Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180130 - Yadava -Raas 14b -lr the circle of the Raas by its fast movement appeared like a wheel. Krishna enters the yamuna to bless her too.
    180130 – Yadava -Raas 14b -lr
    the circle of the Raas by its fast movement appeared like a wheel. Krishna enters the yamuna to bless her too.

    ”ரங்காரங் காரோஸஸ் மங்கை யரோடுபோஸஸ்(POSEs)
    ரங்கா யமுனாத ரங்கரே -சிங்கனே!
    All -Fell(ஆல் -ஃஃபெல்) Down!(டவுன்)அவள் ஆகுலமாய் கோகுலத்தில்,
    மாலுனக்காய் காத்திருக்காள் மாது’’(ராதையோ அல்லது யசோதையோ)….கிரேசி மோகன்….!

    Share
  • சந்திர கிரஹண கவிதை

    மூவர்ண நிலா
    31.01.18

    FB_IMG_1517421787702

    வெண்ணிலா

    என்னவளின் பால்முகம்
    மறைக்கப்பட்டதால்

    செந்நிலாவாகி

    கோபத்திலும் தாபத்தை
    கொஞ்சலோடு உணர்த்தி

    நீல நிலாவாக

    நீந்தி மீண்டு வந்து
    பூரணப் பொலிவுடன்
    புதுநகை பூத்தாளே
    மீண்டும் வெண்ணிலாவாய்.

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    watercolour -indian ink -lr - 24x32cms  Raas 01 - Gopikas were overwhelmed with pride on their relationship with Krishna. Krishna disappears from their sight. (He was near but they couldn’t see him.) They lament their miserable plight. (Gopika geetham Sr.Bh.) They sing about the qualities of Krishna — It riverberated throughout the forest, carrying the fragrance of the upanishads. Krishna reappears — strengthening their devotion.
    watercolour -indian ink -lr – 24x32cms
    Raas 01 – Gopikas were overwhelmed with pride on their relationship with Krishna. Krishna disappears from their sight. (He was near but they couldn’t see him.) They lament their miserable plight. (Gopika geetham Sr.Bh.) They sing about the qualities of Krishna — It riverberated throughout the forest, carrying the fragrance of the upanishads. Krishna reappears — strengthening their devotion.

    ”பழக்கதோ ஷத்தால் பதுமையர்(கோபியர்) , மாலை
    வழக்கத்தில் கர்வமாய் வம்புக்(கு), -இழுத்திட,
    தேசிகர் பாடினார், தான்தோன்றி லீலையை,
    கேசவ் அதற்கேற்பக் கோடு(ஓவியம்)’’….கிரேசி மோகன்….!

    கண்ணன் தோன்றி மறையும் தன்மாயத்தைக் கோடு காட்டினார், எங்கள் கேசவ் அதற்கேற்ப கோடு காட்டினார்….!

    Share
  • ரமண வசனாம்ருதம்….!

    இன்று கிரகணம்….!
    ———————————————-

    ரமண வசனாம்ருதம்….!
    —————————————————————–

    ’’அகந்தை கிரகணம் ஆன்ம நிலவுள்
    புகுந்து பிடிக்கும் பளிச்சை, -உகந்துன்னுள்,
    நானார் விசாரிக்க நம்மைவிட்(டு) ஓடுமது:
    சோணா சலரமணன் சொல்’’….கிரேசி மோகன்….!

    Share
  • சாலையின் விதி!

    -ஆ.செந்தில் குமார்

    செலவுகள் பல கோடி
    செய்து நாட்டில் இட்ட
    குலவும் சாலைகள் யாவும்
    குடிமக்கள் மனம் மகிழ்ந்து
    உலவித் திரியும் முன்னே
    உளுத்துக் கொட்டின கற்களாய்!

    பாடு படுத்தியது சாலையைப்
    பாதாளச் சாக்கடைத் திட்டம்!
    ஓடும் மழைநீர் அரிப்பு
    ஓடாய்த் தேய்த்தது சாலையை!
    வீடுகளனைத்தும் எறியும் குப்பை
    காடாய் ஆக்கிரமித்தது சாலையை!

    தரைவழித் தொலைபேசி இணைப்பு
    துண்டு துண்டாக்கியது சாலையை!
    நிறைவான மின் இணைப்பு
    நிலை மாற்றியது சாலையை!
    குறைவான குடிநீர் வழங்கும்
    குழாய்கள் குதறின சாலையை!

    குறைந்த தரங்கொண்ட பொருட்கள்
    குலைத்துப் போட்டது சாலையை!
    நிறைந்த வண்டிகளின் நெரிசல்
    நிதமும் திணறடித்தது சாலையை!
    மறைந்தன சாலை நடைமேடைகள்
    நிறுவிய நடைபாதைக் கடைகளாலே!

