறவைகள் இடம்பெயர்ந்து சென்று விட்டன. பல்லுயிர்ப் பரவல் பழங்கதையாகி விட்டதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

    சங்கத் தமிழரின் கூர்நோக்குத் திறனும் பல்லுயிர்ப் பரவலைப் பாடிக் களித்த விதமும் பறவைகளைக் கொண்டாடிய அறிவும் வியக்க வைக்கின்றன. இதில் நற்றிணை சிறிய சான்று. சங்க இலக்கியம் முழுமையும் ஆய்வுக்குட்படுத்தினால் பழந்தமிழகத்துப் பறவைகளின் வாழ்வியலையும் அவற்றைப் சங்கத்தமிழர் தம் வாழ்வியலோடு போற்றிப் பாராட்டிய தன்மையையும் தெளிவாக அறிய இயலும்.

    இன்று அறிவியல் தொழில் நுட்பங்களாலும் ரசாயனக் கழிவுகளாலும் கடல் வளத்தையும் பல்லுயிர் வளத்தையும் இழந்து பெரும் மாறுதல்களைச் சந்தித்து வரும் கடற்கரைகளின் மீது கவனத்தைத் திருப்பி அவற்றைச்  சோலைகளாகவும் மரங்கள் நிரம்பிய சிறு காடுகளாகவும் மாற்றியமைத்தால் கடல் பறவைகளோடு பல்லுயிர் வளமும் பெருகும் என்பதில் ஐயமில்லை.

    ******

    அடிக்குறிப்புகள்

    1. குறுந்தொகை, பா. 325
    2. பாமயன், ‘நெய்தல் நில வேளாண்மை’, சூழலியல் கட்டுரை(நிலமும் வளமும்),

       தி இந்து, நாள். 03.02.2018

    1. பாமயன், திணையியல் கோட்பாடுகள், ப. 11
    2. மேலது, ப. 27

    ******

    கட்டுரையாசிரியர்,
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி
    திருநெல்வேலி

     

     

     

    Share
  • மீன்- கயற்கண்ணி- உத்தர கோசமங்கை

    மீனாட்சி பாலகணேஷ்

    வேத விற்பன்னர்கள் அமுதமென வேதத்தினை சுருதிசுத்தமாக ஓதியருளுகின்றனர். ஓமப்புகையும் தீச்சுவாலைகளும் வானளாவ எழுந்து திகழ்கின்றன. சிவபிரானும் பார்வதி அன்னையும் அருவமாக எழுந்தருளி அந்த அர்ப்பணிப்பை ஏற்றுக்கொண்டு மக்களை ஆசிர்வதிக்கின்றனர். வேதகோஷத்தின் இனிமையில் தோய்ந்த அன்னை உமையவள் ஐயனை நோக்கிக் கேட்கிறாள்: “ஐயனே! இவ்வேதத்தின் உட்பொருள் யாது? தேவரீர் எனக்கு விளக்கியருள வேண்டும்,” என்கிறாள்.

    முடிவில்லாத சொக்கவைக்கும் பேரழகனும் ஆலவாய் நகரின் இறைவனுமாகிய சோமசுந்தரக்கடவுள், அனைத்துலகங்களையும் கருப்பெறாதீன்ற கன்னியாகிய அங்கயற்கண்ணி அம்மையுடன் ஏகாந்தமான ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு அவளுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கத் துவங்குகிறான். என்ன காரணத்தினாலோ உமையவளின் முழுக்கவனமும் அவ்வமயம் அதனைக் கேட்பதில் செல்லவில்லை. மிகவும் முக்கியமானதொரு விஷயத்தை ஒருவர் நமக்குக் கூறும்போது நாம் அதனில் கருத்தைச் செலுத்த வேண்டுமல்லவா? வேதங்கள் அதிரகசியமானவை. அவற்றைக் கருத்தொருமித்துக் கேளாமல் அம்மை அவ்வாறு கருத்தைச் சிதறவிட்டதனால் சிவபிரானுக்குச் சினம் மூளுகிறது.

    “நீ அஞ்ஞானம் நிறைந்த உள்ளத்து மகளிர் போன்று நம்மிடத்துப் பராமுகம் கொண்டு சிரத்தையின்றி இவ்வேதத்தைக் கேட்டாய். ஆகவே மன்னிக்கவியலாத தவறு செய்தவளாவாய். இதனால் (நோன்பும் அறனும் இன்றி) தருமநிலையில் ஒழுகாமல் மீன்களைப் பிடித்துக் கொலைபுரியும் செயலைச் செய்தலால் இழிந்தவர்கள் என்று கருதப்படும் பரதவர் குலத்தில் அவர்கள் மகளாகப் பிறக்கக் கடவாய்,” எனச் சாபமிட்டார்.

    rajam_med

    இங்கு ஒன்றினை நோக்க வேண்டும். இறைவன் சொற்களில் பரதவர் குலம் இழிந்தது என்று கூறியது எதனால்? அவர்கள் பிறப்பால் இழிந்தவரல்லர். செயலால் மட்டுமே இழிந்தவர்கள். இறைவனின் படைப்பில் மீன்களும் ஓர் உயிரினமே எனும் எண்ணமின்றி, நோன்பு- அறமாகிய தருமம், அருள் எண்ணம் ஆகியன இன்றி அவைகளைப் பிடித்து உண்பதற்காகக் கொலை செய்வோர் அவர்கள். இதனாலேயே அவ்வாறு கூறினார்.

    ‘விரதமு மறனு மின்றி மீன்படுத் திழிஞ ரான

    பரதவர் மகளா கென்று பணித்தனன்…’ என்பார் பரஞ்சோதி முனிவர்.

    (திருவிளையாடல் புராணம்)

    அம்மை பதைபதைத்து, “நான் உம்மைப்பிரிந்து இருப்பது எப்படி? இதற்கென்ன விமோசனம்?” எனக்கேட்க, இறைவனும், “நீ பரதவர் மகளாகப் பிறந்து வாழுங்காலை நாம் அங்கு வந்து உன்னை மணம் புரிவோம்,” எனக் கூறியருளினார்.