    புலம்பித் தவிக்கும் மக்கள் – இந்த
    புரையோடிய ஊழலை எண்ணி!
    குழம்பித் தவிக்கும் மக்கள் – இந்த
    குறைகளை நிதமும் எண்ணி!
    விளம்பி உறுதி ஏற்போம்
    விரைவான மாற்றம் எண்ணி!

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  46

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவனிடம்  காட்டும் அன்புக்கு பதில் என்ன கிடைக்கும் ?

    திருமூலர்-1-1

    உலகம் போற்றும் மகானான இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் பக்தர்களுக்கு ஒரு சிறிய கதை மூலம் இறைவனின் அருளை விளக்கிக் கொண்டிருந்தார் .. ” ஒரு சிறிய கிராமத்தில் இறைவனிடம் அளவற்ற பக்தியைக் கொண்டிருந்த ஒரு மனிதன் தினமும் காலையிலே நீராடி திருநீறு அணிந்து கோயிலுக்குச் சென்று இறைவனின் புகழ்பாடி வலம் வந்து போற்றிக்கொண்டிருந்தான். இதை அவன் பல ஆண்டுகளாகச் செய்துகொண்டிருந்தான். வழக்கம்போல் ஒரு நாள் காலையில் அவன் இறைவனைத் துதித்து வலம் வந்து கொண்டிருந்தபோது காவலர்களுக்குப் பயந்து வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு திருடன் இவர் மீது மோதிவிட இவர் தடுமாறிக் கீழே விழுந்தார். அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டு காலில் இரத்தம் வந்துகொண்டிருந்தது.

    ஆனால் ஓடிச்சென்று கொண்டிருந்த திருடனோ தன்னுடைய காலில் ஏதோ தடுக்கிவிட குனிந்து பார்த்தான் அங்கே ஒரு சிறிய துணிப்பை கிடந்தது. அதை அவன் திறந்து பார்த்த பொழுது அதனுள்ளே நிறைய பொற்காசுகள் இருந்தன. அவன் மிக்க மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.

    பரம ஏழையாக இருந்த இந்த பக்தனுக்கோ ஒரே வியப்பு! எத்தனை வருடங்களாக நான் மிகவும் பக்தியோடு இறைவனை நாடி வருகிறேன். எனக்கோ காலில் அடிபட்டு இரத்தம் வருகின்றது. ஆனால் ஒரு திருடனுக்கோ இந்தக் கோவில் வழியாக ஓடும் பொழுது பொற்காசுகள் கிடைக்கின்றன. இது என்ன அநியாயம் என்று நினைத்து இறைவனிடம் முறையிடுகின்றான். “இறைவா! நீ செய்வது உனக்கே சரியென்று தோன்றுகின்றதா?. இதுதான் நீ காட்டும் கருணையா? “

    பக்தனின் கதறலைக் கேட்ட இறைவன் கூறுகின்றான் “பக்தனே! உன்னுடைய ஊழ்வினையின் காரணமாக உனக்கு இரண்டு கால்களும் இன்று போயிருக்க வேண்டும். ஆனால் என்மீது நீ நிறைந்த பக்தி கொண்டதன் விளைவாக உனக்கு காலில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு வினை விலகியது. அவனுக்கோ அவன் ஊழ்வினையின் காரணமாக ஒரு மிகப்பெரிய செல்வம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவன் இறை நம்பிக்கையின்றி தவறான செயலில் ஈடுபட்டுள்ளதால் அவனுக்கு ஒரு சிறிய தொகை மட்டும் கிடைத்துள்ளது.” என்று எடுத்துரைக்க அந்த பக்தன் இறைவனின் பேரருளைக் கண்டு வியந்தான்.

    ஊழ்வினையின் வலிமையை யாரறிவார்? அது நம்மை எவ்வாறு துன்புறுத்தும்? அதிலிருந்து விடுபடுவது எப்படி? அந்தப் பேரறிவாளனின் பாதங்களைத் தவிர வேறு எங்கு செல்ல முடியும்?

    மாணிக்கவாசகரின் இந்தப்பாடல் அவருடைய அந்த உள்ளநிலையை வெளிப்படுத்துகின்றது.

    பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையென்

    போதஎன்(று) எனைப் புரிந்து நோக்கவும்

    வருத்த மின்மையேன்  வஞ்ச முண்மையேன்

    மாண்டிலேன் மலர்க் கமல பாதனே

    அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்

    நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை

    இருத்தி னாய்முறை யோஎன் எம்பிரான்

    வம்ப னேன்வினைக்  கிறுதி யில்லையே.

    இறைவன் சில நேரங்களில் நமக்குக் கொடுக்கும் சில துன்பங்களைப் பார்க்கும் பொழுது ஒருவேளை இறைவன் நம்மை வெறுக்கிறானோ என்று தோன்றும். அவன் பாரபட்சமானவனா என்றுகூட சிந்திக்கத் தோன்றும். ஆனால் இறைவனின் உண்மைப் பொருளைப் புரிந்துகொண்டால் இந்த மயக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இதை நமக்கு உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது சுந்தரமூர்த்தி நாயனாரின் இந்தப் பாடல்

    ஒறுத்தாய் நின் அருளில்: அடியேன் பிழைத்தனைகள்

    பொறுத்தாய் எத்தனையும்: நாயேனைப்  பொருட்படுத்திச்

    செறுத்தாய்; வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம்

    கருத்தாய்: தண்கழனிக் கழிப்பாலை மேயோனே !

    பல நேரங்களில் நாம் நமது இறையன்பிற்கும் பக்திக்கும் தகுந்த பலன் கிடைக்கவில்லையே என்ற எண்ணத்தில் இறையருளை சந்தேகிக்க நினைக்கின்றோம். இது மிகவும தவறான கருத்து. இறைவனிடம் செலுத்தும் அன்புக்கும் பக்திக்கும் பதில் ஏதாவது பலனை எதிர்பார்க்கின்றோம். அதுவும் நமக்கு வெளிப்படையாகத் தெரியக்கூடியதாகவும் இறைவனின் அருளின் முத்திரை பதிந்ததாகவும் எதிர்பார்க்கின்றோம். இது ஒரு விவேகமற்ற எதிர்பார்ப்பு. அன்பும் பக்தியும் பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுவது அல்ல. இந்த வாழவை நமக்குத் தந்த அளவற்ற கருணைக்காக நாமே காட்டும் மரியாதை உண்மையான அன்பும் பக்தியும் எதிர்பார்ப்பைக் கடந்ததாக இருத்தல் அவசியம்,  கீதையில் அர்ச்சுனனுக்கு அறிவுரை வழங்கும் கண்ணன் கூறுகின்றான் “நீ கடமையை மட்டும் செய். பலன்களை எதிர்பார்க்காதே.” பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்களில் அந்தப் பலன் நமது விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது சற்றே மாறுபட்டதாகவோ அமைந்துவிட்டால் நமக்கு அதனால் துயரே தோன்றும். உண்மையான மகிழ்ச்சி செய்யும் செயலைச் செவ்வனே செய்வதில் மட்டும் உள்ளது.

    இந்த நிலையில் சிந்தனையும் அவனே, செயலும் அவனே, அதன் பலனும்  அவனுடையதே என்று எண்ணி அவன் தாள்களைச் சரணடைந்தால் துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்காதோ?

    திருமூலர் மிக அழகாக சுருக்கமாக இதை நமக்கு விளக்குகின்றார்:

    சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ

    சுத்த வெளியிற் சுடரிற் சுடர் சேரும்

    (தொடருவோம்)

    Share
  • பிரதோஷம்

      

    “சந்தியா காலத்தில் சங்கரன் தாண்டவம், –

    நந்தியிரு கொம்பின் நடுவிலே, -தொந்தியார் ,-

    கந்தனார் காண கயிலையில் கற்பகப் –

    பந்தலிடப் பங்கில் படர்ந்து “….கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180129 -Yadavabhyudaya 13- govinda pattabhishekam lr watercolour indian ink 24x32cms. The rain continued for 7days and nights without a stop. Krishna held the Goverdhana, unmoved. A humbled Indra stops the rain and repents. Krishna replaces the hill in its original place. His friends check his palm and limbs to see whether he was hurt. It didn’t show any signs of fatigue.   Indra extolls Krishna, “It is no wonder that you lifted the mountain - you sustain the whole world.  I wish to anoint you as Govinda, although it has already been given to you in your Varaha avatar, when you retrieved the earth from the waters.” Brahma sent Kamadhenu for the abhisheka of Krishna. Indra thought of the celestial Ganga. With her waters and the milk of Kamadhenu, he performed the Govinda Pattabhishekam.
    180129 -Yadavabhyudaya 13- govinda pattabhishekam lr watercolour indian ink 24x32cms.
    The rain continued for 7days and nights without a stop. Krishna held the Goverdhana, unmoved.
    A humbled Indra stops the rain and repents. Krishna replaces the hill in its original place. His friends check his palm and limbs to see whether he was hurt. It didn’t show any signs of fatigue.
    Indra extolls Krishna, “It is no wonder that you lifted the mountain – you sustain the whole world.
    I wish to anoint you as Govinda, although it has already been given to you in your Varaha avatar, when you retrieved the earth from the waters.”
    Brahma sent Kamadhenu for the abhisheka of Krishna. Indra thought of the celestial Ganga. With her waters and the milk of Kamadhenu, he performed the Govinda Pattabhishekam.