    அன்னையைக்காண ஓடோடி வருகிறான் விநாயகப்பெருமான். இதனைப் பற்றியறிந்த அவர் இவ்வேத நூல்களால் தானே இந்நிகழ்ச்சியனைத்தும் நடைபெற்றது?” எனச் சினங்கொண்டு அங்கிருந்த சுவடிகளையெல்லாம் துதிக்கையால் அள்ளி ஒருசேரக் கடலில் வீசியெறிந்தான். கிரவுஞ்சமலையைப் பிளக்க வேலேறிந்த முருகக்கடவுளும் தன் தந்தையின் திருக்கரத்திலிருந்த சிவஞானபோதம் எனும் நூலைப் பிடுங்கிக் கடலில் வீசினான். அன்னையை ஓடோடிச் சென்று அன்புமீதூர அணைத்துக்கொண்டான் முருகன்.

    வரைபக வெறிந்த கூர்வேல் மைந்தனுந் தந்தை கையில்

    உரைபெறு போத நூலை யொல்லெனப் பறித்து வல்லே

    திரைபுக வெறிந்தான்…..’ (திருவிளையாடல் புராணம்)

    இப்போது சோமசுந்தரக்கடவுள் நந்திதேவரைப் பார்த்துச் சினம்கொண்டார்.

    “நாம் உமையுடன் தனித்து உரையாடும்போது நீ எவ்வாறு குழந்தைகளை உள்ளே புக அனுமதித்தாய்? அதனால்தானே தீங்கு விளைந்தது. ஆதலால் நீ சுறாமீன் வடிவெடுத்து கடலில் கிடந்துழலக் கடவாய்,” எனச் சபித்தார்.

    வேழமுகனைச் சபித்தால் அச்சாபத்தின் வலிமை தன்னையே வந்தடையுமென்றெண்ணி அவரை ஒன்றும் கூறவில்லை. முருகப்பெருமானை, “வணிகர் மரபில் ஊமையனாகத் தோன்றக் கடவை,” எனவும் சபித்தார் சிவபிரான்.

    சாபத்தின் விளைவினால் உமையம்மை பரதவர்குல மகளாகப் பிறந்து அழகு திகழ வளர்ந்தாள். நந்திதேவரும் சுறாமீன் வடிவுகொண்டு கடலில் உழலுவாராயினார். அச்சுறாமீன் கடலைக்கலக்கி கலங்கள், மீன்பிடிக்கும் பரதவர் யாவருக்கும் மிக்க துன்பத்தை விளைவித்தது. அதனைப் பிடிக்க இயலாது வருந்திய பரதவர் தலைவன், “இச்சுறாவைப் பிடிப்பவருக்குத் தன் மகளை (அவ்வாறு வந்து பிறந்திருந்த உமையம்மையை) மணஞ்செய்து கொடுப்பதாக அறிவித்தான். சிவபிரான் ஓர் இளம் வலைஞனாகக் கோலங்கொண்டு வந்து சுறாமீனைப் பிடித்துப்பின் உமையம்மையின் கரம் பற்றினார்.

    தனது துணைவியான அம்மையுடன் சிவனார் இடப ஊர்தியின்மீது எழுந்தருளிக் காட்சி தந்தார். சுறாமீனாக உருவெடுத்திருந்த நந்தியெம் பெருமானும் அவ்வடிவு நீங்கி, தம் இடப வடிவுடன் தோன்றினார். பரதவர் தலைவனுக்கு இவ்வாறு பேரருள் புரிந்த சிவபிரான் உமையம்மையுடனும் நந்திதேவருடனும் உள்நிறை அன்பரோடும் உத்தரகோச மங்கை எனும் திருத்தலத்தை அடைந்தான்.

    அங்கு உமையவளான மங்கைக்கு அதிரகசியமான வேதத்தை வாய்மொழியாகச் செவிகளில் புகட்டினான்.

    அங்கிருந் தநாதி மூர்த்தி யாதினான் மறைகள் ஏத்தும்

    கொங்கிருங் கமலச் செவ்விக் குரைகழல் வணங்கிக் கேட்ப

    பங்கிருந் தவட்கு வேதப் பயனெலாந் திரட்டி முந்நீர்ப்

    பொங்கிருஞ் சுதைபோ லட்டிப் புகட்டினான் செவிக ளார.

    (திருவிளையாடல் புராணம்)

    Uthirakosamangai-Emerald

    சிவபிரான் மங்கைநல்லாளாகிய உமையம்மைக்கு வாய்மொழியாக (உத்தரம்) வேதங்களை (கோசம்) உபதேசித்ததனால் இத்திருத்தலம் உத்தரகோசமங்கை எனப் பெயர் பெற்றது. உத்தரம் + கோசம் + மங்கை.

    இத்தலத்தே எழுந்தருளியுள்ள சிவபிரான் மங்களநாதர் எனவும் அம்மை மங்களநாயகி எனவும் போற்றப்படுகின்றனர். இத்தலத்தின்மேல் பெரும்பற்றுக் கொண்டிருந்த மாணிக்கவாசகர் இத்தலத்தை, “பார்மேல் சிவபுரம் போல் கொண்டாடும் உத்தரகோசமங்கை,” எனப் போற்றுகிறார். வாதவூரடிகளின் இருபிறவிகளிலும் இத்தலம் தொடர்புடையது எனத் திருக்கோவில் செய்தி கூறுகின்றது. இத்தலத்தில் அவர் ‘நீத்தல் விண்ணப்பம்,’ ‘திருப்பொன்னூசல்,’ ஆகிய இரு பதிகங்களையும் பாடியருளினார்.

    ‘திரு உத்தரகோச மங்கையில் எழுந்தருளியுள்ள வேதியன், வணங்குபவர் பாவங்களைப் போக்குபவன், அழகே வடிவெடுத்த சிவபிரான், தன்னிடம் உறவு கொண்டாடுபவர்க்கெல்லாம் நெருக்கமாகிறான்,’ என்கிறது ஒரு அழகான பாடல்.

    உன்னற்கு அரியதிரு உத்தர கோசமங்கை

    மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே

    பன்னிப் பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்றறுப்பான்

    அன்னத்தின் மேலேறி ஆடும் அணிமயில்போல்

    என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடி

    பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ’

    (திருப்பொன்னூசல்- திருவாசகம்)

    இத்தலத்து அம்மையின்மீது இரு பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பட்டனவாம். நமக்குக் கிட்டியுள்ளது ஒன்றே! அருமையான பொருள்நயம், சந்தநயம், சொல்நயம் அமைந்த பாடல்களைக் கொண்டு விளங்கும் இந்நூலை இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை.

    பிள்ளைத்தமிழ் நூல்களில் யாதேனும் ஒரு பருவத்துப்பாடலில் பாட்டுடைத்தலைவன்/ தலைவியின் புகழையோ, சாதனையையோ, அருளையோ கூறுமுகமாக அத்தலத்தின் தலபுராணம் பற்றிய செய்திகளையும் காணலாம். இப்பிள்ளைத்தமிழ் நூலிலும் அவ்வாறமைந்த பாடலொன்று சப்பாணிப்பருவத்தில் காணப்படுகிறது. இது தொடர்பான நிகழ்வை விளக்கவே மேலே திருவிளையாடல் புராணச் செய்தியொன்று கூறப்பட்டது.

    பிள்ளைத்தமிழ் என்ன கூறுகின்றதெனக் காணலாம்:

    கதை தொடர்கின்றது!

    விநாயகனும் முருகனும் இவ்வாறு வேதநூல்களைக் கடலில் எறிந்ததனைக் கண்டு அன்னை உமையாள் உள்ளம் நெகிழ்கிறாள். “என் குழந்தைகளுக்கு என்மீது எவ்வளவு பிரியம்?” எனத் துன்பத்திலும் உள்ளம் களிகொள்கிறாள். “என் முத்தையனே! உனக்கு என்னிடம் இத்துணை அன்பா?” எனக்கேட்பவள் அவனை வாரியணைத்து ஆசையாக முத்தமிடுகிறாளாம். அத்தகைய அன்னையே! உத்தரகோசமங்கை என்னும் திருவூரில் எழுந்தருளியுள்ளவளே! நீ சப்பாணி கொட்டியருளுக! எனப்புலவர் வேண்டுவதாக இப்பாடல் நயம்பட அமைந்துள்ளது. இப்பாடல் இத்திருத்தலத்தின் தலபுரானத்தை நமக்கு விளக்குகின்றது.

    மலைவளைத் திடுமங்க ளேசனை யெனக்கொரு

    மறைப்பொரு ளுரைத்தியென

    மங்கையர்க் கரசிநீ மறவாது கேளென்று

    வசனிக்க வுரைமறந்தே…….

    ……………………………………………………….

    முன்வைத்த புத்தகத்தை

    முன்கிழித் தெறியவுமென் முத்தைய னாமென்று

    முருகனெனு மிளையமகனைத்

    தலைவளைத் தேமுத்த மிட்டபெரு மாட்டியொரு

    சப்பாணி கொட்டியருளே!

    (திரு உத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ்)

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)

    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,

    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி, தமிழ்த்துறை,

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,

    கோயம்புத்தூர்- 21.}

    கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

    திரு உத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (நன்றி- ரோஜா

    முத்தையா ஆராய்ச்சி நூலகம்)

    2. திருவாசகம்- மாணிக்கவாசகர்.

    3. திருவிளையாடல் புராணம்- பரஞ்சோதி முனிவர்

    ************

    Share
  • குறளின் கதிர்களாய்…(202)

     

    செண்பக ஜெகதீசன்

     

    கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த                                                                 

    னடுமுரண் தேய்க்கும் அரம்.

           -திருக்குறள் -567(வெருவந்த செய்யாமை)

     

    புதுக் கவிதையில்…

     

    கண்டிப்பில் கடுமையான சொல்லும்,

    தண்டனை

    அளவுக்கு அதிகமாவதும்,

    அரசனின்

    வெல்லும் வலிமையெனும்

    இரும்பறுக்கும் அரமே…!

     

    குறும்பாவில்…

    கடுஞ்சொல் கண்டிப்பும், காவலனின்  

    கூடுதல் தண்டனையும், வெல்லுமவன்  

    வலிமை இரும்பறுக்கும் அரமாகும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    நாட்டை யாழும் மன்னவர்க்கு

         நல்ல தல்லாக் கொடுஞ்சொல்லும்,

    காட்டிக் கொடுக்கும் வஞ்சகர்க்குக்

         கொடுக்கும் அதிக தண்டனையும்,

    ஆட்டம் காட்டிடும் அரசினுக்கே,

         அரமாய் அவையே அறுத்தழிக்கும்

    ஓட்டம் பிடிக்கப் பகையழிக்கும்

         வலிமை யென்னும் இரும்பினையே…!

     

    லிமரைக்கூ..

     

    கண்டிக்கும் கொடிய சொல்லும்,

    கொடுந்தண்டனையும், மன்னனின் வலிமையாமிரும்பை

    அரமாகி அறுத்துச் செல்லும்…!

     

    கிராமிய பாணியில்…

     

    நல்லதில்ல நல்லதில்ல

    ராசாவுக்கு நல்லதில்ல,

    கோவத்தல சொல்லுற கொடுஞ்சொல்லும்

    குடுக்கிற தண்டனயக்

    கூடுதலாக் குடுகிறதும் நல்லதில்ல..

     

    அதெல்லஞ் சேந்து

    அவுரு செயிக்கிற

    வலிமங்கிற இரும்ப

    அரம்போல அறுத்திடுமே..

     

    அதால,

    நல்லதில்ல நல்லதில்ல

    ராசாவுக்கு நல்லதில்ல,

    கொடுஞ்சொல்லும்

    கூடுதல் தண்டனயும் நல்லதில்ல…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • நல்லதோர் வீணை..!

    நல்லதோர்

     

    நல்வளமாம் நீர்வளமும் நிலவளமும் நிறைந்ததிருநாட்டில்..

    ……….நீதிவழுவாதோர் நாட்டுக்கு நல்லதெனப் பலசொன்னார்.!

    நல்லெண்ணம் கொண்டஞானியரும் முனிவரும் உதித்தநம்..

    ……….நானிலத்தில் நாட்டுப்பற்றுக்கு இனியதிகப் பஞ்சம்தான்.!

    வல்லரசாகும் நம்நாடுமென இளைஞரின் இளநெஞ்சினில்..

    ……….வல்லமை யெனும் விதையன்றே விதைத்தானொருவன்.!

    வெல்லமுடியா மகாகவியாமவன்!கேட்டான் சிவசக்தியிடம்..

    ……….நல்லதோர் வீணைசெய்து புழுதியில் எறியலாமாவென.?

     

     

    நல்லாட்சி நல்குதற்கே நாட்டுப்பற்றுடன் நாளுமுழைத்தார்..