    ”கோவிந்த நாமம் கொடுத்திந் திரர்சொன்னார்,
    நோவுண்டோ மூவா முகுந்தனுக்கு! -ஆவின்பால்
    காமதேனு வார்த்திட, கங்கை ஜலமூற்ற
    சாமகானம் செய்தபி ஷேக்”….கிரேசி மோகன்….!

    நோவுண்டோ மூவா முகுந்தர்கு-குன்றேந்திய சிரமம் ஏது மூவா(மூப்பிலா-அபிராமி பட்டர் பிரயோகம்) முகுந்தர்….!
    சாமகானம் செய்து அபிஷேகம்(தளை தட்டாதிருக்க அபிஷேக்….!)(ஷேக் -மன்னர்….!)

    Share
  • மகாத்மாவுக்கு அஞ்சலி!

    -மேகலா இராமமூர்த்தி

    How To Draw Mahatma Gandhi Easily Mahatma Gandhi Drawing Pictures Please - Drawing Of Sketch - Great Drawing

    வெள்ளைப் பரங்கியன் ஆட்சிகூட உம்மைப்
    பத்திரமாய்ப் பாதுகாத்த தையா!
    கொள்ளை போனதே உந்தனுயிர் இங்கே
    இந்துச் சோதரன் கையாலே அந்தோ!

    பாழ்பட்டு நின்றதேசம் தன்னை
    வாழ்விக்க நீயிருந்தாய் அன்று
    தாழ்வுற்று நிற்கின்றோம் இன்று – எமைக்
    காத்திடவோர் உத்தமனும் இல்லை!

    இங்கே,
    சாதியின் பெயராலே சண்டை – நிதம்

    சாமியின் பெயராலே சண்டை
    வீதிகள் தோறும்தினம் சண்டை
    நாதியற்றுப் போனோமே நாங்கள்!

    வாராது வந்தமா மணியே  உம்மைத்
    தொலைத்துவிட்டு நிற்கின்றோம் தனியே
    தீராத எங்கள்துயர் தீர்க்க நீர்
    வாரீரோ பிறப்பெடுத்து மீண்டும்!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 145-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    sea and clock

    ஓலமிடும் கடலலை யோரமாய்க் குடிகொண்டிருக்கும் காலங்காட்டும் கடிகாரத்தைக் கலைநயத்தோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. வித்தியாசமான இந்தப் படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தகுந்தது என்று தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    காலமறிந்து செயற்படு என்பதைக் காட்டும் கடிகாரமும், ஓய்தல் இன்றி உழைத்திடு என்பதை உரக்கச் சொல்லும் கடலலையும் மானுடர்க்குத் தருவது பயன்மிகு படிப்பினை.

    இனி, கடற்கரையோரம் நின்று கவிமழை சிந்தக் காத்திருக்கும் கவிஞர்களைக் கனிவோடு வரவேற்கின்றேன்.

    *****

    ”வாழ்வில் எல்லாம் செயற்கைமயமாய்ப் போனதால் செம்மை வாழ்வு மாயமாய் ஆனதே” என்று கவலும் கவிஞர் ஆ. செந்தில்குமார், மரபுசாரா எரிபொருள்களைப் பயன்படுத்திப் புவிவெப்பம் குறைப்போம் என்கிறார் தன் கவியில்.

    காலம் கொடுக்கவிருக்கும் தண்டனை
    நுகர்வுக் கலாசாரம் மிகுந்தது!
    நாடெங்கும் குப்பைக்கூளம் குவிந்தது!
    நச்சுக்கழிவுகள் கலக்கும் நதிகள்!
    நகரமயத்தால் அழியும் காடுகள்!

    ஆலைகள் வெளியேற்றும் நச்சுவாயுக்கள்!
    பாலைகளாகும் வளமிகு நிலங்கள்!
    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு!
    நிலத்தடி நீரின் குறைபாடு!

    பெட்ரோல் டீசல் நிலக்கரியென்ற
    புதைப் படிமங்களின் வெளிப்பாடு!
    பசுமையில்லா வாயுக்க ளெங்கும்
    பரவிச் செறிந்த நிலைப்பாடு!

    புவியின் வெப்பம் உயர்ந்துயர்ந்து
    பனிப்பாறைக ளெல்லாம் உருகியுருகி
    பரந்த கடலின்மட்டம் உயர்வதனால்
    புல்லும்கூட முளைக்கவுதவா பூமியென்றாகிடுமே!