    ……….கல்லுடைத்துச் செக்கிழைத்தார் சிறைக்கும் சென்றார் .!

    பொல்லாத சொப்பனமின்று கண்டாற்போல்நாம் பெற்றது..

    ……….எல்லாமும் மீண்டுமிழக்கும் நாளுமினி வந்துவிடுமோ.?

    சொல்லாட்சி செய்கின்ற சொற்பெருக்கராலே மக்களுக்குச்..

    ……….சேவையொன்று மில்லை நற்சிந்தனையும் இல்லையாம்.!

    பல்லுயிரும் பெறுகின்ற பரமசுகமந்த இயற்கைவளத்தைப்..

    ……….பலருமொன்றாகச் சுரண்ட நினைப்பதுதான் தகுமோ.!

     

     

    தீரன்வீரனென்றும் தியாகியென..தனக்குத்தானேச் சொல்லி..

    ……….தன்பெயருடன் இணைத்துக் கொள்வார் சுயநலவாதிகள்.!

    காரணங்கள் பலசொல்லி சிந்தைமழுங்கும் செயல்தனில்..

    ……….கட்டிளங்காளையரை..கன்னியரைத் தன்பக்கம் இழுப்பர்.!

    பீரங்கி முழங்கப் பெற்றபெருஞ்சுதந்திரம் சீர்குலையும்படி..

    ……….பாரம்பரியமழிக்கவே முயல்வார் நயவஞ்சகத்தார் பலர்.!

    வீரத்தையெழச் செய்யும்தம் பாட்டினால் மீண்டுமொரு..

    ……….வண்ணக் கொடியேந்த பாரதிபோலின்னும் பலர்தேவை.!

     

     

    நல்லதோர் வீணையின் நரம்பிலெழும் நாதம்போல்..

    ……….நம் மனதிலெழும் நல்லெண்ணமாமதை மீட்கவேண்டும்.!

    புல்வனத்திலே தோன்றியதொரு புதியமலரைப் போலவே..

    ……….பாருலகத்தில் பாரதத்தின் தனித்தன்மை ஓங்கிடவேணும்.!

    சொல்லிலேமயங்கிச் சொக்கிநின்று கேடுறும் வாழ்வுநீக்கி..

    ……….செல்லும் நல்லியலார்வழி தோன்றவகை செய்யவேணும்.!

    வல்லுனர்கள்நல் வாழ்வுக்கு வழிவகுத்த வரையரையை..

    ……….வகையாய்க் கற்பதற்கே கல்வியறிவு பெற்றிடல்வேணும்.!

     

    ====================================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::28-01-18

    நன்றி:: கூகிள் இமேஜ்.

     

     

     

    Share
  • வாய்ப்பு

    -ஆ. செந்தில் குமார்

    இது
    திறமைகள் பளிச்சிட
    உதவிடும் திறவுகோல்!
    இது
    அவசரத்திற்கும்  தாமதத்திற்கும்  இடையில் இருக்கும் மணித்துளி!
    இது
    நோக்கமற்றோர்க்கு என்றுமே எட்டாக்கனி!
    நோக்கமுள்ளோர்க்கு உதவிடும் காரணி!
    இது
    ஆண்டியைக்கூட அரசனாக
    மாற்றிடும் வல்லமையுள்ளது!
    இதை
    துணிந்தவன் உருவாக்குவான்!
    இதற்காக
    அஞ்சுபவன் காத்திருப்பான்!
    இதை
    உணர்த்திடும்
    உறுதி கொண்ட எண்ணமும்!
    உற்று நோக்கும் திண்ணமும்!
    இதைப்
    பற்றிக் கொண்டவன்
    வெற்றி கொண்டவனாவான்!
    இதைப்
    பறிகொடுத்தவன் நூலறுந்து
    சுற்றும் காற்றாடியாவான்!

     

     

     

    Share
  • அம்மா…பால்!!

    -நிலவளம் கு.கதிரவன்

    முன்னுரை: –

    பால் என்பது மனிதர்களுக்கு புரதச் சத்தினை வழங்கும் முக்கியமான உணவுப் பொருளாகும். முக்கியமாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஏற்றதும், பேறுகாலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.  இந்தப் பாலானது கர்ப்பிணிப் பெண்களுக்கு எவ்வாறு உதவுகிறது? அதிலும் உயர் பாக்டீரியா பால் இவர்களின் பேறுகாலங்களில் ஏற்படும் ஆபத்தான நோய்களிலிருந்து எவ்வாறு காக்கிறது என்று சமீபத்தில் நார்வே நாட்டில் ஆராய்ச்சிசெய்து வெளியிட்டுள்ளனர்.  அந்த ஆராய்ச்சியில் என்ன சொல்லியுள்ளார்கள்? ஆராய்ச்சி முழுமையானதா? இது பற்றிய அமெரிக்காவின் பார்வை என்ன? தமிழ்நாட்டில் வாழும் இந்தியனாய் நமது நிலைப்பாடு என்ன? என்பது பற்றித்தான் இக்கட்டுரை ஆராய்கிறது.  வாருங்கள் கட்டுரையின் உள்ளே செல்வோம்.

    புரோபயாடிக் பால் (Probiotic Milk) : –

    தற்பொழுது சந்தையில் பல்வேறு நிலைகளில் கொழுப்பு நீக்கிய பால், சமன் செய்யப்பட்ட பால், நல்ல பாக்டீரியா நிறைந்த பால் எனப் பெயரிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.  சரி, புரோபயாடிக் பால் என்றால் என்ன?  ஒன்றும் இல்லை.  பாக்டீரியாவில் நல்ல பாக்டீரியாவும் உள்ளது;  தீமை செய்யும் பாக்டீரியாவும் உள்ளது.  இதில் நல்ல பாக்டீரியா மட்டுமே உள்ளடக்கிய பாலின் பெயர்தான் உயர் பாக்டீரியா பால் அல்லது நல்ல பாக்டீரியா பால் என்றழைக்கப்படுகிறது.

    இந்த நல்ல பாக்டீரியா பால்… இனிமேல் புரோபயாடிக் பால் என்றே அழைப்போம்.  புரோபயாடிக் பால் கர்ப்பிணிப் பெண்களுக்கு எவ்வாறு உதவுகிறது? கர்ப்பப் பருவ காலங்களில் இப்பாலின் பங்கு என்ன? எவ்வளவு தாய்மார்கள் இப்பாலைத் தினசரி அருந்துகின்றனர்? இதன் விளைவால் கர்ப்ப காலங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு காலங்களில் ஏற்படும் மாற்றம் என்ன? என்பது பற்றியெல்லாம் மிகச் சமீபத்தில் நார்வே நாட்டில் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    நார்வே நாட்டின் ஆய்வு :-  

    கர்ப்ப காலத்தில் உயர் பாக்டீரிக்கள் நிறைந்த புரோபயாடிக் பாலை அருந்தி வந்தால், இக்காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரண்டு அபாயங்களை குறைக்கலாம் என்கிறது நார்வே ஆய்வு.

    புரோபயாடிக் பாலை உட்கொண்டு வந்த, குழந்தை உருவாவதற்கு முன் நிலையுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும், இத்தகைய பாலை அருந்தாத கர்ப்பிணிப் பெண்களையும் இணைத்து ஆய்வுசெய்தபோது இவர்களில் புரோபயாடிக் பாலினை அருந்தி வந்த பெண்களுக்கு முன்கூட்டியே அதாவது 37 வாரத்திற்கு முன்னரே ( Preterm Delivery ) குழந்தை பிறக்கும் ஆபத்து பெருமளவில் குறைவு என்பதையும், கர்ப்ப காலத்திற்குப் பின்னர் புரோ பயாடிக் பால் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு ” ப்ரீஎக்ளாம்ஸியாவின் ” ஆபத்து குறைவாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    ப்ரிஎக்ளாம்ப்ஸியா (Preeclampsia) ஆபத்து என்பது கர்ப்ப காலங்களில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்தஅழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக அளவிலான புரதம் என்ற சிக்கல்கள்தான். இதனால் கர்ப்பிணிப் பெண்களின் உடல்நிலை பாதிக்கிறது. இவ்வகையான ஆபத்து உடல் அழற்சி பிரச்சினையோடு (Inflammation) இணைந்துவிடுகின்றபோது முன் கூட்டிய பிரசவம், சுகப் பிரசவமின்மை போன்ற அபாயங்கள் ஏற்படுகிறது.

    இந்நிலையில்தான் இதுபோன்ற ஆபத்துகளைக் குறைக்க புரோபயாடிக் பால் உதவுவதாகவும், இதனால் உடல்அழற்சிப் பிரச்சினை குறைவதாகவும், பேறுகால ஆபத்துகள் பெருமளவில் குறைவதாகவும் ஸ்வீடன் பல்கலைக் கழக மருத்துவர் மஹ்ஸா நார்ட்க்விஸ்ட் கூறுகிறார் .

    நார்வே தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் கூட்டாய்வு : –

    புரோபயோடிக் பால் சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு நார்வே தாய்மார்களில் சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.  இவர்கள் அனைவரும் நீண்ட காலம் இக் கூட்டாய்வில் அங்கம் வகிப்பவர்கள்.  ஆய்வில் ஈடுபட்ட கர்ப்பிணிப் பெண்களிடம் கர்ப்ப காலத்தின் 15 மற்றும் 30ஆவது வார இறுதியில் அவர்களின் உடல்நிலை மற்றும் வாழ்க்கைமுறை பழக்க வழக்கங்களின் தரவுகள் பெறப்பட்டது.  22ஆவது வார முடிவில் அவர்கள் தங்களின் உணவுப் பழக்கவழக்கங்களின் தரவுகளை முன்னரே வழங்கியிருந்தனர்.

    ஆய்வில் கலந்துகொண்ட பெண்களில் கர்ப்பத்திற்கு முன் புரோபயோடிக் பாலை எடுத்துக் கொண்டவர்கள், கர்ப்ப காலத்தின் ஆரம்ப மற்றும் இறுதிக் காலத்தில் என பல கட்டங்களாக இப்பாலை எடுத்துக் கொண்டவர்கள் என பல பிரிவுகளாக பிரித்து கேள்விகள் கேட்கப்பட்டன.  காரணம் இவ்வாய்வில் ஈடுபட்ட ஆய்வாளருக்கு நார்வேயில் பரவலாக புரோபயோடிக் பால் கிடைக்கும் என்பதை நன்கறிந்தவர்.

    ஆய்வில் 23 சதவிகித பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் புரோபயோடிக் பாலை அருந்தியதாகவும், 38 சதவிகித பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்தில்  (கர்ப்பம் தரித்த 13ஆவது வாரம் வரை) புரோபயோடிக் பால் அருந்தியதாகவும், 32 சதவிகிதப் பெண்கள் கர்ப்பம்தரித்த இறுதி காலத்தில் ( 13ஆவது வாரத்திற்கும் 30ஆவது வாரத்திற்கும் இடையில்) நல்ல பாலை அருந்தியதாகவும், இவர்கள் அனைவரும் நாளொன்றுக்குச் சராசரியாக 1.5 கப் எடுத்துக் கொண்டதாகவும் கூறினர்.

    பாதுகாப்புச் சாத்தியமுள்ள விளைவுகள்: –

    ஆய்வின் முடிவில் கர்ப்ப காலத்தின் இறுதியில் புரோபயோடிக் பாலை அருந்தியவர்கள், புரோபயோடிக் பாலை எடுத்துக் கொள்ளாத பெண்களை விட 20 சதவிகிதம் ப்ரிஎக்ளாம்ப்ஸியா ஆபத்து குறைந்தவர்களாக இருந்தனர் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

    அதேபோன்று கர்ப்ப காலத்தின் இறுதி நாட்களில் புரோபயோடிக் பாலை எடுத்துக் கொண்டவர்களுக்கு ப்ரிக்ளாம்ப்ஸியா ஆபத்து அறிகுறிகளான உயர் ரத்த அழுத்தம், சிறு நீரகத்தில் உயர் புரோதம் போன்றவற்றின் பாதிப்புகள் குறைவாக இருந்ததை கண்டறிந்ததாக ஆய்வாளர் நார்ட்க்விஸ்ட் தெரிவித்தார்.

    இவ்வாய்வில் இப்பாலை உட்கொள்ளும் நேரத்தைக் கணக்கிட்டு, குறைப் பிரசவ காலத்தோடு ஒப்பிடப்பட்டது. இதில் ஆரம்ப கர்ப்ப காலத்தில் புரோபயோடிக் பாலை எடுத்துக் கொண்டவர்களுக்கு 21 சதவிகிதம் குறைப் பிரசவப் பிரச்சினை இல்லை என்பதும் தெளிவானதாக ஆய்வாளர் கூறினார்.