    புவியின் இயற்கையைச் சிதைக்கின்றோம்!
    பருவநிலையின் மாற்றத்தை உணர்கின்றோம்!
    செயற்கை மயத்தை நிறைக்கின்றோம்!
    செம்மை வாழ்வைத் தொலைக்கின்றோம்!

    தவறுகள் செய்யும் நம்மனைவருக்கும்
    தக்கதண்டனை கிடைக்கும் காலம்
    தூரத்திலில்லை என்பதை உணர்ந்து
    தூக்கத்தில் இருந்து விழித்தெழுவோம்!

    மரபுசாரா எரி பொருட்கள்
    மண்ணின் வெப்பத்தைக் குறைத்திடுமே!
    புவியின் வெப்பத்தைக் குறைத்திடுவோம்!
    பூமிப் பந்தைக் காத்திடுவோம்!

    *****

    ”கடமையைச் செய்வதில் கடலலையாய் இருப்போம்; ஓயாது உழைப்பதில் கடிகாரமாய் இருப்போம்” எனும் நன்மொழியைத் தன் பாவில் பொன்போல் பொதிந்து தந்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    கடலலை சொன்ன கீதை:
    அலையில்லாக் கடலுக்கு அழகில்லை !

    ஓடாத கடிகாரத்தால் ஒரு பயனுமில்லை!
    வீசாத தென்றலுக்கு பெருமையில்லை!
    துடிக்காத இதயத்திற்கு உயிருமில்லை!
    பாசமில்லாப் பிள்ளைகளால் பயனுமில்லை!
    உழைப்பில்லா மனிதருக்கு உயர்வில்லை!
    தமிழில் பேசாத தமிழருக்கு வாக்கில் இனிமையில்லை!
    ஈயாத செல்வத்திற்கு மதிப்பில்லை!
    உதவி செய்யா வாழ்க்கைக்கு அர்த்தமில்லை!
    இயற்கை என்றும் தன் பணி செய்ய மறப்பதில்லை!
    சுயநலமாய் என்றுமே இருந்ததில்லை!
    மனிதன் தன் கடமை செய்ய விரும்பவில்லை!
    பொது நலத்தை என்றுமே நினைக்கவில்லை!
    கீதை சொன்ன பாதையில் நாம் நடப்போம்!
    கடமை செய்வதிலே கடலலையாய் நாம் இருப்போம்!
    ஓடுகின்ற கடிகாரமாய் ஓயாமல் நாம் உழைப்போம்!

    *****

    கடமைசெய்யக் காலம் பாராக் கடலலைகள், உறங்கியே பொழுதைக் கழிக்கும் மானிடனின் மடமையைக் கேலிசெய்வதைச் சுவைபடப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உறங்கா அலைகள்
    கடலில் அலைகள் அடிப்பதற்கே
    காலம் எதுவும் பார்ப்பதில்லை,
    உடலில் நல்ல தெம்பிருந்தும்
    உறங்கிக் கிடக்கும் மானிடனே,
    அடிக்கும் ஓசைக் கடிகாரமும்
    ஆளை வைத்தே எழுப்பிடினும்,
    உடையா துந்தன் சோம்பலென
    உரைத்துச் செல்லும் அலைகடலே…!

    *****

    ”வையகத்தை வாழ்விக்கும் இயற்கையைத் தன் கையகப்படுத்தி அழித்தொழிக்கும் மனிதனுக்கு இயற்கை இரங்கற்பா வாசிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று எச்சரிக்கவந்த கடிகாரமிது” என்கிறார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன்.

    எச்சரிக்கை ஒலி
    கடிகார முள் பார்த்து
    காலையில் உதிப்பதில்லை கதிரவன்

    அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு
    அலறி எழுவதில்லை அலைகள்

    நேரகாலம் பார்க்காமல் இந்த இயற்கை
    நேர்த்தியாய் தன் பணி செய்கிறது

    வாரிசுகளுக்கு வாரிக் குவிக்கத்தான் உழைப்பென்றெண்ணினேன்
    வையகத்தை வாழ்விக்கவே ஓடாய் தேய்கிறேனென்று காதில் உரைத்துச் சென்றன அலைகள்

    உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்கிறது இயற்கை – உனக்காக
    உணராமல் நாளும் அதை அழித்துக் கொண்டிருக்கிறாய் நீ

    இந்நிலை நீடித்தால் இப்பூவுலகில் – மனிதா
    இரங்கற்பா பாடக் காலம் கூடும் வெகு விரைவில்
    இயற்கைக்கு அல்ல.. அதை அழிக்கும் உனக்கு.. எனவே
    இனியும் தாமதிக்காமல் இயற்கை அன்னையை காப்பாற்றி உனைக் காத்துக்கொள் – எனும்
    எச்சரிக்கை ஒலி எழுப்பவே நான் வந்தேன்.