    நார்வே ஆய்வின் நீதி : –

    ஆய்வாளர் புரோபயோடிக் பால் சம்பந்தமாக ஆய்வில் ஈடுபட்டது, அவ்வாய்வுக்கு நார்வே தாய்மார்களை அதிக அளவில் பயன்படுத்தியது, அதன் தொடர்ச்சியாக முடிவுகளை வெளியிட்டது என எல்லாம் சரியாக நடைபெற்று, இறுதியில் ஒரு குண்டை தூக்கி போட்டார்.  அதுதான் அவர் ஆய்வின் நீதியாக சொன்னது.

    அதாவது இவ்வாய்வு ஒரு வரம்பிற்கு உட்பட்டே நடைபெற்றதாகவும், புரோபயோடிக் பால் சம்பந்தமான மதிப்பீடு ஏதும் எங்களால் செய்யப்படவில்லையென்றும், உடல்அழற்சி விளைவுகளை (Inflammation) குறைப்பதில், இப்பாலில் உள்ள பாக்டீரியாவின் வீரியத்தை மதிப்பிடவில்லையெனவும் கூறினார்.  கூடுதலாக இவ்வாய்வு காரணம் மற்றும் விளைவுகளை (Cause and effect) நிரூபிப்பதற்கு பதிலாக புரோபயோடிக் பால் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் பிரச்சினைகள் என்ற அளவில் மட்டுமே நிகழ்ந்ததாக குறிப்பிட்டார்.

    அமெரிக்காவின் நீதி : –

    இவ்வாய்வின் மீது ஆரம்பத்திலிருந்தே ஆர்வமாக இருந்தவர் வாஷிங்டன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மகப்பேறு சிகிச்சை நிபுணர் டாக்டர் சூசன் பாத்கேட்.  காரணம் பெரும் எண்ணிக்கையிலான கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து உணவுத் தகவல்களைப் பெற்று ஆய்வு செய்ததுதான்.  ப்ரிஎக்ளாம்ப்ஸியா ஆபத்துகள் தொடர்பாக இவர் ஆராய்ச்சி செய்தவர் என்றாலும் மேற்கண்ட கள ஆய்வில் இவர் ஈடுபடவில்லை.

    ப்ரிஎக்ளாம்ப்ஸியாவின் அதிக ஆபத்தில் உள்ள பெண்களுக்குத் தங்களின் கர்ப்ப காலத்தின் இரண்டாவது பருவத்தில் அதாவது இரண்டாவது மூன்று மாதங்களில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரியைக் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளப் பரிந்துரைப்பதாக டாக்டர். பாத்கேட் கூறுகிறார்.  இது வீக்கத்தை, அழற்சியைக் குறைக்க உதவும் என கருதுவதாகவும் தெரிவித்தார்.

    நார்ட்க்விஸ்ட் குறிப்பிட்டுள்ளபடி ப்ரிஎக்ளாம்ப்ஸியா மற்றும் பேறு காலத்திற்கு முன்னரே பிறக்கும் ஆபத்துகளும், இதற்கான பாதைகள் அழற்சி நோயால் பாதிக்கப்படுதாகவும், இத்தகைய ஆபத்துகள் நஞ்சுக் கொடி வழியாகவும் தோன்ற வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்.

    மேலும் அழற்சி ஆபத்துக்களைக் குறைப்பதன் வழியாக, பேறுகாலப் பிரச்சினைகளையும் குறைக்க முடியும் என்ற அறிவும், தெளிவும் இருப்பதுடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு மேற்கண்ட சிக்கல்களைத் தடுக்க உதவும் புரோபயோடிக் பாலை அருந்துவதற்கு உரிய பரிந்துரைகள் அளிப்பதற்கு கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை என்கிறார் டாக்டர் சூசான்பாத்கேட்.  புரோபயோடிக் பால் என்பது நார்வே நாட்டினைப் பொறுத்து மக்களின் பொதுவான உணவுப் பொருள்களில் ஒன்றாக இருக்கலாம்.  ஆனால் அமெரிக்காவில் இவ்வழக்கம் இல்லை என்கிறார்.

    இந்திய நீதி : –

    நார்வே நாட்டு கர்ப்பிணிப் பெண்களிடம் புரோபயோடிக் பால் அருந்துவது  தொடர்பாக ஆய்வினை செய்த ஆய்வாளர் இறுதியில் அந்த பாலின் மீதான ஆய்வு இது இல்லை என்றும், நல்ல பாக்டீரியா மீதான வீரியத்தையும் நாங்கள் ஆய்வு செய்யவில்லை என்கிறார்.  அமெரிக்க பல்கலைக் கழக மருத்துவரோ நார்வே நாட்டில் புரோபயோடிக் பால் என்பது பொதுவான உணவுமுறை என்றும், பேறுகால ஆபத்துகளுக்கும், இப்பாலுக்கும் எவ்விதமான தொடர்பு உள்ளது என்பதை இனி வரும் ஆய்வுகள்தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறி அமெரிக்காவில் இத்தகைய பழக்கம் இல்லை என்று ஒரே போடுபோட்டுவிட்டார்.

    இப்பொழுது நமது இந்தியத் தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் இல்லை மக்களே, தலைப்பை ஒருமுறை படியுங்கள். ம்.. இப்படி அன்போடு தினசரி அழைத்து நம்மிடம் வழங்கும் பாலை நன்றாக காய்ச்சி உறையிட்டுத் தயிராக்கி தினசரி கர்ப்பிணித் தாய்மார்கள் அருந்தினால் பேறுகால ஆபத்துகளை தவிர்க்கலாம்.  காரணம் தயிரில் போலிக் அமிலம் மிகுதியாக உள்ளது.  தவிரவும் யோகர்ட் என்ற இனிப்புத் தயிரினை சாப்பிடலாம்.  இதில் நல்ல பாக்டீரியாக்கள் மிக அதிக அளவில் உள்ளது. இதைத் தவிர இட்லி, தோசை, ஆப்பம், முளை கட்டிய பீன்ஸ், முட்டை கோஸ் என இவை அனைத்திலும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.

    உடல்அழற்சியை (Inflammation) தவிர்க்க வேண்டுமா? தினசரி 15 நிமிடம் நடைப் பயிற்சி.  நமது பாரம்பரியமான யோகா.  இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உடல் அழற்சியோ, வீக்கமோ ஏற்பட்டிருந்தால் கூட பெருமளவில் குறைத்துக் கொள்ளலாம். இதுவும் தவிர்த்து சத்தான காய்கறிகள், கீரை வகைகள். அப்புறமென்ன நமக்கு கவலை?

    முடிவுரை : –

    உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை தினசரி ஆய்வுகள் வந்த வண்ணம்தான் உள்ளன. தொடர்ந்து அதற்கு எதிர்க்கருத்துகளும் வருகிறது.  இதையும் தாண்டிக் கர்ப்பிணித் தாய்மார்களை முன்னிட்டு சர்வ தேச வியாபாரம்.  எனவே இதையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், நமது பாரம்பரியமான உணவு வகைகளைப் பேணிக் காத்தோமேயானால் கர்ப்ப காலம் வசந்த காலமாகவே அமையும்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (93)

    நிர்மலா ராகவன்

    உன்னையே மதிப்பாய்!

    நலம்-1-1-1

    நான் ஏனோ இப்படி இருக்கிறேன்! எதையும் உடனடியாகச் செய்யத் தெரியாது!’

    இப்படி வருந்திய ஒரு தோழியிடம், “ உன் குறைகளை ஏன் வெளியில் சொல்கிறாய்?பிறர் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடு,” என்றேன்.

    அடக்கம் என்றெண்ணியோ, இல்லை, மனம் பொருமுவதாலோ, பலர் தம் இயலாமையை வெளியில் சொல்கிறார்கள். பிறர் நம்மை மட்டமாக நினைத்து நடத்த நாமே வழி வகுப்பானேன்!

    நாம் பிறரை மதிக்க வேண்டுமென்றால் முதலில் நம்மையே மதிக்கக் கற்கவேண்டும்.

    `இது கர்வமில்லை?’ என்ற சந்தேகமே வேண்டாம்.

    இது சுய மரியாதை!  இதில் தற்பெருமை கிடையாது.

    கதை

    கேட்பவருக்கெல்லாம் உதவி செய்யும் தனது நற்குணத்தைப்பற்றி கவினுக்குக் கொள்ளைப்பெருமை. `இந்தக் காலத்தில் யார் இப்படி இருக்கிறார்கள்!’ என்று பார்ப்பவரெல்லாம் புகழ்ந்தார்கள்.

    ஒருநாள் விளையாடும்போது அவன் காலில் அடிபட்டுவிட்டது.  வலியை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

    வழக்கம்போல், அவனுடைய ஆசிரியர் மூன்றாவது மாடியில் தன் புத்தகங்களைக் கொண்டுவைக்கும்படி கூற, அவனும் அப்படியே செய்தான். கால் நன்றாக வீங்கிப்போயிற்று. சில நாட்கள் பள்ளிக்குப் போக முடியவில்லை.

    “காலில் அடி பட்டிருக்கிறது, நடக்க முடியவில்லை என்று ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை?”  என்று ஆசிரியர் கடிந்துகொண்டார்.

    “பிறருக்கு நல்லவனாக இருக்க உனது நலனைத் தியாகம் செய்யக்கூடாது!இப்போது கஷ்டப்படுகிறாய், பார்!” என்று அவன் தாயும் அறிவுரை கூறியவாறு அங்கலாய்த்தாள்.

    நம்மை நாமே மதிக்க வேண்டுமென்றால், நம்மிடமோ, அல்லது பிறரிடமோ, `இப்போது முடியாது!’ என்று (மரியாதையுடன்தான்!) சொல்லும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    கதை

    குடும்பத்தில் எல்லாரும் ஒரு திரைப்படத்திற்குப் போனபோது எனக்குப் பரீட்சை சமயம்.

    “நீயும் வாயேன்! ஒரு நாளில் என்ன வந்துவிடப் போகிறது!” என்று எனக்கு ஆசை காட்டினார்கள்.

     “படிக்கணும்,” என்று அரைமனதாக முணுமுணுத்தேன்.

    நான் ஏதும் கூறுமுன், என் சித்தி, “அவள் என்னைமாதிரி! வேண்டாம் என்றால் வேண்டாம்தான்!” என்றாள்.

    படித்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவள்! அவளைப்போல் நான் இருக்கிறேனாமே! `நம்மைப்பற்றி ஒருவர் இவ்வளவு நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறாரே! அதை நாமே கெடுத்துக்கொள்ளலாமா?’ என்று தோன்றிப்போயிற்று. அப்போது எழுந்த பெருமையில், எனக்கு வெளியே போய்,நேரத்தை உல்லாசமாகக் கழிக்கத் தோன்றவில்லை. சபலமாக இருந்தாலும் அடக்கிக்கொண்டேன். சுய கட்டுப்பாடு வந்தது.

    எல்லாரையும் மதிக்க வேண்டும், ஆனால் ஒருவரது பணிவோ, அடக்கமோ பலவீனம் என்று துச்சமாக நினைப்பவர்களை ஏற்காமல் விலகி இருக்க வேண்டும் என்று புரிய ஒரு சம்பவம் வாய்த்தது.

    கதை

    பள்ளித் தலைமை ஆசிரியர் பழனியப்பன்  தம் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து,எங்களுக்குப் பால் விற்று வந்தார்.

    கன்று ஈன்றிருந்த மாட்டின் பாலை அவர் கொடுத்துவிட, என் தாய் அதை திருப்பி அனுப்பிவிட்டாள், என் உடம்புக்கு ஆகாது என்று. நானும் பிள்ளை பெற்றிருந்த சமயம் அது.

    ஒரேயடியாகக் கோபித்து, பால் அனுப்புவதை நிறுத்திவிட்டார் பழனியப்பன். சில மாதங்கள் கழித்து, நான் நேரில் விசாரிக்கப் போனேன்.

    ஒரேயடியாக இரைய ஆரம்பித்தார். ”வேண்டாம் என்றால் மரியாதையாகஎன்னிடம் வந்து சொல்லியிருக்க வேண்டும். அதுதான் முறை!” இந்த இரண்டாவது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொன்னார். வல்லின றகரம் அவர் வாயில் படாத பாடு பட்டது.