    *****

    ”கடற்கரையில் தனித்துக் கிடக்கும் காலங்காட்டும் கருவி கண்டு, அண்டப் பெருவெளியோ அகன்று விரிகின்றது; அப்பேரண்டத்துள்ளே நேரமும் தன்னை நீட்டிச் செல்கின்றது; கடிகாரம் வழியொரு மாயலோகம் மண்ணில் தெரின்றது” என்று கவியருவி பொழிந்திருக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா. 

    கார்கால மேகக் கருக்கூட்டும் வானத்தில்
    கதிரோன் ஒளிதெரியா கடல் விளிம்பில் தூரத்தில்
    கால நிலை மாற்றம் கடிதாய் நிகழ்கிறது.
    நிலை மாறும் காலத்தில் நேரந்தனைக் காட்ட
    அலை மோதும் கரை தன்னில் அழகாயோர் கடிகாரம்.

    அதையங்கே வைத்தது யார் அதற் கென்ன வேலையங்கு?
    கடலோரக் கடிகாரம் காட்டுவதோ ஆறுமணி
    கயிறொன்றை அதனோடு கட்டி வைத்து முள்ளார்கள்
    இடமின்றிக் கடிகாரம் இக்கரையில் கிடக்கிறது
    எதற்காக எதற்காக ஏன் இங்கே இருக்கிறது?

    அலையோடு அலையாக அடிபட்டு வந்ததுவா?
    அல்லாது வேண்டுமென்றே அதையங்கு வைத்தாரா?
    சரியாக ஆறுமணி காலையிலா மாலையிலா
    தெரியாது, கடல் விளிம்பில் செங்கதிரோன் எங்குற்றான்?
    ஒன்றன் பின் ஒன்றாக ஓராயிரம் கேள்வி
    பின்வந்து நிற்கிறது பிறிதொன்றும் தோன்றாது
    காலமளந்திடுமக் கருவிதனைப் பார்க்கின்றேன்.

    அண்டப் பெருவெளியோ அகன்று விரிகிறது
    அதனுள்ளே காலமும் சேர்ந்தே விரிகிறது
    அண்ட விரிவு நின்றிடும் போதில்
    அகன்றிடும் காலமும் விரிவை நிறுத்தும்
    நில்லாது விரியும் பேரண்டத்துள்ளே
    நேரமும் தன்னை நீட்டிச் செல்லும்
    எல்லா இடத்திலும் காலம் விரிவதால்
    இடமும் காலமும் ஒன்றுடன் ஒன்றாய்
    பின்னிப் பிணைந்து பேரண்டமாகிப்
    பிரிக்க முடியா இருபெரும் கூறாய்
    பிரபஞ்சமென்னும் மாயையுள் புதைந்தன.

    காலமும் இடமும் கற்பனைக் கெட்டா
    மூலப்பிர கிருதி யென்பார்கள்.

    சிவமெனும் சிங்கியூலாறிற்றியென்ற
    சிறியதோர் ஒருமைப் புள்ளியிலிருந்து
    தோன்றி விரிந்து தொடர்ந்து பரந்து
    தொடக்கம் நோக்கி மீண்டுமொடுங்கும்
    மாயைக்குள்ளே மனம், உடல் கொண்டு
    வாழும் மனிதர் சிந்தனைக் கெட்டாக்
    காலந்தன்னை அளந்திடும் கருவி
    கடற்கரை தனிலே தனித்துக் கிடக்கும்
    காட்சியினாலிக் கவிதை மலர்ந்தது
    கனவாம் மாயா லோகம் தெரிந்தது.

    *****

    காலங்காட்டும் கடிகாரமும் அழகுக் கோலங்காட்டும் கடலலைகளும் கவிஞர்களின் நெஞ்சில் கற்பனை அலைகளைத் தட்டியெழுப்பிக் கவிதை முத்துக்களைக் கொட்டச் செய்திருக்கின்றன. பாராட்டுக்கள் கவிஞர்களே!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…  

    கடலுக்குள் போன மச்சான்
    காணாம போயிமாசம் ஒண்ணாச்சு!
    கடிகார முள்ளாட்ட உழச்சுக்
    களச்சுப்போயி…எக்கச்சக்க மீனோடு
    கரை திரும்பி வருவார்னு
    காத்திருந்து காத்திருந்து
    காலந்தான் கரைகிறது…
    எங்க மச்சான் இருக்கீங்க?
    எப்படி இருக்கீங்க??
    பொண்டு புள்ள இங்கிருக்க
    போன இடம் எங்கே மச்சான்..?
    மனையாளெனைப்பாக்காம
    மனுசனால இருக்க முடியாதே!!
    புயல் போயி நாளாச்சு _
    அயல் தேசமும் தேடியாச்சு _
    ஆனாலும் உங்களக்
    காணாமல் அழுவறமே!!
    வருவீங்க வருவீங்கனு
    வழி மேல விளிவச்சு
    வெகுநாளாக் கிடக்கிறமே..!!..
    நீங்க வரும் வரைக்கும்
    நாங்க போகமாட்டோம்!!
    மணல் பரப்ப விட்டுப்புட்டு
    மனை போக மனசில்லே _
    மணிக்கணக்கப் பாத்துகிட்டே
    மதி மயங்கிக்காத்திருக்கோம்..
    எதிர்பார்க்கும் எங்கள
    ஏமாத்திப் போடாம
    எங்கே இருந்தாலும்
    இங்க வந்து சேரு மச்சான்!!
    அரசாங்க சேனைகளும்
    ஆளம்புச் சொந்தங்களும்
    ஆம்படயானுன்ன சல்லட போட்டு
    ஆழ்கடலில்..அதன் ஓரங்களில்
    அணுவணுவாத் தேடுறாங்க!!
    அதோ..இதோ..வரும்நல்ல செய்தியினு
    ஆண்டவனக் கும்புட்டுட்டு
    அப்பிடியே உக்காந்திருக்கோம்…
    நம்மபொழப்பு நாறப்பொழப்புத்தான்!!
    நல்லமீனெடுக்க படும்பாடு நரகந்தான்!!
    நடுக்கடலுக்குள்ளே
    நாராயணன் இருக்காராம்..
    நான் அவரையுந்தான் கும்புடுறேன்.
    ஏதாச்சும் ஒரு சாமி
    எம்புருசனக் கொண்டுவந்துசேக்காதா?
    இருக்காரா? இல்லையானே
    இதுவரைக்கும் தெரியாம
    இடியா நெஞ்சொடஞ்சு
    இருப்பத விட வேறு என்ன
    இன்னலுண்டு உலகத்தில்!!
    அனுபவிச்சுப் பாத்தாத்தான்
    அதன் வழி தெரியும் அடுத்தவர்க்கு!!
    இனி மேலேனும் இதுபோல ஆகாம
    இயன்றவரை எச்சரிக்கை
    இயற்கை இடர்க் காலங்களில்
    இருப்போமே எல்லோரும்!!
    இனிமேலேனும் எங்களைப்போல்
    இன்னல் எவருக்கும் வேண்டாமே???

    தரைமேல் பிறந்து தண்ணீரில் பிழைக்கச் சென்ற கணவன், புயலில் சிக்கிக் காணாமற்போனதால் கண்ணீர்விட்டுக் கதறும் அபலைப் பெண்ணொருத்தியின் மனக் குமுறலை,

    ”புயல் போயி நாளாச்சு _
    அயல் தேசமும் தேடியாச்சு _
    ஆனாலும் உங்களக்
    காணாமல் அழுவறமே!!

    ஏதாச்சும் ஒரு சாமி
    எம்புருசனக் கொண்டுவந்து சேக்காதா?
    இருக்காரா? இல்லையானே
    இதுவரைக்கும் தெரியாம
    இடியா நெஞ்சொடஞ்சு
    இருப்பதவிட வேறு என்ன
    இன்னலுண்டு உலகத்தில்!!”  
    என்று கல்நெஞ்சும் கசிந்துருகும் வகையில் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. ஏ.ஆர்.முருகனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

    Share
  • இந்த வார வல்லமையாளர் (259)

    இவ்வார வல்லமையாளராக தகடூர் கோபி அவர்களை அறிவிக்கிறோம்.

    இவர் தமிழ் மேலும் கணிணி மேலும் அயராத ஆர்வம் கொன்டவர்., இவரது ஹை கோபி தட்டச்சுபலகை தமிழ்தட்டாச்சு அதிகம் பரவாத 2000களின் துவக்கத்தில் பல பயனர்களுக்கு உதவி, தமிழில் தட்டச்ச உதவியது.

    இவர் கணிணிபொறியாளராக பல நிறுவனங்களில் பணியாற்றி இறுதியாக சிங்கபூரில் பணியாற்றினார். திருமுருக கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் மேல் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தவர்.