    “அம்மா விளக்கிச்  சொல்லி அனுப்பினார்களாமே!” என்றேன். அச்சமயம் நான் வெளியில் நடமாட இயலாதவளாக இருந்தேன் என்று சொல்லியாயிற்று. அப்படியும் சண்டை பிடித்தால் என்ன செய்வது?

    “நீங்களே வந்து சொல்லியிருக்க வேண்டும். அதுதான் முறை!” என்றார்,விடாப்பிடியாக. இன்னும் சிறிது நேரம் கத்தினார்.

    பொறுக்க முடியாது எழுந்தேன்.

    “எவ்வளவு வேண்டும்?” வந்த வியாபாரத்தை விடுவதா என்ற அக்குரல் அதிகாரமாகஒலித்தது.

    நான் மெல்லத் திரும்பினேன். “வேண்டாம்! உங்களுக்கு எதுக்கு அவ்வளவு கஷ்டம்?”என்றேன் — இனிமையாக.

    அதைச் சற்றும் எதிர்பாராது அவர் திகைத்து நிற்க, விறுவிறுவென்று நடையைக் கட்டினேன்.

    பழனியப்பன்மாதிரி சிறுவர்களிடமும் பெண்களிடமும் அதிகாரமாக நடப்பவர்கள் மேலதிகாரிகளின் முன்னிலையில் கூனிக் குறுகுவார்கள். அவர்களது சுய மரியாதை இடம், பொருள் மற்றும் காலத்தைப் பொறுத்து வளையும். அதனால் அவர்களுக்கே ஏதோ வெறுமை உண்டாக, எப்போதும் விறைப்பாக நடந்துகொள்வார்கள்.

    நான் தகுந்த காரணம் சொல்லியும், ஏதோ பெரிய அவமானத்திற்குத் தன்னைஉள்ளாக்கிவிட்டதுபோல் சண்டை பிடித்தாரே, இதில் என் தவறு என்ன?

    என்னை அவமானப்படுத்த நினைத்தவரின் குற்றச்சாட்டை நான் ஏற்கவில்லை.என் சுயமரியாதை அப்போது வீறுகொண்டு எழுந்திருக்க வேண்டும். நிமிர்ந்த தலையும் நேர்ப்பார்வையும் கொண்டவரைப் பார்த்து மரியாதை ஏற்படுகிறதோ,இல்லையோ, அச்சம் எழும்.

    இவர்களைத் தளரச்செய்ய பிறர் பல உத்திகளைக் கையாள்வார்கள்.

    1      `இந்தமாதிரி நீ சண்டை பிடித்தால் பிறருக்கு உன்னைப் பிடிக்காமல்போய்விடும்!’

    அட, மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும்! நம்மையே நமக்குப் பிடித்தால்தானே பிறரையும் நம்மால் உண்மையாக விரும்ப முடியும்?

    பிறர் உன்னை மதிக்க, முதலில் நீ உன்னை மதி. 

    குறைகளுடன் நம்மை நாமே  ஏற்பது முதல் படி.  அந்த நிலை வந்தால், பிறரைப் பார்த்து பொறாமை எழாது. எப்போதும் அமைதியாக, மகிழ்ச்சியுடன்  இருக்கலாம்.

    2      `நீ அவளைப்போல், இவளைப்போல், இருக்க வேண்டும்!’

    பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டால், அது நம்மையேதாழ்த்திக்கொள்வதுபோல்தான். பிறர் வித்தியாசமாக இருக்கலாம். அது அவர்கள்குணத்தை, வாழ்க்கைப் பின்னணியைப் பொறுத்தது.

    நான் என்னைப்போல் இருந்தால்தான் அசலாக இருப்பேன். பிறரிடமிருந்துவித்தியாசமாக, சுய சிந்தனையுடன் இருக்க இயலும். இன்னொருவரைப் பின்பற்றி,  எதற்குப் போலி வேஷம்?

    (இசைப் போட்டிகளில், பிரபல பாடகர்களைப்போல் கடும் பிரயத்தனத்துடன் பாடுகிறார்கள் சில இளம்பாடகர்கள். அவர்களைவிட, தம் சொந்தக்குரலில் பாடுகிறவர்களையே நீதிபதிகள் பாராட்டுவது ஏன் என்று அவர்களுக்குப் புரிவதில்லை).

    கெஞ்சாதே!

    கணவனிடம் வதைபட்ட பெண் ஒருத்தியுடன் நான் தொடர்புகொள்ள விரும்புவதாக சமூகநல அதிகாரிகளான என் தோழிகளிடம் தெரிவித்திருந்தேன்.

    அப்படி என்னுடன் வலியப் பேசவந்தவள்தான் திலகா. “என் கணவருக்கு என்னைக் கண்டால் ரொம்பப் பிடிக்கும், என்றாள், பெருமையுடன். “ஆனால், கொஞ்சம் முன்கோபி!”

    `ரொம்பப் பிடித்த கணவர்’ ஒரு மூர்க்கன். உயிர் போகும் நிலையில் அவனால் அடித்து உதைக்கப்பட்டு, காவல் துறையினர் மூலம் சமூகநல அதிகாரிகளின்  பொறுப்பிற்கு வந்தபின்னரும் திலகா இதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள்.

    அன்புக்காக ஏங்கி, தன்மானத்தை விடலாமா? அப்படியாவது என்ன இல்லற இன்பம் வேண்டிக் கிடக்கிறது!

    பிறருடன் சுமுகமான உறவு இருக்கவேண்டுமே என்று எந்த அவமானத்தையும் பொறுத்துக்கொள்வது நம்மையே நாம் மதிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. நம்முடன் ஒருவரால் ஒத்துப்போக முடியவில்லை என்ற நிலைவரும்போது, நாம் கெஞ்சுவது நம்மையே இழிவு படுத்திக்கொள்வதுபோல்தான் .

    பாதுகாப்பு, பணம், சமூகத்தின் அங்கீகாரம் என்ற ஏதாவது காரணத்துக்காகநைந்துபோன உறவை விடாது பிடித்துக்கொண்டு, கெஞ்சலால் நீடிக்க முயன்றால் மேலும், மேலும் இழிவுபடுத்துவார்கள்.

    “சுயகௌரவத்தை இழப்பதைவிடப் பெரிய இழப்பு வேறொன்றுமில்லை!” (மகாத்மா காந்தி)

    � �{�ҭ��

    Share