    1

    இவர் நேற்று மாரடைப்பில் காலமானார். இவரது மறைவு குறித்து வல்லமை நிறுவனர் அண்ணாகண்ணன் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்

    “தமிழ்க் கணிமைக்கு முக்கியப் பங்காற்றிய தகடூர் கோபி, மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரடைகிறேன். அவர் உருவாக்கிய தகடூர் எழுதியில் அவருக்கு இரங்கல் செய்தியை எழுதுகிறேன். சுமார் 15 ஆண்டுகளாக நட்பு, தமிழ்க் கணிமைக் கூட்டங்கள் சிலவற்றில் சந்திப்பு, இணையம் வழியாக நீடித்த உறவு என எங்கள் தொடர்பு நீண்டது. எங்கள் வல்லமை மின்னிதழில் உள்ள தட்டச்சுப் பக்கத்தில் அவரது தகடூர் தட்டெழுத்துச் செயலியை அமைத்துள்ளோம். அதில் உள்ள புதிய தட்டெழுத்துத் தெரிவில் என்னால் மிக விரைவில் தட்டி எழுத முடியும். வேறு எந்த எழுதியிலும் இதே விசையமைப்பு இல்லை. எனவே, அங்கங்கே நிறுத்தி நிறுத்தி எழுத வேண்டி வரும். எனவே, இந்தத் தகடூர் எழுதியை இதர எழுதிகளைப் போல், தனியே தரவிறக்கி, எந்தச் செயலியிலும் தட்டும் வசதியைக் கொண்டு வாருங்கள் என நீண்ட காலமாகக் கேட்டு வந்தேன். நேரம் அமையாததால் செய்ய முடியவில்லை என்று வருந்தி வந்தார். இளம் வயதில் மிகப் பெரிய உயரங்களை எட்டிய தகடூர் கோபி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.”

    வல்லமையாளர் தகடூர் கோபியின் வழியில் தமிழ்ப்பணியாற்ற உறுதிகொள்வோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share
  • SRI AUROBINDO or The Adventure of Consciouness….Satprem….!

     

    “உணர்வால் குழிபறித்து உண்முகம் தாவு
    கிணறுவெட்ட ஆன்மன் கிளம்பும்- மனதால்,
    மணலில் கயிறெடுக்கும் மானிடா உந்தன்
    உணர்வின் இருப்பே உவப்பு “(sathchithaanandham )….கிரேசி மோகன் ….!

     

    வேண்டுபவர்க்கு வேண்டலில் பற்று, வேண்டாதவர்கோ வேண்டாமையில் பற்று….!

    ”குப்பனோ இம்மைக்கு குட்ஸையில்(குடிசையில் வீடில்) உப்பில்லை!:(வேண்டுதல்)
    சுப்பன் மறுமைக்கு (வீடு தரும்)சாமியேன்!(வேண்டாமை) : -ஒப்பிட்டால்,
    குப்பனோ உப்புக்கு சப்பாணி, ஊருக்கு
    சுப்பன்மாங் கொட்டைசா மி”….கிரேசி மோகன்….!(உபயம் -அரவிந்த அன்னை)….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    Yadavabhyudayam 12 - Goverdhan -Indra, thunder, lightning, umbrella -pearls - anantha holding the earth (sandal paste on his arms) living in the caves normally for the entire duration of the rains.
    Yadavabhyudayam 12 – Goverdhan -Indra, thunder, lightning, umbrella -pearls – anantha holding the earth (sandal paste on his arms) living in the caves normally for the entire duration of the rains.

    ”கூராழி(சுதர்ஸன சக்கிரம்) போல்குன்றை சீராயர் ஏந்தினர்
    காரூழி(ஊழி மழை தொடுத்தான்)இந்திர கர்வத்தை -நேராக்கி(அடக்கினர்)
    பாராழி(இங்கு பார் கோகுலம், ஆழி-கடல்போல் மழை) பெய்யாது பாதுகாத்த பாற்கடல்
    நாரா யணரேகண் ணன்’’….கிரேசி மோகன்….!

    Share
  • திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு

    அன்புடையீர்

    வணக்கம்

    IMG-20180124-WA0021

    IMG-20180124-WA0099

    IMG-20180124-WA0102

    திருவாடானை அரசு கலைக் கல்லூரியல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கை வழி செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் பயிலரங்கம் ஒன்றை நடத்த உள்ளோம் அதன் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளோம்.

    Share
  • சிவபிரதோஷம்

     

    “ஒரு வேண்டுகோள்”

     

    மீ.விசுவநாதன்

    விபாண்டகமகரிஷி சிவலிங்க வடிவாக

    தீயின் நிறத்து மேனியனே – உமை

    தேவி மனத்து நாயகனே – எம்

    தாயின் குணத்துத் தந்தையனே -உயிர்த்

    தாகம் தணிக்கும் கங்கையனே – மனக்

    காயம் தீர்க்கும் பரம்பொருளே – உன்

    காலைப் பிடித்துக் கேட்கின்றேன் – பலர்

    மாயும் தீய மதப்பித்தை – ஒரு

    மாயம் செய்து திருத்திடுவாய்.

     

    (இன்று (28.01.2018) பிரதோஷம் )

    Share